Srikanth

  •  ·  Premium
  • 1 friends
  • 2 followers
  • 1170 views
Profile QR
This is your profile QR Code.
Info
Name:
Srikanth
Friends count:
Followers count:
Membership
Premium
Friends
Relationships
Empty
Added a news  
வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் யாழ் மாவட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரங்களை தெரிவித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை தேர்தலுக்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்களுமாக கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர். இதில் 136 கட்சிகளும் 23 சுயேட்சைக் குழுக்களும் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தன.136 கட்சிகளுடைய நியமனப்பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனப்பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, 22 கட்சிகளுடைய நியமனப்பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனப்பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        யாழ் மாநகரசபைக்கான வேட்புமனுவில் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஆகிய கட்சிகளுடைய வேட்புமனுக்களும், ஞானப்பிரகாசம் சுலக்சன், நரேந்திரன் கவுசல்யா ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        வல்வெட்டித்துறை நகரசபைக்கான வேட்புமனுவில் ராமச்சந்திரன் சுரேன், யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோர் தலைமையிலான சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        பருத்தித்த்துறை நகரசபைக்கான வேட்புமனுவில் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.·        சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், மகாலிங்கம் சதீஸ், பெரியான் சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.·        ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.·        நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்புமனுவில்இ ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.·        வேலனைப் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.·        வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், துரைராஜா சுஜிந்தன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.·        வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சவரிமுத்து ஸ்டாலின் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.·        வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஸ்ரீ இலங்கை கொம்முனிஸ்ட் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.·        வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும்இ தவம் தவனிலாவின் தாசன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        பருத்தித்துறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும் அல்பிரட் ரெஜி ராஜேஸ்வரன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.·        சாவகச்சேரி பிரதேச சபைக்கான வேட்புமனுவில்இ வைத்தியலிங்கம் ஜெகதாஸ் என்பவர் தலைமையிலான சுயேட்சைக் குழுவும் குணரட்ணம் குகானந்தன் என்பவர் தலைமையிலான சுயேட்சைக் குழுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.நல்லூர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும் திலீப் தீபாரஞ்சன் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்
  • 89
Added a news  
  எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 425 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் 57 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளைப் பல மாவட்டங்களில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன வலியுறுத்தியுள்ளார்.
  • 88
Added a news  
2024 ஆம் ஆண்டில் மாத்திரம் புலம்பெயர்ந்த 9,000 பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உயிரிழந்தவர்களில் 10 இல் ஒருவர் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறையினால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசிய கண்டத்திலேயே இவ்வாறான உயிரிழப்பு சம்பவங்கள் அதிகளவில் பதிவாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரான், மியன்மார், பங்களாதேஷ் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான வன்முறை மரணங்கள் சம்பவித்துள்ளன. எனவே, இவ்வாறான உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச அளவிலான செயற்திட்டம் ஒன்று அவசியமாக உள்ளதென சர்வதேச புலம்பெயர்வோருக்கான அமைப்பின் பிரதி பணிப்பாளர் நாயகம் உகோச்சி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார்000
  • 90
Added a news  
யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து நடத்துனர் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இலண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றையதினம் நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளார்.இதன்போது பேருந்து நடத்துனர் குறித்த பெண்ணுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த சந்தேகநபரை கைது செய்தனர்.இந்நிலையில் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை நீதிமன்ற குற்றப்பணமாக 1500 ரூபா அறவிடப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்பதுடன் ஒத்திவைக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது000
  • 95
Added a news  
யாழில் கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த யோ.நாகராணி (வயது 20) என்ற, 4 மாத குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த 20 ஆம் திகதி குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் அவரை தாக்கியுள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த குறித்த பெண் நேற்றிரவு தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
  • 96
Added a news  
யாழில் மைத்துனர் தாக்கியதால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது அளவெட்டி - விசவெட்டி பகுதியைச் சேர்ந்த அருட்பிரகாசம் மணிவண்ணன் (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் மதுப் பாவனைக்கு அடிமையானவர். இந்நிலையில் கடந்த 18 ஆம் திகதி மைத்துனருக்கும் குறித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக மைத்துனரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.பின்னர் சிகிச்சையின் பின் நேற்றையதினம் வீடு திரும்பி, வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டார். இந்நிலையில் நேற்றுக்காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.000
  • 96
Added a news  
யாழில் மகன் வீட்டுக்கு வரவில்லை என்ற மன விரக்தியில் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தங்கராசா கோதைநாயகி (வயது 82) என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கணவன் இறந்த பின்னர் குறித்த மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். மகன் ஒருவர் தினமும் பின்னேரம் தாயின் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு காலையில் தனது வீடு செல்வது வழமை. இந்நிலையில் நேற்றுமன்தினம் (20) அந்த மகனுக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் மகன் வீட்டுக்கு வரவில்லை.இதனால் மனவிரக்தியடைந்த குறித்த பெண் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ மூட்டியுள்ளார். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.000
  • 96
Added a news  
