கங்கனா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில், தனது முதுகுப் பகுதியில் மட்டும் ஒரு பர்ஃப்யூம் பாட்டிலை வைத்து போஸ் கொடுத்துள்ளார். அந்த பாட்டிலின் பெயரான "Crave Me" என்பதையே கேப்ஷனாகவும் பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் இது முழுக்க முழுக்க ஒரு பிராண்ட் புரோமோஷன் என்பது தெளிவாகியுள்ளது.
பொதுவாக பிராண்ட் புரோமோஷன் என்றாலே, தயாரிப்பை கையில் வைத்தோ அல்லது பயன்படுத்துவதுபோலவோ பிரபலங்கள் புகைப்படம் வெளியிடுவது வழக்கம். ஆனால், கங்கனா சர்மா தேர்வு செய்திருக்கும் இந்த கான்செப்ட் இதுவரை இந்திய அளவில் பெரிதாக யாரும் முயற்சிக்காத ஒன்றாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சமீப காலமாக பிராண்ட் புரோமோஷன், கிளாமர் புகைப்படங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர்களில் நடிகை தர்ஷா குப்தாவும் ஒருவர். இன்ஸ்டாகிராமில் தனக்கென ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் அவர், சமீபத்தில் தனியாக ஒரு செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தர்ஷா குப்தா: அந்த செயலியில் வீடியோ கால் வசதிக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம், பிரத்யேக வீடியோக்களுக்கு தனி சந்தா, அதேபோல் பிராண்ட் கொலாபரேஷன்களுக்கும் தனி கட்டணம் என பல்வேறு வகையான சர்வீஸ்களுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலித்து வருகிறார். அதனால், அவர் ஒரு பிராண்டை விளம்பரப்படுத்தினால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
ஆனால், கங்கனா சர்மா வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட், பிராண்ட் புரோமோஷனுக்கும் ஒரு புதிய முகத்தை கொடுத்துள்ளது என்று சொல்லலாம். தயாரிப்பை மட்டும் மையப்படுத்தாமல், புகைப்படத்தின் முழு கான்செப்ட்டையும் அந்த பிராண்டுடன் இணைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
இதன் காரணமாக, "பிராண்ட் புரோமோஷன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்", "இந்த அளவுக்கு கான்செப்ட் யோசித்து விளம்பரம் செய்வது வேறு லெவல்" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளங்களில் தற்போது "பிராண்ட் புரோமோஷனில் கங்கனா சர்மாவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை" என்ற பேச்சையே இந்த ஒரு பதிவு உருவாக்கியுள்ளது.
காமெடி நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி, இன்று கதையின் நாயகனாக வெற்றிகரமாக வலம் வரும் சூரி, அடுத்ததாக 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். கடலோர மக்களின் வாழ்க்கையையும், படகு பந்தயத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ரசிகர்களின் செயல்பாடு குறித்து சூரி பேசியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது, தனது முந்தைய படமான மாமன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட சம்பவத்தை குறிப்பிட்ட சூரி, "அது எனக்கு சந்தோஷம் கொடுக்கவில்லை. உண்மையை சொல்லணும்னா, வெட்கமாகத்தான் இருந்தது" என்று வெளிப்படையாக கூறினார்.
மேலும், "சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வளர்ந்தவன் நான். அந்த பசியோட வலி என்னன்னு எனக்கு தெரியும். நீங்க சாப்பாட்டை மதிக்காமல், வீணாக்கி இப்படிச் செய்வது சரியில்லை. ஒரு படம் நல்லா இருந்தா மக்கள் பார்த்து வெற்றி பெற வைப்பாங்க. மண்சோறு தின்றா படம் ஓடாது. இது முழுக்க முழுக்க முட்டாள்தனம் தம்பி" என்று எந்தவித தயக்கமும் இல்லாமல் தனது ரசிகர்களுக்கே அறிவுரை கூறியுள்ளார்.
நடிகர் விமலுக்கு எதிராக தொடரப்பட்ட ரூ.4.5 கோடி செக் மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், மேல்முறையீடு செய்ய சட்டப்படி அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், தண்டனையை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அவரின் கடைசி படம் ஜனநாயகன். இதனாலேயே, அறிவிப்பு வர்றதுக்கு முன்னாடியே படத்துக்கு பயங்கர ஹைப்ப்பு ஏறிடுச்சு. அப்போதிலிருந்து படம் ரிலீஸ் ஆகும் இந்த நாள் வரை, ஒரு பெரிய ஸ்டார் படத்துக்குரிய எல்லா பரபரப்பும் இந்த புராஜெக்ட்டை சுத்தி இருந்துட்டே இருந்துச்சு. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம், சென்சார் பிரச்சினைகளால் ஆறு மாசத்துக்கும் மேல தள்ளிப்போச்சு. இப்போ எல்லா தடைகளையும் தாண்டி, படம் நாளைக்கு தியேட்டர்களுக்கு வருது. இவ்வளவு தாமதம் ரசிகர்களின் ஆர்வத்தை குறைச்சிருக்கா? இல்லவே இல்லைன்னு அட்வான்ஸ் புக்கிங் ரிப்போர்ட் சொல்லுது.
சினிமா டிராக்கர்கள் சொல்ற கணக்குப்படி, தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளுக்காக படம் 12 கோடி ரூபாய் அட்வான்ஸ் புக்கிங் ஆகியிருக்கு. இதன்படி, சுமார் ஏழு லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. 70 சதவீதத்துக்கும் அதிகமான தியேட்டர் ஆக்குபென்சியும் பதிவாகியுள்ளது. பல தியேட்டர்களில் புதிய ஷோக்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. பிரபல டிராக்கர் நிறுவனமான சாக்னில்க் (Sacnilk) கணக்குப்படி, இந்தியா முழுவதும் படம் இதுவரை 15.48 கோடி ரூபாய் கிராஸ் வசூல் செய்துள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்புகளின் முதல் நாள் புக்கிங் மட்டும். இந்தியா முழுவதும் இதுவரை 7.46 லட்சம் டிக்கெட்டுகளை படம் விற்றுள்ளதாக சாக்னில்க் அறிக்கை சொல்லுது.
அதே சமயம், சாக்னில்க் நேற்று வெளியிட்ட உலகளாவிய கணக்கின்படி, படம் 30 கோடி ரூபாய் கிராஸ் வசூலித்திருந்தது. ஒரு கட்டத்தில், புக் மை ஷோவில் (BookMyShow) ஒரு மணி நேரத்திற்கு 15,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தது. பெங்களூருவில் 'ஜனநாயகன்' முதல் ஷோ டிக்கெட்டுகள் 100 ரூபாயில் இருந்து 2500 ரூபாய் வரை விற்கப்படுது. பல மல்டிபிளெக்ஸ்களில் உள்ள ரெக்லைனர் சீட்களுக்கு 2500 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்சார் பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப்போன இடைவெளியில், படம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் லீக் ஆகி பரவலா பரவியது. இதன் தாக்கம் அட்வான்ஸ் புக்கிங்கில் தெரிவதாக டிராக்கர்கள் கருதுகிறார்கள். ஆனாலும், இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் தியேட்டரில் வந்து பார்ப்பார்கள் என தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். படம் முதல் நாளில் 100 கோடி வசூல் செய்யுமா என்ற கேள்விக்கு விடை தேடி ஒட்டுமொத்த திரையுலகமும் காத்திருக்கிறது. எச். வினோத் இயக்கி உள்ள இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரித்துள்ளது.
தமிழ் சினிமாவுல இப்போ வேற லெவல் கூட்டணி ஒன்னு செட் ஆகியிருக்கு! உலக நாயகன்கள்ல ஒருவரான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்துல, நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் கியூட்டான நடிப்பால எல்லாரையும் கவர்ந்த சாய் பல்லவி இணையப் போறாங்க.
இந்த தரமான சம்பவத்துக்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்துல படுஜோரா தொடங்க இருக்கு. அதுமட்டுமில்லாம, மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்குற இந்த படத்துக்கு நம்ம இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் மியூசிக்.
ஏற்கனவே ‘செக்கச்சிவந்த வானம்’ படத்துல மணிரத்னம், விஜய் சேதுபதி காம்போ எப்படி பட்ட ஹிட்னு நமக்கு தெரியும், இப்போ அது கூட சாய் பல்லவி வேற சேர்ந்துருக்கதால எதிர்பார்ப்பு இப்போவே ஹைய் ஆப்ல இருக்கு.
அதுவும் மணிரத்னம் மேஜிக், ரஹ்மானோட மியூசிக்னு வந்தா தியேட்டர்களில் தெறிக்கவிடுறது உறுதி. படப்பிடிப்பு தொடங்குறதுக்கு முன்னாடியே கோலிவுட்ல இந்த நியூஸ் தான் ஹாட் டாபிக்கா ஓடிட்டிருக்கு!
மனித மனதிற்குள் புதைந்து கிடக்கும் ஆழமான ஏக்கங்களையும், வெளிப்படுத்தாத ஆசைகளையும் மையமாக வைத்து ஒரு அழகான ஃபீல்-குட் திரைப்படத்தை இயக்கியுள்ளார் வர்ஷா வாசுதேவ். பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் அபிஜித் பாபுஜி தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் ஜூன் 19 ஆம் தேதி ஏஜிஎஸ் சினிமாஸ் விநியோகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரைக்கு வருகிறது.
புனித நகரமான காசியின் பின்னணியில், எதிர்பாராத சூழலில் இணையும் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உணர்வுப்பூர்வமான பயணமே இப்படத்தின் முக்கியக் கதைக்களமாகும். இதில் முதன்முறையாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் மற்றும் மூத்த நடிகை மதுபாலா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
கனடாவில், வாடகை மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ப்ராம்டனில் வாழும் சவ்ரீத் கௌர் (27) என்னும் பெண், வீடு வாடகைக்கு இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தை நம்பி, பலர் கௌரை அணுகி வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன், டெபாசிட் தொகையும் செலுத்தியுள்ளனர்.
ஆனால், அவர்கள் சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் செல்லும்போதுதான் தெரிந்துள்ளது, அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு குடும்பம் வாடகைக்கு இருப்பதும், அந்த வீட்டை வாடகைக்கு விடும் திட்டமே அந்த வீட்டுக்காரருக்கு இல்லை என்பதும்!
இதில் சிலர் தாங்கள் ஏற்கனவே வசித்த வீட்டை காலி செய்துவிட்டு தங்கள் உடைமைகளுடன் வந்துள்ளார்கள். அவர்கள் வாடகை ஒப்பந்தம் செய்து, குடியிருப்பதற்காக வந்த வீட்டில் ஏற்கனவே வேறொரு குடும்பம் வசித்துவருவது தெரிய வந்ததால், என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போன சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில், அப்படி சுமார் 17 பேரை ஏமாற்றிய சவ்ரீத் கௌர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சுமார் 60,000 டொலர்களுக்கும் அதிகமான தொகையை இந்த வகையில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் மீது 38 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடயம் என்னவென்றால், வீடு வாடகைக்கு இருப்பதாக அவருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 17 பேரில் ஒருவருக்குக் கூட அவர் உறுதியளித்தபடி வீடும் கிடைக்கவில்லையாம், அவர் வாங்கிய டெபாசிட்டும் திருப்பிக் கொடுக்கப்படவில்லையாம்,
கனடாவின் ஒண்டாரியோ மாகாணம் முழுவதும் சிறுவர்களுக்கு எதிரான இணையவழி பாலியல் சுரண்டலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விரிவான நடவடிக்கையைத் தொடர்ந்து, 63 சந்தேக நபர்கள் மீது 200-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
'புராஜெக்ட் டைம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறப்புத் திட்டத்தின் மூலம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை தயாரித்தல், கைவசம் வைத்திருத்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களால் இலக்கு வைக்கப்பட்ட 51 பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உரிய உதவிகளும் வழங்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 264 குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் "தங்கள் சமூகத்தில் பொறுப்பான மற்றும் நம்பிக்கை தரும் பதவிகளில் இருந்தவர்கள்" ஆவர். 8 பேர் ஏற்கனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள். மொத்தம் 814 மின்னணு சாதனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 154 விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒண்டாரியோ மாகாணக் காவல் துறை தெரிவித்துள்ளது.
சிறுவர் பாலியல் சுரண்டல் தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உள்ளூர் காவல்துறையையோ அல்லது cybertip.ca என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆதரவு கிட்டும். லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
மிதுனம்: நெடுநாளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். வியாபாரம் லாபம் தரும்.
\கடகம்: உற்றார் உறவினர் வீடு தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
சிம்மம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு நட்பை புதுப்பிப்பீர்கள். பூர்வீக சொத்து வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
கன்னி: புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: தடைகள் உடைபடும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவீர். திட்டமிட்ட பணியை அலைந்து திரிந்து முடிப்பீர். மனைவி வழியில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரப் போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரிப்பர்.
தனுசு: நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். ஓரளவு லாபம் பார்ப்பீர்.
மகரம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பணவரவு உண்டு. அலுவலகத்தில் நிம்மதியுண்டு. அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர். பிரபலங்களை சந்திப்பீர்கள்.
கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு இருக்கும். கூட்டுத்தொழிலில் பாக்கிகள் வசூலாகும். அலுவலக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் ஆதரிப்பர். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்.
மீனம்: நீண்டநாள் கனவுகள் நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 23.7.2026.
இன்று காலை 10.33 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று அதிகாலை 03.00 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
இன்று இரவு 11.11 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
இன்று காலை 10.33 வரை கௌலவம். பின்னர் இரவு 11.19 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 11.00 முதல் 12.00 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
அர்ஜுன் தாஸ், அன்னா பென் முதன்மை பாத்திரங்களில் நடித்த படம் ‘கான் சிட்டி’. இதில் யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தில் பணியாற்றியவர்கள் பங்கேற்றனர்.
நடிகை வடிவுக்கரசி பேசும்போது, “நான் இன்று உங்கள் முன் நிற்பதே மறுபிறவி கிடைத்ததுபோல. எனக்கு மறுவாழ்வு கிடைக்க உதவியவர்கள், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, சுஹாசினி, மணி ரத்னம், கார்த்திக், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.சி.எஸ். சண்முகம், சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பலர். அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து எனக்கு மீண்டும் வாழ்க்கை அளித்தார்கள்.
இன்று நான் உங்கள் முன்னால் நின்று பேசுவதற்கே அவர்கள்தான் காரணம். அந்த அன்பை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழாவில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய காலத்தில், 25 வாரங்கள், 50 வாரங்கள், 100 நாட்கள், 175 நாட்கள் என படங்கள் ஓடி வெற்றியை கொண்டாடினார்கள்.
இன்று 25-வது நாள் விழாவாக இருந்தாலும், இந்த மகிழ்ச்சி அதே அளவுக்கு இருக்கிறது. நான் அதிகமாக யூடியூப் பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு பல விமர்சனங்களையும், ரசிகர்களின் கருத்துகளையும் பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ‘வடிவுக்கரசி அம்மா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்’ என்று பலரும் எழுதியிருந்தார்கள்.
அவை மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தன. ‘வடிவுக்கரசி ரஃபாக மட்டுமே பேசுவார்’ என்ற எண்ணத்தை உடைத்து, நகைச்சுவை கதாபாத்திரம் கொடுத்து, ரசிகர்களிடம் புதிய வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறார் இயக்குநர். அவருக்கு என் மனமார்ந்த நன்றி” என்றார்.
ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் முதன்மைக் கதா பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘தட்டுவண்டி’.
இதில் திலீபன், மேரி பென்சி குளோரியா, தங்க துரை என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை, ‘பில்டர் கோல்டு’ திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார்.
சர்வைவல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. தற்போது பாடல் பதிவு, பின்னணி இசைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாலிவுட்டின் 'பிக் பி' என அழைக்கப்படும் 83 வயதான அமிதாப் பச்சன், தனது பிளாக்கில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், மருத்துவமனையில் சர்ஜரி, ஐசியுவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் கவனிப்பு, பிறகு வீட்டுக்குத் திரும்புவது என தன் அனுபவத்தை விவரித்துள்ளார். வாழ்க்கையின் மிகக் கடினமான கட்டங்களில் இதுவும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடல் வலியைத் தாண்டி, மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் இந்த நேரம் மிகவும் சவாலானது என்றும் அவர் கூறியுள்ளார். "ஒருநாள் நீங்கள் எல்லாரும் கொண்டாடும் சாம்பியனாக இருப்பீர்கள். அடுத்த நாளே தோல்வி உங்கள் முன் நிற்கும். அந்த நேரத்தில் சிலர் தைரியமாகப் போராடுவார்கள். இன்னும் சிலரோ சூழ்நிலையிடம் சரணடைந்துவிடுவார்கள். ஆனால், தைரியத்தை இழக்காதவர்கள்தான் உண்மையான சாம்பியன்கள்" என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஆனால், அமிதாப் பச்சன் எந்தக் காரணத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், என்ன சர்ஜரி நடந்தது போன்ற விவரங்களைத் தனது பிளாக்கில் வெளியிடவில்லை. இது ரசிகர்களிடையே கவலையை இன்னும் அதிகரித்துள்ளது. அமிதாப்பின் பிளாக் போஸ்ட்டுக்கு கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. ரசிகர்கள் பலரும், 'சீக்கிரம் குணமடையுங்கள்' என்று பதிவிட்டு வருகின்றனர்.
83 வயதிலும் அமிதாப் பச்சன் சும்மா இருக்கவில்லை. தொடர்ந்து தனது பணிகளைச் செய்து வருகிறார். சினிமாவுடன் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். வயோதிகத்தால் ஏற்படும் பிரச்சனைகளை அவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொள்வது வழக்கம். பிரபாஸ் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 AD' படத்தின் அடுத்த பாகத்திலும் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இதில் பிரபாஸ், கமல்ஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
கனடாவில், ஷாப்பிங் மாலுக்குள் கத்தியைக் காட்டி மிரட்டிய ஒருவரை பொலிஸ் துரத்த, பொலிஸ் நடவடிக்கையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் 1.12 மணியளவில், கனடாவின் வடக்கு வான்கூவரில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலில் ஒருவர் கத்தியைக் காட்டி மக்களை மிரட்டிக்கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக பொலிசார் அங்கு விரைய, அந்த நபர் மாலிலிருந்து தப்பி, கார் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார்.
அவரது கார் பல வாகனங்கள் மீது மோத, எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் காரை நிறுத்திய அவர், அங்கு நின்றுகொண்டிருந்த பொலிஸ் காரில் ஏறியுள்ளார். பொலிசார் அவரை சுற்றி வளைக்க, அவர் கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
உடனே பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டு, கைவிலங்கிட்டு கைது செய்துள்ளார்கள்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். சொத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் சுமுகத் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்: விலையுயர்ந்த கலைப்பொருட்கள், ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்தியைப் பயன்படுத்தி லாபத்தைப் பெறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்கு வீர்கள். மனைவியின் சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்துசேரும். பங்கு வர்த்த கத்தில் லாபம் கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.
கடகம்: எதிர்பார்த்த வேலைகள் மளமளவென்று முடியும். பிள்ளை களால் வெளிவட்டாரத்தில் மதிப்பு உண்டாகும். வீட்டை உங்கள் ரசனைக் கேற்ப விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். அண்டை அயலாருடன் இருந்துவந்த கருத்துமோதல் விலகும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும்.
சிம்மம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீகச்சொத்து பிரச்சினை களில் நீடித்த சிக்கல் நீங்கி சுமுகத் தீர்வு கிடைக்கும்.
கன்னி: திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். உறவினர்கள் உங்களைப்பற்றி பெருமையாகப் பேசு வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
துலாம்: வீண் அலைச்சல், டென்ஷன் வரக்கூடும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்கள் அலைச்சலைத் தரும். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மனைவி வழி உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மூத்த சகோதரருடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். வியாபாரம் சுறுசுறுப்படையும். ஆன்மிகக் காரியங்களில் மனம் ஈடுபடும். திடீர் பயணம் ஏற்படும்.
தனுசு: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். விருந்தினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வியாபாரத்தில் வராக்கடன்கள் வசூலாகும்.
மகரம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். உடன் பிறந்தோர் அனுசரணையுடன் நடந்துகொள்வார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து உடனுக் குடன் பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிள்ளைகளின் கவனம் படிப்பில் திரும்பும். தந்தைவழியில் ஆறுதலான செய்தி வரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
மீனம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவது நல்லது. எதற் கெடுத்தாலும் மற்றவர்களை குறைசொல்ல வேண்டாம். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். பிள்ளைகளால் எதிர்பாாரத செலவு ஏற்படும். வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் இருக்கும்.
ஒரு அழகான பெண், பார்க்கிறதுக்கு தேவதை மாதிரி இருக்கிறவங்க, ஒரு விமானத்தில் ஏறினாங்க. ஏறி தனது சீட்டை தேடினாங்க. அங்க போய் பார்த்தா, அவங்க சீட்க்கு அடுத்த சீட்ல ரெண்டு கையையும் இழந்த ஒருத்தர் உக்கார்ந்திருந்தார்.
இவங்களுக்கு அவரை பார்த்ததும் ஒரு மாதிரியா அசூசையா இருந்திச்சு. இந்தாளு பக்கத்தில நாம எப்படி உக்காரது? அப்டின்னு யோசிச்சு, விமான பணிப் பெண்ணை கூப்பிட்டு, "எனக்கு வேற இடத்தில சீட் அரேன்ஜ் பண்ணுங்க.."ன்னு கேட்டாங்க.. அதுக்கு விமான பணிப்பெண், "ஏன் என்னாச்சு உங்க சீட்டுக்கு?"ன்னு கேட்டதுக்கு, "எனக்கு அவர் பக்கத்தில உக்கார்ந்திட்டு வர அருவருப்பா இருக்கு. அதான்" அப்டின்னதும், விமான பணிப்பெண்ணுக்கு தூக்கி வாரிபோட்ருச்சு.
பார்க்க இவ்ளோ டீசென்ட்டா இருக்காங்க. ஆனா இவ்ளோ நாகரீகம் இல்லாம பேசுறாங்களேன்னு சங்கடப்பட்டாலும், ஏதும் பண்ண முடியாதே. அவங்க பயணியாச்சே. வேற வழி. "இருங்க மேடம் நான் பாக்குறேன்"ன்னு சொல்லிட்டு செக் பண்ணி பாக்குறாங்க.. எங்கயும் சீட் காலி இல்லை. அந்த பெண்கிட்ட திரும்பவும், "மேடம், எந்த சீட்டும் காலி இல்லை. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க நான் கேப்டன் கிட்ட பேசிட்டு உங்களுக்கு வேற ஏதாவது மாற்று ஏற்பாடு பண்ண முடியுமான்னு கேட்டு வரேன். அதுவரை பொறுத்திருங்க... ப்ளீஸ்"ன்னு சொல்லிட்டு கேப்டன் ரூம்க்கு போனாங்க.
