ஒரு மனிதன்....
எந்தக் குறையும் இல்லை அவனுக்கு...
ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.
படுத்தால் தூக்கம் வரவில்லை...
சிரமப்பட்டான்...
அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்.
"பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு...
அங்கே ஒரு பெரியவர் இருக்கார்...
போய்ப் பாருங்கள்!"
ஆசிரமத்துக்குப் போனான்...
பெரியவரைப் பார்த்தான்.
"ஐயா...
மனசுலே நிம்மதி இல்லே...
படுத்தா தூங்க முடியலே!"
அவர் நிமிர்ந்து பார்த்தார்...
"தம்பி...
உன் நிலைமை எனக்குப் புரியுது...
இப்படி வந்து உட்கார்!"
பிறகு அவர் சொன்னார்:
"உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது...
தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!"
என்றார்..
"அது எப்படிங்க?"
"சொல்றேன்...
அது மட்டுமல்ல...
மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்"! என்றார்.
"ஐயா நீங்க சொல்றது எனக்கு புரியலே!"
"புரியவைக்கிறேன்...
அதற்கு முன் ஆசரமத்தில்
விருந்து சாப்பிடு".
வயிறு நிறையச் சாப்பிட்டான்.
பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி,
"இதில் படுத்துக்கொள்" என்றார்.
படுத்துக் கொண்டான்...
பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...
கதை இதுதான்:
"ரயில் புறப்படப் போகிறது...
அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை...
ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.
ரயில் புறப்பட்டது...
தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை...
எதிரே இருந்தவர் கேட்கிறார்:
"ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே?
இறக்கி வையேன்".
அவன் சொல்கிறான்:
"வேணாங்க!
ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்!
என் சுமையை நான் சுமந்துக்குவேன்!''
பெரியவர் கதையை முடித்தார்.
படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.
"ஏன் சிரிக்கிறே?"
"பைத்தியக்காரனா இருக்கானே...
ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?
அது அவனுக்கு தெரிய வில்லையே...
யார் அவன்?" என இயல்பாக கேட்டான்
"நீதான்!"
"என்ன சொல்றீங்க?"
பெரியவர் சொன்னார்:
"வாழ்க்கை என்பதும் ஒரு ரயில்
பயணம் மாதிரிதான்...
பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள்
நிம்மதியாக வாழமுடியாது.
தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்!" என்றார்.
அவனுக்கு தனது குறை மெல்ல
புரிய ஆரம்பித்தது...
சுகமாக தூக்கம் வந்தது.
தூங்க ஆரம்பித்து விட்டான்...
கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.
"எழுந்திரு" என்றார்.
எழுந்தான்!
"அந்த தலையணையைத் தூக்கு!" என்றார்.
தூக்கினான்...
அடுத்த கணம்"ஆ"வென்று
அலறினான்.
தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது
ஐயா! என்ன இது?
"உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு...
அப்படி இருந்தும்
நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்...!"
"அது ...
அது எனக்குத் தெரியாது"...
"பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது...
அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்!"
அவன் புறப்பட்டான்,,
"நன்றி பெரியவரே...
நான் போய் வருகிறேன்!"
"நிம்மதி எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாயா?"
"புரிந்து கொண்டேன்!
என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது.
அறிவின் வெளிச்சத்தால் அதைக் தேடிக் கண்டு பிடித்து விட்டேன் ஐயா."
* சருமத்திற்கு நல்லது: கிடாரங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
* செரிமானத்திற்கு உதவும்: கிடாரங்காய் செரிமான பிரச்சனைகளுக்கு நல்லது என்று நம்பப்படுகிறது.
* வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது: இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் வாய் புண்களை குணப்படுத்தவும், பற்களை வலுப்படுத்தவும் உதவும்.
* சில ஆய்வுகள் இது புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன.
* இது உடல் எடையை குறைக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
*உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம். நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது.
இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு
. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.
இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்.
நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும்.
பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும்.
இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை.
ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.*
*நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர்,மலர்,கனிகள் பயன்கொண்டவை*
*செயல்திறன் மிக்க *வேதிப்பொருட்கள்:*
*கனிகளில்* *அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள்* *உள்ளன.
அஸ்கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம்,* *இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல்,லிமோனின்,* *நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம்*
*மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப்* *புழுக்களுக்கும் எதிரானது.
மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல்* *நோய்களுக்கு மருந்தாகிறது.
கனியின் தோலுறை* *வயிற்றுப் போக்கை நிறுத்தும்.
வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.*
*நாரத்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும்.
வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.*
*கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும்.
பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும்.
காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும்.
நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.*
*உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.*
*பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.*
*நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.
இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன.
இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.
நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.*
*கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்*
*சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும்.
எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்*
*நாரத்தங்காய் இலைகைளை நரம்பு நீக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, அதனுடன் வெள்ளை உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து சேர்த்து மிளகாய், உப்பு, புளி, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
இப்படி சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நா சுவையின்மை, குமட்டல், வாந்தி நிற்கும்.
பசியின்மை குறைந்து நன்கு பசிக்கும்.
பொதுவாக உணவுடன் நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்துக் கொண்டால் செரியாமை பிரச்சினை வரவே வராது.
சாப்பிட்டதும் ஏப்பம் வந்து கொண்டிருந்தாலும், ஜீரணமாக நெடுநேரம் ஆனாலும் நார்த்தங்காய் ஊறுகாயை சாப்பிட்டால் உடனடி பலன் கிட்டும்.
வயிற்றில் வாயுப் பிரச்சினை ஏற்படும் நிலையில் ஒரு ஊறுகாய் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் வாயுக் கோளாறு விரைவில் நீங்கும்.*
*வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.
நாரத்தங்காயை வட்ட வட்டமாய் நறுக்கி உப்பு சேர்த்து ஒரு மண் பானையில் இட்டு வாயை துணியால் மூடி விடவும்.
இதனை அவ்வப்போது வெயிலில் உலர்த்தி வரவும். இப்படி 40 நாட்கள் செய்து பிறகு அதில் இருந்து தினமும் ஒரு துண்டை எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வர வயிற்றுப் புண் குணமாகும்.
நாரத்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும்.
வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும்.
பசியை அதிகரிக்கும்.
நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.
நாரத்தை பழத்தை சாறு பிழிந்து குடித்து வர உடல் வெப்பத்தை போக்கி குளிர்ச்சி தரும். வாந்தியையும், தாகத்தையும் தணிக்கும்*
- திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் 108 வைணவத் திவ்ய தேசங்களில் 58-வது திருத்தலமாகும்.
- திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையில் இருந்து சுமார் 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இக்கோவில், பல்லவ மன்னர்களால் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
- இங்கு பெருமாள் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- கோவிலின் சிறப்பம்சங்கள்:
- மூலவர்: பக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்).
- தாயார்: என்னை பெற்ற தாயார். (பாற்கடலில் பிறந்த திருமகள், தந்தையான சமுத்திர ராஜனுடன் கோபித்து இங்கு வந்து நின்றதால், தாயார் 'என்னை பெற்ற தாயார்' என்று அழைக்கப்படுகிறார்).
- சமுத்திர ராஜன் மீண்டு சென்று பெருமாளிடம் உதவி வேண்ட, அவரும் பக்தனுக்காக இங்கு வந்து திருமகளிடம் சமாதானம் கூறி வைகுந்தம் வர சம்மதிக்க வைத்த திருத்தலம்...
- தீர்த்தம்: வருண புஷ்கரணி.
- தலவிருட்சம்: பாரிஜாத மரம்
- நடை திறக்கும் நேரம்:
- காலை: 7:30 மணி முதல் 11:30 மணி வரை
- மாலை: 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
- போக்குவரத்து
- சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை நிலையங்களில் இருந்து புறநகர் ரயில்கள் மூலம் 'திருநின்றவூர்' ரயில் நிலையத்தை அடையலாம்.
- அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் கோவிலை மிக எளிதாக அடைய முடியும்.
கணவன் - என் மனைவி பல்லை பிடுங்குவதற்கு எவ்வளவு ஆகும் !!!!!!!!!!
பல் மருத்துவர் - அதுவா ஒரு பல் பிடுங்குவதற்கு ஆயிரம் ரூபாய் ஆகும் !!!!!!!!!!
கணவன் - பத்தாயிரம் கூட வாங்கி கொள்ளுங்கள் !!!!!!!!! தயவு செஞ்சு அந்த நாக்கையும் பிடிங்கி விடுங்கள் !!!!!!!
அதிகமா நாக்கு மேலே பல்ல போட்டு பேசுறாங்க !
- கல்கோனா எனப்படும் கமர்கட் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பாரம்பரிய தேங்காய் மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்படும் ஒரு கடினமான மிட்டாய்.
- 70, 80 மற்றும் 90-களில் பிறந்தவர்களின் சிறுவயது நினைவுகளைத் தூண்டும், சத்தான மற்றும் சுவையான தின்பண்டம் இது.
- துருவிய தேங்காய், வெல்லம், ஏலக்காய் மற்றும் நெய் ஆகியவை இதன் முக்கிய பொருட்கள்.
- இது வெல்லத்தின் கார்மல் சுவையுடன், தேங்காயின் நறுமணத்தில் சுவையாக இருக்கும்.
- சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிட்டாய்களுக்குப் பதிலாக, குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மாற்றாக இது கருதப்படுகிறது.
- இது கல்கோனா என்றும் அழைக்கப்படுகிறது
- இது தமிழ்நாட்டில் உள்ள உள்ளூர் மிட்டாய்க் கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். உங்களுக்கு ஏற்ப செயல்பட்டு காரியத்தை சாதிப்பீர்கள். பணி மாற்ற சிந்தனைகள் ஏற்படும். புதுமையான விஷயங்களை ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
ரிஷபம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்பாடுகள் சாதகமாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தன வரவுகள் மேம்படும். செயல்பாடுகளில் ஆளுமை திறன் மேம்படும். பழைய வாகனங்களை சீர் செய்வீர்கள். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். வியாபார ரீதியான கொள்முதலில் சிந்தித்து செயல்படவும். கனிவான பேச்சுக்களால் நன்மதிப்பு உருவாகும். அலுவலகப் பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். காலம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
சிம்மம்
ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வெளியூர் சார்ந்த பயணங்கள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். எண்ணிய சில பணிகளில் மாற்றம் நேரிடும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கன்னி
வியாபாரத்தில் உழைப்பிற்காக லாபம் உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உபரி வருமானம் குறித்த எண்ணங்கள் மேம்படும். பிற மொழி மக்களின் அறிமுகம் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. தம்பதிகளுக்கு இடையே அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். சேமிப்பு சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்த கவலைகள் குறையும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய செய்திகள் முலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சமுக பணிகளில் மதிப்புகள் மேம்படும். ஆரோக்கிய சிக்கல்கள் குறையும். கலைப் பொருள்களின் சேர்க்கை ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
பொருளாதாரம் வழியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். எண்ணங்களில் தெளிவுகள் பிறக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கால்நடை வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
தனுசு
திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பழைய நண்பர்களிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனதில் இனம் புரியாத தேடல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் தாமதம் ஏற்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
கணவன் மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். எதிர்பாரத சில உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்களை சென்று வருவீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல்கள் அமையும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை 23.5.2026
இன்று காலை 11.07 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று காலை 07.50 வரை ஆயில்யம். பின்னர் மகம்.
இன்று காலை 11.14 வரை துருவம். பின்னர் வியாகாதம்.
இன்று காலை 11.07 வரை வணிசை. பின்னர் இரவு 10.31வரை பத்திரை. பிறகு பவம்.
இன்று காலை 07.50 வரை மரணயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
"இங்கேயே வெயிட் பண்ணு. இதோ பத்து நிமிஷத்தில் வந்துடறேன்" என்று தன் நகைகளை வாங்கிக்கொண்டு,
விற்றுப் பணமாக மாற்றி வருவதாகச் சொல்லிச் சென்ற பிரகாஷை இன்னும் காணோமே என்று தவித்துக்கொண்டு இருந்தாள் கீதா.
இருவரும் சேர்ந்து அன்று ரயிலில் ஓடிப் போவதாகத் திட்டம். அவர்கள் செல்ல வேண்டிய ரயில் கிளம்புவதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன.
பதற்றத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தாள் கீதா. காதலனைத் தேடிய அவளது விழிகள் யதேச்சையாக அருகில் இருந்த அறிவிப்பு பலகையைப் பார்க்க, அதில் கை கழுவும் இடம்' என்று எழுதப்பட்டு இருந்தது!
-- ஞானாம்பாள்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். வேற்றுமதத்தினரால் உதவியுண்டு. அலுவலகத்தில்யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். பங்குதாரர் ஆதரிப்பார்.
ரிஷபம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர். வியாபாரம் திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர். மனைவி, தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர், நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். பிள்ளைகளால் பெருமையுண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளிடம் முன்கோபத்தைக் காட்ட வேண்டாம். காரியத்தடை வரலாம். அலுவலகத்தில் அடுத்தவரை பற்றி தலைமையிடத்தில் புகார் கூறாதீர். வியாபாரத்தில் அமைதி காக்கவும். பணியாட்கள் தொல்லை தருவர்.
சிம்மம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் எதிராக செயல்பட்ட பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.
கன்னி: கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான மாற்றுவழியை கண்டறிவீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முகப்பொலிவு கூடும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர். ஓரளவு லாபம் உண்டு.
விருச்சிகம்: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல் சோர்வு, வயிற்றுவலி சீராகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். பணியாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். உடன் பிறந்தவர்கள் வீட்டு விசேஷத்தில் முதல் மரியாதை கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த சில முக்கிய நபர்களை சந்திப்பீர். அலுவலக பிரச்சினைகள் ஓயும்.
மகரம்: பூர்வீக சொத்து வழக்கு இழுபறியாகும் நிலை வர வாய்ப்பு உண்டு. பணத்தை கவனமாக கையாளவும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போகவும். அலுவலக ரீதியாக பயணம் செல்ல நேரிடும். வியாபாரம் சிறக்கும். போட்டியை சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்வீர்.
கும்பம்: வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். புதிய பதவி கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மீனம்: வீட்டில் புது வகை எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் பண உதவி கிட்டும். வாகனப்பழுது நீங்கும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்புண்டு. அலுவலகத்தில் அடுத்த வரை பற்றி தலைமையிடத்தில் புகார் கூறுவதை தவிர்க்கவும்.
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 22.5.2026
திதி
சுக்ல பக்ஷ சஷ்டி - May 21 08:26 AM – May 22 06:24 AM
சுக்ல பக்ஷ சப்தமி - May 22 06:24 AM – May 23 05:04 AM
சுக்ல பக்ஷ அஷ்டமி - May 23 05:04 AM – May 24 04:27 AM
நட்சத்திரம்
ஆயில்யம் - May 22 02:49 AM – May 23 02:08 AM
மகம் - May 23 02:08 AM – May 24 02:09 AM
கரணம்
சைதுளை - May 21 07:21 PM – May 22 06:25 AM
கரசை - May 22 06:25 AM – May 22 05:39 PM
வனசை - May 22 05:39 PM – May 23 05:04 AM
பத்திரை - May 23 05:04 AM – May 23 04:40 PM
யோகம்
வ்ருத்தி - May 21 10:58 AM – May 22 08:18 AM
துருவம் - May 22 08:18 AM – May 23 06:13 AM
நல்ல நேரம்:
அபிஜித் காலம் - 11:51 AM – 12:41 PM
அமிர்த காலம் - 12:33 AM – 02:06 AM
பிரம்மா முகூர்த்தம் - 04:28 AM – 05:16 AM
ஜூன் 26-ம் தேதி ’கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கான் சிட்டி’. இப்படத்தின் அறிமுக வீடியோ மற்றும் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் ஜூன் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.
மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் ஒளிப்பதிவாளராக அரவிந்த் விஸ்வநாதன், எடிட்டராக அருள் மோசஸ், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
கனடாவின் ஹமில்டனில் உள்ள 'வைட் சேப்பல் மெமோரியல் கார்டன்' மயானத்தில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறயைினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 17ஆம் திகதிக்கும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மயானத்திற்குச் சென்ற உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளில் வைக்கப்பட்டிருந்த மலர்ச்சாடிப் பாத்திரங்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சுமார் 40 மலர்ச்சாடிப் பாத்திரங்கள் வரை அங்கு திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
ஹமில்டன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, கடந்த மே 13ஆம் திகதி ஹமில்டனைச் சேர்ந்த ஜேசன் மெக்கின்டோஷ் என்ற நபரைக் கைது செய்தனர்.
5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்தமை, 5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள திருடப்பட்ட சொத்துக்களை சட்டவிரோதமாக வியாபாரம் செய்தமை , குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தை கைவசம் வைத்திருந்தமை, தடை விதிக்கப்பட்டிருந்த பின்னரும் வாகனத்தை இயக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து திருடப்பட்ட பல மலர்ச்சாடிப் பாத்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை விரைவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என ஹமில்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.















