Quote of the Day

பழமொழி: அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 270
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added article
·

பேட் கேர்ள் படத்தில் நடித்த அஞ்சலி சிவராமனுக்கு 31 வயது ஆகிறது. ஜூன் மாதம் பாதியை கடந்தும் சம்மர் வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில், சன் டே ஸ்பெஷலாக நீச்சல் குளத்தில் தோழியுடன் குளித்து விளையாடிய வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஜில்லாக்க முயற்சித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் சம்மர் தொடங்கியதில் இருந்தே ஏகப்பட்ட நடிகைகள் பிகினி உடைகளை வாங்கி வைத்துக் கொண்டு நீச்சல் குளங்களிலும், பீச்களிலும் சும்மா போஸ் கொடுத்து போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஃபாலோயர்களை அதிகரித்து கல்லா கட்ட ஆரம்பித்தனர். மேலும், சில நடிகைகள் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நிலையில், சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் இறங்கி மாதம் லட்சக் கணக்கில் நடிக்காமலே சம்பாதிப்பது எப்படி என பாடம் நடத்தி வருகின்றனர்.

பேட் கேர்ள் ஹீரோயின்: கேரளாவை சேர்ந்த அஞ்சலி சிவராமன் கடந்த 2022ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான கோபால்ட் ப்ளூ என்கிற வெப்சீரிஸில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட் கேர்ள் படம் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார். பல சர்ச்சைகளை கிளப்பிய பேட் கேர்ள் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக போகவில்லை. ஆனால், ஆம்ரி எனும் ஆங்கில படத்தில் தற்போது அஞ்சலி சிவராமன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரது போல்டான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

நீச்சல் குளத்தில் தோழிகளுடன்: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏகப்பட்ட ஜாலியான ரீல்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் வருவது வாடிக்கை. நடிகை அஞ்சலி சிவராமன் தனது தோழிகளுடன் சொகுசு ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் குடித்து கும்மாளம் போட்ட வீடியோவை தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

  • 15
·
Added article
·

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெரிய நடிகர்கள் தங்கள் சொந்த தயாரிப்பில் தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திப் படம் எடுப்பார்கள். ஆனால், உலக நாயகன் கமல்ஹாசன் அந்தப் பிம்பத்தை உடைத்து, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் வளர்ந்து வரும் இளம் திறமைகளுக்கு ஒரு மிகப்பெரிய மேடையை அமைத்துக் கொடுத்து வருகிறார். சிவகார்த்திகேயன் முதல் சிலம்பரசன் வரை இப்போது கமலின் தயாரிப்பில் வலம் வருவது, தமிழ் சினிமாவின் வணிக முறையையே மாற்றி எழுதியுள்ளது.

கமல்ஹாசன் போன்ற ஒரு ஜாம்பவான் தயாரிப்பாளராக இருக்கும்போது, அந்தப் படத்திற்கு ஒரு தனி மரியாதை கிடைக்கிறது. ‘விக்ரம்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அவர் சிவகார்த்திகேயனை வைத்துத் தயாரித்த ‘அமரன்’ மற்றும் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் ‘சேயோன்’ (Seyon) போன்ற படங்கள் அதற்குச் சான்று.

ஒரு இளம் ஹீரோவுக்குக் கமலின் தயாரிப்பு என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, அது ஒரு பெரிய ‘அங்கீகாரம்’. இது அந்த நடிகரின் மார்க்கெட்டை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், கதைத் தேர்வில் ஒரு முதிர்ச்சியையும் கொண்டு வருகிறது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து சிலம்பரசன் (STR), அசோக் செல்வன் போன்ற இளம் நட்சத்திரங்கள் நடித்திருப்பது ஒரு ஆரோக்கியமான மல்டி-ஸ்டாரர் கலாச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படத்தை (தலைவர் 173) சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் கமல் தயாரிப்பது, கோலிவுட்டின் இரண்டு துருவங்கள் கைகோர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. இது போன்ற பெரிய கூட்டணியால் படத்தின் தரமும் வசூலும் சர்வதேச அளவிற்கு உயர்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தில் பணிபுரியும் இயக்குநர்களுக்குக் கமல் கொடுக்கும் ‘கிரியேட்டிவ் ஃப்ரீடம்’ தான் அதன் மிகப்பெரிய வெற்றி ரகசியம். லோகேஷ் கனகராஜ் முதல் ராஜ்குமார் பெரியசாமி வரை எல்லா இயக்குநர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.