வவுனியா மத்திய பேருந்து நிலைய இருக்கைகளில் இருப்போருக்கு உடலில் காயங்கள் ஏற்படுவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த இருக்கையில் அமரும் போது உடலில் காயங்கள் ஏற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.0000
  • 727
Added a news  
யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுக ளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் நேற்று பலவந்தமாகத் திணித்துள்ளனர்.வன்முறைக் குழுக்களில் உள்ளவர்களைப் போன்ற தோற்றத்தில் இருந்த அவர்கள், மாணவிகளுக்கு நெருக்கமாகவும், அவர்களின் கைகளைப் பிடித்து இழுப்பது போன்றும் நடந்துகொண்டமை அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத் துள்ளது.இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பிரதேச செயலகங்களுக்கு பெற்றோராலும், சமூக நலன்விரும்பிகளாலும் முறைப்பாடுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பிரதேச செயலகங்களின் உரிய அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், மாணவ மாணவிகள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.000
  • 714
Added a news  
ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கு கடந்தவருடம் (2024) வழங்கப்பட்ட 297000 ரூபா பெறுமதியான 15 இரட்டைவலைகள் பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஒருவரது நிதியில் இருந்து 297000/- ரூபா ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக 15 இரட்டை வலைகள் ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.கடந்த வருடம் (2024) ஒப்படைக்கப்பட்ட வலைகளை ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் இரகசியமாக பெற்று பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்தது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.வலைகளை பெற்றுக் கொண்ட பயனாளிகளின் விபரத்தை கோரி பிரதேச செயலகம் அனுப்பிய கடிதத்தின் பின்னரே குறித்த மோசடி வெளிப்பட்டுள்ளது இது குறித்து ஆழியவளை கிராம சேவகரை வினவிய வேளை, கடந்த வருடம் (2024) ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்தினரிடம் 297000/- பெறுமதியான வலைகள் ஒப்படைக்கப்பட்டை உண்மை. அத்துடன் வலை பெற்றமையானது மீனவர்கள் யாருக்கும் தெரியாது என்ற முறைப்பாடு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்றார்.பாரிய மோசடியில் ஈடுபட்ட ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆழியவளை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.000
  • 708
Added a news  
“வெற்றிலைக் கேணியில் கரைவலை வாடியால் மீனவர்களிடையே தொடரும் முறுகல் நிலை” எனும் தலைப்பில் 18.03.2025 திகதி வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் பிரவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையில் அடிப்படையில் கவனம் செலுத்தியுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.அதன் பிரகாரம் இந்த பிரச்சினையினை தீர்ப்பதற்கு உரிய தலையீட்டினை மேற்கொண்டு 21.03.2025 இற்குமுன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவி பணிப்பாளருக்கும் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் அறிவுறுத்தல் வழங்கி எம்மால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.00
  • 704
Added a news  
9 மாதங்களுக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமி திரும்பியுள்ளனர்.17 மணி நேர பயணத்துக்கு பிறகு புளோரிடாவில் உள்ள கடற்கரையில் அவர்களது விண்கலம் தரையிறங்கியது.தரையிறங்கிய டிராகன் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் குழு  மீட்டுள்ளனர்.அதன்பின் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதித்த நிகழ்வை நாசா நேரலையாக ஒளிபரப்பியுள்ளது.இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில் ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர்.இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர அமெரிக்கா அரசு முயற்சி செய்தது.இதையடுத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 என்ற ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.இந்த மீட்பு விண்கலத்தில் ரஷ்ய நாட்டை சேர்ந்த கிரில்பெஸ்கோவ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் இருந்தனர். அந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது.க்ரு டிராகன் விண்கலம், அமெரிக்க நேரப்படி நேற்று இரவு 10.45 மணிக்கு விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்க்கும் நிகழ்வாக மாறியது. நாசா தனது அனைத்து மிஷன்களை போல இதையும் நேரடியாக ஒளிபரப்பியுள்ளது000
  • 741
Added a news  
இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 சதவீதமான பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.இந்த விடயம் 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் 40 அரச பாடசாலைகளில் தரம் 08 முதல் 12 வரையிலான 3,843 மாணவர்களை இணைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இந்த சுகாதார ஆய்வறிக்கையானது, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சர்வதேச பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வௌியிடப்பட்டுள்ளது.இதற்கமைய 71 வீதமானோர் பாடசாலைக்கு செல்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 29.3 வீதமானோர் அதிக எண்ணெய் கலந்த உணவை பெற்றுக் கொள்வதுடன் 40.9 வீத மாணவர்கள் நாளாந்தம் அதிக சீனி கலந்த உணவுகளை உட்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது000
  • 654
Added a news  
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடலில் சற்றுமுன்வரை 50 மேற்பட்ட படகுகள் ஒளிபாய்ச்சி சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 5.30 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு அருகில் இருந்து சென்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட படகுகள் ஒளிவைத்து பல்லாயிரக்கணக்கான மீன்களை பிடித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் குறித்த விடயத்தை கடற்படையினரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.இருப்பினும் கடற்படையினர் அது குறித்து அவர்கள் நடவடிக்கை எடுக்காது, போதைப் பொருளை மட்டும் கைப்பற்றும் நோக்கில் செயற்படுவதாகவும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை இதுவரை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.கடற்படை முகாமிற்கு அருகாமையில் இருந்து சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் கைது செய்யப்படாமை குறித்து அப்பகுதி மீனவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.சமாச தலைவர் தங்கரூபன் - 0770762049வெற்றிலைக்கேணி கடற்படை அதிகாரி றணசிங்க - 0770261034000
  • 575
Added a news  
இன்று அதிகாலை வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று ஹையேஸ் ரக வாகனத்தில் விபத்துள்ளாகி இறந்துள்ளது.வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று இன்று அதிகாலை 12:30 மணியளவில் நீர்கொழும்பு, யாழ்ப்பாண வீதியில் சென்ற ஹையேஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அந்த குட்டி யானை இறந்துள்ளது. இருப்பினும் வாகனத்தில் சென்றவர்கள் எதுவித பாதிப்பும் இன்றி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.தற்பொழுது விவசாய அறுவடை காலமென்பதனால் யானைகள் வயல்கள் மற்றும் நீரோட்டம் உள்ள குளங்களிற்கு செல்வதற்கு பல இடங்களில் பிரதான வீதியை கடந்து கூட்டம் கூட்டமாக செல்கின்றன.ஆகையினால் இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் உன்னிப்பாகவும் மிக அவதானத்தோடும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.000
  • 667