News
Featured News
Breaking News
 மத்திய கிழக்கு போரில் கனடா படை பங்கேற்காது - கனடிய பிரதமர்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  45 views
 மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, நடைபெற்று வரும் போரில் கனடா இராணுவம் பங்கேற்காது என்று கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த மோதலில் கனடா இராணுவமாக ஈடுபடுவதற்கான திட்டம் எதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.இந்த நடவடிக்கைகளுக்கான இராணுவ தயாரிப்பிலும் திட்டமிடலிலும் கனடா பங்கேற்கவில்லை எனவும், எதிர்காலத்திலும் இராணுவ ரீதியாக இணைவது எதிர்பார்க்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை கனடா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஈராக் தலைநகரில் பதற்ற நிலை ; துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  45 views
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதீத பாதுகாப்புமிக்க 'பசுமை வலயத்திற்குள்' (Green Zone) நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்க தூதரகம் மற்றும் முக்கிய அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தற்போது அந்தப் பகுதியில் மேலதிக பாதுகாப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு காலமானார்
  •  ·  sivam
  •  · 
  •  ·  India
  •  ·  376 views
இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்ல கண்ணு அவர்கள் இன்று தனது 101வது வயதில் சென்னையில் காலமானார். 80 ஆண்டு கால அரசியல் போராட்ட வரலாறு கொண்ட தோழர் நல்லகண்ணு கடைசிவரை மீசை வைத்துக் கொள்ளவில்லை. அந்த மீசைக்கு பின்னால் மனதை உலுக்க வைக்கும் ஒரு பின்னணி உள்ளது பலருக்கும் தெரியாது,சுதந்திரப் போராட்ட போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தோழர் நல்லகண்ணு. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925 இல் பிறந்த இவர் மாணவப் பருவத்தில் இருந்தே சுதந்திர தாகம் கொண்டவர்.18 வயதிலேயே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர். தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்தவர்.
மெக்ஸிக்கோவிற்கான பயணங்கள் குறித்து கனடா எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  621 views
மெக்ஸிக்கோவிற்கு பயணம் செய்யும் கனடியர்களுக்காக கனடா அரசு புதிய பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜாலிஸ்கோ மாநிலத்தில் நிலைமை “தீவிரமாகவும் வேகமாக மாறிக்கொண்டிருப்பதாக கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.குறிப்பாக கவுடாலாஜாரா மற்றும் பியுட்ரோ வலார்டா பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.அந்த மாநிலத்தின் பல நகரங்களில் குற்றக் குழுக்கள் எரியும் வாகனங்களைப் பயன்படுத்தி சாலைகளை மறித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பியுட்ரோ வலார்டா நகரில் ‘வீட்டிலேயே தங்கும்’ (shelter-in-place) உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.டாக்ஸி மற்றும் ரைடு-ஷேர் சேவைகளும் தற்காலிகமாக
 ஒண்டாரியோவில் பேருந்து விபத்தில் 8 பேர் காயம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  483 views
கனடாவின் கிழக்கு ஒண்டாரியோவில் மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் எட்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.மாலை 7.15 மணியளவில் Highway 401 நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய பாதையில், நபனீ (Napanee) நகரத்திற்கு கிழக்கில், கவுன்டி வீதி 4 மற்றும் கவுன்டி வீதி 6 இடையிலான பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.சுமார் 50 பயணிகள் இருந்த ஒரு கோச் பேருந்து நெடுஞ்சாலையில் ஓரமாக கவிழ்ந்ததாக தகவல் கிடைத்ததாக ஒன்றாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை உயிருக்கு ஆபத்தான காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை,” என அவர் கூறியுள்ளார்.அவசர சேவையினர் சம்பவ இடத்தில் இருந்து அனைத்து பயணிகளுக்கும் உதவி வழங்கியுள்ளனர். சுமார் எட்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்
கனேடிய நிறுவனம் ஒன்றிற்கு 10,000 டொலர்கள் அபராதம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  579 views
கனேடிய தயாரிப்புகள் என மக்களை நம்பவைத்த நிறுவனம் ஒன்றிற்கு 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக மிரட்டியதும், கனடா மீது கூடுதல் வரிகள் விதித்ததும் கனேடியர்கள் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, அமெரிக்காவைப் புறக்கணிக்கும் பல்வேறு விடயங்களைச் செய்து, அதன் மூலம் ட்ரம்புக்கு சவால் விட நினைக்கிறார்கள் கனேடியர்கள்.அமெரிக்கத் தயாரிப்புகளை புறக்கணிப்பதன் மூலம், வேறு வகையில் கூறினால், உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் தங்கள் நாட்டுப்பற்றை காட்ட விரும்புகிறார்கள் பலர்.விடயம் என்னவென்றால், உள்நாட்டு தயாரிப்புகள் என மக்கள் கருதும் பல தயாரிப்புகள் உண்மையில் அமெரிக்க தயாரிப்புகள் என தெரியவந்துள்ளது.குறிப்ப
 கியூபாவில் இருந்து கடைசி கனேடிய விமானமும் வெளியேறியது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  574 views
 கியூபாவில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, கனேடிய விமான நிறுவனங்களின் கடைசி விமானங்களும் கியூபாவை விட்டு வெளியேறியுள்ளதாக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.கியூபாவிலிருந்து இதுவரை சுமார் 27,900 க்கும் மேற்பட்ட கனேடியப் பயணிகள் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அனிதா ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.கியூபாவில் நிலவும் எரிபொருள், மின்சாரம், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் காரணமாக, அந்நாட்டிற்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடா தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.ஏயார் கனடா, வெஸ்ட்ஜெட் மற்றும் ஏயார் ட்ரான்சாட் ஆகிய முக்கிய நிறுவனங்கள் கியூபாவிற்கான தமது சேவைகளை காலவரையறையின்றி நிறுத்தியுள்ளன. கியூப விமான நிலையங்களில் எரிப
 டொராண்டோ பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  571 views
டொராண்டோ பெரும்பாக பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுக்கப்பட்டுள்ளது.பனிப்பொழிவு உருகுதல் மற்றும் வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படும் மழை காரணமாக நீர்நிலைகளின் அருகே அபாய நிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்படவில்லை.எனினும், மொத்த மழைவீழ்ச்சி, அதிகரித்த வெப்பநிலை மற்றும் பனி உருகுதல் ஆகியவற்றின் இணைப்பால் அனைத்து ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து, நீரோட்டம் வழக்கத்தை விட வேகமாகும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், “இந்த காலநிலை மாற்றத்தால் நீர்மட்டம் திடீரென மாறக்கூடும். வேகமான மற்றும் பலமான நீரோட்டம், நிலைகுலைந்த ஆற்றங்கரைகள் மற்றும் பாதுகாப்பற்ற பனிப்படலம் ஆகியவை மக்களுக்கு ஆபத்தாக இருக்கும்” எனவும் எச்சரிக்க
ஒட்டாவாவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் பலி
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  523 views
கனடாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற கத்தி குத்திக்கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ரைடியு நிலைய வணிக வளாகத்துக்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைப்பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருகிறது. காயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித அச்சமும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாண்டின் நான்காவது கொலைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் Rideau Centre அருகே இடம்பெற்ற இரண்டாவது கத்தியால் குத்தி கொலை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  290 views
கனடாவின் பிரான்ட்போர்ட் Brantford நகரைச் சேர்ந்த இறைச்சிக்கடை தொழிலாளர் சாக் பேக்கர் (Zac Baker) தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கி அனைவரினதும் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளார்.15 ஆண்டுகளுக்கும் மேலாக இறைச்சி தொழிலில் பணியாற்றி வரும் சாக் பேக்கர் (Zac Baker), இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நிறுவனமொன்றில் தனது பணியைத் தொடங்கினார்.2010 முதல் அவர் கேம்பிரிட்ஜ் விவசாய சந்தையில் வாரந்தோறும் தனது பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் நீண்டகால உறவுகளை உருவாக்கியுள்ளார்.டிசம்பர் மாதத்தில், பல ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நெருங்கிய நண்பருக்காக தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முடிவு செய்தார்.பரிசோதனைகளுக்காக டொராண்டோ பொது மரு
