Quote of the Day

பழமொழிகள்:அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 50
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added article
·

அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். ’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இப்படத்தில் மம்தா மோகன்தாஸ் அருள்நிதிக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நடித்துள்ள ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை படப்பிடிப்புக்கு இடையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘மை டியர் சிஸ்டர்’ படத்தினை தயாரித்துள்ளனர். இதில் அருள்நிதிக்கு நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றிவேல், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக வெங்கட் ராஜன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். முழுக்க காமெடி எமோஷன் பாணியில் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

  • 23
·
Added article
·

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் அட்லி தயாரித்து வருகிறார்.

’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் இணையும் படம் இதுவாகும். இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பூரி ஜெகந்நாத் படத்தினை முடித்துவிட்டு,அ தற்போது பாலாஜி தரணீதரன் படத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

அட்லி தயாரித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் இருவருடன் வேறு யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 23
·
Added article
·

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் அட்லி தயாரித்து வருகிறார்.

’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் இணையும் படம் இதுவாகும். இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பூரி ஜெகந்நாத் படத்தினை முடித்துவிட்டு,அ தற்போது பாலாஜி தரணீதரன் படத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

அட்லி தயாரித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் இருவருடன் வேறு யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 23
·
Added article
·

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இதனை ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்து வருகிறார்.

60களில் மெட்ராஸ் மகாணத்தில் நடைபெற்ற மொழிப்போர் போராட்டம் குறித்த கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ஜி.வி.பிரகாஷ்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “பராசக்தி படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடலை பாடியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் 100 இன்னும் ஸ்பெஷலாகிவிட்டது” என தெரிவித்துள்ளார்.

  • 40
·
Added a news
·

கனடாவின் ஹால்டன் பிராந்திய காவல் துறை (Halton Regional Police Service) அவசரமற்ற தொலைபேசி அழைப்புகளை நிர்வகிக்க தானியங்கி செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

911 அவசர அழைப்புகள் தொடர்ந்தும் மனித முகவர்கள் (live agents) மூலம் மட்டுமே பராமரிக்கப்படும் எனவும், ஆனால் அவசரமற்ற அழைப்புகள் இனி “SARA (Smart Answering Routing Assistant)” எனப்படும் நுண்ணறிவு குரல் உதவியாளர் மூலம் நிர்வகிக்கப்படும் எனவும் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அழைப்பாளர்களிடம் சில குறுகிய கேள்விகள் கேட்டு, அவர்களின் கேள்வி அமைப்பால் தீர்க்கக்கூடியதா அல்லது நேரடி அதிகாரிக்கு மாற்ற வேண்டியதா என்பதை SARA தீர்மானிக்கும். இந்த உரையாடல் நேரடியாக பதிவு செய்யப்பட்டு உரை வடிவில் மாற்றப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவசரநிலை ஏற்படும் சூழ்நிலை, அழைப்பாளர் ஆங்கிலம் பேச முடியாதது, மொழிபெயர்ப்பு தேவைப்படுவது, அமைப்பு கேள்வியை புரிந்துகொள்ளாதது, அல்லது சந்தேகத்திற்கிடமான நடத்தை கண்டறியப்பட்டால் — உடனடியாக மனித முகவருக்கு (live agent) மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SARA அமைப்பின் செயல்திறனை நாங்கள் நம்புகிறோம். தற்போது ஆண்டுக்கு சுமார் 1,60,000 அவசரமற்ற அழைப்புகள் கிடைக்கின்றன. இந்த புதிய தொழில்நுட்பம் அவற்றை வேகமாக கையாள உதவும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 40
·
Added a news
·

கனடாவின் டொரோண்டோவில் ஒரு பெண்ணுக்கு மசாஜ் செய்த பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பதிவு செய்யப்படாத மசாஜ் நிபுணர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் டொரோண்டோ மற்றும் மார்கம் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

முதல் சம்பவம் ஆகஸ்ட் 12 அன்று ரோஸ்மவுண்ட் அவென்யூ மற்றும் வியா இட்டாலியா பகுதிகளுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் சந்தேக நபரின் வீட்டிற்கு மசாஜ் பெறச் சென்றிருந்தார். மசாஜ் முடிந்த பின், சந்தேக நபர் அவரை பாலியல் ரீதியாகத் தொட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன் சில வாரங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 1 அன்று, பாதிக்கப்பட்ட பெண் மார்கம் நகரின் வுட்பைன் அவென்யூ மற்றும் ஹைவே 407 அருகிலுள்ள நீச்சல் கழகத்தில் அந்த நபரை மீண்டும் சந்தித்தார்.

அப்போது சந்தேக நபர் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் ரீதியாகத் தொட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் செப்டம்பர் 6 அன்று பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர், “சாம்” என்ற பெயரில் சந்தேக நபரை அறிந்திருந்ததாக தெரிவித்தார்.

விசாரணையின் போது, அந்த நபர் பதிவு செய்யப்பட்ட மசாஜ் நிபுணர் (RMT) அல்ல என்பதும் தெரியவந்தது.

ஒண்டாரியோ மாகாணத்தில் பதிவு செய்யப்படாத நபர்கள் “மசாஜ் தெரபிஸ்ட்” என்று தங்களை அழைப்பதற்கும், தொழில்முறை மசாஜ் சேவைகள் வழங்குவதற்கும் அனுமதி இல்லை.

டொரோண்டோவைக் சேர்ந்த 49 வயதான குவோக் வின் ட்ரான் (Quoc Vinh Tran) என்பவருக்கு இரண்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவை நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் என்பதையும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதே நபரால் வேறும் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் து குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

  • 40
·
Added a news
·

டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்த புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில், செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் அருகே மெதுவாக ஊர்ந்து சென்ற கார், திடீரென வெடித்து சிதறிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் (10ஆம் தேதி) மாலை கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்த நிலையில், புதிய சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், செங்கோட்டை தெளிவாகத் தெரியும் நிலையில், கார் வெடித்து சிதறியது சிவப்பு பலூன் போன்று பதிவாகி உள்ளது.

திங்கட்கிழமை மாலை சரியாக 6.50 மணிக்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் கூடுதல் டிஜிபி விஜய் சாக்கரே தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி கார் குண்டு வெடிப்பில் இறந்த மகனை, கையில் பச்சை குத்தி இருந்ததை வைத்து, தந்தை அடையாளம் கண்டிருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாந்தினி சவுக் அருகே பாகிரத் என்ற இடத்தில் மருந்தகம் வைத்திருந்த 34 வயதான அமர் கட்டாரியா திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்கு கிளம்புவதாக தனது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். ஆனால், அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவரது தொலைபேசி எண்ணை குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போது, ஒரு பெண் எடுத்து பேசியதாகவும், குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை அவர் குறிப்பிட்டதாகவும் அமர் கட்டாரியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு, நிகழ்விடத்திற்கு சென்ற தந்தை, அமர் கட்டாரியாவின் கையில் பச்சை குத்தி இருந்ததை வைத்து உடலை அடையாளம் கண்டுள்ளார். தனது முதல் அன்பு அம்மாவிற்கு என்றும், அப்பா தான் தனது பலம் என்றும் கைகளில் பச்சை குத்தி இருந்த ஒரே மகனை இழந்து பெற்றோர் தவிக்கின்றனர்.

  • 45
·
Added a post
·

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை 12.11.2025

இன்று அதிகாலை 04.46 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி .

இன்று அதிகாலை 01.03 வரை பூசம் . பின்னர் ஆயில்யம்.

இன்று பிற்பகல் 02.24 வரை சுப்பிரம். பின்னர் பிராம்மியம்.

இன்று அதிகாலை 04.46 வரை பவம். பின்னர் மாலை 04.42 வரை பாலவம். பின்பு கௌலவம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=325&dpx=2&t=1762933377

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 282

Good Morning...

  • 281
·
Added article
·

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. விஜயலட்சுமி அவர் மனைவியாக நடித்துள்ளார். கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நவம்பர் 1-ம் தேதி வெளியாகும் இப்படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “குடும்பத்தில் வேறுபட்ட மனநிலையில் இருக்கும் கணவன்- மனைவி பற்றிய படம் இது.முனீஷ்காந்த் - விஜயலட்சுமி கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.

முனீஷ்காந்த்துக்கு கிராமத்தில் இடம் வாங்கி வீடு கட்டி நிம்மதியாக வாழ ஆசை. விஜயலட்சுமி நகரத்திலேயே வசதியாக வாழ நினைக்கிறார். இதனாலேயே இருவருக்கும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறேன். முதலில் குடும்ப கதையாகச் செல்லும் படம் பின்னர் வேறு டிராக்குக்கு மாறும். முனீஷ்காந்திடம் இப்படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது தயங்கினார். இந்த கதாபாத்திரம், குணச்சித்திரம், காமெடி, சென்டிமென்ட் என எல்லா பரிமாணங்களும் கொண்டது. இதற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று விளக்கியதும் சம்மதித்தார். பார்வையாளர்களுக்கும் இப்படம் நெருக்கமாக இருக்கும்” என்றார்.

  • 458
·
Added a news
·

கனடாவின் வன்கூவர் பகுதியில் டாக்ஸி சாரதி ஒருவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபருக்கு நீதிமன்றம் வீட்டு காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது டாக்ஸியை பயன்படுத்தி குறித்த நபர் போதை பொருட்களை விநியோகம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

எம்.டி.ரபிக்குள் இஸ்லாம் என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போதை பொருளை வைத்திருந்தமை அவற்றை விநியோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இந்த நபர் மீது சுமத்தப்பட்டு இருந்தது. 56 வயதான குறித்த நபருக்கு 20 மாத கால வீட்டு காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மிக நுட்பமான முறையில் போதைப்பொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்கூவர் பகுதியில் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த கடத்தல்கள் விநியோகங்களை வேறு நபர்கள் மேற்கொண்டிருந்தாலும் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த காரணத்தினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • 459
·
Added a news
·

உலகின் முதல் நிலை இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் புக்கர் விருது கனடாவை பிறப்பிடமாகக் கொண்ட டேவிட் ஸ்லே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது அண்மைய பிளெஸ் என்ற நாவலுக்கு இவ்வாறு புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஹங்கேரிய பிரஜை ஒருவர் ஈராக்கில் பணியாற்றி அதன் பின்னர் இங்கிலாந்தில் வாழும் போது அவர் எதிர்நோக்கும் சமூக பொருளாதார பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. கதைக்கரு மொழி பயன்பாடு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த நாவலுக்கு விருது வழங்கப்பட்டதாக புக்கர் விருது வழங்கும் குழு தெரிவித்துள்ளது. புக்கர் விருதுக்காக சுமார் 153 நாவல்கள் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

டேவிட் கனடாவின் மொன்றியல் பகுதியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடிய தாய்க்கும் ஹங்கேரிய தந்தைக்கும் பிறந்தவரே இந்த டேவிட் ஸ்லே என்பதும் குறிப்பிடத்தக்கது. டேவிட் குடும்பத்தினர் பின்னர் இங்கிலாந்தில் குடியேறியதுடன் பின்னர், ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரியில் வாழ்ந்தார்.

இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டிலும் டேவிட்டின் ஆல் தட் மேன் இஸ் என்ற நாவல் புக்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவருக்கு அதில் முதல் பரிசு கிடைக்கவில்லை. 2019 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக கனடியர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

  • 462
·
Added article
·

சொந்த ஊரு விளாத்திக்குளம். அப்பா அம்மா கலப்புத்திருமணம் பண்ணிக்கிட்டவங்க. ஜார்க்கு மனைவி, ஒரு பையன், ஒரு பொண்ணுனு சின்னதா ஒரு குடும்பம்.1985-ல பிளஸ் டூ முடிச்சதும், லயோலா காலேஜ்ல பாதிரியார் அகஸ்டின் நடத்துன வீதிநாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். அப்போ கூத்துப்பட்டறை நடத்தின முத்துச்சாமி மாஸ்டர் கேரளாவுல நாடகம் போடுறதுக்கு ஆள் கேட்டிருக்கார். அப்போதான் ஜார்ஜ் மரியான் கூத்துப்பட்டறைக்குள்ள போனார். 1989ல இருந்து 2002 வரைக்கும் கூத்துப்பட்டறையில் 120 நாடகங்கள் வரைக்கும் பண்ணினார். அதுக்குப் பின்னால 2002ல நாசரோட `மாயன்’னு ஒரு படம் மூலமா சின்ன ரோல்ல நடிச்சார், ஜார்ஜ். அந்தப் படத்துலதான் பசுபதி உள்ளிட்ட பல கூத்துப்பட்டறை கலைஞர்கள் நடிச்சிருப்பாங்க.

