Sign up
உடல்நிலை சரியில்லாத ஒரு காகம் எறும்புகளைத் தேடிச் செல்வது ஒரு மிகவும் தனித்துவமான மற்றும் ஆச்சரியமான இயற்கை நிகழ்வாகும்.ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். ஒரு காகத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் சமயத்தில், அது எறும்புகள் அதிகமாகக் காணப்படும் இடங்களுக்குத் தேடிச் செல்கிறது. அங்கு சென்றவுடன், அது எறும்புக் கூட்டின் அருகில் மிகவும் அமைதியாக அமர்ந்து கொள்கிறது.அவ்வாறு அமர்ந்த காகம், தனது இறக்கைகளை முழுமையாக விரித்து நிலத்தில் படும்படி வைக்கிறது. அதன் உடல் அசைவற்று இருக்கும். இந்த வினோதமான காட்சியைப் பார்க்கும் எவருக்கும், காகம் ஏன் இப்படிச் செய்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழும். ஒரு வேளை காகம் களைப்படைந்துவிட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று யோசிக்கத் தோன்றும்.ஆனால், இதற்குப் பின்னால் ஒரு ஆச்சரியமான அறிவியல் உண்மை மறைந்திருக்கிறது.எறும்புகள் தங்களை ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும்போது அல்லது தாங்கள் தாக்கப்பட்டால் ஃபார்மிக் அமிலம் என்ற ஒரு வேதிப்பொருளைச் சுரக்கின்றன. இந்த அமிலம் ஒருவிதமான எரிச்சலை உண்டாக்கும் திரவம்.காகம் தனது இறக்கைகளை விரித்து அசையாமல் இருக்கும்போது, எறும்புகள் அதன் மீது ஊர்ந்து செல்கின்றன. அப்போது, காகம் எறும்புகளை லேசாகக் கொத்துவதன் மூலமோ அல்லது அசைவதன் மூலமோ அவற்றை எரிச்சலடையச் செய்கிறது.எரிச்சலடைந்த எறும்புகள் தற்காப்புக்காக ஃபார்மிக் அமிலத்தை காகத்தின் உடலில் சுரக்கின்றன. இந்த ஃபார்மிக் அமிலம் ஒரு இயற்கையான கிருமி நாசினியாகவும், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படுகிறது. காகத்தின் இறகுகளிலும், தோலிலும் ஒட்டியிருக்கும் தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்றவற்றை இந்த அமிலம் திறம்பட அழிக்க உதவுகிறது.இதன் விளைவாக, உடல்நிலை சரியில்லாத காகம் எந்தவிதமான மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இயற்கையாகவே தனது உடலில் உள்ள தொற்றுகளில் இருந்து விடுபட்டு உடல்நலத்தை மீட்டெடுக்க முடிகிறது. இந்த செயல்முறை காகத்திற்கு ஒரு இயற்கையான சுத்திகரிப்பு முறையாகவும் அமைகிறது.இந்த வினோதமான நடத்தை பறவை ஆய்வாளர்களால் "ஆன்ட்டிங்" என்று குறிப்பிடப்படுகிறது. காகங்கள் மட்டுமல்லாமல், குருவி, கரிச்சான், மற்றும் சில வல்லூறு வகைகள் உட்பட பல்வேறு வகையான பறவை இனங்களிலும் இந்த நடத்தையை அவதானிக்க முடிந்துள்ளது. ஒவ்வொரு பறவையும் தங்களுக்கு ஏற்ற வகையில் இந்த "ஆன்ட்டிங்" முறையைப் பயன்படுத்துகின்றன.சில பறவைகள் எறும்புகளை தங்கள் இறக்கைகளுக்குள் வைத்துத் தேய்த்துக் கொள்ளும், வேறு சில எறும்புக் கூட்டின் மீது படுத்துக்கொண்டு தங்கள் உடலை உராய்ந்து கொள்ளும்.விலங்குகள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு இயற்கையான முறையிலேயே தீர்வு காணும் இந்த அபூர்வமான திறன் மிகவும் ஆச்சரியமளிக்கிறது. எந்தவிதமான மருத்துவ அறிவும் இல்லாமல், தங்களை எப்படி குணப்படுத்திக் கொள்வது என்பதை அவை உள்ளுணர்வாகவே அறிந்திருப்பது வியக்கத்தக்கது.இது இயற்கையின் உள்ளார்ந்த ஞானத்தையும், ஒவ்வொரு உயிரினமும் இந்த உலகில் தப்பிப்பிழைக்கப் போராடும் விதத்தையும் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.ஆக, காகம் உடல்நிலை சரியில்லாதபோது எறும்புகளைத் தேடுவது என்பது ஒரு சாதாரணமான அல்லது தற்செயலான நிகழ்வு அல்ல. அது இயற்கையின் ஒரு புத்திசாலித்தனமான ஏற்பாடு.இந்த "ஆன்ட்டிங்" நடத்தை விலங்குகளின் சுய மருத்துவத்திற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இயற்கையின் இந்த அமைதியான மற்றும் ஆழமான ஞானம் நம்மை எப்போதும் வியப்பில் ஆழ்த்துகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
அதிகாலையில் கண் விழித்த மன்னர் மகேந்திர பூபதிக்கு திடீரென ஒரு ஞானோதயம் வந்தது போல் இருந்தது.அநித்தியமான லெளகீக வாழ்க்கையை விட்டுவிட்டு நித்தியமான ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தால் என்ன என்கிற கேள்வி மூளைக்குள் மாறி மாறி ஒலிக்க ஆரம்பித்தது.மந்திரியை அழைத்தார். அந்த அதிகாலை வேளையிலும் மந்திரி மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்தார்.'மந்திரியாரே..! இந்த சுகபோக வாழ்வை அனுபவித்து அனுபவித்து சலித்து விட்டது. இந்த வாழ்வெல்லாம் மாயை என்கிற எண்ணம் எனக்குள் மேலோங்கி நிற்கிறது.அதனால் துறவறம் பூண்டு மனதிற்கு அமைதி தரும் ஆன்மீக வாழ்வை மேற்கொள்ளப் போகிறேன்.பட்டத்து இளவரசனான எனது மகனின் முடிசூட்டு விழாவிற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்'அதிர்ந்து போனார் மந்திரி.தங்கத்தில் கூட குறை இருக்கலாம். ஆனால் மன்னர் மகேந்திர பூபதி ஆட்சியில் சிறிது கூட என்பதே யாராலும் சொல்ல இயலாது.மக்கள் பசியால் வாடியது இல்லை. கொலை, கொள்ளை, களவு கிடையாது. உயிரை காவு வாங்கக்கூடிய பெருந் தொற்று நோய்கள் எதுவும் இல்லை. மொத்தத்தில் சொர்க்கம் என்றால் என்ன என்பதை மன்னர் மகேந்திர பூபதி ஆட்சியில் மக்கள் இந்த மண்ணிலேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர் துறவறம் பூண்டால் மக்களின் கதி..?ஆனாலும் மன்னரை எதிர்க்க முடியாமல் அவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து மன்னரின் முடிவை மக்களுக்கு அறிவித்துவிட்டு இளவரசரின் முடிசூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தார்.முடிசூட்டு விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.மக்களிடம் மன்னர் பேசினார்,'என் உயிரினிய மக்களே..! என்பால் என்ன அன்பு வைத்திருந்தீர்களோ அதை அன்பை என் மகன் மீதும் நீங்கள் வைக்க வேண்டும்.நல்ல மரமானது கெட்ட கனி தராது என்பதால் என்னுடைய ஆட்சியிலும் மேலான நல்ஆட்சியை என் வாரிசான என் மகன் தருவான்.நான் துறவறம் பூண்டு நமது அண்டை நாட்டு எல்லைக்குள் இருக்கும் முனிவரின் ஆசிரமம் சென்று என் வாழ்நாளை கழிக்கப் போகிறேன்.என்னை தடுக்காமல் விடை கொடுங்கள்'மக்கள் கண்ணீரோடு சம்மதம் தெரிவித்தார்கள்.மன்னர் முனிவரை சந்தித்தார். சிறிது நேரம் கண்களை மூடி தியானித்த முனிவர் மன்னனிடம் சொன்னார்,'மன்னா..! ஒரு மனிதனின் வாழ்வை விதி நிர்ணயிக்கிறது. அந்த விதியை முன் ஜென்மங்களில் அவன் செய்த பாவ புண்ணியங்கள் நிர்ணயம் செய்கின்றன.அந்த வகையில் நீ மிகப் பெரிய புண்ணியவான். இந்த பிறவி முழுவதும் லெளகீக வாழ்க்கையில் அனைத்து சுகபோகங்களையும் நீ அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அது மாறாது.அதனால் துறவறம் பூணும் எண்ணத்தை கைவிட்டு விட்டு மீண்டும் நாட்டிற்கு சென்று உன் மகனுக்கு உறுதுணையாக இருந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கு'முனிவரின் கோரிக்கையை மன்னர் ஏற்கவில்லை. துறவறம் பூண்டு முனிவரின் சீடனாக வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்கிற முடிவில் இருந்து ஒரு சிறிதும் மாறவில்லை. மீண்டும் நாட்டிற்கு திரும்பிச் செல்ல மறுத்தான்.சிறிது நேரம் மௌனம் சாதித்த முனிவர் மன்னனிடம் பேசினார்,'மன்னா..! என்னிடம் சீடனாக இருக்க வேண்டும் என்றால் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.அதாவது நீயாக யாரிடமும் சென்று எதையும் கேட்கக் கூடாது. அது உணவாக இருந்தாலும் கூட.அதே நேரத்தில் பிறர் உன்னிடம் ஏதாவது கொடுத்தால் அதை வாங்க மறுக்கக்கூடாது. அது எதுவாக இருந்தாலும் சரி.இதற்கு சம்மதம் என்றால் வரும் பௌர்ணமி நாள் அன்று துறவறம் பூண்டு என்னிடம் வா'மன்னன் மகிழ்ச்சி தாண்டவம் ஆடினான். தன்னுடைய நாட்டிற்கு திரும்பி அனைவரிடமும் தன்னை முனிவர் சீடராக ஏற்றுக்கொண்ட விஷயத்தை சொன்னான்.முனிவர் சொன்ன பௌர்ணமி வந்தது. மன்னன் மரவுரி தரித்து அரண்மனையில் இருந்து வெளியே வந்தான்.வாசலில் மன்னன் பயணம் செய்ய யானை ஒன்று தயாராக இருந்தது. அருகிலேயே ஒரு மாட்டு வண்டியில் மன்னருக்கு தேவையான உணவு பதார்த்தங்கள் இருந்தன. கூடவே அவருக்கு சேவை செய்ய பத்து வேலையாட்களும் இருந்தனர்.துறவறம் பூண்டவனுக்கு இதெல்லாம் எதற்கு என அவன் கேள்வி கேட்க நினைத்த வேளையில் முனிவர் சொன்னது நினைவிற்கு வந்தது,'பிறர் உன்னிடம் ஏதாவது கொடுத்தால் அதை வாங்க மறுக்கக்கூடாது. அது எதுவாக இருந்தாலும் சரி'அதனால் அவைகளை பெற்றுக் கொண்டு முனிவரின் குடிலுக்கு வந்து சேர்ந்தான்.தொடர்ந்து நாட்டில் இருந்து மன்னனுக்கு அறுசுவை உணவுகள் வந்து கொண்டே இருந்தன. வேலையாட்கள் அவனுக்கு சேவை செய்து கொண்டே இருந்தனர். முனிவரோடு எங்கு சென்றாலும் யானை மீது அமர்ந்தே பயணம் செய்தான்.அதனால் முனிவரின் மற்ற சீடர்களுக்கு முனிவர் மீதும் மன்னன் மீதும் பொறாமையும் கோபமும் வந்தது. மதிய வேளையில் யாசகம் தேடி அண்டை நகருக்கு கடும் பாறைகள் மீது நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் சீடர்கள் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்,'நம்முடைய குருவும் ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடு பார்க்கத்தான் செய்கிறார். இந்த வேகாத வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் நாம் துடிக்க துடிக்க நடந்து கொண்டிருக்கிறோம்.மன்னர் யானை மீது அமர்ந்து அறுசுவை உணவை உண்டு கொண்டு சௌகரியமாக வருகிறார். கேட்டால் இதெல்லாம் விதி என நமது குரு மழுப்புகிறார்.எங்கே ஆள் அரவமற்ற இந்த காட்டுப் பாதையில் யானையையும், அறுசுவை உணவையும், ஏவலாட்களையும் அனுப்பிவிட்டு நாம் யாசகம் கேட்டு திரும்பி வரும் வரை மன்னனை இந்த பாறையில் வெறும் காலோடு குரு நிற்கச் சொல்லட்டும்.உண்மையிலேயே லௌகீக வாழ்க்கையை அவன் அனுபவிக்க வேண்டும் என்கின்ற விதி இருந்தால் அவனுக்கு எப்படி கடவுள் கருணை காட்டி இந்த கஷ்டத்திலிருந்து காப்பாற்றுகிறார் என பார்ப்போம்.இந்த சவாலை நம் குருவிடம் சொன்னால் அவர் ஏற்க தயாராக இருக்கிறாரா?'குருவிற்கு சீடர்களின் எண்ண ஓட்டங்கள் தெளிவாக புரிந்தது. மன்னனை யானையிலிருந்து கீழே இறங்கச் சொன்னார்.'மன்னா..! உன் மகன் அனுப்பி வைத்த யானை, அறுசுவை உணவை சுமந்து வரும் வண்டி, உன்னுடைய வேலை ஆட்கள் அனைவரையும் நாட்டிற்கு திருப்பி அனுப்பு.நாங்கள் பக்கத்து நகருக்கு சென்று யாசகம் பெற்று வரும் வரை இந்த பாறையில் அசையாமல் நில்'குருவின் உத்தரவை வேதவாக்காக ஏற்ற மன்னன் அனைத்தையும் அனுப்பிவிட்டு வெறும் காலோடு பாறையில் நின்றான்.குரு தன் சிடர்களோடு அருகில் இருந்த வளைவு பாதையில் வலது பக்கம் திரும்பி மறைந்து போனார்.இரவு வேளையில் யாசகம் பெறச் சென்றவர்கள் திரும்பினர்.சீடர்களுல் ஒருவன் மற்றவனை பார்த்து சொன்னான்,'வெயிலும் பசியும் தாங்க மாட்டாமல் மன்னன் மயங்கி கீழே விழுந்து இருப்பான். எல்லாம் விதி என தம்பட்டம் அடித்து கொண்டிருக்கும் நம் குருவின் அலங்காரமும், பணக்காரன் ஏழை என பாகுபாடு பார்க்கும் அவரின் ஒரவஞ்சனை புத்தியும் அடியோடு அழிந்து விடும்'சிரித்து பேசிக் கொண்டே மன்னன் நின்றிருந்த வளைவில் திரும்பியவர்களுக்கு பகீர் என்றிருந்தது.மன்னன் வழக்கம்போல் யானையின் மேல் அமர்ந்து அறுசுவை உணவை உண்டு கொண்டிருந்தான். யானை பக்கத்தில் அவனுக்கு தேவையான அறுசுவை உணவுகளை தாங்கி வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. முன்பு போல் பத்து வேலையாட்கள் அவனுக்கு ஏவல் வேலை செய்யக் காத்துக் கொண்டிருந்தனர்.சீடர்கள் கோரசாக கத்தினார்கள்,'குருவே இவன் ஒரு மோசடி பேர்வழி. நீங்கள் உத்தரவிட்ட பிறகும் உங்கள் முன்பு யானையையும், அறுசுவை உணவு வண்டியையும், ஏவாள்களையும் அனுப்புவது போல் அனுப்பி விட்டு நம் தலை மறைந்ததும் அவைகளை எல்லாம் மீண்டும் வரச் சொல்லி சுகபோக வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.இவனை நீங்கள் ஆசிரமத்தில் இருந்து துரத்தி விடுவதோடு கடுமையான தண்டனையையும் வழங்குங்கள்'குரு மனதிற்குள் சிரித்தபடி சீடர்களிடம் பேசினார்,'சற்று பொறுங்கள்! என்ன நடந்தது என மன்னனிடமே கேட்போம்'மன்னனை நோக்கி குரு கேட்டார்,'மன்னா என்ன இது..! என் கண் முன்பாக நீ நாட்டிற்கு திருப்பி அனுப்பியவைகள் எல்லாம் மீண்டும் இருக்கின்றனவே. என் சொல்லிற்கு நீ மதிப்பளிக்கவில்லையா?'மன்னன் பதறிப் போய் பதில் சொன்னான்,'குருவே! உங்கள் உத்தரவை சிரமேற்கொண்டு நான் யானை, அறுசுவை உணவு வண்டி, வேலை ஆட்களை என் நாட்டிற்கு அனுப்பி விட்டேன்.நீங்கள் சொன்னது போல் வெறும் காலுடன் சுடு பாறையில் நின்று கொண்டிருந்தேன்.வளைவு பாதையில் நீங்கள் வலப்பக்கமாக திரும்பினீர்கள். அடுத்த நொடியில் அதே வளைவு பாதையில் இடப்பக்கத்தில் இருந்து வேட்டைக்கு சென்று இருந்த என் நேச நாட்டு அரச நண்பன் படை பரிவாரங்களுடன் வந்தான்.என்னைப் பார்த்ததும்,'நண்பா..! நீயா இந்த கோலத்தில் இருக்கிறாய்? உன்னை ஒரு பரதேசியாக பார்க்க என் மனம் ஒப்பவில்லை. அதனால் நான் அமர்ந்து வந்த யானை, எனக்காக கொண்டுவந்த அறுசுவை உணவு வண்டி, எனக்கு சேவை செய்ய அழைத்து வந்த வேலையாட்களை உனக்குத் தருகிறேன். பெற்றுக்கொள்' என்றான்.'பிறர் உன்னிடம் ஏதாவது கொடுத்தால் அதை வாங்க மறுக்கக்கூடாது. அது எதுவாக இருந்தாலும் சரி' என நீங்கள் சொன்ன வார்த்தைகள் என் செவிக்குள் ஒலித்தன.அதனால் மறுப்பேதும் சொல்லாமல் அவைகளை வாங்கிக் கொண்டேன். என் மீது எந்த தவறும் இல்லை குருவே'மன்னரிடம் குரு பேசினார்,'மன்னா நடந்தவைகள் எல்லாம் எனக்கு ஞானதிருஷ்டியில் தெரியும். என்னோடு வந்த சீடர்கள் உன்னையும், என்னையும் தவறாக பேசியதாலயே உன் வாய் வழியாக இந்த உண்மைகளை வாங்கினேன்.நான் சொன்னது போல் இந்த பிறவியில் நீ லெளகீக சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அந்த விதியை மீறி உன்னால் மட்டும் அல்ல; யாராலும் செயல்பட முடியாது.அதனால் நடப்பவைகள் எல்லாம் இறைவனின் கட்டளைகள் என சிரமேற்கொண்டு உன் வாழ்வை இறைவனின் விருப்பப்படியே நகர்த்து.துறவரத்தில் மட்டும்தான் இறைவனை காணலாம் என்பது தவறு. மக்களுக்கு நீ செய்யும் ஒவ்வொரு சேவையிலும் இறைவன் இருக்கிறான்.அதனால் நீ நாட்டிற்குச் சென்று மீண்டும் அரச உடை தரித்து மக்களுக்கான சேவை செய். அதுதான் உன் விதி'மன்னனுக்கு வாழ்க்கை புரிந்தது. குருவிற்கு நன்றி சொல்லி நாட்டிற்கு கிளம்பினான்.குரு சீடர்களை பார்த்து கேட்டார்,'என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மன்னன் கிளம்பி போய் விட்டான். என் மீது நம்பிக்கை வைக்காமல், இறைவனை நினைக்காமல், எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்கின்ற உண்மை புரியாமல் சதாகாலமும் பொறாமை எண்ணத்தோடு திரியும் நீங்கள் எப்போது என்னை விட்டு போகப் போகிறீர்கள்?'சீடர்கள் தலை குனிந்து நின்றார்கள். குரு பேச்சை தொடர்ந்தார்,'என்னை விட்டு நீங்கள் செல்லுங்கள் என நான் சொல்வது கூட ஒரு வகையில் ஆணவம் தான். அதனால் நான் தூய்மை அடைய வேண்டுமென்றால் தீமைகளை தோளில் தூக்கிக் கொண்டு திரியும் உங்களை விட்டு நான் தான் செல்ல வேண்டும்'குரு அவர்களை விட்டு விலகிச் சென்று அவர்களின் கண் பார்வையில் இருந்து மறைந்தே போனார்.சீடர்களில் ஒருவன் வேதனை பட்டுக்கொண்டே சொன்னான்,'குரு அடிக்கடி சொல்வது போல் எல்லாம் விதி தான் என்றால் இதையும் நமது விதி என இனியாவது ஏற்றுக் கொள்வோம்.குரு இருந்த பொழுது வராத ஞானம் குரு மறைந்த பிறகு நமக்கு வந்திருக்கிறது'
பெரிதாக தெரிந்ததே தவிர குதிரை பற்றி பெரிதாக தெரியவில்லை.குதிரையை வைத்து இவ்வளவு காலமும் உழைத்த அவன், இதன் பிறகு இந்தக் குதிரையால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என நினைத்து அதனை கைவிட்டு விட்டான்.குதிரை மிகவும் பலவீனமான நிலையில் வாழ்வுக்கும் சாவுக்கும் மத்தியில் தேடுவாரற்றுக் கிடந்தது. குதிரைக் கொட்டில் ஒன்றுக்கு சொந்தக்காரனாக இருக்கும், குதிரை பற்றி நன்கு தெரிந்த ஒருவன் அக்குதிரையைப் பார்த்துவிட்டு தனது இடத்துக்கு எடுத்துச் சென்றான்.குதிரையை கொண்டு சென்றவன் அதற்கு வைத்தியம் செய்து நன்றாக பராமரிக்க ஆரம்பித்தான்.குதிரையும் அதனது பழைய நிலைக்கத் திரும்ப ஆரம்பித்தபோது தான் அது மிகவும் விலை கூடிய, அரிதான இனத்தைச் சேர்ந்த குதிரை என்பது தெரிந்தது.இதன் விலை சுமார் மூன்று இலட்சம் டொலர்களாகும்.தவறான இடத்தில் இருந்தமையால், குதிரையின் மதிப்புத் தெரியாமல் போனது.நீங்களும் இப்படித்தான்.தவறான இடத்தில், ஒருபோதும் நீங்கள் மதிக்கப்பட மாட்டீர்கள்.இந்த குதிரை தூக்கி எறியப்பட்டது போல் ஒரு நாள் நீங்களும் தூக்கி எறியப்படலாம்.உங்களை மதித்து நடப்போருடன் இருந்து கொள்ளுங்கள். உங்களை அரவணைப்போரை நீங்களும் அரவணைத்து நடந்து கொள்ளுங்கள்.உங்களுக்குரிய மரியாதை கிடைக்காத இடத்தை விட்டும் நகர்ந்து செல்லுங்கள். அதுவே உங்களுக்கு மரியாதை.
எந்த ஒரு வேலையையும் கடனே என்று செய்யக் கூடாது. அதை இரசித்து நிதானமாக முழு கவனத்தையும் வைத்து செய்வது அவசியம்.ஒரு வேலை செய்யும்போது அதை மட்டுமே செய்ய வேண்டும். இன்னொன்றையோ அல்லது இன்னும் இரண்டு மூன்று வேலைகளையோ சேர்த்து செய்யும்போது கவனம் சிதறும். செய்யும் வேலையில் அக்கறை இல்லாமல் போகும்.எனவே, ஒரே ஒரு வேலையை மிகுந்த கவனத்துடன் செய்யும்போது அதை ரசித்து ஈடுபாட்டுடன் செய்யலாம்.
மனித முகத்தில் மண்டை ஓட்டின் அதாவது கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது, மருத்துவம். இந்த தொண்டையை மேலும் மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள். அவை: முகத்தோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை, குரல் வளையோடு இணைந்த தொண்டை.வாயிலிருந்து உணவுக் குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல் மூக்கிலிருந்து சுவாசக்குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராசிங் போன்றது.சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக்கொண்டால் உணவுப் பாதைதான் ரெயில்வே பாதை. சாலை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க் கொண்டிருக்கும். உணவுப் பாதையில் உணவு வரும்போது அதாவது நாம் சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக் கொள்ளும். உணவு போனதும் மீண்டும் திறந்து கொள்ளும்.இதில் எதற்கு கதவு போன்ற அமைப்பு என்றால் உணவுக் குழாய்க்குள் காற்றோ, சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருளோ போய்விடக்கூடாது என்பதற்காகத்தான். பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது சுவாசக் குழாய் திறக்கும்.சுவாசக் குழாய் திறந்தால்தான் பேசமுடியும். இப்படி திறக்கும் சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருள் தவறாக நுழைந்து விடும். இதை வெளியேற்றும் முயற்சியில் சுவாசக் குழாய் உள்ளே நுழைந்த உணவை வெளியே தள்ளும். இதைத்தான் புரை ஏறுதல் என்கிறார்கள். மருத்துவத்துறையில் இதை ‘வாட்ச் டாக் மெக்கானிசம்‘ என்று கூறுகிறார்கள்.சிலருக்கு தூங்கும் போது புரையேறும். அசந்து தூங்கும் போது அவரையும் அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக் குழாய்க்குள் நுழைந்து விடும். அதற்கு அதிகாலை எழுதல்,தியானம், யோகா,உடற்பயிற்சிகள் செய்தல்,வழிபாடு பிரார்த்தனைகள் இவைகள்தான் உதவும்....இப்படி உணவுபாதையையும், சுவாசப் பாதையையும் நமது முன்னோல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து தெளிவு பெற்றதால்தான், சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட சொன்னார்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கடன் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையாட்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பாராட்டு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் ரிஷபம்விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் மேம்படும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் மிதுனம்நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சமூக வாழ்க்கையில் மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். கூட்டு முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பற்கள் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பிடித்த சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை கடகம்கலைப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை சிம்மம்நண்பர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் தெளிவு ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவதில் பொறுமை வேண்டும். பயம் மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கன்னிபலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். நிறை, குறைகளை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரம் தொடர்பான பணிகள் மந்தமாக நடைபெறும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் விவேகத்தோடு செயல்படவும். அசதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு துலாம்வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தான, தர்மங்களில் மனம் ஈடுபடும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். சலனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை விருச்சிகம்உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். தம்பதிகளுக்குள் சில புரிதல்கள் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். துணிவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் தனுசுவெளியூர் பயணங்கள் கைகூடும். எழுத்துத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் சிந்தித்து செயல்படவும். சேவை துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மகரம்பேச்சுக்களின் அனுபவம் வெளிப்படும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்பங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். கற்பனை தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் வழியில் அனுசரித்து செல்லவும். சோதனைகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கும்பம்செயல்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் மூலம் வருமானத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்கள் கைகூடும். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மீனம்மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தொழில் நிமிர்த்தமான புதிய வியூகங்களை அமைப்பீர்கள். ஞாபக மறதி சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார்.அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானார். ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திஸ்ஸ லியன்சூரியவின் “புஞ்சி பபா” என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.2010 ஆம் ஆண்டில், ஆசியாவின் 25 சிறந்த திரைப்பட நடிகர்களில் ஒருவராக சி.என்.என் ஊடகத்தால் பெயரிடப்பட்டார்.1978 ஆம் ஆண்டு பைலட் பிரேம்நாத் தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார்.அத்துடன் யார் அவள் (1976), மல்லிகை மோகினி (1979), பனி மலர் (1981) ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.ஏப்ரல் 2010 இல், மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.000
யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் தமது சொந்த விருப்பத்துக்கமையவே அவரது பெற்றோருடன் சென்றதாக பொலிசாரிடம் அறிவித்துள்ளார். மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு ஒன்றில் பிரசன்னமாகி, நீதிமன்றிலிருந்து வெளியேறியிருந்த குறித்த பெண் குழுவொன்றினால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தப் பெண் கடத்தப்படும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியிருந்த நிலையில், அதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பளை பொலிசார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், குறித்த யுவதி தமது சுய விருப்பத்துக்கமையவே தமது பெற்றோருடன் சென்றமை தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து,முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்துள்ளனர்குறித்த விபத்துச் சம்பவம் தொபட்ர்பில் மேலும் தெரியவருவது -இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், பேருந்தில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவரது சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது000
யாழில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய இராமசாமி சிறிகாந்தன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் குறித்த குடும்பஸ்தர் நேற்றையதினம் பழைய பொலிஸ் நிலைய வீதி, சுன்னாகம் பகுதியில் பூவரசு மரத்தின் தடியை வெட்டியுள்ளார். இதன்போது அந்த தடி மின் கம்பியில் விழுந்தது. இந்நிலையில் அவர் மீது மின்சாரம் கடுமையாக தாக்கியதால் நிலத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின்னர் அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.000
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதிமுதல் 21 ஆம் திகதி வரை காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன், அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும் 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த அவர், இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,167 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவற்றில், 16 சதங்களும் 45 அரைசதங்களும் அடங்குகின்றன அத்துடன், 118 டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசியுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் 33 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% வரி விதிக்க பரிந்துரைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.அடுத்த மாதம் முதலாம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த புதிய வரி விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை, அமெரிக்காவில் தயாரிக்கப்படாத ஐபோன்களுக்கு குறைந்தபட்சம் 25% இறக்குமதி வரி விதிக்கப்போவதாகவும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு நாடுகளிலோ உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுமாயின் மாத்திரம் வரி விதிக்கப்படும் என அறிவித்த ட்ரம்ப் ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்கி வருகிறது.2025 ஆண்டு மார்ச் மாதம் வரை, இந்தியாவில் 22 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டன, இது கடந்த ஆண்டை விட 60% அதிகரிப்பாகும்.ட்ரம்ப் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் மீது பல்வேறு வரிகளை விதித்துள்ளார். அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பானது பல உலகத் தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது000
சட்டவிரோதமான முறையில் அரச காணிகளை அபகரிக்க முயன்ற அரச ஆதரவாளர் கும்பலோன்றை தடுக்க முற்பட்ட அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுளன்ளது.குறிப்பாக அரச அதிகாரிகளை தாக்க முற்பட்டவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர் தலைமையிலான குண்டர் குழுவென தெரியவந்துள்ளது.பூநகரி முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியை அண்மித்து மன்னார் - யாழ்ப்பாணம் வீதியோரமாக நேற்றுமுன்தினமிரவு முதல் தடாலடியாக அரச காணிகளில் கடைகள் சில முளைத்துள்ளன. குறிப்பாக நிரந்தரமாக இரும்பினால் ஒட்டப்பட்டதும் தகரங்களால் வேயப்பட்டதுமானதாக அக்கடைகள் இருந்துள்ளன.பொதுப் போக்குவரத்திற்கு அபாயத்தை தரக்கூடியதும் அனுமதியற்றதுமான கட்டுமானங்களை தயவு தாட்சணியமின்றி அகற்ற வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ள நிலையில் அவை தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடுகள் பூநகரி பிரதேச சபைக்கு செய்யப்பட்டுள்ளது.அதனையடுத்து செயலாளர் மற்றும் வருமான வரிபரிசோதகர் நிலைய பொறுப்பதிகாரி சகிதம் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். உரிமை கோரப்படாத நிரந்தர தகரக் கொட்டகைக்கு பகிரங்கமாக அகற்றுவதற்கான எச்சரிக்கை அறிவித்தல்களை ஒட்டிய அதிகாரிகள் அருகாக தொடர்ந்து நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த மற்றைய வர்த்தக நிலையத்தினரிடம் அனுமதியை பெற்று வேலையை முன்னெடுக்க அறிவுறுத்தியிருந்தனர்..இந்நிலையில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் புகைப்படமெடுக்க முற்பட்டவர்களை தாக்க முற்பட்ட அங்கிருந்த கும்பலொன்று கைத்தொலைபேசியை பறிக்கவும் முற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை எச்சரித்த அதிகாரிகள் பொலிசாரிடம் முறையிட்டனர்.அதனையடுத்து சம்பவ இடத்திலிருந்தவர்களை பொலிஸ் நிலையத்திற்க அழைத்த பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததுடன் கைது செய்ய முற்பட்டிருந்தனர். எனினும் அதனை மறுதலித்த பிரதேச சபை செயலர் சட்டவிரோத கட்டுமாணங்களை முன்னெடுக்க வேண்டாமெனவும் உரிய அனுமதியை பெற்ற பின்னர் பணிகளை முன்னெடுக்கலாமெனவும் தெரிவித்து வெளியேறியதாக தெரியவருகின்றது.