Holiday Gift

Scan Mobiles-Apps

Scan to Download Google AppDownload Android AppScan to Download Apple App

Quote of the Day

ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள்.  - ஹெர்பர்ட்

Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
  • 48
  • 48
Added article  
புஷ்பா 2 பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் தனது அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடத் தயாராகி வருகிறார். அவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படத்தினை சுமார் 600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளார்களாம். இந்நிலையில் அட்லீ இயக்கும் படத்திற்காக அல்லு அர்ஜுன் வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.அல்லு அர்ஜுன் அப்படத்திற்காக ரூ. 175 கோடி சம்பளமாக வாங்க உள்ளாராம். அதுமட்டுமின்றி படத்தின் மூலம் வரும் வருவாயில் 15 சதவீதம் பங்குகளும் தனக்கு தர வேண்டும் என ஒப்பந்தம் போட்டுள்ளதாக பிங்க்வில்லா தகவல் வெளியிட்டுள்ளது. பொதுவாக நடிகர்கள் சம்பளம் அதிகம் வாங்குவார்கள் அல்லது லாபத்தில் மட்டும் பங்கு கேட்பார்கள். ஆனால் அல்லு அர்ஜுன் இரண்டையுமே ஒரே படத்தில் வாங்க இருப்பது ஆச்சர்யமான விஷயம் தான்.இந்தியாவிலேயே இது ஒரு சாதனையாகவும் கருதப்படுகிறது. பிரபாஸ், ரஜினி, ஷாருக்கான் போன்ற பெரிய ஹீரோக்களை விட அல்லு அர்ஜுன் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உருவெடுத்துள்ளார். இந்த பணத்தில் ஒரு பான் இந்திய திரைப்படத்தையே எடுக்கலாம். அட்லீயின் அசத்தலான திரைக்கதையில் இப்படம் உருவாக உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இது அல்லு அர்ஜுனின் கெரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
  • 107
Added article  
நேற்று நடந்த ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் திஷா பதானி டான்ஸ் ஆடிய காட்சி கட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே போட்டி நடைபெற்றது.  போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாரூக்கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதில் பாலிவுட் நடிகை திஷா பதானி கவர்ச்சிகரமான டான்ஸ் ஒன்றையும் ஆடினார். ஆனால் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது இந்த டான்ஸ் வீடியோவை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஒளிபரப்பில் கட் செய்துவிட்டு கமெண்டரி வீடியோக்களை ஒளிபரப்பியுள்ளனர்.இதுகுறித்து ஐபிஎல் ரசிகர்கள் பலரும் கிண்டலாக சமூக வலைதளங்களில் இட்டு வரும் பதிவுகள் வைரலாகத் தொடங்கியுள்ளதுடன், திஷா பதானி என்ற ஹேஷ்டேகும் வைரலாகத் தொடங்கியுள்ளது.
  • 120
  • 87
Added a news  
கனடாவில் அடுத்த பொதுத் தேர்தல் ஏப்ரல் 28, திங்கள்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது,பிரதமர் மார்க் கார்னி, ஒட்டாவா-நெப்பீயன் (Nepean) தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுவார்.ஒட்டாவா நகரம் என்பது தனது குடும்பத்துடன் வாழ்ந்த இடம், பொதுச் சேவைக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இடம் மற்றும் தனது சமூகத்திற்கு திரும்ப கொடுத்த இடம்" பிரதமர் கார்னி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.நெப்பீயன் தொகுதியில் முந்தைய லிபரல் எம்.பி சந்திர ஆர்யாவின் வேட்புமனு லிபரல் கட்சியால் திடீரென நீக்கப்பட்டது.பிரதமர் மார்க் கார்னி, நாளைய தினம், ஆளுநர் நாயகம் மேரி சைமனை சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரவுள்ளார்.
  • 122
Added a news  
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் (Pope Francis) உடல்நலம் சீராகி இன்றையதினம் (23) வீடு திரும்பியுள்ளார்.கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி சுவாசப் பிரச்சினை காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, ஐந்து வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றையதினம் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் இயக்குநர் செர்ஜியோ அல்பெய்ரி கூறுகையில், "போப் உடல்நிலை சீராக உள்ளது. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து திரும்பினார். எனினும், அவர் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். அத்துடன், அதிக மக்கள் நிரம்பிய சந்திப்புகளையோ அல்லது அவரை சோர்வடையச் செய்யும் சந்திப்புகளையோ பிரான்சிஸ் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
  • 139
Added a news  
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 பேரும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 19 திகதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி டிரம்பிடம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளியில் கூடுதல் காலம் தங்கியிருந்ததற்காக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். "இதை யாரும் என்னிடம் குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால், நான் அதை எனது சொந்த பணத்தில் இருந்து கொடுப்பேன்" என கூறியுள்ளார். மேலும் அவர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்ததற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே விண்வெளியில் கூடுதல் காலம் இருந்ததற்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு நாள் ஒன்று 5 டொலர்கள் சிறப்பு சம்பளமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதாவது அவர்களின் ஆண்டு வருமானமான 1,52,258 டொலர்களுடன் கூடுதலாக 1,430 டொலர்கள் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது..
  • 148
Added a post  
எங்கே இருக்கின்றது?திருப்பூரிலிருந்து, ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கி. மீ. தொலைவில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் இருக்கின்ற சுக்ரீஸ்வரர் கோயில்தான், நான்கு யுகங்களை கண்ட அதிசய கோயிலாக திகழ்கின்றது.இராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு சிவபெருமானை வேண்டி பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.சுக்ரீவன் வழிபட்டதற்கு ஆதாரமாக, கோயிலின் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கத்தை நிறுவி வழிபாடு செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது.அதன் காரணமாக இங்கிருக்கும் இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகின்றார்.சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரரால் பாடல் பெற்ற இக்கோயில், 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலாக இருக்கலாம் என்று கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டு கூறுகின்றது.நான்கு யுகங்கள்2,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கோயில் என்று இக்கோயில் குறித்து தொல்லியல் துறை கூறுகின்றது.ஆனால், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதா யுகத்தில், காவல் தெய்வங்களாலும்,12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதா யுகத்தில் சுக்ரீவனாலும் இக்கோயில் வணங்கப்பட்டது.8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபர யுகத்தில் வெள்ளை யானையான ஐராவதத்தாலும் வணங்கப்பட்டது.4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்கள், அரசர்கள் போன்றோர்களால் வணங்கப்பட்டு நான்கு யுகங்களை கண்ட கோயில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் இக்கோயிலில் உள்ளன.பலம் வாய்ந்தகோயிலின் அஸ்திவாரத்தை பலப்படுத்துவதற்காக தொல்லியல் துறையினர் கோயில் கற்களை பிரித்து பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர்.தற்போதுள்ள கோயிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோயில் அமைந்துள்ளது.அதன் காரணமாகவே பல ஆயிரம் ஆண்டுகளானாலும், பூமிக்கடியில் கோயில் இறங்காமல், கட்டியபடியே வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கட்டுமானங்கள் அப்படியே உள்ளன.சிறப்புஎந்த சிவன் கோயிலிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மன் உள்ளார்.பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோயிலில் அமைந்துள்ளதாக கோயில் வரலாறு கூறுகின்றது.அதேபோல் எங்கும் இல்லாத வகையாக, இக்கோயிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளதால், மூலவரை, நேரடியாக வந்து தரிசிக்க முடியாது.மூலவர் சன்னதிக்கு எதிரே வழியின்றி தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும்.சிதம்பரம், பேரூர் ஆகியவற்றில் உள்ள சிவன் கோயில்கள் போன்று சிறப்பான வேலைப்பாடு மற்றும் சக்தியுடன் கூடிய கோயிலாக சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது.
