இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். தனவரவுகள் தேவைக்கு இருக்கும். சில இடங்களில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் புரிதல்கள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
ரிஷபம்
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். கூட்டு வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தன வருவாயிலிருந்து வந்த இழுபறிகள் அகலும். விளையாட்டு செயல்களில் திறமைகள் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழித்து இருப்பதை தவிர்ப்பது நல்லது. அரசு செயல்பாடுகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
கடகம்
தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த சுபச் செய்திகள் கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
எந்த காரியத்தையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் பணியாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
வருமானத்தில் திருப்தியான சூழல்கள் அமையும். பேச்சுக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். துணைவரின் ஒத்துழைப்புகள் மாற்றத்தை உருவாக்கும். பழைய பிரச்சனைகளில் சில தீர்வுகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் கடன் உதவிகள் சாதகமாகும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். மனதில் இருந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். அஞ்சல் துறையில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விருச்சிகம்
கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வெளிப்பயணங்களில் நிதானம் வேண்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்த போட்டிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் நிமித்தமான புதிய சிந்தனைகள் உருவாகும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
மகரம்
குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வியாபார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கும்பம்
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவுகள் பிறக்கும். சேமிப்புகள் மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். சிக்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
வெளியூர் பயண சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விலையுயர்ந்த துணிகளை வாங்கி மகிழ்வீர்கள். காதில் அணியும் ஆபரணங்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 25 ஆம் தேதி புதன்கிழமை 9.7.2025.
இன்று அதிகாலை 01.32 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.
இன்று அதிகாலை 04.35 வரை கேட்டை. பின்னர் மூலம்.
இன்று இரவு 11.07 வரை சுப்பிரம். பின்னர் ஐந்திரம்.
இன்று அதிகாலை 01.32 வரை . தைத்தூலம். பின்னர் பிற்பகல் 02.04 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று அதிகாலை 04.35 வரை சித்தயோகம். பின்னர் அதிகாலை 05.57 வரை அமிர்தயோகம். பின்பு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
*நீதிபதி; நீங்கள் இருவரும் காதல் திருமணம்தானே!... உங்களுக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டுமா!?*
*மனைவி; ஆமா பெரிய "காதல்!" நான் ஏமாந்துட்டேன் ஐய்யா!!! இவர் வாயை திறந்தாலே எல்லாமே பொய்தான், ஒரு விசயத்தில் கூட என்னிடம் உண்மையாகவே இல்லை...*
*கணவன்; இவள் பயங்கரமான ஹிட்லர் பேத்தி ஐயா! எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி கேட்கிறாள், சந்தேகப்படுகிறாள், தயவு செய்து விவாகரத்து கொடுத்துடுங்க...*
*நீதிபதி; சரி உங்கள் விருப்பப்படி விவாகரத்து கொடுத்து விட்டால் உங்கள் குழந்தையை யார் வைத்துக் கொள்வது!?*
*கணவன்; என் குழந்தை என்னிடம்தான் வளர வேண்டும், அதுதான் நியாயமும் கூட...*
*மனைவி; அது எப்படி! பத்து மாசம் சுமந்து கஷ்டப்பட்டு பெத்தது நான்! உடனே இவங்களுக்கு தூக்கி கொடுத்திடணுமா!*
*நீதிபதி; இதற்கு என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர்.?*
*கணவன்; ஐய்யா உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?*
*நீதிபதி; ம்ம்! கேளுங்க!?*
*கணவன்; ஐய்யா!!! ATM மெஷின்ல கார்டு சொருகி பணம் எடுத்தப் பிறகு அந்த பணம் ATM மெஷினுக்கு சொந்தமா! இல்ல! பணம் எடுத்த அந்த ஆளுக்கு சொந்தமா!???*
*மனைவி: அடப்பாவி"!!!*
*ஒரே கேள்வியில் தலை கிறு கிறுவென சுற்றி டேபிளில் அடித்து கீழே விழுந்தார் ஜட்ஜ்...*
*கோர்ட்*
*இத்துடன் கலைகிறது.*
மனிதர்களைப் பொருட்களைப்போல் நடத்துவதும் பொருட்களை மனிதர்களைப்போல் பயன்படுத்துவதும் இன்றைய உலகின் இயல்பாகிவிட்டாலும் இச்சூழலிலிருந்தும் இத்தன்மையிலிருந்தும் , பலர் சாதுர்யமாக தப்பிவாழ்கிறார்கள்.
சிலர் சூழலுக்குத்/ மனிதர்களுக்குத் தக்கவாறு வாழ்வதையும் இயல்பாக கடைபிடிக்கிறார்கள். அவர்கள் இயல்பாகவும் அதனையே மாற்றிக்கொண்டுவிடுகிறார்கள். அடுத்தவர் வலியை அறிவதில்லை. பணம் -பதவி- தகுதி கண்டு பழகுகிறார்கள். தங்களையே அறிவிற் சிறந்தவர்களாகவும் கருதிக்கொள்கிறார்கள். காலத்தின் வலிமையை அவர்கள் உணர்வதில்லை . வரலாறு நெடுக மனிதர்களின் கதைகள் உள்ளதையும் அறிந்தும் அறியாது திரிகிறார்கள்.
மனிதர்களைப் போற்றுகிறவர்களாக வாழவும்
மனிதர்களை, மனித மனத்தின் வலியை உணர்ந்தவர்களோடும்
வாழவும் , வாழ்க்கை வளமாகவும் நல்வாழ்த்துகள்.
உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது.
எனக்குத் தெரியும். என் பெயர் விஜயா. பாரதியின் மூத்த பெண், தங்கம்மாவின் மகள் நான். என் பாட்டி கடையத்தில் வாழ்ந்த போது அவருடன் என் இளமைக் காலத்தைக் கழித்தேன். நான் திருநெல்வேலியில் கல்லூரியில் படித்த போது, என் பாட்டி வாழ்ந்த கடையத்தில்தான் என் விடுமுறைகளைக் கொண்டாடினேன்.
பாரதியின் மரணத்தின் போது என் பாட்டிக்கு முப்பதே வயது. இளம் விதவை. கல்வி கற்காத பெண். இரண்டு பெண்கள். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. சொத்து என்று இருந்ததெல்லாம் அவள் கணவரின் எழுத்துக்கள் மட்டுமே. கொஞ்சம் அவள் நிலையை எண்ணிப் பாருங்கள். அந்தக் காலத்தில், விதவைப் பெண்களின் வாழ்வு, அவள் உறவினர்களைச் சார்ந்தே இருந்தது. அதுவும் இரண்டு பெண்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு வேறு.
