ஒரு மரம் படகாகிறது,
ஒரு மரம் விறகாகிறது.
இன்னொரு மரம் வீடாகிறது.![]()
இறைவனுக்குத் தெரியும், எது யாருக்கு என்பதும், யாரை எங்கே வைப்பது என்பதும்!
விதையையும் விதியையும் எழுதுவது இறைவனே![]()
--பிரமீளா நாகேஸ்வரராஜ்
பிரான்சின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரென்னெஸ் (Rennes) நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 11 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலெய்ன் (Vilaine) ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட அச்சிறுவனின் கழுத்தில் ஈரமான குளியல் துண்டு (Wet bath towel) மிக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்ததாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் சிறுவனின் உடலை மீட்டனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய பிரெஞ்சு போலீசார், திங்கட்கிழமை அன்று 16 வயது சிறுவன் ஒருவனை அவனது வீட்டிலேயே வைத்து அதிரடியாக கைது செய்தனர்.
இதற்கிடையில், இந்த கொலையுடன் தொடர்புடைய 15 வயது சிறுமி ஒருத்தி தானாகவே முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தாள். சிறுவன் உயிரிழந்த அன்று மதிய வேளையில், அவனுடன் இந்த இரு பதின்ம வயதுடையவர்களும் (Teenagers) ஒன்றாக காணப்பட்டதாக அரசு வழக்கறிஞர் பிரடெரிக் டீலெட் (Frederic Teillet) உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது அவர்கள் இருவரும் “மைனர் சிறுவனைக் கொலை செய்தல்” என்ற குற்றச்சாட்டின் கீழ் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இக்கொடூரக் கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் மற்றும் சூழ்நிலைகள் என்ன என்பது இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.
மேலும் ஆதாரங்களை திரட்டும் நோக்கில், சம்பவ இடமான விலெய்ன் ஆற்றில் போலீஸ் முக்குளிப்பாளர்கள் (Divers) தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமைதியான நகரப் பகுதியில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பிரான்ஸ் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள ஒரு பகுதியில், கழிவுநீர்க்குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அறிவிப்பு வரும் வரை மக்கள் டாய்லெட்டை பிளஷ் செய்யவேண்டாம், குளிக்கவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Comox Valley பகுதியில், கழிவுநீர்க்குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வாழும் மக்கள் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்யவோ, டிஷ் வாஷர் மற்றும் வாஷின் மெஷின் பயன்படுத்தவோ வேண்டாம் என்றும் குளிக்கவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Comox Valleyயில் வாழும் ஸ்டீவ் ஜோன்ஸ் என்பவர், தான் அந்த கழிவுநீர்க் குழாய் உடைப்பை நேரில் சென்று பார்த்ததாக தெரிவிக்கிறார்.
கழிவுநீர் வழிந்தோடி, ஒரே துர்நாற்றம் வீசுவதாகக் கூறும் ஜோன்ஸ், அந்த கழிவுநீர் கடலில் கலப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே, மக்கள் அந்த பகுதியில் கடலில் நீந்தச் செல்லவேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அப்படியானால், மக்கள் காலைக்கடன் முதலான விடயங்களுக்காக எங்கே செல்வது? இந்த ’no-flush area’, அதாவது குளிக்க வேண்டாம், டாய்லெட்டை ஃப்ளஷ் செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு வெளியில் சில தனி கழிவறைகள் இருப்பதாகவும், அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அல்லது, அந்த பகுதியிலேயே அருமையான உணவகம் ஒன்று உள்ளதாகவும், மக்கள் அங்கு செல்லலாம் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படம் 'லீடர்'. 'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை', 'கொடி' மற்றும் 'கருடன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நாயகனாக நடித்தார்.
சந்தோஷ் பிரதாப், ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவான இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 3 அன்று வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் இப்படம் தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. வரும் மே 29ஆம் தேதி அன்று இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விவாசாய பணிகளில் மேன்மை உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்விகத்தால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். எதிர்கால தொடர்பான தெளிவுகள் பிறக்கும். இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படும். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். புத்திரர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எளிமையான பணிகளை கூட தாமதமாக முடியும். கடன் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். கல்வியில் இருந்த ஆர்வம் இன்மை குறையும். உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனை கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்த முயற்சிகளில் விழிப்புணர்வு வேண்டும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உறவினர்களிடமிருந்த வேறுபாடுகளுக்கு குறையும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சிம்மம்
கனிவான பேச்சுக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். புதிய வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கன்னி
இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும். பணி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும்.
அதிஸ்ட எண் : 2
அதிஸ்ட நிறம் : வெண்மை
விருச்சிகம்
குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் ஆதரவாக செயல்படுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபார பணிகளில் லாபங்கள் ஏற்படும். துறை சார்ந்த நிபுணத்துவம் மேம்படும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான சிந்தனைகளால் மாற்றங்களை செய்வீர்கள். அரசு வகை குழுக்களால் ஆதாயம் அடைவீர்கள். மனதளவில் திருப்தியான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
தனுசு
நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய முயற்சியால் மாறுபட்ட சூழல் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். விலகி இருந்தவர் விரும்பி வருவார்கள். உத்தியோகம் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மகரம்
கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சட்டம் சார்ந்த சில நுணுக்காங்களை அறிவீர்கள். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நேர்மைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன் செயல்படவும். தொழில் நிமிர்த்தமான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். விளையாட்டான பேச்சுகளை குறைத்துக் கொள்ளவும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
வாழ்க்கை துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். சகப் பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னபிக்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களால் மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 13 ஆம் தேதி புதன்கிழமை 27.5.2026
இன்று காலை 09.19 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று காலை 08.42 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.
இன்று அதிகாலை 05.54 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.
இன்று காலை 09.19 வரை பத்திரை. பின்னர் இரவு 09.41 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று அதிகாலை 05.51வரை சித்தயோகம். பின்னர் காலை 08.42 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஒரு பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள்.
ஒருவர் வசதியானவர்.
தினமும் வீட்டில் இருந்து கொண்டு வந்ததில் மீதமான உணவை பள்ளி வாசலில் இருக்கும் வயதான காவலாளிக்குக் கொடுப்பார்.
“சாப்பிடுங்க தாத்தா… கொஞ்சம் அதிகம் ஆயிட்டதுன்னு கொண்டு வந்தேன்…”
காவலாளியும் புன்னகையுடன் வாங்கி சாப்பிடுவார்.
ஆசிரியருக்கு மனதில் ஒரு திருப்தி —
“நான் தினமும் ஒருவருக்கு உதவி செய்கிறேன்” என்ற பெருமை.
மற்றொரு ஆசிரியர் சாதாரண சம்பளத்தில் வாழ்க்கை நடத்துபவர்.
அவர் வீட்டிலிருந்து கொண்டு வருவது நான்கு இட்லிகள் அல்லது கொஞ்சம் சாதம் மட்டுமே.
மதிய நேரத்தில் அந்த காவலாளர் பசியாக அமர்ந்திருப்பதை பார்ப்பார் .
அவர் டிபன் பாக்ஸை திறந்து,
“வாங்க தாத்தா… நாம இருவரும் சேர்ந்து சாப்பிடலாம்…” என்று அருகில் உட்கார வைத்து
இருப்பதை பகிர்ந்து சாப்பிடுவார்கள்.
அவர்கள் சிரித்துக்கொண்டே நிறைய பேசுவார்கள்.
அதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த முதல் ஆசிரியருக்கு ஏதோ மனதில் பட்டது.
தான் தினமும் கொடுத்தது “மீதமிருந்த உணவு” மட்டும்.
ஆனால் இந்த மனிதன் கொடுத்தது “தனக்கிருந்த உணவு”.
அடுத்த நாள் முதல் அவர் பழைய மாதிரி மீதமிருந்ததை மட்டும் கொடுக்கவில்லை.
மதிய நேரத்தில் கூடுதலாக உணவு எடுத்துக்கொண்டு வந்து,
“தாத்தா… வாங்க சேர்ந்து சாப்பிடலாம்…” என்று அருகில் அமர ஆரம்பித்தார்.
அன்று தான் அவர் உணர்ந்தார்…
பிறருக்கு கொடுப்பது என்பது
நமக்கு தேவையில்லாததை தூக்கி கொடுப்பது அல்ல.
நமக்கு தேவையான ஒன்றிலிருந்து
ஒரு பங்கை அன்பாக பகிர்வது.
அன்பு வயிற்றை மட்டும் நிரப்பாது…
மனிதனின் மனதையும் நிரப்பும்.
ஒரு கடைக்காரர் தன் கடையைத் திறந்தபோது, ஒரு பெண் வந்து, “ஐயா, இந்தாருங்கள் உங்கள் 10 ரூபாய்” என்றாள். 🙏
அந்த ஏழைப் பெண்ணை, “நான் எப்போது உனக்கு 10 ரூபாய் கொடுத்தேன்?” என்று கேட்பது போல, கடைக்காரர் கேள்விக்குறியுடன் பார்த்தார்.
அதற்கு அந்தப் பெண், “நேற்று மாலை நான் சில பொருட்களை வாங்கினேன். உங்களுக்கு ₹100 கொடுத்தேன், ₹70க்குச் சாமான் வாங்கினேன், ஆனால் நீங்கள் ₹30க்கு பதிலாக ₹40 திருப்பி கொடுத்துவிட்டீர்கள்” என்று பதிலளித்தாள்.
அந்த 10 ரூபாயைக் கடைக்காரர் தன் நெற்றியில் வைத்துவிட்டு, கல்லாவில் வைத்தார், பிறகு கேட்டார், “ஒரு விஷயம் சொல், சகோதரி. பொருட்கள் வாங்கும்போது ₹5க்குக் கூட அவ்வளவு பேரம் பேசினாய். இப்போது ₹10ஐத் திருப்பி கொடுக்க இவ்வளவு தூரம் வந்திருக்கிறாயே?”
அதற்கு அந்தப் பெண், “பேரம் பேசுவது என் உரிமை. ஆனால் விலை தீர்மானிக்கப்பட்ட பிறகு, குறைவாகக் கொடுப்பது பாவம்” என்று பதிலளித்தாள்.
கடைக்காரர், “ஆனால் நீ குறைவாய்க் கொடுக்கவில்லையே. நீ முழுப் பணத்தையும் கொடுத்துவிட்டாய். இந்த ₹10 என்னுடைய தவறால் உனக்கு வந்திருக்கிறது. நீ அதை வைத்துக்கொண்டிருந்தால், எனக்கு எந்த வித்தியாசமும் தெரிந்திருக்காது” என்றார்.
அந்தப் பெண், “அது உங்களுக்கு முக்கியமில்லாமல் இருக்கலாம், ஆனால் அது என் மனசாட்சியில் உறுத்தும். உங்களுடைய பணத்தை நான் தெரிந்தே வைத்துக்கொண்டேன் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நேற்று இரவே அதைத் திருப்பி கொடுக்க வந்தேன், ஆனால் உங்கள் கடை மூடியிருந்தது” என்றாள்.
கடைக்காரர் ஆச்சரியத்துடன், “நீ எங்கே வசிக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “செக்டார் 8” என்று பதிலளித்தாள்.
கடைக்காரருக்கு வாய் அடைத்துப்போனது. “₹10ஐத் திருப்பி கொடுக்க 7 கிலோமீட்டர் தூரம் வந்திருக்கிறாய், இது உனக்கு இரண்டாவது வருகையா?”
அந்தப் பெண் அமைதியாக, “ஆமாம், இது என் இரண்டாவது வருகை. மன அமைதி வேண்டுமென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய வேண்டும். என் கணவர் இப்போது இந்த உலகத்தில் இல்லை, ஆனால் அவர் எனக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுத்தார்: ‘பிறருக்குச் சொந்தமான ஒரு பைசாவைக் கூட ஒருபோதும் எடுத்துக்கொள்ளாதே.’
ஏனென்றால், ஒரு நபர் அமைதியாக இருக்கலாம், ஆனால் மேலே உள்ளவர் எப்போது வேண்டுமானாலும் கணக்குக் கேட்கலாம். அந்த கணக்கின் தண்டனை என் குழந்தைகளைப் பாதிக்கலாம்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.
உடனே கடைக்காரர் கல்லாவில் இருந்து ₹300 எடுத்துக்கொண்டு, தன் ஸ்கூட்டரை எடுத்து, உதவியாளரிடம், “கடையைப் பார்த்துக்கொள். நான் சீக்கிரம் திரும்பி வருகிறேன்” என்றார்.
அவர் சந்தையில் உள்ள இன்னொரு கடைக்குப் போய், பிரகாஷ் என்ற கடைக்காரரிடம் ₹300 கொடுத்தார். “இந்தாருங்கள், உங்கள் ₹300. நேற்று நீங்கள் சாமான் வாங்க வந்தபோது, நான் உங்களிடம் அதிகப் பணம் வசூலித்துவிட்டேன்.”
பிரகாஷ் சிரித்து, “நீங்க அதிகமா வசூலிச்சா, நான் திரும்ப வரும்போது கொடுத்திருக்கலாமே. ஏன் இவ்வளவு காலையில வந்தீங்க?” என்று கேட்டார்.
அதற்கு அந்தக் கடைக்காரர், “நீங்கள் திரும்பி வருவதற்குள் நான் இறந்துவிட்டால் என்ன செய்வது? நான் உங்களுக்கு ₹300 தரவேண்டியது உங்களுக்குத் தெரியாமல் இருந்தது. அதனால்தான் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்தது. மேலே உள்ளவர் எப்போது கணக்குக் கேட்பார் என்று யாருக்குத் தெரியும்? அந்த தண்டனை என் குழந்தைகளைப் பாதிக்கலாம்” என்று பதிலளித்தார்.
கடைக்காரர் கிளம்பிவிட்டார், ஆனால் பிரகாஷ் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
பத்து வருடங்களுக்கு முன்பு, அவர் ஒரு நண்பரிடம் ₹3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அடுத்த நாளே அந்த நண்பர் இறந்துவிட்டார்.
பணத்தைப் பற்றி நண்பரின் குடும்பத்தாருக்குத் தெரியாது, அதனால் யாரும் கேட்கவில்லை. பிரகாஷ் பேராசையால் ஆட்கொள்ளப்பட்டு, அதைத் திருப்பிக் கொடுக்கும் முயற்சியை ஒருபோதும் எடுக்கவில்லை.
இன்று, அந்த நண்பரின் குடும்பம் வறுமையில் வாழ்ந்தது. அவரது விதவை தன் குழந்தைகளை வளர்க்க வேலைக்காரியாக வேலை செய்தாள். இருந்தாலும் பிரகாஷ் அவர்கள் பணத்தைத் தன்னிடமே வைத்திருந்தார்.
கடைக்காரரின் வார்த்தைகள்—“மேலே உள்ளவர் எப்போது கணக்குக் கேட்பார் என்று யாருக்குத் தெரியும்? அந்த தண்டனை என் குழந்தைகளைப் பாதிக்கலாம்”—பிரகாஷை வாட்டின.
இரண்டு மூன்று நாட்களின் மன உளைச்சலுக்குப் பிறகு, அவருடைய மனசாட்சி விழித்தது. அவர் வங்கியில் இருந்து ₹13 லட்சத்தை எடுத்துக்கொண்டு, தன் நண்பரின் வீட்டுக்குச் சென்றார்.
விதவை வீட்டில், தன் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்தாள். பிரகாஷ் அவள் காலில் விழுந்தார். ஒவ்வொரு ரூபாய்க்காகவும் போராடும் ஒரு பெண்ணுக்கு, ₹13 லட்சம் என்பது மிகப் பெரிய தொகை. அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. பிரகாஷின் நேர்மைக்காக அவரை ஆசீர்வதித்தாள். 🙏
அந்த கடைக்காரரிடம் ₹10ஐத் திருப்பி கொடுக்க இருமுறை சென்ற அதே பெண் தான் அவள்.
💥 கடின உழைப்பாலும் நேர்மையாலும் வாழ்பவர்கள் கடவுளால் சோதிக்கப்படலாம், ஆனால் அவர் அவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. அவர் ஒரு நாள் செவிசாய்ப்பார். மேலே உள்ளவர் மீது நம்பிக்கை வையுங்கள்.
- சளிக்கு வேப்பிலை நொச்சி இலை போட்டு ஆவி பிடித்தால் நன்றாக தூக்கம் வரும் . அடுத்த நாளே கொஞ்சம் நன்றாக இருக்கும்.
- தூங்குவதற்கு முன் எலுமிச்சை இஞ்சி வெற்றியிலை சிறியதாளவு சீரகம் மிளகு மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து மிதமான சூட்டில் குடித்தால் இரண்டே நாட்களில் சளி ரெடியாகும்.
- கிணறு ஆறு குளம் ஏரி .அதிக நேரம் குளித்தால் தலையில் நீர் கொர்த்து கொள்ளலாம். அதற்கு சுண்ணாம்பு மஞ்சள் கலந்து நெற்றியில் பற்று போட்டால் தலைபாரம் குறையும்,
*ஒரு காலை நேர.. நடைப்பயணத்திற்கு பிறகு, ஒரு டாக்டர்கள் குழு, சாலையோர உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள்...*
அப்போது ஒருவர் தங்களை நோக்கி வருவதை, அவர்கள் கண்டார்கள்.
ஒரு மருத்துவர் வருபவரை பார்த்து: "அவருக்கு இடது முழங்காலில் கீல்வாதம் உள்ளது.." என்றார்.
இரண்டாவது மருத்துவர்: இல்லை.. "அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ் உள்ளது .." என்றார்.
மூன்றாவது மருத்துவர்: அவருக்கு, "ஒரு கணுக்கால் சுளுக்கு .." என்றார்.
நான்காவது மருத்துவர்: அந்த "மனிதனால் முழங்காலை தூக்க முடியாது, அவருக்கு லோயர் மோட்டார் நியூரான்கள் இருப்பதாக தெரிகிறது .." என்றார்.
ஐந்தாவது மருத்துவர்: "ஆனால் எனக்கு அவர் ஒரு ஹெமிபிலீஜியா கத்தரிக்கோல் நடை பிரச்சனை என்று தோன்றுகிறது," என்றார்.
ஆறாவது மருத்துவர் அவருக்கான நோயறிதலை அறிவிப்பதற்கு முன்பு...
அந்த மனிதர், அந்த டாக்டர் குழுவிடம் வந்து, "எனது ஒரு கால் செருப்பு அறுந்து விட்டது, அதை சரி செய்யக்கூடிய செருப்பு தெய்ப்பவர் யாராவது இங்கு அருகில் இருக்கிறாரா.?" என கேட்கிறார்.*ஒரு காலை நேர.. நடைப்பயணத்திற்கு பிறகு, ஒரு டாக்டர்கள் குழு, சாலையோர உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள்...*
அப்போது ஒருவர் தங்களை நோக்கி வருவதை, அவர்கள் கண்டார்கள்.
