Sign up
Added a post
ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது.கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது.குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி.மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான்.தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து, வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்-இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர். அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது. ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர். அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர். ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை. தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது. அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது. ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள். தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்,ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம். நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது. நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு எல்லாவற்றையும் எரித்தது. அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள்.கல் பதித்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், முத்துக்கள், காசு மாலை, மோதிரம், ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது. தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானாள்,யாரைப் பற்றிப் பேச யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள். அவள் முகம் மலர்ந்திருந்தது. தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்.ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய்.தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை. சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது. கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர். அவள் நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள். எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது, சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர் மாமதுரை மக்கள்.
Added a post
பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி கேள்விப்பட்டேன்.ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து பில்லை கொடுக்க பர்ஸை தேடினால்... காணோம். பதறிப் போய் அங்கும் இங்கும் தேடுகிறார் பஷீர்."என்ன, பர்ஸை காணலியா?" கல்லாவில் இருந்த முதலாளி கர்ஜித்திருக்கிறார்.பஷீர் பலஹீனமான குரலில், "ஆம். வரும்போது எடுத்துக் கொண்டுதான் வந்தேன்."முதலாளி நக்கல் சிரிப்புடன், "எல்லோரும் இதையேதான் சொல்றாங்க. ம்ம்ம்.. நீ போட்டிருக்கற டிரஸ்ஸை கழட்டி கல்லா மேல வச்சுட்டு அம்மணமா போ. அப்போதான் புத்தி வரும்."கூனிக் குறுகிப் போகிறார் பஷீர். வேறு வழியின்றி ஜிப்பாவை கழட்டி கல்லா மேஜையில் வைத்து விட்டு தலை குனிந்து நிற்க,முதலாளி குரல் : "ம்...வேஷ்டியையும் கழட்டு."நாணத்தால் நடுங்கிப் போகிறார் பஷீர். சுற்றிலும் பார்க்கிறார். எழுபது எண்பது பேர் அந்த ஹோட்டலில் அமர்ந்திருக்கிறார்கள்.ஒருவரும் உதவத் தயாராக இல்லை. எல்லோர் கண்களும் ஒரு சக மனிதனின் ஆடையில்லா தோற்றத்தை காண ஆவலோடு காத்திருந்தன.வேறு வழியின்றி பஷீர் தனது வேஷ்டியை அவிழ்க்க கை வைத்தபோது, ஹோட்டலுக்கு வெளியிலிருந்து ஒரு குரல் : "நிறுத்துய்யா."பார்க்கிறார் பஷீர். ஒரு மனிதன் அழுக்கு லுங்கி பனியனுடன் நிற்கிறான். "வேஷ்டியை அவுக்காதே பெரியவரே, முதல்ல ஜிப்பாவை எடுத்து போடு. யோவ் முதலாளி, அவர் உனக்கு எவ்வளவு தரணும். எடுத்துக்கோ."கல்லாவில் காசை விட்டெறிந்து விட்டு, பஷீரை வெளியே அழைத்து வருகிறான் அந்த மனிதன்.நிம்மதி மூச்சோடு நிமிர்ந்து பார்த்த பஷீரிடம் அவன் கேட்கிறான் : "ஏன் பெரியவரே,பர்ஸை ஜாக்கிரதையா வச்சுக்க கூடாதா ? இந்தா , இதில் உன் பர்ஸ் இருக்கா பாரு."அவன் லுங்கி உள்ளே இருந்து பத்துக்கும் மேற்பட்ட பர்ஸ்களை எடுத்துப் போடுகிறான். அதில் அவரது பர்சும் இருக்கிறது.பஷீர் அவன் முகத்தை பார்க்கிறார்."என்ன பெரியவரே அப்படி பாக்கிறே ? நான் திருடன்தான். ஆனால் மனிதாபிமானம் இல்லாதவன் அல்ல."இந்த சம்பவம் பற்றி ஒரு கதையே எழுதி இருக்கிறாராம் பஷீர். அதில் சொல்கிறார் : "அவ்வளவு நேரம் அவனோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் அவன் பெயரை கேட்க மறந்து விட்டேன். அதனால் என்ன ? ஒன்று அறம் அல்லது கருணை. இந்த இரண்டில் ஒன்றுதான் அவன் பெயராக இருக்க முடியும்."வைக்கம் முகம்மது பஷீர் வாழ்க்கை எனக்கு ஒன்றை உணர்த்துகிறது.ஒரு எழுத்தாளனின் கடமை தனது எழுத்தின் மூலம் அன்பையும் மனித நேயத்தையும் மலரச் செய்வதே ! அதை நிறைவாகவே செய்து விட்டு போயிருக்கிறார் வைக்கம் முகம்மது பஷீர்.
Added a post
இன்றைய ராசி பலன் – டிசம்பர் 9, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 23 ஆம் திகதி மேஷம்Aries புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்படும். சுபகாரிய செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். செயல்பாடு மற்றும் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். சலனம் குறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்ரிஷபம்Taurusதாய்மாமன் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்பு மேம்படும். எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் குறையும். எதிர் பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்மிதுனம்Geminiகற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரப் பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைகடகம்Cancerபயணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். இனம்புரியாத தேடல் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைசிம்மம்Leoவிடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். குழந்தைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான மாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சிவப்புகன்னிVirgoபுதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கமிஷன் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய சிந்தனைகள் ஏற்படும். தொழில் போட்டிகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். சாந்தம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்துலாம்Libraபயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகளும், பணிகளும் அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உடனிருப்பவர்களின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் சார்ந்த விரயம் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. விரயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைவிருச்சிகம்Scorpio வழக்கு தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். கலைப் பொருட்களால் விரயம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். கற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழப்பம் விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்புதனுசுSagittariusமனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இணையம் சார்ந்த பணிகளில் வருமானம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள். திர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைமகரம்Capricornவியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்கும்பம்Aquariusஅதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொன் நகைகளில் கவனம் வேண்டும். வெளிவட்டாரங்களில் இருந்துவந்த சங்கடங்கள் குறையும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமீனம்Piscesஆரோக்கியத்தில் சோர்வும், ஒருவிதமான மந்தத்தன்மையும் உண்டாகும். நண்பர்களிடம் தேவையில்லாத கருத்துகளைத் தவிர்க்கவும். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனைகளைப் பெறவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது விவேகத்துடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். கனிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
Added a post
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 23 ஆம் தேதி சனிக்கிழமை 9.12.2023. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.24 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று காலை 10.10 வரை சித்திரை. பின்னர் சுவாதி. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். நல்ல நேரம்:காலை: 09.15 முதல் 10.15 மணி வரைபகல் : 12.15 முதல் 01.15 மணி வரைமாலை : 01.45 முதல் 02.45 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை கிழமைராகு காலம்எமகண்டம்குளிகைசனிகாலை 9 to 10:30 AMமதியம் 1:30 to 3 PMகாலை 6 to 7:30 AM
Featured Discussions
Like us on Facebook
Membership
Unauthenticated
Exchange Rates
My points
Quote of the Day
பழமொழி
"அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்"
Featured Discussions
Featured Organizations
New Events