Ads
ஷங்காயில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை கடுமையாக்க அதிகாரிகள் திட்டம்
ஷங்காய் கொவிட் தொற்றுப் பரவல், கடந்த மார்ச் மாத இறுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, அங்கு இதுவரை 400,000க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நகரின் 25 மில்லியன் மக்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொவிட் தொற்றால் அங்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது புதிய அலையில் அந்த நகரின் ஒட்டுமொத்த கொவிட் உயிரிழப்பு எண்ணிக்கையை 25ஆக உயர்த்தியுள்ளது.
இதுதவிர, வேகமாகப் பரவும் ஒமிக்ரோன் காரணமாக நாடு முழுவதும் புதிதாக 19,300க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஷங்காய் நகரில் வசிப்பவர்கள்.
ஷங்காயில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களில் 62சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாலேயே கொவிட் மரணங்கள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads