Quote of the Day

பழமொழிகள்: அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 290
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added article
·

27 வயதாகும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த ஆண்டு ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய லாபத்தை சிவகார்த்திகேயனுக்குப் பெற்றுத் தந்த படம் தாய் கிழவி. அந்த படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.

அமரன் படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை சந்தோஷமாக கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். காந்தா படத்தில் நடிப்பில் மிரட்டிய பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாறிய நிலையில், அவரது இன்ஸ்டா ஃபாலோயர்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டனர். யாரு இந்த பாக்யஸ்ரீ போர்ஸ்?: சந்து சாம்பியன் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்து இந்தியில் அறிமுகமானவர் தான் பாக்யஸ்ரீ போர்ஸ். ரவிதேஜா நடிப்பில் தெலுங்கில் வெளியான மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா பக்கம் வந்தவர் இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். விஜய் தேவரகொண்டாவுடன் கிங்டம், துல்கர் சல்மான் உடன் காந்தா, ராம் பொத்தினேனியுடன் ஆந்திரா கிங் தாலுகா, இந்த ஆண்டு அகில் அக்கினேனி ஜோடியாக லெனின் என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.

  • 49
·
Added a news
·

கனடாவின் வடக்குப் பகுதியான ஒன்டாரியோவில் முகாம் அமைத்துத் தங்குவதற்காகச் சென்று வீடு திரும்பாத இருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்து உள்ளது.

கபுஸ்காசிங் கருக்குக் கிழக்கே அமைந்துள்ள குவெனெட் ஏரிக்கு அருகே இந்த இரண்டு திடீர் மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

இந்த சம்பவத்தில் ஏதேனும் சதிச் செயல் அல்லது குற்றப் பின்னணி உள்ளதா என்பது குறித்து காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

சுற்றுலா சென்ற இருவர் வீடு திரும்பவில்லை என்று ஆகஸ்ட் 1-ஆம் திகதி காவல்துறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அவசரக்கால மீட்புக் குழு, மோப்பநாய் படை, காவல்துறை விமானப் பிரிவு மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகம் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

தேடுதலின் முடிவில், ஆகஸ்ட் 2-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இருவரின் உடல்களும் சடலமாககண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் அடையாளங்களை காவல்துறை இன்னும் வெளியிடவில்லை.

"இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தப் அச்சுறுத்தலும் இல்லை" என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விசாரணக்குப் பின்னரே வெளியாகும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை குவெனெட் ஏரிப் பகுதிக்கு அருகில் இருந்தவர்கள் யாரேனும் சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகளைக் கண்டிருந்தாலோ, அல்லது அது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் கேமரா பதிவுகள் வைத்திருந்தாலோ உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முதன்மை மரண விசாரணை அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

  • 50
  • 47
  • 45
  • 48

உண்மைதானே?

  • 50
  • 50
  • 51
  • 51
  • 50
·
Added a post
·

பத்து வருடங்களுக்கு முன்நண்பரின் குடும்பத்தோடு சென்னையில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று வருவதற்காக Travels ல் ஒரு கார் book செய்தோம்!

கார் சொன்ன நேரத்தில் சரியாக வந்துவிட்டது!

டிரைவருக்கு 45 வயது இருக்கும்! கறுப்பாக இருந்தார், வெள்ளை நிறத்தில் சபாரி உடை அணிந்திருந்தார்!

பாதி தலை நரைத்திருந்தது! கிறிஸ்துவர்!

மிகவும் நேர்த்தியாக நிதானமாக வண்டி ஓட்டினார்! பழகுவதற்கும் மிகவும் அன்பான மனிதராக இருந்தார்!

கோயிலுக்கு சென்று திரும்பும் போது.... அடுத்த வாரம் வெளியூர் செல்லவேண்டியது இருக்கும் திரும்பிவர ஒரு நாள் ஆகும் உங்கள் முதலாளியிடம் சொல்கிறேன் நீங்களே வந்துவிடுங்கள் என்று சொன்னேன்!