2026-ல் மட்டும் RKFI நிறுவனம் சுமார் 4 முதல் 5 பெரிய படங்களைத் திட்டமிட்டுள்ளது. இதில் இளம் இயக்குநர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவது, கோலிவுட்டின் அடுத்த தலைமுறை படைப்பாளிகளை உருவாக்குவதில் கமலின் பங்களிப்பைத் தெளிவாகக் காட்டுகிறது.

பெரிய பட்ஜெட்டில் இளம் ஹீரோக்களை வைத்துப் படம் எடுக்கும்போது, ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மிக எளிதாக விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. ‘கமல் தயாரிப்பு’ என்கிற பிராண்ட் நேம் விநியோகஸ்தர்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. இதனால் நடுத்தர பட்ஜெட் படங்கள் கூட 100 கோடி வசூலை மிக எளிதாகத் தொடுகின்றன.

கமல் தனது அனுபவத்தை மூலதனமாகவும், இளைய தலைமுறையை உழைப்பாகவும் கொண்டு நடத்தும் இந்தச் சினிமா பயணம் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய பொற்காலத்தைத் தந்து கொண்டிருக்கிறது. இது மற்ற பெரிய நடிகர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெரிய நடிகர்கள் தங்கள் சொந்த தயாரிப்பில் தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திப் படம் எடுப்பார்கள். ஆனால், உலக நாயகன் கமல்ஹாசன் அந்தப் பிம்பத்தை உடைத்து, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் வளர்ந்து வரும் இளம் திறமைகளுக்கு ஒரு மிகப்பெரிய மேடையை அமைத்துக் கொடுத்து வருகிறார். சிவகார்த்திகேயன் முதல் சிலம்பரசன் வரை இப்போது கமலின் தயாரிப்பில் வலம் வருவது, தமிழ் சினிமாவின் வணிக முறையையே மாற்றி எழுதியுள்ளது.

கமல்ஹாசன் போன்ற ஒரு ஜாம்பவான் தயாரிப்பாளராக இருக்கும்போது, அந்தப் படத்திற்கு ஒரு தனி மரியாதை கிடைக்கிறது. ‘விக்ரம்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அவர் சிவகார்த்திகேயனை வைத்துத் தயாரித்த ‘அமரன்’ மற்றும் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் ‘சேயோன்’ (Seyon) போன்ற படங்கள் அதற்குச் சான்று.

ஒரு இளம் ஹீரோவுக்குக் கமலின் தயாரிப்பு என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, அது ஒரு பெரிய ‘அங்கீகாரம்’. இது அந்த நடிகரின் மார்க்கெட்டை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், கதைத் தேர்வில் ஒரு முதிர்ச்சியையும் கொண்டு வருகிறது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து சிலம்பரசன் (STR), அசோக் செல்வன் போன்ற இளம் நட்சத்திரங்கள் நடித்திருப்பது ஒரு ஆரோக்கியமான மல்டி-ஸ்டாரர் கலாச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படத்தை (தலைவர் 173) சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் கமல் தயாரிப்பது, கோலிவுட்டின் இரண்டு துருவங்கள் கைகோர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. இது போன்ற பெரிய கூட்டணியால் படத்தின் தரமும் வசூலும் சர்வதேச அளவிற்கு உயர்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தில் பணிபுரியும் இயக்குநர்களுக்குக் கமல் கொடுக்கும் ‘கிரியேட்டிவ் ஃப்ரீடம்’ தான் அதன் மிகப்பெரிய வெற்றி ரகசியம். லோகேஷ் கனகராஜ் முதல் ராஜ்குமார் பெரியசாமி வரை எல்லா இயக்குநர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.

