புழுங்கல் அரிசி
நெல்லைப் புழுக்கி அரிசி ஆக்குதலே புழுங்கல் அரிசி என்ற பெயர் கொண்டது. இதன் ஆங்கிலப் பெயர் PARBOILED RICE.
புழுக்குதல் என்றால் அவிகை,அவித்ததல்
புழுங்குதல் - என்றால் சிறுக வேகுதல், ஆவியெழவேகுதல்.
நெல்லைப் புழுக்கி யெடுத்து உமி நீக்கப்பட்ட அரிசியே புழுங்கலரிசி.
ஒரு காலத்தில் "கட்டிப்புடி கட்டிப்புடிடா' என கவர்ச்சி டான்ஸ் போட்ட மும்தாஜ், "வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" என சிம்புவடன் ஆடிய சனா கான் எல்லாம் கிளாமர் ஹீரோயின்களாக இருந்து இப்போ இறை மார்க்கத்தை கடைபிடிக்கும் பெண்களாக மாறியுள்ளனர். அவர்கள் வரிசையில் சஞ்சிதா ஷெட்டியும் பக்தி மயமாக மாறியுள்ளார்.
ஒரு காலத்தில் "கட்டிப்புடி கட்டிப்புடிடா' என கவர்ச்சி டான்ஸ் போட்ட மும்தாஜ், "வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" என சிம்புவடன் ஆடிய சனா கான் எல்லாம் கிளாமர் ஹீரோயின்களாக இருந்து இப்போ இறை மார்க்கத்தை கடைபிடிக்கும் பெண்களாக மாறியுள்ளனர். அவர்கள் வரிசையில் சஞ்சிதா ஷெட்டியும் பக்தி மயமாக மாறியுள்ளார்.
சூது கவ்வும், பல்லு படாம பாத்துக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி ஏற்கனவே கிரிவலம் எல்லாம் சென்று தனது பக்தியை வெளிப்படுத்திய நிலையில், சமீப காலமாக தொடர்ந்து சாமியார்களை சந்தித்து வருகிறார்.
தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கையாக நடித்து ரசிகர்களை அப்போதே கவர்ந்தவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி. விஜய் சேதுபதி ஜோடியாக சூது கவ்வும் படத்தில் நடித்து வேறலெவலில் பிரபலமானார். பிட்சா 2, என்னோடு விளையாடு, ரம், எங்கிட்ட மோதாதே, வினோதய சித்தம், பஹீரா, பல்லு படாம பாத்துக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சியாக படங்களில் நடித்து வந்த நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீப காலமாக பயபக்தியாக மாறியுள்ளார். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது, சாமியார்களை சந்திப்பதாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஹோம்லி லுக்கில் சுடிதார் மற்றும் சேலை அணிந்தே போட்டோக்களை போட்டு வருகிறார்.
நடிப்பில் சாவித்திரியும், பாட்டில் ஜானகியும் தங்கள் துறைகளில் சிகரம் தொட்டவர்கள். இவர்களுக்குள் ஒரு தொழில்முறை மோதல் இருந்தது பலருக்கும் தெரியாது. ஆரம்ப காலத்தில் நடந்த அந்த சம்பவம், ஜானகியின் மனதை ஆழமாகப் பாதித்தது.
அன்றைய காலகட்டத்தில் சாவித்திரி ஒரு சூப்பர்ஸ்டார். பெரும்பாலும் பி. லீலா, பி. சுசீலா ஆகியோர்தான் அவருக்குப் பாடுவார்கள். குறிப்பாக, தன் நடிப்புக்கு சுசீலாவின் குரல்தான் கச்சிதமாகப் பொருந்தும் என சாவித்திரி உறுதியாக நம்பினார். இந்த விஷயம் தெரியாமல், ஜானகி ஒரு தமிழ் படத்தில் சாவித்திரிக்காக ஒரு அருமையான பாடலைப் பாடினார்.
ரெக்கார்டிங் முடிந்ததும் பாடல் சிறப்பாக வந்திருந்தது. ஆனாலும், தன் நடிப்புக்கு ஜானகியின் குரலை விட சுசீலாவின் குரலே பொருத்தமாக இருக்கும் என சாவித்திரி கருதினார். அதனால், ஜானகி பாடிய பாடலை நீக்கிவிட்டு, பி. சுசீலாவை வைத்தே மீண்டும் ரெக்கார்டிங் செய்தனர். இது எஸ். ஜானகியின் தன்மானத்தைப் பாதித்தது.
இந்த அவமானத்தால், "இனிமேல் சாவித்திரி நடிக்கும் படங்களுக்கு நான் பாடவே மாட்டேன்" என்று ஜானகி சபதம் எடுத்தார். சொன்னது போலவே, தெலுங்கு பாடலை சாவித்திரிக்காகப் பாட மறுத்தார். இதனால், அந்தப் பாடலின் ரெக்கார்டிங் சுமார் மூன்று மாதங்கள் தாமதமானது. பின்னர் வேறு வழியின்றி அந்தப் பாடலை அவர் பாட வேண்டியிருந்தது.
ஒரு பேட்டியில் ஜானகி, "சாவித்திரிக்கு சுசீலாவின் குரல்தான் பிடிக்கும். அதனால நான் பாடுறதுக்கு அவங்க சம்மதிக்கல. சாவித்திரி நடித்த தெலுங்கு படத்தின் ஒரு பாட்டை நான் பாடமாட்டேன்னு சொல்லிட்டேன். 3 மாசம் பெண்டிங்ல வெச்சேன். கடைசியில, அந்தப் பாட்டுல சாவித்திரி நடிக்கலைன்னு சொன்னாங்க, அதனால பாடினேன். ஆனா, கடைசியில அந்தப் பாட்டுல சாவித்திரிதான் நடிச்சாங்க" என்றார்.
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், மோக் ஷா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘கட்டா குஸ்தி 2’.
செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. கடந்த 3ம் தேதி வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் விஷ்ணு விஷால் பேசும்போது, “இந்தப் படத்தின் வெற்றி எனக்கு மிகவும் சிறப்பானது. முதலில் ஐசரி கே.கணேஷுக்கு நன்றி. ஒரு தயாரிப்பாளராக அவர் என்மீது முழு நம்பிக்கை வைத்து சுதந்திரம் தந்தார்.
அந்த நம்பிக்கையே இந்த வெற்றிக்கான காரணங்களில் ஒன்று. சினிமா என்பது ஒரு குழு முயற்சி. இதில் பணியாற்றிய ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்பக் கலைஞரும் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கியதால்தான் இன்று குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக இது மாறியுள்ளது.
இயக்குநர் செல்லா அய்யாவுடன் எனக்கு 11 ஆண்டுகளாக நட்பு உள்ளது. அவர் மீது எப்போதும் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. நல்ல குடும்பப் படங்களைத் தொடர்ந்து வழங்கும் திறமை அவருக்கு இருக்கிறது.
எதிர்காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி வணிக இயக்குநர்களில் ஒருவராக அவர் உயர்வார். இன்றைய ரசிகர்கள் விழிப்புணர்வுடன் படங்களை ரசிக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு படத்தையும் மிகுந்த பொறுப்புடன் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்
மேஷம்: தடைகளைப் பொருட்படுத்தாமல், உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பல வகையிலும் சேமிப்பு அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வீடு, வாகனப் பழுதை சரிசெய்வீர்கள்.
ரிஷபம்: வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். தொண்டைப் புகைச்சல், வயிற்று வலி விலகும். பண வரவு உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.
மிதுனம்: வீண் அலைச்சல், டென்ஷன் வரக்கூடும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் தைரியமாக சமாளிப்பீர்கள். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். கலைப் பொருட்கள் சேரும்.
சிம்மம்: புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தேவையற்ற மனக் குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
கன்னி: விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து உறவாடுவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலக ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
துலாம்: தொழில், வியாபாரத்தில் போட்டிகள் மறையும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். புதியவர்களுடன் நட்பு மலரும். தலைவலி, காய்ச்சல் நீங்கும்.
விருச்சிகம்: முன்கோபம் அதிகரிக்கும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாயுக் கோளாறு, சளித் தொந்தரவு வந்து நீங்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் தேவை. நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
தனுசு: குடும்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும். எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களைக் குறைகூறாதீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். பயணத்தின்போது அதிக கவனம் தேவை.
மகரம்: வீண் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உடல்நலம் நிம்மதி தரும். வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.
கும்பம்: மனக் குழப்பங்கள் விலகும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எக்காரியத்திலும் நிதானம் அவசியம்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பீர்கள். குழப்பங்கள் விலகும். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை 13.7.2026.
இன்று மாலை 06.52 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
இன்று அதிகாலை 04.20 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.
இன்று மாலை 04.43 வரை துருவம். பின்னர் வியாகாதம்.
இன்று காலை 08.05 வரை பத்திரை. பின்னர் மாலை 06.52 வரை சகுனி. பின்பு சதுஷ்பாதம்.
இன்று அதிகாலை 05.52 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.7.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
1. தண்ணீர் குடிக்கும்போது முடிந்தால் ஸ்ட்ரா பயன்படுத்தவும், விழுங்கும்போது தலையை கீழே குனிந்து கொள்ளவும்.
2. தெளிந்த சூப்பிற்கு பதிலாக கெட்டியான சூப் குடிக்கவும். தெளிந்த சூப் வேகமாக ஓடும், மூச்சு சீராக இல்லாதபோது எளிதில் புரையேறிவிடும்.
3. வாயில் திட உணவு இருக்கும்போது அல்லது மெல்லும் போது திரவம் குடிக்க வேண்டாம். தண்ணீர் வாயில் அதிக நேரம் இருந்தால், கவனக்குறைவாக இருக்கும்போது மூச்சுக்குழாய்க்குள் சென்று புரையேறும்.
4. வாயில் உணவு அல்லது தண்ணீர் இருக்கும்போது பேசவோ அல்லது தலையைத் திருப்பவோ வேண்டாம்.
5. வயதானவர்களுக்கு இளைஞர்களைப் போல உடல் வலிமையும் சகிப்புத்தன்மையும் இருக்காது..
திரவம் அல்லது உணவு மூச்சுக்குழாய்க்குள் சென்று இருமி வெளியேற்றப்பட்டால்,
முகம் சிவந்து இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
சில நேரங்களில் புரையேறுதல் மரணத்தை விளைவிக்கும்.
வயதாகும்போது, தண்ணீரை மெதுவாகவும், கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் குடிக்க வேண்டும்!!
🌹பல காதலுக்கு உயிர் கொடுத்த ஜானகி பாட்டு.. ஆனால் சொல்லாத அவர் காதல்.
🌹ஜானகி என்று அவரை சொல்வதை விடவும் இப்போது உள்ள ரசிகர்கள் அவரை ஜானகி அம்மா என்றுதான் அழைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பலருடைய மனதில் வாழ்ந்து வருகிறார்.
🌹பல பேர் காதலுக்கு மருந்தாக இவருடைய பாடல்கள் இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் அவர் காதலித்த நபரிடம் அவருடைய காதலை சொல்லவே இல்லையாம்.
🌹பாடகி எஸ் ஜானகிக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. 80ஸ் காலத்தில் இருந்து 2k கிட்ஸ்கள் காலம் வரைக்கும் அவர் தொடர்ச்சியாக பல பாடல்களை பாடி இருக்கிறார்.
🌹அதிலும் இளையராஜா முதல் முதலில் இசையமைத்த "அன்னக்கிளி" என்ற திரைப்படத்தில், "அன்னக்கிளியே உன்னைத் தேடுதே" என்ற பாடலை பாடி பலருடைய மனதில் கவர்ந்து, யார் இந்த குரலுக்கு சொந்தக்காரர் என்று தேட வைத்தவர் தான் இவர்.
🌹இந்தப் பாடல் தான் ஜானகியை பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆக்கியது என்று சொல்லலாம். அதைத் தொடர்ந்து இளையராஜாவின் இசையில் மனதை மயக்கும் பல பாடல்களை பாடி இருக்கிறார். அதோடு ஜானகி முதல் முதலாக 1957ஆம் ஆண்டு வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் தான் இவருடைய முதல் பாடல்.