என் பாட்டிக்கு, பாரதிதான் தெய்வம். அவர் மறைவுக்குப் பின், அவர் விரும்பிய புதுமைப் பெண்ணாகவே நடந்தாள் என் பாட்டி. தன்னிடம் இருந்த சில மூட நம்பிக்கைகளையும், மனக் கலக்கங்களையும், தேவையில்லாத பழம் வழக்கங்களையும் விட்டு ஒழித்தாள்.
எதையும் சமாளிக்கும் மன தைரியமும், தீவிர கடவுள் பக்தியும், நல்ல காலம் பிறந்தே தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், விடா முயற்சியும் கொண்டு வாழ்ந்தாள்.
தன் பெண்கள் மற்றும் பேரக் குழந்தைகளின் கல்வி மட்டுமே அவளின் ஒரே குறிக்கோள். எப்படியாவது நாங்கள் அனைவரும் – முக்கியமாக பேத்திகள் – படித்து விட வேண்டும் என்று பாடுபட்டாள். நான் டாக்டர் பட்டம் வரை பெற்றதற்கு அவள்தான் ஓரே காரணம்.
தன் கணவன் பாரதியின் நினைவுகளே அவளின் சக்தி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் பாடல்களைப் பாடிக் கொண்டும், எங்களையும் பாட வைத்துக் கேட்டுக் கொண்டும் இருப்பாள். பாரதியும் எல்லாப் பாடல்களும் அவளுக்கு மனப்பாடம் என்று என் அம்மா சொல்லக் கேட்டு இருக்கிறேன்.
வறுமை என்பதை உணர விடாமலேயே என்னை வளர்த்தாள். நான் கல்லூரியில் இருந்து வரும் போதெல்லாம், என்னை வாசலில் இருந்தே கட்டி அணைத்து “வாடாக் குழந்தே.. கை கால் அலம்பிட்டு வா. சாப்பிடலாம்” என்று ஊட்டி விட்டுக் கொண்டே நான் என்னவெல்லாம் படிக்கிறேன் என்று ஆர்வமாய் கேட்பாள்.
1955 ஆம் வருடம். அவளுடன் என் கடைசி விடுமுறை.
“வந்துட்டியாம்மா! உனக்காகத்தான் காத்துண்டு இருக்கேன்” என்று என்னை படுக்கையில் இருந்தபடியே வரச் சொல்லி கட்டி அணைத்துக் கொண்டாள். அவளுக்கு உடல் நலம் சரியில்லை என்பதை எனக்கு எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டாள். “லீவு விட்டதும் வந்தா போதும்”.
அதற்குப் பிறகு, கோமாவில் விழுந்து விட்டாள். ஒரு அசைவும் இல்லை. உணவு செல்லவில்லை. டாக்டர் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று கை விரித்து விட்டார். எல்லோரையும் வரச் சொல்லி விட்டோம். பெண்கள், பேரன் பேத்திகள், உறவினர்கள் என்று வீடு முழுவதும் கூட்டம்.
நான் அவளின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். ஒரு முறையாவது கண் திறக்க மாட்டாளா என்ற ஏக்கம். கண் திறக்கவில்லை. விழி கூட அசையவில்லை.
பின்னிரவு நேரம். வீடே அமைதியில் உறைந்து இருந்தது. இறுதி நிமிடங்கள் என்று எல்லோருக்கும் தோன்றி இருக்க வேண்டும். நீர் நிறைந்த கண்கள் எதுவும் உறங்கவில்லை.
அவள் உதடுகள் மட்டுமே விரிந்தன.
“திண்ணை வாயில் பெருக்க வந்தேன்.
எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்”
என்று மெல்லிய குரலில் பாட்டி பாடினாள். நிறுத்தி விட்டாள்.
என் மனதுக்குள் அடுத்த வரிகள் எழுந்தன. ஏங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன்.
நித்தச் சோற்றினுக்கே ஏவல் செய வந்தேன்;
நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான்.
வித்தை நன்கு கல்லாதவள் என்னுளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.
அதே இரண்டு வரிகளை இன்னும் ஒரு முறைப் பாடினாள்.
“திண்ணை வாயில் பெருக்க வந்தேன்
எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்”
சில நொடிகள் மௌனம். மீண்டும் அவள் குரல். இன்னும் மெல்லியதாய்.
உடல் எழுப்பும் குரலாய் இல்லாமல், அதை விட்டு விலகிச் செல்லும் அவள் ஆத்மாவின் குரலாய்..
“திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான். திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்”
அவள் மூச்சு நின்று விட்டது.
அவள் அரசன் பாரதி சென்ற நாராயணனின் திருவடிகளுக்கே பாரதியின் செல்லம்மாவும் சென்று விட்டாள்.
என் பாட்டி செல்லம்மாள் பெரும் பாக்கியவதி.
டாக்டர் விஜயா பாரதி, 1960களிலேயே, பாரதியின் கவிதைகளை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் கவிதைகளைப் பிழை நீக்கி நான்கு பகுதிகளாக சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ்.
‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர்.
போனான்.
‘சிட் டவுன்’
உட்கார்ந்தான்.
அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை. சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது.
ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள்.
அதற்கு அவர் ‘இட்ஸ் ஓக்கே.. நீங்க ஆரம்பியுங்க’ என்பது போல் ஜாடை காட்டிவிட்டு கொஞ்சம் தளர்ந்து உட்கார்ந்து கொண்டார்.
வலக் கோடியில் இருப்பவர் ஆரம்பித்தார்.
‘எப்படி இருக்கு இந்த அட்மாஸ்பியர்?’ என்றார்.
‘இது ஒரு நல்ல கான்ஃபரன்ஸ் ஹால். புரஜக்டர், ஸ்க்ரீன், வொய்ட் போர்ட், மார்க்கர், சவுண்ட் புரூஃபிங், வசதியான நாற்காலி, உயர்ந்த கார்ப்பெட். மனசுக்கு இதமான அட்மாஸ்பியர்’ என்றான் ரமேஷ்.
‘இவ்வளவு நல்ல அட்மாஸ்பியர்ல அந்த கசக்கிப் போட்ட காகிதம் உறுத்தலா இல்லையா? அதை ஏன் சொல்லல்லை?’
‘கவனிச்சேன் சார் அதை. அந்தக் காகிதம் அதோ உட்கார்ந்திருக்காரே அவரோட ஸ்க்ரிப்ளிங் பேடோட முதல் பக்கம். கிழிக்கிறப்போ கொஞ்சம் கோணலா கிழிச்சிருக்காரு. பேடிலே முக்கோணமா கொஞ்சம் பாக்கி இருக்கு அந்தப் பக்கத்தில். நான் பாட்டுக்க சுத்தமா இருக்கிற இந்த ரூம்ல யாரோ ஒரு மடையன் குப்பை போட்டிருக்கான்னு சொன்னா அவர் மனசு புண்படும்ன்னுதான் சொல்லல்லை’
நாலு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘சரி, வெளியில ஒரு அம்மா தரையை துடைச்சிக்கிட்டு இருக்கும், அதைக் கூப்பிட்டு குப்பையை எடுத்துப் போடச் சொல்லுங்க’ என்றார் வலது.
‘அந்தம்மா பேர் என்ன சார்?’
மறுபடியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
‘இட்ஸ் ஓக்கே. உங்க யாருக்கும் அந்தம்மா பேரு தெரியாதுன்னு நினைக்கிறேன்’ என்றவன் எழுந்து நடந்து போய் கதவைத் திறந்து வெளியில் உட்கார்ந்திருந்த பியூனிடம் ‘அந்தம்மா பேர் என்ன?’ என்று கேட்டான். பியூன் சொன்னான்.
‘பவானி, இங்கே வாம்மா’ என்று கூப்பிட்டான். சுத்தம் செய்யச் சொன்னான். மறுபடி வந்து நின்றான்.
‘சிட் டவுன். ஏன் நிக்கறீங்க?’
உட்கார்ந்தான்.
‘எல்லா விஷயத்தையும் நல்லா கவனிக்கிறீங்க. வேலைக்காரர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இன்னும் ஒரே ஒரு கேள்வி. அதுக்கும் சரியா பதில் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு நூறு மார்க்’
‘கேளுங்க சார்’
‘எங்க நாலு பேர்ல ஒருத்தர் தொழிற்சாலை முதன்மை அதிகாரி, ஒருத்தர் பர்ஸான்னல் டிப்பார்ட்மெண்ட் ஹெட், ஒருத்தர் ஃபைனான்ஸ் ஹெட், ஒருத்தர் உங்க பாஸ். யார் யார் என்னென்னன்னு சொல்லல்லைன்னா கூட பரவாயில்லை. தொழிற்சாலை ஹெட் யாருன்னு மட்டும் சொல்லுங்க பார்ப்போம்?’
‘நான் வரும்போது நீங்க மூணு பேரும் இடது கோடியில் இருக்கிறவர் கிட்டே ரொம்ப பவ்யமா நடந்துகிட்டீங்க. அது என்னை கன்ஃப்யூஸ் பண்ணத்தானே ஒழிய அவர் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்களும் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்கதான் பாஸ். நான் சரியா பதில் சொல்லச் சொல்ல உங்க முகத்தில் பெருமை தாங்கல்லை. எப்படிப்பட்ட ஆளை செலக்ட் பண்ணியிருக்கேன் பார் என்கிற பெருமை தெரியுது.
மீதம் ரெண்டு பேர் அமைதியா இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர்தான் ஃபேக்டரி ஹெட். நீங்க எல்லாருமே ஒரு ஸ்க்ரிப்ளிங் பேட் வச்சி ஏதோ நோட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் இதுவரை எதுவுமே எழுதிக்கல்லை. அவர் ஃபைனான்ஸ் ஹெட்டா இருப்பார். சம்பளம் பேசும்போதுதான் எழுதுவார். ஆகவே ரெண்டாவதா இருக்கிறவர்தான் ஃபேக்டரி ஹெட். இடது கோடியில் இருக்கிறவர் பர்ஸான்னல் மேனேஜர். அவர்தான் இந்த நாடகத்துக்கெல்லாம் டைரக்டர்.
‘ஸ்ப்ளெண்டிட்.. உங்க ஆப்ஸர்வேஷன் பவர் பிரமாதம். ஒரு மெய்ண்ட்டனன்ஸ் ஆளுக்கு இருக்க வேண்டிய தகுதி அது. வெய்ட் பண்ணுங்க. வீ வில் லெட் யு நோ’
‘சார், புது விதமான இண்ட்டர்வியூ சார். வழக்கமா வந்ததும் ஃபைலை வாங்கிப் பார்க்கிறது. டெல் அஸ் சம்திங் அபௌட் யூ மிஸ்டர் ரமேஷ்ங்கிறது. இதெல்லாம் எதுவுமே இல்லை. டக்குன்னு ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கும் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. சூப்பர் சார்’
‘தேங்க் யூ. பட், பேரென்ன சொன்னீங்க, ரமேஷா? நீங்க சுந்தரேசன் இல்லையா?’
‘அவர் வெளியில வெய்ட் பண்றார் சார்’
‘பின்னே நீங்க?’
‘நான் கேன்டீன்ல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு எத்தனை செட் டீ ஸ்னாக்ஸ் அனுப்பணும்ன்னு பார்த்துகிட்டு வரச் சொன்னாரு சூப்பரவைசர். எட்டிப் பாத்தேன், உள்ளே கூப்பிட்டீங்க, உக்காரச் சொன்னீங்க, கேள்வி எல்லாம் கேட்டீங்க. ஜாலியா இருந்திச்சு சார்’....!!
சமீப காலமாக சிம்பு நடிப்பில் வந்த எந்தப் படமும் ஹிட் படமாக அமையவில்லை. ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. சமீபத்தில் திரைக்கு வந்த தக் லைஃப் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இப்போது சிம்பு தனது 49ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இவர் பார்க்கிங் படத்தை இயக்கி பிரபலமானார்.
சமீப காலமாக சிம்பு நடிப்பில் வந்த எந்தப் படமும் ஹிட் படமாக அமையவில்லை. ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. சமீபத்தில் திரைக்கு வந்த தக் லைஃப் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இப்போது சிம்பு தனது 49ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இவர் பார்க்கிங் படத்தை இயக்கி பிரபலமானார்.
குறள் தியேட்டர் – சிலம்பு தியேட்டர் என்று ஒரு திரையரங்கு இருக்கிறதாம். இந்த தியேட்டரில் போதுமான வசதிகள் இல்லை என்றும், மிகவும் பழமையான திரையரங்கு என்றும் கூறப்படுகிறது. இந்த திரையரங்கானது வேலூர் கோடைக்கு பின்புறம் பெங்களூரு ரோட்டில் அமைந்துள்ளதாம். இனி வரும் காலங்களில் இந்த திரையரங்கு புதுப்பிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி சிம்புவின் நிகர சொத்து மதிப்பு பற்றி பார்க்கையில் அவருடைய நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.100 கோடியாம்.இந்த 100 கோடியும், அவர் நடிகர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் ஆகியவற்றின் மூலமாக சம்பாதித்துள்ளாராம். இப்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். இனி வரும் காலங்களில் இந்த நிறுவனம் மூலமாக பல படங்களை தயாரிக்க வாய்ப்புகள் இருக்கிறது.
பான் இந்தியன் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த குபேரா படம் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. இதை தொடர்ந்து Girlfriend, Thama ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் சோலோ ஹீரோயின் சப்ஜெக்ட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Thama திரைப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது. இதில் வெறித்தனமான லுக்கில் ராஷ்மிகா மந்தனா இருந்தார்.
ராஷ்மிகா மந்தனாவின் போட்டோஷூட் என்றால் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக வைரலாகும். இந்த நிலையில், பிரபல magazine-க்கு ராஷ்மிகா நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
இந்த magazine cover போட்டோஷூட்டில் தனது கெட்டப்பை முழுமையாக மாற்றி, ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதுதான் அந்த புகைப்படம்..
ராம் இயக்கத்தில் ஐந்தாவதாக வெளிவந்துள்ள படம்தான் பறந்து போ. இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவா என பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
4 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் பறந்து போ படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 4.1 கோடி வசூல் செய்துள்ளது.
தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் - ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசை நிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சர்வதேச அளவிலான இவரது இசைப் பயணம் ரசிகர்களிடத்தில் பிரபலமாக இருக்கும் தருணத்தில் எதிர்வரும் 26 ஆம் தேதி அன்று கிழக்கு கடற்கரை சாலையில் அமையப்பெற்றிருக்கும் திருவிடந்தை எனும் இடத்தில் #Hukum எனும் பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்லாயிர கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையானது.
இந்திய அளவிலான இசையமைப்பாளர்கள் தலைமை ஏற்று நடத்தும் இசை நிகழ்ச்சி ஒன்றின் டிக்கெட் இவ்வளவு குறைவான நேரத்தில், அதிவேகமாக விற்பனையாகி புதிய சாதனை படைத்திருப்பது இதுதான் முதன்முறை என திரையிசை ரசிகர்கள் அனிருத்தை கொண்டாடுகிறார்கள்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். இது நடிகைகள் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. மார்க்கெட் இருக்கும்போதே படங்களை கமிட் செய்து கை நிறைய லாபம் பார்த்து விடுகின்றனர் இளம் நடிகைகள். அதில் இப்போது ட்ரெண்டிங்கில் பூஜா ஹெக்டே, கையாடு லோகர், மமிதா பைஜூ ஆகியோர் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்குள் தான் போட்டி கடுமையாக இருக்கிறது.
அதில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்று வருகிறார் மமிதா. பிரேமலு மூலம் தமிழ் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்த இவர் தற்போது ஆறு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அதில் இவர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து இரண்டு வானம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து டியூட் படத்திலும் நடித்து வருகிறார்.
அதையெல்லாம் தாண்டி சூர்யாவுக்கு ஜோடியாக அவருடைய 46வது படத்திலும் இவர்தான் ஹீரோயின். ஏற்கனவே வணங்கான் படத்தில் இவர்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில பிரச்சனைகளின் காரணமாக விலகிவிட்டார். இருந்தாலும் மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து விட்டது. அதை தொடர்ந்து தற்போது தனுசுக்கும் இவர் ஜோடியாகி இருக்கிறார். போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் பீரியட் கதையில் அம்மணி தான் ஹீரோயின்.
நிச்சயம் தனுசுடன் இவருடைய ஜோடி பொருத்தம் வரவேற்பு பெரும் என ரசிகர்கள் இப்போதே அலப்பறையை தொடங்கிவிட்டனர். அதேபோல் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இது மட்டும்இல்லாமல் மலையாளத்திலும் ஒரு படம் இவர் கைவசம் உள்ளது. இப்படியாக அவர் தற்போது பிஸியான நாயகியாக இருக்கிறார்.
1.பிறருக்கு கடன் கொடுக்காதீர்கள் பிறரிடமிருந்து கடன் வாங்காதீர்கள். இருப்பதைக் கொண்டு மட்டுமே சிறப்புடன் வாழுங்கள்.
2. ஓட்டு வீட்டில் தரையில் படுத்து உறங்கினாலும் நிம்மதியான வாழ்க்கை வாழுங்கள்... கடன் வாங்கி வீடு கட்டி கட்டில் பஞ்சுமெத்தையில் உறங்க வேண்டும் என்று நினைத்த நிம்மதியை இழப்பீர்கள்...
3. பிறரைப் பார்த்து பொறாமைப் படுவதைவிட இன்று நமக்கு கடவுள் கொடுத்ததை பலருக்கு கடவுள் கொடுக்காமல் இருக்கிறார் என்று சிந்தித்து பொறாமை குணத்தை விட்டொழியுங்கள்.
4. ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்கள். உணவிற்கு அதிக தொகையை செலவிடுங்கள்.( நமக்கு சோறு தான் முக்கியம் )
5. உங்களுடைய இலக்கை நோக்கி நீங்க ஓடுங்க இல்லையா நடங்க அதுவும் இல்லையா தவழ்ந்த கூட போங்க. ஆனா எப்பயுமே முயற்சியை விட்டுறாதீங்க.
6. நடந்து முடிஞ்சத நெனச்சி நெனச்சி இருக்கிற காலத்தையும் வீணடிக்காதீர்கள்.
7. கிடைத்த வேலையை சந்தோஷமாக செய்யுங்கள்.பிடித்த வேலைக்கு முயற்சி செய்து கொண்டே இருங்கள். பிடித்த வேலை கிடைக்கவில்லை என்று கிடைத்த வேலையை உதாசீனப்படுத்தாதீர்கள்.
8. 30 வயதுக்கு முன்பே திருமணம் முடித்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் பெண் கிடைப்பது ரொம்ப கஷ்டம் அதை நினைத்து கவலைப்படுவீர்கள்...
9. அம்மா அப்பாவிற்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள்.உங்களுக்கு தெரிந்ததை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.
10. எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்யுங்கள். அனைவரிடமும் அன்பாக சிரித்து பேசி பழகுங்கள்.
வாழ்க வளமுடன் நலமுடன்..
புற்றுநோய், மஞ்சள் காமாலை, சர்க்கரை வியாதியை குணப்படுத்த இந்த ஒரு காய் போதும்
நமது முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் அவர்களின் உணவுமுறை.
நாம் இப்போது முப்பது வயதுகளிலியே சர்க்கரைநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாவதும் நமது உணவு முறையால்தான்.
இயற்கை நமக்கு எண்ணற்ற கொடைகளை தந்திருக்கிறது, அதை முன்னோர்கள் மதித்து செயல்பட்டதால்தான் அவர்களால் ஆரோக்கிய வாழ்வு வாழ முடிந்தது.
இயற்கையை மதிக்காததன் விளைவு இன்று நம் வருமானத்தில் பாதி மருத்துவ செலவிற்கே செல்கிறது.
ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது *அதலைக்காய்* என்னும் அற்புத மருந்து.
அதலைக்காய் பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரு காய் உங்களை சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் என்றால் நம்புவீர்களா?
ஆனால் இது பாதுகாக்கிறது என்பதுதான் உண்மை.
அதலைக்காய் இந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரமாகும். இதிலுள்ள சத்துக்கள் நம்மை பலவகையான நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியது.
இதனை யாரும் விளைவிக்க வேண்டிய அவசியமில்லை. மழைக்காலம் வந்தால் இது தானாகவே சாலையோரமும், விளைநிலங்கள் அருகிலும் விளையத்தொடங்கும் இது தென்மாவட்ட விவசாயிகளுக்கு முதலீடே இல்லாமல் இலாபம் தரக் கூடியதாகும்.
இதிலுள்ள சத்துக்கள் முறையே நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் என இதில் உள்ள சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தனை சத்துக்கள் நிறைந்த இதை நாம் கவனிக்காமல் இருப்பது நமது அறியாமைதான்.
சமைக்கும் முறை
அதலைக்காய் பாகற்காயை போன்றே கசப்பு சுவையுள்ளது, அதனாலேயே பெரும்பலானோர் இதனை உண்பதில்லை.ஆனால் இதன் மகிமையை அறிந்தவரகள் இதனை ஒருபோதும் வெறுப்பதில்லை.
இதனை சாம்பாராக வைக்க இயலாது எனவே பொரியலாகவோ அல்லது புளி குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம். சரியான பக்குவத்தில் சமைத்தால் சுவையிலும், சத்துகளிலும் இதனை மிஞ்ச வேறு காய்கறிகளே இல்லை.
சர்க்கரை நோய்
இதன் சதைப்பகுதி இன்சுலின் போல செய்லபடக்கூடியது. இன்சுலின் என்பது நமது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள மிகவும் அவசியம்.
மேலும் சர்க்கரையை குறைக்கும் பல சத்துக்களை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அதலைக்காய் இயற்கை கொடுத்த வரமாகும்.
புற்றுநோய்
இதிலுள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்கள் இரத்தத்தில் வளர்வதற்கான ஆற்றலை தடுக்கிறது.
முக்கியமாக இது கணையத்தை பாதுகாப்பதால், இதனை தொடர்ந்து உண்பவர்களுக்கு கணைய புற்றுநோய் வர வாய்ப்புகள் மிகக்குறைவு. அதுமட்டுமின்றி இதில் உள்ள லெய்ச்சின் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, புற்றுநோய் செல்கள் பாதிப்பையும் தடுக்கிறது.
சிறுநீரகச் செயல்பாடு
சிறுநீரகப் பாதிப்பு என்பது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடியது. ஒருவேளை உங்களுக்கு *சிறுநீரக பாதிப்பு இருந்தால் இந்த அதலைக்காயை சாப்பிட மறந்துவிடாதீர்கள்*.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் சிறுநீரகக் கற்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கறையத் தொடங்கும். இதில் உள்ள பைடோநியூட்ரின் உங்கள் இரத்தத்தை சுத்திகரிப்பதில் உதவும்.
மஞ்சள் காமாலை
பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் தாக்கக்கூடிய ஒரு நோய் மஞ்சள் காமாலையாகும்.
கண்களோ அல்லது சருமத்தில் ஒரு பகுதியோ மஞ்சள் நிறத்திற்கு மாறுவது இதன் முதன்மையான அறிகுறியாகும்.
வைட்டமின் டி குறைபாடே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
அதலைக்காயிலுள்ள ஆல்பமின் மஞ்சள் காமாலையை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. உங்கள் உணவில் தினமும் இதைச் சேர்த்துவர மஞ்சள் காமாலை தானாக குணமடைவதை நீங்கள் உணரலாம்.
எய்ட்ஸ்
எய்ட்ஸ் நோய் என்பது நம் இரத்தத்தில் உள்ள அணுக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து நம் உடலின் பாகங்களை செயல்பட விடாமல் செய்வதே.
அதலைக்காய் நம் உடலில் உள்ள இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஹெச்ஐவி கிருமிகளின் தாக்கம் குறையும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்க்கவே கூடாது. அதலைக்காய் கருக்கலைப்பிற்கும் பயன்படுத்தப் படுகிறது.
பருக்களைக் குறைக்கும்
இன்றைய தலைமுறையினரின் முக்கிய கவலைகளில் ஒன்று முகப்பருக்கள் ஆகும்.
முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்களை சரி செய்ய ஆயிரக்கணக்கில் செலவு செய்து பல செயற்கை மருந்துகளை வாங்குகிறார்கள்.
ஆனால் இயற்கை இந்த பிரச்சினைக்கு இலவசமாகவே ஒரு தீர்வை கொடுத்துள்ளது. இதிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் முகப்பருக்களை சரி செய்வதோடு முகப்பருக்கள் வராமலும் தடுக்கிறது.
