சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  7897 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சாலையோரம் நின்ற கார் மீது கவிழ்ந்த லாரி

கொடைக்கானலில் காய்கறி ஏற்றி வந்த லாரி, கார் மீது கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், கார் அப்பளம் போல் நொறுங்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு மட்டுமன்றி தென்னிந்திய மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலைப்பிரதேசங்களை நோக்கி பயணிக்க ஆர்வம் காட்டினர். கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வந்த போதும், மலைப்பிரதேசங்களுக்கு செல்வதற்காக முடிவெடுத்திருந்த சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் பயணம் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இ-பாஸ் நடைமுறை இருப்பதால் மலை அடிவாரத்தில் இவர்கள் பதிவு செய்து கொண்டு கொடைக்கானல் மலைப்பகுதிகளை சுற்றி பார்க்கின்றனர். கொடைக்கானலில் இன்று 61வது மலர் கண்காட்சி துவங்கி உள்ளதை அடுத்து, வரவிருக்கும் 10 நாட்கள் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் 5 பேர் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். இவர்கள் பல்வேறு இடங்களையும் சுற்றி பார்த்த பின்னர், பண்ணைக்காடு பிரிவு பகுதியில் சாலை ஓரத்தில் தங்களது காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடைக்கு சென்று இருந்தனர். அப்போது மேல்மலை கிராமத்திலிருந்து வத்தலகுண்டு நோக்கி காய்கறி ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. வளைவில் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக சரக்கு லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் எதிர் புறமாக கவிழ்ந்தது.

அப்போது அங்கு நின்ற காரின் மீது லாரி விழுந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. நல்வாய்ப்பாக காரில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. லாரி கவிழ்ந்து விழுந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

  • 440
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads