News
Featured News
Latest News
 செயற்கை நுண்ணறிவை கனடிய பொலிஸார் பயன்படுத்துகிறார்கள்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  551 views
கனடாவின் ஹால்டன் பிராந்திய காவல் துறை (Halton Regional Police Service) அவசரமற்ற தொலைபேசி அழைப்புகளை நிர்வகிக்க தானியங்கி செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.911 அவசர அழைப்புகள் தொடர்ந்தும் மனித முகவர்கள் (live agents) மூலம் மட்டுமே பராமரிக்கப்படும் எனவும், ஆனால் அவசரமற்ற அழைப்புகள் இனி “SARA (Smart Answering Routing Assistant)” எனப்படும் நுண்ணறிவு குரல் உதவியாளர் மூலம் நிர்வகிக்கப்படும் எனவும் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.அழைப்பாளர்களிடம் சில குறுகிய கேள்விகள் கேட்டு, அவர்களின் கேள்வி அமைப்பால் தீர்க்கக்கூடியதா அல்லது நேரடி அதிகாரிக்கு மாற்ற வேண்டியதா என்பதை SARA தீர்மானிக்கும். இந்த உரையாடல் நேரடியாக பதிவு செய்யப்பட்டு உரை வடிவில் மாற்றப்படும் என்றும் பொலிஸார்
பாலியல் பலாத்காரம் செய்த மசாஜ் நிபுணர் கைது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  521 views
கனடாவின் டொரோண்டோவில் ஒரு பெண்ணுக்கு மசாஜ் செய்த பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பதிவு செய்யப்படாத மசாஜ் நிபுணர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் டொரோண்டோ மற்றும் மார்கம் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.முதல் சம்பவம் ஆகஸ்ட் 12 அன்று ரோஸ்மவுண்ட் அவென்யூ மற்றும் வியா இட்டாலியா பகுதிகளுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் சந்தேக நபரின் வீட்டிற்கு மசாஜ் பெறச் சென்றிருந்தார். மசாஜ் முடிந்த பின், சந்தேக நபர் அவரை பாலியல் ரீதியாகத் தொட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதன் சில வாரங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 1 அன்று, பாதிக்கப்பட்ட பெண் மார்கம் நகரின் வுட்பைன் அவென்யூ மற்றும் ஹைவே
அடையாளம் தெரியாமல் சிதைந்த மகனின் உடல் மீது கையை வைத்து கதறிய தந்தை
  •  ·  sivam
  •  · 
  •  ·  India
  •  ·  414 views
டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்த புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில், செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் அருகே மெதுவாக ஊர்ந்து சென்ற கார், திடீரென வெடித்து சிதறிய காட்சிகள் பதிவாகியுள்ளன.டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் (10ஆம் தேதி) மாலை கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்த நிலையில், புதிய சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், செங்கோட்டை தெளிவாகத் தெரியும் நிலையில், கார் வெடித்து சிதறியது சிவப்பு பலூன் போன்று பதிவாகி உள்ளது.திங்கட்கிழமை மாலை சரியாக 6.50 மணிக்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கை வி
டாக்ஸி சாரதி செய்த குற்றச்செயலுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  778 views
கனடாவின் வன்கூவர் பகுதியில் டாக்ஸி சாரதி ஒருவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபருக்கு நீதிமன்றம் வீட்டு காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது டாக்ஸியை பயன்படுத்தி குறித்த நபர் போதை பொருட்களை விநியோகம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.எம்.டி.ரபிக்குள் இஸ்லாம் என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போதை பொருளை வைத்திருந்தமை அவற்றை விநியோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இந்த நபர் மீது சுமத்தப்பட்டு இருந்தது. 56 வயதான குறித்த நபருக்கு 20 மாத கால வீட்டு காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மிக நுட்பமான முறையில் போதைப்பொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.வன்கூவர் பகுதியில் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாக கிடைக்கப்பெ
கனடிய எழுத்தாளருக்கு புக்கர் விருது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  782 views
உலகின் முதல் நிலை இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் புக்கர் விருது கனடாவை பிறப்பிடமாகக் கொண்ட டேவிட் ஸ்லே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது அண்மைய பிளெஸ் என்ற நாவலுக்கு இவ்வாறு புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.ஹங்கேரிய பிரஜை ஒருவர் ஈராக்கில் பணியாற்றி அதன் பின்னர் இங்கிலாந்தில் வாழும் போது அவர் எதிர்நோக்கும் சமூக பொருளாதார பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. கதைக்கரு மொழி பயன்பாடு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த நாவலுக்கு விருது வழங்கப்பட்டதாக புக்கர் விருது வழங்கும் குழு தெரிவித்துள்ளது. புக்கர் விருதுக்காக சுமார் 153 நாவல்கள் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. டேவிட் கனடாவின் மொன்றியல் பகுதியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.கனடிய தாய்க்கும் ஹங்கேரிய தந்
டொரண்டோ பகுதி மக்களுக்கு பனிப்பொழிவு குறித்த எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1352 views
டொரண்டோ பகுதியில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கனடிய சுற்றுச்சூழல் துறை இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த குளிர்கால பருவத்திற்கான முதல் பனிப்பொழிவு நிலைமை இன்றைய தினம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன போக்குவரத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் போக்குவரத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் சுமார் இரண்டு முதல் பத்து சென்றிமீற்றர் வரையான பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பனிப்பொழிவின்போது ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்கு டொரண்டோ நகராட்சி பல்வேறு முன் எ
காய்ச்சல் பரவி வருவது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1355 views
கனடாவில் இந்த ஆண்டில் காய்ச்சல் பரவுகை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்கள் இந்த ஆண்டு கடுமையான இன்ஃப்ளூயன்சா (Influenza) பருவத்துக்குத் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கு காரணமாக, உலகளவில் பரவி வரும் மாற்றமடைந்த H3N2 வைரஸ் வகை, தற்போதைய தடுப்பூசியுடன் முழுமையாகப் பொருந்தாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வாரம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் சுமார் 2% பேருக்கு இன்ஃப்ளூயன்சா தொற்று உறுதியானது என கனடா பொது சுகாதார அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகி, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் ச
கட்டணங்களை செலுத்த சிரமப்படும் கனடியர்கள்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1444 views
கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கனடியர்களில் ஐந்தில் ஒருவர் (20%) கடந்த ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு கட்டணத்தை செலுத்தாமல் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.நானோஸ் ரிசர்ச் நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், 55 வயதுக்கு குறைவானவர்கள், உணவுக்காக கார் கடன், கிரெடிட் கார்டு அல்லது மின்சார கட்டணங்களை நிலுவையில் வைக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.மாதாந்த செலவுகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.18 முதல் 34 வயதுடையோரில் 18.1% பேர் சில சமயங்களில் அல்லது அடிக்கடி கட்டணம் செலுத்தாமல் விட்டதாக கூறியுள்ளனர். 35 முதல்
கனடாவிடம் மன்னிப்பு கோரினார் இளவரசர் ஹாரி
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1513 views
அமெரிக்க அணிக்கு ஆதரவாக தொப்பியணிந்த விவகாரத்தில் இளவரசர் ஹாரி கனடாவிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஹாலிவுட் நடிகை மேகனை திருமணம் செய்தபிறகு அரச குடும்பத்தை விட்டு வெளியேறினார். அதன்பின், தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.இதற்கிடையே, கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேஸ்பால் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது.இந்த தொடரின் 4-வது போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் அணியும், கனடாவின் டொரண்டோ ப்ளூ ஜேஸ் அணியும் மோதின. இதனை பார்ப்பதற்காக ஹாரி தனது மனைவி மேகனுடன் சென்றிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்சின் தொப்பியை அணிந்திருந்தனர்.இதற்கு காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள கனடாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஏனெனில் காமன்வெல்த் கூ
குழந்தைகள் உட்பட 6 பேரை கொலை செய்த இளைஞனுககு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  906 views
கனடாவில் குழந்தைகள் உட்பட 6 பேரை இரக்கமின்றி கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரை கொலை செய்த சம்பவத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையை சேர்ந்த இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், தண்டனையில் எவ்விதமான தளர்வையும் பெறுவதற்கோ அல்லது விடுதலை பெறுவதற்கோ அவர் 25 ஆண்டுகள் கட்டாயமாக சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.குற்றம் சாட்டப்பட்டவர் ஃபெப்ரியோ டி சொய்சா என்ற இளைஞர் ஆவார். கனடாவில் கல்வி கற்று வந்த அவர், இந்த குற்றத்தைச் செய்தபோது 19 வயதைக் கடந்து இருந்தார். அவர் மீது நான்கு முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள
 பிரபஞ்ச அழகி போட்டியில் மெக்சிகோ அழகி அவமதிக்கப்பட்டார்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  927 views
2025-ம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி வருகிற 21-ஆம் தேதி தாய்லாந்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பல்வேறு நாட்டு அழகிகள் தலைநகர் பாங்காக்கில் குவிந்து உள்ளனர். அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் அதில் மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி நிகழ்ச்சி ஒன்று நடந்தது.போட்டியின் - மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைசில் பேசிய போது, போட்டியாளர்களில் சிலர் ஏன் விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார்.மேலும் மெக்சிகோ அழகி பாத்திமா போஷை கூப் பிட்டு விளக்கம் அளிக்குமாறு கேட்டார். அப்போது பாத்திமா போஷ் விளக்கம் அளிக்க முயன்றபோது அவரை முட்டாள் என்று நவத் கூறினார். இதனால் பாத்திமா போஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே அவரை நவத் அமைதியாக இருக்கும்படி கூறினா
ஒண்டாரியோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  960 views
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் அண்மைய வாரங்களில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.அண்மையில், நார்த் பே பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் இருந்து 250,000 டொலர் தொகை மோசடி செய்யப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த சில வாரங்களில் கிரிப்டோகரன்சி மோசடிகள், ஆன்லைன் சந்தை ஏமாற்றங்கள், காதல் மோசடிகள் மற்றும் பரிசு அட்டை மோசடிகள் தொடர்பான பல புகார்களுக்கு எங்கள் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நார்த் பே பகுதியில் ஒருவர் 2025 ஜூலை மாதம் முதல் போலியான இணையதளம் மற்றும் கணக்கில் பணம் செலுத்தி வந்ததாகவும், அது முதலீட்டு மோசடியாக தெரியவந்துள்