GomathiSiva

  •  ·  Premium
  • 5 friends
  • I

    9 followers
  • 5872 views
Profile QR
This is your profile QR Code.
Info
Name:
GomathiSiva
Friends count:
Followers count:
Membership
Premium
Relationships
Empty
Joined Organizations
Added a news  
அம்பாந்தோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான சந்திப்பின் போது, 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அதிகளவான உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம். 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியதை போன்று இம்முறையும் நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றுவோம்.தேசிய பொருளாதாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். எமது ஆட்சியில் கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்திகளுக்கு விசேட திட்டங்களை முன்னெடுத்தோம். ஆகவே கிராமிய மக்கள் கிராமத்தின் அதிகாரத்தை மீண்டும் எமக்கு ஒப்படைப்பார்கள்.தேசிய பொருளாதாரத்தையும், கிராமிய பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கியது.இருப்பினும் அந்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. கிராமிய பொருளாதாரம் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.விவசாயம் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கடந்த காலங்களில் முன்னெடுத்த புதிய திட்டங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியே எதிர்ப்பை வெளிப்படுத்தியது.அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தற்போது அழைப்பு விடுக்கும் ஆளுங்கட்சியினர் தான் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களுக்கும் எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.நாட்டின் நலனை கருத்திற்கொண்டு எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.இந்த அரசாங்கம் ஆறுமாத கால பதவியை நிறைவு செய்துள்ளது.இருப்பினும் எவ்விதமான புதிய திட்டங்களும் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை என்றார்.
  • 78
Added a post  
  • 91
Added a post  
GRT நிறுவனமானது காசி அல்லது வாரணாசியில் ஹோட்டல் கம் சத்திரத்தை தொடங்கியுள்ளது.தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. அறை வாடகைகள் பெயரளவு.உணவு இலவசம்.என்னுடைய நண்பர் சமீபத்தில் வாரணாசிக்கு சென்று, ஜிஆர்டியால் கட்டப்பட்ட சத்திரத்தில் தங்கியிருந்தோம்.பெயர் மட்டும் சத்திரம் ஆனால் அறைகள் அனைத்து வசதிகளுடன் அற்புதமாக உள்ளன, அது உங்களுக்கு எங்கும் கிடைக்காது.... அதிகபட்சம் 3 பேர்ஒரு அறையில் தங்கலாம்... அவர்கள் காலை காபி, சிற்றுண்டி , மதியம், மாலை டீ மற்றும் இரவு உணவு பரிமாறுகிறார்கள். ...அறை சேவை இல்லை... அனைத்து உணவுகளும் இலவசம் மற்றும் வரம்பற்றது...கிருத்திகை மற்றும் அமாவாசை அன்று வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாமல் உணவு பரிமாறுகிறார்கள்.கடந்த அமாவாசைக்கு நாங்கள் அங்கு இருந்தோம், எப்படி சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தோம்... சாப்பாட்டுப் பகுதிக்குள் சென்றபோது வெங்காயம்/பூண்டு இல்லாத உணவு அமாவாசை என்பதால் பெரிய பலகை இருந்தது. பல வகையான பொருட்கள்....