கனடாவில் 70 ஆண்டுகளாக இணைந்து வாழும் தம்பதியின் வெற்றி வாழ்வின் ரகசியம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  310 views
கனடாவில் வாழும் ஒரு தம்பதியர், தங்கள் 70ஆவது காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளார்கள்.கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள ரெஜைனா நகரில் வாழ்கிறார்கள் எர்வின் மில்லர் (Erwin Miller) நேவா மில்லர் (Neva Miller) தம்பதியர். 1955ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள லேக்லாண்ட் கல்லூரியில் படிக்கும்போது, மாணவர்கள் படைசூழ பியானோ வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர், இளம்பெண்ணான நேவாவின் கண்ணில் பட்டுள்ளார்.இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க, கண்டதும் காதல் பற்றிக்கொள்ள, இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.ஓராண்டு ஆனதும் எர்வினுக்கு ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. ஆனால், அப்போதுதான் நேவா செவிலியர் பயிற்சிக்காக படித்துக்கொண்டிருந்திருக்கிறார். பயிற்சி முடிக்கும்வரை அவரால் திருமணம் செய்துகொள்ளமுடியாது என கல்லூரி
சிறையிலிருந்து விடுதலையான அதே நாளில் கைதான நபர்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  314 views
கனடாவின் சஸ்கடூன் நகரைச் சேர்ந்த நபர் ஓருவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதே நாளில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒளிந்துப் படம் பிடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் நீண்ட வரலாறு கொண்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைல் ரொனால்ட் ஹேமலக் என அடையாளம் காணப்பட்ட இவர், ஒளிந்துப் பார்வையிடுதல், தகாத செயல்கள் மற்றும் இரவு நேரத்தில் சட்டவிரோத நுழைவு உள்ளிட்ட மொத்தம் 70 குற்றங்களில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் பெப்ரவரி 14ஆம் திகதி சஸ்காடூன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தால், விடுதலையற்கு முன்பே பொலிஸார் பொது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.ஹேமலக் அதே மாலை முதலாம் அவன்யூ இன் 200-ஆம் பகுத
Latest News
 மத்திய கிழக்கு போரில் கனடா படை பங்கேற்காது - கனடிய பிரதமர்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  45 views
 மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, நடைபெற்று வரும் போரில் கனடா இராணுவம் பங்கேற்காது என்று கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த மோதலில் கனடா இராணுவமாக ஈடுபடுவதற்கான திட்டம் எதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.இந்த நடவடிக்கைகளுக்கான இராணுவ தயாரிப்பிலும் திட்டமிடலிலும் கனடா பங்கேற்கவில்லை எனவும், எதிர்காலத்திலும் இராணுவ ரீதியாக இணைவது எதிர்பார்க்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை கனடா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஈராக் தலைநகரில் பதற்ற நிலை ; துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  45 views
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதீத பாதுகாப்புமிக்க 'பசுமை வலயத்திற்குள்' (Green Zone) நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்க தூதரகம் மற்றும் முக்கிய அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தற்போது அந்தப் பகுதியில் மேலதிக பாதுகாப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு காலமானார்
  •  ·  sivam
  •  · 
  •  ·  India
  •  ·  376 views
இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்ல கண்ணு அவர்கள் இன்று தனது 101வது வயதில் சென்னையில் காலமானார். 80 ஆண்டு கால அரசியல் போராட்ட வரலாறு கொண்ட தோழர் நல்லகண்ணு கடைசிவரை மீசை வைத்துக் கொள்ளவில்லை. அந்த மீசைக்கு பின்னால் மனதை உலுக்க வைக்கும் ஒரு பின்னணி உள்ளது பலருக்கும் தெரியாது,சுதந்திரப் போராட்ட போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தோழர் நல்லகண்ணு. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925 இல் பிறந்த இவர் மாணவப் பருவத்தில் இருந்தே சுதந்திர தாகம் கொண்டவர்.18 வயதிலேயே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர். தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்தவர்.
மெக்ஸிக்கோவிற்கான பயணங்கள் குறித்து கனடா எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  621 views
மெக்ஸிக்கோவிற்கு பயணம் செய்யும் கனடியர்களுக்காக கனடா அரசு புதிய பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜாலிஸ்கோ மாநிலத்தில் நிலைமை “தீவிரமாகவும் வேகமாக மாறிக்கொண்டிருப்பதாக கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.குறிப்பாக கவுடாலாஜாரா மற்றும் பியுட்ரோ வலார்டா பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.அந்த மாநிலத்தின் பல நகரங்களில் குற்றக் குழுக்கள் எரியும் வாகனங்களைப் பயன்படுத்தி சாலைகளை மறித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பியுட்ரோ வலார்டா நகரில் ‘வீட்டிலேயே தங்கும்’ (shelter-in-place) உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.டாக்ஸி மற்றும் ரைடு-ஷேர் சேவைகளும் தற்காலிகமாக
 ஒண்டாரியோவில் பேருந்து விபத்தில் 8 பேர் காயம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  483 views
கனடாவின் கிழக்கு ஒண்டாரியோவில் மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் எட்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.மாலை 7.15 மணியளவில் Highway 401 நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய பாதையில், நபனீ (Napanee) நகரத்திற்கு கிழக்கில், கவுன்டி வீதி 4 மற்றும் கவுன்டி வீதி 6 இடையிலான பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.சுமார் 50 பயணிகள் இருந்த ஒரு கோச் பேருந்து நெடுஞ்சாலையில் ஓரமாக கவிழ்ந்ததாக தகவல் கிடைத்ததாக ஒன்றாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை உயிருக்கு ஆபத்தான காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை,” என அவர் கூறியுள்ளார்.அவசர சேவையினர் சம்பவ இடத்தில் இருந்து அனைத்து பயணிகளுக்கும் உதவி வழங்கியுள்ளனர். சுமார் எட்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்
கனேடிய நிறுவனம் ஒன்றிற்கு 10,000 டொலர்கள் அபராதம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  579 views
கனேடிய தயாரிப்புகள் என மக்களை நம்பவைத்த நிறுவனம் ஒன்றிற்கு 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக மிரட்டியதும், கனடா மீது கூடுதல் வரிகள் விதித்ததும் கனேடியர்கள் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, அமெரிக்காவைப் புறக்கணிக்கும் பல்வேறு விடயங்களைச் செய்து, அதன் மூலம் ட்ரம்புக்கு சவால் விட நினைக்கிறார்கள் கனேடியர்கள்.அமெரிக்கத் தயாரிப்புகளை புறக்கணிப்பதன் மூலம், வேறு வகையில் கூறினால், உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் தங்கள் நாட்டுப்பற்றை காட்ட விரும்புகிறார்கள் பலர்.விடயம் என்னவென்றால், உள்நாட்டு தயாரிப்புகள் என மக்கள் கருதும் பல தயாரிப்புகள் உண்மையில் அமெரிக்க தயாரிப்புகள் என தெரியவந்துள்ளது.குறிப்ப
 கியூபாவில் இருந்து கடைசி கனேடிய விமானமும் வெளியேறியது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  574 views
 கியூபாவில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, கனேடிய விமான நிறுவனங்களின் கடைசி விமானங்களும் கியூபாவை விட்டு வெளியேறியுள்ளதாக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.கியூபாவிலிருந்து இதுவரை சுமார் 27,900 க்கும் மேற்பட்ட கனேடியப் பயணிகள் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அனிதா ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.கியூபாவில் நிலவும் எரிபொருள், மின்சாரம், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் காரணமாக, அந்நாட்டிற்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடா தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.ஏயார் கனடா, வெஸ்ட்ஜெட் மற்றும் ஏயார் ட்ரான்சாட் ஆகிய முக்கிய நிறுவனங்கள் கியூபாவிற்கான தமது சேவைகளை காலவரையறையின்றி நிறுத்தியுள்ளன. கியூப விமான நிலையங்களில் எரிப
 டொராண்டோ பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  571 views
டொராண்டோ பெரும்பாக பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுக்கப்பட்டுள்ளது.பனிப்பொழிவு உருகுதல் மற்றும் வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படும் மழை காரணமாக நீர்நிலைகளின் அருகே அபாய நிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்படவில்லை.எனினும், மொத்த மழைவீழ்ச்சி, அதிகரித்த வெப்பநிலை மற்றும் பனி உருகுதல் ஆகியவற்றின் இணைப்பால் அனைத்து ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து, நீரோட்டம் வழக்கத்தை விட வேகமாகும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், “இந்த காலநிலை மாற்றத்தால் நீர்மட்டம் திடீரென மாறக்கூடும். வேகமான மற்றும் பலமான நீரோட்டம், நிலைகுலைந்த ஆற்றங்கரைகள் மற்றும் பாதுகாப்பற்ற பனிப்படலம் ஆகியவை மக்களுக்கு ஆபத்தாக இருக்கும்” எனவும் எச்சரிக்க
ஒட்டாவாவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் பலி
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  523 views
கனடாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற கத்தி குத்திக்கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ரைடியு நிலைய வணிக வளாகத்துக்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைப்பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருகிறது. காயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித அச்சமும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாண்டின் நான்காவது கொலைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் Rideau Centre அருகே இடம்பெற்ற இரண்டாவது கத்தியால் குத்தி கொலை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  290 views
கனடாவின் பிரான்ட்போர்ட் Brantford நகரைச் சேர்ந்த இறைச்சிக்கடை தொழிலாளர் சாக் பேக்கர் (Zac Baker) தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கி அனைவரினதும் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளார்.15 ஆண்டுகளுக்கும் மேலாக இறைச்சி தொழிலில் பணியாற்றி வரும் சாக் பேக்கர் (Zac Baker), இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நிறுவனமொன்றில் தனது பணியைத் தொடங்கினார்.2010 முதல் அவர் கேம்பிரிட்ஜ் விவசாய சந்தையில் வாரந்தோறும் தனது பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் நீண்டகால உறவுகளை உருவாக்கியுள்ளார்.டிசம்பர் மாதத்தில், பல ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நெருங்கிய நண்பருக்காக தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முடிவு செய்தார்.பரிசோதனைகளுக்காக டொராண்டோ பொது மரு
கனடாவில் 70 ஆண்டுகளாக இணைந்து வாழும் தம்பதியின் வெற்றி வாழ்வின் ரகசியம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  310 views
கனடாவில் வாழும் ஒரு தம்பதியர், தங்கள் 70ஆவது காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளார்கள்.கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள ரெஜைனா நகரில் வாழ்கிறார்கள் எர்வின் மில்லர் (Erwin Miller) நேவா மில்லர் (Neva Miller) தம்பதியர். 1955ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள லேக்லாண்ட் கல்லூரியில் படிக்கும்போது, மாணவர்கள் படைசூழ பியானோ வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர், இளம்பெண்ணான நேவாவின் கண்ணில் பட்டுள்ளார்.இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க, கண்டதும் காதல் பற்றிக்கொள்ள, இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.ஓராண்டு ஆனதும் எர்வினுக்கு ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. ஆனால், அப்போதுதான் நேவா செவிலியர் பயிற்சிக்காக படித்துக்கொண்டிருந்திருக்கிறார். பயிற்சி முடிக்கும்வரை அவரால் திருமணம் செய்துகொள்ளமுடியாது என கல்லூரி
சிறையிலிருந்து விடுதலையான அதே நாளில் கைதான நபர்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  314 views
கனடாவின் சஸ்கடூன் நகரைச் சேர்ந்த நபர் ஓருவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதே நாளில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒளிந்துப் படம் பிடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் நீண்ட வரலாறு கொண்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைல் ரொனால்ட் ஹேமலக் என அடையாளம் காணப்பட்ட இவர், ஒளிந்துப் பார்வையிடுதல், தகாத செயல்கள் மற்றும் இரவு நேரத்தில் சட்டவிரோத நுழைவு உள்ளிட்ட மொத்தம் 70 குற்றங்களில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் பெப்ரவரி 14ஆம் திகதி சஸ்காடூன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தால், விடுதலையற்கு முன்பே பொலிஸார் பொது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.ஹேமலக் அதே மாலை முதலாம் அவன்யூ இன் 200-ஆம் பகுத