திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில், நவகிரகத் தலங்களில் புதன் பகவானுக்குரிய மிக முக்கியமான பரிகாரத் தலமாகும். இக்கோயில் குறித்த தகவல்கள் இதோ:
1. தல வரலாறு (History)
அகோர மூர்த்தி: மருத்துவன் என்ற அசுரன், பிரம்மனிடம் வரம் பெற்று தேவர்களுக்குத் துன்பம் விளைவித்தான். சிவபெருமான் தனது ஈசான்ய முகத்திலிருந்து 'அகோர மூர்த்தி'யாகத் தோன்றி, அந்த அசுரனை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார்.
புதன் பகவான்: சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்தவர் புதன். தனது பிறப்பின் பின்னணியை அறிந்து வருந்திய புதன், சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், அவருக்கு நவகிரகங்களில் ஒருவராக இருந்து ஞானத்தையும், அறிவையும் வழங்கும் பதவியை அருளினார்.
ஆதி சிதம்பரம்: சிவபெருமான் சிதம்பரத்திற்கு முன்பாக இங்குதான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார் என்பதால், இது 'ஆதி சிதம்பரம்' என்று அழைக்கப்படுகிறது.
2. ஆலயத்தின் சிறப்புகள் (Specialties)
முக்குளத் தீர்த்தம்: இங்குள்ள மூன்று குளங்கள் (அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்கள்) சிவபெருமானின் முக்கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளிகளால் உருவானவை என்று நம்பப்படுகிறது. இதில் நீராடுவது பாவம் போக்கி முக்தி தரும் என்பது ஐதீகம்.
மூர்த்தி, தலம், தீர்த்தம்: இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் என அனைத்தும் மூன்று என்ற எண்ணிக்கையில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
கல்விக்கு அதிபதி: புதன் பகவான் கல்வி, கலை, ஜோதிடம், கணிதம் மற்றும் பேச்சுத்திறனுக்கு அதிபதியாவார். வித்யாகாரகனான புதனை வழிபடுவோருக்கு அறிவாற்றல் பெருகும்.
3. தரிசன பலன்கள் (Benefits)
கல்வி மற்றும் அறிவு: படிப்பில் கவனமின்மை, ஞாபக மறதி மற்றும் கல்வித் தடைகள் உள்ள மாணவர்கள் புதன் பகவானை வழிபட நல்ல பலன் கிடைக்கும்.
தோஷ நிவர்த்தி: ஜாதகத்தில் புதன் நீசம் அடைந்தவர்கள் அல்லது புத தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபடுவதன் மூலம் அந்தத் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
தொழில் மற்றும் பேச்சுத்திறன்: சிறந்த பேச்சுத்திறன், வணிக வெற்றி மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான நோய்களிலிருந்து நிவாரணம் பெற புதன் வழிபாடு சிறப்பாகக் கருதப்படுகிறது.
ராஜயோகம்: இத்தலத்து இறைவனையும், புதன் பகவானையும் மனதார வழிபடுவோருக்கு வாழ்வில் உயர்வு மற்றும் ராஜயோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வழிபாட்டு முறைகள்:
புதன்கிழமை புதன் பகவானுக்கு உகந்த நாளாகும்.
புதன் பகவானுக்குப் பச்சை நிற வஸ்திரம் சாற்றியும், பாசிப்பயறு சுண்டல் அல்லது வெண்பொங்கல் நைவேத்தியம் செய்தும் வழிபடுவது சிறப்பு.
கோயிலில் உள்ள புதன் சன்னதியில் 17 தீபங்களை ஏற்றி, 18 முறை வலம் வந்து வழிபடுவது துன்பங்களை நீக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்தத் தலம் காசிக்குச் சமமான ஆறு தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தங்களின் வாழ்வில் அறிவு, தெளிவு மற்றும் வெற்றி பெற ஒருமுறை இந்தத் தலத்திற்குச் சென்று தரிசிப்பது மிகச்சிறந்த பலனைத் தரும்.
உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டதா? பதற வேண்டாம்! உங்கள் பணத்தையும், டேட்டாவையும் பாதுகாக்க உடனே செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இதோ: 👇
1️சிம் கார்டை பிளாக் செய்யுங்கள்: உங்கள் டெலிகாம் ஆப்பரேட்டரைத் தொடர்புகொண்டு சிம் கார்டை உடனடியாக முடக்குங்கள்.
2️ பேங்கிங் சேவைகளை முடக்குங்கள்: உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு நெட் பேங்கிங் சேவைகளை முடக்குங்கள். GPay, PhonePe போன்ற UPI கஸ்டமர் கேரை அழைத்து கணக்கை பிளாக் செய்வதும் அவசியம்.
3 CEIR மூலம் பிளாக்லிஸ்ட்: இந்திய அரசாங்கத்தின் "CEIR" (Central Equipment Identity Register) இணையதளத்தில் உங்கள் மொபைல் IMEI நம்பரை வழங்கி போனை பிளாக்லிஸ்ட் செய்யுங்கள்.
4️ டேட்டாவை ரிமோட் மூலம் அழியுங்கள்: வேறு மொபைல் அல்லது லேப்டாப்பில் 'Find My Device' (Android) அல்லது 'Find My' (Apple) ஆப்ஷனை பயன்படுத்தி உங்கள் பர்சனல் டேட்டாவை இருக்கும் இடத்திலிருந்தே அழித்துவிடுங்கள்.
5️ ஆன்லைன் காவல் புகார்: ஆன்லைனிலேயே 'Lost Property' புகாரை பதிவு செய்து FIR/NC நகலை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். வேறு சிம் வாங்கவும், சட்டரீதியான சிக்கல்களைத் தவிர்க்கவும் இது உதவும்.
இந்த தகவல் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தேவைப்படலாம். எனவே மறக்காமல் பகிருங்கள்!
மளிகைக் கடைக்கோ அல்லது சந்தைக்கோ சென்றால், அங்கே இரண்டு விதமான தக்காளிகள் இருக்கும். ஒன்று உருண்டையாக, கொஞ்சம் நசுங்கியது போல இருக்கும் நாட்டு தக்காளி. இன்னொன்று ஆப்பிள் வடிவில், பளபளவென்று கெட்டியாக இருக்கும் பெங்களூரு தக்காளி.. இந்த 2 தக்காளிக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன தெரியுமா? இதில் எது பெஸ்ட் தெரியுமா? இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்.
தக்காளி என்பது முதலில் நம்முடைய ஊர் காய் கிடையாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டிலிருந்துதான் இது இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டது.
நாட்டு தக்காளி முற்றிலும் உருண்டையாக இருக்காது, சற்று தட்டையாக, ஆங்காங்கே சுருக்கங்களுடன் காணப்படும். இதன் தோல் மிகவும் மெலிதானது, தொட்டால் மென்மையாக இருக்கும். இது லேசான ஆரஞ்சு மற்றும் பச்சை கலந்த நிறத்தில் இருக்கும். பெங்களூரு தக்காளி ஆப்பிள் வடிவில், அடர் சிவப்பு நிறத்தில், பளபளவென்று இருக்கும். இதன் தோல் தடிமனாக, கல் போல கெட்டியாக இருக்கும்.
செம்ம டேஸ்ட் தக்காளி
நாட்டு தக்காளியில் புளிப்புச் சுவை மிக அதிகம்.. உள்ளே சாறும், விதைகளும் ஏராளமாக இருக்கும். ரசம், மீன் குழம்பு, காரக்குழம்பு, சாம்பார், தக்காளி சட்னிக்கு நாட்டு தக்காளியைத்தான் பயன்படுத்த வேண்டும். இதனை எண்ணெயில் வதக்கும்போது தோல் தனியாகப் பிரிந்து, குழைய வெந்து அசல் சுவையைத் தரும். பச்சையாக இருக்கும்போது 'பச்சை தக்காளி பருப்பு கடைசல்' செய்ய இதுவே சிறந்தது.
