Srikanth

  •  ·  Standard
  • 1 friends
  • 2 followers
  • 1391 views
Profile QR
This is your profile QR Code.
Info
Name:
Srikanth
Friends count:
Followers count:
Membership
Standard
Achievements

Basic

Total points: 393

4609 point(s) to reach
Friends
Relationships
Empty
·
Added a news
·
இலங்கை மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக வாழ்வதற்கு அனுர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரத தேசத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் காந்திய சமதர்ம இயக்கத்தின் (இந்தியா) அரசியல் ஆலோசகர் சட்டத்தரணி சிவஞானசம்பந்தம் வலியுறுத்தியுள்ளார்.இலங்கையில் பல்வேறு இடர்பாடுகளுடன் வாழும் மலையக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை காணுவது தொடர்பில் அக்கறை கொண்டு தாம் இங்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அப்பிரச்சினைகளை இனங்கண்டு வெளிக்கொணரும் வகையிலேயே யாழ் ஊடக அமையத்தில் குறித்த சந்திப்பை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில் - மலையக மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக இருக்கின்றபோதும், அவர்களின் வழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் அரசுகள் எதனையும் செய்வதில்லை.இதனால் நாளந்த வருமானத்தை பெறுவதில் கூட பெரும் அசௌகரியங்களை சந்திக்க நேரிடுகின்றது. இந்த நிலையை அரசு மாற்றி அமைக்க வேண்டும். இந்த கோரிக்கையை இந்திய தரப்பினருக்கும் முன்வைக்க இருக்கின்றேன்.மலையக மக்களுக்கு அரசினால் இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கபடுகின்றன. ஆனால் அவ்வீடுகளுக்கான காணி உரிமங்கள் அவர்களுக்கு சொந்தமானாதாக இல்லை.இருப்பிடங்களுக்கான தனியான முகவரிகள் கூட பலருக்கு இல்லை.அதுமட்டுமல்லாது வறுமையின் கரணமாக கல்வியைக் கூட இடை நடுவில் கைவிடும் நிலையில் வாழ்கின்றனர்.இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பட வேண்டியது அவசியம். இந்தப் பிரச்சினைக்கு அனுர தலைமையிலான இன்றையாரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம்.இதேனேரம் இந்திய கடற்றொழிலாளர் இலங்கை கடற்ரப்பில் நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடையம். இலங்கை தொழிலாளர்கள் நிம்மதியாக வாழ நிரந்தர ஏற்பாடுகள் அவசியம். இது தொடர்பில் தமிழக அரசுடனும் கோரிக்கைவிட இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
  • 518
·
Added a news
·
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர், வகுப்பு ஒன்றிற்கு சென்று சத்தம் எழுப்பிய மாணவர்கள் யார் என கேள்வி கேட்டபோது மாணவர்கள் பதில் வழங்காத நிலையில் மாணவர்கள் மீதுகதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்கியது உண்மை எனவும் ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.சம்பவம் தொடர்பில் பாடசாலை என்ற வகையில் நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தாம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 612
·
Added a news
·
யாழ். அரியாலை - செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று (15) முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. செம்மணி ௲ சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காகக் குழிகள் வெட்டப்பட்ட போது, அதற்குள் இருந்து மனித எலும்பு எச்சங்கள் அவதானிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதன்போது, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கேன் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக நேற்று (15) அங்கு அகழ்வாய்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டன.  தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன000
  • 616
·
Added a news
·
இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்குச் சென்ற நிலையில் , இந்தியக் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு , மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த நால்வரும் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகத் திரும்பியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல்துறையினர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் புகுந்த நால்வரையும் , அவர்களை அழைத்து வந்த படகோட்டிகளையும் கைது செய்து, வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.000
  • 612
·
Added a news
·
இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த விடுமுறை நாட்களில் சிறுவர்கள் அதிகமாக பயணம் செய்தமை மற்றும் அதிக கொண்டாட்டங்களில் ஈடுபட்டமையே இதற்கு காரணமாகும்.இந்த வைரஸ் நோய்களில், இன்ப்ளூயன்ஸாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மழையுடனான காலநிலை மற்றும் நுளம்புகளின் அதிகரிப்பு காரணமாக பல தொற்று நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சிக்குன்குனியாவின் அறிகுறிகளில் காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, உடல் வலிகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், மூக்கில் ஏற்படும் கறுப்பு நிற அடையாளம், கைகள் மற்றும் கால்களில் கருப்பு புள்ளிகள் ஆகியவை அடங்கும்.மேலும், டெங்கு காய்ச்சலும் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.எனவே, அத்தகைய சிறுவர்களை, மாணவர்கள் கூடும் பிற இடங்களுக்கும் அனுப்புவதற்கு முன்பு, அவர்களை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 594
·
Added a news
·
அச்சுவேலி விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எடுத்துரைக்கும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அச்சுவேலி, பத்தைமேனி விவசாயிகள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைகும் கலந்துரையாடலை இன்று  பத்தைமேனி பொது நோக்கு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தனர். இதன் போது விவசாயிகள் கடந்த காலத்தில் தமக்கு உரமானியம், விவ்வசாய உள்ளீடுகளுக்கான மானியம் போன்றவை வழங்கப்பட்டது. ஆனால் இன்று எது வகையான மானியங்களும் வழங்கப்படுவதில்லை. அத்துடன் வழங்கப்படும் விவசாய உள்ளீடுகள் கிருமிநாசினிகள் தரமற்றவை. இதனால் தமது உற்பத்திகளில் பாரிய மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுவதாக எடுத்துரைத்தனர். குறிப்பாக வெங்காய உற்பத்தி, உருளைக்கிழங்கு உற்பத்திகளின்போது விளைச்சலைப் பெறுகின்ற காலத்தில் அரசாங்கம் தடைகளின்றி வெளிநாடுகளில் இருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை இறக்குமதி செய்கிறது. இதனால் எமது உற்பத்திக்கு கேள்விகளற்றுப் போய் விடுகிறது. எனவே இவ் விடயங்களை பாராளுமன்றில் எடுத்துரைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பதிலளித்த சிவஞானம் சிறிதரன்,விவசாயிகளின் உற்பத்திகள் பாதிப்படைவது போல் கடல்வளங்களும் வெளிநாட்டு இந்திய மீனவர்களினால் அழிக்கப்படுகிறது. இங்கு உங்களது உற்பத்திகளுக்கு கேள்விகளற்றுப் போகிறது. வெளிநாட்டு உற்பத்திகள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் உற்பத்திகள் தேங்கி அழிவடைந்து செல்கிறது. குறித்த விடயங்கள் பற்றி நிச்சயமாக பாராளுமன்றில் எடுத்துரைப்பேன் என்றார். 000
  • 597
·
Added a news
·
ஒரு உப்புப் பாக்கெட் 60 ரூபாயாக விலை நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், எனினும், 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகிறார்.மற்ற அரசாங்கங்கள் எவ்வளவுதான் இலஞ்சம் கொடுக்க முயன்றாலும், ஒரு பாக்கெட் உப்பு அல்லது ஒரு கிலோ அரிசிக்கு ஒருபோதும் லஞ்சம் கொடுத்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு திறமையின்மைக்கும் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.மோசடி மற்றும் ஊழல் இல்லாதது என்று கூறும் அரசாங்கம், உண்மையில் அவ்வாறு செய்வதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தினால், ஒரு பாக்கெட் உப்பு, ஒரு கிலோ அரிசி மற்றும் ஒரு தேங்காய் எப்படி இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில், பொது மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல, முழு தொழில்துறை அமைப்பும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் லாபம் ஈட்டிய மின்சார சபை, 7 மாதங்களில் எப்படி நஷ்டத்தைச் சந்தித்திருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். எதிர்காலத்தின் மின் கட்டணம் இன்னும் அதிகரிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.000
  • 626
·
Added a news
·
திடீர் சுகயீனம் காரணமாக கேகாலை, ஹெம்மாத்தகம அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனுக்கு, அதிபரின் கடிதம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஹெம்மாத்தகம மருத்துவமனையின் மருத்துவர் இவ்வாறு கூறியதை அடுத்து, முச்சக்கர வண்டியில் மாவனெல்ல மருத்துவமனைக்கு மாணவன் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.ஹெம்மாதகமவில் உள்ள பள்ளிப்போருவ முஸ்லிம் பாடசாலையில் 4 ஆம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பாடசாலை ஆசிரியர் ஒருவர் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.முச்சக்கர வண்டி சாரதியாக பணிபுரியும் தந்தை, விரைவாக பாடசாலைக்கு சென்று, மாணவனை ஹெம்மாதகம பிராந்திய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.மாணவன் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்ததுடன், வாந்தி எடுத்த நிலையில், உடல் மிகவும் சூடாக காணப்பட்டுள்ளது. பாடசாலை சீருடையில் இருந்த மாணவர் மருத்துவரிடம் அழைத்து சென்றபோது, ​​அவரிடம் பாடசாலை பை இல்லை என்று கூறி மருந்து மறுக்கப்பட்டது.பின்னர் அதிபரின் கடிதம் இல்லாமல் மருந்து கொடுக்க முடியாது என கூறப்பட்டது. அதற்கமைய, உதவியற்ற தந்தை, மிகுந்த அதிர்ச்சியில், மாணவனை சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாவனெல்ல அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.பின்னர் ஊடகங்களிடம் பேசிய தந்தை, தன்னிடம் பணம் இருந்தால், மாணவனை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்000
  • 600
·
Added a news
·
உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் பிரதான பதவிகளுக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் பெயர் விபரங்களை ஒருவார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவித்துள்ளது.நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ஜுன் மாதம் 02 ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் பெரும்பான்மையைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அந்த அதிகார சபைகளின் மேயர், துணை மேயர், தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை ஒருவார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் கன்னிக் கூட்டம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதிக்குக் கூடுவதற்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை கோட்டா மட்டத்தில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்க வேண்டும்.உள்ளூராட்சிமன்றங்களில் பெரும்பான்மை இல்லாதவிடத்து, எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி சபை கூடும்போது வாக்கெடுப்பு நடைபெறும்000
  • 601
·
Added a news
·
துருக்கியில் வியாழக்கிழமை (15) வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேருக்கு நேர் சந்திக்கும் சவாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்தார்.அதற்கு பதிலாக இரண்டாம் நிலை குழுவை திட்டமிட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பினார்.அதே நேரத்தில் உக்ரேன் ஜனாதிபதி தனது பாதுகாப்பு அமைச்சர் கியேவின் குழுவிற்கு தலைமை தாங்குவார் என்று கூறினார். 2022 மார்ச் மாதத்திற்கு பின்னர், இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் நேரடிப் பேச்சுவார்த்தை இதுவாகும்.ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனக்கும் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பு இல்லாமல் எந்த நடவடிக்கையும் இருக்காது என்று கூறியதால், ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கையை மேலும் குலைத்தார்.பின்னர் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ அந்தக் கருத்தை எதிரொலிக்கும் வகையில் பேசினார்.துருக்கிய ரிசார்ட்டான அன்டால்யாவில் செய்தியாளர்களிடம் அவர், இஸ்தான்புல்லில் நடைபெறும் உக்ரேன் பேச்சுவார்த்தைகளுக்கு வொஷிங்டன் “அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை” என்று கூறினார்.ரஷ்ய தூதுக்குழுவின் தலைவரான ஜனாதிபதி ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி, வெள்ளிக்கிழமை (16) இஸ்தான்புல்லில் அந் நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு (0700 GMT) விவாதங்களின் தொடக்கத்திற்கு உக்ரேனின் பிரதிநிதிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.இதனிடையே, புட்டின் கலந்து கொள்ளாமல் மொஸ்கோ “அலங்கார” அணியை அனுப்ப முடிவு செய்தது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷ்யத் தலைவர் தீவிரமாக இல்லை என்பதைக் காட்டுகிறது என்று ஜெலென்ஸ்கி கூறினார்.அதேநேரத்தில், பேச்சுவார்த்தைகளைச் சுற்றி “ஒரு நாடகத்தை” நடத்த உக்ரேன் முயற்சிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.பேச்சுவார்த்தைக்காக இஸ்தான்புல்லுக்கும் செல்லப் போவதில்லை என்றும், போர் நிறுத்தம் குறித்து விவாதிப்பதே தனது குழுவின் பணி என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.உக்ரேனின் தூதுக்குழு பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமையில் இருக்கும் என்றும், அதில் அதன் உளவுத்துறை சேவைகளின் பிரதித் தலைவர்கள், இராணுவத்தின் பொதுப் பணியாளர்களின் பிரதித் தலைவர் மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றும் ஜெலென்ஸ்கி பிறப்பித்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரேன் உடனடி, நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்தை ஆதரிக்கிறது, ஆனால் புட்டின் முதலில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க விரும்புவதாகக் கூறியுள்ளார், அங்கு அத்தகைய போர் நிறுத்தத்தின் விவரங்கள் விவாதிக்கப்படலாம்.அதன் முழு அளவிலான படையெடுப்பிற்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, ரஷ்யா போர்க்களத்தில் வலுவான நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது000
  • 603
·
Added a news
பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் வெள்ளை பந்து சுற்றுப்பயணத்தைத் தொடர பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அதன் அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை (15) செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பான உத்தியோகப்பூர்வ ஒப்புதல் கடிதத்துக்காக இன்னும் காத்திருக்கும் நிலையில், சுற்றுப்பயணத்தை அனுமதிக்க அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புக்கொண்டதாக BCB அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்த சுற்றுப்பயணத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் அடங்கும் என்றும், இந்த மாத இறுதியில் ஆட்டங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முறையான கடிதம் கிடைத்ததும், வீரர்களுடன் கலந்துரையாடல்கள் தொடங்கும் என்று BCB அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.எனினும், எந்தவொரு வீரரும், குறிப்பாக பாதுகாப்பு குறித்து கவலைகளை தெரிவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சுற்றுப் பயணத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று வாரியம் உறுதியளித்தது.ஆரம்பத்தில், இந்தத் தொடர் மே 25 அன்று பைசலாபாத்தில் தொடங்க திட்டமிடப்பட்டது எனினும், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) சீசன் 10 ஒத்திவைக்கப்பட்டதால் அட்டவணையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.இதன் விளைவாக, இந்த மாற்றங்களைச் சரிசெய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) BCB உடன் திருத்தப்பட்ட பயணத் திட்டத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.புதிய திட்டத்தின்படி, பைசலாபாத்தில் முதல் மூன்று டி20 போட்டிகள் மே 27, மே 29 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் நடைபெறும்.மீதமுள்ள இரண்டு போட்டிகள் ஜூன் 3 மற்றும் ஜூன் 5 ஆகிய திகதிகளில் லாகூரில் நடைபெறும்இரு கிரிக்கெட் வாரியங்களும் அனைத்து ஏற்பாடுகளையும் இறுதி செய்து தொடரை சுமூகமாக செயல்படுத்துவதை உறுதி செய்ய நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன.இதற்கிடையில், வங்கதேச அணி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) சுற்றுப்பயணம் செய்து வருகிறது, அங்கு அவர்கள் மே 17 மற்றும் மே 19 ஆகிய திகதிகளில் இரண்டு T20I போட்டிகளில் விளையாட உள்ளனர்.சர்வதேச அணிகளை ஈர்த்து, கிரிக்கெட்டுக்கு பாதுகாப்பான இடமாக அதன் நற்பெயரை மீண்டும் கட்டியெழுப்புவதால், இந்த சுற்றுப்பயணம் பாகிஸ்தானுக்கு ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது.எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய பரிசீலிக்கும் உலக அணிகளின் நம்பிக்கையை இந்தத் தொடர் மேலும் அதிகரிக்கும்000 
  • 572
·
Added a news
பாகிஸ்தானுக்கு சொந்தமான மிகப்பெரிய மாகாணமாகக் கருதப்படும் பலுசிஸ்தான், தனி சுதந்திர நாடாக மாறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தானின் தலைவர் என கருதப்படும் மிர் யார், வெளியிட்ட எக்ஸ் தள பதிவின் மூலம் இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. பலுசிஸ்தானை, பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்று பலுசிஸ்தானின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ”நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, பலுசிஸ்தானியர்கள்” என்றும் ”ஐக்கிய நாடுகள் சபையும் பலுசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • 596
·
Added a news
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 19,900 ஐக் கடந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 2,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகபட்சமாக 640 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.  குறித்த காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தில் 386 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் ஏழு பேர் உயிரிழந்தனர். இதனிடையே, டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் 24 ஆம் திகதிவரை விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப் படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.000
  • 597
·
Added a news
சந்தையில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கையிருப்பு நாட்டிற்குள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சில இடங்களில், ஒரு கிலோகிராம் உப்பு பாக்கெட் சுமார் 450-500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இருப்பு சந்தையை அடைந்தவுடன் இந்த நிலைமை சரியாகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு வருவதில் தாமதம் ஏற்பட்ட எதிர்காலத்தில் ஒரு பாக்கெட் உப்பு விலை மேலும் அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.இதனிடையே, தற்போதைய உப்பு தட்டுப்பாடு காரணமாக உப்பு இருப்புக்களை மறைத்து வைப்பவர்கள் கைது செய்யப்பட்டு, உப்பு இருப்புக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.உப்புக்கு செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி நடப்பதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.ஏற்கனவே உப்பு இருப்புக்களை மறைத்து வைத்திருப்பவர்களையும், அதிக விலைக்கு உப்பை விற்பனை செய்பவர்களையும் கண்டுபிடிக்க நாடு முழுவதும் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை கூறுகிறது.இதற்கிடையில், வர்த்தகர்கள் தங்கள் கடைசி உப்பு இருப்பை தற்போது விற்பனை செய்து வருவதாகவும், மேலும் உப்பு இருப்பு எப்போது கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் கூறுகின்றனர்000
  • 599
·
Added a news
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்றுக் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை, இந்த வாரத்தினுள் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற சட்டத்தின்படி, இந்த அறிவிப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால், மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சியமைக்கப்பட வேண்டும். எனினும், தேர்தலில் முன்னிலை வகிக்கும் பல உள்ளூராட்சி மன்றங்களில் கட்சிகளுக்குத் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை காணப்படுவதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் உள்ளூராட்சி நிறுவனங்களில், கொழும்பு மாநகர சபை அதிக கவனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 598