செரிமானம்
பொதுவாகவே காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியம்.மற்ற காய்கறிகளை காட்டிலும் அதலைக்காயில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது நமது இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதோடு செரிமான மண்டலத்தையும் பாதுகாக்கிறது. மேலும் இதில் பொட்டாசியம், மோமோர்டியல் அமிலம், கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
எடை குறைப்பு
முன்பே கூறியது போல இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் பசியுணர்வை கட்டுப்படுத்தும். எனவே நீங்கள் இதனைச் சிறிதளவு சாப்பிட்டாலே பசி அடங்கியது போல் திருப்தியாய் உணருவீர்கள் .
எனவே நீங்கள் அதிகம் சாப்பிடுவதை இது தடுக்கும். அதுமட்டுமின்றி இதில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளது. ஒரு கப் அதலைக்காயில் 16 கலோரிகள் மட்டுமே இருக்கும். ஆதலால் எடை குறைக்க விரும்புவோர் தங்கள் டயட்டில் முக்கியமாக சேர்க்க வேண்டியது இந்த அதலைக்காய்.
பிரச்சினை
அதலைக்காயில் உள்ள ஒரே பிரச்சினை இதை பறித்தவுடன் சமைத்துவிட வேண்டும். இல்லையெனில் காய்கள் வெடித்துவிடும். இந்தக் காய் கோவில்பட்டி.. சாத்தூர்.. விருதுநகர்.. மதுரை உழவர் சந்தை மற்றும் காய்கறிகள் சந்தையில் கிடைக்கும்.
கோபாலபுரத்தைச் சேர்ந்த 94 வயது தாத்தா தினம்தோறும் சைக்கிளில் வீடு வீடாக சென்று பேப்பர் போடுவதையும் பால் பாக்கெட்டுகள் போடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வயதில் நேரம் தவறாமல், ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் அவர் செய்யும் பணி அந்த பகுதி மக்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது.
கோபாலபுரத்தில் வசிக்கும் மக்களால் பேப்பர் தாத்தா என்று அன்போடு அழைப்படுபவர் சண்முகசுந்தரம். ராயப்பேட்டையச் சேர்ந்தவர். தினதோறும் அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். முதலில் அந்த பகுதியில் ஒரு மொத்த விற்பனை கடையில் இருந்து 50 பால் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு அதை வீடு வீடாக சென்று விநியோகித்துவிடுவார்.
அடுத்தது மூச்சு விடுவதற்கு கூட இடைவெளி கொடுக்காமல், உடனடியாக நியூஸ் பேப்பர்களை வாங்கி தனது சைக்கிளின் முன் கூடையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று போட்டுவிடுவார்.
பத்மாவதி சாலையில் தொடங்கி கோபாலபுரத்தில் உள்ள 8 தெருக்களில் சுமார் 60 வீடுகளில் செய்தித்தாள்களை விநியோகிக்கிறார். மழை, வெயில் என எது வந்தாலும் தவறாமல் இந்த பணியை செய்துவிடுவார் பேப்பர் தாத்தா என்கிறார்கள் கோபாலபுரம் மக்கள்.
இந்த வழக்கத்தை கடந்த 25 ஆண்டுகளாக தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக கொண்டுள்ளார் பேப்பர் தாத்தா.
கோபாலபுரத்தில் நீண்ட காலமாக வசிக்கும் மோகன், பேப்பர் தாத்தா குறித்து கூறுகையில், “அவர் எனக்கு ஒரு ஹீரோ மாதிரி. தினமும் அவரை பார்க்கும் போது எனக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். அவர் சைக்கிளை ஓட்டி வருவதை பார்த்தால் எனது சோம்பேறித்தனமெல்லாம் காணாமல் போய்விடும்.
முன்னதாக அவர் வீடு வீடாக தண்ணீர் கேன்களை போடுவார். அதனால் பேப்பர் தாத்தா இந்த பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்” என்கிறார்.
பேப்பர் தாத்தா கூறுகையில், “நான் ஒருநாளும் இந்த வேலையை தவறியதில்லை. இந்தப் பகுதியில் செய்தித்தாள்களை விநியோகிப்பதால்தான் முன்னாள் முதல்வர் கலைஞர் உட்பட குறிப்பிடத்தக்க முக்கிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது” என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
தினமும் பேப்பரை போட்டுவிட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தை பார்த்துக்கொள்ளும் வேலைக்கும் செல்கிறார் பேப்பர் தாத்தா. அவருக்கு 10 பேர பிள்ளைகள் இருக்கிறார்கள். வேலைக்கு போக வேண்டாம் என்று பேர பிள்ளைகள் வலியுறுத்தியும், பேப்பர் தாத்தா அதை கேட்பதில்லை.
கோவிட் சமயத்தில் செய்தித்தாள்கள் வாங்குவது குறைந்ததாக கூறும் பேப்பர் தாத்தா, “முன்னதாக 100 வீடுகளில் பேப்பர் வாங்கினார்கள். இப்போது 60 ஆக குறைந்துள்ளது. எனது பேரக்குழந்தைகள் என்னை வற்புறுத்திய போதும், என்னால் ஓய்வெடுத்துக்கொண்டு வீட்டில் இருக்க முடியவில்லை. அவர்கள் எல்லாம் நன்கு படித்தவர்கள். எனக்கு போதுமான ஓய்வு கிடைக்கவில்லை என்று கவலைப்படுகிறார்கள்.
ஆனால் எனது மகிழ்ச்சிக்கு ரகசியமே, நான் மக்களை சுற்றி சுற்றி வருவதுதான். அதனால் நான் ஒருநாள் கூட வீட்டில் இருந்ததில்லை. என்னையும் எனது சைக்கிளையும் பிரிக்க முடியாது” என்று கூறுகிறார்.
94 வயதிலும் தனது மனைவியையும் பேப்பர் தாத்தாதான் பார்த்துக்கொள்கிறார். பல்வேறு வேலைகளை செய்து ஐந்து மகள்களையும் ஒரு மகனையும் படிக்க வைத்துள்ளார். செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறார் பேப்பர் தாத்தா.
1930ல் பிறந்த இவர், ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். சமீபத்தில் அந்த பள்ளியால் பேப்பர் தாத்தா கவுரவிக்கப்பட்டுள்ளார்.
செய்தித்தாள்களை விநியோகிப்பது மட்டுமல்ல கோபாலபுரம் மக்களின் மனதில் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் விதைத்திருக்கிறார் பேப்பர் தாத்தா.
கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் விட்டமின் மற்றும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த டீ குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்களை பார்ப்போம்.