ஒரு மருத்துவர் வருபவரை பார்த்து: "அவருக்கு இடது முழங்காலில் கீல்வாதம் உள்ளது.." என்றார்.
இரண்டாவது மருத்துவர்: இல்லை.. "அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ் உள்ளது .." என்றார்.
மூன்றாவது மருத்துவர்: அவருக்கு, "ஒரு கணுக்கால் சுளுக்கு .." என்றார்.
நான்காவது மருத்துவர்: அந்த "மனிதனால் முழங்காலை தூக்க முடியாது, அவருக்கு லோயர் மோட்டார் நியூரான்கள் இருப்பதாக தெரிகிறது .." என்றார்.
ஐந்தாவது மருத்துவர்: "ஆனால் எனக்கு அவர் ஒரு ஹெமிபிலீஜியா கத்தரிக்கோல் நடை பிரச்சனை என்று தோன்றுகிறது," என்றார்.
ஆறாவது மருத்துவர் அவருக்கான நோயறிதலை அறிவிப்பதற்கு முன்பு...
அந்த மனிதர், அந்த டாக்டர் குழுவிடம் வந்து, "எனது ஒரு கால் செருப்பு அறுந்து விட்டது, அதை சரி செய்யக்கூடிய செருப்பு தைப்பவர் யாராவது இங்கு அருகில் இருக்கிறாரா.?" என கேட்டார்.
ஆறு மருத்துவர் முகத்திலும் அசடு வழிந்தது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணி புரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாகும். கால்நடை வியாபாரத்தில் கவனம் வேண்டும். புதுவிதமான பயணங்களால் மாற்றமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
வித்தியாசமான முயற்சிகளில் ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடிவரும். உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மிதுனம்
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டினை பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். அலுவலகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். குழந்தைகளை அரவணைத்து செல்வது நல்லது. எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
வெளியூர் பயண வாய்ப்புகளில் சில மாற்றங்கள் உண்டாகும். சுப காரிய முடிவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
தடைப்பட்ட சுப காரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல், வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு பெறும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உறவுகள் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பொன் பொருட்கள் பற்றிய எண்ணம் மனதில் மேம்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். மறைமுகமான சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளியூர் சார்ந்த பயணங்கள் கைகூடிவரும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
தனுசு
வியாபாரப் பணிகளில் திடீர் வரவுகள் ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்து செல்லவும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மகரம்
வெளிப்படையான சில பேச்சுக்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் விலகும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதளவில் குழப்பங்கள் ஏற்படும். செயல்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் வேண்டும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
தடைப்பட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவு பெறும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிகளில் பொறுப்புகள் மேம்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 26.5.2026.
இன்று காலை 08.58 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று காலை 07.46 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.
இன்று காலை 06.44 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.
இன்று காலை 08.58 வரை கரசை. பின்னர் இரவு 09.08 வரை வனிசை. பிறகு பத்திரை.
இன்று அதிகாலை 05.51வரை சித்தயோகம். பின்னர் காலை 07.46 வரை அமிர்த யோகம். பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
அற்புதங்கள் பல நிகழப்போகும் நாள்.
நீங்கள் நினைத்த யாவும் இன்று கைகூடும்.
நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்
மங்கோலிய மாவீரர் செங்கிஸ்கான் ஒருநாள் வேட்டைக்குச் சென்றார். செங்கிஸ்கான் தனது கரத்தில் ஒரு ராஜாளியை ஏந்தி இருந்தார். அதிக தூரம் நடந்து சென்றதால் களைப்பு ஏற்பட்டது. தாகம் எடுத்தது அப்போது ஒரு பாறையிலிருந்து நூலிழை போல் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது
ஒரு குவளையை எடுத்துக் கொண்டு நீர் ஒழுகும் இடத்திற்கு சென்று நீரைப் பருகச் சென்றார். ராஜாளி வேகமாகப் பாய்ந்து சென்று குவளையைத் தட்டி விட்டது. மீண்டும் மீண்டும் வௌ்ளிக் குவளையை ராஜாளி தட்டி விட்டது.
