கனடா பிரதமர் மார்க் கார்னியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் முதல் நாடாக அவர் கடந்த 15ம் திகதி சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றார். அங்கு அந்நாடு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் செவ்வாய்க்கிழமை (17) நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்துள்ளார். அத்துடன், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி சந்தித்துள்ளார். கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா நாட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
கனடாவின் ஹாமில்டனில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 11 மற்றும் 15 வயதான சிறுவர்களை ஹாமில்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நயாகரா பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பொன்றின் வாகனத் தரிப்பிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஒரு 2015 வெள்ளை நிறமுடைய செல்வர்டொ சில்வெர்டோ (Chevrolet Silverado) மற்றும் ஒரு 2015 வெள்ளை ஜீப் (Jeep Cherokee) வாகனங்களின் சாவிகளை திருடி வாகனங்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
ஆபத்தான முறையில் வேகமாக வாகனங்கள் செலுத்தப்படுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்திய போது இரண்டு வாகனங்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து போதைப் பொருட்கள் சிறிதளவு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒண்டேரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டின் எட்டோபிக்கோ வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த காரை திருட முயற்சித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காரை திருட முயற்சித்தவர்கள் குறித்து அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
“நால்வர், முகமூடிகள் அணிந்து, தெருவில் வேகமாக வந்து என் டிரைவ்வேயில் இருந்த காரை எடுத்து செல்ல வந்தார்கள்,” என ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் குற்றவியல் நீதித்துறையை முதல்வர் கடுமையாக விமர்சித்தார். குறித்த நபர்களை ‘முட்டாள் குற்றவாளிகள்’ என அவர் விவரித்துள்ளார்.
ந்தேக நபர்களை கைது செய்ததாக டொராண்டோ பொலிஸார், தெரிவித்திருந்தனர்.கைதான நான்கு பேரில் இரண்டு பேர் 17 மற்றும் 16 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மக்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலிலை நீக்க வேண்டும் என்று ஈரான் உத்தரவிட்டுள்ளது.
ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த 13 ஆம் திகதி தொடங்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள், இராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இருநாடுகளின் இடையேயான போர் உலக நாடுகளை கவலை கொள்ள செய்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாக அரபு, இஸ்லாமிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இஸ்ரேலுடன் மோதல் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதால், ஈரான் தமது குடிமக்களை தங்கள் செல்போன்கள் மற்றும் இன்னபிற எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வட்ஸப் அப்பை நீக்குமாறு வலியுறுத்தி உள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் இவ்வாறு வலியுறுத்தல் வெளியிடப்பட்டது. ஈரானில் இருந்து பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் இஸ்ரேலுக்கு பகிர அல்லது அனுப்பப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இப்படி ஒரு அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், ஈரான் அரசின் இந்த வலியுறுத்தலை, உத்தரவை வாட்ஸ் அப் நிறுவனம் புறம் தள்ளிவிட்டது. வாட்ஸ் அப் செயலிலை நீக்குமாறு ஈரான் கூறியதை வாட்ஸ் அப் நிறுவனம் உறுதியாக மறுத்துள்ளது. இதுபோன்ற தவறான தகவல்கள் தங்களின் சேவைகளை பாதிக்கும், பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பது எங்களின் கடமை என்றும் கூறி உள்ளது. மேலும், யார், யாருக்கு என்ன செய்திகள் அல்லது குறிப்புகள் அனுப்புகின்றனர், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடியும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். சகோதரர்களிடத்தில் அலைச்சல்கள் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகளால் கையிருப்புகள் குறையும். வியாபாரம் தொடர்பான முதலீடு குறித்த முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
சூழ்நிலை அறிந்து செயல்படவும். பூர்வீக சொத்துகளால் சிறு விரயங்கள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். சவாலான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கடகம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில யூகங்களை புரிந்துகொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில யூகங்களை புரிந்துகொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம்
சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நெருக்கமானவர்களால் ஆதாயம் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
எதிர்காலம் சார்ந்து புதிய வியூகங்களை அமைப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமை காக்கவும். பயனற்ற செலவுகளைக் குறைப்பீர்கள். சக ஊழியர்களால் அலைச்சல்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
தனுசு
திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். வருமானம் தொடர்பான விஷயங்களில் திருப்தி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். வீடு, வாகனங்களைச் சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
மகரம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த வியாபார சரக்குகள் விற்பனையாகும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழல் அமையும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மீனம்
வியாபாரம் ரீதியாக புதிய அனுபவம் ஏற்படும். பழைய பிரச்சனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பழக்கவழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ஆல், அரசு, வேம்பு, பலா, வாழை, மா, அத்தி, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே "இலை" என்று பெயர்.
அகத்தி, பண்ணை, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை "கீரை" ஆகின்றது
மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் "தழை".
நெல், வரகு, சாமை முதலியவற்றின் இலைகள் "தாள்" ஆகின்றன.
சப்பாத்தி, கள்ளி, தாழம் போன்ற இனங்களின் இலைகளுக்குப் பெயர் "மடல்".
கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றின் இலைகள் "தட்டு" ஆகின்றன.
கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் "தோகை" (சோகை) என்றாகின்றன.
தென்னை, பனை, கமுகு முதலியவற்றின் இலைகள் "ஓலை" என்று சொல்லப்படுகின்றன.
இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கின்றன.
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 4 ஆம் தேதி புதன்கிழமை 18.6.2025.
இன்று காலை 10.58 வரை சப்தமி. பிறகு அஷ்டமி.
இன்று அதிகாலை 05.55 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.
இன்று காலை 10.58 வரை பவம். பின்னர் இரவு 09.58 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று அதிகாலை 05.53 வரை மரண யோகம். பின்னர் இரவு 10.01 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத அற்புதமான மருந்துகள்
1. உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம்
2. விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம்
3. இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம்
4. சிரிப்பு என்பதும் ஒரு மருந்து
5. நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து
6. பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து
7. சூரிய ஒளியும் ஒரு மருந்து
8. ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம்
9. நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம்
10. தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம்
11. தியானம் என்பதும் ஒரு மருத்துவம்
12. இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம்
13. மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம்
14. சரியாகச் சிந்திப்பதும் சரியான மனநிலையில் இருப்பதும் ஒரு மருத்துவம்
15. நல்ல நண்பர்களுடன் இருப்பது ஒரு நல்ல மருத்துவம்
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை 932 தட்டம்மை (Measles) நோய்களுக்கான உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த வார இறுதியில் மட்டும் 53 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அல்பெர்டா மாகாண அரசின் தரவுத்தள விவரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த 40 ஆண்டுகளில் அல்பர்ட்டா மாநிலம் சந்தித்த மிக உயர்ந்த தட்டம்மை பாதிப்பு இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. தட்டம்மை நோய்தடுப்பை கட்டுப்படுத்துவது சவாலான நிலை” என அல்பெர்ட்டா மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஷெல்லி டுகன் கூறியுள்ளார்.
கனடா 1998 ஆம் ஆண்டு தட்டம்மை நோயாளர்கள் இல்லாத நாடுகளின் வரிசையில் இடம்பிடித்திருந்தது. எனினும், தற்போது நோய் வேகமாக பரவும் நிலை உருவாகியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ளதாக அல்பெர்டா மாகாண அரசு தெரிவித்துள்ளது.
ஒரு நாளில் 16 மணிநேரம், மூன்று ஷிப்டுகளிலாக நஸீர் நடித்துக்கொண்டிருந்த காலம். நஸீர் பணத்திற்காக அப்படி நடிக்கவில்லை. அவர்தான் உச்ச நட்சத்திரம். ஆனால் ஒரு படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு அடுத்த படம் இலவசம். படம் ஓடும் வரை இலவசம். நண்பர்களுக்கு இலவசமாக நடித்துக்கொடுத்தார். நஸீரால் ஒரு காலத்தில் மலையாள சினிமாவுலகமே வாழ்ந்தது.
ஒரு காலையில் படப்பிடிப்பு. மதியம் 12.30க்கு நஸீர் அடுத்த படப்பிடிப்புக்குச் செல்லவேண்டும். நஸீரை கைதுசெய்து விசாரிக்கும் காட்சி. கைவிலங்கு போட்டு நஸீர் சம்பந்தமான காட்சிகளை எடுக்கிறார்கள். அன்றுமின்றும் கைவிலங்கில் டம்மி என்பதே இல்லை. அசல் விலங்குதான். அதை பூட்டினால் சாவி இருந்தால் மட்டுமே திறக்க முடியும். உடைக்கவே முடியாது. வெல்டிங் ராடால்கூட உருக்க முடியாது.
படப்பிடிப்பு முடிந்து நஸீர் கிளம்பத் தயாரானபோது தெரியவருகிறது, கலை இயக்குநர் அந்த விலங்கின் சாவியுடன் எங்கோ போய்விட்டார். எங்கே என தெரியாது. ஏதோ வாங்கச் சென்றிருந்தார்.
என்ன செய்வதென்று தெரியவில்லை. பதறி குழம்பி ஒருவழியாக இயக்குநரே நஸீரிடம் விஷயத்தைச் சொன்னார். நஸீர் கோபப்படும் வழக்கம் இல்லை. “பரவாயில்லை மாஸே, மனிதன் தவறு செய்பவன்தானே… நான் இப்படியே வீட்டுக்கு செல்கிறேன். சாவி கிடைத்தால் கொடுத்தனுப்புங்கள்”
நஸீர் கைவிலங்குடன் காரிலேறி வீட்டுக்குச் சென்றார். ஒருமணிநேரம் கழித்து கலை இயக்குநர் வந்தார். குழுவே அவரை அடிக்க பாய்ந்தது. அவர் பதறிவிட்டார். அப்படியே செத்துவிடலாமா என நினைக்குமளவுக்கு. அழுகை, புலம்பல்.
“நீ போய் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேள்” என்றார் இயக்குநர்.
கலை இயக்குநர் நஸீரின் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் சோபாவில் நஸீர் கைவிலங்குடன் அமர்ந்திருந்தார். சென்றதுமே அவர் காலில் விழப்போனார் கலை இயக்குநர்.
“சேச்சே, மனிதன் காலில் மனிதன் விழக்கூடாது… பூட்டை திற” என்றார் நஸீர்.
பூட்டை திறந்துவிட்டு கலை இயக்குநர் கண்ணீருடன் நின்றார்.
“ஏன் அழுகிறாய்?”
”என்னை திட்டுங்கள், என்னை அடியுங்கள்… நான் தவறு செய்துவிட்டேன்”
“நீ என் நண்பன்… நான் உனக்கு நன்றி சொல்லவேண்டும்” என்று நஸீர் கலை இயக்குநரின் கையைப் பற்றிக் குலுக்கினார். அவர் திகைத்தார்.
“என் மனைவி தேனிலவுநாட்களில் எனக்கு சோறு ஊட்டிவிட்டிருக்கிறாள். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் மீண்டும் ஊட்டிவிட்டாள்… அது உன்னால்தான். நீ என் நண்பன், உனக்கு நன்றி” என்றார் நஸீர்.
எவ்வளவு உயர்ந்தாலும் ஒரு மனிதனின் அடக்கமான செயலே அவனை உச்சிக்கு கொண்டு செல்கிறது என்பதை உணர்த்திய நடிகர் இவரும் தமிழ் திரையுலகில் நடிகர் ஜெய்சங்கர் அவர்களும் தான்.
இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாத அந்த முதிய தம்பதியினர் தங்களது 35 வது ஆண்டு திருமண விழாவை பிரம்மாண்டமாக இருந்த அந்த ஓட்டலில் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
பழைய காதல் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே உணவினை ருசித்த வேளையில் அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் திடீரென சுண்டு விரல் உயரம் கொண்ட அழகிய ஒரு பெண் தேவதை தோன்றினாள்.
இருவரும் அதிர்ச்சியாய் அந்த தேவதையை பார்த்தனர். தேவதை அவர்களைப் பார்த்து புன்னகையுடன் பேசினாள்,
'பயப்படாதீர்கள்..! நான் உங்களின் அதிர்ஷ்ட தேவதை. இத்தனை ஆண்டு காலம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நீங்கள் வாழ்ந்ததைப் போல வாழ்ந்த தம்பதியினர் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.
அதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். உங்களுக்கு ஆளுக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டுமோ கேளுங்கள்'
இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு சந்தோசம் தாங்க முடியாமல் அந்த முதிய பெண் தேவதையிடம் சொன்னாள்,
'இதோ என் அருகில் இருக்கும் என் காதல் கணவனோடு நான் உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் பொருளாதாரம் காரணமாக என்னால் அப்படி செய்ய முடியவில்லை.
அதனால் நான் என் கணவரோடு உலகம் முழுவதையும் சுற்றி வர வேண்டும். உன்னால் அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?'
அந்தப் பெண் தேவதை புன்னகைத்துக் கொண்டே தன் கையில் இருந்த மந்திர குச்சியினால் காற்றில் துளாவினாள்.
மறு நிமிடம்...
உலகின் தலைசிறந்த சொகுசு கப்பலில் உலகத்தைச் சுற்றி வருவதற்கான இரண்டு டிக்கெட்டுகளும் செலவிற்கான தேவைக்கும் அதிகமான பணமும் அவர்கள் மேஜையில் இருந்தன.
அடுத்த நொடியில் அவர்கள் மூவரும் அந்த உல்லாச கப்பலின் மேல் தளத்தில் இருந்தார்கள். சுற்றிலும் இருந்த கடலை ரசித்துக் கொண்டே அந்த முதிய பெண்மணி தனது கனவு நனவாகிவிட்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.
அழகிய குட்டி தேவதை இப்பொழுது அவளின் கணவனிடம் திரும்பி
'உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என்றது.
ஒரு நிமிடம் யோசித்த முதிய கணவன் தேவதையிடம் சொன்னான்,
'என் வாழ்நாளில் யாருக்குமே கிடைக்காத ஒரு அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கிறது.
வயது முதிர்ந்த இந்த மனைவியுடன் உலகத்தை சுற்றி வருவதில் எனக்கு என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது?
எனக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை நான் தவற விட விரும்பவில்லை.
அதனால் என்னைவிட 30 வயது குறைவான பெண்ணுடன் இந்தக் கப்பலில் சொகுசு பயணம் மேற்கொண்டு உலகத்தை சுற்றி வர விரும்புகிறேன்.
அதனால் என்னோடு பயணிக்க என்னை விட 30 வயது குறைந்த பெண்ணை உடனே அனுப்பு'
அந்த முதிய கணவனின் பதிலால் அவனின் மனைவியும் தேவதையும் அதிர்ந்தார்கள்.
'இத்தனை ஆண்டு காலமாக என்னை காதலித்து வந்த நீங்கள் ஒரு நொடியில் உதறி தள்ளிவிட்டு இன்னொரு பெண்ணுடன்...
அதுவும் உங்களை விட முப்பது வயது குறைந்த இளம் பெண்ணுடன் சுற்ற உங்களுக்கு எப்படி மனம் வந்தது? தயவுசெய்து இந்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்து பாருங்கள்'
கண்ணீருடன் கணவனிடம் பேசிப் பார்த்தாள் அந்த மனைவி. அவன் மசியவில்லை.
'நான் உங்களுக்கு வரம் கொடுத்ததே நீங்கள் இருவரும் இணைபிரியாத தம்பதிகளாக இருக்கிறீர்கள் என்பதற்காகத்தான்.
இப்பொழுது நீயே அதை உடைத்து விட்டால் நான் எப்படி வரம் தர முடியும்? அதனால் மீண்டும் ஒருமுறை உன்னுடைய கோரிக்கையை மறுபரிசீலனை செய்து பார்'
செஞ்சி பார்த்தது தேவதை. அவன் தீர்க்கமாய் சொன்னான்,
'நான் சொன்னா சொன்னது தான். நீ பரிசளித்தபடி இந்த கப்பலில் உலகத்தை சுற்றிவர நான் தயார்.
ஆனால் கண்டிப்பாக என்னை விட 30 வயது குறைவான பெண் ஒருத்தி அந்த பயணத்தில் என்னோடு இருக்க வேண்டும்.
இனியும் ஒரு நொடி கூட யோசிக்காமல் சடார் என எனக்கு வந்த வரத்தை கொடு'
ஒரு நிமிடம் மௌனம் சாதித்து பெருமூச்சு விட்ட அந்த தேவதை காற்றினில் மந்திர குச்சியை ஆட்டிக்கொண்டே சொன்னாள்,
'சரி உன் இஷ்டப்படியே உனக்கு வரம் தருகிறேன். இந்த மந்திர குச்சியை தொடு'
தொட்ட மறு வினாடி அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அந்த 60 வயது முதியவன் 92 வயது முதியவன் ஆனான்.
அவனிடம் அந்த தேவதை சிரித்துக் கொண்டே சொல்லி மறைந்தது,
'நீ ஆசைப்பட்டது போல் உன் பக்கத்தில் உன்னை விட 30 வயது குறைந்த பெண் இருக்கிறாள். நீ ஆசைப்பட்டபடி அவளோடு சந்தோஷமாக டூரை என்ஜாய் பண்ணு'என்றது தேவதை.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் யாழ் ராணி புகையிரதம் முன் இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி இன்று (17) புகையிரதத்தில் பாய்ந்தே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வில்வம்’ எப்படி சிவனுக்கு உகந்ததோ அதேபோல நாகலிங்கப்பூவும் சிவனுக்கு மிகவும் பிடித்த பூவாகும். இந்த அதிசய மலர் பார்ப்பதற்கு சிவலிங்கத்தின் மீது ஐந்துதலை நாகம் படம் எடுத்து குடை பிடிப்பது போல அமைந்திருக்கும். இதன் காய்கள் பார்ப்பதற்கு பந்துகள் போல இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர்.
நாகலிங்கப்பூவை வைத்து சிவனுக்கு பூஜை செய்யும் போது பல பிரதோஷங்கள் பூஜை செய்த பலன் கிடைக்குமாம். 21 நாகலிங்கப்பூக்களை பூஜைக்கு கொடுத்துவிட்டு 21 பேருக்கு அன்னதானம் செய்தால் முழுபலனும் கிடைக்கும். இந்த பூ செடியில் பூப்பதில்லை அதற்கு மாறாக வேர்ப்பகுதிக்கு மேலேயும், கிளைப்பகுதிக்கு கீழேயும் தானாக ஒரு கிளையை உருவாக்கி அதில் பூக்கிறது. இந்த பூ கடவுளுக்காக படைக்கப்பட்டது அல்லாமல், இந்த பூவே கடவுளாகும். நாகலிங்க பூவிற்கு 21 மகரிஷிகள் தங்கள் தவ ஆற்றலை அளித்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
நாகலிங்கப் பூவை தொட வேண்டும் என்றால் சிவபஞ்சாக்ஷரத்தை 1001 முறை சொன்ன பிறகே தொட வேண்டும். ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் 1000 மலர்கள் வரை பூக்குமாம். நாகலிங்கப்பூவை சிவனுக்கு சூடிய பிறகும் அது வாடினால் நாம் குளித்துவிட்டு தான் அந்த வாடிய மலரையும் தொட வேண்டும். என்னதான் வாடியிருந்தாலும், அந்த மலருக்கான சக்தி அதில் அப்படியே இருக்குமாம். காய்ந்த நாகலிங்கப் பூவை ஓடும் ஆற்றில் விடவேண்டும். இந்த மரம் தமிழ்நாட்டில் சில கோவில்களிலும், மேற்கு தொடர்ச்சிமலையிலும் காணப்படுகிறது
சிவ லிங்க பூஜைக்கு உதவக்கூடிய முக்கிய பொருட்களாக வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கிய இடம் வகிக்கிறது.நாக லிங்க பூவை வழங்கிய 21 ரிஷிகளை ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.நீண்ட கால் நோய் தீர சிவமந்திரத்தையும், தேவாரப் பாடல்களையும் பாடி வழிபட வேண்டும்.
நாகலிங்கப்பூவை நுகரும்போது நுரையீரல் தொற்று குணமாகும். இயற்கையாகவே இந்த பூவிற்கு வியர்வை துர்நாற்றத்தை போக்கக்கூடிய சக்தி உண்டு. இந்த பூவிலிருந்து சாறு எடுத்து வாசனை திரவியங்கள் தயாரிக்கிறார்கள். ஆண் மலடு, பெண் மலடு இரண்டையுமே நீங்க கூடிய சக்தி இந்த பூவிற்கு உண்டு. வெள்ளைப்படுதல், அதிக ரத்தப்போக்கு, PCOD ஆகியவை குணமாகும்.
காற்றுமாசு அதிகமாக இருக்கும் இடத்தில் நாகலிங்க மர இலைகள் உதிர்ந்து விடுமாம். அதை வைத்து காற்றிலுள்ள மாசை அறிந்து கொள்ளலாம். நாகலிங்க மலர் செல்வ செழிப்பை தரும், கெட்ட சக்திகளை நீக்கும் என்றும் நம்பப்படுகிறது.
பெரும்பாலும் நாகலிங்க மரத்தை கோவில்களிலேயே அதிகம் காணலாம். இதன் இலைகள் தோல்நோயை குணப்படுத்த பயன்படுகிறது. இந்த மரத்துடைய பட்டைகள் காய்ச்சலை குணப்படுத்த பயன்படுகிறது. இந்த பூக்களிலிருந்து எடுக்கப்படும் தைலம் வயிற்றுக்கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது. இந்த நாகலிங்க மரத்திலும், பூவிலும் நிறைய மருத்துவ குணம் இருப்பதால், இதை ஒரு அதிசய மரமாகவே கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.