காஞ்சீவரம் படத்தில் பிரியதர்ஷன் கிட்ட அஸிஸ்டெண்டா ஏ எல் விஜய் வேலை பார்த்தார். அவர் தான் ஜார்ஜை அந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்திருக்கார். அப்போது முதலே ஏ.எல்.விஜய்க்கு ஜர்ஜின் நடிப்பு பிடித்துப் போயிருக்கிறது. அப்புறமா அவர் இயக்கின பொய் சொல்லப் போறோம் படம் மூலமா ஜார்ஜை நடிக்க வச்சவர், அதைத்தொடர்ந்து மதராசப்பட்டினம், சைவம், தெய்வத்திருமகள்னு இவர் கொடுத்தது எல்லாமே நல்ல ரோல்கள்தான்

முதல்முதலா ஜார்ஜ் மரியன் சரத்குமார் நடிச்ச கம்பீரம் படத்துல நடிக்குறதுக்கு கமிட் ஆனார். வரைப் பார்க்காமலேயே டைரக்டர் இவரைப் பத்தி கேள்விப்பட்டு கமிட் பண்ணிட்டார். ஷூட்டிங்குக்கு முன்னாடி நாள் ஆள் ஷார்ட்டா இருக்குறதை நேர்ல பார்த்துட்டு, போலீஸ் ரோல்ல சரத்குமார் பக்கத்துல இவர் சரியா இருக்க மாட்டார்னு ரிஜக்ட் பண்ணிட்டார் இயக்குநர். ஆனா விதி வலியது… அதே ஜார்ஜ் மரியான் சினிமா வாழ்க்கையில போலீஸ் ரோல்லதான் அதிகமா நடிச்சிருக்கார். அதே போலீஸ் ரோல்ல கைதியில கொண்டாடப்பட்டதெல்லாம் பூமராங்கின் உச்சம்.

மதராசப்பட்டினத்தில் வாத்தியார் கேரெக்டர் ரொம்பவே இவரைக் கவனிக்க வச்சது. அதுவும் ஆர்யா குரூப்கிட்ட மாட்டிக்கிட்டு, எ..ஏ..பி..பீனு சொல்லிக் கொடுக்குற இடத்துல பயந்த சுபாவமா பார்வை பார்த்து அதை தன்னோட மாடுலேஷன்ல சொல்லியிருப்பார். இன்னொரு காட்சியில நைட்ல ஆர்யா குரூப் வந்து இங்கிலீஷ்ல நன்றி சொல்லணும்னு கேட்குற சீன்லயும் மனுஷன் அசால்ட்டா செய்திருப்பார். சைவம்ல இங்கிலீஷ் தெரியாம மாட்டிட்டு முழிக்கிறது, குடும்பமே சண்டைப்போட்டு பிரிஞ்சு கிடக்கும்போது பொய் சொல்லி கூப்பிடுறது, ஐயாக்கிட்ட சென்டிமென்டா பேசுறதுனு எல்லா எமோஷன்களையும் அவ்வளவு அழகா ஹேண்டில் பண்ணியிருப்பாரு.

அடுத்ததா கலகலப்பு க்ளைமேக்ச்ல காமெடி போலீஸ் கதாபாத்திரத்துல தங்கப்பதக்கம் சிவாஜி முதல் சிங்கம் சூர்யா வரைக்கும் போலீஸ் மாடுலேஷன்களை தெரிக்க விட்டிருப்பாரு மனுஷன். இடுப்புல கைய வச்சுகிட்டு அலக்ஸ் பாண்டியன் ஏன் இன்னும் உங்களுக்கு டிபார்ட்மெண்ட்ல பேண்ட் கொடுக்கலைனு பேசுறதெல்லாம் காமெடியின் உச்சமாவே இருக்கும். இங்கதான் தான் ஒரு பெர்பார்மர்ங்குறதை நிருபிச்சிருப்பார்.

அடுத்ததா பல படங்கள் நடிச்சாலும், ‘கைதி’ ஒரு மைல் கல்னே சொல்லலாம். அதுவரைக்கும் முப்பது படங்களுக்கு மேல நடிச்சிருந்தாலும், ‘கைதி’ அவருக்கு ஒரு துவக்கம்னே சொல்லலாம். நீங்க தான் கமிஷனர் ஆபீசை பாத்துக்கணும்னு சொன்ன உடனே யூனிஃபார்ம் மாட்டிக்கிட்டே ஓடி வர்றதாகட்டும், கதவை இழுத்து மூடுங்கடானு கத்துற இடம், ‘டேய் பசங்களா உங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, இந்த பொண்ணுக்கு எதுவும் ஆகாம பாத்துக்கணும்னு வசனங்கள் பேசுற இடம்னு ஒரு மெயின் ஹீரோவுக்கு கொஞ்சமும் குறையாத கேரெக்டர் ஜார்ஜ் மரியன் உச்சம் மிரட்டியிருப்பார். அதுவும் அவர் வர்ற சீன்ஸ்லாம் செம மாஸா இருக்கும்.