நன்மைகள்:
▪ கிராம்பு டீயில் விட்டமின், சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது.
▪ காலையில் ஒரு கப் கிராம்பு டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாகும்.
▪ தலைவலி, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் குறைபாடு, செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனைகளைத் தடுத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
▪ இரத்த ஓட்டத்தை சீராக்கி பல் வலி போன்ற பற்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. எனவே பல் வலி உள்ளவர்கள் மிதமான சூட்டில் இந்த கிராம்பு டீ குடிக்கலாம்.
செய்முறை:
ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் ஐந்து கிராம்பை சேர்த்து மீண்டும் ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால் ஆரோக்கியமான கிராம்பு டீ தயார்.
நெப்போலியன் ஒரு வீரராக இருக்கும் பொழுது அவருடைய படை ஓர் ஊரில் முகாமிட்டு இருந்தது. ஒரு நாள் பகல் நேரத்தில் எல்லா வீரர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். விளையாடி கொண்டும், பேசிக் கொண்டும், உல்லாசமாய் வெளியே அலைந்துகொண்டும் இருந்ததார்கள் .
நெப்போலியன் மட்டும் தம்முடைய கூடாரத்தினுள் அமர்ந்து நூல்களைப் படித்துக் கொண்டிருந்தார்! அப்பொழுது அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண் அங்கு வந்தாள். மற்ற படைவீரர்கள் எல்லா உல்லாசமாகத் திரியும்போது நெப்போலியன் மட்டும் ஓர் கூடாரத்தில் அடங்கிக் கிடப்பதைக் கண்டு அவளுக்கு நகைப்பு ஏற்பட்டது
படித்துக்கொண்டிருந்த நெப்போலியனிடம் சென்று, "மற்ற படை வீரர்களெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியுடன் வெளியே விளையாடி கொண்டிருக்கிறார்கள். நீ மட்டும் ஒரு நாளாவது வெளியே காணோமே... அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறாய்?-- . நீ என்ன கோஷாப் பெண்ணா? என்று கேட்டாள்
நெப்போலியன் அதற்குப் பதிலொன்றும் சொல்லவில்லை பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் நெப்போலியன் பிரெஞ்சு பேரசராகி தம்முடைய படைகளுடன் முன்னொரு முகாமிட்டிருந்த இடத்திற்கு வர நேரிட்டது. குதிரை மீது நெப்போலியன், முன்பு குறிப்பிட்ட அந்தப் பெண்மணி எதிர்பாராமல் சந்தித்தனர்.
அம்மா... என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா? என்று வினவினார்…
சற்று யோசித்துவிட்டு, "ஆமாம்.. எப்போதோ... பார்த்த நினைவிருக்கிறது.. என்று பதிலுரைத்தாள் அவள்
முன்னொரு சமயம்...இதே இடத்தில்..கூடாரத்திற்குள்ளிருந்து ஒருவன் படித்துக்கொண்டிருக்கும்போது, மற்ற வீரர்களெல்லாம் விளையாடுகின்றனர்.. நீ மட்டும் கூடாரத்திற்குள் அடங்கிக் கிடக்கிறாயே.. நீ என்ன கோஷாப் பெண்ணா?.... என்று தாங்கள் கேட்டீர்கள்... அவன் தான் நான்.. நானும் அவர்களைப்போல் விளையாடிக் கொண்டிருந்திருந்தேனானால் இன்று நானும் அவர்களைப் போல் காணாமல் போயிருப்பேன்.. என்று சொன்னார் நெப்போலியன்.
நேரத்தைச் சீராகச் செலவழித்தவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்..
நமக்கு சோதனைகள், கஷ்டங்கள், துன்பங்கள் வந்தால் கடவுளிடம் நாம் கேட்பது *"ஏன் எனக்கு மட்டும் இப்படி செய்கிறாய்?"*
இந்த கேள்விக்கு ஒரு டென்னிஸ் வீரர் மிக அழகாக பதில் தந்திருக்கிறார்.
அந்த *டென்னிஸ் வீரரின் பெயர் ஆர்தர் ராபர்ட் ஆஷ் ஜூனியர்* விம்பிள்டன் ஓப்பன், யூ எஸ் ஓப்பன், ஆஸ்ட்ரேலியா ஓப்பன் ஆகிய மூன்று கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களையும் வென்ற ஒரே மகன்.
தொழில் முறை போட்டியில் இருந்து 1980 ம் ஆண்டில் ஓய்வு பெற்ற வீரர்.
1983 ஆம் ஆண்டில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பொழுது ரத்தம் தானமாகப் பெற்றுக் கொண்டதன் மூலமாக அவருக்கு எய்ட்ஸ் வந்தது.அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அப்பொழுது பலரும் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது: "உங்களுக்கு கடவுள் ஏன் இப்படி செய்கிறார்?"
இதை அடிப்படையாகக் கொண்டு அவர் செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினார். அந்த கட்டுரையின் தலைப்பு:
*"WHY ME ? - "ஏன் எனக்கு மட்டும்? "*
கட்டுரையில் அவர் எழுதியது பின்வருமாறு:
உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கும் பொழுது ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்?
குடி பழக்கம் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்த பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்?
சிகரெட் பிடிப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்த பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்?
பல பெண்களிடம் தொடர்பு உடையவர்கள் பலர் இருக்கும் பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு ஏன் எனக்கு எய்ட்ஸ் தந்தாய்? இப்படியாக நீண்டு கொண்டே போனது அந்த கட்டுரை. அதன் முடிவில் சொன்னார்:
இதனது தொடர்ச்சி அடுத்த வாரம்.
இதைப் படித்த மக்கள் அனைவரும் மிகவும் வருந்தினார்கள். அவர் என்னதான் பதில் தரப்போகிறார் என்று காத்திருந்தார்கள்.
அடுத்த வாரம் WHY ME PART II ஏன் எனக்கு மட்டும் பாகம்-2 வெளிவந்தது.
அதில் அவர் எழுதியிருந்தார்:
உலகில் 500 லட்சம் பேர் டென்னிஸ் விளையாடத் துவங்குகிறார்கள்.
அதில் 50 லட்சம் பேர் தான் டென்னிஸ் கற்றுக் கொள்கிறார்கள்.
அதில் 5 லட்சம் பேர் தான் தொழில்முறை டென்னிஸ்க்கு வருகிறார்கள்.
அதில் 50,000 பேர் தான் சர்க்யூட் லெவல் டென்னிஸ்க்கு முன்னேறுகிறார்கள்.
அதில் 5000 பேர் தான் கிராண்ட்ஸ்லாம் லெவல் டென்னிஸ் க்கு முன்னேறுகிறார்கள்.
அதில் 50 பேர் தான் விம்பிள்டன் விளையாடுகிறார்கள்.
அதில் 4 பேர் தான் அரையிறுதிக்கு வருகிறார்கள்.
அதில் 2 பேர் தான் இறுதிப் போட்டிக்கு வருகிறார்கள்.
அதில் ஒருவர்தான் வெற்றி பெறுகிறார்.
அந்த வெற்றி பெற்ற ஒருவராக, அந்த வெற்றிக் கோப்பையை கையில் மகிழ்ச்சியோடு தாங்குபவராக என்னை கடவுள் ஆக்கிய பொழுது நான் கேட்கவில்லை "ஏன் எனக்கு மட்டும்?" என்று.
வெற்றி மேல் வெற்றி தந்த பொழுது நான் கடவுளிடம் கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.
பேரும் புகழும் குவிந்தன. அப்போது கடவுளிடம் கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.
பணம் மழைபோல கொட்டியது. அப்பொழுது கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.
அப்போதெல்லாம் கேட்காத நான் இப்பொழுது கேட்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? நான் கேட்க மாட்டேன்.
கடவுள் இது வரை தந்ததை எப்படி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேனோ அது போல இதையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.
இதுவரை எனக்காக வாழ்ந்த நான் இனி பிறருக்காக வாழப் போகிறேன். என்னுடைய பணம், புகழ், செல்வம், மீதமுள்ள வாழ்நாள் அனைத்தையும் இந்த நோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதற்கான மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிகளிலும் நான் செலவு செய்யப் போகிறேன். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். நன்றி. ....... என்று முடித்திருந்தார்.
இன்பம் வந்தபோது ஏனென்று கேட்காத நாம் துன்பம் வரும்போது மட்டும் ஏன் என்று கேட்பது எப்படி சரியாக இருக்க முடியும்?
இன்பம், துன்பம் இரண்டையும் கடவுளே தருகிறார். இரண்டுமே நம் நன்மைக்குத்தான் என்று உணர்வோம். வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்போம்.
சாது ஒருவர் செய்த கடுந்தவத்தின் காரணமாக, அவருக்கு பல சித்திகள் கைவரப்பட்டன. அதனால், அவருக்கு கர்வம் வந்தது.
நல்ல குணங்களும், தவ வலிமையும் கொண்ட சாதுவின் கர்வத்தை நீக்க, திருவுள்ளம் கொண்டார், இறைவன். சன்னியாசி உருவம் தாங்கி, சாது வசித்து வரும் இடத்திற்கு சென்றார், இறைவன்.
சாதுவிடம், 'சுவாமி! தாங்கள் செய்த தவ வலிமையால், பல சித்திகளைப் பெற்றிருப்பதாக அறிந்தேன். அப்படிப்பட்ட தங்களை காண வேண்டியே இங்கு வந்துள்ளேன்...' என்றார், சன்னியாசி.
சன்னியாசியை வரவேற்று அமரும்படி கேட்டுக் கொண்டார், சாது. அச்சமயத்தில் அந்த வழியாக ஒரு யானை சென்று கொண்டிருந்தது.
'சுவாமி! தங்களால் இந்த யானையையும் கொல்ல முடியும் அல்லவா...' எனக் கேட்டார், சன்னியாசி.
'ஏன் முடியாது. இப்போது பாருங்கள்...' என்றவாறு, ஒரு பிடி மண்ணை கையில் எடுத்து, மந்திரித்து, யானையை நோக்கி வீசினார், சாது.
என்ன வியப்பு! அந்த யானை அதே இடத்தில் துடிதுடித்து செத்து வீழ்ந்தது.
உடனே, 'என்ன ஆச்சரியம்! உள்ளபடியே தங்கள் மந்திர சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் மந்திர பிரயோகத்தால் யானையை எளிதாக வீழ்த்தி விட்டீர்களே...' என பாராட்டினார், சன்னியாசி.
சன்னியாசியின் புகழுரைகள், சாதுவுக்கு பெருமகிழ்ச்சியை உண்டாக்கியது.
மீண்டும், 'சுவாமி! இப்போது தங்களால் இறந்து போன யானையை, மீண்டும் பிழைக்க வைக்க முடியுமா?' எனக் கேட்டார், சன்னியாசி.
'என்னால் எதையும் செய்ய முடியும். இப்போது பாருங்கள்...' என்றவாறு, முன் போலவே ஒரு பிடி மண்ணை கையில் எடுத்து, மந்திரித்து, கீழே சாய்ந்து கிடந்த யானையின் மீது வீசினார், சாது.
யானைக்கு உயிர் வந்தது.
மீண்டும், சாதுவிடம், 'சுவாமி! உங்கள் அபார சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் அனுமதித்தால் தங்களிடம் ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன். என்ன சொல்கிறீர்கள்?' எனக் கேட்டார், சன்னியாசி.
'சரி! தாராளமாக கேட்கலாம். அதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை...' என்றார், சாது.
'சுவாமி! தாங்கள் யானையை முதலில் கொன்றீர்கள். பின்பு அதை உயிர் பிழைக்க செய்தீர்கள். இதனால், தாங்கள் பெற்ற பலன் என்ன? தங்களுக்கு எப்படிப்பட்ட ஆன்மிக வளர்ச்சி கிடைத்தது?
'தங்களின் சித்து விளையாட்டு, பகவானை எளிதாக அடைய உதவியாக இருக்குமா?' எனக் கேட்டு, சன்னியாசி வடிவில் இருந்த இறைவன், அவ்விடத்திலிருந்து மறைந்தார்.
அரண்மனையில் உள்ள அரசனிடம் சென்ற பிச்சைக்காரன், அற்ப பொருட்களை யாசிப்பது முட்டாள்தனம். அதுபோல, பகவானது அருளை பெற்ற பக்தன், விலை மதிக்க முடியாத ஞானம், வைராக்கியம், பக்தி இவைகளை விடுத்து, சித்திகளைப் பிரார்த்திப்பானால் அவனும் ஒரு மூடனே!