சினிமா செய்திகள்
முடி கொட்டி ஆளே மாறிப்போன டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார்.தனது தந்தையை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார் சிம்பு, சிகிச்சைக்கு
நடிகர் மோகன் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
மோகன் உணவகம் ஒன்றில் சந்தித்த பி. வி. கராந்த் என்பவரால் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவரின் முதல் நாடகத்தை தில்லியிலிருந்தும் விமர்சகர்கள் ப
குருவுக்கே வசனம் சொன்ன பார்த்திபன்
4 நாட்கள் திணறிய பாக்யராஜ்: குருவுக்கே வசனம் சொன்ன பார்த்திபன்; சின்னவீடு ப்ளாஷ்பேக்இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் பாக்யராஜ்.
பிரகாஷ்ராஜ் செய்த உதவி
"இந்த தகவல் உண்மைதானா" என்று கேட்டார் பிரகாஷ்ராஜ்.அந்த செய்தி ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளி வந்திருந்தது. தந்தையை இழந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒ
கண்ணதாசன் பற்றி இளையராஜா கருத்து
சிச்சுவேஷன் என்ன என்று கேட்கவுடன், சிகரெட் பிடிப்பார். அதன்பிறகு துப்புவார். அவர் சிச்சுவேஷனை கேட்டு துப்புகிறாரா அல்லது எதற்காக துப்புகிறார் என்று தெ
எம்.எஸ்.விஸ்வநாதனின் மகள்
பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனின் மகள் ஆண்டிற்கு 100 கோடி வருமானம் சம்பாதித்து வரும் நிலையில், அவர் தன்னுடைய தொழில் மற்றும் அப்பா பற்றிய சில த
இசை விமர்சகர் சுப்புடு
தற்போது வரும் பாடல்கள் ரொம்ப தரம் குறைந்து மிக மிக மோசமான காலகட்டத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன 1960 இல் வந்த பாடல்கள், எண்பதுகளில் வந்த பாடல்கள், 9
சாதித்துக் காட்டினார் விசு
சம்சாரம் அது மின்சாரம்`அப்போதே அப்படியொரு க்ளைமாக்ஸ்!'- தோல்வி படத்தை ரீமேக் செய்து சாதித்தார் விசுமனிதர்கள் அருகருகே வசித்தாலும், மனதளவில் தொலைவில் வ
நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி
பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.காமெடியில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி, 1965-ம் ஆண்டில் நட
எம்.கே.தியாகராஜ பாகவதர்
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள். விழிப்புணர்வோடு இருங்கள்.இந்த எச்சரிக்கையை தன் வாழ்வில் அனுபவபூர்வமாக, அணுஅணுவாக அனுபவித்த
எஸ்பிபி பற்றி பகிர்ந்து கொண்ட நடிகர் பிரபு
சமீபத்தில் நடிகர் பிரபுவின் பேட்டி ஒன்றில் எஸ்பிபி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார் நடிகர் பிரபு.'அடிமைப்பெண்' படம் வந்த சமயத்தில்
பாடகி ஸ்ரேயா கோஷல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நடிகை ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் பிரபலமான பாடகியாக இருந்து வருகிறார். அவரது குரலுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.தற்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட
Ads
 ·   ·  2691 news
  •  ·  1 friends
  • 2 followers

இரண்டாவது கடன் தவணையைப் பெற்றுக்கொள்ள இலங்கை இரண்டு விடயங்களை பூர்த்தி செய்யவேண்டும் – IMF இன் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இரண்டு விடயங்களை பூர்த்தி செய்யவேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

வொசிங்டனில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் மதிப்பாய்வை நிறைவு செய்வதற்கு இரண்டு விடயங்கள் அவசியம்.

அரசாங்கத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்ட முன் நடவடிக்கைகளை செயற்படுத்தல். இரண்டாவது நிதி உத்தரவாதங்களின் மதிப்பாய்வை நிறைவு செய்தல் என்பதாகும்.

இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் பாராட்டத்தக்கன. விரைவான பணவீக்க வீழ்ச்சி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இதனை அவதானித்துள்ளோம்.

இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன் அரசாங்கத்தின் நிதி அமைப்பில் ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்கிறது.

ஒட்டுமொத்த நிரல் செயல்திறன் வலுவாக உள்ளது. நான்காண்டு கால திட்டத்தில் ஜ.எம்.எப் அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளும் இடையிலான பொருளாதாரக் கொள்கைகள் பணியாளர் அளவிலான மட்டத்தில் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

இந்த உடன்படிக்கைகள் நிறைவடைந்தால் இலங்கைக்கு சுமார் 337 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி கிடைக்கும்.

கடன் மறுசீரமைப்பைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டு தனியார் கடனாளிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.

இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கொள்கையளவில் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுகின்றது. உள்நாட்டு கடன் நடவடிக்கைகள் பெரும்பாலும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டுப் பத்திரதாரர்களுடனான ஆரம்ப கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தம் ஏதுமின்றி ஏப்ரல் நடுப்பகுதியில் நிறைவடைந்துள்ளன.

மேலும் கொள்கைகள் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் தரப்பில் இந்த ஒப்பந்தங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

தொடர்ந்து விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன” என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 607
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads