Featured News
நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு – 1909● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977●
Latest News
கனடாவின் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த லூயிஸ் ரென்விக் என்ற பெண், தனது 4 ஆண்டுகள் பழமையான சமையல் அடுப்பு பழுதடைந்ததால் சந்தித்த ஏமாற்றத்தை விபரித்துள்ளார்.இந்த மாத தொடக்கத்தில் லூயிஸின் அடுப்பு வேலை செய்வதை நிறுத்தியுள்ளது. இதையடுத்து, அவர் கூகுளில் தேடியபோது, முதலில் வந்த 'தி ஏ டீம் அப்ளையன்ஸ் ரிப்பேர்' என்ற உள்ளூர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்.அங்கிருந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர், அடுப்பின் 'டெம்பரேச்சர் சென்சார்' பழுதாகிவிட்டதாகக் கூறி, அதை மாற்றுவதற்கு 798 கனேடிய டொலர் கட்டணமாக வாங்கியுள்ளார்.அவர் வீட்டை விட்டு கிளம்பும் முன்பே, அடுப்பில் பழுதைக் காட்டும் 'எரர் சிக்னல்' (Error sign) அப்படியே இருப்பதை கவனித்தேன். 'சற்று நில்லுங்கள், இது வேலை செய்யவில்லை' என்று கூறினேன். ஆன் செய்து பா
பிரான்சின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரென்னெஸ் (Rennes) நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 11 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விலெய்ன் (Vilaine) ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட அச்சிறுவனின் கழுத்தில் ஈரமான குளியல் துண்டு (Wet bath towel) மிக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்ததாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் சிறுவனின் உடலை மீட்டனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய பிரெஞ்சு போலீசார், திங்கட்கிழமை அன்று 16 வயது சிறுவன் ஒர
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள ஒரு பகுதியில், கழிவுநீர்க்குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அறிவிப்பு வரும் வரை மக்கள் டாய்லெட்டை பிளஷ் செய்யவேண்டாம், குளிக்கவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Comox Valley பகுதியில், கழிவுநீர்க்குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வாழும் மக்கள் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்யவோ, டிஷ் வாஷர் மற்றும் வாஷின் மெஷின் பயன்படுத்தவோ வேண்டாம் என்றும் குளிக்கவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். Comox Valleyயில் வாழும் ஸ்டீவ் ஜோன்ஸ் என்பவர், தான் அந்த கழிவுநீர்க் குழாய் உடைப்பை நேரில் சென்று பார்த்ததாக தெரிவிக்கிறார்.கழிவுநீர் வழிந்தோடி, ஒரே துர்நாற்றம் வீசுவதாகக் கூறும் ஜோன்ஸ், அந்த கழ
அமெரிக்காவுக்கான தங்களது பயணங்களை கனடிய மக்கள் புறக்கணிக்கும் போக்கு இன்னும் வலுவாக நீடித்து வருவதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த மார்ச் மாதத்தில் கனடா மக்கள் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளளதாககடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இதன் மூலம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து 15-வது மாதமாகக் கனடா மக்களின் அமெரிக்கப் பயணங்கள் சரிவைச் சந்தித்துள்ளன.கடந்த மார்ச் மாதத்தில் கனடா மக்கள் அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டு 2.6 மில்லியன் முறை திரும்பியுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 6.4 சதவீத வீழ்ச்சியாகும்.விமானம் மூலம் அமெரிக்கா சென்று திரும்பியவர்களின் எண்ணிக்கை 10.8 சதவீதம
கனடாவின் ஹமில்டனில் உள்ள 'வைட் சேப்பல் மெமோரியல் கார்டன்' மயானத்தில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறயைினர் கைது செய்துள்ளனர்.கடந்த ஏப்ரல் 17ஆம் திகதிக்கும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மயானத்திற்குச் சென்ற உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளில் வைக்கப்பட்டிருந்த மலர்ச்சாடிப் பாத்திரங்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சுமார் 40 மலர்ச்சாடிப் பாத்திரங்கள் வரை அங்கு திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.ஹமில்டன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, கடந்த மே 13ஆம் திகதி ஹமில்டனைச் சேர்ந்த ஜேசன் மெக்கி
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு தனித்தீவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.படகுகள் மூலமாக மட்டுமே செல்லக்கூடிய ஒரு தொலைதூர ஏரியில் அமைந்துள்ள தீவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.ஒண்டாரியோவின் கிரேட்டர் சட்பரி பகுதிக்கு தென்மேற்கே அமைந்துள்ள 'லிட்டில் கபோடின்' ஏரியின் தீவொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒண்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் இந்த தீ விபத்து குறித்து நிபிசிங் வெஸ்ட் ஒண்டாரியோ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விபத்து நடந்த பகுதி மிகவும் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்ததால், அங்கு சாதாரண வாகனங்களில் செல்வது சாத்தியமில்லாமல் இருந்தது.இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களை
கனடிய விமான நிலையங்களில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து, விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.கடந்த ஓராண்டில் மட்டும், கனடாவிலிருந்து விமானம் ஏறிய குறைந்தது 17 அப்பாவி பயணிகள், தங்களது பைகளில் ஒட்டப்பட்டிருந்த 'பயணச்சீட்டு அடையாள அட்டை' (Bag Tags) மாற்றப்பட்டதால், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழல்வாதிகளான சில ஊழியர்கள் இந்தச் சதியில் ஈடுபடுகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.விமானத்தில் பயணிக்கும் ஒரு அப்பாவியின் லக்கேஜ் பையில் இருக்கும் அடையாள அட்டையை (Tag) ஊழியர்கள் ரகசியமாகப் பிரித்தெடுக்கின்றனர். பின்னர், போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட வேறொரு சூட்கேஸில் அந்த அப்
பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla), மென்பொருள் கோளாறு (Software issue) காரணமாகக் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள தங்களின் ஆயிரக்கணக்கான கார்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.காரை பின்னோக்கிச் செலுத்தும்போது, அதன் பின்புற கேமரா சரியாக வேலை செய்யாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.கனடா போக்குவரத்துத் துறையின் (Transport Canada) சமீபத்திய அறிவிப்பின்படி, கார்களை ஸ்டார்ட் செய்த உடனே ரிவர்ஸ் கியர் போடும்போது, பின்புறக் கேமராவின் காட்சி திரையில் தோன்றுவதில் தாமதம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.கனடாவின் விதிமுறைகளின்படி, ரிவர்ஸ் கியர் போட்ட இரண்டு வினாடிகளுக்குள் பின்புற கேமரா காட்சி திரையில் தோன்ற வேண்டும். ஆனால், இந்த மென்பொருள் கோளாறினால் கேமரா காட்சி தெரிய
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று லண்டன் பயணமானார்,லண்டனில் இடம்பெறும் அரச தலைவர்கள் மநாட்டில் கலந்து கொள்வதற்காகவே பயணமாகியுள்ளார்.எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
கனடா - டொரண்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கத்திகுத்து சம்பவத்தில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கிப்ளிங் அவென்யூ மற்றும் ஆல்பியன் சாலை சந்திப்புப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலில் பலத்த கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரைக் மீட்டனர். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் மற்றும் சந்தேக நபர் இருவருமே 30 வயது மதிக்கத்தக்கவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர் சம
கனடாவின் வசாகா பீச் பகுதியில் அழிந்து வரும் நிலையில் உள்ள 'பைப்பிங் பிளவர்' (Piping Plover) பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைத் தொந்தரவு செய்பவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான டொலர்கள் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை நகர சபை அமல்படுத்தியுள்ளது.நாட்டிலேயே மிகவும் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த புதிய விதிகளின் கீழ் விதிக்கப்படும் அபராத விபரங்கள் பின்வருமாறு:வனவிலங்குகளைத் துன்புறுத்துதல் அல்லது தொந்தரவு செய்தால் 3000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தாவரங்கள் அல்லது இயற்கை வளங்களுக்குச் சேதம் விளைவித்தால் 2500 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எச்சரிக்கை பலகைகளை மதிக்காமல் நடத்தலுக்கு 2000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள
ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் 2,500 புதிய படுக்கை வசதிகளை (beds) உருவாக்க மாகாண அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வரி செலுத்துவோரின் பணம் 3 பில்லியன் டொலர் செலவிடப்படும் என்று மாகாண சொலிசிட்டர் ஜெனரல் மைக்கேல் கெர்ஸ்னர் தெரிவித்துள்ளார்.வியாழக்கிழமை இது குறித்து கருத்து தெரிவித்த மைக்கேல் கெர்ஸ்னர், மாகாண அரசு புதிய சிறைச்சாலைகளை நிர்மானிக்கவுள்ளதுடன், தற்போதுள்ள சிறைகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.வால்கர்டன் மற்றும் பிராம்ப்டன் (Brampton) பகுதிகளில் ஏற்கனவே மூடப்பட்ட சில சிறைச்சாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. படுக்கை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 நவம்பர் மாதத்திற்குள் 255 இ