Holiday Gift

Scan Mobiles-Apps

Scan to Download Google AppDownload Android AppScan to Download Apple App

Quote of the Day

திருக்குறள்

மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்.

குறள் விளக்கம் : மு.வ : விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

சாலமன் பாப்பையா : அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
  • 128
  • 147
  • 159
  • 178
  • 182
Wowww
  • 188
  • 200
Added a post  
*ஒரு அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்குப் போகிறார்கள்.*விருந்திற்கு முன்பாக தேநீர் வழங்கப்படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது.அந்த சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதை பார்த்து , அழகான சீனக் கோப்பை இது. எவ்வாறு உடைந்தது ?, என ஆதங்கமாகக் கேட்டார்.*"எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது",* என அப்பா வருத்தமான குரலில்சொல்லவே,நண்பர் உடைந்த பீங்கான்களை அள்ளிக் கொண்டு சென்றார்.இதைக்கண்ட மகன் அப்பாவிடம் கேட்டான்... *"உங்கள் கை கோப்பையில் படவே இல்லையே. பின் ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டீர்கள்?".*"உண்மைதான். தேநீர் கோப்பையைக் கொண்டுவந்து வைத்தது நண்பரின் மகள்.அவள் கவனமாக மேஜைமீது அதை வைக்கவில்லை.ஆகவே தவறி விழுந்து விட்டது.இந்த உண்மையைச் சொன்னால் நண்பர் ஏற்றுக்கொள்வாரா? நிச்சயம் என் மீது சந்தேகப்படவே செய்வார்.அதற்குப் பதிலாக செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டுவிடுவதே சரி என நினைத்தேன்.ஒருவேளை இந்த உண்மைக்கு நீ தான் சாட்சி என விளக்கி சொல்லியிருந்தால் அவர் மகளைக் கோபித்துக் கொண்டிருப்பார்.அதன்பிறகு அவரது மகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும்.மெல்ல எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடும்.*"உறவுகளை உடை படாமல் காப்பாற்ற இப்படி சிறு பொய்கள் தேவைப்படவே செய்கின்றன".**அப்பாவின் முப்பதுஆண்டுகால அனுபவம் தான் அவரை இந்த முடிவு எடுக்க செய்திருக்கிறது*.வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் இது போன்றது தானே!இதற்கு மாறாக சிலர் தங்களது சுயநலத்திற்காக குடும்ப உறவுகளை சிதைத்து கொள்வதுடன் மற்றவர்களின் சந்தோஷத்தையும் கெடுத்து விடுகிறார்கள்உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது எளிது.காப்பாற்றிக்கொள்வது எளிதல்ல.வீட்டுக் கொடுத்தலும், புரிதலும், அரவணைத்துப் போதலும் அத்தியாவசமானது.நாம் யார் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன,
  • 229
Added a post  
ஒருவன் வாழ்நாளில் முழு மனிதனாகவே வாழ்ந்தான் என்பதற்கு எதை அடையாளமாக வைப்பது என்பது குறித்த ஒரு சந்தேகம் ஒரு மன்னன் மனதில் எழுந்தது.காட்டிற்குள் குடில் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த ஒரு முனிவரிடம் சென்று தன் சந்தேகத்தை சொன்னான்.முனிவர் சொன்னார்,'ஒருவனின் மறைவிற்குப் பின்னே அந்த மறைவை தாங்க முடியாமல் ஒரு ஜீவன் கண்ணீர் வடிப்பது'முனிவரின் பதில் மன்னனுக்கு புரியவில்லை. குழப்பமாய் கேட்டான்,'ஒரு ஜீவன் என்றால்... யார் அந்த ஜீவன்? மனைவியா? மகனா? மகளா? அல்லது என் குடிமக்களில் ஒருவரா?'முனிவர் பதிலளித்தார்,'உன் மனைவி, மகன், மகள், குடிமக்கள் இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் உன்னோடு நேரடியாக தொடர்பு உள்ளவர்கள்.உன் இழப்பை தாங்க முடியாமல் இவர்கள் அழுவதில் ஆச்சரியம் இல்லை.ஆனால் எந்த வகையிலும் உனக்கு சம்பந்தம் இல்லாமல், உன் வீட்டிற்கு வலது காலை எடுத்து வைத்து மருமகளாக வாழ வந்த பெண்,உன் இழப்பை நினைத்து வருந்தி கண்ணீர் விட்டு அழுதாள் என்றால்...அவள் வாழ்க்கையில் உன்னை மாமனாராகப் பார்க்கவில்லை. தகப்பனாராகப் பார்த்துள்ளாள் என்று பொருள்.கருணை உள்ள மனிதனால் மட்டும்தான் மருமகளை மகளாக நினைக்க முடியும்.இதுவே நீ முழு மனிதனாக வாழ்ந்து முடித்திருக்கின்றாய் என்பதற்கான சாட்சி'மன்னன் தெளிவடைந்தான்.
