Featured News

நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு – 1909● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977●
Latest News

கனடாவில் விமான பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.மனிடோபா (Manitoba) - ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில், குறித்த இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, வின்னிபெக்கில் (Winnipeg) இருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில், தெற்கு விமான நிலையம் அருகே இருவரும் விமானத்தைத் தரையிறக்க முயன்றவேளை, 400 மீற்றர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்துக்குள்ளான விமானங்கள் தீப்பிடித்ததில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில், கனடா போக்குவரத்து பாதுகாப்புச் சபை விசாரணைகளை நடத்தி வருவதாக, கூறப்படுகின்றது.

கனடாவில் குடியுரிமை மற்றும் வேலை அனுமதிக்காக விண்ணப்பிக்க விரும்பிய பலரிடம் பொய்யான குடிவரவு சேவைகளை வழங்கியதாக குற்றம் சும்தி 43 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.2023 மே 31 முதல் 2025 மே 31 வரையான காலப்பகுதியில் யோங் வீதி மற்றும் எக்லிங்டன் அவென்யூ பகுதிகளில் குற்றவாளி குடிவரவு ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.மக்கள் குறித்த பெண்ணிடம் பணம் செலுத்திய பின், அரசாங்க ஆவணங்கள் போல உருவாக்கப்பட்ட பொய்யான ஆவணங்கள் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த ஆவணங்கள் திகதிகள் தவறானவையாக இருப்பதும், வழங்கப்பட்ட சேவைகள் சட்டபூர்வமானவை அல்ல என்பதும் பாதிக்கப்பட்டவர்களால் உணரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மாரியா கொர்புஸ் என்ற 43 பெண் மீது போலி ஆவணத் தயாரிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்

ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நேற்று (08) உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது. மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது.வத்சலா யானையின் முன் கால்களின் நகங்களில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, காப்புக்காட்டின் ஹினௌடா பகுதியில் உள்ள கைரையன் வடிகால் அருகே எழுந்து நடக்க இயலாமல் படுத்துக் கொண்டது.வனத்துறை ஊழியர்கள் இந்த யானையை தூக்க நிறைய முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் வத்சலா யானை செவ்வாய்க்கிழமை (08) பிற்பகலில

அமெரிக்காவிற்கான பயணங்களை கனடியர்கள் தொடர்ந்தும் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்குப் பயணிக்க கனடியர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அதே நேரத்தில் நாடளாவிய உள்நாட்டு சுற்றுலா திடீரென உயர்வடைந்து வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வேளையில், பரபரப்பான கோடை விடுமுறை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணத்துறையில் செயல்படும் நிறுவனங்களின் தகவலின்படி, உள்ளூர் இடங்களுக்கு முன்பதிவுகள் அதிகரித்து, கனடாவில் உள்ள தனித்துவமான சுற்றுலா தலங்களை ஆராய்வதில் மக்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள்.இந்த ஆண்டில் கனடியர்கள் அதிக அளவில் உள்ளூர் பயணங்களில் ஈடுபடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பயண மாற்றங்கள் அம

கனடாவில் தப்பிச் சென்ற கைதி ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1992-ஆம் ஆண்டு கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி ஒருவர் இவ்வாறு தப்பியுள்ளார்.கியூபெக்கிலுள்ள ஆர்செம்பெல்ட் Archambault சிறையிலிருந்து தப்பியதைத் தொடர்ந்து, அவரை பிடிக்க நாடு தழுவிய அளவில் பிடிவிராந்து உத்தரவு (Canada-wide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது. லோரீ பில் ஜெர்மா (Lory Bill Germa) என்ற 69 வயதான கைதியே இந்த தப்பிச் சென்றுள்ளார். அவர் தற்போது ஒண்டாரியோ மாகாணத்தின் தென் பகுதியில் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 5 அடி 8 அங்குலம் உயரமான நபர் சுமார் 165 பவுண்ட் எடையுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.பொதுமக்கள், இந்த நபரை காணும்போது அருகில் செல்ல வேண்டாம், அல்லது அவ

தென் அல்பர்ட்டாவில் உள்ள க்ளென்வுட் பகுதியில், 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். க்ளென்வுட் நகரின் மேற்கே சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் கைவிடப்பட்டடிருந்த நிலையில் ஒரு வாகனம் இருப்பதாக மவுண்டீஸ் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.அந்த வாகனத்துக்குள் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் குறித்த பிரதே பரிசோதனை (autopsy) நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த வழக்கில் தகவல் தெரிந்தவர்கள் உடன், கார்ட்ஸ்டன் RCMP காவல் நிலையத்தை 403-653-4931 என்ற எண்ணிலும், அல்லது இரகசியமாக தகவல் வழங்க விரும்புவோர் 1-800-222-8477 என்ற Crime Stoppers எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐபிஎல் உரிமையாளர் லலித் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில், தொழிலதிபர் விஜய் மல்லையா கலந்துகொண்டு பாட்டு பாடி டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.லலித் மோடி மீது சட்டவிரோத ஏல முறைகேடுகள், பணமோசடி, மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், விஜய் மல்லையா ₹9,000 கோடிக்கும் மேல் வங்கிக் கடன் தவணையை செலுத்தாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இருவரும் 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இந்நிலையில் லண்டனில் உள்ள தனது வீட்டில் நடந்த பிரம்மாண்டமான விருந்து குறித்த வீடியோவை லலித் மோடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த விருந்தில் இந்தியப் பாடகர் கார்ல்டன் பிரகன்ச

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில், வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி, 1,179 பேருக்கு தட்டம்மைத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அல்பர்ட்டாவில் Calgary Stampede என்னும் விழா துவங்கியுள்ள நிலையில், தட்டம்மை பரவல் தொடர்பில் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1.3 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.தட்டம்மை எளிதில் பரவக்கூடிய தொற்றுநோய் என்பதால், Calgary Stampede போன்ற விழாக்களில் பங்கேற்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ளோருக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. ஆகவே, சிறுபிள்ளைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள், தடுப்பூசி பெறாதவர்கள் ஆகியோர் கூட்டமான இடங்களை தவிர்க்கும

மலேசியாவில் கம்பிவண்டிப் பயணம் செய்ய விரும்பிய தம்பதி ஏமாந்துபோன சம்பவம் இணையத்தில் பேசுபொலிருளாகியுள்ளது. தம்பதி 300 கிலோமீட்டர் பயணம் செய்து கம்பி வண்டிச் சேவை எடுக்கும் தலத்தைச் சென்றடைந்தவர்களுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.ஏனெனில் ஆனால் அங்கே அப்படி ஒரு சேவையே இல்லையாம். பேராக், கெடா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையில் கம்பிவண்டிச் சேவை இருப்பதாக ஒரு காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பொய்யான காணொளி TikTok, Facebook ஆகிய சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வந்ததாக கூறப்படுகின்றது.அதை நம்பி அந்த இடத்திற்குச் சென்ற தம்பதியிடம் அது செயற்கை நுண்ணறிவைக்கொண்டு தயாரிக்கப்பட்ட காணொளி என்று ஹோட்டலில் பணியாற்றிய பெண் ஒருவர் தெரிவித்தார். அதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இணையத்தில் க

“Big Beautiful Bill" என பெயரிடப்பட்டுள்ள புதிய வரி சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.“Big Beautiful Bill" என பெயரிடப்பட்டுள்ள புதிய வரி செலவு மற்றும் வரி தொடர்பான ஒரு வரிச் சட்டமாகும். இந்த புதிய வரிச் சட்டம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுவதுடன் இதற்கு எதிராக விமர்சனங்களும் எழுந்து உள்ளன.

2025 ஆண்டிற்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளதுடன், கனடா 14 ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டு 1.449 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 1.491புள்ளிகளை பெற்று 14 ஆவது இடத்தை பெற்றுள்ளது.பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிடும். இந்தாண்டிற்கான அமைதி பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.உலக மக்கள் தொகையில் 99.7% உள்ளடக்கிய 163 நாடுகளை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டும் இந்த பட்டியலில் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே முன்னிலையில் உள்ளன.முதல் ஐந்து இடங்களை ஐஸ்லாந்து (1.095), அயர்லாந்து (1.260), நியூசிலாந்து (1.282), ஆஸ்திரியா (1.294) சுவிட்சர்லாந்து (1.294) போன்ற நாடுகள் முறையே

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றொரு விதி உண்டு. அந்தத் தொகை 10,000 டொலர்களாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் அதை 20,635 டொலர்களாக உயர்த்தியது கனடா அரசு.தற்போது அந்த தொகையை மீண்டும் உயர்த்தியுள்ளது கனடா அரசு.கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக இனி தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என தற்போது மீண்டும் அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை, கனடா புலம்பெயர்தல், அகத