·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 834
  • More

கண்மணியே காதல் என்பது

பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி

இசையமைப்பாளர்: இளையராஜா

திரைப்படம்: ஆறிலிருந்து அறுபது வரை

பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண்

: மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…

காலமும் வந்ததம்மா…

நேரமும் வந்ததம்மா…

பெண்

: பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…

பாடிடும் எண்ணங்களே…

இந்தப் பாவையின் உள்ளத்திலே…

ஆண்

: பூவிதழ் தேன் குலுங்க…

சிந்தும் புன்னகை நான் மயங்க…

பெண்

: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…

சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…

ஆண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

பெண்

: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

பெண்

: பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…

காரணம் நீயறிவாய்…

தேவையை நானறிவேன்…

ஆண்

: நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…

வாலிபம் தந்த சுகம்…

இளம் வயதினில் வந்த சுகம்…

பெண்

: தோள்களில் நீயணைக்க…

வண்ணத் தாமரை நான் சிரிக்க…

ஆண்

: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…

தோரணமாய் ஆடிடுவேன்…

பெண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

ஆண்

: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

பெண்

: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…

காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

Comments (0)
Login or Join to comment.
  • 39
·
Added a post

திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.

1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

2.திருமலை ஏழுமலையானுடைய பிரசாதம், உடைந்த மண்சட்டியில் வைத்துப் படைக்கப்படும் தயிர்ச்சோறு ஆகும். இப்படி ஒரு பிரசாதப்படையல், வேறு எந்த கடவுளுக்கும் படைக்கப்படுவதில்லை.

3.தற்போதுள்ள செயற்கையான பச்சைக்கற்பூரத்தை, தொடர்ந்து சிலவாரங்கள், கருங்கல்லில் தடவினாலே வெடிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இந்த பச்சைக்கற்பூரத்தை, எத்தனைநாட்கள் ஏழுமலையான் சிலையில் தடவினாலும், சிலையில் வெடிப்புகள் ஏற்படுவதில்லை.

4.திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் உண்மையான பெயர், "மனோஹரம்" என்பதாகும். 2−8−1715 அன்று தொடங்கி, லட்டு, ஏழுமலையானுக்குப் படைக்கப்பட்டது. 1803ஆம் ஆண்டு முதல்,பக்தர்களுக்கு, பூந்தி வடிவில் விநியோகிக்கப்பட்டது. காலப்போக்கில்தான் லட்டு வடிவிலான மனோஹரம் பிரசாதமாக, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

5.திருமலை ஏழுமலையானுக்குக், கண்களை மறைத்தபடி, நாமமிடுவது சமீபகாலமாகத்தான் உள்ளது. நெடுங்காலமாக, கண்களை மறைக்காமல்தான் நாமமிடப்பட்டு வந்துள்ளது.

6. திருமலை ஏழுமலையானுக்குரிய நித்யானுஷ்டான பூஜை கைங்கர்யங்களை வரையறுத்துக் கொடுத்தவர் ஸ்ரீராமானுஜர் ஆவார்.

7.திருமலை ஏழுமலையானுடைய சிலை, நவீன கால மெஷின் பாலீஷ்போட்ட சிலைகளைப் போலவே, ஆதிகாலந்தொட்டு அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். கருங்கல்சிலைகளில், இந்தஅளவு மினுமினுப்பான சிலை, இந்த சிலையாகத்தான் இருக்கக்கூடும்.

9.திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆனிமாதம்,தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி நாட்களில் தர்பார் நடத்தப்படுகிறது. ஆனிமாத தர்பாரின்போது, கோவில் வரவு−செலவுக்கணக்கு ஏழுமலையானிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. பிறகு, ஏழுமலையானின் ஒப்புதல் பெற்றதாகப் பாவித்து, கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் புதிதாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த சிறப்பு வைபவமும், இங்குமட்டும்தான் நடைபெறுகிறது.

10. திருமலை ஏழுமலையானுடைய சிலையிலுள்ள சிற்பசாஸ்திர நுட்பங்கள், சிற்பக்கலை வல்லுநர்களுக்கே, அதிசயமாகவும், ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கின்றன.

11. சென்னை ஆளுநராக இருந்த சர்.தாமஸ் மன்ரோ, திருமலை ஏழுமலையானுக்கு, தினமும்,தயிர்ச்சோறு, சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு, தன் சொந்த பணத்தில், நைவேத்தியக்கட்டளை ஏற்பாடு செய்தார். இந்த அறக்கட்டளை இன்றும் தொடர்கிறது. இன்றைக்கும் காலை 11.30 மணிக்குக் கோவில் மணி அடிக்கப்பட்டு, மன்ரோ பெயர் படிக்கப்பட்டு, நைவேத்தியம் செய்யப்படுகிறது.

12. திருமலை ஏழுமலையானுக்குச் சாற்றப்படும் வஸ்திரம், 21 முழ நீளமும்,5 கிலோ எடையுமுள்ள பட்டு பீதாம்பரமாகும். இதை தயாரிப்பதற்கென்றே சென்னையில் தனிக்கடையே உள்ளது. இந்த வஸ்திரம், ஏழுமலையான் கோவில் அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும். இவ்வளவு பெரிய வஸ்திரம் சாற்றப்படும் கடவுள் ஏழுமலையானே ஆவார்.

