·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 46
  • More

மீசாலை சோலை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல்

மீசாலை சோலை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல்

Comments (0)
Login or Join to comment.
·
Added a video

Burlington downtown lakeside beach

  • 66
North York திருச்செந்தூர் முருகன் கோய
  • 129
·
Added a post

பல விதமாவன மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதை விட, ஒரு வில்வம் கொண்டு அர்ச்சனை செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்பார்கள்.

1வில்வ இலைகள் ஆன்மிக அதிர்வலைகளை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இவற்றை பூஜைக்கு பயன்படுத்திய பிறகு வீட்டிலும், நாம் பயன்படுத்தும் பணப் பைகளிலும் வைக்கும் போது தெய்வீக தன்மை அங்கும் நிறையும். பல விதமான ஆன்மிக மற்றும் மருத்துவ குணங்களைக் கொண்ட வில்வ இலை பற்றி பலரும் அறியாத முக்கியமான 15. விஷயங்கள் இதோ...

வில்வம் காய்ந்த நிலையில் இருந்தாலும் அதனை அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம். இதனால் சகல பாவங்களும் விலகும்.

2. ஒரு முறை அர்ச்சனைக்கு பயன்படுத்திய வில்லத்தை, மறுநாள் தண்ணீரில் சுத்தம் செய்து, மீண்டும் அர்ச்சனைக்கு பயன்படுத்தினாலும் தோஷம் கிடையாது. வில்வத்தை பறித்து ஐந்து நாட்கள் வரை பூஜைக்கு பயன்படுத்தலாம்.

3. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பலவகை உண்டு. இவற்றில் மூன்று இதழ்கள் கொண்ட வில்வத்தையே பூஜைக்கு பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் கொண்ட வில்வங்களை பயன்படுத்துவது மிகவும் சிறப்பானது.

4. மகா சிவராத்திரி நாளில் சிவ பெருமானுக்கு வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து, வில்வாஷ்டகம் பாராயணம் செய்து வழிபட்டால் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

5. ஒரு வில்வம் கொண்டு பூஜை செய்வது ஒரு லட்சம் தங்க மலர்களால் பூஜை செய்ததற்கு சமமாகும். வில்வத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

6. வில்வ மரத்தை வீட்டிலும், கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

7. வில்வத்தை பறித்து ஆறு மாதம் வரை வைத்து பூஜை செய்யலாம். சிவ அர்ச்சனைகளில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரக் கூடியது.

8. வீட்டில் வில்வ மரம் வளர்ப்பது ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனையும், கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் நீராடிய பலனையும், 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலனையும் தரக் கூடியது.

9. வில்வ மரத்தில் காற்றை சுவாசித்தாலோ, அதன் நிகழ் உடலில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும். முறைப்படி விரதமிருந்து வில்வ மரத்தை பூஜித்தால் அனைத்து விதமாவன நன்மைகளும் கிடைக்கும்.

10. வீட்டில் வில்வ மரம் வளர்ப்பவர்களுக்கு நரகம் ஏற்படாது. எம பயம் ஒரு போதும் அவர்களை அணுகாது.

11. வில்வம் பழத்தின் சதையை நீக்கி விட்டு, அதன் ஓடுகளை குடுவை ஆக்கி அதில் விபூதியை வைத்து பயன்படுத்துவது சிவ கடாட்சத்தை அளிக்கும்.

12. வில்வ இலையை பறிக்கும் போது பய பக்தியுடன்,

நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே

ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே

ஸம்ஸ - ர விஷவைத்யஸ்ய ஸ - ம்பஸ்ய கருணாநிதே:

அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே"

என்று மந்திரத்தை சொல்லிக் கொண்டே பறிக்க வேண்டும்.

13. வில்வத்தை சிவமூலிகைகளின் சிகரம் என்றும் அழைப்பார்கள். வில்வ இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்தி வந்தால் கண் பார்வை சீராகும். வில்வ இலை மனஅழுத்தங்களையும் குறைக்கும் தன்மை கொண்டதாகும்.

14. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட வில்வம், மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகளை நீக்கும். பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம் ஆகியவற்றையும் தீர்க்கக் கூடியதாகும்.

15. சிவ பெருமானுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை. இது வெப்பம் நிறைந்ததாகும். இதனால் சிவனின் உஷ்ணத்தை தணிப்பதற்காகவே வில்வத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறார்கள். சிவபெருமானின் இருப்பிடமான இமயமலையும் பனி நிறைந்த பகுதி என்பதால் பக்தர்களுக்கு ஏற்படும் சளி போன்ற பிரச்சனைகளை குணமாக்க வில்வம் பிரசாதமாக தரப்படுகிறது.

  • 162
·
Added a news

தென் அல்பர்ட்டாவில் உள்ள க்ளென்வுட் பகுதியில், 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். க்ளென்வுட் நகரின் மேற்கே சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் கைவிடப்பட்டடிருந்த நிலையில் ஒரு வாகனம் இருப்பதாக மவுண்டீஸ் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த வாகனத்துக்குள் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் குறித்த பிரதே பரிசோதனை (autopsy) நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தகவல் தெரிந்தவர்கள் உடன், கார்ட்ஸ்டன் RCMP காவல் நிலையத்தை 403-653-4931 என்ற எண்ணிலும், அல்லது இரகசியமாக தகவல் வழங்க விரும்புவோர் 1-800-222-8477 என்ற Crime Stoppers எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 168
·
Added a post

1. "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"

சரியான பழமொழி :

"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

விளக்கம் :

இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.

கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.

இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.

2. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.

சரியான பழமொழி :

ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - .

3. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.

சரியான பழமொழி :

படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான்

4. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.

சரியான பழமொழி :

ஆயிரம் வேரைக் (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் -

5. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - .தவறு.

சரியான பழமொழி :

நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு -

( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )

6. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் -தவறு.

சரியான பழமொழி :

அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். -

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.

மாறுவோம்...பிறரை மாற்றுவோம்.

  • 172
·
Added a post

முருங்கைக் கீரையை அதிகம் வேக வைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அதனை அளவாக வேக வைத்து பதமாக சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள இரும்புச்சத்து முதல் அனைத்துச் சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும்.

ஆனால், அகத்திக் கீரை இதற்கு நேர் எதிரானது. அதனை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது. அதனை நன்றாக வேகவைக்க வேண்டும். ஏனெனில் அகத்தியில் இரும்புச்சத்து உள்ளிட்டவை மிக நிறைவாக உள்ளன. அது நமது செரிமானத்துக்கு தாங்காது. ஆடு போன்ற விலங்கினங்களால்தான் அதனை பச்சையாகவும் அரைவேக்காடாகவும் சாப்பிட இயலும். மென்மையான சீரண மண்டலம் கொண்ட மனிதர்களாகிய நாம் அகத்திக் கீரையைச் சாப்பிட வேண்டுமானால் அதனை நன்றாக வேக வைக்க வேண்டும்.

இதுவே இப்பழமொழி சொல்லும் நேரடிப் பொருள். ஆனால், இது போலத்தான் ஒரு செயல் அல்லது ஒரு பொருள் ஒருவருக்கு குறைவாகத் தேவைப்படும்.

இன்னொருவருக்கு அதிகமாகத் தேவைப்படும். அதிகம் தேவைப்படுபவர் குறைவாக கிடைத்தாலும் நஷ்டமடைவார்.

குறைவாகத் தேவைப்படுபவர் அதிகம் கிடைத்தாலும் கையாளத் தெரியாமல் சிரமப்படுவார்..

இதனையே இப்பழமொழி உள்ளர்த்தமாகக் குறிக்கிறது.

  • 174
·
Added article

உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப்பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.

அக்கவிதையே அவர் எழுதிய கடைசி கவிதை.

மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு

மழலைகள் தமிழ் பேச செய்து வைப்பீர்

தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற

தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!

  • 179
·
Added a post
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.
  • 183
·
Added article

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது அந்த ஊட்டி சம்பவம்.

ஆக்சிஜன் குறைவான இடங்களில் அதிகமாக உடற்பயிற்சி செய்யக்கூடாது.

இதை எங்களுக்கு உணர்த்தியது

நடிகர் முத்துராமனுக்கு நேர்ந்த எதிர்பாராத முடிவு.

கல்லூரி காலத்தில் (1981) எங்களை கலக்கமும், அதிர்ச்சியும் அடையச் செய்தது பத்திரிகைகளில் வந்த அந்தச் செய்தி.

“முத்துராமன் செத்துப் போயிட்டாராம்."

இதை அறிந்து நாங்கள் அதிர்ந்து போனோம். ஏனெனில் எக்ஸர்சைஸ் எல்லாம் செய்து, ஒழுங்காக தன் உடலைப் பராமரித்து வந்தவர் நடிகர் முத்துராமன்.

அதிலும் ஊட்டிக்கு ஷூட்டிங் போன இடத்தில் உடற்பயிற்சி செய்து, அதனால்தான் அவர் உயிர் இழந்து போனார் என்று செய்தித்தாளில் படித்தபோது...

எக்ஸர்சைஸ் மீதே எங்களுக்கு நம்பிக்கை கொஞ்சம் குறைந்து போனது.

அதனால் ஹாஸ்டலில் தினமும் காலையில் எக்ஸர்சைஸ் செய்து வந்த நண்பர்களின் எண்ணிக்கையும் கூட, கொஞ்சம் குறைந்துதான் போனது.

ஆனால் அதன் பின் நடிகர் சிவகுமார் எழுதியிருந்ததைப் படித்தபோதுதான்,

முத்துராமன் உயிர் இழந்ததற்கான உண்மையான காரணம் தெரிந்தது.

ஆக்சிஜன் குறைவான மலைப்பிரதேசங்களில், அளவுக்கு அதிகமாக எக்ஸர்சைஸ் செய்யக் கூடாதாம்.

அதை மீறி உடல் பயிற்சி செய்ததுதான் முத்துராமன் உயிர் இழந்ததற்கான உண்மையான காரணமாம்.

இதுபற்றி நடிகர் சிவகுமாரின் பதிவிலிருந்து :

“1981 - அக்டோபர்- 16 -ந்தேதி .

காலை 6.30 மணி.

ஊட்டி - கால்ப் காட்டேஜ்

'ஆயிரம் முத்தங்கள்' - படத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தேன் .

உதவியாளர் ஓடிவந்து 'சார்,முத்துராமன் சார் ரோட்ல மயக்கமா கிடக்கறார் சார்' என்றார். ஓடிச்சென்று காரில் ஏற்றி ஊட்டி டாக்டரிடம் காட்ட,

“உயிர்போய் அரைமணி ஆகிவிட்டது” என்றார்.

மீண்டும் காட்டேஜ்.

காரிலிருந்து உடம்பை நிமிர்த்தி இறக்கும்போது அவர் மூச்சுக்காற்று ‘குபுக்’கென என்மேல் பட,

“அய்யோ உயிரோட இருக்கறவரை செத்துப்போயிட்டார்னு டாக்டர் சொல்லிட்டாரே... அண்ணா, அண்ணா எழுந்திருங்கண்ணா” என்று நானும் நடிகை ராதா, அவர் அம்மா, மூவரும் யூகலிப்டஸ் ஆயிலை அவர் உடம்பு முழுக்க பூசி தேய்த்தவாறு கதறினோம். அவர் பேசவில்லை . போய்விட்டார்.

ரத்த அழுத்த நோய் பல ஆண்டுகளாக அவருக்கு ; படத்தில் ராதாவுக்கு அப்பாவாக நடிக்க வந்தவர் -

நான் முதல் நாள் காலை ஓடியதைப் பார்த்து ஆர்வத்தில் ஓடியிருக்கிறார்.

ஊட்டியில், 7000 அடி உயரத்தில் அதிகாலையில், பனிமூட்டம் அதிகம் இருக்கும்போது, ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் ஓடியவர் மூச்சுத்திணறி விழுந்து விட்டார் .”

சிவகுமார் சொன்னதைப் படித்தபோது மனம் கொஞ்சம் கனத்துத்தான் போனது.

ஊட்டிக்கு ஷூட்டிங் புறப்படும்போது முத்துராமன் நினைத்திருப்பாரா ?இங்குதான் தன் வாழ்க்கை முடியப் போகிறது என்று.

முத்துராமன் நடித்த 'நெஞ்சில் ஓர் ஆலயம்' பாடல் நினைவுக்கு வருகிறது :

எங்கே வாழ்க்கை தொடங்கும்

அது எங்கே எவ்விதம் முடியும்

இதுதான் பாதை

இதுதான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது.”

ஆம் .

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

தெய்வம் ஏதுமில்லை.

எவரும் எதிர்பாராமல் முத்துராமனின் வாழ்க்கைப் பயணம் முடிந்தது, 1981 ல், அக்டோபர் 16 அதிகாலையில்தான்.

  • 188
·
Added a post

பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவித நாக பந்தம் துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் அனைத்து விதமான நாக தோஷங்களும் நீங்கும்.

நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது.

இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. அதற்கு பொருள் செலவு அதிகமாகும். ஏழை-எளியவர்களால் அந்த பரிகாரத்தை செய்ய இயலாது. அத்தகையவர்கள், செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது

செலவுகள் வைக்கும் வழிகளை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவித நாக பந்தம் துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.

முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும். அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை

பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று. அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.

நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.

தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை

  • 191
·
Added article

உலகம் சுற்றும் வாலிபன் திரைபடத்தில் எம்.ஜி.ஆரின் பச்சைக்கிளி!

‘மேட்டா ரூங்ராத் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா?

அவர் யாரென்று தெரியுமா?’ என இன்றைய தலைமுறையினரைக் கேட்டால், உதட்டைப் பிதுக்குவார்கள்.

55 வயதைக் கடந்தவர்கள் சட்டென்று சொல்லிவிடுவார்கள். “என்னங்க? அவரையா தெரியாது? எம்.ஜி.ஆரின் பச்சைக்கிளி ஆயிற்றே!” என்று பளிச்சென்று கூறுவர்கள்.

1973-ல் வெளிவந்த அவரது சொந்தப்படமான உலகம் சுற்றும் வாலிபனில் கௌரவ வேடத்தில் நடித்த தாய்லாந்து நடிகைதான் மேட்டா ரூங்ராத். ‘பச்சைக்கிளி.. முத்துச்சரம்.. முல்லைக்கொடி யாரோ? பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ?’ என்ற பிரபலமான பாடலுக்கு எம்.ஜி.ஆரோடு ஜோடி சேர்ந்து ஆடியவர்.

25 வயது இளம் மங்கையான மேட்டா ரூங்ராத் அதே பாடலின் வாயசைப்பில் ‘பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ? மன்னன் எனும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ?’என்று எம்.ஜி.ஆரை புகழும் வரிகள் வரும்போது, ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தனர்.

உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்து 48 வருடங்கள் ஆகிவிட்டன.

தற்போது மேட்டா ரூங்ராத்துக்கு வயது 73 ஆகிறது. முதுமை என்று சொல்ல முடியாத அளவுக்கு ’சிக்’ என்றிருக்கிறார்.

அந்தக் குழந்தை முகமும் இன்னும் மாறவே இல்லை. இந்த ‘ரீவைண்ட்’ அந்தக் கால ரசிகர்களுக்காக மட்டுமல்ல!

  • 194
·
Added a post
  • 195
·
Added article

இவர் நடிகர் பி. எஸ் வீரப்பா அவர்களின் மகன் ஹரிஹரன் அவர்கள்!

சினிமாவில் வில்லன் நடிகருக்கென்று நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியவர் பி.எஸ்.வீரப்பா. கதாநாயகர்களுக்கு நிகரான சம்பளம் வாங்கிய வில்லன் நடிகர். அவருக்கு தனலட்சுமி என்ற மகளும், ஹரிஹரன் என்ற மகனும் இருந்தனர். பி.எஸ்.வீரப்பா மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஹரிஹரன் திரைப்பட தயாரிப்பில் இறங்கினார். திசை மாறிய பறவைகள், சாட்சி, வெற்றி, நெஞ்சில் துணிவிருந்தால் நட்பு, வணக்கம் வாத்யாரோ உள்பட 30 படங்கள் வரை தயாரித்தார்.

படத் தயாரிப்பால் சொத்துக்களை இழந்த ஹரிஹரன் வறுமை நிறைந்த வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டார். வாடகை வீட்டில் வசித்து வந்த ஹரிஹரனுக்கு, வாடகையைக் கூடச் செலுத்த முடியாத நிலை உருவானது. இதைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தாமாகவே முன்வந்து ரூ.1 லட்சம் கொடுத்து உதவினார்.

வீட்டில் தடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

  • 209
  • 207

அழகிய கிராமம்...

  • 207

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே. — மு. வரதராசன்

  • 210
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அலுவலக பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

ரிஷபம்

உறவினர்கள் வழியில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். தெளிவுகள் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மிதுனம்

பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். திடீர் பயணங்களால் புதிய அனுபவங்கள் ஏற்படும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உயர் கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். உலக வாழ்க்கை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் பிறக்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

 

கடகம்

வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். கடன் பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

சிம்மம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளால் கவலைகள் குறையும். வியாபாரத்தில் தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்களை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

துலாம்

இருப்பிடம் தொடர்பான பிரச்சனைகள் சற்று குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட்டால் லாபங்கள் மேம்படும். உயர் அதிகாரிகள் பற்றிய சில புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

 

விருச்சிகம்

வியாபாரத்தில் திட்டமிட்ட பணிகள் நடைபெறும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கமிஷன் வியாபரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். தனவரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு சார்ந்த விஷயங்களில் உதவிகள் கிடைக்கும். கால்நடைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மறைமுகமாக இருந்து வந்த திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கும்பம்

உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம். உணவு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். முயற்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

 

மீனம்

பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உறவுகள் இடத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 375
·
Added a post

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 6.7.2025

சுக்ல பக்ஷ ஏகாதசி  - Jul 05 06:59 PM – Jul 06 09:15 PM

சுக்ல பக்ஷ துவாதசி  - Jul 06 09:15 PM – Jul 07 11:10 PM

விசாகம் - Jul 05 07:51 PM – Jul 06 10:41 PM

அனுஷம் - Jul 06 10:41 PM – Jul 08 01:11 AM

image_transcoder.php?o=sys_images_editor&h=40&dpx=1&t=1751785478

நல்ல நேரம்:

காலை : 07.00 முதல் 08.00 மணி வரை

காலை : 09.00 முதல் 10.00 மணி வரை

மாலை : 04.00 முதல் 05.00 மணி வரை

இரவு : 06.00 முதல் 07.00 மணி வரை

  • 378

Good Morning...

  • 375

மரம் வளர்ப்போம்

வெட்டும்போது மரம்

மௌனமாக இருப்பதாலேயே

அதற்கு வலிக்காது என்று

பொருளல்ல.

  • 662
·
Added a news

முன்னாள் ஐபிஎல் உரிமையாளர் லலித் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில், தொழிலதிபர் விஜய் மல்லையா கலந்துகொண்டு பாட்டு பாடி டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லலித் மோடி மீது சட்டவிரோத ஏல முறைகேடுகள், பணமோசடி, மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், விஜய் மல்லையா ₹9,000 கோடிக்கும் மேல் வங்கிக் கடன் தவணையை செலுத்தாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இருவரும் 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில் லண்டனில் உள்ள தனது வீட்டில் நடந்த பிரம்மாண்டமான விருந்து குறித்த வீடியோவை லலித் மோடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த விருந்தில் இந்தியப் பாடகர் கார்ல்டன் பிரகன்சா மற்றும் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், விஜய் மல்லையா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

  • 688
·
Added a post

அறிமுகமான முதல் நாளிலேயே 10,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளுடன், டாடா ஹாரியர் EV ஒரு அற்புதமான சந்தை வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இது இரண்டாவது சிறந்த முன்பதிவு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில், ஹாரியர் EV இன் முதன்மை போட்டியாளரான மஹிந்திரா XEV 9e, அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் 16,900 யூனிட் முன்பதிவுகளைப் பெற்றிருந்தது.

ஹாரியர் EV-க்கான மாதாந்திர உற்பத்தி இலக்குகள் வெளியிடப்படவில்லை. ஆனால், அதிகரித்த தேவையை ஈடுசெய்யும் நம்பிக்கையுடன் பிராண்ட் இருப்பதாகத் தெரிகிறது. அரிய மண் உலோகங்களின் பற்றாக்குறை தொடர்ந்து நிலவினாலும், தற்போது எந்த உடனடி நெருக்கடியையும் எதிர்கொள்ளவில்லை என்று டாடா கூறியுள்ளது. ஹாரியர் EV-யின் உற்பத்தி தடையின்றி தொடரும் என்பதை இது குறிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் டெலிவரிகளை சரியான நேரத்தில் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

விநியோகச் சங்கிலிகள் முன்கூட்டியே வலுப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது மூலப்பொருட்களின் அதிக இருப்பு பராமரிக்கப்பட்டிருக்கலாம். டாடா சீனாவிலிருந்து நிறுவப்பட்ட சப்ளையர்களிடமிருந்து பேட்டரி செல்களை இறக்குமதி செய்வதாகக் கூறப்படுகிறது. இந்த செல்கள் பின்னர் டாடா ஆட்டோகாம்ப் மூலம் பேட்டரி பேக்குகளில் இணைக்கப்படுகின்றன.

வளர்ந்து வரும் மின்சார வாகனங்களின் பேட்டரி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, டாடா இந்தியாவில் ஒரு பேட்டரி ஜிகாஃபாக்டரியை உருவாக்கி வருகிறது. தொடர்புடைய நிறுவனமான அக்ராடாஸ், 2026 ஆம் ஆண்டில் லித்தியம்-அயன் பேட்டரி செல்களை உற்பத்தி செய்யத் தொடங்கும். பேட்டரி பேக்குகளின் உள்ளூர் உற்பத்தி, பிராண்ட் உற்பத்தி செலவுகளில் அதிக கட்டுப்பாட்டைப் பயன்படுத்த அனுமதிக்கும்.

ஹாரியர் EV இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களைக் கொண்டுள்ளது - 65-kWh மற்றும் 75-kWh யூனிட். சான்றளிக்கப்பட்ட வரம்பு சிறிய பேட்டரி பேக் மூலம் 538 கிமீ மற்றும் பெரிய பேட்டரி மூலம் 627 கிமீ (MIDC தரநிலைகள்) ஆகும். இருப்பினும், டாடா அதன் C75 சோதனை தரநிலைகளுடன் மிகவும் யதார்த்தமான வரம்பு மதிப்பீட்டை வழங்குகிறது. C75 எண்கள் 65-kWh பேட்டரி பேக் மூலம் 420 கிமீ முதல் 445 கிமீ வரையிலும், 75-kWh பேட்டரி மாறுபாட்டுடன் 480 கிமீ முதல் 505 கிமீ வரையிலும் உள்ளன.

ஹாரியர் EV டாப் வேரியண்ட் QWD வடிவத்தில் (இரட்டை மோட்டார்கள் கொண்ட குவாட் வீல் டிரைவ்) கிடைக்கிறது, இது பெரிய 75 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது. இது 622 கிமீ சான்றளிக்கப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளது. QWDக்கான C75 வரம்பு 460 கிமீ முதல் 490 கிமீ வரை. செயல்திறனைப் பற்றிப் பேசுகையில், RWD வகைகள் 238 PS மற்றும் 315 Nm டார்க்கை உருவாக்குகின்றன.

  • 693
·
Added article

சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர், சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. கடின உழைப்பால் சினிமாவில் அடுத்தடுத்த உயரங்களை தொட்ட விஜய் சேதுபதி, இன்று பான் இந்தியா அளவில் செம பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சூர்யா சேதுபதி என்கிற மகன் இருக்கிறார். இவரும் விஜய் சேதுபதி உடன் நானும் ரெளடி தான், சிந்துபாத் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

பீனிக்ஸ் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார் சூர்யா சேதுபதி. அவரது முதல் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் தேவதர்ஷினி, வரலட்சுமி சரத்குமார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். பீனிக்ஸ் திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி இருந்தது. இப்படத்திற்காக பிரத்யேகமாக சண்டைப் பயிற்சி எடுத்து நடித்துள்ளார் சூர்யா. பீனிக்ஸ் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து உள்ளார். இப்படம் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

பீனிக்ஸ் திரைப்படத்தை தன் மகன் உடன் சேர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் புரமோட் செய்தார். இருந்தாலும் இப்படத்திற்கு பெரியளவில் ஹைப் கிடைக்கவில்லை. புரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா நடந்து கொண்ட விதம் சிலருக்கு பிடிக்காததால் அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். விஜய் சேதுபதி போல் கஷ்டப்பட்டு சினிமாவிற்குள் வராமல், தன் தந்தை தயவோடு ஈஸியாக வந்துவிட்டதாக விமர்சித்து வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் பீனிக்ஸ் படம் ரிலீஸ் ஆனதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் சூர்யா ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளதாக பாராட்டி வருகின்றனர்.

பீனிக்ஸ் படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வசூல் மட்டுமே கிடைத்துள்ளது. பீனிக்ஸ் படம் முதல் நாளில் வெறும் 10 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாம். இது மற்ற இரண்டு படங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வசூல்.

  • 706
·
Added a news

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில், வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி, 1,179 பேருக்கு தட்டம்மைத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அல்பர்ட்டாவில் Calgary Stampede என்னும் விழா துவங்கியுள்ள நிலையில், தட்டம்மை பரவல் தொடர்பில் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.

விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1.3 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தட்டம்மை எளிதில் பரவக்கூடிய தொற்றுநோய் என்பதால், Calgary Stampede போன்ற விழாக்களில் பங்கேற்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ளோருக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. ஆகவே, சிறுபிள்ளைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள், தடுப்பூசி பெறாதவர்கள் ஆகியோர் கூட்டமான இடங்களை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும், தடுப்பூசி பெறாதவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

  • 712