இல்லை சார், சென்னையில் மட்டும் தான் நான் வருவேன், அதுவும் மாலை ஆறுமணிக்குள் முடிந்துவிடுகிற trip ஆக இருந்தால் மட்டும் தான் வருவேன் என்றார்!

ஏன் என்று கேட்டேன்!

அவர் சொன்ன விஷயங்கள் தான் இன்றுவரை அவரை எனக்கு ஞாபகப்படுத்தி வைத்திருக்கிறது!

அவரோடு பிறந்தவர்கள்

இரண்டு பேர்,

இரண்டு பேருமே அண்ணன்கள்!

வெளியூரிலும் வெளிநாட்டிலும் நல்ல வசதியோடு இருக்கிறார்கள்!

சிறுவயதிலேயே அப்பாவை இழந்தவர்!

மூன்று பிள்ளைகளையும் அம்மா தான் மிகவும் கஷ்டப்பட்டு

படிக்க வைத்திருக்கிறார்!

எல்லோரும் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்ட நிலையில் கடைசி மகனான இவர் தான் அம்மாவை பார்த்துக்கொண்டு இருக்கிறார்!

சில ஆண்டுகளாக அம்மாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இரண்டு கைகளும் செயலிழந்துவிட்டு இருக்கிறது!

அப்போது முதல் இவர் தான் அம்மாவுக்கு உணவு ஊட்டுவது, குளிக்க வைப்பது, உடை மாற்றுவது என எல்லாவற்றையும் செய்திருக்கிறார்!

ஒவ்வொரு முறையும் அம்மாவை கழிவறைக்கு அழைத்து செல்லும்போதும், சுத்தம் செய்யும் போதும் அந்த அம்மா மிகவும் வேதனைப்படுவாராம்,

மூன்று பிள்ளைகளில் ஒன்று பெண்பிள்ளையாக இருந்தால் உனக்கு இந்த கஷ்டத்தை கொடுத்திருக்க மாட்டேன்!

ஒரு ஆண் பிள்ளையாக இருந்துகொண்டு இதுபோன்ற வேலைகளையெல்லாம் நீ செய்வதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாகவும் தர்மசங்கடமாகவும் இருப்பதாக வேதனைப்பட்டிருக்கிறார்!

அம்மா என்று வந்துவிட்ட பின் மகனென்ன மகளென்ன, உங்களுக்கு பெண்பிள்ளை பிறக்கவில்லை என்று நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்மா, அப்படி பிறந்திருந்தால் உங்களை பார்த்துக்கொள்ளக்கூடிய இந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்காது!

இது எல்லா மகனுக்கும் கிடைக்காது,

ஒரு வேளை எனக்கு இது போன்ற சூழ்நிலை உருவாகியிருந்தால் மகனாக இருந்தாலும் ஒரு ஆண் என்று தர்மசங்கடமாகவோ கூச்சமாகவோ உணர்ந்திருப்பீர்களா?!

இது என்னுடைய குழந்தை என்று எல்லாவற்றையும் நீங்கள் தானே செய்திருப்பீர்கள்! அதுபோல் தான் இதுவும், ஒரு நொடி கூட நான் தர்மசங்கடமாகவோ கஷ்டமாகவோ உணர்ந்ததில்லை அப்பாவை இழந்த பின்னும் எவ்வளவோ கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தீர்கள் அந்த கஷ்டத்திற்கு முன்னால் இதெல்லாம் பெரியவிஷயமே இல்லை,

நீங்களும் கஷ்டமாக உணராதீர்கள் என்று அம்மாவை சமாதானபடுத்தி இருக்கிறார்!

சம்பளம் கொடுத்து யாராவது ஒரு பெண்ணை வேலைக்கு வைத்துக்கொள்ளும்படி அண்ணன்கள் கூறியிருக்கிறார்கள்,

பணத்திற்காக யாரோ ஒரு பெண் வந்து வேலை செய்யும் போது தான் பாரமாக இருப்பதாக அம்மா உணரக்கூடும்,

அந்த உணர்வு கடைசி வரை வந்துவிடக்கூடாது அதற்காகத்தான் நானே எல்லா வேலைகளையும் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்!

