·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 47
  • More

மீசாலை சோலை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல்

மீசாலை சோலை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல்

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாகும். சமூக பணிகளில் இருப்பவர்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். வங்கி விஷயங்களை எவரிடத்திலும் பகிராமல் இருக்கவும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆக்கபூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். பயணம் சார்ந்த எண்ணம் ஈடேறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். இன்பம் நிறைந்த நாள்.

 அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருள்களால் கையிருப்புகள் குறையும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. புதிய கலைகள் தொடர்பான தேடல்கள் உருவாகும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

சிம்மம்

நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். அரைகுறையாக நின்ற பணிகளை முடிப்பீர்கள். பழுதடைந்த வாகனங்களை சீர் செய்வீர்கள். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

 

கன்னி

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். தொழில் சார்ந்த ஆலோசனைகள் மூலம் மாற்றம் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

துலாம்

குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும். வரவுக்கு மீறிய சில செலவுகள் ஏற்படும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சகோதரர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் ஆர்வம் உண்டாகும். பாசம் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

விருச்சிகம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மேல்நிலைக் கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

தனுசு

மனதை உருத்திய சில பிரச்சனைகள் குறையும். பிற மக்களால் ஆதாயம் அடைவீர்கள். காரசாரமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். செய் தொழிலில் முயற்சிக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டிகள் தொடர்பான செயல்பாடுகளில் புதிய அனுபவம் ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மகரம்

பாசன விஷயங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுபகாரியம் சார்ந்த செயல்களை முன்னின்று நடத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

கும்பம்

எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பழைய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். பணி சார்ந்த சில தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மீனம்

மனதில் புதுவிதமான நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். நண்பர்களின் உதவியினால் நீண்ட நாட்களாக இருந்து வந்த கவலைகள் குறையும். வியாபாரம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். சினம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

  • 92
·
Added a post

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 8.7.2025.

இன்று அதிகாலை 12.03 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று அதிகாலை 02.30 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று இரவு 10.49 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று அதிகாலை 12.03 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 12.48 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=43&dpx=1&t=1751941980

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 132
·
Added a post

1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்.. நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!

•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்

•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.

•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை உடல் எடையை குறைக்க முடியும்…!!!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.

சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.

உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்

19. சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தயிர்

மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தேன்

1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சூப்புடன் சீரகப் பொடி

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி

எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்

சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

  • 145
·
Added a post

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை வாக்குவாதம் முற்றிவிட்டது.

“நீயெல்லாம் இருந்து என்ன ஆகப்போகிறது.. ஒரு வேலைக்கும் லாயக்கில்லாமல் இருப்பதைவிட ஒழிந்து தொலை!” என்று ஆவேசமாகத் திட்டிவிட்டு, அலுவலகத்துக்குச் சென்று விட்டார்.

இத்தனைக்கும் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லக் கூடியவர்கள்தான். கணவனின் மனக்குழப்பம் அப்படிப் பேசவைத்துவிட்டது. வீட்டில் நடக்க இருக்கும் விபரீதம் புரியாமல் அவர் பணியில் ஆழ்ந்து விட்டார்.

மாலையில் வீடு திரும்பியபோது தெருவில் இருக்கும் சிறுவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு மண்ணைக் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டுக் கதவு ‘ஆ’வென திறந்து கிடந்தது. வீட்டில் இருக்கும் நாய்க் கூண்டு காலியாக இருந்தது.

திகைப்போடு வீட்டுக்குள் நுழைந்தால், களேபரம் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. தொலைக்காட்சியில் கார்ட்டூன் நிகழ்ச்சி சத்தமாக அலறிக் கொண்டிருந்தது. விளக்கு ஒன்று கீழே தள்ளி விடப்பட்டிருந்தது. தரை விரிப்பு ஒரு சுவரின் அருகே ஒழுங்கின்றி கிடந்தது.

அறை முழுவதிலும் விளையாட்டு பொம்மைகளும் பல்வேறுபட்ட துணிகளும் இறைந்து கிடந்தன.

சமையலறைக்குள் மெதுவாக எட்டிப் பார்த்தார். சாமான் கழுவும் தொட்டியில் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மேடையில் காலைச் சிற்றுண்டி சிந்திக் கிடந்தது.

குளிரூட்டும் பெட்டியின் கதவு அகலமாகத் திறந்திருந்தது. அதில் இருந்த நாய்க்கான உணவு தரையில் சிந்தியிருந்தது. மேஜையின் அடியில் ஓர் உடைந்த கண்ணாடி தம்ளர் இருந்தது.

பின்கதவின் அருகில் ஒரு மணல்மேடு காணப்பட்டது. ஏதோ நடத்திருக்கிறது. மதிய உணவு வேளைக்கு முன்பே தன் மனைவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று உள்மனம் சொன்னது. கணவருக்குப் படபடப்பு அதிகமானது.

