Srikanth

  •  ·  Premium
  • 1 friends
  • 2 followers
  • 1202 views
Profile QR
This is your profile QR Code.
Info
Name:
Srikanth
Friends count:
Followers count:
Membership
Premium
Friends
Relationships
Empty
Added a news  
வலிகாமம் மேற்கில் நடைபெற்ற தந்தை செல்வா விருது வழங்கல் வழங்கல் நிகழ்வில் உதவி திட்டங்கள் வழங்கிய பொழுது தேர்தல் விதிமுறைகளை மீறி நிகழ்வில் வேட்பாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்து வட்டுக்கோட்டை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரால் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.இந்நிலையில் தேர்தல் திணைக்களம் நிகழ்வின் இறுதி பகுதியில் குறித்த இடத்திற்கு விரைந்த பொழுது கட்சியை பிரதான படுத்தும் கொடிகளும் வேட்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக முறைப்பாட்டளரால் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து களநிலலமைகளை ஆராய்ந்த தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் இது குறித்து வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் செயலருக்கு அறிவித்துள்ளதாகவும் நாளைய தினம் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்து சென்றார் .
  • 376
Added a news  
போலி ஆவணத்தைக் கொண்டு மயானத்தை வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.  பிரதேசவாசி ஒருவரின் சடலத்தை புதைப்பதற்கு நேற்று மக்கள் மயானத்திற்கு சென்ற போது வர்த்தகர் அவர்களை விரட்டியடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதிலேயே இநந்த விடயம் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம், சுழிபுரம், திருவடிநிலை பிரதேசத்தில் அமைந்துள்ள மயானம் தொடர்பிலேயே இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் போது வர்த்தகர் யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச சபையால் இந்த மயானம் தமக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் கடிதம் ஒன்றை காண்பித்துள்ளார். பிரதேச சபையால் பொலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டு அந்த காணி வர்த்தகர் ஒருவருக்கு விற்னை செய்துள்ள போதிலும் அது தொடர்பில் பிரதேசத்திலுள்ள எந்தவொரு சங்கத்திற்கும் பிரதேச சபை அறிவிக்கவில்லை என யாழ்ப்பாணம், சுழிபுரம், திருவடிநிலை பிரதேச மக்கள் கூறுகின்றனர். இந்தக் காணி உரிய பிரதேச சபையின் கீழுள்ள மயானம் என எபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அது தொடர்பில் பிரதேச சபையின் அதிகாரிளுக்கு எதிராக கடிதம் ஒன்று உரிய அதிகாரிகளிடம் கையளிப்பதற்கு பிரதேசத்தின் அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.   இதேநேரம் இந்த மயானத்தில் இதுவரை 137 கல்லறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  எனினும் இந்த கல்லறைகள் அனைத்தையும் உடைத்துவிட்டு காணியில் சுற்றுலா விடுதியொன்றை நிர்மாணிக்கும் நோக்கிலேயே தான் இதனை கொள்வனவு செய்ததாக வர்த்தகர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மக்கள் கடும் அசௌகரியமான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..000
  • 573
Added a news  
 சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு  பணிப்புரை விடுத்துள்ளது.நேற்று சனிக்கிழமை உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு  இடம் பெற்றபோது, சமூகமட்ட பிரதிநிதி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்ட நிலையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சுன்னாக நிலத்தடி நீரில் நொதேன் பவர் தனியார் நிறுவனத்தினால் வெளியேற்றப்படுகின்ற கழிவு எண்ணெய் நிலத்துக்கு கீழ் இறக்கப்பட்ட நிலையில் மக்களின் குடிநீர் கிணறுகள் தொடக்கம் விவசாய கிணறுகள் வரை கழிவு எண்ணெய் தாக்கம் உணரப்பட்டது. சிலர் அதனை மறுத்து வந்த போதும் இறுதியில் உண்மை கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சுன்னாக பிரதேச மக்களின் குடிநீர் கிணறுகள் தொடர்பில் என்ன நிலைப்பாடு இருக்கிறது என்பது தொடர்பில் மக்களுக்கு தெரியாது. ஏனெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் கிணறுகள் தொடர்பான பரிசோதனை அறிக்கைகளை எடுத்ததாக நாங்கள் அறியவில்லை. அது மட்டுமல்லாது மருதனார் மடப் பகுதியில் அமைந்துள்ள வாகனங்கள் சுத்திகரிக்கும் நிலையத்தில் அதிகளவிலான அரச நிறுவனங்களின் வாகனங்கள் சுத்திகரிப்பு இடம்பெறுகின்றது. குறித்த சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி வளமான விவசாய நிலங்களைக் கொண்ட பகுதியாக காணப்படுகின்ற பகுதியில் குறித்த சுத்திகரிப்பு நிலையத்தின் எண்ணெய் கழிவுகள் அங்கு செல்கின்றது என்பது தொடர்பில் எமக்கு ஏதும் தெரியாது. இவ்வாறான நிலையில் முன்பு ஏற்பட்ட பாரியாய அனர்த்தம் போன்று எதிர்காலத்தில் கழிவு எண்ணெயினால் ஏற்படும் ஆபத்தை தவிர்ப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அபிவிருத்தி குழு தலைவர் - சுன்னாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் தாக்கம் தொடர்பில் நான் நன்கு அறிவேன். ஆகையால் பொதுமக்களின் குற்றச்சாட்டு தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கும் நிலையில் நீர்வளங்கள் சபை அதிகாரிகள் சுன்னாணாகப் பகுதியில் உள்ள 5 குடி நீர் கிணறுகளின் நீர் மாதிரிகளில் எண்ணெய் படலம் இருக்கிறதா என்பது தொடர்பில் பரிசோதனை அறிக்கையை பிரதேச அபிவிருத்தி குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.