பகலில் எதாவது அவசர தேவை என்றால் மனைவி பார்த்துக்கொள்கிறாராம்!

மற்றபடி இரவு மற்றும் காலை வேளைகளில் இவர்தான் எல்லா வேலைகளையும் ஒரு குழந்தைக்கு செய்வதை போல் செய்வாராம்,

தன் அண்ணன்கள் வசதியாக இருக்கிறார்கள், சிகிச்சைக்கு தேவையான பணத்தை அவ்வப்போது அனுப்புவார்கள், என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறேன்,

அண்ணன்கள் எல்லாம் வசதியாக இருக்கிறார்கள்,

நான் டிரைவராக கஷ்டப்படுகிறேன் என்று அம்மாவும் நிறைய முறை வருத்தப்பட்டு இருக்கிறார் என்று சொன்னார்!

இவரைப்போன்ற மகன்களை பெற்றவர்கள் தான் உண்மையான பாக்கியசாலிகள்!

தாயையும் மிஞ்சக்கூடிய ஒரு அன்பை இவரிடம் பார்த்து மிகவும் நெகிழ்ந்து போனேன்!

சினிமா சம்மந்தமாகவோ பொதுவான பேச்சுக்களிலோ அம்மாவின் மீது பாசம் கொண்ட மகனைப்பற்றி பேச்சு வந்தால் முதலில் இவர்தான் ஞாபகம் வருகிறார்!

உண்மையில் எந்த நண்பரின் குடும்பத்தோடு கோயிலுக்கு சென்றேன் என்பது முழுமையாக ஞாபகம் இல்லை!

எத்தனை வருடங்களுக்கு முன் என்பதும் சரியாக ஞாபகம் இல்லை!

எந்த கோயில் எந்த சாமி எதுவும் ஞாபகம் இல்லை ஆனால் இவரின் உடை முதல் உருவம் வரை எல்லாம் தெளிவாக ஞாபகம் இருக்கிறது!

காரணம் அவரின் அந்த குணம், பண்பு, செயல், நேர்மறை சிந்தனை, அளவுக்கு அதிகமான அன்பு!

இதுபோன்ற மனிதர்கள் அபூர்வம்!

அம்மாவை பார்த்துக்கொள்வது கடமை என்றால் அதிகபட்சம் ஆள்வைத்து பார்த்துக்கொள்வார்கள்,

தானே அன்போடும் அவருக்கு சேவை செய்வதை தன் கடமையாகவும் நினைக்கும் போது தான் அவர் உயர்ந்து நிற்கிறார்!

கடவுள் உங்களின் அண்ணன்களுக்கு எல்லா செல்வங்களையும் கொடுத்து சந்தோஷமாக வைத்திருக்கிறார்,

ஆனால் உங்களுக்கு மட்டும் தான் அம்மாவை பார்த்துக்கொள்ள கூடிய பாக்கியத்தையும் புண்ணியத்தையும் கொடுத்திருக்கிறார் அதற்காக நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்று சொன்னேன்!

கருப்பு நிறம், வெள்ளை சபாரி, நரைத்த முடி இந்த மூன்றையும் ஒன்றாக பார்க்க நேர்ந்தால் முதலில் ஞாபகம் வருவது அந்த மனிதர் தான்!

எங்கிருந்தாலும் நிச்சயம் சந்தோஷமாகத்தான் இருப்பார்!

காரணம் அவருடைய அன்பும் நேசித்தலுமான நேர்மறை வழி!

  • 67
  • 66
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: கையிருப்பு கரையக் கூடும். பிள்ளைகளின் உடல்நிலை லேசாக பாதிக்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.

ரிஷபம்: அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் திட்டமிட்டு முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள்.

மிதுனம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பூர்வீக சொத்தை விற்பீர். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் அறிமுகம் கிட்டும். வியாபார நல்ல லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

சிம்மம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர். சில வேலைகளை முடித்துவிட்டோம் என மன நிம்மதியுடன் இருப்பீர். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர். பணவரவு உண்டு. வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.

