மார்ச் 6-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘வித் லவ்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘வித் லவ்’. செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் ‘வித் லவ்’. இப்படத்தின் மூலமாக நாயகனாகவும் அறிமுகமானார் ‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இப்படத்தின் வெற்றியினால் தற்போது நாயகனாக நடிக்க பல்வேறு வாய்ப்புகள் அபிஷனுக்கு வந்து கொண்டிருக்கிறது.
25 நாட்கள் திரையிடப்பட்டு 35 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக ‘வித் லவ்’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் மூலம் படக்குழுவினருக்கு நல்ல லாபம் கிடைத்தது. இதனால் எம்.ஆர்.பி நிறுவனம் மற்றும் ஜியோன் பிலிம்ஸ் இணைந்து அடுத்தடுத்த படங்களை திட்டமிட்டு வருகிறது.
கனடிய பிரதமர் மார்க் கார்னி ,அவுஸ்திரேலியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
கனடிய நேரப்படி திங்கள்கிழமை மாலை மற்றும் அவுஸ்திரேலிய நேரப்படி செவ்வாய்க்கிழமை நண்பகலில், அவர் சிட்னி நகரை அடைந்தார்.
சிட்னியில் தொழில்துறை தலைவர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ள அவர், பின்னர் கார்னி புதன்கிழமை Lowy Institute சிந்தனைக் குழுமத்தில் உரையாற்றவுள்ளார். வியாழக்கிழமை தலைநகர் கன்பெராவுக்கு சென்று அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
வார இறுதிக்குள் அவர் அவுஸ்திரேலிய பிரதமர் அன்தனி அல்பானீஸை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்காத கார்னியின் அலுவலகம், இந்தியாவில் நடைபெற்ற அவரது சந்திப்பிற்குப் பின்னர் திட்டமிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பையும் ரத்து செய்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஒட்டாவா மற்றும் கன்பெரா இடையே ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அதன்படி, கனடா தனது ஆர்க்டிக் பிராந்திய பாதுகாப்பிற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து அமைப்பை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
கங்கைக் கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன். தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி. தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம் கெடுமாம்.
ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார். ''எவ்வளவு பாக்கியசாலி அவர்'' என்று அவரை தூர இருந்தே இரு கரம் கூப்பி கிழவன் வேண்டுவான்.
அவனைப் பார்த்தாலே தூர நகர்வார் அவர். அவனோடு பேசுவார். ஒருநாள் அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை கிழவனிடம் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னார். நன்றாக ரிப்பேர் செய்து கொடுத்தான்.
அவனருகே ஒரு அணா காசு விட்டெறிந்தார். அருகே வந்து தரமுடியாதே. அவன் வணங்கி ''சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன். நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும் வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்''.
உன் காசு எனக்கு வேண்டாம். இதை என்ன செய்வது? நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் அதை நான் ஏற்க முடியாது என்கிறார் அந்த பண்டிதர்.
ஐயா இந்த ஏழைக்கு ஒரு உதவி நீங்கள் செய்வீர்களா? இதோ இந்த கங்காமாதாவை அனுதினமும் வணங்குகிறேன் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நான் அளித்த காணிக்கையாக நீங்களே அதை அவளுக்கு சமர்ப்பிக்க முடியுமா.?
என்ன சொல்கிறாய். இந்த ஓரணாவை கங்கையில் நீ அளித்ததாக நான் எறிய வேண்டும் அவ்வளவு தானே? சரி
பண்டிதர் கங்கையில் இறங்கினார் வணங்கினார். மந்திரங்கள் ஜெபித்தார். அம்மா கங்கா தேவி, இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவன் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது. ஏற்றுக்கொள் என்று சொல்லி வீசி எறிந்தார்.
நுங்கும் நுரையுமாக ப்ரவாஹமாக ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய கை வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக அன்பாக பெற்றுக் கொண்டது. கங்கையின் முகம் தோன்றியது பேசியது.
பண்டிதரே, எனக்கு மிக்க மகிழ்ச்சி, இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த கிழவரிடம் கொடுங்கள் என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்னக் கற்கள் பதித்து ஒளிவீசிய தங்க வளையலை, கொடுத்தாள். பண்டிதன் அசந்து போனான். ஆச்சர்யத்தில் நடுங்கினான்.
அதை தனது மேல் துண்டில் பத்திரமாக முடிந்து வைத்து கொண்டான். கிழவினிடம் ஒன்றுமே அது பற்றி சொல்லவில்லை. வீட்டிற்கு போய் மனைவிடம் '' கமலா, இதோ பார்த்தாயா, நான் எதற்குமே பிரயோஜனம் இல்லை, ஏட்டுச் சுரைக்காய் என்பாயே'' இன்று என்ன நடந்தது தெரியுமா உனக்கு?
''என்ன பெரிதாக சாதித்து விட்டீர்கள்? உங்களை போல் உதவாக்கரைகளுடன் பேசிவிட்டு தேங்காய் மூடி வாங்கி கொண்டு வந்திருப்பீர்கள். சீக்கிரம் கொடுங்கள். இன்றைய பொழுது துவையலிலாவது கழியட்டும். '' என்றாள் மனைவி.
''அசடே, இதைப் பார். என் வேதத்தை மதித்து கவுரவித்து அதால் பெற்றது. உனக்காக நான் சம்பாதித்தது'' என்று கங்காதேவி தந்த வளையலை தந்தான் பண்டிதன். கமலாவுக்கு தன்னையோ, தன் கண்களையோ நம்ப முடியவில்லை. கையில் போட்டு அழகு பார்த்தாள். மின்னியது. கண் கூசியது. என்ன ஒருவளையல் தானா? இன்னொன்று?''