கொஞ்ச நேரத்தில திரும்பி வந்து, "மேடம், நீங்க எடுத்திருக்கிற டிக்கெட் எக்கானமி கிளாஸ். ஆனா எக்கானமி க்ளாஸ்ல உங்களுக்கு ஒதுக்குறதுக்கு வேற சீட் இல்லை. முதல்வகுப்பு பிரிவில் மட்டும் தான் ஒரு சீட் காலியா இருக்கு. ஆனாலும் நீங்க எங்களோட மதிப்பு வாய்ந்த பிரயாணி. உங்களோட கோரிக்கையையும் பரிசீலிக்காம இருக்க முடியாதே. அதனால, எங்கள் பயண வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு எக்கானமி கிளாஸ் பயணி ஒருத்தருக்கு முதல் வகுப்பு சீட்டை ஒதுக்க போறோம் கொஞ்சம் பொறுங்க"அப்டின்னு சொன்னதும் அந்த பெண்மணிக்கு சந்தோசம் தாங்கல. விமானப் பணிப் பெண்ணின் பதிலுக்கு கூட காத்திருக்காம, முதல்வகுப்புக்கு போக தயாரானாங்க.
ஆனா அங்க நடந்ததே வேற. விமான பணிப்பெண் நேரா அந்த இரண்டு கைகளையும் இழந்தவர்கிட்ட போய், "சார் தயவுசெய்து மன்னிச்சிடுங்க. உங்க லக்கேஜ் எல்லாம் நான் எடுத்திட்டு வரேன். நீங்க முதல் வகுப்புக்கு வாங்க சார், உங்க பக்கத்தில இவங்களை போல ஒருத்தரை உக்காரவைக்க எங்களுக்கு மனமில்லை" அப்டின்னு பணிவா சொன்னதும் விமானத்தில் இருந்த எல்லாரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்து அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்தாங்க.
அந்த அழகான பெண்ணுக்கு ரொம்ப அவமானமா போச்சு... சங்கடத்தோட நெளிஞ்சுக்கிட்டே நின்னாங்க.
அப்போ அந்த கைகளை இழந்த அந்த நபர் எழுந்து, "நான் ஒரு ரிட்டயர்டு மிலிட்டரி மேன். கார்கில் போரில் என்னோட இரண்டு கைகளையும் இழந்திட்டேன். முதல்முறையா இந்த பெண் சொன்னதை கேட்டதும், இவங்கள மாதிரி ஆட்களுக்காகவா நாம அவ்ளோ கஷ்டப்பட்டு போரில் ஈடுபட்டோம்னு ரொம்ப வருத்தமா இருந்திச்சு. ஆனா இப்போ நீங்க எல்லாரும் கை தட்டி ஆராவாரம் செய்றதை கேட்டதும் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது..உங்களை போன்ற இவ்ளோ நல்ல குடிமக்களுக்காக நான் கைகளை இழந்ததிற்காக சந்தோசப்படுறேன்" அப்டின்னு சொல்லிகிட்டே முதல் வகுப்பை நோக்கி மெதுவா நடக்க ஆரம்பிச்சார்.
அந்த பெண்மணியோ அவமானத்தின் உச்சத்தில் இருந்தாங்க. யாரையும் பார்க்கும் தைரியமின்றி தலையை குனிஞ்சு உட்கார்ந்துக்கிட்டாங்க...
