Featured News
நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு – 1909● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977●
Latest News
கனடாவில் பிரபல யோகட் பானமான யோப்லாயிட் யோப் Yoplait YOP தயாரிப்புகள் சிலவற்றில், பிளாஸ்டிக் துண்டுகள் கலந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், கனடிய உணவு ஆய்வு அமைப்பு திரும்ப் பெறும் உத்தரவினை பிறப்பித்துள்ளது.பேக்கேஜ் கூறுகளில் உள்ள குறைபாட்டால் தயாரிப்பில் பிளாஸ்டிக் கலக்க வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த சுய விருப்ப அடிப்படையிலான மீளப் பெறல் மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.200 மில்லி லீற்றர் அளவு கொண்ட புளூபெரி, ஸ்ட்ரோபெரி, ஸ்ட்ரோபெரி–வாழை, பர்த்டே கேக், வனில்லா, வாழை, ராஸ்ப்பெரி, பீச், மந்தரின்,ட்ராபிக்கல், பிளாக்பெரி–ஸ்டார்ஃப்ரூட், லாக்டோஸ் ஃப்ரீ ஸ்ட்ரோபெரி–ராஸ்ப்பெரி, லாக்டோஸ் ஃப்ரீ மாம்பழம் போன்ற பானங்கள் இவ்வாறு மீளப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த
கனடாவின் சில பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் உணவிற்கான செலவுகளை மேற்கொள்ள முடியாது திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பிரின்ஸ் எட்வர்ட் தீவு பல்கலைக்கழகம் (UPEI) மாணவர்கள் வாழ்வாதாரச் செலவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.பல்கலைக்கழக உணவு வங்கியை பயன்படுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 60% வரை அதிகரித்துள்ளது.2022ம் ஆண்டில் உணவு வங்கிகளின் உதவியை நாடிய மாணவர் எண்ணிக்கை 2,900 எனவும் 2024ம் ஆண்டில் இந்த எண்ணிக்க 4,600 ஆக உயர்வடைந்துள்ளது எனுவும் தெரிவிக்கப்படுகின்றது.விலைவாசி உயர்வு, வாடகை, கட்டணங்கள், புத்தகங்கள், மின்சாரம், தொலைபேசி பில்கள் ஆகியவற்றின் செலவுகளை சமாளிக்க பலர் இலவச உணவு உதவியை நாடுகின்றனர்.உணவு மட்டும் அல்ல. வாடகை, கட்டணம், புத்தகம், மின்சாரம் என பல செலவ
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் உரையாற்றுவதற்கு எந்த அவசர பிரச்சினையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த G20 மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கனடாவின் எதிர்காலம் மற்றும் புதிய கூட்டாண்மைகளை ஏற்படுத்துவது தொடர்பில் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா மீளவும் வர்த்தகம் தொடர்பில் விவாதங்களை முன்னெடுக்கும்போது நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஒண்டாரியோ மாகாண அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வரி எதிர்ப்பு விளம்பரம் த
ஹூண்டாய் நிறுவனம் கனடாவில் 5,616 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.பர்ஜ் கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள சேக் வால்வு கோளாறு காரணமாக எரிபொருள் கசிவு ஏற்பட்டு, தீ அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சில வாகனங்களில், பர்ஜ் கட்டுப்பாட்டு அமைப்பின் சேக் வால்வு, எரிபொருள் தொட்டி பெரிதாகும் நிலை உருவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.இதனால் எரிபொருள் தொட்டி சூடான கூறுகளுடன் தொடும் அபாயம் உள்ளது; அதனால் எரிபொருள் கசிவு ஏற்படலாம் இந்த திரும்ப பெறல் 2020–2023 Hyundai Sonata மாடல்களுக்கு பொருந்தும்.ஆனால் 1.6 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்ட குறிப்பிட்ட வாகனங்களே பாதிக்கப்பட்டுள்ளன. இந்த திரும்ப பெறல், முன்பு வெளியிடப்பட்ட 2025637 (Hyundai C0566) திரும்ப பெறலை மாற்ற
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கனடாவை குறை கூறி வருவதைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதியும் தன் பங்குக்கு குறை கூற துவங்கியுள்ளார். கனேடியர்களின் வாழ்க்கத்தரம் முன்னேறாமல் இருப்பதற்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என அவர் கூறியுள்ளார். சமூக ஊடகமான எக்ஸில் கனடாவுகு எதிராக பல இடுகைகளை வெளியிட்டுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதியான JD வேன்ஸ். அவற்றில், கனேடிய மக்களின் வாழ்க்கைத்தரத்தின் தேக்கநிலைக்கு, அதாவது, வாழ்க்கைத்தரம் மேம்படாமல் இருப்பதற்கு, வெளிநாட்டில் பிறந்தவர்கள் கனடாவில் வாழ்வதுதான் காரணம் என வேன்ஸ் தெரிவித்துள்ளார்.அதற்கு ஆதாரமாக, கனடாவின் தனி நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதாவது, GDP அல்லது Gross Domestic Product அறிக்கையை காட்டியுள்ளார் வேன்ஸ். ஆனால், ஒரு நபருக்கான மொத்த உள்
விலைவாசி உயர்வு காரணமாக, கனேடியர்கள் தங்கள் உணவுப்பழக்கத்தையே மாற்றிவிட்டதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.பொதுவாகவே, கொரோனா காலகட்டத்துக்கு முன் காலாவதி திகதி பார்த்து உணவுப்பொருட்களை வாங்கிய பல நாட்டு மக்கள், இப்போது, எந்த உணவு விலை குறைவு என்று பார்த்து வாங்கத் துவங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக, கனேடியர்கள் தங்கள் உணவுப்பழக்கத்தையே மாற்றிவிட்டதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.Dalhousie பல்கலையும், Caddle என்னும் ஒன்லைன் தரவுத் தளமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வொன்றைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஐந்தில் நான்குபேர், இப்போது தங்களுக்கு அதிக பாரமாக உள்ள செலவு உணவுப்பொருட்கள் வாங்குவதுதான் என்று குற
பிரேசிலில் ஐ.நா காலநிலை உச்சிமாநாடு நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டு அரங்கில் நேற்று (20) இரவு திடீரென தீ பரவியதில், தீயில் சிக்கி 13 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரங்கில் தீ பரவியதும், மாநாட்டில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஓட்டமெடுத்துள்ளனர். எனினும், இந்த அசம்பாவைதத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.ஐ.நா காலநிலை உச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு, திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கிளம்பிய புகையை சுவாசித்த 13 பேருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்க
வடக்கு ஒண்டாரியோ மாநிலத்தில், உயர் தூய்மையான லித்தியம் கொண்ட பாறைகள் நிறைந்த 6 புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது, கனடாவின் மின்கல உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பு துறைகளுக்கு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.இந்த புதிய இலக்குகள், ஏற்கனவே திறந்த குழி (open pit) முறையில் சுரங்கம் செய்யக்கூடிய வளங்களின் அருகே அமைந்துள்ளதால், எதிர்காலத்தில் பகிரப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் லொஜிஸ்டிக்ஸ் (Logistics) மூலம் சுரங்கப்பணி எளிதாகும்.ஜார்ஜியா லேக் (Georgia Lake) பகுதியில், லித்தியம் தாதுக்கள் பொதுவாகக் காணப்படும் பெக்மடைட் (pegmatite) கற்களில் இந்த வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.P&E Mining Consultants Inc. நிறுவனம், இந்த திட்டத்தின் மினரல் வள மதிப்பீட்டை மேற்க
கனடாவில் டென்னிஸ் வீரர் ஓருவரின் உயிரை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றிய ஐந்து பேருக்கு வீரத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் கடந்த கோடை காலத்தில் மயங்கி விழுந்த டென்னிஸ் வீரர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய குழுவொன்றுக்கு இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது.ஜூலை 5ஆம் திகதி பிரையன் சீ (Brian Seay) எனும் டென்னிஸ் வீரர் மைதானத்தில் மாரடைப்பு காரணமாக விழுந்த போது, ஐந்து பேர் உடனடியாக ஓடி வந்து உதவினர். அவர்கள் பிரையனை மயக்க நிலையில், மூச்சில்லாமல், இதயத் துடிப்பின்றி இருந்ததை கண்டனர் என்று பிரிட்டிஷ் கொலம்பிய அவசர மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் உடனடியாக 911க்கு அழைத்ததுடன், அவசர முதலுதவி செய்து, டெஃபிப்ரில்லேட்டரை (defibrillator) பயன்படுத்தினர்.உட
கனடாவின் கல்கரியைச் சேர்ந்த யூஜி ஹு (Yuji Hu, வயது 39) என்பவர், தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில், யூஜி குடும்பம் கலிபோர்னியாவிலுள்ள கடற்கரை ஒன்றிற்குச் சென்றுள்ளது. திடீரென, தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த யூஜியின் 5 வயது மகளை அலை இழுத்துச் செல்ல, மகளைக் காப்பாற்ற கடலில் இறங்கியுள்ளார் யூஜி. ஆனால், அலை அவரையும் இழுத்துச் சென்றுவிட்டது. கணவனும் மகளும் கண் முன்னே அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட யூஜியின் மனைவி கடலுக்குள் இறங்கி அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரால் எதுவும் செய்ய இயலாமல் அவர் கரைக்கே திரும்பிவிட்டிருக்கிறார்.அந்த நேரத்தில், கடலில் 15 முதல் 20 அடி உயரத்துக்கு அலை எழுந்ததாக கூறப்படுகிற
வங்காளதேச முன்னாள் பிரதமர் 78 வயதான ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து இன்று(17) அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது.வங்க தேசத்தில் 2024ஆம் ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற மாணவர்கள் கிளர்ச்சியின் போது, 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அப்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது.இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி, ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது
கௌரவ் சாப்ரா என்னும் இந்தியர் கனடாவில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, பொலிசார் ஒருவர் அவரை நிறுத்தியுள்ளார். அப்போது அவரது காருக்குள் windscreenஇல் பொருத்தப்பட்டிருந்த மொபைலில் வீடியோ ஒன்று ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. அவருக்கு 615 டொலர்கள் அபராதம் விதித்துள்ளார் அந்த பொலிசார். ஆனால், இனவெறுப்பு காரணமாக அவர் தனக்கு அபராதம் விதித்ததாகத் தெரிவிக்கும் கௌரவ், அந்த பொலிசார் தனது பர்ஸிலிருந்த பணத்தைப் பார்த்து எதற்கு இவ்வளவு பணம் என்று கேட்டதாகவும் கூறுகிறார்.அவர் இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகம் ஒன்றில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களைப் பார்த்தவர்கள், கார் ஓட்டும்போது வீடியோ பார்ப்பது சட்டப்படி தவறுதான் என்கிறார்கள்.கௌரவ் அந்த பொலிசாரிடம் வீடியோ ஓடுவது உண்மைதான். ஆனால், த