Srikanth
இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தால், ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தமது நாடு தயார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அந்த நாட்டு நேரப்படி இன்று காலை 8.30 இற்கு ஆரம்பமானது. இந்த நிலையிலேயே, ஊடகங்களுக்கு கருத்துரைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த விடயத்தைத் தெரிவித்ததாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. போர் நிறுத்தம் தற்காலிகமானது எனவும், காசா மீதான தாக்குதல்களை மீண்டும் தொடருவதற்கான உரிமையை இஸ்ரேல் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸால் விடுவிக்கப்பட வேண்டிய பணயக் கைதிகளின் பெயர் பட்டியலைப் பெறும் வரை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஒப்பந்த மீறல்களை இஸ்ரேல் பொறுத்துக் கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸால் விடுவிக்கப்படவுள்ள 33 பணயக் கைதிகளின் பெயர் பட்டியல் ஏற்கனவே இஸ்ரேலிய ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள போதிலும் குறித்த பட்டியல் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேநேரம் இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ள மூன்று பணயக் கைதிகளின் பெயர்கள் இதுவரை தங்களுக்குக் கிடைக்கவில்லை என இஸ்ரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.000
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதான நுழைவு வாயிலுடன் கூடிய சுவரில் மாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் புகைப்படங்கள் அகற்றப்பட்டு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படம் மாத்திரம் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.முகநூலில் இட்ட பதிவொன்றின் மூலமே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன..குறித்த சுவரில் சுதந்திர இலங்கையின் அனைத்து அரச தலைவர்களின் புகைப்படங்களும் அண்மைக்காலம் வரை கௌரவமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போது, அனைத்து புகைப்படங்களும் நீக்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படம் மட்டுமே இருப்பதாக அவர் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.அத்துடன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அலுவலகம் ஒரு கட்சி அலுவலகம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்மேலும், இலங்கையின் முன்னாள் அரசத்தலைவர்களான டி.எஸ்., டட்லி, சேர் ஜோன், பண்டாரநாயக்க, தஹநாயக்க, சிறிமாவோ, ஜே.ஆர், பிரேமதாச, விஜேதுங்க, சந்திரிகா, மகிந்த, மைத்திரிபால, கோட்டாபய, ரணில் போன்றோரின் வரிசையில் இருப்பதற்கு அநுரவும் தகுதியானவர் என கூறிய தென்னகோன், அநுரவை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். 00
கடந்த ஜனவரி 16 ஆம் திகதி மன்னாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.இந்நிலையில், சந்தேக நபர்களை அடையாளம் காண புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில் குறித்த சந்தேகநபர்களின் வரைபடங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.மேலும், அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடன் அறிவிக்குமாறு கோரியுள்ளனர்.தகவல்களை அறிய தர, மன்னார் பொலிஸ் தலைமையக அதிகாரியின் 0718591363 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது மன்னார் பொலிஸ் நிலையத்தின் 0232223224 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.000
காசாவில் இன்று காலை 8.30 மணி முதல் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கத்தாரின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை அறிவித்துள்ளார்.ஆனாலும் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படியும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களிற்காக காத்திருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.ஒரு மாத காலமாக கட்டாரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் யுத்த நிறுத்தம் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்த உடன்படிக்கை குறித்த விபரங்கள் வெளியாகாத போதிலும் ஆறுவார கால ஆரம்பகட்ட யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும் இணங்கியுள்ளதாகவும் இதன் போது இஸ்ரேலிய படையினர் படிப்படியாக காசாவிலிருந்து விலக்கிக்கொள்ளப் படுவார்கள் என இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மேலும் இக்காலப்பகுதியில் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்படுவதுடன் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளன.இக் காலப் பகுதியில் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹமாசிடம் பணயக்கைதிகளாக உள்ள 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களும் மற்றும் சிறுவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றதுயுத்தநிறுத்தத்தின் 16 ஆவது நாள் இரண்டாவது கட்டத்தினை நடை முறைப்படுத்துவது குறித்த பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகும் இதன்போது அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்வது நிரந்தர யுத்த நிறுத்தம் இஸ்ரேலிய படையினரை காசாவிலிருந்து முற்றாக விலக்கிக்கொள்வது குறித்து ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது000
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதி மன்ற நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதிகள் மொஹிசா மற்றும் அலி ரசானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தாக்குதலில் பாதுகாவலர் ஒருவரும் படுகாயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பின்னர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில், அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உள்ளது. அங்குள்ள நீதிபதிகளின் ஓய்வு அறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கு அமர்ந்திருந்த நீதிபதிகள் இருவர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதிகள் தேசிய பாதுகாப்பு, உளவு பார்த்தல், பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை கையாண்டு வந்ததாகவும், சமூக ஆர்வலர்கள், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியவர்கள் என்றும் கூறப்படுகிறது.உச்சநீதிமன்றத்திற்குள்ளேயே துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.000
2025 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் பயணிக்கும் முதல் 10 இடங்களுக்குள் இலங்கையும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.BBC Travel இன் உலகின் தலைசிறந்த பயண இடங்களுக்கான அறிமுக வழிகாட்டியில் இலங்கை 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.சுற்றுலா வழிகாட்டியில் இலங்கையில் உள்ள மூடுபனி, மலை உச்சியில் உள்ள தேயிலை தோட்டங்கள், சுற்றித் திரியும் காட்டு யானைகள், பழங்கால கோவில்கள் மற்றும் அலைச்சறுக்கு ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நாடாக விவரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டிக்டொக் செயலி இன்று (19) முதல் தடை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‘டிக் டொக்’ எனப்படும் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. சீனாவைச் சேர்ந்த ‘பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்தச் செயலியை நிர்வகித்து வருகிறது.கடந்த ஆண்டு நவம்பர் முதல் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அரசாங்கம் டிக்டொக் பாவனைக்குத் தடை விதித்தது.அதைத்தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் டிக்டொக் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டதுஇந்தத் தடை இந்த வார இறுதியில் அமுலுக்கு வருகிறது. டிக்டொக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் மட்டுமே தடை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்போவதில்லை என்று பைட்டான்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.அமெரிக்காவில் சுமார் 17 கோடி பேர் டிக்டொக் செயலியில் கணக்கு வைத்துள்ளனர் என பைட்டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.பைட்டான்ஸ் நிறுவனத்தின் வாதத்தை நிராகரித்து, மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டிக்டொக் செயலி இன்று(19)முதல் தடை செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள்காட்டி ஜோ பைடன் சட்டம் இயற்றியுள்ளார்.டிக்டொக் செயலியைத் தடை செய்வது அல்லது அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் சட்டம் இயற்றவேண்டும்.அமெரிக்க நிறுவனத்திடம் டிக்டொக் செயலியை விற்பனை செய்யாவிட்டால் பிளே ஸ்டோரில் (Play store) இருந்து செயலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள முதல் நாளிலேயே புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்தி அவர்களை நாடு கடத்துவதற்கான சோதனைகளை டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சோதனை நடவடிக்கைகளை, புலம்பெயர்ந்தோர் அதிகமாக வசிக்கும் சிகாகோ(Chicago) மாநிலத்தில் தொடங்க உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுவேன் என ட்ரம்ப் தேர்தல் பிரசாரங்களின் போது வாக்குறுதி வழங்கியிருந்தார்.இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த குடிவரவு அதிகாரி மற்றும் அரசியல் விமர்சகரான டொம் ஹோமன், சட்டவிரோத குடியேற்றவாசிகளை அடையாளம் காணும் சோதனை நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.முதற்கட்டமாக, சிகாகோ மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத குடியேற்றவாசிகளும் வெளியேற்றப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்000
கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தருதல் மற்றும் கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது.அத்துடன் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் மின்சாரம், எரிபொருட்கள் என அனைத்தும் நிறுத்தப்படுமெனவும் கனடா தெரிவித்துள்ளது.மேலும் , அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், அண்மையில் கனடா, பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.குறிப்பாகக் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்றும் கனடாவிற்கு கூடுதல் வரி விதிக்கப்படுமெனவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப், கனடாவின் பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்க முடிவு செய்தால், அமெரிக்காவால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படுமென கனடா எச்சரித்துள்ளது.அத்துடன் கனடாவின் பதிலடி பயங்கரமாக இருக்கும் என்றும் இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கையை கனடா ஏற்கனவே முன்னெடுத்துள்ளது எனவும், அமெரிக்காவின் நடவடிக்கையைப் பொறுத்து அமெரிக்காவிற்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படுமெனவும் அறிவித்துள்ளது.குறிப்பாக விஸ்கி மற்றும் வொஷிங் மெஷின்கள் போன்ற அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்களுக்கு வரி விதிக்க கனடா திட்டமிட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகிறது. 2024 இல் கனடா ஒரு நாளைக்கு சுமார் 2.76 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60% ஆகும். அந்த அளவிற்கு அமெரிக்கா கனடாவை நம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது000
மழையுடனான காலநிலை தொடர்ந்தும் காணம்படும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று பலத்த காற்று வீசியதன் காரணமாக குருநகர் பகுதியில் பல வீடுகளும் வணக்கஸ்தலமொன்றும் பலத்த சேதமடைந்துள்ளன.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் அப்பகுதியில் உள்ள கொலை விலக்கி மாதா ஆலயம் மற்றும் பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேமடைந்தன.குறித்த அனர்த்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன. அத்தோடு சில படகுகளும் பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதுடன் பதிப்புகள் குறித்து அனர்த்தமுகாமைத்துவ பிரிவினர் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (18) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் ஏனைய சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.000
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (18) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் ஏனைய சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.000
ஹமாஸூடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அங்கீரிப்பதற்கு பரிந்துரைத்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் கூடுகிறது. குறித்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் நாளையதினம் முதலாவது பணயக் கைதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய நாளை முதல் போர் நிறுத்தம் அமுல்ப்படுத்தப்படும். மூன்று கட்டங்களாக அமுல்ப்படுத்தப்படவுள்ள இந்த போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக பல பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததன் பின்னர், 33 பணயக் கைதிகளை ஹமாஸ் தரப்பினர் விடுவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. குறித்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 116 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பினரால் நடத்தப்படும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது000
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் கீரன் பொல்லார்ட் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், தனது 900 ஆறு ஓட்டங்களை கடந்துள்ளார். இதன் மூலம், இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் 900 ஆறு ஓட்டங்களைக் கடந்த உலகின் 2ஆவது வீரர் எனும் சாதனையை பொல்லார்ட் படைத்துள்ளார். துபாயில் நடைபெற்ற ஐஎல்டி இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். கிறிஸ் கெய்ல் 1,056 ஆறு ஓட்டங்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார். இதேவேளை இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 900 ஆறு ஓட்டங்களை கடந்த முதல் 4 இடங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களே உள்ளமை குறிப்பிடத்தக்கது00
"2025" உலகத் தமிழர் மாநாடு வியட்நாமில் நடைபெறவுள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து "வியட்நாம் உலகத் தமிழர் மாநாடு 2025" ஐ எதிர்வரும் பெப்ரவரி 21,22 ஆகிய திகதிகளில் வியட்நாம் டனாங் நகரத்தில் நடாத்தவுள்ளதாக பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் க. திருதணிகாசலம் தெரிவித்துள்ளார்.இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (17.01.2025) யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் -உலக தமிழர் சமூகத்தின் பெருமை மற்றும் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துரைக்கும் நிகழ்வு இதுவாக இது அமையவுள்ளது.அத்துன் உலக தமிழர் மாநாடு மற்றும் உலக தமிழர் வர்த்தக மாநாடானது 2025 பிப்ரவரி 21 மற்றும் 22 தேதிகளில், வியட்நாம், டா நாங் நகரத்தில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, மலேசியா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல அறிஞர் கல்விப்புலம் சார்ந்தவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பெருமக்களும் வருகை தரவுள்ளனர். அதுமட்டுமல்லாது வர்த்தக துறையை ஊக்குவிக்கும் பல அம்சங்களையும் இந்த மாநாடு உருவாக்க களம் கொடுகப்கும் எனவும் நம்புகின்றோம் இதனால் தமிழர் பெருமை முழு உலகமும் வியாபிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.000