வன்னி

Membership
Standard
Info
Who can post to my profile:
Array
Organization Name:
வன்னி
Category:
Friends count:
Followers count:
Achievements

VIP

Total points: 18322

Comments (0)

    வன்னி இலங்கை வட மாகாணத்தின் ஒரு பகுதியாகும்.

    மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பு வன்னிப் பெருநிலப்பரப்பு எனப்படுகின்றது. இது தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமாகும். இதன் அபரப்பளவு ஏறத்தாழ 7,650 கிமீ2.

    வன்னி பக்கங்களிள் இணையுங்கள்.  வன்னி  பற்றிய உங்கள் வீடியோ, புகைப்படங்கள், செய்திகள், கட்டுரைகள், கதைகள் மற்றும் பலவற்றை

    நீங்கள் பதிவிடலாம்.  நன்றி


    வன்னி
    Empty
    typing a message...
    Connecting
    Connection failed
    Added a news 
    மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம், கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்திப்பிரிவு, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவை இணைந்து You-lead செயற்திட்டத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகம் 2 ல் சிறப்புற முன்னெடுக்கப்பட்டது.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) திரு. ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விருந்தினராக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.நிகழ்வில் தலைமையேற்று நடாத்திய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) திரு. ந.திருலிங்கநாதன் அவர்கள் உரையாற்றுகையில்.........தொழில் வழிகாட்டல் என்பது மிகவும் முக்கியமானது அதாவது இளமைப் பருவத்தில் தமது எதிர்கால நோக்கி பயணிக்கின்ற போது சரியான வழிகாட்டலோடு செல்லுகின்ற போது தான் அவர்கள் தமது இலக்கை அடைய முடியும்.உண்மையிலேயே அவர்களிடம் இருக்கின்ற திறமைகளை அடையாளம் கண்டு அத்திறமைகளுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான துறைகளுக்கு வழிகாட்டுவதன் ஊடாக இளைஞர் யுவதிகள் எதிர்காலத்திலே சிறந்த ஒரு பிரஜைகளாக வருவதற்கு வழிவகுக்கும். அந்த அடிப்படையிலே நமது மாவட்ட செயலகத்திலேயே கடமை ஆற்றுகின்ற திறன் விருத்தி உத்தியோகத்தர்கள் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டுதல்களை அன்றாடம் செய்து வருகின்றார்கள்.இருந்த போதிலும் அவர்களுக்கு ஏற்படுகின்ற மட்டுப்பாடுகள் காரணமாகவும் ஏனைய பிரச்சினைகள் காரணமாகவும் அவற்றை முழுமையாக அடைகின்றோமா என்பது தொடர்பில் எமக்கு இருக்கின்ற ஐயப்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் முகமாக பரந்துபட்ட அடிப்படையில் எல்லா திணைக்களங்களையும் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்வது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் பெருவிருப்பாகும்.அந்த அடிப்படையில் மூண்றாம்நிலைக் கல்வி தொழிற்கல்வி தொடர்பாக மாவட்டம் மட்ட செயற்பாடுகளை ஒருங்கிணைக்கின்ற பணியானது அரசாங்க அதிபர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அந்த நோக்கத்திற்காக பல கலந்துரையாடல்களை நடாத்தி அந்தந்த நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அரசாங்க அதிபர் அவர்கள் வழங்கி வருகின்றார்.அந்த வகையில் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற You-lead என்கின்ற செயற்திட்டத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களும் மாவட்ட மட்டத்தில் இப்பணியினை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தனர். அதற்கு அமைவாகவே இன்றைய நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்கள் தனது உரையில் குறிப்பிடுகையில் .........கிளிநொச்சி மாவட்ட மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் தகவல்களின்படி 2400க்கும் மேற்பட்ட தொழில் தேடுனர்கள் இருக்கின்றார்கள்.இத்தொகையானது மாவட்ட சனத்தொகையோடு ஒப்பிடும் பொழுது குறைவான தோற்றப்பாட்டையே தருகின்றது.காரணம் மனிதவள வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவு செய்த தொழில் தேடுனர்களின் தொகையை அதுவாகும்.இந்நிலையில் உராய்வின் மூலம் வேலையின்மை,வேலையில் நாட்டமின்மை,அது தொடர்பான விழிப்புணர்வின்மை போன்றவை காரணமாக வேலையின்மை வீதமானது அதிகரித்த ஒன்றாகவே காணப்படுவது நிதர்சனமாகும்.இந்நிலைமையில் இன்றைய இந்த தொழிற்சந்தை நிகழ்வானது தொழில் தேடுனர்களுக்கு அவர்களது வாழ்வில் திருப்புமுனையாக அமையும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.மேலும் நிகழ்வின் ஏற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர்கள்,உதவிப்பிரதேச செயலாளர்கள்,கிராம அலுவலர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,நிதி அனுசரணை வழங்கிய You-lead செயற்திட்ட உத்தியோகத்தர்கள்,ஊடக அனுசரணை வழங்கிய ஊடகவியலாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார்.இந்நிகழ்வில் அரச, அரசசார்பற்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழில் வாய்ப்பினை வழங்கும் பொருட்டு தமது செயற்பாடுகள் தொடர்பான விடயங்களையும்      தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளையும் தொழில் தேடுனர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.
    +7
    • 18
    Added a news 
    கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு முன்னெடுக்கப்பட உள்ள சிறுபோக நெற்செய்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக காணப்படுகிறது சிறுபோக விவசாய செய்கைகளை பாதுகாப்பதற்கு கால்நடை வளர்ப்போர் தங்களத கால் நடைகளை உரிய வகையில் பராமரிக்க வேண்டும்.அரசின் புதிய கொள்கைகளுக்கு அமைவாக விவசாய நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பங்களையும் சேதன முறைகளையும் பயன்படுத்தி உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்.மாவட்டத்தின் நெல்லுற்பத்தியானது ஒரு கெக்ரேயருக்கு 03 தொடக்கம் 03.5 மெற்றிக் தொன்னாக கானப்படுகின்றது இதனை எதிர் காலத்தில் 04 தொடக்கம் 04.5 மெற்றிக் தொன்னாக அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு மாவட்டத்தின் உணவு உற்பத்தியை அதிகரிக்கப்படவேண்டும் இதற்கு அனைவரது ஒத்துழைப்புக்களும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்ட அவர்தொடர்ந்து குறிப்பிடுகையில் மாவட்டத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அவ்வாறான சட்டவிரவாத் செயல்பாடுகள் தொடர்பில் தனக்கு நேரடியாகவே அந்த தகவல்களை தெரியப்படுத்துவது மிகவும் உதவியாக இருக்கும். தொடர்ந்தும் எதிர்காலத்தில் இதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட இருக்கின்றன.இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எங்களைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
    • 15
    Added a news 
    கிளிநொச்சி  மாவட்டத்தில் கால்நடை அபிவிருத்தி செயல்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய ஆளணி வளம் இன்மையால் பெரும் கஸ்ரங்களை எதிர் கொள்வதாக மாவட்ட  கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைத்திணைக்களத்தின்; செயல்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய ஆளணி வளங்கள் இல்லாத நிலையினால் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் நெருக்கடிகள்  எதிர்கொள்வதாக மேற்படி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, கால்நடை உற்பத்தி சுகாதாரத்தினைக்களத்திற்கு 07 வெளிக்கள அலுவலர்கள் தேவையான நிலையில் ஒருவர் மாத்திரமே உள்ளதாகவும் மேற்படி கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே நேரம் அண்மை நாட்களாக கால்நடைகளுக்கு ஏற்பட்ட பெரியம்மை என்ற வைரஸ் தொற்று நோயின் தாக்கம் குறைவடைந்து வருவதாகவும் அடுத்த சில வாரங்களில் இது பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கான சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • 16
    Added a news 
    கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி மணல் ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தினால் அரசுடைமையாக்கப்பட்ட மணல் ஏல விற்பனை எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஏலத்தில் விடப்பட உள்ளதுஅதேவேளை குறித்த மணலை ஏல விற்பனை ஆரம்பமாவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்னர் பார்வையிட முடியும் என்று நீதி மன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
    • 15
    Added a news 
    கடந்த கால போக நெற்செய்கை மேற்கொண்ட சகல விவசாயிகளுக்கும் கெக்ரேயர் ஒன்றுக்கு 35 கிலோ கிராம்  USAID நிதியில் FAO.  உலக உணவு விவசாய நிறுவனம் மூலம் அடிக்கட்டு உரம் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்களம்கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால போக நெற்செய்கை மேற்கொண்ட சகல விவசாயிகளுக்கும் கெக்ரேயர் ஒன்றுக்கு 35 கிலோ கிராம்  USAID நிதியில் FAO.  உலக உணவு விவசாய நிறுவனம் மூலம் TSP (அடிக்கட்டு உரம்)   இலவசமாக இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருவதாக கமநல  அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா தேவரதன் தெரிவித்துள்ளார்.குறித்த இலவச உரவிநியோகமானது இன்று முதல் சகல கமநல சேவை நிலையங்கள் ஊடாகவும் கடந்த காலபோக செய்கை மேற்கொண்ட சகல விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார்கிளிநொச்சி விவசாயிகளுக்கு USAID நிதியில் FAO. உலக உணவு விவசாய நிறுவனம் மூலம் TSP (அடிக்கட்டு உரம்) வழங்கும் பணி மாவட்டத்தின் பூநகரி கமநல சேவை நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது. பூநகரி கமநலசேவை நிலையத்திற்குற்பட்ட சின்ன பல்லவராஜன் கட்டு கமக்காரர் அமைப்பைச்சேர்ந்த 350 விவசாயிகள் இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.  ஒரு ஹெக்டேயருக்கு நீர்ப்பாசன வயல்களுக்கு 33.கிலோ050கிராமும் மழையை நம்பி மானாவாரியாக செய்கை பண்ணும் வயல் நிலத்திற்கு 24கிலோ 700கிராமும் ஹெக்டேயர் வீதமும் வழங்கப்பட்டது.
    • 24
    வன்னி Photos
    வன்னி Videos
    My Posts
    வன்னி News
    My Albums

    கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் புயலும் இல்லத்தில் முன்னாள் போராளியும் மாவீரர்களின் பெற்றோருமான பஷீர் காக்கா ஏற்றி வைத்தார்

    கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் புயலும் இல்லத்தில் முன்னாள் போராளியும் மாவீரர்களின் பெற்றோருமான பஷீர் காக்கா ஏற்றி வைத்தார்.

    அல்வாய் மனோகரா முன்பள்ளியின் விளையாட்டு விழா

    அல்வாய் மனோகரா முன்பள்ளியின் விளையாட்டு விழா பதிவுகள்