  • 231
Added a news  
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா உடனடியாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இரத்து செய்துள்ளது.இந்நிலையில், சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் இரத்தம் ஒடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.இந்தியாவுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சிந்து நதி பாகிஸ்தானுடையது. அந்த நதி எங்களுடையதாகவே தொடர்ந்து இருக்கும். நமது தண்ணீர் அந்த நதியில் ஓடும். இல்லையென்றால் அவர்களின் ரத்தம் ஓடும். தங்கள் உள்நாட்டு பாதுகாப்பில் கோட்டை விட்ட இந்தியா, மக்களின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தானை பலிகடா ஆக்குகிறது" என்று கூறியுள்ளார். 
  • 236
Added a news  
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக வெள்ளிக்கிழமை (25) இரவு மூடப்பட்டது. இந்நிலையில், திருவுடல் தாங்கிய பேழை சனிக்கிழமை (26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.இன்றையதினம் உலகநாடுகளில் கத்தோலிக்க மக்கள் துக்கதினம் அனுஷ்டிப்பதுடன் பல ஆலயங்களில் இரங்கல் திருப்பலிகளும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.வத்திக்கானில் இடம்பெறவுள்ள பாப்பரசரின் நல்லடக்க ஆராதனைகளில் வத்திக்கானின் உயர் நிலை அதிகாரிகள் மற்றும் பாப்பரசரின் குடும்ப உறுப்பினர்களில் சிலர் மாத்திரமே கலந்துகொள்ளவுள்ளனர்.பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக மூடப்பட்டதையடுத்து, புனித பேதுரு பேராலயத்தின் உறுப்பினர்கள் பாப்பரசரின் திருவுடல் பேழைக்கு அருகில் இருந்து நல்லடக்கம் இடம்பெறும் வரை பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
  • 239
  • 237
Added article  
இளம் திரைப்பட இயக்குநர் நாகேந்திரன் இன்று (ஏப்.26) காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவரது திடீர் மரணம் சக திரை உலகத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.விமல், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்த ‘காவல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக நாகேந்திரன் அறிமுகமானார். கடந்த 2015-ல் இந்தப் படம் வெளியாகி இருந்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது. சில படங்களில் நடிகராகவும் நாகேந்திரன் நடித்துள்ளார். கடந்த மாதம் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். இந்நிலையில், மீண்டும் ஓர் இயக்குநரின் மரணம் தமிழ் சினிமா துறையினருக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
  • 263
Added a post  
ஒரு தாசில்தார் ஆபீசின் பின்புறமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.அவரைக்காப்பாற்ற ஊழியர்கள் அனைவரும் போராடினார்கள்.ஒரே பரபரப்பு.ஒருவர் கயிறைக்கட்டி உள்ளே இறங்க முயற்சி செய்தார்.இன்னும் சிலர் சட்டைகளைக்கழற்றி முடிச்சுப்போட்டு கிணற்றுக்குள் விட்டு, ஐயா, இதைப்பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று கத்தினார்கள்.பெண் ஊழியர்கள் கிணற்றைச்சுற்றி நின்று அழ ஆரம்பித்து விட்டார்கள்.ஒவ்வொருவரும் தீவிரமாக தாசில்தாரை காப்பாற்ற முயற்சி செய்தார்கள்.அந்த தாசில்தாரை பாதி அளவு மேலே தூக்கிக்கொண்டிருந்த சமயம் ,அந்தப் பக்கம் வந்த பியூன், இந்த ஆபீசருக்கு வேலை மாறுதல் ஆகி விட்டது.புது தாசில்தார் வாசலுக்கு வந்து விட்டார். என்று தகவல் சொன்னார்...அவ்வளவுதான்...கிணற்றுக்குள் இருந்த தாசில்தாரை அப்படியே போட்டு விட்டு புது தாசில்தாரை வரவேற்க எல்லோரும் வாசலுக்கு ஓடி விட்டார்கள்...அதிகாரம் மிக்க பதவிக்கு இருக்கும் மகிமை இது தான்,
  • 263
Added a post  
அலுவலக வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த முரளி செல்போனின் சிணுங்கல் சத்தம் கேட்டு தலைநிமிர்ந்தான்.செல்போனில் குடும்ப டாக்டர் முத்தையா அழைத்துக் கொண்டிருந்தார்.எடுத்து ஹலோ என்றான். மறுமுனையில் டாக்டர் பேசினார்,'குட்மார்னிங் முரளி. ஃப்ரீயா இருந்தா கொஞ்சம் ஹாஸ்பிடல் வரைக்கும் வர முடியுமா?''இதோ உடனே வர்றேன் டாக்டர்'காரை எடுத்து கிளம்பினான். எதற்காக அழைத்திருப்பார் என மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தி ஹாஸ்பிட்டலை சென்றடைந்தான்.ஹாஸ்பிடலில் எதிர்பட்ட நர்சுகள் அனைவரும் அவனுக்கு வணக்கம் செலுத்தினர். மெலிதான புன்னகையோடு தலையை ஆட்டி யாருக்காகவும் காத்திராமல் நேரே மருத்துவரின் அறைக்குச் சென்றான்.'வெல்கம் மிஸ்டர் முரளி! சேரை என் பக்கத்தில் போட்டு உட்காரு'உட்கார்ந்தான். டாக்டர் மேஜை டிராயரைத் திறந்து ஒரு கவரை அவனிடம் நீட்டினார்.'இதுல இருக்கிற பொண்ணு பேரு லதா. பக்கத்து கிராமத்தில இருக்கு. ரொம்ப ஏழ்மையான குடும்பம். நல்ல இடத்தில கட்டி கொடுக்க அவங்க அப்பாவுக்கு வசதி இல்லை.உனக்கு இரண்டாம் தாரமா வாக்கப்பட சம்மதமான்னு கேட்டேன். அந்தப் பொண்ணு உட்பட எல்லோரும் சம்மதிச்சுட்டாங்க.நீ போட்டோவை பார்த்து ஓகே சொன்னால் உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்'கவரைத் திறந்தான். சாயம் போன சுடிதாரோடு இளமையின் தலை வாசலில் நின்றிருந்த லதா அழகாக இருந்தாள்.பார்த்ததுமே அவனின் இதயம் அவளை கவ்விக் கொண்டது. ஆனாலும் தயக்கமாக சொன்னான்,'டாக்டர் என் குடும்ப வரலாறு முழுவதும் உங்களுக்கு தெரியும். மல்டி மில்லியனரான எனக்கு பணம் ஒரு விஷயமே கிடையாது.என் மகன் பிறந்து வெறும் ஆறு மாசமே ஆன நிலையில் என்னுடைய முதல் மனைவி காவியா எதிர்பாராமல் விபத்தில் இறந்து போனது உங்களுக்கு தெரியும்.அவளோட கல்லறை ஈரம் கூட இன்னும் காயலை. ஆனாலும் அடுத்த கல்யாணம் பண்ணச் சொல்லி எல்லோரும் என்னை வற்புறுத்துறீங்க.நீங்க சொல்றது மாதிரி என்னை கவனிக்க ஆள் வேண்டியது இல்லை என்றாலும் என்னோட குழந்தையை கவனிக்க கண்டிப்பாக ஒரு பொண்ணு வேணும்.அதனால இரண்டாவது கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்னே வச்சுக்குவோம். இரண்டாவதா வர்றவா என் மகனை அவளோட மகன் மாதிரி கவனிச்சு நல்ல முறையில் வளர்ப்பான்றதுக்கு என்ன உத்தரவாதம் இருக்கு?அதனால கொஞ்ச நாள் போகட்டும். என்னால என் மகனை வளர்க்க முடியலன்ற சூழ்நிலை வந்தால் கல்யாணத்தை பத்தி யோசிப்போம்'சேரில் இருந்து எழ முயன்றவனை தடுத்தார் டாக்டர்.'கொஞ்சம் இரு முரளி. உன் குழந்தை மேலே உனக்கு எவ்வளவு அன்பு இருக்கு, முதல் மனைவியை நீ எவ்வளவு நேசிச்சன்ற விவரமெல்லாம் எனக்குத் தெரியாதா?உன்னோட குழந்தை வளர்ப்புல ஒரு சின்ன தவறு கூட நடக்காத மாதிரியான பொண்ணை உனக்கு தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு.நான் உன்கிட்ட காட்டின பொண்ணு அழகா இருந்தாலும் ஆண்டவன் அவளுக்கு ஒரு பெரிய குறையை வச்சிருக்கான்.பிறவியிலேயே அந்த பொண்ணுக்கு கர்ப்பப்பை கோளாறு இருக்கு. அந்த பொண்ணால வாழ்க்கையில கன்சீவ் ஆக முடியாது. அதனால உன் குழந்தையை அவ குழந்தை மாதிரி பார்த்துக்குவா. போன மாசம் தான் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை நீக்கினேன்.நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளுக்கு வாழ்க்கை கொடுத்தது மாதிரியும் இருக்கும். அவளுக்கும் வாழ்க்கையில ஒரு குழந்தைக்கு தாயா வாழ்ந்த ஒரு திருப்தியும் இருக்கும்.உனக்கும் எந்த பயமும் வேண்டியதில்லை. கொஞ்சம் யோசிச்சு பார்'குழப்பம் அவனது மூளைக்குள் குடைராட்டினம் சுத்த ஆரம்பித்தது. தொடர்ந்து டாக்டர் அரை மணி நேரம் அவனுக்கு மூளைச்சலவை செய்ததில் திருமணத்திற்கு சம்மதித்தான்.ஒரு கோவிலில் வைத்து மிக எளிமையாக திருமணம் நடந்தது.இரண்டாவது மனைவியாக வந்த லதா அவன் எதிர்பார்த்ததற்கு மேலாக அவனிடம் அன்பை கொட்டினாள். பெற்ற தாய்க்கும் மேலாகவே முரளியின் குழந்தைக்கு தாயாகவே மாறி நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கினாள்.அவனை பார்க்கும் பொழுதெல்லாம் டாக்டர் சொன்னார்,'ரொம்ப பயந்தியே முரளி! உன் வாழ்க்கை எப்படி ஜம்முன்னு போய்க்கிட்டு இருக்கு பார்த்தியா? லதாவோட தியாகம் உன்னுடைய பயம் எல்லாத்தையும் போக்கி வாழ்க்கையில் ஒரு பெரிய வசந்தத்தையே ஏற்படுத்திருச்சா?'மௌனமாய் தலையை ஆட்டினான்.ஆனாலும் ஒவ்வொரு முறையும் லதா முரளியிடமும் குழந்தையிடமும் அன்பு செலுத்தும் போது அவன் மனதிற்குள் ஒரு குரல் ஒன்று சொல்லியது,'முரளி அந்த டாக்டர் சொல்வது போல் இவள் ஒன்றும் தியாகி அல்ல. சுயநலவாதி தான்.கடவுள் இவளை வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்காவிட்டாலும், குழந்தை பாக்கியமே இல்லை என்பது போல கர்ப்பப்பையில் கோளாறு ஏற்படுத்தி இருக்காவிட்டாலும் இவள் உன் மீதும் குழந்தை மீதும் அன்பு செலுத்தி இருக்க மாட்டாள்.இவளுக்கு கர்ப்பப்பையில் கோளாறை வைத்து இறைவன் முதல் மனைவியை உன்னிடம் இருந்து பிடுங்கி உன் வாழ்க்கையில் அவன் செய்த கோளாறை சரி செய்ய இவளை அனுப்பி வைத்திருக்கிறான்.இந்த கோளாறெல்லாம் இல்லை என்றால் இவளும் வேறு ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு குழந்தையை பெற்று அசல் தாயாக மாறி ஒரு பெண்ணிற்கான முழு வாழ்க்கையும் வாழ்ந்திருப்பாள்.அரை வயிற்று கஞ்சிக்கே வழியில்லாத குடும்பத்தில் பிறந்து இப்போது ஆடம்பரமாக வாழ்ந்து ஒரு குழந்தைக்கு தாயாக மாறி அந்த தாய்மையையும் அனுபவித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு இந்த வாழ்க்கை நீ போட்ட பிச்சை. உண்மையில் நீ தான் தியாகி'காலங்கள் உருண்டோடியது. குழந்தை வாலிபன் ஆனான். அவனுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து முடித்த கையோடு லதாவை புற்றுநோய் தாக்க எதிர்பாராமல் இறந்து போனாள்.அவள் இறந்த சோகம் அவனை கொஞ்சம் கூட தாக்கவில்லை. குழந்தையை வளர்க்க கூலி வாங்குவதற்கு பதிலாக சுகபோக வாழ்வை அனுபவித்து இறந்திருக்கிறாள். இதில் அவளை உயர்த்தி பேசவோ பெருமைப்படுத்தவோ என்ன இருக்கிறது?தேனிலவு சம்பிரதாயங்கள் முடிந்த பின் முரளியின் மகன் மனைவியோடு வெளிநாடு சென்ற பிறகு லதாவின் அறையை ஆட்களை கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்தான் முரளி.வேலையாட்கள் கேட்டார்கள்,'அம்மாவோட பொருள்களை எல்லாம் என்ன செய்ய முதலாளி?'முரளி சொன்னான்,'அதையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அவளுடைய பொருள் என ஒன்று கூட இங்கே இருக்கக் கூடாது'வேலையாட்கள் லதாவின் பொருட்களை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.திடீரென அறைக்குள் ஏதோ ஒன்று கீழே விழுந்து கண்ணாடி சிதறும் சத்தம் கேட்டது.அறைக்குள் ஓடிப் போய் பார்த்தான். சுவற்றில் மாட்டியிருந்த லதாவின் திருமண புகைப்படம் கீழே விழுந்து இருந்ததில் கண்ணாடி உடைந்து சிதறி கிடந்தது.திருமணமாகி பதினைந்து வருடங்கள் கழித்து சுவற்றில் தம்பதியரின் புகைப்படம் மாட்டியே தீர வேண்டும் என அவனோடு செல்லமாய் சண்டை போட்டு இருவரும் சேர்ந்து இருப்பது போல் புகைப்படம் ஒன்றை எடுத்து அவளாகவே கடைக்குச் சென்று பழைய மாடலில் கண்ணாடி போட்ட பிரமில் சுவற்றில் தொங்க விட்டிருந்த படம்.குனிந்து புகைப்படத்தை எடுத்தான். கீழே விழுந்ததில் புகைப்பட அட்டை தனியாக கழண்டு வந்தது. அந்த அட்டைக்கு பின்புறம் இருந்து மடித்து வைக்கப்பட்டு பழுப்பேறி போயிருந்த ஒரு வெள்ளை தாள் கீழே விழுந்தது.எடுத்துப் படித்தான்.'அன்புள்ள அத்தானுக்கு! எனக்கு திருமணம் ஆகுமோ ஆகாதோ என எனது அப்பாவும் அம்மாவும் பயந்து கொண்டிருந்த வேளையில் என் தகுதிக்கு மீறிய இடத்தில் இருந்த நீங்கள் என்னை திருமணம் செய்து எனக்கும் வாழ்வளித்து என் பெற்றோர் வயிற்றிலும் பாலை வார்த்தீர்கள்.ஒரு சராசரி பெண்ணைப் போல எனக்கும் முதல் திருமணம் தான் நடக்க வேண்டும் என்கிற கனவு இருந்தது. ஆனால் எனது பெற்றோரின் நலனுக்காக அதை மாற்றிக் கொண்டேன்.இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டால் வாழ்க்கை வீணாகிவிடும் என்கிற பயமெல்லாம் உங்களுடைய அன்பினால் காணாமல் போய்விட்டது.எனக்கு குழந்தை பிறந்தால் உங்கள் குழந்தையின் மீது அன்பு செலுத்தாமல் போய்விடுவேன் என்கிற பயம் உங்களுக்கு இருப்பதாக டாக்டர் சொன்னார்.நீங்கள் அவருடைய குடும்ப நண்பர் என்பதனால் நான் கண்டிப்பாக உங்களை திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என டாக்டர் வற்புறுத்தினார்.எனக்கு பெரிய அளவிற்கு படிப்பு அறிவு இல்லை. மனம் விட்டும் பேசும் படியாக தோழிகளும் கிடையாது. பிறந்ததிலிருந்து எனக்கென எந்த சுகத்தையும் அனுபவித்தது இல்லை. நான் விரும்பியது எதுவும் எனக்கு கிடைத்தது இல்லை. பிறருக்காகவே வாழ்ந்த நான் உங்களுக்காகவும், குழந்தைக்காகவும் வாழ முடிவெடுத்தேன்.டாக்டர் திருமணத்திற்கு முன்பு உங்களிடம் சொல்லியது போல் எனக்கு கர்ப்பப்பையில் எந்த கோளாறும் கிடையாது.நீங்கள் என்னை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்ததாக சொன்ன பிறகு நான் கர்ப்பம் ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் கர்ப்பப்பையை எடுக்க வேண்டுமென டாக்டர் சொன்னார்.ஏழ்மை குடும்பத்தில் பிறக்க வைத்து என்னை இந்த சூழ்நிலையில் சிக்க வைத்த இறைவனை திட்டியபடியே மனதில் மிகுந்த வலியோடு அதற்கு சம்மதித்தேன்.ஆனால் உங்களோடு வாழ ஆரம்பித்த பிறகு தான் என்னுடைய எண்ணமெல்லாம் எவ்வளவு தவறு என்று புரிந்தது. எந்த இறைவனை திட்டினேனோ அந்த இறைவன் அருளால் அன்பான கணவன், அன்பான மகன் கிடைத்தார்கள்.ஒருவேளை எனக்கு முதல் திருமணம் நடந்து முறையாக குழந்தை பிறந்து இருந்தால் கூட என்னிடம் இவ்வளவு அன்பாக இருந்திருப்பார்களா என தெரியாது.இந்த விஷயத்தை நான் உயிரோடு இருக்கிற காலம் வரைக்கும் உங்களிடம் சொல்ல கூடாது என டாக்டர் என்னும் சத்தியம் வாங்கி இருக்கிறார்.ஆனாலும் ஒரு ரகசியத்தை உங்களிடம் இருந்து மறைத்து சாக நான் விரும்பவில்லை. அதனால் நடந்த உண்மைகளை தாளில் எழுதி இருக்கிறேன்.என்றாவது ஒருநாள் இந்த தாள் உங்கள் கையில் சிக்கினால் உண்மை தெரியவரும். உங்களுக்கு இரண்டாம் தரமாக வாழ்க்கைப்பட மறுத்ததற்கும், கர்ப்பப்பையை எடுக்கும் பொழுது கணக்கு வழக்கு இல்லாமல் கவலைப்பட்டதற்கும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.என்னுடைய பீரோவில் எனது முகூர்த்த பட்டு சேலைக்கு அடியில் டாக்டர் எனக்கு ஆபரேஷன் செய்து கர்ப்பப்பையை எடுத்த மருத்துவ சான்றிதழ் இருக்கிறது. அதைப் படித்துப் பார்த்தால் எனக்கு கர்ப்பப்பை கோளாறு இல்லை என்பது உங்களுக்கு தெரியும்.இந்த விஷயம் நமது மகனுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்'முரளி பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தான். பொருட்களை ஒதுக்கி கொண்டிருந்த வேற ஆட்கள் ஓடி வந்து 'என்ன முதலாளி' என்றனர்.'லதாவின் பொருட்களை மீண்டும் அதே இடத்தில் வைத்து விடுங்கள். லதாவின் நினைவுகளையும் அவளின் தியாகங்களையும் சுமந்து கொண்டு நிற்கும் அந்த பொருட்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது' என்று கண்ணீரோடு சொன்னான்,
  • 270
Added a post  
என்னத்த சொல்றது....!?!?முன்னெல்லாம் ஒரு சொந்தகாரங்க வீட்டுக்குப் போனா..."தம்பி..! வா வா, கண்ணு.. பாத்து எவ்ளோ நாளாச்சு. அம்மா நல்லாருக்கா..? அப்பா நல்லாருக்கா..? என்ன சாமீ இப்டி எளச்சுட்டே?""அங்க எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க எல்லாரும் எல்லா நல்லாருக்கிங்களா..?""எல்லா நல்லா இருக்கோம் சாமீ. கைய கழுவிட்டு வா. ரெண்டே ரெண்டு தோசை ஊத்தி தாரேன்.."பாப்பா.. மாமாக்கு கை துடைக்க துண்ட எடுத்து குடுத்துட்டு, சூடா தோசை ஊத்துமா""அத்தை..! நா வரும்போது தான் சாப்ட்டுட்டு வந்தேன். என்னால இப்ப சாப்டவெல்லாம் முடியாது. தண்ணி மட்டும் குடுங்க, போதும்..""இந்த தண்ணிய குடிக்கவா இவ்ளோ தூரம் வந்தே..?பாப்பா.. அப்டியே தோசைய தட்டத்துல போட்டு, இங்கயே கொண்டாந்து குடு. மாமா இப்பிடியே உக்காந்து, பேசிட்டே சாப்டட்டும். "(எந்திரிச்சு சமையக்கட்டு வரைக்கும் நடக்க சங்கடப்பட்டு, சோறு வேணாம்னு சொல்ற சோம்பேறின்னு நினச்சுட்டாங்க போல)அப்டி இப்டி பேசிப் பேசியேயே.. ஒரு நாலஞ்சு தோசைய அமுக்கி விட்ருவாங்க.அடுத்து, வந்த விஷயத்த சொல்லிட்டு நாம கிளம்பும் போது..."ஏஞ்சாமீ... இருந்துட்டு சாயங்காலமா போலாம்ல. மத்தியானத்துக்கு மாமன நாட்டுகோழி புடிச்சுட்டு வரச் சொல்றேன்..""இல்லத்த.. வேலையிருக்கு. அவசரமா போகணும்..""எப்ப வந்தாலும் உனக்கு அவசரந்தான்... பாத்து மெதுவா போ சாமீ.அம்மாவ கேட்டேன்னு சொல்லு. ஒரு நாலு நாளைக்கு அம்மாவ கொண்டாந்து விடு சாமீ, இங்க எங்கூட இருக்கட்டும். அட, பேசிட்டே மறந்துட்டேன் பாரு, இரு வாரேன்...(போய்... ஒரு கட்டப்பையில கத்திரிக்கா, தக்காளி, வெங்காயம் போட்டு கொண்டாந்து, வண்டில வெச்சுட்டு...)நேத்து சந்தைக்குப் போனேனா..! அங்க வாங்கியாந்தேன். நாங்க மூணு பேரு தான். இத்தனைய வெச்சுகிட்டு, என்ன பண்ணப் போறேன். கொண்டு போய் அம்மாட்ட குடு.பாத்து பத்தரமா போ சாமீ. எனக்கும் அம்மா நெனப்பாவே இருக்கு. முடிஞ்சா அடுத்த வாரம் வாரேன்னு சொல்லு.."இப்பெல்லாம் ஒரு சொந்தங்காரங்க வீட்டுக்குப் போனா..."ஹாய்...!! வா வா.. ஒரு அஞ்சு நிமிஷம் லேட் பண்ணிருந்தாலும், நாங்க வெளிய கிளம்பி இருப்போம். என்ன சாப்பிடுற..? காபி, டீ..???? (கேட்டுட்டு உடனே)எங்க வீட்ல நாங்க யாரும் டீ, காபி சாப்பிடுறதில்ல.."(இதுக்கும் மேல, 'இல்லைங்க..நாங்க தினம் ஆறு வேளையும் குடும்பத்தோட ஊர்வலமா போய் டீ குடிச்சுட்டு வந்தால் தான் எங்களுக்கு தூக்கம் வரும்'னா சொல்ல முடியும்..?)"ஐயையோ..! நா இன்னேரத்துல டீ, காபி சாப்பிட மாட்டேங்க..""அப்புறம்... என்ன விஷயம்..? (வந்த விஷயத்த சொன்னதும்)இதுக்காகவா இவ்ளோ தூரம் வந்தே..? போன்லயே சொல்லி இருக்கலாமே...""இல்லைங்க... பார்த்து ரொம்ப நாளாச்சு.அதான் நேர்ல பாத்துட்டு போலாம்னு வந்தேன்..""அதான் தினம் நாலு தடவ, வாட்ஸ் ஆப், fpல... போட்டோ அப்டேட் பண்றனே..."(கன்னத்துல செருப்பாலயே அடிச்ச மாதிரி இருக்கும். இதுக்கிடைல, அவங்க பையனும் பொண்ணும் காதுல ஹியர் போன மாட்டிட்டு குறுக்க மறுக்க நடந்துட்டு இருப்பாங்க.ஆனா நம்மள ஒரு மனுஷ ஜந்துவா கூட மதிக்க மாட்டாங்க. இந்தம்மா செருப்பால அடிச்சது பத்தாதுன்னு, தன்னோட குட்டிங்க கைல வௌக்குமாத்த குடுக்குற மாதிரி...)"ப்ரீத்தி... இந்த அங்கிள் யாருன்னு தெரிதா..?"(அது சின்ன வயசுல, நம்ம பாக்கெட்ல கைய விட்டு காச எடுத்து, ஏழு கடல மிட்டாய வாங்கி ஒரே வாய்ல ஒன்னா அமுக்குனத மறந்துட்டு..சந்தைல எருமை மாட்ட ஏற இறங்க பாக்குற மாதிரி ஒரு பார்வைய பாத்துட்டு...)"நோ மம்மி..! நா பாத்ததே இல்ல. யாரிது..?"னு, வௌக்கு மாத்துலயே நம்மள போடும்.உடனே அம்மாக்காரி அசடு மாதிரி ஒரு சமாளிப்பு சிரிப்பை சிரிச்சுட்டு..."அப்புறம்..?" (இன்னுமாடா கிளம்பல)"சரிங்க..! டைமாச்சு, நா கிளம்பறேன்..""ஆமா..! வந்து ரொம்ப நேரமாச்சு. நானும் வெளிய கிளம்பணும். இனிமே வரும்போது ஒரு ரிங் பண்ணிட்டு வா. எங்க வீட்டுக்கு வர்ற கெஸ்ட்லாம் எப்பவுமே பர்மிஷன் கேட்டுட்டு தான் வருவாங்க... இப்ப போகும்போது அந்த கேட்ட லாக் பண்ணிட்டு போயிடு. தெரு நாய்லாம் உள்ள வந்துடும்.."
  • 274
மக்கள் நகைச்சுவையை அதிகம் ரசிக்கிறார்கள்...
  • 280
Added a post  
ஒரு பேராசிரியையைப் பேச அழைத்தார்கள்பேச்சின் தலைப்பாக "பலதார மணம்" என்பதை எடுத்துக் கொண்டு பல திருமணம் செய்து கொள்வதன் பலனை விளக்கினார்.பல தார மணத்தை விரும்பும் கணவரை அவரது மனைவி புரிந்து கொள்ள வேண்டும்" எனச் சொன்னார்.அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு பெண் எழுந்து"மேடம் ! நீங்க இவ்வளவு நல்லவங்கன்னு எனக்குத் தெரியாமப் போச்சு. என் மனசுல இருந்த பாரம் இப்பதான் குறைஞ்சுது."பேராசிரியர் பெருமையோடு"நன்றி. இன்னும் ஏதேனும் சொல்றீங்களா..?" ன்னு கேட்டார்.அந்தப் பெண் " ஆமாம் மேடம்...நான் உங்க கணவரைக் கல்யாணம் பண்ணி 5 வருஷம் ஆச்சு.எங்களுக்கு இரண்டு இரட்டையர்கள்" என்றாள்இதைக் கேட்டதும் பேராசிரியர் அதிர்ச்சியில் மூர்ச்சை ஆகி விழுந்து விட்டார்.!அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வைத்தியம் செய்ததும் கண் விழித்தார்.பார்த்தால் அதே பெண் நின்று கொண்டிருந்தார்" மேடம் ...மன்னிச்சுக்கங்க. உங்க கணவர் யார் எனத் தெரியாது.நீங்க அறிவுரை சொல்வதை நீங்களே கடைபிடிக்கிறீர்களா எனத் தெரிந்து கொள்ள பொய் சொன்னேன்" என்றார்பேராசிரியருக்கு வந்த பெருமூச்சு ஆசுவாசப்படுத்தியது.
  • 289
  • 289
  • 287
முந்திக்கொண்ட முதல் செங்கல் கோவிலின் அடித்தளத்தில் நின்றுவிடும் !காத்திருந்த கடைசி செங்கல் தான் கலசம் தொடும் !சாதிக்க மிக மிக அவசியம் பொறுமை
  • 285
எண்ணத்தில் தூய்மை,சொல்லில் இனிமை, செயலில் நேர்மை , இணைந்தால் மலர்வதுஉயர்ந்த வாழ்க்கை.நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!
  • 297
  • 448
  • 448
  • 452
Added a post  
ஒரு மிகப்பெரிய ஞானியை பிரபு ஒருவர் தேடிவந்தார். “எனக்கொரு இறுதி வாசகம் எழுதித் தாருங்கள்," அதை மனதில் என்றென்றும் நிறுத்தி பொக்கிஷமாக பாதுகாப்பேன் என்றார்.ஞானியும் மறுக்காமல் ஒரு சிறு துண்டில் ஒரு வாசகம் எழுதித்தர அதைப் படித்துப் பார்த்த பிரபு அதிர்ந்துவிட்டார்.'அப்பனும் இறப்பான் பிள்ளையும் இறப்பான்அதன் பின் பேரனும் இறப்பான்!'என்று எழுதி இருந்தது.பிறந்தவர்கள் இறப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், உங்களைப் போன்ற ஞானி மக்களுக்கு வரம் தருவதுபோல் வார்த்தை சொல்லாமல் சாபம் தருவது போல் அபசகுனமாகவா எழுதுவது?" என்று குமுறிய பிரபுவைப் பார்த்து ஞானி சிரித்தார்."இதுவா சாபம்? பெரிய வரமப்பா இது, நன்றாகச் சிந்தித்துப்பார் முதலில் அப்பன் இறப்பான் பிறகு பிள்ளை இறப்பான் பிறகு பேரன் இறப்பான். இதானே முறை, உன் பெற்றோரே தங்களது இறுதிச் சடங்கை நீ செய்ய வேண்டுமென்று தானே ஆசைப்படுவார்கள்? நீ மறைந்து உனக்கு உன் மகன் ஈம கடன்கள் செய்தால் அது இயல்பு. அதில்லாமல் நீ இருக்க அவன் மறைந்து அவனது இறுதிச் உங்குகளை நீ செய்ய நேரிட்டால் உனக்கு எப்படியிருக்கும்? அதுதான் சாபம். அப்படியானால் இது வரம் தானே? மரணம் என்பது இயல்பானது. அது இயல்பான முறையில் நிகழ்வதே வரம். இறையருள், சுபம் எல்லாமே."என்றார். பிரபு மனநிறையுடன் அதை கண்களில் ஒற்றிக் கொண்டு அவரிடம் ஆசி பெற்று சென்றார்.ஞானியின் விளக்கம் கேட்ட பிரபு வாசகத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டார்.
  • 466
Added a post  
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜாமீன் தொடர்பான விஷயங்களை தவிர்க்கவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கடின உழைப்பிற்கான பலன்கள் கைகூடும். சக ஊழியர்களின் இடத்தில் அனுசரித்து செல்லவும். ரகசியமான முதலீடுகள் அதிகரிக்கும். மற்றவர்களால் பொறுப்புகள் மேம்படும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ரிஷபம்கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்குப் பிடித்த செயல்களை செய்து முடிப்பீர்கள். நிர்வாகம் தொடர்பான பணிகளில் உடனிருப்பவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கவும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். கவலை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை மிதுனம்உடன் இருப்பவர்களால் பொறுப்புக்கள் மேம்படும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். பிடிவாதமான போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபாரம் சார்ந்த இடமாற்றங்கள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதில் பொறுமை வேண்டும். நம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு கடகம்புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உணவு சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும். வருவாயில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புண்ணியத்தல தரிசன பயணம் சாதகமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். நட்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் சிம்மம்பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு கன்னிபுதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கால்நடைகளின் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தாமதம் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை துலாம்கனிவான பேச்சுகளால் மதிப்பு உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சூழல் உண்டாகும். வியாபாரத்தில் திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் விருச்சிகம்குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான சில கனவுகள் பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீலம் தனுசுஅரசு சார்ந்த காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். நெருக்கமானவர்களின் சந்திப்பு உண்டாகும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபங்களை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிக்கல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மகரம்தைரியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். இழுபறியான சரக்குகளால் ஆதாயம் உண்டாகும். சிறு தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : கருநீலம் கும்பம்குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். பழைய சிக்கல்கள் விலகும். வியாபாரம் சார்ந்த ரகசியங்களை புரிந்து கொள்வீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அலுவலகம் பணிகளில் துரிதம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : பச்சை மீனம்வியாபாரத்தில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு வந்து செல்லும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். சோதனை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
  • 518
Added a post  
விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை 26.4.2025திதி : இன்று காலை 06.03 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.17 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. நாமயோகம் : இன்று காலை 06.50 வரை வைதிருதி. பின்னர் விஷ்கம்பம். கரணம் : இன்று காலை 06.13 வரை வணிசை. பின்னர் மாலை 04.57 வரை பத்தரை. பிறகு சகுனி. அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 04.17 சித்த யோகம். பின்னர் அதிகாலை 05.58 அமிர்த யோகம். பிறகு மரண யோகம்.நல்ல நேரம்காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 07.30 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
  • 531