🌹இந்த பாடல் வெளி வந்த அடுத்த நாளே இவருக்கு தெலுங்கு படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து பல பாடல்களில் பாடிக்கொண்டிருந்தாலும்
🌹பல ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் கொங்கணி, துளு, சௌராஷ்டிரா, ஹிந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.
🌹அதுபோல 1992 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்த எஸ் ஜானகிக்கு ஞானகான சரஸ்வதி என்ற பட்டமும் வழங்கப்பட்டிருந்தது. அதோடு தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்தி பாடல்களை தாமே எழுதி இசை அமைத்து பாடியும் இருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையிலேயே பெண்கள் சாதிப்பதற்கு பெரும் பாடாக இருக்கிறது.
🌹ஆனால் பல வருடங்களுக்கு முன்பு எஸ் ஜானகி பலரும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு இசை துறையில் பல வெற்றிகளை வாங்கி குவித்து இருக்கிறார். அதோடு ஜானகி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர், டீனேஜ் முதலே இசை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல வருடங்களாக இசைக்கச்சேரிகளில் தான் பாடிக் கொண்டிருந்தார்.
🌹ஜானகி ஆரம்ப காலகட்டத்தில் மேடை பாடகியாக இருந்தபோது ராம் பிரசாத் என்பவர் அவருக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார்.
🌹அவர் யார் என்றால் ஜானகி கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவரின் மகன். ஆனால் அவர் தன்னுடைய தந்தையிடம் ஜானகியின் திறமை வெறும் இசை கச்சேரியோடு முடிந்து விடக்கூடாது. சினிமா பாடல்களில் பாட வைக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.
🌹 அவரோட அட்வைஸ்சால் தான் சென்னைக்கு வந்து ஜானகி ஏவிஎம் நிறுவனத்தில் பாடகியாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்
🌹இப்படி தன்னுடைய இசைப்பயணம் துவங்க காரணமாக இருந்த ராம் பிரசாத் மீது ஜானகிக்கு ஆரம்பத்தில் நட்பு இருந்த நிலையில் பிறகு காதலாக மாறி இருக்கிறது. எத்தனையோ கதாநாயகிகளின் காதலை அழகாக வெளிப்படுத்திய ஜானகி தன்னுடைய காதலை ராம்பிரசாத்திடம் சொல்லவே இல்லை.
🌹ஆனால் இவர்களுடைய வீட்டில் இவர்களுக்கு 1959 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
🌹அதற்குப் பிறகும் ஜானகிக்காக ரெக்கார்டிங் போது கூடவே இருப்பாராம். அந்த அளவிற்கு மனைவியின் வெற்றியை பார்த்து ரசித்த வந்த ராம் பிரசாத் 1997 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டார்.
இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.
‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர். அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது.
பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’, ‘அம்மா.. அம்மா..’ போன்றவை காலத்தால் அழியாதவை.
திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார்.
‘காற்றில் ஜானகியின் கீதம்...’ எப்போதும் உலகோடு இரண்டறக் கலந்திருக்கும். தனது மெல்லிய அற்புதமான வசீகர குரலால் பல ரசிகர்களை தன்வசம் வைத்துக் கொண்டவர். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எங்கோ, எவர் செவியிலோ கேட்டுக்கொண்டே இருக்கும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12.7.2026.
இன்று இரவு 09.18 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.
இன்று காலை 07.01 வரை கிருத்திகை. பின்னர் மிருகசீரிடம்.
இன்று இரவு 07.44 வரை விருத்தி. பின்னர் துருவம்.
இன்று காலை 10.31வரை கரசை. பின்னர் இரவு 09.18 வரை வணிசை. பின்பு பத்திரை.
இன்று முழுவதும் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை: 03.15 முதல் 04.15 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு, தனது எதார்த்தமான பேச்சாலும் குணத்தாலும் பலருடைய மனங்களை வென்றவர் நடிகை திவ்யா கணேஷ். எப்போதும் குடும்பப் பாங்கான வேடங்களில் வலம் வந்த இவர், தற்போது முன்னணி ஓடிடி தளமான 'ஆஹா' டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ள 'Sshhh 3' என்ற அடல்ட் த்ரில்லர் வெப் தொடரில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு, தனது எதார்த்தமான பேச்சாலும் குணத்தாலும் பலருடைய மனங்களை வென்றவர் நடிகை திவ்யா கணேஷ். எப்போதும் குடும்பப் பாங்கான வேடங்களில் வலம் வந்த இவர், தற்போது முன்னணி ஓடிடி தளமான 'ஆஹா' டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ள 'Sshhh 3' என்ற அடல்ட் த்ரில்லர் வெப் தொடரில் நடித்துள்ளார்.
நெட்டிசன்கள் ஒருபக்கம் ட்ரோல் செய்தாலும், இந்தத் தொடரின் ப்ரோமோஷனுக்காக திவ்யா கணேஷ் பங்கேற்ற ''Wrong Answer Only'' என்ற விநோதமான நேர்காணல் வீடியோ தற்பொழுது பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அதில் கேட்கப்பட்ட சில விவகாரமான கேள்விகளுக்கு அவர் திவ்யா அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
கேள்வி: நீங்க சிங்கிளா?
திவ்யா பதில்: யார் சொன்னா நான் சிங்கிள்னு? எனக்குன்னு ஆள் இருக்காரு!
கேள்வி: படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
திவ்யா பதில்: அந்த மாதிரி சீன் எடுக்கும் போதே எனக்கு செம ஜாலியா இருக்கும்.. அப்படியே வைப் ஆகிடுவேன் என நச்சுனு பதில் அளித்தார். அதோடு மட்டுமில்லாமல் யாராவது உங்களிடம் கடலை போட்டால் என்ன செய்வீர்கள் என்பது போன்ற இன்னும் சில கிளுகிளுப்பான கேள்விகளுக்கும் அவர் நேர்காணலில் கலகலப்பாகப் பதிலளித்துள்ளார். பிக் பாஸ் இமேஜை உடைத்து, முற்றிலும் புதிய அவதாரத்தில் படு கவர்ச்சியாக களம் இறங்கியுள்ள திவ்யா கணேஷின் இந்த புதிய ட்ரான்ஸ்ஃபார்மேஷன் தான் இப்போது சோசியல் மீடியாவின் பேசு பொருளாகி உள்ளது.
திரைபடக் கலை, ஒளிப்படக் கலை, இசை, எழுத்து எனப் பன்முகத் திறமை வாய்ந்தவர் இயக்குநர் செழியன். தனது ‘த பிலிம் ஸ்கூல்’ மூலம் சுயாதீனத் திரைப்படங்களை எடுப்பது தொடர்பாக, திட்டவட்டமான பயிற்சியை உருவாக்கி, அதற்கான மாணவர்களைத் திரட்டி தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார். நிறுவனங்கள் செய்யவேண்டிய பணியை தனிநபராகச் செய்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த செழியன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார்.
நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரான, ஒளிப்பதிவாளர் செழியனின் உடல் நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரைத்துறையினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் போரூர் மின் மயானத்தில் நேற்று மாலை அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மறைந்த செழியனுக்கு பிரேமா என்ற மனைவி, அஜிதா என்ற மகள் உள்ளனர்.
கனடாவின் சாஸ்காச்சுவான் மாகாணச் சிறைச்சாலைகளில் இருந்து, நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக 5 கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்துப் பிழைகள், தகவல் தொடர்பு குறைபாடுகள், ஆவணக் கோளாறுகள் அல்லது தரவுச் செயலாக்கத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாகவே இந்தக் கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சாஸ்காச்சுவான் மாகாண அரசு தெரிவித்துள்ளது.
இப்படியாக தவறுதலாக விடுவிக்கப்பட்டவர்களில் 26 வயதான கெலீஷா ஜாக்சன் என்ற பெண்ணும் ஒருவர். தாக்குதல் மற்றும் ஒருவரை வலுக்கட்டாயமாகச் சிறைபிடித்த குற்றத்திற்காக நார்த் பேட்டில்ஃபோர்ட் சிறையில் இவர் தண்டனை அனுபவித்து வந்தார்.
கடந்த மார்ச் 19 அன்று இவர் தவறுதலாக விடுவிக்கப்பட்டார். ஆனால், இதுகுறித்த தகவல் ஜூன் 19 வரை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
இறுதியாக, தவறுதலாக விடுவிக்கப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த ஜாக்சன், இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இத்தகைய தவறுகள் மிகவும் அரிதானவை என்றும், ஒட்டுமொத்த கைதிகள் விடுதலையில் இது 0.1 சதவீதத்திற்கும் குறைவானதே என்றும் அரசுத் தரப்பு வாதிட்டுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் சாஸ்காச்சுவான் அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என எதிர்க்கட்சியான என்.டி.பி (NDP) குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று என்.டி.பி சட்டமன்ற உறுப்பினர் நிக்கோல் சராவர் வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம், கைதிகள் தங்களின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கப்படுவதால், சிறைச்சாலையில் அவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வுப் பயிற்சிகள் முழுமையடையாமல் போகும் என்றும், இது அவர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைவதைப் பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தவறுதலாக நடக்கும் ஒவ்வொரு விடுதலை குறித்தும் சிறப்புக் குழு ஆய்வு செய்து வருவதாகவும், வருங்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்க உரியப் பரிந்துரைகள் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
பிரேசில் நாட்டில் மருத்துவ தம்பதியினர் ஒருவருக்கொருவர் 30 வினாடிகளில் 195 முத்தங்கள் கொடுத்து கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
பிரேசிலின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த தம்பதியினர் ரெனாடோ மற்றும் நையாரா ஆகிய இருவரும் மருத்துவத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் வெறும் 30 வினாடிகளில் 195 முறை ஒருவருக்கொருவர் முத்தமிட்டு உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இவர்களில் ரெனாடோவுக்கு 'ஏடிஎச்டி' எனப்படும் கவனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டுக் குறைபாடு பாதிப்பு உள்ளது.
இருப்பினும், முறையான பயிற்சியும் தீவிர மன உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் இருவரும் உலகின் மிகச்சிறந்த தம்பதி என்பதை உலகிற்கு காட்ட நினைத்த இவர்களின் இந்த முயற்சி, தற்போது அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளனர். இணையத்தில் இவர்களின் சாதனை வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
அன்று மருத்துவமனையில் இருந்து அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தேன்.
மருத்துவர் என்னை தனியாக அழைத்து,
"சிகிச்சை தொடரும்... ஆனால் இனி இவருக்கு மருந்தை விட மனநிம்மதிதான் முக்கியம்," என்றார்.
அந்த ஒரு வாக்கியம் என்னை பயமுறுத்தவில்லை.
மாறாக, ஒரு கணக்கு போட ஆரம்பித்தேன்.
வேலை...
வீட்டுக் கடன்...
குழந்தைகளின் படிப்பு...
இதில் அம்மாவின் மருத்துவச் செலவு வேறு பயமுறுத்தியது....
எல்லாமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
வீட்டுக்கு வந்ததும் அம்மா மெதுவாகக் கேட்டார்.
"டேய்... மாலையில் ஒரு டம்ளர் தேநீர் போட்டுத் தருவியா?"
எனக்கு எரிச்சல் வந்தது.
"அம்மா... இப்போதான் வீட்டுக்கு வந்திருக்கோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க."
அவர் எதுவும் பேசவில்லை.
சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார்.
அடுத்த சில நாட்களும் அதே கேள்வி.
"டேய்... ஒரு டம்ளர் தேநீர்..."
ஒவ்வொரு முறையும் நான்,
"இப்போ மீட்டிங்..."
"கொஞ்சம் வேலை..."
"பிறகு பார்க்கலாம்..."
என்று தள்ளிக்கொண்டே இருந்தேன்.
ஒரு நாள் என் மகள் என்னிடம் கேட்டாள்.
"அப்பா... பாட்டி தினமும் ஏன் உன்னிடமே தேநீர் கேட்கிறாங்க? நான் போட்டுத் தரட்டுமா?"
நான் சிரித்தேன்.
"அதெல்லாம் வேண்டாம்மா."
அவள் அமைதியாகச் சொன்னாள்.
"பாட்டிக்கு தேநீர் வேணும்னு தோணலை. உன்னோட ஐந்து நிமிஷம் வேணும்னுதான் தோணுது."
அந்தச் சிறிய வார்த்தை என்னை ஏதோ செய்தது.
அன்றைய மாலை, நானே சமையலறைக்குப் போய் இரண்டு டம்ளர் தேநீர் போட்டேன்.
ஒன்றை அம்மாவிடம் கொடுத்தேன்.
அவர் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார்.
"உனக்கு வேலை இல்லையா?"
"இருக்கு... ஆனா இது அதைவிட முக்கியம்."
வாசலில் இருவரும் அமைதியாக அமர்ந்தோம்.
அவர் தேநீரை மெதுவாகக் குடித்துக்கொண்டே,
"உனக்கு ஞாபகம் இருக்கா?"
என்று கேட்டார்.
"என்னம்மா?"
"நீ பள்ளிக்குப் போகும்போது தினமும் நான் உனக்கு பால் கொடுப்பேன். நீ குடிக்க மாட்டேன்னு அடம் பிடிப்ப."
நான் சிரித்தேன்.
அவர் தொடர்ந்தார்.
"அப்போது நான் உன்னைப் பார்த்து குடித்தேன்.
இப்போ நீ என்னைப் பார்த்து தேநீர் குடிக்கிறே.
வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் திரும்பி வரும் என்று நினைக்கல."
அன்று நாங்கள் அரை மணி நேரம் பேசினோம்.
எந்தப் பெரிய விஷயமும் இல்லை.
பக்கத்து வீட்டைப் பற்றி...
பழைய நாட்களைப் பற்றி...
என் அப்பாவைப் பற்றி...
என் சிறுவயதைப் பற்றி...
அதுதான்...
மறுநாள் காலை...
அன்று இரவு அம்மா தூக்கத்திலேயே அமைதியாக இறந்துவிட்டார்.
அவரது அறையை சுத்தம் செய்தபோது, மேசையின் மேல் ஒரு சிறிய காகிதம் இருந்தது.
அதில் அவர் எழுதியிருந்தது.
"என் மகனுக்கு...
எனக்கு தேநீர் மீது ஆசை இல்லை.
என்னோட மகன் என்னுடன் உட்கார்ந்து ஐந்து நிமிஷம் பேசணும்னுதான் காத்திருந்தேன்.
அந்த ஆசை நிறைவேறிச்சு.
இப்போ எனக்கு எந்தக் குறையும் இல்லை."
அந்தக் காகிதத்தைப் படித்தபோது நான் அழவில்லை.
ஏனென்றால்...
அழுகையைவிட பெரிய ஒரு வலி என் உள்ளே இருந்தது.
நாம் பெற்றோருக்கு பணம் கொடுக்கிறோம்.
மருந்து வாங்கிக் கொடுக்கிறோம்.
நல்ல மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறோம்.
ஆனால்...
அவர்களுக்கு மிகவும் தேவைப்படுவது,
நம் நேரம்.
நம் அருகாமை.
"சாப்பிட்டீங்களாம்மா?"
என்று கேட்கும் ஒரு குரல்.
ஒரு கப் தேநீர்.
ஐந்து நிமிட உரையாடல்.
வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில்,
பெற்றோர் கேட்பது பெரிய தியாகங்களை அல்ல.
"நீ இன்னும் என் பக்கத்தில்தான் இருக்கிறாய்" என்ற ஒரு சிறிய உணர்வை மட்டும்தான்.
அந்த ஐந்து நிமிடங்களை நாம் தராமல் விட்டால்...
ஒருநாள் ஆயிரம் கண்ணீராலும் அந்த ஐந்து நிமிடங்களை வாங்க முடியாது.
"இதயம் நம் பேச்சைக் கேட்காது...
கல்லீரல் நம் கட்டளைக்குக் கட்டுப்படாது...
சிறுநீரகமும் நம் விருப்பப்படி இயங்காது...
ஆனால்...
இரைப்பை மட்டும் நம் முடிவுக்குக் கட்டுப்படும்!"
