News
Featured News
Latest News
சிகிச்சைக்காக 8 மணிநேரம் காத்திருந்த இந்தியர் மரணம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  919 views
கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடுமையான நெஞ்சு வலியுடன் சிகிச்சைக்காக சுமார் 8 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்த இந்தியர் உயிரிழநண் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிகிச்சை கிடைக்காத நிலையில் 44 வயதுடைய இந்திய வம்சாவளி நபர், மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.பிரசாந்த் ஸ்ரீகுமார் என்ற குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி பணியில் இருந்தபோது, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் எட்மண்டனில் உள்ள 'கிரே நன்ஸ்' மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவின் காத்திருப்பு அறையில் அமர வைக்கப்பட்டார்.அவர் தொடர்ந்தும் கடுமையான வலி இருப்பதாக கூறியபோதிலும் அவருக்கு இ.சி.ஜி (ECG) பரிசோதனை செய
கனடாவில் கருகிய நிலையில் வாகனத்திலிருந்து இரண்டு சடலங்கள் மீட்பு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  859 views
கனடாவின் சர்ரே பகுதியில் வாகமொன்றிலிருந்து கருகிய நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. டிரெய்லர் தீப்பிடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.102 அவென்யூ – 12200 பிளாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த பயண டிரெய்லரில் தீப்பிடித்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சர்ரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.அப்போது தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பொழுதுபோக்கு வாகனத்தின் (recreational vehicle) உள்ளே இரண்டு நபர்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர் என சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக காவல்துறையும் தீயணைப்புப் பி
கனடாவிலேயே வாழ தலைசிறந்த நகரம் குவெல்ஃப்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  844 views
Zolo என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனம், சமீபத்தில், ‘2025ஆம் ஆண்டில் கனடாவில் வாழ தலைசிறந்த இடங்கள்’ பட்டியலை வெளியிட்டது.2025ஆம் ஆண்டில் கனடாவில் வாழ தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நகரம், ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள குவெல்ஃப் (Guelph) ஆகும். இந்த பட்டியல், நகரிலுள்ள வீடுகள் விலை, சராசரி வருவாய், குற்றச்செயல் வீதம், ஆண்டுக்கு எத்தனை நாட்கள் சூரிய ஒளி இருக்கும், பாதசாரிகள் நடந்து செல்ல வசதி மற்றும் விலைவாசி ஆகிய காரணிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. குவெல்ஃப் நகரம், ஒண்டாரியோவிலிருந்து ஒரு மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், நல்ல காபி ஷாப்கள், உள்ளூர் கடைகள், இருபுறமும் மரங்கள் நடப்பட்ட நடைபாதைகள் ஆகியவை குவெல்ஃப் நகரின் சிறப்பம்சங்கள
வங்கதேசத்தில் மற்றொரு மாணவர் தலைவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  688 views
வங்கதேசத்தில் மாணவர் தலைவரான மொட்டலேப் ஷிக்தர் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் தலையில் சுட்டதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலக காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த ஷெரீப் உஸ்மான் ஹாடி என்ற மாணவர் தலைவர், கடந்த 12-ம் தேதி சைக்கிள் ரிக்‌ஷாவில் செல்லும்போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தலையில் சுட்டுவிட்டு தப்பினர். டாக்கா மருத்துவமனையிலும், பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் பெரும் கலவரம், வன்முறை
 கனடாவில் போலி நாணயத் தாள்கள் குறித்து எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  701 views
கடந்த நவம்பர் மாதம் முதல் கனடாவில் 20, 50 மற்றும் 100 டொலர் மதிப்புள்ள போலி கனடிய நாணயத் தாள்கள் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளதாக கனடிய சில்லறை விற்பனை பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த ஒரே ஒரு மாதத்தில் கண்டறியப்பட்ட போலி நாணயத் தாள்களின் எண்ணிக்கை, முந்தைய முழு ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.போலி நோட்டுகள் தயாரிக்கும் நபர்கள் தங்களின் தொழில்நுட்பங்களை மிகவும் மேம்படுத்தியுள்ளனர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பயிற்சி பெற்ற கண்களுக்குக் கூட உண்மையான நோட்டுகளையும் போலி நோட்டுகளையும் வேறுபடுத்துவது கடினமாகி விட்டது.ஹோலோகிராம்கள் கூட மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. இந்த போலி நாணயத் தாள் பரவல் கிறிஸ்துமஸ் பண்டி
தீ விபத்தினால் இருளில் மூழ்கியது சான் பிரான்சிஸ்கோ
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  669 views
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் நகரின் வட பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில், போக்குவரத்து ஒளி சமிக்ஞைகளும் இயங்கவில்லை. இதன் காரணமாக வீதியில் சென்றுகொண்டிருந்த தானியங்கி கார்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றுவிட, அவ்வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இருள் சூழ்ந்த வேளையில் வீதி நெடுகிலும் வரிசையில் நின்ற கார்களின் சமிக்ஞை விளக்குகள் மட்டும் ஒளிர்ந்த காட்சி கழுகுப் பார்வையாய் பிடிக்கப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகர் முழுதும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அலங்கார வடிவமைப்புகள் களைகட்டி வருகிறது.வணிக வளாகங்கள், கடைகளில் வியாபா
கனடாவில் பிறப்பு சுற்றுலாத்துறையில் மீண்டும் உயர்வு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  604 views
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கடுமையாக குறைந்திருந்த ‘பிறப்பு சுற்றுலா’ (Birth Tourism) விகிதங்கள், தற்போது கனடாவில் மீண்டும் உயர்ந்து வருவதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, கனடிய மருத்துவமனைகளில் குடியுரிமை இல்லாதவர்களால் (non-residents) நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களும் அடங்குவர். இந்த வகை பிறப்புகள் 2024-இல், தொற்று முன் இருந்த நிலைக்கு மீண்டும் வந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.தற்காலிக குடியிருப்பாளர்கள் அல்லது சுற்றுலா விசாவில் வரும் நபர்கள் தாங்களே மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டு பெறும் பிரசவங்களை“non-resident self-pay” என்ற சொல் குறிக்கிறது.குடியுரிமை இல்லாத அல்ல
பண்டிகை காலத்தில் கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  597 views
பண்டிகை காலத்தில் கனடியர்களுக்கு மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கனடியர்கள் மோசடிகளால் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இழந்து வருகின்றனர்.ஆனால், விடுமுறை காலங்களில் மக்கள் அவசரம், கவனச்சிதறல் மற்றும் பாதிப்பு நிலை காரணமாக இருப்பதால், இந்த குற்றங்கள் மேலும் அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கொள்வனவர்கள் கவனம் தளர்ந்த நேரத்தை மோசடியாளர்கள் குறிவைப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணரான டெரி கட்லர் தெரிவிக்கின்றார்.மக்கள் வேகமாக வேலைகளை முடிக்க விரும்புகிறார்கள். அதனால், கிளிக் செய்யக்கூடாத இணைப்புகளை கிளிக் செய்து மோசடியில் சிக்குகிறார்கள்,” என அவர் தெரிவித்தார்.சலுகைகளை நாடும் வாடிக்கையாளர்களை ஈர்க்க போலி இணையதளங்களை உருவாக்குவதுடன், கிப்ட் கார்டுகளையும்
பனிப் புயல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1078 views
கனடாவின் மத்திய ஒன்டாரியோ மற்றும் வடமேற்கு கியுபெக் பகுதிகளில் கடும் பனிப்புயல் தாக்கம் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.ஒன்டாரியோவில் இந்த பனிப்புயல் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் 30 முதல் 50 செ.மீ. வரை பனிப்பொழிவு பதிவாகக்கூடும். சில இடங்களில் இதைவிட அதிகமாகவும் பெய்ய வாய்ப்பு உள்ளது.வடக்குத் திசையில் இருந்து வீசும் காற்று வேகம் 50–60 கிமீ/மணி வரை இருக்கும் என்றும், Lake Nipigon-க்கு தெற்கான பகுதிகளில் 70 கிமீ/மணி வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.பலத்த வடக்குக் காற்றும் கனமழை போன்ற பனிப்பொழிவும் சேர்ந்து, சில நேரங்களில் வீதிகளில் கடும் பனிமூட்டம் நிலவும் எனவும் எதிர்வுகூ
நாயை களவாடிய பெண்ணுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  992 views
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில், அண்டை வீட்டாரின் நாயை “வன்முறையுடன் கூ ட்டாக தாக்கி” களவாடிய சம்பவத்தில் ஒரு பெண் கொள்ளை குற்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை என அண்மையில் வெளியான நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷய்னி கிறிஸ்டி அன்டோனியோஸ் என்பவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜூரி விசாரணையில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். தண்டனை தொடர்பான தீர்ப்பு கடந்த வாரம் இணையத்தில் வெளியிடப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மொனிக்கா கிளைட்டன் என்ற பெண், நாயுடன் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் மூன்று பெண்கள் அணுகி, தாக்கி, தள்ளி, உதைத்து, நாயை வலுக்கட்டாயமாக கொள்ளயைிட்டுச் சென்றதாக குற்றம
விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் - பிரிட்டன் மன்னர் சார்லஸ்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  891 views
புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைந்துவிடும். நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்' என பிரிட்டன் மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின், 2022ம் ஆண்டு, செப்டம்பரில், பிரிட்டன் மன்னராக, அவரது மகன் மூன்றாம் சார்லஸ், 77, முடிசூட்டிக் கொண்டார். இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சார்லசுக்கு, புற்றுநோய் கண்டறியப்பட்டது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சூழலில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் கூறியதாவது: புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது, அந்நோய் பாதிப்பிலிருந்து எளிதாக மீள்வதற்கு உதவுகிறது.புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்ச
கனடாவுக்கு வந்த ஒரே மாதத்தில் மகளை இழந்த அகதிகள் குடும்பம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  777 views
அகதிகள் குடும்பம் ஒன்று கனடாவுக்கு வந்து ஒரு மாதமே ஆன நிலையில் தங்கள் அன்பு மகளை இழந்துள்ள விடயம், அக்குடும்பத்தை சொல்லொணா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மியான்மரில் இனப்படுகொலைக்குத் தப்பி பங்களாதேஷுக்கு ஓடிய ஆயுப் கான் குடும்பத்தை கனடாவுக்கு வர ஸ்பான்சர் செய்துள்ளார் அவரது சகோதரரான நாசிர் கான்.நவம்பர் மாதம் 5ஆம் திகதி கனடா வந்தடைந்தது ஆயுப் கான் குடும்பம். ஆயுப் கான் தனது மகளான ஷோமிமாவை (9) பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயிலுள்ள Newton Elementary School என்னும் பள்ளியில் சேர்த்திருந்தார்.இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 5ஆம் திகதி, பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது தன் தந்தையுடன் சாலையைக் கடந்துகொண்டிருந்த ஷோமிமா மீது வேன் ஒன்று மோதியுள்ளது. வேன் மோதியதில் ஷோமிமா உயிரிழந்துவிட்டார். வேனின் சாரத