இலங்கை

  •  ·  Moderator
  • 1 members
  • 1 followers
  • 1591 views
Followers
Membership
Moderator
Info
Who can post to my profile:
Error occurred
Organization Name:
இலங்கை
Category:
Friends count:
Followers count:
Administrators
Achievements

Basic

Total points: 3996

1006 point(s) to reach
Comments (0)
Login or Join to comment.

இலங்கை

Members
இலங்கை
TamilPoonga
👍
gf
Karthik-SHow-900.jpg
typing a message...
Connecting
Connection failed
Messenger settings do not have the Jot Server Url defined, which means that real-time communication is not currently possible
எங்கடா என் தங்கத்தை காணேல ..ஆஆ இங்கிருக்கு !! அவன் இன்னும் திருந்தல மாமா..
  • 1391
Added a news 
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் நவம்பர் 18ஆம் திகதி இடம்பெறும் என தேசிய மக்கள் சக்தியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியைப் பெற்றுள்ளதுடன், அண்மைக்கால வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கத்தை அவர்கள் அமைக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 1264
Added a news 
இம்முறை 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் விகிதாசார வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் ஒரு அரசியல் கட்சி பெற்ற அதிகூடிய ஆசனங்கள் இதுவாகும் என பெலவத்தையில் அமைந்துள்ள ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்தார். 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் கட்சி 159 இடங்களை கைப்பற்றியது, மேலும் வெற்றியின் பின்னணியில் உள்ள அனைவருக்கும் தங்கள் கட்சியின் சார்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்று கூறினார். அங்கு உரையாற்றிய டில்வின் சில்வா, "நாங்கள் பெற்ற வெற்றியின் எடையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அதை நாம் பாதுகாக்க வேண்டும். நாட்டின் பலமான அரசியல் கட்சிகளை தோற்கடித்து இந்த வெற்றியைப் பெற்றோம். பழைய அரசியல் முடிந்துவிட்டது. முதுமை முடிந்துவிட்டது. மக்கள் அந்த சகாப்தத்தை முடித்துவிட்டார்கள். அந்தச் சலுகை, குடும்பக் கட்டுப்பாட்டில் இருந்த அரசியல் இப்போது முடிந்துவிட்டது. சாமானியர்கள் நமது பயன்பாட்டைப் புரிந்து கொண்டதால் கிடைத்த வெற்றி இது... சவால்களை வெல்வதற்காகவே தவிர, இந்த சக்தியைப் பயன்படுத்தவில்லை என மேலும் குறிப்பிட்டார்.
  • 1230
Added a news 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகள்,2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளின் எண்ணிக்கையாகும்.  இதற்கு முன்னர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த சபை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக திரு.மகிந்த ராஜபக்ச இருந்தார். 2020 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் இருந்து அவர் 527,364 வாக்குகளைப் பெற்றபோது அது இருந்தது.
  • 1236
Added a news 
நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய 6,863,186 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியினருக்கு 18 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.அதேநேரம் 1,968,716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 05 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.அத்துடன் 500,835 வாக்குகளை பெற்றுள்ள புதிய ஜனநாயக முன்னணிக்கு 02 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் சிறிலங்கா பொதுஜன முன்னணி, இலங்கை தமிழரசு கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சர்வஜன அதிகாரம் ஆகியவற்றுக்கு தலா ஒவ்வொரு போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • 1251
Added a news 
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர்.💫இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார்.💫ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.💫அத்துடன் கடந்த 2020ம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற அங்கஜன் ராமநாதன் இம்முறை தோல்வியடைந்தார்.💫கடந்த முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தார்.💫ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியுற்றதுடன், அவர் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகத் தவறியுள்ளார்.💫வன்னி மாவட்டத்தில் கடந்த தடவை ஈபிடிபி சார்பாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான குலசிங்கம் திலீபன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.💫மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகக் கடந்த தடவை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.💫அத்துடன் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுக் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி இம்முறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் மட்டக்களப்பில் போட்டியிட்ட கோவிந்தம் கருணாகரன் தோல்வியுற்றார்.💫பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருணாச்சலம் அரவிந்த்குமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தனர்.💫விருப்பு வாக்குகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருக்கின்ற நிலையில், இந்த பகுதி புதியத் தகவல்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.
  • 1218
Added a news 
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதன் பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.அதற்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, “மறுமலர்ச்சி சகாப்தத்தை ஆரம்பிப்பதற்கான பொறுப்பை சுமந்த அனைவருக்கும் நன்றி!” என தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பொன்றைச் சேர்த்துள்ளார்.
  • 1238
Added a news 
சாவகச்சேரி வைத்தியசாலை ஊழலுக்கு எதிரான போராட்டம் ,அதனோடு இணைந்த மக்கள் ஆதரவு , பதவி பறிப்பு, போற்றிய மக்களில் ஒரு சில குழுக்களே தூற்றவும் செய்தனர், நம்பிய அரசியல் தலமைகள் ஏமாற்றினர, பல வழக்குகள் , பல நாட்கள் சிறைவாசம் இருந்த மருத்துவர் அர்ச்சுனா தேர்தல் வேட்புமனு திகதிக்கு இரு தினம் முன்னர் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்து யாழ் மாவட்டத்தில் பல சுயேட்சைக்குழுக்கள் கட்சிகள் நடுவே தானும் போட்டியிட்டு, இன்று அதுவும் யாழின் பல மூத்த அரசியல்வாதிகள் மற்றும் முதன்மை வேட்பாளர் உள்ளிட்ட 3 வேட்பாளர்கள் கொண்ட சாவகச்சேரி தொகுதியிலே அதிகூடிய வாக்கினை ஒரு சுயேட்சைக்குழுவாக முதன்மை பெற்று 24 வருடங்களுக்கு பிறகு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக யாழ் மக்களின் 20497 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.சில அவமானங்களும் தேவையற்ற வீண் விமர்சனங்களும் கூட ஆத்மார்த்த வெற்றியை கொடுக்கவல்லது.!
  • 1228
Added a news 
🇱🇰2024 நாடாளுமன்றத் தேர்தலின் இறுதித் தேர்தல் முடிவுகள்!2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.💫தேசிய மக்கள் சக்தி - 6,863,186 வாக்குகள் (159 ஆசனங்கள்) 💫ஐக்கிய மக்கள் சக்தி - 1,968,716 வாக்குகள் (40 ஆசனங்கள்) 💫இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 257,813 வாக்குகள் (8 ஆசனங்கள்) 💫புதிய ஜனநாயக முன்னணி - 500,835 வாக்குகள் (5 ஆசனங்கள்) 💫ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 350,429 வாக்குகள் (3 ஆசனங்கள்) 💫ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 87,038 வாக்குகள் (3 ஆசனங்கள்) 💫சர்வஜன அதிகாரம் - 178,006 வாக்குகள் (1 ஆசனம்) 💫ஐக்கிய தேசிய கட்சி - 66,234 (1 ஆசனம்) 💫ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 65,382 (1 ஆசனம்) 💫அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 39,894 (1 ஆசனம்) 💫அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 33,911 வாக்குகள் (1 ஆசனம்) 💫சுயேட்சைக்குழு 17 - 27,855 வாக்குகள் (1 ஆசனம்) 💫ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 17,710 (1 ஆசனம்)
  • 1011
Added a news 
இன்னும் சில நாட்களில் திருமணமாக இருக்கும் நிலையில் வவுனியாவில் வந்து தங்கி நிற்கும் கனடா மாப்பிளை ஒருவருக்கு அவரது எதிர்கால மனைவியுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோக்களை அனுப்பிய காதலன் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டு பின்னர் அது கனடா மாப்பிளையின் வேண்டுகோளுக்கு இணங்க வாபஸ் பெறப்பட்டுள்ளது. மணப்பெண்ணும் குறித்த காதலனும் பாடசாலைக் காலத்தில் காதலித்து வந்துள்ளார்கள். அதன் பின்னர் காதலன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து, குறித்த பெண் அவனை விட்டு பிரிந்துள்ளார். இதனால் பல தடவைகள் பெண்ணின் வீ்ட்டுக்கு காதலன் சென்று வன்முறையில் ஈடுபட்டு ஒரு தடவை பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.அதன் பின்னர் கடந்த வருடமும் வெளிநாட்டு திருமணம் ஒன்று குறித்த பெண்ணுக்கு நிச்சயமாகிய நிலையில் இனந்தெரியாதவர்களால் பெண்ணும் காதலனும் உறவு கொள்ளும் வீடியோ அனுப்பப்பட்டு கலியாணம் குழப்பட்டுள்ளது. பின்னர் தற்போது கனடாவில் குடியுரிமை பெற்ற 43 வயதான விவாகரத்தான மாப்பிளை ஒருவருக்கு குறித்த பெண் நிச்சயம் செய்யபட்டிருந்தார். இந் நிலையில் அடுத்தவாரம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் மாப்பிளையின் வட்சப் இலக்கத்திற்கு இனந்தெரியாத இலக்கத்தில் இருந்து மணமகளுடன் அந்தரங்கமாக ஒருவன் உறவு கொள்ளும் வீடியோக்கள் அனுப்பப்பட்டிருந்தது. ஏற்கனவே குறித்த பெண்ணின் காதல் தொடர்பாக கனடா மாப்பிளைக்கு தெரியப்படுத்தியிருந்துள்ளார்கள். அதனால் குறித்த அந்தரங்க வீடியோ வந்தது தொடர்பாக மணமகளுக்கு மாப்பிளை தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து மணமகளின் உறவுகள் பொலிசாரிடம் முறையிட்டதாகத் தெரியவருகின்றது.இருப்பினும் பொலிசாரின் முறைப்பாட்டை மாப்பிளையின் வேண்டுகோளுக்கு இணங்க வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் காதலனின் வீடு தேடிச் சென்ற கனடா மாப்பிளை குறித்த வீடியோ தொடர்பாக அவனிடம் விளக்கம் கோரிய போது, குறித்த வீடியோக்கள் தன்னால் அனுப்பப்படவில்லை என காதலன் கூறியுள்ளான். அத்துடன் காதலியுடன் இருந்த கோபம் காரணமாகவும் தான் சிறைக்கு சென்ற விரக்தி காரணமாகவும் தன்னுடன் காதலி அந்தரங்கமாக இருந்த காட்சிகளை சமூகவலைத்தளத்தில் 2019ம் ஆண்டில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும், பின்னர் அது முடக்கப்பட்டதாகவும் காதலன் கனடா மாப்பிளைக்கு கூறியுள்ளார். அதே நேரம் காதலன் தற்போது திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தந்தையாகவும் உள்ளதை கனடா மாப்பிளை அவதானித்துள்ளார்.கனடா மாப்பிளைக்கு அனுப்பபட்ட வட்சப் இலக்கம் அனுராதபுரத்தைச் சேர்ந்த இறந்து போன சிங்கள வயோதிபர் ஒருவரின் பதிவில் உள்ளதாகத் தெரியவருகின்றது. கனடா மாப்பிளையின் தொலைபேசி இலக்கம் மணப்பெண்ணான யுவதியின் நெருங்கிய உறவுகளுக்கே தெரிந்த நிலையில் குறித்த வீடியோ தனக்கு அனுப்பப்பட்டது தொடர்பில் யுவதியின் நெருங்கிய உறவு யாராவது தொடர்புபட்டிருக்கலாம் என மாப்பிளை சந்தேகப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • 1407
Added a news 
யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் ஐனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு,யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.யாழ் போதனா வைத்தியசாலை அருகில் அமைந்துள்ள மருத்துவ பீட கட்டடத்தினை இன்று திறந்து வைத்த வைபவத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.“இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை பல வருடங்களாக இயங்கி வந்த நிலையில் இரண்டாவதாக 5 வருடங்களிற்கு முன்னர் கண்டி போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது.மூன்றாவதாக அண்மையில் காலி போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலை யாக தரமுயர்த்தப்பட்டது.இனிவரும் காலங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவது காலத்தின் தேவை.புதிய கட்டடத் தொகுதியில் இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்களும், ஒரு சத்திர சிகிச்சைக் கூடமும், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம், மருத்துவப் பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.இந்தக் கட்டடத் தொகுதி 70 கோடி ரூபா செலவில் கல்வி அமைச்சில் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.பொருட்களின் விலை அதிகரிப்பால் செலவு அதிகரித்து கட்டடத் தொகுதி இன்னும் நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டடத்தை முழுமையாக நிர்மாணித்துப் பூர்த்தி செய்ய இன்னமும் 13 கோடி ரூபா தேவை கணக்கிடப்பட்டுள்ளது” என ஜனாதிபதி கூட்டிக்காட்டியுள்ளார்.
  • 1412
Added a news 
பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதமானோர் கையடக்க தொலைப்பேசி பாவனைக்கு அடிமையாகி இருப்பதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது .தென் மாகாணத்தில் உள்ள நானூறு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தி வைத்தியர்கள் குழுவொன்று ஆய்வொன்றை நடத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சமூக நிபுணர் வைத்தியர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதில் பல சிறுவர்கள் இரவில் சரியாகத் தூங்காமல் எப்போதும் சோர்வாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தொலைப்பேசி பாவனைக்கு அடிமையான சிறுவர்களுக்குச் சக்கரை நோய் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.அத்துடன் கட்டாய தேவை கருதி தொலைப்பேசி பாவிக்க வேண்டிய தேவை ஏற்படுமாயின் எந்தவொரு சிறுவர்களுக்கும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் தொலைப்பேசி பாவிக்க அனுமதிக்குமாறு பெற்றோர்களை வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
  • 1409
கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை-செல்வராஜா கஜேந்திரன்.
  • 1228
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
  • 1220
மரங்கள் விழும் ஆபத்து இருந்தால் 117 என்ற துரித இலக்கத்துக்கு அறிவிக்கவும் - அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கோரிக்கை.
  • 1098