Quote of the Day

பழமொழிகள்: அடாது செய்தவன் படாது படுவான்.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 250
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பயணங்கள் அலைச்சல் தரும். வேலைகளை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் நிதானம் அவசியம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. முன்கோபத்தை கட்டுப்படுத்துங்கள். யாருக்கும், எந்த உத்தரவாதமோ, உறுதிமொழியோ தரவேண்டாம்.

ரிஷபம்: சமயோசிதமாகச் செயல்பட்டு காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நீண்டகால பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் கேட்டதை உடனுக்குடன் வாங்கித் தருவீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு புதிய அணுகுமுறையில் தீர்வு காண்பீர்கள். விலகியிருந்த தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவார் கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அலுவலகரீதியாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணம் உண்டு.

கன்னி: எந்த வேலையைத் தொட்டாலும் இழுபறிக்குப் பிறகே முடியும். வெளியூர் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் குழப்பங்கள் வந்து போகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

துலாம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழிகளை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டு. பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும். பிள்ளைகள் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். முன்கோபம் விலகும். வியாபாரத்தில் வாராக் கடன்கள் வசூலாகும்.

தனுசு: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்கள் வாங்குவீர்கள். திடீர் பயணம் உண்டு.

மகரம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனைவழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். குடும்பத்துடன் வெளியூர் செல்லத் திட்டமிடுவீர்கள். தாயார் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்: நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி ஏற்படும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முயற்சிப்பீர்கள். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

  • 12
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 15.5.2026

இன்று காலை 06.25 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று மாலை 06.57 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று பிற்பகல் 12.51 வரை ஆயுஷ்மான் . பின்னர் சௌபாக்கியம்.

இன்று காலை 06.25 வரை வணிசை. பின்னர் மாலை 05.11 வரை பத்திரை. பிறகு சகுனி.

இன்று மாலை 06.57 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=512&dpx=2&t=1778838474

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 05.00 முதல் 06.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 13

Good Morning..

  • 12
  • 233
·
Added a news
·

கனடாவின் ஸ்கார்பாரோ பகுதியில், தனது இரண்டு வயது கூட நிரம்பாத பெண் குழந்தையைக் கொலை செய்ததாக அவரது தாயார் மீது பொலிஸார் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில், மிட்லாண்ட் அவென்யூ மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை மயக்க நிலையில் இருப்பதாக போலீஸாருக்கு 911 அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அன்று குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த குழந்தை ஓரியானா சோ என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அக்குழந்தை இன்னும் ஒரு மாதத்தில் இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயான 37 வயது சி திங் யாங் (Si Ting Yang) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலை இந்த ஆண்டின் ஸ்கார்பாரோ பகுதியில் பதிவான 8-வது கொலைச் சம்பவமாகும். அடுத்த சில நாட்களுக்கு அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு மற்றும் விசாரணை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நலன் கருதி கூடுதல் விபரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்.

  • 236
·
Added a post
·

கேரளா - காட்டாக்கட பேருந்து நிலையம் அருகே சுமார் 20 ஆண்டுகளாக “த்ரிஷ்யா ஸ்டுடியோ” செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக புதுப்பிக்கப்பட்ட ஸ்டுடியோவின் திறப்பு விழாவை நடத்துவதற்காக, அதன் உரிமையாளர் பினு அழைத்தவர் யார் தெரியுமா? பல ஆண்டுகளாக அவரது கடையின் அருகில் கடலை விற்பனை செய்து வரும் முகம்மது ஹனீப் இக்காவை.

ஸ்டுடியோ ஆரம்பித்த காலம் முதலே பினு ஹனீப் இக்காவை பார்த்து வருகிறார். பேருந்து நிலையத்தில் வியாபாரம் முடிந்ததும், தனது கடலை விற்பனைப் பொருட்களை ஹனீப் இக்கா பினுனின் ஸ்டுடியோவில்தான் வைத்து செல்வார். மறுநாள் காலை வந்து மீண்டும் எடுத்துச் செல்வார். இப்படியே பல ஆண்டுகளாக இந்த உறவு தொடர்கிறது.

இந்த வயதிலும் யாரையும் சார்ந்து இல்லாமல் உழைத்து வாழும் ஹனீப் இக்காவின் உற்சாகமும் நேர்மறை எண்ணமும் பினுவை மிகவும் கவர்ந்துள்ளது. “அவரை பார்க்கும்போதெல்லாம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது” என்று பினு கூறுகிறார்.

தனது புதிய பெரிய ஷோரூமின் திறப்பு விழாவிற்கு வேறு யாரையும் தேட வேண்டிய அவசியமே அவருக்கு தோன்றவில்லை. நண்பர்களும் குடும்பத்தினரும் பினுவின் இந்த முடிவுக்கு முழு ஆதரவு அளித்தனர். பிறகு நேராக ஹனீப் இக்காவை சந்தித்து விஷயத்தை கூறினர். முதலில் கொஞ்சம் ஆச்சரியப்பட்டாலும், இறுதியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஹனீப் இக்கா சம்மதித்தார்.

திறப்பு விழா நாளில், ஹனீப் இக்கா வந்து மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் பினுவின் ஸ்டுடியோவை திறந்து வைத்தார். அங்கு உள்ளூர் MLA மற்றும் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பினுவுக்கும் ஹனீப் இக்காவுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

  • 236
·
Added article
·

‘ராக்​கி’, ‘சாணிக்​கா​யிதம்’, ‘கேப்​டன் மில்​லர்’ படங்​களை இயக்​கிய அருண் மாதேஸ்​வரன், அடுத்து இயக்​கி​யுள்ள படம் ‘டிசி’. இதில் லோகேஷ் கனக​ராஜ், தேவ​தாஸ் என்ற கேரக்​டரில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இந்த கேங்​ஸ்​டர் டிராமா படத்​துக்கு அனிருத் இசை அமைக்​கிறார். இதில் சந்​திரா என்ற கதாபாத்திரத்தில் வாமிகா கபி​யும் பார்​வதி என்ற கதாபாத்திரத்தில் சஞ்​சனா கிருஷ்ண​மூர்த்​தி​யும் நடிக்​கின்​றனர்.

இப்​படத்​தின் புரமோஷன் டீஸர் சில மாதங்​களுக்கு முன் வெளியாகி வரவேற்​பைப் பெற்​றது. இந்​நிலை​யில் இப்​படத்​தின் டிரெய்​லர் தற்​போது நடை​பெற்று வரும் கேன்ஸ் திரைப்​பட​ விழாவில் நாளை வெளி​யிடப்பட இருப்​ப​தாக சன் பிக்​சர்ஸ் அறிவித்​துள்​ளது.

  • 235
·
Added a post
·

கங்கைக் கரையில் பண்டிதர் ஒருவர் கங்கையாற்றின் பெருமையைப் பற்றியும் அதில் நீராடுகிறவர்கள் தங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்ளும் சிறப்பும் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தார். பலர். அவருடைய புராணத்தைக் கேட்டு மகிழ்ந்தார்கள். அப்பொழுது கைலாசத்தில் இருந்த கைலாசபதியைப் பார்த்துப் பார்வதி தேவி, “கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோருக்கும் பாவம் ஒழிந்து நல்ல கதி கிடைக்குமென்றால், கைலாசத்தில் அத்தனை பேர்களுக்கும் இடம் காணாதே” என்றாள்.

“அடி பைத்தியக்காரி, கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோரும் தங்களுடைய பாவங்கள் எல்லாம் போகும் என்று நம்புவது இல்லை. புராணம் படிக்கிறாரே, அவருக்குக்கூட இந்த நம்பிக்கை இல்லை. யார் உண்மையாக நம்புகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாகக் கைலாச பதவி கிடைக்கும்” என்று இறைவர் கூறினார். உடனே பார்வதிதேவி, “கங்கையில் மூழ்குகிறவர்களில் யார் உண்மையாக நம்பி மூழ்குகிறார்கள் என்றும் யார் நம்பிக்கை இல்லாமல் மூழ்குகிறார்கள் என்றும் எப்படித் தெரிந்துகொள்வது?” என வினவினாள்.

'“நான் உனக்கு அதைக் காண்பிக்கிறேன். வா, போகலாம். நாம் இருவரும் கிழவனும் கிழவியுமாக மாறி, கங்கைக் கரைக்குப் போகலாம்” என்று கூறி இருவரும் கிழ வடிவங்களை எடுத்துக்கொண்டு போனார்கள்.

இருவரும் கங்கையில் மூழ்கி நீராடும் பொழுது கைலாசபதியாகிய கிழவர் நீரோடு போய்விட்டார். பார்வதி தேவியாகிய கிழவி, “என்னுடைய புருஷனை யாரும் காப்பாற்ற மாட்டீர்களா?” என்று கதறியழுதாள்.

புராணம் படித்த பண்டிதர் அங்கே வந்தார். “அம்மா நான் உங்கள் கணவரைக் காப்பாற்றுகிறேன்” என்று சொல்லிக் கங்கையில் இறங்கினார். கிழவி அப்பொழுது, “ஒரு பாவமும் செய்யாதவராக இருந்தால்தான் அவரைக் காப்பாற்ற முடியும், இல்லாவிட்டால் முடியாது” என்றாள்.

பண்டிதருக்குத் தம் மேலேயே நம்பிக்கையில்லை. தாம் செய்த பாவங்கள் எல்லாம் அவருடைய நினைவுக்கு வந்தன. அதனால் அவர் ஒன்றும் செய்ய முடியாமல் தலை குனிந்து நின்றார். கிழவியின் ஒலக் குரலைக் கேட்டு வேறு சிலரும் அங்கே ஓடி வந்தார்கள். அவர்கள் கிழவரை மீட்கலாம் என்று நினைக்க தொடங்கிய பொழுது கிழவி “ஒரு பாவமும் செய்யாதவர்களால்தான் அவரை மீட்க முடியும்” என்றாள். அதைக் கேட்ட அவர்கள் எல்லோரும் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி நின்று விட்டார்கள்.

இந்தச் சமயத்தில் முரட்டு ஆள் ஒருவன் அங்கே வந்தான். கிழவியைப் பார்த்து, “ஏனம்மா அழுகிறாய்? உனக்கு என்ன கஷ்டம் வந்தது?” என வினவினான். கிழவி எல்லாவற்றையும் சொன்னாள். அதற்கு அந்த முரடன், தான் கிழவரைக் காப்பாற்றுவதாகக் கூறினான். அதற்கு வழக்கம்போல் கிழவி. “ஒரு பாவமும் செய்யாமல் இருந்தால்தான் உன்னால் இயலும்” என்றாள். அது கேட்ட முரடன், “நான் இப்பொழுது தான் பண்டிதர் படித்த புராணத்தைக் கேட்டேன். இந்தக் கங்கையில் ஒரு தடவை மூழ்கினால், எல்லாப் பாவங்களும் தொலையும் என்று சொன்னார். இதோ நான் ஒரு முழுக்குப் போடுகிறேன். என்னுடைய பாவங்கள் தொலையட்டும்” என்று சொல்லி முழுக்கும் போட்டான். பிறகு நீந்திச் சென்று அந்தக் கிழவரை இழுத்துக் கொண்டு வந்தான்.

உண்மையான நம்பிக்கையோடு இருந்து வந்த முரடனுக்கு முன்னாலே கைலாசபதியாரும். பார்வதி தேவியும் தங்கள் தரிசனத்தைக் காட்டி ஆசீர்வாதம் செய்தார்கள்.

கைலாசபதி பார்வதிதேவியைப் பார்த்து, “பார்த்தாயா, இத்தனை பேர்கள் இருந்தும் இந்த ஒருவனைத் தவிர மற்ற எவருக்கும் நம்பிக்கையில்லாமல் போயிற்று புராணம் படித்த பண்டிதருக்கே நம்பிக்கையில்லையே. “நம்பினோர் கெடுவதில்லை” என்பதை இந்த ஒருவன்தான் நிரூபித்தான். ஆதலால் இவன் ஒருவனுக்குத்தான் கைலாசத்தில் இடம் இருக்கும்” என்று சொன்னார்; பிறகு அவர்கள் இருவரும் மறைந்து போனார்கள்.

  • 245
·
Added a post
·

அபிடேக பாண்டியனுக்கும் அவன் நாட்டு மக்களுக்கும் வேண்டிய பொருளைத் தருவதற்காக இறைவன் எல்லாம் வல்ல சித்தராக உருக்கொண்டு வந்தார். வட்டமாகிய மயிர்ச் சடையும், நீறு பூசிய நெற்றியும் குண்டலம் தரித்த செவியும், புலித் தோல் ஆடையும், காலில் சிலம்பும் பாதுகையும் கொண்டு புன்முறுவல் பூத்த முகத்தினராய் அங்காடித் தெருக்களும் மாளிகைச் சந்திப்புகளும் தேர் வீதிகளும் செல்வாராயினர். ஓர் இடத்திலேயும் தங்க இருப்புச் கொள்ளாமல் விருப்பப்படியே திரிந்து சென்றார்.

முதியவரை இளைஞர் ஆக்கினார். ஆடவரை மகளிர் ஆக்கினார்; மலடியைக் கரு உயிர்க்கச் செய்தார்; ஊமை, குருடு, செவிடு, முடம் இப்பிணிகளைத் தீர்த்து வைத்தார்;

வெள்ளி செப்பு ஈயம் பித்தளை இவற்றைச் செம்பொன் ஆக்கினார். செல்வரை ஏழையாக்கினார்; ஏழையர் செல்வர் ஆயினர். எட்டி மரம் இனிய காய்களைத் தரச் செய்தார். கல்லாதவரைக் கற்றவர் ஆக்கினார்; இல்லாதவரை வள்ளல்கள் ஆக்கினார். எல்லாம் தலைகீழாகச் செய்து காட்டினார்.

பாண்டிய நாட்டு மக்கள் இப்புதுமைகளை விழித்த கண் மூடாமல் பார்த்துத் திகைப்படைத்தனர். அவரவர் தாம் விரும்பிய பொருளைச் சித்தர்பால் கேட்டுப் பெற்றனர். கிழவர்கள் வாலிபர்கள் ஆயினர்; கிழவிகள் குமரிகள் ஆயினர்; மூப்பை ஒழித்துவிட்டு இளமையாக்கினார்; பேசாத குழந்தைகளைப் பேசவைத்தார். நோயாளிகள் நலம் பெற்று நல்வாழ்வு பெற்றனர்.

இந்த அதிசயத்தை அரசனுக்கு அறிவித்தனர்; அரசன் ஒற்றர்களை அனுப்பிச் சித்தரை அழைத்து வரும்படி ஏவினான். சென்றவர்கள் திரும்பவே இல்லை; அதே போல அமைச்சர்களை அனுப்பி வைத்தான்; அவர்களும் ஒரு சிலர் திரும்பவில்லை; கற்றவரை அனுப்பி அரசன் அழைப்பதாகச் சொல்லி அனுப்பினான்.

"நாமார்க்கும் குடியல்லோம்" என்று சொல்லி, வர இயலாது என்று சொல்லி அனுப்பினார். சென்ற அமைச்சர் சிலர் திரும்பி வந்து அரசனிடம் சித்தரின் விசித்திரமான போக்குகளை எடுத்துக் கூறினர். ஆற்றல்மிகு அறிஞராகிய சித்தரைத் தாம் ஒன்றும் செய்ய முடியாது என்று அரசன் அடக்கத்தை மேற்கொண்டான். சித்தரின் வருகையால் மக்கள் நன்மை பெற்றதை அவனால் உணர முடிந்தது.

அபிடேக பாண்டியன் சித்தரை அவமதித்துவிட்டோமோ என்று கதி கலங்கினான். தானே சென்று அவரைக் காண அரண்மனை விட்டு வெளியேறி வந்தான்; இதனை அறிந்த சிவபெருமான் இந்திர விமானத்துக்கு வடமேற்குத் திசையில் வந்தருளினார்.

அன்று பொங்கல் திருநாள் ஆகையால் மக்கள் மகிழ்ச்சி பொங்க எங்கும் குழுமி இருந்தனர். அவரை மொய்த்துக் கொண்டிருந்த ஊர் மக்களை விலகச் செய்து அரசன் சித்தரை அணுகினான்.

"நீர் யார்? ஊர் எது? சொந்த நாடு யாது? உறவினர் யார்? இங்கு வந்தது எதற்காக?” என்று வரிசையாகக் கேட்டான்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்; எமக்கு எந்த நாடும் சொந்த நாடே, காசி நகரத்தில் தங்குவது வழக்கம்; யாசித்து வாழ்க்கை நடத்துவது எங்கள் தொழில்; சித்து விளையாடி மக்களை மகிழ்விப்பது எங்கள் திறமை; வேதம் முதலிய கற்றவன் யான்; ஏதம் எது வந்தாலும் நீக்கித் தருவோம்; எல்லாம் வல்ல சித்தர் என்று என்னை அழைப்பார்கள்" என்றார்.

பாண்டியன் இவருடைய இறுமாப்பைச் சிதற அடிப்பேன் என்று சொல்லிக் கொண்டான்; அதற்குத் தக்க உபாயம் தேடிக் கொண்டிருந்தான்; அந்தச் சமயத்தில் கழனியிலிருந்து கரும்பு ஒன்றைக் களமன் ஒருவன் கொண்டு வந்து தந்தான்; கமுகு போன்று பருத்துத் திரண்டகணுக்களை உடைய அந்தக் கரும்பைப் பக்கத்தில் விமானத்தில் இருந்த கல்லானை அடுத்து செய்ய முடியுமா என்று கேட்டான்

ஆழம் தெரியாமல் காலை விட்டவன் கதியாயிற்று. வேழத்திடம் தந்த கரும்பை உயிர் பெற்று எழுந்து கடித்துத் தின்று அதை முறுக்கி வீழ்த்தியது. மதம் கொண்ட யானையாக அது மதர்த்து எழுந்தது. சித்தரின் திருக்குறிப்பை அறிந்து கல்யானை பாண்டியனின் முத்து மாலையை இழுத்துப் பறித்துக் கொண்டது. கஞ்சுக மாக்கள் கைத்தடி கொண்டு துதிக்கை உடைய யானையைத் தாக்க ஓங்கினர்; அது முத்து மாலையைச் சத்தம் செய்யாமல் வாயில் போட்டுக் கொண்டது; பாண்டியன் சினந்து சித்தரை உருத்துப் பார்த்தான். காவலனின் குறிப்பு அறிந்த ஏவலர் சிலர் சித்தரை அடிக்க ஓங்கிய கை அசையாமல் நின்றுவிட்டது. அவர்கள் அடியெடுத்து நகர்த்த மாட்டாமல் பதுமை என நின்றனர்; இந்தப் புதுமை கண்டு விதிர் விதிர்ப்பை அடைந்தனர்; அன்பும், அச்சமும் தோன்றத் துன்பம் தந்தமைக்கு வருந்திச் சித்தரிடம் மன்னிப்புக் கேட்டான்.

அவர் அவனைப் பார்த்துச் சிரித்து "இவை எல்லாம் எம் சித்து விளையாடல்; உம்மோடு பரிகசித்து விளையாட வந்தோம். நீ வேண்டுவது கேள்" என்றார். யானை தான் விழுங்கிய முத்துமாலையைத் திருப்பி அவன் கையில் கொடுத்தது.

"பொன்னும் பொருளும் மானுடர் முயன்று பெறுவன; கல்வி கற்று அறிவது; ஆட்சி வீரத்தால் விளைவது; செல்வம் தொடர்ந்து வருவது; எல்லாம் உடைய எனக்குக் கட்டி அணைக்க மனைவி உண்டு; என்னை எட்டி உதைக்கக் குழந்தைகள் இல்லை. மக்கட் செல்வம் தந்து என் துக்கத்தைப் போக்குவீர்" என்று கேட்டுக் கொண்டான்.

சித்தர் அருளால் நன் மகனைப் பெற்று விக்கிரமன் எனப் பெயரிட்டு அவனைப் பெரியோன் ஆக்கி ஆட்சியை ஒப்படைத்தான். பற்றுகள் நீங்கிப் பரமன் திருவடியில் விழுந்து சிவசக்தியோடு தானும் கலந்து முத்தியை அடைந்தான்.

  • 243
·
Added a post
·

இராசசேகரனுக்குப்பின் அவன் மகன் குலோத்துங்க பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சி செய்யும் நாளில் இந்த அற்புத நிகழ்ச்சி நடந்தது. திருப்புத்தூரிலிருந்து ஒரு பார்ப்பனன் தன் மனைவியோடு மதுரையை நோக்கிக் காட்டு வழியே வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் நீர் வேட்கையால் வருந்தும் தன் மனைவியையும் கைக்குழந்தையையும் ஆலமரத்தின் நிழலில் உட்கார வைத்து விட்டுத் தண்ணீர் கொண்டு வரச் சென்றான்.

அந்த ஆலமரத்தினின்று ஓர் அம்பு கீழே விழுந்து அவள் வயிற்றில் பாய்ந்து உதிரம் ஒழுகச் செய்து அவள் இன்னுயிரைப் பிரித்து விட்டது. தண்ணீர் எடுக்கச் சென்றவன் திரும்பி வந்து பார்க்கும் போது இந்தக் கோர மரணத்தைக் கண்டு அதிர்ச்சியும் அவலமும் அடைந்தான்.

அதே ஆலமரத்தில் பறவை வேட்டையாடும் வேடுவன் ஒருவன் அலுத்துக் களைத்து நிழலுக்கு ஒதுங்கினான். அவன் கையில் வில்லும் அம்பும் இருக்கக் கண்டு வேறு ஓர் சொல்லும் சொல்லாமல் அவனை இழுத்துக் கொண்டு அரண்மனை வாயிலில் நிறுத்தினான்; அழுகின்ற குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு செத்துக் கிடந்த பார்ப்பினியை முதுகில் சுமந்து கொண்டு வேடுவனோடு அரண்மனை வந்து சேர்ந்தான்.

"கொலை, கொலை" என்று கத்தி அரண்மனையில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தினான். ஒரு பாவமும் அறியாத தன் மனைவியைக் காரணம் இல்லாமல் அந்த வேடுவன் அம்பு எய்து அழித்துவிட்டான் என்றும், தானும் சேயும் அனாதைகள் ஆக்கப்பட்டு விட்டனர் என்றும் முறையிட்டான்.

வேடுவனைப் பிடித்துக் கட்டி அடித்து உண்மையைக் கக்கச் சாட்டையால் அடித்தனர். "சோமசுந்தரன் சாட்சியாகத் தான் தவறு செய்யவில்லை" என்று வற்புறுத்திக் கூறினான். அதற்கு மேல் அவனைத் துன்புறுத்துவதை நிறுத்தினர். அவன் கையிலோ வில்லுண்டு; கொலையுண்டு கிடப்பதைப் பார்ப்பனன் கண்டு வந்து சொல்கிறான்; எது உண்மை என்று அறிய முடியாத நிலையில் அரசன் நீதி வழங்க முடியாமல் வேதனை அடைந்தான்.

ஈமச்சடங்கு செய்து விட்டு மறுபடியும் வரச் சொல்லி அப்பார்ப்பனனை அனுப்பி வைத்தான். வேடனை விடுவித்துப் பின் நேரே சோமசுந்தரர் திருக்கோயில் அடைந்து இறைவனிடம் விண்ணப்பித்து விடை காண விழைந்தான்.

"யார் இந்தக் கொலை செய்தது என்று தெரியாமல் கவலையுறுகின்றேன்; மதுரை எல்லையிலே இந்தத் தொல்லை வந்து சேர்ந்திருக்கிறது; உன் அருள் இருக்கும் போது இந்த மருட்சி எப்படி நிகழ்ந்தது? தெரியவில்லையே; உண்மை காண விழைகின்றேன்; ஒண்மை வடிவான பொருளே! வழிகாட்டி எனக்கு நன்மை செய்து அருள்வாய் என்று கேட்டுக் கொண்டான். அப்பொழுது ஆகாயத்திலிருந்து ஓர் அசரீரி தோன்றி, "தென்னவனே நீ இந்நகர்ப் புறத்து உள்ள செட்டித் தெருவில் இன்றிரவு ஒரு திருமணம் நடக்கிறது. அந்தப் பார்ப்பனனோடு அங்கு வந்து சேர்க, உனக்கு உண்மை உணர்த்துகிறேன்" என்று கூறியது; அத்திருவாக்கைக் கேட்டு அவ்வாறே தானும் பார்ப்பனனும் அம்மண வீட்டிற்குச் சென்று ஒரு புறம் ஒதுங்கி நின்றனர்; மன்னன் மாறு வேடத்தில் அங்கு வந்ததால் அவனை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை.

இவர்கள் இருவர் கண்ணுக்கு மட்டும் காலபாசத்தோடு எம தூதர் அங்கு வந்து காத்திருப்பது தெரிந்தது. அடே இந்த மணமகன் உயிரை எப்படிப் பிடிப்பது? அங்கலக்ஷணத்தோடு தங்க நிறமுடைய இவை தெரிந்தது. எப்படி உயிர் கவ்வுவது? நோய் நொடி இல்லாதவனைப் பிடி என்றால் எப்படி முடியும்?' என்று கேட்டான்.

"ஆள் அழகனா இளைஞனா என்பதை நாம் ஆராய வேண்டியது இல்லை. கணவனையும் கதறவிட்டுப் பார்ப்பணியின் உயிரைக் கவர்ந்தோமே நாம் அப்பொழுது இரக்கப்பட்டோமா! கணக்கு முடிந்தது; பிணக்குக் கொள்ள முடியாது; நம் கடமையைச் செய்துதான் தீர வேண்டும்; வழிதானா இல்லை; என்றோ தொத்திக் கொண்டிருந்த பழைய அம்பினைக் காற்றில் அசைத்து அவள் வயிற்றில் பாய்ச்சவில்லையா! நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். மரணம் என்பது பேதம் பார்ப்பதில்லை. இளைஞனா முதியனா என்றோ நல்லவனா கெட்டவனா என்றோ ஆண்டியா அரசனா என்றோ பேதம் பார்ப்பதில்லை. உயிரைப் போக்க எவ்வளவோ வியாதிகளை உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறோம். வயித்தியர்களுக்கு அகப்படாத புதிய நோய்களைப் படைப்பது நாம் தானே; துரிதமாகச் செல்லும் ஊர்திகளை படைத்ததும் நாம் தானே; விதி என்று வந்து விட்டால் எந்தச் சதி செய்தாவது உயிரைப் போக்கி விட முடியும். அதோ கட்டி வைத்த பசுமாட்டைப் பார்; அதனை முட்டி வைக்கத் தூண்டினால் அதன் அருகில் ஒருவரும் நெருங்க முடியாது. நாம் உயிரைப் பிடித்துக் கொள்ளலாம். பழி நம் மீது வராது; அநியாயமாகச் செத்துவிட்டானே என்று கதறுவார்கள். "விதி முடிந்தது" என்று இந்த உலகம் பேசும்; அவ்வளவுதான்" என்று பேசினர்.

பார்ப்பனனும் பார்த்திபனும் பார்ப்பனியின் பரிதாபகரமான சாவு நிகழ்ந்ததன் காரணத்தை அறிந்து கொண்டனர். என்னதான் நடக்கிறது என்று இருந்து கவனித்தனர்.

தாலி கட்டும் நேரம்; 'கெட்டி மேளம்' 'கெட்டி மேளம்' என்று உரக்கக் கூவினார்கள். கொட்டிய மேளமும் ஏனைய வாத்திய முழக்கமும் கலியாணக் கூச்சலும் சேர்ந்து அந்தப் பசுவை மருளச்செய்தது. அது திமிரிக் கொண்டு நேரே பந்தலில் மணத்தவிசில் தாலியைக் கையில் வைத்திருந்த மணமகனைக் குத்திக் கொன்றது. அதன் கூரிய கொம்புகள் அவன் வயிற்றைக் கிழித்து அவனைத் தூக்கி வாரிப் போட்டது. மணமகன் பிணமகன் ஆனான்; வாழ்த்தொலி பறையொலியாகியது. சிரித்துப் பேசி மகிழ்ந்தவர்கள் அழுது அவலித்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டனர்; பசுந்தோகை போன்ற மணப்பெண் மகிழவேண்டியவள் மனம் குன்றி குமைந்து நின்றாள். அவர்கள் அடைந்த துன்பம் தான் அடைந்த துன்பத்தைவிட மிகுதி என்று பார்ப்பனன் அறிந்தான். அந்த அவலச் சூழ்நிலையில் இருந்து விடுபட்டுப் பாண்டியனோடு அரண்மனை சேர்ந்தான்.

பார்ப்பனனின் முறையீடு தவறு என்று முடிவு செய்யப்பட்டது. அவனுக்கு நிறையப் பொருள் தந்து "மற்றொருத்தியை மணந்து நீ அக்குழந்தைக்குப் பாதுகாப்புத் தருக" என்று சொல்லி விடை தந்தான். மதுரைக்கு வந்த பார்ப்பனன் இழப்பை ஈடு செய்யும் வகையில் பத்தினிப் பெண் மற்றொருத்தியைத் தேடி மணம் செய்து கொண்டான்.

பாண்டியன் குலோத்துங்கன் ஈசுவரன் திருச்சந்நிதியை அடைந்து, "கருணாநிதியே! பழி அஞ்சும் பரம்பொருளே! என் விழி திறந்து உண்மை காணச் செய்தாய்" என்று கூறிப் போற்றி வணங்கித் தம் அரண்மனை நோக்கிச் சென்றான். பின் தன் ஆட்சியைச் செம்மையுற நடத்திச் செங்கோலுக்குச் சிறப்புச் சேர்த்தான்.

  • 244
·
Added a post
·

தமிழகத்திலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலே பல பெரும்புலவர்கள் வாழ்ந்தனர். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர், காஞ்சி சபாபதி முதலியார், மயிலை சண்முகம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, முன்சீப் வேதநாயகம் பிள்ளை, சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை இவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இன்னும் பல புலவர்களும் வாழ்ந்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டைத் தமிழ் மறுமலர்ச்சியின் ஆரம்ப காலம் என்று கூறலாம். இக்காலத்துப் புலவர் பெரு மக்களிலே இன்று பொது மக்களால் கொண்டாடப்படும் மாபெரும் புலவர் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

வடலூரார், வள்ளலார், இராமலிங்க சுவாமிகள், இராமலிங்க அடிகள், அருட்பெருஞ்சோதி அடிகள், சமரச சுத்த சன்மார்க்க ஞானி என்ற பல பெயர்களால் இன்று இவர் அழைக்கப்படுகிறார். இவரை இன்று பல மக்கள், அவதார புருஷராகக் கருதுகின்றனர்; இவர் படத்தை வைத்துப் பூசிக்கின்றனர்; இவர் பாடிய செய்யுட்களைப் பாடி ஆனந்தமாக ஆடுகின்றனர்; இவருடைய பாடல் தொகுதியை வைத்து மலரிட்டுத் தூபதீபங் காட்டிப் போற்றுகின்றனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களிலே நூலாசிரியர்கள் உண்டு; உரையாசிரியர்கள் உண்டு; ஆராய்ச்சியாசிரியர்கள் உண்டு; பதிப்பாசிரியர்கள் உண்டு; பலருக்குத் தமிழ் நூல்களைப் பாடஞ் சொல்லிய போதகாசிரியர்கள் உண்டு. இவர்கள் எல்லோரினும், தெய்வத் தன்மை பொருந்திய பெரியராகத் தமிழ் மக்களால் போற்றப்படுகின்றவர் வடலூர் வள்ளலார் ஒருவர்தான்.

இப் பெரியார்1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரிலே பிறந்தார்.

இவர் தந்தையார் பெயர் இராமய்யா பிள்ளை. கருணீகர் குலத்தவர். கிராமக் கணக்கர்; நல்ல தமிழ்ப் பயிற்சியுள்ளவர்; சிவபக்தியிலே சிறந்தவர். முதல் ஐந்து மனைவிகளை முறையே மணந்து இழந்தவர்; ஆறாவது மனைவியாகச் சின்னம்மை என்பவரை மணந்தார். அம்மையார் பிறந்த ஊர் சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி.

இராமலிங்கம், கடைசிப்பிள்ளையாக இராமய்யா-சின்னம்மை தம்பதிகளுக்குப் பிறந்தார். சபாபதி பிள்ளை, பரசுராமபிள்ளை என்போர் இராமலிங்கத்தின் மூத்த சகோதரர்கள். சுந்தரம்மாள், உண்ணாமலை அம்மாள் இருவரும் மூத்த சகோதரிகள்.

ஐந்தாவது பிள்ளையாக இராமலிங்கத்தை அனைவரும் அன்புடன் வளர்த்து வந்தனர். அக்காலத்தில்-இராமலிங்கம் குழந்தைப் பருவத்தில் இருக்கும்போதே தந்தையார் இராமய்ய பிள்ளை மண்ணுலகை விட்டு மறைந்தார்.

அன்னை சின்னம்மையார், மருதூரை விட்டுப் புறப்பட்டார். குழந்தைகளுடன், பிறந்தகமாகிய பொன்னேரியை அடைந்து சில காலம் வாழ்ந்தார். பிறந்த 1824-ல் சென்னையிலேயே தமது மக்களுடன் குடியேறினார்.

இராமலிங்கத்தின் மூத்த சகோதரர் சபாபதி பிள்ளை காஞ்சி சபாபதி முதலியாரிடம் முறையாகத் தமிழ்க் கல்வி பயின்றார்; பிரசங்கம் செய்யும் திறமைப் பெற்றார்; புராணப் பரிசங்கத்தில் வல்லுநரானார்; இதன் மூலமே குடும்ப வாழ்க்கை நடைபெற்று வந்தது. சபாபதி பிள்ளை சிறந்த பிரசங்கியராகப் போற்றப்பட்டார்.

சபாபதி பிள்ளை, தம்பி இராமலிங்கத்திடம் அன்பு பாராட்டினார்; அவரைச் சிறந்த தமிழ்ப் புலவராக்க எண்ணினார்; தாமே அவருக்குத் தமிழ் நூல்களைப் போதித்து வந்தார். இராமலிங்கமும் தமிழ்க் கல்வியிலே தேர்ந்தார்; பிரசங்கம் செய்யவும் வல்லுநரானார்; செய்யுள் பாடும் திறமையும் பெற்றார். இவரைப் பொது மக்கள் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை என்று அழைத்து வந்தனர்.

இராமலிங்கம் பிள்ளை தமது ஏழாவது வயதிலேயே அறிவிலே சிறந்து விளங்கினார்; இறைவனிடம் அன்பு செலுத்து வதிலே ஈடுபட்டிருந்தார்; ஒழுக்கத்திலே ஒப்பற்ற வராயிருந்தார். அனைவரும் அவருடைய அறிவையும் ஒழுக்கத்தையும் பாராட்டு வராயினர்.

இராமலிங்கம் பிள்ளை தமது ஒன்பதாம் வயதிலேயே சிறந்த செய்யுட்களை இயற்றும் திறமை பெற்றிருந்தார்.

இவர் சென்னையிலிருந்து நாள்தோறும் திருவொற்றியூருக்குப் போவார்; ஒற்றியூரனை உள்ளத்திலே வைத்துக் கனிந்துருகிக் கவிகள் பாடுவார். இறைவனை வணங்குவது, இன்சுவைக் கவிகள் புனைவது, தமிழ் கற்க விரும்புவோர்க்குத் தமிழ் கற்பிப்பது, ஐயமுற்றுக் கேள்விகள் கேட்போர்க்குத் தக்க விடையளித்து ஐயந் தீர்ப்பது இவை போன்ற செயல்களிலேயே அவர் எப்பொழுதும் ஈடுபட்டிருந்தார்.

சென்னைக் கந்தசாமிக் கோயிலுக்கும் செல்வார்; முருகனைக் கண்டு உருகிப் பாடுவார். இவ்வாறு அன்பு நெறியிலேயே காலங்கடத்தி வந்தார். பணத்தைப் பற்றி இவர் சிறிதும் கவலைப்பட்டதேயில்லை. குடும்ப வாழ்விலே இவருக்குப் பற்றும் உண்டாகவில்லை; மணம் புரிந்துகொண்டு இல்லற வாழ்வு நடத்த வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் எழவே யில்லை.

இந்நிலையில், அண்ணனும், அன்னையும் இவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்; அக்காள் பெண்ணையே மணம் புரிந்து வைத்தனர். பெயருக்குத்தான் திருமணம்; மணவாழ்க்கையில் இவர் ஈடுபடவே இல்லை.

இதன்பிறகு இவர் தனியாகச் சிதம்பரத்திற்குச் சென்று வாழ்ந்தார். அங்கிருக்கும் போது பல ஊர்களுக்கும் சென்று திரும்புவது வழக்கம். பல அறிஞர்களும் இராமலிங்கம் பிள்ளையிடம் வருவார்கள்; அவருடன் உரையாடிச் செல்வார்கள். இக்காலத்தில் தான் இவர் இராமலிங்க சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

இராமலிங்க சுவாமிகளின் பாடல்கள் அருட்பா என்னும் பெயரில் வெளிவரத் தொடங்கின. அவற்றை அறிஞர்கள் பலர் போற்றினர்; பக்தர்கள் பலர் பராட்டினார்கள்.

இராமலிங்க சுவாமிகள் 1858-ம் ஆண்டில் வடலூருக்கு வந்து சேர்ந்தார். வடலூரை அடுத்த கருங்குழியை உறைவிடமாகக் கொண்டார். அப்பொழுது அவருக்கு வயது 45. அக் காலத்தில் வடலூரின் பெயர் பார்வதிபுரம் என்பது. அங்கு நின்று பார்த்தால் சிதம்பரத்தின் நான்கு கோபுரங்களும் நன்றாகத் தெரியும். தில்லைக்கு வடக்கே இவ்வூர் அமைந்திருப்பதால் வடலூர் என்று பெயர் பெற்றது.

இராமலிங்க சுவாமிகள் என்னும் வடலூர் அடிகள் 1865-ல் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அதுவரையில் அவரால் பாடப்பட்டிருந்த பாடல்கள் அருட்பா என்னும் பெயரால் வெளிவந்தன. அவை நான்கு திருமுறைகளாக அமைந்திந்தன. 1867-ஆம் ஆண்டிலே வடலூரில் சத்திய ஞான சபையைத் தொடங்கினார்.

சாதி பேதம் இல்மல் எல்லோரும் ஒன்றுபட்டு இறைவனை வழிபட வேண்டும் என்பதே இச் சபையின் நோக்கம்.

வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பம் என்ற இடத்திலே சித்திவளாகத் திருமாளிகையிலே வள்ளலார் வீற்றிருந்தார். மக்களுக்குச் சன்மார்க்கத்தை உணர்த்தி வந்தார். எல்லா மக்களும், எல்லா மதத்தினரும், எல்லா இனத்தினரும், எல்லா நாட்டினரும் வேற்றுமையின்றி வாழ வேண்டும்; அறிவே ஆண்டவன் என்ற உண்மையை உணர வேண்டும்; அறிவையே இறைவனாக எண்ணி வழிபாடு செய்ய வேண்டும். இறைவன் அருட்பெரும் சோதி, தனிப்பெருங் கருணை என்ற உண்மையை உணர்வது சன்மார்க்கம்; இவ்வுமையை அறிந்தவர்கள் ஒன்று பட்டு வாழ்வது சன்மார்க்க சங்கம் என்பதே வள்ளலார் கொள்கை.

இறுதியாக 1874 ஜனவரியில் இவர் மறைந்தார்; தாம் இருந்த அறையின் வெளிக்கதவைப் பூட்டிக்கொள்ளும்படி தமது மாணவர்களுக்குக் கட்டளையிட்டார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகுதான் அவ்வறைக் கதவைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நான் மீண்டும் இவ்வுலகில் தோன்றுவேன் என்று கூறி மறைந்தார்.

அடிகளின் ஆணைப்படியே அவரை அறைக்குள் வைத்துப் பூட்டி விட்டனர். அடிகள் குறித்தக் காலத்திற்குப்பின் அதைத் திறந்து பார்த்தனர்; அடிகளைக் காணவில்லை. அனைவரும் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். அடிகள் எங்குச் சென்றார்? எப்படி மறைந்தார்? என்ற உண்மை இன்னும் ஒருவருக்கும் தெரியாது.

நான் மீண்டும் தோன்றுவேன் என்று அடிகள் கூறியது மட்டும் இன்று உண்மையாகி விட்டது. அவர் பூத உடம்புடன் காணப்படவில்லை; ஆனால், புகழுடம்புடன் பிறந்து வளர்ந்து வருகிறார். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவருடைய சமரச சன்மார்க்கத்தைப் பலர் எதிர்த்தனர். அவருடைய பாடல்கள் அருட்பா அல்ல என்றனர். அவரைப் பற்றியும் வசை மொழிகள் கூறினர். இன்றே, வடலூர் அடிகளை அனைவரும் போற்றுகின்றனர். தமிழ் மக்கள் உள்ளங்களில் வடலூரார் குடிபுகுந்து வருகின்றார்; உலக மக்கள் உள்ளங்களிலும் அவருடைய சமரச சன்மார்க்க கொள்கைகள் குடியேறி நிலைத்து வருகின்றன.

இன்று உலகிலே வளர்ந்து வரும் கருத்துக்களையும், வடலூர் அடிகளின் வாய்மொழிகளையும் ஒத்திட்டுப் பார்ப் போர்க்கு இவ்வுண்மை விளங்கும்.

அருட்பெரும் சோதி ! தனிப்பெரும் கருணை! என்பதே வள்ளலாரின் முழக்கம். இம்முழக்கம் இன்று தமிழகம் எங்கும் ஒலிக்கிறது. இறைவன் எல்லையற்ற சோதி வடிவானவன்; ஒளியே அவன் உருவம்; ஒப்பற்ற கருணையே அவனுடைய பண்பு; அறிவும் கருணையுமே இறைவன் என்பதுதான் இம் முழக்கத்தின் பொருள்.

1823 அக்டோபர் மாதத்திலே தோன்றிய தமிழகத்தின் அறிவுச் சுடர்-வடலூர் வள்ளலார்-இராமலிங்க அடிகள்-1874 ஜனவரி மாத இறுதியிலே மறைந்தது! வடலூரார் இவ்வுலகில் வாழ்ந்த காலம் 51 ஆண்டுகள்தான். இந்த ஆண்டுகளிலே இவர் தமிழகத்திற்கு-தமிழ் மக்களுக்கு தமிழ் மொழிக்கு செய்திருக்கும் பணி அளவற்றது.

  • 245
·
Added a post
·

மேஷம்: உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

ரிஷபம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீட்டில் சுபகாரியம் ஏற்பாடாகும். வராதிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வருவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் அமைதி நிலவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்லுங்கள். யோகா, ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கடகம்: நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவைப் பெறுவீர்.

கன்னி: யாருக்காகவும் எதற்காகவும் எந்தவகையிலும் உறுதிமொழிதர வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வாகனம் தொந்தரவு தரும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் கவனம் தேவை. பங்குதாரரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.

துலாம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர். சிந்தனைத் திறன் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வராக்கடன் வந்து சேரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு.

விருச்சிகம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிட்டும். உற்சாகமான பேச்சால் வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

தனுசு: புது எண்ணங்கள் மனதில் தோன்றும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. தடைகள் விலகும். உடன்பிறந்தோரின் ஆதரவு கிட்டும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர். வியாபாரத்தில் லாபமுண்டு. பங்குதாரர்கள் உரிய அறிவுரை தருவர்.

மகரம்: மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். மனநிறைவுடன் சில பணிகளை செய்து முடிப்பீர். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பர். ஆன்மிகவாதிகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவுண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபார போட்டியை சமாளிப்பீர். பங்குதாரரின் அறிவுரையை கேட்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

  • 351
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி வியாழக்கிழமை 14.5.2026.

இன்று காலை 08.13 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று இரவு 08.06 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று மாலை 03.25 வரை பிரீதி . பின்னர் ஆயுஷ்மான்.

இன்று காலை 08.13 வரை தைத்தூலம். பின்னர் இரவு 07.19 வரை கரசை. பிறகு வணிசை.

இன்று அதிகாலை 05.53 வரை மரணயோகம். பின்னர் இரவு 08.06 வரை சித்தயோகம். பின்பு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=511&dpx=2&t=1778728446

நல்ல நேரம்:

காலை : 10.30முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 351

Good Morning...

  • 347
·
Added a news
·

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் வாகனத்தில் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் 500,000 டொலர் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற நான்கு மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

காவல்துறையினரின் தகவல்படி, இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் ஸ்படைனா அவென்யூ மற்றும் ப்ரெம்னர் பொலிவார்ட் சந்திப்புப் பகுதியில் அதிகாலை சுமார் 4:50 மணியளவில் நடந்துள்ளது.

முகமூடி அணிந்த நான்கு நபர்கள், ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை அணுகியுள்ளனர். வாகனத்திற்குள் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, அவர்களிடம் இருந்த விலையுயர்ந்த நகைகளைப் பறித்துள்ளனர்.

காவல்துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு அரை மில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களை டொராண்டோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். நான்கு பேரும் முகமூடி அணிந்திருந்ததால், அவர்களின் அடையாளங்கள் முழுமையாகத் தெரியவில்லை.

கொள்ளையர்கள் திருடப்பட்ட உரிமத் தகடு கொண்ட நீல நிற நிசான் ரோக் காரை பயன்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது சந்தேகத்திற்குரிய வாகனத்தைக் கண்டாலோ உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • 459
·
Added a news
·

தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 'நம்பிக்கை வாக்கெடுப்பு' இன்று (மே. 13) நடைபெற்றது.

இதில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முதல்வர் விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய், " மனசாட்சியுள்ள மக்களாட்சியை இந்த அரசு தரும். எதிர் தரப்பில் பேசியவர்கள் இது சிறுபான்மை அரசு என்றார்கள். ஆம் இது சிறுபான்மை அரசு தான். இது சிறுபான்மை மக்களுக்காக செயல்படும் அரசு தான். எவரையும் வெறுக்கும் அரசு இல்ல.

எல்லோரையும் விரும்பும் அரசு. மக்களே முக்கியம். மக்கள் நலனே முக்கியம். இது அதிகாரம் காட்டும் அரசு அல்ல. அரவணைக்கும் அரசு.

துள்ளி எழுந்து பதில் சொல்வதைவிட எதிலும் துணிச்சலாக செயலாற்றும் அரசு. மக்களாட்சியை ஆதரித்த அனைவருக்கும் நன்றி." என்று தெரிவித்திருக்கிறார்.

  • 459
  • 454
  • 453
  • 454
  • 454
  • 454
  • 455
  • 455
  • 454
New People