கனடாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால் நடுத்தரக் குடும்பங்கள் கடும் உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் பேரி உணவு வங்கியை நாடும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக் ஷிப்லி கவலை தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பேசிய பேரி-ஸ்பிரிங்வாட்டர்-ஓரோ-மெடொன்டே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டக் ஷிப்லி, கனடாவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்துப் பல அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பேரி உணவு வங்கியின் மூலம் மாதத்திற்கு வெறும் 1,000 பேர் மட்டுமே உதவி பெற்று வந்தனர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை மாதத்திற்கு 8,000 ஆக உயர்ந்துள்ளது என்று டக் ஷிப்லி சுட்டிக்காட்டினார். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 8,000-க்கும் மேற்பட்டோர் இந்த உணவு வங்கியை நாடியுள்ளனர்.
இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகமாகும் என தெரிவித்தார். மேலும், முதன்முறையாக உணவு வங்கியின் உதவியை நாடி வந்த புதியவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்து, ஒரே மாதத்தில் 377 புதிய குடும்பங்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"லிபரல் கட்சியின் கடந்த பத்தாண்டுகால பொருளாதாரக் கொள்கைகளால், கனடா மக்கள் ஜி7 (G7) அமைப்பில் உள்ள மற்ற நாடுகளை விடப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிவிட்டனர்.
தற்போது ஜி7 நாடுகளில் மந்தநிலையை எதிர்கொள்ளும் ஒரே பொருளாதாரமாக கனடா மாறியுள்ளது" என்று டக் ஷிப்லி ஆளும் அரசை சாடினார்.
கனடா முழுவதும் நிலவி வரும் கடுமையான வீட்டு வாடகை உயர்வு, குடும்பக் கடன்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே மக்கள் தங்களின் அன்றாட உணவிற்குக் கூட உணவு வங்கிகளை நம்பியிருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆச்சு கோமதி... .இந்த 7 வருஷத்துல அவளோட புருஷன் கணேசன் அவளுக்கு ஒரு புடவை கூட வாங்கி தந்ததில்லை.
திருமணத்திற்கு எடுத்த ஒரு ஆறு புடவைகள் மட்டுமே இருக்கிறது
தீபாவளி வந்தாலும், பொங்கல் வந்தாலும், "உனக்கு ஏற்கனவே புடவை இருக்கே"னு ஒரே வார்தை.
அந்த புடவையும் கல்யாணத்துக்கு அவ அம்மா போட்டு அனுப்புனது.
7 வருஷமா.. அதையே திரும்ப திரும்ப துவைச்சு போட்டு போட்டு நிறம் போயிடுச்சு.
ஒரு ரூபாய் கூட கோமதியின் சந்தோஷத்துக்காக செலவு செய்ததில்லை கணேசன்.
அவளுக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும்.
தெருவுல ஐஸ்கிரீம் வண்டி போகும்போது.. அவ கண்ணுல ஒரு ஏக்கம் வரும். கணேசன் அதை பார்தும் பார்காத மாதிரி வேகமா நடப்பான்.
"அதெல்லாம் வீண் செலவு"னு சொல்லுவான்.
சாப்பாட்டுக்கு மட்டும் பணம் கொடுப்பான்.
அதிலும் சிக்கனம்.
காய்கறி வாங்க போனாலும்..
, "அது வேண்டாம், இது விலை அதிகம்"னு கணக்கு போடுவான்.
கோமதி வாரம் முழுக்க உருளைக்கிழங்கு குழம்பும், தக்காளி ரசமும் தான்.
அவளுக்கு மீன் பிடிக்கும்.
7 வருஷத்துல ஒரு தடவை கூட வாங்கி கொடுத்ததில்லை.
பக்கத்து வீட்டு சுமதியின் புருஷன் மாசம் ஒரு தடவை சினிமா கூட்டிட்டு போவான்.
பொட்டு, வளையல், சின்ன சின்ன பரிசு வாங்கி கொடுப்பான்.
சுமதி சிரிச்சுக்கிட்டே வரும்போது
கோமதி கதவு மறைவுல நின்னு பார்ப்பா.
கண்ணுல துளி வரும்.
உடனே துடைச்சுக்குவா.
"எனக்கு அதெல்லாம் தேவையில்லை"னு தன்னை தானே சமாதானப்படுத்துவா.
கணேசன் கஞ்சன் இல்லை. கருமி. தனக்கு கூட செலவு செய்ய மாட்டான்.
