🌹1915-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி கோவையில் பிறந்த இவர், வறுமையான சூழலில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றார்.
🌹 இரும்பு பட்டறையில் சுத்தியல் அடிக்கும் பணியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, பால் வியாபாரம், சோடா விற்பனை எனப் பல்வேறு நிலைகளைக் கடந்து, விடாமுயற்சியால் திரையுலகின் சிகரத்தைத் தொட்டவர்.
🌹வீரமாருதி தேகப்பயிற்சி சாலை' மூலம் உடல் உறுதியைப் பேணிய இவர், திரைப்படத் தயாரிப்பு நுட்பங்களைக் கற்றுக்கொண்டு,
🌹தனது சகோதரர் எம்.ஏ. திருமுகம் இயக்கத்தில் 'தாய்க்குப்பின் தாரம்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
🌹முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றது, இவரது வெற்றிகரமான திரைப் பயணத்திற்கு அடித்தளமிட்டது.
🌹எம்.ஜி.ஆரை வைத்து 'தாயைச் காத்த தனயன்', 'வேட்டைக்காரன்', 'விவசாயி' உள்ளிட்ட 17 வெற்றிப் படங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு உண்டு. எம்.ஜி.ஆருடன் மட்டுமின்றி, இந்தித் திரையுலகிலும் ராஜேஷ் கன்னா நடிப்பில்
🌹ஆத்தி மேரே சாத்தி' என்ற பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தார். இவரது 'தேவர் பிலிம்ஸ்' நிறுவனம் விலங்குகளைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு பல படங்களை இயக்கி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
🌹சிறந்த முருக பக்தரான தேவர், தனது திரைப்பட லாபத்தில் ஒரு பகுதியை முருகனுக்கு அர்ப்பணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
🌹'தெய்வம்', 'துணைவன்', 'ஆட்டுக்கார அலமேலு' போன்ற ஆன்மீக மற்றும் சமூகப் படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
🌹 1970-71-ல் கலைமாமணி விருது பெற்ற இவர், 63-வது வயதில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.
🌹வேட்டைக்காரன் படத்திற்காக வேட்டைக்காரனாக எடுத்த ஸ்டில் இது.
கனடாவின் கியூபெக் மாகாணம், ஷவினிங்கன் பகுதியில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 41 வயதான பிலிப் பெனாய்ட் என்பவரைக் கியூபெக் மாகாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நான்கு நாட்களாக தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், ஷவினிங்கன் நகருக்கு வடக்கே சுமார் 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக் வேய்லெட் பகுதிக்கு அருகில் புதன்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்ய முயன்ற போது அவர் பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் பலவந்தமாகக் கட்டுப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, கூர்மையற்ற கனமான பொருளால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில், பிலிப் பெனாய்ட் மீது முதல் நிலைக்கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 201-வது அவென்யூவில் உள்ள வீடொன்றில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் கொலை வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பிலிப் பெனாய்ட் மனசிதைவு நோய் மற்றும் சமூக பயம் உள்ளிட்ட தீவிர மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் வேட்டையின் போது, இவரைக் கண்டால் பொதுமக்கள் யாரும் நேரடியாக அணுக வேண்டாம் எனவும், உடனடியாக அவசர உதவி எண்ணான 911-ஐத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் எச்சரித்திருந்தனர்.
கொல்லப்பட்ட சிறுவனுக்கான அஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு கியூபெக்கின் ட்ராய்ஸ்-ரிவியர்ஸ் பகுதியில் நடைபெறவுள்ளது.
கனடாவின் வடக்கு ஒன்டாரியோவில் உள்ள ஹியூரான் ஷோர்ஸ் பகுதியில் திட்டமிட்டுத் தொடர்ச்சியாக காட்டுத் தீ மூட்டிய குற்றச்சாட்டில் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 28 ஆம் திகதி மாலை 5:30 மணியளவில், 'மெல்வெல் வீதிக்கு' அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் காட்டுத் தீ பரவுவதாக உள்ளூர் தீயணைப்புத் துறைக்குக் கோரிக்கைகள் வந்தன.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும், வீதியின் இருபுறமும் சுமார் 10 அடி முதல் 700 அடி வரையிலான காட்டுப்பகுதிகளில் திட்டமிட்டு வைக்கப்பட்ட 10 சிறிய காட்டுத் தீ சம்பவங்களை கண்டறிந்து கட்டுப்படுத்தினர்.
தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் நடமாடிய சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை தீயணைப்பு வீரர்கள் கவனித்துள்ளனர். அதனடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், இரவு 7:15 மணியளவில் அருகில் உள்ள பாதை ஒன்றில் வைத்து கியூபெக், சட்டன் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மீது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் தீ வைத்தல் மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஜூலை 28 ஆம் திகதி 'பிளைண்ட் ரிவர்' நீதிமன்றத்தில் பிணை விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெஸ்பரோ (40) என்ற நபர், தனது இரு நண்பர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிக் காட்டுப் பகுதியில் வீசிய சம்பவம் அதிர வைத்துள்ளது.
சந்தேக நபர் குற்றத்திற்காக ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் இவருக்கு இறுதி மூச்சு இருக்கும் வரை சிறை தண்டனை (Whole-life Order) வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் உள்ள காட்டில் தனது குடிசை அருகே வாழ்ந்து வந்த டெஸ்பரோ, அங்குத் தங்கியிருந்த கிளாரியோ அகிலினோ (57) மற்றும் டேனியல் கோல்மேன் (43) ஆகிய இரு நண்பர்களை மிகக் கொடூரமாகக் கொலை செய்தார்.
கொலைக்குச் பின்னர் இருவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை எாித்து ஆற்றிலும், எஞ்சிய பாகங்களை ஆழமற்ற குழி தோண்டியும் மறைக்க முயன்றார்.
‘டெக்ஸ்டர்’ தொடரில் வருவது போல உடல்களைத் துண்டு துண்டாக வெட்டும் காட்சிகள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தடயவியல் அதிகாரிகளிடம் அவர் கூறியது விசாரணையில் அம்பலமானது.
போலீசார் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், காட்டில் இருந்து எரிக்கப்பட்ட 1,900 எலும்புத் துண்டுகளையும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களையும் மீட்டனர்.
கொலைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் வங்கி அட்டைகளைப் பயன்படுத்திப் பணம் எடுத்த டெஸ்பரோ, அவர்கள் உயிருடன் இருப்பது போல் போலியான தகவல்களையும் பரப்ப முயன்றார்.
இந்த வழக்கு விசாரணையின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, குரட்டை விட்ட காரணத்திற்காகத் தனது சக கைதியான ஸ்டீவன் கெம்ப்ஸ்டர் என்பவரையும் அவர் கழுத்தை நெரித்துக் கொன்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.
மூன்று பேரைக் கொடூரமாகக் கொன்ற தொடர் கொலையாளியான ஜேம்ஸ் டெஸ்பரோ, மனித நேயமற்ற முறையில் கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக நீதிபதி திரு. சைனி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இவருக்கு மனித உயிர்கள் மீது எவ்வித மரியாதையும் இல்லை; இவர் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான நபர்” எனக் கூறி நீதிமன்றம் இவருக்குக் கருணையற்ற ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
பீட்சா டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தவர் மும்பையை சேர்ந்த கௌரவ் லோந்தே. இவர் தான் மும்பை டிராஃபிக்கை கொண்டு வெற்றிகரமாக ஒரு தொழிலை நடத்தி வருகிறார். பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இவரது யோசனையை வெகுவாக பாராட்டியுள்ளார். அப்படி அந்த இளைஞர் என்ன ஸ்டார்ட் அப் தொடங்கினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
கௌரவ் லோந்தே கடந்த 2009ஆம் ஆண்டு பீட்சா டெலிவரி செய்யும் பணியாளராக இருந்தார். தானேயிலிருந்து அந்தேரிக்குத் தினமும் பயணம் செய்த அவர், மும்பையின் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே தினமும் 3 மணி நேரம் வரை செலவிட வேண்டியிருந்தது. இவரை போலவே ஆயிரக்கணக்கான மக்கள் டிராபிக்கில் நீண்ட நேரம் பசியால் வாடுவதை கண்டார்.
ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டிருந்தபோது, ஒரு நபர் வேர்க்கடலை விற்பதை கண்டார். டிராஃப்பிக்கில் சிக்கி இருந்த பலரும் அதை வாங்கி சாப்பிட்டபோது, அவருக்கு ஒரு பிஸ்னஸ் ஐடியா வந்துள்ளது. ஒரு கைப்பிடி கடலையே நமக்கு மகிழ்ச்சியையும் ஆற்றலையும் தருகிறது என்றால், ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு சூடான, புதிய உணவை வழங்கினால் என்ன என தோன்றியதாம்.
இதனை அடுத்து டிராஃபிக் வடா பாவ் (Traffic Vada Pav) என்ற பெயரில் மும்பையின் புகழ்பெற்ற வடா பாவ்களை விற்க தொடங்கினார். 2019-ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு, தனது தாயின் சேமிப்பிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை பெற்று இந்த தொழிலை தொடங்கியுள்ளார். வீட்டிலேயே சுவையான வடா பாவ் தயாரித்து , ஒரு பெட்டியில், ஒரு சிறிய குடிநீர் பாட்டில் மற்றும் டிஷ்யூ பேப்பருடன் வெறும் 20 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று படிப்படியாக வளர்ந்த அவர் 2021-ஆம் ஆண்டிற்குள் தினமும் 800 வடா பாக்களை விற்கும் நிலைக்கு உயர்ந்தார். இதன் மூலம் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் அளவுக்கு அவரது தொழில் வளர்ச்சி கண்டது.
கௌரவ் லோந்தேவின் இந்த பயணத்தை பாராட்டியுள்ள ஹர்ஷ் கோயங்கா, போர்டு ரூம்களில் திட்டமிட்டு உருவாக்கும் நிறுவனங்களை விட, அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளில் இருந்து தோன்றும் இது போன்ற யோசனைகளே இந்தியாவின் வளர்ச்சி என கூறியுள்ளார்.
ஒரு சிறிய ஊரில் சுடுகாட்டில் வேலை பார்க்கும் வெட்டியான் ஒருவர் இருந்தார். அவர் எந்த நேரமும் சந்தோஷமாக ஆட்டமும், பாட்டமுமாக அங்கும் இங்குமாக ஓடி வேலை பார்ப்பார்.
வார இறுதி நாட்களில் அவர் ஊருக்குள் வரும் சமயம் அவருக்கு வேண்டிய உணவுப் பொருள்களும் காசும் தருவார்கள். அதே போல ஒவ்வொரு முறை பிணம் எரியூட்ட வரும் சமயமும் அவர் வாயில் ஒரு பாட்டை சத்தமாக பாடிக் கொண்டே வேலை பார்ப்பார்.
வயதான பெரியவர்கள் இறந்த சமயம் அவர் சந்தோஷமாக பாடுவதை சிலர் கண்டுகொள்ளாவிட்டாலும் கூட துள்ளத் துடிக்க சிறுவயது மரணங்கள், உடன் பிறந்தவர்களை இழந்தவர்கள், இணைகளை இழந்தவர்கள் என்று வரும் சமயம் அவர்களால் அந்த பாட்டை அந்த கணத்தில் ரசிக்க இயலவில்லை. அந்தப் பாட்டு இதுதான்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி.
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தானடி ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி.
என்றவாறே சத்தமாகப் பாடுவர்.
ஒரு மரணம் நடந்து எரியூட்ட வந்திருக்கும் ஒருவருக்கு எரியட்டும் வெட்டியான் இவ்வளவு சந்தோசமாகவும், சத்தமாகவும் இந்த பாட்டை பாடுவது பிடிக்குமா? பிடிக்காதல்லவா?
அப்படியாக சென்று கொண்டிருந்த சமயம் அவன் வாலிப வயதை அடைந்து அவனுக்கு திருமணம் நடந்தது. சில காலம் வாழ்க்கை வெகு சந்தோசமாக சென்று கொண்டிருந்த சமயம் அவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமாக கண்ணைகாட்டி, கைகால்களை ஆட்டி,பொக்கை வாய் திறந்தும் சிரித்தும் அவனை கொள்ளை கொண்டது.
பிணங்களை எரியூட்டும் நேரம் தவிர முழு நேரமும் அந்த குழந்தையுடனே ஆனது வாழ்க்கை. ஒரு வயது ஆகும் தருவாயில் அந்த குழந்தைக்கு ஒரு நோய் வந்துவிட்டது. மருத்துவம் செய்து செய்து பலன் இன்றி அந்த குழந்தை இறந்து விடும். அதனை எரியூட்டசெல்லும் சமயம் அவனது வாய் தாமாகவே அந்தப் பாட்டை பாடும்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி.
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தானடி ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி. என்று.
ஆனால் இந்த முறை சந்தோசமாகவும் சத்தமாகவும் அல்ல! தழுதழுத்த குரலில், குறைவான சத்தத்தில், விம்மி வெடித்து வரும் அழுகையுடன் பாடுவார்.
ஏனென்றால் இப்போதுதான் அந்தப் பாட்டின் உள்ளவரிகளின் அர்த்தம் அவருக்கு புரிந்தது.
🌹எம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்:
🌹பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!
🌹பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை.
🌹மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன்.
🌹அது கண்டு, என் மனைவியின்,
முகத்தில் மலர்ச்சி.
🌹ஆனால், சென்ற ஆண்டு வரையில், புது கார் வாங்கும் பேச்சு, பேச்சாகவே போய் விட்டது. நான் என்ன செய்வது! சில காரின் விலையை கேட்கும் போது, அசந்து போகிறேன். காரின் விலை கேட்டு, மலைக்கும் போதெல்லாம், என்னை சுற்றியிருக்கும் படவுலகப் பிரமுகர்களும், கார் தரகர்களும், 'நீங்களா இப்படி கேட்கிறீர்கள்...
🌹புது கார் வாங்க எம்.ஜி.ஆர்., தயங்குவதா...' என்று கேட்கின்றனர்.
🌹நான் என்ன விலை கொடுத்தும், புது மாடல் கார் வாங்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
🌹இப்படிக் கேட்டு கேட்டு, அடுத்த பொங்கலும் வந்து விட்டது. ஆனால், நான், இன்னும் புது கார் வாங்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது, பழைய காரிடம், பழகிய பாசம் தான். அந்த பாச உணர்ச்சி, என்னை புது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை, மாற்றிக் கொண்டே வருகிறது.
🌹என்னிடம், இப்போதுள்ள பெரிய கார் மிகவும் விசுவாசமுள்ளது; தென்னகம் முழுவதும், என்னைச் சுமந்து சென்றிருக்கிறது; பல வெற்றிப் படங்களில் நடிக்க, அது, ஸ்டுடியோக்களுக்கு என்னை விரைவாக ஏற்றிச் சென்றிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டு, தனக்கும் பெரிய செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
🌹தொலைவில் வரும் போதே, அதை, பலர் அடையாளம் கண்டு, என் பெயரைக் கூறி, ஆரவாரம் செய்து வருகின்றனர். அந்த பெருமையை, கடந்த பத்து ஆண்டுகளாக அது அனுபவித்து வருகிறதே, அதை நான் தகர்க்கலாமோ! என் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை.
🌹பழசாகி விட்டதாலேயே, சில நல்ல மனிதர்களை உதறி விட முடிகிறதா! என் காரும் அப்படித் தான் என்று, எனக்கு தோன்றுகிறது.