தமிழ் திரை உலகில் ஒரே ஆண்டில் அப்பா, மகன் ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடித்தவர் நடிகை அம்பிகா. ஒரு நாள் அப்பாவுடன் ஜோடியாகவும் அடுத்த நாள் மகனுடன் ஜோடியாகவும் அவர் நடித்ததாக பேட்டியில் கூட தெரிவித்துள்ளார். அந்த அப்பா, மகன் நடிகர்கள் தான் சிவாஜி கணேசன் மற்றும் பிரபு என்பதும், இந்த இருவருக்கும் ஜோடியாக நடித்த நடிகை தான் அம்பிகா என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரளாவை சேர்ந்த அம்பிகா குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் சில படங்கள் நடித்துள்ளார். மலையாளத்தில் ஹீரோயினியாகவும் பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் பாக்யராஜ் நடித்து இயக்கிய ‘அந்த ஏழு நாட்கள்’ என்ற திரைப்படம் தான் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. அந்த படத்தின் வெற்றி காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
குறிப்பாக ’கடல் மீன்கள்’, ’தீர்ப்புகள் திருத்தப்படலாம்’, ’சகலகலா வல்லவன்’, ’எங்கேயோ கேட்ட குரல்’, ’வாழ்வே மாயம்’ ஆகிய திரைப்படங்கள் அவரது நடிப்பில் வெளியான வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் ஒரு கட்டத்தில் அப்பா, மகன் ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடிக்கும் நிலை ஏற்பட்டது. ’வெள்ளை ரோஜா’ மற்றும் ’திருப்பம்’ ஆகிய திரைப்படங்களில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த அதே ஆண்டில் ’வாழ்க்கை’ என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் கிட்டத்தட்ட அடுத்தடுத்து சில மாதங்களில் வெளியானது என்பதும் இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் ஒரு நாள் அப்பாவுக்கு ஜோடி, ஒருநாள் மகனுக்கு ஜோடி என நடிப்பது குறித்து பத்திரிகை பேட்டியில் புலம்பியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அதனை அடுத்து அவருக்கு தொடர்ச்சியாக வெற்றி படங்கள்தான் கிடைத்தது. குறிப்பாக கமல்ஹாசனுடன் ’காக்கிச்சட்டை’, ரஜினியுடன் ’நான் சிகப்பு மனிதன்’, மீண்டும் கமல்ஹாசனுடன் ’உயர்ந்த உள்ளம்’ போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தன. மேலும் ’படிக்காதவன்’, மிஸ்டர் பாரத்’, ’விக்ரம்’, ’நானும் ஒரு தொழிலாளி’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை அம்பிகா கடந்த 1988 ஆம் ஆண்டு பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உண்டு என்பதும் அவர்கள் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் ஆகி 8 ஆண்டுகளில் அதாவது 1996ஆம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்தார் அம்பிகா. அதன் பிறகு அவர் நடிகர் ரவிகாந்த் என்பவரை திருமணம் செய்தார். 2002ல் திருமணம் செய்து கொண்டாலும் இரண்டே ஆண்டுகளில் இந்த திருமணமும் முடிவுக்கு வந்தது. இதன் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக அவர் தனது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்.
தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் கனவு கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற அம்பிகா சமீபத்தில் கூட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார் தற்போது அவர் ’மலர்’ என்ற சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இணையத்தில் வெளியான தகவல்
வாங்க தரகு….. நீங்க சொன்ன பொண்ணை நேத்து போய் பார்த்தோம்….. பொண்ணு அழகா தான் இருக்குது…..
பிறகென்ன… இந்த இடத்தையே முடிச்சிடவேண்டியது தானே …. நல்ல இடம்பா. ……
எல்லாம் சரி. …. ஜாதகம் பொருந்தலயே…….தோஷம் இருக்குன்னு சொல்லிட்டாங்க…
யாருக்கு பெண்ணுக்கா….. உங்க பையனுக்கா…..
பையனுக்குதான்….செவ்வாய் தோஷம் 'ன்னுசொல்லிட்டாங்க….
அதுக்கென்ன இப்போ…ஜாதகத்தை மாத்தி கொடுத்திட்டா போச்சு… …
அது எப்படி தரகு….. இது வாழ்க்கை பிரச்சனைஆச்சே,ஆயிரங்காலத்துபயிராச்சே. …..
அட போப்பா….. எந்த ஜாதியிலும் இப்ப பொண்ணே கிடைக்கலே… அவ்வளவு டிமாண்ட்….. பொண்ணுக்கு அலைய வேண்டியதா இருக்குது….
பின்னாடி கண்டு பிடிச்சா,ரொம்பபெரிய தப்பா நினைக்க மாட்டாங்களா ,…
தப்பாவது . ….. ஒலிம்பிக் கப்பாவது ……ஒரு குழந்தைபிறந்தா எல்லாம் சரியாயிடும்பா. …
நீங்க இப்படி சொல்றீங்க. …. சரி அப்ப….நீங்களே,உங்களுக்குதெரிஞ்சஒரு ஜோசியர் கிட்ட போய் என் பையன்ஜாதகத்தை மாத்தி எழுதி கொண்டாங்களேன்.. தேவையானபணம் தரேன்…
சரிங்ககொடுங்க. ……..
(தரகர் பையன் ஜாதகத்தை வாங்கி கொண்டு போய் நல்ல படியாக எழுதி கொண்டு வருகிறார். … அடுத்த நாள்)
என்ன தரகு. பையன் ஜாதகம் எழுதியாச்சா ……..
ஆமா ஸார்… எந்த தோஷமும் இல்லாத சுத்தமான ஜாதகம்…இந்தாங்க……அப்படியே இந்த பொண்ணு போட்டாவை பாருங்க பொண்ணு டபுள் டிகிரி . .. K.k..நகரில் சொந்த வீடு…. போய் பாருங்க. …
சரி தரகு….மாப்பிளை பத்தி சொன்னீங்களா…. …IT …, கம்பெனி வேலை. ….. எல்லாம் சொன்னீங்களா…..