  • 462

மதிப்பற்றது என்று தெரிந்தும்

அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால்

நிம்மதியை இழக்க நேரிடும்.

  • 474

யாரையும் காயப் படுத்தவோ, குறைத்து நடத்தவோ செய்யாதீர்கள். இன்று நீங்கள் வலிமை மிக்கவராக , வாய்ப்பு மிக்கவராக , வசதி மிக்கவராக இருக்கலாம், ஆனால் காலம் உங்களை விட வலிமை வாய்ந்தது.

அன்பால் கட்டுங்கள். உலகை அழகாக்குங்கள்.

இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.

  • 475
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உறவினர்கள் மூலம் சஞ்சலங்கள் தோன்றி மறையும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். சக ஊழியர்களால் நிம்மதியான சூழல் அமையும். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் சில மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

ரிஷபம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

வியாபாரம் ரீதியான ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். திடீர் தனவரவுகள் உண்டாகும். நீண்ட கால முதலீடு குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். இறை சார்ந்த வழிபாடுகளில் ஆர்வம் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கடகம்

சில விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வேலை ஆட்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். பணி சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். வழக்கு பணிகளில் அலைச்சல் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

சிம்மம்

குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் அமைதி இன்மை ஏற்படும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கன்னி

தன வரவுகள் சாதகமாக இருக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். கலை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். கடினமான விசயத்தையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

துலாம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான சிந்தனைகள் ஏற்படும். பொருளாதார ரீதியில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

விருச்சிகம்

பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். உத்யோக பணிகளில் பொறுமை வேண்டும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

தனுசு

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளி உணவுகளை குறைத்து கொள்வது நல்லது. துறை சார்ந்த பணிகளில் அலைச்சல் மேம்படும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கிடைக்க வேண்டிய சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மகரம்

மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். உறவினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். வெளியூர் பயணங்களில் ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் வரவுகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கும்பம்

பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். இறை வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மீனம்

எதிர்பாராத சில செலவுகள் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். உயர்கல்வியில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 652
·
Added a post
·

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11.11.2025

இன்று காலை 07.06 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று அதிகாலை 01.40 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

இன்று மாலை 04.30 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 07.06 வரை வணிசை. பின்னர் மாலை 05.56 வரை பத்தரை. பின்பு பவம்.

இன்று அதிகாலை 01.40 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=324&dpx=2&t=1762853185

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 657
  • 660

Good Morning...

  • 688
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சகோதர வழியில் சாதகமான சூழல் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

ரிஷபம்

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி சார்ந்த பயணம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். உடன் பிறப்புகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பணியாளர்களால் சில நெருக்கடிகள் தோன்றி மறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மிதுனம்

பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று செயல்படுத்தவும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாக நிறைவு பெறும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கடகம்

நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்து செல்லவும். உடன் இருப்பவர்களால் புதிய பாதைகள் உருவாகும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

சிம்மம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கன்னி

உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். பிடிவாதமாக செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் தலை இடுவதை தவிர்க்கவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

துலாம்

உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு வகைளில் ஆதாயம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வாகனம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் லாபம் ஓரளவு கிடைக்கும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாகி நிறைவு பெறும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்  

 

தனுசு

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவினங்களை அறிவீர்கள். தோற்றப்பொலிவில் சில மாற்றம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மகரம்

எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் ரீதியான சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கடன் பிரச்னைகள் குறையும். மனத்தில் இருந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். பண வரவு மத்தியமாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

கும்பம்

முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மதிப்புகள் மேம்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபமும் மத்தியமாக இருக்கும். தெய்வப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். மனதில் சிறு குழப்பம் தோன்றி மறையும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மீனம்

வியாபார நிமித்தமாக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கவனம் வேண்டும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 1096
·
Added a post

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 24 ஆம் தேதி திங்கட்கிழமை 10.11.2025.

இன்று காலை 08.31 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று அதிகாலை 02.41 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று மாலை 06.54 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று காலை 08.31 வரை தைத்தூலம். பின்னர் இரவு 07.49 வரை கரசை. பின்பு வணிசை.

இன்று காலை 6.09 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=323&dpx=2&t=1762764855

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 1123
  • 1121

Good Morning....

  • 1121
New People