ஹாலை ஒட்டி இருந்த குளியலறையை நோக்கித் திரும்ப, அங்கும் அதிர்ச்சிக் காட்சிகள். உள்ளே தண்ணீர் சொட்டும் சப்தம், நிசப்தத்தை மேலும் திகிலாக்கியது.

கதவைத் தாண்டி வெளியே வந்து தண்ணீர் குட்டை போல தேங்கிக் கிடந்தது. ஈரத் துண்டுகளும், தண்ணீரில் ஊறிப்போயிருந்த சோப்புக் கட்டியும், மேலும் பல விளையாட்டு பொம்மைகளும் குளியலறை தரை முழுவதும் சிதறிக் கிடந்ததைக் கண்டார்.

மைல் கணக்கில் நீளமான டாய்லட் காகிதம் ஓரத்தில் குவியலாகக் கிடந்தது. கண்ணாடியின் மீதும் சுவர்கள் மீதும் பற்பசை பூசப் பட்டிருந்தது.

‘டாடி’ என்ற குரல் கேட்டு, திடுக்கிட்ட கணவர் தனது ஒன்றரை வயது மகன் பேஸ்ட்டைப் பிதுக்கி விளையாடிக் கொண்டிருப்பதைச் கணித்து அவனை அவசரமாகத் தூக்கி ஆழ்ந்த முத்தம் கொடுத்து அணைத்துக் கொண்டார்.

கண்களில் நீர் பொங்கியது. மனைவிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என்ற பீதியுடன் அவளைத் தேடினார்.

படுக்கையறையை நோக்கிப் பார்வை திரும்ப, அவசரமாக அதன் கதவைத் திறந்தார். உள்ளே.. முதுகுக்கு தலையணை கொடுத்து, ஒய்யாரமாக சாய்ந்திருந்த அவரது மனைவி, ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

‘ஸ்வீட்டி’ என்றார், உலர்ந்த நாக்குடன், அவரைப் பார்த்து புன்னகை புரிந்த மனைவி, “எப்போ வந்தீங்க” என்று கேட்டாள்.

அதிர்ச்சியிலிருந்து மீளாத கணவர், “இன்று வீட்டில் என்னதான் நடந்தது?” என்று கேட்டார்.

மறுபடியும் சிரித்த மனைவி, “வீட்டிலே என்னதான் வெட்டி முறிச்சியோ.. என்று அலுவலகம் முடிந்து வந்தவுடன் நீங்கள் கேட்பது வழக்கம். இன்று ஒன்றும் வெட்டி முறிக்கவில்லை! அதுதான் நடந்திருக்கிறது” என்று கூறினாள்.

செல்லாத காசிலும் செப்பு இருக்கும் என்பார்கள். யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இயல்பாகச் சில விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதாலேயே அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாத குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

வீட்டில் இருந்து என்னத்தான் கிழிக்கிறாயோ என வீட்டில் இருக்கும் மனைவிகளை கேட்கும் கணவர்கள் சிந்திக்க வேண்டும்.

  • 148

Good Morning...

  • 148
·
Added a news

கனடாவில் தப்பிச் சென்ற கைதி ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1992-ஆம் ஆண்டு கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி ஒருவர் இவ்வாறு தப்பியுள்ளார்.

கியூபெக்கிலுள்ள ஆர்செம்பெல்ட் Archambault சிறையிலிருந்து தப்பியதைத் தொடர்ந்து, அவரை பிடிக்க நாடு தழுவிய அளவில் பிடிவிராந்து உத்தரவு (Canada-wide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது. லோரீ பில் ஜெர்மா (Lory Bill Germa) என்ற 69 வயதான கைதியே இந்த தப்பிச் சென்றுள்ளார். அவர் தற்போது ஒண்டாரியோ மாகாணத்தின் தென் பகுதியில் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 5 அடி 8 அங்குலம் உயரமான நபர் சுமார் 165 பவுண்ட் எடையுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள், இந்த நபரை காணும்போது அருகில் செல்ல வேண்டாம், அல்லது அவரிடம் நேரடியாக பேச்சு கொடுக்கவேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.உடனடியாக 911-ஐ அழைத்து தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நபர் கொலைக்குற்றவாளி என்பதால், மிகவும் ஆபத்தானவர் என்றும், பொதுமக்கள் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

  • 401
·
Added a post

பூண்டு தோலை உரித்து விட்டு அதை குப்பையில் தான் தூக்கி போடுவோம். குப்பையில் தூக்கி போடக்கூடிய பூண்டு தோலில் இத்தனை மகத்துவமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சில அரிய தகவல்களைத் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பூண்டுக்கு மருத்துவ குணம் இருப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. அதே போல் தான் பூண்டு தோலிலும் அதிகப்படியான மருத்துவ குணம் உள்ளது. குப்பையில் போடக்கூடிய இந்த பூண்டு தோலை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றிய குறிப்புகளை தெரிந்து கொள்ளவோமா. ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த குறிப்புகளை படித்து பலன் பெறலாம்.

இனிப்பூண்டு தோலை உரித்தால் அதை ஒரு துணி பையில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வாருங்கள். உங்களுடைய வீட்டில் பண்டிகை தினங்களில் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைப்பதற்கு பூண்டு தோலை உரிக்கும் போது கவனமாக அதை பத்திரப்படுத்தி வையுங்கள். அப்போதுதான் குறிப்புக்கு பயன்படுத்த முடியும். பூண்டுக்கு மேலே இருக்கும் லேசான தோல், உள்ளே உரிக்கக்கூடிய தோல் எல்லாமே பயன் தருவது தான்.

முதல் குறிப்பு:

இன்றைய சூழ்நிலையில் வேலை பளு காரணமாக நிறைய பேருக்கு தலைபாரம், தலைவலி, மன அழுத்தம் வருகிறது. சில பேருக்கு தலையில் நீர் கோர்க்கக்கூடிய பிரச்சனை இருக்கும். அதாவது தலைக்கு குளித்தாலே அவர்களுக்கு தலைபாரம் வந்து விடும். இப்படிப்பட்டவர்களுக்கு இந்த குறிப்பு. சேகரிக்கப்பட்ட பூண்டு தோலை ஒரு துணி பையில் போட்டு ஒரு முடிச்சு போட்டு தலையணை போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கும் போது இந்த பூண்டு தோல் தலையணையில், தலை வைத்து படுத்தால் உங்களுடைய தலைபாரம் குறையும். மன அழுத்தம் குறைந்து தலை லேசானது போல ஒரு உணர்வு ஏற்படும். ஒருபோதும் பூண்டு தோலை பிளாஸ்டிக் கவரில் போட்டு, தலைக்கு வைத்து படுக்கக் கூடாது. துணி பையை தான் பயன்படுத்த வேண்டும். பழைய தலையணை உறை இருந்தாலும் அதன் உள்ளே, பூண்டு தோலை போட்டு தலையணை போல தயார் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது குறிப்பு:

தலைக்கு குளித்த பின்பு அந்த காலத்தில் எல்லோருமே சாம்பிராணி தூபம் போடுவார்கள். காரணம் சாம்பிராணி தூபத்திலிருந்து வெளிவரக்கூடிய புகை தலை பாரத்தை குறைக்கும். குழந்தைகளுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு சளி பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் இந்த காலத்தில் யாருமே அந்த சாம்பிராணி புகை பக்கம் போவதே கிடையாது. கேட்டால் புகை அலர்ஜி என்று சொல்கிறார்கள்.

தலைக்கு குளித்த பின்பு கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் சாம்பிராணி தூபம் போடுவது மிகவும் நல்லது. சாதாரணமாக இருப்பவர்கள் கூட சாம்பிராணி தூபம் போடலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. உங்களுக்கு சாம்பிராணி தூபம் போடுவது அலர்ஜி இல்லை என்றால் இந்த குறிப்பா ட்ரை பண்ணி பாருங்க. வழக்கம் போல கொட்டாங்குச்சியில் நெருப்பு மூட்டி அதில் சாம்பிராணி தூபம் போட்டு புகையை வர வையுங்கள். கூடவே பூண்டு காம்புகள், பூண்டு தோல்களை அந்த நெருப்பில் கொஞ்சம் போட்டு விடுங்கள். சாம்பிராணி தூபத்தோடு இந்த பூண்டு தோலும் கருகி புகை வரும் அல்லவா. அந்தப் புகையை, தலைக்கு குளித்த பின்பு, தலைமுடிக்கு காட்டலாம். தலைக்கு குளித்த பின்பு குழந்தைகளுக்கும் இந்த தூபத்தை காட்டலாம். கர்ப்பிணி பெண்களுக்கும் இந்த பூண்டு தோல் சாம்பிராணி தூபத்தை காட்டலாம். அவர்களுக்கு தலைபாரம் சளி தொந்தரவு வராமல் இருக்க இந்த பூண்டு தோல் தூபம் பயன்படும்.

மூன்றாவது குறிப்பு:

சில பேருக்கு சுவாச பிரச்சனை, மூக்கடைப்பு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருக்கும். தொடர்ச்சியான இருமல் இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சின்ன குறிப்பு. ஒரு சிறிய காட்டன் துணியில் இந்த பூண்டு தோலை வைத்துக் கொள்ளுங்கள். அதை முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். ஒரு தோசை கல்லை நன்றாக அடுப்பில் வைத்து சூடு செய்துவிட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். சூடாக இருக்கும் தோசை கல்லின் மேலே இந்த பூண்டு தோலை வைத்து விட வேண்டும். பூண்டு தோல் நன்றாக சூடான பின்பு இந்த முடிச்சை எடுத்து முகரும் போது நமக்கு ஒரு நல்ல வாசம் வரும். அந்த பூண்டு தோலில் வாசத்தை சுவாசிக்கும் போது நமக்கு மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

சிறு குழந்தைகளுக்கு தீராத இருமல் பிரச்சனை உள்ளது என்றால் இந்த முடிச்சை கொடுத்து லேசாக முகர சொல்லுங்கள். அப்படி இல்லை என்றால் அவர்கள் தூங்கும்போது அவர்களுடைய தலையணைக்கு பக்கத்தில் சூடு செய்து முடிச்சை வைத்து விடுங்கள். அதிலிருந்து வெளிவரும் வாசத்தை சுவாசித்தாலே போதும். பெரியவர்களும் இதே போல இந்த முடிச்சில் இருந்து வெளிவரும் வாசத்தை சுவாசிக்கும் போது சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

  • 432
·
Added a post

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி ரெயில் நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ராணுவ மருத்துவர் மேஜர் டாக்டர் ரோஹித் பச்வாலா, ஹேர் கிளிப் மற்றும் பாக்கெட் கத்தி உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளார்.

பன்வேல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண் ஜான்சி நிலையத்தில் இறக்கியபோது, அவருக்குப் பிரசவ வலி அதிகமானது. இதை அறிந்த மேஜர் பச்வாலா உடனடியாகச் செயல்பட்டு, ரெயில்வே ஊழியர்களின் உதவியுடன் நடைமேடையிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.சிகிச்சைக்கான சரியான கருவிகள் இல்லாத நிலையில், தொப்புள் கொடியை இறுக்க ஹேர் கிளிப்பையும், வெட்ட பாக்கெட் கத்தியையும் பயன்படுத்தியதாக மேஜர் பச்வாலா தெரிவித்தார். இதன் பின் தாய் மற்றும் குழந்தை இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அவசரச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த பிறகு, மேஜர் பச்வாலா தனது அடுத்த ரெயிலை பிடித்து ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். மருத்துவர்களாக, நாங்கள் எப்போதும் அவசரகால சூழ்நிலைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

  • 439
·
Added a post

பேச்சாளர் சுகிசிவம் ஐயா ஒரு ஊருக்கு பேச சென்று இருந்தார். அப்பொழுது தேநீர் அருந்த ஒரு இல்லத்திற்கு அழைக்கப்பட்டார். அங்கு சென்ற அவர் குடிக்க ஒரு டம்ளர் பால் கேட்டு இருக்கிறார். குடும்ப பெரியவர் தன் மகனை அழைத்து அம்மாவிடம் சென்று குடிக்க பால் வாங்கி வா என்று பணிக்க. பையன் வேண்டா வெறுப்பாக சமையல் அறை சென்று அம்மாவிடம் பால் வாங்கி வந்து, ஐயா முன்னே இருக்கும் மேசை மேல் வேகமாக வைத்தான், பால் டம்பளர் ஆடியது.

உடனே சுகி சிவம் ஐயா பையனை பார்த்து, அப்பா பால் ஆடுது! என்றாராம்.

உடனே பையன் கோபத்தில் இல்லை பசுவோடது ! என்றானாம்.

  • 445
·
Added a post

மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் கோஹரா என்ற கிராமத்தில் பிறந்தவர் மகேஷ் தாஸ். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாத்தா ருப்தார் ஒரு சமஸ்கிருத பண்டிதர். பேரனுக்கு வளமான கல்வியை வழங்கினார். கூர்மையாகச் சிந்திக்கக்கூடியவராக வளர்ந்தார் மகேஷ் தாஸ்.

பேச்சுத்திறனில் அசாத்திய திறமை பெற்றிருந்தார். எந்த விஷயத்தையும் நுணுக்கமாகப் பார்த்து, அதன் உட்கூறு களைப் புரிந்துகொள்வதில் அவருக்கு இணையாக இன்னொருவரைச் சொல்வது கடினம். தன்னுடைய சாதுரியம் நிறைந்த நடவடிக்கைகளால் தான் சந்திக்கும் எவரையும் வசீகரித்துவிடுவார். அவர் பேச ஆரம்பித்துவிட்டாலே கூட்டம் கூடிவிடும்.

முகலாயப் பேரரசர் அக்பர் ஒருமுறை தன்னுடைய குதிரைகள் பூட்டிய ரதத்தில் நகரை வலம்வந்து கொண்டிருந்தார்.

ஓரிடத்தில் மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். மன்னர் வருவதைக் கூடக் கவனிக்காமல் வேறு எதையோ ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். வீரர்கள் புகுந்து கூட்டத்தை ' விலக்கினர். அங்கே மகேஷ் தாஸ் உற்சாகம் நிறைந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்.

நகைச்சுவை. குறும்பு. சாதுரியம். கிண்டல் கேலி எல்லாம் கலந்த கலவையாக இருந்தது மகேஷ் தாஸின் பேச்சு. சில நிமிடங்நிகளிலேயே அந்தப் பேச்சு அக்பரையும் கவர்ந்துவிட்டது.

'உங்களுடைய பேச்சும் புத்திசாலித்தனமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆக்ராவுக்கு வரலாம். அரண்மனையில் என்னைச் சந்திக்கலாம். இதோ, இந்த மோதிரத்தை வைத்துக்கொள்ளுங்கள் .இதை அரண்மனைக் காவலரிடம் காட்டினால் நீங்கள் என்னைச் சந்திக்க அனுமதி கிடைக்கும்' என்று சொல்லிவிட்டு அக்பர் புறப்பட்டார்.

மகேஷ் தாஸுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன்னுடைய ஏழைமை நீங்க வழி கிடைத்துவிட்டதாக நினைத்து ஆனந்தம் அடைந்தார். அடுத்த சில நாள்களிலேயே ஆக்ராவுக்குக் கிளம்பினார் அரண்மனை வாசலிலேயே இரண்டு காவலர்கள் மறித்து என்ன ஏதென்று விசாரித்தனர்.

'மன்னரைச் சந்திக்கவேண்டும். அவர்தான் என்னை வரச் சொன்னார்.'

மகேஷ் தாஸின் எளிய தோற்றமும் கிழிந்த ஆடைகளும் காவலர்களைச் சந்தேகம் கொள்ளவைத்தன.

'மன்னர் உங்களை வரச் சொன்னாரா? அதற்கு என்ன சாட்சி?'

'இதோ.'..... அக்பர் அளித்த மோதிரத்தை எடுத்து, காவலர்களிடம் காட்டினார். காவலர்கள் அசந்து போனார்கள். எப்படியும் அக்பரைச் சந்திப்பார். பெரிய பெரிய பரிசுகளுடன் திரும்புவார் என்று நினைத்தனர்.

'சரி, உங்களை உள்ளே அனுமதிக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. மன்னர் அளிக்கும் சன்மானத்தில் பாதியை எங்களுக்கு தந்துவிட வேண்டும். சம்மதமா?'

- 'சம்மதம்' என்று சொல்லிவிட்டு அக்பர் இருந்த அவையை அடைந்தார் மகேஷ் தாஸ்.

- அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அக்பர் அடையாளம் கண்டுகொண்டார்.

'உங்களைச் சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. உங்களுக்குப் பரிசு கொடுத்து வரவேற்புக் கொடுக்க விரும்புகிறேன். என்ன வேண்டுமோ கேளுங்கள்' என்றார்.

'எனக்கு நூறு சாட்டையடிகள் வேண்டும் ஷாயென்ஷா' என்றார் மகேஷ் தாஸ்.

அவையில் இருந்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. மகேஷ் தாஸ் இப்படி விஷமமாகச் சொல்கிறார் என்றால் உள்ளே வேறு ஏதோ விஷயம் இருக்கிறது என்று புரிந்துகொண்டார் அக்பர்.

'என்ன நடந்தது சொல்லுங்கள்' என்றார்.

மகேஷ் தாஸ் வாயில் காவலர்களுக்கு அளிக்க வேண்டிய பாதி சன்மானத்தைப் பற்றிச் சொன்னார். அந்தக் காவலர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தலா ஐம்பது சாட்டையடிகள் வழங்கப்பட்டன.

'நான் உங்களுக்குப் பொருளாக எதுவும் கொடுக்கப்போதில்லை. இனி நீங்கள் என்னுடன்தான் இருக்கவேண்டும் அரண்மனையிலேயே உங்களுக்கு வேலை கொடுத்திருக்கிறேன். இனி உங்களுடைய பெயர், பீர்பால்!'

தென்னாட்டில் தெனாலிராமன் போல வடநாட்டில் பீர்பால் அவர்கள் கூர்த்த மதி கொண்டவர் ஆர்த்தெழும் பிரச்சனைகளை எல்லாம் சாத்தும் சொற்களால் சரி செய்தவர்.

கூர்ந்த மதியும் நகைச்சுவை உணர்வும் கொண்ட மகேஷ் தாஸுக்கு 'பீர்பால்'என்று பெயர் சூட்டியவர் அக்பர். சிந்திக்கவும் சிரிக்கவும் செய்யும் பீர்பால் கதைகள் இன்று வரை மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன.

  • 463

நகைச்சுவைக்காக மட்டுமே....

  • 458
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதில் இனம் புரியாத குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத வகையில் செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை காணப்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் காலதாமதமாக கிடைக்கும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

ரிஷபம்

தனவரவுகள் தேவைக்கு இருக்கும். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் குறையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

மிதுனம்

பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உற்பத்தி விஷயங்களில் பொறுமை வேண்டும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கால்நடைகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. மறதி பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கடகம்

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

பழைய நினைவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தடைப்பட்ட சில வரவுகள் சாதகமாகும். முக்கியமான பொறுப்புகள் சாதகமாகும். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் நிமித்தமான பயணம் மேம்படும். அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

கன்னி

உடன் இருப்பவர்கள் மூலம் ஒத்துழைப்புகள் மேம்படும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திறமைக்கேற்ப பாராட்டுக்களும், அங்கீகாரங்களும் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

துலாம்

வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிக்கலான பணிகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பேச்சுக்களில் பொறுமையை கையாள்வது நல்லது. தன வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். இரக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

விருச்சிகம்

எதிர்பார்த்திருந்த சில உதவிகள் காலதாமதமாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புது விதமான சிந்தனைகள் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் மற்றும் புரிதல்கள் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

தனுசு

பத்திரிகை துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். மனதில் இருக்கக்கூடிய பல விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

கும்பம்

நினைத்த காரியத்தை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் பயணங்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உருவாகும். அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

மீனம்

புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத செலவுகள் மூலம் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

  • 718
·
Added a post

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை 7.7.2025.

இன்று முழுவதும் துவாதசி .

இன்று அதிகாலை 12.05 வரை விசாகம். பின்னர் அனுஷம்.

இன்று இரவு 10.49 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று அதிகாலை 05.57 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=42&dpx=1&t=1751855739

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 01.15 முதல் 02.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 726

Good Morning...

  • 724
·
Added a video

Burlington downtown lakeside beach

  • 854
North York திருச்செந்தூர் முருகன் கோய
  • 917
·
Added a post

பல விதமாவன மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதை விட, ஒரு வில்வம் கொண்டு அர்ச்சனை செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்பார்கள்.

1வில்வ இலைகள் ஆன்மிக அதிர்வலைகளை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இவற்றை பூஜைக்கு பயன்படுத்திய பிறகு வீட்டிலும், நாம் பயன்படுத்தும் பணப் பைகளிலும் வைக்கும் போது தெய்வீக தன்மை அங்கும் நிறையும். பல விதமான ஆன்மிக மற்றும் மருத்துவ குணங்களைக் கொண்ட வில்வ இலை பற்றி பலரும் அறியாத முக்கியமான 15. விஷயங்கள் இதோ...

வில்வம் காய்ந்த நிலையில் இருந்தாலும் அதனை அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம். இதனால் சகல பாவங்களும் விலகும்.

2. ஒரு முறை அர்ச்சனைக்கு பயன்படுத்திய வில்லத்தை, மறுநாள் தண்ணீரில் சுத்தம் செய்து, மீண்டும் அர்ச்சனைக்கு பயன்படுத்தினாலும் தோஷம் கிடையாது. வில்வத்தை பறித்து ஐந்து நாட்கள் வரை பூஜைக்கு பயன்படுத்தலாம்.

3. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பலவகை உண்டு. இவற்றில் மூன்று இதழ்கள் கொண்ட வில்வத்தையே பூஜைக்கு பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் கொண்ட வில்வங்களை பயன்படுத்துவது மிகவும் சிறப்பானது.

4. மகா சிவராத்திரி நாளில் சிவ பெருமானுக்கு வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து, வில்வாஷ்டகம் பாராயணம் செய்து வழிபட்டால் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

5. ஒரு வில்வம் கொண்டு பூஜை செய்வது ஒரு லட்சம் தங்க மலர்களால் பூஜை செய்ததற்கு சமமாகும். வில்வத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

6. வில்வ மரத்தை வீட்டிலும், கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

7. வில்வத்தை பறித்து ஆறு மாதம் வரை வைத்து பூஜை செய்யலாம். சிவ அர்ச்சனைகளில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரக் கூடியது.

8. வீட்டில் வில்வ மரம் வளர்ப்பது ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனையும், கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் நீராடிய பலனையும், 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலனையும் தரக் கூடியது.

9. வில்வ மரத்தில் காற்றை சுவாசித்தாலோ, அதன் நிகழ் உடலில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும். முறைப்படி விரதமிருந்து வில்வ மரத்தை பூஜித்தால் அனைத்து விதமாவன நன்மைகளும் கிடைக்கும்.

10. வீட்டில் வில்வ மரம் வளர்ப்பவர்களுக்கு நரகம் ஏற்படாது. எம பயம் ஒரு போதும் அவர்களை அணுகாது.

11. வில்வம் பழத்தின் சதையை நீக்கி விட்டு, அதன் ஓடுகளை குடுவை ஆக்கி அதில் விபூதியை வைத்து பயன்படுத்துவது சிவ கடாட்சத்தை அளிக்கும்.

12. வில்வ இலையை பறிக்கும் போது பய பக்தியுடன்,

நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே

ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே

ஸம்ஸ - ர விஷவைத்யஸ்ய ஸ - ம்பஸ்ய கருணாநிதே:

அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே"

என்று மந்திரத்தை சொல்லிக் கொண்டே பறிக்க வேண்டும்.

13. வில்வத்தை சிவமூலிகைகளின் சிகரம் என்றும் அழைப்பார்கள். வில்வ இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்தி வந்தால் கண் பார்வை சீராகும். வில்வ இலை மனஅழுத்தங்களையும் குறைக்கும் தன்மை கொண்டதாகும்.

14. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட வில்வம், மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகளை நீக்கும். பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம் ஆகியவற்றையும் தீர்க்கக் கூடியதாகும்.

15. சிவ பெருமானுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை. இது வெப்பம் நிறைந்ததாகும். இதனால் சிவனின் உஷ்ணத்தை தணிப்பதற்காகவே வில்வத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறார்கள். சிவபெருமானின் இருப்பிடமான இமயமலையும் பனி நிறைந்த பகுதி என்பதால் பக்தர்களுக்கு ஏற்படும் சளி போன்ற பிரச்சனைகளை குணமாக்க வில்வம் பிரசாதமாக தரப்படுகிறது.

  • 946
·
Added a news

தென் அல்பர்ட்டாவில் உள்ள க்ளென்வுட் பகுதியில், 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். க்ளென்வுட் நகரின் மேற்கே சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் கைவிடப்பட்டடிருந்த நிலையில் ஒரு வாகனம் இருப்பதாக மவுண்டீஸ் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த வாகனத்துக்குள் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் குறித்த பிரதே பரிசோதனை (autopsy) நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தகவல் தெரிந்தவர்கள் உடன், கார்ட்ஸ்டன் RCMP காவல் நிலையத்தை 403-653-4931 என்ற எண்ணிலும், அல்லது இரகசியமாக தகவல் வழங்க விரும்புவோர் 1-800-222-8477 என்ற Crime Stoppers எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 956
·
Added a post

1. "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"

சரியான பழமொழி :

"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

விளக்கம் :

இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.

கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.

இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.

2. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.

சரியான பழமொழி :

ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - .

3. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.

சரியான பழமொழி :

படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான்

4. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.

சரியான பழமொழி :

ஆயிரம் வேரைக் (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் -

5. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - .தவறு.

சரியான பழமொழி :

நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு -

( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )

6. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் -தவறு.

சரியான பழமொழி :

அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். -

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.

மாறுவோம்...பிறரை மாற்றுவோம்.

  • 957
·
Added a post

முருங்கைக் கீரையை அதிகம் வேக வைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அதனை அளவாக வேக வைத்து பதமாக சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள இரும்புச்சத்து முதல் அனைத்துச் சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும்.

ஆனால், அகத்திக் கீரை இதற்கு நேர் எதிரானது. அதனை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது. அதனை நன்றாக வேகவைக்க வேண்டும். ஏனெனில் அகத்தியில் இரும்புச்சத்து உள்ளிட்டவை மிக நிறைவாக உள்ளன. அது நமது செரிமானத்துக்கு தாங்காது. ஆடு போன்ற விலங்கினங்களால்தான் அதனை பச்சையாகவும் அரைவேக்காடாகவும் சாப்பிட இயலும். மென்மையான சீரண மண்டலம் கொண்ட மனிதர்களாகிய நாம் அகத்திக் கீரையைச் சாப்பிட வேண்டுமானால் அதனை நன்றாக வேக வைக்க வேண்டும்.

இதுவே இப்பழமொழி சொல்லும் நேரடிப் பொருள். ஆனால், இது போலத்தான் ஒரு செயல் அல்லது ஒரு பொருள் ஒருவருக்கு குறைவாகத் தேவைப்படும்.

இன்னொருவருக்கு அதிகமாகத் தேவைப்படும். அதிகம் தேவைப்படுபவர் குறைவாக கிடைத்தாலும் நஷ்டமடைவார்.

குறைவாகத் தேவைப்படுபவர் அதிகம் கிடைத்தாலும் கையாளத் தெரியாமல் சிரமப்படுவார்..

இதனையே இப்பழமொழி உள்ளர்த்தமாகக் குறிக்கிறது.

  • 959
·
Added article

உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப்பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.

அக்கவிதையே அவர் எழுதிய கடைசி கவிதை.

மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு

மழலைகள் தமிழ் பேச செய்து வைப்பீர்

தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற

தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!

  • 964
·
Added a post
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.
  • 967
·
Added article

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது அந்த ஊட்டி சம்பவம்.

ஆக்சிஜன் குறைவான இடங்களில் அதிகமாக உடற்பயிற்சி செய்யக்கூடாது.

இதை எங்களுக்கு உணர்த்தியது

நடிகர் முத்துராமனுக்கு நேர்ந்த எதிர்பாராத முடிவு.

கல்லூரி காலத்தில் (1981) எங்களை கலக்கமும், அதிர்ச்சியும் அடையச் செய்தது பத்திரிகைகளில் வந்த அந்தச் செய்தி.

“முத்துராமன் செத்துப் போயிட்டாராம்."

இதை அறிந்து நாங்கள் அதிர்ந்து போனோம். ஏனெனில் எக்ஸர்சைஸ் எல்லாம் செய்து, ஒழுங்காக தன் உடலைப் பராமரித்து வந்தவர் நடிகர் முத்துராமன்.

அதிலும் ஊட்டிக்கு ஷூட்டிங் போன இடத்தில் உடற்பயிற்சி செய்து, அதனால்தான் அவர் உயிர் இழந்து போனார் என்று செய்தித்தாளில் படித்தபோது...

எக்ஸர்சைஸ் மீதே எங்களுக்கு நம்பிக்கை கொஞ்சம் குறைந்து போனது.

அதனால் ஹாஸ்டலில் தினமும் காலையில் எக்ஸர்சைஸ் செய்து வந்த நண்பர்களின் எண்ணிக்கையும் கூட, கொஞ்சம் குறைந்துதான் போனது.

ஆனால் அதன் பின் நடிகர் சிவகுமார் எழுதியிருந்ததைப் படித்தபோதுதான்,

முத்துராமன் உயிர் இழந்ததற்கான உண்மையான காரணம் தெரிந்தது.

ஆக்சிஜன் குறைவான மலைப்பிரதேசங்களில், அளவுக்கு அதிகமாக எக்ஸர்சைஸ் செய்யக் கூடாதாம்.

அதை மீறி உடல் பயிற்சி செய்ததுதான் முத்துராமன் உயிர் இழந்ததற்கான உண்மையான காரணமாம்.

இதுபற்றி நடிகர் சிவகுமாரின் பதிவிலிருந்து :

“1981 - அக்டோபர்- 16 -ந்தேதி .

காலை 6.30 மணி.

ஊட்டி - கால்ப் காட்டேஜ்

'ஆயிரம் முத்தங்கள்' - படத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தேன் .

உதவியாளர் ஓடிவந்து 'சார்,முத்துராமன் சார் ரோட்ல மயக்கமா கிடக்கறார் சார்' என்றார். ஓடிச்சென்று காரில் ஏற்றி ஊட்டி டாக்டரிடம் காட்ட,

“உயிர்போய் அரைமணி ஆகிவிட்டது” என்றார்.

மீண்டும் காட்டேஜ்.

காரிலிருந்து உடம்பை நிமிர்த்தி இறக்கும்போது அவர் மூச்சுக்காற்று ‘குபுக்’கென என்மேல் பட,

“அய்யோ உயிரோட இருக்கறவரை செத்துப்போயிட்டார்னு டாக்டர் சொல்லிட்டாரே... அண்ணா, அண்ணா எழுந்திருங்கண்ணா” என்று நானும் நடிகை ராதா, அவர் அம்மா, மூவரும் யூகலிப்டஸ் ஆயிலை அவர் உடம்பு முழுக்க பூசி தேய்த்தவாறு கதறினோம். அவர் பேசவில்லை . போய்விட்டார்.

ரத்த அழுத்த நோய் பல ஆண்டுகளாக அவருக்கு ; படத்தில் ராதாவுக்கு அப்பாவாக நடிக்க வந்தவர் -

நான் முதல் நாள் காலை ஓடியதைப் பார்த்து ஆர்வத்தில் ஓடியிருக்கிறார்.

ஊட்டியில், 7000 அடி உயரத்தில் அதிகாலையில், பனிமூட்டம் அதிகம் இருக்கும்போது, ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் ஓடியவர் மூச்சுத்திணறி விழுந்து விட்டார் .”

சிவகுமார் சொன்னதைப் படித்தபோது மனம் கொஞ்சம் கனத்துத்தான் போனது.

ஊட்டிக்கு ஷூட்டிங் புறப்படும்போது முத்துராமன் நினைத்திருப்பாரா ?இங்குதான் தன் வாழ்க்கை முடியப் போகிறது என்று.

முத்துராமன் நடித்த 'நெஞ்சில் ஓர் ஆலயம்' பாடல் நினைவுக்கு வருகிறது :

எங்கே வாழ்க்கை தொடங்கும்

அது எங்கே எவ்விதம் முடியும்

இதுதான் பாதை

இதுதான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது.”

ஆம் .

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

தெய்வம் ஏதுமில்லை.

எவரும் எதிர்பாராமல் முத்துராமனின் வாழ்க்கைப் பயணம் முடிந்தது, 1981 ல், அக்டோபர் 16 அதிகாலையில்தான்.

  • 973
·
Added a post

பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவித நாக பந்தம் துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் அனைத்து விதமான நாக தோஷங்களும் நீங்கும்.

நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது.

இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. அதற்கு பொருள் செலவு அதிகமாகும். ஏழை-எளியவர்களால் அந்த பரிகாரத்தை செய்ய இயலாது. அத்தகையவர்கள், செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது

செலவுகள் வைக்கும் வழிகளை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவித நாக பந்தம் துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.

முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும். அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை

பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று. அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.

நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.

தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை

  • 972