Quote of the Day

பழமொழி: அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 195
Canada Community 20
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added a post
·
  • 9
·
Added joke
·

இந்தபையன் கிட்னி ஆப்ரேஷன் வேணாம்முன்னு சொல்றான் டாக்டர்…..

இது அவனுக்கே தெரியுது…. நமக்கும் புரியுது…. செலவுக்கு சுத்தமா பணம் இல்லே……எப்படியாவதுஒரு கிட்னியை வித்து பணம் கொடுக்க சொல்லி அவங்க வீட்டுலே கெஞ்சறாங்களே…சிஸ்டர்…நாம என்னா செய்யுறது…

  • 18
  • 18

தெரிந்துக் கொள்வோமா?

  • 88
  • 95
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வெளியூர் பயணத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

ரிஷபம்

ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

மிதுனம்

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளீர் மஞ்சள்

 

கடகம்

சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் பயணங்கள் சென்று வருவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சிம்மம்

மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் புதுமையான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபாடுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி

 

கன்னி

செல்வ சேர்க்கைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். யூக வணிகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடி வரும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

துலாம்

தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். வாகன பழுதுகளை சீர் செய்தீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான வாய்ப்புகளும் சுழலும் அமையும். சுப காரியங்களில் பொறுமையுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

விருச்சிகம்

மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். தந்திரமான சில செயல்கள் மூலம் தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். பேச்சுக்கள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் ஆதரவுகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்த மந்தநிலை மறையும். எதிர்கால தொடர்பான சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

மகரம்

உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திறமைகள் வெளிப்பட சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

கும்பம்

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உருவாகும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சில உதவிகள் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். நண்பர்களுக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செம்மஞ்சள்

 

மீனம்

கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருநந்த குழப்பம் மறையும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 99
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 2.7.2026.

இன்று காலை 09.27 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று காலை 09.41 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று மாலை 05.06 வரை வைதிருதி. பின்னர் விஷ்கம்பம்.

இன்று காலை 09.27 வரை கரசை. பின்னர் இரவு 09.56 வரை வனிசை. பிறகு பத்திரை .

இன்று அதிகாலை 05.56 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=565&dpx=2&t=1782963189

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 101

Good Morning...

  • 100

Happu Canada Day

  • 204
·
Added a news
·

கனடாவில் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற 'தெர்மோஸ்' பிராண்ட் உணவு மற்றும் பானக் கலன்களால் (Flask/Food Jars) நுகர்வோருக்குக் காயம் ஏற்படும் ஆபத்து உள்ளதால், சந்தையில் உள்ள 1.2 மில்லியனுக்கும் அதிகமான தயாரிப்புகளை உடனடியாக மீளப் பெற்றுக்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து கனடா பொது சுகாதார அமைப்பு நுகர்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடியன் தெர்மோஸ் புரொடக்ட்ஸ் (Canadian Thermos Products Inc.) நிறுவனத்தின் கீழ், ஜனவரி 2009 முதல் நவம்பர் 2021 வரையான காலப்பகுதியில் கனடாவில் விற்பனை செய்யப்பட்ட பின்வரும் தயாரிப்புகளே இவ்வாறு மீளப் பெறப்படுகின்றன.

Stainless King Food Jars: ஜூலை 2023க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட SK3000 மற்றும் SK3020 ஆகிய மாடல் எண்கள் கொண்ட உணவுக் கலன்கள்.

Thermos Sportsman Food & Beverage Bottle: 2016ஆம் ஆண்டுடன் உற்பத்தி நிறுத்தப்பட்ட SK3010 என்ற மாடல் எண் கொண்ட பானக் கலன்கள்.

இந்தத் தயாரிப்புகளின் மூடிகளில் (Stopper) உட்புற அழுத்தத்தைக் குறைப்பதற்கான (Pressure relief) துளைகள் நடுவில் வடிவமைக்கப்படவில்லை. இதனால், கெட்டுப்போகக்கூடிய உணவுப் பொருட்கள் அல்லது பானங்களை இந்தத் தெர்மோஸ்களில் நீண்ட நேரம் சேமித்து வைத்திருக்கும் போது, உள்ளே அதிகப்படியான வாயு அழுத்தம் (Gas pressure) உருவாகிறது.

பின்னர் இதனைத் திறக்கும் போது, அதன் மூடி பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி வெளியேறும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாக முகம் மற்றும் கண்களில் பலத்த காயம் அல்லது வெட்டுக்காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 24ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி, இந்தத் தயாரிப்புகள் வெடித்தது தொடர்பாக 10 புகார்கள் நிறுவனத்திற்குப் பதிவாகியுள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தங்களிடம் உள்ள மேற் குறிப்பிட்ட மாடல் எண்களைக் கொண்ட தெர்மோஸ் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை "உடனடியாக நிறுத்துமாறு" கனடா பொது சுகாதார அமைப்பு நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

  • 182
·
Added a news
·

 கனடாவில் உன்னிகளின் நடமாட்டமும், அதனால் பரவக்கூடிய 'லைம் நோய்' (Lyme disease) பாதிப்புகளும் கணிசமாக அதிகரித்து வருவதாக தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும், தற்போதைய தரவுகளை விட உண்மையான பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உண்ணிகள் தொடர்பான விழிப்புணர்வு இணையதளமான eTick.ca வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நாடு தழுவிய ரீதியில் உன்னிகளின் நடமாட்டம் பற்றிய பதிவுகள் 38.5 சதவீதம் அதிகரித்துள்ளன.

கனடா பொது சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் வரலாற்றிலேயே மிக அதிகமாக 7,105 'லைம் நோய்' பாதிப்புகள் பதிவாகியிருந்தன.

கனடாவில் அதிகளவில் உன்னிகள் அடையாளம் காணப்படும் ஒன்ராறியோ மாகாணத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 359 லைம் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதில் கடந்த வாரம் மட்டுமே 11 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போது பதிவாகியுள்ள எண்கள் உண்மையான பாதிப்பை விடக் குறைவானதாகவே இருக்க வாய்ப்புள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடமும், ஆரம்பக்கட்ட சுகாதார அதிகாரிகளிடமும் கொண்டு சேர்ப்பதன் மூலமே முறையான நோயறிதலைச் செய்ய முடியும் என தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் காரணமாக உன்னிகள் இடம்பெயர்வதால், 'லைம் நோய்' மட்டுமன்றி அனபிளாஸ்மோசிஸ், பபெசியோசிஸ் மற்றும் போவாசன் வைரஸ் போன்ற அதிகம் அறியப்படாத பிற தொற்றுநோய்களும் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒண்டாரியோவில் இந்த ஆண்டு இதுவரை 36 அனபிளாஸ்மோசிஸ் பாதிப்புகளும், ஒரு போவாசன் வைரஸ் பாதிப்பும் பதிவாகியுள்ளன.

  • 190
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

ரிஷபம்

மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மிதுனம்

உடன் பிறந்தவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்ட காரியத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். முயற்சிகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

பணிபுரியும் இடத்தில் அதிகாரிகள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். உறவினர்கள் மூலம் ஆதரவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். வர்த்தக தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலை காணப்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

சிம்மம்

எந்த ஒரு பணியிலும் விவேகத்தோடு செயல்படவும். சில நினைவுகளால் மனதில் கவலைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் கோபப்படாமல் செயல்படவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் அணுகுவது நல்லது. அலுவலகத்தில் மறைமுக நெருக்கடிகள் தோன்றி மறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கன்னி

தனவரவில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கமும் அன்யோன்யமும் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

துலாம்

ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். மனை விஷயங்களில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

விருச்சிகம்

வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

தந்தைவழி உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சேமிப்புகள் மூலம் ஆதாயகரமான சூழல் உண்டாகும். ஆராய்ச்சி விஷயங்களில் புதுவிதமான சூழல்கள் உருவாகும். கலைதுறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் லாபமும் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மகரம்

மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வாழ்க்கைத் துணைவரிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் குறையும். பணி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கும்பம்

மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். நினைத்த காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபமும் ஒத்துழைப்பும் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மீனம்

எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படவும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் முன் கோபம் இன்றி செயல்படுவது நல்லது. திடீர் முடிவுகளை எடுப்பதை விட சூழ்நிலை அறிந்து செயல்படவும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

  • 250
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை 1.7.2026

இன்று காலை 08.01 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று காலை 07.37 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.

இன்று மாலை 05.01 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.

இன்று காலை 08.01 வரை பவம். பின்னர் இரவு 08.44 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று அதிகாலை 05.56 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=564&dpx=2&t=1782877235

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 257

Good Morning...

  • 259
·
Added article

நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பூ மற்றும் முன்னணி இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் - ஸ்ரவண் ஸ்ரீனிவாசன் திருமணம், கோவாவில் மிக நெருக்கமான உறவினர்கள் மத்தியில் பிரம்மாண்டமாகவும் அதேசமயம் எளிமையாகவும் நடந்து முடிந்தது. மணமக்களின் விருப்பப்படி மிகவும் எளிமையாக, நெருங்கிய சொந்தங்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் நெகிழ்ச்சியான, எமோஷனலான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமண சடங்குகள் தொடங்குவதற்கு முன்பு குஷ்பூ குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, மணமகன் ஸ்ரவண், அவந்திகாவின் கழுத்தில் தாலி கட்டும் அந்த நொடியில், குஷ்பூ உணர்ச்சிப் பெருக்கால் கைகளைக் கூப்பி கும்பிட்டபடியே ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுகிறார். அருகில் நிற்கும் கணவர் சுந்தர் சி-யும், ஆர்த்தி ரவியும், இளைய மகள் அனந்திதாவும் குஷ்பூவைத் தேற்றினார்கள். இந்த எமோஷனல் வீடியோ ரசிகர்களின் இதயத்தை தொட்டது. ஒரு தாய்க்கு தான் தனது மகளின் கழுத்தில் தாலி ஏறும் போது மனம் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கும் அந்த மகிழ்ச்சயின் வெளிப்பாடு தான் குஷ்பு கண்ணில் இருந்து வந்த ஆனந்த் கண்ணீர்.

திருமணம் முடிந்த கையோடு திருமண போட்டோவை பகிர்ந்து தனது மகளுக்கு திருமணதை அனைவருக்கும் அறிவித்தார். அந்த பதிவில், ஒரு பெற்றோராக எங்கள் மனதில் இருக்கும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவந்திகா - ஸ்ரவண் விருப்பப்படியே இந்தத் திருமணம் மிக நெருக்கமானவர்கள் மத்தியில் நடத்தப்பட்டது. வாழ்க்கையின் மிகச் சிறந்த நினைவுகள் நம் அன்பானவர்களுடன் இருக்கும் போதுதான் உருவாகிறது என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருந்தார்.

குஷ்புவின் மகளுக்கு பலரும் வாழ்த்து சொல்லிய நிலையில் ஒரு சில விஷமிகள் கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். திரையுலகமே சோகத்தில் மூழ்கியிருந்த அந்த நேரத்தில், குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து மகளின் திருமணப் போட்டோவை பகிர்வது சரியில்லை என்றும், திருமணப் போட்டோக்களைப் போட எப்படி மனசு வருகிறது? என்று விமர்வித்தனர். இந்த விமர்சனங்களால் ஆத்திரமடைந்த குஷ்பூ, என் மகளின் திருமணம் நடந்து 48 மணி நேரம் கூட இன்னும் முழுமையாக முடியவில்லை. என் குடும்பத்தின் மிக முக்கியமான ஒரு மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாட எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. ஒருத்தரின் மரணத்திற்கு மரியாதை கொடுப்பது என்பது வேறு, அதற்காகத் தன் சொந்த மகளின் திருமணக் கொண்டாட்டத்தையே நிறுத்தச் சொல்வது முட்டாள்தனம் என சரியான பதிலடி கொடுத்து இருந்தார்.

  • 345
·
Added article

தமிழில், வினய் நடித்த ‘மிரட்​டல்’ படத்​தில் நாயகி​யாக நடித்​தவர் ஷர்​மிளா மந்த்​ரே. கன்​னடத்​தில் சில படங்​களில் நடித்​துள்ள இவர், விமல் நடித்த ‘இவனுக்கு எங்​கேயோ மச்​சம் இருக்​கு’, ‘சண்​டக்​காரி’, தினேஷின் ‘நானும் சிங்​கிள்​தான்’ ஆகிய தமிழ்ப் படங்களைத் தயாரித்​துள்​ளார்.

இவருக்​கும் பிரபல தமிழ்ப் பட தயாரிப்​பாளர் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்​தரத்​துக்​கும் திருமண நிச்​சய​தார்த்​தம் நடைபெற்றுள்ளது. பெங்​களூரில் உள்ள நட்​சத்​திர ஓட்​டல் ஒன்​றில் நடை​பெற்ற இந்த விழா​வில் நெருங்​கிய உறவினர்​கள் மட்​டுமே கலந்து கொண்​டனர்.

திரு​மணத் தேதி இன்​னும் முடிவு செய்​யப்​பட​வில்லை என்று ஷர்மிளா தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அவர்​களுக்​குக் கன்னட, தமிழ்த் திரைப்​படத் துறை​யினர் வாழ்த்​துகளைத் தெரிவித்து வருகின்​றனர்.

  • 343
·
Added a news

கனடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி பரவி வருவதை அடுத்து, அங்குள்ள தொலைதூர கிராம மக்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாகாண அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத் தகவலின்படி, 'டெஹ்சோ' (Dehcho) காட்டுத்தீயானது ஃபோர்ட் சிம்ப்சன் விமான நிலையத்திற்கு மேற்கே வெறும் 7 கிலோமீட்டர் தொலைவில் சுழன்றடித்து வருகின்றது.

இக்காட்டுத்தீ தற்போது சுமார் 4.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு தீவிரமாகப் பரவியுள்ளது.

ஃபோர்ட் சிம்ப்சன் கிராம அதிகாரிகள் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பில், அங்கு வசிக்கும் சுமார் 1,300 குடியிருப்பாளர்களும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, கிழக்கு நோக்கி 630 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யெலோநைஃப் நகரின் 'மல்டிபிளக்ஸ் அரங்கம்' நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

யெலோநைஃப் நகர நிர்வாகம் தனது சமூக ஊடகப் பதிவில், இந்த மல்டிபிளக்ஸ் அரங்கத்தின் உடற்பயிற்சிக் கூடம் தற்காலிக தங்குமிடமாகவும், அவசர உதவி மையமாகவும் செயல்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

விமானம் மூலம் வெளியேற விரும்பும் பொதுமக்கள் உடனடியாக உள்ளூர் பொழுதுபோக்கு மையத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

திங்கட்கிழமை அதிகாலையுடன் கடைசி அவசரகால விமான சேவை நிறைவடைந்தது. சாலை வழியாக வெளியேறும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பைக் கருதி, எரிபொருள் நிலையங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் தொடர்ந்து திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடமேற்கு பிராந்திய காட்டுத்தீ தடுப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீ இன்னும் கிராம குடியிருப்புப் பகுதிக்குள் நுழையவில்லை என்றும், இதுவரை பொதுக் கட்டடங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

  • 350

உடைப்பு

நட்பு உடைந்து ,

முக நூலானது ...

சுற்றம் உடைந்து ,

வாட்சப் ஆனது ...

வாழ்த்துக்கள் உடைந்து ,

ஸ்டேட்டஸ் ஆனது ...

உணர்வுகள் உடைந்து ,

ஸ்மைலியாய் ஆனது ...

