கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியெவ்ரே (Pierre Poilievre) ஆகியோர் இந்த வாரம் சந்திக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தின் புதிய அமர்வு தொடங்கியுள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை பிற்பகல் X சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், பிரதமரை அவசரமாக சந்திக்க விரும்புவதாக பொய்லியெவ்ரே தெரிவித்துள்ளார்.
“நடைமுறை தீர்வுகளை முன்வைக்கவும், பிற கருத்துகளை கேட்கும் மனப்பான்மையுடன் இணைந்து செயல்பட்டு விரைவான முடிவுகளை எட்டவும் இந்த சந்திப்பு அவசியம்,” என அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவின் சுங்க வரிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படவும், அமெரிக்காவுடன் சுங்க வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் கன்சர்வேட்டிவ் கட்சி தயாராக இருப்பதாகவும் பொய்லியெவ்ரே தெரிவித்தார்.
ஜனவரி இறுதியில் பிரதமர் கார்னிக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதிய பொய்லியெவ்ரே, நீண்ட காலமாக தாமதிக்கப்பட்ட கொள்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்த தனது கட்சியின் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், அந்த கடிதத்திற்கு இதுவரை பதில் வரவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
- காய்ச்சலுக்கு நிலவேம்பு, துளசி குடிநீர்.
- இருமலுக்கு ஆடாதோடைக் குடிநீர்.
- சளியுடன் கூடிய இருமலுக்கு கற்பூரவள்ளி இலை.
- நீரேற்றம் விலக மஞ்சள் புகையை மோந்து பார்த்தல்.
- ஈளை, இருமலுக்கு முசுமுசுக்கை அடை, கண்டங்கத்தரி இலைக் கசாயம்.
- மலச்சிக்கல் தீர நிலாவரைப் பொடி
- வாய்நாற்றம், விக்கல் தீர தனியா விதை
- வாந்தி, சுவையின்மை தீர நெல்லித் துவையல்.
- கழிச்சலை நிறுத்த மாதுளம்பிஞ்சு, பொடுதலைச் சாறு.
- பல்முளைக்கும்போது உண்டாகும் காய்ச்சல்,பேதிக்குத் தாளிசபத்திரி பொடி இரண்டு சிட்டிகை.
- பல் முளைக்கும்போது உண்டாகும் கழிச்சலுக்குத் திராட்சைப் பழச்சாறு.
- சொறி,சிரங்கு சரியாக குப்பைமேனி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்துப் பூச வேண்டும்.
- நீர் எரிச்சல் தீர நன்னாரி ஊறல் நீர்
- வியர்க்குரு விலகப் பனை நுங்கு நீர்
- கண் நோய்க்கு பொன்னாங்கண்ணிக் கீரைக் கடைசல்.
- உடல் உறுதிபெற செவ்வாழைப் பழம்.
- பல் துலக்க ஆலம் விழுது, கருவேலங்குச்சி
- குளியலுக்கு நலுங்குமாவு.
ஒருநாள் அர்ச்சுனன் நன்கு துங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்திலுங்கூட அவன் வாய் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று ஜெபம் செய்து கொண்டே இருந்தது. அவன் உடலின் மயிர்க்கால் தோறும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்ற நாமஜெபம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த அற்புத பக்தியை அறிந்த கிருஷ்ணன் அந்த இடத்திற்கு வந்தார். அவனது பத்தினிமாரும் வந்தனர். நாரதர், சிவன், பிரம்மன் முதலிய தேவரெல்லாம் இந்த அதிசயம் காணத் திரண்டு வந்தனர்.
அர்ச்சுனனின் ஆழ்ந்த பக்தியைக் கண்டு அனைவரும் நாட்டியமாடத் தொடங்கினர். ஆனாலும் அர்ச்சுனனின் ஆழ்ந்த உறக்கம் கலையவில்லை.
தெய்வப்பற்று உடையவர்கள் தம்மை அறியாமலே எப்போதும் இறைவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். அந்த ஜெபம் அவர்கள் உடலின் அணுக்கள் தோறும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். இது பக்தியின் மேலான நிலை. உன்னத நிலை. அந்த நிலையை அடைந்து விட்ட அர்ச்சுனனை அனைவரும் முழுமனதோடு பாராட்டினர்.
காந்தியடிகளும் இந்த மேலான பக்தி நிலையை அடைந்திருந்தார். அதனால் தான் மீர் ஆலம் என்பவன், காந்தியின் தலையில் அடித்த போது ஹேராம்! என்றார். மதன்லாலின் குண்டு வெடித்தபோதும் ஹேராம்! என்றார். கோட்சேயின் குண்டு தனது உயிரையே பறிக்கும் போதும் ஹேராம்! என்றே அவர் வாயானது இறைவன் நாமத்தை உச்சரித்தது.
இதே போன்ற மேலான பக்தி நிலை அடைந்த ஒருவரின் வரலாறு ஒன்றை இங்கே பார்ப்போம்.
பண்டரிபுரத்தில், சோகாமேளர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் குலத்தொழில் செருப்புத் தைப்பது. அத்தொழில் அவருக்கான வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருந்தது. அவர் தொழில் செய்யும் போதும், உணவு உண்ணும்போதும், உறங்கும்போதும் நடக்கும்போதும் அவர் வாய் தானாகவே விட்டல! விட்டல! என்று நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கும்.
ஒரு விபத்தில் அவர் வீடு இடிந்து விட்டது. அவரும் அவருடன் இருந்த சிலரும் இடிபாடுகளில் சிக்கி மாண்டனர். இடிபாடுகளை அகற்றுவதற்குப் பலமாதங்கள் ஆகிவிட்டன. ஞானியாகிய சோகாமேளரின் திருமேனியைக் கண்டுபிடிக்க அவர்தம் சீடர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் ஒருவர் உடலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. எலும்புத் துண்டுகளே எஞ்சியிருந்தன.
இந்த எலும்புகளிலாவது சோகாமேளின் எலும்பைக் கண்டு வழிபட வேண்டுமென்று விரும்பினர் சீடர்கள். ஆனால் எலும்பை அடையாளம் காண்பது எப்படி? செய்வதறியாது சீடர்கள் திகைத்து நின்றனர்.
அப்போது பெரும் ஞானியாகிய நாமதேவர் அங்கு வந்தார். சீடர்களின் திகைப்பைக் கண்டு, அவர்களை அழைத்தார். அவர்கள் தங்கள் குருவின் எலும்பு கிடைக்கவில்லை என்று கூறினர். அதற்கு அவர், சோகாமேளரின் எலும்பை அடையாளம் காண்பது மிகவும் எளிது. ஒவ்வொரு எலும்பாக எடுத்துக் காதோரம் வைத்துப் பாருங்கள். எந்த எலும்பிலிருந்து விட்டல! விட்டல! என்ற ஒலி வருகின்றதோ அதுதான் சோகாமேளரின் எலும்பு என்று அறிந்து கொள்ளலாம் என்றார் நாம தேவர்.
என்ன அதிசயம்! ஓர் எலும்பிலிருந்து, நாமதேவர் சொன்னபடியே, விட்டல! விட்டல! என்ற இனிய ஒலி மெல்லிதாகக் கேட்டது.
வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் திருநாமத்தை உச்சரித்து வந்தமையால், சோகாமேளரின் எலும்பிலும் கூட அந்த ஒலி பதிந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. இதிலிருந்து நாமஜெபத்தின் பெருமையையும் சோகாமேளரின் பரமபக்தியையும் அறிந்து கொள்ளலாம்.
புதையல் எடுத்தது போல் பூரித்துப் போன சீடர்கள் அந்த எலும்பை வைத்துப் பூசித்து வந்தனர். நாமஜெபமும் செய்து வந்தனர். அங்கே தினந்தோறும் விட்டல விட்டல என்ற ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.
குடல் ஒட்டுண்ணிகள்: வயிறு/குடலில் உள்ள ஒட்டுண்ணிகள் அல்லது புழுக்கள் நிறைய அசcomகரியங்களைக் கொண்டுவருகின்றன. இது வயிற்றில் வலிக்கு வழிவகுக்கிறது மற்றும் உங்கள் பசியையும் பாதிக்கிறது. குடல் ஒட்டுண்ணிகளை அகற்ற உதவும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
வயிற்றில் உள்ள புழுக்கள் பெரும்பாலும் இரைப்பைக் குழாயில் உள்ளன. அவை இரைப்பைக் குழாயைப் பாதிக்கின்றன மற்றும் மற்ற உடல் பாகங்களையும் பாதிக்கின்றன. புழுக்கள் அல்லது ஒட்டுண்ணிகள் உடலில் நிறைய அசௌகரியங்களையும் அசௌகரியங்களையும் கொண்டு வருகின்றன. இது வயிற்று வலி, வாந்தி, பலவீனம், இரைப்பை பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
வயிற்றில் ஒட்டுண்ணிகள் இருப்பது, இறைச்சியை சாப்பிடுவது, அசுத்தமான தண்ணீரை குடிப்பது, சுகாதாரமான உணவை உண்ணாமல் இருப்பது மற்றும் மண் மற்றும் அசுத்தமான தண்ணீருடன் தொடர்பு கொள்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். வயிற்றில் உள்ள புழுக்களை அகற்ற மக்கள் பெரும்பாலும் மருந்துக்காக செல்கிறார்கள். இருப்பினும், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற உதவும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. வீட்டு வைத்தியம் பற்றி விரிவாக பேசலாம்.
வயிற்றிலிருந்து ஒட்டுண்ணிகள்/புழுக்களை எப்படி அகற்றுவது?
• மூல பப்பாளி
• பூண்டு
• பூசணி விதைகள்
• வேம்பு
• மஞ்சள்
¶ மூல பப்பாளி
பப்பாளிப் பழத்தில் பப்பேன் என்சைம் உள்ளது, இது இயற்கையில் ஆன்டெல்மிண்டிக் ஆகும். இது வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற உதவுகிறது. இதற்காக, 4 ஸ்பூன் வெந்நீரை எடுத்து, அதில் 1 தேக்கரண்டி, பப்பாளி பழச்சாறு சேர்க்கவும். இப்போது சிறிது தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இதை தினமும் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
¶ பூண்டு
வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற பூண்டு உதவுகிறது. பூண்டு ஒட்டுண்ணி எதிர்ப்பு உணவாகும், இது வயிற்றில் உள்ள புழுக்களை அகற்ற உதவுகிறது. மூல பூண்டில் அமினோ அமிலம் உள்ளது மற்றும் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் தன்மை கொண்டது. தினமும் காலையில் பூண்டு உட்கொள்வது வயிற்றில் உள்ள புழுக்களை அகற்ற உதவுகிறது.
¶ பூசணி விதைகள்
பூசணி விதைகளில் குக்குர்பிடாசின் என்று அழைக்கப்படும் ஒரு கலவை உள்ளது. இது ஒட்டுண்ணி எதிர்ப்பு தன்மையைக் கொண்டுள்ளது, இது வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற உதவுகிறது. 2 தேக்கரண்டி கொதிக்கவும். பூசணி விதைகள் தண்ணீரில். 30 நிமிடங்கள் கொதிக்க வைத்து, தண்ணீர் ஆறியவுடன் உட்கொள்ளவும்.
¶ வேம்பு
வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற வீட்டு வைத்தியம் உதவுகிறது. வேப்பம்பூ சாறு வயிற்றில் உள்ள புழுக்களை அகற்ற உதவுகிறது.
வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற வேம்பு இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேப்ப இலைகளை நசுக்கி அரைத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். நீங்கள் ஒரு வாரத்திற்கு தினமும் குடிக்க வேண்டும் மற்றும் வித்தியாசத்தை பார்க்க வேண்டும்.
¶ மஞ்சள்
உடலில் இருந்து ஒட்டுண்ணிகள் அல்லது புழுக்கள் வெளியேற, ஒருவர் மஞ்சள் பயன்படுத்த வேண்டும். இது ஆண்டிசெப்டிக் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டது. இது வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை எளிதில் அகற்ற உதவுகிறது. ஒரு கிளாஸ் மோர் எடுத்து அதில் சிறிது மஞ்சள் சாறு சேர்க்கவும். இதை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள ஒட்டுண்ணிகள் வெளியேறும்.
இந்த பயனுள்ள வீட்டு வைத்தியம் மூலம் குடல்/வயிற்றில் உள்ள புழுக்களை எளிதில் அகற்றலாம். .
கற்றாழை தலைமுடிக்கு அற்புதமான நன்மைகளைத் தருகிறது. கற்றாழையில் கூந்தலுக்கு தேவையான 100 விதமான சத்துக்கள் உள்ளன.
கற்றாழை ஜெல்லில் உள்ள புரோட்டியோலைடிக் என்சைம் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
கற்றாழை ஜெல் உங்கள் கூந்தலை மென்மையாக பட்டு போன்று மாற்றும். மேலும் இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு அழகான அடர்த்தியாக வளர பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்:
1 கற்றாழை தண்டு சிறிது,
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
தண்டை இரண்டு பகுதிகளாக வெட்டி, கற்றாழை ஜெல்லை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். இந்த
கற்றாழை ஜெல்லின் அரை கப் தேங்காய்
எண்ணெய்யுடன் கலக்கவும். கற்றாழை தேங்காய் எண்ணெயின் விகிதம் 1:1 ஆக இருக்க வேண்டும்.
இந்த கலவையை மிதமான சூட்டில் சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை சூடாக்கவும். அடுப்பை அணைத்து விட்டு குளிர்விக்கவும். கலவையை ஒரு இருண்ட பாட்டில் ஊற்றி, பயன்படுத்துவதற்கு முன்பு சுமார் 2 வாரங்களுக்கு குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
நன்மைகள்:
இந்த வீட்டில் செய்த கற்றாழை தேங்காய் எண்ணெய் பொடுகு மற்றும் முடி உதிர்வுக்கு இது ஒரு சிறந்த எண்ணெய். இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது, பலவீனமான முடியை பலப்படுத்துகிறது. இது முடியை வலுவூட்டி, தலை முடி மற்றும் ஸ்கேல்ப் pH அளவை சமநிலையில் வைத்திருக்கும்.
அரவிந்த் சாமி புகழின் உச்சியில் இருந்தபோதே திரையுலகை விட்டு ஒதுங்கியவர், சமீபத்தில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் (IFFM) தனது வாழ்க்கையின் இருண்ட பக்கத்தைப் பற்றி மனம் திறந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி தற்போது வில்லன் – ஹீரோ என பயணித்து வரும் நடிகர் அரவிந்த் சாமி, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவம் மற்றும் விபத்தை சந்தித்தபோது ஏற்பட்ட போராட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. விளம்பர படங்களில் நடித்தன் மூலம் தளபதி பட வாய்ப்பை பெற்ற இவர், அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் 'ரோஜா', 'பம்பாய்' போன்ற திரைப்படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பான் இந்தியா ஹீரோவாக பிரபலமானார். புகழின் உச்சியில் இருந்தபோதே திரையுலகை விட்டு ஒதுங்கிய அவர், சமீபத்தில் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் (IFFM) தனது வாழ்க்கையின் இருண்ட பக்கத்தைப் பற்றி மனம் திறந்துள்ளார்.
2005-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தில், தண்டுவடக் காயம் (Spinal Injury) அரவிந்த் சாமியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. இதனால் அவர் ஒரு பக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையானார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர் அனுபவித்த உடல் மற்றும் மன ரீதியான வேதனைகள் விவரிக்க முடியாதவை. அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டாம் என்று நான் எடுத்த முடிவால்தான் ஒன்றரை ஆண்டுகள் அந்த வலியைச் சுமந்தேன்," என்று அவர் கூறியுள்ளார்.
இந்த காயத்திற்காக அனைத்து மருத்துவ முறைகளையும் முயன்று பார்த்த அரவிந்த் சாமி, கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத மருத்துவரின் சந்திப்பு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை அலோபதி மருத்துவத்தையே நம்பியிருந்த அரவிந்த் சாமிக்கு, ஆயுர்வேதம் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்தது. ஆயுர்வேத சிகிச்சை தொடங்கிய 3-வது நாளிலேயே அவர் நடக்கத் தொடங்கினார். ஆயுர்வேதத்தில் உள்ள "பழங்கால ஞானம்" தனக்கு உதவியதாக அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம் இது எனது தனிப்பட்ட அனுபவம் மட்டுமே. இதையே எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை. உங்களை கவனிக்கும் மருத்துவர்களின் அறிவுரையை மட்டுமே நீங்கள் பின்பற்ற வேண்டும்," என்று அவர் தெளிவுபடுத்தினார். இந்த 18 மாத கால போராட்டத்தை ஒரு உடல் ரீதியான பிரச்சனையாகப் பார்க்காமல், ஒரு மன ரீதியான சவாலாகவே எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ள அரவிநத் சாமி, வலி மற்றும் நடமாட முடியாத சூழலைத் தாங்கும் சக்தி நம் மனதில்தான் இருக்கிறது. அந்த நேரத்தில் "ஏன் எனக்கு இப்படி நடந்தது?" என்று ஒருபோதும் நான் வருந்தியதில்லை. மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க செஸ், பஸில்ஸ் மற்றும் போர்டு கேம்களை விளைாடினேன். இதன் மூலம் ஒரு நாளைச் சோர்வின்றி கடக்க முடிந்தது என்று கூறியுள்ளர்.
ஒரு கட்டத்திற்கு பிறகு, உடல்நிலை தேறிய அரவிந்த், தனது குழந்தைகளுக்காக நேரத்தைச் செலவிட விரும்பியுள்ளார். ஆனாலும் அவரை அறிமுகம் செய்த இயக்குனர் மணிரத்னம் தான் இயக்கிய கடல் படத்தில் மீண்டும் அவரை நடிக்க வைத்து அரவிந்த் சாமியின் ரீ-என்ட்ரிக்கும் காரணமாக இருந்தார். இது குறித்து பேசிய அவர், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை. மருந்துகள் உட்கொண்டதால் உடல் எடை அதிகரித்திருந்தது, தலைமுடி உதிர்ந்திருந்தது. நான் தயாராக இல்லை என்று அவரிடம் சொன்னேன்.
அந்த சமயத்தில் மணிரத்னத்தின் ஊக்கத்தால் உடல் மற்றும் மன ரீதியாகத் என்னைத் தயார்படுத்திக்கொண்டு 'கடல்' படத்தில் நடிக்க உதவியது என்று கூறியுள்ளர். கடல் படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், அரவிந்த் சாமியை மீண்டும் வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்தது. தற்போது அவர் 'காந்தி டாக்ஸ்' (Gandhi Talks) என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்று மீண்டும் ஒரு வெற்றிகரமான நடிகராக திகழும் அரவிந்த் சாமியின் பயணம் பலருக்கும் ஒரு சிறந்த உத்வேகம் என்று சொல்லலாம்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உங்கள் மீதான அவப்பெயர்கள் விலகும். தம்பதிகளுக்குள் நெருக்கமும் புரிதலும் அதிகரிக்கும். தன வரவுகள் திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
ரிஷபம்
மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். கல்வியில் இருந்த ஆர்வம் இன்மை குறையும். குண நலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
கற்றல் பணிகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். மனதில் இருக்கும் ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். தடைபட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆரோக்கியம் செயல்களில் கவனம் வேண்டும். அச்சம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உருவாகும். உணவு சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். தடைபட்ட பணிகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். செயல்பாடுகளில் மாற்றங்கள் வெளிப்படும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். சாலை பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். உத்தியோக பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். புரிதல் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் ஈடேறும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்களுக்கு தெளிவுகள் பிறக்கும். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் கைகூடும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
தொழில் சார்ந்த எண்ணங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றுவீர்கள். குழப்பங்களில் இருந்து தெளிவுகளை பெறுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் செல்வாக்குகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருத்துவம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். கால்நடை வளர்ப்பு பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். குடியுரிமை கிடைப்பதில் இருந்த வந்த தாமதங்கள் குறையும். மருத்துவத் துறைகளில் லாபங்கள் ஏற்படும். உணவு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத்தன்மை ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். மற்றவர்கள் மூலம் எதிர்பார்த்த சில ஆதாயங்கள் தாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உதாசீன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பரமான சிந்தனைகளை தவிர்த்து சிக்கனமாக செயல்படுவீர்கள். வேலையாட்களிடம் நிதானம் வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். குழந்தைகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மகரம்
பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். இனிமையான பேச்சுக்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இலக்கியம் பணிகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
தனித் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
மீனம்
செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உருவாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். அரசு சார்ந்த ஆவணங்கள் கையாள்வதில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
விசுவாவசு வருடம் தை மாதம் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3.2.2026.
இன்று அதிகாலை 03.37 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று அதிகாலை 12.29 வரை ஆயில்யம். பின்னர் மகம் .
இன்று அதிகாலை 04.30 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம். கரணம் :
அதிகாலை 03.37 வரை கௌலவம். பின்னர் மாலை 03.18 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று அதிகாலை 12.29 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.35 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிப்பில் இந்த ஆண்டும் அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒரு படம் தான் டி55. இப்படத்தை அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். அமரனை போல் இதுவும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
டி 55 திரைப்படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனம்தான் தயாரிக்கிறது. அப்படம் குறித்த அறிவிப்புகள் கடந்த சில தினங்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி டி 55 திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக முதலில் அறிவித்திருந்தனர். அதன் பின்னர் நடிகை ஸ்ரீலிலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
டி 55 திரைப்படத்தில் நடிக்க உள்ள மற்றொரு நாயகி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை சாய் பல்லவியும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அமரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் சாய் பல்லவி. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
அதேபோல் தனுஷ் உடன் சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் கூட்டணி அமைக்க இருக்கிறார் சாய் பல்லவி. இவர்கள் இருவரும் கடைசியாக மாரி 2 திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்படத்தில் தனுஷும் சாய் பல்லவியும் போட்டி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல் இன்றளவும் யூடியூபில் அதிக வியூஸ் அள்ளிய தமிழ் பாடல் என்கிற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருஞ்சீரகத்தை நன்கு இடித்து தூளாக்கி, தேனை சோ்த்து அதனுடன் வெந்நீர் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் குறைந்து சிறுநீர் அடைப்பு குறையும்.
காரட், பாகற்காய், இளநீர் போன்றவற்றில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
வாழைப்பழம், எலுமிச்சை இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரக கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.
கேரட்டை சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை தினமும் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகள் குறையும். ஓரிதழ் தாமரை இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்து மோரில் கரைத்து காலையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்..
- தகவல்கள் இணையத்தில் இருந்து......
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.
இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.
6. தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது
ஒரு நாள் இரண்டு துறவிகள் ஒரு ஆற்றின் கரையில் நடந்து சென்றனர்.
அப்போது அவர்கள், ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு ஊனமான பெண்ணை பார்த்தனர்.
“தயவு செய்து எனக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்ய முடியுமா?” என்றாள்
அதில் ஒருவர் உடனே முன்வந்து, அவளை தோளில் ஏந்தி ஆற்றைக் கடக்கச் செய்தார்.
பின்னர் இருவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
சிறிது நேரம் கழித்து மற்றொரு துறவியின் மனதில் குழப்பம் தோன்றியது.
அவர் கூறினார், “நீ செய்தது தவறு. எப்படி இருந்தாலும், அவள் ஒரு பெண். துறவியான நீ அவளைத் தொட்டு தூக்கி இருக்க கூடாது.”
அதற்கு அந்த துறவி அமைதியாகச் சிரித்து, “நான் அந்த பெண்ணை ஆற்றின் கரையிலேயே இறக்கி விட்டேன்.ஆனால் நீ இன்னும் அவளை உன் மனதில் சுமந்து கொண்டு செல்கிறாய். நீயும் கீழே இறக்கி விடு,” என்றார்.
நித்ய கல்யாணியின் மருத்துவ குணங்கள்: (சுடுகாட்டுமல்லி,நயன்தாரா,சதபுஷ்பி)
நித்ய கல்யாணி செடியின் 10 வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு வகை பூக்களை காம்பு நீக்கி இதனுடன் ஒரு டம்ளர் நீரில் பனங்கற்கண்டு ,மஞ்சள், (கருஞ்) சீரகம் ,மிளகு சேர்த்து கசாயமாக்கி காலை, மாலை 50-100 மி.லி. அளவு குடித்து வரும்போது கீமோதெரபி,ரேடியேசன் தெரபி எடுத்துக் கொள்கின்ற புற்று நோயாளிகளுக்கு நல்ல துணை மருந்தாக செயல்படுகிறது.புற்று செல்கள் மற்ற செல்களுக்கும் பரவாமல் தடுக்கிறது.
நித்ய கல்யாணி பூ 5,இலை 5,வேர் 5கிராம், மிளகு 5 ,சீரகம் இவற்றை ஒரு டம்ளர் நீர் விட்டு கசாயமாக்கி குடித்து வரும்போது சர்க்கரை நோய் தணியும்.சர்க்கரை நோயினால் உள்ளுறுப்புகள் பாதிப்பாகாமல் பார்த்துக்கொள்ளும்.உயர் இரத்த அழுத்த நோயாளிகளும் தினசரி இந்த தீநீர்(கஷாயம்) குடிக்கலாம்.இரத்த அழுத்தம் குறையும்.
ஆசனவாயை சுற்றி கொப்புளங்கள் தோன்றி துளையிட்டு அதன் வழியாக மலம் வெளியேறுவது (பிஸ்ட்டுலா)போன்ற பிரச்சினை உள்ளவர்களும் இந்த தீநீர் குடிக்கலாம்.உள்புண் ஆறும்.மேலும் இந்த தீநீரை ஆர வைத்து ஆசனவாயை கழுவவும் பயன்படுத்தலாம்.வெளிப்புண்கள்ஆறும்.
நித்ய கல்யாணி வேரை சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்து கசாயமாக்கி காலை,மாலை 50-100 மி.லி. குடித்துவர பல்வலி சரியாகும்.இந்த கசாயத்தை வாய் கொப்பளித்துவர பல் ஆட்டம்,ஈறுவீக்கம்,இரத்த கசிவு ,பல்வலி சரியாகும்.
எந்தவித புண்ணாக இருந்தாலும் ஆற்றக்கூடியது நித்ய கல்யாணி பூ கஷாயம்.இதன் இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தைலமாக காய்ச்சி புண்களின் மீது தடவிவர ஆறாத புண்ணும் ஆறும்.(இலையை அரைத்து பற்றாகவும் போடலாம். ) நித்ய கல்யாணி செடியின் கஷாயம் மன உளைச்சல் ,தூக்கமின்மையை போக்கும்.தேனீ கடி ,வண்டுகடி,பூச்சிக்கடிக்கு முதலுதவியாக கடித்த இடத்தை கழுவிவிட்டு இதன் இலையை அரைத்து கடிவாயில் பூசவேண்டும்.
முக்கிய குறிப்பு :-
மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பு பயன்படுத்தவும். மிக சிலருக்கு இந்த கஷாயம் தலை சுற்றல் ,வாந்தி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். முதலில் சிறிதளவு சாப்பிட்டு பரிசோதித்துவிட்டு பின் பயன்படுத்தலாம். இரண்டுவித நிற பூக்களையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். படித்து அறிந்தது
தமிழ்நாட்டில் - மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தினந்தோறும் அழகருக்கு ஐம்பொன்னாலான கல்லில் சுடப்படும் தோசை படைக்கப்படுகிறது. திருப்பதி திருவேங்கடப் பெருமாள், திருவரங்கம் அரங்கநாத பெருமாள், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள், இவர்களுக்கு தென்திசையில் கள்ளழகர் என்று போற்றப்படும் சுந்தரராஜபெருமாள் தலைமை தெய்வமாக விளங்குகிறார். பண்டிகை நாட்களில் மட்டுமே நாம் பலவித பலகாரங்களை உண்டு மகிழ்வோம். ஆனால் பெருமாள் கோயில்களில் கடவுளுக்கு படைக்க அன்னம், அபூபம் என்ற இருவித உணவுகளை மடப்பள்ளியில் சமைப்பது வழக்கம்.வெண் பொங்கல், சக்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் போன்றவை அன்ன உணவு. அபூபம் என்பது எண்ணெயில் தயாராகும் முறுக்கு, அதிரசம், அப்பம், வடை, தோசை போன்றவை.
