News
Featured News
Latest News
அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற கனேடியர்க்கு ஏற்பட்ட விபரீதம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  185 views
கனடாவின் கல்கரியைச் சேர்ந்த யூஜி ஹு (Yuji Hu, வயது 39) என்பவர், தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில், யூஜி குடும்பம் கலிபோர்னியாவிலுள்ள கடற்கரை ஒன்றிற்குச் சென்றுள்ளது. திடீரென, தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த யூஜியின் 5 வயது மகளை அலை இழுத்துச் செல்ல, மகளைக் காப்பாற்ற கடலில் இறங்கியுள்ளார் யூஜி. ஆனால், அலை அவரையும் இழுத்துச் சென்றுவிட்டது. கணவனும் மகளும் கண் முன்னே அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட யூஜியின் மனைவி கடலுக்குள் இறங்கி அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரால் எதுவும் செய்ய இயலாமல் அவர் கரைக்கே திரும்பிவிட்டிருக்கிறார்.அந்த நேரத்தில், கடலில் 15 முதல் 20 அடி உயரத்துக்கு அலை எழுந்ததாக கூறப்படுகிற
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  194 views
வங்காளதேச முன்னாள் பிரதமர் 78 வயதான ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து இன்று(17) அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது.வங்க தேசத்தில் 2024ஆம் ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற மாணவர்கள் கிளர்ச்சியின் போது, 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அப்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது.இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி, ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது
கனடாவில் இந்தியருக்கு அபராதம் விதித்த பொலிசார் - எதற்காக தெரியுமா?
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  674 views
கௌரவ் சாப்ரா என்னும் இந்தியர் கனடாவில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, பொலிசார் ஒருவர் அவரை நிறுத்தியுள்ளார். அப்போது அவரது காருக்குள் windscreenஇல் பொருத்தப்பட்டிருந்த மொபைலில் வீடியோ ஒன்று ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. அவருக்கு 615 டொலர்கள் அபராதம் விதித்துள்ளார் அந்த பொலிசார். ஆனால், இனவெறுப்பு காரணமாக அவர் தனக்கு அபராதம் விதித்ததாகத் தெரிவிக்கும் கௌரவ், அந்த பொலிசார் தனது பர்ஸிலிருந்த பணத்தைப் பார்த்து எதற்கு இவ்வளவு பணம் என்று கேட்டதாகவும் கூறுகிறார்.அவர் இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகம் ஒன்றில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களைப் பார்த்தவர்கள், கார் ஓட்டும்போது வீடியோ பார்ப்பது சட்டப்படி தவறுதான் என்கிறார்கள்.கௌரவ் அந்த பொலிசாரிடம் வீடியோ ஓடுவது உண்மைதான். ஆனால், த
 கனடாவில் வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  972 views
ஸ்வீடன் கிரிப்பென் (Gripen) போர் விமான உற்பத்தியாளர் சஹாப் SAAB, கனடா தமது ராணுவத்துக்காக இந்த விமானத்தை தேர்வு செய்தால், 10,000 உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி வேலை வாய்ப்புகள் கனடாவில் உருவாகலாம் என அறிவித்துள்ளது.கனடிய அரசுடன் விமான உற்பத்தியை நேரடியாக கனடாவில் மேற்கொள்ளும் வாய்ப்பு குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாக SAAB நிறுவனத்தின் தலைவர் மைகேல் யோஹான்சன் உறுதிப்படுத்தினார்.மொன்றியலில் தலைமையகத்தைக் கொண்ட பொம்பார்டியர் மற்றும் சீ.ஏ.ஈ Bombardier, CAE நிறுவனங்களும் மேலும் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஐ.எம்.பி எரோ ஸ்பேஸ் ஆகியவற்றும் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள கூடிய நிறுவனங்களாக உள்ளன.“கனடா தன்னுடைய ராணுவ திறன்களை உள்ளூரில் உருவாக்க விரும்பினால்—மேம்படுத்தல், பாகங்கள் உற்பத்தி, இறுதி பொருத்துதல், ப
 செயற்கை நுண்ணறிவை கனடிய பொலிஸார் பயன்படுத்துகிறார்கள்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  562 views
கனடாவின் ஹால்டன் பிராந்திய காவல் துறை (Halton Regional Police Service) அவசரமற்ற தொலைபேசி அழைப்புகளை நிர்வகிக்க தானியங்கி செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.911 அவசர அழைப்புகள் தொடர்ந்தும் மனித முகவர்கள் (live agents) மூலம் மட்டுமே பராமரிக்கப்படும் எனவும், ஆனால் அவசரமற்ற அழைப்புகள் இனி “SARA (Smart Answering Routing Assistant)” எனப்படும் நுண்ணறிவு குரல் உதவியாளர் மூலம் நிர்வகிக்கப்படும் எனவும் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.அழைப்பாளர்களிடம் சில குறுகிய கேள்விகள் கேட்டு, அவர்களின் கேள்வி அமைப்பால் தீர்க்கக்கூடியதா அல்லது நேரடி அதிகாரிக்கு மாற்ற வேண்டியதா என்பதை SARA தீர்மானிக்கும். இந்த உரையாடல் நேரடியாக பதிவு செய்யப்பட்டு உரை வடிவில் மாற்றப்படும் என்றும் பொலிஸார்
பாலியல் பலாத்காரம் செய்த மசாஜ் நிபுணர் கைது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  532 views
கனடாவின் டொரோண்டோவில் ஒரு பெண்ணுக்கு மசாஜ் செய்த பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பதிவு செய்யப்படாத மசாஜ் நிபுணர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் டொரோண்டோ மற்றும் மார்கம் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.முதல் சம்பவம் ஆகஸ்ட் 12 அன்று ரோஸ்மவுண்ட் அவென்யூ மற்றும் வியா இட்டாலியா பகுதிகளுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் சந்தேக நபரின் வீட்டிற்கு மசாஜ் பெறச் சென்றிருந்தார். மசாஜ் முடிந்த பின், சந்தேக நபர் அவரை பாலியல் ரீதியாகத் தொட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதன் சில வாரங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 1 அன்று, பாதிக்கப்பட்ட பெண் மார்கம் நகரின் வுட்பைன் அவென்யூ மற்றும் ஹைவே
அடையாளம் தெரியாமல் சிதைந்த மகனின் உடல் மீது கையை வைத்து கதறிய தந்தை
  •  ·  sivam
  •  · 
  •  ·  India
  •  ·  424 views
டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்த புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில், செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் அருகே மெதுவாக ஊர்ந்து சென்ற கார், திடீரென வெடித்து சிதறிய காட்சிகள் பதிவாகியுள்ளன.டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் (10ஆம் தேதி) மாலை கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்த நிலையில், புதிய சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், செங்கோட்டை தெளிவாகத் தெரியும் நிலையில், கார் வெடித்து சிதறியது சிவப்பு பலூன் போன்று பதிவாகி உள்ளது.திங்கட்கிழமை மாலை சரியாக 6.50 மணிக்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கை வி
டாக்ஸி சாரதி செய்த குற்றச்செயலுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  786 views
கனடாவின் வன்கூவர் பகுதியில் டாக்ஸி சாரதி ஒருவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபருக்கு நீதிமன்றம் வீட்டு காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது டாக்ஸியை பயன்படுத்தி குறித்த நபர் போதை பொருட்களை விநியோகம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.எம்.டி.ரபிக்குள் இஸ்லாம் என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போதை பொருளை வைத்திருந்தமை அவற்றை விநியோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இந்த நபர் மீது சுமத்தப்பட்டு இருந்தது. 56 வயதான குறித்த நபருக்கு 20 மாத கால வீட்டு காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மிக நுட்பமான முறையில் போதைப்பொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.வன்கூவர் பகுதியில் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாக கிடைக்கப்பெ
கனடிய எழுத்தாளருக்கு புக்கர் விருது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  791 views
உலகின் முதல் நிலை இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் புக்கர் விருது கனடாவை பிறப்பிடமாகக் கொண்ட டேவிட் ஸ்லே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது அண்மைய பிளெஸ் என்ற நாவலுக்கு இவ்வாறு புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.ஹங்கேரிய பிரஜை ஒருவர் ஈராக்கில் பணியாற்றி அதன் பின்னர் இங்கிலாந்தில் வாழும் போது அவர் எதிர்நோக்கும் சமூக பொருளாதார பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. கதைக்கரு மொழி பயன்பாடு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த நாவலுக்கு விருது வழங்கப்பட்டதாக புக்கர் விருது வழங்கும் குழு தெரிவித்துள்ளது. புக்கர் விருதுக்காக சுமார் 153 நாவல்கள் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. டேவிட் கனடாவின் மொன்றியல் பகுதியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.கனடிய தாய்க்கும் ஹங்கேரிய தந்
டொரண்டோ பகுதி மக்களுக்கு பனிப்பொழிவு குறித்த எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1357 views
டொரண்டோ பகுதியில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கனடிய சுற்றுச்சூழல் துறை இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த குளிர்கால பருவத்திற்கான முதல் பனிப்பொழிவு நிலைமை இன்றைய தினம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன போக்குவரத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் போக்குவரத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் சுமார் இரண்டு முதல் பத்து சென்றிமீற்றர் வரையான பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பனிப்பொழிவின்போது ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்கு டொரண்டோ நகராட்சி பல்வேறு முன் எ
காய்ச்சல் பரவி வருவது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1358 views
கனடாவில் இந்த ஆண்டில் காய்ச்சல் பரவுகை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்கள் இந்த ஆண்டு கடுமையான இன்ஃப்ளூயன்சா (Influenza) பருவத்துக்குத் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கு காரணமாக, உலகளவில் பரவி வரும் மாற்றமடைந்த H3N2 வைரஸ் வகை, தற்போதைய தடுப்பூசியுடன் முழுமையாகப் பொருந்தாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வாரம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் சுமார் 2% பேருக்கு இன்ஃப்ளூயன்சா தொற்று உறுதியானது என கனடா பொது சுகாதார அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகி, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் ச
கட்டணங்களை செலுத்த சிரமப்படும் கனடியர்கள்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1446 views
கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கனடியர்களில் ஐந்தில் ஒருவர் (20%) கடந்த ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு கட்டணத்தை செலுத்தாமல் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.நானோஸ் ரிசர்ச் நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், 55 வயதுக்கு குறைவானவர்கள், உணவுக்காக கார் கடன், கிரெடிட் கார்டு அல்லது மின்சார கட்டணங்களை நிலுவையில் வைக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.மாதாந்த செலவுகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.18 முதல் 34 வயதுடையோரில் 18.1% பேர் சில சமயங்களில் அல்லது அடிக்கடி கட்டணம் செலுத்தாமல் விட்டதாக கூறியுள்ளனர். 35 முதல்