இன்னும் சொல்லப்போனால், வெளி உணவு நமக்கு ஒத்துவராது என்பதால், விருந்தினர்களை அங்கேயே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.அறையைக் காலி செய்யும் போது நண்பர் ஒருவர் அந்த அன்னதான அறக்கட்டளைக்கு பங்களிக்க விரும்பினார்... அவர்கள் ஏற்கவில்லை...ஒரு டிப்ஸ் பாக்ஸ் இருந்தது... டிப்ஸ் கொடுப்பது கட்டாயமில்லை... ஆனால் அது இல்லாமல் போக முடியாது, ஏனெனில் அவர்களின் சேவை உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.... நீங்கள் அங்கு செல்ல நிறைய அறைகள் கிடைக்கும்...நாங்கள் அங்கு தங்கியிருப்போம் மற்றும் GRT இன் சேவைக்கு இனிய நன்றிகள்...வாரணாசிக்கு செல்லும் எந்த நாளும் ஜிஆர்டியில் தங்கிஇருங்கள்... அறை வாடகையும் மிகவும் மலிவானது...அறைகள் நட்சத்திர ஹோட்டல் அறைகள் போல... அனைத்து லேட்டஸ்ட் மாடல் ஹைஃபை ஃபிட்டிங்குகளுடன் உள்ளன.இங்கிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள அனைத்து இடங்களும்... சங்கர மடம், கங்கை, விஸ்வநாதர் கோயில் மற்றும் பிற கோயில்களுக்குச் செல்ல ஏராளமான மின்சார வாகனங்கள் கிடைக்கும்.GRT ஹோட்டல்..தொடர்பு எண்.7607605660.தங்குமிடத்திற்கு அவர்களின் இணையதளத்தைப் பார்க்கவும்...grtkashichatram.com ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு.காசிக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
  • 97
Added a post  
என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவரது கைரேகைகள் சுவர்களில் பதிந்தன..என் மனைவி இதை வெறுத்தார், சுவர்கள் அழுக்காகி வருவதாக அடிக்கடி புகார் கூறுவார்.. ஒரு நாள், என் அப்பாவுக்கு தலைவலி இருந்தது, அதனால் அவர் தலையில் சிறிது எண்ணெய் தடவினார்.. அதனால், நடந்து செல்லும்போது சுவர்களில் எண்ணெய் கறைகள் உருவாகின..இதைப் பார்த்து என் மனைவி என்னைப் பார்த்து கத்தினாள்.. நான் என் அப்பாவைக் கத்தினேன், அவரிடம் முரட்டுத்தனமாகப் பேசினேன், நடக்கும்போது சுவர்களைத் தொடாதே என்று அறிவுறுத்தினேன்.. அவர் காயமடைந்ததாகத் தோன்றியது.. என் நடத்தையைப் பார்த்து நானும் வெட்கப்பட்டேன், ஆனால் அவரிடம் எதுவும் சொல்லவில்லை..என் அப்பா நடந்து செல்லும்போது சுவரைப் பிடிப்பதை நிறுத்தினார்.. ஒரு நாள் அவர் சமநிலையை இழந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து போனார்.. இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் படுக்கையில் விழுந்து சிறிது நேரத்தில் எங்களை விட்டு பிரிந்து சென்றார்..என் இதயத்தில் மிகுந்த குற்ற உணர்ச்சியை உணர்ந்தேன். அவருடைய வெளிப்பாடுகளை ஒருபோதும் மறக்கவும், சிறிது நேரத்திலேயே அவரது மறைவை மன்னிக்கவும் முடியவில்லை..சில நாட்களுக்குப் பிறகு, எங்கள் வீட்டிற்கு வண்ணம் தீட்ட விரும்பினோம்.. ஓவியர்கள் வந்தபோது, அவரது தாத்தாவை மிகவும் நேசித்த என் மகன், ஓவியர்கள் என் தந்தையின் கைரேகைகளை சுத்தம் செய்து அந்தப் பகுதிகளை வரைய அனுமதிக்கவில்லை..ஓவியர்கள் மிகவும் நல்லவர்களாகவும், புதுமையானவர்களாகவும் இருந்தனர்.. அவர்கள் என் தந்தையின் கைரேகைகளை அகற்ற மாட்டோம் என்றும், இந்த அடையாளங்களைச் சுற்றி ஒரு அழகான வட்டத்தை வரைந்து ஒரு தனித்துவமான வடிவமைப்பை உருவாக்குவோம் என்றும் அவருக்கு உறுதியளித்தனர்.. அதன் பிறகு இது தொடர்ந்தது. அந்த அச்சுகள் எங்கள் வீட்டின் ஒரு பகுதியாக மாறியது..எங்கள் வீட்டிற்கு வருகை தரும் ஒவ்வொருவரும், சுவரில் உள்ள தனித்துவமான வடிவமைப்பைப் பாராட்டினர்.. காலப்போக்கில், நானும் வயதாகி விட்டேன்.. இப்போது நடக்க சுவரின் ஆதரவு எனக்கும் தேவைப்பட்டது. ஒரு நாள் நடக்கும்போது, என் தந்தையிடம் நான் சொன்ன வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டேன், ஆதரவின்றி நடக்க முயற்சித்தேன்..என் மகன் இதைப் பார்த்தான். உடனே என் அருகில் வந்து, நடந்து செல்லும்போது சுவர்களைத் தாங்கிப் பிடிக்கச் சொன்னான். நான் ஆதரவு இல்லாமல் விழுந்திருப்பேனோ என்று கவலைப்பட்டான். என் மகன் என்னைப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் பேத்தி உடனடியாக முன்னோக்கி வந்து அன்பாக, அவள் தோளில் என் கையை வைக்கச் சொன்னாள். நான் கிட்டத்தட்ட அமைதியாக அழ ஆரம்பித்தேன்.நான் என் தந்தைக்கு அதையே செய்திருந்தால், அவர் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்.. என் பேத்தி என்னை அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைத்தாள்.. பின்னர் அவள் தனது ஓவியப் புத்தகத்தை எடுத்து எனக்குக் காட்டினாள்.. அவளுடைய ஆசிரியர் அவள் வரைந்ததைப் பாராட்டி, அவளுடைய சிறந்த கருத்துக்களைக் கூறினார்..அந்த ஓவியம் சுவர்களில் என் தந்தையின் கைரேகையைக் கொண்டிருந்தது.அவள் கருத்து - "ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெரியவர்களை அதே வழியில் நேசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."நான் என் அறைக்குத் திரும்பி வந்து, என் மறைந்த தந்தையிடம் மன்னிப்பு கேட்டு, அதிகமாக அழுதேன்..காலப்போக்கில் நாமும் வயதாகிவிடுவோம்.. நம் வீட்டில் பெரியவர்கள் இன்னும் இருந்தால், அவர்களைக் கவனித்துக்கொள்வோம். நம் குழந்தைகளுக்கும் நம் முன்மாதிரியாக அதையே செய்யக் கற்றுக் கொடுப்போம்.இந்த கதை என் இதயத்தைத் தொட்டது. மிகவும் நெகிழ்ச்சியானது.. முகநூலில் பகிர்ந்த கதை இது.நம்மில் பெரும்பாலோர் எப்போதாவது நம் வயதான பெற்றோருடன் இதே போன்ற தவறுகளைச் செய்திருக்கலாம்.
  • 136
  • 160
Good Morning..
  • 160
Added a news  
மியான்மரில் இன்று  மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சில சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணமான பேரழிவு நிலநடுக்கம் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தூரத்தில், அந்த நாளின் மதிய நேரத்தில் (12 மணியளவில்) முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளியாக பதிவானது. அதற்குப் பின்னர், 6.4 புள்ளியாக இன்னும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டலாய் நகரின் வடமேற்கே 13 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிகமாகப் பீதியடைந்துள்ளனர். முக்கிய சாலைகள் பிளந்து பாதிப்பு அடைந்துள்ளது.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மீட்புக் குழுவினர் மியான்மருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • 338
Added article  