அதேபோன்று வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் எவ்வாறு வெளியேற்றப்படுகிறது என அறிக்கை சமர்ப்பிப்பதோடு சுற்றாடல் அதிகார சபையினால் குறித்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிகள் தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உடுவில் பிரதேச சபைச் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.குறித்த கலந்துரையாடலில் திணைக்களத் தலைவர்கள் கிராம சுவையாளர்கள் சமூகமட்ட பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.00
  • 572
Added a news  
தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,கடந்த தேர்தல்களைப் போன்று இம்முறைத் தேர்தலிலும் அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.தேர்தல் ஆணைக்குழுவினால் இது குறித்த சுற்று நிரூபமும் வெளியிடப்பட்டுள்ளது.  அதற்கமைய அரச அதிகாரிகள் தமது சேவை நேரத்தில் வேட்பாளர்கள் தொடர்பான பிரசாரங்களை முன்னெடுப்பது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.அதேபோன்று ஏதேனும் அரச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் போது அவை எந்தவகையிலும் எந்தவொரு வேட்பாளருக்குமான பிரசாரமாக அமைந்து விடக் கூடாது.மேலும் அரச வாகனங்களைப் பயன்படுத்துவதிலும் வரையறைகள் காணப்படுகின்றன. அரச தேவைகளுக்கு மாத்திரமே அவை பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டால் அதனுடன் தொடர்புடையவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது மாத்திரமின்றி குறித்த வாகனத்துக்கு உரித்துடையவர்களே அதற்கான பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.தேர்தலுக்கான அலுவலகங்களை அமைப்பதற்கு கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், மத வழிபாட்டு தலங்களிலோ அரச கட்டடங்களிலோ அவற்றை அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்த அலுவலகங்கள் நீக்கப்பட வேண்டும். தேர்தல் சட்ட திட்டங்கள் தொடர்பில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார். 000
  • 576
Added a news  
இலங்கையின்பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதன் ஊடகப்பேச்சாளர் ஜூலி கோசாக், கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவானது மூன்றாவது மதிப்பாய்வை அங்கீகரித்த உடனேயே, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக நான்காவது தவணைக்கான 334 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.அதனடிப்படையில் இலங்கைக்கான மொத்த நிதி உதவியை 1.34 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது. அதேநேரம் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்கள் பலனளித்து வருவதோடு, பொருளாதார மீள் எழுச்சியானது வேகமடைந்து வருகின்றது.அத்துடன் இலங்கையில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது, வருமானத்துக்கான சூழல் மேம்பட்டு வருகிறது, வெளிநாட்டுக் கையிருப்பும் அதிகரித்து வருகின்றது.அந்தவகையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2024 இல் 5 சதவீதத்தை எட்டியது, மேலும் இரண்டு வருட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் 5 சதவீதத்தை எட்டியமையும் முக்கியமான விடயமாகும்.இவ்வாறாக நேர்மறையான நிலைமைகள் காணப்பட்டாலும் நாட்டின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது. எனவே பாரிய பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து நிலைத்திருப்பதை உறுதிசெய்ய சீர்திருத்தச் செயற்பாடுகளை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும் என்றார்000
  • 576
Added a news  
முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஇதனடிப்படையில், உதவி தொகை பெறுபவர்களின் எண்ணிக்கைணை ஒரு மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.இதேநேரம் இந்த விடயம் குறித்த கலந்துரையாடல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவித்துள்ளார்.அண்மையில், 2016 முதல் 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை வெகு விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுஇதேநேரம் குறித்த கொடுப்பனவு பெற வேண்டியவர்களில் 2000 பேர் அளவில் இறந்து விட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.000
  • 576
Added a news  
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த பணிகள் 1066 மதிப்பீட்டு மையங்களில் எதிர்வரும் முதலாம் திகதிமுதல் 10 ஆம் திகதி வரை நடைபெறும்.விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 16000 ஆசியிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை கடந்த 17 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெற்றது.இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.000
  • 511
Added a news  
மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகளின் பதிவு அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது.எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்குரிய செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளன. ஆகக்குறைந்தது புவிநடுக்கத்திற்குரிய விழிப்புணர்வு செயற்திட்டங்களை இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியிலும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.இல்லையேல் 2004 ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தது போன்று ஒரு புவிநடுக்க அனர்த்தத்தினாலும் இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்களின் இறப்பை நாம் தவிர்க்க முடியாது என்பது உண்மை என மேலும் தெரிவித்துள்ளார்000 
  • 503
Added a news  
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த பணிகள் 1066 மதிப்பீட்டு மையங்களில் எதிர்வரும் முதலாம் திகதிமுதல் 10 ஆம் திகதி வரை நடைபெறும்.விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 16000 ஆசியிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை கடந்த 17 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெற்றது.இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.000
  • 501
Added a news  
......ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனத்தை வெளியிட்டால் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை விடுக்கும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கே குறித்த பதில் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திததி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வந்து சென்றமைக்கான செலவீனம் மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு ரணில் விக்கிரமசிங்க வருகை தந்து சென்றமை க்கான செலவீனம் தொடர்பிலும் கடந்த 05 ஆம் திகதி மாவட்ட செயலகத்தின் ஊடாக தகவல் கோரப்பட்டது.தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக கடந்த 17 .02. 2025 அன்று தகவல் கிடைத்தமைக்கான ஆவணம் வழங்கப்பட்டது.இந்நிலையில் இன்றையதினம் கௌரவ ஜனாதிபதியவர்களின் யாழ்பாணம் விஜயம் தொடர்பான தகவல் கௌரவ சனாபதி அவர்களின் பாதுகாப்பினை நேரடியாக பாதிக்கும் இரகசியத் தகவல்களாக இருப்பதால் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 5(1)(ஆ) (1)பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய குறித்த தகவல்களை வழங்கமுடியாது என குறிப்பிட்டு மேன்முறையீடு மேற்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை கடந்த காலங்களில் ஜனாதிபதியின் யாழ் வருகை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கோரப்படும் தகவல்கள் வழங்கபட்டுள்ளன. மேலும் அண்மையில் வெளிநாட்டு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் செல்வீனம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி செயலகம் 5(1)(அ)(1) கீழ் ஜனாதிபதியின் யாழ் வருகையின் செலவீனத்தை நிராகரித்தது .ஆனால் குறிப்பிட்ட பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள அரசின் ஆட்புலத்தையோ ,இறைமையையோ , பாதுகாப்பையோ வருகைக்கான செலவீனம் கேள்விக்கு ட்படுத்தவில்லைமக்களின் பொது நிதியே பயன்படுத்தபட்டுள்ளது.மேலும் மேற்குறித்த விடயங்கள் கேள்விக்குட்படுத்தினால் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவீனம் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லையா?ஆகவே வெளிநாட்டு செலவீனம் தொடர்பில் தெரிவிக்கின்ற பொழுதும் உள்நாட்டு சுற்றுப்பயணத்தில் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளனவா என சந்தேகம் எழுந்துள்ளது.மேலும் அரசாங்கம் தகவல் அறியும் உரிமையினை தொடர்ந்து இழுத்தடித்து வழங்க முற்படுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளது
  • 989
Added a news  
ஹைதராபாத் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் ஏழாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்த ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணிக்கு ஷர்துல் தாக்கூரின் நான்கு விக்கெட்டுகள் ஹைதராபாத் அணியை ஒன்பது விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த உதவியது.சன்ரைசர்ஸ் அணிக்காக டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 28 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்தார், அதே நேரத்தில் நிதிஷ் குமார் ரெட்டி (32), ஹென்ரிச் கிளாசென் (26), மற்றும் அனிகேத் வர்மா (36) ஆகியோர் அணிக்காக பயனுள்ள பங்களிப்பை வழங்கினர்.லக்னோ அணிக்காக, ஷர்துல் தாகூர் (4/34) சிறப்பான பந்து வீச்சாளராக இருந்தார், அவேஷ் கான் (1/45), திக்வேஷ் ரதி (1/40), பிரின்ஸ் யாதவ் (1/29), மற்றும் ரவி பிஷ்னோய் (1/42) ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.190 ஓட்ட சேஸிங்காக துடுப்பெடுத்தாடிய லக்னோ அணிக்கு நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தார்.இவர் தவிர தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்து, 16.1 ஓவர்களில் 193/5 என்ற ஓட்டங்களை எடுத்தது 2025 ஐ.பி.எல். சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பேட் கம்மின்ஸ் (2/29), மொஹமட் ஷமி (1/37), அடம் ஜாம்பா (1/46) மற்றும் ஹர்ஷல் படேல் (1/28) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூர் தெரிவானார்.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அடுத்த போட்டி ஏப்ரல் 1 அன்று பஞ்சாப் கிங்ஸுடன் லன்னோவில் நடைபெறவுள்ளது.000
  • 1106
Added a news  
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்பதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இந்த விஜயத்தின் போது, ​​இந்தியப் பிரதமர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி நாட்டில் தங்கியிருக்கும் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்தில் உள்ள ஜெயகிரக மகா போதிக்கு வழிபாடு நடத்துவார் என்றும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாட்டில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது.இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.மேலும் இந்திய வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவு செயலாளர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பல மூத்த அதிகாரிகள் இந்தியப் பிரதமருடன் இந்தப் பயணத்தில் பங்கேற்க உள்ளனர் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.000
  • 1111
Added a news  
பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படும் எனவும், அந்த சேவைகளை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.கடந்த 24 ஆம் திகதி காலி - மாத்தறை பஸ் சாரதி ஒருவரை தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.தாக்குதலை நடத்திய மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த லொறி சாரதி மற்றும் முச்சக்கரவண்டி சாரதிக்கு எதிராக கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.சந்தேகநபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.000
  • 1059
Added a news  
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா முதல் 160 ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையை செலவிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடைபெற உள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இந்தத் தொகை தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று நிறைவடைந்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • 1056
Added a news  
பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முந்தினம் (26) புதன்கிழமை பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது.இதன்போது பாதிக்கப்பட்ட மாணவி தனது விடைத்தாளினை திருத்திய மாணவியிடம், விடைத்தாளில் பிழையான விடை காணப்பட்டால் அவற்றை சரியாக்கி அதிக மதிப்பெண் வரும் வகையில் செய்யுமாறு கேட்டுள்ளார்.அதற்கேற்றவாறே அந்த மாணவியும் பிழையான விடைகள் எழுதப்பட்ட போதிலும் சரியானதாக குறிப்பிட்டு அதிக மதிப்பெண்ணை போட்டுள்ளார்.இவற்றை அவதானித்துக்கொண்டிருந்த ஆசிரியர் விடைத்தாளினை பார்வையிட்ட போது மேற்குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு திருத்திய மாணவியை விசாரித்த நிலையில் அவரும் சக மாணவியின் அறிவுறுத்தலில் தான் அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து முறைகேடான வகையில் மதிப்பெண்களை அதிகமாக போடுமாறு சக மாணவியை அறிவுறுத்திய மாணவியை அழைத்து இவ்வாறு செய்வது தவறு என சுட்டிக்காட்டியதுடன் கண்டிக்கும் வகையில் மெதுவாக அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து குறித்த மாணவியை, ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறி அவரது பெற்றோரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முந்தினம் (26) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிப்புகள் எவையும் இல்லாத நிலையில் மாணவியை வைத்தியசாலையில் இருந்து விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றையதினம் கைது செய்த பருத்தித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.இதையடுத்து குறித்த வகுப்பில் கல்விகற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) மாலை ஒன்றுகூடியிருந்தனர்.பாடசாலை அதிபர் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி விடுத்த அறிவுறுத்தலை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் ஆசிரியருக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.இதன் பின்னர் குறித்த ஆசிரியர் பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் (28) வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பருத்தித்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.000
  • 1058