''அடுத்த முறை கங்கையை கேட்டு வாங்கி தருகிறேன்'' என்று சமாளித்தான் பண்டிதன். இந்த ஒன்று எதற்கும் உதவாதே . நாமோ ஏழைகள். திருடர்கள் கொள்ளையர்களால் இதனால் உயிர் போனாலும் போகலாம். எனவே அவன் மனைவி கெட்டிக்காரி என்ன சொன்னாள்?
''இதோ பாருங்கோ, இந்த ஒண்ணை வச்சுண்டு என்ன பிரயோஜனம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அழகான ஒத்தை வளை கையில் போட்டுக் கொண்டு அலைந்தால் எல்லாரும் சிரிப்பார்கள். பேசாமல் இதை ராஜாவிடம் கொடுத்துவிட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வாருங்கள். கொஞ்சகாலம் நிம்மதியாக சௌகர்யமாக வாழலாம்.
ராஜாவிடம் சென்றான். கொடுத்தான். ராஜா வாங்கி பார்த்து மகிழ்ந்தான். ஒரு பை நிறைய பொற்காசுகள் கொடுத்தான். ராணியிடம் ஆசையோடு அந்த வளையலை கொடுத்தான். மிக்க மகிழ்ச்சி அந்த ராணிக்கு. அவள் கைக்கு அது பொருத்தமாக அமைந்தது. அப்போது தான் அவளுக்கு தோன்றியது. ''இன்னொன்று எங்கே?''
ராஜாவிடம் ''இன்னொன்றும் வேண்டுமே எங்கே'' என்று கேட்டாள் . ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதனை அழைத்து வர செய்தான்.
''ஹே ப்ராமணா. இன்னொரு வளையல் எங்கே? ஏன் அதை தரவில்லை? வீட்டில் வைத்திருந்தால் கொண்டு வந்து உடனே கொடு. ராணி கேட்கிறாள்''
பிராமணன் தயங்குவதை பார்த்த ராஜாவுக்கு கோபம் வந்தது. ''என்ன விளையாடுகிறாயா என்னிடம். இன்னும் ரெண்டு மணிநேரத்தில் இன்னொரு வளையலுடன் நீ வரவில்லை என்றால் உன் உயிர் உனதல்ல .ஜாக்கிரதை'' என்றான். ராஜாவின் கட்டளை பண்டிதனுக்கு எம பயத்தை தந்ததால் ஓடினான். எங்கே? கங்கைக்கரைக்கு.
அந்த கிழவன் வழக்கம்போல் அதிகாலையில் கங்கைக் கரைக்கு தூர நின்று இரு கரம் கூப்பி கண்களை மூடி கங்கையை வணங்கினான். அருகிலே தேங்கி நின்ற நீரில் கொஞ்சம் எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டான். அது தான் அவனுக்கு கங்காஜலம். செருப்பு தைக்க தேவையான ஜலத்தை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தான்.
திடீரென்று தன முன்னே பண்டிதன் ஓடிவந்து நின்றதும் வணங்குவதும் அவனுக்கு ஏதோ ஒரு அதிர்ச்சியை தந்தது.
''சாமி நீங்க என்ன செய்றீங்க?"' என்ன ஆச்சு உங்களுக்கு? நான் தானே உங்களை எப்போவும் வணங்கறது?''
''என்னை மன்னிச்சுடுப்பா. நான் துரோகி. கங்கா மாதா உனக்கு கொடுத்த பரிசை திருடி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போனவன் அதை வித்து ராஜாகிட்ட நிறைய பணம் வாங்கினேன். இப்போ என் உயிரே காற்றிலே ஊசல் ஆடுது என்று விஷயத்தை சொன்னான் பண்டிதன்.
''ஆஹா அப்படியா. நமக்கு யார் உதவி செய்வாங்க இப்போ ? எப்படி இன்னொரு வளையல் கிடைக்கும்? கங்காமாதாவையே கேட்போம்.
கிழவன் கண்ணை மூடினான். தனக்கு எதிரே இருந்த அழுக்கு பாத்திரத்தில் நிரம்பிய நீரை வேண்டினான். அம்மா கங்கா நீ எனக்கு பரிசாக ஒரு வளை கொடுத்ததற்கு நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே. பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா. அவர் பிழைக்கட்டும்'' என்று தனது கையை அந்த ஜலத்தில் விட்டான்.
மீண்டும் பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையல் அந்த கிழவனின் அழுக்கு பாத்திரத்திலிருந்து தோன்றியது.
அப்புறம் என்ன நடந்ததா??
பண்டிதன் ராஜாவிடம் அதை எடுத்து போகவில்லை. தனது உயிரைப் பற்றி கவலைப் படவில்லை. வீடு, கமலா எல்லாவற்றையும் மறந்தானா , துறந்தானா எதுவோ ஒன்று. அங்கேயே கிழவனின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தான். சீடனாக அருகில் அமர்ந்தான். விஷயம் பரவியது. ராஜாவும் அவன் மனைவியும் ஓடி வந்தார்கள். கிழவனை வணங்கினார்கள். அரண்மனைக்கு கூப்பிட்டார்கள்.
என் கங்காமாதா தரிசனம் ஒன்றே போதும் என்று அவர்களை திரும்பி வணங்கினான் கிழவன்
உண்மையான பக்தி என்பது ஆத்மார்த்தத்தில் நம் உள்ளே இருப்பது...
வெளியே காட்டிக்கொள்ளும் சடங்குகளிலோ..சம்பிரதாயங்களிலோ..அறிவிலோ..பணத்திலோ..அளவிலோ..ஆடம்பரத்திலோ..ஒருபோதும் இல்லை..
கட...உள்..=
"கடந்து" போ "உள்ளே"
..என்பதுதான் கடவுள்..
அதை. நமக்குள் வெடிக்க வைப்பதுவே கோயில்களும்..சம்பிரதாயங்களும்..
குளிர் காலத்தில் குளிரினாலோ.. இல்ல.. கோடையில் வேர்த்துச் சளிப் பிடித்தாலோ.. காற்றுக் காலத்தில் தூசிகளினால் சளிப் பிடித்தாலோ.. அதிகம் வேர்க்க வேர்க்க வேலை செய்வதால் ஏற்படும் சளியினாலோ - இப்படி எதுவாக இருந்தாலும்
இந்த மருந்துப் பொடி உங்களுக்கு மிகவும் உதவும். எந்தத் தட்பவெப்ப நிலைக்கும் இது ஒரு அருமையான மருந்து.
ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். எல்லா மருந்தும் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ளாது. அதை நன்றாக மனதில் வைத்து கொண்டு சிறிது செய்து சாப்பிட்டுப் பார்த்து ஒத்துக் கொண்டால் தொடர்ந்து சாப்பிடுங்கள்.......
தேவையான பொருட்கள் :
1.சுக்கு
2.அக்கரா
3.சித்தரத்தை
4.நறுக்குமூலம்
5.கருடக்கொடி
6.அதிமதுரம்
7.கிராம்பு
8.வால்மிளகு
இவை அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம் - இவை எல்லாம் தடித்த வேர்கள். அவை பிளக்குமாறு தட்டிக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கனமான வாணலியை வைத்து, நன்கு சூடேற்றி, அடுப்பை சிம்மில் (Keep the gas stove in the sim position) வைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் போட்டு வறுத்துக் கொள்ளவும். (கை பொறுக்கும் சூடு போதும்) .
ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்து, சலித்து வைத்துக் கொள்ளவும்.
இதோடு
தூதுவளை,
வெற்றிலை,
ஆடாதோடை ,
நொச்சி ,
துளசி
இவற்றை ஒவ்வொரு கைப்பிடி எடுத்து நன்கு சுத்தம் செய்து,
நிழலில் உலர்த்திப் பொடித்து மேலே குறிப்பிட்டிருக்கும் மருந்துப் பொடியுடன் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி பாட்டில் அல்லது எவர்சில்வர் டப்பாவில் வைத்துக் கொள்ளவும். Plastic containerகளைத் தவிர்க்கவும் .
காலை, மாலை - இருவேளை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடவும்.
ஒரு கால் மணி நேரம் வேறெந்தப் பானமோ, உணவோ எடுத்துக் கொள்ளக் கூடாது.
மற்றபடி பத்தியம் ஏதும் கிடையாது. எப்பேர்ப்பட்ட சளியையும் அறுத்து வெளிக் கொணர்ந்து விடும்.
நிச்சயமாகப் பக்க மற்றும் பின் விளைவுகள் மிகவும் குறைவு என்பதை அனுபவபூர்வமாக அறுதியிட்டுக் கூற முடியும்.
சாப்பிடும் முறை மற்றும் அளவு:
இந்தப் பொடியைத் தேனில் கலந்து பெரியவர்கள் மட்டுமல்ல.. சின்னக் குழந்தைகளுக்கும் வயதுக்கு ஏற்றார் போல் தைரியமாகக் கொடுக்கலாம். குழந்தைகளுக்குக் கூடக் கொஞ்சம் தேன் கலந்து கொடுக்க வேண்டும்.
தேன் வீட்டில் இல்லை என்றால் அரை டம்ளர் தண்ணீரில் தேவையான அளவு பனைவெல்லம் அல்லது வெல்லம் போட்டு, அது கரைந்ததும் அரை டீஸ்பூன் மருந்துப் பொடியைச் சேர்க்கவும். அப்படியே பொங்கும்.. அடுப்பைத் தணித்து விடுங்கள் : மூன்று முறை பொங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
சிறிது ஆறியதும் நன்றாக வாயில் எல்லாப் பக்கமும் படும்படி சுவைத்துக் குடிக்கவும் : விழுங்கும் போது தொண்டையில் நன்றாகப் படும்படி மெதுவாகக் குடிக்கவும்.
இந்த மருந்திற்குப் பத்தியம் ஏதும் கிடையாது. ஆனால் குடித்த பின் ஒரு அரைமணி நேரம் எதுவும் சாப்பிடாமல்.. குடிக்காமல் இருப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.
இதில் முக்கியமாக நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம். மீண்டும் சொல்கிறேன்.. எல்லாருக்கும் எல்லாம் ஒத்துக் கொள்ளும் என்று சொல்ல முடியாது. அதனால் பொதுவாக எந்த நாட்டு மருந்து எடுத்துக் கொண்டாலும் முதலில் சிறிது சாப்பிட்டுப் பார்த்து உங்கள் உடலுக்கு ஒத்துக் கொண்டால் தொடர்ந்து சாப்பிடலாம். இல்லை என்றால் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் சாப்பிட்டுப் பார்க்கலாம்.
எந்த மருந்தை எடுத்துக் கொண்டாலும் நம்பிக்கையோடு சாப்பிட வேண்டும்.. அது மிகவும் முக்கியம்.
தகவல் : இணையம்
பீஷ்மர் மரணமடைவதற்கு முன்பு , அவரிடமிருந்து நீதி , நேர்மை , அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார் .
தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார் .
பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி " தாங்கள் எங்களுக்கு நீதி , நேர்மை , அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள் .
அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர் , " நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ? " என்று கடுமையாகக் கேட்டார் .
" துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது , கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும் ? தர்மம் தெரிந்த பீஷ்மர் , அந்தச் சபையில் அமர்ந்து , வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர , துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா ?
இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது ? " என்று சொல்ல , பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து அமைதியாக இருந்தார்கள் . பீஷ்மர் பேசினார் . "
பாண்டவர்களே, பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை . அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும் . அப்போதுதான் உங்களுக்கும் , உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும் .
கேளுங்கள் துரியோதனன் , அன்னமிடுவதில் உயர்ந்தவன் . எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உபசரிப்பான் . அத்தனை தர்மவான் அவன் ஆனால் , அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல. அவன் தானம் செய்வதில் உள்நோக்கம் இருக்கும்.
சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு , அவர்களை தன் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வான் . உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க , வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள் . இதற்கு மகா தர்மவானான சல்லியன் ஓர் உதாரணம் .
" ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் , மற்றவர்களுக்கு அன்னமிட்டால் , அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும் . நான் துரியோதனன் இட்ட சோற்றை இதுநாள் வரையில் உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது . அவனது பாவத்தில் பங்கெடுத்து விட்டேன்.
அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அடிமை போல் அமர்ந்திருந்தேன் ."
" ஆனால் இப்போது , பாரதப்போரில் வீழ்ந்து கிடக்கும் நான் பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது .
அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன . இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது . எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவன் . ஆகவே கேளுங்கள் " என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார் .
அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள் , சாதுக்கள் , பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் யார் என்ன என்று தெரியாமல் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.
உணவிடுதல் உயர்ந்த அறம் என்பது அனைத்து மதத்திலும் உள்ள நீதி.
அதை தீய எண்ணம் இல்லாமல் செய்வதே மிகவும் சிறந்த அறம்.
திருவளுவரும் ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் என்று உணவிடுதலை குறிப்பிடுகிறார்.
அப்படிப்பட்ட உயர்ந்த அறமாகிய உணவை பசித்தோருக்கு தருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் நல்ல நோக்கம் இருந்தால் தருபவர் பெறுபவர் இருவருக்கும் நன்மை செய்யும்.
ஒரு ஊரில் ராமசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஊருக்கு சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். இதனால் வருத்தமடைந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி புலம்பினார்.
சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியுடையது என தெரிந்துகொண்ட குரு அதை அவரிடம் கொடுத்தார்.
குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தான்.அவன் குருவிடம், நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திருப்பி தரவேண்டுமென குருவிடம் கூறினார்.
குருவோ மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும்.
இதனால் இந்த குழப்பத்திற்கு முடிவுகட்ட நண்பர்கள் இருவரும் ஊர் தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், ராமசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய் என கேட்டார். அதற்கு அவர் 40 தங்க நாணயங்கள் என பொய் கூறினான். இப்போது ஊர் தலைவர் குருவை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை பார்த்தீர்கள் என்றார் அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார்.
இருவரின் பதிலையும் கேட்ட ஊர்த்தலைவர் ராமசாமியை பார்த்து, குரு கண்டறிந்திருப்பது வெறும் 30 தங்க நாணயங்கள், நீ தொலைதிருப்பதோ 40 தங்க நாணயங்கள் எனவே இது உன்னுடையதாக இருக்க முடியாது. இனி யாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன், இப்போது நீ கிளம்பலாம் என்றார்.
இப்போது குருவை பார்த்த தலைவர் நீ கண்டுபிடித்திருப்பது ராமசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துகொள்ளலாம் என்றார்.
திருடனுக்கு தேள் கொட்டிய கதை போல, ஊர்த்தலைவரின் தீர்ப்பை கேட்ட ராமசாமிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி வருத்தபட்டார். தனது தவறை உணர்ந்த அவர், இனி சுயமில்லாத நேர்மையான மனிதராக வாழவேண்டும் என முடிவுசெய்தார்
சர்க்கரை நோயாளிகள் கோவைக்காயை வாரம் இருமுறை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதன் இலை உடலுக்கு குளிர்ச்சியளிக்க கூடியது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து. இலையை அரைத்து சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய் உள்ளவர்கள் பூசிக்குளிக்கலாம்.
சொரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் இந்த இலையின் சாறை எடுத்து வெண்ணெய்யில் கலந்து பூசலாம். காய்ச்சல் உள்ளவர்கள் கோவை இலை சாற்றை உடலில் பூசிக்கொள்ளலாம்.
வாய்ப் புண், வயிற்றுப் புண்ணை போக்க, கோவைக்காய் இலை சாற்றை இரண்டு தேக்கரண்டி அளவு பருகவேண்டும். வயிற்றுப் போக்கு ஏற்படும்போது இதன் சாறை இரண்டு தேக்கரண்டி மோரில் கலந்து பருகவேண்டும். பூச்சிகடித்தால் அந்த இடத்தில் இந்த சாறை தேய்க்கலாம்.
உடலில் ஏற்படும் மூட்டு வீக்கம் மற்றும் அடிப்பட்ட வீக்கங்களுக்கு கோவை இலையை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி கட்டவேண்டும். வீக்கங்கள் குறைந்துவிடும். கோவைக்காயில் பீட்டாகரோட்டின் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளன.
உடல் எடையை குறைக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. கோவைப்பழம் வாய்ப்புண்கள் மற்றும் பல் வலிக்கு நல்ல மருந்தாகும். பழத்தை மென்று வாய்கொப்பளித்தால் போதுமானது. கோவைக்காய் கொடியின் வேர் 20 கிராம் எடுத்து, 200 மி.லி. நீரில் கொதிக்கவைத்து குடித்தால் நீர்கட்டு நீங்கும். பித்தம் அதிகரிப்பதால் மூட்டுகளில் உண்டாகும் குத்தல் மற்றும் வீக்கத்திற்கும் இந்த நீரை பருகலாம்
அரிப்பு ஏற்படுவதற்கு வறண்ட சருமம் ஒரு காரணமாகிறது. உடல் உஷ்ணம், ,சரியாக நீர் அருந்தாமை, உடல் தூய்மையை சரிவர கடைபிடிக்காமல் இருப்பது, அதிக வியர்வை மேலும் வெளிச் சூழ்நிலையில் இருக்கும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் அரிப்பு போன்ற காரணங்கள் இருக்கின்றன.
மிக மிக எளிதானது சுத்தமான தேங்காய் எண்ணெயை அரிப்பு உள்ள இடங்களில் தேய்த்து விடுவது.
உடல் அரிப்பு சூரணம்.
சரக்கொன்றை பூ-100 கி.
சீமை அகத்தி இலை—50 கி
குப்பைமேனி இலை—50 கி
நவச்சாரம்-10 கி
எலுமிச்சை பழச்சாற்றில் மேற்கூறியவற்றை சேர்த்து நன்கு மைய அரைத்து உடலில் பூசி, ஒரு மணி நேரம் கழித்து கடலை மாவு ,சீயக்காய் போட்டு குளித்து வந்தால் இந்த அரிப்பு சரியாகும்.. தொடர்ந்து 10 நாட்கள் செய்வது நல்லது.
படை, சொறி, சிரங்கு, அரிப்பு, நமைச்சல்,ஊரல் போன்ற தோல் வியாதிகள் நீங்கும்.
குப்பைமேனி இலை
குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள், கல் உப்பு சேர்த்து, அரைத்து, அரிப்புள்ள இடங்களில் பூசி, காய்ந்த பின் குளிக்க, நிவாரணம் கிடைக்கும்.
வேப்பிலை
வேப்பிலையோடு வெங்காயம் சேர்த்து அரைத்து, அரிப்புள்ள இடங்களில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்து கழுவினால் அரிப்பு நீங்கும்.
நன்னாரி வேர்
நன்னாரி வேரை அரை லிட்டர் நீரில், நன்றாக கொதிக்க வைத்து, அது 200 மில்லியாக சுண்டியதும், காலையில் 100 மி, மாலையில் 100 மி என குடித்து வர அனைத்து வித தோல் வியாதிகளும் தீரும்.
அருகம்புல் சாறு
அருகம்புல் சாறு எடுத்து குடிக்கலாம்.மேலும், சாற்றை அரிப்பு இடத்தில் பூசலாம்.
கற்றாழை
கற்றாழை யின் சதைப் பகுதியை எடுத்து அரிப்பு பகுதிகளில் பூசி வந்தால் நிவாரணம் பெறலாம்.
ஒவ்வாமை
சில உணவுப் பொருட்கள் முக்கியமாக கத்தரிக்காய்,, கருவாடு போன்றவையினாலும் அரிப்பு ஏற்படும். இத்தகைய உணவுப் பொருட்களை கண்டறிந்து அவற்றை தவிர்க்கலாம்.
குளியல் பொடி
இப்போது எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் உடலில் தேய்த்து குளிப்பதற்கென்றே மூலிகைப் பொடிகள் விற்கின்றன.இவற்றை வாங்கி பயன்பெறலாம்.
கடலைமாவு, பச்சைப்பயறு மாவு, கஸ்தூரி மஞ்சள் பொடி போட்டு குளித்து வந்தால் தோல் வியாதிகள் நீங்கும்.
பொடி தயாரிக்க
வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சைப்பயறு, கடலைப்பருப்பு, துளசி, வெந்தயம்,அருகம்புல், எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், சீயக்காய், கொஞ்சம் பச்சரிசி போட்டு சீயக்காய் அரைக்கும் அரவையில் அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் தேய்த்து குளித்து வந்தால் சருமம் பொலிவு பெறும்.
தகவல் : இணையம்
ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம் அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார்.
திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து மன்னரை காயப்படுத்தி அவர் தூக்கத்தை கலைத்தது. சுற்றி இருந்த காவலர்கள் நாலா பக்கமும் சென்று ஒரு நடுத்தர வயது பெண்ணை பிடித்து, அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள். மன்னர் அந்த பெண்மணியை பார்த்து. "ஏனம்மா என் மீது கல்லை எறிந்தாய்? அது என் தூக்கத்தை கலைத்ததுடன் என்னையும் காயப்படுத்தி விட்டது" என்றார்.
அதற்கு அந்த பெண் அரசரை பார்த்து. "மன்னர் பெருமகனே, நான் காட்டில் விறகு வெட்டியும், அவைகளை பொறுக்கியும். நாட்டில் விலைக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கிறேன். வரும் வழியில் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்தேன். என் குழந்தைகளின் நினைவு வந்தது, பிள்ளைகளின் பசியை போக்குவது பெற்றவள் கடமை அல்லவா? அந்த பழங்களை பறிப்பதற்காக ஒரு கல்லை எடுத்து மரத்தில் எறிந்தேன். தாங்கள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்தது தூரத்தில் இருந்து எனக்கு தெரியவில்லை. நான் எறிந்த அந்த கல்லானது உங்கள் மீது பட்டு உங்கள் தூக்கத்தை கலைத்ததுடன், உங்களையும் காயப்படுத்தி விட்டது. இந்த தவறுக்கு நான் தான் காரணம் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்" என்று வேண்டி நின்றாள்.
மன்னர் அந்த பெண்மணியை பார்த்து "பெண்ணே, நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றாய். அது உன் சிறந்த பண்பு உன்னை மன்னித்து விட்டேன்", என்று கூறியதோட அப்பெண்ணுக்கு இரண்டு பசுக்களையும், கை செலவுக்கு பணத்தையும் கொடுக்க ஆணையிட்டார்.
சுற்றி இருந்த காவலர்கள் மன்னரை நோக்கி, "அரசே, தங்களை கல்லால் அடித்தவளை மன்னித்ததுடன் அவளுக்கு பரிசும் தருகிறீர்கள் இச்செயல் எங்களுக்கு வியப்பு அளிக்கிறது" என்றனர்.
காவலர்களை பார்த்து மன்னர் "காவலர்களே, அறிவற்ற மரம் கல்லால் அடித்தால் பழம் தருகிறது. அவ்வாறு இருக்க அறிவுள்ள நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?. மேலும் அவள் வேண்டுமென்று என்னை கல்லால் அடிக்கவில்லை. பழங்களை உதிர்க்கவே கல்லால் அடித்தால் அது தவறுதலாக என் மீது பட்டு என்னை காயப்படுத்தியது. அவள் தான் செய்த தவறுக்கு வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டாள். அது மட்டுமல்ல அவள் தன் பிள்ளைகளின் பசியை போக்கவே மாத்தின் மீது கல் எறிந்தாள். அது தாயாகிய அவள் கடமை அல்லவா?. அவள் அவளுடைய பிள்ளைகளுக்காக அவ்வாறு செய்தாள். நான் என் குடிமக்களுக்காக அவளுக்கு பரிசு வழங்கினேன்” என்றார். காவலர்கள் மன்னரின் விளக்கம் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பது சிறந்த குணமாகும். எனவே, நாம் தெரியாமல் தவறு செய்திருந்தால் உரியவரிடம் மன்னிப்பு கேட்டு பழக வேண்டும். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது சிறந்தது.
ஹார்மோன் பிரச்சனைகள் உள்ளவர்கள் மாதுளம் பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஹார்மோன் குறைபாடுகளுக்கு நல்ல ஒரு மருந்து மாதுளை தான்.
மேலும் கர்ப்பபையில் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் உதவிகரமானதாக இருக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் தன்மை உடையது.
செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமென்றால் மாதுளை பழம் சாப்பிட்டால் போதும். இவ்வாறு இருக்கும் மாதுளை பழம் மாரடைப்பை தடுப்பதற்கும் அரு மருந்தாக பயன்படுகிறது.
அனைவரும் மாதுளை பழத்தை சாப்பிட்டு விட்டு அதனை தோலை தூக்கி எறிந்து விடுவார். அவ்வாறு தோலை தூக்கி எறியாமல் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்தத் தோலை நன்றாக கழுவி வைத்துவிட்டு தண்ணீரில் போட்டு டீ போல் காய்ச்சி குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதால் ரத்த கொழுப்பு அதிகரிப்பது தடுக்கும். இதயம் ஆரோக்கியமாக காணப்படும். மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அனைத்தும் குறையும்.
தருண் விஜய், சாயாதேவி நாயகன் நாயகியாக நடிக்கும் படம், ‘மாஸ்டர் பிளான்’. உத்ரா புரொடக் ஷன்ஸ், டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ.ஹரி உத்ரா எழுதி இயக்குகிறார்.
திவ்யா ஜெகத், அப்புகுட்டி, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வினோத் சாகர், அருண் மைக்கேல் டேனியல், சம்பத் ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அபி அத்விக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஜே.அலி மிர்சாக் இசை அமைக்கிறார்.
“அரசியலைச் சேர்ந்தவர்களால் ஏற்படும் பிரச்சினையில் நாயகன் நாயகியின் குடும்பம் சிக்கிக் கொள்வதும், அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார்கள் என்பதையும் டார்க் ஹியூமர் வகையில் இப்படம் பேசும்” என்றது படக்குழு.
ஏப்ரல் இறுதியில் தொடங்க இருக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது. தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், பி.எல்.தேனப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வேலையாட்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் இருக்கவும். சிறுதொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஆதரவான சூழல் உண்டாகும். புதிய இலக்குகளை பற்றிய மாறுபட்ட அணுகுமுறைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். தெளிவுகள் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ரிஷபம்
விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கலை பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வங்கி சார்ந்த துறைகளில் பொறுப்புகள் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
எதிலும் மன மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். விளையாட்டுகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனை போக்கில் மாற்றங்கள் உண்டாகும். சுப காரிய தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
சிம்மம்
சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்கள் வேண்டும். ஆரோக்கிய செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
பணிகளிலிருந்து வந்த நெருக்கடியான சூழல்கள் குறையும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உணவு துறைகளில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும் முதலீடுகளும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் அமைதி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
விருச்சிகம்
கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் மேம்படும். தன வரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய உறவினர்களின் சந்திப்புகள் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
குடும்பத்தில் சிறு வேறுபாடுகள் தோன்றி மறையும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைக்கவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபார பணிகளில் சிறு சிறு மந்தங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
எதிலும் கோபம் இன்றி செயல்படவும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். புதிய கண்ணோட்டம் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். முக்கியமான வேலைகளை மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் நீங்களே செய்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கை துணை வழியில் அனுசரித்து செல்லவும். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். வரவுகளால் ஆபரண சேர்க்கை உண்டாகும். வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகங்களால் உற்சாகம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மீனம்
கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விசுவாவசு வருடம் மாசி மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3.3.2026
இன்று மாலை 05.52 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.
இன்று காலை 08.07 வரை மகம். பின்னர் பூரம்.
இன்று காலை 11.00 வரை சுகர்மம். பின்னர் திருதி.
இன்று காலை 06.10 வரை பத்தரை. பின்னர் மாலை 05.52 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று காலை 06.27 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது, எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.
நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது. என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்….?
நெஞ்சம் பதறியது!!! என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் … நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி, வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி, பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.
ஈரமான முயலைப் பார்த்ததும் “அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக
இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்’
என மனதிற்குள் நினைத்து என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.
நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்,
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா” என்று கேட்டார்.
எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,
“தெரியாதே என்ன விஷயம்…?” என நான் சொல்ல, பக்கத்து வீட்டுக்காரர்,
“கடந்த சில நாட்களுக்கு முன்னாடி எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல்
இறந்து விட்டது.”என்றார்
“அப்படியா…!!!??” “ஆமாம்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, எவனோ ஒரு லூசுப்பய …
நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்குள்ளே போட்டிருக்கான்” ஹிஹிஹி என்று சிரித்தார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். அயல்நாட்டு பொருட்கள் மீது ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். குழப்பம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
எதிர்பாராத பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு செயல்பாடுகளில் அலைச்சல்கள் காணப்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மதிப்புகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர் வழியில் ஆதரவுகள் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகள் எண்ணியவை நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தோற்றப்பொழிவில் மாற்றங்கள் ஏற்படும். மனம் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். பேச்சுத் திறமையால் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
சிம்மம்
பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் திருப்தி ஏற்படும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு நிலை மேம்படும். மனதளவில் புதிய பக்குவம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தேக தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பயணங்களால் அனுபவம் உண்டாகும். பணி நிமித்தமாக இடமாற்றம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்க்க முயல்வீர்கள். எண்ணியது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
சக ஊழியர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடன் நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் குறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விருச்சிகம்
புதிய நபர்களால் மாற்றமான சூழல்கள் அமையும். உறவினர்கள் வழியில் சுபிட்சம் ஏற்படும். சொந்த ஊர் பயண வாய்ப்புகள் கைகூடும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். அரசு துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
தனுசு
தாய் வழி உறவுகளிடம் ஒற்றுமை ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை யோசிப்பீர்கள். வீட்டின் தேவைகள் அறிந்து நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு குறித்த ஆலோசனை கிடைக்கும். கடன் முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். அரசு காரியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான பயணம் கைகூடும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கும்பம்
குடும்ப உறுப்பினர்கள் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். இணைய துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகளில் இருந்த தாமதங்கள் குறையும். பொன் பொருள் மீதான ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் வழியில் எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். சேமிப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விசுவாவசு வருடம் மாசி மாதம் 18 ஆம் தேதி திங்கட்கிழமை 2.3.2026
இன்று மாலை 6.28 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.
இன்று காலை 08.16 வரை ஆயில்யம். பின்னர் மகம்.
இன்று பிற்பகல் 12.46 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.
இன்று காலை 07.00 வரை கௌலவம். பின்னர் மாலை 06. 28 வரை வனிசை. பின்பு பத்தரை.
இன்று காலை 8.16 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம்.
ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும்.
சங்க காலச் சோழ மன்னர் கரிகால் பெருவளத்தான் காவேரி கொள்ளிடம் நீர் போக்கைச் சரி செய்து நீர் பாசனத்தைச் சீரமைக்க காவேரியின் மீது ஓர் அணை கட்டினார்.
இந்த அணை நவீன தொழில் நுட்பத்திற்குச் சவாலாக அமைந்துள்ளது.
இதன் கட்டுமானத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் இதை கிராண்ட் அனிக்கட் என்று பாராட்டினர்.
இக்கட்டுமானம் களிமண்ணில் புதைந்த மிகப் பெரிய பாறாங்கற்களால் ஆனது இதன் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி மற்றும் ஆழம் 15 லிருந்து 18 அடிவரை கொண்டது.
இது நதி நீர் வெளியேறும் பகுதியில் பாம்பு போல் வளைந்த நிலையில் கட்டப்பட்டது.
தற்போதுள்ள பெரிய கல்லணை 1806 இல் ஆங்கிலேய பொறியாளர்களால் நிர்மாணிக்கப்பட்டது.
பல வருடங்களாக நடந்த மிகப் பெரிய முயற்சியின் காரணமாக அடித்தளம் அமைத்து அணையின் பாதைகள் உயர்த்தப்பட்டு சாலைவசதி ஏற்படுத்தித் தந்தனர்.
இப்பணி முடிவுறும் தறுவாயில் ஏற்பட்ட சில விநோதமான நிகழ்வுகள் அங்கிருந்த பொறியாளர்களுக்கும் மற்றும் பெருமளவில் கூடியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் வியப்பைத் தந்தன.
ஒரு நாள் காலையில் பணி ஆய்வுக்காக வந்த கீழ் நிலை அதிகாரி ஒருவர் அணையின் 19வது மதகு உடைந்திருந்ததைக் கண்டார்.
இந்த விபத்து கட்டுமானத்தில் பயன்படுத்திய பொருள்களின் தரக்குறைவு காரணமாக ஏற்பட்டது என யூகித்தனர்.
எனவே அதே கட்டுமானம் மீண்டும் ஒரு மாத காலத்தில் மிகுந்த கவனத்துடன் கட்டி முடிக்கப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே சோதனையாக அந்த வளைவான மதகுப் பகுதி மீண்டும் உடைந்து விழுந்து கல்லும் மண்ணுமாகக் காட்சியளித்தது.
இதனால் வாயடைத்து நின்ற பொறியாளர்களும் கட்டுமானப் பணியாளர்களும் மீண்டும் ஏற்பட்ட அழிவைக் குறித்து விளக்கம் எதுவும் அளிக்க முடியாமல் திணறினர்.
இரண்டாவது முறையும் உடைந்து விழுந்த நிகழ்வுக்குப் பிறகு அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்த கீழ்நிலை அதிகாரி முதன் முறையாக மதகு உடைந்து விழுந்த அன்று இரவு தனக்கு ஏற்பட்ட கனவு பற்றிய விபரத்தை வெளிப்படுத்தினார்.
அன்றிரவு என் கனவில் ஆஞ்சநேய ஸ்வாமி தோன்றி நான் நதியின் அடியில் மணற்படுகையில் உள்ளேன்.
என்னை வெளிக்கொணர்ந்து அங்கேயே எனக்குக் கோயில் அமைக்காவிடில் இடிந்து விழுவது தொடரும் இதை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.
ஆங்கிலத் தலைமைப் பொறியாளர் இதை நம்பவில்லை. அன்றிரவே மிகவும் ஆச்சரியமான விதமாக அந்தத் தலைமைப் பொறியாளருக்குத் தொடர்ந்து பயமுறுத்தும் கனவுகளாகவே வந்தன.
அவரது கனவில் குரங்குகள் அவரை நெருங்கி நகங்களால் பிறாண்டி காது செவிடாகும் படிச் சத்தம் போட்டுத் துன்புறுத்தின.
இரவு முழுவதும் ஏற்பட்ட பயங்கரமான கனவுகளால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பொறியாளர் மறுநாள் காலையில் தன் நண்பர்கள் குழுவை அழைத்துத் தனது கனவுகளைப் பற்றி விளக்கினார்.
அந்த ஆங்கிலேய நண்பர்களும் இந்தக் கனவுகள் பற்றிய தம் அவ நம்பிக்கையைத் தெரிவித்ததோடு அவர் அந்தக் கீழ்நிலை அதிகாரி கூறிய நம்பமுடியாத கனவுகளை அடிமனத்தளவில் நம்பியதன் விளைவாகவே இது போன்று ஏற்பட்டுள்ளது என்றும் கூறினர்.
நண்பர்களின் வாக்கு அவருக்கு அப்போதைக்குத் தேவைப்பட்ட ஒரு சமாதானத்தைத் தந்தாலும் அந்த அமைதியும் அல்பாயுசாகவே அமைந்தது. அன்றிரவே ஆஞ்சநேயர் பொறியாளர் கனவில் தோன்றி எனக்குக் கோயில் எழுப்பாமல் நீ இந்த அணையைக் கட்டியுள்ளாய்.
நானே இந்த அணையைக் காப்பவன்.
அதனால் அந்தக் கட்டுமானத்தை இடித்துச் சுக்குநூறாக்கினேன்.
மீண்டும் நீ அணையைக் கட்டினாய் அதுவும் நான் இருக்குமிடத்திற்கு மேலாகவே அமைந்துள்ளது.
இதுவும் நிற்காது. நான் இருக்கும் இந்த இடத்தில் ஒரு வளைவை ஏற்படுத்தி என்னைக் காணும் இடத்தில் ஒரு கோவில் அமைத்தால் நீ வெற்றி பெறுவாய் என்றார்.
மறுநாள் பொறியாளர் அங்கிருந்த இடிபாடுகளை அகற்றி அதே இடத்தில் நதிப்படுக்கையைத் தோண்ட உத்தரவிட்டார்.
அங்கே அந்தப் பத்தொன்பதாவது மதகு அமைந்திருந்த இடத்தில் ஆஞ்சநேய ஸ்வாமியின் கற்சிற்பம் காணப்பட்டது.
அந்த ஆங்கிலேயப் பொறியாளர் தீர்மானமாக அங்கு ஒரு கோயிலைக் கட்ட உத்தரவிட்டார்.
பெரிய அளவில் கும்பாபிஷேகமும் நடந்தேறியது.
அணைக்கட்டும் கனவில் அவருக்குச் சொல்லப்பட்ட விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்தக் கோவில் இன்றும் சென்று தரிசிக்கும் வகையிலுள்ளது பாலத்திலிருந்து இரண்டு அடுக்குப் படிகளைக் கடந்து கீழிறங்கிச் சென்றால் அந்தக் கோயிலை அடையலாம்.
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விஜய் தேவரகொண்டா குறித்தும் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது.
ராஷ்மிகா மந்தனாவின் இந்த திருமண பதிவு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பதிவு (போஸ்ட்) சாதனையை முறியடித்துள்ளது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, விராட் கோலி வெளியிட்ட பதிவு 20 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை புரிந்தது.
தற்போது ராஷ்மிகாவின் திருமணப் பதிவு 25 மில்லியன் லைக்குகளை பெற்று பெரும் சாதனை புரிந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த கிஷோர் மோண்டல் வெளியிட்டு, வைரலான ரீல்ஸ் 51 மில்லியன் லைக்ஸ் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு ராஷ்மிகாவின் திருமண பதிவு லைக்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, நடைபெற்று வரும் போரில் கனடா இராணுவம் பங்கேற்காது என்று கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த மோதலில் கனடா இராணுவமாக ஈடுபடுவதற்கான திட்டம் எதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.
இந்த நடவடிக்கைகளுக்கான இராணுவ தயாரிப்பிலும் திட்டமிடலிலும் கனடா பங்கேற்கவில்லை எனவும், எதிர்காலத்திலும் இராணுவ ரீதியாக இணைவது எதிர்பார்க்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை கனடா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.












