Quote of the Day

பழமொழிகள்: அடாது செய்தவன் படாது படுவான்.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 270
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: மறைமுகமாக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து ஒதுக்கு வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு ஆதரவு கூடும். தந்தைவழி உறவினர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு உண்டு. வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் வீண் அலைச்சல் டென்ஷன் விலகும்.

மிதுனம்: குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். குடும்பச் சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய மின்சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.

கடகம்: புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

சிம்மம்: மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்சினை களுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வீடு தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு சகல வசதிகளுடன் வீடு அமையும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

துலாம்: உங்களின் நிர்வாகத்திறன் பளிச்சிடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கலைப்பொருட்கள் சேரும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் கிடைக்கும்.

விருச்சிகம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் நிலவிய பிரச்சினைகள் நீங்கும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

தனுசு: சவாலான காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த தொகை கைக்கு வரும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மகரம்: குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இழுபறிக்குப் பிறகே முடியும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

கும்பம்: உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பணவரவு திருப்தி தரும். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மீனம்: கனிவானப் பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். உறவினர் கள், நண்பர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். விருந்தினர் வருகை யால் வீடு கலகலப்பாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வியாபாரத்தில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள்.

  • 65
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 23 ஆம் தேதி புதன்கிழமை 9.9.2026.

இன்று பிற்பகல் 12.33 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று மாலை 04.03 வரை ஆயில்யம். பின்னர் மகம்.

இன்று அதிகாலை 01.56 வரை பரிகம். பின்னர் பின்னர் இரவு 11.26 வரை சிவம். பிறகு சித்தம்.

இன்று அதிகாலை 01.30 வரை கரசை. பின்னர் பிற்பகல் 12.33 வரை வணிசை. பின்பு இரவு 11.44 வரை பத்திரை. பிறகு சகுனி .

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=644&dpx=2&t=1788921973

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 64

Good Morning....

  • 65
  • 63
·
Added a news
·

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட தீவிரமாக வெப்பமடையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு ஆகும். ஆனால், அதன் தாக்கம் உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடும்.

அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. வெறும் தகவலாக அதைக் குறித்து அறிந்துகொண்டவர்கள், அதன் தாக்கத்தை கண்ணால் பார்த்துகொண்டிருக்கிறோம்.

இந்நிலையில், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவை, எல் நினோக்களின் காட்ஸில்லா என அழைக்கிறார்கள்.

அதாவது, இம்முறை நிகழும் எல் நினோ பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.

ஏற்கனவே, எல் நினோ காரணமாக ஏற்பட்ட மழையால், சிலி நாட்டில் கடந்த வார இறுதியில் 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மத்திய அமெரிக்காவில், ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் பனாமா ஆகிய பகுதிகளில் வறட்சி காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பனாமா கால்வாயில் போதுமான தண்ணீர் இல்லாததால் கப்பல் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

கனடாவைப் பொருத்தவரை, எல் நினோவின் தாக்கத்தால், குளிர்காலத்தின் அளவு குறைவாக இருக்கும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.

குறைவான பனி, மேற்கில் அதிக மழை, அதனால் வசந்த காலத்தில் ஏற்பட இருக்கும் பாதிப்புகள், சீக்கிரமாக காட்டுத்தீ உருவாகும் அபாயம் மேலும் கூடுதல் வறட்சி ஆகியவற்றை கனடா எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள் அவர்கள்.

பரந்த, வளமான புல்வெளி சமவெளிகளில் பயிர்களை வளர்த்து, கால்நடைகளை வளர்க்கும் வழக்கம் கொண்ட விவசாயிகளுக்கு இம்முறை ஏமாற்றம் ஏற்படலாம்.

ஆக மொத்தத்தில், எல் நினோவால் அதிகரித்த வெப்பம் காரணமாக 2024ஆம் ஆண்டுதான் வரலாற்றிலேயே அதிக வெப்பம் கொண்ட ஆண்டு என்றார்கள்.

ஆனால், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவால், 2027ஆம் ஆண்டு அந்த சாதனையை முறியடிக்கலாம் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.

  • 136
·
Added a post
·

ஒரு பெரிய குருவிடம் ஒரு சீடன் கல்வி கற்று வந்தான். அவனுக்குத் தன் மீது ரொம்பவும் பெருமை; தான் எல்லாப் புத்தகங்களையும் கற்றுவிட்டதாகவும், உலகில் தனக்குத் தெரியாத விஷயங்களே இல்லை என்றும் நினைத்து அகந்தையுடன் திரிந்தான்.

​ஒரு அமாவாசை இரவு. சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. குரு தன் சீடனிடம், "இந்த இருட்டில் நான் வெளியே சென்றுவிட்டு வருவதற்கு எனக்கு ஒரு விளக்கு வேண்டும். போய் ஒரு விளக்கை எடுத்து வா," என்றார்.