மற்ற எந்த கோயில்களிலும் இல்லாத சிறப்பு கள்ளழகர் கோயிலுக்கு உண்டு எனக்கூறிய துணை கமிஷனர் ராமசாமி மேலும் கூறியதாவது: இங்கு மூலவருக்கு பாயாச அன்னம் எனப்படும் அக்கார அடிசிலும், அபூபங்களில் புஷ்டா பூபம் என்ற அளவு, சுவையில் உயர்ந்த தோசையும் நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. தினசரி மாலை 6:00 மணிக்கு மேல் நித்ய அனு சந்தானம் என்ற சேவா கால பூஜை நடக்கும். இதில் நாலாயிர திவ்யபிரபந்தங்கள் பாடப்படும். இந்த பூஜை முடிந்தபின் பச்சரிசி ஒரு படி, உளுந்து அரைப்படி, மிளகு, சீரகம், பெருங்காயம், சுக்கு முதலியவற்றை அரைத்து மாவாக்கி ஒரு லிட்டர் சுத்தமான பசு நெய்யில் ஒரே தோசையாக சுடப்படும். இத்தோசை அழகருக்கு படைக்கும் சிறப்பு மிக்க நைவேத்திய பிரசாதம். இது தங்கம், வெள்ளி, துத்தநாகம், இரும்பு, செம்பு ஆகிய ஐம்பொன்னால் ஆன, 2.5 அடி விட்டம், 10 கிலோ எடையுள்ள தோசைக் கல்லில் சுடுவது இதன் சிறப்பு. நுாபுர கங்கை நீரில் அரிசி, உளுந்து, நெய்கலந்து, ஒரு படி மாவு, ஒரு லிட்டர் நெய் ஊற்றி 5 கிலோ எடையுள்ள ஒரே தோசையாக வார்க்கப்படும். இவ்வளவு பெரிய தோசை வேறு எந்த கோயிலிலும் படைக்கப்படுவதில்லை. அழகருக்கு படைக்கப்பட்டு, வேதம் ஓதுவார், அர்ச்சகர், பக்தர்களுக்கு நாழியாக (பாகம்) வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை பல நுாறு ஆண்டுகளாக இன்று வரை உள்ளது. இத்தோசையை பெற பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுவர், என்றார்.
தேவையான பொருட்கள் :
துளசி - 4 தளிர்
புதினா - 4 தளிர்
தண்ணீர் - 200 மில்லி
தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி - தேவையான அளவு
செய்முறை :
முதலில் துளசி, புதினா இரண்டையும் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
பின்பு இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.
நன்கு சாறு இறங்கியதும் வடிகட்டி தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி கலந்து பருகலாம்.
குறிப்பு :
துளசி மற்றும் புதினாவை சம அளவு எடுத்து நிழலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் தேவையான போது ஒரு டம்ளருக்கு 1/2 டீஸ்பூன் வீதம் போட்டு பருகலாம்.
இன்றும் ஒலிக்கும் அதிசயம்… இந்த ஆலயத்தில்!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் – முழையூர் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பரசுநாத சுவாமி திருக்கோவில் ஒரு தேவார வைப்புத்தலம் ஆகும்.
இந்த ஆலயத்தின் சிறப்பு “முழவு” எனும் அபூர்வ வாத்தியத்துடன் இணைந்த ஆன்மிக மரபே!
🥁 “முழவு” – சிவகணங்களின் வாத்தியம்
பழங்காலத்தில் “முழவு” என்பது வேத ஒலிகளை ஒழுங்காக வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒருவகை மேள வாத்தியம்.
ஆன்மிக நம்பிக்கை:
சிவலோகத்தில் பூதகணங்கள் முழவு வாத்தியத்தை வாசித்து சிவபெருமானை துதிப்பதாக புராண மரபுகள் கூறுகின்றன.
குறிப்பாக அக்ஷயதிரிதியை நாளில் பூதகணங்கள் ஆனந்த தாண்டவமாக “முழவு” வாத்தியத்தை வாசிப்பதாக நம்பப்படுகிறது.
ஏன் “முழையூர்” என்ற பெயர்?
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்ஷயதிரிதியை அன்று பாரம்பரிய முறையில் “முழவு” வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
இந்த மரபின் காரணமாகவே இந்த ஊருக்கு “முழையூர்” என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பரசுராமர் – பரசுநாதர் ஆன கதை
புராண மரபின்படி, தந்தை ஜமதக்னியின் கட்டளையின்படி பரசுராமர் தன் தாயை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
அந்த தோஷம் நீங்க முழையூரில் வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து கடும் தவம் மேற்கொண்டார். சிவபெருமானின் அருளால் அவரது தோஷம் நீங்கியது.
அதனால் தான் இங்கு எழுந்தருளிய சிவன் “பரசுநாத சுவாமி” என்று அழைக்கப்படுகிறார்.
லிங்கத்தின் அபூர்வ அமைப்பு
இங்குள்ள லிங்கம் பீஜாட்சர லிங்க வகையை சேர்ந்தது. “நீண்ட கொம்பு – நெடுந்திடை லிங்கம்” என்பது அதன் தத்துவ விளக்கம்.
லிங்கம் வட்ட வடிவில், எட்டு பட்டைகளுடன் அரிய வடிவில் காட்சியளிக்கிறது.
அர்த்தநாரீஸ்வரர் தரிசனம்
பொதுவாக கருவறை சுற்றுச்சுவரில் லிங்கோத்பவர் இருப்பார். ஆனால் இக்கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் அரிய வடிவில் காட்சியளிக்கிறார்.
இது சிவ – சக்தி ஐக்கியத்தை உணர்த்தும் தத்துவ வடிவம்.
பிரார்த்தனை பலன்கள் (நம்பிக்கையின்படி)
✨ திருமணத் தடைகள் நீங்க
✨ குழந்தைப் பாக்கியம் பெற
✨ கல்வியில் சிறந்து விளங்க
✨ மன அமைதி & தைரியம் பெற
பரசுநாத சுவாமியை பிரார்த்திக்கலாம்.
அக்ஷயதிரிதியை சிறப்பு
அக்ஷயதிரிதியை அன்று பக்தர்கள் மல்லிகைப்பூக்களை தாங்களே தொடுத்து இறைவனுக்கு சமர்ப்பிப்பது ஒரு சிறப்பு நேர்த்திக்கடன்.
மார்கழி திருவாதிரை மகாசிவராத்திரி அக்ஷயதிரிதியை இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
கோவில் காலம்
இந்த ஆலயம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
அது ஒரு சாப்பாடு போட்டி!
பத்து மாடி! ஒவ்வோரு மாடியிலும் இலை போட்டு சாப்பாடு பரிமாறி தயாராக வைத்திருப்பார்கள்!
ஒரு மாடியில் சாப்பிட்டு முடித்த பின் அங்கு ஒரு பணியாளன் இருப்பான் சாப்பிட்டதற்கு அடையாளமாக ஒரு கல்லை மேலே இருந்து கீழே போடுவான் அப்படி என்றால் அவன் முழு சாப்பட்டையும் சாப்பிட்டு விட்டான் என்று அர்த்தம்.
போட்டி ஆரம்பித்தது!
முதலில் ஆப்ரிக்கா நாட்டுக்காரன் சென்றான் முதல் மாடி சாப்பாட்டை முடித்து, இரண்டாவது மாடி சாப்பாட்டை சாப்பிட்டான் பணியாள் கல்லை வெளியே போட்டான்! மூன்றாவது மாடி சாப்பாட்டை அவனால் சாப்பிட முடிய வில்லை! தோற்று வெளியே சென்றான்!
அடுத்து இங்கிலாந்து நாட்டுக்காரன் சென்றான் நான்கு மாடி சாப்பாட்டை முடித்து, பணியாள் கல்லை வெளியே போட்டான்! ஐந்தாவது மாடி சாப்பாட்டை அவனால் சாப்பிட முடிய வில்லை! தோற்று வெளியே சென்றான்!
அடுத்து நம்ம ஆளு சென்றான் ஒன்பது மாடி சாப்பாட்டை சாப்பிட்டான்! இன்னும் ஒரு மாடி சாப்பாடு தான் பாக்கி! பத்தாவது மாடியில் இருக்கும் பணியாளுக்கு நம்ம ஆளு ஜெயிக்க போகிறான் என்று தகவல் வந்தது ஆவல் மிகுதியில் நம்ம ஆளு வருவதற்குள் தன்னிடம் உள்ள அந்த கல்லை தூக்கி போட்டான்.
இப்ப நம்ம ஆளு பத்தாவது மாடியில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டான். சாப்பிட்ட பிறகு கல் எங்கே என்று கேட்க!
அவனோ நீ எப்படியும் ஜெயித்து விடுவாய் என்று தெரியும் அதனால் நீ வருவதற்கு முன்பே கீழே போட்டு விட்டேன் என்று சொல்ல !
நம்ம ஆளுக்கு கோபம் வந்தது. இது கள்ளாட்டம் இதை நான் ஏற்று கொள்ள முடியாது ! நான் மறுபடியும் முதல் மாடியில் இருந்து சாபிடுறேன் என்றான்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். சூழ்நிலைக்கேற்ப பேசி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பலதரப்பட்ட விஷயங்களால் மனதில் அமைதியின்மை உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
ரிஷபம்
நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சொத்துக்கள் விற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. நினைவாற்றலில் இருந்த மந்ததன்மை விலகும். பயண விஷயங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
மனதில் புதுவிதமான இலக்குகளும் அதை சார்ந்த அலைச்சலும் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான செயல்களில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான துறைகளில் மதிப்புகள் அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செஞ்சிவப்பு
சிம்மம்
சுபகாரிய தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
உறவினர்கள் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் புதிய அனுபவமும் உத்வேகமும் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் தோன்றும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான எண்ணங்களும் சிந்தனைகளும் பிறக்கும். உத்தியோக தொடர்பான பணிகளில் விவேகம் அவசியமாகும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். காப்பீடு பணிகளில் நிதானத்துடன் செயல்பட்டால் சாதகம் உண்டாகும். வியாபார நிமித்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
கருத்துக்களில் கவனம் வேண்டும். தம்பதிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணி பொறுப்புகளால் கோபம் தோன்றி மறையும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருள்களை விவேகத்துடன் கையாளவும். செய்யும் முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி
தனுசு
கூடுதல் பொறுப்புகளால் மதிப்புகள் உயரும். மறதி பிரச்சனைகள் ஓரளவு குறையும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். எதிர்கால சிந்தனைகள் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கும்பம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உத்தியோக பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். அசையா சொத்துக்களில் ஈர்ப்பு உண்டாகும். வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான மந்த தன்மை ஏற்படும். வர்த்தக பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பயணம் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். நம்பிக்கை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்




















