Support Ads
 ·   ·  147 posts
  • 2 members
  • 2 friends

புண்ணிய கணக்கு (குட்டிக்கதை)

ஒருவர் தெருவில் குனிந்து எதையோ தேடிக் கொண்டு இருந்தார். நெடுநேரம் தேடிக் கொண்டு இருந்ததை பார்த்த ஒருவர் அந்தணரிடம்,

ஐயா...என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டார்.

சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க

ஒரு அணா வைத்திருந்தேன். அதை கீழே எங்கேயோ தவறி போட்டு விட்டேன் அதைத்தான் தேடுகிறேன்.

பரவாயில்லை. பூஜைக்கு நேரம் ஆகிவிட்டது நான் ஒரு அணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி பூஜையை முடியுங்கள். என்று சொல்லி ஒருஅணாவை கொடுத்து சென்று விட்டார்.

அந்த காலகட்டத்தில் ஒரு அணாவிற்கு நாலு வாழைப்பழம்.

அந்தணர் நான்கு பழங்கள் வாங்கி பூஜையை முடித்தார்.

சிலகாலம் கழிந்தது.

வான் உலகத்தில் தேவேந்திரன், ஒரு நாள், எமதர்மராஜன் சபைக்கு வந்தான்.

எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான்.

சபையில்,

ஒரு ரத்ன சிம்மாசனமும்,

ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது.

அந்த சமயம்,

இரண்டு தேவ விமானங்கள் வந்தன.

எமதர்மன், ஓடிப் போய் விமானத்திலிருந்த வரை வரவேற்று உபசரித்தான்.

ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர்.

எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை,

தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தார்.

புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்...

என்று சொல்லி,

அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன்,

எமதர்மனைப் பார்த்து,

இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்!

அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறீர்களே...

என்று கேட்டார்.

அதற்கு எமதர்மன்,

இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர்.

அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன்.

மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர்.

ஒரு நாள் அட்சய திருதியை அன்று, சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர்.

அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்...

என்றான் எமதர்மன்.

தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு,

சிவபூஜை செய்தவரை விட,

சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்...

என்று சொல்லி,எமதர்மனிடம் விடை பெற்று, தேவலோகம் சென்றார்.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால்,

ஒரு சிவ பூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட,

அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகம்.

அதனால் தான்,

எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், என் பணமும் அதில் சேரட்டும்... என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர்.

தெய்வத் திருப்பணிகளுக்கும் சேவை செய்தாலும், கைங்கர்யம் கொடுத்தாலும் புண்ணியம்.

கொடுத்து பாருங்கள்,

அந்த புண்ணியம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்!.

கொடுக்க கொடுக்க மேன்மை அடைய வைப்பது தர்மம் மட்டுமே...

செய்ய செய்ய அருள் கிடைப்பது பூஜையில் மட்டுமே......

  • 427
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்