ஒரு வயதான பெண் பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள். அடுத்த நிறுத்தத்தில், ஒரு வலிமையான, எரிச்சலான இளம் பெண் மேலே ஏறி, வயதான பெண்ணின் அருகில் அமர்ந்து, அவளது ஏராளமான பைகளால் தாக்கினாள்.
வயதான பெண் அமைதியாக இருப்பதைக் கண்டதும், அந்தப் பெண் தன் பைகளால் அடித்தபோது ஏன் புகார் கொடுக்கவில்லை என்று கேட்டார்.
வயதான பெண் ஒரு புன்னகையுடன் பதிலளித்தார்: "உங்களுக்கு அடுத்ததாக எனது பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதால், முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவோ அல்லது அற்பமான ஒன்றைப் பற்றி விவாதிக்கவோ தேவையில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகிறேன்."
இந்த பதில் தங்க எழுத்துக்களில் எழுதப்பட வேண்டியது: "இவ்வளவு அற்பமான ஒன்றை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் எங்கள் ஒன்றாக பயணம் மிகவும் குறுகியதாகும்."
இந்த உலகில் நம் நேரம் மிகவும் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். பயனற்ற வாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவற்றால் அதை இருட்டடிப்பது நேரத்தையும் சக்தியையும் கேலிக்குரியதாகும்.
யாராவது உங்கள் இதயத்தை உடைத்தார்களா? அமைதியாய் இரு. பயணம் மிகக் குறைவு.
யாராவது உங்களை காட்டிக் கொடுத்தார்களா, மிரட்டினார்கள், ஏமாற்றினார்கள் அல்லது அவமானப்படுத்தினார்களா? ஓய்வெடுங்கள். மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம். பயணம் மிகக் குறைவு.
யாராவது உங்களை காரணமின்றி அவமதித்தீர்களா? அதை அசைக்கவும். அதை புறக்கணிக்கவும். பயணம் மிகக் குறைவு.
உங்களுக்குப் பிடிக்காத ஒரு பக்கத்து வீட்டுக்காரர் கருத்து தெரிவித்தாரா? ஆழ்ந்த மூச்சு விடுங்கள். அவரை / அவளை புறக்கணிக்கவும். மன்னித்து மறந்து விடுங்கள். பயணம் மிகக் குறைவு.
யாராவது எங்களை எந்த பிரச்சனையில் கொண்டு வந்தாலும், எங்கள் பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எங்கள் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. அதன் நிறுத்தத்தில் அது எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஒன்றாக எங்கள் பயணம் குறுகியது.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பாராட்டுவோம்.
மரியாதைக்குரியவர்களாகவும், கனிவானவர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்போம். பதிலுக்கு, நன்றியுணர்வும் மகிழ்ச்சியும் நிறைந்திருப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் பயணம் மிகவும் குறுகியதாகும்.
உங்கள் புன்னகையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எங்கள் பயணம் மிகவும் குறுகியது ..
கங்கைக் கரையில் பண்டிதர் ஒருவர் கங்கையாற்றின் பெருமையைப் பற்றியும் அதில் நீராடுகிறவர்கள் தங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்ளும் சிறப்பும் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தார். பலர். அவருடைய புராணத்தைக் கேட்டு மகிழ்ந்தார்கள். அப்பொழுது கைலாசத்தில் இருந்த கைலாசபதியைப் பார்த்துப் பார்வதி தேவி, “கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோருக்கும் பாவம் ஒழிந்து நல்ல கதி கிடைக்குமென்றால், கைலாசத்தில் அத்தனை பேர்களுக்கும் இடம் காணாதே” என்றாள்.
“அடி பைத்தியக்காரி, கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோரும் தங்களுடைய பாவங்கள் எல்லாம் போகும் என்று நம்புவது இல்லை. புராணம் படிக்கிறாரே, அவருக்குக்கூட இந்த நம்பிக்கை இல்லை. யார் உண்மையாக நம்புகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாகக் கைலாச பதவி கிடைக்கும்” என்று இறைவர் கூறினார். உடனே பார்வதிதேவி, “கங்கையில் மூழ்குகிறவர்களில் யார் உண்மையாக நம்பி மூழ்குகிறார்கள் என்றும் யார் நம்பிக்கை இல்லாமல் மூழ்குகிறார்கள் என்றும் எப்படித் தெரிந்துகொள்வது?” என வினவினாள்.
'“நான் உனக்கு அதைக் காண்பிக்கிறேன். வா, போகலாம். நாம் இருவரும் கிழவனும் கிழவியுமாக மாறி, கங்கைக் கரைக்குப் போகலாம்” என்று கூறி இருவரும் கிழ வடிவங்களை எடுத்துக்கொண்டு போனார்கள்.
இருவரும் கங்கையில் மூழ்கி நீராடும் பொழுது கைலாசபதியாகிய கிழவர் நீரோடு போய்விட்டார். பார்வதி தேவியாகிய கிழவி, “என்னுடைய புருஷனை யாரும் காப்பாற்ற மாட்டீர்களா?” என்று கதறியழுதாள்.
புராணம் படித்த பண்டிதர் அங்கே வந்தார். “அம்மா நான் உங்கள் கணவரைக் காப்பாற்றுகிறேன்” என்று சொல்லிக் கங்கையில் இறங்கினார். கிழவி அப்பொழுது, “ஒரு பாவமும் செய்யாதவராக இருந்தால்தான் அவரைக் காப்பாற்ற முடியும், இல்லாவிட்டால் முடியாது” என்றாள்.
பண்டிதருக்குத் தம் மேலேயே நம்பிக்கையில்லை. தாம் செய்த பாவங்கள் எல்லாம் அவருடைய நினைவுக்கு வந்தன. அதனால் அவர் ஒன்றும் செய்ய முடியாமல் தலை குனிந்து நின்றார். கிழவியின் ஒலக் குரலைக் கேட்டு வேறு சிலரும் அங்கே ஓடி வந்தார்கள். அவர்கள் கிழவரை மீட்கலாம் என்று நினைக்க தொடங்கிய பொழுது கிழவி “ஒரு பாவமும் செய்யாதவர்களால்தான் அவரை மீட்க முடியும்” என்றாள். அதைக் கேட்ட அவர்கள் எல்லோரும் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி நின்று விட்டார்கள்.
இந்தச் சமயத்தில் முரட்டு ஆள் ஒருவன் அங்கே வந்தான். கிழவியைப் பார்த்து, “ஏனம்மா அழுகிறாய்? உனக்கு என்ன கஷ்டம் வந்தது?” என வினவினான். கிழவி எல்லாவற்றையும் சொன்னாள். அதற்கு அந்த முரடன், தான் கிழவரைக் காப்பாற்றுவதாகக் கூறினான். அதற்கு வழக்கம்போல் கிழவி. “ஒரு பாவமும் செய்யாமல் இருந்தால்தான் உன்னால் இயலும்” என்றாள். அது கேட்ட முரடன், “நான் இப்பொழுது தான் பண்டிதர் படித்த புராணத்தைக் கேட்டேன். இந்தக் கங்கையில் ஒரு தடவை மூழ்கினால், எல்லாப் பாவங்களும் தொலையும் என்று சொன்னார். இதோ நான் ஒரு முழுக்குப் போடுகிறேன். என்னுடைய பாவங்கள் தொலையட்டும்” என்று சொல்லி முழுக்கும் போட்டான். பிறகு நீந்திச் சென்று அந்தக் கிழவரை இழுத்துக் கொண்டு வந்தான்.
உண்மையான நம்பிக்கையோடு இருந்து வந்த முரடனுக்கு முன்னாலே கைலாசபதியாரும். பார்வதி தேவியும் தங்கள் தரிசனத்தைக் காட்டி ஆசீர்வாதம் செய்தார்கள்.
கைலாசபதி பார்வதிதேவியைப் பார்த்து, “பார்த்தாயா, இத்தனை பேர்கள் இருந்தும் இந்த ஒருவனைத் தவிர மற்ற எவருக்கும் நம்பிக்கையில்லாமல் போயிற்று புராணம் படித்த பண்டிதருக்கே நம்பிக்கையில்லையே. “நம்பினோர் கெடுவதில்லை” என்பதை இந்த ஒருவன்தான் நிரூபித்தான். ஆதலால் இவன் ஒருவனுக்குத்தான் கைலாசத்தில் இடம் இருக்கும்” என்று சொன்னார்; பிறகு அவர்கள் இருவரும் மறைந்து போனார்கள்.
தர்மம் தலையை மட்டுமல்ல...ஒரு நாட்டையே காப்பாற்றும்.
1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன்.
அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை.
அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.
பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது.
அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள்.
அவரது மேனேஜரோ சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.
பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.
நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாக வில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை.அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்?
மனதை திடப்படுத்திக்கொண்டு *பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்துவிடலாம் என்கிறார்கள்.
ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்*” என்கிறார்.
ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, இது தான் மொத்தம் வசூலான தொகை மீதியுள்ள தொகைக்கு பின் தேதியிட்டு செக் கொடுத்து
விடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன்.
இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள். என்கிறார்.
அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.
நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.
பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.
ஆனால் பேட்ரெவ்ஸ்கி, நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்து போகப்போவதில்லை… என்று கருதியே அந்த உதவியை செய்தார்.
ஆண்டுகள் உருண்டன.
பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார்.
மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது.
இது 1918 ஆம் ஆண்டு.
எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி.
கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர்.
(இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)
பேட்ரெவ்ஸ்கி கேட்டுக் கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன.
அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.
ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர்.
பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.
ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பணிக்க நன்றி தெரிவிக்கிறார்.
நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான் என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்
பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி
அவரை அணைத்துக் கொள்கிறார்.
காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.
தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?
இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.
ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை!
பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..
காலம் குறித்து வைத்துகொண்டது....
(உண்மை சம்பவம்)
தர்ம சிந்தனையை பற்றி
அறம் வழியில் வாழ குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள், குழந்தைகள் சொல்வதை கேட்பதில்லை ஆனால் செய்வதை பார்ப்பார்கள்...
1. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
2. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
3. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
4. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
5. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
6. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
7. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
8. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
9. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
10. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட மூளை
குறைகளை மட்டுமே பார்க்கும்.
நேர்மறை எண்ணங்களைக் கொண்ட மூளை
குறைகளில் உள்ள நிறைகளைப் பார்க்கும்...
தமிழ் ஆண்டு, தேதி - விசுவாவசு, மாசி 16 (ஆங்கில தேதி : 28.02.2026)
நாள் - சம நோக்கு நாள்
பிறை - வளர்பிறை
திதி : சுக்ல பக்ஷ துவாதசி - Feb 27 10:33 PM – Feb 28 08:43 PM
சுக்ல பக்ஷ திரயோதசி - Feb 28 08:43 PM – Mar 01 07:09 PM
நட்சத்திரம்:
புனர்பூசம் - Feb 27 10:48 AM – Feb 28 09:34 AM
பூசம் - Feb 28 09:35 AM – Mar 01 08:34 AM
கரணம்
பவம் - Feb 27 10:33 PM – Feb 28 09:36 AM
பாலவம் - Feb 28 09:36 AM – Feb 28 08:43 PM
கௌலவம் - Feb 28 08:43 PM – Mar 01 07:54 AM
யோகம்
சௌபாக்யம் - Feb 27 07:43 PM – Feb 28 05:02 PM
சோபனம் - Feb 28 05:02 PM – Mar 01 02:32 PM
நல்ல நேரம்:
அபிஜித் காலம் - 12:08 PM – 12:56 PM
அமிர்த காலம் - 07:17 AM – 08:48 AM, 02:26 AM – 03:57 AM
பிரம்மா முகூர்த்தம் - 05:00 AM – 05:48 AM
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். புதிய நபர்களால் சில அலைச்சல் உண்டாகும். மனதளவில் புதுவிதமான மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவு கிடைக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
ரிஷபம்
பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் மேன்மையை ஏற்படுத்த முடியும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மிதுனம்
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்கு இடையே சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார போட்டிகளை ஓரளவு சமாளிப்பீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
செயல்பாடுகளில் இருந்து வந்த தடை அகலும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாக்குவன்மையின் மூலம் நன்மை உண்டாகும். சகோதரர்கள் வழியில் சில உதவிகள் சாதகமாக அமையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
சிம்மம்
காப்பீடு துறைகளில் ஆதாயம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் மேன்மை உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார நிமித்தமான பயணங்கள் மேம்படும். அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நுணுக்கமான செயல்களில் புரிதல் மேம்படும். விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
தொழில் நிமித்தமாக பயணம் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நம்பிக்கையை மேம்படுத்தும். உலகியல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
விருச்சிகம்
சுபகாரிய எண்ணம் சாதகமாக நிறைவேறும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை விற்பனையில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வரவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
தனுசு
பெற்றோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். தடைப்பட்ட சில நிகழ்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உயர் அதிகாரிகள் மூலம் நன்மைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் திருப்பங்கள் ஏற்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுகளுக்கு மதிப்புகள் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வேலையாட்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
வியாபார பணிகளில் முதலீடுகள் உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனையும், கற்பனையும் மேம்படும். மாற்றமான தொழில் சார்ந்த விஷயங்களில் ஈர்ப்புகள் உண்டாகும். அந்நிய தேச பயணங்களில் சாதகமான சூழல் உண்டாகும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். சிந்தனைப் போக்கில் இருந்த குழப்பங்கள் விலகும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குறும்படம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ரத்தினகிரியை ஆண்ட ரத்தினசேனன் ஒரு பெரிய விருந்து அளித்தான். அப்போது பொழுதைக் கழிக்கத் தன் பக்கத்திலேயே தன் விதூஷகனையும் (அவை விகடகவி) சாப்பிட உட்கார வைத்துக்கொண்டான்.
விருந்தில் லட்டு பரிமாறப்பட்டது. பரிமாறுபவர் தவறுதலாக விதூஷகன் இலையில் மட்டும் லட்டு வைக்க மறந்துவிட்டார். தனக்கு லட்டு இல்லை என்பதைக் கண்ட விதூஷகன், அரசனிடம் தந்திரமாக ஒரு கேள்வி கேட்டான்.
"அரசே, திடீரென இடி இடித்து உங்கள் எல்லோர் தலை மீதும் விழுந்தால் என்ன செய்வீர்களாம்?" என்று கேட்டான்.
அரசன் சிரித்துக்கொண்டே, "எல்லோர் தலையிலும் விழும் இடி உன் மீது மட்டும் விழாதா?" என்று கேட்டான்.
அதற்கு விதூஷகன், "விழாது. நானே ஒரு தனிப்பிறவி. பாருங்களேன்... உங்கள் எல்லோர் இலையிலும் லட்டு விழுந்தது, ஆனால் என் இலையில் மட்டும் விழவில்லையே!" என்றான்.
விதூஷகனின் இந்தச் சமயோசித பதிலைக் கேட்டு ரசித்த அரசன், சிரித்துக்கொண்டே அவனுக்கும் லட்டு கொண்டு வந்து தரும்படி உத்தரவிட்டான்.
திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன.
தாயார் தன் மகளைப் பார்த்து, 'என்ன விஷயம்?' என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள்.
இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, எரியும் அடுப்பிலே அதையெல்லாம் எடுத்து வைத்தார்.
சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்திலே கேரட்டை எடுத்துப் போட்டார். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை போட்டார். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் காப்பித்தூளை போட்டார்.
அந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில், அந்தப் பாத்திரங்களை கீழே இறக்கி வைத்தார் தாயார். கேரட்டையும், முட்டையையும் எடுத்து வெளியே வைத்தார்.
காபியையும் ஒரு கோப்பையிலே ஊற்றினார். மகளே இதெல்லாம் என்ன என்று தெரிகிறதா? என்று கேட்டார் தாயார். அதற்கு அது கேரட், அடுத்தது முட்டை, இது காப்பி என்று கூறினாள் மகள்.
சரி, கேரட்டை தொட்டுப் பார் எப்படியிருக்கு? என்று கேட்டார் தாயார். தொட்டுப் பார்த்து, ரொம்ப மென்மையாக இருக்கு என்று கூறினாள் மகள்.
முட்டையைத் தொட்டுப் பார்த்து எப்படியிருக்கு என்று சொல் என்று கூறினார் தாயார்.
கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று சொன்னாள் மகள். அடுத்தபடியாக காப்பியை எடுத்து குடி என்றார் தாயார்.
காபியை குடித்துவிட்டு, ரொம்ப சுவையாக இருக்கிறது என்று கூறினாள் மகள். எதற்கு இந்த வேடிக்கை? என்று தாயிடம் கேட்டாள் மகள்.
அதற்கு பதில் அளித்த தாய், மகளே கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த மூன்று பொருள்களையும் ஒரே மாதிரி தண்ணீரில்தான் கொதிக்க வைத்தோம்.
ஒரே நேரத்தில் கீழே இறக்கி வைத்தோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. இந்தக் கேரட் ஆரம்பத்திலே எவ்வளவு கடினமாக இருந்தது? ஆனால் தண்ணீரில் கொதிக்க வைத்தவுடன் தன்னுடைய இயல்புக்கு நேர்மாறாக மென்மையானதாக மாறிவிட்டது.
இந்த முட்டைக்குள்ளே திரவ நிலையிலே இருந்த கரு கொதிக்க வைத்ததும் கடினமாக ஆகிவிட்டது. காப்பியைபார் எவ்வளவு சுவையாக மாறிவிட்டது. இது போலத்தான் வாழ்க்கையும் என்றார் தாய்.
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.
‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்', என்றது.
‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு', என்றார் சாது.
தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த சீடனிடம் பேசினார் சாது.
‘சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்', என்றார் சாது.
ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.
‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்', என்றது பறவை.
‘பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார் சாது.
பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. மீண்டும் பறவைகள் திரும்ப வந்தன.
‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்', என்றது பறவை.
சாது யோசித்தார். கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம் கொடுத்தார்.
‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்', என்றார் சாது.
பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன.
‘ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்', என்றது பறவை.
‘பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?' என்று கேட்டார் சாது. . . . . . . பறவை பேசியது.
‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது. ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் “குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”, என்ற உண்மை புரிந்தது', என்று சொல்லி விட்டு பறந்தது பறவை.
சாதுவைப் பார்த்தான் சீடன். சாது பேசினார்.
‘சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது. அதற்குக் காரணம் ‘துணை'. ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. இலக்கை அடைய ‘குச்சி' என்ற கருவி அவசியமாகிறது. அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது. ஆனால், அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது. பறவைகளுக்கு ‘குச்சியை'ப் போல மனிதர்களுக்கு ‘இல்லறம்' கருவியாகிறது. ‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை. ‘இல்லறம்' என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.
குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், ‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'. இதைப் போல, கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது.
இது இல்லற ரகசியம்.
காட்டில், ஒரு சிங்கமும், மானும் நண்பர்களாக இருந்தன. இரண்டும் தங்கள் நட்பிற்காக, ஓர் ஒப்பந்தம் போட்டிருந்தன.
'நீ தான், என் உணவு என்றாலும், ஒரு போதும் உன்னை சாப்பிட மாட்டேன்...' என்றது, சிங்கம்.
'உனக்கு என்ன ஆபத்து வந்தாலும் காப்பாற்றுவேன்...' என சத்தியம் செய்தது, மான். அந்த மானை குருவாக கொண்டிருந்தது, ஒரு சிறிய மான் குட்டி.
இந்நிலையில், நான்கு நாட்களாக சிங்கத்தை காணாமல், பல இடங்களில் தேடி வந்தது, மான்.
சிஷ்யனான குட்டி மான் ஓடிவந்து, 'உங்கள் நண்பர், ஒரு வலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். என்னால், அந்த வலையை அறுக்க முடியவில்லை. உடனே வாருங்கள்...' என அழைக்க, ஒப்பந்தப்படி சிங்க நண்பனைக் காப்பாற்றச் சென்றது, மான்.
பலவீனமான குரலில், 'ஒரு வேடன் விரித்த வலைக்குள் மாட்டிக் கொண்டு, நான்கு நாட்களாக தவிக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் அவன் வந்து விடுவான்; அதற்குள் என்னை காப்பாற்று...' என்றது, சிங்கம்.
தன் வாயால், வலையை மெதுவாக கடித்து அறுக்க ஆரம்பித்தது, மான்.
'இந்த வலையை நீங்கள் வேகமாக ஓர் இழு இழுத்தால் போதும்; ஆனால், மெதுவாக கடிக்கிறீர்களே... வேகமாக இழுங்கள்...' என்றது, குட்டி மான்.
சிரிப்பையே பதிலாக தந்து, மீண்டும் மெதுவாக வலையை கடித்தது, பெரிய மான்.
'சீக்கிரமாக காப்பாற்று...' என கெஞ்சியது, சிங்கம்.
'இப்படி மெதுவாக வலையை கடிக்கிறீர்களே... இது, நண்பனுக்கு செய்யும் துரோகம் இல்லையா... நான், உங்களை போல பெரிய ஆளாக இருந்திருந்தால், ஒரே கடியில் வலையை அறுத்து, சிங்கத்தை காப்பாற்றி இருப்பேன்...' என்றது, குட்டி மான்.
இப்போதும் புன்னகைத்து விட்டு, வலையை மெதுவாகவே அறுத்துக் கொண்டிருந்தது, பெரிய மான்.
சற்று துாரத்தில் வேடன் வருவதை பார்த்ததும், வலையை வேகமாக ஓர் இழு இழுத்தது, மான். வலை அறுந்து, சிங்கம் ஒருபுறமும், மான்கள் இன்னொரு பக்கமுமாக தப்பித்து ஓடின.
'வேடனை பார்த்தவுடன் வேகமாக வலையை அறுத்தீர்களே... அதை முன்பே செய்திருக்கலாமே, எத்தனை முறை சொன்னேன்; ஏன் வலையை மெதுவாக அறுத்தீர்கள்?' என கோபப்பட்டது, குட்டி மான்.
'குழந்தாய்... வேகமாக ஒரே தடவை இழுத்து, என்னால் வலையை அறுத்திருக்க முடியும். ஆனால், உள்ளே இருக்கும் சிங்கம், நான்கு நாட்களாக பட்டினி. 'என்னை மட்டும் சாப்பிட மாட்டேன்...' என்று மட்டுமே ஒப்பந்தம் போட்டிருக்கிறதே தவிர, உன்னோடு அல்ல.
'வெளியே வந்த வேகத்தில் உன்னை சாப்பிட்டிருக்கும். அதனால் தான், வேடன் வரும் வரை வலையை மெதுவாக அறுத்தேன்...' எனக் கூறி புன்னகைத்தது, குருவான பெரிய மான்.
நாம் அனைவருமே அந்த குட்டி மானைப் போல தான், அவசரமாக முடிவெடுக்கிறோம்; நிதானிப்பதில்லை. தான் நினைப்பதே சரி என்ற பிடிவாதம். இதெல்லாம் நமக்கே ஆபத்தாக வரும். அப்போது, குருவானவரே நம்மை காப்பாற்றும் வல்லவர். குரு பக்தியே திருவருளை நமக்கு கூட்டித் தரும். இதனால் தான், சிவபெருமானையே குரு என்று குறிப்பிடுகிறார், திருமூலர்!
நாகப்பட்டினம் பொருள்வைத்தசேரி கிராமத்தில் வசித்த சிற்பி சிறந்த முருக பக்தர். அழகன் முருகனின் சிலையை வடிக்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையாய், சோழ அரசர் (அவ்வூரை அப்போது ஆண்டவர் - பெயர் குறிப்பு இல்லை) சிற்பியை அழைத்து முருகன் சிலை வடிக்க ஆணையிட்டார்.
சிற்பியும் ஆனந்தமாய் பக்தியுடன் முருகன் சிலையை வடிக்கலானார். சிலநாட்கள் சென்றன, அரசன் நகர்வலம் செல்லும் சமயத்தில் சிற்பியின் முருக சிலைக்கு உயிர் ஓட்டம் உள்ளதை கண்டு அதிசயித்தார்.
சோழர்கள் ஆட்சி அதுவும் தன் ஆட்சியில் உருவாக்கப் பட்ட இந்த சிலை போல் வேறெங்கும் இருக்கக் கூடாது என எண்ணிய அரசர், சிற்பியின் கட்டை விரலை வெட்டிவிட்டார்.
சோழமன்னரால் சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி ஊனமாக்க முடிந்ததே தவிர, சிற்பியின் தெய்வீக திறமையை மனதுணிவை ஊனமாக்க முடியவில்லை. வருவது வரட்டும். போவது போகட்டும். யாவும் இறைவனின் விருப்பம் அவனின் திருவிளையாடல் இது. ஆகவே என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக அமையும் என்ற மன தெளிவோடு இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு, அந்த ஊரைவிட்டு வேறுஒரு கிராமத்துக்கு சென்று விட்டார்.
“ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது” என்ற பழமொழிக்கேற்ப சிற்பி புதிதாக குடியேறிய அந்த கிராமத்திலும் ஒரு முருகன் சிலையை செய்ய வேணடும் என்று ஆவல் கொண்டார். அதனால் பல இடங்களின் முருகபெருமான் திருஉருவச்சிலையை செய்ய நல்ல உயிர் ஓட்டம் இருக்கிற கல்லை தேடினார். அவர் எதிர்பார்த்தது போல ஓர் இடத்தில் இரத்தம் போன்ற சிவப்பு ரேகை கொடிகளை கொண்டதும், நீலமும், கருமையும் கலந்ததுமான உயிரோட்டம் உள்ள ஒரு சிறந்த கல்லை கண்டுபிடித்து அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார் சிற்பி.
இந்த கிராமத்தை முத்தரசன் என்ற குறுநில மன்னன் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஒருவர் சென்று, “அரசே நம் ஊருக்கு ஒரு சிற்பி வந்திருக்கிறார். அவருக்கு கையில் கட்டைவிரல் இல்லை. இருந்தாலும் அவர் ஒரு முருகன் சிலையை உருவாக்கி கொண்டு இருக்கிறார். அந்த சிலையை பார்த்தால் முருகபெருமானே நேரில் காட்சி தருவது போல் அத்தனை தத்ரூபமாக இருக்கிறது” என்றார். இதை கேட்ட முத்தரசன், உடனே அதை காணவேண்டும் என்ற பேராவல் கொண்டு அந்த சிற்பியின் இருப்பிடத்திற்கு சென்றார். முருகனே நேரில் நிர்ப்பது போன்று அழகு சிலையைக் கண்டார். முருகனுக்கு கோவில் கட்டும் ஆவல் அவருள் தோன்றியது.
இந்த முருகன் சிலைதான் எட்டுக்குடி சவுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ளது.
ஒருசமயம்,சிற்பி முருகனுக்கான மயில் சிலையை வடிக்கும் போது மயில் பறக்க முயன்றதாம்.
இதை கண்ட சிற்பி எங்கே முருகன் மயிலுடன் பறந்து விடுவாரோ என எண்ணி, மயிலின் கால்களை சேர்த்து கட்டிய நிலையில் சிலை வடித்தாராம். மயிலின் கால் நகத்தை பெயர்த்தும் விட்டாராம்.
ஐந்தரை அடி உயரத்தில் இருக்கும் இந்த முருகன், தன் பக்தர்களின் எண்ணங்களுக்கேற்ப காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.
பரிகாரம் :
இந்த எட்டுக்குடி முருகப் பெருமானை தரிசித்து அவருக்கு வாசனை மலர்களை தருபவர் வாழ்வில் வறுமை நீங்கும்.
சந்தனம் தந்தால் உடல் உபாதைகள் நீங்கும்.
விபூதி காணிக்கை விரோதிகளால் வரும் துன்பம் நீங்கும்.
முருகனுக்கு வஸ்திரம் வழங்கினால், குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
முருகனுக்கு அபிஷேகம் செய்தால் துன்பம் இல்லா வாழ்வு அமையும்
பிரிக்கப்படாத அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரைதான் இவர் பிறந்த ஊர்.
மானாமதுரையில் கோவில் திருவிழாக்களில் போடும் வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம் போன்ற தெருக்கூத்து நாடகங்களை பார்த்து ரசித்து தன் நடிப்பு திறனை வளர்த்துக்கொண்டார், அடுத்த நாள் அது போலவே நடித்துக்காட்டுவாராம் இவர். எஸ்.வி சகஸ்ரநாமம் நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றி பின்பு சினிமாவுக்கு வந்துள்ளார்.
தமிழில் மனோரமா- மற்றும் காந்திமதி எண்ணற்ற தமிழ்படங்களில் பாட்டி, அம்மா கதாபாத்திரம் செய்தவர்கள். இதுபோல கதாபாத்திரம் செய்ததில் இவர்கள் phd பட்டம் பெற்றவர்கள் என சொல்லலாம். அவ்வளவு தத்ரூபமாக நம்ம வீட்டு பாட்டி மாதிரியும், அம்மா மாதிரியும் தத்ரூபமாக நடிப்பார்கள்.
எந்த பெண் நடிகையின் குரலையும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் பெரும்பாலும் மேடையில் பேசி வெளிப்படுத்த மாட்டார்கள், ஆனால் காந்திமதியின் குரலை வெளிப்படுத்தி இருப்பார்கள். என அழகு ராசா என காந்திமதி சொல்வது அப்படியே அள்ளிக்கொள்வது போல் இருக்கும். சித்தாட கள்ளி விறகு ஒடிக்க போனாளாம் கத்தாழ முள்ளு கொத்தோட குத்துச்சாம் என இவர் பேசும் பாடிலாங்வேஜும் சரி, அந்த டயலாக்கை வெளிப்படுத்தும் விதமும் சூப்பரா இருக்கும்.
ஏவிஎம் நிறுவனம் சென்னைக்கு செல்வதற்கு முன் காரைக்குடியில் தான் ஏவிஎம் ஸ்டுடியோவை நடத்தியது. தேவகோட்டை ரஸ்தாவில் அந்த ஸ்டுடியோ இருந்தது. அங்கேதான் வேதாள உலகம் எனும் படம் எடுக்கப்பட்டது. சொந்த மாவட்டத்தில் இருந்த ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட வேதாள உலகத்தில் தான் காந்திமதி முதன் முதலில் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். இருப்பினும் ஜெய்சங்கர் அறிமுகமான இரவும் பகலும் படம் தான் இவர் நன்கு எல்லோருக்கும் தெரிந்த வகையில் அறிமுகமான படம்.
அடிமைப்பெண், தேடி வந்த மாப்பிள்ளை என அடுத்தடுத்து நடித்த காந்திமதி ஏபி நாகராஜன் இயக்கிய திருமலை தென்குமரி படத்தில் ஒரு நல்ல பிராமண பாட்டி வேடத்தில் நடித்திருப்பார்.
ப்ளாக் அண்ட் ஒயிட் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் இவரின் பெயர் தனித்து தெரியவில்லை. பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் இவர் நடித்த குருவம்மா பாத்திரம் தான் அனைவரிடத்திலும் இவரை தெரியவைத்தது. பக்கத்து வீட்டு பெண்களுடன் எதற்கு எடுத்தாலும் லக லக என சண்டை போடும் இயல்பான கிராமத்து பெண் பாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு படமாக புகழடைந்தார். அடுத்து மண்வாசனை படத்தின் கிழவி கேரக்டர். மாந்தோப்பு கிளியே படத்தில் கஞ்ச மகா பிரபுவாக வரும் சுருளிராஜனுடன் இவர் சேர்ந்து செய்திருந்த காமெடி நன்றாக இருந்தது நல்ல புகழை வாங்கி கொடுத்தது.
இப்படி இவரின் புகழ் டாப் கியரில் பறந்தது. எல்லாருக்கும் பிடித்த தெரிந்த கதாபாத்திரம் கரகாட்டக்காரன் பாத்திரம், நகையோட போன தம்பி சண்முகசுந்தரத்தை தவறா நினைச்சு பகைய வளர்த்துக்கொள்ளும் கதாபாத்திரம். அந்த சிரிக்கி மக சிரிக்கி வரட்டும் என இவர் டயலாக் பேசும் பாணி வேற லெவல்.
மல்லுவேட்டிமைனர், சந்தனக்காற்று,பெரிய வீட்டு பண்ணக்காரன், கும்பக்கரை தங்கையா, வால்டர் வெற்றிவேல், ஆணழகன் , முத்து , இது நம்ம பூமி, மாணிக்கம் என எண்ணற்ற படங்களில் அன்றைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருப்பார்.
வால்டர் வெற்றிவேல் படத்தில் நிராதராவன பெண்மணியாக இருந்து ஒரு குடும்பத்தை தாங்கி பிடிக்கும் வேராக இவர் நடித்திருக்கும் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு கட்டத்தில் சத்யராஜ் வீட்டு மாப்பிள்ளையை அரெஸ்ட் செய்ய வரும்போது சத்யராஜை தடுப்பார் காந்திமதி, அப்போ சத்யராஜ் நீ யாரு எங்க குடும்பத்து விசயத்துல தலையிட என்ற வகையில் சொல்ல மனம் கலங்கி போவார்.
அதுபோல் தேவர் மகன் படத்தில் க்ளைமாக்ஸ் தேரோட்ட காட்சிக்கு முன் கமலுடன் சிரித்து பேசி மகிழ்வார், யய்யா எப்படி இருக்க என கமலை ஆரத்தழுவி மகிழ்வார், சிறிது நேரத்தில் ஏற்பட்ட தேர் விபத்தில் கை கால் எல்லாம் தனியாக கிடக்கும் காந்திமதியின் உடலை பார்த்து கமல் கதறி அழுவார். இந்த காட்சியிலும் காந்திமதி சிறப்பாக நடித்திருப்பார்.
அதுபோல் மணிவண்ணன் இயக்கிய சின்ன தம்பி பெரிய தம்பி படத்தில் வீட்டை விட்டு ஓடிப்போன மகள் பல வருடம் கழித்து அழகான பேத்தியுடன் வந்தாலும், நடந்ததை மறந்து சேர்த்துக்கொள்ளாமல் வைராக்கியத்துடன் மகளை ஏற்றுக்கொள்ளாமல் விரட்டியடிப்பது, பின்பு அவர்கள் விபத்தில் காலமானது தெரிந்து தனது மகள் பிள்ளை பேத்தி நதியா மீது பாசத்தை கொட்டுவது என கலக்கி இருந்தார். மகன்கள் இருவர் மீதும் பாசத்தை கொட்டுவது, அதிலும் சத்யராஜ் தவறான வழிகளில் செல்லும்போது அவர் மீது வரும் வெறுப்பு போன்றவைகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
சொல்லும் விசயத்தை கேட்ச் செய்து அதை விட பிரமாதமாகவே நடித்து தருபவர் காந்திமதி அவர்கள். தனது 71வது வயதில் 2011ல் காலமானார் காந்திமதி.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம்: இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அக்கம்பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக்கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிட்டும். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் புது பொறுப்பு, பதவி தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கன்னி: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த தொகை வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்: பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபார ரீதியாக பயணம் செல்வீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.
தனுசு: குடும்பத்தினருடன் வாக்குவாதம் வேண்டாம். உடல்சோர்வு, அலைச்சல் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை அலைந்து திரிந்து வசூலிக்க வேண்டி வரும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்தி தேடி வரும். புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
கும்பம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படவும். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிக்க வேண்டி வரும். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளவும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மீனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மாணவர்களின் கனவு நனவாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள்.