பெங்களூரு தக்காளியில் புளிப்பு குறைவாகவும், லேசான இனிப்புச் சுவையும் இருக்கும். இதில் சாறு குறைவாகவும், சதைப்பகுதி அதிகமாகவும் இருக்கும். பிரியாணி, தக்காளி சாதம், குருமா மற்றும் பன்னீர் பட்டர் மசாலா போன்றவற்றுக்கு இதுவே செட் ஆகும். சாம்பார், ரசத்திற்கு இதைப்போட்டால் சமையல் சவச்சவவென்று ஆகிவிடும். சாலட், சாண்ட்விச்சிற்கு இது சிறந்தது. ஆனால், இதன் பச்சை தக்காளி சுவையின்றி சப்பையாக இருக்கும்.
எது பெஸ்ட் தக்காளிகள்
நாட்டு தக்காளி விதைகள் நம்முடைய மண்ணின் தட்பவெப்ப நிலையைத் தாங்கி வளர்ந்த பாரம்பரிய ரகங்கள். அதனால், அவற்றுக்கு இயல்பாகவே பூச்சிகளை எதிர்க்கும் இயற்கை நோய் எதிர்ப்புத் திறன் அதிகம்.
ஹைப்ரிட் ரகமான பெங்களூரு தக்காளிக்கு இந்த இயற்கை எதிர்ப்புச் சக்தி குறைவு. நாட்டு தக்காளியில் லைகோபீன் என்ற புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்து மிக அதிகம். இதை எண்ணெயில் வதக்கி சமைக்கும்போது இந்தச் சத்து உடலுக்கு முழுமையாகக் கிடைக்கும். இது நல்ல செரிமானத்தையும் தரும்.
நாட்டுத் தக்காளி தரும் நன்மை
லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்து மிக மிக அதிகம் என்பதால், இந்தச் சத்து தக்காளி பச்சையாக இருக்கும்போது கிடைப்பதை விட, அதை எண்ணெயில் போட்டு நன்றாக வதக்கி சமைக்கும்போதுதான் உடலுக்கு முழுமையாகக் கிடைக்கும். இது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது.
அதாவது நம்முடைய ஊர் மண்ணில் இயற்கையாக விளையும் நாட்டு தக்காளியில் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உடலுக்கு நன்மை தரும் அமிலங்கள் சற்று கூடுதலாகவே இருக்கும். உடலுக்குக் குளிர்ச்சியையும், நல்ல செரிமானத்தையும் இது தரும்.
நாட்டு தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருக்கும். ஹைபிரிட் தக்காளியில் அதன் வகையை பொறுத்து மிதமாகவோ, அதிகமாகவோ இருக்கலாம்.. இரண்டிலுமே நார்ச்சத்து போதுமான அளவில் இருக்கும். அதிக ரசாயன உரமின்றி வளர்க்கப்படுவதால் நாட்டு தக்காளியில் ஊட்டச்சத்து அடர்த்தி அதிகமாக இருக்கும். ஹைபிரிட் தக்காளி, வளர்ப்பு முறையை பொறுத்து மாறுபடும்.
எப்படி யூஸ் செய்யலாம்
விலை மற்றும் சேமிப்பைப் பொறுத்தவரை, நாட்டு தக்காளி சீக்கிரமே அழுகிப் போகக்கூடிய தன்மை கொண்டது. அதன் தோல் மெலிதாக இருப்பதால், வாங்கி வந்த இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே அது கனிந்து, அழுகத் தொடங்கிவிடும்.
ஆனால், பெங்களூரு தக்காளி தடிமனான தோலைக் கொண்டிருப்பதால், பிரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்திருந்தாலே ஒரு வாரம் வரை தாங்கும். சீக்கிரத்தில் கெட்டுப் போகாது என்பதால், ஹோட்டல் கடைக்காரர்களும், தூரத்து ஊர்களுக்குப் பயணம் செய்பவர்களும் பெங்களூரு தக்காளியையே அதிகம் விரும்பி வாங்குவார்கள்.
இப்போது சொல்லுங்கள், இன்று உங்கள் சமையலறையில் என்ன ரகசியம் சமையலாக மாறப்போகிறது? ரசமும் சட்னியும் என்றால் நாட்டு தக்காளியை எடுங்கள், பிரியாணியும் குருமாவும் என்றால் பெங்களூரு தக்காளியைத் தேர்ந்தெடுங்கள். சரியான தக்காளியைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கியமாகவும் சுவையாகவும் சமைத்து அசத்துங்கள்..
ருமேனியாவில் பனியால் மூடப்பட்டிருந்த ஏரியில் தவறுதலாக விழுந்த 5 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரையே பணயம் வைத்த இந்திய தொழிலாளி விபின் குமார் இன்று உலகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளார்..
பனிப்படலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் நீரில் விழுந்த சிறுமியை காப்பாற்ற உடனடியாக ஓடிச் சென்ற அவர், மீட்புப் படையினர் வரும் வரை சுமார் அரை மணி நேரம் அந்த குழந்தையை நீரின் மேல் உயர்த்திப் பிடித்து உயிருடன் பாதுகாத்தார்..
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர் காட்டிய அந்த அசாதாரண தைரியத்தையே இன்று உலகம் முழுவதும் பாராட்டுகிறது..
இந்த மனிதநேயத்திற்கும் வீரத்திற்கும் அங்கீகாரமாக, ருமேனியாவின் Craiova நகரம் அவருக்கு “கௌரவ குடிமகன்” (Honorary Citizen) என்ற பெருமைமிக்க பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது..
வெளிநாட்டில் வாழ்ந்தாலும், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தயக்கமின்றி முன்வந்த இந்தச் சம்பவம் மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உயர்த்துகிறது..
விபின் குமார்....“மனிதநேயம் எல்லைகளை அறியாது; ஒரு உயிரைக் காப்பாற்றிய உங்கள் துணிச்சல் இந்தியாவின் பெருமை!
இன்றைய ஐடி துறையை பொறுத்தவரையில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே ஒரு பேச்சு தான் முதன்மையாக இருக்கிறது. அதுதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படுகிற AI தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பம் பல நன்மைகளையும் செய்துள்ளது. அதே நேரத்தில் சில நிறுவனங்கள் AI ஏஜெண்ட்களை வைத்துக்கொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தைக் காரணம் காட்டி கொத்து கொத்தாக ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியது.
ஆனால் உண்மையிலேயே நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மந்தநிலையைச் சந்தித்து வருகின்றன. அதனால் தான் இந்த பணி நீக்கம் நடைபெறுகிறது. இதற்கெல்லாம் பலிகெடாவாக AI டெக்னாலஜியை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்று அதிரடியான கருத்தை முன்வைத்தார் ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. அதற்கு அடுத்தபடியாக தற்போது வேறொரு கருத்தையும் முன்வைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
AI தொழில்நுட்பம் வளரும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் மதிப்பை விட சுமார் 10 மடங்கு அதிகமாக பணம் கொடுத்து அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வருகின்றனர். ஆனால் அப்படி எகிறும் பங்குகளின் விலை உடனே சரியவும் வாய்ப்பிருக்கிறது என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் ஸ்ரீதர் வேம்பு ஒரு போஸ்ட்டை பகிர்ந்துள்ளார். அதில் நிறுவனங்களின் "ப்ரைஸ் டு சேல்ஸ் ரேஷியோ" எப்படி அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கு உதாரணமாக சில நிறுவனங்களையும் குறிப்பிட்டிருந்தார் ஸ்ரீதர் வேம்பு. என்வீடியா, ஆப்பிள், ஆல்பபெட், மைக்ரோசாப்ட், மெட்டா மற்றும் மைக்ரான் டெக்னாலஜி போன்ற நிறுவனங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர வருமானத்தை விட அதிகமான விலையில் பங்குகளை வர்த்தகம் செய்வதாக குறிப்பிட்டார்.
ப்ரைஸ் டு சேல்ஸ் ரேஷியோ என்வீடியாவுக்கு 20 மடங்காகவும், ஆப்பிளுக்கு 10 மடங்காகவும், அல்பாபெட்க்கு 11 மடங்காகவும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 10 மடங்காகவும், மெட்டா நிறுவனத்திற்கு 7.5 மடங்காகவும், மைக்ரான் நிறுவனத்திற்கு 19 மடங்காகவும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். அதாவது இந்நிறுவனங்கள் பெரும் வருவாயை விட சந்தையில் இவர்களுடைய பங்குகள் அதிக விலையில் வர்த்தகம் செய்யப்படுவதாக கூறியிருந்தார்.
1990-களில் இன்டர்நெட் என்ற புதிய தொழில்நுட்பம் உலகிற்கு அறிமுகமாகி வேகமாக வளர்ந்து வந்தது. இதனால் இன்டர்நெட் சேவை உலகத்தையே மாற்றப் போகிறது என்று நினைத்துக் கொண்டு முதலீட்டாளர்கள் பணத்தை அதிக அளவில் முதலீடு செய்தனர். அப்போது ஒரு இணைய நிறுவனத்தின் பெயருக்கு பின்னால் டாட் காம் என்ற பெயர் இருந்தாலே போதும். உடனே அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி போட்டனர்.
இதனால் அந்த நிறுவனங்களின் பங்குகளும் அப்போது பயங்கரமாக எகிறியது. அதன் பிறகு ஒரு சில மாதங்களில் அந்தந்த நிறுவனங்களின் உண்மையான வருவாய் வரத் தொடங்கியது. இதனால் 2000 தொடக்கத்தில் டாட் காம் நிறுவனங்களிடம் இருந்த பணமெல்லாம் தீர்ந்து போய் முதலீடுகள் கிடைக்காமல் போனது. இதனால் பல நிறுவனங்கள் திவால் ஆகின. ஒரே ஆண்டில் பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது பங்குச்சந்தையில் பயங்கர வீழ்ச்சி ஏற்பட்டது. இதுவே டாட் காம் கிராஷ் என அழைக்கப்பட்டது. இதையும் உதாரணம் காட்டியுள்ளார் ஸ்ரீதர் வேம்பு.
ஒரு நிறுவனத்தின் வருவாயை விட 10 மடங்கு அதிக விலையில் பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பங்குகளை யாரோ ஒரு முதலீட்டாளர் வாங்குகிறார் என்றால், அடுத்த 10 வருடத்திற்கு அந்த நிறுவனம் தனக்கு வரும் வருமானம் முழுவதையும் கொடுத்தால் மட்டுமே அவருக்கு லாபம் கிடைக்கும். சம்பளம் மற்றும் பிற விஷயங்களுக்கும் செலவு செய்யாமல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அப்படி செய்ய முடியுமா? கண்டிப்பாக முடியாது அல்லவா? எனவே AI வளர்ச்சி அடையும் என்பதை நம்பி முதலீட்டாளர்கள் பங்குகளில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய மார்க்கெட் கிராஷ்க்கு வழிவகுக்கும் என்று ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார்.
எனவே ஏஐ மோகத்தால் பலரும் விலை அதிகரிப்பிலும் பங்குகளை வாங்கி வருகின்றனர் அப்படி வாங்கும் பங்குகள் திடீரென சரியும்போது மிகப் பெரிய மார்க்கெட் கிராஷ் ஏற்பட்டுவிடும். நிறுவனங்களின் லாபம் குறையும் போது முதலீட்டாளர்கள் அவற்றை விற்க ஆரம்பிப்பார்கள். அப்போது விலையும் கடகடவென சரிந்து இது போன்ற பிரச்சனை ஏற்படும்.
எளிமையாக சொல்ல வேண்டுமானால் AI என்பது இனிவரும் காலத்தில் ஒரு சில அற்புதங்களை கண்டிப்பாக செய்யும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதையே வைத்து நிறுவனங்களின் பங்குகள் அதிகரிப்பது மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதைத் தான் ஸ்ரீதர் வேம்பு கூறியிருக்கிறார்.
இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன தெரியுமா? ஒரு கம்பெனியின் பங்குகளை வாங்குவதற்கு முன்பு அதன் உண்மையான லாபம் மற்றும் வருடாந்திர வருமானம் எவ்வளவு என்பதை எல்லாம் ஆராய்ந்து செயல்பட்டால் சந்தை வீழ்ச்சியிலும் தப்பித்துக் கொள்ள முடியும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரருடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். லாபம் அதிகரிக்கும். பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்: பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். குடும்ப உறுப்பினர் களுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
கடகம்: யாருக்கும் எதற்காகவும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். புண்ணிய தலங்களுக்குச் சென்று வரவும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
சிம்மம்: உறவினர், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். வியாபாரம் நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.
கன்னி: வீட்டில் குழப்பம் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சிக்கல் வரக்கூடும். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தராதீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர். குடும்பத்தில் நிலவிய குழப்பத்துக்கு விடை கிட்டும். மன இறுக்கம் நீங்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: திட்டமிட்டபடி பணிகளை முடிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.
தனுசு: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிரச்சினை களை நினைத்து வருந்த வேண்டாம். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மனமகிழ்ச்சி அடைவீர். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர். தலைவலி, தூக்கமின்மை நீங்கும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர். பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கும்பம்: பழைய கடனைத் தீர்க்க புதுவழி யோசிப்பீர். புது வேலை கிட்டும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் பொறுப்பு கூடும். உயர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சிப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 4 ஆம் தேதி வியாழக்கிழமை 18.6.2026.
இன்று அதிகாலை 02.33 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று மாலை 04.52 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.
இன்று அதிகாலை 01.34 வரை துருவம். பின்னர் இரவு 10.58 வரை வியாகாதம். பிறகு ஹர்ஷணம்.
இன்று அதிகாலை 02.33 வரை கரசை. பின்னர் பிற்பகல் 01.35 வரை வணிசை. பிறகு பத்திரை.
இன்று அதிகாலை 05.53 வரை சித்தயோகம். பின்னர் மாலை 04.52 வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடாவில் வம்சாவளி அடிப்படையில் குடியுரிமை பெறும் புதிய சட்டத்தின் கீழ் சான்றிதழ்களைப் பெற்ற நூற்றுக்கணக்கானோரின் குடியுரிமை சான்றிதழ்களை மத்திய அரசு திடீரென திரும்பக் கேட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டு வம்சாவளியினர் தங்களது மூதாததையர்களாக இருக்கிறார்கள் என்பதற்காகவே ஒருவர் தானாகவே குடியுரிமை பெற தகுதியானவர் என்று அர்த்தமாகாது என குடிவரவுத் துறை அமைச்சர் லீனா டயப் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தலைமுறையிலும் உங்களுக்கும் கனடாவுக்குமான தொடர்பை நீங்கள் திட்டவட்டமாக நிரூபிக்க வேண்டும் எனவும் வெறும் மரபியல் இணையதளங்களின் (Genealogy websites) தரவுகள் மட்டுமே இதற்குப் போதாது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின்படி, டிசம்பர் 15, 2025-க்கு முன் பிறந்தவர்கள், தங்களின் முன்னோர்கள் கனேடியர்கள் என்பதை நிரூபித்தால் குடியுரிமை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த வார இறுதியில் இந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை சான்றிதழ் பெற்ற "குறிப்பிட்ட எண்ணிக்கையிலான" நபர்களுக்கு கனடா குடிவரவுத் துறை அதிர்ச்சியூட்டும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், தங்களிடம் உள்ள குடியுரிமை சான்றிதழ்களை உடனடியாக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அசல் ஆவணங்களையோ அல்லது அவற்றை சமர்ப்பிக்க முடியாததற்கான உரிய விளக்கங்களையோ தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
அரசின் இந்த திடீர் முடிவால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒரு முதிய முருக பக்தரிடம் ஒரு இளைஞன் கேட்டான்.
“தாத்தா... ஏன் நீங்கள் தினமும் காலை மாலையும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறீர்கள்? அதனால் என்ன பலன் கிடைக்கிறது?”
அந்த முதியவர் மெதுவாகப் புன்னகைத்தார்.
“மகனே... கந்த சஷ்டி கவசம் என்பது வெறும் பாடல் அல்ல. அது முருகப் பெருமான் நமக்கு அளித்த ஆன்மீகக் கவசம். அதை உணர்ந்து படித்தால் வாழ்க்கையே மாறும்.”
அந்த வார்த்தைகள் அந்த இளைஞனின் மனதில் ஆழமாக பதிந்தன.
உண்மையில், முருக வழிபாடு என்றாலே பெரும்பாலான பக்தர்களின் நினைவிற்கு முதலில் வருவது கந்த சஷ்டி கவசம்தான்.
பலர் அதை ஒரு பக்திப் பாடலாக மட்டுமே கருதுகின்றனர்.
ஆனால், ஆன்மீக அறிஞர்கள் கூறுவதன்படி, கந்த சஷ்டி கவசத்தின் ஒவ்வொரு சொல்லும் தெய்வீக அதிர்வுகளைக் கொண்ட மந்திர சக்தி வாய்ந்த வார்த்தைகளாக அமைந்துள்ளன.
அதனால் தான் நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த கவசத்தை பக்தியுடன் பாடி வருகின்றனர்.
கந்த சஷ்டி கவசத்தை இயற்றியவர் யார்?
கந்த சஷ்டி கவசத்தை இயற்றியவர் ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள்.
முருகப் பெருமானின் அருளால் அவர் இந்த அற்புதமான கவசத்தை உலகிற்கு அளித்தார்.
இன்று அனைவரும் அறிந்திருக்கும்:
"சஷ்டியை நோக்க சரவணபவனார்..."
என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் திருச்செந்தூர் முருகப் பெருமானுக்காக இயற்றப்பட்டது.
பலருக்குத் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், முருகனின் பிற திருத்தலங்களுக்காகவும் தனித்தனி கவசப் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஆனால் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசம்தான் உலகம் முழுவதும் அதிகம் பாடப்படும் கவசமாக விளங்குகிறது.
ஏன் இதை "கவசம்" என்று அழைக்கிறார்கள்?
போருக்குச் செல்லும் வீரன் தனது உடலைப் பாதுகாக்க கவசம் அணிவான்.
அதேபோல், மனிதன் எதிர்கொள்ளும் பயம், கவலை, எதிர்மறை எண்ணங்கள், மனச்சோர்வு, துன்பங்கள் ஆகியவற்றிலிருந்து மனதைப் பாதுகாக்கும் ஆன்மீகக் கவசமாக இது கருதப்படுகிறது.
அதனால் தான் இதற்கு "கந்த சஷ்டி கவசம்" என்று பெயர் வந்தது.
கந்த சஷ்டி கவசம் படிக்கும் சரியான முறை
கந்த சஷ்டி கவசத்தின் முழு பலனையும் பெற சில ஆன்மீக ஒழுக்கங்களை கடைப்பிடிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.
குளித்து உடல் மற்றும் மனத் தூய்மையுடன் அமர வேண்டும்.
சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
முருகப் பெருமானுக்கு முன் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
நெற்றியில் திருநீறு அல்லது குங்குமம் அணிந்திருக்க வேண்டும்.
மனதை அமைதிப்படுத்தி முருகனை தியானிக்க வேண்டும்.
ஒவ்வொரு சொல்லையும் நிதானமாகவும் தெளிவாகவும் உச்சரிக்க வேண்டும்.
முடிந்தவரை அதன் அர்த்தத்தை உணர்ந்து படிக்க வேண்டும்.
ஒரு முக்கியமான ஆன்மீக ரகசியம்
பலர் கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் போது:
"எனக்கு வேலை கிடைக்க வேண்டும்..."
"என் கடன் தீர வேண்டும்..."
"என் பிரச்சனை நீங்க வேண்டும்..."
என்று எண்ணிக்கொண்டே படிப்பார்கள்.
ஆனால் பல ஆன்மீக குருமார்கள் கூறுவது என்னவென்றால், முதலில் முழுமையான சரணாகதியுடன் முருகனை நினைத்து படிக்க வேண்டும் என்பதே.
ஏனெனில் கந்த சஷ்டி கவசத்திலேயே பக்தனுக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் முருகப் பெருமான் அருள்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த நாட்களில் படிப்பது சிறப்பு?
முருக பக்தர்கள் பலர் தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் படிக்கிறார்கள்.
அவ்வாறு முடியாதவர்கள்:
செவ்வாய்க்கிழமை
சஷ்டி திதி
கிருத்திகை நட்சத்திர நாள்
தைப்பூசம்
வைகாசி விசாகம்
பங்குனி உத்திரம்
போன்ற முருகனுக்குரிய புனித நாட்களில் படிக்கலாம்.
பக்தர்கள் நம்பும் பலன்கள்
கந்த சஷ்டி கவசத்தை பக்தியுடன் படித்து வருபவர்கள் பல ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அவர்களின் நம்பிக்கையின்படி:
மன அமைதி அதிகரிக்கும்.
தன்னம்பிக்கை வளரும்.
பயம் குறையும்.
எதிர்மறை எண்ணங்கள் விலகும்.
இறைநம்பிக்கை வலுப்படும்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன உறுதி கிடைக்கும்.
முருகப் பெருமானின் அருள் கிடைத்த உணர்வு உருவாகும்.
செவ்வாய்க்கிழமை வழிபாட்டின் சிறப்பு
பல முருக பக்தர்கள் செவ்வாய்க்கிழமை அன்று மூன்று முறை கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பானது என்று கருதுகின்றனர்.
அதேபோல் சஷ்டி தினத்தில் விரதம் இருந்து முருகனை தியானித்து கவசம் படிப்பதும் மிகவும் புனிதமான வழிபாடாக பார்க்கப்படுகிறது.
உண்மையான பலன் என்ன?
கந்த சஷ்டி கவசம் படிப்பதன் மிகப்பெரிய பலன் வெளிப்புற உலகில் நடக்கும் மாற்றங்கள் மட்டுமல்ல.
மனதிற்குள் நிகழும் மாற்றங்கள்தான்.
கவலையால் நிரம்பிய மனம் அமைதியாக மாறும்.
பயத்தால் நிரம்பிய மனம் தைரியமாக மாறும்.
சந்தேகத்தால் நிரம்பிய மனம் நம்பிக்கையால் நிரம்பும்.
அந்த மாற்றமே முருகனின் அருளின் முதல் அடையாளம்.
இறுதியாக...
கந்த சஷ்டி கவசம் என்பது வெறும் பாடல் அல்ல.
அது பக்தனின் மனதையும், ஆன்மாவையும் முருகனின் திருவடிகளுடன் இணைக்கும் ஒரு புனிதப் பாலம்.
அதை அர்த்தம் புரிந்து, பக்தியுடன், நம்பிக்கையுடன் படிக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முருகப் பெருமான் நிச்சயமாக தனது அருளொளியைப் பொழிவார்.
ஓம் சரவணபவ!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணியில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
ரிஷபம்
புதிய யுக்திகளால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்த தடைகள் மறையும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்ப விட்டு கொடுத்து செல்லவும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
கடகம்
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தன வரவுகள் மூலம் சேமிப்பு மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பமான சூழல் ஏற்படும். வர்த்தக செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பொன் பொருள்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத் தன்மை ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது விவேகம் வேண்டும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். முதலீடு விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கன்னி
உத்தியோக பணியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைகளில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தொழில் சார்ந்த பயணம் மூலம் மனதில் நினைத்த காரியம் ஈடேறும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபார நிமித்தமான புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு தெளிவும் புத்துணர்ச்சியும் ஏற்படும். வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி
விருச்சிகம்
ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் விவேகம் வேண்டும். வாகன பழுதுகளை சீர் செய்தீர்கள். உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி
கும்பம்
விருந்தினர்களின் வருகைகள் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அலைச்சலும் மகிழ்ச்சியும் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பட்டுகள் வரும். பழைய நினைவுகள் மூலம் இன்பமான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 3 ஆம் தேதி புதன்கிழமை 17.6.2026
இன்று அதிகாலை 03.30 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று மாலை 06.06 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.
இன்று அதிகாலை 02.57 வரை விருத்தி. பின்னர் துருவம்.
இன்று அதிகாலை 03.30 வரை கௌலவம். பின்னர் மாலை 03.01 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை.







