Quote of the Day

பழமொழிகள்:அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 250
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added article
·

தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகியான கே. ஜமுனாராணி (K. Jamuna Rani) ஜூலை 30, 2026 அன்று பெங்களூருரில் காலமானார்.

மறைந்த போது அவருக்கு 88 வயது ஆகும்.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று ஜூலை 31, 2026 அன்று மதியம் பெங்களூருவில் உள்ள கல்லஹள்ளியில் நடைபெறுகின்றன.

1940-கள் முதல் 1960-கள் வரை தென்னிந்தியத் திரையிசை உலகில் மிக முக்கியப் பாடகியாகத் திகழ்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழில் பல உன்னதமான பாடல்களைப் பாடியுள்ள இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'நாயகன்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம்பெற்ற "நான் சிரித்தால் தீபாவளி" என்ற பாடலையும் பாடியுள்ளார்.

ஜமுனாராணி தனது 7 வது வயதிலேயே திரையுலகில் பாடத் தொடங்கினார்.

1946-ல் வெளியான 'தியாகையா' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலாகப் பாடினார்.

இவருடைய தாய் கே. ஜாம்பவதி ஒரு சிறந்த வீணைக் கலைஞர் மற்றும் பாடகி. அவரிடம் தான் ஜமுனாராணி தனது ஆரம்பகால இசைப் பயிற்சியைப் பெற்றார்.

இவர் பாடகியாக மட்டுமல்லாமல், 1953-ல் வெளியான 'தேவதாஸ்' திரைப்படத்தில் பார்வதியின் தோழியாக (சாந்தா என்ற கதாபாத்திரத்தில்) நடிகையாகவும் நடித்துள்ளார்.

கன்னடத் திரையுலகின் முதல் முழுநீளப் பின்னணிப் பாடலாகக் கருதப்படும் 'ஸ்ரீ சீதா ராம கல்யாணா' என்ற படத்தின் பாடலை இவர்தான் பாடினார்.

1960-களுக்குப் பிறகு ஜமுனாராணிக்குத் திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் குறைந்தன. ஆனால், 24 ஆண்டுகள் கழித்து 1987-ல் இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணி 'நாயகன்' திரைப்படத்திற்காக இவரை மீண்டும் அழைத்தது.

நாயகன்' படத்தில் கமல் ஹாசன் - சரண்யா நடிப்பில், ஜமுனாராணி பாடிய "நான் சிரித்தால் தீபாவளி" பாடல் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் உலுக்கியது. இன்றும் பலரது ஃபேவரிட் பாடலாக இது ஒளிர்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகள் தவிர, சிங்கள மொழியிலும் பல நூறு சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி இலங்கையிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைச் சம்பாதித்தார்.

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் மற்றும் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் நூற்றுக்கணக்கான துள்ளலான மற்றும் காதல் பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழக அரசு இவருடைய கலைச் சேவையைப் பாராட்டி உயரிய 'கலைமாமணி' விருதை வழங்கி கௌரவித்தது.

தெலுங்குத் திரையுலகில் இவருக்கு 'மறைந்த முதலமைச்சர் என்.டி.ஆர்' நினைவாக வழங்கப்படும் என்.டி.ஆர் தேசிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

ஜமுனாராணி தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது குடும்பத்தினரையும், உடன்பிறந்தவர்களையும் கவனித்துக் கொள்வதற்காகவே தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தார். இறுதிவரை தனது இசையையே துணையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்துள்ளார்.

7 வயதில் பாடத் தொடங்கிய இவர், தனது 13 வது வயதிலேயே திரையுலகில் முன்னணி கதாநாயகிகளுக்குப் பின்னணி பாடும் அளவுக்குத் திறமை பெற்றிருந்தார்.

1950-களில் சாவித்திரி, அஞ்சலிதேவி, ஜமுனா போன்ற அப்போதைய டாப் நடிகைகளின் ஆஸ்தான குரலாக மாறினார்.

தென்னிந்தியத் திரையுலகில் பி. சுசீலா, எஸ். ஜானகி போன்ற ஜாம்பவான்கள் தங்களது இசைப் பயணத்தை முழுமையாகத் தொடங்குவதற்கு முன்பே, ஜமுனாராணி முன்னணிப் பாடகியாக வலம் வந்தார்.

குறிப்பாக 1950 முதல் 1960 வரையிலான காலகட்டம் இவருடைய 'கோல்டன் பீரியட்' என்று அழைக்கப்படுகிறது.

1950-களில் இசை மேதை ஜி. ராமநாதன் மிகவும் கண்டிப்பானவராகக் கருதப்பட்டார். 'குலேபகாவலி' (1955) திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த டி.ஆர்.ராஜகுமாரிக்கு "ஆசையும் என் நேசமும்..." என்ற பாடலை ஜமுனாராணி பாட வேண்டியிருந்தது.

அந்தப் பாடலில் வரும் மேற்கத்திய மற்றும் துள்ளல் நடையை ஜி. ராமநாதன் மிகவும் நுணுக்கமாக எதிர்பார்த்தார்.

பல முன்னணிப் பாடகர்களே தயங்கிய அந்தப் பாடலை, வெறும் 13-14 வயது சிறுமியாக இருந்த ஜமுனாராணி, எவ்விதப் பதற்றமும் இன்றி மிகக் குறுகிய நேரத்தில் பாடி முடித்துக் கொடுத்தார். இதைப் பார்த்து வியந்த ஜி. ராமநாதன், இவரை கட்டிப்பிடித்துப் பாராட்டியுள்ளார்.

1980-களில் ஜமுனாராணி முற்றிலுமாகப் பாடுவதை நிறுத்திவிட்டுச் சென்னையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது 'நாயகன்' (1987) படத்திற்காக 1960-களின் மும்பை கிளப் பின்னணியில் ஒரு துள்ளலான பாடல் தேவைப்பட்டது. இளையராஜாவுக்கு உடனே நினைவுக்கு வந்த குரல் ஜமுனாராணி மட்டும்தான்.

ஸ்டுடியோவுக்குச் சென்ற ஜமுனாராணிக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருடன் இணைந்து பாட இளையராஜா அழைத்திருந்தது, அவரது சமகாலத்துப் பழம்பெரும் பாடகியான எம். எஸ். ராஜேஸ்வரியை.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, 'ஏவிஎம்' (AVM) ஸ்டுடியோவில் இந்த இரு முதுபெரும் பாடகிகளும் மைக் முன்னால் நின்ற போது ஒட்டுமொத்த இசைக்குழுவும் எழுந்து நின்று கைதட்டியது. "நான் சிரித்தால் தீபாவளி" பாடல் உருவான பின்னணி இதுதான்.

1950-களில் துள்ளல் மற்றும் கிளப் ரகப் பாடல்களுக்குப் பாடகி ஜிக்கி (Jikki) மற்றும் ஜமுனாராணி இடையே கடுமையான போட்டி நிலவியது.

இசையமைப்பாளர்கள் கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் ஒரு டூயட் அல்லது கிளப் பாடல் என்றால் இவர்கள் இருவரில் யாரை அழைப்பது என்று குழம்புவார்களாம்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் இருவரும் நெருங்கிய தோழிகளாகவே இருந்தனர். பல நேரங்களில் ஜிக்கிக்கு உடல்நிலை சரியில்லாத போது, அந்தப் பாடல்களை ஜமுனாராணி எவ்வித ஈகோவும் இன்றிப் பாடிக் கொடுத்துள்ளார்.

தமிழ்ப் பாடகியான இவர் சிங்கள மொழியில் பாடிய பாடல்கள் இலங்கையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தின.

இலங்கையின் தேசியக் கீதத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஆனந்த சமரகோன் இயக்கத்தில், 'சுஜாதா' (1953) மற்றும் 'சேதா சுலங்' (1955) போன்ற சிங்களத் திரைப்படங்களுக்குப் பாட ஜமுனாராணி ஒப்பந்தமானார்.

சிங்கள மொழியின் உச்சரிப்புகள் இவருக்குத் தெரியாது என்பதால், இசையமைப்பாளர் ஆனந்த சமரகோன் பாடலின் வரிகளைத் தமிழில் எழுதித் தந்துள்ளார்.

ஏ.எம். ராஜாவுடன் இணைந்து ஜமுனாராணி பாடிய "ஜீவன மே கமன சன்சாரே" (Jeevana Mea Gamana Sansare) என்ற பாடல், ஒலிப்பதிவு செய்யப்பட்ட அன்றே அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஒரு தமிழ் மொழிப் பாடகி, சிங்கள வார்த்தைகளை இவ்வளவு துல்லியமாகப் பாடியதை இலங்கையே கொண்டாடியது

1953-ல் வெளியான 'சுஜாதா' (Sujatha) என்ற சிங்களத் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல்கள் இன்றும் இலங்கையின் ஆல்-டைம் கிளாசிக் ஹிட்களாகக் கொண்டாடப்படுகின்றன.

இதனால் பல சிங்கள ரசிகர்களுக்கு இவர் தங்களின் சொந்த நாட்டுப் பாடகி என்ற எண்ணமே இருந்தது.

சோகப் பாடல்கள் மற்றும் பக்திப் பாடல்களைத் தாண்டி, அந்த காலத்துத் திரைப்படங்களில் வரும் மேற்கத்திய பாணி துள்ளல் பாடல்கள், கிளப் டான்ஸ் பாடல்கள் மற்றும் விறுவிறுப்பான பாடல்களைப் பாடுவதில் ஜமுனாராணி தனித்துவமான முத்திரை பதித்தார்.

பழம்பெரும் பின்னணிப் பாடகி கே. ஜமுனாராணி வயது முதிர்வு மற்றும் அதற்கு முந்தைய சில நாட்களாக இருந்த உடல்நலக் குறைவு (Age-related ailments) காரணமாகவே இயற்கை மரணமடைந்தார்.

அவருக்கு 88 வயது நிறைந்திருந்த நிலையில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஜூலை 30, 2026 அன்று இரவு அவரது உயிர் பிரிந்தது.