"இரைப்பைக்குள் என்ன போக வேண்டும் என்று முடிவு செய்வது நாம்தான்.
ஆகவே
நல்ல உணவையும் அனுப்பலாம்...
தீங்கு விளைவிக்கும் உணவையும் அனுப்பலாம்...
ஒவ்வொரு கவளமும் உங்கள் முடிவு.
அந்த முடிவுதான் நாளைய ஆரோக்கியத்தையும், நாளைய நோயையும் தீர்மானிக்கிறது."
"மருத்துவமனைக்குப் போகும் பல பாதைகள்... சமையலறையிலிருந்தே தொடங்குகின்றன.
"இது என் உடலுக்கு மருந்தா... இல்லை மெதுவான விஷமா?"
சிந்திப்போம்...
நாம் ஆரோக்கியமாக வாழ்வதும்...
நோய்களோடு போராடுவதும்...
நம் கையில் இருக்கும் அந்த ஒரே ஒரு கவள உணவில்தான் தொடங்குகிறது.
ஆகவே...
உணவைத் தேர்ந்தெடுக்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.
ஆரோக்கியம் உங்கள் கையில் மட்டுமல்ல... உங்கள் ஒவ்வொரு கவளத்திலும் இருக்கிறது!
உலகில் உள்ள பெரும்பாலான தேசியக் கொடிகளில் சிவப்பு, நீலம், பச்சை, வெள்ளை, மஞ்சள் போன்ற நிறங்களைப் பார்க்கலாம். ஆனால், ஊதா நிறம் மட்டும் மிகவும் அரிது.
அதற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் காரணம் இருக்கிறது.
பண்டைய காலங்களில் துணிகளுக்கு நிறம் ஏற்ற இயற்கைச் சாயங்களே பயன்படுத்தப்பட்டன. அப்போது ஆழமான, நீடித்த ஊதா நிறத்தை உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது. அதற்காக மத்திய தரைக்கடல் பகுதியில் வாழ்ந்த மியூரெக்ஸ் (Murex) என்ற கடல் நத்தையிலிருந்து பெறப்பட்ட Tyrian Purple என்ற சாயம் பயன்படுத்தப்பட்டது. அதை தயாரிக்க பல ஆயிரக்கணக்கில் நத்தைகள் தேவைப்பட்டன.
அதனால் இந்தச் சாயத்தைத் தயாரிப்பது மிகவும் உழைப்பும் செலவும் அதிகம் கொண்ட செயலாக இருந்ததால், அது அக்காலத்தில் மிக உயர்ந்த மதிப்புடைய பொருளாகக் கருதப்பட்டது.
அரசர்கள், பேரரசர்கள் மற்றும் உயர்குடியினர் மட்டுமே பெரும்பாலும் ஊதா நிற ஆடைகளை அணிந்தனர். இதுவே ஊதா நிறத்தை அதிகாரம், செல்வம் மற்றும் அரச அந்தஸ்தின் அடையாளமாக மாற்றியது.
பின்னர், 1856-ஆம் ஆண்டு, இளம் வேதியியலாளர் வில்லியம் ஹென்றி பெர்கின் செயற்கை ஊதா நிறச் சாயத்தை கண்டுபிடித்தார். அதன் பிறகுதான் ஊதா நிறம் பொதுமக்களுக்கும் எளிதாகக் கிடைக்கத் தொடங்கியது.
ஆனால், அதற்குள் பல நாடுகள் தங்களது தேசியக் கொடிகளை ஏற்கனவே வடிவமைத்து விட்டன. அதனால் இன்றும் தேசியக் கொடிகளில் ஊதா நிறம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
குறிப்பிடத்தக்க விதமாக, டொமினிகா மற்றும் நிகராகுவா ஆகிய நாடுகளின் கொடிகளில் மட்டுமே சிறிய அளவில் ஊதா நிறம் இடம்பெற்றுள்ளது.
ஒரு நிறத்திற்குப் பின்னால் இவ்வளவு சுவாரஸ்யமான வரலாறு இருப்பது ஆச்சரியம்தானே!


