7 வருஷமா ஒரே செருப்பு. அடித்தேய்ஞ்சு போயிடுச்சு. அப்பப்போ செருப்ப தைக்கும் தொழிலாளிடம் கொடுத்து சரி செய்து கொள்வான்
பேங்க்ல லட்ச லட்சமா பணம் இருக்கு.
ஆனா அந்த பணம் அவனுக்கு மட்டும்தான்.
மனைவி, பிள்ளைங்க அவனுக்கு பணம் செலவாகுற பொருள்.
கோமதி நரக வாழ்கை வாழ்ந்தாள்
வெளியே சொல்ல முடியாது.
"புருஷன் கஞ்சன்னு சொன்னா..... ஊர் என்ன சொல்லும்"னு வாயை மூடிக்கிட்டா.
இரவு படுக்கும்போது தலையணையை நனைச்சு அழுவா.
"கடவுளே... நான் என்ன தப்பு பண்ணேன்"னு கேட்பா.
7.வது வருஷம் தீபாவளி வந்தது.
வழக்கம் போல கணேசன் ஒரு பைசா கொடுக்கலை.
கோமதி அந்த 7 வருஷமான..
பழைய புடவையை துவைச்சு காய வச்சா. .
நிறம் முழுக்க போயி, வெள்ளையா மாறிடுச்சு.
அதை கட்டிக்கிட்டு தான் கோயிலுக்கு போனா.
கோயில்ல ஒரு வயசான அம்மா அவளை பார்த்ததும் நின்னுட்டாங்க.
கண்களில் கருணைப்பார்வை மிளிர..
உதட்டில் புன்னகை தவழ...
"ஏம்மா... உன் புடவை ஏன் இப்படி இருக்கு"னு கேட்டாங்க.
ராதா எதுவும் சொல்லாம சிரிச்சா.
அந்த அம்மா அவ கையை பிடிச்சு, "வா"னு கூட்டிட்டு போனாங்க.
அவங்க பெயர் லட்சுமி அம்மா.
ஊர்ல பெரிய பணக்காரங்க.
கணவன் இறந்து 10 வருஷம் ஆச்சு.
பிள்ளைங்க வெளிநாட்டுல.
தனிமையில வாடுனாங்க.
அவங்க கோமதியை பார்ததும் ஏதோ ஈர்ப்பு.
"என் கூட இருக்கியா அம்மா.
எனக்கு பேச ஆள் இல்லை.
உனக்கு சாப்பாடு, துணி, எல்லாம் நான் பார்துக்குறேன்"னு சொன்னாங்க.
கோமதி முதல்ல மறுத்தா.
ஆனா லட்சுமி அம்மா விடலை.
"உன் கணவர்கிட்ட பேசுறேன்"னு சொல்லி கணேசனை கூப்பிட்டாங்க.
கணேசன் முதல்ல மறுத்தான்.
"என் பொண்டாட்டியை
நான் பார்துக்குறேன்"னு சொன்னான்.
ஆனா லட்சுமி அம்மா சொன்னாங்க,
"மாசம் 15,000 சம்பளம்.
வாரம் ஒரு நாள் வீட்டுக்கு போகலாம்.
உனக்கும் பணம், அவளுக்கும் நிம்மதி".
பணம்னு கேட்டதும் கணேசன் சரின்னுட்டான். கோமதியை அனுப்பி வச்சான்.
அந்த நாள்ல இருந்து கோமதி
வாழ்க்கை மாறுச்சு.
லட்சுமி அம்மா அவளை மகளா பார்த்தாங்க.
கோமதியும் லட்சுமிமாலை தாயாக பார்த்தாள்
முதல் மாசமே புது புடவை 5 வாங்கி கொடுத்தாங்க.
உன் மனம் சந்தோசமாக இருந்து
"நீ சிரிக்குறத பார்க்கணும்மா"னு சொன்னாங்க.
கோமதி ஏழு வருஷத்துக்கு அப்புறம்
முதல் தடவையா மனசு விட்டு சிரிச்சா.
ஐஸ்கிரீம் சாப்பிட்டா.
சினிமா பார்த்தா.
தனக்கு பிடிச்ச மீன் குழம்பு சமைச்சு சாப்பிட்டா.
லட்சுமி அம்மாவும் கோமதியும் தாயும் மகளும் போல பாசத்துடன் ஓர் ஆண்டு காலம் ஓடியது
ஒரு வருட காலம் கழிச்சு லட்சுமி அம்மா இறந்துட்டாங்க.
இறக்கும்போது உயில் எழுதி வச்சுருந்தாங்க.
தன் சொத்துல பாதியை கோமதிக்கு
எழுதி வச்சுருந்தாங்க.
"என் கடைசி காலத்துல என்னை பார்த்துக்கிட்ட கடவுள் நீதான்மா"னு எழுதிருந்தாங்க.
கோமதிக்கு 50 லட்சம் கிடைச்சது.
அவ வீட்டுக்கு வந்து கணேசன் முன்னாடி... அந்த பணத்தை வச்சா.
கணேசன் கண்ணை விரிச்சு பார்த்தான்.
"எனக்கு கொடு"னு கையை நீட்டினான்.
கோமதி சொன்னாள்,
"7 வருஷம் நான் கேட்டேன்.
ஒரு புடவை கூட வாங்கி தரலை.
இப்போ இந்த பணம் என்னோடது.
நான் எனக்காக வாழ போறேன்".
அன்னைக்கு முதல் தடவையா கோமதி தனக்கு பிடிச்ச புடவையை வாங்கினா.
தனக்கு பிடிச்ச சாப்பாட்டை சாப்பிட்டா.
தனக்காக வாழ ஆரம்பிச்சா.
கணேசன் இன்னும்
அதே பழைய செருப்பை போட்டுக்கிட்டு,
பேங்க் பாஸ்புக்கை பார்துக்கிட்டு உக்காந்துருக்கான்.
அவன்கிட்ட கோடி இருக்கு.
ஆனா வீட்ல யாரும் இல்லை.
கோமதி சொல்றா,
"கடவுள் என்னை தண்டிக்கலை.
என்னை சோதிச்சாரு.
நான் தாங்குனதால தான் எனக்கு
இந்த பரிசு கிடைச்சது".
இப்போ கோமதி ஊர்ல உள்ள
ஏழை பொண்ணுங்களுக்கு..
புடவை வாங்கி கொடுக்குறா.
"நான் அழுதது போதும்.
இனி வேற யாரும் அழக்கூடாது"னு சொல்றா.
கஞ்சத்தனம் செய்து சேர்த்து வச்ச பணம் எல்லாம் கல்லறைக்கு வராது.
ஆனா அன்பா கொடுத்த ஒரு புடவை, ஒருத்தியோட வாழ்க்கையே மாத்தும்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில், வீரவநல்லூர் மற்றும் முக்கூடல் ஆகிய ஊர்களுக்கு அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலம் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஹரிகேசவநல்லூர் ஆரியநாத சுவாமி திருக்கோவில் ஆகும். சுமார் 1100 ஆண்டுகள் பழமையான இந்த பாண்டியர் காலத்து ஆலயம் ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1. பெயர்க் காரணமும் வரலாறும்
• அரசன் பெயர்: இத்தலத்தைக் கட்டியவர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டிய மன்னரான நின்றசீர் நெடுமாற பாண்டியன் (கூன்பாண்டியன்) ஆவார். இவருக்கு அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவரது நினைவாகவே இந்த ஊர் 'அரிகேசவநல்லூர்' (அரிகேசரி நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.
• மறுசீரமைப்பு: பின்னாட்களில் (கி.பி. 1190–1216 இல்) சடாவர்மன் குலசேகர பாண்டிய மன்னரால் இக்கோவில் விரிவாக்கப்பட்டு, மறுசீரமைக்கப்பட்டது. இங்குள்ள கருவறைச் சுவர்களில் பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன.
2. மூர்த்திகளின் சிறப்புகள்
• ஆரியநாத சுவாமி (சிவன்): இக்கோவிலின் மூலவர் கிழக்கு நோக்கி, உயரமான சிவலிங்கத் திருமேனியுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.
• பெரியநாயகி அம்பாள் (பிரகன்னாயகி): அம்பாளுக்குத் தனியாகத் தெற்கு நோக்கிய வாசல் கொண்ட தனிச் சன்னதி உள்ளது. சன்னதிக்குள் அம்பாள் சுமார் 6 அடி உயரத்தில் (பீடத்துடன் சேர்த்து) நின்ற கோலத்தில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியும், அம்பாள் சன்னதியும் தனித்தனியே சற்று இடைவெளி விட்டு அமைந்துள்ளன.
3. தனித்துவமான ஆன்மீகச் சிறப்புகள்
இக்கோவில் மூன்று முக்கிய ஆன்மீகத் தகுதிகளைக் கொண்டு மிகச் சக்திவாய்ந்த தலமாக விளங்குகிறது:
1. பஞ்ச குரு தலம் (Pancha Guru Sthalam): இத்தலம் குரு பகவானுக்குரிய வழிபாட்டுச் சிறப்புகள் கொண்ட ஐந்து முக்கிய தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
2. குபேர தலம் (Kubera Sthalam): செல்வத்திற்கு அதிபதியான குபேரன், இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றதாகப் புராணம் கூறுகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு, இக்கோவில் வளாகத்தில் மண்ணில் புதைந்திருந்த பழமையான குபேரன் சிலை கண்டெடுக்கப்பட்டு, மகா மண்டப நுழைவாயிலில் முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு வடக்கு நோக்கிய குபேர வழிபாடு மிகவும் விசேஷமானது.
3. மாந்தி தோஷ நிவர்த்தி தலம் (Mandhi Dosha Nivarthi Sthalam): சனி பகவானின் மைந்தனான மாந்தியினால் ஏற்படும் தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாக இது திகழ்கிறது. சன்னதியில் சனீஸ்வரர் மற்றும் குபேர லிங்க வழிபாடுகள் உள்ளன.
4. பிற சன்னதிகள் மற்றும் வடிவமைப்பு
• இக்கோவிலுக்குப் பிரம்மாண்ட ராஜகோபுரம் இல்லை. அதற்குப் பதிலாக பலிபீடம், கொடிமரம் மற்றும் நான்கு கால் மண்டபத்தில் அமைந்த நந்தி வாகனம் ஆகியவை வரவேற்கின்றன. கொடிமரம் மண்டபத்தின் கூரையைத் துளைத்துக் கொண்டு வானோக்கிச் செல்வது இதன் கட்டிடக்கலை நயம்.
• ஜேஷ்டா தேவி சன்னதி: பொதுவாகச் சோழர் காலக் கோவில்களில் மட்டுமே ஜேஷ்டா தேவிக்கு (மூதேவி) சன்னதி அமைப்பது வழக்கம். ஆனால், பாண்டிய மன்னர் சோழர் பாணியைப் பின்பற்றி இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தெற்கு நோக்கிய தனிச் சன்னதியை ஜேஷ்டா தேவிக்காக அமைத்துள்ளார். இவரை வழிபடுவது இங்கு மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
• முக்குறுணி விநாயகர்: வெளிப்பிரகாரத்தில் மிகப் பெரிய அளவில் கிழக்கு நோக்கிய முக்குறுணி விநாயகர் வீற்றுள்ளார்.
• மேலும் இங்கு ஜுரதேவர், வீரபத்திரர், சப்தமாதர்கள், கன்னி விநாயகர், காசி விஸ்வநாதர்-விசாலாட்சி மற்றும் வள்ளி-தெய்வானை சமேத சண்முகர் ஆகியோருக்குத் தனிச்சன்னதிகள் உள்ளன.
5. தல விருட்சமும் தீர்த்தமும்
• தல விருட்சம்: நெல்லி மரம் (அம்லா மரம்)
• தீர்த்தம்: கோவிலின் கிழக்கு நுழைவாயிலுக்கு வெளியே அழகான திருக்குளம் (Temple Tank) அமைந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், மாசி மகம், பிரதோஷம், நவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பசுமையான நெல் வயல்களுக்கும், தாமிரபரணி ஆற்றங்கரைக்கும் நடுவே அமைதியான கிராமப்புறச் சூழலில் இக்கோவில் அமைந்துள்ளது.
கோவில் தகவல்கள் & அமைவிடம்
• திறந்திருக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
• தொலைவு:
• வீரவநல்லூரிலிருந்து சுமார் 3 கி.மீ.
• முக்கூடலிலிருந்து சுமார் 4 கி.மீ.
• அம்பாசமுத்திரத்திலிருந்து சுமார் 14 கி.மீ.
• திருநெல்வேலியிலிருந்து சுமார் 39 கி.மீ.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது எலக்ட்ரானிக்ஸ் சாதனம் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம்: தம்பதிக்குள் கருத்துமோதல் வரலாம். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உடன்பிறந்தவர் ஆதரவுடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். வியாபாரத்தில் பணம் வரும். அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.
கடகம்: உறவினர்களின் அன்புத் தொல்லை உண்டு. சிக்கனமாக இருக்க நினைத்தாலும், அத்தியாவசிய செலவு அதிகரிக்கும். வாகனத்தில் இருந்த பழுது நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் கிட்டும். அலுவலகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
கன்னி: குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பர். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் ஆதரிப்பர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
துலாம்: எதிர்பாராத பணவரவால் கடனை பைசல் செய்வீர். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக செயல்படுவர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்.
விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
தனுசு: அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். சக ஊழியர்களைப் பற்றி தலைமையிடத்தில் புகார் கூறுவதை தவிர்ப்பீர்.
மகரம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அரசு வேலைகள் முடிவுக்கு வரும். அலுவலக ரீதியாக இருந்த குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.
கும்பம்: வாகனத்தை சீர் செய்வீர். குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். வியாபார போட்டிகளை எளிதாக சமாளிப்பீர். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைக்கும். சொந்த ஊர் பயணம் உற்சாகம் தரும். வியாபாரத்தில் பிரபலங்களை சந்திப்பீர். பணியாளர்களிடம் கனிவாக பேசுவது நல்லது. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 4.6.2026.
இன்று இரவு 09.46 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று அதிகாலை 12.10 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.
இன்று காலை 08.15 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம்.
இன்று காலை 09.04 வரை பவம். பின்னர் இரவு 09.46 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று அதிகாலை 05.51 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
தளபதிக்குப் பின் மம்முட்டியை ஒதுக்கிய ரஜினி… மீண்டும் இணைய மறுத்த கூட்டணி… எந்தப் படத்தில் தெரியுமா?
மணிரத்னம் இயக்தில் தமிழ் சூப்பர் ஸ்டாரும், மலையாளத்தின் மெகா ஸ்டாரும் இணைந்து நடித்த படம் தான் தளபதி. மகாபாரத இதிகாசத்தில் வரும் கர்ணன்-துரியோதனன் கதையைத் தழுவி நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் ‘ஆறிலிருந்து அறுபது வரை‘ படத்திற்குப் பின் ரஜினி என்ற நல்ல நடிகனை வெளிக் கொண்டு வந்தது.
முற்றிலும் ஸ்டைல், பஞ்ச் வசனங்கள் இல்லாமல் அமைதியான நடிப்பில் மணிரத்னத்திற்கே உருவான இயல்பான இயக்கத்தில் ரஜினி-மம்முட்டி இருவரும் நீயா நானா என போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.
நட்புன்னா என்னான்னு தெரியுமா.. சூர்யான்னா என்னான்னு தெரியுமா? என மம்முட்டி – ரஜினியின் கதாபாத்திரங்களான சூர்யா-தேவா என அசத்தியிருப்பார்கள். இதனையடுத்து மீண்டும் இந்தக் கூட்டணி இந்தக் கூட்டணி இணையுமா என்ற எதிர்பார்ப்பில் இருக்க பாட்ஷா படத்தின் பணிகள் ஆரம்பமானது.
ரியல் அன்வர் பாட்ஷா கேரக்டரில் மம்முட்டியை நடிக்க வைக்கலாம் என படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சொல்ல ரஜினி அதை மறுத்திருக்கிறார். ஏனென்றால் இருவரும் தற்போது தான் தளபதி படத்தில் நடித்திருக்கிறோம். மேலும் பாட்ஷா கதையும் நட்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை எனவே இரு படங்களும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று சொல்ல சுரேஷ் கிருஷ்ணாவும் அதை ஒப்புக் கொண்டார்.
பின்னர் பாட்ஷா கேரக்டருக்கு யாரைப் போடலாம் என விவாதம் எழ ஜென்டில் மேன் படத்தில் முரட்டு போலீஸ் அதிகாரியாக நடித்து புகழ் பெற்ற சரண்ராஜ் நினைவு ரஜினிக்கு வரவே அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
கதைப்படி ஒரிஜினல் பாட்ஷா என்றால் அது சரண்ராஜ் தான். எனவே படத்தின் டைட்டிலும் அவரது கதாபாத்திரப் பெயரிலேயே அமைந்ததால் சரண்ராஜ்க்கு இந்தப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆனது. படத்தில் இருவரும் நண்பர்கள். மாணிக்கமாக ரஜினி நடிக்க அன்வர் பாட்ஷாவாக சரண்ராஜ் நடித்திருப்பார்.
கதைப்படி சரண்ராஜ் இறந்து போக தனது நண்பர் பெயரைச் சேர்த்து மாணிக் பாட்ஷாவாக மும்பையின் டானாக உருவெடுத்து ரகுவரனை அதகளம் செய்யும் காட்சி இன்றளவும் பக்கா கமர்ஷியல் ஹிட் வரிசையில் முதலிடம் பெறுகிறது.
இப்படத்தின் கேரக்டர் குறித்து நடிகர் சரண்ராஜ் கூறுகையில், “நான்தான் பாட்ஷா என்று எனக்குத் தெரியாது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்தால் எப்படி புகழ் பெறுவோம் என்று பாட்ஷா நிரூபித்தது. மேலும் இன்றளவும் ரம்ஜான் பண்டிகை என்றால் பாட்ஷா படத்தில் நானும் ரஜினிசாரும் இணைந்து நடித்த காட்சிகளை அனுப்பி எனக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்“ என்று கூறியுள்ளார்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம் என்றால் அது பாட்ஷா மட்டுமே. தமிழ் திரையுலகில் முதல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படமும் பாட்ஷாதான்.
புண்ணியம் இருந்தால் மட்டுமே மீனாட்சி அம்மன் கோயிலில் இவரை தரிசிக்க முடியும்.
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. இங்கு பலரும் அறிந்திடாத ஒரு முக்கியமான சிறப்பு இக்கோயிலில் அமைந்து உள்ளது. அதை பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் என்கிறார்கள்.
பொதுவாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் பொழுது நேராக அம்மனையும் சொக்கநாதரையும் மட்டுமே தரிசனம் செய்து வந்து விடுவோம். ஆனால், மீனாட்சி அம்மன் கோயிலில் அமையப்பெறாத சன்னதிகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இது பலருக்கும் தெரிவதில்லை அவ்வளவு தான். அப்படியாக, அங்கு கோயிலை சுற்றி வெளிப்புற பாதையில் பல அற்புத விஷயங்கள் மறைந்து உள்ளன. அவற்றில் ஒன்று தான் நாம் பலரும் அறிந்திடாத பாதாள குபேர பைரவர் சன்னதி.
மேலும், இந்த சன்னதி தினமும் ஒரு மணி நேரம் ராகு காலத்தில் மட்டுமே திறந்திருக்கும். அதாவது, ராகு காலம் துவங்கும் போது திறந்து, ராகு காலம் நிறைவடைவதற்குள் சன்னதி சாத்தப்பட்டு விடும்.
இந்த பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த பைரவராக வழிபாடு செய்யப்படுகிறார். அதாவது ஒருவர் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள், பில்லி சூனியம் போன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு இந்த பைரவரை வழிபாடு செய்ய அவை எல்லாம் விலகி மகிழ்ச்சியாக வாழ்வதாக சொல்லப்படுகிறது.
அதோடு இவரை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்வதுதான் மிக சிறந்த பலனை கொடுக்கும். மேலும், இவரை வழிபாடு செய் யும் பொழுது புனுகு, எலுமிச்சை, செவ்வரளி வாங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் கொடுத்தா ல் செவ்வரளியை பைரவருக்கு சாத்தி விட்டு, எலுமிச்சை, புனுகை சுவாமியிடம் வைத்து நமக்கு தருவார்கள்.
பிறகு அதை கொண்டு வந்து வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் நம்முடைய கர்ம வினைக ள் யாவும் விலகி வாழ்க்கையே மாறுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இவரை தரிசன ம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
காரணம், இந்த சன்னதி கோவிலின் வடக்கு கோபுரம் மற்றும் தெற்கு கோபுரம் பாதைகள் சந்திக்கும் வாயு மூலையில் கோவிலின் வெளிப்புறத்தில் அமைந்து உள்ளது. கோவிலை சுற்றி போடப்பட்டுள்ள கம்பிகளுக்கு வெளியில், சாலையில் இருந்து மட்டுமே இந்த பைரவரை தரிசிக்க முடியும்.
மேலும், நமக்கு நேரம் நன்றாக உள்ளது என்றால் கட்டாயம் இவரின் தரிசனம் கிடைத்து விடும். ஆதலால், இனி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் பொழுது மறக்காமல் இந்த பைரவரை தரிசனம் செய்து வாருங்கள் வாழ்க்கையின் மாற்றத்தை பெறுங்கள்.