தீவிரமான விபத்தோ அல்லது திடீர் பெருநோயோ இன்றி, முதுமையின் காரணமாகவே அவர் மறைந்துள்ளார். ஜமுனாராணி அவர்களின் மறைவையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தும் இறுதி நிகழ்வுகள் பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  • 97
  • 96
  • 97
  • 98
  • 98
  • 103
  • 104
·
Added a post
·

பைத்தியக்காரன், பெண் பித்தன் என அழைக்கப்பட்டார்; சூனியம் வைத்து விட்டதாக அம்மா சொன்னார்;மனைவி, அம்மா பிரிந்து சென்றனர்;ஊரை விட்டு துரத்தப்பட்டார்.. மனம் தளராமல் கண்டு பிடித்தார் மலிவுவிலை நாப்கின்களை!

பெண்களுக்கான குறைந்த விலை சானிடரி நாப்கின் அடிமட்ட ஏழைப் பெண்களுக்கும் போய்ச்சேரும் அற்புதத்தை நிகழ்த்தியவர் கோவை முருகானந்தம்!

டைம்ஸ் இதழில் உலகின் தலைசிறந்த 100 மனிதர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் இவர். 4 கோடி ரூபாயில் தயாரிக்கப்படும் நாப்கின் எந்திரத்தை வெறும் 45 ஆயிரம் ரூபாயில் தயாரித்து, முதல் எந்திரத்தை பீகார் மலைவாழ் மக்கள் வசிக்கும் மதுபனி கிராமத்திற்கு எடுத்துச் சென்றார்.

‌இரண்டாவது எந்திரத்தைத் தயாரித்து உத்தரகாண்ட் ருத்ரப்ரியா கிராமத்திற்கு

எடுத்துச் சென்றார். அம்மக்களின் பயன்பாட்டில் இது தன் வெற்றிகரமான

கண்டுபிடிப்பாக இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறார்.

அப்புறம் என்ன? ஏராளமான விருதுகள் இவரைத் தேடி வருகின்றன. நமது இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கிறது‌. இவர் வாழ்க்கை 'பேட்மேன்' என இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. நடிகர் அட்சயகுமார் நடிக்க, இயக்கி, வெற்றிவாகை சூடுகிறார் இயக்குனர் ஆர்.பால்கி.

2018-இல் அமெரிக்க வாழ் ஈரான் பெண் ராக்யா செப்தாக்சி எடுத்த 'பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்' என்ற இவர் பற்றிய ஆவணப்படம் ஆஸ்கார் விருதைப் பெற்றது. இவ்வளவுக்கும் காரணமான முருகானந்தம் படித்ததோ 8-ஆம் வகுப்பு; ஆனால் இவர் பற்றிய பாடத்தை 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று படித்து வருகின்றனர்!

ஆனால், அதற்கு இவர் கொடுத்த விலை.. அப்பப்பா! யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவு மிகக் கொடுமையானது. அவருடைய வார்த்தைகளிலேயே அதைக் கேட்போம்...

"என் ஊர் பாப்பநாயக்கன்புதூர். அப்பா நெசவுத் தொழிலாளி. அம்மா விவசாயக் கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துட்டார். குடும்பமே இடிஞ்சு போயிடுச்சு. வீட்டின் வறுமையைப் போக்க கிரில் பட்டறை வேலைக்குப் போனேன். அங்க புதுசு, புதுசா நிறைய முயற்சி பண்ணினேன். அம்மா வாசல்ல போடுற கோலத்தை வீட்டு ஜன்னல் ஆக்கினேன். இதனால, என் முதலாளிக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

ஆனா, எனக்கு ஒரு தொழில்லயே ரொம்ப நாள் ஒட்டாது. நான் கிளம்புறேன்னு சொன்னப்ப முதலாளி, 'நீயே இந்த கடையை வாங்கிக்கோ’னு சொல்லி பணத்துக்கு வழிகாட்டினார். கடையை எடுத்து நல்லாவே நடத்தினேன். எனக்குக் கல்யாணமும் ஆச்சு. ஒருநாள் என் மனைவி எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க. என்னனு கேட்டப்ப, 'இது பொம்பளைங்க சமாச்சாரம்’னு சொல்லிட்டு விறுவிறுனு ஓடப் பார்த்தாங்க.

நான் அவங்ககிட்ட இருந்து அதைப் பிடுங்கிப் பார்த்தா அழுக்கான துணி. 'ஏன் ஒரு நாப்கின் வாங்கக் கூடாதா?’னு மனைவியைத் திட்டினேன். அவங்களோ, 'அதுக்கு எல்லாம் செலவு பண்ணா குழந்தைக்குப் பால் வாங்க எங்க போவேன்’னு கேட்டாங்க. அதோட மட்டும் இல்லாம பெரும்பாலான கிராமப் பெண்கள் வசதி இல்லாததால இதுமாதிரி அழுக்குத் துணிகளைத்தான் பயன்படுத்துறாங்கனு அவங்க சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போயிட்டேன்.

அப்பதான் நாப்கினை நாமே தயாரிக்கலாமேனு எண்ணம் எழுந்துச்சு. கடையில ஒரு நாப்கினை வாங்கி, அதைப் பிரிச்சுப் பார்த்தேன். அதுல பஞ்சு மாதிரி ஒரு பொருள் இருந்துச்சு. உடனே பஞ்சை நல்லா அடைச்சு நாப்கின் தயாரிச்சேன்.

