Sign up
Added a post
சிலருக்கு அவசரத்திற்கு கடன் கொடுத்திருப்போம். ஆனால், அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று இழுத்தடித்து விடுவார்கள். நாமும் அலைந்து, அலைந்து சலித்துப் போய் இது வராக்கடன் என்ற எண்ணத்தில் ஒதுக்கி வைத்து விடுவோம்.வராக்கடனும் வசூலாக வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்.... செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு கரும்புச் சாறு அபிசேகம் செய்யவும். செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு நல்லெண்ணையில் சிவப்பு திரி இட்டு 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட மாற்றம் உண்டாகும். இந்தியா - தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை ஊரில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் மற்றும் அமிர்தேஸ்வரி அம்மனை வழிபட வராக்கடன்கள் வசூலாகும். வெளிநாட்டில் உள்ளவர்கள் அந்நாட்டில் உள்ள அம்மன் கோவிலில் மனமுருகி வேண்டுதல் செய்யலாம்.
Added a post
ராகு கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தால் திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது. 1,7-2,8 மிட சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். எனவே இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். 5-ல் சர்ப்ப கிரகம் உள்ள ஜாதகத்திற்கு 5, 11-ல் சர்ப்பங்கள் இல்லாத ஜாதகத்தை இணைப்பது சிறப்பு.திருமணத் தடையை சந்திப்பவர்கள் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது.கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் தினந்தோறும் படித்து வர தோஷங்கள் படிப்படியாக நீங்கும்.தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.
Added a post
இன்றைய ராசி பலன் – மார்ச் 23, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 9ஆம் திகதி.மேஷம்அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும்.ரிஷபம்பெரியவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும். வீடு வாங்க மற்றும் விற்பதற்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.மிதுனம்உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணமொன்றால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தினர்களின் குறைகளை தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்படுவீர்கள்.கடகம்ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். வீட்டை அழகாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.சிம்மம்சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.கன்னிஇன்று மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.துலாம்எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.விருச்சிகம்கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தன்னம்பிக்கை யோடும், தைரியத்தோடும் செயல்படுவீர்கள். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு கிடைக்கலாம். மகிழ்ச்சியான நாள்.தனுசுமுன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றலாமா என்பது குறித்து சிந்திப்பீர்கள்.மகரம்தேக நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து சேரும் வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச்சமாளிப்பீர்கள்.கும்பம்பிரச்சினைகள் அகலும் நாள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கலஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.மீனம்விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். பழைய வாகனத்தை கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் கொடுப்பார்கள்.. இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
Added article
இந்தியாவில் Music Entrepreneurship என்ற பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஒரே நபர் நான் தான் என நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
Added a news
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு 9 மடங்கு உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது இந்த வைரஸ் 68 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 13 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று மட்டுமின்றி புதிய வைரஸ் காய்ச்சலும் ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பெங்களூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Featured Discussions
Like us on Facebook
Membership
Unauthenticated
Exchange Rates
My points
Quote of the Day
பழமொழி
"யானை படுத்தால் குதிரை மட்டம்"
Featured Discussions
Featured Organizations