2026-ல் மட்டும் RKFI நிறுவனம் சுமார் 4 முதல் 5 பெரிய படங்களைத் திட்டமிட்டுள்ளது. இதில் இளம் இயக்குநர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவது, கோலிவுட்டின் அடுத்த தலைமுறை படைப்பாளிகளை உருவாக்குவதில் கமலின் பங்களிப்பைத் தெளிவாகக் காட்டுகிறது.

பெரிய பட்ஜெட்டில் இளம் ஹீரோக்களை வைத்துப் படம் எடுக்கும்போது, ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மிக எளிதாக விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. ‘கமல் தயாரிப்பு’ என்கிற பிராண்ட் நேம் விநியோகஸ்தர்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. இதனால் நடுத்தர பட்ஜெட் படங்கள் கூட 100 கோடி வசூலை மிக எளிதாகத் தொடுகின்றன.

கமல் தனது அனுபவத்தை மூலதனமாகவும், இளைய தலைமுறையை உழைப்பாகவும் கொண்டு நடத்தும் இந்த சினிமா பயணம் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய பொற்காலத்தைத் தந்து கொண்டிருக்கிறது. இது மற்ற பெரிய நடிகர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!

  • 21
·
Added a news
·

இனி ஒரு நாடோ அல்லது ஒரு சர்வதேச அமைப்போ மட்டும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கும் காலம் முடிவடைந்து வருவதாகவும் கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி, உருவாகி வரும் புதிய உலக ஒழுங்கில் அமெரிக்கா முக்கிய பங்காற்றும் என குறிப்பிட்டுள்ளார்.

அயர்லாந்து பயணத்தின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், திங்கட்கிழமை பிரான்சின் எவியான்-லே-பேன் நகரில் ஆரம்பமாகவுள்ள ஜி7 உச்சி மாநாடு புதிய உலக ஒழுங்கிற்கான அடித்தளத்தை அமைக்கக்கூடும் என்றார்.

செயற்கை நுண்ணறிவு (AI) ஒழுங்குமுறை, குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் சில நாடுகள் ஒரே நிலைப்பாட்டில் செயல்படும் என்றும், மற்ற சில நாடுகள் தலையீடு குறைந்த சுதந்திரமான அணுகுமுறையை பின்பற்றக்கூடும் என்றும் கார்னி குறிப்பிட்டார்.

மேலும், ஜி7 மாநாட்டில் கனடாவின் அணுகுமுறை ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஏற்ப மாறுபடும் தற்காலிக கூட்டணிகளை உருவாக்குவதாக இருக்கும் என்றும், பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட புதிய கூட்டாளிகளை கனடா எதிர்பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்த ஆண்டு ஜி7 மாநாட்டில் புவிசார் அரசியல் விவகாரங்கள் முக்கிய இடம் பெறும் என தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்தி உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே சரியான நெறிமுறைத் தீர்வாக இருக்கும் என்றும் மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.

  • 21
  • 18
·
Added a post
·

தனது தலையில் வாழைப்பழங்களை சுமந்து நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனிடம், தளர்ந்த உடலுடனும் சோர்வான முகத்துடனும் இருந்த பெரியவர் ஒருவர் எனக்கு பசியாக இருக்கிறது உன்னிடம் இருக்கும் வாழைப்பழங்களை தருவாயா என்று கேட்கிறார்.

உடனடியாக அந்தப் பையனும் மூன்று வாழைப்பழங்களை எடுத்து அந்த பெரியவரிடம் கொடுக்கிறான். அதை கையில் வாங்கிப் பார்த்த அந்த முதியவர் இந்தப் பழங்கள் இன்னும் பழுக்கவில்லை இதை எப்படி சாப்பிட்டு நான் பசியாறுவது என்று கேட்கிறார்.

எப்படியாவது முதியவரின் பசியை போக்க வேண்டும் என்று நினைத்த அந்த சிறுவன் கொஞ்ச நேரம் காத்திருங்கள். வீட்டில் என்னிடம் பழுத்த வாழைப் பழங்கள் இருக்கின்றன. அவற்றை எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு வேக வேகமாகப் போய் மூன்று பெரிய பழுத்த வாழைப்பழங்களை கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தான்.

அதை வாங்கி பார்த்த பெரியவர் இந்த பழங்கள் அதிகமாக கனிந்து போய் இருக்கின்றன இதை நான் எப்படி சாப்பிடுவது என்று மீண்டும் அந்தப் பையனிடம் கோபித்துக் கொண்டார்.

இப்போதும் தான் நினைத்த மாதிரி பழங்களை கொடுத்து அந்த முதியவரின் பசியை ஆற்ற முடியவில்லை என்று பரிதவித்த அந்த சிறுவனிடம் மீண்டும் போய் அந்த பழுக்காத பழங்களையாவது எடுத்து வா நாளைக்கு வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன் எனக்கு கால் வலிக்கிறது, சீக்கிரமாக வா என்று சொல்கிறார்.

மீண்டும் வீட்டிற்கு ஓடி முன்பு கொடுத்த பழங்களையே எடுத்துக் கொண்டு சிறுவன் திரும்பி வருகிறான்.. நீ ரொம்ப மெதுவாக எல்லா வேலைகளையும் செய்கிறாய்.. இவ்வளவு நேரம் ஆக்கிவிட்டாய்.. எனக்கு வாழைப்பழம் சாப்பிடும் ஆசையே போய்விட்டது உன் பழங்களை எடுத்துக் கொண்டு போ என்று சொல்கிறார்.

இதைக் கேட்டதும் அந்த சிறுவனின் முகம் வாடி விடுகிறது அப்போது அந்த பெரியவர் தனது தோள்களை குலுக்கி சிறுவனைப் பார்த்து லேசாக சிரித்தார். அந்த சிரிப்பின் அர்த்தம் புரியாமல் சிறுவன் முழித்தான்.

அமைதியான புன்னகையுடன் அந்த பெரியவர் சிறுவனைப் பார்த்து வாழ்வின் மதிப்பு மிக்க பாடங்களை எல்லாம் படித்து தெரிந்து கொள்ள முடியாது. அனுபவித்து தான் தெரிந்து கொள்ள முடியும்..

உனக்கு ஒன்று தெரியுமா நீ கொடுத்த பழங்கள் எல்லாமே நல்ல பழங்கள் தான். ஆனால் நான் தான் நன்றி கெட்டத்தனமாக உன்னை வேண்டுமென்றே அலைய வைத்து அதன் மூலம் உனக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்க நினைத்தேன்.

என் வாழ்க்கையில் நான் மிகவும் தாமதமாக உணர்ந்து கொண்ட ஒரு விஷயத்தை உனக்கு இந்த சிறு வயதிலேயே சொல்ல வேண்டும் என்பதற்காக தான் இந்த நாடகத்தை நடத்தினேன்.

வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைக்காதே.. உன்னைச் சுற்றி இருப்பவர்கள் நீ என்ன செய்தாலும் முழுமையாக திருப்தி அடைய மாட்டார்கள் உன் செயல்களில் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

நீ எவ்வளவுதான் கடினமாக முயற்சி செய்தாலும் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் திருப்தி படுத்த முடியாது என்பதை உணராமல் இருந்தால் உன் மன அமைதியை இழப்பாய், உன் கனவுகளையும் லட்சியத்தையும் இழந்து உன் வாழ்வு தான் பாதிக்கப்படும். நீ தரையில் படுத்துக்கொண்டு என் மேலே நடந்து செல்லுங்கள் என்று சொன்னால் கூட உன் மீது நடப்பதற்கு எங்களுக்கு வசதியாக இல்லை என்று தான் கூறுவார்கள். எனவே அடுத்தவர்களை திருப்தி படுத்துவதற்காகவே உன்னுடைய வாழ்க்கையை நீ வாழாதே.! நீ நீயாக இரு.! உன் கடமைகளை சரியாகவும் நியாயமாகவும் செய் அதன்பிறகும் உன்னை பிறர் குறை கூறினால் அதற்காக வருந்தாதே என்று சொன்னார்..!

  • 29
  • 50
  • 50
  • 51

நாமும் தெரிந்துக் கொள்வோமா?

  • 51
  • 51
  • 51
  • 51
·
Added a post
·

மேஷம்: மனதில் இருந்த அச்சம், கவலைகள் நீங்கி, நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று காசாக்குவீர்கள்.

ரிஷபம்: உங்கள் மனதுக்குப் பிடித்த புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுங்கள். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.

மிதுனம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். வெளி உணவுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டி அதிகரித்தாலும், சமாளிப்பீர்கள். பல வகையிலும் பொருட்கள் சேரும்.

கடகம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பேச்சில் பொறுமை தேவை.

சிம்மம்: பழைய பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்த கடன் உதவி கிடைக்கும்.

கன்னி: இழுபறியாக இருந்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடியும். பெற்றோர் உடல்நலம் சீராகும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பண வரவு உண்டு.

துலாம்: வெகு நாட்களாக மனதை வாட்டிய பிரச்சினைக்கு முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். தொழில், வியாபாரத்தில் ஊழியர்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்றுவார்கள்.

விருச்சிகம்: போட்டிகள், சவால்களை எதிர்கொள்வீர்கள். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வெளி உணவுகளை தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் நிதானம் தேவை.

தனுசு: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் நீங்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரி அன்பு காட்டுவார். சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள்.

மகரம்: உங்களது எதார்த்தமான, சாமர்த்தியமான பேச்சால், தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் போட்டி விலகும்.

கும்பம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாகனச் செலவுகள் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் மறையும். ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மீனம்: எதிர்மறை எண்ணங்கள் மறையும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். கையில் காசு பணம் புரளும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

  • 77
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 1 ஆம் தேதி திங்கட்கிழமை 15.6.2026.

இன்று காலை 09.27 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று இரவு 09.05 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

இன்று காலை 10.17 வரை சூலம். பின்னர் கண்டம்.

இன்று காலை 09.27 வரை நாகவம். பின்னர் இரவு 08.12 வரை கிமிஸ்துக்கினம். பிறகு பவம்.

இன்று அதிகாலை 05.53 வரை சித்தயோகம். பின்னர் இரவு 09.05 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=545&dpx=2&t=1781505595

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 77

Good Morning...

  • 79
·
Added a post
·

குரு ஒருவரிடம் பல சீடர்கள் குருகுலத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்தார்கள். வேதங்கள், புராணங்கள், கடவுளரது தர்ம தத்துவங்கள் போன்றவற்றை குரு தன் சீடர்களுக்கு தினமும் போதித்து வந்தார்.

ஒருநாள் அவர் கடவுளைப் பற்றி சில மெய்ஞான விளக்கங்களைக் கற்பித்துக்கொண்டிருந்தார். அப்போது மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சீடர்களில் ஒரு சீடன் மட்டும் கேள்வி ஒன்றை எழுப்பினான்.

சீ டன் கேட்ட கேள்வி இதோ!

"குருவே! கடவுள் உண்மையிலேயே இருக்கின்றாரா? அப்படியெனில் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்?"

குரு சற்றே புன்னகைத்தார். அவர் தன் சீடனை நோக்கி, "சீடனே! கடவுள் அனைத்து இடங்களிலும் வீற்றிருக்கிறார். மேலும் அனைத்து உயிர்களுக்கு உள்ளே உரைந்துள்ளார். இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து உயிருள்ள ஜீவராசிகள் மற்றும் உயிரற்ற பொருட்களிலும் வாசம் செய்கிறார். எல்லாமே கடவுளின் அம்சம்தான். அதை உணரும் அறிவையும் ஞானத்தையும் நாம் இன்னும் பெறவில்லை." என்று பக்தி மனம் கமழ விடையளித்தார்.

சீடன் அகம் மகிழ்ந்து "அருமையான விளக்கம் அளித்தீர் குருவே! என் ஐயம் தீர்ந்தது. நான் இனி அனைவற்றிலும் இறைவனைக் காண்பேன்!" என்று கூறினான்.

மறுநாள் சீடர்கள் அனைவரும் குருகுலப் பாடங்கள் முடிவடைந்து மாலை நேரத்தில் தினமும் வரும் கானகத்தின் வழியே வீட்டிற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக யானையின் முரட்டுப் பிளிரல் சத்தம் ஒன்று கேட்டது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று சீடர்கள் ஆராய்வதற்கு முன்னரே மதம் கொண்ட யானை ஒன்று சற்று தொலைவிருந்து சீடர்கள் நடந்து வந்த திசை நோக்கி ஓடி வந்தது. யானையின் மேல் அமர்ந்திருந்த பாகன் வழியில் நடந்துகொண்டிருந்த சிலரை கவனித்து உரத்த குரலில் "யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அனைவரும் ஓடிவிடுங்கள்! வழியில் நிற்கவேண்டாம்!" என்று எச்சரித்தான்.

இதைக் கேட்ட நமது குருவின் சீடர்களும் மற்றவரும் தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். சிலர் தாம் எடுத்து வந்திருந்த உடைமைகளைக் கூட பொருட்படுத்தாமல் கீழே போட்டுவிட்டு ஓடினர்.

ஆனால் நமது குருவிடம் சந்தேகம் கேட்ட ஆர்வக்கோளாறு சீடனோ யானையின் வழித்தடத்தில் பொம்மைபோல் அசையாமல் நின்றுகொண்டிருந்தான். மற்ற சீடர்களுள் ஒருவன், "நீ ஏன் மரம் போல் நின்று கொண்டிருக்கிறாய்? எங்களுடன் வா!" என்று அவன் கையைப் பிடித்து இழுத்தான்.

ஆனால் ஆர்வக்கோளாறு சிறுவனோ தனது நண்பனின் கையை உதறிவிட்டான். "என்னை விடு! நான் வரமாட்டேன்! குரு கூறியதை நீ மறந்துவிட்டாயா? கடவுள் அனைத்து உயிர்களிலும் வாசம் செய்பவன். இந்த மதம் கொண்ட யானையிலும் கடவுள் இருக்கின்றார். அவர் என்னை எதுவும் செய்யமாட்டார். நீ செல்! நான் இங்கேயே இருப்பேன்!" என்று பொறுமையுடன் கூறினான்.

உடனே நண்பன், "அடே மூடனே! உன் அறிவீனச் செயலுக்கு இது நேரமில்லை. வா ஓடலாம்!" என்று பதட்டத்துடன் கூறினான். அப்பொழுதும் ஆர்வக்கோளாறு சீடன் செல்லமறுத்துவிட்டான்.

யானை சீற்றத்துடன் சீடனை நோக்கி வேகமாக வந்தது. நண்பன் பயந்து ஓடத்தொடங்கினான். "நண்பா! வேகமாக ஓடிவிடு! நிற்காதே!" என்று கூவிக்கொண்டே நண்பன் ஓட்டம் பிடித்தான். யானை மிக அருகில் வந்துவிட்டது. பாகனோ, "பாலகா! நான் கூறுவது உன் செவியில் விழவில்லையா? யானை என் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. வேகமாக ஓடிவிடு!" என்று கத்தியதோடு செய்கையிலும் சீடனை ஓடச்சொன்னான்.