இதை யார்கிட்டே போய் சோதனை பண்ண முடியும். என் மனைவிகிட்ட போய் தயக்கமா நின்னேன். இப்படியே என்னோட சோதனைகள் தொடர்ந்தது. ஆனா, ஏகப்பட்ட ஏமாற்றம். ஒரு கட்டத்துல என் மனைவிக்கு என் மேல ரொம்ப கோபம்வந்து இந்த விஷயத்தை நிறுத்துங்கனு சொல்லி கண்டபடி திட்டிட்டாங்க. பிரிஞ்சும் போயிட்டாங்க.

வேற வழி இல்லாம நான் பக்கத்துல இருந்த மருத்துவக் கல்லூரி பெண்களிடம் என் ஆராய்ச்சியைச் சொல்லி உதவி கேட்டேன். பல பெண்கள் என்னைப் பைத்தியக்காரன் என்று திட்டினாங்க.வேறு சிலர் கல்லூரி வாசலில் நிற்பதை, கல்லூரி மாணவிகளைச் சுற்றி வந்ததைப் பார்த்து விட்டு பெண் பித்தன் என்றார்கள்.

கடைசியில் சிலர் ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தாங்க. சில வாரங்களில் அவங்களாலும் தொடர்ந்து ஒத்துழைக்க முடியலை. வேற வழி இல்லாம என்னையே சோதனைக்கு உள்ளாக்க முடிவு பண்ணினேன்.

என் நண்பரின் கறிக் கடையில் இருந்து ஆண்டின் சூடான ரத்தத்தை வாங்கிட்டு வந்து இடுப்பில் ஃபுட்பால் பிளாடரில் நிரப்பிக்கிட்டேன். நடுவில சின்னக் குழாய் மூலமா நாப்கினை நோக்கி இணைச்சுக்கிட்டேன். பிளாடரை அழுத்தினா ரத்தம் நாப்கினில் விழும். இந்த நாப்கினுக்காகப் பலவிதமான பஞ்சுகளை வெச்சுப் பரிசோதிச்சேன்.

இந்தச் சோதனையில் என் வேட்டி எல்லாம் ரத்தம் கொட்டியது. ஒரு மணி நேரத்தில் தாங்க முடியாத நாற்றம் வந்தது. இதைப் பார்த்து எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்குனு ஊர்ல தகவல் பரவிடுச்சு. என் மனைவி கோவிச்சுக்கிட்டு என்னைவிட்டு நிரந்தரமாப் பிரிஞ்சுப்போயிட்டாங்க!

சோதனைக்காக என் பட்டறையில் இருந்த கடைசி ஸ்கிராப் வரைக்கும் வித்துட்டேன். ஆனாலும், எனக்கு நம்பிக்கை மட்டும் போகலை. சில பெண்கள் உபயோகப்படுத்தின நாப்கின்களைச் சேகரிச்சு, அதை வீட்டுல காயவெச்சு சோதனை செஞ்சேன். என் அம்மா இதைப் பார்த்து எனக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கனு தனியா பிரிஞ்சு போயிட்டாங்க. ஊர்க்காரங்க எல்லாம் சேர்ந்து என்னை ஊரைவிட்டு விலக்கிவெச்சுட்டாங்க.

கண்ணீரோட நான் என் கிராமத்தை விட்டு கிளம்பினப்ப, என் கூடவந்த ஒரே ஜீவன் நான் வளர்த்த நாய் மட்டும்தான். அதோட கோவைக்கு கிளம்பி வந்து விட்டேன். அறை பிடிச்சுத் தங்கி வெறும் பிரெட் மட்டும் சாப்பிட்டு ஓயாம உழைச்சேன். அப்புறம்தான் வெளிநாட்டு கம்பெனிக்காரன் பயன்படுத்தறது ஃபைன் மரப் பஞ்சுனு தெரிஞ்சுது. அதைக்கொண்டு நாப்கின் தயாரிக்கிற இயந்திரம் எட்டுக் கோடி ரூபாய் ஆகும்னு சொன்னாங்க.

நான் ஃபைன் மரப் பஞ்சை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி பண்ணினேன். சுமார் ஆறு மாசம் ரெண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி, கஷ்டப்பட்டு ஒரு இயந்திரத்தைத் தயாரிச்சுட்டேன். இதுக்கு 45 ஆயிரம் செலவாச்சு. இயந்திரத்தைத் தயாரிச்சு முடிச்சப்ப என் கையில் ஒரு பைசா இல்லை.

சேமிப்பு, இருந்த சொச்ச சொத்து எல்லாத்தையும் இழந்துட்டேன். ஆனா, அதுல தயாரிச்ச ஒரு நாப்கினை ஒரு கல்லூரி பொண்ணு பயன்படுத்திட்டு, 'அண்ணா, இதை யூஸ் பண்ற மாதிரியே எனக்குத் தெரியலை. ரொம்ப வசதியா இருக்கு’னு சொன்னப்போ கதறி அழுதுட்டேன்.

அது என் பல ஆண்டுக் கனவு. அதுக்காக நான் என் வாழ்க்கையையே இழந்திருக்கேன். தகவல் பரவி நிறையப் பேர் இந்த இயந்திரத்தைத் தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க. நான் தயாரிச்ச இயந்திரம் மூலமாப் பெண்களே இப்ப சுலபமா நாப்கினைத் தயாரிக்க முடியும்.

ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான்! அவமானங்களை அனுபவித்திருந்தாலும் நம்மாலும் மனித குலத்திற்கு நல்லது செய்ய முடிந்ததே என இன்று பெருமிதம் அடைகிறேன்!" என்றார் பெருமூச்சு விட்டபடியே.

  • 109
  • 105
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். வேற்றுமதத்தினரின் உதவி கிட்டும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம் திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். மேலதிகாரி ஆதரிப்பார்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீக சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாக அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த சில முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலகரீதியான பிரச்சினைகள் ஓயும்.

கடகம்: பணத்தை கவனமாக கையாளவும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பிள்ளைகளின் உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

சிம்மம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் எதிராக செயல்பட்ட பணியாட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். விவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி: பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான மாற்று வழியை கண்டறிவீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர்.

துலாம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

விருச்சிகம்: ஈகோ பிரச்சினை, கருத்து வேறுபாடு தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்து காட்டுவீர். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

தனுசு: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல்சோர்வு, வயிற்றுவலி சீராகும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முயற்சிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மகரம்: முன்கோபத்தை தவிர்க்கவும். மகனின் வேலை, மகளின் திருமணம் என்று அலைச்சல் வந்துபோகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை விற்பனை செய்வீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம்: வெளிவட்டாத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஊர் விசேஷங்களுக்கு தலைமை தாங்குவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மீனம்: புது வகை எலக்ட்ரானிக்ஸ் சாதனம் வாங்குவீர். மனைவி வழியில் பண உதவி கிட்டும். வாகனப் பழுது நீங்கும். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்.

  • 158
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 31.7.2026.

இன்று இரவு 10.32 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று இரவு 08.10 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

இன்று அதிகாலை 01.43 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.

இன்று காலை 10.16 வரை தைத்தூலம். பின்னர் இரவு 10.32 வரை கரசை. பிறகு வணிசை.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=600&dpx=2&t=1785469905

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 158

Good Morning....

  • 155
·
Added article
·

🌹1915-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி கோவையில் பிறந்த இவர், வறுமையான சூழலில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றார்.

🌹 இரும்பு பட்டறையில் சுத்தியல் அடிக்கும் பணியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, பால் வியாபாரம், சோடா விற்பனை எனப் பல்வேறு நிலைகளைக் கடந்து, விடாமுயற்சியால் திரையுலகின் சிகரத்தைத் தொட்டவர்.

​🌹வீரமாருதி தேகப்பயிற்சி சாலை' மூலம் உடல் உறுதியைப் பேணிய இவர், திரைப்படத் தயாரிப்பு நுட்பங்களைக் கற்றுக்கொண்டு,

🌹தனது சகோதரர் எம்.ஏ. திருமுகம் இயக்கத்தில் 'தாய்க்குப்பின் தாரம்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

🌹முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றது, இவரது வெற்றிகரமான திரைப் பயணத்திற்கு அடித்தளமிட்டது.

🌹​எம்.ஜி.ஆரை வைத்து 'தாயைச் காத்த தனயன்', 'வேட்டைக்காரன்', 'விவசாயி' உள்ளிட்ட 17 வெற்றிப் படங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு உண்டு. எம்.ஜி.ஆருடன் மட்டுமின்றி, இந்தித் திரையுலகிலும் ராஜேஷ் கன்னா நடிப்பில்

🌹ஆத்தி மேரே சாத்தி' என்ற பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தார். இவரது 'தேவர் பிலிம்ஸ்' நிறுவனம் விலங்குகளைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு பல படங்களை இயக்கி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

🌹​சிறந்த முருக பக்தரான தேவர், தனது திரைப்பட லாபத்தில் ஒரு பகுதியை முருகனுக்கு அர்ப்பணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

🌹'தெய்வம்', 'துணைவன்', 'ஆட்டுக்கார அலமேலு' போன்ற ஆன்மீக மற்றும் சமூகப் படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

🌹 1970-71-ல் கலைமாமணி விருது பெற்ற இவர், 63-வது வயதில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

🌹வேட்டைக்காரன் படத்திற்காக வேட்டைக்காரனாக எடுத்த ஸ்டில் இது.

  • 226
·
Added a news
·

கனடாவின் கியூபெக் மாகாணம், ஷவினிங்கன் பகுதியில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 41 வயதான பிலிப் பெனாய்ட் என்பவரைக் கியூபெக் மாகாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நான்கு நாட்களாக தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், ஷவினிங்கன் நகருக்கு வடக்கே சுமார் 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக் வேய்லெட் பகுதிக்கு அருகில் புதன்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்ய முயன்ற போது அவர் பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் பலவந்தமாகக் கட்டுப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, கூர்மையற்ற கனமான பொருளால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில், பிலிப் பெனாய்ட் மீது முதல் நிலைக்கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 201-வது அவென்யூவில் உள்ள வீடொன்றில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் கொலை வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பிலிப் பெனாய்ட் மனசிதைவு நோய் மற்றும் சமூக பயம் உள்ளிட்ட தீவிர மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் வேட்டையின் போது, இவரைக் கண்டால் பொதுமக்கள் யாரும் நேரடியாக அணுக வேண்டாம் எனவும், உடனடியாக அவசர உதவி எண்ணான 911-ஐத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் எச்சரித்திருந்தனர்.

கொல்லப்பட்ட சிறுவனுக்கான அஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு கியூபெக்கின் ட்ராய்ஸ்-ரிவியர்ஸ் பகுதியில் நடைபெறவுள்ளது.

  • 239
·
Added a news
·

கனடாவின் வடக்கு ஒன்டாரியோவில் உள்ள ஹியூரான் ஷோர்ஸ் பகுதியில் திட்டமிட்டுத் தொடர்ச்சியாக காட்டுத் தீ மூட்டிய குற்றச்சாட்டில் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 28 ஆம் திகதி மாலை 5:30 மணியளவில், 'மெல்வெல் வீதிக்கு' அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் காட்டுத் தீ பரவுவதாக உள்ளூர் தீயணைப்புத் துறைக்குக் கோரிக்கைகள் வந்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும், வீதியின் இருபுறமும் சுமார் 10 அடி முதல் 700 அடி வரையிலான காட்டுப்பகுதிகளில் திட்டமிட்டு வைக்கப்பட்ட 10 சிறிய காட்டுத் தீ சம்பவங்களை கண்டறிந்து கட்டுப்படுத்தினர்.

தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் நடமாடிய சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை தீயணைப்பு வீரர்கள் கவனித்துள்ளனர். அதனடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், இரவு 7:15 மணியளவில் அருகில் உள்ள பாதை ஒன்றில் வைத்து கியூபெக், சட்டன் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மீது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் தீ வைத்தல் மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஜூலை 28 ஆம் திகதி 'பிளைண்ட் ரிவர்' நீதிமன்றத்தில் பிணை விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். 

  • 242
·
Added a news
·

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெஸ்பரோ (40) என்ற நபர், தனது இரு நண்பர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிக் காட்டுப் பகுதியில் வீசிய சம்பவம் அதிர வைத்துள்ளது.

சந்தேக நபர் குற்றத்திற்காக ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் இவருக்கு இறுதி மூச்சு இருக்கும் வரை சிறை தண்டனை (Whole-life Order) வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்துள்ளது.

பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் உள்ள காட்டில் தனது குடிசை அருகே வாழ்ந்து வந்த டெஸ்பரோ, அங்குத் தங்கியிருந்த கிளாரியோ அகிலினோ (57) மற்றும் டேனியல் கோல்மேன் (43) ஆகிய இரு நண்பர்களை மிகக் கொடூரமாகக் கொலை செய்தார்.

கொலைக்குச் பின்னர் இருவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை எாித்து ஆற்றிலும், எஞ்சிய பாகங்களை ஆழமற்ற குழி தோண்டியும் மறைக்க முயன்றார்.

‘டெக்ஸ்டர்’ தொடரில் வருவது போல உடல்களைத் துண்டு துண்டாக வெட்டும் காட்சிகள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தடயவியல் அதிகாரிகளிடம் அவர் கூறியது விசாரணையில் அம்பலமானது.

போலீசார் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், காட்டில் இருந்து எரிக்கப்பட்ட 1,900 எலும்புத் துண்டுகளையும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களையும் மீட்டனர்.

கொலைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் வங்கி அட்டைகளைப் பயன்படுத்திப் பணம் எடுத்த டெஸ்பரோ, அவர்கள் உயிருடன் இருப்பது போல் போலியான தகவல்களையும் பரப்ப முயன்றார்.

இந்த வழக்கு விசாரணையின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, குரட்டை விட்ட காரணத்திற்காகத் தனது சக கைதியான ஸ்டீவன் கெம்ப்ஸ்டர் என்பவரையும் அவர் கழுத்தை நெரித்துக் கொன்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.

மூன்று பேரைக் கொடூரமாகக் கொன்ற தொடர் கொலையாளியான ஜேம்ஸ் டெஸ்பரோ, மனித நேயமற்ற முறையில் கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக நீதிபதி திரு. சைனி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இவருக்கு மனித உயிர்கள் மீது எவ்வித மரியாதையும் இல்லை; இவர் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான நபர்” எனக் கூறி நீதிமன்றம் இவருக்குக் கருணையற்ற ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.  

  • 241
  • 236
·
Added a post
·

பீட்சா டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தவர் மும்பையை சேர்ந்த கௌரவ் லோந்தே. இவர் தான் மும்பை டிராஃபிக்கை கொண்டு வெற்றிகரமாக ஒரு தொழிலை நடத்தி வருகிறார். பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இவரது யோசனையை வெகுவாக பாராட்டியுள்ளார். அப்படி அந்த இளைஞர் என்ன ஸ்டார்ட் அப் தொடங்கினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

கௌரவ் லோந்தே கடந்த 2009ஆம் ஆண்டு பீட்சா டெலிவரி செய்யும் பணியாளராக இருந்தார். தானேயிலிருந்து அந்தேரிக்குத் தினமும் பயணம் செய்த அவர், மும்பையின் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே தினமும் 3 மணி நேரம் வரை செலவிட வேண்டியிருந்தது. இவரை போலவே ஆயிரக்கணக்கான மக்கள் டிராபிக்கில் நீண்ட நேரம் பசியால் வாடுவதை கண்டார்.

ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டிருந்தபோது, ஒரு நபர் வேர்க்கடலை விற்பதை கண்டார். டிராஃப்பிக்கில் சிக்கி இருந்த பலரும் அதை வாங்கி சாப்பிட்டபோது, அவருக்கு ஒரு பிஸ்னஸ் ஐடியா வந்துள்ளது. ஒரு கைப்பிடி கடலையே நமக்கு மகிழ்ச்சியையும் ஆற்றலையும் தருகிறது என்றால், ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு சூடான, புதிய உணவை வழங்கினால் என்ன என தோன்றியதாம்.

இதனை அடுத்து டிராஃபிக் வடா பாவ் (Traffic Vada Pav) என்ற பெயரில் மும்பையின் புகழ்பெற்ற வடா பாவ்களை விற்க தொடங்கினார். 2019-ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு, தனது தாயின் சேமிப்பிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை பெற்று இந்த தொழிலை தொடங்கியுள்ளார். வீட்டிலேயே சுவையான வடா பாவ் தயாரித்து , ஒரு பெட்டியில், ஒரு சிறிய குடிநீர் பாட்டில் மற்றும் டிஷ்யூ பேப்பருடன் வெறும் 20 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று படிப்படியாக வளர்ந்த அவர் 2021-ஆம் ஆண்டிற்குள் தினமும் 800 வடா பாக்களை விற்கும் நிலைக்கு உயர்ந்தார். இதன் மூலம் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் அளவுக்கு அவரது தொழில் வளர்ச்சி கண்டது.

கௌரவ் லோந்தேவின் இந்த பயணத்தை பாராட்டியுள்ள ஹர்ஷ் கோயங்கா, போர்டு ரூம்களில் திட்டமிட்டு உருவாக்கும் நிறுவனங்களை விட, அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளில் இருந்து தோன்றும் இது போன்ற யோசனைகளே இந்தியாவின் வளர்ச்சி என கூறியுள்ளார்.

  • 241
·
Added a post
·

ஒரு சிறிய ஊரில் சுடுகாட்டில் வேலை பார்க்கும் வெட்டியான் ஒருவர் இருந்தார். அவர் எந்த நேரமும் சந்தோஷமாக ஆட்டமும், பாட்டமுமாக அங்கும் இங்குமாக ஓடி வேலை பார்ப்பார்.

வார இறுதி நாட்களில் அவர் ஊருக்குள் வரும் சமயம் அவருக்கு வேண்டிய உணவுப் பொருள்களும் காசும் தருவார்கள். அதே போல ஒவ்வொரு முறை பிணம் எரியூட்ட வரும் சமயமும் அவர் வாயில் ஒரு பாட்டை சத்தமாக பாடிக் கொண்டே வேலை பார்ப்பார்.

வயதான பெரியவர்கள் இறந்த சமயம் அவர் சந்தோஷமாக பாடுவதை சிலர் கண்டுகொள்ளாவிட்டாலும் கூட துள்ளத் துடிக்க சிறுவயது மரணங்கள், உடன் பிறந்தவர்களை இழந்தவர்கள், இணைகளை இழந்தவர்கள் என்று வரும் சமயம் அவர்களால் அந்த பாட்டை அந்த கணத்தில் ரசிக்க இயலவில்லை. அந்தப் பாட்டு இதுதான்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி.

அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தானடி ஒரு தோண்டி

அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி.

என்றவாறே சத்தமாகப் பாடுவர்.

ஒரு மரணம் நடந்து எரியூட்ட வந்திருக்கும் ஒருவருக்கு எரியட்டும் வெட்டியான் இவ்வளவு சந்தோசமாகவும், சத்தமாகவும் இந்த பாட்டை பாடுவது பிடிக்குமா? பிடிக்காதல்லவா?

அப்படியாக சென்று கொண்டிருந்த சமயம் அவன் வாலிப வயதை அடைந்து அவனுக்கு திருமணம் நடந்தது. சில காலம் வாழ்க்கை வெகு சந்தோசமாக சென்று கொண்டிருந்த சமயம் அவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது.

அந்த குழந்தை நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமாக கண்ணைகாட்டி, கைகால்களை ஆட்டி,பொக்கை வாய் திறந்தும் சிரித்தும் அவனை கொள்ளை கொண்டது.

பிணங்களை எரியூட்டும் நேரம் தவிர முழு நேரமும் அந்த குழந்தையுடனே ஆனது வாழ்க்கை. ஒரு வயது ஆகும் தருவாயில் அந்த குழந்தைக்கு ஒரு நோய் வந்துவிட்டது. மருத்துவம் செய்து செய்து பலன் இன்றி அந்த குழந்தை இறந்து விடும். அதனை எரியூட்டசெல்லும் சமயம் அவனது வாய் தாமாகவே அந்தப் பாட்டை பாடும்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி.

அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தானடி ஒரு தோண்டி

அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி. என்று.

ஆனால் இந்த முறை சந்தோசமாகவும் சத்தமாகவும் அல்ல! தழுதழுத்த குரலில், குறைவான சத்தத்தில், விம்மி வெடித்து வரும் அழுகையுடன் பாடுவார்.

ஏனென்றால் இப்போதுதான் அந்தப் பாட்டின் உள்ளவரிகளின் அர்த்தம் அவருக்கு புரிந்தது.

  • 241
·
Added article
·

🌹எம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்:

🌹பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!

🌹பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை.

🌹மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன்.

🌹அது கண்டு, என் மனைவியின்,

முகத்தில் மலர்ச்சி.

🌹ஆனால், சென்ற ஆண்டு வரையில், புது கார் வாங்கும் பேச்சு, பேச்சாகவே போய் விட்டது. நான் என்ன செய்வது! சில காரின் விலையை கேட்கும் போது, அசந்து போகிறேன். காரின் விலை கேட்டு, மலைக்கும் போதெல்லாம், என்னை சுற்றியிருக்கும் படவுலகப் பிரமுகர்களும், கார் தரகர்களும், 'நீங்களா இப்படி கேட்கிறீர்கள்...

🌹புது கார் வாங்க எம்.ஜி.ஆர்., தயங்குவதா...' என்று கேட்கின்றனர்.

🌹நான் என்ன விலை கொடுத்தும், புது மாடல் கார் வாங்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

🌹இப்படிக் கேட்டு கேட்டு, அடுத்த பொங்கலும் வந்து விட்டது. ஆனால், நான், இன்னும் புது கார் வாங்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது, பழைய காரிடம், பழகிய பாசம் தான். அந்த பாச உணர்ச்சி, என்னை புது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை, மாற்றிக் கொண்டே வருகிறது.

🌹என்னிடம், இப்போதுள்ள பெரிய கார் மிகவும் விசுவாசமுள்ளது; தென்னகம் முழுவதும், என்னைச் சுமந்து சென்றிருக்கிறது; பல வெற்றிப் படங்களில் நடிக்க, அது, ஸ்டுடியோக்களுக்கு என்னை விரைவாக ஏற்றிச் சென்றிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டு, தனக்கும் பெரிய செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருக்கிறது.

🌹தொலைவில் வரும் போதே, அதை, பலர் அடையாளம் கண்டு, என் பெயரைக் கூறி, ஆரவாரம் செய்து வருகின்றனர். அந்த பெருமையை, கடந்த பத்து ஆண்டுகளாக அது அனுபவித்து வருகிறதே, அதை நான் தகர்க்கலாமோ! என் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை.

🌹பழசாகி விட்டதாலேயே, சில நல்ல மனிதர்களை உதறி விட முடிகிறதா! என் காரும் அப்படித் தான் என்று, எனக்கு தோன்றுகிறது.

🌹என் சமாதானங்களையும், நான் கண்டுபிடித்திருக்கும் காரணங்களையும், என் மனைவி ஏற்றுக் கொள்வாளா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் பழைய கார், இன்னும், என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

சுதேசமித்திரன்' பொங்கல் மலரில் எம்.ஜி.ஆர்., எழுதிய கட்டுரையிலிருந்து.

  • 242
·
Added a post
·

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக அந்தணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்.

ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு அந்தணன் அதனால் இறந்து போனான்.

இறந்த அந்தணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??

குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் “சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்” என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.

அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் ” கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது” என்றும் சொன்னாள் !!

அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நீதி : புறம்பேசுதலும் பாவச்செயலே… உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!

  • 241
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

நண்பர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் திரும்பி வருவார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். புதுவிதமான பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். பொதுமக்கள் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

ரிஷபம்

உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

மிதுனம்

செய்யும் காரியங்களில் எதிர்பார்த்திருந்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அலைச்சல்கள் மூலம் உடல் சோர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கடகம்

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சூழ்நிலைகளை சமாளிப்பதற்கான பக்குவம் ஏற்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சுப காரிய எண்ணங்கள் கைக்கூடி வரும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

சிம்மம்

இழுபறியான வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த காரியங்கள் நிறைவேறும். வழக்கில் திருப்பம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கன்னி

பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

துலாம்

மற்றவர்களால் உங்களிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். செல்வ சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

விருச்சிகம்

எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் தைரியம் உண்டாகும். காலி மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் ஏற்ற இறக்கம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தபால் துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். விளம்பர சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

தனுசு

நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார சிக்கல்கள் குறையும். பணிகளில் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். தன வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

 

மகரம்

வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மாற்றம் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். விவாதங்களில் சமநிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் எண்ணியவை நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கும்பம்

அனுபவ பேச்சுக்களால் பலரையும் கவருவீர்கள். வீடு மாற்ற சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் மேம்படும். கல்வி பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மீனம்

விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான தேடல்கள் மனதில் உருவாகும். தடைப்பட்ட பணிகளை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

  • 334
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை 30.7.2026

இன்று இரவு 10.00 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று மாலை 06.52 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.

இன்று அதிகாலை 01.56 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.

இன்று காலை 09.29 வரை பாலவம். பின்னர் இரவு 10.00 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=599&dpx=2&t=1785376199

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 338

Good Morning..

  • 331
New People