திரு எஸ்.ரங்காச்சாரி என்று ஒரு டாக்டர். 1939 இல் சென்னையில் அவருக்கு மட்டும் தான் வெள்ளைக்காரன் ஆட்சியிலேயே சிலை வைக்கப் பட்டது. இன்றும் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் காணலாம்.
சைக்கிளில் சென்று மருத்துவம் பார்த்தவர், நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டும் என்று ரோல்ஸ் ராய்ஸ் வாங்கி பின் puss moth என்ற சிறு ரக விமானம் வாங்கி அதில் சென்று மருத்துவம் பார்த்தார். அனுதினம் 18 மணி நேர உழைப்பு.
எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் இந்தியாவின் முதல் டெபுடி சுப்பரின்டென்டென்ட் ஆக இருந்தவர். அரசு மருத்துவராக இருந்த வரை ஒரு பைசா கூட சம்பளமாக வாங்காதவர். அப்படி ஒரு சேவை மனப்பான்மை.
சர்ஜரிக்காகவே பிறந்தவர் என்று சொல்லலாம். நீண்ட விரல்களும், க்ஷண நேரத்தில் உயிர்காக்கும் முடிவுகளை எடுக்கும் திறமையும் கொண்டு பல அசாத்தியமான அறுவை சிகிச்சைகளை செய்தவர். தான் மிகவும் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டதையெல்லாம் மற்றவர்களுக்கு எளிமையாக சொல்லிக் கொடுத்தவர். யாரையும் கடிந்து கொள்ளாத பண்பாளர். திருச்சி கல்யாணராமன் ஒரு உபன்யாசத்தில் Presence of mind என்பதற்கு இவரை தான் உதாரணம் காட்டினார்.
எவ்வளவு படித்திருந்தாலும் தேவையான நேரத்தில் மூளை வேலை செய்யல சார் என்று சொல்வோர் உண்டு. சிலதெல்லாம் படிப்பு சொல்லிக் கொடுக்காது. கடவுள் அருள் தான் அந்த நேரத்தில் நாம் சரியான நடவடிக்கை எடுக்க உதவும்.
அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. ஒரு நாள் நடந்து போகும் போது பெரிய கூட்டம்.. தரையில் ஒரு பெண். அவள் கணவன் அழுது கொண்டிருக்கிறான். இவர் விசாரித்தார். ரங்காச்சாரி போன்ற பெரிய மருத்துவரிடம் போக வசதியில்லை ஐயா என்று இவரிடமே சொன்னான் அந்த கணவன். நான் பார்க்கட்டுமா என்று கேட்டுவிட்டு என்னவென்று பார்த்தால் ஒரு நிறைமாத கர்ப்பிணி.. குழந்தை கால் வெளியில் வந்துவிட்டது. கொஞ்சம் தாமதித்தாலும் இரு உயிர்களுக்கும் ஆபத்து.
சட்டென்று தன் கையிலிருந்த சிகரெட்டின் முனையை குழந்தையின் காலில் வைத்து அழுத்தினார். இப்போது ஸ்மார்ட் போனில் ரொட்டேட் என்று இருக்கிறதே அது போல குழந்தை சூடு தாங்காமல் காலை உள்ளே இழுத்துக்கொண்டு ரொட்டேட் ஆகி சுகப்பிரசவம் ஆகிவிட்டது. தாய் சேய் இருவரும் நலம். அதற்காக எல்லா பிரசவத்தையும் சிகரெட் வைத்து பார்க்கவும் முடியாது. அந்த நேரத்தில் அப்படி ஒரு ஐடியா கடவுளையன்றி வேறு யார் கொடுக்க முடியும். இவர் சீடர் knife ramaswamy என்று இவரால் பாராட்டப்பட்ட அறுவை மருத்துவர் பழமார்நேரி Dr PS Ramaswami ஆவார்.இவர் புகழ் பெற்ற வயலின் மேதை பழமார் நேரி ஶ்ரீ சுவாமிநாத அய்யரின் மூத்த மகன் ஆவார்.
இவர்களைப் பற்றி எந்தப் பாடப்புத்தகத்திலாவது மாணவர்கள் படிக்கிறார்களா?
இப்படிப்பட்ட மகான்கள் வாழ்ந்த தேசம் இந்தியா..
திருவிழாச் சந்தையில் வெய்யிலில் புரண்டு விளையாடச் செல்வது ஞாயமா ?
என்ற வரியை மனப்பாடம் செய்து கொள்ளவும் :
தி என்பது திங்கட்கிழமை 7.30-9.00 மணி.
ச என்பது சனிக்கிழமை 9.00-10.30 மணி
வெ என்பது வெள்ளிக்கிழமை 10.30-12 மணி
பு என்பது புதன்கிழமை 12.00-1.30 மணி
வி என்பது வியாழக்கிழமை 1.30-3.00 மணி
செ என்பது செவ்வாய்கிழமை 3.00-4.30 மணி.
ஞா என்பது ஞாயிற்றுக்கிழமை 4.30-6.00 மணி.
ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தினைக் கொண்டு கிழமையையும் ராகுகால நேரத்தையும் அறிய எளிய வழியாகும்.
மேஷம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
மிதுனம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். அலுவலகத்தில் மேலதி காரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேற்றம் இருக்கும்.
கடகம்: மனக்குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும். தாயார் வழி உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
சிம்மம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். தந்தைவழியில் இருந்த மனஸ்தாபம் விலகும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
கன்னி: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை அசத்துவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பிரபலங்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். நண்பர்கள் உதவுவர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவுண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.
விருச்சிகம்: விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி விலகும். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.
தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய பணிகளை முடிப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கி வந்து சேரும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். மதிப்பு உயரும்.
கும்பம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலக மேலதிகாரிகளுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் சிக்கல்கள் வரலாம். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
மீனம்: எதிர்பார்த்தபடி சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 7.6.2026.
இன்று இரவு 11.12 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று அதிகாலை 04.47 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
இன்று காலை 07.12 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.
இன்று காலை 11.13 வரை பத்திரை. பின்னர் இரவு 11.12 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று அதிகாலை 04.47 வரை சித்தயோகம். பின்னர் அதிகாலை 05.51வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை.
திரைத்துறையில் ஆண் மற்றும் பெண் நடிகர்களின் ஊதிய வித்தியாசம் மிகப் பெரியது என்றும் அவை மாற்றப்பட வேண்டும் என்றும் நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “தற்போது, திரையுலகில் ஆண் மற்றும் பெண் நடிகர்களுக்கு இடையே நிலவும் ஊதிய பாகுபாடு குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இது குறித்து இன்னும் பல நடிகர்கள் பேசுவார்கள் என்று நம்புகிறேன். ஊதிய பாகுபாடு இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்த நிலை மாற வேண்டும். மாற்றங்கள் மெதுவாக நடந்து வருகின்றன. திரைத்துறை இப்போது பெருமளவில் கார்ப்பரேட் மயமாகி விட்டது.
இது ஆட்டத்தின் விதிகளையே மாற்றியிருக்கிறது. இருந்தாலும்,ஆண் மற்றும் பெண் நடிகர்களின் ஊதியத்துக்கு இடையே இருக்கும் வித்தியாசம் மிகப்பெரியது.
எனக்கு தென்னிந்தியத் திரைத்துறை மீது கூடுதல் ஈர்ப்பு உண்டு. ஏனென்றால் அங்குதான் நான் எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினேன். அங்கு ஒன்பது மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதில்லை.
பாலிவுட்டில் எனக்குக் கிடைக்காத ஒருவித சவுகரியம் தென்னிந்திய சினிமாவில் கிடைக்கிறது. ஒழுக்கம் மற்றும் நேரத்தை சரியாக கடைபிடித்தல் ஆகியவற்றுடன், பெண்களுக்கு மிகுந்த மரியாதையும் அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தும் எபோலா வைரஸ் பாதிப்பிற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளாவிய தொற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையிலான புதிய மருந்து ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கனடாவின் மாண்ட்ரியல் நகர ஆராய்ச்சியாளர்கள் குழு முக்கிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
மாண்ட்ரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த (IRCM) விஞ்ஞானிகள், "தாவரங்களில் இருந்து கண்டறியப்பட்ட ஒரு புதிய ஆன்டிவைரல்" மூலக்கூறு இதில் நல்ல பலனைத் தந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
IRCM நிறுவனத்தின் செயல்பாட்டு எண்டோபுரோட்டியோலிசிஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த டாக்டர் மிஷெல் கிரெட்டியன் மற்றும் டாக்டர் மஜம்பு மிபிகேய் ஆகியோர் தலைமையிலான குழுவே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
எபோலா வைரஸ் மற்றும் கோவிட்-19 பாதிப்பை ஏற்படுத்தும் 'SARS CoV 2' ஆகியவற்றுக்கு எதிராக வலுவாகச் செயல்படக்கூடிய ஒரு புதிய இயற்கை மூலக்கூறு குடும்பத்தை இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மருந்து முழுமையாக வெற்றி பெற்றால், எபோலா நோய் பரவாமல் தடுப்பதற்கும், ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்ட குணமடையவும் இது பெரிதும் உதவும். "நாங்கள் தொடர்ந்து இதில் பணியாற்றி வருகிறோம். தாவரங்களில் இருந்து கண்டறியப்பட்ட இந்த ஒரு குறிப்பிட்ட மருந்து மிகவும் நம்பிக்கையளிப்பதாக உள்ளது.
தற்போதைய நிலையில் இது மனிதர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய இறுதி மருந்து என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், அதற்கான அனைத்து நல்ல அறிகுறிகளையும் இது கொண்டுள்ளது என டாக்டர் மஜம்பு தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அடுத்த கட்டமாக விலங்குகள் மீதான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த ஆண்டின் இலையுதிர் காலத்தில் (Fall) விலங்குகள் மீதான பரிசோதனை அடுத்த கட்டத்தை எட்டும் என நம்புகிறோம். வின்னிபெக்கில் உள்ள புதிய ஆய்வக வசதிகள் மூலம் விலங்குகளில் இது நல்ல பலனைத் தந்தால், அதன் பிறகு மனிதர்களுக்கான மருந்தாக இதனை மேம்படுத்தும் பணிகளைத் தொடங்குவோம் என்று டாக்டர் மிஷெல் கிரெட்டியன் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த மருந்து எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்பதற்கான காலக்கெடுவை இப்போதே கணிக்க முடியாது என இக்குழுவினர் கூறியுள்ளனர்.
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு எனர்ஜி டிரிங்க்ஸ் எனப்படும் சக்தி பானங்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் புதிய மசோதாவை கியூபெக் சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவிற்கு தேசிய அவையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.எனினும், கடந்த மார்ச் மாதம் முதல் கியூபெக் கன்சர்வேடிவ் கட்சியில் இணைந்துள்ள சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரான மிட்டே பிளான்ஷெட் வெசினா மட்டும் இதற்கு ஆதரவளிக்கவில்லை.
விரைந்து சட்டமாக்க முயற்சி வரும் ஜூன் 12-ஆம் திகதியுடன் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைய உள்ளதால், அதற்குள் இந்த சட்டத்தை அவசரமாக நிறைவேற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவையாக உள்ளது.
மசோதா உருவானதன் பின்னணி கடந்த 2024-ஆம் ஆண்டு, சக்கரி மிரோன் என்ற 15 வயது சிறுவன், தான் உட்கொண்டு வந்த ஏடிஹெச்டி சக்தி பானத்தை குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவனது பெற்றோரின் தொடர் போராட்டத்தின் விளைவாகவே இந்த 'மசோதா 9' (Bill 9) தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.
அண்மைய மாதங்களில் கல்வி, விளையாட்டு மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல அமைப்புகள் இந்த 'சக்கரி மிரோன் இயக்கத்திற்கு' தங்களது ஆதரவை வழங்கி வருகின்றன. மேலும், கடந்த மாதம் 35,000-க்கும் அதிகமான குடிமக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றும் தேசிய அவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இளைஞர்களின் ஆரோக்கியத்தில் எனர்ஜி டிரிங்க்ஸ் ஏற்படுத்தும் தீமைகளைத் தடுப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும். 16 வயதிற்குட்பட்ட எவருக்கும் சக்தி பானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.
அதேபோல், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தங்களுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ இத்தகைய பானங்களை வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு 150 மில்லிகிராம் அல்லது அதற்கு மேல் காஃபின் அளவு கொண்ட மற்றும் டாரின், வைட்டமின்கள் அல்லது தாதுக்கள் கலந்த பானங்கள் அனைத்தும் இந்த சட்டத்தின் கீழ் 'எனர்ஜி டிரிங்க்ஸ்' என வகைப்படுத்தப்படும்.
இந்த மசோதாவை அவையில் தாக்கல் செய்த பிறகு, அவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த சக்கரியின் பெற்றோர்களான டேவிட் பிரோன் மற்றும் வெரோனிகா மார்டினெஸ் ஆகியோரை சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
அருள்தரும் ஸ்ரீ உலகம்மன் உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோவில் தென்காசி.
தென்றல் தவழும் தென்காசியில் பாண்டிய மன்னன் பராக்கிரமபாண்டியனால் அமைக்கப்பட்டது பிரம்மாண்டமான இந்த இராஜகோபுரம்.இந்த இராஜகோபுர வாசலில் பக்தர்களுக்கு ஆச்சரியப்படத்தக்க அதிசயம் காத்திருக்கிறது.
பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று, கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு மேற்கிலிருந்து கிழக்காக வீசி வரவேற்கிறது கோபுர வாசலை கடந்து உள்ளே செல்லும் போது கோபுர வாசலில் இருந்து இறங்கும் இடத்தில், காற்று சுழன்று சுற்றி வீசுவது போல ஒரு அனுபவம் ஏற்படும். தொடர்ந்து உள்ளே செல்லும் போது, காற்று பின்புறமாக கோவிலுக்குள் உங்களை உள்ளே தள்ளுவது போல, கிழக்கில் இல்லாத ஒரே நேர்கோட்டில் காற்று இரண்டு எதிர் எதிர் திசைகளில் வீசுவதை இருந்து மேற்காக காற்று வீசும் அதிசயத்தை உணருவீர்கள்.