🌹என் சமாதானங்களையும், நான் கண்டுபிடித்திருக்கும் காரணங்களையும், என் மனைவி ஏற்றுக் கொள்வாளா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் பழைய கார், இன்னும், என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
சுதேசமித்திரன்' பொங்கல் மலரில் எம்.ஜி.ஆர்., எழுதிய கட்டுரையிலிருந்து.
ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக அந்தணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்.
ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு அந்தணன் அதனால் இறந்து போனான்.
இறந்த அந்தணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??
குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் “சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்” என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.
அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் ” கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது” என்றும் சொன்னாள் !!
அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.
நீதி : புறம்பேசுதலும் பாவச்செயலே… உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நண்பர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் திரும்பி வருவார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். புதுவிதமான பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். பொதுமக்கள் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
செய்யும் காரியங்களில் எதிர்பார்த்திருந்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அலைச்சல்கள் மூலம் உடல் சோர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கடகம்
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சூழ்நிலைகளை சமாளிப்பதற்கான பக்குவம் ஏற்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சுப காரிய எண்ணங்கள் கைக்கூடி வரும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
சிம்மம்
இழுபறியான வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த காரியங்கள் நிறைவேறும். வழக்கில் திருப்பம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
துலாம்
மற்றவர்களால் உங்களிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். செல்வ சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் தைரியம் உண்டாகும். காலி மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் ஏற்ற இறக்கம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தபால் துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். விளம்பர சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
தனுசு
நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார சிக்கல்கள் குறையும். பணிகளில் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். தன வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மகரம்
வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மாற்றம் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். விவாதங்களில் சமநிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் எண்ணியவை நிறைவேறும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
அனுபவ பேச்சுக்களால் பலரையும் கவருவீர்கள். வீடு மாற்ற சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் மேம்படும். கல்வி பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மீனம்
விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான தேடல்கள் மனதில் உருவாகும். தடைப்பட்ட பணிகளை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை 30.7.2026
இன்று இரவு 10.00 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று மாலை 06.52 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.
இன்று அதிகாலை 01.56 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.
இன்று காலை 09.29 வரை பாலவம். பின்னர் இரவு 10.00 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கிய இளன், தற்போது ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கியுள்ளார்.
சான்வீ மேக்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘மேட் இன் கொரியா’வைத் தயாரித்த ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்’ ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். இப்படம் ஆக.21-ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
“திருமணத்துக்குப் பிறகும் பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார் நாயகி சான்வீ. அதனால், அவரது கணவரான இளன், மனைவி வீட்டுக்கே குடி பெயர்கிறார். இதன் பின்னர் தொடங்கும் குடும்ப கலாட்டா, கலாச்சார மோதல்கள், உறவு சிக்கல்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள்தான் இந்தப் படம்.
சிரிப்பும், சிந்தனையும் கலந்த பயணமாகப் படம் நகரும். இறுதியில், “சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்பதைப் படம் சொல்லும்” என்றது படக்குழு.
🌹இசை மேதை வயலின் ஜாம்பவான் குன்னக்குடி வைத்தியநாதன் ஒரு நாள் சேலம் மாநகரில் தன் இசைக்குழுவினர் உடன் சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்தார்....
🌹முதல்வர் எம்ஜிஆர் இரு புறமும் கும்பிட்டு கொண்டே வர சாலை ஓரம் நின்ற அந்த பிரபலமும் கும்பிட காரை நிறுத்த சொல்லி கீழே இறங்கி...
🌹என்ன நீங்க இங்கே என்று கேட்க நாளை சேலத்தில் எங்க குழுவினர் கச்சேரி.
நல்லது அதுக்கு ஏன் இங்கே என்று கேட்க...
🌹முதல்வர் கார் வரும் நேரம் என்று எங்கள் வாகனம் வேன் அதை ஓரமாய்
நிறுத்தி கொள்ள சொல்ல...
🌹சற்றே முகம் மாறிய முதல்வர் அருகில் பின்னால் நின்ற ஆட்சியர் அழைத்து இனி நான் எங்கு போனாலும் மற்றவர்களை நிறுத்த வேண்டாம்...
🌹இங்கே மட்டும் இல்லை
இனி எங்கேயும் தமிழ்நாட்டில் இனி இது போல கூடாது என்று அங்கேயே
தமிழக உயர் காவல் அதிகாரிக்கும் சொல்ல சொல்லி...
🌹அந்த பிரபலம் மற்றும் குழுவினர் இடம் சாரி கேட்க அனைவரும் உங்களை இவ்வளவு அருகில் பார்க்கும் வாய்ப்பே மகிழ்ச்சி என்று அந்த பிரபலம்
தவிர மற்றவர்கள் சொல்ல கூடி சாலை ஓரம் நின்ற மற்றவர்கள் அந்த பிரபலம் அவருக்கு நன்றி சொல்ல
🌹மறுநாள் சேலம் கர்நாடக தன் இசை கச்சேரியில்
🌹இதுவரை என் குழுவில் நான் திரைப்பட பாடல்கள் இசைத்தது இல்லை... இப்போ முதன் முறையா
🌹உங்கள் முன்னாடி என்று நேற்று சாலை ஓர சம்பவம் சொல்லிஅவர் இசைத்த பாடல்
'நீங்க நல்லா இருக்கணும்
நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு முன்னேற' என்ற பாடல்...
அரங்கம் ஆர்ப்பரித்தது..
🌹தலைவர் மூன்றாம் முறை எமனை வென்று நலமுடன் திரும்பி மீண்டும் நாடு ஆளும் வாய்ப்பை தமிழக மக்கள் அவருக்கு நல்கிய போது...
🌹ஒரு நாள்எம் ஜி ஆர் அந்த இசை மேதை வயலின் ஜாம்பவான் குன்னக்குடி
வைத்தியநாதன்
அவரை வீட்டுக்கு வர சொல்லி...
🌹இறுதி நாட்கள் எட்டுவதை உணர்ந்து கொண்டாரோ என்னவோ நீங்க வாசிங்க
நான் கேட்கணும் இசையை என்று அவர் வாசிக்க அதை தலைவர்
தன் மடியில் இருக்கும்
டேப் ரெகார்டர் அதில் பதிவு செய்யும் அதிகம் வராத புகைப்படம் பதிவில்...
🌹எம்ஜிஆர் ஒரு சரித்திரம்
🌹எம்ஜிஆர் ஒரு அவதாரம்
🌹எம்ஜிஆர் ஒரு விந்தையான பிறவி...
ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்கு என பார்க்கணும்னு சொன்னாரு. உடனே லாட்ஜ் ஓனர் அப்பிடின்னா 500 ரூவா டெபாஸிட் குடுக்கணும்னு சொன்னாரு. உடனே அந்த ஆள் ஒரு புது 500 ரூவாவை எடுத்து டேபிள் மேல வச்சிட்டு படியேறி ரூம் பார்க்க போனாரு.*
*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவாவை எடுத்து லாட்ஜ்ல ரூம் தொடைக்கிற அம்மாகிட்ட குடுத்து போன மாசம் சம்பளத்துல பாக்கி வச்ச 500 ரூவா இந்தான்னாரு. அந்தம்மா அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பக்கத்துல இருந்த டீக்கடையில குடுத்து போன மாச டீ பாக்கி இந்தா வச்சிக்கோன்னு குடுத்தாங்க.*
*அந்த டீக்கடைக்காரரு அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பால் பண்ணையில முதலாளிக்கிட்ட குடுத்து போன மாச பால் பாக்கி இந்தாங்கன்னு சொன்னாரு. பால் பண்ணை முதலாளி அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்து, இந்தாங்க சார், கடந்தமாதம் மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தபோது, சில்லறை இல்லைன்னு 2000 ரூவா நோட்டு வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல, இந்தாங்கன்னு கொடுத்தார். அந்த நோட்டை எடுத்துக்கிட்டு லாட்ஜுக்கு வந்த மருத்துவர், கடந்தமாதம் தங்கி இருந்த ரூம் வாடகை பாக்கி இந்தாங்கன்னு 500 ரூவாவை குடுத்தார்.*
*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவா நோட்டை மறுபடி டேபிள் மேல வச்சாரு. ரூம் பார்க்க வந்தவரு, எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை. நான் போறேன்னு 500 ரூவாவ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.*
*இப்ப 500 ரூவா வந்த இடத்துக்கே போயிடுச்சி. ஆனா போற வழியில சம்பள பாக்கி, டீக்கடை பாக்கி, பால் பாக்கி,பால் பண்னை பாக்கி,மருத்துவர் பாக்கி, லாட்ஜ் வாடகை பாக்கி என எல்லாத்தையும் சரி பண்ணிட்டுப் போயிடுச்சி. யாருக்கும் இழப்பில்லாம.*
🌹கண்ணதாசன் வீட்டில் அசைவம் சமைக்கப்பட்டால் காமராஜர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இரவு நேரங்களில் இருவரும் சந்தித்தால் நேரம் போவதே தெரி யாமல் பேசுவார்கள்.
🌹நாகர்கோவில் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தி வெற்றி தேடிக் கொடுத்தவர் கண்ணதாசன். கண்ணதாசன் மது அருந்துவார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் “மது அருந்துபவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்தது. அப்போது கண்ணதாசனை அழைத்துப் பேசினார் காமராஜர்.
🌹கண்ணதாசா, இந்த சனியன் மதுவை விட்டுத் தொலை. இதனால உன்னைப் பத்தி தப்பாப் பேசுறாங்க. பார் என்று கேட்டுக் கொண்டார். உடனே, கண்ணதாசன் எல்லோரும் சொல்வதுபோல, சினிமா உலக அவசரம், சிக்கல், வீட்டுப்பிரச்னை போன்ற வற்றைச் சொல்லி, “அதுக்காத்தானே குடிக்கிறேன். அதுவும் பெர்மிட் வாங்கித் தானே குடிக்கிறேன் என்று சமாதானம் சொல்லிப் பார்த்தார்.
🌹ஆனாலும் காமராஜர் விடுவதாக இல்லை. “அட.. விட்ருப்பா என்றார். யோசித்த கண்ணதாசன், “”சரி விட்டுர்றேன்… குடிக்கிறதை இல்லை. காங் கிரஸ் கட்சியை என்றபடி கிளம்பினார். காமராஜர் பெரிதாகச் சிரித்து தலை அசைத்தார்.
🌹காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான் தலைவனாகப் பார்த்தேன் என்று மனமாரச் சொன்னவர்.
