Quote of the Day

பழமொழிகள்: அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப்பெண்ணும் சமைக்கும்

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 260
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added a news
·

டொரண்டோவின் ரெக்ஸ்டேல் (Rexdale) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொரண்டோ காவல்துறை தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில், குவீன்ஸ் பிளேட் டிரைவ் மற்றும் ரெக்ஸ்டேல் பெலவூர்ட் சந்திப்புப் பகுதிக்கு அவசர உதவி கோரி காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அங்கு சோதனையிட்ட அதிகாரிகள், துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் குறித்த கூடுதல் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு பின் முழு விபரங்கள் வெளியிடப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

  • 21
·
Added a news
·

சர்வதேச அளவில் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில், கனடாவின் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

ஏனைய நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் நிதி மற்றும் கடுமையான போட்டி இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

'Center for World University Rankings' (CWUR) வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலில், தரப்படுத்தப்பட்ட கனடாவின் 38 பல்கலைக்கழகங்களில் 37 நிறுவனங்கள் கடந்த ஆண்டை விடக் கீழே இறங்கியுள்ளன.

ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டுமே தனது முந்தைய இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

டொரண்டோ பல்கலைக்கழகம் உலகளவில் 23-வது இடத்தைப் பிடித்து, கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. இது மட்டுமே கடந்த ஆண்டு நிலையைத் தக்கவைத்துள்ளது. மெக்கில் பல்கலைக்கழகம் ஒரு இடம் சரிந்து 28-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் 48-வது இடத்திலிருந்து 49-வது இடத்திற்குச் சரிந்துள்ளது.

அல்பெர்ட்டா பல்கலைக்கழகம் உலகளவில் 82-வது இடத்தைப் பெற்றுள்ளது. மாண்ட்ரியல் பல்கலைக்கழகம் 126-வது இடத்தைப் பிடித்துள்ளது.

"கனடிய பல்கலைக்கழகங்களின் இந்த வீழ்ச்சி, பல வருடங்களாகப் போதிய நிதி வழங்கப்படாததையும், அறிவியல் மற்றும் கல்வியை பொது நலனுக்கானதாகக் கருதுவதில் ஏற்பட்டுள்ள குறைபாட்டையுமே காட்டுகிறது," என்று CWUR அமைப்பின் தலைவர் டாக்டர் நதிம் மஹாசென் (Dr. Nadim Mahassen) தெரிவித்துள்ளார்.

இது கல்வித்துறை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, ஒரு நாட்டின் தேசியப் பிரச்சனை. ஏனெனில் உயர்கல்வித் தரம் குறைவது நாட்டின் அறிவியல் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் நீண்டகால எதிர்காலத்தைப் பாதிக்கும் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இப்பட்டியலில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து 15-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் 4 மற்றும் 5-வது இடங்களைப் பெற்றுள்ளன.

  • 22
  • 18
  • 18
  • 18
  • 18
  • 17
·
Added a post
·

ஒரு பெரியவர் எப்போது

பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி...,

"சிவபுராணம் படித்துக்

கொண்டே இருப்பார்".....!!

இளைஞன் ஒருவன்

பல நாட்களாக....,

" இதனை கவனித்துக்

கொண்டே இருந்தான்"....!!

ஒரு நாள் அவரிடம்

வந்து கேட்டான்....!!

" தாத்தா...!

"எப்பப் பாத்தாலும்

இந்த புத்தகத்தையே படிச்சிட்டு

இருக்கீங்களே".....,

"இதை எத்தனை

நாளா படிக்கிறீங்க"...? என்றான்.

பெரியவர் சொன்னார்,

" ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் "....!!

அப்படின்னா....,

" இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே"....!!

"அப்புறம் ஏன்

இன்னும் படிக்கிறிங்க"..... ? என்றான்.

தாத்தா சிரித்தபடி கூறினார்,

" எனக்கு ஒரு உதவி செய்"....!!

"அதை நீ செஞ்சு முடிச்சப்புறம் நான்

பதில் சொல்றேன்".....!!

இளைஞன் கேட்டான்,

" என்ன உதவி தாத்தா.....? "

பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு

மூங்கில் கூடையை எடுத்தார்.

"அதில் அடுப்புக் கரி இருந்தது"......!!

அதை ஒரு மூலையில்

கொட்டினார்....!!

பல நாட்களாகக் கரியை

சுமந்து , சுமந்து.....,

" அந்தக் கூடையின்

உட்புறம் கருப்பாக மாறி இருந்தது"........!!

பெரியவர் சொன்னார்,

தம்பி....,

"அதோ அங்கே இருக்குற தண்ணீர் பைப்புல இருந்து".....,

" இந்தக்

கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்" என்றார்...!!

"இளைஞனுக்கு சிரிப்பு வந்தது".....!!

இருந்தாலும் பெரியவர் சொல்லி

விட்டதால்.....,

எடுத்துச் சென்று

தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான்.

அவன் வந்து சேருவதற்கு முன்பே

எல்லா நீரும்........,

"மூங்கில் கூடையின் ஓட்டைகள் வழியே தரையில் ஒழுகிப்போனது".......!!

பெரியவர் சொன்னார்,

" இன்னும் ஒரே ஒரு முறை " .....,

இளைஞன்

மீண்டும் முயன்றான்.

ஆனால்,

" மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்".....?

"மீண்டும் கீழே கொட்டிப் போனது".....!!

பெரியவர் கேட்டார்,

" இந்த தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு

முறை மட்டும் தண்ணீர் நிரப்பி பாரேன் என்றார்.

இளைஞன் ஒரு

முடிவுக்கு வந்தான்.

"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி

செய்து விட்டு"......,

" திரும்பிப் பார்க்காமல்

ஓடிவிடுவோம்"....... !!

"அவர் எந்தப் புத்தகத்தைப்

படித்தால் எனக்கென்ன வந்தது"......?

தண்ணீர் பிடித்தான்.

வழக்கம் போலவே

எல்லாத் தண்ணீரும் தரையில்.

" தாத்தா,

"இந்தாங்க உங்க கூடை."....!!

" இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத்

தெரியுமா தெரியாதா"....?

"எதுக்கு என்னை இந்தப்

பாடு படுத்துறீங்க என்றான்".....!!

அவர் புன்னகையோடு சொன்னார்,

" இதுல தண்ணி நிற்காதுன்னு எனக்கும் தெரியும்"......!!

"நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப்

போகும் போது".......,

" இதோட உட்புறம் எப்படி இருந்தது? " என்றார்.

இளைஞன் சொன்னான் ,

" ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா

இருந்தது "

"இப்போ பார் "என்றார்.

தண்ணீர் பட்டு , பட்டுக் கரிக்கட்டைகளின் கறுப்பு நிறம் கலைந்து.......,

"கூடையின்

உட்புறம் சுத்தமாகி இருந்தது".......!!

பெரியவர் சொன்னார்,

" தம்பி,

நீ கேட்ட கேள்விக்கு பதில்

இதுதான்".......!!

எத்தனை முறை தண்ணீர்

பிடிச்சாலும்.......,

" மூங்கில் கூடை

நிரம்பவே இல்லை"......!!

ஆனாலும்...,

" ஒவ்வொரு

முறையும் நீரில் நனைய கூடை சுத்தமாயிடிச்சு".....!!

அது போலத்தான்....?

"எத்தனை முறை படிச்சாலும் முழு பகவத்கீதையும் மனப்பாடம் ஆயிடும்னு

சொல்ல முடியாது"......!!

"ஆனா படிக்கிற

ஒவ்வொரு முறையும்"......,

" உள்ளுக்குள்ள

இருக்கும் அழுக்கும்".......,

"கறையும்

சுத்தமாகிக்கிட்டே இருக்கும்" என்றார்......!!

அந்த வார்த்தைகளின் உண்மை........ ,

அந்த இளைஞனின் மனதில்

ஆழ்ந்து யோசிக்க செய்தது...!!

இறைநாமம் சொல்ல, சொல்ல...,

"நம் மன அழுக்குகள் அகலும்"...!!

பக்தி காவியங்கள் படிக்க, படிக்க.....,

"இறை சிந்தனை பெருகும்"....!!

"மனசஞ்சலம் விலகும்".....!!

நம் முன் வினைகள் அகலும்"....!!

  • 19
·
Added a post
·

திருவள்ளுவர் அவர்களின் உண்மையான ஓவியம் அல்லது புகைப்படம் எதுவும் இல்லை. அவரின் வாழ்க்கை வரலாறே முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், இன்று நாம் பார்க்கும் வள்ளுவர் உருவத்தை முதன்முதலில் வரைந்தவர் ஓவியர் K. R. வேணுகோபால் ஷர்மா.

அந்த ஓவியம் பின்னர் பல்வேறு அரசியல், சமூக, ஆன்மிக மற்றும் இலக்கிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரியார் ஈ.வே.இராமாசாமி, C. N. அண்ணாதுரை, M. கருணாநிதி, எம்.ஜி. இராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் அந்த உருவத்தை பாராட்டியுள்ளனர்.

1964ஆம் ஆண்டு, அன்றைய தமிழக முதலமைச்சர் M. பக்தவத்சலம் காலத்தில், அந்நாள் துணை ஜனாதிபதி ஜாஹீர் ஹுசைன் (Zakir Husain) அவர்களால் சென்னை சட்டசபையில் அந்த ஓவியம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் அதையே தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு நாட்டுடைமையாக்கியது. மேலும் இந்திய அஞ்சல் துறையும் அந்த உருவத்தைக் கொண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.

  • 20
  • 20
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 18 ஆம் தேதி திங்கட்கிழமை 1.6.2026.

நாள் - சம நோக்கு நாள்

பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ பிரதமை  - May 31 02:14 PM – Jun 01 04:37 PM

கிருஷ்ண பக்ஷ துவிதியை  - Jun 01 04:37 PM – Jun 02 07:01 PM

நட்சத்திரம்

கேட்டை - May 31 04:11 PM – Jun 01 07:08 PM

மூலம் - Jun 01 07:08 PM – Jun 02 10:06 PM

image_transcoder.php?o=sys_images_editor&h=530&dpx=2&t=1780285635

  • 116
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: குடும்பத்தில் இருந்த காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

ரிஷபம்: வீண் குழப்பங்கள், அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை. வாகனம் செலவு வைக்கும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள்.

மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப்போன காரியங்கள் விறுவிறுப்பாக நடந்து முடியும். தொழிலில் போட்டிகள் குறையும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

கடகம்: புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதியவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.

சிம்மம்: நீண்ட காலமாக தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டு. விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

கன்னி: இழுபறியாக இருந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

துலாம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: பழைய சம்பவங்களை நினைத்துப் பார்த்து வருந்துவீர்கள். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல், அசதி, வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு: தேவையற்ற அச்சம், கவலை, மன சஞ்சலங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால், தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பல வகையிலும் பணவரவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும்.

மகரம்: புதியவர்களுடன் நட்பு மலரும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கும்பம்: தொட்ட காரியம் துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்து முடியும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்களும் உடனடியாக நிறைவேறும். ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சில் பொறுமை தேவை.

மீனம்: யாரிடமும் பழைய கசப்பான சம்பவங்களைப் பேச வேண்டாம். உடல்நலத்தில் கவனம் தேவை. பிற்பகல் முதல் தடைகள் உடைபடும். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

  • 114

Good Morning...

  • 110
·
Added a news
·

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஸ்மித்ஸ் பால்ஸ் அருகே நெடுஞ்சாலை 15 இல் இடம்பெற்ற மூன்று வாகன விபத்தில், 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளனர்.

காவல்துறையின் அறிக்கையின்படி, லோம்பார்டி பகுதியில் உள்ள கவுண்டி சாலை 1 மற்றும் கவுண்டி சாலை 5 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலையில் மாலை 5 மணியளவில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவை ஒன்றோடொன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான கார்களில் ஒன்றை ஓட்டிச் சென்ற 34 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது காரில் பயணித்த சிறுவன் ஒருவன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், 'ஆர்ஞ்ச்' அவசர வான்வழி ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தின் போது அந்த ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இருக்கவில்லை. எனினும், அதில் பயணித்த ஓட்டுநரும் மற்றொரு நபரும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய மூன்றாவது காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்துள்ளார். அவர் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த பயங்கர விபத்தை அடுத்து, அப்பகுதியூடான நெடுஞ்சாலை பல மணி நேரம் மூடப்பட்டு, பின்னர் மீண்டும் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டது. இவ்விபத்து குறித்து ஒண்டாரியோ மாகாண காவல்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான தகவல்களோ அல்லது விபத்து நடந்த இடத்தின் வீடியோ காட்சிகளோ யாரிடமாவது இருந்தால், உடனடியாக லீட்ஸ் கவுண்டி காவல்துறையை 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • 198
·
Added a post
·

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான். தப்பிக்க கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே? என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று உரிமை பெற்று விட்டீர்களா?

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்

  • 196

இது உண்மைதானா? சொல்லுங்களேன்.

  • 192
·
Added a post
·

முன்னொரு காலத்தில் வேத பட்டர் என்ற சிவபக்தர், இறைவனின் நைவேத்தியத்திற்காக நெல்லைக் காய வைப்பார். ஒருநாள் பெருமழை கொட்ட, "இறைவனின் நெல் வீணாகிறதே!" என்று பதறி ஓடிவந்தார். ஆனால் அங்கே ஒரு மகா அற்புதம்! சுற்றிலும் வெள்ளம் ஓட, அந்த நெல் மீது மட்டும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட படவில்லை!

ஆம், எம்பெருமான் சிவபெருமான் அந்த நெல்லைச் சுற்றி ஒரு "வேலி" போல நின்று காத்தருளினார்.

நெல்லை வேலியாகக் காத்ததால் "நெல்லையப்பர்"!

அந்தப் புண்ணிய பூமி "திருநெல்வேலி" (திரு + நெல் + வேலி) ஆனது!

தூண்களில் ஏழிசை! (The Musical Pillars

கோயிலின் மணிமண்டபத்திற்குச் சென்றால், அங்கே ஒரு உலக அதிசயத்தைக் காணலாம். அங்கிருக்கும் கல் தூண்களைக் கைகளால் மெதுவாகத் தட்டினால், அதிலிருந்து சரிகமபதநி என்ற ஏழு சுரங்களின் ஓசை (இசை) துல்லியமாகக் கேட்கும்! மாபெரும் சிற்பக் கலைக்குச் சான்றாக, 7-ம் நூற்றாண்டிலேயே பாண்டிய மன்னர்களால் இந்த அதிசயம் செதுக்கப்பட்டுள்ளது.

நடனமாடிய 'தாமிர சபை'

ஈசன் நடனமாடிய ஐந்து முக்கிய சபைகளில் (பஞ்ச சபைகள்) இது "தாமிர சபை" ஆகும். இங்குள்ள மர வேலைப்பாடுகளும், பிரம்மாண்ட சிற்பங்களும் பார்ப்போரைக் கண் இமைக்க விடாமல் செய்யும். ஆண்டுக்கு ஒருமுறை மார்கழி திருவாதிரையன்று இங்கு நடைபெறும் நடனக் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்!

தமிழகத்தின் பிரம்மாண்ட தேர்!

தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் நெல்லையப்பர் கோயில் தேரும் ஒன்று. ஆனிப் பெருந்திருவிழாவின் போது, இந்த மாபெரும் தேர் நெல்லை ரத வீதிகளில் அசைந்து ஆடி வரும் அழகைக் காண உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்!

கூடுதல் தகவல்:

இக்கோயில் வெறும் ஆன்மீகத் தலம் மட்டுமல்ல, சக்தி பீடங்களில் ஒன்றான "காந்திமதி பீடமாகவும்" திகழ்கிறது. சுவாமி கோயிலும், அம்மன் கோயிலும் தனித்தனியாக இருந்து, பின்னாளில் "சங்கிலி மண்டபம்" மூலம் இணைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தலம் இது!

  • 195
  • 192
  • 193
  • 193
  • 192
  • 193
  • 194

பிறரிடம் ஒரு கடும் சொல்லைச் சொல்லுமுன் பேச முடியாதவர்களை நினைத்துப் பாருங்கள்.

உங்கள் சாப்பாட்டைக் குறை கூறும் முன் சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்துப் பாருங்கள்.

உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறை கூறும் முன் வாழ்க்கைத் துணை வேண்டி வருந்துபவர்களை நினைத்துப் பாருங்கள்.

உங்கள் குழந்தைகளைக் குறை கூறும் முன் பிள்ளை வரம் வேண்டுபவர்களை நினைத்துப் பாருங்கள்.

உங்களுடைய வீட்டைக் குறை கூறும் முன் வீடில்லாமல் வீதிகளில் வசிப்பவர்களை எண்ணிப்பாருங்கள்.

உங்களுடைய வேலையைக் குறை கூறும் முன் வேலையில்லாமல் வாடுபவர்களை எண்ணிப் பாருங்கள்.

சோகத்தில் உங்கள் முகம் வாட விடாதீர்கள்.

வாழ்க்கை என்ற பரிசுக்கு நன்றி சொல்லி முகத்தில் புன்முறுவல் தவழ விடுங்கள்.

தெளிந்த மனம் தேர்ந்த சொற்களோடு நடைபயிலுங்கள்.

நல்லதே நடக்கும்.

  • 194
New People