கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் பகுதியில் பல மாதங்களாக நடைபெற்ற தீவிர போதைப்பொருள் கடத்தல் தடுப்பு விசாரணையை அடுத்து, லண்டன் நகரைச் சேர்ந்த 3 பேரை ஒண்டாரியோ மாகாண காவல்துறை கைது செய்துள்ளது.
'புராஜெக்ட் பிரேக்' எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் முடிவுகளை, வால்போல் ஐலண்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையினர் முறைப்படி அறிவித்தனர்.
பல்வேறு தென்மேற்கு ஒன்ராறியோ சமூகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில், சுமார் 1.2 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஃபெண்டானில், கொக்கைன், மெத்தாம்பெட்டமைன் ஆகிய ஆபத்தான போதைப்பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 5 திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் சுமார் 20,000 கனடிய டாலர் ரொக்கம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 2026 ஏப்ரல் மாதம் வால்போல் ஐலண்டில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது.
லேம்ப்டன் மற்றும் சாதம்-கென்ட் பகுதிகளில் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த குழுவைக் குறிவைத்து ஜூலை 17 அன்று சோதனைகள் நடத்தப்பட்டு 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த போதைப்பொருட்கள் கனடாவிற்குள்ளேயே விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சமூகத்தின் பாதுகாப்பைப் பேணவும், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் தலைவர் லீலா தாமஸ் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகையான அன்னா ராஜன், சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது இவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பாவாடை ஜாக்கெட்டுடன் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள நடிகையான அன்னா ராஜன், நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
அப்போதும் சர்ச்சைக்குரிய நடிகையாக இருக்கும் இவர், சில தினங்களுக்கு முன்பு, தன்னுடைய புகைப்படங்களை சிலர் தவறான நோக்கத்தில் மார்ஃபிங் செய்து, நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இணையத்தில் பரப்பியதாக அன்னா ராஜன் வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்தச் செயல் எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தவறான நோக்கில் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பரப்புபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, கேரளக் காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளைத் டேக் செய்து புகாரளித்திருந்தார்.
மார்ஃபிங் சர்ச்சை ஓய்வதற்குள், கேரளாவில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் அன்னா ராஜன் கலந்துகொண்டபோது அவர் அணிந்து வந்த உடை புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பச்சை பாவாடை ஜாக்கெட் மட்டுமே அணிந்து அந்த விழாவிற்கு வந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ஒரு பொது நிகழ்ச்சிக்கு இப்படிப்பட்ட ஆடையை அணிந்து வருவது முறையா? எனப் பலரும் முகம் சுளிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதேவேளையில், அன்னா ராஜனுக்கு ஆதரவாக, ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை மற்றும் விருப்பம். அதைப் பற்றித் தேவையில்லாமல் விமர்சிப்பதும், தேவையில்லாத விவாதங்களை உருவாக்குவதும் முற்றிலும் தவறானது. என்று அன்னா ராஜனின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சிலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். பொது நிகழ்ச்சிக்கு நடிகை அன்னா ராஜன் அணிந்து வந்த ஆடை விவகாரத்தாலும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவிலான டிரெண்டாகி வருகிறது.
பாலிவுட் நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், தன்னைச் சுற்றி எழும் விமர்சனங்களுக்கு அதிரடியாக பதிலளிப்பதில் பெயர் பெற்றவர். அரசியல், சினிமா என எந்த விவகாரமாக இருந்தாலும் தனது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்து வரும் கங்கனா, இந்த முறை யோகா குரு பாபா ராம்தேவை கடுமையாக விமர்சித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப் போர் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது சில மாணவர்கள் பயன்படுத்திய அவதூறான வார்த்தைகள் குறித்து கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, அந்த மாணவர்களை "சாக்கடைத் தலைமுறை" என்று அவர் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பாபா ராம்தேவ் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கங்கனாவின் தகுதி, குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து பாபா ராம்தேவின் கருத்து கங்கனாவின் கவனத்திற்கு சென்ற நிலையில், அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமாக பதிலளித்துள்ளார்.
என் இளமை, படுக்கையறை பற்றி கனவு காணாதீங்க: கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாபா ராம்தேவை குறிப்பிட்டு, "பாபாஜி, எனது இளமைப் பருவம் அல்லது படுக்கையறை குறித்து கனவு காணாதீர்கள். வெறும் வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களை வைத்து மட்டுமே ஒருவரால் இப்படி யூகிக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தொடர்பாக எழுந்த சர்ச்சையையும் சுட்டிக்காட்டிய கங்கனா, தனக்கு ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்க வேண்டாம் என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
"போலி மருத்துவ உரிமைகோரல்களுக்காக உச்ச நீதிமன்றத்தால் நான் ஒருபோதும் கண்டிக்கப்படவில்லை. இது உறுதியான ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையிலானது, வதந்திகளின் அடிப்படையில் அல்ல. எனவே எனக்கு ஒழுக்கத்தைப் பற்றி பாடம் நடத்த வேண்டாம். உங்களை விட எனது குணம் எவ்வளவோ மேலானது. இங்கு எந்த ஏமாற்று வேலையும் இல்லை" என்றும் கங்கனா தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனியார் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கங்கனாவின் "சாக்கடைத் தலைமுறை" என்ற கருத்து குறித்து பாபா ராம்தேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அவருடைய தகுதி என்ன? அவரது குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் எப்படி இருந்தது? அவரது முந்தைய செயல்கள் எப்படி இருந்தன? இதுபோன்ற நபர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை" என்று கூறியிருந்தார்.
நாட்டின் இளைஞர்களையும் ஜென்-இசட் தலைமுறையினரையும் சாக்கடை என்று அழைப்பது தவறானது என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். "நாட்டின் இளைஞர்களையும், ஜென்-இசட் சமூகத்தினரையும் சாக்கடை என்று சொல்வது சீரழிந்த மனநிலையின் அடையாளம். இது தவறான விஷயம். கங்கனாவின் இந்த அறிக்கை குறித்து அவரது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.
நடிகை ரெஜினா தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்தவர். இப்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. கடைசியாக தமிழில் அவர் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதேசமயம் ரெஜினாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் அவரது சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் ஆண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் பிறந்தவர் ரெஜினா. நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்த அவர் கண்ட நாள் முதல் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, கன்னடத்தில் வெளியான சூரியகாந்தி, தெலுங்கில் வெளியான சிவா மனசுலோ ஸ்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
அந்த படத்தின் மூலம் அடையாளம் கிடைத்ததை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படிதான் அமைந்தது. அதன்படி அவர் ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, தலைவியில் கெஸ்ட் ரோல் என பல படங்களில் நடித்தார். ஆனால் அவற்றில் ராஜதந்திரம், மாநகரம் தவிர்த்து மற்ற படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை.
தொடர்ந்து கருங்காப்பியம், கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு; பம்பர் பரிசாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அர்ஜுனுக்கு ஜோடியாக வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருந்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அது கொஞ்சம் அவருக்கு ஏமாற்றம்தான். அதேசமயம் அவரது லுக்குக்கும், நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது மட்டும் கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.
அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் கேசரி பார்ட் 2, ஜாத் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவையும் பெரியளவு அவருக்கு கைகொடுக்கவில்லை. கடைசியாக தமிழ், மலையாளத்தில் வெளியான ஆனந்தன் காடு படத்தில் நடித்தார். அடுத்ததாக தமிழில் பிளாஷ்பேக், மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படங்கள் வரவிருக்கின்றன.
இந்நிலையில் ரெஜினாவின் பேட்டி ஒன்று ஆண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரெஜினா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "நான் சொல்லபோவது ஏ விஷயம்தான். மேகியும், ஆண்களும் ஒன்றுதான். இரண்டுமே இரண்டு நிமிடங்கள் மட்டும்தான்" என்று டபுள் மீனிங்கில் பேசினார். இதைப் பார்த்த நெட்டிசன்களோ ...... ரெஜினா என்ன இப்படி சொல்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறர்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வரலாம். வியாபாரத்தில் குழப்பங்களை தீர்க்க வழி கிட்டும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் அலைச்சல் உண்டு.
ரிஷபம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். முன்கோபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.
மிதுனம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கையில் பணம் புரளும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். அலுவலகரீதியாக இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். லாபமுண்டு.
கடகம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும்.
சிம்மம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் விவாதங்களைத் தவித்துவிடவும்.
கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
துலாம்: முன்கோபம் விலகும். தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களுடன் விவாதங்கள் வேண்டாம். பயணங்கள் அலைச்சல் தரும். திட்டமிட்ட பணிகளை முடிக்க போராடுவீர். வியாபாரத்தில் முடிவு எடுப்பதில் அவசரம் கூடாது. அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
தனுசு: பணவரவு உண்டு. பெற்றோரின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மகரம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். முன்கோபத்தை குறைப்பீர். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பம் நீங்கும். அதிக லாபம் ஈட்டும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: பூர்வீக வீடு, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்பீர். நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து முக்கிய முடிவு எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை 20.8.2026.
இன்று இரவு 11.49 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று பிற்பகல் 12.26 வரை விசாகம். பின்னர் அனுஷம்.
இன்று காலை 07.35 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.
இன்று காலை 10.00 வரை பத்திரை. பின்னர் இரவு 11.49 வரை வணிசை. பிறகு பாலவம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
பொதுவாக பிடிவாத குணமுடைய பெண் மனைவியாக அமைந்தால் வாழ்க்கை மிகவும் மோசமாக ஆகிவிடும் என்று சில ஆண்கள் கருதுகிறார்கள்.
கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். அது போல பிடிவாத குணம் உடைய பெண்களிடம் தான் சிறந்த மனைவியாக திகழும் தன்மை இருக்கிறது. அவர்கள் பிடிவாதம் பொருட்களை வாங்குவதில் மட்டும் இருக்காது, வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கும்.
இல்லத்தரசிக்கு தேவையான அனைத்து குணாதிசயங்களும் பிடிவாத பெண்களிடம் இருக்கும்.
தனக்கு என்ன வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் பெண்கள், வேண்டாதவை மீது ஆசைப்படமாட்டார்கள். அதே போன்று வேண்டுவதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
ஒரு விஷயத்தின் மீது வைக்கும் அவர்கள் காதல் மிகவும் அழகாகவும், நேர்மையாகவும் இருக்கும்.
பிடிவாத குணமுடைய பெண்கள் அழுதாலும், கோபப்பட்டாலும், அன்பு காட்டினாலும் முழு மனதுடன் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்கள்.
நீங்களே சோர்வுற்று நின்றாலும், உங்களை பிடிவாதமாக அச்செயலில் ஈடுபட்டு உங்களை வெற்றி பெற வைப்பார்கள்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதை முகத்திற்கு நேராக பேசிவிடுவார்கள், இதன் காரணமாக சண்டை எழலாம், ஆனால் அது சுமூகமாக முடிந்துவிடும். தொடர்ந்து கொண்டே இருக்காது.
சுவாரஸ்யமானவர்கள் பிடிவாத குணம் இருப்பினும் கூட, சின்னச்சின்ன சண்டைகள், சச்சரவுகள், கடுமையான நேரத்தில் கவலைகள் மறக்க செய்யும். இவர்களது லூட்டிகள் சற்றே சுவாரஸ்யமானதாகவே இருக்கும்.
பிடிவாதம் இருக்கும் அதே அளவிற்கு இவர்களிடம் அனுதாபமும் இருக்கும். சூழ்நிலை புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்பை அதிகரித்து கொள்வார்கள்.
பிடிவாத குணமுடையவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அதன் காரணமாக உங்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் நடந்து கொள்வார்கள்.
இவர்களது பேரார்வம் வேலை, மற்றும் இல்வாழ்க்கை விஷயங்களிலும் கூட தொடரும். இதனால், எந்த திட்டத்தை நிறைவேற்றுவதில், வீடு, பொருட்கள் , சேமிப்பு போன்றவற்றிலும் கூட இவர்கள் சீராக நடந்து கொள்வார்கள்.....
🌹மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.
🌹அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.
🌹இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.
🌹அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.
🌹ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....
🌹குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்
முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்..
🌹கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்.
அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘இருளன்’ படத்தை இயக்கி வருகிறார் முத்தையா. இதில் வித்தியாசமான 2 தோற்றங்களில் நடிக்கிறார் அருண் விஜய். மிர்ணா நாயகியாக நடிக்கும் இதில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கென் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் நடைபெற்று வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது ஆக் ஷன் காட்சியில் பங்கேற்றபோது நடிகர் அருண் விஜய் காயமடைந்தார். அவருடைய தொடை பகுதியில் தசை கிழிந்ததை அடுத்து அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். இதனால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம், ‘கன்னடத்து பைங்கிளி’.
இதில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா, சிங்கம் புலி, புகழ், ஆதவன், ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை சிங்கம் புலி, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களை இயக்கிய சாய் ரமணி இயக்கியுள்ளார். இதில் கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். எம்.பி.எம். என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரித்துள்ளார். எஸ்.ஆர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் பற்றி பேசிய இயக்குநர் சாய்ரமணி, ‘‘பாக்யராஜின் திடீர் மறைவு எங்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளன்று பாக்யராஜ் மற்றும் டி.ராஜேந்தரை வைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அன்றைய தினம் பாக்யராஜுக்கான அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. 80 மற்றும் 90-களில் பிரபலமாக இருந்த இருவரும் இணைந்து பணியாற்றிய முதல் படம் இது.
‘கன்னடத்து பைங்கிளி’ படத்தில் தனது பகுதிகள் அனைத்தையும் பாக்யராஜ் சிறப்பாக முடித்துக் கொடுத்தார். சில க்ளோஸ்-அப் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி இருந்தது. அதை ஏ.ஐ.மூலம் உருவாக்க உள்ளோம். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமாவும் இணைந்து நடித்த படமும் இதுதான். கணவன்-மனைவியாகவே நடித்துள்ளனர்” என்றார்.
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் காஜல் அகர்வால். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்த அவர் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திவரும் காஜல் கடைசியாக; இந்தியன் 2, சிக்கந்தர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மும்பையை சேர்ந்த காஜல் அகர்வால் தமிழில் நடித்த முதல் இரண்டு படங்களான பழனி, பொம்மலாட்டம் ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. அதுவும் பொம்மலாட்டம் படத்தின் இயக்குநர் பாரதிராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலிரண்டு படங்கள் சரியாக போகாவிட்டாலும் அவருக்கு வாய்ப்புகள் வர தொடங்கின. தொடர்ந்து, தெலுங்கில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்ததும் ராஜமௌலி இயக்கத்தில் மஹதீரா படத்தில் நடித்தார்.
ராம்சரண் ஹீரோவாக நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் அந்தப் படம் மாவீரன் என்ற பெயரில் வெளியாகி ஹிட்டாக காஜலை முழுமையாக உபயோகப்படுத்த ஆரம்பித்தது கோலிவுட்.கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகமான டோலிவுட்டும் காஜலுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது.
தமிழில் சின்ன சின்ன ஹீரோக்களுடன் நடித்துவந்த அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் ஹீரோயினாக கமிட்டானார். அதில் அவரது நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்துவிட சூர்யா, அஜித்,கார்த்தி உள்ளிட்டோருடன் நடிக்க ஆரம்பித்தார். இவற்றில் அஜித்துடன் நடித்த விவேகம் படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி க்ளைமேக்ஸ் காட்சியில் அவரது நடிப்பை வைத்து சிலர் ட்ரோலும் செய்தனர்.
இந்தச் சூழலில் அவர் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளார். அவருடன் நேரம் செலவழித்துவந்த காஜல் அக்ரவால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து கடைசியாக இந்தியன் 2, சிக்கந்தர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக ராமாயணா படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அந்தப் பேட்டியில், "சினிமா துறையில் பெண்களை பலர் நடத்தும் விதத்தில் எனக்கு அதிருப்தி இருக்கிறது. நடிகர்களை காட்டிலும் நடிகைகள்தான் அதிக சவாலை எதிர்கொள்கிறார்கள். அதாவது, நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டாலே அவர்களை எல்லோரும் ஒதுக்க தொடங்கிவிடுகிறார்கள்.நடிகைகளின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தாலும் அதுதான் நடக்கிறது. ஆனால் திறமையை எப்போதும் அணை போட்டு தடுக்க முடியாது. திறமை உள்ளவர்கள் எந்த வயதில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்பதை இங்கே பலரால் புரிந்துகொள்ளப்படவே இல்லை" என்றார்.
கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அந்நாட்டின் பல்வேறு வகையான பொருட்கள் மீதான புதிய வரிகளை விதிப்பதை மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
கனடாவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன (ஆவணங்கள் இறுதி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
இதன் அடிப்படையில், நாளை (புதன்) காலை முதல் அமுலுக்கு வரவிருந்த கனடா மீதான 50% வரிகளை நிறுத்தி வைத்துள்ளேன் என்று டிரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.
சுமார் 20 பில்லியன் டொலர் (28 பில்லியன் கனேடிய டொலர்) மதிப்பிலான கனடிய இறக்குமதிப் பொருட்கள் மீது 50% வரி விதிப்பு நடைமுறைக்கு வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரமே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.
வாகனங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் மற்றும் பல கனேடிய மாகாணங்களில் அமெரிக்க மதுபான விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே முட்டுக்கட்டை நீடிக்கிறது.
ஆகஸ்ட் 19-ஆம் திகதியை காலக்கெடுவாகக் குறிப்பிட்டு புதிய வரி விதிப்பு குறித்து டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, ஜூலை மாதம் முதல் வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான எடைக் குறைப்பு மருந்து கருப்பு சந்தையில் விற்கப்படுவது குறித்து முன்னணி மருந்து உற்பத்தியாளரான 'லில்லி கனடா' கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நிறுவனம் சோதனைக் கட்டத்தில் வைத்துள்ள 'ரெடாட்ரூடைட்' என்ற மருந்து, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெடாட்ரூடைட் மருந்து, ஹெல்த் கனடா அமைப்பாலோ அல்லது உலகளவில் வேறு எந்த ஒழுங்குமுறை ஆணையத்தாலோ மனித பயன்பாட்டிற்காக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
எனவே, இதை கனடாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ சட்டப்பூர்வமாக விற்க முடியாது. எனினும், சர்வதேச அளவில் இதற்கான கருப்புச் சந்தை இயங்கி வருகிறது என லில்லி கனடா தெரிவித்துள்ளது.
அமெரிக்க மருந்து நிறுவனமான எலி லில்லி தயாரிக்கும் இந்த மருந்து, உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ள இம்மருந்து, உடல் எடையைக் குறைப்பதில் ஒரு "புரட்சிகரமான முன்னேற்றத்தை" வெளிப்படுத்தியுள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
80 வாரங்கள் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில், டைப் 2 நீரிழிவு மற்றும் அதிக உடல் எடை கொண்ட நபர்கள் சராசரியாக 22.5 கிலோ (49.6 பவுண்ட்) வரை எடையைக் குறைத்துள்ளனர்.
மற்றொரு ஆய்வில், தீவிர உடல் பருமன் கொண்ட பெரியவர்கள் சராசரியாக 25.3 கிலோ (55.8 பவுண்ட்) எடையை குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்... கஞ்சா கருப்பு.
சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு சென்னை வந்தவர்....
பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கென
தனி இடத்தை பிடித்தவர் ....
இன்று அவர் ''வேல்முருகன் போர்வெல்ஸ்" என்று ஒரு சொந்தப்படம் எடுத்து வெளியிட்டு விட்டார்..... சொந்தமாய் ஒரு போர்வெல் லாரியை வாங்கி படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார் ....
பின் தான் வாங்கிய அந்த போர்வெல் லாரியை பயன்படுத்தி தென் மாவட்ட
பகுதியில் மக்களுக்காக எந்தவித பைசாவும் வாங்காமல் இதுவரை 55 போர்வெல் குழாய் அமைத்து தந்து இருக்கிறார்...
இன்னமும் தந்து கொண்டு இருக்கிறார்....
ஒரு போர்வெல் போட குறைந்தது 50,000 முதல் 70,000 வரை ஆகுமாம். அந்த பகுதியில் எந்த மக்கள் (ஏழை ) வந்து கேட்டாலும் அவர்களுக்கு தம் சொந்த செலவில் போர்வெல்
போட்டு கொடுத்து கொண்டு இருக்கிறார்...
அது போக தன் பிறந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் திறந்து இலவச
கல்வி தந்து கொண்டு இருக்கிறார் அந்த படிக்காத மேதை ...
அவரின் பள்ளியை கவனித்து வருவது அவர் மனைவி சங்கீதா. இவர் ஒரு physiotherapist...
உண்மையில் இந்த செய்தி கேள்விப்பட்டு நான் மிக மகிழ்ச்சி அடைந்தேன்....
இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார் என்றால்.....
அவரின் மனிதம் எவ்வளவு உயர்ந்தது...
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மிதுனம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை விற்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரம் சிறக்கும்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள்.
சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரிப்பர்.
கன்னி: உடன் பிறந்தவர்களால் ஆதாயமுண்டு.முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல்பேச்சு கேட்பார்கள். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். பேச்சில் தெளிவு பிறக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
துலாம்: முன்கோபத்தை தவிர்க்கவும். மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்து போகவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகளை போராடி வசூலிப்பீர்.
விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர் உதவி கேட்டு வருவார். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் கருத்துகளை நிராகரிக்க வேண்டாம்.
தனுசு: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிம்மதி தரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரி பாராட்டுவார்.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவர். சொந்த ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.
மீனம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வங்கிக் கடனை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். தெளிவாக பேசி பணிகளை முடித்துக் காட்டுவீர்கள்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை 19.8.2026.
இன்று இரவு 10.15 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று காலை 10.24 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
இன்று காலை 07.29 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம்.
இன்று காலை 09.40 வரை கரசை. பின்னர் இரவு 10.15 வரை வணிசை. பிறகு பத்திரை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை





