குளக்கரை உடைந்து ,

குளியலறை ஆனது ...

நெற்களம் உடைந்து ,

கட்டடமானது ...

காலநிலை உடைந்து ,

வெப்பமயமானது ...

வள நிலம் உடைந்து ,

தரிசாய் ஆனது ...

துணிப்பை உடைந்து ,

நெகிழியானது ...

அங்காடி உடைந்து

அமேசான் ஆனது ...

விளை நிலம் உடைந்து ,

மனை நிலம் ஆனது ...

ஒத்தையடி பாதை உடைந்து ,

எட்டு வழியானது ...

கடிதம் உடைந்து ,

இ மெயிலானது ...

விளையாட்டு உடைந்து ,

வீடியோ கேம் ஆனது ...

புத்தகம் உடைந்து ,

இ-புக் ஆனது ...

சோறு உடைந்து

'ஓட்ஸ்'சாய்ப் போனது...

இட்லி உடைந்து ,

பர்கர் ஆனது ...

தோசை உடைந்து ,

பிட்சாவானது ...

குடிநீர் உடைந்து

குப்பியில் ஆனது ...

பசும்பால் உடைந்து ,

பாக்கெட் ஆனது ...

வெற்றிலை உடைந்து ,

பீடாவானது ...

தொலைபேசி உடைந்து ,

கைப்பேசியானது ...

வங்கி உடைந்து ,

பே டி எம் ஆனது ...

நூலகம் உடைந்து ,

கூகுளாய்ப் போனது ...

புகைப்படம் உடைந்து ,

செல்ஃபியாய் ஆனது ...

பொது நலம் உடைந்து ,

சுய நலமானது ...

பொறுமை உடைந்து ,

அவசரமானது ..

"நிரந்தரம் உடைவது

நிதர்சனம்...

ஆகையால் ,

உடைவது

உலகினில்

நிரந்தரமானது " ..!

எல்லாவற்றையும் இழந்து

புலம்பிக் கொண்டு

இருக்கின்றான்,

இன்றைய கால மனிதன்....

தொலைந்துபோன காலம்

மீண்டும் தொடருமா...?

*படித்தேன்...*

*கனத்தேன்...*

*நெகிழ்ந்தேன்...*

பகிர்கிறேன்.

  • 341
  • 340
  • 342
  • 340
  • 339
·
Added article

(30.06.2026)

கேரளாவில் 1973ஆம் ஆண்டு பிறந்தவர் சித்தாரா (இயற்பெயர் சித்தாரா நயர்). மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழித் திரையுலகங்களிலும் தடம் பதித்த இவர், சிறு வயதிலேய நடனத்தில் ஈடுபாடு கொண்டு தனது பதின்மூன்றாம் வயதில் அரங்கேற்றம் செய்தார்.

  • 341
·
Added a post

இடம்: கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், முழக்குன்னு – மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோயில்

இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன.

சில கோயில்கள் தங்கள் பிரம்மாண்டமான கட்டிடக் கலைக்காக புகழ் பெற்றவை.

சில கோயில்கள் அங்கே நிகழ்ந்த அற்புதங்களால் உலகம் முழுவதும் அறியப்பட்டவை.

ஆனால்...

திருடர்களாலேயே உலகம் முழுவதும் பேசப்பட்ட கோயில் ஒன்று இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

ஒரு சிலையை...

ஒருமுறை அல்ல...

இருமுறை அல்ல...

மூன்று முறை திருடிச் செல்ல முயன்றும்...

ஒவ்வொரு முறையும் அந்தத் தேவி...

மீண்டும் தனது சொந்த ஆலயத்திற்கே திரும்பி வந்ததாகப் பக்தர்கள் நம்பும் ஒரு அதிசய வரலாறு இன்றும் கேரள மண்ணில் வாழ்ந்து வருகிறது.

அந்த அற்புதத் தலம்தான்...

📍கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், முழக்குன்னுவில் அமைந்துள்ள மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோயில்.

