இலங்கை

  •  ·  Administrator
  • 1 members
  • 598 views
Followers
Empty
Membership
Administrator
Info
Who can post to my profile:
Error occurred
Organization Name:
இலங்கை
Category:
Friends count:
Followers count:
Administrators
Achievements

Basic

Total points: 3641

1361 point(s) to reach
Comments (0)
Login or Join to comment.

இலங்கை

Members
இலங்கை
typing a message...
Connecting
Connection failed
Messenger settings do not have the Jot Server Url defined, which means that real-time communication is not currently possible
  • 157
  • 159
Added a news 
களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபரை இன்று(26) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தினால் கடந்த 11ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய குறித்த ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.களுத்துறை வடக்கு - காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 383
Added a news 
அதே பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த வீட்டில் குறித்த நபர் தனியாக வசித்து வந்தமை பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.உயிரிழந்த நபரின் மகள் நேற்று தனது தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.பொலிஸில் மகள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இறந்தவரின் கைகள் கட்டப்பட்டு வாயை மூடும் வகையில் துணி கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.தற்போதைய விசாரணைகளின்படி இந்த கொலைச் சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  • 367
Added a news 
இதனால் நாளை மறுதினம் முதல்  வழமையான முறையில்  இரத்த சுத்திகரிப்பு நடைபெற மாட்டாது என்பதை மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.நாளைய தினம் வழமையான முறையில் இரத்த சுத்திகரிப்பு நடைபெறும். எனவே எமது கையிருப்பிலுள்ள டயலைசர் எண்ணிக்கைக்கு ஏற்ப 5நாட்களுக்கு 1முறை இரத்த சுத்திகரிப்பு நடைபெறும்.தாங்கள் வெளியில் வாங்கி கொண்டு வரும் பட்சத்தில் வழமையான நாட்கள் செய்யப்படும்.த.ரதீசன்0770678753 NIC-Base Hospital- tellipalai
  • 379
Added a news 
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜப்பானிய டிஜிட்டல் மயமாக்கல் அமைச்சர் டாரோ கோனோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகளுக்கான முனைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்தியிருந்ததோடு, டிஜிட்டல் முறைமைக்கு மாறுவதற்கான வேலைத் திட்டங்களின் போது இரு நாடுகளினதும் தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
  • 358
Added a news 
கொழும்பில் இன்று (சனிக்கிழமை) இரவு மழை பெய்தாலும் வெப்பம் 'எச்சரிக்கை' மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை)மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் அவதானமான நிலை வரை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மனித உடலில் 'எச்சரிக்கை' அளவில் இருக்கும் வெப்பநிலை சோர்வு மற்றும் வெப்ப பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.எனவே முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், முதியவர்கள்,நோயாளிகள், குழந்தைகளை வெளிப்புறங்களுக்கு செல்வதை மட்டுப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.அத்துடன் பொதுமக்கள் இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • 304
Added a news 
யாழ்ப்பாணம் பருதித்துறை பிரதான வீதியின் அச்சுவேலி தெற்கு நாவல் காட்டுப் பகுதியில் ஹயஸ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓட்டுனர் உட்பட ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர்.ஆவரங்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வீதியின் அருகில் இருந்து பிரதான வீதிக்கு ஏற முற்பட்ட ஹயஸ் வாகனத்துடன் மோதி இவர்கள் விபத்துக்குள்ளாகுள்ளனர்.அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். குறித்த நபர்கள் விபத்தினை தடுக்க முடியாத அளவுக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்துடன் தொடர்புபட்ட வாகனத்தின் சாரதி அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சாரதி ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
  • 278
Added a news 
புங்குடுதீவு 12 வட்டார பகுதியில் சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்ட 20 கிலோ மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவல் துறை பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் 57 வயதுடைய நபர் என பொலிசார் தெரிவித்தனர்.கைப்பெறப்பட்ட குறித்த மாட்டு இறைச்சி, உணவுக்கு உகந்தது இல்லை என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • 263
Added a news 
அச்சுவேலி போலீசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த பொழுது, சந்தே நபர் எதிராளி சாட்சி அளித்துவிட்டு வரும்பொழுது கன்னத்தில் அறைந்து உள்ளார்.நீதவான் முன்னால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.உடனடியாக அச்சுவேலி பொலிசாருக்கு உத்தரவிட்ட நீதவான் குறித்த நபருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் மற்றும் நீதிமன்றத்தை அவமதித்த போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு கட்டளை இட்டார்.அத்துடன் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபருக்கு இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.குறித்தநபருக்கு எதிராக நாலைந்து வழக்குகள் நீதிமன்றத்தில் இடம் பெற்று வருவதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
  • 255
Added a news 
கோப்பாய் டச்சு வீதி பகுதியச் சேர்ந்த துசியந்தன் டிலோசன் வயது(6), என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவனின் தந்தை வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மகனை அக்குபஞ்சர் வைத்தியத்துக்கு உள்ளாக்குவதற்காக பின்னர் அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறதுகுறித்த சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பெற்றோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் அவர்கள் உரும்பிராய் பகுதியில் உள்ள அக்குபஞ்சர் வைத்தியரிடம் அக்குபஞ்சர் வைத்தியம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
  • 262
Added a news 
அம்பாறை மாவட்டம் - நிந்தவூரில் கரைவலையில் அதிகளவான பாறை மீன்கள்  இன்று பிடிபட்டுள்ளன.நீண்ட நாட்களுக்கு பின் குறித்த பகுதியில் பெருமளவான பாறை மீன்கள் பிடிபட்டுள்ளதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார்.வலையில் சிக்கி மீன்களின் விலை சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகம் என மீனவர் தெரிவித்தார்.
  • 210
கிளிநொச்சி கோரக்கண்கட்டு கிராமத்தில் யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி நகர ரொட்டரிக் கழகத்தினால் தென்னை மரக்கன்றுகள் நடுகை  செய்யப்பட்டுள்ளன.
  • 45
"பஸ்கள் ஏற்றாது செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள்” ; யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் நடவடிக்கை!"பஸ்கள் ஏற்றாது செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள் ” எனும் தலைப்பில் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
  • 65
Added a news 
வர்த்தக வங்கிகளில் இன்று நிலவும் டொலருக்கான கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள்-மக்கள் வங்கி – கொள்முதல் ரூ. 327.20 (நேற்று 325.26) விற்பனை – ரூ. 346.37 (நேற்று 344.31)சம்பவத் வங்கி – கொள்முதல் ரூ.330, விற்பனை – ரூ. 345 (மாற்றமில்லை)கொமர்சியல் வங்கி – கொள்முதல் ரூ. 332.96, விற்பனை – 351.50
  • 154