GomathiSiva

Info
Full Name:
GomathiSiva
Friends count:
Followers count:
Membership
Premium
GomathiSiva
Empty
typing a message...
Connecting
Connection failed
Relationships
Empty
Joined Organizations
Comments (0)
    Added a news 
    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு உரிம காலத்தை தாண்டிய திட்ட உரிமங்களை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.2023-2026 மற்றும் 2026-2030 ஆம் ஆண்டுகளுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்ட அமலாக்கத் திட்டம் குறித்து நேற்று (07) நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், டெண்டர் விடப்பட்ட ஆனால் இன்னும் சாதகமான பணிகளை மேற்கொள்ளாத விநியோகஸ்தர்களின் அனுமதியை ரத்து செய்ய மின்சார சபைக்கு மற்றும் சூரிய சக்தி அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மரபுசாரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகஸ்தர்களின் கொடுப்பனவுகளை உடனடியாக செலுத்தும் திட்டம், புதிய மின்சார கொள்முதல் விலை சூத்திரம், அடுத்த 18 மாதங்களில் மின் உற்பத்தித் திட்டம் மற்றும் தற்காலிக உரிமம் வழங்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
    • 41
    Added a news 
    புத்தளம் நெடுங்குளம் வீதியின் குடியிருப்பு பகுதியில் சுமார் 50 இற்கும் அதிகமான காகங்கள் திடீரென உயிரிழந்து விழுந்துள்ளமை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து, அப்பகுதி மக்கள் புத்தளம் பிரதேச மிருக வைத்திய உத்தியோகத்தர் மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உயிரிழந்த காகங்களை பார்வையிட்டுள்ளனர்.குறித்த காகங்கள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக உயிரிழந்த காகத்தின் மாதிரிகளை பகுப்பாய்விற்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    • 39
    Added a news 
    சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.2023 ஜூன் 10 ஆம் திகதி முதல் அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 திகதியன்று சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
    • 41
    Added article 
    விஜய் சேதுபதி குறிப்பிட்ட படங்களில் தான் நடிப்பேன் என்று இல்லாமல், தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கின்றார்.விஜய் சேதுபதியை பொருத்தமட்டிலும் பணத்திற்காகவும், வெற்றிக்காகவும் படம் பண்ணும் நடிகர்களுக்கு இடையே, நட்புக்காகவும், வளர்ந்து வரும் இயக்குனர்களை தூக்கி விடவும் நிறைய படங்களை பண்ணியிருக்கிறார். அந்த படங்களினால் அவருக்கு வெற்றி அல்லது தோல்வி கிடைத்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்தியதே இல்லை. இதனாலேயே பல இயக்குனர்களின் பேவரைட் ஹீரோவாக இருக்கிறார். விஜய் சேதுபதி இயக்குனர் விக்னேஷ் சிவனுக்காக களம் இறங்க இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே நானும் ரௌடி தான் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர்கள். அதன்பின்னர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தென்னிந்திய சினிமாவின் முக்கிய புள்ளிகளை வைத்து விக்னேஷ் காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.விக்னேஷ் சிவன் போடா போடி திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்களாக நானும் ரௌடி தான் என்னும் படத்தின் கதையை கையில் வைத்துக்கொண்டு பல நடிகர்களிடமும் வாய்ப்பு கேட்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தார். விஜய் சேதுபதியும் கதையின் மீது அந்த அளவு நம்பிக்கை இல்லை என்றாலும், விக்னேஷ் சிவனுக்காக மட்டுமே அந்த திரைப்படத்தை நடித்து அது மிகப்பெரிய ஹிட் அடித்தது. சினிமாவில் டல்லடிக்கும் விக்னேஷ் சிவனின் கேரியரை மீண்டும் தூக்கி விட விஜய் சேதுபதி தற்போது முடிவு எடுத்திருக்கிறார். அஜித்துடன் பண்ண வேண்டிய படம் டிராப் ஆனதிலிருந்து விக்னேஷ் சிவனின் சினிமா கேரியர் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனுக்காக படம் பண்ண இருக்கிறார். படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவர்கள் மூன்றாவது முறையாக இணையும் கூட்டணியாக இந்த படம் அமைந்திருக்கிறது.விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வழக்கமான விக்னேஷ் சிவன் படம் போல் இதுவும் ரொமான்டிக் காமெடியாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி உடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மூன்றாவது முறையாக ஜோடி சேர இருக்கிறார்.
    • 41
    Added article 
    சினிமா உலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமான ஒருவர் என்றால் அது கண்டிப்பாக பாலுமகேந்திராவாதான் இருக்க முடியும். அதிலும் ஒளிப்பதிவாளராக இவர் காட்டும் இயற்கைக்கு இணையான விஷயங்களுக்கு அனைவரும் அடிமையாக இருப்போம். பாலுமகேந்திராவின் மிகச் சிறப்பே ஒவ்வொன்றையும் மிகவும் துல்லியமாக அற்புதமாக எடுப்பது தான். டைரக்டர் மற்றும் ரைட்டர் என பன்முகத் திறமையை பெற்றவர். இவரைப் பற்றி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட பாலுமகேந்திராவின் இறப்பு சினிமாவிற்கு மட்டுமல்ல நம்முடைய கண்களுக்கு மருந்தாக கொடுத்துக் கொண்டிருந்த இயற்கையையும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். இவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் என்றால் மாநிறமாக உள்ள மற்றும் டஸ்கி ஸ்கின் கொண்ட கதாநாயகிகள் தான். அப்படிப்பட்ட இவர் மௌனிகாவின் அழகில் சொக்கி போய் மூன்றாவதாக இவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் 30 வயது வித்தியாசம். ஆனாலும் பாலு மகேந்திராவின் மீது ஏற்பட்ட காதலால் வயது பெரிய வித்தியாசம் இல்லை என்று மௌனிகா விருப்பப்பட்டு இவரை மனதார திருமணம் செய்துவிட்டார்.பாலுமகேந்திரா இறக்கும் தருவாயில் இவருடைய மனைவியான மௌனிகாவை கூப்பிட்டு இரு சத்தியத்தை வாங்கி இருக்கிறார். முதல் சத்தியம் என்னவென்றால் நான் இறந்த பிறகு நீ தொடர்ந்து நல்ல இயக்குனர் படங்களில் நடிக்க வேண்டும். என்னை நினைத்து அப்படியே சோர்வாக உட்கார்ந்து விடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். இரண்டாவது சத்தியம் நான் இருந்த பிறகு உனக்கு பிடித்த நபரை, உன்னை கண்கலங்காமல் வைத்திருப்பார் என்ற நம்பிக்கை வந்த பிறகு அவரை நீ திருமணம் செய்து அவருடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த இரண்டு சத்தியங்களை பற்றி தற்போது மௌனிகா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.மௌனிகா கணவர் வாங்கின இரண்டாவது சத்தியத்தை என்னால் செய்யவே முடியாது. நான் ஒவ்வொரு நாளும் அவரை மனதில் வைத்துக் கொண்டே என்னுடைய மிச்சமுள்ள வாழ்க்கையை நடத்தி முடித்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். கணவர் கேட்ட முதல் சத்தியத்தின்படி இவர் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
    • 44
    My Posts
    GomathiSiva Polls
    கொரோனா தொற்று மக்களுக்கு எதை கற்றுக் கொடுத்துள்ளது?

    கொரோனா தொற்று மக்களுக்கு எதை கற்றுக் கொடுத்துள்ளது?

    GomathiSiva Recipes
    GomathiSiva Poetry
    GomathiSiva Jokes
    நீதிமன்றத்தில் நடந்த நகைச்சுவை
    ஒரு சின்ன ஊரில் நீதிமன்றத்தில் வழக்கு நடக்குது.அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு,விசாரிச்சுக்கிட்டிருக்காங்க.வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க .பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற ?அதிர்ந்து போனார் வக்கீல் ...மெல்ல சமாளிச்சிகிட்டு..."சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.பாட்டி : தெரியுமாவா - இந்த மொள்ள
    ஜட்ஜ் அய்யா..... என்னை காப்பாத்துங்க....
    ஜட்ஜ் அய்யா... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...ஏம்ப்பா... என்ன நடந்துச்சிஅத ஏன் கேக்குறீங்க அய்யா,.. கடந்த நாலஞ்சு மாசா மாசம் ஒரு புக்க வாங்கிட்டு வந்து என்னய பாடா படுத்துறாபுக்கா... கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்கசொல்றேனுங்க அய்யா...  மொத மாசம் '30 நாட்களில் கராத்தே கற்றுக் கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்தா வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்ப ரணகள மாக்கி கராத்தே கத்துகிட்டா நானும் நம்ம பொண்டாட்டி தானேன்னு தாங்கிக்கிட்டேன்இன்ட்ரஸ்ட்டிங். அப்புறம் அடுத்த மாசம் '30 நாட்களில் வர்மக்கலை கற்றுக்கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்புல கதகளி ஆடிட்டா... நானும் வலிக்காதது மாதிரியே தாங்கிட்டேன்ப்ச்... மூனாவது மாசம் என்ன புக்
    சிரிப்பதற்கு மட்டுமே.....
    ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் என்பது கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும். அந்நாட்களில் அவர்கள் புலால் உண்ணாமல் விரதம் இருப்பர்.ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார். அவருக்கு சிக்கன் இல்லாம சாப்பிட முடியாது....ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியா ல இருக்கும் எல்லா கிறிஸ்த்துவர்களும் fasting ல இருந்தாங்க.. ஆனா இவர் வீட்ல இருந்து கம கம ன்னு சிக்கன் குர்மா வாசனை வந்தது..அக்கம்பக்கத்து வீட்டிலிருப்போர் க்கு வாய் ஊற ஆரம்பித்தது..விரதம் என்பதால் சாப்பிடவும் முடில... சிக்கன் சாப்பிடும் ஆசையும் தூண்டியது..அதனால் அக்கம்பக்கத்து வீட்டாள்கள் எல்லாரும் ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டை இட்டனர்.நாங்க விரதத்தில் இருக்கோம்..நீ இப்படி non veg சமச்சா ...எங்களுக்கு ஆசை வராதா? ன்னு கேட்டனர்..
    தீபாவளி பர்சேஸ்.. புடவை கடையில்....
    மனைவி :  " இந்த கேட்லாக் பாத்தீங்களா.. இதுல எதாவது நல்லா இருக்கா..? "கணவர் : " ஒண்ணும்., மூனும் ஓ.கே.. "மனைவி :  " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க..மனைவி :  " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க... இது நல்லா இல்ல...? "கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "கணவர் : " சுமார் தான்....! "கொஞ்ச நேரம் கழிச்சி..மனைவி :  " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..... மூக்கு சப்பையா இருக்கு..! "மனைவி :  " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? " Wife முகத்துல ஒரு தீப்பொறிதெரிஞ்சது..மனைவி :  " அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "கணவர் : "
    ரவா உப்புமா
    சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது.சிவன் : என்ன குற்றம் கண்டீர்?நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்?சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே!நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்?சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்புமாவிற்குத்தான் ஈடு இணை உண்டோ? என்பதே
    மாப்பிள்ளை இப்படித்தா வேணும்.....
    பொண்ணு வீட்டுக்காரங்க பண்ணுன டார்ச்சரால் கடுப்பான யாரோ எழுதியது போல் இருக்கிறது... ஆனால் க்ளைமாக்ஸ் செம டிவிஸ்ட்டு.●X: சார்... நான் T. Nagar லேந்து பேசறேன் உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.○Y : நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க.●X : சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா...○Y : நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!...●X:  சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! அப்புறம் நான் சொல்லறேன்.○Y : நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம்.●X : 6,5,4,3,2,1, அப்படின்ன என்ன? Y : 6,5,4,3,2,1ங்கறது என்னதுன
    My Articles
    GomathiSiva News