யார் கூறியும் நமது சீடன் கல்தூண் போல் அசையாமல் நின்றார்.

யானை சீடனருகில் வந்து பலுதூக்கும் வீரரைப் போல் சீடனைத் தூக்கி, சிலம்பாட்ட வீரரைப் போல் சீடனை சில முறை சுழற்றி, கம்பு எரியும் வீரரைப் போல் சீடனை தூக்கி வீசியது. மட்டைப்பந்து போட்டியில் எப்படி பந்து எல்லைக்கோட்டைத் தாண்டி பறந்து செல்லுமோ அப்படி சீடனும் பறந்து சென்று மாமரக்கிளைகளுக்கிடையில் சிக்கி கீழே விழுந்தான். அவனது நல்ல நேரம் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினான்.

யானை பிளிரிக்கொண்டே வெகுதூரம் சென்றுவிட்டது. சீடனை யானை தூக்கி வீசியதைக் கண்ட சீடனின் நண்பர்கள் காயங்களுடன் மயங்கியிருந்த அவனை அருகிலிருந்த கிராமத்தில் உள்ள வைத்தியசாலைக்கு விரைவாக அழைத்துச்சென்றனர். பல மூலிகைகளை உடலின் காயங்களுக்குத் தடவி வைத்தியர் சீடனுக்குச் சிகிச்சை செய்தார்.

சீடன் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பிதற்றிக்கொண்டிருந்தான்.

சீடனின் நண்பர்கள் அவனுடன் நாள் முழுவதும் இருந்தனர். இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வைக் கேள்வியுற்று குருநாதர் சீடனைக் காண வைத்தியசாலைக்கு வந்தார். அவர் சீடனிடம், "ஏன் இப்படிச் செய்தாய்? யானை அருகில் வருமுன் ஓடியிருக்கலாமல்லவா? இத்தனை துயரம் உனக்குகெதற்கப்பா?" என்று அன்புடன் வினவினார்.

சீடன் குருவிடம், "குருவே! நீங்கள் சொன்ன போதனையின்படி மதம் கொண்ட யானையிலும் கடவுள் உள்ளார் அல்லவா? அப்படியிருக்க யானை என்னை தூக்கி வீசியதையும் யானையின் உள்ளிருந்து கடவுள் ஏன் வேடிக்கை பாத்துக்கொண்டிருந்தார்? அவர் என்னை காப்பாற்றியிருக்கலாமல்லவா? யானையின் கோபத்தை நீக்கியிருக்கலாமல்லவா?" என்று வலியுடன் கேட்டான்.

குருநாதர் அளித்த விடை சீடனுக்கு சரியான ஞானத்தை வழங்கியது.

"சீடனே! மதம் பிடித்த யானையில் கடவுளைக் கண்ட நீ , உன்னை பல முறை எச்சரித்த யானைப்பாகன் மற்றும் உனது நண்பனுக்குள்ளும் கடவுள் இருப்பதை உணர மறுத்தது ஏன்? அந்த இரு கடவுளரும் உன்னைக் காப்பாற்ற நினைத்தார்களல்லவா? அவர்களுக்குள் கடவுள் வந்து உன்னை காப்பாற்ற முயன்றபோதும் நீ செவிசாய்க்காமல் யானையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாயல்லவா? நான் நேற்று என்ன கூறினேன்? கடவுள் அனைத்திலும் உள்ளார். அவரை கண்டறியும் அறிவையும் ஞானத்தையும் பெற முயலவேண்டும் என்றேன். இப்போது புரிகிறதா? கடவுள் நம்மைச் சுற்றியே எப்போதும் வீற்றிருக்கிறார். நாம்தான் கடவுளின் கட்டளையைப் பகுத்தறிவைக் கொண்டு புரிந்துகொள்ளாமல் எங்கேயோ வேடிக்கை பார்ததுக்கொண்டிருக்கின்றோம். இதுவே அனைத்து துன்பங்களுக்கும் காரணமாகும்! உடலை நன்கு தேற்றிக்கொண்டு பின்னர் பாடசாலைக்கு வா!" என்று குருநாதர் கூற சீடனுக்கு தெளிவு பிறந்தது.