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்ற ஓஜி சம்பவம் என்ற பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில், படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான காட் பிளஸ் யூ என்ற பாடல் இன்று வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது.தற்போது, அந்த பாடலின் வீடியோ வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். அவருடன் பால் டப்பா இணைந்து பாடியுள்ளார். மேலும், ராகேஷ் பாடல் வரிகளில் உருவாகிய இந்த பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.இந்த பாடலில் அஜித்தின் நடனம் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாடல் வெளியாகிய சில நிமிடங்களில் இணையத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த பாடல் திரையரங்கில் காணும்போது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
  • 349
Added a post  
முன்னொரு காலத்தில் சந்தனப்பட்டி என்ற சிற்றூரில் உழவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதுமை அடைந்த உழவன் இறந்துவிட, அண்ணன், தம்பி இருவரும் வறுமையில் வாடினர்.“தம்பி.. நாம் இருவரும் இந்த ஊரில் கடினமாக உழைக்கிறோம். இருந்தும் வயிறார உண்ண முடியவில்லை. நான் வெளியூர் சென்று பொருள் ஈட்டித் திரும்புகிறேன். நீ அதுவரை நம் வீட்டைப் பார்த்துக்கொள். அதன்பிறகு, வளமாக வாழலாம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.நெடுந்தொலைவு நடந்து ஓர் ஊரை அடைந்தான். அந்த ஊர் பண்ணையாரிடம் வேலை கேட்கச் சென்றான். அவரை பண்ணையார் என்று அறிந்துகொண்ட அவன், “ஐயா.. வேலை தேடி ஊருக்கு வந்தேன். எனக்கு ஏதேனும் வேலை கொடுங்கள்,” என்று வேண்டினான்.“நல்ல இடத்திற்குத்தான் வந்துள்ளாய். எனக்கு ஒரு வேலையாள் தேவை. நல்ல ஊதியம் தருவேன். ஆனால்…” என்று இழுத்தார் அவர்.“எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே நடந்து கொள்வேன்” என்றான் அவன்.“நீ என்னிடம் ஓராண்டு வேலை செய்ய வேண்டும். ஆண்டு முடிவில் மூன்று பொற்காசுகள் கூலியாகத் தருவேன். நான் என்ன வேலை சொன்னாலும் நீ செய்து முடிக்க வேண்டும். அப்படி உன்னால் முடிக்க முடியாத ஒவ்வொரு வேலைக்கும், ஒவ்வொரு பொற்காசுகளைக் குறைத்துக் கொள்வேன்” என்றார் அவர்.சூழ்ச்சியை அறியாத அவன், “இன்றே வேலையில் சேர்ந்து கொள்கிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்து முடிக்கிறேன்” என்றான். அவரிடம் வேலைக்குச் சேர்ந்த அவன் உண்மையாக உழைத்தான். நாட்கள் ஓடின. ஓராண்டு முடிய இன்னும் ஒருநாள் தான் இருந்தது.“மூன்று பொற்காசுகள் நாளை கிடைக்கும்; ஊருக்குச் சென்று தம்பியுடன் வளமாக வாழலாம்’ என்று மகிழ்ச்சியுடன் இருந்தான் அவன். பொழுது விடிந்தது.பண்ணையாரிடம் சென்ற அவன், “ஐயா.. இன்றோடு ஓராண்டு முடிகிறது. நீங்கள் சொல்லிய கூலியைக் கொடுத்தால் நான் ஊருக்குச் செல்வேன்!” என்று இழுத்தான்.“இன்று மாலை தான் நான் சொன்ன ஓராண்டு முடிகிறது. உனக்கு மூன்று எளிய வேலைகள் வைக்கிறேன். மாலைக்குள் அவற்றை முடித்துவிட்டுக் கூலியை வாங்கிக்கொள். பிறகு மகிழ்ச்சியுடன் உன் ஊருக்குச் செல்,” என்றார் அவர்.“முதல் வேலை என்ன சொல்லுங்கள்?” என்று கேட்டான் அவன்.“அதோ பார்… அங்கே இரண்டு விலை உயர்ந்த பீங்கான் ஜாடிகள் உள்ளன. ஒன்று பெரிய ஜாடி; இன்னொன்று சிறிய ஜாடி. அந்தச் சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்க வேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய முதல் வேலை,” என்றார் அவர்.“ஐயா! எப்படி சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்க முடியும். யாராலும் செய்ய முடியாத செயலைச் செய்யச் சொல்கிறீர்களே இது என்ன அநியாயம்” என்று அலறினான் அவன்.“செய்ய முடியுமா, முடியாதா என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் சொன்ன இந்த வேலையைச் செய்யாவிட்டால், உன் கூலியில் ஒரு பொற்காசைக் குறைத்துக் கொள்வேன்” என்று சொன்னார் அவர். வேறு வழியில்லாமல், “ஐயா! அடுத்த வேலை என்ன? அதைச் சொல்லுங்கள்,” என்று கேட்டான்.“அந்த அறைக்குள், ஈரமான நெல் உள்ளது. நெல்லை நீ வெளியே எடுத்துச் செல்லாமல் காய வைக்க வேண்டும். அதுதான் இரண்டாவது வேலை,” என்றார் அவர். திடுக்கிட்ட அவன், “ஈர நெல்லை வெளியே எடுத்துச் செல்லாமல் எப்படிக் காய வைக்க முடியும்? நீங்களே வழி சொல்லுங்கள்” என்று கோபத்துடன் கேட்டான்.“வழி எல்லாம் எனக்குத் தெரியாது. நான் என்ன சொல்கிறேனோ அதை நீ செய்ய வேண்டும்” என்றார் அவர்.இரண்டு பொற்காசுகள் போய்விட்டன. ஒரு பொற்காசாவது கிடைக்காதா என்ற எண்ணத்தில், மூன்றாவது வேலை என்ன என்று சோகத்துடன் கேட்டான் அவன்.“இந்த வேலை மிக எளிய வேலை. என் தலையின் எடையை மட்டும் நீ சரியாக அளந்து சொல்ல வேண்டும்; அவ்வளவுதான்” என்றார் அவர்.“ஐயா! உங்கள் தலையின் எடையை மட்டும் எப்படிச் சொல்ல முடியும்? ஓராண்டு உங்களிடம் உண்மையாக உழைத்தேன். என் மீது இரக்கம் காட்டுங்கள்,” என்று கெஞ்சினான் அவன்.“நான் சொன்ன மூன்று வேலைகளை நீ செய்யவில்லை. ஒப்பந்தப்படி உனக்குத் தர வேண்டிய மூன்று பொற்காசுகளை நான் தர வேண்டாம். போய் வா. இனி நீ கெஞ்சுவதாலோ, அழுவதாலோ என் உள்ளம் இரங்காது” என்று கண்டிப்புடன் சொன்னார் அவர். தான் நன்றாக ஏமாற்றப்பட்டது அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. தள்ளாடியபடி தன் ஊர் வந்து சேர்ந்தான் அவன். தம்பியிடம் நடந்ததை எல்லாம் சொல்லி அழுதான்.“அண்ணா.. உன்னை ஏமாற்றிய அந்தப் பண்ணையாரைப் பழிக்குப் பழி வாங்குகிறேன்” என்று கோபத்துடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் தம்பி. அண்ணன் வேலை பார்த்த அதே ஊரை அடைந்தான்.பண்ணையாரைச் சந்தித்த அவன், “ஐயா நான் வெளியூர். வேலை தேடி இங்கு வந்தேன். ஏதேனும் வேலை கிடைக்குமா?” என்று பணிவுடன் கேட்டான்.'ஏமாளிக்கு உலகில் பஞ்சமே இல்லை. புதிதாக ஓர் ஏமாளி கிடைத்திருக்கிறான். இவனை ஏமாற்றி வேலை வாங்க வேண்டும்’ என்று நினைத்தார் அவர்.“எனக்கும் உன்னைப் போல ஒரு வேலையாள் தேவை. நீ என்னிடம் ஓராண்டு வேலை செய்ய வேண்டும். அப்படி வேலை செய்து முடிந்ததும், உன் கூலி மூன்று பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்லலாம்,” என்றார்.ஓராண்டு முடிவடைந்தது. ஏதும் அறியாதவன் போல், “ஐயா.. இன்றோடு ஓராண்டு முடிகிறது…” என்றான்.“உனக்கு மூன்று எளிய வேலைகள் வைத்திருக்கிறேன். அவற்றை முடித்துவிட்டு உன் கூலியை வாங்கிக்கொள்,” என்றார் பண்ணையார்.“இதோ.. இங்கே விலை உயர்ந்த இரண்டு பீங்கான் ஜாடிகள் உள்ளன. ஒன்று பெரியது, இன்னொன்று சிறியது. நீ செய்ய வேண்டிய வேலை, அந்தச் சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்க வேண்டும். செய்துவிட்டு வா” என்றார் அவர்.“எளிய வேலை தான்” என்ற அவன், அங்கே ஒரு மூலையில் இருந்த தடி ஒன்றை எடுத்தான். அந்தத் தடியால் அவன் கண் எதிரிலேயே பெரிய ஜாடியை ஓங்கி அடித்தான். விலை உயர்ந்த அந்த ஜாடி உடைந்து நொறுங்கியது.பதைபதைத்த அவர், “டேய்..நான் என்ன சொன்னேன். நீ என்ன செய்கிறாய்?” என்று அலறினார்.“ஐயா! பெரிய ஜாடியை உடைத்தால் தான் அதைச் சிறிய ஜாடிக்குள் வைக்க முடியும். அதனால்தான் அந்த ஜாடியை உடைத்தேன்,” என்றான் அவன். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார் பண்ணையார்.“ஐயா.. நான் செய்ய வேண்டிய இரண்டாவது வேலை என்ன?” என்று பணிவுடன் கேட்டான் அவன்.'என்னிடமா உன் திறமையைக் காட்டுகிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று தனக்குள் கறுவினார் அவர்.“அந்த அறைக்குள் ஈர நெல் உள்ளது. அந்த நெல்லை நீ வெளியே எடுத்துச் செல்லாமல் காய வைக்க வேண்டும்,” என்றார்.“இதுவும் எளிய வேலைதான்,” என்ற அவன், அந்த வீட்டுக் கூரையின் மேல் ஏறி, கூரையைப் பிரித்துக் கீழே தள்ளத் தொடங்கினான். இதைக்கண்டு பதறிய அவர், “டேய்! கூரையைப் பிரித்து என் வீட்டையே நாசம் ஆக்குகிறாயே.. கீழே இறங்கு,” என்று கோபத்துடன் கத்தினார்.“ஐயா.. அறைக்குள் இருக்கும் நெல்லைக் காய வைக்கச் சொன்னீர்கள். கூரையைப் பிரித்தால் தானே கதிரவன் ஒளி நேராக அறைக்குள் படும். அங்கிருக்கும் நெல் காயும். அதனால்தான் கூரையைப் பிரித்து எறிகிறேன். ஒவ்வொரு முறையும் வேலை இடுகிறீர்கள். அதை நான் செய்து முடிப்பதற்குள் நீங்களே தடுத்து விடுகிறீர்கள். இந்த முறையாவது முழுமையாகச் செய்ய விடுங்கள்” என்றபடியே, மேலும் கூரையைப் பிரித்து எறிந்தான். அந்த வீடு, கூரை இல்லாமல் குட்டிச் சுவரைப்போல் காட்சியளித்தது. சரியான அறிவாளியிடம் மாட்டிக் கொண்டோம் என்ற உண்மை அப்போதுதான் அவருக்குப் புரிந்தது.'நான் இடும் மூன்றாவது வேலையை எந்தக் கொம்பனாலும் செய்ய முடியாது. இவன் ஏமாற்றம் அடைவதைப் பார்த்து மகிழ வேண்டும்’ என்று நினைத்தார் அவர்.“என் தலையின் எடை என்ன? நீ அதைச் சரியாகச் சொல்ல வேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய மூன்றாவது வேலை,” என்றார் அவர்.“கடினமான வேலையாக இருக்கும் என்று நினைத்தேன். எளிய வேலைதான் தந்திருக்கிறீர்கள்” என்ற அவன், தோட்டத்திற்குச் சென்றான். பெரிய பூசணிக்காய் ஒன்றைப் பறித்தான். அதைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்த அவன், “உங்கள் தலையின் எடையும், இந்தப் பூசணிக்காயின் எடையும் ஒன்றுதான். இதோ தராசு உள்ளது. இதில் ஒரு தட்டில் பூசணிக்காயை வைக்கிறேன். இன்னொரு தட்டில் உங்கள் தலையை வெட்டி வைக்கிறேன். இரண்டும் சமமாக இருப்பதை நீங்களே பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டே, கையில் கத்தியுடன் அவர் தலையை வெட்டுவதற்காக வந்தான்.'ஐயோ! இவனிடம் நன்றாக மாட்டிக் கொண்டேனே. என் தலையை எடுக்காமல் விட மாட்டான் போல இருக்கிறதே' என்று நடுங்கினார் அவர். இரக்கப்பட்ட அவன், “இனிமேலும் ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதை விட்டுவிடுங்கள். எனக்குரிய மூன்று பொற்காசுகளுடன், என் அண்ணனை ஏமாற்றி எடுத்துக்கொண்ட மூன்று பொற்காசுகளையும் சேர்த்துக் கொடுங்கள். உங்களை உயிருடன் விடுகிறேன்,” என்றான் அவன். ஆறு பொற்காசுகளை அவனிடம் தந்தார் அவர். வெற்றியுடன் அங்கிருந்து புறப்பட்டான் அவன். பண்ணையாரும், அன்றிலிருந்து மற்றவர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டார்.
  • 381
Added a post  
பெருமாள் நிகழ்த்திய திருவிளையாடல்களை நிறைய கேள்விப்பட்டிருப்போம். அதில் சுயம்புவாகத் தாம் எழுந்தருளியுள்ளதை மக்களுக்கு உணர்த்த, வாழை பழங்களை மழைத்து திருவிளையாடல் புரிந்த திருத்தலம் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி திருத்தல செங்கமல வள்ளி தாயார் சமேத உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் கோயிலாகும்.ஆயிரம் வருடங்கள் பழைமையான இத்தலம், அக்காலத்தில் மலைவாழ் மக்களின் வியாபார ஸ்தலமாக விளங்கியது. இந்த ஊரில் பக்தர்கள் தங்களின் விளைபொருட்களான காய், கனிகள் மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர்.அவர்களில் லட்சுமி என்ற பெண்மணி கொண்டு வரும் வாழைப்பழங்கள் தொடர்ந்து காணாமல் போக, அப்பெண் லட்சுமி அந்த ஊர்த் தலைவரிடம் இதை முறையிட்டார். அதைக்கேட்டு தலைவர் அது குறித்து விசாரிக்கிறார். ஆனால், 3 நாட்களாகியும் உண்மையான காரணத்தை அறிய முடியாமல் தொடர்ந்து பழங்களும் காணாமல் போகவே, பெருமாளிடம் முறையிட்டு வேண்டுகிறார்.அன்று இரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘காணாமல் போன வாழைப்பழத்திற்கு தானே காரணம் என்றும், அவர்கள் தங்குமிடத்தில் கதலி வடிவத்தில் சுயம்பு மூர்த்தியாக தாம் எழுந்தருளி உள்ளதாகக்’ கூறினார். நான்காம் நாள் காலை தலைவர் மக்களோடு பெருமாள் கனவில் கூறிய இடத்தை தேடிப் பார்க்கையில் சுயம்பு வடிவாக ஸ்ரீமன் நாராயணன் அங்கு காட்சி கொடுத்தார். நான்காவது நாள் சுயம்பு மூர்த்தி கிடைத்ததால் தசாவதாரத்தின் நான்காவது அவதாரமான நரசிம்ம மூர்த்தி அம்சமாக அவ்விடத்தில் அந்த சுயம்பு மூர்த்தியை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட ஆரம்பித்தனர். பிறகு அதே இடத்தில் தற்போதைய மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் ரூபத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். (கதலி என்றால் வாழைப்பழம் என்று ஒரு பொருள் உண்டு.)துவார பாலகர்களை வணங்கி ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் கருவறைக்கு எதிரே பெருமாளை வணங்கிய கோலத்தில் மேற்கு நோக்கி கருட சன்னிதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் உத்ஸவமூர்த்தியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாளும் அருள்பாலிக்கின்றனர். உள் பிராகாரத்தில் குழந்தை பாக்கியம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர், பிணிகளைப் போக்கும் தன்வந்திரி மற்றும் திருமண பாக்கியம் அருளும் ஆண்டாள், யோக நரசிம்மர் உள்ளிட்ட சன்னிதிகளும் அமைந்துள்ளன. ஞானத்துக்கு அதிபதியான ஸ்ரீஹயக்ரீவரும் இங்கு உறைகிறார்.கோயிலின் முகப்பில் 41 அடி உயர ஆஞ்சனேயர் மற்றும் மகா மண்டபத்தில் 12 ஆழ்வார்கள், உடையவர் ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், ஸ்ரீ தேசிகன் மற்றும் கூரத்தாழ்வார் ஆகியோரை தரிசிக்கலாம்.தல விருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளன. இத்தலத்தில் சித்ரா பௌர்ணமி விழா மற்றும் ஏகாதசி திருமஞ்சனமும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இங்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்து பெருமாளை மனம் உருகி நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணப் பேறு , புத்திர பாக்கியம் கிட்டும் என்றும் வாழ்வில் வளங்கள் வந்து சேரும் என்பதும் ஐதீகம்.
  • 387
Added a post  
ஒருசமயம், திறந்தவெளி பொதுக்கூட்டம் ஒன்றில், ஜவஹர்லால் நேரு பேசிக் கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்தது. ஆனால், கூட்டத்தினர் கலையாமல், நேருவின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, ஒருவர் ஓடி வந்து, நேருவின் தலைக்கு மேல் குடையை பிடித்தார்.உடனே, 'மக்கள் நனைந்து கொண்டிருக்கும் போது, எனக்கு மட்டும் குடை எதற்கு? வேண்டாம்...' என்றார், நேரு.ஆனால், அந்த நபர் தொடர்ந்து குடை பிடித்தபடி இருந்தார்.அப்போது, 'இவர் எனக்கு தொடர்ந்து குடை பிடிப்பதைப் பார்த்தால், 'மைக்'கின் சொந்தக்காரராக இவர் இருப்பார் என, நினைக்கிறேன். இவர் எனக்கு குடை பிடிக்கவில்லை. இந்த, 'மைக்' நனைந்து விடாமல் இருக்கவே குடை பிடிக்கிறார்...' என்றார், நேரு.அதை கேட்டு குடை பிடித்தவர் உட்பட, கூட்டத்திலிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
  • 391
Added a post  
உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா? தினந்தோறும் இரவு 7 மணிக்கு இப்படி செய்யுங்கள்........⚜ அந்த காலங்களில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவார்கள். அதனால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது.⚜ அதே போன்று நீங்களும் வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை போட்டு வாருங்கள். இது நாள் வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும்.⚜ அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து போட்டால் என்னென்ன நடக்கும்?.உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அதற்கேற்ற சாம்பிராணியை போட்டு வாழ்வில் அனைத்து வளமும் பெறலாம்.⚜ சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.⚜ சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.⚜ சாம்பிராணியில் மருதாணி விதைகளை போட்டு தூபமிட சூனிய கோளாறுகள் விலகும்.⚜ சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்.⚜ சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.⚜ சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும்.⚜ சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.⚜ சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.⚜ சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.⚜ சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.⚜ சாம்பிராணியில் ஜவ்வாது போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.⚜ சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.⚜ சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள்.⚜ சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.⚜ சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.⚜ சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட ஐஸ்வர்யம் கிடைக்கும்.⚜ சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.⚜ மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கி பயன்படுத்தி தீராத செல்வ வளம் கிடைக்கப் பெறுங்கள்.
  • 397
  • 405
Added article  
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார். அவர் ஒருசமயம் மக்கள் திலகத்தை காண இந்தியா வந்தார். கண்டார். “காணாதது தான் தெய்வம் , நீங்கள் கண்கண்ட தெய்வம் . தெய்வம்னா காணிக்கை செலுத்தனும் … நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன் . ஒரு சூட்” என்று கொடுத்தார் “அளவு எது ? நாயுடு கொடுத்தாரா?” என்று கேட்டார் மக்கள் திலகம் .”இல்லை , ஒரு உத்தேசம் தான் . என் மனக்கணக்கால் பார்த்து வெட்டி தச்சேன் ” என்று போடச் சொன்னார் , அத்தோடு ரூ20,000 பணம் கொடுத்தார் . “எதற்கு?” என்று மக்கள் திலகம் கேட்க “உங்க பெயரில் உங்களை கேட்காம கடை நடத்தறேன், நூத்துக்கு ஒரு டாலர் வீதம், உங்க பங்குக்கு சேர்ந்த பணம். இதுவும் என் காணிக்கை” என்றார் அந்த சிங்கப்பூர் டெய்லர் … மக்கள் திலகம் அந்த பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு, தனது பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20,000 ரூபாய்க்கு மேல் வைத்து” என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி … எடுத்துக்குங்க ” என்றார் . இந்த குணம்தான் எம்.ஜி.ஆர் அவர்களின் சிறப்பு.....
  • 417
Added a post  
காமராசர் ஐயாவை பார்க்க "சோ" அவர்கள் ஒருமுறை சென்றபோது காமராசர் தயிர்சாதமும் கீரையும் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார்.அப்போது காமராசர் சோ-வைப் பார்த்து ஏப்பா நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க வரும் போதெல்லாம் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறேன், ஒரு நாளாவது உன்னைச்சாப்பிடு என்று சொல்லியிருக்கேனா என்று கேட்டுள்ளார்.அதற்கு சோ பரவாயில்லைங்க ஐயா நீங்க சாப்பிடுங்க என்று சொல்லி உள்ளார். ஆனால் காமராசர் விடவில்லை.இல்லை இல்லை சொல்லு ஒரு நாளாவது சொன்னேனா சொல்லு என்று அதட்டலாகக் கேட்க, இல்லைங்க சொல்லலை என்று கூறியுள்ளார்.அதற்கு காமராசர் சொன்னாராம் ஏன் சொல்லலை தெரியுமா நான் சாப்பிடுற இந்தச்சோறே தமிழக மக்கள் எனக்குப்போடும் பிச்சைச்சோறப்பா இதில் நான் என்னத்த உனக்கு கொடுக்க என்றுதான் சொல்லாமல் இருந்தேன் நீ தப்பா நினைச்சுக்காதே என்றாராம்.இதைக்கேட்ட சோ தன்னையறியாமல் அழுது விட்டாராம்.எப்படி தலைவர் என்று எண்ணிப்பாருங்கள். எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இப்படி ஒரு மாமனிதர் கிடைப்பாரா?
  • 492