Featured News
நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு – 1909● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977●
Latest News
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் அண்மைய வாரங்களில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.அண்மையில், நார்த் பே பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் இருந்து 250,000 டொலர் தொகை மோசடி செய்யப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த சில வாரங்களில் கிரிப்டோகரன்சி மோசடிகள், ஆன்லைன் சந்தை ஏமாற்றங்கள், காதல் மோசடிகள் மற்றும் பரிசு அட்டை மோசடிகள் தொடர்பான பல புகார்களுக்கு எங்கள் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நார்த் பே பகுதியில் ஒருவர் 2025 ஜூலை மாதம் முதல் போலியான இணையதளம் மற்றும் கணக்கில் பணம் செலுத்தி வந்ததாகவும், அது முதலீட்டு மோசடியாக தெரியவந்துள்
கனடிய அரசாங்கம் , வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.கனடாவின் ஃபெடரல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க கனoa அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.2025ஆம் ஆண்டு, 673,650 பேருக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில், அதாவது, 2026 இல் 385,000 பேருக்கு மட்டுமே தற்காலிகக் குடியிருப்பு அனுமதி வழங்கப்பட ள்ளது.அத்துடன், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில், ஆண்டுக்கு 370,000 பேருக்கு மட்டுமே தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்பட உள்ளது. முன்னர், 2026இல் 516,
கனடாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்திய மாணவர்கள் சமர்ப்பித்த கல்வி அனுமதி (Study Permit) விண்ணப்பங்களில், 74 சதவீதம் ஓகஸ்ட் மாதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக 'ரொய்ட்டர்ஸ்' தெரிவித்துள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பதிவான 32% நிராகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.கல்வி அனுமதிக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் 2023 ஓகஸ்ட்டில் இருந்த 20,900 இலிருந்து, 2025 ஓகஸ்ட்டில் 4,515 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.மோசடிமிக்க கல்வி அனுமதிகளை தடுப்பதற்காக கனடா அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளே அதிகப்படியான நிராகரிப்புகளுக்கு முக்கியக் காரணமாக என கூறப்படுகிறது.
கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு தங்க மோதிரம் ஒன்றை கண்டெடுத்ததாக சிமோன் ஹில்ட்பிராண்ட் த்தீசன் என்ற பெண் தெரிவித்துள்ளார்.தனது மகளுக்கு கிடைக்கப்பெற்ற இனிப்பு பண்டங்களை வீட்டின் அறையில் பிரித்து வகைப்படுத்திய போது அதில் தங்க மோதிரம் ஒன்று இருப்பதை குறித்த பெண் அவதானித்துள்ளார். யாரோ ஒருவருடைய திருமண மோதிரம் என்பதையும் அவர் ஊகித்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் இந்த மோதிரத்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என தான் கருதியதாக பெண் குறிப்பிட்டுள்ளார்.பெறுமதியான இந்த மோதிரம் வேறொருவரின் கைகளில் செல்லக்கூடாது என்பதற்காக மிகவும் குறைந்த விபரங்களை உள்ளட
கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த 20 வயதான அனிக் நடோ பிரேசெட் என்ற இந்த யுவதி இந்த ஆண்டில் ஐந்து மரத்தான் ஓட்டப் போட்டிகளிலும் இரண்டு அல்ட்ரா மரத்தன் ஓட்டப் போட்டிகளிலும் பங்கேற்று அசத்தியுள்ளார். 60 கிலோ மீட்டர் மலைப்பாதை ஓட்ட போட்டியிலும் அவர் பங்கேற்றுள்ளார்.இந்தப் பெண் சுமார் ஆயிரத்து இருநூறு கிலோ மீட்டர் ஓட்டமாகவும் 3400 கிலோமீட்டர் சைக்கிளிலும் கடந்துள்ளார். மெக்சிகோவில் நடைபெற உள்ள அயன் மேன் போட்டிகளில் இவர் பங்கேற்று உள்ளார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த யுவதியின் தலை முதல் பாதம் வரையில் செயலிழந்து இருந்தது.குயிலென் சின்ட்றோம் எனப்படும் மிகவும் அரிதான ஒரு நோயினால் இந்த பெண் பாதிக்கப்பட்டிருந்தார். உடலின் நரம்புகள் பாதிக்கப்பட்டு திடீர் தளர்ச்சி உணர்விழப்பு மற்றும் முழு ஊனமுற்ற நிலையில
சுற்றுலாப் பயணிகள் ஆப்பிள் சாதனங்களில் உள்ள அவசர நிலை (Emergency SOS) அம்சத்தை பொறுப்புடன் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.கனடாவின் மெட்ரோ வன்கூவர் பகுதியில் செயல்படும் ஒரு தேடல் மற்றும் மீட்புக் குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.கடந்த புதன்கிழமை, கோக்விட்லாம் தேடல் மற்றும் மீட்பு குழு (Coquitlam Search and Rescue) தன்னார்வலர்கள், இந்தியன் ஆமின் வடகிழக்குப் பகுதியில் ஒருவருக்கு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதாக பிரிட்டிஷ் கொலம்பிய அவசர சுகாதார சேவைகள் தெரிவித்ததையடுத்து விரைந்து சென்றனர். ஆனால், விசாரணையில் அது தவறாக செயல்படுத்தப்பட்ட ஆப்பிள் வாட்ச் SOS அலாரம் காரணமாக உருவான தவறான அழைப்பாக தெரியவந்தது.“அவசரநிலைகளில் SOS அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், தவறான அலாரங்கள் உண்மையான மீட்பு நடவ
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாட்டு பிரஜைகள், நைஜர் நாட்டிற்குப் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நைஜரில் நிலவும் அரசியல்மற்றும் தீவிரவாதம், கடத்தல் நிலைமை காரணமாக இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை, நைஜரில் உள்ள தனது தூதரகத்தின் ஆதரவைப் பெற முடியாது எனவும், அவசர சூழ்நிலைகளில் “அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்” எனவும் அறிவித்தது.அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம். அந்த நாட்டில் உள்ள அமெரிக்க பிரஜைகள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.கனடா மற்றும் பிரித்தானியா ஆகியவை தங்களது குடிமக்களுக்கு “அதிக அபாயம் உள்ள நாடு” என நைஜரை வகைப்படுத்தி, அவசர தேவ
கரீபியனில் கோர தாண்டவம் ஆடிய சக்திவாய்ந்த ‘மெலிசா’ சூறாவளியைத் தொடர்ந்து, கியூபாவின் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில் அந்நாடு தீவிரமாக இறங்கியுள்ளது.சூறாவளி காரணமாகக் பெய்த கனமழையால், கியூபாவின் நீளமான நதியான ரியோ கௌடோ (Rio Cauto) தன் கரைகளை உடைத்துக் கொண்டு ஓடியது. இதனால், நாட்டின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவசர கால ஊழியர்கள், படகுகள் மற்றும் ராணுவ வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தண்ணீர் இடுப்பளவுக்கு மேல் இருந்த பகுதிகளில், மீட்புக் குழுவினர் நீச்சலுடைகளுடன் (Wetsuits) மக்களை மீட்டனர்.கியூபாவின் கிரான்மா மாகாணத்தில், தீயணைப்புத் துறையும் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்
வரும் காலத்தில் பூமியில் போர் நடப்பதைவிட வானத்தில் தான் போரே நடக்க போகிறது. ஒவ்வொரு நாடுகளும் ஏவுகணைகளுக்கும், டிரோன்களுக்கும் கோடிகளை கொட்டுகின்றன. எதிரிகளின் நாட்டுக்கே செல்லாமல், எதிரிகளின் இலக்குகளை தாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. அந்த வகையில் ரஷ்யா தயாரித்து சோதனை செய்த புரவேஸ்ட்னிக்கை உலகின் உலகத்தில் எந்த நாட்டாலும் ஒன்றுமே செய்ய முடியாது. அணு ஆயுதமான அது எப்படி செயல்படும்.ரஷ்யாவை பொறுத்தவரை அமெரிக்காவை போல் உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. உலக நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ரஷ்யாவை தவிர உலகின் எந்த நாட்டுடனும் அமெரிக்கா எளிதாக மோதும். அதேநேரம் ரஷ்யா உடன் மட்டும் நேரடியாக மோதுவது இல்லை.உலகம் முழுக்க அண்மை காலம் வரை பாலிஸ்டிக் ஏவுகணைகள் தான் இருந்த
கனடிய பிரதமர் மார்க் கார்னி தென் கொரியாவில் நீர்மூழ்கிக் கப்பலக்ள தயாரிக்கும் உற்பத்திசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.கனடாவின் அடுத்த தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ளும் போட்டியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான தென் கொரியாவின் ஹன்வா ஓஷன் (Hanwha Ocean) நிறுவனம் தயாரித்த கப்பல்களைப் பார்வயைிடும் நோக்கில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தென்கொரியா விஜயம் செய்துள்ள பிரதமர் அங்கு பாதுகாப்பு கூட்டணி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கார்னியுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்ஜின்டி, வைஸ் அட்மிரல் ஆங்கஸ் டாப்ஷி மற்றும் தென் கொரியா பிரதமர் கிம் மின்-சொக் ஆகியோரும் கலந்து கொண்டனர். கனடா, தனது பழமையான விக்டோரியா வகை (V
கனடா முழுவதும் மோசடி குறுந்தகவல்கள் எண்ணிக்க அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வங்கிகள், தபால் திணைக்களம் அல்லது வருமான வரித்துறை (CRA) ஆகியவற்றின் பெயரில் வரும் மோசடி குறுந்தகவல்கள் அதிகரித்துள்ளன. பெரும்பாலானோர் அவை போலியானவை என்று அறிந்திருந்தாலும், பலர் இன்னும் இத்தகைய சதிகளுக்குள் சிக்கி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.போமன்வில்லில் (Bowmanville, Ontario) வசிக்கும் கேவின் போரிசிக் சமீபத்தில் ஃபேஸ்புக் மார்க்கெட் பிளேஸில் ஒரு மீன்பிடி கம்பி விற்க முயன்றபோது ஒரு மோசடிக்குள்ளானார்.கொள்வனவாளர் என நம்பிய ஒருவர் அவருக்கு 150 டொலர் பணம் அனுப்பியதாகக் கூறி ஒரு e-Transfer இணைப்பை அனுப்பினார். போரிசிக் அந்த இணைப்பை கிளிக் செய்ததும், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 400 டொலர் மோசட
கனடாவில், தன் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளியினர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, கனடாவின் எட்மண்டன் நகரில், இந்திய வம்சாவளியினரான அர்வி சிங் சாகூ (Arvi Singh Sagoo, வயது 55) என்பவர் தனது காதலியுடன் உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளார். உணவகம் சென்றுவிட்டு தன் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு சாகூ வந்தபோது, அங்கு ஒருவர் தனது கார் மீது சிறுநீர் கழிப்பதைக் கவனித்துள்ளார் அவர்.என்ன செய்கிறாய் என சாகூ கேட்க, என்ன வேண்டுமானாலும் செய்வேன் என அந்த நபர் கூறியதுடன், சாகூவை தலையில் தாக்கியுள்ளார். சாகூ கீழே விழ, அவரது காதலி அவசர உதவியை அழைத்துள்ளார். அவசர உதவிக்குழுவினர் வரும்போது சாகூ சுயநினைவின்றிக் கிடந்துள்ளார். உடனடியாக சாகூ மர