  • 156
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். உத்தியோகப் பணிகளில் மேன்மை ஏற்படும். பயனற்ற சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். மனதை உறுத்திய கவலைகள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

தற்பெருமை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். சில செயல்களில் கட்டுப்பாடுடன் இருக்கவும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றங்கள் உருவாகும். விலையுயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பு உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மிதுனம்

தாய்மாமன் வழியில் அனுசரித்து சென்றால் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரப் பணிகளில் முக்கியமான சில பிரமுகர்களின் அறிமுகங்கள் ஏற்படும். இனம் புரியாத சில நினைவுகள் மூலம் கவலைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

கடகம்

சபை சார்ந்த துறைகளில் பொறுமையை கையாள வேண்டும். மனதில் நினைத்த எண்ணங்களை செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்புடன் இருப்பார்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உயர்கல்விகளில் இருந்த குழப்பங்கள் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். பெருந்தன்மையான செயல்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

வியாபாரப் பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூரப் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

துலாம்

தனவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

விருச்சிகம்

சுபகாரிய எண்ணங்கள் கைக்கூடும். மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். தவறிப்போன சில பொருட்களைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் உண்டாகும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அரசு பணிகளில் ஆதரவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

தனுசு

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். புதிய பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய தொடர்பான முயற்சிகள் கைகூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மகரம்

பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். கால்நடைகள் மூலம் லாபம் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கும்பம்

வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு செயல்பாடுகளில் இருந்த தாமதங்கள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

மீனம்

உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். தந்தையின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இழுபறியான செயல்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். செய்கின்ற முயற்சிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

  • 257
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 14.6.2026.

இன்று காலை 11.49 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

இன்று அதிகாலை 12.15 வரை கிருத்திகை. பின்னர் இரவு 1041 வரை ரோகிணி. பிறகு மிருகசீரிடம்.

இன்று பிற்பகல் 01.17 வரை திருதி. பின்னர் சூலம்.

இன்று அதிகாலை 01.01 வரை பத்திரை. பின்னர் பின்னர் காலை 11.49 வரை சகுனி. பின்பு இரவு 10.38 வரை சதுஷ்பாதம். பிறகு நாகவம்.

இன்று இரவு 10.41 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=544&dpx=2&t=1781409068

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 02.00 முதல் 03.00 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 266

Good Morning...

  • 261
·
Added article

சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இதில், சுஹாஸ், மஹிமா நம்பியார் , சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக் ஷன் ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

கடலின் பிரமாண்டமான பின்னணியிலும், பரபரப்பான படகுப்பந்தய உலகத்தையும் மையமாகக் கொண்டு நகரும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர். 4ஆம் தேதி வெளியாகிறது.

  • 323
·
Added a news

கனடாவுக்கு எதிராக டொரண்டோ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற பி குழுவுக்கான பீபா உலகக் கிண்ணப் போட்டியை 1 - 1 என்ற கோல்கள் கணக்கில் பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இப்போட்டி முடிவை அடுத்து இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுக்கொண்டன. ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியின் 21ஆவது நிமிடத்தில் ஜோவோ லூக்கிக் கோல் போட்டு பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினாவை முன்னிலையில் இட்டார்.

இதனைத் தொடர்ந்து வரவேற்பு நாடான கனடா தனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது. போட்டியின் 77ஆவது நிமிடம் வரை பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா முன்னிலையில் இருந்தது.

போட்டியின் 78ஆவது நிமிடத்தில் கய்ல் லெரின் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தி கனடா அணிக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. ஆனால் அந்த முயற்சிகள் கைகூடாமல் போக போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

  • 324
  • 321
  • 323
  • 321
New People