சினிமா செய்திகள்
நடிகர் சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு
1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான
குணசேகரன் மற்றும் அரசு ஆடப்போகிற கேமை விட அப்பத்தாவின் கேம் பெரிது
எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் தற்போது விறுவிறுப்பு குறைவது போல் தெரிகிறது. அரைச்ச மாவையை அரைத்து எல்லாருமே  சொத்துக்கா
பிரபு காதலித்து கைவிட்ட 5 நடிகைகள்
பிரபு  நடித்த படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படியாக தான் இருக்கும். இவர் 215 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும்
நிமிஷா சஜயனின் சர்ச்சைக்குரிய கவிதை
தொண்டிமுதலும் திருசாட்சியும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். திலீஷ் போத்தன் இயக்கிய இந்தப் படத்தில்நிமிஷா சஜயன் கதாநாயகியா
பொன்னியின் செல்வன்2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்பு
பொன்னியின் செல்வன் -1 படத்தின் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்ற பிறகு , தனது ரசிகர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்விக்க பொன்னியின் செல்வன் -2 உடன் நட்
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
மனம் கவர்ந்த போட்டியாளர் வெளியேறியதால் கதறும் கோமாளிகள்
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு எலிமினேஷன் நடைபெறும். இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்டவர் யார் என
மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவு
மலையாள நடிகர் இன்னசென்ட். இவர் தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில்
சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடிக்க பயந்த சமந்தா
முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் தசை அழற்சி நோயில் சிக்கி சிகிச்சைக்கு பின் தேறி உள்ளார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்
படப்பிடிப்பில் விபத்து - நடிகர் அக்ஷய்குமாருக்கு பலத்த காயம்
தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய்குமார் இந்தியில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தற்போது 'படே மியான் சோட் மியான்' என்ற இ
'பத்து தல' படத்தின் 'ராவடி' பாடல் வீடியோ இன்று வெளியாகும்
சென்னை, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்த
ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாடலுக்கு என்னால் தான் ஆஸ்கார் விருது கிடைத்தது -  அஜய் தேவ்கான்
தமிழல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் இந்தியில் அஜய் தேவ்கான் மற்றும் தபு நடிப்பில் போலா என்ற படமாக எடுக்கபட்டு உள்ளது. இந
Ads
 ·   · 6163 news
  •  · 3 friends
  • I

    8 followers

கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க இறந்து விட்டதாக நாடகமாடி மாட்டிக்கொண்ட நபர்

இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள ஒரு தம்பதி தாங்கள் வாங்கிய கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் ஆம்புலன்ஸ் ஒன்றை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அதில், தங்களின் இறந்த குடும்ப உறுப்பினர் ஒருவினரின் உடலை கொண்டு செல்ல, தங்கள் வீட்டில் இருந்து இறந்தவரின் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். இதற்காக சவப்பெட்டியுடன் தங்கள் வீட்டிற்கு வருமாறு அந்த தம்பதி தெரிவித்துள்ளனர். அதற்காக அந்த தம்பதி பணமும் செலுத்தியுள்ளனர். பின்னர் தம்பதியின் வீட்டிற்கு அந்த ஆம்புலன்ஸ் வந்துள்ளது. வாகனத்தில் ஏறும் போது தம்பதியினர் நலமாக இருந்ததை ஆம்புலன்ஸ் டிரைவர் கவனித்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் ஒரு நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த தம்பதி சிறிது நேரம் ஆம்புலன்ஸை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அந்த நேரத்தில் அந்த ஆண் நபர் சவப்பெட்டிக்குள் சென்றுள்ளார். பின்னர் அந்த வாகனம் ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளது.



மருத்துவமனையில் மருத்துவர்கள் முன் சவப்பெட்டிக்குள் இறந்தவர் போல் நடித்து இறப்பு சான்றிதழ் வாங்கி விட தம்பதி திட்டமிட்டு நடித்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் சவப்பெட்டியில் இருந்து அந்த நபர் எழுந்து உள்ளார். இதை அவர்களது உறவினர் ஒருவர் எதிர்ச்சியாக வீடியோ எடுத்து உள்ளார். அந்த தம்பதியின் திட்டம் குறித்து தெரியாத அந்த உறவினர், இறந்த தனது உறவினர் உயிர்பிழைத்துவிட்டார் என இணையத்தில் அந்த காட்சியை வெளியிட்டு விட்டார். இதனால் அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த நபர் இறக்கவில்லை என அந்த மருத்துவமனை அறிக்கை அளித்துவிட்டது. இதனால் அந்த தம்பதியின் திட்டம் வீணானது. 



ஆம்புலன்ஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த தம்பதியின் இந்த நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த நபர் மற்றும் அவரது மனைவி இருவரும் விசாரிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தோனேசிய சட்டத்தின்படி, அதிகாரிகளை வேண்டுமென்றே ஏமாற்ற முயல்வது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும். 

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 125
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads