GomathiSiva
Added a news
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவின் நேட்டோ ராணுவக் கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், அது நிச்சயம் மூன்றாம் உலகப் போராகத் தான் இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு யாருமே எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது. இது மேற்குலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவைக் கடுமையாகப் பாதித்து உள்ளது.
இந்த போர் சுமார் 2 ஆண்டுகளை நெருங்கும் போதிலும் எப்போது முடியும் தெரியவில்லை. 1962க்கு பிறகு இல்லாத வகையில் ரஷ்யா மற்றும் மேற்குலக நாடுகளிடையே இதனால் இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்தப் போர் ஆரம்பித்த பிறகு அணு ஆயுதப் போரின் அபாயங்கள் குறித்து புதின் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். அணு ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்ற புதின், இருப்பினும் அணு ஆயுதங்களை உக்ரைன் போரில் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால் அது மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என்ற அவர், அப்படி இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டால் அது மூன்றாம் உலகப் போருக்குத் தான் இட்டு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இதேபோன்ற கருத்தையே கூறி வரும் நிலையில், இப்போது புதினே இந்த கருத்து கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3ம் உலக போர்: ரஷ்ய தேர்தலில் வென்று 5ஆவது முறையாக அதிபராக இது தொடர்பாக புதின் மேலும் கூறுகையில், "ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளின் நேட்டோ படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் அது மூன்றாம் உலகப் போரில் இருந்து ஒரு படி தொலைவில் தான் இருக்கும்.. இருப்பினும், இது நடக்கவே நடக்காது என்று சொல்ல முடியாது. இங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஏனென்றால், நேட்டோ ராணுவ வீரர்கள் ஏற்கனவே உக்ரைனில் இருக்கிறார்கள். போர் தொடர்வது யாருக்கும் நல்லது இல்லை.. அங்கே தொடர்ந்து பல நூறு பேர் உயிரிழந்து வருகிறார்கள். போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால், மேற்குலக நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவது போல தெரியவில்லை.
பதற்றம்: மேற்குலக நாடுகள் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசுவதைத் தடுக்க வேண்டும். அவர்கள் அமைதியை ஏற்படுத்தப் பேச்சுவார்த்தை நடத்துவது போலத் தெரியவில்லை. அவர்கள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே பேசி வருகிறார்கள். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயாராகவே இருக்கிறோம். இதற்காக நாங்கள் எதிரிகளைக் கண்டு அஞ்சுகிறோம் என்று பொருள் இல்லை. அண்டை நாடுகளுடன் நல்லுறவு வேண்டும் என்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை எடுக்கிறோம்.
ரஷ்யாவில் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை எனச் சிலர் (மேற்குலக நாடுகள்) கூறுகிறார்கள், இது கேலிக்கூத்தாக இருக்கிறது. ரஷ்யாவில் மிகவும் நேர்மையான முறையில் தான் அதிபர் தேர்தல் நடந்துள்ளது. அமெரிக்காவில் தான் அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை. அங்கே ஜனநாயகமானது தேர்தல் நடப்பதில்லை என்றும் அரசு அதிகாரம் தனக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாக டிரம்ப் கூட கூறுகிறாரே.. அங்கு நடப்பதைப் பார்த்து ஒட்டுமொத்த உலகமும் சிரிக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்யச் சிறையில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அது குறித்த கேள்விக்கு நேரடியாக எந்தவொரு விளக்கத்தையும் அளிக்காத புதின், நவல்னி காலமானார் என்று மட்டும் கூறியிருக்கிறார்.
Added a news
சொத்துக்கள், உடமைகளுடன் கனடாவில் வாழும் ஒரு மனிதனின் வாழ்வில் "மரணசாசன பத்திரம்" (Last will & Testament) என்ற ஆவணம் எவ்வளவு இன்றியமையாததோ அதே போல் இன்னுமோர் ஆவணமும் சட்ட ரீதியாக கைச்சாத்திட்டு வைத்திருப்பது மிக முக்கியமானதாகும். அதனை "அதிகாரங்களினை தொடரும் உரிமை வழங்கும் ஆவணம்" (Continuing power attorney) என குறிப்பிடப்படும்.துரதிர்ஷ்டவசமாக தாங்கள் ஏதாவது விபத்துகளில் சிக்குண்டோ அல்லது நோய்வாய்ப்பட்டோ நிரந்தரமாக சிந்தனை செயல்களில் எவையும் தீர்மானிக்க முடியாத நிலைமைகள் அல்லது கோமா நிலைமைகளுக்குள் தள்ளப்பட்டால் தங்களின் வீடு, சொத்துக்கள், வங்கி கணக்குகள், முதலீட்டு திட்டங்கள் யாவற்றினையும் தங்கள் சார்பில் கையாளும் முழுமையான சட்ட ரீதியான அதிகாரத்தினை இன்னொருவருக்கு வழங்கும் ஆவணம் என இதனை குறிப்பிடலாம்.இவ்வாறு தாங்கள் தங்கள் சொத்துக்கள் மீது அதிகாரத்தினை தொடரும் அதிகாரம் வழங்க ஒருவரை தெரிவு செய்யும்போது தங்களுக்கு நம்பிக்கைக்குரியவராக, உண்மையானவராக, சொத்தினை அழிவு நிலைமைக்கு எடுத்து செல்லாதளவுக்கு அனுபவமுள்ளவராக, பொறுப்பெடுத்து செய்வதில் விருப்பமுள்ளவராக இருக்கவேண்டும் என ஒண்டாரியோ மாகாண சட்டமாதிபதி அமைச்சகத்தின் இணையதள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.தங்களால் நிரந்தரமாக தெளிவற்ற நிலைமைக்கு உள்ளானால் (Incapable stage of managing property) பொதுவாக தங்களின் சொத்துக்களில் அதிகாரங்களினை தொடரும் உரிமையினை தாங்கள் எவருக்கும் வழங்கலாம் என இருந்தபோதும், குடும்பத்தில் மனைவி அல்லது கணவன் மற்றும் பிள்ளைகளுக்கே அந்த அதிகாரம் வழங்குவது மரபு ரீதியான செயல்பாடாகும்.ஏனெனில் இங்கு நடந்த ஓர் உண்மை கதையினை உதாரணத்துக்கு சொல்லவேண்டும்போல் உள்ளது.அந்த நபர் திடீர் என விழுந்து தலை அடிபட்டு நிரந்தரமாக கோமா நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார். மனைவியோடு கூட்டு உரிமையாளராக இருந்த அவர்கள் குடியிருக்கும் வீடு இருவரினது கையொப்பமும் இல்லாது விற்பனையும் செய்யமுடியாது. பிரதானமான நிலையிலிருந்து வருமானத்தினை கொண்டுவரும் கணவன் திடீர் என்று நிரந்தரமாக இயலாத நிலைமைக்கு தள்ளப்பட்டதால் .......தொடர்ந்து விவரமாக அறிய வீடியோவைப் பாருங்கள் https://youtu.be/AmrQ1y_fPVQ
Added article
படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயது எஸ்.எஸ்.வாசன் இந்திய சினிமாவின் அந்தக் காலத்து பிரம்மாண்டம் என்றால் அது எஸ்.எஸ்.வாசன் தான். தனது தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோஸ் மூலம் பல பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்தவர். நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சம்பளத்தை அள்ளி வழங்கியவர். தான் செலவழிப்பதைப் போலவே படத்தையும் வெற்றியாக்கி அதில் பல மடங்கு லாபத்தை எடுத்து அதே சினிமாவில் மீண்டும் அடுத்தடுத்த படங்களில் தனித்துவம் காட்டியர் எஸ்.எஸ்.வாசன்.இவரின் பிரம்மாண்ட படங்களுக்கு உதாரணமாக சந்திரலேகா படம் ஒன்றே போதும். அந்தக் காலகட்டத்திலேயே ஒரே பாடலுக்காக பல நூறு துணை நடிகர்களைக் கொண்டு ஒரு டிரம்ஸ் இசைக்கும் பாடல் காட்சியைப் படமாக்கினார். மேலும் ஔவையார் படத்திற்காக பல நிஜ யானைகளை ஒரே காட்சிக்காக பயன்படுத்தினார். இப்படி பணத்தினை தண்ணீராகச் செலவழித்து தான் எடுக்கும் படங்களில் பிரம்மாண்டத்தைக் காட்டி அந்தக் கால சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டார்.தமிழ் மட்டுமல்லாது இந்தி சினிமாவிலும் எஸ்.எஸ்.வாசன் புகழ் பெற்றவராகத் திகழ்ந்தார். 1948-ல் தொடங்கிய இவரது திரைப்பயணம் 1970 வரை நீடித்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திரையுலகையே தனது பிரம்மாண்ட செட்டுகளால் அதிர வைத்தவர்.ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய ‘மணமகள்‘ படத்திற்காக பயன்படுத்திய மெட்டைக் கேட்டு சிலாகித்துப் போயிருக்கிறார் எஸ்.எஸ்.வாசன். அப்போது தமிழில் திரைப்படங்கள் எடுப்பதை நிறுத்தி விட்டு இந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எனவே அடுத்து தான் இயக்கப் போகும் இந்தி படத்திற்காக இந்த மெட்டை அதில் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்ற என்.எஸ்.கிருஷ்ணனிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.கலைவாணரும் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியது மட்டுமல்லாமல் அந்தப் பாடலின் மெட்டு இந்தியில் சரியாக உருவாகியிருக்கிறதா என்று பாடல்பதிவின் கடைசி வரை கூடவே இருந்திருக்கிறார் என்.எஸ்.கிருஷ்ணன். பின்னர் வீட்டுக்குச் சென்றவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு கவர் நிறைய பணத்தை எஸ்.எஸ்.வாசன் என்.எஸ்.கிருஷ்ணன் வருவதற்கு முன்பே அவர் வீட்டிற்குக் கொடுத்துவிட்டிருக்கிறார். அந்தப் பணத்தை எண்ணிய போது 15,000 இருந்ததாம். ஷாக்கான என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.வாசனிடம் எதற்கு இந்தப் பணம் என்று கேட்க, உங்களது மெட்டை எனது படத்தில் பயன்படுத்தினேன் அல்லவா அதற்கான தொகை தான் என்று கூறியிருக்கிறார். என்.எஸ்.கிருஷ்ணனும் ஒரு மெட்டிற்கு 15,000 ரூபாயா என்று ஆச்சர்யப்பட்டுப் போயிருக்கிறார்.
Added a news
தமிழ் பேசும் மக்களுக்காக காவல்துறை அவசர உதவிகளைப் பெற 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் ரணிலின் அறிவுறுத்தலின் பேரில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் இந்த அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்கள் அதன் மூலம் தமிழ் மொழியில் காவல்துறையினரின் உதவிகளைப் பெற முடியும் என காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
Added a news
இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஓரணியில் ஒற்றுமையாக செயற்பட்டு தந்தை செல்வாவின் வழியில் செல்ல உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது குறித்து இன்று (15) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மேயர் தி. சரவணபவன் ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் கூட்டம் இன்று நடைபெற்றது.இதன் போது, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து ஓரணியில் செயற்பட தீர்மானித்துள்ளோம்.தேசிய ரீதியில் தமிழரசுக் கட்சிக்குள் எழுந்துள்ள செயலாளர் தெரிவு உள்ளிட்ட பிரச்சினைகளை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை கூட்டங்கள் நடைபெறும் போது அங்கு பேசி தீர்மானிக்கவுள்ளோம்.மாவட்ட கிளை என்ற அடிப்படையில் அனைத்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையுடன் செயற்படவுள்ளனர்.தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வாவின் பிறந்தநாள் நிகழ்வுகள் மற்றும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு தமிழரசுக் கட்சி புது உத்வேகத்துடன் செயற்பட உள்ளது.
Added a news
எமது நாட்டின் கல்வித்துறையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போது, இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கான பொய்யான அமைப்புகள் உருவாக்கப்பட்டு, ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் வீதியில் இறக்கப்படலாம். “சஜித்தின் இந்த முன்மொழிவுகள் இலவசக் கல்விக்கு தடையாக இருப்பதாக” புரட்சியாளர்கள் போலியான செய்திகளை உருவாக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.அரச பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்குவதில் இலவசக் கல்வி பாதுகாக்கப்படுமா அல்லது அழிக்கப்படுமா என்பதை மக்கள் அறிவார்ந்த முறையில் சிந்தித்து அறிய வேண்டும். வெளிநாட்டு கொள்கைகளை கொண்டு வந்து கண்ணங்கரவின் இலவசக் கல்வியை சஜித் மாற்றியமைக்கிறார்’ என்று சொல்லும் அந்த புரட்சியாளர்களின் பிள்ளைகள் தனியார் பாடசாலைளிகளிலும், தனியார் பல்கலைக்கழகங்களிலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமது பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனங்களில் தரமான உயர்கல்வியைப் பெறும் போது, நாட்டின் ஏனைய பிள்ளைகளுக்கும் அதே தரமான உயர் கல்விக்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கும் போது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 124 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கொழும்பு, கடுவெலை, ஸ்ரீ சோமானந்த மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Added a news
கனடாவின் ஒட்டாவாவின் பார்ஹேவன் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களது பூதவுடல்களுக்கும் நாளைய தினம் இறுதிக் கிரியை மேற்ள்ளப்பட உள்ளது.கனடிய பௌத்த காங்கிரஸ் இது தொடர்பில் அறிவித்துள்ளது. இந்த இறுதிக் கிரியைகள் பொது இறுதிக் கிரியைகளாக நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.ஒட்டாவா இன்பினிட்டி கொன்வென்சன் நிலையத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் பிழைத்த விக்ரமசிங்கவின் உடல் நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 19 வயதான பேர்பியோ டி சொய்சா என்ற இளைஞரின் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி 4 சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்டனர்.கைது செய்யப்பட்ட பேர்பியோ, அலைபேசி காணொளி நேரலை வழியாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது.
Added a post
சோபகிருது வருடம் மாசி மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 12.3.2024. சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 11.01 வரை துவிதியை. பின்னர் திருதியை. இன்று அதிகாலை 02.06 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. ஆயில்யம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.. கிழமைராகு காலம்எமகண்டம்குளிகைசெவ்வாய்மதியம் 3 to 4:30 PMகாலை 9 to 10:30 AMமதியம் 12:00 to 1:30 PM