​சீடனும் ஓடிப்போய் ஒரு சிறிய களிமண் விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரி போட்டு, அதை எரியச் செய்து குருவிடம் கொண்டு வந்து நீட்டினான்.

​குரு அந்த விள்ககை வாங்கிக் கொண்டு சீடனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்:

"இந்த விளக்கு எரியத் தொடங்குவதற்கு முன்பு எங்கிருந்து வந்தது? இப்போது ஒளிந்திருக்கும் இந்த வெளிச்சம், விளக்கு எரிவதற்கு முன்பு எங்கே இருந்தது?"

​சீடன் திகைத்துப் போனான். சற்று யோசித்துவிட்டு, "தெரியவில்லை குருவே. விளக்கு இல்லாதபோது வெளிச்சம் எப்படி இருந்திருக்க முடியும்?" என்றான்.

​புன்னகைத்த குரு விளக்கைத் தன் கையில் ஏந்தியவாறு சொன்னார்:

"பார் மகனே! இந்த வெளிச்சம் எங்கேயோ தூரத்தில் இருந்து வரவில்லை. இந்த விளக்குக்குள் ஊற்றப்பட்ட எண்ணெய், போடப்பட்ட திரி, அதை எரியச் செய்த தீப்பொறி—இவை அனைத்துமே இந்தச் சின்ன விளக்குக்குள் ஏற்கனவே மறைந்திருந்தன. நாம் ஒரு சிறிய தீயைக் கொண்டுவந்தபோதுதான், அதற்குள் இருந்த வெளிச்சம் வெளியே வெளிப்பட்டது.

​மனிதனின் ஆன்மாவும் அப்படித்தான். ஞானம், அன்பு, அமைதி எல்லாமே மனிதனுக்குள்தான் ஏற்கனவே இருக்கின்றன. உலகப் படிப்புகளும் அனுபவங்களும் அந்தத் தீப்பொறியைப் போல, அவனுக்குள் உறங்கிக் கிடக்கும் பேராற்றலை வெளிக்கொணர்கின்றனவே தவிர, வெளியிலிருந்து எதையும் புகட்டுவதில்லை."

​வெளிச்சம் என்பது விளக்குக்கு வெளியேயிருந்து வருவதில்லை; அது விளக்குக்குள் இருக்கும் எண்ணெயும் திரியும் சேரும்போது இயல்பாக உருவாவது.

​அதுபோலவே, மகிழ்ச்சியும் அமைதியும் நமக்குள் தான் இருக்கின்றன. அதை வெளியே தேடுவதை விட, நமக்குள்ளேயே தேட வேண்டும்.

நம்மிடம் உள்ள திறமைகளும் நல்ல குணங்களும் எப்போதோ மறைந்திருக்கும் ஆற்றல்கள்தான். சரியான சூழலும் முயற்சியும் அமையும்போது, அந்த அகவிளக்கு போல பிரகாசமாக எரியத் தொடங்கும்.

  • 138
·
Added a post
·

முன் காலங்களில் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து, புகுந்த வீட்டுக்கு முதன் முதலாக அனுப்பும்பொழுது, நிறைய சீர் வரிசைகளோடு அனுப்புவார்கள். சிலர் சீர் வரிசைகளோடு, தங்களது பெண்ணுக்கு உதவியாக, வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஒரு வேலைக்காரப் பெண்ணையும் அனுப்புவார்கள். இப்படி வீட்டு எடுபிடி வேலைகளைச் செய்வதற்கு செல்வோர்களை, 'சீதன வெள்ளாட்டி' என்பர்.

திருவரங்கத்தில் வைணவத் தொண்டு புரிந்து வந்தவர் ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள். இவர் ஸ்ரீ ராமாநுஜரின் மானசீக குரு ஆவார். ஸ்ரீ ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர் பெரிய நம்பி ஆவார். இவரது மகள் அத்துழாய். இவள் திருமணம் முடிந்து, புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது, தன்னால் முடிந்த அளவில் சீதனப் பொருட்களோடு தனது மகள் அத்துழாயை அனுப்பி வைத்தார் நம்பி.

சீதனப் பொருட்களில் திருப்தி அடையாத மாமியார், குறையுடன் மருமகளோடு காலத்தை ஓட்டினார். தாய் பாசம் அறியாத அத்துழாய், மாமியாரை தனது தாய் போல எண்ணி குடும்பத்தில் இருந்து வந்தார். நாட்கள் சென்றன.

ஒரு நாள், காவிரி நதியில் நீராட அக்கம்பக்கத்து தோழிகள் இல்லாமையால், தனது மாமியாரை துணைக்கு அழைத்தாள் அத்துழாய். இத்தனை நாள் மனதில் பொருமிக்கொண்டிருந்த மாமியார், வார்த்தைகளால் சுட்டாள். “என்னை ஏன் அழைக்கிறாய்? உன் தந்தை அனுப்பிய சீதன வெள்ளாட்டியை கூட்டிப் போயேன்" என்றாள். மாமியாரின் மனம் அறிந்த அத்துழாய், பொறுமை காத்தாள்.

மாமியார் ஒரு வேலையாக பக்கத்து கிராமத்துக்குச் சென்ற சமயம், அவள் அனுமதியோடு தனது தந்தையைக் காணச் சென்றாள் அத்துழாய். தந்தையிடம் தனது வருத்தத்தைக் கூறினாள். பெரியநம்பி, அந்த விஷயத்தை ஸ்ரீ ராமாநுஜரிடம் உரைத்தார். ஸ்ரீ ராமாநுஜர், தனது ஆச்சாரிய குருவான பெரியநம்பிக்கு உதவ எண்ணம் கொண்டார்.

ஸ்ரீ ராமாநுஜர் தனது பிரதான சிஷ்யன் முதலியாண்டானை அழைத்து, “அத்துழாய் புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது, நீ அவளுடன் சீதன வெள்ளாட்டியாக செல்” என்று கூறினார்.

முதலியாண்டான் ஸ்வாமி, அத்துழாயுடன் அவள் புக்ககம் சென்றபோது, அங்கு அவள் மாமியார் கிராமத்திலிருந்து திரும்பவில்லை. முதலியாண்டான் சென்ற உடனேயே தனது வேலைகளை ஆரம்பித்து விட்டார். வீட்டின் ஒட்டடைகளை நீக்கி, வீட்டைக் கழுவி சுத்தம் செய்தார். வீட்டைச் சுற்றிலும் இருந்த குப்பை கூளங்களை நீக்கி தூய்மை செய்தார். துணிமணிகளைத் துவைத்து, உலர்த்தி, காய்ந்ததை மடித்து வைத்து... என்று பல வேலைகளில் அத்துழாய்க்கு உதவி புரிந்தார்.

மூன்று நாட்கள் கழித்து வந்த மாமியார், தனது வீடும், சுற்றுப்புறமும் வெகு நேர்த்தியாக பளிச்சென இருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றாள். வீட்டில் ஆராதனை செய்ததால், தெய்வீக மணத்தோடு இருந்ததைக் கண்டு மகிழ்ந்தாள். வீட்டுக்குள் நுழைந்த மாமியார், வீட்டின் பின் பகுதியில் முதலியாண்டான் பாத்திரங்களை சுத்தம் செய்வதைக் கண்டு அதிர்ந்தாள்.

முதலியாண்டான், ஸ்ரீ ராமாநுஜரின் சிஷ்யர் என்பதை அவள் அறிவாள். சீதன வெள்ளாட்டியாக அவர் வந்துள்ளதை அத்துழாய் தெரிவித்ததும், கண்ணீர் மல்க முதலியாண்டான் திருவடியில் வீழ்ந்து மன்னிக்கும்படி வேண்டினாள் மாமியார். ஸ்ரீராமாநுஜரின் உத்தரவின் பேரில் தாம் வந்துள்ளதாகத் தெரிவித்த முதலியாண்டான் ஸ்வாமி, ஆச்சாரியார் உத்தரவு கொடுத்தால்தான் தாம் செல்ல முடியும் என்று கூறிவிட்டார்.

மாமியார் திருவரங்கம் சென்று, ஸ்ரீ ராமாநுஜரின் திருவடிகளை வணங்கி, முதலியாண்டான் ஸ்வாமியை திருப்பி அழைக்கும்படி வேண்டினாள். பெரியநம்பியின் அனுமதியோடு, முதலியாண்டானை திருவரங்கம் திரும்பும்படி கூறினார் ஸ்ரீ ராமாநுஜர்.

  • 139
·
Added article
·

🌹எம்.ஜி.ஆரின் பல படங்களில் வில்லனாக நடித்து எம்.ஜி.ஆர் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளானவர்தான் நடிகர் நம்பியார். தொடர்ந்து வில்லனாக நடித்தாலும் நம்பியாருடனும் மிகவும் நட்பாக பழகியவர்தான் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு தளங்களில் இருவரும் அன்புடன் பழகி கொள்வார்கள். நம்பியாரிடம் மனம் திறந்து பேசும் நல்ல நண்பராகவே எம்.ஜி.ஆர் இரு்ந்தார்.

நம்பியாரும் எம்.ஜி.ஆரை போலவே நாடகங்களில் நடித்து மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து முன்னேறியவர்தான். அது என்னவோ துவக்கம் முதலே அவருக்கு நெகட்டிவான வேடங்களே கிடைத்தது. அவரும் கிடைத்த வாய்ப்புகளை விடாமல் தனது நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தி வந்தார்.

ஒருமுறை ‘எங்க வீட்டு பிள்ளை’ படம் வெளியான சில நாட்கள் கழித்து நம்பியார் காரில் வந்து கொண்டிருந்தபோது சிலர் அவரின் காரை மறித்துள்ளனர். ‘என்ன விஷயம்.. யார் நீங்க?’ என நம்பியார் கேட்க ‘ நீ எப்படியா எங்க தலைவர அடிக்கலாம்?’ என கோபமாக கேட்க நம்பியாரோ ‘யாரு உங்கள் தலைவர்?.. நான் எப்ப அடிச்சேன்?’ என கேட்க, ‘வாத்தியாரா அடிச்சியே’ என சொல்ல எம்.ஜி.ஆரைத்தான் சொல்கிறார்கள் என அவருக்கு புரிந்துவிட்டது.

‘எனக்கு காசு கொடுத்தாங்க அடிச்சேன். அவர் என்னை அடிச்சத நீ பாக்கலயா?’ என கேட்க ‘ஓ காசு கொடுத்தா எங்க வாத்தியார அடிப்பியா?’ என மேலும் பொங்க, ‘சரிப்பா!.. இனிமேல் அடிக்க மாட்டேன்’ என சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்தவர்தான் நம்பியார். இதை ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.

🌹எங்க வீட்டு பிள்ளை படம் சூப்பர் ஹிட் அடித்து வெள்ளிவிழா கொண்டாடியது. எனவே, இதற்காக விழா எடுக்கப்பட்டது. இந்த விழாவில் எம்.ஜி.ஆர், அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் அப்படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

🌹இந்த விழாவில் எம்.ஜி.ஆர் பேச துவங்கிய போது அவர் பேசுவது மக்களுக்கு தெளிவாக கேட்க வேண்டும் என்பதற்காக அவர் முன்பு இரண்டு மைக்குகள் வைக்கப்பட்டது. இதைப்பார்த்த நம்பியார் ‘நாங்களெல்லாம் பேசும் போது ஒரு மைக். எம்.ஜி.ஆர் பேசும்போது மட்டும் இரண்டு மைக்கா?.. அக்கிரமம்’ என நகைச்சுவையாக சொன்னார். இதைக்கேட்டு அங்கிருந்த கூட்டமே சிரித்தது. எம்.ஜி.ஆர் சாதாரணமானவரா!. பேச துவங்கியவர் ‘இந்த படத்தில் நான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளேன். அதனால் எனக்கு இரண்டு மைக்’ என சொல்ல கைதட்டல் விண்ணை பிளந்தது

  • 139
·
Added article
·

🌹பாடல் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக படப்பிடிப்புக்கு தளத்துக்கு வந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த அந்த பாடலின் ஒலிப்பேழையை ஓடவிட்டார் உதவி இயக்குநர்.

🌹காட்சிக்கான உடைகளை அணிந்தபடி சிவாஜி பாடலை கேட்கத் துவங்கினார். ஒருதடவையல்ல… இருதடவையல்ல; கிட்டதட்ட 11 முறைக்கும் மேலாக பாடலை ஓடவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடி பாடலை கேட்டு முடித்த சிவாஜி படத்தின் இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து “சுந்தரா கொஞ்சம் டயம் கொடு…அப்புறம் சூட் பண்ணிக்கலாம்…”

🌹எந்த பாடலையும் அதிகபட்சம் ஓரிருமுறை கேட்டுவிட்டு நடிக்கத் தயாராகும் சிவாஜியின் இந்த மாற்றத்தை கண்டு குழம்பிய சுந்தரம் “என்னண்ணே ஏதாவது பிரச்னையா…சூட்டிங்கை இன்னொரு நாள் வெச்சிடலாமா…? என்றார் பதறியபடி. “இல்லை சுந்தரா, அண்ணன் எனக்கு பெரிய சவாலை கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை, தேர்ந்த நடிகனுக்குரிய உணர்ச்சிப் பிரவாகத்தோடு பாடியிருக்கிறார்.

🌹பல்லவியில் ஒரு விதமான பாவம், ஆக்ரோஷம்…அடுத்த சரணத்தில்.. இன்னொரு விதமான..தொனி. மற்ற சரணத்தில்…இன்னொரு பரிமாணம்…என பிச்சு உதறி யிருக்கிறார். ஒரே வரியையே இரண்டு இடங்களில் இரண்டு விதமான தொனிகளில் பாடி அற்புதம் செய்திருக்கிறார். ஒரு நடிகனின் வேலையை அவர் செய்திருக்கும்போது ஒரு நடிகனாக நான் இன்னும் அதிகம் மெனக்கெட்டால்தான் நான்

🌹அவர் சவாலை எதிர்கொள்ளமுடியும்… காட்சியும் எடுபடும். அதனால் எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடு பிறகு நடித்துக்கொடுக்கிறேன்” என ஓய்வறைக்குள் புகுந்துகொண்டார் சிவாஜி. உச்சி முதல் உள்ளங்கால்வரை நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் திலகத்துக்கு, தம் குரலிலேயே சவால் கொடுத்த அந்த பாடகர்தான் டி.எம். சௌந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.! கவுரவம் படத்தில் இடம்பெற்ற “ நீயும் நானுமா… கண்ணா நீயும் நானுமா…” என்ற அந்த பாடலை யாரால் மறக்க முடியும்.

  • 141
·
Added a post
·

ஆசிரியர் கரும்பலகை முன் வந்து ஒரு சவால் வைத்தார்.

“வெறும் 3 கோடுகளுடன் ஒரு சதுரம் வரையுங்கள்!”

கேள்வி எளிதாகத் தோன்றியது.

ஆனால் மாணவர்கள் யோசிக்கத் தொடங்கியபோது சிக்கல் புரிந்தது.

ஒரு சதுரத்திற்கு நான்கு பக்கங்கள் தேவை.

அப்படியிருக்க, மூன்று கோடுகளால் எப்படி சதுரம் வரைய முடியும்?

ஒவ்வொருவரும் தங்கள் வழியில் முயன்றனர்.

யாரோ மூன்று பக்கங்களை வரைந்தார்.

ஒருவர் நான்காவது பக்கத்தைப் புள்ளிக் கோடாக மாற்றினார்.

ஆனால் முழுமையான விடை கிடைக்கவில்லை.

இறுதியாக ஒரு மாணவி கரும்பலகை முன் வந்தார்.

அவர் முதலில் ஒரு முழு சதுரத்தை வரைந்தார்.

பிறகு அதன் உள்ளே 3 கோடுகளை வரைந்தார்.

அவ்வளவுதான்!

சதுரம்; 3 கோடுகளுடன் இருந்தது.

திடீரென்று எல்லோருக்கும் கேள்வியின் உண்மையான அர்த்தம் புரிந்தது.

  • 147
·
Added article
·

🌹மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தனது அண்ணன் சக்கரபாணி, மற்றும் சில மூத்த படத் தயாரிப்பாளர்களில் காலில் விழுந்து வணங்கி உள்ளார். ஆனால் அவரே ஒரு நடிகையின் காலில் விழுந்து வணங்க நினைத்திருக்கிறார்.

🌹அலைகள் ஓய்வதில்லை' படத்தின் 100வது நாள் விழாவில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார். படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு கேடயம் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது பாரதிராஜாவையும், படத்தையும் பாராட்டி பேசிவிட்டு, “படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்திருப்பவர் பிரமாதமாக நடித்திருந்தார்.

🌹படத்திலேயே அவருடைய நடிப்புதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் உண்மையிலேயே வயதானவராக இருப்பார், அவர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரோ இளமையான பெண்ணாக இருக்கிறார். அதனால் அவரை இருகரம் கூப்பி வணங்குகிறேன்” என்று பேசினார். விழா முடிந்ததும் கமலா காமேஷை தனது காரில் அவரது வீடு வரை அழைத்துச் சென்று மரியாதை செய்தார்.

  • 150
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்யார் என்பதை கண்டறிவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் மனநிம்மதி உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

மிதுனம்: குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தராதீர். வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கடகம்: சகோதர வகையில் செலவு, அலைச்சல் வரும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் ஆகியவற்றை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்றுவீர். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சிம்மம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வயிற்றுவலி, மூக்கடைப்பு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

கன்னி: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். பங்குதாரரை அனுசரித்து நடக்கவும்.

துலாம்: திட்டமிட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்களால் பயனடைந்த சிலர் இப்போது உங்களுக்கு உதவி செய்வர். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.

விருச்சிகம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். மனைவி, பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

தனுசு: மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், செலவு வரக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவி புரிவர். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.

மகரம்: சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். வீண் விவாதங்கள் விலகும். ஆடை, ஆபரணம் சேரும். மூத்த சகோதர சகோதரிகள் உங்களை புரிந்து கொண்டு செயல்படுவர். அலுவலகத்தில் மேலதிகாரி மதிப்பார். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.

கும்பம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிம்மதி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்.

மீனம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். பயணம் செல்வீர்.

  • 164
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 8.9.2026

இன்று பிற்பகல் 02.28 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று மாலை 05.11 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.

இன்று அதிகாலை 03.08 வரை வரீயான். பின்னர் பரிகம்.

இன்று அதிகாலை 03.33 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.28 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=643&dpx=2&t=1788863763

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 169

Good Morning...

  • 164
·
Added article
·

🌹 பம்பாய்க்கு நாடகம் நடத்த ஒருமுறை நான் போயிருந்தபோது தெருவில் எங்கள் குழுவினரோடு போய்க்கொண்டிருந்தேன்.

🌹அப்போது வழியில் சந்தித்த ஒரு வயதான கிழவி சொன்னார்.

தம்பி.. உன்னை எம்.சி.ஆர். நடிச்ச படங்கள்லே பாத்திருக்கேன்.. நல்லா நடிக்கிறே.. எனக்கு நீ ஒரு உதவி செய்யணுமே..

“என்னம்மா… சொல்லுங்க”.. - என்றேன்.

“🌹எம்.சி.ஆர். கிட்டே நான் விசாரிச்சேன்னு சொல்றீயா?”

அவருடைய பெயர், முகவரி எதையும் அவர் சொல்லவில்லை. அப்படியே போய்விட்டார். இந்த மாதிரியான ஈர்ப்பு சக்தி ஒரு நடிகருக்கு இருப்பதை உணர்ந்தபோது வியப்பாக இருந்தது.

அவரிடம் இயல்பாக இருந்த வள்ளல்

தன்மை அதற்கு ஒரு முக்கியமான காரணம்.

🌹 விளம்பரத்திற்காக அவர் அப்படிப் பண்ணுகிறார் என்று அவரைச் சிலர் விமர்சிப்பதைப் பார்த்திருக்கிறேன். விளம்பரத்திற்காக அவர் சில விஷயங்களைச் செய்திருக்கலாம். ஆனால் விளம்பரம் செய்துகொள்ளாமல், விளம்பர நோக்கம் இல்லாமல் அவர் பிறருக்குச் செய்த உதவிகள் ஏராளம்.

🌹யாராவது அவருக்கு முன்னாடி கஷ்டப்படுவதைப் பார்த்தால், உடனே உதவி பண்ணியிருக்கிறார். சினிமாவுலகில் அவருக்கு எதிராக இயங்கியவர்களுக்குக் கூட அவர் உதவியிருக்கிறார்.

🌹சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் என்கிற நடிகருடைய தாயார் மறைந்தபோது அவர் போய் நின்ற இடம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் வீடு. அவரை அடையாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆர். உடனே வீட்டில் இருந்தவர்களை அழைத்தார்.

“இவருக்கு ஒரு வேலைக் கொடுத்திருங்க. தேவைப்படுகிற பணத்தைக் கொடுத்திருங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

🌹அந்த முதிர்ந்த நடிகரான வெங்கட்ராமன் பிறகு சொன்னார். “வீட்டிலே அடுப்பில் உலையை வைச்சுட்டு ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா உலை பொங்கும்”.

🌹இதெல்லாம் நான்கு பேருக்குத் தெரியவேண்டும் என்பதற்காகச் செய்கிற காரியங்கள் இல்லை. எனக்குத் தெரிந்து அவரிடம் உதவி பெற்றவர்கள் பலர். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை.

“🌹ஒருமுறை அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக காரில் எம்.ஜி.ஆருடன் போய்க் கொண்டிருந்தோம். நல்ல வெயில் நேரம். யாரோ ஒரு அம்மாள் காலில் செருப்பில்லாமல் போவதைப் பார்த்துவிட்டு, என்ன நினைத்தாரோ, அந்தக் கால்களின் சூட்டைத் தான் உணர்ந்த மாதிரி, சட்டென்று தன்னுடைய காலில் போட்டிருந்த செருப்புகளைக் கழட்டி அந்த அம்மாவிடம் கொடுத்துவிட்டார்.

🌹எம்.ஜி.ஆர். கூட இருந்த டிரைவருக்கும், எங்களுக்கும் தான் இது தெரியும். அவரிடம் வந்து யாரும் கேட்கவில்லை. இருந்தபோதும் தானாகச் செய்தார்” என்று எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் சொல்லியிருக்கிறார்..

🌹அவரிடமிருந்த ஏதோ ஒரு குணம் அவரை அப்படிச் செயல்பட வைத்திருக்கிறது. இது மிகையில்லை. அவருடைய இயல்பு.எம்.ஜி.ஆருக்கு இருந்த இளகிய சுபாவத்துக்கு உதாரணமாக நான் பார்த்தவரையில் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம்.

🌹வெளியூர்களில் ‘ஷூட்டிங்’ நடக்கும்போது டெக்னீஷியன்கள் உட்படப் பலருக்கு போடப்படும் சாப்பாட்டை அந்த இடத்துக்குப் போய் சாப்பிட்டுப் பார்ப்பார். அவர் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கில் எப்போது வேண்டுமானாலும் இப்படி அவர் சோதிப்பது நடக்கும் என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் வழங்கப்படும் சாப்பாடும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும்.

-நடிகர் சோ

  • 302
·
Added a post
·

சீனாவில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. எப்போதும் வீடு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மருமகள்கள் தங்கள் தாய்வீட்டுக்குச் சென்றால், விரைவில் திரும்பி வர மாட்டார்கள்.

அன்றும் மருமகள்கள் தாய்வீடு செல்ல அனுமதி கேட்டனர். பெரியவர், “போய் வாருங்கள். வரும்போது நீங்கள் எனக்கு இரண்டு பொருட்களைக் கொண்டுவர வேண்டும். கொண்டு வராவிட்டால், மீண்டும் உங்கள் அம்மா வீடு செல்ல அனுமதிக்க மாட்டேன்” என்றார்.*

சரிங்க மாமா. என்ன வேணும், சொல்லுங்கள்?” என்றனர் இரு மருமகள்களும்.*

ஒரு காகிதத்தில் கொஞ்சம் காற்றை அடைத்துக் கொண்டு வரவேண்டும்” என்று ஒரு மருமகளிடமும், “காகிதத்தில் கொஞ்சம் தீயை கட்டிக் கொண்டுவர வேண்டும்” என்று இன்னொரு மருமகளிடமும் சொன்னார் பெரியவர்.

இதைக் கேட்டு மருமகள்கள் இருவரும் திகைத்தனர்.

சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டனர். தாய் வீட்டில் சந்தோஷமாகச் சில நாட்கள் இருந்தார்கள். வீடு திரும்ப வேண்டிய நாள் வந்ததும்தான் மாமனார் கேட்ட விஷயம் பற்றிய பயம் வந்தது.

இருவரும் கிளம்பினார்கள். வழியெங்கும் கவலையோடு புலம்பிக்கொண்டே நடந்தனர். அப்போது எருமை மீது சவாரி செய்துகொண்டு வந்த ஓர் இளம்பெண், உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார்.

இவர்களும் தங்கள் மாமனார் கேட்டதைச் சொன்னார்கள். அந்தப் பெண், இவ்வளவுதானா, கவலைப்படாதீர்கள்” என்று சிரித்தார்.*

முதல் மருமகளைப் பார்த்து, “ஒரு காகிதத்தில் விசிறி செய்து கொடு. நீ ஒரு சிம்னி விளக்கை ஏற்றி, ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துட்டுப் போ” என்றார்.

மருமகள்கள் இருவருக்கும் பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி. அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.*

மாமனாரிடம் அந்தப் பெண் கூறியபடியே விசிறியையும், சிம்னி விளக்கையும் தந்தார்கள். அவர் ஆச்சரியப்பட்டார். இருவரும் வழியில் சந்தித்த அந்தப் பெண் பற்றிச் சொன்னார்கள்.*

இவ்வளவு புத்திசாலியான பெண்ணை, என் கடைசி மகனுக்கு மணம் முடிக்கப் போகிறேன்” என்றார் பெரியவர்.

அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பினார். கண்டுபிடித்துச் சொன்னதும், சம்பந்தம் பேசினார். திருமணம் இனிதே நடந்து முடிந்தது. வீட்டில் அனைத்தையும் பொறுப்பாகச் செய்தார் கடைசி மருமகள்.

பெரியவருக்கு மகிழ்ச்சி. நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார். எனவே தன் வீட்டு வாசலில், ‘இது நிறைவான வீடு’ என்று ஒரு பலகையை மாட்டி வைத்தார்.*

சில காலம் கழித்து அந்த வழியே சென்ற ஒரு துறவி இந்தப் பலகையைப் படித்தார். ‘யார் இது, இவ்வளவு திமிராக எழுதி வைத்தது? இந்த வீட்டினருக்குப் பாடம் புகட்டி, திமிரை அடக்கப் போகிறேன்’ என்று முடிவு செய்தார்.*

வீட்டில் நுழைந்த அவரை, கடைசி மருமகள்தான் வரவேற்றார். துறவி, “இது நிறைவான வீடாமே… அப்படியானால் எனக்கு இந்தச் சாலையின் நீளத்துக்கு ஒரு துணியை நெய்து கொடு. இல்லாவிட்டால் சபித்து விடுவேன்” என்றார்.*

கண்டிப்பாக நெய்கிறேன். சாலையின் இரு முனைகளையும் கண்டுபிடித்து, எவ்வளவு நீளம் என்று அளந்து தாங்கள் சொன்னால், அந்த அளவுக்கு நான் துணியை நெய்து கொடுக்கிறேன்” என்றார் மூன்றாவது மருமகள்.

அவர்கள் வீடு இருந்த சாலை எங்கோ வெகு தொலைவில் இருந்த தலைநகரத்திலிருந்து நாட்டின் எல்லைவரை சென்றது. அதன் ஆரம்பமும் முடிவும் யாருக்கும் தெரியாது என்பதால் துறவிக்குப் பதில் சொல்ல முடியவில்லை.*

சரி, வேண்டாம். கிணற்று நீர் அளவு எண்ணெய் ஆட்டிக் கொண்டுவா” என்றார் துறவி.*

தாங்கள் தயவு செய்து கிணற்றில் எத்தனை ஆழாக்கு நீர் உள்ளது என்று சொன்னால், உடனே அத்தனை ஆழாக்கு எண்ணெயை ஆட்டித் தந்துவிடுகிறேன்” என்றார் மூன்றாவது மருமகள் பணிவோடு.*

துறவிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில நொடிகள் யோசித்தார். இந்தப் புத்திசாலிப் பெண்ணை மடக்குவது எளிதல்ல என்பதை உணர்ந்தார். யோசித்தபடியே, பறந்து வந்த ஒரு புறாவைச் சட்டென்று பிடித்தார்.*

நீ மிகவும் புத்திசாலியாக இருக்கிறாய். இந்தப் புறாவை நான் பறக்க விடப் போகிறேனா, இல்லை கூண்டுக்குள் அடைக்கப் போகிறேனா என்று சொல் பார்ப்போம்” என்றார் துறவி.*

புத்திசாலி மருமகள் துறவியை வணங்கி, நீங்கள் முக்காலமும் அறிந்த ஞானி. வாசலில் நிற்கும் நான் இப்போது உள்ளே செல்லப் போகிறேனா, இல்லை தெருவில் இறங்கப் போகிறேனா என்று சொல்லுங்கள். நானும் உங்கள் கேள்விக்கு விடை தருகிறேன்” என்றார்.*

துறவி அமைதியாக இருந்தார். “துறவியான தங்களுக்கே என் கேள்விக்கு விடை தெரியாதபோது, அனைத்தும் அறிந்த ஞானியான தங்களது கேள்விக்கு எனக்கு எப்படி விடை தெரியும்?” என்று கேட்டு மீண்டும் அவரை வணங்கினார் மூன்றாவது மருமகள்.*

நீ சொல்வதும் சரிதான். இந்த வீடு நிறைவான வீடுதான்” என்று சொல்லிவிட்டு, துறவி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

  • 298
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு, இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்: புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்வீர்கள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி பழைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பீர்கள். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

கடகம்: எடுத்த காரியங்கள் தடைபட்டு முடியும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிம்மம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். வியாபார வளர்ச்சிக்காக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். காரியத்தில் நிதானம் தேவை.

கன்னி: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். பண வரவு, பொருள் வரவு உண்டு. வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

துலாம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெரிய நிறுவனத்தில் வேலை அமையும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரம் லாபம் தரும். பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: ஒதுங்கிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வாகனத்தை மாற்றுவீர்கள். எதிலும் பொறுமை தேவை.

தனுசு: சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்கப் போராடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. ஜாமீன் கையெழுத்திடுவது, வேலைக்கு சிபாரிசு செய்வது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்: குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பண வரவு உண்டு.

கும்பம்: அரசுக் காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளி வட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் பணிகளை முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

மீனம்: இழுபறியாக இருந்த பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

  • 375
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 21 ஆம் தேதி திங்கட்கிழமை 7.9.2026.

இன்று மாலை 04.38 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று மாலை 06.33 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

இன்று காலை 07.36 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.

இன்று அதிகாலை 05.57 வரை பவம். பின்னர் மாலை 04.38 வரை பாலவம். பின்பு கௌலவம்.

இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் மாலை 06.33 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=642&dpx=2&t=1788751107

நல்ல நேரம்:

காலை : 06.00 முதல் 07.00 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 378

Good Morning...

  • 374
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம் : பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வாராக்கடன் வந்து சேரும். பங்குதாரரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

ரிஷபம் : வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம் : திடீர் பயணம் அலைச்சல் தரும். திட்டமிட்ட வேலையை முடிக்க போராடுவீர். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும்.

கடகம் : சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

சிம்மம் : திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற கையிருப்பை கரைக்கக் கூடும். வாகனத்தில் கவனமாக செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அதிகம் உழைக்க வேண்டும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கன்னி : இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். மனைவி, தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

துலாம் : முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

விருச்சிகம் : எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

தனுசு : பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

மகரம் : சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர்கள். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம் : பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.

மீனம் : பணவரவு உண்டு. அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

  • 550
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 4.9.2026.

இன்று அதிகாலை 02.08 வரை சப்தமி. பின்னர் இரவு 11.46 வரை அஷ்டமி. பின்பு நவமி.

இன்று அதிகாலை 12.56 வரை கிருத்திகை. பின்னர் இரவு 11.12 வரை ரோகிணி. பின்பு மிருகசீரிஷம்.

இன்று மாலை 04.44 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.

இன்று அதிகாலை 02.08 வரை பவம். பின்னர் பிற்பகல் 12.57 வரை பாலவம். பின்பு இரவு 11.46 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று இரவு 11.22 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=641&dpx=2&t=1788667458

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 548

Good Morning....

  • 540
  • 640
  • 638
New People