தாகம் மற்றும் ராஜாளியின் அடாவடி இந்த இரண்டாலும் செங்கிஸ்கானுக்கு அளவற்ற ஆத்திரம் பொங்கியது. வாளால் ராஜாளியை வெட்டினார் ராஜாளி துடி துடித்துக் கொண்டிருந்தது.
மீண்டும் செங்கிஸ்கான் தண்ணீரைச் சேகரித்து அதை அருந்த முற்பட்டார் துடிதுடித்துக் கொண்டிருந்த ராஜாளி மறுபடியும் பாய்ந்து வந்து குவளையை தட்டி விட்டது. செங்கிஸ்கானுக்கு அடக்க முடியாத ஆத்திரம் பீறிட்டெழுந்தது.
ராஜாளியின் நெஞ்சை வாளால் குத்திக் கிழித்தார். இப்போது மேலிருந்து தண்ணீர் கசிவது நின்று விட்டது கீழே தண்ணீர் கசிவு வறண்டு விட்டாலும் மேலே ஒரளவு தண்ணீர் இருக்கக் கூடும் என்று செங்கிஸ்கான் அனுமானித்தார்.
குன்றின் வழியே அவர் மேலே ஏறினார். அங்கே ஒரு சிறிய தடாகம் தென்பட்டது. ஆனால்!, அந்தத் தடாகத்தின் மத்தியில் கொடிய நாகப் பாம்புகள் செத்துக் கிடந்தது. அந்தத் தண்ணீரை அருந்தியிருந்தால் தனது உயிர் பிரிந்திருக்கும் என்பதை செங்கிஸ்கான் உணர்ந்து கொண்டார்.
கீழே இறங்கி வந்த செங்கிஸ்கான், இறந்துக் கிடந்த ராஜாளியை இறுகத் தழுவிக் கொண்டார். இந்த ராஜாளிக்குத் தங்கச் சிலை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார்.
செங்கிஸ்கான் விருப்பதிற்கு ஏற்ப தங்க ராஜாளி சிலை வடிவமைக்கப்பட்டது. அதன் ஒரு சிறகில் ஒரு நண்பன் உனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தாலும் கூட, அவன் தொடர்ந்து உனது நண்பனாகவே இருக்கிறான் என்று பொறிக்கப்பட்டது.
மற்றொரு சிறகில், கோபம், ஆத்திரத்தோடு செய்கிற செயல் அழிவையே தரும் என்றும் பொறிக்கப்பட்டது.
நம்மில் பலருக்கு கோபம். ஆத்திரத்தில் அறிவும் வேலை செய்வதில்லை. ஆத்திரம் பெரும்பாலும் அழிவைத் தருகிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டம் என்று சொல்வார்கள். எதிலும் ஆத்திரமோ, அவசரமோ இல்லாமல் அறிவாக செயல்பட்டால் எதிலும் வெற்றி தான்.
அதேநேரம் அழிவிற்கு காரணம் கோபமும், ஆத்திரப்படுதலே ஆகும், கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டியவரின் சூழ்நிலையை சிந்தியுங்கள். கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்.
உடனே உங்கள் மனதை வேறு செயல்களில் திருப்புங்கள். அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள், நேரம் மேம்பாடு மற்றும் தன்னடக்கத்தை கடைப்பிடியுங்கள்.
செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள் கோபம், ஆத்திரம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்.
நீண்ட நாள் ஆனந்தமாக வாழ வேண்டுமானால் உறுதியாக நாம் கோபத்தைக் குறைத்தாக வேண்டும். ஆத்திரம் , கோபம் தவிர்த்து அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திட வேண்டும்.