இந்நிலையில் அதிகாரிகளை தாக்க முற்பட்டவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர் தலைமையிலான குண்டர் குழுவென தெரியவந்துள்ளது. அதேவேளை சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்துவருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேசசெயலகம் சட்டநடவடிக்கைகளிற்கு தயாராவதாக பிரதேசசெயலர் தெரிவித்துள்ளார்.இது ஒருபுறம் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குண்டர்களால் எடுக்கப்பட்ட கைத்தொலைபேசி வீடியோக்களை தனது முகநூலில் பகிர்ந்து அதிகாரிகள் அடாவடியென பகிர்ந்து கொள்ள மறுபுறம் தாக்குதல் நடத்த முற்பட்ட குண்டர் கும்பலோ அதிகாரிகளை தாம் நையப்புடைத்து கலைத்தாக முகநூலில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.ஒருபுறம் ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சியே நடப்பதாக தெரிவித்துக்கொள்ள மறுபுறம் அவரது கட்சி குண்டர்கள் ஆட்சிக்கு தயாராவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பூநகரி - முழங்காவில் பகுதியினில் சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்து வருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேச செயலகம் சட்டநடவடிக்கைகளிற்கு தயாராகிவருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 000
சட்டவிரோதமான முறையில் அரச காணிகளை அபகரிக்க முயன்ற அரச ஆதரவாளர் கும்பலோன்றை தடுக்க முற்பட்ட அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுளன்ளது.குறிப்பாக அரச அதிகாரிகளை தாக்க முற்பட்டவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர் தலைமையிலான குண்டர் குழுவென தெரியவந்துள்ளது.பூநகரி முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியை அண்மித்து மன்னார் - யாழ்ப்பாணம் வீதியோரமாக நேற்றுமுன்தினமிரவு முதல் தடாலடியாக அரச காணிகளில் கடைகள் சில முளைத்துள்ளன. குறிப்பாக நிரந்தரமாக இரும்பினால் ஒட்டப்பட்டதும் தகரங்களால் வேயப்பட்டதுமானதாக அக்கடைகள் இருந்துள்ளன.பொதுப் போக்குவரத்திற்கு அபாயத்தை தரக்கூடியதும் அனுமதியற்றதுமான கட்டுமானங்களை தயவு தாட்சணியமின்றி அகற்ற வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ள நிலையில் அவை தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடுகள் பூநகரி பிரதேச சபைக்கு செய்யப்பட்டுள்ளது.அதனையடுத்து செயலாளர் மற்றும் வருமான வரிபரிசோதகர் நிலைய பொறுப்பதிகாரி சகிதம் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். உரிமை கோரப்படாத நிரந்தர தகரக் கொட்டகைக்கு பகிரங்கமாக அகற்றுவதற்கான எச்சரிக்கை அறிவித்தல்களை ஒட்டிய அதிகாரிகள் அருகாக தொடர்ந்து நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த மற்றைய வர்த்தக நிலையத்தினரிடம் அனுமதியை பெற்று வேலையை முன்னெடுக்க அறிவுறுத்தியிருந்தனர்..இந்நிலையில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் புகைப்படமெடுக்க முற்பட்டவர்களை தாக்க முற்பட்ட அங்கிருந்த கும்பலொன்று கைத்தொலைபேசியை பறிக்கவும் முற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை எச்சரித்த அதிகாரிகள் பொலிசாரிடம் முறையிட்டனர்.அதனையடுத்து சம்பவ இடத்திலிருந்தவர்களை பொலிஸ் நிலையத்திற்க அழைத்த பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததுடன் கைது செய்ய முற்பட்டிருந்தனர். எனினும் அதனை மறுதலித்த பிரதேச சபை செயலர் சட்டவிரோத கட்டுமாணங்களை முன்னெடுக்க வேண்டாமெனவும் உரிய அனுமதியை பெற்ற பின்னர் பணிகளை முன்னெடுக்கலாமெனவும் தெரிவித்து வெளியேறியதாக தெரியவருகின்றது.இந்நிலையில் அதிகாரிகளை தாக்க முற்பட்டவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர் தலைமையிலான குண்டர் குழுவென தெரியவந்துள்ளது. அதேவேளை சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்துவருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேசசெயலகம் சட்டநடவடிக்கைகளிற்கு தயாராவதாக பிரதேசசெயலர் தெரிவித்துள்ளார்.இது ஒருபுறம் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குண்டர்களால் எடுக்கப்பட்ட கைத்தொலைபேசி வீடியோக்களை தனது முகநூலில் பகிர்ந்து அதிகாரிகள் அடாவடியென பகிர்ந்து கொள்ள மறுபுறம் தாக்குதல் நடத்த முற்பட்ட குண்டர் கும்பலோ அதிகாரிகளை தாம் நையப்புடைத்து கலைத்தாக முகநூலில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.ஒருபுறம் ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சியே நடப்பதாக தெரிவித்துக்கொள்ள மறுபுறம் அவரது கட்சி குண்டர்கள் ஆட்சிக்கு தயாராவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பூநகரி - முழங்காவில் பகுதியினில் சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்து வருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேச செயலகம் சட்டநடவடிக்கைகளிற்கு தயாராகிவருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 000
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 10 ஆம் தேதி சனிக்கிழமை 24.5.2025.இன்று மாலை 04.42 வரை துவாதசி. பிறகு திரியோதசி.இன்று காலை 10.52 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.இன்று பிற்பகல் 12.30 வரை ஆயுஷ்மான். பிறகு சௌபாக்கியம்.கரணம் : இன்று அதிகாலை 05.53 வரை கௌலவம். பின்னர் மாலை 04.22 வரை தைத்தூலம். பின்பு கரசை.அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 05.51 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 10.52 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07..30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
இலங்கை திரைப்பட தாரகையான சிங்கள நடிகையான மாலினி பொன்சேகா (76 வயது) இன்று(24.5.25) அதிகாலை காலமானார். அவர் ஏழு சகாப்தமாக திரைதுறையில் மின்னியவர். மேலும் பைலட் பிரேம்நாத் படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று(23) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக புங்குடுதீவு மக்களால் இன்று முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள், தற்போதைய நிர்வாகம் உடன் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும், கோவில் ஆன்மீக தலமா வியாபார நிலையமா? கோவில் களவு போனால் முறைப்பாடு செய்வது யாரிடம், பொலிஸ் முறைப்பாட்டை தலைவர் வாபஸ் வாங்க முற்பட்டது ஏன்? தடயங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது, அம்மனுக்கு சேர்ந்த கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கியது யார்?, உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்,எதிர்வரும் 29ஆம் திகதி ஆலய நிர்வாக சபையினர் மற்றும் போராட்டத்தை முன்னெடுத்த மக்களையும் அழைத்து இது தெடர்பில் கலந்துரையாடுவதாக தெரிவித்தார்.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமானது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். சமீப காலமாக லைகா ப்ரோடக்ஷன்ஸ் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக லைகா ப்ரோடக்ஷன் தயாரித்த சில பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியைத் தழுவின ‘லால் சலாம்’, ‘இந்தியன் 2’, ‘சந்திரமுகி 2’, ‘விடாமுயற்சி’, ‘வேட்டையன்’ போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாதது நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்குப் பதிலாக, வெறும் நட்சத்திர அந்தஸ்தை மட்டுமே நம்பி அதிக பட்ஜெட் படங்களை லைகா நிறுவனம் தேர்ந்தெடுத்தது. இதுவும் லைகாவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருக்கலாம். லைகா நிறுவனம் மிகவும் நம்பி இருந்த ‘பொன்னியின் செல்வன் 2’ எதிர்பாராத அளவு வசூலிக்காது நிறுவனத்திற்கு மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதுஒரே நேரத்தில் பல பெரிய படங்களை தயாரிப்பதில் நிறுவனம் அகலக்கால் வைத்ததாக கூறப்படுகிறது. பெரிய நிறுவனமாக இருந்த போதிலும் இவ்வளவு பெரிய முதலீடுகளை ஒரே நேரத்தில் கையாள கையாள முடியாத நிலை ஏற்பட்டது. இது மட்டுமில்லாமல் உள்நாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறுவதில் சிக்கல்கள், லண்டனில் உள்ள பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் ஏற்பட்ட சிரமங்கள் ஆகியவை லைகா நிறுவனை கடும் நிதி நெருக்கடியில் தள்ளின.லைகா மொபைல்ஸ் நிறுவனம் பல்வேறு நாடுகளில் வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கியது. பிரான்சில் 2023-ல் பண மோசடியில் முக்கிய வழக்கில் இந்த நிறுவனத்திற்கு 10 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்திய அமலாக்கத்துறை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தி சட்டவிரோத கடன்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆதாரங்களை கைப்பற்றியது. இந்த சட்ட பிரச்சனைகளும் லைகாவின் நிதி நிலையை கடுமையாக பாதித்துள்ளன.பொருளாதார சிரமங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ள லைகா மீண்டும் பட தயாரிப்பை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும், விரைவில் புதிய படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கனடா சுற்றுச்சூழல் துறை டொரோண்டோ நகரில் தீவிர மழை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று மாலை வரை நகரின் சில பகுதிகளில் அதிகபட்சமாக 60 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முற்பகலில் மட்டுமே சுமார் 35 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், டான் வேலி பார்க்வேக்கு கிழக்கில் உள்ள பகுதிகளில் கூடுதல் 20 மில்லிமீட்டர் மழை இன்னும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் மழை குறைந்து வரும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.அதிக மழை காரணமாக சாலைப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை மற்றும் விரைவான வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.சிறிய ஆறுகள், சுனைகள் மற்றும் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகள் வெள்ள அபாயத்தில் உள்ளன. அதேவேளை நதிகள் மற்றும் வாய்க்கால்கள் அருகே நிலச்சரிவுகளும் ஏற்படலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனடாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நோவா ஸ்கோடியாவின் லான்ஸ்டவுன் ஸ்டேஷனில் காணாமல் போன இரண்டு குழந்தைகள் தொடர்பான விசாரணையில் மூன்று வாரங்கள் கழிந்தும் அவர்கள் குறித்து எந்த ஆதாரமும் போலீசாருக்கு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.ஆறு வயதான லில்லி சுலிவன் மற்றும் நான்கு வயதான ஜாக் சுலிவன் ஆகிய இருவரும் மே 2ஆம் திகதி காலை தங்கள் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அன்று காலை 10 மணிக்கு அவசர அழைப்பு (911) ஒன்று வந்ததாகவும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 160க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தொண்டர்கள், மோப்ப நாய்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் வெப்பத் தடயங்களை கண்டறியும் ட்ரோன்கள் உதவியுடன் வனப்பகுதிகளில் ஐந்து நாட்கள் விரிவான தேடல் நடத்தப்பட்டது.ஹாலிபாக்ஸிற்கு 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை மற்றும் அடர்ந்த காடுகள் கொண்ட பகுதியில் 5 சதுர கிலோமீட்டருக்கும் மேல் தேடப்பட்டது. மே 7ஆம் திகதி, குழந்தைகள் காட்டில் இவ்வளவு நாள் உயிருடன் இருப்பது சாத்தியமில்லை என பொலிஸார் தெரிவித்ததுடன், தேடல் வேகத்தைக் குறைத்தது.அதே நாளில், காணாமல் போன குழந்தைகளின் தவிர்க்க முடியாத நபராகக் கருதப்படும் டேனியல் மார்டெல், விசாரணைக்கு தானாகவே சென்று நான்கு மணி நேரம் விசாரணை பெற்றதாக தெரிவித்தார். “நான் 100 சதவீதம் ஒத்துழைக்கிறேன்,” என அவர் கூறினார். “என் கைப்பேசியைக் கொடுத்தேன், மதுபோதை மற்றும் பொய்ப்பரிசோதனைகளுக்கும் சம்மதித்தேன்.” மே 8 மற்றும் 9ஆம் திகதிகளில், போலீசார் அருகிலுள்ள குளங்கள் மற்றும் ஆறுகளை தேடினர்.மே 13ஆம் திகதி, குடும்பத்தினரும் உள்பட பலர் உத்தியோகபூர்வமாக விசாரணைக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் கடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என அதிகாரிகள் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த வார இறுதியில், 100க்கும் மேற்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு தொண்டர்கள், குழந்தைகள் காணாமல் போன வீடு அருகிலுள்ள பகுதிகளில் மீண்டும் தேடல் நடத்தினர்.