Quote of the Day

பழமொழி: அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 230
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.

May 18

  • 464
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் கொள்முதல்கள் அதிகரிக்கும். பணி சார்ந்த சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்த தயக்கங்கள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

ரிஷபம்

செயல்பாடுகளில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். வாக்குவன்மை மூலம் மேன்மையான வாய்ப்புகளை அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

மிதுனம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். நிர்வாக பொறுப்புகளில் கவனத்துடன் செயல்படவும். உறவினர்களால் மனதில் சில நெருடல்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் மனதில் அமைதி நிலவும். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் வேண்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணம் தோன்றி மறையும். திடீர் செலவுகள் மூலம் கையிருப்புகள் குறையும். சிறு சிறு விஷயங்களுக்கு பொறுமையுடன் முடிவெடுக்கவும். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சமூகப் நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

பெரியவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய தெளிவினை ஏற்படுத்தும். சிந்தனைகளை செயல்பாடுகளில் மாற்றுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கன்னி

உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பொன், பொருள் சேர்க்கையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். நிர்வாகத்துறையில் செய்யும் மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

துலாம்

அரசு பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். வாகன மாற்ற சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சொத்துக்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

விருச்சிகம்

வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். சமூக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

தனுசு

செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மேன்மை கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

சோர்வுகள் நீங்க சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சிந்தனைகளில் கவனம் வேண்டும். பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

புதிய வியூகங்களை அமைப்பீர்கள். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் சிந்தித்து முடிவு எடுக்கவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம்

நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய வேலை குறித்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 17
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி புதன்கிழமை 20.5.2026.

இன்று மாலை 04.38 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று காலை 11.13 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று இரவு 07.11 வரை சூலம். பின்னர் கண்டம்.

இன்று அதிகாலை 05.47 வரை வனிசை. பின்னர் மாலை 04.38 வரை பத்திரை. பின்பு பவம்.

இன்று அதிகாலை 05.52 வரை மரண யோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=518&dpx=2&t=1779244773

  • 23

Good Morning...

  • 30
  • 182
  • 182
  • 182
  • 182
  • 181
  • 181
·
Added a news
·

 கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு தனித்தீவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படகுகள் மூலமாக மட்டுமே செல்லக்கூடிய ஒரு தொலைதூர ஏரியில் அமைந்துள்ள தீவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஒண்டாரியோவின் கிரேட்டர் சட்பரி பகுதிக்கு தென்மேற்கே அமைந்துள்ள 'லிட்டில் கபோடின்' ஏரியின் தீவொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒண்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் இந்த தீ விபத்து குறித்து நிபிசிங் வெஸ்ட் ஒண்டாரியோ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விபத்து நடந்த பகுதி மிகவும் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்ததால், அங்கு சாதாரண வாகனங்களில் செல்வது சாத்தியமில்லாமல் இருந்தது.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஹெலிகாப்டர் உள்ளிட்ட சிறப்பு படைகள் களமிறக்கப்பட்டன. பொலிஸ் வான்வழி சேவைகள், வடகிழக்கு பிராந்திய அவசரக்கால மீட்புக்குழு மற்றும் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை இணைந்து இந்த மீட்புப் பணியை மேற்கொண்டன.

இந்த கொடூரத் தீ விபத்தில் சிக்கி, சட்பரி பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும், அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மற்றொரு இளைஞர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவர் உயிராபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து ஒண்டாரியோ தீயணைப்புத் துறை அதிகாரிகளின் உதவியுடன் மாகாண பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • 183
·
Added a post
·

இயற்கை கொடுத்த அற்புத வரம் — விளக்கெண்ணெய்!

“ஆமணக்கு எண்ணெய்” என்று அழைக்கப்படும் இதன் பல நன்மைகள் பல தலைமுறைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கூந்தல் வளர்ச்சி

இதில் உள்ள ரிசினோலிக் அமிலம் (Ricinoleic Acid) இரத்த ஓட்டத்தைத் தூண்டி, முடி வளர்ச்சியை வேகப்படுத்த உதவுகிறது.

முடி உதிர்தல் குறையும்

அடர்த்தியாக வளரும்

தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம்

━━━━━━━━━━━━━━━

✨ தோல் பராமரிப்பு

இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் தோலை பாதுகாக்க உதவும்.

✔️ முகச் சுருக்கங்களை குறைக்க உதவும்

✔️ பாத வெடிப்பை மென்மையாக்கும்

✔️ இரவு தூங்கும் முன் பாதங்களில் தடவலாம்

━━━━━━━━━━━━━━━

🌡️ உடல் சூடு தணிக்க

✔️ தொப்புளில் ஒரு சொட்டு வைப்பது உடல் சூட்டை சமப்படுத்த உதவும் என்று பாரம்பரிய நம்பிக்கை உள்ளது

✔️ கண் எரிச்சல், அடிவயிற்று அசௌகரியம் போன்றவற்றில் மக்கள் வழக்கில் பயன்படுத்தப்பட்டு வந்தது

━━━━━━━━━━━━━━━

🍃 செரிமானம் & மலச்சிக்கல்

விளக்கெண்ணெய் இயற்கையான Laxative ஆக செயல்படுகிறது.

✔️ குடல் இயக்கத்தைச் சீராக்க உதவும்

✔️ மலச்சிக்கலை குறைக்க பயன்பட்டது

✔️ கிராமப்புறங்களில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்தது

⚠️ அளவுக்கு மீறி பயன்படுத்தினால் அதிக பேதி ஏற்படலாம்.

━━━━━━━━━━━━━━━

👁️ புருவம் & இமைகள்

தினமும் இரவு மிகச் சிறிதளவு தடவி வந்தால்:

✔️ புருவம் அடர்த்தியாக தோன்ற உதவும்

✔️ இமைகள் கருமையாகவும் வலுவாகவும் மாற உதவலாம்

━━━━━━━━━━━━━━━

⚠️ முக்கிய குறிப்பு

🔸 இது குளிர்ச்சித் தன்மை கொண்டது

🔸 சளி / சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் கவனமாக பயன்படுத்தவும்

🔸 உட்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது

  • 185
·
Added a news
·

கனடிய விமான நிலையங்களில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து, விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டும், கனடாவிலிருந்து விமானம் ஏறிய குறைந்தது 17 அப்பாவி பயணிகள், தங்களது பைகளில் ஒட்டப்பட்டிருந்த 'பயணச்சீட்டு அடையாள அட்டை' (Bag Tags) மாற்றப்பட்டதால், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழல்வாதிகளான சில ஊழியர்கள் இந்தச் சதியில் ஈடுபடுகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணிக்கும் ஒரு அப்பாவியின் லக்கேஜ் பையில் இருக்கும் அடையாள அட்டையை (Tag) ஊழியர்கள் ரகசியமாகப் பிரித்தெடுக்கின்றனர். பின்னர், போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட வேறொரு சூட்கேஸில் அந்த அப்பாவியின் அடையாள அட்டையை ஒட்டி விடுகின்றனர்.

டொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் 3,000 பாதுகாப்பு கேமராக்கள் இருந்தாலும், சில தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கேமராக்கள் இல்லாத 'பிளைண்ட் ஸ்பாட்களை' (Blind Spots) பயன்படுத்தி சில நொடிகளில் இந்த சதி அரங்கேற்றப்படுகிறது.

இந்த போதைப்பொருள் பை இலக்கு நாட்டை அடைந்ததும், அங்குள்ள கடத்தல் கும்பல் அதை எடுத்துக்கொள்ளும். ஒருவேளை அது அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால், அந்தப் பையில் யாருடைய பெயர் இருக்கிறதோ அந்த அப்பாவி பயணி பழிவாங்கப்படுவார்.

நீதிமன்றப் பதிவுகள், காவல்துறை தரவுகள் மூலம் W5 குழு திரட்டிய தகவல்களின்படி, கனடாவிலிருந்து டொமினிகன் குடியரசு, பாரிஸ், ஜெர்மனி, மொராக்கோ, பெர்முடா, பிலிப்பைன்ஸ் மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்குச் சென்ற விமானங்களிலேயே இந்த மோசடிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இதில் சில நாடுகளில் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடி தொடர்பாக, டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய 6 ஊழியர்களை கனடிய பொலிஸார் கடந்த ஆண்டில் கைது செய்துள்ளனர்.

  • 184
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்படும். இயந்திரம் தொடர்பான பணிகளில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். எந்த ஒரு சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

ரிஷபம்

உத்தியோக ரீதியான வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். துரிதமான செயல்பாடுகள் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சுகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

மிதுனம்

பெற்றோர் வழியில் அனுசரித்து செல்லவும். விதண்டாவாத பேச்சுகளை தவிர்க்கவும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி

கடகம்

சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் தோன்றும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். தவறிய சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். உயர்கல்வி ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபார அபிவிருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் நிமித்தமான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. இனம் புரியாத சிந்தனைகளால் மனப்போராட்டம் மேம்படும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

துலாம்

திட்டமிட்ட காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாலின மக்களால் நன்மை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். புதிய துறை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

சமூகப் பணிகளில் விவேகம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அழுத்தங்கள் அதிகரிக்கும். புதிய கொள்முதல்களில் கவனம் வேண்டும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். அரசு சார்ந்த செயல்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

தனுசு

சில முடிவுகளை தன்னம்பிக்கையுடன் எடுப்பீர்கள். தேவைக்கு உகந்த வரவுகள் கிடைக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் உயரும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். தொழில் ரீதியான இழுபறியான வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதரிகள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மகரம்

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரம் ரீதியான பிரச்சனைகளில் தெளிவுகள் பிறக்கும். வழக்குகளில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில வேலைகள் சாதகமாகும். தன வரவுகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அரசால் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

கும்பம்

சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் கூடுதல் லாபங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மீனம்

பெரியோர்களின் கருத்துக்களால் மனதில் மாற்றம் பிறக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவீர்கள். மக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் ஆதாயமும் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

  • 323
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 19.5.2026.

இன்று மாலை 06.55 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று பிற்பகல் 12.55 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

இன்று அதிகாலை 01.05 வரை சுகர்மம் . பின்னர் இரவு 10.05 வரை திருதி. பின்பு சூலம்.

இன்று காலை 08.07 வரை தைத்தூலம். பின்னர் மாலை 06.55 வரை கரசை. பின்பு வனிசை.

இன்று அதிகாலை 05.52 வரை அமிர்த யோகம். பின்னர் பிற்பகல் 12.55 வரை சித்தயோகம். பின்பு மரணயோகம்..

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=516&dpx=2&t=1779157383

  • 327

Good Morning...

  • 330
·
Added article
·

விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’. இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் ஜூலை 3-ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க, விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார்.

  • 452

2009 ஆம் ஆண்டு மே 18 அன்று இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காணாமல் போயினர்.

இந்த நாளை துக்க நாளாகவும், உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாகவும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கடைப்பிடிக்கின்றனர்.

  • 452
·
Added a news
·

பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla), மென்பொருள் கோளாறு (Software issue) காரணமாகக் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள தங்களின் ஆயிரக்கணக்கான கார்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

காரை பின்னோக்கிச் செலுத்தும்போது, அதன் பின்புற கேமரா சரியாக வேலை செய்யாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

கனடா போக்குவரத்துத் துறையின் (Transport Canada) சமீபத்திய அறிவிப்பின்படி, கார்களை ஸ்டார்ட் செய்த உடனே ரிவர்ஸ் கியர் போடும்போது, பின்புறக் கேமராவின் காட்சி திரையில் தோன்றுவதில் தாமதம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவின் விதிமுறைகளின்படி, ரிவர்ஸ் கியர் போட்ட இரண்டு வினாடிகளுக்குள் பின்புற கேமரா காட்சி திரையில் தோன்ற வேண்டும். ஆனால், இந்த மென்பொருள் கோளாறினால் கேமரா காட்சி தெரியாமல் போவதால், காரை பின்னோக்கி எடுக்கும்போது பின்னால் இருக்கும் தடைகளை ஓட்டுநரால் பார்க்க முடியாது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் விவரங்கள்: இந்த தொழில்நுட்பக் கோளாறால் பின்வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட மாடல் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன:

• Tesla Model 3: 2021 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை

• Tesla Model S: 2021 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை

• Tesla Model X: 2022 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை

• Tesla Model Y: 2020 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை

கனடாவில் மட்டும் மொத்தம் 13,846 வாகனங்கள் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதே போன்ற கோளாறுக்காக அமெரிக்காவில் 2,18,000-க்கும் அதிகமான டெஸ்லா கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு இதுகுறித்த அறிவிப்பு மின்னஞ்சல் (Email) மூலம் அனுப்பப்படும் என டெஸ்லா தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மென்பொருள் சிக்கலைச் சரிசெய்ய கார்களை நேரடியாக தயாரிப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லத் தேவையில்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது. வழக்கம்போல இணையம் வழியாகவே இதற்கான மென்பொருள் அப்டேட்டை டெஸ்லா வெளியிட்டுள்ளது.

  • 456
·
Added a post
·

புளித்த ஏப்பம் வயிற்று பிரச்னையின் அறிகுறி

நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது உணவு. ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை நிதானமாக, ஆற அமர உக்கார்ந்து சாப்பிட்டால் தான் அது சரியான முறையில் உடம்பில் சேர்ந்து சக்தியாக மாறும்.

பரபரப்பான வாழ்க்கை, அழுத்தமான வேலை என்று நாம் வாழும் சூழலே மாறிப்போன பிறகு ஆர அமர உக்கார்ந்தெல்லாம் சாப்பிட யாருக்கும் நேரமில்லை. பத்தோடு பதினோறாவது வேலையாகச் சாப்பிட்டுக் கையை கழுவிட்டு ஓடுகிறோம். ஆனால் அது நல்லதல்ல.

*ஏப்பம் ஏன்?*

வயிறு நிறையச் சாப்பிட்டபிறகு இயல்பாக ஏப்பம் வருவதுண்டு. சிலர், சாப்பிட்ட பிறகு சத்தமாக ஏப்பம் விட்டால்தான் நிம்மதியாக உணர்வார்கள்.

ஏப்பம் வருவது இயல்பான உடலியல் நிகழ்வுகளில் ஒன்றுதான். ஒரு நாளில் ஓரிரு முறை ஏப்பம் வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சாப்பிட்டு முடித்ததும் அடிக்கடி, அதிக சத்தத்துடனும் வாடையுடனும் தொடர்ச்சியாக ஏப்பம் வந்துகொண்டே இருந்தால், வயிற்றில் ஏதோ பிரச்னை என்று பொருள்.

அதுவும், ஏப்பம் வரும்போது சாப்பிட்ட உணவுகள் எதுக்களித்து புளிப்புச் சுவையையும், நெஞ்சு எரிச்சலையும் ஏற்படுத்தும். இப்படி வரும் புளித்த ஏப்பம் இரைப்பையில் ஏற்பட்டிருக்கும் நோயின் அறிகுறியாக இருக்கலாம்

*புளித்த ஏப்பம் அடிக்கடி வருவதற்கான காரணங்கள்*

*1. பொதுவான காரணங்கள்*

√ அவசரக் கோலத்தில் சாப்பிடுவது, அடிக்கடி கார்பனேட்டட் டிரிங்ஸ் அருந்துவது, பீன்ஸ், வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பழம், பழைய கோதுமை பிரெட் ஆகியவற்றை அதிகளவு சாப்பிடுவதாலும் அவஸ்தையான ஏப்பம் வரலாம்.

√ சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் மாத்திரைகள், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் அருந்தும் டானிக், வலிநிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றின் பக்க விளைவுகளாகவும் ஏப்பம் வரும்.

இவற்றையெல்லாம் தவிர்த்தபிறகும் தொடர்ந்து ஏப்பம் வந்தால் வயிற்றில் ஏற்பட்டிருக்கும் அமிலப் பின்னூட்ட நோயின் (GERD - Gastro Esophageal Reflux Disease) அறிகுறி என்று புரிந்துகொள்ள வேண்டும்.

*அமிலப் பின்னூட்ட நோய் என்றால் என்ன?*

நாம் சாப்பிடும் உணவானது உணவுக் குழல் வழியாக இரைப்பைக்குள் செல்கிறது. இரைப்பைக்குள் சென்ற உணவு எதுக்களித்து, அமிலங்களோடு இணைந்து மீண்டும் உணவுக் குழலுக்கு வருவதையே `அமிலப் பின்னூட்ட நோய்' என்கிறோம்.

இரைப்பையிலிருந்து மேலெழும் அமிலத்தால் உதரவிதான ஜவ்வு, உணவுக்குழல்கள் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு எரிச்சல் ஏற்படும்.

*2. பிற காரணங்கள்*

√ இரைப்பையையும் உணவுக் குழலையும் பிரிக்கும் உதரவிதானத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள், இரைப்பை திசுக்களின் இயக்கம் குறைந்து போவது, இரைப்பை அழற்சி நோய், இரைப்பை மற்றும் சிறு குடல்களில் ஏற்பட்டிருக்கும் புண், இரைப்பையில் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter Pylori - H. pylori) பாக்டீரியாக்களின் அதிகப்படியான வளர்ச்சி ஆகியவற்றால்கூட நெஞ்செரிச்சல் ஏற்பட்டு புளித்த ஏப்பம் வெளிப்படும். இது தொடர்ந்தால் அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.

√ செரிமான மண்டலத்தில் என்சைம் கோளாறுகள், செரிமான பிரச்னைகள் இருந்தால் நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமடையாது. குறிப்பாக, நம் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் சரியாக செரிமானமாகவில்லை என்றாலும் தொடர்ந்து ஏப்பம் வரும்.

√ மனஅழுத்தம் இருந்தாலும் அடிக்கடி ஏப்பம் வரும்.

தொடர்ந்து நெஞ்செரிச்சலோடு புளித்த ஏப்பம் வந்தால் இரைப்பைப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

*புளித்த ஏப்பம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியது*

X புளித்த ஏப்பம் பிரச்னை உள்ளவர்கள் அதிகக் காரமுள்ள உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.

X சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ சாப்பிடக் கூடாது.

X புகையிலை, மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

X இரவு நேரத்தில் அரை வயிறு மட்டுமே சாப்பிட்டு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் கழித்து உறங்க வேண்டும்.

X நேரத்துக்குச் சாப்பிடுவதோடு, ஏப்பம் வருவதற்குக் காரணமான உணவுகள், மருந்து மாத்திரைகளைத் தவிர்க்கவும் வேண்டும்.

*ஏப்பம் தானே என்ற அலட்சியம் வேண்டாம்*

வயிறு என்பது மிகவும் மென்மையான பகுதி. ஆனால் மிகக்கடுமையான வேலைகளைச் செய்கிறது. அதனால் அதைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. வயிற்றில் எந்தப் பிரச்னை வந்தாலும் அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும்.

தொடர்ந்து புளித்த ஏப்பம் வந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். எண்டோஸ்கோப்பி செய்வதன் மூலம் உணவுக் குழலிலோ அல்லது இரைப்பையிலோ ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

நம் உடலில் வழக்கத்துக்கு மாறாக நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துமே உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை வெளிப்படுத்தும் காரணிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால் `ஏப்பம் தானே' என்று அலட்சியம் செய்யாமல் உடனடியாகப் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வது நமது ஆரோக்கியத்துக்கு நல்லது.

*தீர்வுக்கு என்ன மருத்துவம்?*

புளித்த ஏப்பம் மற்றும் அதையொட்டி வரும் நெஞ்செரிச்சல், செரிமானக்கோளாறு போன்றவற்றை அன்றாடச் சமையலில் சேர்க்கும் இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சில எளிய மூலிகைகள் மூலம் எளிதாகக் குணப்படுத்தலாம்.

√ இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி அது மூழ்குமளவு எலுமிச்சைச்சாறு விட்டு தேவைக்கேற்ப இந்துப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த நிலையில் அந்த இஞ்சித்துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்து வந்தால் புளித்த ஏப்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

√ உணவில் அடிக்கடி பிரண்டைத் துவையல், வேப்பம்பூ ரசம், இஞ்சித் துவையல், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலைத் துவையல் செய்து சாப்பிட்டு வருவது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புளித்த ஏப்பம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் தரும்.

√ அதிமதுரத்தைப் பொடியாக்கிச் சுவைப்பது, சாப்பிட்டவுடன் வெற்றிலை போடுவது, புதினா ஜூஸ் போன்றவையும் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.

  • 460
·
Added a news
·

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று லண்டன் பயணமானார்,லண்டனில் இடம்பெறும் அரச தலைவர்கள் மநாட்டில் கலந்து கொள்வதற்காகவே பயணமாகியுள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.

  • 466
·
Added a news
·

கனடா - டொரண்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கத்திகுத்து சம்பவத்தில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிப்ளிங் அவென்யூ மற்றும் ஆல்பியன் சாலை சந்திப்புப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலில் பலத்த கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரைக் மீட்டனர். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் மற்றும் சந்தேக நபர் இருவருமே 30 வயது மதிக்கத்தக்கவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் சம்பவ இடத்திற்கு அருகிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபரும், சந்தேக நபரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள், அநேகமாக அவர்கள் நண்பர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், முதற்கட்ட விசாரணையின்படி, அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே ஏற்பட்ட ஒரு தகராறு காரணமாகவே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

  • 462

மனம் பக்குவப்பட்டால், பாதை தெளிவாகும். பாதை தெளிவானால், பயணம் எளிதாகும், பயணம் எளிதானால் வாழ்க்கை இனிதாகும்.

*நம் மனம் எப்போதும் நம்மைவிட அடுத்தவர்களுக்காகதான் அதிக நேரம் செலவிடுகிறது.*

மனம் தன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளாதவரை, அது மேலும் மேலும் துன்பத்தை உருவாக்கும். மனதைப் புரிந்துகொள்வதுதான் அமைதியின் தொடக்கம்.

*வயது என்பது உடலுக்கு தான். மனதுக்கு அல்ல. மனதை இளமையாக வைத்து கொண்டால் மரணம் வரை மகிழ்ச்சியாக வாழலாம்.*

  • 474
·
Added a post
·

மேஷம்: உங்கள் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பல வகையிலும் பண வரவு அதிகரிக்கும். வாசனைத் திரவியங்கள், கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். அரசு, வங்கி அதிகாரிகளின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

ரிஷபம்: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். தொழில், வியாபாரத்தில் கவனம் தேவை. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மிதுனம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். வியாபாரத்தின் வளர்ச்சிக்காக புதிய வழிமுறைகளைக் கையாளுவீர்கள். அலுவலகத்தில் வேலைகளை விரைந்து முடித்து, அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து கூடும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். பேச்சில் பொறுமை தேவை.

சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். அரசு அதிகாரிகளின் உதவியால், இழுபறியாக இருந்த சில காரியங்களை முடிப்பீர்கள்.

கன்னி: நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் பேச்சுக்கு செவிசாய்ப்பீர்கள். அக்கம் பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு உண்டாகும். பண வரவு உண்டு.

துலாம்: தொழில், வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். கடந்தகால சுகமான அனுபவங்கள், சாதனைகளை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எதிலும் உங்கள் கை ஓங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம்: திடீர் வெளியூர் பயணத்தால் அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படும். நல்ல வாய்ப்புகளை தவறவிட்டோமே என ஆதங்கப்படுவீர்கள். வாகனத்தில் கவனமாக செல்லுங்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. மகான்கள், பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

தனுசு: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். எதிலும் நிதானம் அவசியம்.

மகரம்: குடும்பத்தினரால் மன நிம்மதி கிடைக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்கள், சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

கும்பம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். தேவையற்ற மனக் குழப்பம் நீங்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். வெளி வட்டாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும்.

  • 516
New People