Scan Mobiles-Apps

Scan to Download Google AppDownload Android AppScan to Download Apple App

Quote of the Day

பழமொழி

"படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்"

Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
Happy Pongal
  • 978
·
Added a post
ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர்.ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் .அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான்.இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாக திகழ்ந்தான் .ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் , கவனமும் செலுத்தினார்.சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னைவிட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை. பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான்.ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை.அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார்.நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையே கூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார்.மறுநாள் அவனை அழைத்தார். "மகனே! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் . பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப்படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் " என்றார் .கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்திவிட்டன.''இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரிவீட்டுக்கு விரைந்தான்.ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான்.ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார்.அவனும் ஆசிரியர் சொன்னபடியே,"அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும்கூட இவரது மாணவர்கள் உண்டு."அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி சூடாகி விட்டார். "ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா?" என்றார்.இந்த கேள்வி அவனை ஆத்திரமூட்டியது. "அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான்.ஆசாரி "அடேய் அறிவு கெட்டவனே ! என்னதான் படிச்சிருந்தாலும்,விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயர, அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார்.எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு."மனித அறிவு இவ்வளவுதானா ? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன் ? "அவமானம் பொங்கியது .கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான் .ஆசிரியர் சிரித்துக் கொண்டே கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி அடிச்சாச்சா?"அவன் பதில் சொன்னான். "அடிச்சாச்சு. என்னோட தலை கனத்துக்கு."ஆசிரியர் சொன்னார், "செல்லமே! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து பணிவுடன் நடப்பதே உண்மையான ஞானம்...
  • 15
  • 58
·
Added a post
·
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.நில அளவீடுகள்1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்1 சென்ட் – 435.6 சதுர அடி1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்1 குழி – 144 சதுர அடி1 சென்ட் – 3 குழி3 மா – 1 ஏக்க‍ர்3 குழி – 435.6 சதுர அடி1 மா – 100 குழி1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்ஏக்கர்1 ஏக்கர் – 100 சென்ட்1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்1 ஏக்கர் – 43560 ச.அடி1 ஏக்கர் – 4046 ச மீசெண்ட்1 செண்ட் – 001 ஏக்கர்1 செண்ட் – 0040 ஹெக்டேர்1 செண்ட் – 0.405 ஏர்ஸ்1 செண்ட் – 435.54 ச.அடி1 செண்ட் – 40.46 ச மீஹெக்டேர்1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்1 ஹெக்டேர் – 247 செண்ட்1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி1 ஹெக்டேர் – 10,000 ச மீஏர்ஸ்1 ஏர் – 2.47 செண்ட்1 ஏர் – 100 ச.மீ1 ஏர் – 1076 ச.அடி100 குழி = ஒரு மா20 மா = ஒரு வேலி3.5 மா = ஒரு ஏக்கர்6.17 ஏக்கர் = ஒரு வேலி1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்நீட்டலளவை• 10 கோண் = 1 நுண்ணணு• 10 நுண்ணணு = 1 அணு• 8 அணு = 1 கதிர்த்துகள்• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு• 8 துசும்பு = 1 மயிர்நுனி• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு• 8 சிறு கடுகு = 1 எள்• 8 எள் = 1 நெல்• 8 நெல் = 1 விரல்• 12 விரல் = 1 சாண்• 2 சாண் = 1 முழம்• 4 முழம் = 1 பாகம்• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)• 4 காதம் = 1 யோசனை• வழியளவை• 8 தோரை(நெல்) = 1 விரல்• 12 விரல் = 1 சாண்• 2 சாண் = 1 முழம்• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்• 4 குரோசம் = 1 யோசனை• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)நிலவளவை குழிக்கணக்கு வருமாறு16 சாண் = 1 கோல்18 கோல் = 1 குழி100 குழி = 1 மா240 குழி = 1 பாடகம்கன்வெர்ஷன்1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்பிற அலகுகள்1ஏர் = 100 சதுர மீட்டர்1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்நில அளவை100 ச.மீ - 1 ஏர்ஸ்100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்1 ச.மீ - 10 .764 ச அடி2400 ச.அடி - 1 மனை24 மனை - 1 காணி1 காணி - 1 .32 ஏக்கர்144 ச.அங்குலம் - 1 சதுர அடி435 . 6 சதுர அடி - 1 சென்ட்1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்100 சென்ட் - 1 ஏக்கர்1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)100 சென்ட் = 4840 சதுர குழிகள்1 சென்ட் = 48.4 சதுர குழிகள்1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )1 ஏக்கர் = 43560 சதுர அடி
  • 66
  • 122
  • 146
  • 152
  • 186
  • 207
  • 212
·
Added a news
·
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்உந்துருளியில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
  • 238
·
Added a news
·
முச்சக்கர வண்டிகளில் சட்டப்பூர்வமாகப் பொருத்தப்பட்ட பாகங்களை அகற்றுவதைத் தடுப்பதற்கும், சட்டவிரோத மேலதிக பாகங்களை அகற்றுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபருக்கும், அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிகமாக உதிரிப்பாகங்களைப் பொருத்துவதற்கான சட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த சட்ட கட்டமைப்பை அனைத்து தரப்பினரும் பாதுகாக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினருக்கு மீண்டும் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.000
  • 254
·
Added a news
·
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.  இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 374 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 304 பேரும், காலி மாவட்டத்தில் 169 பேரும் பதிவாகியுள்ளனர். இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, கடந்த ஆண்டில் மாத்திரம் 49,877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், 24 மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.000
  • 256
·
Added a news
·
அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான டிக்டொக்(tiktok) பயனர்கள் இப்போது சீன செயலியான ரெட் நோட் (RedNote) நோக்கி திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்காவில் டிக்டொக்கின் செயல்பாடுகளை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், டிக்டொக் பயனர்கள் ரெட் நோட்டை அணுகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இருப்பினும், டிக்டொக் அமெரிக்காவில் அதன் செயல்பாடுகளை ஒருபோதும் அந்நாட்டுத் தொழிலதிபர்களுக்கு விற்காது என்று தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, டிக்டொக் பயனர்கள் சீன செயலியான ரெட் நோட் (RedNote) ​செயலியை நோக்கி திரும்புவதாகக் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் 170 மில்லியன் டிக்டொக் பயனர்களின் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 000
  • 256
·
Added a news
·
கொள்கலன் அனுமதி தாமதம் காரணமாக இலங்கைக்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.ஒருகொடவத்தை RCT முற்றத்தில் நேற்று கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து கலந்துரையாடினார்.இதன்போது, வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் பணியாற்ற சுங்க அதிகாரிகள் ஜனாதிபதியிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். குறித்த கலந்துரையாடலுக்குப் பிறகு தற்போது அனுமதி வழங்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், ஒருகுடவத்தை சுங்கப் பிரிவிற்கு அருகில் கப்பல் வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.எனவே, அனுமதி செயல்முறையை விரைவுபடுத்த, இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள அனைத்து முகவர் நிறுவனங்களும் 24 மணி நேர சேவையை வழங்க வேண்டும் என்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தீர்வு முகவர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
  • 257
  • 255
·
Added a news
·
நாட்டில் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.இதன்போது, மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும் பதினைந்தாயிரம் ரூபாய் உதவித்தொகையை பதினேழாயிரத்து ஐநூறு ரூபவாகவும், எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கும் குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஐயாயிரம் ரூபாய் வழங்கும் குடும்பங்களுகு அந்தத் தொகை மாறாமல் வழங்குவதற்கும் குழு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.மேலும், இவ்வாண்டு இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நலன்புரி கொடுப்பனவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது000
  • 260
·
Added a news
·
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பெறப்பட்ட மக்களின் கருத்துக்களை ஆராயும் பணிகள் இன்று (16) நிறைவடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)தெரிவித்துள்ளது.இதேநேரம் மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது2025 ஜனவரி மாதம்முதல் எதிர்வரும் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதிக்கு தற்போது நடைமுறையிலுள்ள மின் கட்டண நடைமுறையை அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல மின்சார சபை யோசளை முன்வைத்துள்ளது. இந்த யோசனை தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மக்கள் கருத்துக் கணிப்புகளை முன்னெடுக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.அந்தக் கருத்துக் கணிப்புகள் கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இதன்போது மின் கட்டணத்தை 20 முதல் 30 சதவீதத்தால் குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மின் கட்டணத்தை குறைப்பதா அல்லது தற்போது நடைமுறையிலுள்ள கட்டண முறையை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதா என்பது தொடர்பான தீர்மானத்தை நாளை அறிவிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 261
·
Added a news
·
நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு - கவுடாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சண்முகம் பொன்னம்மா (வயது 81) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.தனிமையில் வசித்து வந்த அவர் நுளம்புக்குப் பொச்சு மட்டையில் தீ வைத்தபோது அவரது சேலையில் தீ பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.இந்த மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தைப் புதைக்குமாறு உத்தரவிட்டார். இது தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 262
·
Added a news
·
தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது யாழ். பருத்தித்துறை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து பத்து நிமிடத்தில் வருகைதந்த குழுவால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுசம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் விரைந்துள்ளனர்அதேநேரம், கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.000
  • 263
·
Added a news
·
இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி குறித்து குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுவெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படுகிறதுஇதேவேளை இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, 2,000 ரூபா விலையில் இருந்த டிக்கெட்டுகள் வெளிநாட்டினருக்கு 16,000 ரூபா வரை மறுவிற்பனை செய்யப்பட்ட சம்பவங்களை எடுத்துரைத்தார்.கொழும்பு கோட்டை-கண்டி மற்றும் கொழும்பு கோட்டை-எல்ல ரயில் வழித்தடங்களுக்கும் இதே போன்ற வழக்குகள் பதிவாகியுள்ளன, அங்கு டிக்கெட்டுகள் அதிக விலைக்கு மறுவிற்பனை செய்யப்படுகின்றன என்று அவர் வெளிப்படுத்தினார்.ஜனவரி 15 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், இந்தப் பிரச்சினை தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.ஒவ்வொரு முறையும் ஒரு மாதத்திற்கு முன்பே இ-டிக்கெட்டுகள் வெளியிடப்படும்போது, ​​அவை சில நொடிகளில் விற்றுத் தீர்ந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.மேம்பட்ட கணினி நிபுணத்துவம் பெற்ற தனிநபர்கள் அல்லது குழுக்கள் இந்த நடவடிக்கையை திட்டமிட்டு நடத்தக்கூடும் என்று அமைச்சர் சந்தேகிக்கிறார்.மேலும் சுரண்டலைத் தடுக்க நிலைமையை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.அதிக விலைக்கு டிக்கெட்டுகளை வாங்கிய நபர்கள் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளை எளிதாக்க சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.இருப்பினும், டிக்கெட் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வர விரும்பாதபோது விசாரணைகளைத் தொடர்வதில் உள்ள சவாலை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது00
  • 266
  • 265
·
Added a news
·
ஒருநாள் சர்வதேச (ODI) போட்டிகளை அதிகரித்து, வரவிருக்கும் சுற்றுப் பயணத்துக்கான அட்டவணையில் திருத்தம் செய்யுமாறு கிரிக்கெட் அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் (SLC) கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முதலில் இலங்கைக்கு எதிராக ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்த அவுஸ்திரேலியா மேலதிக போட்டியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அனைத்து ஏற்பாடுகளும் உறுதி செய்யப்பட்டால், இந்த சுற்றுப்பயணத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் 02 ஒருநாள் போட்டிகளில் விளையாடும்.முந்தைய அட்டவணையின்படி, ஹம்பாந்தோட்டையில் ஒரு ஒருநாள் போட்டி மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டது.எவ்வாறெனினும், உரிய மாற்றங்கள் செய்யப்பட்டால், இரண்டு ஒருநாள் போட்டிகளும் கொழும்பில் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும்.இந்த விடயம் தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத போதிலும், இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் இரண்டு நாட்களில் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஒருநாள் போட்டிகளில் மாற்றங்கள் கோரப்பட்டாலும், டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் இல்லாமல் இருக்கும்.000
  • 270
·
Added a news
·
இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையானது இலங்கைக்கு மிக அவசியமானது. அரசாங்கம் இந்தியாவுடன் அந்த உடன்படிக்கையில் நிச்சயமாக கைச்சாத்திட வேண்டும். அது இரண்டு நாடுகளுக்கும் பாரிய பொருளாதார நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் என்று முன்னாள் அமைச்சர்  ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.எட்கா உடன்படிக்கை விவகாரம் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கின்றது. அண்மையில் இந்தியாவுக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது எட்கா உடன்படிக்கை தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் தெரிவித்திருந்தனர்.அந்த அடிப்படையில் விரைவில் இது தொடர்பான பேச்சுக்கள் விரிவாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், எட்கா உடன்படிக்கை தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களும் அரசியல் தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எட்கா உடன்படிக்கையானது 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்திலிருந்து பேசப்பட்டு வருகிறது.இது குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்வதின் ஊடாகவே இலங்கைக்கு பொருளாதார ரீதியில் அபிவிருத்தியை நோக்கி நகர முடியும். இலங்கைக்கு ஒரு சில நாடுகளுடன் மட்டுமே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை காணப்படுகிறது.பல வருடங்களுக்கு முன்னர் மிகவும் கீழ் மட்டத்தில் காணப்பட்ட வியட்நாம் இன்று பொருளாதார ரீதியாக பாரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதற்கு அந்த நாடு பல்வேறு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொண்டமையே முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே இலங்கையும் தயங்காமல் சர்வதேச நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்ள வேண்டும். அதில் சாதக பாதகத் தன்மை காணப்படும். அவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அவற்றை கைச்சாத்திட்டால் மட்டுமே பொருளாதார ரீதியாக இலங்கை முன்னேற முடியும் என்பது எங்களது நிலைப்பாடாகும் என்றார்.இதேவேளை எட்கா உடன்படிக்கை தொடர்பில் அண்மையில் ஊடகமொன்றுக்கு கருத்து கூறிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் அது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து கடந்த வாரம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பொதுஜன பெரமுனவின் எம்.பி. நாமல் ராஜபக்ஷ இந்த உடன்படிக்கை தொடர்பில் இரண்டு தரப்பிலும் பரந்துபட்ட ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். அது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நல்லது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் உடன்படிக்கை தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் எப்போது ஆரம்பமாகும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதே உண்மை என்றும்  000
  • 271
·
Added a news
·
இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.000
  • 274
·
Added a news
·
யாழில் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு என தெரிவித்து தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட தரப்பினரால், பாரிய பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த திருட்டு சம்பவத்தில், வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரும், வேம்படியை சேர்ந்த முதியவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது - வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07.01.2024 அன்று இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின்டி சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி அவரின் வங்கி கணக்கு இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வங்கி கணக்கில் உள்ள தொலைபேசி இலக்கம் என்பவற்றை பெற்று கடவுச்சொற்களையும் அவரின் அறியாமையை பயன்படுத்தி பெற்றுள்ளனர்.அதன் மூலம் கணக்கின் செயலியில் உள்நுழைந்து ரூபா 200 000 பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.இதே முறையில் 0774650187 என்னும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு குறித்த பிரதேசத்தின் வேம்படியை சேர்ந்த முதியவர் ஒருவரிடமும் நேற்றையதினம் 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் வங்கியில் முறையிட்ட பொழுதும், வங்கியின் கணக்கு ஒன்றிற்கு பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வங்கி கணக்கின் விபரம் தமது செயலியில் காட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.குறித்த பெண் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முதியவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
  • 275
·
Added a news
·
தைப்பொங்கல் கொண்டாடுவதற்குக் கூட பச்சை அரிசி இல்லாமள் போனதற்கு, கடந்த அரசாங்கம் மக்களுக்கு இலவச அரசி வழங்கியமையே காரணம் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். அரசாங்கத்தின் இத்தகைய அறிவிப்பானது அடிப்படையற்றதும் இயலாமையை மறைக்கும் செயல் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.. இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், 46 இலட்சம் மெட்ரிக் டொன் நெல் கடந்த சில வருடங்களாகவே அறுவடையாகக் கிடைக்கப்பெற்றது. இதிலிருந்து 29 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. எமது நாட்டின் அரிசி உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு பச்சை அரிசியாகும். தென் மாகாண நெல் உற்பத்தியில் 85 வீதம் பச்சை அரிசியாகும். இதனடிப்படையில் சுமார் 7 இலட்சம் டொன் பச்சை அரிசி உற்பத்தி செய்யப்பட்டது.இரண்டு சந்தர்ப்பங்களில் 20 கிலோ அரிசி நாட்டில் 27 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அதாவது 54,000 மெட்ரிக் டொன் அரிசி இதன் போது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இவ்வாறு வழங்கப்பட்டது போக 75 வீதமான வெள்ளை பச்சை அரிசி எஞ்சியிருந்தது. எனவே மக்களுக்கு இலவசமாகக் கடந்த அரசாங்கம் அரிசி வழங்கியதாகக் கூறினாலும், அது தேசிய அரிசி உற்பத்தியில் வெறும் 14 வீதமாகும். எமது நாட்டில் அரிசி பயன்பாட்டில் 22 வீதம் சிவப்பு பச்சை அரிசியும், 18 வீதம் வெள்ளை பச்சை அரிசியாகவும் காணப்படுகிறது. 10 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி உற்பத்தியிலிருந்து 54 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை ஏழை மக்களுக்கு வழங்கியதற்காக நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. மக்களுக்கு உணவளிக்கும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அரசாங்கம் போலி பிரசாரங்களைச் செய்கிறது என குறிப்பிட்டார்.000
  • 279
  • 275