- · 1 friends
-
மீசாலை சோலை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல்
மீசாலை சோலை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல்
நடிகர் தனுஷ் இட்லி கடை என்ற படத்தை இயக்கி, கதை எழுதி, நடித்து, தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இதில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவரப் போகிறது.இதற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் தனுஷ் சில விஷயங்களை உருக்கமாக பேசி கடந்து வந்த பாதையை கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த டிடி, தனுஷிடம் கருங்காலி மாலை பற்றி ரகசியம் என்ன என்று கேள்வி கேட்டார். அதற்கான ரகசியத்தை சொல்லும் விதமாக தனுஷ் சென்டிமெண்டாக பதில் கூறியிருக்கிறார்.
அதாவது இது என்ன மாலை என்று எனக்கு சத்தியமாக தெரியாது, என்னுடைய தாத்தாவின் போட்டோவுக்கு முன்னாடி இந்த மாலை தொங்க போட்டு இருந்தது. அப்பொழுது என்னுடைய பாட்டியிடம் நான் இது என்ன மாலை என்று கேட்டேன். அதற்கு என்னுடைய பாட்டி, தாத்தா 30 வருஷமாக ஜபித்த மாலை என்று சொன்னார்.
உடனே எனக்கு இந்த மாலை வேண்டுமென்று கேட்ட பொழுது என்னுடைய பாட்டி என்னை கூட்டிட்டு போய் தாத்தா படத்துக்கு முன்னாடி நிற்க வைத்து அதை கழட்டி எனக்கு போட்டு விட்டார். அதைத்தான் நான் கழுத்தில் போட்டிருக்கிறேன். ஆனால் இந்த மாலை போட்டதற்கு பிறகு எனக்கு சக்தியும் நிதானமும் வெற்றியும் கிடைக்கிறது என்று ஒரு நம்பிக்கை.
அதனால் தொடர்ந்து போட்டிருக்கிறேன் என்று தனுஷ் அவர் போட்டிருக்கும் கருங்காலி மாலை பற்றி ரகசியத்தை அனைவரது முன்னாடியும் தெரியப்படுத்தி இருக்கிறார்.
தனுஷ் என்னதான் தாத்தா போட்டிருந்த மாலை என சொல்லியிருந்தாலும் பலரும் கருங்காலி மாலை போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு சீசன் என்று சொல்வதற்கு ஏற்ப சிவகார்த்திகேயன், லோகேஷ், விஷ்ணு விஷால் மற்றும் பலர் நடிகர்கள் போட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒண்டாரியோ மாகாணத்தின் பிரேஸ்பிரிட்ஜ் பகுதியில் உள்ள டோரன்ஸ் பகுதியில் மர்மமான சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹார்டி லேக் சாலையில் சடலம் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, ஒன்டாரியோ மாகாண பொலிஸார் பிரேஸ்பிரிட்ஜ் பிரிவு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைக்குள் ஹார்டி லேக் சாலை பகுதியில் இருந்தவர்கள் யாரேனும் டாஷ்கேம் (Dashcam) காட்சிகள் அல்லது தொடர்புடைய தகவல்களை வைத்திருந்தால் பகிருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் பொதுமக்களுக்கு உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறுநீர் நன்றாகப் பிரிய உதவும் சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள்.
- போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தி, சிறுநீர் கழித்தலை சீராக்கும்.
- பார்லி தண்ணீரில் உள்ள சத்துக்கள் சிறுநீரகக் கற்களைத் தடுக்கவும், சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகின்றன.
- இளநீர் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.
- தர்பூசணி இதில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
- எலுமிச்சை சாறு உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும்.
- வெள்ளரிக்காய் சிறுநீர்ப் பாதையை சுத்தம் செய்ய உதவுகிறது.
- வெங்காயம் இதில் உள்ள சத்துக்கள் சிறுநீரகங்களுக்கு நல்லது.
- பூசணிக்காய் சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படுகிறது.
சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த உணவுகள் ஒரு வழிகாட்டுதல் மட்டுமே.
புரட்டாசி மாதத்தின் முதல் நாள். அன்றைய தினம் இந்தக் கதையை படித்தால், செய்த பாவங்கள் அத்தனையும் நீங்கி, உங்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.
இன்று புரட்டாசி மாதத்தின் முதல் நாள். இன்றைய தினம் இந்தக் கதையை படித்தால், செய்த பாவங்கள் அத்தனையும் நீங்கி, உங்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக புரட்டாசி மாதம் சனிக்கிழமை வந்தால் சொல்லவே வேண்டாம். எல்லோரது வீட்டிலும் தளிகையும், கோவிந்தா கோவிந்தா என்ற நாமமும் நிச்சயமாக உச்சரிக்கும். வருடத்தில் 12 மாதங்கள் இருக்க, புரட்டாசி மாதத்தில் மட்டும் பெருமாளுக்கு எதற்காக இத்தனை சிறப்பு பூஜை புனஸ்காரங்கள். என்றைக்காவது நீங்கள் யோசித்து உள்ளீர்களா. இதற்கான வரலாற்று ரீதியான ஒரு கதையை இந்த நன்னாளில் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
முன்பொரு காலத்தில் தொண்டைமான் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய பெருமாள் பக்தன். தன்னுடைய அரண்மனையில் தங்கத்தால் செய்த பெருமாளை வைத்து, அனுதினமும் தங்க புஷ்பத்தால், வெள்ளி புஷ்பத்தால், அன்றாடம் பூஜித்து பெருமாளை வழிபடுவது மன்னனுடைய வழக்கமாக இருந்து வந்தது.
வழக்கம்போல ஒரு நாள் காலை எழுந்து மன்னன் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, எப்போதும்போல் பெருமாள் சிலைக்கு முன்பு வந்து அமர்ந்து, தயாராக இருக்கும் பூக்களை எடுத்து பூஜை செய்ய தொடங்கினான். ஆனால், மன்னன் எடுத்துப் போடக் கூடிய தங்க புஷ்பங்களும், வெள்ளி புஷ்பங்களும் வாசனை மிகுந்த மலர்களும் திடீரென்று களிமண் பூக்களாக மாறின.
மன்னன் புஷ்பத்தை எடுத்து பெருமாள் பாதங்களில் முதல் முறை போடும் போது, அந்த பூ, களிமண் பூவாக மாறி பெருமாள் பாதங்களில் விழுகிறது. இரண்டாவது முறை சோதித்து பார்க்கின்றான். இரண்டாவது முறையும், தங்கம் வெள்ளி பூக்களும் களிமண் பூக்கள் ஆகவே மாறுகின்றது. இந்த மன்னனுக்கு ஒரே குழப்பம். சரி என்ன செய்வது. ஆரம்பித்த பூஜையை நிறைவு செய்ய வேண்டும் அல்லவா. பூஜையை அரைகுறை மனதோடு நிறைவு செய்கின்றான். காலையில் இந்த பூஜையை முடித்த மன்னனுக்கு மனதில் ஏகப்பட்ட குழப்பம். ‘தான் செய்த பூஜையில் ஏதாவது தவறு நடந்திருக்குமோ. பெருமாளுக்கு ஏதாவது குறை வைத்திருக்கின்றோமோ’ என்ற ஏகப்பட்ட கேள்விகள் மன்னனின் மனதில் எழுகின்றது.
அன்றைய நாள் முழுவதும் சரியாகவே செல்லவில்லை. மனக் குழப்பத்தோடு அரைகுறை வேலைகளை செய்து எப்படியோ நாளை கடத்தி விட்டான். இரவு தூங்கும்போது பெருமாளை வேண்டிக் கொள்கின்றான். என்னுடைய பூஜையில் ஏதாவது குறை இருந்தால் என் கனவிலாவது வந்து அதை தெரியப்படுத்த வேண்டும், நாராயணா! என்று கூறிவிட்டு தூங்க சென்றான் மன்னன்.
தன்னுடைய பக்தனின் வேண்டுதலுக்கிணங்க பெருமாள், மன்னனுடைய கனவில் தோன்றி ‘உன்னுடைய குழப்பத்திற்கு எல்லாம் விடை தெரிய வேண்டுமென்றால், நீ நாளை பீமாவை போய் காண வேண்டும்’. என்று கூறிவிட்டு, பெருமாள் மறைந்துவிட்டார். மன்னனுக்கு தூக்கமும் கலைந்துவிட்டது. இந்த பீமா யாராக இருக்கும் என்ற குழப்பமும் மன்னனின் மனதில் எழுந்தது.
மறுநாள் அதிகாலை வேளையிலேயே எழுந்த மன்னன் தன்னுடைய வேலை ஆட்களை அனுப்பி, தன்னுடைய நாட்டில் பீமா யார் என்று விசாரித்து, பீமையா வாழும் இடத்தையும் கண்டுபிடித்து விட்டான் மன்னன். இந்த பீமா என்பவன் வயது முதிர்ந்த ஒரு குயவன். குயவன் என்றால் மண்பானை செய்வார்கள் அல்லவா, அவர்களை தான் குயவன் என்று சொல்லுவார்கள்.
இந்த குயவனும் ஒரு பெருமாள் பக்தன் தான். ஆனால் இந்த குயவனால், வாசனை மிகுந்த பூக்களைக் கொண்டு கூட பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய முடியாது. மனதார தினம்தோறும் பெருமாளை நினைத்து வழிபாடு செய்பவன் தான் குயவன்.
குயவனை தூரத்தில் நின்று பார்க்கின்றார் மன்னன். அந்த குயவன் பானை செய்து கொண்டு இருக்கின்றான். பானை செய்யும் போது ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற நாமத்தை உச்சரித்துக்கொண்டே வேலை செய்து கொண்டிருக்கின்றான். அந்த சமயம் பார்த்து அவனுக்கு முன்னால் பெருமாள் காட்சி தருகின்றார். பெருமாளைப் பார்த்து அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன் கையிலிருந்த களிமண்ணில், பூக்களை செய்து பெருமாள் பாதங்களில் போட்டு பெருமாளை வணங்கினான். அந்தக் குயவன்.
மன்னனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கோவில் கட்டி, தங்க பூக்களால் வெள்ளி பூக்களால் அர்ச்சனை செய்த என்னுடைய கண்ணுக்கு பெருமாள் தரிசனம் கொடுக்க வில்லை. ஆனால், சாதாரண குயவன் இவனுடைய பக்திக்கு பெருமாள் காட்சி தருகிறார் என்றால், அந்த குயவனுடைய பக்தியில் எவ்வளவு உன்னதம் இருக்க வேண்டும். என்று நினைத்து, பெருமிதம் அடைகின்றான் மன்னன்.
அந்த மன்னனுக்கு அப்போது தான் புரிந்தது. பக்தி என்பது நாம் இறைவனுக்கு கொடுக்கக் கூடிய பொருட்களில் அல்ல. நம்முடைய சுயநலம் இல்லாத உண்மையான மனதும், சுயநலம் இல்லாத வேண்டுதலுமே உண்மையான பக்தி கானா எடுத்துக்காட்டு என்பதை மன்னன் மனதார உணர்ந்து விட்டான்.
இறைவழிபாட்டிற்கு உண்மையான மனது தான் முக்கியம். ஜாதி மதம் இனம் பணம் காசு இவைகளைப் பார்த்து என்றுமே இறைவன் அருளாசியை கொடுப்பது கிடையாது. இந்த கதையை உணர்த்தும் வகையில், இன்றும் திருப்பதியில் மண்பாண்டங்களில் சில நைவேத்தியங்களை பிரத்தியேகமாக வைத்து பெருமாளுக்கு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
பெருமாள் தரிசனத்தைப் பெற்ற குயவனுக்கு அன்றைய தினம் மோட்சமும் கிடைத்தது. இந்த சம்பவம் நடந்த அந்த நன்னாள் புரட்டாசி மாத சனிக்கிழமை. புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று யார் பெருமாளை நினைத்து கொண்டு, பெருமாள் வழிபாடு செய்து கொண்டே இருக்கிறார்களோ, அவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் கோவிந்தா கோவிந்தா நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.
குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன.
குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். தோல் நோய்கள் குணமாக குப்பைமேனி இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவர வேண்டும்.
குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, 3 மணிநேரம் ஊறவைத்து, கழுவி வரலாம். நீண்ட காலமாக உள்ள தோல் நோய்களுக்கு, குணமாகும்வரை பின்பற்றி வரவேண்டும்.
பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து இதில் 2 அல்லது 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும்.
குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணிநேரம் சென்று குளித்து வர சொறி, சிரங்கு, படை குணமடையும். எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.
குப்பைமேனி செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இலேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க சளி இருமல் கட்டுப்படும்.
படம் ரிலீஸ் ஆனால் சேலை கட்டிக்கிறேன்; சவால் விட்ட மதுரை தி.மு.க பிரபலம், முதல் காட்சி அங்கேயே வெளியிட்ட எம்.ஜி.ஆர்!
மதுரையில் அவர் சேலை கட்டிக்கொள்வதாக பேசியதால், படத்தின் முதல் காட்சி மதுரையில் தான் திரையிடப்பட வேண்டும் என்று முடிவு செய்த எம்.ஜி.ஆர், மீனாட்சி தியேடடரில் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் நடித்த ஒரு திரைப்படம் வெளியானால் நான் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று தி.மு.க பிரமுகர் ஒருவர் சொல்ல, அவரை எதிர்த்து தனது படத்தை மதுரையிலேயே திரையிட்டு வெற்றி கண்டுள்ளார் எம்.ஜி.ஆர். இந்த படம் இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர், தொடர்ந்து 3 முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்த இவர், இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பன்முக திறமையுடன் வலம் வந்தார், திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர், முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா இறந்தவுடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பிறகு 1972-ம் ஆண்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
கட்சி தொடங்கினாலும், சினிமாவில் தனது இருப்பை வைத்திருந்த எம்.ஜி.ஆர், 1973-ம் ஆண்டு உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட்டார். இந்த படத்தின் பணிகள் தொடங்கும்போது ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தினர் படப்பிடிப்புக்கு தடையாக இருப்பார்கள் என்பதால், படத்தின் படப்படிப்பை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கிய எம்.ஜி.ஆர், அந்த படத்தை தானே இயக்கி தயாரித்து நாயகனாக நடித்திருந்தார். படம் பெரிய வெற்றியை பெற்றிருந்துது.
இந்த படத்திற்கு, பல சிறப்பு அம்சங்கள் இருக்கிறது, மதுரையில் முத்து என்பவர் மு.க.அழகிரியை போல் செல்வாக்கு மிகுந்தவர். அவர் ஒரு மேடையில் பேசும்போது, எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் ஆனால் நான் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று ஒரு மேடையில் பேசியுள்ளார். இதனால் படத்தை தடுக்க எதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், இதுகுறித்து விசாரித்தபோது, படத்தின் கலர் பணிகள் நடக்கும்போது அந்த நெகடீவ்களை எரிப்பதற்காக முயற்சிகள் நடப்பதாக தெரியவந்தது.
இந்த மேடைப்பேச்சு முடிந்து சில நாட்கள் கழித்து செய்தித்தாளின், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறி தியேட்டரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இதனால் மதுரை முத்து அதிர்ச்சியாகியுள்ளார். மதுரையில் அவர் சேலை கட்டிக்கொள்வதாக பேசியதால், படத்தின் முதல் காட்சி மதுரையில் தான் திரையிடப்பட வேண்டும் என்று முடிவு செய்த எம்.ஜி.ஆர், மீனாட்சி தியேடடரில் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிட்டுள்ளார்.
திரைப்படம் வெளியாக அரைமணி நேரத்திற்கு முன்பாக, மும்பையில் இருந்து தனி விமானத்தில் படப்பெட்டிகள் வந்துள்ளது. இந்த படப்பெட்டியை யாரும் கைப்பற்றிவிட கூடாது என்பதால், பவுன்சர்களை பாதுகாப்பாக வைத்துள்ளார். மேலும் இந்த படத்தை வெளியிட ஆளும்கட்சியே, தொல்லை கொடுக்கிறது என்பதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏதாவது ஒரு பாட்டு முதல் காட்சியில் வர வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் எம்.ஜி.ஆர். அதற்காக எழுதிய பாடல் தான் ‘வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படி தோற்கின் எப்படை வெல்லும்’.
இந்த பாடல் ஓடும்போது திரையில் அதிமுக கொடி பறக்கும். இந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. தொடர்ந்து 216 வாரங்கள் திரையில் ஓடி வரலாற்று சரித்திரத்தை உருவாக்கியது. மேலும் இந்த படத்தை போஸ்டர் அடிக்காமல் நான் ரிலீஸ் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டதாகவும், நடிகர் பாண்டு டிசைன் செய்த, ஸ்டிக்கர் மூலம் தான் இந்த படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
மருதமலைப் பகுதியில் உள்ள வனங்களில் ஏராளமான விஷப் பாம்புகள் அப்போது இருந்தன. ஜோகி என்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த அந்த இளைஞனுக்குச் சிறுவயதிலிருந்தே ஏனோ பாம்புகளின் மேல் ஓர் ஈர்ப்பு. பாம்புகளைப் பிடிப்பதும் அடிப்பதும் அவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.
ஊருக்குள் நுழைந்துவிடும் விஷப்பாம்புகளைப் பிடிப்பதில் அவன் கைதேர்ந்தவனாக விளங்கினான். மூலிகை வைத்தியத்தால் பாம்பு கடித்தவர்களைப் பிழைக்க வைக்கும் ஔடதமும் எப்படியோ அவனுக்குக் கைவரப் பெற்றது.
ஒரு பாம்புப் பிடாரனாக, பாம்புக் கடி வைத்தியனாக 'பாம்பாட்டி' என ஊர்மக்களிடையே அவன் பிரபலமாகியிருந்தான். பொதுமக்கள் மட்டுமன்றி மூலிகை ஆராய்ச்சிகளுக்காக அந்தப் பகுதிக்கு வரும் வைத்தியர்கள் மற்றும் சித்தர்களிடையேயும் அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் பாம்பு விஷம், அதை முறிக்கும் மூலிகைகள் குறித்து செய்த மருத்துவ ஆராய்ச்சிகளுக்கென பாம்புகளைப் பிடித்துக் கொடுப்பது - அடர் காட்டுக்குள் கிடக்கும் மூலிகைகளை தேடிக்கொண்டு வந்து கொடுப்பது என அவன் அவர்களிடையே நன்மதிப்பைப் பெற்றிருந்தான்.
கொடிய பாம்புகளை எளிதாக வசியம் செய்து அவன் பிடித்து விடுவதையும், ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் பாம்பு விஷத்தை முறையாக எடுத்துக் கொடுப்பதையும் பார்த்த அவர்கள் அவனிடம் ஏதோ ஒரு விசேஷ சக்தி இருப்பதாக தங்களுக்குள் வியப்பை ரகசியமாக வெளிப்படுத்திக்கொண்டனர்.
மருதமலை பாம்பாட்டியின் வசியத்துக்கு சில மலைப்பாம்புகளும் கட்டுப்பட்டது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஒருநாள்...
பாம்பு விஷ முறிவு ஆராய்ச்சிக்கென அங்கு வந்திருந்த வைத்தியர் ஒருவர், பாம்பாட்டியிடம் ஒரு ஆச்சர்யமான தகவலைச் சொன்னார்:
"பிடாரா! மருதமலை உச்சியில் ஓங்கி வளர்ந்திருக்கும் நாகலிங்க மரத்தடியில் நவரத்ன பாம்பு ஒன்று வசித்து வருகிறது. உருவத்தில் மிகவும் சிறியதும் வயதில் மிகவும் மூத்ததுமான அந்தப் பாம்பு சாதாரணமாக மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாது. அதன் தலையில் ஓர் அபூர்வமான மாணிக்கம் உள்ளது. அந்த மாணிக்கத்தின் ஒளியில் இரவில் மட்டுமே அது இரைதேடி, தன் இருப்பிடப் புற்றை விட்டு வேட்டைக்கு வெளியே வரும்! பகலில் மறைந்து விடும்! அந்த நாகமாணிக்கம் பல அபூர்வ சக்திகளைக் கொண்டது! அதன் விஷமே அற்புத அருமருந்து! அதை பத்திரமாக உயிருடன் பிடித்து என்னிடம் கொடுத்து விட்டால் நீ கேட்கும் விலையை நான் கொடுக்கத் தயார்! பாம்பாட்டியான நீ மிகப்பெரிய செல்வந்தனாகி விடலாம்! ஆனால் ஓர் எச்சரிக்கை... கரணம் தப்பினால் மரணம்தான்! அந்த நாகம் சாதாரண பாம்பல்ல!"
பாம்புகளை தன் விளையாட்டுப் பொம்மைகளாகவே நினைக்கும் அவன் சிரித்துக்கொண்டே "அந்த மாணிக்கப் பாம்பை இன்று இரவே பிடித்து வருகிறேன். காத்திருங்கள்'' என்று கூறிவிட்டு, மலை உச்சியில் உள்ள நாகலிங்க மரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
அந்த மலை உச்சியை அடைந்து பக்கத்திலிருந்த ஒரு புதருக்குள் பதுங்கியபடி, பாம்பு வரும் இடத்தை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்... பாம்பாட்டியின் நடமாட்டத்தை பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உணர்ந்து பழகிய பல பாம்புகளும், வழக்கம் போல் பயந்து நடுங்கி புதர்களில் பதுங்கத் தொடங்கின.
பூச்சிகளின் ரீங்காரமும் விலங்குகளின் சத்தமும் காட்டையே அதிர வைத்துக்கொண்டிருந்தன. அன்று அமாவாசை என்பதால் எங்கும் கும்மிருள் அப்பிக் கிடந்தது. புதரில் மறைந்த பாம்பாட்டி, நாகலிங்க மரத்தடியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது மரத்தடியிலிருந்து ஒரு சிறு வெளிச்சம் ஊர்ந்து வருவது தெரிந்தது. பாம்பாட்டி தன் பார்வையை இன்னும் கூர்மையாக்கினான். அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டிருப்பதைப் பார்த்த பாம்பாட்டிக்கு சற்றே வியப்பும் பயமும் மேலிட்டன!
இப்போது அந்த மலைவனமே அதிரும்படி ஓர் உரத்த சிரிப்பொலி எழுந்து அடங்கியது! பாம்பாட்டி பயந்து ஒரு புதருக்குள் பதுங்கினான். சிறிய பாம்பு எப்படி இப்படிச் சிரிக்க முடியும் என்ற குழப்பம் அவனுக்குள் பயமாகப் பரவிக்கொண்டிருந்தது...
"பயம் வேண்டாம் பிடாரா! வெளியே வா! நான் மாணிக்க நாகம் அல்ல. உன்னைப்போல் ஒரு மானிடனே!" என்ற குரல் கேட்டு பயத்தில் உடல் நடுங்க மெள்ளக் கண் திறந்து பாம்பாட்டி அந்த உருவத்தைப் பார்த்தான். ஒளிப் பிழம்பாய் மின்னிய அந்தத் திருமேனியில் திருநீற்று வாசனை வெளியாகி பாம்பாட்டியின் நாசிகளைத் தீண்டியது. அவன் உடல் சிலிர்த்தான். "அய்யா! நீங்கள் யார்?" என்றான் அச்சம் நிறைந்த குரலில்.
"உன் அறியாமை இருளைப் போக்க வந்த வெளிச்சம் நான்! சரி, நீ யார்?" என்றார் அவர்.
"நான் ஒரு பாம்புப் பிடாரன். பாம்புக் கடி வைத்தியன். ஓர் அபூர்வ பாம்பைத் தேடி இங்கு வந்தேன்!"
"நீ தேடி வந்த பாம்பு கிடைத்ததா?"
"எப்படி கிடைக்கும்? நீங்கள் சிரித்த சிரிப்பில் சிங்கம் புலியே நடுங்கிப் பதுங்கியிருக்கும்!"
"உன் அறியாமையை எண்ணியே நான் சிரித்தேன்!"
"அபூர்வ சக்திகள் கொண்ட மாணிக்க நாகத்தைத் தேடி வந்தது அறியாமையா?"
"ஓர் ஒற்றை மாணிக்கக் கல்லைச் சுமக்கும் பாம்பைத் தேடி நீ வந்திருக்கிறாய். ஆனால் நவரத்னமும் சுமக்கும் ஓர் அற்புத நாகம் உனக்குள் இருப்பதை நீ இன்னும் அறியவில்லையே!"
பாம்பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. "அய்யா, இந்தப் பாமரனுக்குப் புரியும்படிச் சொல்லுங்கள்!" என்றான்.
"அந்த அபூர்வ நாகம் உனக்குள் மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்குள்ளும் உண்டு! ஆனால் உன்னைப்போலவே பலரும் அதை உணர்வதில்லை! அதை அறிந்து உணர்ந்து அனுபவித்தவர்கள் சித்தர்கள்! உனக்கு அந்தச் சித்தி கிடைக்கும் நேரம் இப்போது என் வழியாக வந்து விட்டது! இனி பாம்புகளைத் தேடி வெளியே ஓடாதே! குண்டலினி என்னும் அதி அற்புத நாகத்தைப் பிடிக்க உனக்குள்ளேயே பயணம் செய்! நான் உபதேசம் செய்கிறேன். கவனமாகக் கேள். இனி நீ சாதாரண பாம்பாட்டி அல்ல! பாம்பாட்டிச் சித்தன்! இது இறைக்கட்டளை! ஏற்றுக்கொள்!" என அவர் பேசியதைக் கேட்டு நெக்குருகி பாம்பாட்டி நெடுஞ்சான் கிடையாக அவர் பாதங்களைத் தழுவினான்.
அவனுக்கு அங்கேயே ஞானோபதேசம் செய்வித்த அவர், கடைசியாக இப்படிக் கூறினார்: ''பாம்பாட்டியே, இனி நீ பாம்பாட்டிச் சித்தன் எனப் போற்றப்படுவாய்! எம் பெருமானின் நாகாபரணத்தை அணிந்து குண்டலினி சக்தியின் மேன்மைகளை இந்த மானிட குலத்துக்குச் சொல்லும் பதினெண் சித்தர்களில் ஒருவனாக தனித்துவத்துடன் புகழ்பெறுவாய்! உனக்கு உபதேசம் செய்த இந்த எளியோனின் பெயர் சட்டைமுனி!" எனச் சொல்லிப் புன்னகை வெளிச்சம் அடிக்க சட்டென மறைந்தார் சித்தர் சட்டைமுனி!
திருக்கோகர்ணத்தில் பிறந்தார் என்றும் மருதமலையில் உள்ள பழங்குடியினர் மரபில் பிறந்தார் என்றும் பாம்பாட்டிச் சித்தரின் பிறப்பு பற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. 'போகர் - 2000' என்ற நூலில் சித்தர் போகர், இவர் 'ஜோகி' என்ற இருளர் வம்சத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடுகிறார். 'சித்தர் ஞானக் கோவை' நூலோ இவர் 'கோசாயி' என்னும் மலைவாழ் பழங்குடி இனம் எனக் குறிக்கின்றது.
பாம்பாட்டிச் சித்தர் தவம் செய்த குகை 'ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் குகை' என்ற பெயரில் மருதமலையில் உள்ளது.
இவர் ஜீவசமாதி அடைந்த இடங்களாக துவாரகை, மருதமலை, விருத்தாசலம், சங்கரன்கோவில் ஆகிய நான்கு ஊர்களையும் இறுதி சமாதியாக ஐந்தாவது முறை சித்தி அடைந்த இடம் என திருக்கடவூர் மயானம் என்னும் ஆதிக்கடவூரும் குறிப்பிடப்படுகிறது.
பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள பாம்பாட்டிச் சித்தரின் சமாதி பீடத்தை விட்டு வெளியேறும்போது, நம் உடலையும் மனதையும் ஏதோ ஓர் இனபுரியா பேரமைதி ஆட்கொள்கிறது!
ஆழ்தியானத்தில் அமர்ந்து மனம் குவித்து செய்யப்படும் ஜீவசமாதி வழிபாடுகள், மிக மேன்மையான பலன்களை வாழ்வில் வழங்கும் என்கின்றனர் ஆன்மிகத்தில் திளைத்து அனுபவம் பெற்ற ஆன்றோர்!
சித்தர்களின் ஜீவசமாதியில் மனமொன்றி தியானிக்கும்போது மனிதர்களுக்குப் பரு உடல் மறக்கும் 'துரியாதீத நிலை' சம்பவிக்கிறது என்கின்றனர். பௌர்ணமி, ஏகாதசி, பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை போன்ற நிறை நாள்களில் செய்யப்படும் ஜீவசமாதி வழிபாடுகளுக்கு எண்ணற்ற நற்பலன்கள் உண்டெனச் சொல்லப்படுகின்றது.
குருபூஜை முடிந்து சமாதிக் குடிலில் பாம்பாட்டிச் சித்தரை வழிபட்டு, பக்கத்தில் உள்ள தியானக் குடிலில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு, வெளியேறிக்கொண்டிருந்தனர் பல பக்தர்கள். வேறு பலர் உள்ளே வந்துகொண்டிருந்தனர்.
நாம் அங்கிருந்து பிரம்மபுரீஸ்வரர் கோயிலைக் கடந்து நடந்து கொண்டிருந்தோம். 'அரவம் அசைத்த பெருமான்' எனப் போற்றப்படும் பெரிய பெருமானும் பாம்பாட்டி சித்தரும் நம் கண்முன்னே தோன்றி மறைந்தனர். 'சித்தன் வேறு சிவன் வேறு இல்லையே!'
ஒலிபெருக்கியில் பாம்பாட்டிச் சித்தரின் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது !
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புடினுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற வழக்கில், அதாவது வரிகளை இறுதி செய்வது தொடர்பான வழக்கில் நாம் வெற்றி பெற்றால், உலகின் பணக்கார நாடாக நாம் இருப்போம். பேச்சுவார்த்தை நடத்த நமக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. வரிகளைப் பயன்படுத்தி, ஏழு போர்களைத் தீர்த்து வைத்தேன். ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர ஜெலென்ஸ்கி ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டியிருக்கும். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புடினுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
ஐரோப்பா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நான் விரும்பவில்லை. மேலும் அவர்களுக்கு விதிக்கும் தடைகள் போதுமானதாக இல்லை. நான் மேலும் பொருளாதார தடைகளை செய்ய தயாராக இருக்கிறேன். டிக்டாக் தொடர்பாக எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது. நான் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.
வெள்ளிக்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங்யிடம் பேசி எல்லாவற்றையும் உறுதிப்படுத்தப் போகிறேன். நாங்கள் ஒரு நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை செய்துள்ளோம். அது இரு நாடுகளுக்கும் பொருந்தும் என்று நம்புகிறேன். ஆனால் கடந்த காலத்தில் அவர்கள் செய்ததை விட மிகவும் வித்தியாசமான ஒப்பந்தம். அதை வாங்க விரும்பும் மிகப் பெரிய நிறுவனங்களின் குழு எங்களிடம் உள்ளது என டிரம்ப் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் சாதனை படைத்த உசைன் போல்ட், 39, தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமப்படுவதாக வெளியான தகவலை ஒப்புக்கொண்டார்.
ஜமைக்கா தடகள வீரரான உசைன் போல்ட், 39, ஒலிம்பிக் தடகளத்தில் 8 தங்கம் வென்றார். தடகளத்தில் 100 மீ., (9.58 வினாடி), 200 மீ., (19.19) ஓட்டத்தில் உலக சாதனை படைத்து 'மின்னல் வேக மனிதன்' என புகழ் பெற்றார். உலக சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் வென்றுள்ளார். 2017ல் சர்வதேச தடகள அரங்கில் இருந்து விடை பெற்றார். இப்படி பல சாதனை படைத்த உசேன் போல்ட் தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமப்படுகிறார் என செய்திகள் வெளியாயின. இதனை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''நான் இளமையாக இருந்தபோது அது உண்மையில் ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. இப்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது மூச்சு விட சிரமமாக இருக்கிறது. ஒட்டப்போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றதால் உடற் திறன் கணிசமாகக் குறைந்துவிட்டது,'' என்றார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தாய் பற்றிய எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வாகன பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். பரம்பரை சொத்துக்களால் சில விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் மேன்மையான சூழல்கள் உண்டாகும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். வழக்கில் சாதகமான சூழல் ஏற்படும். நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். எழுத்து துறைகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பேச்சுக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைகளால் இருந்த இடையூறுகள் விலகும். நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் விஷயங்களில் தெளிவுகள் பிறக்கும். வியாபாரங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். தோற்ற பொழிவில் மாற்றங்கள் ஏற்படும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெறவும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலக பணிகளில் கவனம் வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
நினைத்து சில பணிகள் முடிவதில் அலைச்சல்கள் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது. வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பம் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
நினைத்த சில காரியத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில யோகங்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். குழந்தைகளால் சிறு சஞ்சலங்கள் வந்து நீங்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிற்கால வாழ்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
துலாம்
சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வெளியூரில் இருந்து இன்பமான செய்திகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைப்பட்ட சில வேலைகள் நிறைவு பெறும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். அன்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். அனுபவம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொதுப்பணியில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். மனதில் நினைத்த ஆசைகள் கைகூடுவதற்கான சூழல் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தனம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். வீடு பராமரிப்பு செலவுகள் உண்டாகும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். தாமதம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
மீனம்
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபார விருத்திக்கான அலைச்சல்கள் மேம்படும். கலைப்பணிகளில் தனித்திறமை வெளிப்படும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் மாற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 1 ஆம் தேதி புதன்கிழமை 17.9.2025.
இன்று அதிகாலை 3.26 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று காலை 09.56 வரை புனர்பூசம். பின்னர் பூசம்
இன்று அதிகாலை 4.22 வரை வரீயான். பின்னர் பரிகம்.
இன்று அதிகாலை 3.26 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 2.48 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.00 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
இயக்குநர் சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அந்த படத்தில் அவர் வடிவேலுவைக் காட்சிப்படுத்தியவிதமும், நகைச்சுவைக் காட்சிகளும் இன்றளவும் சிரிப்புமழையை வரவழைக்கும் விதத்திலானவை.
அந்த படத்த்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் அறை எண் 305-ல் கடவுள், புலி, ஒரு கண்ணியும் 3 களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து வெற்றிக்கூட்டணியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்துக்காக வடிவேலுவுடன் இணைந்தார். ஆனால் அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். அதனால் அந்த படம் கைவிடப்பட்டது.
சமீபத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் ‘போட்’ என்ற படம் வெளியானது. அந்த படம் பெரிய தாக்கத்தை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஏற்படுத்தவில்லை.
தற்போது சிம்புதேவனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விமல் கதாநாயகனாக நடிக்க தனது அடுத்த படத்தை இயக்க உள்ளாராம் சிம்புதேவன். இந்த படத்தை சிம்பு தேவனே தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
1. காகத்தை போல என்றும் ஒற்றுமையாக இரு.
சனீஸ்வரன் அருகில் வரமாட்டார்.
2. நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு.
பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித் தருவார்..
3. ஆந்தையை போல தீமையிடம் பாதுகாப்பாக விழித்திரு
லட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்.
4. சிங்கத்தை போல வீரமாக தைரியத்துடன் இரு.
பார்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள்...
5. அன்னப்பறவை நீரையும் பாலையும் பிரிப்பதை போல அறிவுள்ள நல்ல மனிதர்களுடன் நட்புக் கொள்.
. சரஸ்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள் ...
6. எலி போல தொழிலில் ஊழல் செய்யாமலிரு வினைகளை அழிக்கும்.
விநாயகர் உன் வீடு தேடி வருவார்...
7. மயிலை போல மகிழ்ச்சியில் எப்பொழுதும் தோகை விரித்தாடு.
அழகன் முருகன் உன் வீட்டினில் அவதாரிப்பான்...
8. உன் மனம் உலக பிரச்னைகளை கடந்து வானத்தில் கருடனை போல பறக்கட்டும்
அப்பொழுது கண்ணன் வருவான் அகத்திற்கு...
9. தீமை எல்லாவற்றிக்கும் அஞ்சாத காளையாய் எதிர்த்து நில், உலகை படைத்த
ஜோதியான தந்தை ஈசனே வருவார் உன் வாழ்வினில் என்றும் துணை நிற்பதற்கு...
இரவு நேரத்தில் திடீர் கால் தசை பிடிப்பு ஏற்படுதா? இது சாதாரணம் அல்ல!
பலருக்கும் இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று கால் தசைகள் நெரித்து பிடிக்கிற மாதிரி வலி வரும்.
அதை “Night Leg Cramps” அப்படின்னு சொல்றாங்க.
இது ஒரு சிறிய பிரச்சினை மாதிரி தோன்றினாலும், உண்மையில் உங்கள் உடல் சில முக்கியமான சத்துக்கள் குறைவாக இருக்குற சைகை.
---
இரவு நேர கால் தசை பிடிப்பு வரும் முக்கிய காரணங்கள்
Magnesium குறைவு – தசைகளுக்கு தளர்ச்சி தரும் சத்து குறைந்தால், சுருங்கும் வலி வரும்.
Potassium குறைவு – இரத்தத்தில் பொட்டாசியம் குறையும்போது தசை நெரிசல் ஏற்படும்.
Calcium பற்றாக்குறை – எலும்புகளோடு சேர்த்து தசை ஆரோக்கியத்துக்கும் அவசியமான சத்து.
Dehydration (நீர் குறைவு) – உடலில் நீர், Electrolytes குறையும்போது தசைகள் சரியாக வேலை செய்யாது.
இரத்த ஓட்ட பிரச்சினைகள் – இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் தசைகள் சுருங்கும்.
நீண்ட நேரம் அமர்ந்து/நின்று வேலை செய்வது – தசைகளுக்கு ஓய்வு கிடைக்காமல் வலி தரும்.
---
இதை குறைக்க என்ன செய்யலாம்?
தினமும் போதுமான அளவு நீர் குடிக்கவும்.
Magnesium, Potassium, Calcium நிறைந்த உணவுகளை சாப்பிடவும்:
– வாழைப்பழம் , – பசலைக் கீரை , – பருப்பு, விதைகள் , – பால், தயிர்
படுக்கைக்கு முன் சிறிய Stretching Exercises செய்யவும்.
அதிக உப்பு/கஃபீன் (coffee, tea) குறைக்கவும்.
வலி வரும் போது குளிர்ந்த நீர்/சூடான நீர் கம்பிரஸ் (compress) செய்யலாம்.
---
கவனிக்க வேண்டியது
அடிக்கடி, மிகக் கடுமையான கால் தசை பிடிப்பு இருந்தால் சர்க்கரை நோய், நரம்பு பிரச்சினைகள், அல்லது தசை நோய்கள் கூட காரணமாக இருக்கலாம்.
அப்படி இருந்தால் மருத்துவரிடம் கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும்.
---
முக்கியமான விடயம்
“இரவு நேர கால் தசை பிடிப்பு சாதாரணமில்லை. அது உங்கள் உடலின் சைகை!
சத்துக்கள் நிறைந்த உணவு, போதுமான நீர், சிறிய உடற்பயிற்சி – இவையே தீர்வு.”
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதில் இருந்த கவலைகள் விலகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணை இடம் இருந்த வருத்தங்கள் நீங்கும். உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சக வியாபாரிகளால் அனுகூலம் ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட பணிகள் முடியும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். மனதளவில் புதுவிதமான பாதைகள் புலப்படும். உழைப்புக்கான அங்கீகாரங்கள் ஏற்படும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மிதுனம்
சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபார பணிகள் சுமாராக நடைபெறும். பணி சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
கடகம்
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். பயனற்ற செலவுகளை குறைப்பது நல்லது. முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் மேம்படும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து நட்புகளை வைத்துக் கொள்ளவும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சிம்மம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். செயல்பாடுகளில் இருந்த எதிர்ப்புகள் விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் ஏற்படும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். தடைப்பட்ட சில பயணங்கள் கைகூடும். கோபம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சாம்பல்
கன்னி
குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு குறித்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். காப்பீடு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். அச்சம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
செயல்பாடுகளில் ஒரு விதமான படபடப்பு ஏற்படும். முதலீடுகள் விஷயங்களில் பொறுமை காக்கவும். மனதளவில் தன்னம்பிக்கை குறையும். உறவுகள் இடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். தடைகளால் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். வர வேண்டிய வரவுகள் தாமதமாகி கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல்கள் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
புதுமையான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். தொழிலில் அலைச்சல்கள் உண்டாகும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். கடன் விஷயங்களில் இருந்த இழுபறிகள் மறையும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். சிரமம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
தனுசு
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் நட்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். கூட்டாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். சோதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். பழைய சரக்குகள் மூலம் லாபங்கள் மேம்படும். கால்நடை சார்ந்த துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். புதுவிதமான வியூகங்கள் மனதில் உருவாகும். தடைப்பட்டு வந்த சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கம் வீட்டார் பற்றிய புரிதல் மேம்படும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வெளியூர் சார்ந்த பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்