Featured News
நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு – 1909● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977●
Latest News
புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைந்துவிடும். நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்' என பிரிட்டன் மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின், 2022ம் ஆண்டு, செப்டம்பரில், பிரிட்டன் மன்னராக, அவரது மகன் மூன்றாம் சார்லஸ், 77, முடிசூட்டிக் கொண்டார். இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சார்லசுக்கு, புற்றுநோய் கண்டறியப்பட்டது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சூழலில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் கூறியதாவது: புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது, அந்நோய் பாதிப்பிலிருந்து எளிதாக மீள்வதற்கு உதவுகிறது.புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்ச
அகதிகள் குடும்பம் ஒன்று கனடாவுக்கு வந்து ஒரு மாதமே ஆன நிலையில் தங்கள் அன்பு மகளை இழந்துள்ள விடயம், அக்குடும்பத்தை சொல்லொணா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மியான்மரில் இனப்படுகொலைக்குத் தப்பி பங்களாதேஷுக்கு ஓடிய ஆயுப் கான் குடும்பத்தை கனடாவுக்கு வர ஸ்பான்சர் செய்துள்ளார் அவரது சகோதரரான நாசிர் கான்.நவம்பர் மாதம் 5ஆம் திகதி கனடா வந்தடைந்தது ஆயுப் கான் குடும்பம். ஆயுப் கான் தனது மகளான ஷோமிமாவை (9) பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயிலுள்ள Newton Elementary School என்னும் பள்ளியில் சேர்த்திருந்தார்.இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 5ஆம் திகதி, பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது தன் தந்தையுடன் சாலையைக் கடந்துகொண்டிருந்த ஷோமிமா மீது வேன் ஒன்று மோதியுள்ளது. வேன் மோதியதில் ஷோமிமா உயிரிழந்துவிட்டார். வேனின் சாரத
கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தைவிட, 2025ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, 150,220 குறைந்துள்ளது.கடந்த செப்டம்பரில் கனடாவில் கல்வி கற்க 28,910 பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த செப்டம்பரில் 11,390 புதிய மாணவர்கள் மட்டுமே கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டைவிட 60 சதவிகிதம் குறைவாகும்.புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில், கனடா அரசு பல்வேறு நடவடிக்கை
கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி, இணைய வழியில் வன்முறையைத் தூண்டும் அமைப்புக்களை தீவிரவாத பட்டியலில் இணைப்பதாக அறிவித்துள்ளார்.இணையத்தின் ஊடாக இளையோர் மத்தியில் வன்முறையைத் தூண்டும் 764 என்ற அமைப்பினை தீவிரவாத இயக்கமாக கனடா அறிவித்துள்ளது.இந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்த உலகின் முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.கனடிய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அமைப்புடன் மேலும் நான்கு அமைப்புகள் கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன:764, மெனியக் மெர்டர் கல்ட், டெரோகிராம் கலக்டிவ், இஸ்லாமிய ஸ்டேட் மொசாம்பிக் ஆகிய அமைப்புக்கள் இவ்வாறு தீவிரவாத இயக்கப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.அரசின் அற
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி இடையேயான காதல் வதந்தி மாதக்கணக்கில் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக இருந்து வருகிறது.அண்மையில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிதா தன் மனைவியுடன் சேர்ந்து ட்ரூடோ மற்றும் பெர்ரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, இந்த வதந்தி மேலும் தீவிரமடைந்துள்ளது.கிறிஸ்துமஸ் மரம் முன் நின்று பெர்ரியின் தோளில் கை வைத்தபடி ட்ரூடோ இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.அந்த பதிவில் கிஷிதா, கேட்டி பெர்ரியை ட்ரூடோவின் “பங்காளர்” என குறிப்பிட்டது கனடியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.ட்ரூடோவும் அந்தப் பதிவை மீண்டும் பகிர்ந்து, “கேட்டி மற்றும் நான் உங்களுடனும் யுகோவுடனும் அம
கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விடயத்தை கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், கனடாவில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை முன்னதாக சிறு அளவிலான வேலை இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வேலை இல்லா விகிதமும் ஒக்டோபரில் இருந்த 6.9 வீதத்தில் இலிருந்து நவம்பரில் 6.5 வீதமாக குறைந்துள்ளது. இந்தநிலையில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை மொத்தம் 181,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடா முழுவதும் மருத்துவமனைகள் குழந்தைகளில் காய்ச்சல் தொற்றுகளின் அதிகரிப்பை சந்தித்து வருகின்றன.கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 17 குழந்தைகள் மட்டுமே காய்ச்சல் வைரஸிற்கு உள்ளாகியிருந்த இருந்த நிலையில், இந்த ஆண்டு அதே மாதத்தில் 145 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது எட்டு மடங்கு அதிகரிப்பு என கிழக்கு ஒண்டாரியோ குழந்தைகள் மருத்துவமனை (CHEO) வெளியிட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 12 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவர்கள் பாதுகாப்பு உருவாக இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் உடனடியாக காய்ச்சல் தடுப்பூசி எடுக்குமாறு மக்களிடம் வலியுறுத்துகின்றனர்.பிற குழந்தைகளுடன்
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம் ஒன்றை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்ததைத் தொடர்ந்து அந்நிறுவன உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.இந்நிலையில், அந்த உணவகத்தை கனேடிய நிறுவனம் ஒன்று வாங்கி விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது.சுமார் 100 ஆண்டுகளாக லண்டனின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தை அலுவலகமாக மாற்ற அதன் உரிமையாளரான Crown Estate என்னும் அமைப்பு முடிவு செய்துள்ளது.உணவகத்துக்கு Crown Estate மாற்று இடம் தருவதாக கூறியுள்ளது என்றாலும், பாரம்பரியத்தை எப்படி இடம் மாற்ற முடியும் என பிரபல பிரி
டிட்வா புயல் பாதிப்பு காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.இலங்கை கடல் பகுதியில் கடந்த மாதம் 26ம் தேதி உருவான டிட்வா புயல் இலங்கையை தாக்கிய பின் வங்கங் கடல் பகுதியில் கடந்த 29-ம் தேதி நுழைந்தது. இந்த புயல் காரணமாக இலங்கையில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.இதையடுத்து இலங்கையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. பாதிக்கப்பட்ட 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1,500 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா சார்பில் நிவாரண பொருட்கள் கடற்படை
கனடாவில், ஸ்காபரோவில் அமைந்துள்ள Church of the Holy Wisdom என்னும் தேவாலயம் சார்பில் ஒரு உணவு வங்கி இயங்கிவந்தது. தேவாலயத்தில் அத்தியாவசிய கட்டுமானப்பணி செய்யவேண்டிவந்ததால் அந்த உணவு வங்கி மூடப்படும் நிலை உருவானது. அப்படியானால், இவ்வளவு நாட்களாக உணவு வங்கியை மட்டுமே நம்பியிருந்த மக்கள் என்ன செய்வார்கள் என்ற கவலை அந்த தேவாலய பாதிரியாரான கெர்லின் ஹென்றிக்கு (Rev. Gerlyn Henry) உருவானது. கெர்லின் இந்திய வம்சாவளியினர் ஆவார். ஆகவே, தன் கணவரிடமும், தேவாலய நிர்வாகிகளிடமும் பேசிய கெர்லின் ஒரு முடிவு எடுத்தார்.அவரது வீட்டில் இருந்த சேமிப்பகம் மற்றும் கார் நிறுத்தும் இடத்திலிருந்த (garage) பொருட்களை எல்லாம் அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தையே உணவு வங்கிக்காக பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்தார் கெர்லி
டொராண்டோவில் இன்று இரவு இரண்டு முதல் நான்கு சென்றி மீற்றர் அளவுக்கு பனி பெய்யக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த பனிப்பொழிவு, வாரத்தின் குளிர்ச்சியான தொடக்கத்துக்கு பின் வருகிறது. இன்று பகல் அதிகபட்ச வெப்பநிலை –1°C ஆக இருக்கும் என்றும், காற்றின் வேகத்தால் –12°C போல உணரப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.இரவு வெப்பநிலை –5°C வரை குறையும். வாரத்தின் மீதிப் பகுதியிலும் மேகமூட்டமும் லேசான பனிப்பொழிவும் காணப்படும் நிலையில், வெப்பநிலை பனி உறையும் நிலையைச் சுற்றியே இருக்கும்.
இலங்கையில் தித்வா ( ditwah ) சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அந்தவகையில், இன்று திங்கட்கிழமை (01) காலை 9:00 மணி வரை 355 பேர் உயிரிழந்துள்ளதோடு, 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 59,266 குடும்பங்களைச் சேர்ந்த 209,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கண்டி (88) , நுவரெலியா (75) , பதுளை (71), குருநாகலை (37) , மாத்தளை (23) மற்றும் கேகாலை (12) ஆகிய பகுதிகளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.