🌹கவிஞர் கண்ணதாசன் காங்கிரசிலிருந்து விலகி திரும்பவும் காங்கிரசில் சேர எண்ணியபோது தலைவர் காமரசருக்கு திரைப்பாடல் மூலம் விட்ட செய்தி
அந்த சிவகாமி மகனிடம்
சேதி சொல்லடி என்னை
சேரும் நாள் பார்க்க சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச
வார்த்தை இல்லடி
காமராசர் தாயார் பெயர் சிவகாமி
🌹நான் எம்.ஜி.ஆருடன் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும் ஒரு நடிகன் என்ற முறையில் 80-களில் அவருடன் பழகி இருக்கிறேன். புரட்சித் தலைவரின் மிகப்பெரிய ரசிகன் என்ற முறையில் எம்.ஜி.ஆர் குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் ராஜேஷ்.
“🌹நான் சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தபோது அந்த வீட்டுக்கு புரட்சித் தலைவர் வந்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் தருவதற்காக ராமவரம் தோட்டத்துக்கு என் மனைவியுடன் சென்றிருந்தேன்.
🌹அது ஒரு சனிக்கிழமை காலை. வரவேற்பறையில் காத்திருந்தோம். யார் யாரோ வருகிறார்கள், அவர்களெல்லாம் உள்ளே அழைக்கப்படுகிறார்கள். எனக்கு மட்டும் அழைப்பு வரவே இல்லை. கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஓடிவிட்டது.
“🌹என்னங்க… இவ்வளவு நேரம் காக்க வைக்கிறாரு” என்று என் மனைவி கேட்க ஆரம்பித்துவிட்டார்.
“🌹எவ்வளவு பெரிய மனிதரை பார்க்க வந்திருக்கோம். அவருக்காக சாயந்திரம் வரை கூட காத்திருக்கலாம்… இரு” என்று சொன்னேன்.
🌹பத்தரை மணிக்கு மேல் உள்ளே அழைத்தார். அழைப்பிதழை கொடுத்ததும், கண்டிப்பா வர்றேன் என்றார்.
🌹1987 ஜனவரி 16 என் வீட்டு கிரஹப்பிரவேசம். அன்றைக்கு காலையில் இயக்குநர் கே.சுப்பிரமணியனின் மனைவி எஸ்.டி.சுப்புலட்சுமி காலமாகி விட்டார். துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு நல்ல காரியத்துக்கு வரக்கூடாது என்பதால் காலையில் என் வீட்டுக்கு வந்துவிட்டார். பட்டு வேட்டி, பட்டு சட்டையில் வந்தவர், என்னைப் பார்த்ததும் “என்ன… இப்ப திருப்தியா?” என்று கேட்டார்.
🌹அப்போது நான் அடைந்த சந்தோஷம் இருக்கே அதற்கு ஈடு இணையே இல்லை. மற்றவர்களை சந்தோஷப்படுத்தி அதைப் பார்த்து அவர் சந்தோஷமடைவார். அது தான் தலைவர்.
🌹எங்கள் வீட்டு கிரஹப்பிரவேசத்தை முடித்துக்கொண்டு பிறகு தி.நகர் அலுவலகத்துக்கு சென்று பட்டு வேட்டி, பட்டு சட்டையை மாற்றிக் கொண்டு டைரக்டர் கே.சுப்பிரமணியன் வீட்டுக்கு துக்கம் அனுசரிக்கச் சென்றார்.
🌹இந்தச் சம்பவம் நடந்து பல வருடங்கள் கழித்து ஒரு நாள் பிரமுகர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் சொன்னார், “உங்க வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு பத்திரிகை கொடுக்க வந்தபோது, தலைவர் உங்களை ரொம்ப நேரம் காக்க வச்சார் ஏன் தெரியுமா?”ன்னு கேட்டார்.
“🌹தெரியலியேண்ணே என்றேன்.
“🌹அப்ப நான் தலைவர்கூட அவர் அறையில் தான் இருந்தேன். நீங்கள் வந்தது சனிக்கிழமை. காலையில 8.30 மணிக்கு மேல வந்தீங்க. உங்களை உட்கார வச்சுட்டு மத்தவங்களை சந்திச்சுகிட்டு இருந்தாரு.
🌹நான் கூட “அண்ணே… நடிகர் ராஜேஷ் வந்திருக்காரு”ன்னு சொன்னேன். “தெரியும்யா வெயிட் பண்ணட்டும். அவன் சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசத்துக்கு அழைக்க வந்திருக்கான். நல்ல விஷயம். அதனால 9 – 10.30 ராகுகாலம் முடிஞ்சதும் உள்ளே கூப்பிடு” என்றார்.
🌹அப்படின்னா அந்தத் தொழில் அதிபர் கொடுத்த கிரஹப்பிரவேச பத்திரிகையை மட்டும் வாங்கினீங்களே தலைவரே என்று கேட்டேன்.
🌹அதற்கு அவர், “அவன் வாழ்ந்து முடிச்சவன்யா, ராஜேஷ் இப்ப தான் வாழ்க்கையைத் தொடங்குறான். அதனால தான் இந்த சென்டிமென்ட்” என்று தலைவர் சொன்னதை, பல வருடங்கள் கழித்து கேள்விப்பட்டபோது கண்கள் கலங்கிடுச்சு எனக்கு.
🌹தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் எப்போதும் பெரும் அக்கறை கொண்ட மாமனிதராகவே வாழ்ந்தவர் வாத்தியார்” என்று சொன்ன ராஜேஷ்.
வெனிசுலாவை உலுக்கிய பேரழிவுகரமான பூகம்பங்களுக்குப் பிறகு, பல அர்த்தங்களைக் கொண்ட ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது!* கான்கிரீட் மலைகள், புழுதி மற்றும் அமைதிக்கு மத்தியில், மீட்புக் குழுவினர் மிகவும் வலிமையானவர்களையும் நெகிழச் செய்யும் ஒரு காட்சியைக் கண்டனர்.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில், ஒரு கலப்பின நாய் இருந்தது. அது குரைக்கவில்லை. தப்பிக்க முயற்சிக்கவில்லை. அது அசைவற்று, கண்களைப் பார்த்தபடி கிடந்தது, அதன் உடல் ஒரு கேடயமாக மாறியது. அதற்குக் கீழே ஒரு குழந்தை கிடந்தது.
அவனைச் சுற்றியிருந்த அனைத்தும் இடிந்து விழுந்தபோதும், அந்தச் சிறுவன் உயிருடன் இருந்தான்; தன்னை மிகவும் நம்பியிருந்த ஒருவரைக் கைவிடுவதை விட, ஆபத்தை எதிர்கொள்ளத் துணிந்த ஒரு நண்பனால் அவன் பாதுகாக்கப்பட்டான். அந்தக் காட்சியில் தாங்கள் பேச்சற்றுப் போனதாக மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர். முதலில், அவர்கள் அந்த நாயை வெளியே இழுத்தனர்; தானும் மீட்கப்படுவோம் என்று உறுதியாகும் வரை, குழந்தையிடமிருந்து பிரிக்கப்படுவதை அது எதிர்த்தது.
சில கணங்களுக்குப் பிறகு, அந்தத் தருணத்தைக் கண்டவர்களின் கைதட்டல், கண்ணீர் மற்றும் உணர்ச்சிப் பெருக்கிற்கு மத்தியில், அந்தக் குழந்தை உயிருடன் வெளியே இழுக்கப்பட்டது.
வெனிசுலாவைச் சூழ்ந்திருக்கும் துயரத்தையும் தாண்டி, எந்த நிலநடுக்கத்தாலும் அழிக்க முடியாத ஒன்றை இந்தப் புகைப்படம் சித்தரிக்கிறது: அதுதான் நம்பிக்கை.
ஏனென்றால், இயற்கை ஒரு மக்களின் வலிமையைச் சோதிக்கும்போது, நாம் சற்றும் எதிர்பாராத இடங்களில்கூட கருணை, விசுவாசம், அன்பு போன்றவை தோன்றக்கூடும் என்பதை நமக்கு நினைவூட்டும்
கடவுள் படையலை சாப்பிடுவாரா?
சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்.
‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.
குரு எதுவும் சொல்லாமல். அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.
அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கெட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.
குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.
“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”
கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..
” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.
மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே..
எங்கே உனது புத்தகத்தை காட்டு”
பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான் “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள்.
ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”
“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.
இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?
நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”
சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.
குரு தொடர்ந்தார், ‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.
புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.
இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?
அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.
ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”
தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்.
🌹என் குடும்பம் நல்ல வாழ்ந்த குடும்பம்தான். ஆனால், அப்பாவின் தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட அதிகமான கடன் சுமைகளும் பாரங்களும் என்மேல் விழுந்தன. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே, இண்டியன் ஏர்லைன்ஸில் ஏர்ஹோஸ்டஸ் பணியில் இருந்தேன். அப்போதுதான் சினிமா வாய்ப்புகளும் தேடிவர, புகழுடன் நிறைவான பணமும் சம்பாதித்தேன். எல்லாக் கடன்களையும் அடைத்தேன்.
🌹பெரிய இடங்கள் பலவற்றிலிருந்தும் என்னைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்தார்கள். ஆனால், சொந்த உறவுகளுக்குள் இருந்த சிலரே அதையெல்லாம் தடுத்தார்கள். என் சினிமா வருமானம் மட்டுமே அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. என் பணத்தை எனக்கே தராமல், மீண்டும் கடன் சுமைகளைத்தான் கொடுத்தார்கள். என் பெற்றோர்கூட அந்தச் சூழ்ச்சிகளை உணரவில்லை. நிம்மதியில்லாமல் இருந்தேன்.
'🌹மனசுக்குள்ள இவ்வளவு வேதனைகளை வெச்சுக்கிட்டு எப்படி மகிழ்ச்சியா நடிச்சே?'ன்னு பின்னாள்களில் பல ஜாம்பவான்கள் என்னிடம் கேட்டார்கள்.
🌹நானே கஷ்டத்தைச் சொல்லி உதவி கேட்பேன் என்று எம்.ஜி.ஆர், சிவாஜி, நடிகர் சங்கத்தினர் உட்பட பலரும் எதிர்பார்த்தார்கள். அப்படிச் செய்திருந்தால் உடனே தீர்வும் கிடைத்திருக்கும். ஆனால், குடும்ப விஷயம் பொதுவெளிக்கு வருவதை நான் விரும்பவில்லை. என்மேல் அன்புகொண்ட பிரபலங்கள் பலரும், 'நல்ல பையன் யாரையாச்சும் காதலிச்சுக் கல்யாணம் செய்துகிட்டு மகிழ்ச்சியா இரு' என்று சொன்னார்கள். அதற்கு என் மனம் பக்குவப்படவில்லை. ஒருகட்டத்தில் அதுதான் சரியான தீர்வு என உணரும்போது எனக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டது.
🌹உரிய பருவத்தைத் தாண்டிக் கிடைக்கும் விஷயங்கள் பயன்தராது. குடும்பத்திலும் பிரச்னைகள் குறையவில்லை. வாழ்க்கையே வெறுத்துப்போய் வீட்டிலிருந்து வெளியேறி பெங்களூரில் தங்கை வீட்டுக்குச் சென்றேன். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகமாகி, கோயில் கோயிலாகச் சுற்றினேன். மீண்டும் சென்னை திரும்பிய நிலையில், சட்டப் போராட்டத்தில் அதிக கவனம் செலுத்தினேன். வெற்றி கிடைத்தாலும் ஓரளவுக்குத்தான் சொத்துகள் கிடைத்தன. அதில் பல கோடி ரூபாய் சொத்துகளைத் திருப்பதி கோயிலுக்கு தானம் செய்துவிட்டோம்.
🌹இப்போது என் தங்கையுடன் சென்னையில் வசிக்கிறேன். வீடும் என் அறையும்தான் எனக்கான உலகம். எனக்கு. இனி வெளியுலகத்தோடு ஒன்றி இருக்கவோ, வெளியிடங்களுக்குப் போகவோ விருப்பமில்லை.
🌹ஆங்கிலம், இந்தி, பிரெஞ்ச், ரஷ்யன் உட்பட எட்டு மொழிகள் எனக்குத் தெரியும். எனவே, பல மொழி ஆன்மிகப் புத்தகங்கள் படிப்பது, இசை கற்றுக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என்று என் அன்றாடப் பணிகளுக்கு நேரம் பற்றாக்குறையாகவே இருக்கிறது. இதனால் தனிமை வாழ்க்கை நிறைவையும் நிம்மதியையும் தருகிறது!"
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். கையிருப்பு கரையக்கூடும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்.
சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்ப உறுப்பினர்களுக்குள் இருந்த கருத்து மோதல் விலகி சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிம்மதி தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு போட்டிகளை எளிதாக சமாளிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுண்டு. மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவார்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
தனுசு: சகோதர சகோதரிகளால் ஆதாயமுண்டு. பேச்சில் தெளிவு பிறக்கும். முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல் பேச்சு கேட்பர். தாயாரின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: ஏதோ ஒரு விஷயமாக முன்கோபம், டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பர். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
மீனம்: சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். உங்கள் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட பணியை முடிப்பீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 13 ஆம் தேதி புதன்கிழமை 29.7.2026
இன்று இரவு 08.58 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.
இன்று மாலை 05.08 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
இன்று அதிகாலை 01.04 வரை விஷ்கம்பம். பின்னர் பிரீதி.
இன்று காலை 08.15 வரை பத்திரை. பின்னர் இரவு 08.58 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று காலை 06.01 வரை சித்தயோகம். பின்னர் மாலை 05.08 வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
மங்காத்தா, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகை ராய் லட்சுமி, தற்போது தொழிலதிபராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், 'La Ra' என்ற புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மங்காத்தா, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகை ராய் லட்சுமி, தற்போது தொழிலதிபராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், 'La Ra' என்ற புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தற்போது சோஷியல் மீடியா மற்றும் டேட்டிங் ஆப்-களில் போலி கணக்குகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த 'La Ra' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முற்றிலும் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதன் மூலம் பயனர்கள் பயமின்றி நம்பிக்கையுடன் தங்களுக்குப் பிடித்தமானவர்களைத் தேர்வு செய்யலாம். உண்மையான அன்பு, காதல், உண்மையான நட்பு மற்றும் நீண்டகால வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களுக்கு இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆப்பை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு பேசிய நடிகை ராய்லட்சுமி, ஒருவர் ரிலேஷன்ஷிப்பில் இருக்க விரும்பினால் அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த ஆப் இருக்கும், பல விதமான டேட்டிங் ஆப்கள் இருக்கின்றன. ஆனால், அவை நம்பிக்கைக்குரியதாக இல்லை, அதுமட்டுமின்றி, வெறும் டேட்டிங் ஆப்-ஆக மட்டுமில்லாமல், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தொழில்முறை நபர்களை இணைக்கும் 'நெட்வொர்க்கிங்' தளமாகவும், நிஜ சந்திப்புகளை உருவாக்கும் தளமாகவும் இது செயல்படும். பலரும் தனிமையிலேயே இருக்கிறார்கள், பாட்னர் இருந்தாலும் அவர்கள் தனிமையில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கினைப்பது தான் இந்த 'La Ra'. இந்த ஆப்குள் இணைந்துவிட்டால் நிச்சயமாக நீங்கள் தனியாகவோ சிங்கிளாகவோ இருக்க மாட்டீங்க என நடிகை லட்சுமி ராய் அதில் பேசி உள்ளார். ஆனால், இணையவாசிகள் பலர் சிங்கிளா வாங்க சந்தோஷமா போங்க என்றும், இது தேவையில்லாத ஒன்று, இளைஞர்களை கெடுக்கும் இதுபோன்ற ஆப்களை ஊக்குவிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.