பரசுராமர் நிறுவிய 108 சக்தி தலங்களில் ஒன்று

கேரளத்தின் பல புனிதத் தலங்களைப் போலவே...

இந்த ஆலயமும் பக்தர்களிடம் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

புராணங்களின்படி...

பரசுராமர் கடலிலிருந்து நிலத்தை உருவாக்கி...

அந்தப் புனித பூமியில் 108 துர்கை ஆலயங்களை நிறுவியதாக நம்பப்படுகிறது.

அவற்றில் ஒன்றாகவே இந்த மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோயிலும் கருதப்படுகிறது.

'மிருதங்க ஷைலேஸ்வரி' என்ற பெயருக்கு பின்னால் இருக்கும் மர்மம்

"மிருதங்கம்" என்பது இந்தியாவின் மிகவும் தொன்மையான தாள இசைக்கருவிகளில் ஒன்று.

இந்த இசைக்கருவி தெய்வீக இசையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

புராணக் கதையின்படி...

வானிலிருந்து மிருதங்க வடிவத்தை ஒத்த ஒரு கல் இந்தப் பகுதியில் விழுந்ததாகவும்...

அந்தக் கல்லில் ஆதிபராசக்தியின் தெய்வீக சக்தியை பரசுராமர் உணர்ந்ததாகவும்...

அந்த இடத்திலேயே தேவிக்கு ஆலயம் எழுப்பப்பட்டதாகவும் தல புராணம் கூறுகிறது.

அதனால்தான்...

அம்பாள் "மிருதங்க ஷைலேஸ்வரி" என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார்.

கதகளி கலையின் பிறப்பிடம் என்ற நம்பிக்கை

இந்த ஆலயத்தைப் பற்றிய மற்றொரு சிறப்பும் மிகவும் சுவாரசியமானது.

கேரளத்தின் உலகப் புகழ்பெற்ற கதகளி கலை வடிவம் முதன்முதலில் இந்தத் தலத்திலேயே உருவானதாக உள்ளூர் மரபு நம்பிக்கை கூறுகிறது.

அதனால்...

இந்த ஆலயம் இசைக்கும்...

நடனத்திற்கும்...

கலைக்கும்...

அறிவுக்கும் அருள் வழங்கும் தலமாக மதிக்கப்படுகிறது.

ஒரே தேவி... மூன்று அருள்வடிவங்கள்

இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் அம்பாளை...

பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப...

காளியாக...

சரஸ்வதியாக...

மகாலட்சுமியாக...

மூன்று வடிவங்களிலும் வழிபடுகின்றனர்.

அறிவு வேண்டுபவர்கள்...

கல்வி வேண்டுபவர்கள்...

செல்வ வளம் நாடுபவர்கள்...

தீய சக்திகள் விலக வேண்டும் என்று விரும்புபவர்கள்...

அனைவரும் இந்த அம்பாளை தரிசிக்க வருகின்றனர்.

முதல் திருட்டு... ஆனால் நடந்தது என்ன?

1979ஆம் ஆண்டு...

ஒரு நாள்...

அம்பாளின் சிலை காணாமல் போனது.

கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

பலரும் தேடத் தொடங்கினர்.

ஆனால்...

சில மணி நேரங்களுக்குப் பிறகு...

கோயிலிலிருந்து அதிக தூரம் செல்லாமல்...

ஒரு இடத்தில் அந்தச் சிலை அப்படியே கிடந்தது.

திருடர்கள் ஏன் அங்கேயே விட்டுச் சென்றார்கள்?

என்ன நடந்தது?

யாருக்கும் தெரியவில்லை.

சிலை மீண்டும் ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இரண்டாவது திருட்டு... 42 நாட்கள் கழித்து நடந்த அதிசயம்

சில ஆண்டுகளுக்குப் பிறகு...

மீண்டும் அதே சிலை திருடப்பட்டது.

இந்த முறை...

போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

ஆனால் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

அப்போது...

கோயில் நிர்வாகத்தினர்...

"அம்பாள் தானாகவே திரும்பி வருவாள்...

42 நாட்களுக்குள் சிலை கிடைக்கும்..."

என்று உறுதியாகக் கூறியதாக பக்தர்கள் நினைவுகூருகின்றனர்.

ஆச்சரியமாக...

42ஆம் நாள்...

📍பாலக்காடு மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு எல்லைப் பகுதியில்...

அந்தச் சிலை கிடைத்தது.

அதன் அருகில் இருந்ததாகக் கூறப்படும் கடிதத்தில்...

"இந்தச் சிலை மிருதங்க ஷைலேஸ்வரி கோயிலுக்குச் சொந்தமானது. இதற்கு மேல் எங்களால் இதை எடுத்துச் செல்ல முடியவில்லை."

என்று எழுதப்பட்டிருந்ததாக தல வரலாற்றில் கூறப்படுகிறது.

மூன்றாவது திருட்டு... ஆனால் திருடர்களே பூஜை செய்த சம்பவம்

அதற்குப் பிறகும்...

மூன்றாவது முறையாக...

கர்நாடகாவைச் சேர்ந்த சிலர்...

வயநாடு வழியாகச் சிலையைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பயணத்தின் போது...

ஒரு விடுதியில் சிலையை வைத்தனர்.

ஆனால்...

திருடர்களே...

அம்பாளுக்கு பூ சாத்தி...

தீபம் ஏற்றி...

பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு...

அவர்களே போலீசாருக்கு தகவல் தெரிவித்து...

"சிலை இங்கே இருக்கிறது...

வந்து எடுத்துச் செல்லுங்கள்..."

என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.

திருடர்களின் ஒரே பதில்...

சில ஆண்டுகளுக்குப் பிறகு...

வேறு ஒரு வழக்கில்...

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிலர் போலீசாரிடம் சிக்கியபோது...

ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

"ஏன் சிலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டீர்கள்?"

அவர்களது பதில்...

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அவர்கள் கூறியதாவது...

சிலையை எடுத்துச் சென்ற சில நேரத்திலேயே...

"நாங்கள் யார்...?"

"இந்தச் சிலையை ஏன் எடுத்துச் செல்கிறோம்...?"

"எங்கே போகிறோம்...?"

என்பதே நினைவில் இல்லாமல் போய்விட்டது.

மனதில் காரணமே இல்லாத பயம்...

விளக்க முடியாத குழப்பம்...

அவர்களை ஆட்கொண்டதாம்.

அதனால்...

சிலையை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டதாக அவர்கள் கூறியதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

இன்றும் பாதுகாப்பின்றி இருக்கும் ஆலயம்

இன்றும்...

இந்த ஆலயம் மிகப்பெரிய பாதுகாப்பு அமைப்புகள் இல்லாமல் இயங்கி வருகிறது.

இருப்பினும்...

அம்பாளின் அருளால்...

யார் சிலையை எடுத்துச் சென்றாலும்...

அவள் மீண்டும் தனது ஆலயத்திற்கே திரும்பி வருவாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை...

இன்றும் அங்குள்ள மக்களின் இதயங்களில் உயிருடன் வாழ்கிறது.

நம்பிக்கையா? அதிசயமா?

இந்த நிகழ்வுகள் அனைத்தும் பக்தர்களால் தலைமுறைகளாகப் பகிரப்பட்டு வரும் தல வரலாறுகளும் நம்பிக்கைகளுமாகும்.

அவற்றை ஒவ்வொருவரும் தங்களது நம்பிக்கையின் அடிப்படையில் அணுகலாம்.

ஆனால்...

ஒரு விஷயம் மட்டும் மறுக்க முடியாது.

இந்த ஆலயம்...

இன்று ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் புனிதத் தலமாகத் திகழ்கிறது.

அதன் பின்னால்...

இந்த மர்மமான வரலாறும் முக்கிய காரணமாக உள்ளது.

  • 347
New People