கன்னி: குடும்ப உறுப்பினர்களுடன் விவாதம் வரும். புதிய சிந்தனைகள் தோன்றும். மனைவி, பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

துலாம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக் கூடும். மூத்த சகோதர, சகோதரிகள் பண உதவி செய்வார்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

விருச்சிகம்: குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். பணவரவு திருப்தி தரும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

தனுசு: பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். பழைய நினைவுகளில் மூழ்குவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.

மகரம்: வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்களின் அறிமுகம் கிட்டும். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்: எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் வந்து சேரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கை யாளர்களை கவருவீர். அலுவலகத்தில் உங்கள் தரம் ஒருபடி உயரும்.

மீனம்: தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.

  • 150
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 5.8.2026.

இன்று மாலை 06.09 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று இரவு 07.32 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று மாலை 04.28 வரை சூலம். பின்னர் கண்டம்.

இன்று காலை 07.00 வரை பத்திரை. பின்னர் மாலை 06.09 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் இரவு 07.32 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=606&dpx=2&t=1785895292

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 152

Good Morning...

  • 150
·
Added article
·

முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் 'மைசா' கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான நடனப் படப்பிடிப்பு நடைபெற்றபோது, எதிர்பாராத விதமாக ராஷ்மிகா கீழே விழுந்தார். இதில் அவரது வலது பக்க இடுப்பு பகுதியில் உள்ள முக்கிய தசைநார் கிழிந்து 'காயமடைந்தார். இதனால் அவர் 6 வாரங்களுக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

என் வலது இடுப்பில் உள்ள ஒரு தசைநார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை தூக்க முடியவில்லை. அந்த தசைநார் மீண்டும் இணையும் வரை ஓய்வு தேவை. வலி இருக்கிறது, ஆனால் தாங்க முடியாத அளவுக்கு இல்லை. நீயாக ஒருபோதும் ஓய்வு எடுக்கமாட்டாய், அதனால் நானே உனக்கு ஓய்வு தருகிறேன் என்று கடவுள் கொடுத்த ஓய்வு. இப்போது கட்டாய ஓய்வில் இருக்கிறேன். உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் நான் நிறைய சாப்பிட்டு 'டெசர்ட் மான்ஸ்டர்' ஆகிவிடுவேனோ என்ற பயத்தில் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்கிறேன். நிறைய புதிர்களைத் தீர்த்து நேரத்தை கழித்து வருகிறேன். கவலைப்படாதீர்கள், விரைவில் மீண்டு வருவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்மிகாவின் இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் பாலர் வர் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

  • 223
·
Added article
·

ஜீவா நடிக்​கும் ‘தகப்​பன்’ படத்தை ‘கி​டா’ படத்தை இயக்​கிய ரா.வெங்​கட் இயக்​கு​கிறார். சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​கிறார். நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்​கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்​களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்​பில் குமார் தயாரிக்​கும் இப்​படத்​துக்​குச் சுயாதீன இசைக்​கலைஞர் மார்​ஷல் ராபின்​சன் இசையமைக்​கிறார்.

அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்​றும் மனித உணர்​வு​களை மைய​மாகக் கொண்ட ஆழமான குடும்​பக் கதை​யாக உரு​வாகி வரும் இப்​படத்​தின் முதல் தோற்​றம் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

“மதுரை பின்​னணி​யில் உரு​வாகும் இப்​படத்​தின் 50 சதவீத படப்​பிடிப்பு நிறைவடைந்​துள்​ளது. ‘தெ​னாவட்டு ’ திரைப்​படத்​துக்​குப் பிறகு, கிராமத்​துப் பின்​னணி​யில் ஜீவா நடிக்​கும் படம் இது. அவரது திரைப்​பயணத்​தில் முக்​கிய​மான மற்​றும் வித்​தி​யாச​மான படைப்​பாக இப்​படம் அமை​யும்​” என்​று படக்​குழு​வினர்​ தெரி​வித்​துள்​ளனர்​.

  • 227
·
Added a news
·

கல்கரியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 'ஸ்டோனி டிரெயில்' சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த கோர முக்கோண வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் '90 அவென்யூ S.W.' பகுதிக்கு சற்று வடக்கே இந்த விபத்து நடந்துள்ளது.

வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில், தவறான திசையில் (தெற்கு நோக்கி) அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று, எதிரே சரியாக வந்த இரண்டு வாகனங்கள் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் தீவிரத்தில் சிறுவர் ஒருவர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் இருவர் சிறுவர்கள் ஆவர்.

இச்சம்பவம் குறித்து கல்கரி காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விபத்து காரணமாக பல மணி நேரம் மூடப்பட்டிருந்த அப்பாதை, திங்கள்கிழமை காலை 9:45 மணியளவில் மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.

  • 225
·
Added a news
·

கனடா உட்பட ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டம்

கனடாவிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் ஒன்றை மூட அமெரிக்கா திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டின் துவக்கத்தில் டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற முதல் மாதங்களில், ட்ரம்பின், ‘அமெரிக்காவுக்கே முதலிடம்’ என்ற கொள்கைத் திட்டத்துடன், அமெரிக்க அதிகாரத்துவத்தை முழுமையாக ஒருங்கிணைக்கும் வகையில் மாற்றுவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை கிட்டத்தட்ட ஒரு டசின் வெளிநாட்டுத் தூதரகங்களை மூடுவதற்கான திட்டங்களை துவக்கியுள்ளதாக ராய்ச்சர்ஸ் முதலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகம், சுமார் 30 வெளிநாட்டுத் தூதரகங்களை மூடும் திட்டத்திற்குப் பரிந்துரைத்திருந்தது.

சில சிறிய வெளிநாட்டுத் தூதரகங்கள் அத்தியாவசியமற்றவை என்றும் நிதி ரீதியில் பயனற்றவை என்றும் சில நிர்வாக அலுவலர்கள் தனிப்பட்ட முறையில் வாதம் முன்வைத்திருந்தார்கள்.

இந்நிலையில், தற்போது, கிரேனாடா, ஜப்பான், இந்தோனேசியா, கேமரூன் மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகளில், நாட்டுக்கு ஒரு துணைத்தூதரகம் என ஐந்து துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாம்.

இவற்றில், கிரெனடாவின் செயின்ட் ஜார்ஜில் உள்ளது, ஒரு தூதரகம் (embassy) ஆகும். இந்தோனேசியாவின் மேடான், கனடாவின் வின்னிபெக் மற்றும் ஜப்பானின் நகோயாவில் உள்ள அலுவலகங்கள், துணைத் தூதரகங்கள் (consulates) ஆகும். அதே நேரத்தில், கேமரூனின் டூவாலாவில் உள்ள அலுவலகம், ஒரு தூதரகக் கிளை அலுவலகம் (embassy branch office) ஆகும்.

இந்த துணைத் தூதரகங்களும், கிளை அலுவலகங்களும், பொதுவாக, அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் ஒரு வெளிநாட்டின் தலைநகரத்திற்கு வெளியே உள்ள பிராந்தியங்களில், அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் அலுவலகங்கள் ஆகும்.

முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் போது, சீனாவுடன் செல்வாக்கிற்காகப் போட்டியிடும் பசிபிக் பிராந்தியத்தில், பல வெளிநாட்டுத் தூதரகங்களை அமெரிக்க அரசாங்கம் திறந்தது குறிப்பிடத்தக்கது.

  • 228
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பிரபலங்​கள்​ உதவுவர்​. பயணங்​கள்​ சிறப்​பாக அமை​யும்​. நேர்​கொண்​ட ​பார்​வை​யுடன்​ சில ​முடிவு​கள்​ எடு​ப்​பீர்​. அலு​வல​கத்​தில்​ ​தான்​ உண்​டு தன்​ வேலை என்​று இரு​க்​க பழகி​க்​ ​கொள்​வது நல்​லது. ​வி​யா​பாரத்​தில்​ பணி​யாட்​கள்​ கடமை​யுணர்​வுடன்​ செயல்​படு​வார்​கள்​.

ரிஷபம்​: தள்​ளிப்​ ​போய்​கொண்​டிருந்​த சுப​காரி​யங்​கள்​ கை கூடி வரு​ம்​. பணவர​வு உண்​டு. வீடு, ​வாக​னத்​தை ​மாற்​றுவீர்​. கூட்​டு​த்​தொழிலில்​ பங்​கு​தா​ரர்​ உதவி​கர​மாக நடந்​து ​கொள்​வார்​. ​வி​வாதங்​களை த​விர்​ப்​​பது நல்​லது. அலு​வல​கத்​தில்​ ​யாரை​யும்​ பகை​த்​துக்​ ​கொள்​ளாதீர்​கள்​.

மிதுனம்​: உங்​களைச்​ சுற்​றி​யிருப்​பவர்​களில்​ நல்​ல​வர்​கள்​ ​யார்​ என்​ப​தை கண்​டறிவீர்​கள்​. பணவர​வு ​திருப்​தி தரு​ம்​. பிள்​ளைகள்​ குடும்​ப சூழ்​நிலை அறிந்​து செயல்​படு​வர்​. அலு​வல​கத்​தில்​ மேல​தி​காரி ​பா​ராட்​டு​வார்​. ​வி​யா​பார ரீ​தி​யாக பிரபலங்​களை சந்​தி​க்​கும்​ ​வாய்​ப்​பு கிடைக்​கும்​.

கடகம்: வெளிவட்​டாரத்​ தொடர்​பு கூடும்​. பழைய கடனைத்​ தீர்​க்​க ​முயற்​சி செய்​வீர்​. தேவை பூர்​த்​தி​யாகும்​. பூர்​வீக வீட்​டை சீரமைத்​து ​விரிவுபடு​த்​தி கட்​டு​வீர்​கள்​ ​வி​யா​பாரத்​தில்​ டென்​ஷன்​ ​வில​கும்​. அலுவல​கத்​தில்​ தேடிய ​முக்​கிய ஆவணம்​ தென்​படும்​.

சிம்​மம்​: புது வீடு, மனை, ​வாக​னம்​ ​வாங்​கு​வது குறித்​து யோசிப்​பீர்​. வெளியூர்​ பயணங்​களால்​ ஆ​தா​யம்​ உண்​டு. ​வி​யா​பாரத்​தில்​ ​போட்​டி ​வில​கும்​. பு​தி​ய பங்​கு​தா​ரரின்​ கருத்​துகளுக்​கு ​முக்​கி​யத்​து​வ​ம்​ அளிப்​​பது நல்​லது. அலு​வல​கத்​தில்​ பணிச்​சுமை குறை​யும்​. ம​திப்​பு உயரு​ம்​.

க​ன்​னி: மக​னின்​ படிப்​பு, மகளின்​ ​திரு​மணம்​ தொடர்​பாக அலைச்​சல், டென்​ஷன்​ இரு​க்​கும்​. ​வாக​னம்​ பழு​தாகும்​. மனை​விவழி​யில்​ ​வி​வாதங்​கள்​ வந்​து ​போகும்​. எ​தி​லும்​ அவசரம்​ ​காட்​ட வேண்​டா​ம்​. உத்​தி​யோகம்​ சிறக்​கும்​. ​வி​யா​பாரத்​தில்​ பங்​கு​தா​ரரின்​ ஆலோ​சனையை ஏற்​க​​வும்​.

துலாம்​: சோர்​வு நீங்​கி சுறுசுறுப்​புடன்​ செயல்​பட்​டு பணி​களை ​முடிப்​பீர்​. குடும்​ப​த்​தில்​ கல​கலப்​பான சூழல்​ ஏற்​படும்​. சிந்​தனைத்​ ​திறன்​ கூடும். மனை​வி, ​தா​யாரின்​ ஆரோக்​கி​யம்​ சீ​ராகும்​. ​வி​யா​பாரம்​ சூடு பிடித்​து லாபம்​ ​பார்​ப்​பீர்​. அலு​வல​கத்​தில்​ ம​திப்​பு, மரி​யாதை உயரு​ம்​.

​விருச்​சிகம்: புத்​தி​சாலித்​தனம்​ வெளிப்​படும்​. பணவர​வு ​திருப்​தி தரும்​. பிரபலங்​கள்​ நண்​பர்​களா​வார்​கள்​. வீட்​டில்​ அமை​தி நில​​வும். ஆன்​மிகத்​தில்​ ஈடு​பாடு கூடும்​. ​வி​யா​பாரத்​தை பெரியள​வில்​ ​விரிவுபடு​த்​த ​முயற்​சிப்​பீர்​. அலு​வல​கத்​தில்​ ​யாரை​யும்​ பகை​த்​துக்​ ​கொள்​ளாதீர்​கள்​.

தனுசு: குடும்​ப​த்​தினரின்​ ​விருப்​ப​த்​தை கேட்​டறிந்​து நிறைவேற்​றுவீர்​கள்​. பிள்​ளைகளால்​ அந்​தஸ்​து உயரு​ம்​. நண்​பர்​கள்​ மூலம்​ உத​வி​யுண்​டு. ​வி​யா​பாரத்​தில்​ பு​தி​ய ​யுக்​தி​களைக்​ கை​யாண்​டு பழைய ​வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர்​. உத்​தி​யோகத்​தில்​ ​முன்​னேற்​றம்​ ​காண்​பீர்​கள்​.

மகரம்​: குடும்​ப​த்​தா​ரின்​ உணர்​வு​களைப்​ புரிந்​துக்​ ​கொள்​வீர்​. பிள்​ளைகளால்​ பெருமையடைவீர்​. பூர்​வீக வீடு, மனை, ​விவ​சாய நிலம்​ உள்​ளிட்​ட​வற்​றை ​விற்​க ​முயற்​சிப்​பீர்​கள்​. ​வியா​பாரத்​தில்​ பிரபலங்​களின்​ அறிமுகம்​ கிட்​டும்​. உத்​தி​யோகம்​ சிறக்​கும்​.

கும்​பம்​: ​வாழ்​க்​கை​யின்​ நெளிவு, சுளிவு​களைக்​ கற்​றுக்​ ​கொள்​வீர்​. மனை​விவழி உற​வினர்​ மத்​தி​யில்​ ம​திப்​பு உயரு​ம்​. நண்​பர்​ உத​வி​யுடன்​ புது வேலை கிடைக்​கும்​. அலு​வல​கத்​தில்​ பு​தி​ய ப​தவி​க்​கு பரிந்​துரைக்​கப்​படு​வீர்​. ​வி​யா​பாரம்​ லாபம்​ தரு​ம்​. பங்​கு​தா​ரரின்​ ஆதர​வு கிட்​டும்​

மீனம்​: சின்​னச்​ சின்​ன ​விஷ​யங்​களுக்​கு வருந்​தாதீர்​கள்​. நி​தான​மாகப்​ பேச​வும்​. நீங்​கள்​ ஒன்​று பேசப்​ ​போய்​ மற்​றவர்​கள்​ அதை வேறு​வித​மாகப்​ புரிந்​துக்​ ​கொள்​வர்​. அலு​வல​கத்​தில்​ அடு​த்​தவர்​ ​விஷயத்தில்​ தலை​யிடாதீர்​. ​வி​யா​பாரத்​தில்​ பங்​கு​தாரரின்​ கருத்​துகளை ஏற்​கவும்​.

  • 337
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 4.8.2026

இன்று இரவு 07.52 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று இரவு 08.29 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி. நாமயோகம் : இன்று மாலை 06.53 வரை திருதி. பின்னர் சூலம்.

இன்று காலை 08.32 வரை கரசை. பின்னர் இரவு 07.52 வரை வணிசை. பிறகு பத்திரை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=605&dpx=2&t=1785811882

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.00 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 343

Good Morning...

  • 335
  • 411
  • 410
New People