திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார் என்று ‘தாய் கிழவி’ விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிவிட்டு சிவகார்த்திகேயன், “இயக்குநர் சிபிக்கு நன்றி. தலைவர் ரஜினி பட இயக்குநர் நீங்கள், இவ்வளவு நேரம் இருந்து விழாவை சிறப்பித்தற்கு நன்றி. நாம் இருவரும் தான் சுதனுடன் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தது. என்னை விட்டுவிட்டு நீ மட்டும் தப்பித்துவிட்டாய்.
நான் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன். நமக்கான ஒப்பந்தம் இருக்கிறது, மீண்டும் வரவேண்டும். சூரி அண்ணனுக்கு நன்றி. 30 ஆண்டுகள் கழித்துக் கூட ராதிகா – ஸ்ரீப்ரியா நட்பு மாதிரி நமது நட்பு இருக்க வேண்டும். இன்று நீங்கள் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறீர்கள்.
சினிமாவில் ஏதேனும் ஒரு ரோலில் நடித்து விட வேண்டும் என்று வந்தவன் நான். அப்படியே ஹீரோ வாய்ப்பு வந்தது. மக்கள் கைதட்டி வெற்றி நாயகன் என்று சொன்னவுடன், நான் நல்லாயிருப்பதை தாண்டி நண்பர்களுக்கு ஏதேனும் பண்ண வேண்டும் என தோன்றியது.
அப்படி நண்பன் அருண்ராஜா காமராஜ்க்காக ஆரம்பிக்கப்பட்டது தான் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ். பெண்கள் மிகவும் வலிமை மிக்கவர்கள் என்பதை சொல்ல வேண்டும் என உருவாக்கப்பட்டது தான் ’கனா’. உலகில் முதன்முதலாக பெண்கள் கிரிக்கெட்டை மையாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது.
யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் தாண்டிப் போகவோ, யாரையும் எதிர்க்கவோ, யாரையும் காலிப் பண்ணவோ நான் வரவில்லை. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதை செய்ய விடுங்கள் என்று தான் கேட்டுக் கொள்கிறேன். இதுவரை ரீமேக் படங்கள் செய்ததில்லை, கதை கேட்டு படங்கள் பண்ணுகிறேன்.
எனது படங்கள் வெற்றி, தோல்விக்கு நான் பொறுப்பு என நம்புகிறேன். மக்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகளை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார். அந்த தடைகளை நீக்கிவிட்டால் இன்னும் நான்கு சிவகுமார் முருகேசனை கூட்டிக் கொண்டு வருவேன்” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.
நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.
நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்
60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.
50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.
அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.
உதாரணம் 1: மனநிலை சரியில்லாதவர்களுக்கு வயதாவதில்லை. அவர்கள் தோற்றத்தில் பெரிதாக எந்த மாறுபாடும் இருக்காது என்ற உண்மை தெரியுமா? (இப்ப சொல்லுங்க, யார் மன நோயாளி என்று?)
2. சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப்பட்டுள்ளது.
எனவே நண்பர்களே,
1. நாம் குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.
2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.
3. டை அடியுங்கள் (முடி இருந்தால் ). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.
4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங் போகாதீர்கள். ஜாகிங் போங்கள்.
5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை).
6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending.
ஒரு வெற்றிகரமான மளிகை கடைக்காரர் இருந்தார் அவர் கடையில் எப்போதும் அமோக விற்பனை தான்.
சுமுகமாக வாழ்க்கை போய்கொண்டு இருந்தது .திடீரென அவர் கடைக்கு முன்னால் ஒரு பெரிய கட்டிடம் உருவாகத் தொடங்கியது .அங்கே ஒரு சூப்பர் மார்க்கெட் வரப்போவதாக தெரிவித்தார்கள். அது வந்தால் அவருடைய வியாபாரம் முற்றிலும் தடுத்துவிடும் .அவர் மிகவும் விரக்தி அடைந்தார் .
தன்னுடைய குருவிடம் சென்று மளிகை வியாபாரத்தைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது நான் இனி என்ன செய்வது என்றார்.
குரு அவரிடம் அந்த பல்பொருள் அங்காடியை நீ வெறுத்தால் அது உன் துன்பத்தில் முடியும் என்று குறிப்பிட்டார்.
அப்போது நான் என்ன செய்ய வேண்டும் .
தினமும் காலையில் கடைக்குள் நுழையும்போது உன் கடை வியாபாரம் செம்மையாக நடக்க வேண்டும் என்று வேண்டிகொள் எதிரே இருக்கும் பல்பொருள் அங்காடியும் சிறப்பாக நடக்க வேண்டும் என்று வாழ்த்து .
என்னுடைய போட்டியாளரை நான் வாழ்த்த வேண்டுமா ?
எந்த வாழ்த்தும் உன்னை வந்தடையும்... வெறுப்பு திரும்பி வந்து உன்னை அழிக்கும் என்று குரு முடித்துக்கொண்டார் .
ஓராண்டு கழித்து மளிகைக்கடைக்காரர் குருவைத் தேடி வந்து தன்னுடைய கடையை மூடிவிட்டதாக அறிவித்தார் அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா?
உண்மை என்னவெனில் அந்த பல்பொருள் அங்காடியை திறம்பட நிர்வகிக்க முடியாத காரணத்தால் விற்பனைக்கு வந்த போது அந்த மளிகை கடைக்காரர் அந்த சூப்பர் மார்க்கெட்டை விலைக்கு வாங்கிவிட்டார்.
இறைவன் மீது பாரத்தை தந்துவிட்டு நம் கடமையை தொடர்ந்து செய்கின்றபோது நமக்கு எந்த துன்பமும் வருவதில்லை. அப்படி வந்தாலும் இறுதியில் அது இன்பமாகவே முடியும்..!
ஒரு ஊரில் ஒரு குடியானவன். அவனுக்கு இரண்டு புதல்விகள்; ஒருவருக்கு உள்ளூரிலேயே திருமணம் முடிந்தது. மற்றொரு மகள், அயலூரிலுள்ள ஒரு சோழியனுக்கு வாக்குப்பாட்டாள். காலம் உருண்டோடியது. கிழக் குடியானவன் இறந்தான்; மூத்த மகளின் கணவனும் இறந்தான். அவளது தங்கையோ அடுத்த ஊரில் கணவனுடன் சுகமாக வாழ்ந்து வந்தாள் மூத்த மகளுக்கு சந்ததியும் இல்லை. ஆகையால் வயிற்றுப் பிழைப்புக்காக நிலத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தாள்.
தினமும் இரண்டு படி அரிசி சமைத்து உண்பாள்; அப்படியும் பசி தீராது. யாரிடமும் சொல்லவும் வெட்கம் ஆகையால் காரணத்தை அறியவில்லை. ஒரு நாள் அயலூரிலுள்ள அவளுடைய தங்கை, தன்னுடைய அக்காளைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்தாள். அக்காளும் வயல் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு மாலையில் பொழுது சாயும் முன் வீட்டிற்கு வந்தாள். அன்று தனது தங்கையும் பார்க்க வந்திருக்கிறாளே என்று கருதி, இரண்டரைப் படி அரிசியை எடுத்தாள் தங்கை சொன்னாள்,
"முதலில் விளக்கேற்றிவிட்டு சமை; இருட்டில் சமைக்கக்கூடாது மேலும் என் வீட்டில் நான் விளக்கு வெளிச்சத்தில் தான் சாப்பிடுவேன் " என்றாள்.
அடுத்ததாக, அவள் பகன்றாள், "இது என்ன இரண்டரைப் படி அரிசி, இதில் பத்துப் பன்னிரெண்டு பேர் சாப்பிடலாமே! உனக்கு என்ன பைத்தியாமா?"
இதற்கு அக்காள் மறு மொழி றுவன்றாள்.
இதோ பார் நான் தினமும் இரண்டு படி அரிசியில் சோறாக்குவேன்; நீ வேறு வந்திருக்கிறாய்; அதற்காக கூடுதல் அரைப்படி சேர்த்தேன் . என்னிடம் விளக்கிற்கு எண்ணெய் வாங்கும் அளவுக்கு காசு பணம் கிடையாது. நான் பாட்டுக்கு் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கி விடுவேன்."
தங்கை சொன்னாள், "எனக்கு சோறு கூட வேண்டாம்; விளக்கு இல்லாமல் ஒரு நிமிடம் கூட இரவுப் பொழுதைக் கழிக்க மாட்டேன். பூச்சி, பொட்டு, பாம்பு வந்தால் என்ன செய்வத? முதலில் கொஞ்சம் அரிசியைக் கொடுத்து யாரிடமாவது எண்ணெய் வாங்கி வா" என்றாள் அக்காளும் அரை மனதுடன் சென்று எண்ணெயுடன் திரும்பி வந்தால்; சாப்பிடத் துவங்கினர். கால் வாசி பானை சோறு கூடத் தீரவில்லை; இருவருக்கும் வயிறு நிறைந்தது.
தங்கை சொன்னாள், "பார்த்தாயா? நான் சொன்னேன்; நீ கேட்கவில்லை; இவ்வளவு சோறு மிச்சம்" அக்காள் சொன்னாள்,
இதோ பார், எனக்கே புரியவில்லை; தினமும் இரண்டு படி சோறு வடித்தும் என் வயிறு காயும்; இன்று என்னவோ கொஞ்சம் சாப்பிட்ட உடனே பசி போய்விட்டது; எல்லாம் நீ வந்த முஹூர்த்தம் போலும்" என்றாள்
அப்போது திடீரென்று ஒரு சப்தம்
“சொக்கா சொக்கா சோறுண்டோ?
சோழியன் வந்து கெடுத்தாண்டோ"
வா நாம் போவோம் - என்று.
உடனே அக்காள் கேட்டாள்,
'ஏய், யார் அங்கே? யார் சொக்கன்?"
அப்போது ஒரு குரல் ஒலித்தது,
"நான் தான் சொக்கன்; நான் ஒரு பேய்; நானும் எனது நண்பனான பேயும் விளக்கில்லாத வீட்டுக்குப் போய் சாப்பிடுவோம். இதனால் அந்த வீட்டில் அதிகமாக சமைப்பார்கள்; இன்று ஒரு சோழியன் அயலூரில் வந்து கெடுத்துவிட்டாள் என்று என் நட்புப் பேயிடம் செப்பினேன். நாங்கள் இருவரும் வேறு வீட்டுக்குப் போய் விடுகிறோம்.
இதக் கேட்ட அக்காளுக்கும் தங்கைக்கும் ஒரே ஆச்சர்யம், அதிசயம் அன்று முதல் அவள் அக்காள், வீட்டில் விளக்கு ஏற்றாமல் சமைப்பது இல்லை; எல்லோரும் சாப்பிடும் அளவு சோறுண்ட பின் அவள் வயிறும் நிறைந்தது; வாழ்வும் சிறந்தது.
இதுதான் "சொக்கா சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ"
நாம் எத்தனை தவறுகள் செய்தாலும் மன்னிப்பவர்…
நாம் சோர்ந்து விழும் போது முதலில் ஓடி வருபவர்…
நாம் சிரிக்க வேண்டும் என்பதற்காக தன் சோர்வையும் மறைப்பவர்…
அவர் தான் — அம்மா
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் நிதானம் வேண்டும். மருத்துவ செயல்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் இருக்கவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். இரக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். விளையாட்டு விஷயங்களில் திறமைகள் வெளிப்படும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் மேம்படும். உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். இடமாற்ற தொடர்பான முயற்சி கைகூடும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்கள் மீதான ஆர்வம் மேம்படும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். தனவரவுகளில் தாமதம் ஏற்படும். புதிய நண்பர்கள் மூலம் உற்சாகமடைவீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். திடீர் முடிவுகளை தவிர்க்கவும். கற்பனைகள் மூலம் சில குழப்பம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பணி புரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மறைமுகமான வியாபாரங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். முடிந்துபோன சில பிரச்சனைகள் மீண்டும் தொடரலாம். நண்பர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பயணங்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். பணி மற்றம் சிந்தனைகள் மேம்படும். சாதுரியமான செயல்பாடுகள் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய முடிவுகளில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
பூர்வீக சொத்துக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் லாபகரமான சூழல் காணப்படும். செல்வ சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
தனுசு
தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உயர்கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
எழுத்து தொடர்பான துறைகளில் புதிய அனுபவங்கள் உருவாகும். நெருக்கமானவர்கள் இடத்தில் சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கும். வேலை நிமிர்ந்துமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உழைப்பு உண்டான உயர்வுகள் தாமதகமாக கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். இழுபரியான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். முக்கியமான பொருள்களில் கவனத்துடன் இருக்கவும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மீனம்
உழைப்புக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். குண நலன்களில் மாற்றங்கள் உண்டாகும். மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் காணப்படும். புதிய முடிவுகளில் கவனம் வேண்டும். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விசுவாவசு வருடம் மாசி மாதம் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 24.2.2026
இன்று காலை 07.49 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று மாலை 03.47 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.
இன்று காலை 08.07 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.
இன்று காலை 07.49 வரை வணிசை. பின்னர் மாலை 05.59 வரை பத்தரை. பிறகு பவம்.
இன்று காலை 06.30 வரை மரணயோகம். பின்னர் மாலை 03.47 வரை சித்தயோகம். பின்பு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இனிய காலை வணக்கம்.
இறை பக்தியோடு இன்றைய நாளை ஆரம்பியுங்கள். அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள்.
மெக்ஸிக்கோவிற்கு பயணம் செய்யும் கனடியர்களுக்காக கனடா அரசு புதிய பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜாலிஸ்கோ மாநிலத்தில் நிலைமை “தீவிரமாகவும் வேகமாக மாறிக்கொண்டிருப்பதாக கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கவுடாலாஜாரா மற்றும் பியுட்ரோ வலார்டா பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த மாநிலத்தின் பல நகரங்களில் குற்றக் குழுக்கள் எரியும் வாகனங்களைப் பயன்படுத்தி சாலைகளை மறித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பியுட்ரோ வலார்டா நகரில் ‘வீட்டிலேயே தங்கும்’ (shelter-in-place) உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
டாக்ஸி மற்றும் ரைடு-ஷேர் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஜாலிஸ்கோ மாநிலத்தில் உள்ள கனடியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கனய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும், ஊடகங்கள் மூலம் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மற்றும் அவசியமில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, தற்போது 18,703 கனடியர்கள் மெக்ஸிக்கோவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவின் கிழக்கு ஒண்டாரியோவில் மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் எட்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மாலை 7.15 மணியளவில் Highway 401 நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய பாதையில், நபனீ (Napanee) நகரத்திற்கு கிழக்கில், கவுன்டி வீதி 4 மற்றும் கவுன்டி வீதி 6 இடையிலான பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சுமார் 50 பயணிகள் இருந்த ஒரு கோச் பேருந்து நெடுஞ்சாலையில் ஓரமாக கவிழ்ந்ததாக தகவல் கிடைத்ததாக ஒன்றாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை உயிருக்கு ஆபத்தான காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை,” என அவர் கூறியுள்ளார்.
அவசர சேவையினர் சம்பவ இடத்தில் இருந்து அனைத்து பயணிகளுக்கும் உதவி வழங்கியுள்ளனர். சுமார் எட்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் காயங்களின் தீவிரம் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் நேர்ந்த வேளையில் அந்தப் பகுதியில் சாலை வழுக்கலாக இருந்ததாக சமூக ஊடக பதிவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரத்துக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு விஷால் பதிலளித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தலைவராக ஜி.கே.எம் தமிழ்குமரன் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் ரஜினி, விஷால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாக்களித்துள்ளனர்.
விஷால் வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவரிடம் ”‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரத்துக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை” என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஷால், “ஒருவர் குரல் கொடுப்பது முக்கியமல்ல. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1519 பேரும் தணிக்கை அலுவலகத்தில் போய் நின்றால் என்ன நடக்கும். அது விரைவில் நடக்கும்.
அதற்காகவே தோற்பவர்களுடன் இணைந்து எப்போதும் பணிபுரியுங்கள் என்று சொல்வேன். அப்படிச் செய்தால் செழிப்பாக இருக்கலாம். ’ஜனநாயகன்’ வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டது, பின்பு நாங்கள் எப்படி அதில் தலையிட முடியும்.
ஒருவேளை கே.வி.என் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்திருந்தால் ஏதேனும் நடந்திருக்கலாம். அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் போது, எப்படி பேச முடியும்.
தணிக்கை அலுவலகத்தில் 5 பேர் அமர்ந்து கொண்டு, கோடிக்கணக்கில் மக்கள் என்ன பார்க்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. ஆனால், அது தான் விதிமுறை என்பதால் அதன்படி நடக்கிறோம்” என்று விஷால் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘ஜெய் ஹனுமான்’ படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘ஹனுமான்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் இந்திய அளவில் பேசப்படும் இயக்குநராக மாறினார் பிரசாந்த் வர்மா. அதற்குப் பிறகு பல்வேறு படங்கள் அறிவிக்கப்பட்டாலும், எதுவுமே தொடங்கப்படாமல் உள்ளது. இறுதியாக ரிஷப் ஷெட்டி நடிக்க ‘ஜெய் ஹனுமான்’ படப்பிடிப்பை படப்பூஜையுடன் தொடங்கியுள்ளார் பிரசாந்த் வர்மா.
டி-சீரிஸ் நிறுவனம் வழங்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் ‘ஜெய் ஹனுமான். ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. ’காந்தாரா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ரிஷப் ஷெட்டி நாயகனாக நடிக்கும் படம் இது. இதில் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த கட்டமாக இப்படம் உருவாகிறது. கடவுள் ஹனுமான் பிறந்த புனித தலமாக நம்பப்படும் கர்நாடக மாநிலம் ஹம்பி, விஜயநகரில் உள்ள அஞ்சனாத்ரி பெட்டா மலைப்பகுதியில் பூஜையுடன் படம் துவங்கப்பட்டது. டி-சீரிஸ் நிறுவனத் தலைவர் பூஷன் குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். அனில் ததானி கேமராவை இயக்க, முதல் ஷாட்டை ’ஹனுமான்’ படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜா இயக்கினார். மேலும், அனில் ததானி, பூஷன் குமார், நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் ஆகியோர் இணைந்து திரைக்கதையை இயக்குநர் பிரசாந்த் வர்மாவிடம் கொடுத்தனர். முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் குறையும். தொழிலில் புதிய கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
ரிஷபம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சாதுரியமான செயல்பாடுகள் மூலம் தடைகளை வெற்றி கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்புகள் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி உருவாகும். சுப காரியங்களில் இருந்த இடையூறுகள் விலகும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கடகம்
வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு புகழ் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
சிம்மம்
கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடத்தில் கோபப்படுவதை தவிர்க்கவும். பயனற்ற விவாதங்களைப் தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. திடீர் முடிவுகளை தவிர்க்கவும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பொது மக்கள் பணியில் ஆதாயம் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் பற்றிய விவரங்களை அறிவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
துலாம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான பயணம் கைகூடும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். கடந்த கால நிகழ்வுகளை எண்ணி மகிழ்ச்சி அடைவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். முயற்சிக்கு உண்டான ஊதியம் கிடைக்கும். புதிய பொறுப்புகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
எதிர்பார்த்த சில பணிகள் நடைபெறுவதில் தாமதம் உண்டாகும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகளும் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகரம்
மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சிறுதூர பயணம் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் பிறக்கும். தடைப்பட்டு போன சில காரியங்கள் திடீரென்று நடைபெறும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் கனிவு வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
சமூகப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செய்லபடவும். தம்பதிகளுக்குள் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். எதிர்காலம் குறித்த ஒருவிதமான குழப்பம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசுவாவசு வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி திங்கட்கிழமை 23.2.2026
இன்று காலை 10.08 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று மாலை 05.25 வரை பரணி. பின்னர் கிருத்திகை.
இன்று காலை 11.12 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.
இன்று காலை 10.08 வரை தைத்தூலம். பின்னர் இரவு 08.58 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று மாலை 05.25 சித்தயோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சமூகப் பணிகளில் கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த திருப்தியின்மை விலகும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
ரிஷபம்
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக திறமைகள் வெளிப்படும். பணி நிமித்தமான ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். வங்கிப் பணிகளில் இருந்த தடைகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிதுனம்
நிர்வாக சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழல் அமையும். நீண்ட தூர பயணம் வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மீக தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்புகள் மேம்படும். வாழ்க்கை துணைவரால் ஆதாயம் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம்
உறவினர்களுக்கு இடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பாடங்களில் ஆர்வமின்மை ஏற்படும். பயணத்தில் விவேகம் வேண்டும். கடன் செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். அரசு காரியங்களில் மாற்றம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சிம்மம்
புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நிர்வாக சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் திறமைகள் வெளிப்படும். வாக்கு வன்மை மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உலோக தொடர்பான பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
உறவினர்கள் வழியில் ஆதரவு ஏற்படும். கால்நடை பணிகளில் ஆர்வம் மேம்படும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வர்த்தக பணிகளில் லாபங்கள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
பூர்வீக சொத்துக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் லாபகரமான சூழல் காணப்படும். செல்வ சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விருச்சிகம்
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனை சார்ந்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். வியாபார ரீதியான சந்திப்புகள் பெரிய மாற்றத்தை உருவாக்கும். அரசு காரியத்தில் ஆதாயகரமான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பயணங்கள் வழியில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
புதுவிதமான பயணங்கள் மேற்கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கும்பம்
பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வர்த்தக வியாபாரம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அனுபவம் மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணிகளில் சில மாற்றமான தருணங்கள் அமையும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கல்வி செயல்களில் ஆர்வமின்மை உண்டாகும். கற்றல் திறனில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறைகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பூர்விக சொத்துக்கள் வழியில் சில விரயங்கள் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விசுவாவசு வருடம் மாசி மாதம் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 22.2.2026.
இன்று பிற்பகல் 12.17 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
இன்று மாலை 06.55 வரை அஸ்வினி. பின்னர் பரணி.
இன்று பிற்பகல் 02.10 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம்.
இன்று அதிகாலை 01.14 வரை பவம். பின்னர் பிற்பகல் 12.17 வரை பாலவம். பின்பு இரவு 11.12 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
07.30.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை



