GomathiSiva

  •  ·  Premium
  • 5 friends
  • I

    9 followers
  • 5851 views
Profile QR
This is your profile QR Code.
Info
Name:
GomathiSiva
Friends count:
Followers count:
Membership
Premium
Relationships
Empty
Joined Organizations
  • 55
Added article  
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த படங்கள் அதிகளவில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன. அதில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி ஆகிய சூப்பர் ஹிட் படங்களும் அடக்கம். ஆனால் சமீபகாலமாக அவர் பெரிய ஹிட்கள் எதுவும் கொடுக்கவில்லை.தெலுங்கு சினிமா ஹீரோக்கள் எல்லாம் பேன் இந்தியா ஹீரோக்களாக மாறி வருகின்றனர். இன்னும் மகேஷ் பாபு அந்த கட்டத்தை எட்டவில்லை. ஆனால் தற்போது அவர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வரும் படம் இந்தியாவின் பிரம்மாண்டமானப் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.மகேஷ் பாபு நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அதடு’ என்ற படம் தொலைக்காட்சியில் ஒரு புதிய சாதனைப் படைத்துள்ளது. இதுவரை அந்த படம் 1500 முறைக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது. எந்தவொரு இந்திய படமும் படைக்காத சாதனை இது என சொல்லப்படுகிறது.
  • 67
Added a news  
கனடாவில் ஒரு பாரிய பனிச்சரிவால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஏரியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆல்பைன் பகுதியில் குறித்த வீரர்கள் இழுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஒரு போக்குவரத்து ஹெலிகாப்டர் குழுவை நெருங்கிக்கொண்டிருந்தபோது, ​​விமானி ஒரு பனிச்சரிவைக் கவனித்து சைரனை ஒலித்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த வீரர்களை மீட்பதற்கான துரித நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவர்கள் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.பலியானவர்கள் விஸ்லர் BC-யைச் சேர்ந்த 44 வயது நபர், இடாஹோ USA-வைச் சேர்ந்த 45 வயது நபர் மற்றும் காஸ்லோ BC-யைச் சேர்ந்த 53 வயது வழிகாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
  • 73
Added a post  
துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேர் .முதல் நபர் உள்ளே அழைக்கப்பட்டார்.அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.முதல்.நபர் சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு,அடுத்த நபரை அழைத்தார்.அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த இரண்டாவது நபர்.அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.மூன்றாவது நபரை அழைத்து வந்தார்.கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார் மூன்றாம் நபர்.அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.மூன்றாம் நபர் சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!'
  • 76
Added a post  
வீட்டை விற்றுவிட்டு.. புது ஓனருக்கு தெரியாமல் அதே வீட்டில் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்!சீனாவில் தன்னுடைய வீட்டை புது ஓனருக்கு விற்ற பெண், புது உரிமையாளருக்கு தெரியாமல் 7 ஆண்டுகளாக அதே வீட்டில் வசித்து வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் ஜிங்சு மாகாணத்தை சேர்ந்தவர் ஜாங் எனும் பெண்மணி. இவர் கடந்த 2016ம் ஆண்டு தான் குடியிருந்த வீட்டை விற்பதாக அறிவித்தார். சிலர் வீட்டை வாங்க முன்வந்தனர். ஆனால் விலை கட்டுபடியாகவில்லை.சரியான விலைக்காக ஜாங் காத்திருந்தார். கடைசியாக 2019ம் ஆண்டு லீ என்பவருக்கு வீடு மிகவும் பிடித்துப்போய்விட்டது. பங்களா மாதிரி வீடு.. தோட்டம், மரங்கள், காற்றோட்டமான இயற்கை எழில் கொஞ்சும் வசதியுடன் இருப்பதால், வீட்டை ரூ.2.24 கோடி கொடுத்து வாங்கிக்கொள்வதாக கூறினார்.பத்திரப்பதிவும் செய்யப்பட்டு அதே ஆண்டில் வீடு லீ கைக்கு மாறியது. லீ பரபரப்பான பிசினஸ் மேன். வீட்டில் இருக்கும் நேரம் குறைவுதான். எப்போதும் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருப்பார். பெரும்பாலும் விடுமுறையில்தான் வீட்டில் அதிக நேரத்தை கழிப்பார்.இப்படியே 7 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆனால் இவர் குடியிருக்கும் வீட்டில் இவருக்கே தெரியாமல் வேறு யாரோ இருப்பது போன்று அடிக்கடி தோன்றியிருக்கிறது.வித்தியாசமான சத்தங்கள், திடீர் வெளிச்சம் என அமானுஷ்யமாக நடந்திருக்கிறது...பேய் எதாவது இருக்கும் என்று யோசித்த லீ, அதை ஓட்டுவதற்கு சில விஷயங்களையும் செய்திருக்கிறார். ஆனால் கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் இதே பிரச்சனை.அவருடைய உள்ளுணர்வு, அவரை தவிர இங்கு வேறு யாரோ இருப்பதாக சொல்லிக்கொண்டே இருந்தது. இப்படி இருக்கையில்தான் ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்யலாம் என்று முடிவெடுத்து வேலையில் இறங்கியிருக்கிறார்.வீடுதான் பெருசாச்சே.. எனவே சுத்தம் செய்யும் பணி 2-3 நாட்கள் வரை இழுத்திருக்கிறது. எல்லா அறைகளையும் சுத்தம் செய்த அவர், கடைசியாக தோட்டம் பக்கம் வந்திருக்கிறார்.அங்கு ஒரு கழிவறை இருந்திருக்கிறது. இதுவரை அவர் அதை பயன்படுத்தியதில்லை.ஆனால் அதை சுத்தம் செய்து வைத்தால், நண்பர்கள் யாராவது வந்தால் பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும் என்று யோசித்து கிளீன் செய்ய கழிவறை கதவை திறந்திருக்கிறார்.அங்குதான் ஒரு ட்விஸ்ட் காத்திருந்திருக்கிறது.தோட்டத்தில் இருந்தது உண்மையான கழிவறை கிடையாது. கதவுக்கு பின் ஒரு படிக்கட்டு செல்கிறது. இதை கொஞ்சம் கூட லீ எதிர்பார்க்கவே இல்லை. மனதில் பயம் ஒருபக்கம், மறுபுறம் இந்த படிக்கட்டு எங்கு போகிறது என்கிற கேள்வியும் இருந்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு படிக்கட்டில் இறங்கியிருக்கிறார்.அது ஒரு அறைக்கு அழைத்து சென்றது. அந்த அறை விசாலமாக, ஒரு ஆள் வசிப்பதற்கு ஏற்றார் போல இருந்திருக்கிறது. காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்திற்கான வசதியும் அங்கு செய்யப்பட்டிருக்கிறது.அதேபோல அறையின் ஒரு மூலையில் மினி பார் இருந்திருக்கிறது. அங்கு உயர்தர சரக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் பார்த்த லீ-க்கு இந்த வீட்டில் பேய் இல்லை, வேறு யாரோ ஒரு ஆள் இருக்கிறார் என்று தெரிந்துவிட்டது.அறையை முழுமையாக சோதனையிட்டதில் மற்றொரு மூலையில் இந்த வீட்டின் பழைய ஓனர் ஜாங் இருந்திருக்கிறார்.இரண்டு பேரும் ஒருவரை பார்த்து ஒருவர் கத்த.. அந்த தெருவே அமர்க்களமாகியிருக்கிறது. லீ உடனடியாக ஜாங்கை வெளியே போக சொல்லியிருக்கிறார். ஆனால், வீட்டை விற்ற பத்திரத்தில் இந்த பேஸ்மென்ட் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும், எனவே இது எனக்கு சொந்தமானது என்றும் ஜாங் வெளியே போக மறுத்திருக்கறார். விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது.அங்கு நீதிபதி, லீ-க்கு ஆதரவாக தீர்ப்பளித்து, ஜாங் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும், இத்தனை நாள் இங்கு தங்கியதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
  • 82
Added a post  
ஒரு பெரிய பணக்காரர் வீட்டில் வசித்து வந்த தம்பதியர்களுக்கு பத்து வருடம் கழித்து குழந்தை பிறந்தது.மிகவும் மகிழ்ச்சியில் தாய் அந்த குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார்கள். ஒரு சமயம் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற போது ! தோட்டத்தில் இருந்து ஒரு பாம்பு வந்து உறங்கி கொண்டிருந்த குழந்தையை தீண்டி விட்டது!குழந்தையும் விஷத்தின் வலிமையால் உடனே நுரை தள்ளி இறந்தது! எமன் அந்த குழந்தையின் உயிரை எடுத்து சென்றான்!அப்பொழுது பூ பறித்து உள்ளே வந்த தாய் குழந்தை இருக்கும் நிலையை பார்த்து சத்தம் போட்டு கதறி அழ! அப்ப பக்கத்து வீட்டு அம்மா அங்கே வந்து! உன் குழந்தையின் உயிரை இப்பொழுது தான் காலன் எடுத்து கொண்டு செல்கிறான்! சீக்கிரம் போனால் அவனிடம் கேட்டு உன் குழந்தையின் உயிரை திரும்பி வாங்கி வரலாம் என்று சொன்னாள்.உடனே தாய் எமனை தேடி வெளியே தெருவில் ஓடினாள்!ஓடினாள்! ஊருக்கு வெளியே வந்தாள்!அப்பொழுது அங்கிருந்த ஒரு கள்ளி செடி பேசியது அம்மா எனக்கு தெரியும் உனக்கு என்ன நடந்தது என்று! உன் குழந்தையின் உயிர் வேண்டும் என்றால் நீ என்னை உன் குழந்தையாக நினைத்து கட்டி பிடித்து கொஞ்சி என்னை உன் குருதியால் நனைக்க வேண்டும்! என்று சொல்ல அந்த தாயும் அது போல் அந்த கள்ளி செடியை கட்டி பிடித்து குழந்தை போல் கொஞ்ச! அவள் உடம்பில் இருந்து குருதி வெளியேறி செடியை சிகப்பாக மாற்றியது. செடி சொல்லியது இன்னும் ஒரு மைல் தூரத்தில் இருக்கும் ஒரு கிணற்றில் உன் குழந்தையின் உயிர் இருக்கு போ! என்று சொல்லி அனுப்பியது.தாயும், உடனே அந்த கிணறு இருக்கும் இடத்திற்கு ஓடினாள், இப்பொழுது கிணறு பேசியது, அம்மா நான் நீர் நிறைந்து இருக்கும் போது என்னிடம் எல்லாரும் வந்தார்கள், இப்பொழுது நீர் இல்லாததால் என்னிடம் யாரும் வருவது இல்லை! உனக்கு உன் குழந்தையின் உயிர் வேண்டும் என்றால்! உன் கண்ணீரால் இந்த கிணற்றை நிரப்பு என்று சொல்ல அந்த தாய் கிணறு சொன்ன மாதிரி தன் குழந்தையை நினைத்து கதறி அழ கிணறு கண்ணீரால் நிரம்பியது. இப்பொழுது கிணறு சொல்லியது இங்கே இருந்து ஒரு மைல் தூரத்தில் கழுகு மலை இருக்கு அங்கே செல் உன் குழந்தை உயிர் கிடைக்கும் என்று சொல்லியது!தாயும் வேக வேகமாக அந்த மலையை நோக்கி ஓடினாள்!அங்கே இருந்த கழுகு அம்மா உனக்கு உன் குழந்தை உயிர் வேண்டும் என்றால் உன் இரு விழி திரையும் எனக்கு கொடு! வயதாகி விட்டதால் என் பார்வை சரியாக இல்லை! நான் உனக்கு உன் குழந்தையின் உயிர் இருக்கும் இடத்தை சொல்வேன் என்றது!மகிழ்ச்சியுடன் தாய் தான் ஒரு விழி திரையை கொடுத்தார்! இப்ப கழுகு சொல்லியது அருகில் இருக்கும் தோட்டத்தில் காலன் இருக்கிறான். போய் உன் குழந்தையின் உயிரை மீட்டு கொள் என்றது.கண் பார்வை இழந்தும் தட்டு தடுமாறி அருகில் இருந்த தோட்டத்திற்கு சென்ற தாயை காலன் வரவேற்றான். தாய் காலனிடம் தன் ஒரே குழந்தையின் உயிரை திருப்பி கொடுக்க மன்றாடி கேட்க, அதற்கு காலன் தாராளமாக தருகிறேன்! இங்கே மொத்தம் ஆயிரம் பூக்கள் இருக்கிறது அதில் ஆயிரம் குழந்தைகளின் உயிர் இருக்கு! உனக்கு கண் பார்வை வேறு இல்லை முடிந்தால் கண்டு பிடித்து எடுத்து கொள் என்றான்.தாய் உடனே ஒவ்வொரு பூவாக நுகர ஆரம்பித்த செல்ல ! முன்னூறு பூக்களை நுகர்ந்த பின் 301 பூவிடம் வந்தவள் , இதோ என் குழந்தை என்று அந்த பூவை கட்டி கொண்டு அழ! அந்த பூவில் இருந்த குழந்தை அம்மா என்று அழைத்தது.இப்போ காலன் தாயிடம் எப்படி அது உன் குழந்தையின் உயிர் தான் என்று தெரிந்து கொண்டாய் என்று கேட்க அதற்கு அந்த தாய் பத்து மாதம் தவமிருந்து பெற்ற குழந்தையின் வாசம் தெரியாமல் எந்த தாய் இருப்பாள் என்று சொல்லி குழந்தையின் உயிரை பெற்று சென்றது.
  • 89
Added a post  
தமிழ்நாட்டில் - சென்னை பூந்தமல்லியிலுள்ள ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவிலின் மஹிமை பலரும் அறியாதது. நூற்றுக்கணக்கான சித்தர்கள் இக்கோயிலின் தூண்களிலும், மாடங்களிலும், மேற்கூரைகளிலும் ஜீவ சமாதி பூண்டுள்ளனர். ஸ்ரீஆதிசங்கரர் இத்திருக்கோயிலுக்கு விஜயம் செய்து அண்ட சராசரங்களிலும் காண இயலாத இரண்டு யந்திரங்களைத் (சக்கர வடிவில்) தம் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ளார்.தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகிலுள்ள ஸ்ரீவைதீஸ்வரன் கோயிலின் பூரண அம்சங்களைத் தாங்கி அதற்கு ஈடான முத்துக்குமார ஸ்வாமியாகத் திருமுருகன் அருள் பாலிக்கும் தலம் இது. அது மூல ஸ்தலம் என்றும் சென்னையில் உள்ளது பிம்ப ஸ்தலம் என்றும் சித்தர்கள் கூறுவார்கள். இங்குள்ள மூர்த்திகள் மூல வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ளவை போன்றே அமைந்து "இரண்டும் ஒன்றே" என்று சித்தர்களால் பெருமை பாடும் அற்புதச் சிறப்பைத் பெற்றுள்ளன.இத்திருக்கோயிலில் பல ஆன்மீக ரகசியங்கள் பொதிந்துள்ளன. ஸ்ரீதையல் நாயகி அன்னையின் சன்னதிக்கெதிரில், ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி தரிசனம் தரும் தூணின் பின்புறன் "ஸ்ரீ அவதூது ரோக நிவர்த்தீஸ்வரர்" என்ற சித்தர் பெருமான் ஜீவ சமாதி கொண்டு அருள் பாலிக்கின்றார்.இவருடைய விசேடத் தன்மை என்னவெனில் இவர் எந்த நோயிலிருந்தும் ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள அருள் புரியும் அற்புத சித்தர். உதாரணமாக ஒருவருக்கு அம்மை நோய் பற்றும் அறிகுறி தென்படின் ஸ்ரீஅவதூது ரோக நிவர்த்தீஸ்வரரைத் தரிசித்து, இயன்ற அளவு நீர்மோர், இளநீர், குளிர்பானம், மிளகு சாதம் போன்றவற்றைத் தானமாக ஏழைகளுக்கு வழங்கி தன்னை அந்நோயினின்று தற்காத்துக் கொள்ளலாம்.ஒரு குழந்தைக்குப் போலியோ தாக்கும் அறிகுறி ஏற்படின், இச்சித்தரைத் தரிசனம் செய்து இயன்ற அளவு ஊனமுற்றோர்க்குச் சக்கரப் பலகை, ஊன்று கோல், சக்கரவண்டி jaipur leg எனப்படும் செயற்கை கால் போன்றவற்றைத் தானமாக வழங்கி அக்குழந்தையைப் போலியோ நோயினின்று காத்துக் கொள்ளலாம்.இவ்வாறாக எந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டாலும் அதற்குரிய தான் முறைகளுடன் கூடிய இந்தச் சித்தர் பெருமானின் தரிசனம் அந்த நோயினின்று எவரையும் தற்காக்கும். நோய் கண்டபின் அருள் பாலிக்கும் தெய்வங்கள், தெய்வ சன்னதிகள் பற்றி அறிந்துள்ளோம். ஆனால் நோய் வரும்முன் காக்கும் ஸ்ரீரோக நிவர்த்தீஸ்வரரின் அருள் தன்மை மருத்துவத் துறைக்கே ஒரு சவாலாகும்.அம்மகானுக்கு இப்படிப்பட்ட சக்தி எப்படி வந்தது ?பல்லாயிரம் வருடங்களுக்கு முன் "நோய்களைத் தீர்ப்பதற்கு ஈசனுடைய பல லிங்க வடிவங்கள் இருப்பினும் நோய்கள் வரும்முன் காக்கும் லிங்க வடிவைக் கண்டு அருள் பெற்று, பிறவிப்பிணி நீக்க உதவ வேண்டும்" என்று விருப்பம் கொண்டார் ஓர் உத்தமர். அவர் அத்தகைய லிங்கேஸ்வரரைத் தேடி பல யுகங்கள் அலைந்தவராய் முடிவில் இறையருளால் இமயமலைச் சாரலிலே "ரோகேஸ்வரர்" லிங்கத்தைக் கண்டார். அன்னாரே தாம் தேடிய பொக்கிஷம் என்பதை ஈசனுடைய அசரீரி ஒலியால் உணர்ந்தார். பிறகு அவ்விடத்தில் இருந்து கொண்டு பல திருப்பணிகள் இயற்றி நோய் தடுக்கும் ரகசியங்களை ஈசனருளால் உணர்ந்து கொண்டார். இறைவனிடம், "ஐயனே! அடியேன் எங்கிருந்து கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும்?" என்று கேட்க ஈசனும், "நீ எந்தத் தலத்தில் அவதூதாக மாறுகின்றனையோ அங்கு குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலிப்பாயாக!" என்று அருளினான்.அவ்வாக்கின்படியே அந்த உத்தமர் அனைத்து உத்தமத் தலங்களையும் தரிசித்தவராக முடிவில் பூவிருந்த வல்லியை அடைந்து வைதீஸ்வரனைத் தரிசித்த வேளையிலேயே அவதூதாக மாறினார் .... பின் ஈசனுடைய விருப்பப்படி அங்கேயே சமாதி கொண்டு விட்டார் . அந்த உத்தமர் தாம் ஸ்ரீஅவதூது ரோக நிவர்த்தீஸ்வரர்."Prophylactic (prevention) is better than Cure" என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப வரு முன் காப்பது மருந்துகளை விடச் சாலச் சிறந்ததாகும். இம்முறையில் PROPHYLACTIC PROPHET ஆக விளங்கும் ஸ்ரீரோக நிவர்த்தீஸ்வரர் பூலோகத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத, நோய் வராது காத்து அருளும் வரசித்த புருஷ்ராவார்.லோக க்ஷேமத்திற்காக நற்செயல்கள் செய்து உண்மையாகப் பாடுபடும் சத்சங்கங்களில் நம்மைப் பிணைத்துக் கொண்டாலன்றோ, சத்சங்கத்தை மௌனமாக இயக்கும் சித்த புருஷர்களிடமிருந்து மேற்கண்ட ஆன்மீகப் பொக்கிஷங்களைப் பெற இயலும்...!!
  • 102
நாம் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு இந்த திரைப்படம்.
  • 105
  • 108
  • 108
  • 109
  • 115
  • 115
  • 115
Added article  
புற்று நோய் தாக்கியுள்ளது என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் அழுதே விடுவார்கள், அல்லது பயத்தாலேயே பாதி மரணித்து விடுவார்கள். ஆனால், மரணத்தையும் மாபெரும் கொண்டாட்டமாக மாற்றி விட முடியுமென்பதற்கு ஷிகான் ஹூசைனிதான் உதாரணம். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹூசைனி தரமணியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்தார்.மருத்துவமனையிலுள்ள அவரின் அறையில் நோயாளிக்குரிய அடையாளங்கள் குறைவாகவே காணப்பட்டது. அந்த அறையில் விரக்திக்கே இடம் இல்லை. தினமும் மாணவர்களுடன் சந்திப்பு தன்னை தேடி வருபவர்களுடன் உரையாடல் , இடை இடையே கிட்டார் வாசிப்பு, நண்பர்களை கிட்டார் வாசிக்க சொல்லி கேட்பது என்று மரணத்தையும் ஜாலியாகவே எதிர்கொண்டு எமனிடத்தில் போய் சேர்ந்து விட்டார் மாஸ்டர். துரையை பூர்வீகமாக கொண்ட ஷிஹான் ஹுசைனி இயக்குநர் கே.பாலசந்தர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். புன்னகை மன்னன் படத்தில் இலங்கை தமிழராக சிறிய வில்லன் வேடத்தில் ஹூசைனி நடித்திருந்தார். அதை தொடர்ந்து, வேலைக்காரன், மூங்கில் கோட்டை என பல படங்களில் நடித்திருந்தார். விஜய்யின் பத்ரி படத்தில் அவருக்கு உடற்பயிற்சியாளராகவும் நடித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்துடன் ப்ளட்ஸ்டோன் என்கிற ஆங்கில படத்தில் பணியாற்றியிருக்கிறார்.who is karate Shihan Hussaini?ஆனால்,கராத்தேயும் வில்வித்தையும்தான் ஹூசைனிக்கு உயிர். வில்வித்தைக்கு தமிழகத்தில் உலகத் தரத்திலான பயிற்சி மையம் அமைக்க வேண்டுமென்பதுதான் அவரின் வாழ்க்கையின் ஒரே லட்சியம். ஆனால், கடைசி வரை அது கைகூடவில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ஷிகான் ஹுசைனி, தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருந்தார். நள்ளிரவு 1.45 மணியளவில் ஷிகான் ஹுசைனி உயிரிழந்தார். தற்போது, அவரின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவித்துள்ளனர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ஷிஹான் ஹுசைனி இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கலா மாஸ்டர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • 457