சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  7897 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தம்பி விஜய்யுடன் கைகோக்க தயார்: சீமான் அறிவிப்பு

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் விஜய்யுடன் வாய்ப்பு அமைந்தால் ஒன்று சேர தான் காத்திருப்பதாகவும், தவெக சார்பில் நடைபெறும் மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் செல்வேன் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “கோயில், சாமி, சாதி, மதம் ஆகியவற்றை மட்டுமே பேசிக்கொண்டு இன்னும் எத்தனை காலத்துக்கு ஜெயிக்க முடியும். பாஜகவால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த ஒரு சாதனையைக் கூட சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை. அதற்கு பதிலாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கோயிலை இடித்துவிடுவார்கள், முஸ்லிம்களுக்கு அனைத்தையும் வாரி வழங்கிவிடுவார்கள் என பிரதமர் தனது பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். இது ஒரு தலைவருக்கு அழகல்ல.

இதைப்பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் கேஜ்ரிவால் கூறியதை போல முதல்வர்கள் ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயன் போன்றோரின் கைது உறுதியாக நடக்கும். சமூகத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

தமிழக காவல்துறை ஏடிஜிபி அருணுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். தன் தந்தையைப் பற்றி தவறாக பேசுவதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? எனவே யூடியூபர் சவுக்கு சங்கர் பேசியது தவறு.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடக்கும் மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன். 2026-ல் விஜய்யுடன் ஒன்று சேர வாய்ப்பு அமையுமானால் அதற்காக காத்திருக்கிறேன். அண்ணனும், தம்பியும் சந்திப்பது வழக்கம். அப்படித்தான் நானும் விஜய்யும் சந்தித்துக் கொள்கிறோம்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதம்பூஷண் விருதுபெற தகுதியான நபர். ஒரு கட்சியின் தலைவர் அல்லது நடிகராக மட்டுமின்றி அவர் ஒரு நல்ல மனிதர். எனவே விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே பதம்பூஷண் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது கொடுத்தில் பயனில்லை” என்றார் சீமான்.

  • 384
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads