கனடாவின் பிராம்ப்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக குறைந்தது இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சண்டல்வுட் பார்க்வே மற்றும் கிரவுன் விக்டோரியா டிரைவ் சந்திப்பிற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்றது என பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிக் காயங்களுடன் இருந்த ஒரு நபரைக் கண்டறிந்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அங்கேயே அறிவிக்கப்பட்டது. நடுத்தர உடலமைப்புடன், கருமையான ஆடைகளை அணிந்திருந்த இரண்டு ஆண் சந்தேக நபர்கள், நான்கு கதவுகள் கொண்ட கருப்பு நிற செடான் (sedan) ரக காரில் தப்பியோடியதாக பீல் பிராந்திய காவல்துறையின் ஊடகத் தொடர்பு அதிகாரி டைலர் பெல் (Tyler Bell) தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு வீட்டிற்குள்ளேயே நடந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
"விசாரணை தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. தகவல்கள் மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளன. இந்த சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எனவே, அவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை அளிக்கும் வகையில் தற்போதைக்கு கூடுதல் விபரங்களை வெளியிட முடியாது" என்று பெல் கூறினார்.
காவல்துறை அதிகாரி தனது அறிக்கையில் ஒரு இடத்தில் அவள் எனக் குறிப்பிட்டிருந்தாலும், உயிரிழந்தவர் குறித்த விபரங்களை முழுமையாக உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் போன்றே தோன்றுவதாக பெல் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தான் உண்மையான இலக்கா என்பது இன்னும் தெரியவில்லை" என்றும் அவர் மேலும் கூறினார்.
ஒரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததை கண்டு உள்ளே சென்றார்.
எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது அவருக்கு ஆச்சிரியமாக இருந்தது.
அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார். அதை எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது.
பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார்.
அதில் இவ்வாறு எழுதியிருந்தது:
அன்புள்ள அப்பா,
மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
என்னை மன்னித்து விடுங்கள்.
என் காதலன் பப்லு'வுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்...
உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை.
அதனால் சொல்லாமல் போகிறேன். பப்லுவின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது...
நீங்கள் பப்லுவைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்...
உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், அவன் நல்லவன்...
அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்...
அதை கலைக்க பப்லுவுக்கு விரும்பமில்லை...
பப்லுவுக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தாலும்... (இப்போதெல்லாம் 42 ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது...
பப்லுவுக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும்...,
எனக்கென்று தனது வாழ்க்கையில் ஒரு தனி இடம் கொடுத்திருக்கிறான்...
என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்....
பப்லுவுக்கு கூவ நதி(?)யருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது...
அங்கு நாங்கள் தங்கியிருப்போம்...
அவன் கஞ்சா மொத்த விற்பனையாளனாக இருக்கிறான்..
அது மட்டுமல்ல இன்னபிற போதை வஸ்துக்களும் விற்று வருகிறோம்...
விரைவில் உயர்ந்த வாழ்க்கை நடத்துவோம்...
சில போதை வஸ்துக்களை நானும் சுவைத்து பார்த்தேன்...
ரொம்ப சுகமாயிருக்கிறது...
மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள்...
ஏனென்றால் அப்போதுதான் பப்லு எய்ட்சிலிருந்து விரைவில் குணமடைவான்...
அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்...
எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும்.
எனக்கு பதினைந்து வயதாகிறது.
என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.
உங்கள் அன்பு மகள்,
ஸ்வப்னா..!
அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது..
கடிதத்தின் கீழே “பின்பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது..
துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:
பின்குறிப்பு;
அப்பா..,
நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை...
நம் வாழ்க்கை ஆகையில் எவ்வளவோ மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது...
இதையெல்லாம் பார்க்கும்போது நான் பத்தாம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது...
எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது.
எடுத்து கையெழுத்து போடுங்கள்.
நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன்.
உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்..!!
நன்றி!!
விட்டுக் கொடுப்பவர்களுக்கும், விட்டுச் செல்பவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்
உறவுகளை இழந்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள் விட்டுக் கொடுக்கிறார்கள்
உறவுகளே தேவையில்லை என்று நினைப்பவர்கள் விட்டுச் செல்கிறார்கள்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். கடுமையான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான அவப்பெயர்கள் குறையும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
ரிஷபம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார விருத்திக்கான சூழல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம்
சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரப் பணிகளில் விவேகம் வேண்டும். உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். செலவுகளால் கையிருப்புகள் குறையும். எண்ணிய பணிகளில் சில மாற்றம் ஏற்படும். மறைமுகமான விமர்சனம் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கடகம்
குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
சிம்மம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்களும் நட்புகளும் கிடைக்கும். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கன்னி
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளை சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
துலாம்
வியாபார ரீதியான பயணங்கள் ஏற்படும். ஆசியர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தன வரவுகளில் திருப்தி உண்டாகும். அரசால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
பிரிந்த உறவினர்கள் மீண்டும் வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புது விதமான உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கலகலப்பான பேச்சுகள் மூலம் நட்பு வட்டம் மேம்படும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகரம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நிறைவேறும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் சோர்வும் மந்தம் உண்டாகும். மனதளவில் இருந்த சிறு குழப்பம் விலகும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். பணிகளில் இருந்த நெருக்கடிகள் விலகும். செலவுகளின் தன்மையறிந்து செயல்படவும். வியாபாரப் பணிகளில் இருந்து வந்த போட்டிகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
உறவினர்கள் வழியில் சுகமான செய்திகள் கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வியாபாரம் நிமித்தமாக சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உருவாகும். புதுவிதமான ஆசைகளும் இலக்குகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5.6.2026.
இன்று இரவு 10.45 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
இன்று அதிகாலை 02.09 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
இன்று காலை 08.16 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.
இன்று காலை 10.45 வரை கௌலவம். பின்னர் இரவு 10.45 வரை தைத்துூலம். பிறகு கரசை.
இன்று அதிகாலை 05.51 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால் நடுத்தரக் குடும்பங்கள் கடும் உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் பேரி உணவு வங்கியை நாடும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக் ஷிப்லி கவலை தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பேசிய பேரி-ஸ்பிரிங்வாட்டர்-ஓரோ-மெடொன்டே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டக் ஷிப்லி, கனடாவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்துப் பல அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பேரி உணவு வங்கியின் மூலம் மாதத்திற்கு வெறும் 1,000 பேர் மட்டுமே உதவி பெற்று வந்தனர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை மாதத்திற்கு 8,000 ஆக உயர்ந்துள்ளது என்று டக் ஷிப்லி சுட்டிக்காட்டினார். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 8,000-க்கும் மேற்பட்டோர் இந்த உணவு வங்கியை நாடியுள்ளனர்.
இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகமாகும் என தெரிவித்தார். மேலும், முதன்முறையாக உணவு வங்கியின் உதவியை நாடி வந்த புதியவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்து, ஒரே மாதத்தில் 377 புதிய குடும்பங்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"லிபரல் கட்சியின் கடந்த பத்தாண்டுகால பொருளாதாரக் கொள்கைகளால், கனடா மக்கள் ஜி7 (G7) அமைப்பில் உள்ள மற்ற நாடுகளை விடப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிவிட்டனர்.
தற்போது ஜி7 நாடுகளில் மந்தநிலையை எதிர்கொள்ளும் ஒரே பொருளாதாரமாக கனடா மாறியுள்ளது" என்று டக் ஷிப்லி ஆளும் அரசை சாடினார்.
கனடா முழுவதும் நிலவி வரும் கடுமையான வீட்டு வாடகை உயர்வு, குடும்பக் கடன்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே மக்கள் தங்களின் அன்றாட உணவிற்குக் கூட உணவு வங்கிகளை நம்பியிருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆச்சு கோமதி... .இந்த 7 வருஷத்துல அவளோட புருஷன் கணேசன் அவளுக்கு ஒரு புடவை கூட வாங்கி தந்ததில்லை.
திருமணத்திற்கு எடுத்த ஒரு ஆறு புடவைகள் மட்டுமே இருக்கிறது
தீபாவளி வந்தாலும், பொங்கல் வந்தாலும், "உனக்கு ஏற்கனவே புடவை இருக்கே"னு ஒரே வார்தை.
அந்த புடவையும் கல்யாணத்துக்கு அவ அம்மா போட்டு அனுப்புனது.
7 வருஷமா.. அதையே திரும்ப திரும்ப துவைச்சு போட்டு போட்டு நிறம் போயிடுச்சு.
ஒரு ரூபாய் கூட கோமதியின் சந்தோஷத்துக்காக செலவு செய்ததில்லை கணேசன்.
அவளுக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும்.
தெருவுல ஐஸ்கிரீம் வண்டி போகும்போது.. அவ கண்ணுல ஒரு ஏக்கம் வரும். கணேசன் அதை பார்தும் பார்காத மாதிரி வேகமா நடப்பான்.
"அதெல்லாம் வீண் செலவு"னு சொல்லுவான்.
சாப்பாட்டுக்கு மட்டும் பணம் கொடுப்பான்.
அதிலும் சிக்கனம்.
காய்கறி வாங்க போனாலும்..
, "அது வேண்டாம், இது விலை அதிகம்"னு கணக்கு போடுவான்.
கோமதி வாரம் முழுக்க உருளைக்கிழங்கு குழம்பும், தக்காளி ரசமும் தான்.
அவளுக்கு மீன் பிடிக்கும்.
7 வருஷத்துல ஒரு தடவை கூட வாங்கி கொடுத்ததில்லை.
பக்கத்து வீட்டு சுமதியின் புருஷன் மாசம் ஒரு தடவை சினிமா கூட்டிட்டு போவான்.
பொட்டு, வளையல், சின்ன சின்ன பரிசு வாங்கி கொடுப்பான்.
சுமதி சிரிச்சுக்கிட்டே வரும்போது
கோமதி கதவு மறைவுல நின்னு பார்ப்பா.
கண்ணுல துளி வரும்.
உடனே துடைச்சுக்குவா.
"எனக்கு அதெல்லாம் தேவையில்லை"னு தன்னை தானே சமாதானப்படுத்துவா.
கணேசன் கஞ்சன் இல்லை. கருமி. தனக்கு கூட செலவு செய்ய மாட்டான்.
7 வருஷமா ஒரே செருப்பு. அடித்தேய்ஞ்சு போயிடுச்சு. அப்பப்போ செருப்ப தைக்கும் தொழிலாளிடம் கொடுத்து சரி செய்து கொள்வான்
பேங்க்ல லட்ச லட்சமா பணம் இருக்கு.
ஆனா அந்த பணம் அவனுக்கு மட்டும்தான்.
மனைவி, பிள்ளைங்க அவனுக்கு பணம் செலவாகுற பொருள்.
கோமதி நரக வாழ்கை வாழ்ந்தாள்
வெளியே சொல்ல முடியாது.
"புருஷன் கஞ்சன்னு சொன்னா..... ஊர் என்ன சொல்லும்"னு வாயை மூடிக்கிட்டா.
இரவு படுக்கும்போது தலையணையை நனைச்சு அழுவா.
"கடவுளே... நான் என்ன தப்பு பண்ணேன்"னு கேட்பா.
7.வது வருஷம் தீபாவளி வந்தது.
வழக்கம் போல கணேசன் ஒரு பைசா கொடுக்கலை.
கோமதி அந்த 7 வருஷமான..
பழைய புடவையை துவைச்சு காய வச்சா. .
நிறம் முழுக்க போயி, வெள்ளையா மாறிடுச்சு.
அதை கட்டிக்கிட்டு தான் கோயிலுக்கு போனா.
கோயில்ல ஒரு வயசான அம்மா அவளை பார்த்ததும் நின்னுட்டாங்க.
கண்களில் கருணைப்பார்வை மிளிர..
உதட்டில் புன்னகை தவழ...
"ஏம்மா... உன் புடவை ஏன் இப்படி இருக்கு"னு கேட்டாங்க.
ராதா எதுவும் சொல்லாம சிரிச்சா.
அந்த அம்மா அவ கையை பிடிச்சு, "வா"னு கூட்டிட்டு போனாங்க.
அவங்க பெயர் லட்சுமி அம்மா.
ஊர்ல பெரிய பணக்காரங்க.
கணவன் இறந்து 10 வருஷம் ஆச்சு.
பிள்ளைங்க வெளிநாட்டுல.
தனிமையில வாடுனாங்க.
அவங்க கோமதியை பார்ததும் ஏதோ ஈர்ப்பு.
"என் கூட இருக்கியா அம்மா.
எனக்கு பேச ஆள் இல்லை.
உனக்கு சாப்பாடு, துணி, எல்லாம் நான் பார்துக்குறேன்"னு சொன்னாங்க.
கோமதி முதல்ல மறுத்தா.
ஆனா லட்சுமி அம்மா விடலை.
"உன் கணவர்கிட்ட பேசுறேன்"னு சொல்லி கணேசனை கூப்பிட்டாங்க.
கணேசன் முதல்ல மறுத்தான்.
"என் பொண்டாட்டியை
நான் பார்துக்குறேன்"னு சொன்னான்.
ஆனா லட்சுமி அம்மா சொன்னாங்க,
"மாசம் 15,000 சம்பளம்.
வாரம் ஒரு நாள் வீட்டுக்கு போகலாம்.
உனக்கும் பணம், அவளுக்கும் நிம்மதி".
பணம்னு கேட்டதும் கணேசன் சரின்னுட்டான். கோமதியை அனுப்பி வச்சான்.
அந்த நாள்ல இருந்து கோமதி
வாழ்க்கை மாறுச்சு.
லட்சுமி அம்மா அவளை மகளா பார்த்தாங்க.
கோமதியும் லட்சுமிமாலை தாயாக பார்த்தாள்
முதல் மாசமே புது புடவை 5 வாங்கி கொடுத்தாங்க.
உன் மனம் சந்தோசமாக இருந்து
"நீ சிரிக்குறத பார்க்கணும்மா"னு சொன்னாங்க.
கோமதி ஏழு வருஷத்துக்கு அப்புறம்
முதல் தடவையா மனசு விட்டு சிரிச்சா.
ஐஸ்கிரீம் சாப்பிட்டா.
சினிமா பார்த்தா.
தனக்கு பிடிச்ச மீன் குழம்பு சமைச்சு சாப்பிட்டா.
லட்சுமி அம்மாவும் கோமதியும் தாயும் மகளும் போல பாசத்துடன் ஓர் ஆண்டு காலம் ஓடியது
ஒரு வருட காலம் கழிச்சு லட்சுமி அம்மா இறந்துட்டாங்க.
இறக்கும்போது உயில் எழுதி வச்சுருந்தாங்க.
தன் சொத்துல பாதியை கோமதிக்கு
எழுதி வச்சுருந்தாங்க.
"என் கடைசி காலத்துல என்னை பார்த்துக்கிட்ட கடவுள் நீதான்மா"னு எழுதிருந்தாங்க.
கோமதிக்கு 50 லட்சம் கிடைச்சது.
அவ வீட்டுக்கு வந்து கணேசன் முன்னாடி... அந்த பணத்தை வச்சா.
கணேசன் கண்ணை விரிச்சு பார்த்தான்.
"எனக்கு கொடு"னு கையை நீட்டினான்.
கோமதி சொன்னாள்,
"7 வருஷம் நான் கேட்டேன்.
ஒரு புடவை கூட வாங்கி தரலை.
இப்போ இந்த பணம் என்னோடது.
நான் எனக்காக வாழ போறேன்".
அன்னைக்கு முதல் தடவையா கோமதி தனக்கு பிடிச்ச புடவையை வாங்கினா.
தனக்கு பிடிச்ச சாப்பாட்டை சாப்பிட்டா.
தனக்காக வாழ ஆரம்பிச்சா.
கணேசன் இன்னும்
அதே பழைய செருப்பை போட்டுக்கிட்டு,
பேங்க் பாஸ்புக்கை பார்துக்கிட்டு உக்காந்துருக்கான்.
அவன்கிட்ட கோடி இருக்கு.
ஆனா வீட்ல யாரும் இல்லை.
கோமதி சொல்றா,
"கடவுள் என்னை தண்டிக்கலை.
என்னை சோதிச்சாரு.
நான் தாங்குனதால தான் எனக்கு
இந்த பரிசு கிடைச்சது".
இப்போ கோமதி ஊர்ல உள்ள
ஏழை பொண்ணுங்களுக்கு..
புடவை வாங்கி கொடுக்குறா.
"நான் அழுதது போதும்.
இனி வேற யாரும் அழக்கூடாது"னு சொல்றா.
கஞ்சத்தனம் செய்து சேர்த்து வச்ச பணம் எல்லாம் கல்லறைக்கு வராது.
ஆனா அன்பா கொடுத்த ஒரு புடவை, ஒருத்தியோட வாழ்க்கையே மாத்தும்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில், வீரவநல்லூர் மற்றும் முக்கூடல் ஆகிய ஊர்களுக்கு அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலம் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஹரிகேசவநல்லூர் ஆரியநாத சுவாமி திருக்கோவில் ஆகும். சுமார் 1100 ஆண்டுகள் பழமையான இந்த பாண்டியர் காலத்து ஆலயம் ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1. பெயர்க் காரணமும் வரலாறும்
• அரசன் பெயர்: இத்தலத்தைக் கட்டியவர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டிய மன்னரான நின்றசீர் நெடுமாற பாண்டியன் (கூன்பாண்டியன்) ஆவார். இவருக்கு அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவரது நினைவாகவே இந்த ஊர் 'அரிகேசவநல்லூர்' (அரிகேசரி நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.
• மறுசீரமைப்பு: பின்னாட்களில் (கி.பி. 1190–1216 இல்) சடாவர்மன் குலசேகர பாண்டிய மன்னரால் இக்கோவில் விரிவாக்கப்பட்டு, மறுசீரமைக்கப்பட்டது. இங்குள்ள கருவறைச் சுவர்களில் பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன.
2. மூர்த்திகளின் சிறப்புகள்
• ஆரியநாத சுவாமி (சிவன்): இக்கோவிலின் மூலவர் கிழக்கு நோக்கி, உயரமான சிவலிங்கத் திருமேனியுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.
• பெரியநாயகி அம்பாள் (பிரகன்னாயகி): அம்பாளுக்குத் தனியாகத் தெற்கு நோக்கிய வாசல் கொண்ட தனிச் சன்னதி உள்ளது. சன்னதிக்குள் அம்பாள் சுமார் 6 அடி உயரத்தில் (பீடத்துடன் சேர்த்து) நின்ற கோலத்தில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியும், அம்பாள் சன்னதியும் தனித்தனியே சற்று இடைவெளி விட்டு அமைந்துள்ளன.
3. தனித்துவமான ஆன்மீகச் சிறப்புகள்
இக்கோவில் மூன்று முக்கிய ஆன்மீகத் தகுதிகளைக் கொண்டு மிகச் சக்திவாய்ந்த தலமாக விளங்குகிறது:
1. பஞ்ச குரு தலம் (Pancha Guru Sthalam): இத்தலம் குரு பகவானுக்குரிய வழிபாட்டுச் சிறப்புகள் கொண்ட ஐந்து முக்கிய தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
2. குபேர தலம் (Kubera Sthalam): செல்வத்திற்கு அதிபதியான குபேரன், இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றதாகப் புராணம் கூறுகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு, இக்கோவில் வளாகத்தில் மண்ணில் புதைந்திருந்த பழமையான குபேரன் சிலை கண்டெடுக்கப்பட்டு, மகா மண்டப நுழைவாயிலில் முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு வடக்கு நோக்கிய குபேர வழிபாடு மிகவும் விசேஷமானது.
3. மாந்தி தோஷ நிவர்த்தி தலம் (Mandhi Dosha Nivarthi Sthalam): சனி பகவானின் மைந்தனான மாந்தியினால் ஏற்படும் தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாக இது திகழ்கிறது. சன்னதியில் சனீஸ்வரர் மற்றும் குபேர லிங்க வழிபாடுகள் உள்ளன.
4. பிற சன்னதிகள் மற்றும் வடிவமைப்பு
• இக்கோவிலுக்குப் பிரம்மாண்ட ராஜகோபுரம் இல்லை. அதற்குப் பதிலாக பலிபீடம், கொடிமரம் மற்றும் நான்கு கால் மண்டபத்தில் அமைந்த நந்தி வாகனம் ஆகியவை வரவேற்கின்றன. கொடிமரம் மண்டபத்தின் கூரையைத் துளைத்துக் கொண்டு வானோக்கிச் செல்வது இதன் கட்டிடக்கலை நயம்.
• ஜேஷ்டா தேவி சன்னதி: பொதுவாகச் சோழர் காலக் கோவில்களில் மட்டுமே ஜேஷ்டா தேவிக்கு (மூதேவி) சன்னதி அமைப்பது வழக்கம். ஆனால், பாண்டிய மன்னர் சோழர் பாணியைப் பின்பற்றி இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தெற்கு நோக்கிய தனிச் சன்னதியை ஜேஷ்டா தேவிக்காக அமைத்துள்ளார். இவரை வழிபடுவது இங்கு மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
• முக்குறுணி விநாயகர்: வெளிப்பிரகாரத்தில் மிகப் பெரிய அளவில் கிழக்கு நோக்கிய முக்குறுணி விநாயகர் வீற்றுள்ளார்.
• மேலும் இங்கு ஜுரதேவர், வீரபத்திரர், சப்தமாதர்கள், கன்னி விநாயகர், காசி விஸ்வநாதர்-விசாலாட்சி மற்றும் வள்ளி-தெய்வானை சமேத சண்முகர் ஆகியோருக்குத் தனிச்சன்னதிகள் உள்ளன.
5. தல விருட்சமும் தீர்த்தமும்
• தல விருட்சம்: நெல்லி மரம் (அம்லா மரம்)
• தீர்த்தம்: கோவிலின் கிழக்கு நுழைவாயிலுக்கு வெளியே அழகான திருக்குளம் (Temple Tank) அமைந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், மாசி மகம், பிரதோஷம், நவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பசுமையான நெல் வயல்களுக்கும், தாமிரபரணி ஆற்றங்கரைக்கும் நடுவே அமைதியான கிராமப்புறச் சூழலில் இக்கோவில் அமைந்துள்ளது.
கோவில் தகவல்கள் & அமைவிடம்
• திறந்திருக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
• தொலைவு:
• வீரவநல்லூரிலிருந்து சுமார் 3 கி.மீ.
• முக்கூடலிலிருந்து சுமார் 4 கி.மீ.
• அம்பாசமுத்திரத்திலிருந்து சுமார் 14 கி.மீ.
• திருநெல்வேலியிலிருந்து சுமார் 39 கி.மீ.












