GomathiSiva

  •  ·  Premium
  • 5 friends
  • I

    9 followers
  • 6101 views
Profile QR
This is your profile QR Code.
Info
Name:
GomathiSiva
Friends count:
Followers count:
Membership
Premium
Achievements

Basic

Total points: 399

4603 point(s) to reach
Relationships
Empty
Joined Organizations
·
Added a news
·
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த ஹர்ஜீத் சிங் (Harjit Singh Dhadda, 50), கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Mississauga நகரில் ட்ரக் சேவை நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இந்நிலையில், புதன்கிழமை தனது அலுவலகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் அருகே சிங் நின்றுகொண்டிருக்கும்போது, அங்கு ஏற்கனவே கார் ஒன்றில் காத்திருந்த சிலர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள்.இந்த சம்பவத்தைக் கண்ணால் கண்டவர்கள், அந்த நபர்கள் சிங்கை நோக்கி 15 முதல் 16 முறை சுட்டதாகவும், பின்னர் தாங்கள் வந்த காரிலேயே தப்பியோடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில், சிங்குக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பொலிசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.
  • 155
எல்லாம் ஒரு நம்பிக்கை.....
  • 166
·
Added article
·
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். பெங்களூருவில் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரியும் முகமது மஸ்தான் என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட அனைத்துப் பொருட்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
  • 188
  • 260
அருமையாக சொல்லிட்டீங்க சூரி.
  • 262
  • 426
·
Added a post
·
"என்னங்க.. உங்க கார்டை குடுங்க. கொஞ்ச நாள் நான் வச்சுக்குறேன்..""ஏன் திடீர்னு கார்டு கேட்கிற?""ஏதாவது emergencyனா.. அதான்..""2 நாள் கழிச்சு தறேன்..""இல்ல எனக்கு இப்பவே வேணும்.. முக்கியமான பொருள் வாங்கணும் அர்ஜெண்ட்டா..""உனக்கு என்ன அர்ஜெண்ட்னு எனக்கே தெரியும். நாளைக்கு என் பிறந்தநாளுக்கு கிஃப்ட்னு சொல்லி என் கார்டுலேயே ஏதாவது ஆர்டர் போடுவ. அதனால நான் 2 நாள் போகட்டும் தர்றேன்..""ஏன்ங்க உங்க சர்ப்ரைஸ நீங்களே கெடுக்குறீங்க?""அதுக்கு தான் உன் கைல காசே குடுக்காம வச்சுருக்கேன்.. ""உங்களுக்கு ஏதாவது நான் குடுக்கணும்னு ஆசை படுறேன்.. பேசாம வர்றீங்களா buffet கூட்டிட்டு போறேன்..""கூட்டிட்டு போய்.. அங்க இதே கார்டை தான் தேய்க்க போற..""பார்த்தீங்களா.. இதுக்கு தான் நான் அப்பவே வேலைக்கு போறேன்னு சொன்னேன். நீங்க தான் நீ வீட்ல இரு. நான் உன்னை ராணி மாதிரி பார்த்துப்பேன்னு சொன்னிங்க. இதுவே நானே சம்பாரிச்சு..."He:"நீ பேசாம அமைதியா நான் சொல்லுறதுக்கெல்லாம் அந்த ஒரு நாளாச்சு தலையாட்டிட்டு இருக்குறது தான் நீ எனக்கு தரப்போற பிறந்த நாள் பரிசு. காசும் செலவாகாது.. நானும் நிம்மதியா இருப்பேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. "
  • 487
  • 540
  • 541
·
Added article
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் எனது வாழ்க்கையை உருவாக்கி உள்ளேன். கடந்த கால திருமண வாழ்க்கையை வைத்து மலிவான அனுதாபம் தேடுவதை என்னால் அனுமதிக்க முடியாது. மனைவியால் மனதளவிலும், உடல் அளவிலும், உணர்வு ரீதியாகவும் கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன்.நான் மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளேன். மகன்களை அல்ல. என் மகன்களை பயன்படுத்தி பணரீதியாக ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். ஆர்த்தி உடன் என் திருமண வாழ்க்கையை தொடர எவ்வளவோ முயற்சி செய்தேன். அவர் பொன் முட்டையிடும் வாத்தாகவே என்னை பயன்படுத்தினார். என்னை ஒரு கணவராக அவர் மதிக்கவே இல்லை. எனது மகன்கள் இருவரையும் பார்க்கவிடாமல் என்னை தடுத்து வருகின்றனர். 