சினிமா செய்திகள்
அழகு சாதன பிராண்டிற்கு அதிபதியானார் நயன்தாரா
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, 9ஸ்கின் என்ற அழகு சாதன பிராண்டை உருவாக்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியான நி
ரசிகரின் உயிரிழப்பிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் சூர்யா
சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.உயிரிழந்தவர் எண்ணூரை சேர்ந்த சூர்யாவின் ரசிகர
பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல்
1980களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், மோகன் ஷர்மா. மலையாள திரையுலகில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் ஹிட்டான பல முன்னணி ஹீரோக்களின்
அனிருத்திற்கு நடிகர் விஜய் கொடுத்த அன்பு பரிசு
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர், அனிருத். இவர் இசையமைத்த ஜவான் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வசூலில் 1000 கோடியை
ஓடிடியில் ரிலீஸ் ஆனது கிக் திரைப்படம்
நடிகர் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடித்திருக்கும் அடுத்த திரைப்படமான ‘கிக்’
'' அரண்மனை 4'' பட முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சுந்தர் சி. இவர் மின்சார கண்ணா, அருணாச்சலம், பிஸ்தா, அன்பே சிவம்,  நான் ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்க
 வைரலாகி வருகறுது  'அனிமல்' படத்தின் டீசர்
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிம
மார்க் ஆண்டனி வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கும் விஷால்
கல்யாண வயதை தாண்டியதனால என்னமோ விரக்தியில் ஏது பண்ணுகிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சிலர் சுற்றித் திரிகிறார்கள். அந்த லிஸ்டில் தற்போது விஷாலும
முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.முருகதாசுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங
சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி
மகளாக நடித்தவருடன் ஜோடி போடுவது, மனைவியாக நடித்தவர் அம்மா கேரக்டரில் நடிப்பது போன்ற எத்தனையோ விஷயங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் விஜய் சேதுபதி இதில்
கமலஹாசனுக்கு பிடித்த பெயர்
கமலஹாசன் ஏதேனும் ஒரு கருத்தை தன் படங்களில் வைத்துவிடுவார். முக்கியமாக அவர் இயக்கும் படங்களில் வருங்காலத்தில் வரப்போகும் தொழில்நுட்பங்கள், வருங்காலத்தி
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவுநாள்
எவ்வளவோ இழப்புகளை பார்த்த நமக்கு ஒரு இழப்பு சட்டென தொண்டையை அடைத்தது.பாடும் நிலா பாலுவின் இழப்பு!..கொரோனா எனும் கொடிய அரக்கன் கொண்டு போன உயிர்களுள் வி
Ads
 ·   · 6725 news
  •  · 5 friends
  • I

    9 followers

சைவ மக்களுடைய உரிமையை இந்த அரசாங்கம் பாதுக்காக வேண்டும் - மாவை சேனாதிராஜா

சைவ மக்களுடைய உரிமையை இந்த அரசாங்கம் பாதுக்காக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி ஆலயப் பகுதி அழிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக காட்சியளிக்கிறது. சைவ மக்களுடைய மத உரிமை, அந்த இடத்திற்கு சென்று வழிடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டு இதை யார் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு அந்த இடம் அழிக்கப்பட்டுள்ளது.


பல மாவட்டங்களிலும் இருந்து பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு அரச அதிபரிடம் தமது கருத்தை சொல்லவுள்ளார்கள். அவர்கள் அந்த கோவிலில் மீண்டும் வழிபட வேண்டும். அந்தக் கோவில் கட்டப்பட வேண்டும். அந்த உரிமையை சைவ மக்களுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் முறையிடுகிறார்கள். சில தினங்களுக்கு முன் வெடுக்குநாறி மலை சிவன் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு எதிராக எனது ஆட்சேபனையை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தேன். அந்த விடயங்களை அனுப்பி வைத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.


எமது வேண்டுகோள், சைவ தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த தலங்களை அழித்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சைவ மக்களுக்கும், அவர்கள் வணக்கும் கோவில்களுக்கும் பாதுக்கப்பு வழங்கப்பட வேண்டும் என்று தொலைபேசியில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தேன்.


இந்த இடம் சைவ மக்களுடைய இடம். அதை சுற்றி இராணுவம், தொல் பொருள் திணைக்களம் இருக்கிறார்கள். அவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தமிழ் மக்களினுடைய அல்லது சைவ மக்களிடைய மத உரிமையை இந்த அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். அழிக்கப்பட்ட ஆலயம் மீள நிறுவப்பட்டு அது பாதுகாக்கப்பட லேண்டும் எனக் கோரினேன் இதனையே மக்களும் ஆர்ப்பாட்த்தின் மூலம் சொல்லியுள்ளார்கள். ஆகவே ஜனாதிபதி அவர்கள் பொறுப்பேற்று செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 186
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads