Scan Mobiles-Apps

Scan to Download Google AppDownload Android AppScan to Download Apple App

Quote of the Day

திருக்குறள்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி.

குறள் விளக்கம் : மு.வ : திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

சாலமன் பாப்பையா : நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.

Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added a news
·
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று தற்போது 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. நகர்ப்புறங்களை அண்மித்த பகுதிகளில் குறைந்த விலையில் தேங்காயை விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவுள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.000
  • 438
·
Added a news
·
புதிய கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் செயற்பாடு நேற்றுமுதல் ஆரம்பமானது.  இதற்கமைய, பல மாதங்களாக நிலவிய கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்கவு திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றுமுதல் விநியோகிக்கப்படும் புதிய சாதாரண கடவுச்சீட்டானது கரு நீல நிறத்தைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் புதிய கடவுச்சீட்டு 48 பக்கங்களைக் கொண்டுள்ளது. அந்த கடவுச்சீட்டு உள்பக்கங்களில் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள 75,000 கடவுச்சீட்டு விரைவில் விநியோகிக்கப்படும் எனவும், மீண்டும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த கடவுச்சீட்டுக்களை இறக்குமதி செய்வதற்காக விலை மனு கோரல் முறைமைக்கமைய செயற்படவுள்ளதாக அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.000
  • 437
·
Added a news
·
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தமது செலவின அறிக்கைகளைக் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அண்மையில் வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனைத்து வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்களும், அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும்.  இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் எச்சரித்துள்ளார்.இதேவேளை பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது.அதன் பிரகாரம் இம்முறை பொதுத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக 759,210 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுஅவற்றில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  அதன் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில்  738,659 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர்.இவர்களுக்கான தபால் மூல வாக்களிப்புப் படிவங்கள் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாரத்திற்குள் அவை விநியோகம் செய்யப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளன. அதன்படி, பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், காவல் நிலையங்களில் இந்த மாதம் 30ஆம் திகதியும் அடுத்த மாதம் 4ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. அத்துடன் ஏனைய அரச நிறுவனங்களிலும் இராணுவ முகாம்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக அடுத்த மாதம் 7ஆம் 8ஆம் திகதி வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.000
  • 442
·
Added a news
·
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனஅதன்படி, ஜனவரி முதலாம் திகதிமுதல் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,045 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 81 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகள், மூன்று கிராம சேவை அதிகாரிகள், 3 நீதிபதிகள், இரண்டு வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 45 அரசு அதிகாரிகள் அடங்குவர்.மேலும், இது தொடர்பான சோதனையில் 22 பொதுமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 68 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த காலப்பகுதியில் 56 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது000
  • 441
·
Added a news
·
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தமது செலவின அறிக்கைகளைக் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அண்மையில் வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனைத்து வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்களும், அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும்.  இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் எச்சரித்துள்ளார்.இதேவேளை பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது.அதன் பிரகாரம் இம்முறை பொதுத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக 759,210 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுஅவற்றில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  அதன் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில்  738,659 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர்.இவர்களுக்கான தபால் மூல வாக்களிப்புப் படிவங்கள் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாரத்திற்குள் அவை விநியோகம் செய்யப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளன. அதன்படி, பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், காவல் நிலையங்களில் இந்த மாதம் 30ஆம் திகதியும் அடுத்த மாதம் 4ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. அத்துடன் ஏனைய அரச நிறுவனங்களிலும் இராணுவ முகாம்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக அடுத்த மாதம் 7ஆம் 8ஆம் திகதி வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.000
  • 443
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஐப்பசி மாதம் 5ஆம் தேதி  மேஷம் -ராசி: புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனை விருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நேர்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் ரிஷபம் ராசி: குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். வெளிவட்டார நட்பு சிறப்பாக இருக்கும். பொருளாதார சிக்கல்கள் சீராகும். நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் மேம்படும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மிதுனம் -ராசி: கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  கடகம் -ராசி: மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வெளி ஆட்களுடன் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்புகள் குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு சிம்மம் -ராசி:எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் நிமித்தமான உதவிகள் கிடைக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் கன்னி -ராசி: உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் அமையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். நிர்வாகத்துறையில் செய்யும் மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு துலாம் -ராசி: சக பணியாளர்களால் ஆதாயம் ஏற்படும். ஆன்மிக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். இணையம் சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் உண்டாகும். பொறுமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை விருச்சிகம்- ராசி: நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வழக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் வீண் செலவு அதிகரிக்கும். வியாபார செயல்களில் கவனம் வேண்டும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு தனுசு -ராசி: உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்பு உயரும். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொழில் முயற்சிகளால் லாபம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். பணிகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம் மகரம் -ராசி:அலுவலகப் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். விருத்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கும்பம் –ராசி:வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். களிப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : நீலம் மீனம் -ராசி: பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். கால்நடை பணிகளில் மேன்மை உண்டாகும். சிந்தித்துச் செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலைகளில் எதிர்பார்த்த சூழல் அமையும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 762
ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 22.10.2024சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 08.12 வரை பஞ்சமி. பிறகு சஷ்டி.இன்று காலை 11.55 வரை மிருகசீரிஷம். பின்னர் திருவாதிரை.விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 775
Good Morning....
  • 782
  • 1015
பொறாமையும், பொறுமையின்மையும் காரணம்....சரிதானே-?
  • 1021
  • 1034
இது தான் உலகம்...
  • 1036
  • 1046
·
Added a news
·
நடிகை கவுதமி அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்த நடிகை கவுதமி கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் கட்சியில் சேர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு அவருக்கு மாநில நிர்வாகி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “நடிகை கவுதமி அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த தடா து.பெரியசாமி எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராகவும், சென்னையை சேர்ந்த ஃபாத்திமா அலி, கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாய பிரிவு செயலாளராக இருந்த பி.சன்னாசி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவர், கட்சியின் மாநில விவசாயப் பிரிவு துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • 1053
  • 1096
  • 1103
·
Added a news
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட “ஏ.என்.ஜே. தி. அல்விஸ்” ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையை பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இன்று (21) வெளியிட்டார்.ஐ.எம்.இமாம் அறிக்கையை அடுத்த வாரம் திங்கட்கிழமை வெளியிடுவேன் என்றும் அவர் சுட்டிகாட்டினார்.ஏ.என்.ஜே. தி அல்விஸ் அறிக்கையில், தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது.இந்நிலையில், தமது அரசியல் இலாபத்துக்காகவும் தமது சகாக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே இவ்விரு அறிக்கைகளையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிடாமல் இருக்கிறார்.அதற்கமைய ரவி செனவிரத்னவை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பொலிஸ் அதிகாரிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது.எனவே, அதிகாரத்தை சரியாக பயன்படுத்தாமை மற்றும் அறிக்கைகளை மூடி மறைத்தமைக்காக ஜனாதிபதி பொது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வருவோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
  • 1503
·
Added a news
37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் தவறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் கூறியுள்ளார்.அவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘த இந்தியா வே’ புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இனப்பிரச்சினை தொடர்பான சில சிறப்புக் குறிப்புகளை இந்தப் புத்தகம் உள்ளடக்கியுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, ஆரம்பம் முதலே இலங்கை விடயங்களை சவாலாக எதிர்கொண்டது. இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை குறித்து அக்கறை கொண்டு, உத்தரவாதமான தீர்வைக் கொண்டுவர இந்தியாவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை ஆரம்பத்திலேயே தவறாகிவிட்டன. ஆனால் அவை சாதாரணமான நடவடிக்கைகள் அல்ல என இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.அத்துடன், இலங்கையில் அமைதி காக்கும் பணிக்காக இந்தியா கடுமையாக உழைத்த போதிலும், அது குறைவான கவனத்தையே பெற்றது என வெளிவிவகார அமைச்சர் தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.37 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா தலையிட்டமை குறித்து, வெளிவிவகாரத்துறையில் கீர்த்தி பெற்றவராக திகழும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 1504
·
Added a news
இலங்கை அரசு இந்தியாவுக்கு வரும் வாரத்தில் திருப்பி செலுத்த வேண்டிய சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபா கடனைச் செலுத்த முடியாமல் போய், இலங்கைக்கு மீண்டும் கெட்ட பெயர் வந்து விடாமல் இருப்பதற்காக அந்தக் கடனுக்கு முற்கூட்டியே சலுகைக் காலத்தை மேலதிகமாக அறிவித்து, இலங்கையை மீண்டும் ஒரு தடவை காப்பாற்ற புதுடில்லி முன்வந்திருக்கின்றது எனத் தெரிகின்றது.இதற்கான் சலுகைக்கால அறிவிப்பு இந்த வாரத்தில் புதுடில்லியிலிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகின்றதுஅரசியல் தலைவர்கள் சம்பந்தப்படாமல் நேரடியாக இராஜதந்திர மட்டத்தில் பேசப்பட்டு இந்த இணக்க நிலை எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்திய - இலங்கை கடன் உடன்படிக்கையின் கீழ் , இந்திய ரிசர்வ் வங்கிக்கு மொத்தக் கடனாக இலங்கை 2.6 பில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டும்.இதில் சார்க் ஒப்பந்தம், ஏனைய கடன் வசதிகள் மூலம் செலுத்தப்படும் தொகையை விட 1.7 பில்லியன் டொலர்களை 50 ஆயிரம் கோடி இலங்கை ரூபாவை இலங்கை வரும் வாரத்தில் இந்தியாவுக்குக் கடனாகச் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை இந்த வாரத்துக்குள் இலங்கை வழங்க வேண்டும்.இன்றைய அரசியல் சூழலில், அரசோடு பேச்சு நடத்த முடியாத நிலையில், இந்தியாவும் இலங்கையும் இராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தி, கால நீடிப்புக்கு இணக்கம் கண்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.000
  • 1505
·
Added a news
நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து 35 முதல் 40 நாட்களுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.000
  • 1506
·
Added a news
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கூடவுள்ள முதல் நாடாளுமன்ற அமர்வில் பெரும்பாலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்க மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பின் அதன் முடிவுகளை 18ஆம் திகதியாகும் போது வழங்கி நிறைவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.அதன்படி, 196 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்க முடியும் என தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் அவற்றிலிருந்து தெரிவு செய்து , தேசியப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பெயர் பட்டியலை கட்சி செயலாளர்களால் வழங்க முடியுமா என்பது சிக்கலாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.தேர்தலை நடத்தி மிக குறுகிய காலப்பகுதியில் தேசியப் பட்டியலின் பெயர்ப் பட்டியலை வழங்க முடியும் எனில் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தை கூட்ட முடியும் என அவர் கூறினார்.அவ்வாறு இல்லையெனில், நாடாளுமன்றத்தை கூட்ட அவசியமான உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் எனவும் தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.00
  • 1507
·
Added a news
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக ஐநாவுக்கான இலங்கை தூதுவர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.ஐநா பொதுச் செயலாளருக்கு ஆதரவளிக்கும் கடிதத்திற்கு அனுசரணை வழங்கிய சிலி தூதரகத்திடம் ஒக்டோபர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தில் தமது பெயரையும் இணைத்துக்கொள்ள நியூயோர்க்கில் உள்ள இலங்கை நிரந்தர தூதரகம் (ஐ.நா.) கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், கையொப்பமிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆளுமை அல்லாதவர் என்று அறிவித்திருந்தது.மேலும் இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணை தாக்குதல்களை ஐநா செயலாளர் நாயகம் போதுமான அளவு விமர்சிக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் குற்றம் சுமத்தியிருந்தார்.இந்நிலையில், இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கும் கடிதத்தில் பிரேசில், இந்தோனேசியா உகாண்டா போன்ற உலகளாவிய தெற்கில் உள்ள பெரும்பாலான நாடுகளும், பிரான்ஸ், சுவீடன் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளும் கையெழுத்திட்டன.இஸ்ரேலுக்கும் ஐ.நா.வுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்துள்ள பின்னணியில் இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த வாரம், லெபனானில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையினர் (UNIFIL) தெற்கு லெபனானில் உள்ள அவர்களின் நிலைகளில் இஸ்ரேலால் குறிவைக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் இரு இலங்கை வீரர்கள் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது000
  • 1509
·
Added a news
 அணித் தலைவர் சரித் அசலங்கவின் வழி நடத்தலுடன், நேற்றைய தினம் கண்டி, பல்லேகல மைதானத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நேற்று பிற்பகல் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்த மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 38.3 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 74 ஓட்டங்களுடனும், ரோஸ்டன் சேஸ் 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.தொடர்ந்தும் மழை நீடித்தமையினால் ஆட்டத்தின் ஆரம்பம் தாமதமானதுடன், இறுதியாக இரவு 08.30 மணிக்கு பின்னர் டக்வெத் லூவிஸ் முறைப்படி இலங்கைக்கு 37 ஓவர்களில் 232 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.சேஸிங்கில் அசலங்காவுக்கும் அறிமுக வீரர் நிஷான் மதுஷ்கவுக்கும் இடையேயான முக்கிய 137 ஓட்டங்கள் இணைப்பாட்மானது இலங்கை அணியின் வெற்றிக்கு உறு துணையாக அமைந்தது.அசலங்கா 71 பந்துகளில் 77 ஓட்டங்கள‍ையும், தொடக்க வீரராக களமிறங்கிய நிஷான் மதுஷ்க 54 பந்துகளில் 69 ஓட்டங்களையும் எடுத்தனர்.இறுதியாக இலங்கை 31.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ஓட்டங்களை குவித்து வெற்றி இலக்கினை கடந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக சரித அசலங்க தெரிவானார்.இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையுடன் உள்ளது. தொடரின் இரண்டாவது போட்டி ஒக்டோபர் 23 ஆம் திகதி இதே மைதானத்தில் ஆரம்பமாகும்.000
  • 1512
·
Added a news
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் வெள்ளம் காரணமாக அதிக ஆபத்தில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள 22 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தி இந்த டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.000
  • 1510
·
Added a news
2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணியானது சாம்பியன் ஆனது.டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (20)இரவு நடந்த இறுதிப் போட்டியில் சோஃபி டெவின் தலைமையிலான நியூஸிலாந்து அணி, 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர், இறுதியாக நியூஸிலாந்து அணி சம்பியன் பட்டம் வென்ற தருணம் இதுவாகும்.இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து, ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண வெற்றியாளர்களான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தவுகள் அணிகள் அடங்கிய பட்டியலில் புதிதாக இணைந்தது.இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றது. அமெலியா கெர் 43 ஓட்டங்களையும், ப்ரூக் ஹாலிடே 38 ஓட்டங்களையும் மற்றும் சுசி பேட்ஸ் 32 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.பின்னர், 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெத்தாடிய தென்னாப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்த நிலையில் 126 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.இதன் மூலம் நியூஸிலாந்து 32 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்டநாயகியாகவும், தொடரின் ஆட்டநாயகியாகவும் அமெலியா கெர் தெரிவானார்.00
  • 1515
·
Added a news
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது.ஆணைக்குழுவுக்கு நேற்று முன்தினம் (19) 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது.அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும், தேர்தல் தொடர்பான வன்முறைகள் தொடர்பான புகார்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கிடைக்கப்பெற்ற 401 முறைப்பாடுகளில் 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது000
  • 1511
·
Added a news
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய நியூஸிலாந்து அணி 36 ஆண்டுகளின் பின்னர் இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றுள்ளது.நியூசிலாந்து அணி இந்தியாவில் பெற்ற மூன்றாவது வெற்றி இதுவென்பதோடு 1969 ஆம் அண்டு நாக்பூரில் நடந்த டெஸ்டில் முதல் முறை வெற்றியீட்டிய நியூஸிலாந்து அதற்குப் பின்னர் 1988 ஆம் ஆண்டிலேயே கடைசியாக டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றியீட்டி இருந்தது.பெங்களூரில் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைப்பட்ட நிலையில் இரண்டாவது நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 46 ஓட்டங்களுக்கே சுருண்டது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸுக்காக 402 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் 356 ஓட்டங்களால் பின்னடைவைச் சந்தித்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு சப்ராஸ் கான் தனது கன்னி சதத்தைப் (150) பெற்றதோடு ரிஷாப் பாண்ட் (99) ஒரு ஓட்டத்தால் சதத்தை தவறவிட்டார்.இதன்மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 462 ஓட்டங்களைப் பெற்றபோதும் அந்த அணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடியாமல்போனது.இதன்படி நியூஸிலாந்து அணிக்கு 107 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று (20) அந்த அணி 27.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.இதன்மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1௲0 என முன்னிலை பெற்றிருப்பதோடு இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி பூனேவில் ஆரம்பமாகவுள்ளது.அதே நாளில் (20)அந்நாட்டு மகளிர் அணியும் T20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது. பலமுறை கை நழுவிப் போன இந்தக் கோப்பையை முதன்முறையாக வென்று மகளிர் அணி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனால் நியூஸிலாந்து கிரிக்கெட் இரசிகர்கள் இரட்டைக் கொண்டாட்டத்தில் உள்ளனர்.00
  • 1528
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஐப்பசி மாதம் 4ஆம் தேதி மேஷம் -ராசி: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வியாபாரப் பணிகளில் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொத்து விற்பது தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். பணிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பச்சை ரிஷபம் ராசி: விவாதங்கள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான சூழ்நிலை உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலை உண்டாகும். வியாபாரப் பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் மிதுனம் -ராசி: எதிலும் வேகமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும். பிற்கால வாழ்க்கை பற்றிய எண்ணம் மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு  கடகம் -ராசி: பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தனவரவுகளுக்கேற்ப விரயங்களும் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். புதிய வீடு மற்றும் நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு சிம்மம் -ராசி:நுணுக்கமான விஷயங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். மனதில் வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது சேமிப்பிற்கு நன்மை அளிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பரிசு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கன்னி -ராசி: தொழில் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் சார்ந்த விஷயங்கள் சாதகமாக நிறைவுபெறும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகம் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். அரசு ரீதியிலான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை துலாம் -ராசி: எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் விருச்சிகம்- ராசி: மற்றவர்கள் கூறும் கருத்துகளில் உள்ள உண்மையை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் புதுவிதமான அறிமுகமும், அனுபவங்களும் ஏற்படும். வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களை சிந்தித்துச் செயல்படுவது அவசியம். நட்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் தனுசு -ராசி: புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமும், மகிழ்ச்சியான தருணங்களும் ஏற்படும். வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். திறமையான பேச்சுக்கள் மூலம் காரிய சித்திகள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் மகரம் -ராசி:உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த முடிவினை அளிக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குழப்பம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கும்பம் –ராசி:திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பெரியோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அனுகூலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மீனம் -ராசி: வாக்கு சாதுரியம் மூலம் லாபங்களைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தாய்வழி உறவுகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 1777