5 ஆண்டுகளாக எனது வருமானம் அனைத்தையும் ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் அனுபவித்து வந்தனர்.இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தேன். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எனது காயங்களை உணராமல் எனது கண்ணியத்தை கேள்விக்குறியாக்குவதால் நான் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நான் எடுத்துள்ள முடிவால் முன்பு இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது குழந்தைகள் எனது பெருமை, மகிழ்ச்சி, அவர்களுக்காக அனைத்தையும் செய்வேன். சில நாட்களாக எனக்கிருந்த வருத்தம் 16 ஆண்டுகால துயரமான வாழ்க்கையைவிட பெரிதல்ல.என் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவர் கெனிஷா. என்னுடைய வீட்டை விட்டு எதுவுமில்லாமல் நான் வெளியேறியபோது எனக்கு துணையாக நின்றவர் கெனிஷா. அவர் என் வாழ்க்கையின் அழகான துணை. வாழ்க்கையில் நான் சந்தித்த சட்ட ரீதியான, உணர்வு ரீதியான, நிதி ரீதியான எல்லா பிரச்சனைகளிலும் என்னுடன் துணை நின்றார். என் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவர் கெனிஷா. என்னுடைய கதையை கேட்ட அடுத்த நிமிடத்தில் இருந்து ஒரு மனநல ஆலோசகராக மட்டும் இல்லாமல் தோழியாகவும் இருந்து எனக்கு உதவினார்” என குறிப்பிட்டுள்ளார்.
  • 596
·
Added article
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசிய வார்த்தைகள், ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியது.“இவர் மாதிரி ஒரு வலிமையான ஹீரோ தமிழுக்கு கிடைத்திருக்குறது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சீக்கிரம் வளர்ந்து வாங்க. 'ரமணா 2' பண்ணலாம். கேப்டனோட பெருமையை திருப்பி காட்டலாம்,” என்றார் முருகதாஸ். இந்த பேச்சு, ‘ரமணா 2’ விரைவில் தொடங்கும் எனும் ஊகங்களை கிளப்பியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் மேலும் பேசிய இயக்குநர் முருகதாஸ், கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘கள்ளழகர்’ படத்தில் யானையுடன் நடித்திருந்தார். அப்போது ஒரு பேட்டியில் “யானை ஒரு குழந்தை மாதிரி, நானும் ஒரு யானை வாங்க போகிறேன் என்று கேப்டன் சொல்லியது ஞாபகம் வந்துச்சு,” எனவும் ஏஆர் முருகதாஸ் தெரிவித்தார்.‘படைத்தலைவன்’ படத்தை இயக்கியவர் அன்பு. படத்தில் சண்முக பாண்டியனுடன் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், முனீஷ்காந்த், கருடன் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்காக இசை தயாரித்துள்ளார். இப்போது ரசிகர்கள், ‘ரமணா 2’ நிச்சயமாக வரும், அதிலும் சண்முக பாண்டியன் நடிப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
  • 605
·
Added article
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொத்துக்களை அழகப்பன் என்பவர் அபகரித்துவிட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுதமி அளித்துள்ள புதிய புகாரில், தனது நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிப்பதற்காக அதிகாரிகள் சிலர் லஞ்சம் கேட்டதாக தெரிவித்துள்ளார். அதேபோல், “வழக்கறிஞர்கள்” என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலம் மர்ம நபர்கள் தன்னை மிரட்டிவருவதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சிலர் போஸ்டர்கள் அனுப்பி மிரட்டுவதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், தன்னை மிரட்டும் நபர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மிரட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்து காவல்துறை, அவரது மனுவை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 625
·
Added a news
இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைத்து உற்பத்தியை பெருக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா தன்னைத்தானே காத்துக் கொள்ளும் ஒரு நாடு என்றும், அங்கு ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை என்றும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ டிக் குக் ஏற்கனவே கூறியிருந்தார். இந்தியாவில் ஏற்கனவே மூன்று ஆப்பிள் தொழிற்சாலைகள் உள்ள நிலையில், மேலும் இரண்டு தொழிற்சாலை அமைக்க இருப்பதாகவும், ஒன்று தமிழகத்திலும் இன்னொன்று கர்நாடகத்திலும் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ உடன் எனக்கு ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை கேள்விப்பட்டேன்; இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை நான் விரும்பவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
  • 625
  • 581
·
Added a post
'மாடு மாதிரி வளர்ந்து இருக்கிறியே தவிர மண்டையில மசால் கொஞ்சம் கூட இல்லையே! உன்னை வச்சு வேலை வாங்குறதுக்குள்ள என் உசுரு போயிரும் போலிருக்கு. இனி நீ வேலைக்கு வர வேணாம். ஒழுங்கா வீட்டுக்கு ஓடிப் போயிரு'பலசரக்கு கடை முதலாளி விரட்டி விட்டதில் முகத்தில் டன் கணக்காக சோகத்தை சுமந்து வீட்டிற்கு வந்தான் நாகேந்திரன்.அவனைப் பார்த்ததுமே அவனது மனைவிக்கு புரிந்து போனது. இந்த முறையும் வேலை காலி.ஒரு மாதத்திற்குள் ஒன்பது இடத்திற்கு வேலைக்கு போன ஒரே நபர் இவனாகத்தான் இருக்கும். வேலைக்கு வைத்திருப்பவர்கள் ஏதாவது ஒரு வேலை செய்யச் சொன்னால் அதற்கு எதிர்மாறான வேலையை செய்யச் சொல்லி இவனது மூளை கட்டளையிடும்.விளைவு..?வேலைக்கு சேர்ந்த வேகத்தோடு வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். வேலையில்லாமல் இவன் திரும்பி வருவது ஒன்றும் புதிதல்ல.தவிர அவனது கூட்டாளிகள் எல்லோரும் பிக்பாக்கெட் மன்னர்கள். அவர்களோடு சுத்துவது தான் இவனது பொழுது போக்கே. வேலைக்கு செல்லாத நாட்களில் நண்பர்களோடு எங்கு போவான் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். அவனை வேலைக்கு சேர்ப்பதற்கும் கடைக்காரர்கள் தயங்கினார்கள்.அதனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காய்கறி நறுக்கி கொண்டிருந்தவள் கண்களில் அந்த பேப்பர் விளம்பரம் பட்டது.அதில் பேங்க் செக்யூரிட்டிக்கு ஆள் தேவை என்று இருந்தது. அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு நாகேந்திரனிடம் சென்று பேசினாள்,'பேங்க் வேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் வந்திருக்கு. அதனால உடனே பேங்குக்கு போயி அந்த வேலை சம்பந்தமாக விசாரிச்சிட்டு வாங்க'பேப்பர் கட்டிங்கை எடுத்துக் கொண்டு பேங்கிற்கு கிளம்பினான் நாகேந்திரன். மேனேஜரை சந்தித்து பேசினான்.மேனேஜர் சொன்னார்,'ஆள் பார்க்க வாட்டசாட்டமா தான் இருக்கே. எங்க பேங்க் செக்யூரிட்டி வேலைக்கு உன்ன மாதிரியான ஆளு தான் தேவை. உன்ன நாங்க வேலைக்கு சேர்த்துக்கிறோம். இந்த ஃபார்மை ஃபில்லப் பண்ணி கொடு'விண்ணப்பத்தை வாங்கியவன் வங்கி மேனேஜரிடம் சொன்னான்,'சார் எனக்கு சரியா எழுத வராது. தப்பு தப்பா எழுதுவேன். அதனால நீங்க கேள்வி கேட்டுகிட்டே வாங்க . நான் பதில் சொல்றேன். நீங்களே அந்த பதிலை விண்ணப்பத்துல எழுதுங்க'சரி என தலையசைத்து ஒவ்வொரு கேள்வியாக கேட்க ஆரம்பித்தார் மேனேஜர்.ஒவ்வொரு கேள்விக்கான பதில் அளித்து கொண்டு வந்தவனின் காதுகளில் மேனேஜர் கேட்ட அந்த கேள்வி பட்டது.'நீங்கள் இதற்கு முன் சிறை சென்ற அனுபவம் உண்டா?''இல்லை' என பதில் சொன்னான். மேனேஜர் எழுதினார்.'என்ன காரணம்?' என அடுத்த கேள்வி கேட்டார்.மிகுந்த சந்தோஷத்தோடு உற்சாகமாய் பதில் சொன்னான்,'காரணம் என்னன்னா... போலீசால ஒரு தடவை கூட என்னைப் பிடிக்க முடியலை'
  • 592