எல்லாம் சொன்னேன்….. நானும் கூட வரேன்….. பையன் ஜாதகமும்கொடுத்தாச்சி…. நாளைக்கு போகலாம்….. ஆனா ஒண்ணு கல்யாணம் நீங்க தான் செய்யணும்….
சரி தரகு……ஒத்துக்கறேன்….. என்னபத்து லட்சம் செலவாக போகுது…அவ்வளவு தானே…
அப்பசரி….. இந்த இடம் முடிஞ்சுடும் நாளைக்கு போகலாம்…..
(பெண் பார்க்கும் படலம் முடிந்து…. ஜாதகம் பார்த்துஒரு நல்ல நாளில் திருமணமும்முடிந்தது. தரகர் கமிஷன் வாங்கி கொண்டு போனவர் 15மாதங்கள் கழித்து வந்தார்.. அவர் வந்த நேரம் அவர்களுக்குஒரு ஆண் குழந்தை பிறந்தது)
ஸார் வணக்கம், .. ….. மருமகள் எப்படி இருக்கிறா. ஆண் குழந்தை பிறந்து இருக்கு. இப்ப சந்தோசமா….
அது சரி…. ஏன் தரகு இப்படி செஞ்சிட்டீங்க…
நான் என்ன செஞ்சேன்பா….
பொண்ணு அமாவாசையிலே ….. பொறந்து இருக்கா …. மூல நட்சத்திரம் வேற……பொய் சொல்லி பொண்ணு ஜாதகத்தையே மாத்தி கல்யாணத்தைமுடிச்சிட்டீங்களே…
ஸார் ரெண்டுமே டுபாக்கூர் ஜாதகம் தான்.. . ஒண்ணு தெரிஞ்சிக்கோங்க.. …இப்ப பெரும்பாலும் ஜாதகத்தை இப்படி கோல் மால் பண்ணி தான் நிறைய பேர் கொடுக்கிறாங்க.. 8..கெட்ட எண்……13ம் கெட்ட எண்…. ஆனாரெண்டும் சேர்த்தா கூட்டு தொகை.. 3வருது இல்லையா.. அது சூப்பர் நம்பர். …இப்போ…. பாருங்க. ஆண் குழந்தை பிறந்துள்ளது.. இதிலிருந்து தெரியவில்லையா…
அது என்னமோ கரெக்ட்.
(உள்ளே இருந்துமருமகள் குரல்****தரகர் மாமாவை இருந்து சாப்பிட்டுவிட்டு போக சொல்லுங்க மாமா….)
என்ன தரகரே.. உங்களை மாமா'ன்னு என் மருமகள் கூப்பிடறா…
இந்த விஷயம் தெரியாதா… …உண்மையிலேயே உங்க மருமகளுக்குநான் தாய் மாமன் ஸார்….
மனைவி - என்னங்க வரும்போது மறக்காமல் நாளைக்கு சாண்ட்விச் செய்ய நம்ம ரெகுலரா வாங்கும் பேக்கரியில் இருந்து bread 🍞 வாங்கிட்டு வாங்க! அப்புறம் உங்க தோழி ரோசி உங்களுக்கு ஹாய் சொல்ல சொன்னாங்க!
கணவன் - ஆமாம் அது யாரு ரோசி!
மனைவி - அது யாரும் இல்ல! நீங்க என் மெசேஜை படிக்கிறீங்களா என்று பார்த்தேன்!
கணவன் - ஆனா ! உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா? நீ சொல்லும் ரோசி கூட தான் நான் இருக்கேன்! இப்ப!
மனைவி - ( கோபத்தில் பெரு மூச்சு விட்டபடி ) ஆமா இப்ப எங்க இருக்கீங்க நீங்க!
கணவன் - வேறு எங்கே! நம்ம ரெகுலரா bread 🍞 வாங்கும் பேக்கரியில் தான் காஃபி சாப்பிட்டு கொண்டு இருக்கோம்!
(மனைவி அடித்து பிடித்து கொண்டு பேக்கரிக்கு வந்து சேர்ந்தார்!)
மனைவி - ஹலோ! என்னங்க நான் இப்ப பேக்கரியில் தான் இருக்கேன்! நீங்க எங்க இருக்கீங்க!
கணவன் - லூசு! நான் ஆஃபீஸ்ல இருக்கேன்! நீ என்ன பண்ற அப்படியே மறக்காமல் பிரெட் 🍞 வாங்கிட்டு போய் விடு!
மனைவி - !!!!!!!!