  • 162
Added a post  
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே: அதன் அர்த்தம் இதுதான்...அர்ச்சுனனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்.அர்ச்சுனன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர் இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான்.சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ் வழியே வந்த அர்ச்சுனன் இதை கேள்விப்பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக களியுங்கள் என்றான்.இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவன் தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்போது விட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான்.இதையறியாத அவன் மனைவி ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள். அப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது.அவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம் வெளியே சென்ற வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி எங்கே அதிலிருந்த கல் என்று மனைவியை கேட்டான்.ஏதுமறியாத மனைவி நடந்ததை கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ச்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற அர்சுனன் கண்ணனிடம் இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன் என்று கூறனார்.அதை ஆமோதித்த கண்ணனும் இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு என்றார்.ஆச்சர்யப்பட்டான் அர்சுனன், ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, இதென்ன விந்தை......வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்?எனக்கும் தெரியவில்லை..?என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம், எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.அவன் வீட்டடிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா என கேட்டான்…?உடனே தனக்குள் யோசித்த இவன் இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியை கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான்.அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும்முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலை விட்டு சிக்கியிருந்ததை எடுத்தான்.அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான்.ஆம், அவன் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது… உடனே சந்தோசத்தின் மிகுதியால் என்னிடமே சிக்கி விட்டது என்று கூச்சலிட்டான்.அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ச்சுனனும் அவனைப் பிடித்து விட்டனர். அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மற்றுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான்.அதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப்பட்ட அர்ச்சுனன் கண்ணனிடம் இது எப்படி சாத்தியம் எனக் கேட்க…?கண்ணனும் சிரித்துக்கொண்டே…இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்.அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்.ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை.ஆனால் இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால்…அவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை எனக் கூறினார். இதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்.
  • 158
Added a post  
அன்பே!!! நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.‘அலுவலகத்தில் இருக்கிறேன், நீல்கிரிஸில் சாயங்காலம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்ன போது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது..‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?’என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது...மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான்....அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்...சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன்....அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர்...ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன்...வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது...தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா… வயசாச்சில்ல… என தன் திருவாய் மலர்ந்தார்...திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார்...அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார்...கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை..‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த "கடைசியா" எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.''சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோது தான்...மொத்தக் குடும்பமும் இரை எடுப்பதற் கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க…நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.இப்படிக்கு,இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய, முன்னாள் காதலன்..
  • 251
Added a post  
உருகி உருகி பிரார்த்திக்கும் முருகேசுக்கு, கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.முருகேசு:- கடவுளே..! நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா.?கடவுள் - தாராளமாகக் கேள் மகனே..முருகேசு - பொறுமையாக, கோபப்படாமல் பதில் சொல்வீர்களா..?கடவுள் - கண்டிப்பாக..முருகேசு - இன்றைய தினம், ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளைக் கொடுத்தீங்க..?கடவுள் - என்னப்பா சொல்ற நீ..?முருகேசு - எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்.. !கடவுள் - ஆமாம்..! அவசரத்துல என்னைக் கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டுட்ட..முருகேசு - கிளம்பினதே லேட்.. இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது..கடவுள் - ஆமாம்.. எனக்குத் தெரியும்.முருகேசு - சரி, பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல.. ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு நான் ஒரு மணிநேரம் லேட்.கடவுள் - ஆமாம்..! தெரியுமே..முருகேசு : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிருச்சு. கடைசில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.கடவுள் : ஆமாம், அதுவும் தெரியும்.முருகேசு - வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர்கிட்டே இருந்து நான் ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர்கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.கடவுள் : ஆமாம், தெரியும்.முருகேசு : அதை பிடிச்சி.. இதை பிடிச்சி.. முட்டி மோதி வீட்டுக்கு வந்து, கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து. டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் போல. வேலையே செய்யல..இன்று எனக்கு எதுவுமே சரியில்லையே..! ஒரு நாள் உங்களைக் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா கடவுளே..?(கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து பேச ஆரம்பிக்கிறார்)கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின்படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துவிட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.முருகேசு : (அதிர்ச்சியுடன்) ஓ....!!!கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா, நீ ஆபீஸ் போகும்போது.. நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்..முருகேசு : (அடக்கத்துடன்) ஓ..கடவுள் :மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம், கடைசியா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு..! யாரும் அதைக் கவனிக்கல. அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாயிருக்கும்..?முருகேசு : (கண்கலங்கியபடி) ம்ம்..!!!கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்குக் காரணம், அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி, உன் ஃபோனைமுருகேசு : ம்ம்...கடவுள் :அப்புறம், அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிட்சை தொட்டிருந்தால், அந்தக் கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய். ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.முருகேசு : இத்தனை ஆபத்துலேர்ந்து என்னை காப்பாத்துனீங்களே..!ஆனா என் கல்யாணத்தன்னிக்கு எங்க போயிருந்தீங்க ??*கேட்டாம்பாரு ஒரு கேள்வி*...கடவுள் குடுத்தாரு பாரு ஒரு பதில்::: மவனே நீ சாமி கும்பிட ஆரம்பிச்சதே, கல்யாணத்துக்கப்புறம் தானே!!
  • 247
useful idea....
  • 237
Added a post  
ஒருநாள் இரவு, தன் அரண்மனையின் மேல் மாடத்தில் உலாவிக் கொண்டிருந்தார், பிரெஞ்சு சக்கரவர்த்தி மாவீரன் நெப்போலியன் போனபார்ட். அப்போது, காவல் பணியிலிருந்த ஒரு வீரன் துாங்கி வழிந்து கொண்டிருப்பதை கண்டார்.ஏதோ ஒரு வேலையாக அந்த பக்கம் வந்த, தளபதியும் அந்த காட்சியை கண்டு திடுக்கிட்டார்.'அரசே, காவல் பணியிலிருக்கும் ஒரு வீரன் துாங்குவது மிகப்பெரிய குற்றமாகும். இது அவனுக்கும் தெரியும். அப்படியிருந்தும் கடமையை அலட்சியப்படுத்தி விட்டு துாங்குகிறான். அவனுக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும்...' என்றார், தளபதி.அதற்கு, 'இல்லை தளபதியாரே... அவன் தன் கடமையை அலட்சியப்படுத்தி இருக்க மாட்டான். அவன் அதிகமாய் உழைத்திருக்க வேண்டும். அதனால் தான், அவன் உடல் சோர்ந்து அவனுக்கு துாக்கம் வந்து விட்டது.'துாக்கம், தானே வருவது. அது அவனுக்கு தேவை. அவன் துாங்கட்டும்...' எனச் சொல்லி, கீழே இறங்கி போய், அவனுடைய துப்பாக்கியை எடுத்து, அவனது காவல் பணியைச் செய்யத் துவங்கினார், நெப்போலியன்.கண்டிப்புக்கு பெயர் போனவராக இருந்தாலும், அவருக்குள் எதார்த்தமான மனிதாபிமான உணர்வும் இருப்பதை எண்ணி திகைத்தார், தளபதி.
  • 336
Added a post  
மேஷம்வழக்கு பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மருந்து பொருட்கள் வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உருவாகும். வரவுகள் தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் அவசரமின்றி செயல்படுவதன் மூலம் நன்மதிப்பு உருவாகும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம்காப்பீடு தொடர்பான பணிகளில் தனவரவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனம் விரும்பிய செயல்களை செய்து மகிழ்வீர்கள். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மிதுனம்வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கேளிக்கை செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இலக்கியம் குறித்த சில புரிதல்கள் மேம்படும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : நீலம் கடகம்எதிர்பாராத உறவினர் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். கல்விப் பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ப பாராட்டுக்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : கருநீலம் சிம்மம்விடாப்பிடியாக இருந்து நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வாரிசுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சி தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனை அளிக்கும். உடன்பிறப்புகள் வழியில் ஆதரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய தொடர்புகளும் அறிமுகங்களும் ஏற்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு கன்னிநெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த சில அங்கீகாரங்கள் கால தாமதமாகவே கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் இடத்தில் பொறுமையை கையாளவும். வாகன விஷயங்களில் விரயங்கள் ஏற்படலாம். விவசாய பணிகளில் பாசன வசதிகளின் தன்மையை அறிந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை துலாம்சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். மனை விருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுகமாக இருந்துவந்த போட்டி பொறாமைகள் குறையும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் உருவாகும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் விருச்சிகம்வாக்குறுதிகளை கொடுக்கும்பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். இலக்கிய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு தனுசுதனவரவு மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் மனதில் உருவாகும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்திருந்த சில முயற்சிகள் காலதாமதமாக நிறைவேறும். கற்கும் திறன்களில் மாற்றங்கள் உருவாகும். மருத்துவ பணிகளில் இருப்பவர்களுக்கு வரவுகள் மேம்படும். அசதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மகரம்எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடி ஏற்படலாம். நண்பர்கள் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். பணிகளில் சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கலாம். புதுவிதமான பயணங்கள் மூலம் மாற்றங்களும், அனுபவங்களும் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கும்பம்மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த உயரதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். புண்ணியஸ்தலம் தொடர்பான பயணங்கள் மற்றும் சிந்தனைகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மீனம்தோற்றப்பொலிவு தொடர்பான விஷயங்களில் சிறுசிறு மாற்றங்களை செய்வீர்கள். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்களும் சிறு சஞ்சலங்களும் உருவாகும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த சில உதவிகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தீர்வும், வெற்றியும் ஏற்படும். நேர்மை வெளிப்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • 436
Added a post  
குரோதி வருடம் பங்குனி மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 23.3.2025.சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 01.43 வரை அஷ்டமி. பின்னர் நவமி.இன்று முழுவதும் பூராடம்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 404
  • 411
Good Morning...
  • 411
Added article  
அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், தனுஷின் 'இட்லி கடை' அஜித்துடன் மோத வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் கூறி வந்தனர். அதற்கு ஏற்ற போல், படக்குழு தரப்பில் இருந்தும் 'இட்லி கடை' திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியான (Idli Kadai' Release Delayed). எனவே ' இட்லி கடை' ரிலீஸ் தள்ளி போவதற்கு அஜித்தின் படம் தான் காரணம் என சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவிய நிலையில், இதற்கு தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசும் போது, சில நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், 90% சதவீத படபிடிப்புகள் முடிந்து விட்டது. படம் நன்றாக வந்துள்ளது. எனவே அவசரப்பட வேண்டாம் என இந்த படத்தின் ரிலீஸை தற்போது தாமதப்படுத்தி உள்ளோம். இன்னும் பத்து நாட்களில் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 607
Added a news  
டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் டவுன்டவுன் வளாகத்தில் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. டொரொண்டோ பொலிசாரின் கொலை குற்ற விசாரணைப் பிரிவு இதனை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் College Street இல் உள்ள Leslie L. Dan மருந்தியல் கட்டிடத்திற்கு வெளியில் காலை 8:20 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில், இந்த மரணம் சந்தேகத்திற்குரியதல்ல என்று பொலிசார் தெரிவித்திருந்தபோதிலும், பின்னர் இது ஒரு கொலை என உறுதி செய்துள்ளனர்.மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தாலும், யாரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 615
Added a news  
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் (George Foreman) ஃபோர்மேன் தனது 76 வயதில் நேற்று (21) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜார்ஜ்  ஃபோர்மேன் 2 முறை ஹெவிவெய்ட் சாம்பியனும், உலகின் மிக வயதான ஹெவிவெயிட் உலக சாம்பியனுமாக இருந்துள்ளார்.குத்துச்சண்டை வளையத்தில் ‘பிக் ஜார்ஜ்’ என்று அழைக்கப்படும் இவர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.தனது முதல் சாம்பியன்ஷிப்பை வென்ற 21 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது சாம்பியன்ஷிப்பையும் (George Foreman) வென்றுள்ளார்.ஃபோர்மேன் குத்துச்சண்டை வாழ்க்கையில் 81 சண்டைகளில் 76 சண்டைகளில் வென்று அந்தப் போட்டிகளில் 68 ‘நோக் அவுட்’ வெற்றிகள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
  • 582
Added a post  
காலையில் எழுந்ததும் சூரியனை பார்த்து வழிபடுவது நன்மையளிக்கும். விடியலை வா வா என்று அழைத்து கொண்டு வருபவர் சூரியன். அனைவருக்கும் முதலில் வணக்கம் சொல்லி எழுப்புவதும் சூரியன் தான். நவகிரகங்களில் முதலில் இருப்பவர் சூரியன்.இன்னும் பலவிதமாக சூரியனை பற்றி சொல்லலாம். அப்படிப்பட்ட சூரியனை அனைவரும் காலையில் வணங்குவது ஏன்?மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள், இறக்க கூடியவர்கள், நோய் நொடியில் விழக்கூடியவர்கள், தவறு செய்யக்கூடியவர்கள், மிகப் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாகக்கூடியவர்கள்.சூரியனால் மனிதனுக்கு பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. நல்லது செய்கின்ற கிரகங்களையும், சூரியனையும், சந்திரனையும் வழிபடுவதில் தவறொன்றுமில்லை.சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்வதுபோல் அர்த்தம். கடவுளின் பேச்சாக, குணமாக, உருவமாக, வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன.கடவுளை கண்ணால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுகின்றனர்.சூரியனை வணங்குவதால் நமது உடலிற்கும், மனதிற்கும் புத்துணர்வு மற்றும் மன அமைதி கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காலையில் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை பார்த்து தியானம் செய்தால் போதும். அதன் பலனை உணர முடியும்.
  • 618
  • 587
  • 587
Added a post  
1896 ஆம் ஆண்டில், மின்சார விளக்கைக் கண்டுபிடித்த சிறந்த கண்டுபிடிப்பாளரான தாமஸ் எடிசன், ஒரு காரை வடிவமைக்கும் யோசனையில் வேலை செய்து கொண்டிருந்தார், அவர் தம்மிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் ஒரு சோதனை காரை உருவாக்கி இருப்பதைக் கேள்விப்பட்டார்.எடிசன் அந்த இளைஞனை நியூயார்க்கில் நடந்த தனது நிறுவனத்தின் பார்ட்டியில் சந்தித்து கார் பற்றி கேட்டறிந்தார். அவர் அவனது ஐடியாக்களால் ஈர்க்கப்பட்டார்! அந்த இளைஞனைப் போலவே அவருக்கும் ஒரு காரை வடிவமைக்கும் அதே யோசனை இருந்தது. எடிசன் மின்சார ஆற்றல் மூலமாக அந்த காரை இயக்கும் ஐடியாவில் இருந்தார், ஆனால் அந்த இளைஞன் காரை இயக்குவதற்கு பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்தப்போதாக கூறினான். அவர் ஆச்சர்யத்தில் தனது கையை மேஜை மீது குத்தி, "இளைஞரே, அபாரம், உண்மையில் உனது யோசனை சிறப்பானது. வெற்றிக்கான விஷயங்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளது! நீங்கள் பெரிய வெற்றி பெறுவீர்கள்" என்றார்.அந்த நேரத்தில் அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்படும், கொண்டாடப்படும் கண்டுபிடிப்பாளரின் இந்த ஊக்கமூட்டும் வார்த்தைகளால், ஹென்றி ஃபோர்டு தனது வேலையைத் தொடர்ந்தார், ஒரு காரைக் கண்டுபிடித்தார், பிறகு ஒரு கார் தொழிற்சாலையை தொடங்கினார். பெரும் பணக்காரர் ஆனார்.டிசம்பர் 9, 1914 அன்று, எடிசனின் ஆய்வகம் மற்றும் தொழிற்சாலை தீக்கிரையானது. அவர் 67 வயதானவர் மற்றும் காப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை. எறியும் சாம்பல் அடங்கும் முன், ஹென்றி ஃபோர்டு 7,50,000 டாலர்களுக்கான காசோலையை எடிசனிடம் கொடுத்தார், உங்களுக்கு மேலும் தேவைப்பட்டாலும் உதவ நான் இருக்கிறேன், என்று கூறிச் சென்றார்.1916 ஆம் ஆண்டில், ஹென்றி ஃபோர்டு தனது வீட்டை எடிசனின் வீட்டிற்கு அடுத்த கட்டிடத்திற்கு மாற்றினார், சிறிது காலத்தில் எடிசன் நடக்க முடியாமல் சாய்வு நாற்காலியில் அவரது மருத்துவர்களால் உட்கார வைக்கபட்டபோது, ஹென்றி ஃபோர்டு தனது வீட்டில் ஒரு சக்கர நாற்காலியை வாங்கினார், தனது நண்பர் மற்றும் வழிகாட்டிக்காக, அவர் அங்கும் இங்கும் நகர வேண்டும் என்பதற்காக தமது வீட்டில் பெரிய அறையை நிறுவினார்.எடிசன், ஹென்றி ஃபோர்டுக்கு தனது பலத்தை உணர்த்தினார், தன்மீது ஹென்றிக்கு நம்பிக்கை வர காரணமாக இருந்தார். அதனால் வாழ்நாள் முழுவதும் தமக்கான ஒரு நல்ல நண்பரைப் பெற்றார்!பாடம் :மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமை கொள்ளாதீர்கள். உங்களால் பந்தயத்தில் வெற்றிபெற முடியாவிட்டால், சாதனையை முறியடிக்க உங்களுக்கு முன்னால் ஓடுபவர்களுக்கு உதவுங்கள்! உங்கள் மெழுகுவர்த்தி மற்றொரு மெழுகுவர்த்தியை ஏற்றும்போது அதன் ஒளியை இழக்காது!
  • 620
Added a post  
டாக்டர் இன்னும் ஆறு லட்சம் தாரேன் பழையபடியே மாற்றி விடுங்கள்.ஒரு விபத்தில் மனைவி பேசும் சக்தியை இழக்க கணவன் போகாத கோவில் இல்ல. பார்க்காத மருத்துவம் இல்ல.ஒரு வழியாக தேடி தேடி ஒரு மருத்துவரை சந்திக்க அவர் தம்பி ஆறு லட்சம் ரெடி பண்ணு . உன் மனைவி பேச இல்ல குயில் மாதிரி பாட வைக்க முடியும் என்னால் என்று சொல்ல.அவன் கடன உடன வாங்கி ஆறு லட்சம் ரெடி பண்ணி. வெற்றிகரமாக ஆபரேசன் முடிந்தது.கணவன் மருத்துவமனை சென்று மனைவி பார்க்க சென்றான்.டாக்டர் . அவனிடம் ஒரு பத்து நிமிடம் பொறுங்கள் உங்கள் மனைவி பாட ஆரம்பிப்பார்கள் ஸாரி பேச ஆரம்பிப்பார்கள் என்று சொல்ல .கணவன் ஆடையாக பத்து நிமிடம் கழிந்து போயி மனைவியை பார்க்க.மனைவி பேச ஆரம்பித்தார். இல்லை பொரிந்து தள்ள ஆரம்பித்தார்.பத்து வருடம் பேசாமல் இருந்த குறையை பத்து நிமிடத்தில் பொரிந்து தள்ளி விட்டார்." நீ எல்லாம் ஒரு மனிதனா? உன்னைக் கல்யாணம் பண்ணி என்ன சுகம் கண்டேன். நகை உண்டா? வீடு வாசல் உண்டா ஒன்னும் இல்லை என்று புலம்பி தள்ள?மயக்கம் வந்தவனாய் டாக்டரிடம் ஓடோடி வந்து டாக்டர் இன்னும் கடன் வாங்கி ஒரு ஆறு லட்சம் தாரேன் எப்படியாவது என் மனைவியை ஊமை ஆக்குங்க. என்று கெஞ்ச.டாக்டர் அதெல்லாம் முடியாது.உன் ஆறு லட்சம் வேண்டாம் ஒரு அம்பதாயிரம் கொடு பேசாமல் உன்னை செவிடாக்கி விடுகிறேன் என்று சொல்லி.உடனே ஆபரேசன் செய்து முடித்தார்.அப்புறம் என்ன மகிழ்ச்சி தான்.
  • 652
Added a news  
வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் யாழ் மாவட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரங்களை தெரிவித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை தேர்தலுக்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்களுமாக கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர். இதில் 136 கட்சிகளும் 23 சுயேட்சைக் குழுக்களும் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தன.136 கட்சிகளுடைய நியமனப்பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனப்பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, 22 கட்சிகளுடைய நியமனப்பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனப்பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        யாழ் மாநகரசபைக்கான வேட்புமனுவில் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஆகிய கட்சிகளுடைய வேட்புமனுக்களும், ஞானப்பிரகாசம் சுலக்சன், நரேந்திரன் கவுசல்யா ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        வல்வெட்டித்துறை நகரசபைக்கான வேட்புமனுவில் ராமச்சந்திரன் சுரேன், யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோர் தலைமையிலான சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        பருத்தித்த்துறை நகரசபைக்கான வேட்புமனுவில் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.·        சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், மகாலிங்கம் சதீஸ், பெரியான் சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.·        ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.·        நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்புமனுவில்இ ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.·        வேலனைப் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.·        வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், துரைராஜா சுஜிந்தன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.·        வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சவரிமுத்து ஸ்டாலின் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.·        வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஸ்ரீ இலங்கை கொம்முனிஸ்ட் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.·        வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும்இ தவம் தவனிலாவின் தாசன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        பருத்தித்துறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும் அல்பிரட் ரெஜி ராஜேஸ்வரன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        சாவகச்சேரி பிரதேச சபைக்கான வேட்புமனுவில்இ வைத்தியலிங்கம் ஜெகதாஸ் என்பவர் தலைமையிலான சுயேட்சைக் குழுவும் குணரட்ணம் குகானந்தன் என்பவர் தலைமையிலான சுயேட்சைக் குழுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.நல்லூர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும் திலீப் தீபாரஞ்சன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்
  • 815
Added a news  
  எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 425 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் 57 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளைப் பல மாவட்டங்களில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன வலியுறுத்தியுள்ளார்.
  • 814