12. ஏழுமலையான் கோவிலில், முன்பு, வெள்ளிக்கிழமை தோறும், அர்ச்சனைக்கு வில்வஇலை பயன்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, தற்போது, மார்கழிமுழுவதும், வில்வ அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. வில்வஇலை சிவஅர்ச்சனைக்குரியது. வில்வம் அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும், ஒரே வைணவஆலயம் ஏழுமலையான் கோவில் மட்டுமே.

13. சிவராத்திரியன்று, ஏழுமலையானுக்கு, "ஷேத்ரபாலிகா" உற்சவம் நடத்தப்படுகிறது. அன்று மூலவருக்கு, வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சார்த்தப்பட்டு, வீதியுலா நடைபெறுகிறது.

14.ஏழுமலையான் சிலைக்கு எண்ணெய்க்காப்பு சாற்றப்படுவதில்லை; புனுகுக்காப்பு சாற்றப்படுகிறது.

15.ஏழுமலையானுக்கு முன்பு, பன்னீர் அபிஷேகமும், மஞ்சள் அபிஷேகமும் நடத்தப்பட்டு வந்தன. சுமார் ஐநூறாண்டுகளுக்கு முன்பு பன்னீர் அபிஷேகமும், சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு மஞ்சள் அபிஷேகமும் நிறுத்தப்பட்டுவிட்டன.

16. ஏழுமலையான் கோவிலில் சாத்துமுறை தென்கலை; ஆனால், கோவில் நிர்வாகம் வடகலையினர் வசமுள்ளது.

17. தாள்ளபாக்கம் அன்னமய்யா என்பவர், ஏழுமலையான் மீது 32000 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இது ஒரு சாதனை நிகழ்வாகும்.

18. ஏழுமலையான் கோவிலில், மூவகை லட்டுகள் புழக்கத்திலுள்ளன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு என்ற இருவகை லட்டுகளும், 750கிராம் எடையில், அதிகளவில் முந்திரி, திராட்சை, உள்ளிட்ட பொருட்களுடன் உயர்தரமான முறையிலும், குறைவான அளவிலும் தயாரிக்கப்படுபவை. இவை, பெரும்பாலும், பிரமுகர்களுக்கே தரப்படுபவை. சராசரியான "புரோக்தம்" லட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதன்எடை 175 கிராம் ஆகும்.

19. திருமலை 3000அடி உயரத்திலுள்ள குளிர்ப் பிரதேசமாகும். ஆனால், ஏழுமலையான் சிலையின் வெப்பம் மட்டும், 110டிகிரி ஃபாரன்ஹீட்டிற்குக் குறைவதே கிடையாது. இது, இன்றளவும் அதிசயமான நிகழ்வாகவே உள்ளது.

20. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடையுடையது; இதை ஏழுமலையானுக்குச் சாற்ற 3 அர்ச்சகர்கள் தேவை. சூரியகடாரி என்ற ஆபரணம் 5 கிலோ எடையுடையது. இவை போல, அரிதான பல நகைகள், ஏழுமலையானுக்குக் குவிந்துள்ளன. அரியநகைகள் தவிர, சாதாரண நகைகளும் அமோகமாக உள்ளன. இவற்றைச் சேமிக்க இடமோ, ஏழுமலையானுக்கு உடுத்த நேரமோ இல்லாமல் இருப்பதால், சாதாரண நகைகளை மட்டும், ஆண்டிற்கு ஒருமுறை பத்திரிக்கைகளில் விளம்பரஞ்செய்து ஏலம் விடுகிறார்கள்.

21. உலகிலேயே அரிதான ஒற்றைக்கண் நீலம் என்ற அரிய ரத்தினக்கல், ஏழுமலையான் கோவிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயாகும்.

22. ஏழுமலையான் கோவிலின் தலமரம் புளியமரம்.

23. ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் கிடையாது; கொண்டாட்டம் மட்டும் உண்டு.

24. ஏழுமலையான் கோவிலினுள், கொங்கணச் சித்தர் சமாதியும் உள்ளது. ஆனால், எங்குள்ளது என்பதில் குழப்பம் நிலவுகிறது.

25. வெளிநாடுகளில் இருந்து, பூசனைப் பொருட்கள் வருவிக்கப்படும் ஒரே பெருமைக்குரிய கோவில் ஏழுமலையான் கோவிலே ஆகும். (எ.கா) சீனப் புனுகு, நேபாளக் கஸ்தூரி, நெதர்லாந்து ரோஜா.

26. ஏழுமலையானுக்குத் தினசரி , ஒருமுறை அபிஷேகத்திற்கான குறைந்தபட்ச செலவு, தற்போதைய நிலவரப்படி ஒருலட்சம் ரூபாய் ஆகும்.

  • 139
·
Added a post

வட தேசத்தில் சோம்நாத் அருகில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் எழுந்தருளியிருக்கும் ஒரு ஷேத்திரத்தில் ஒரு பூக்காரி வசித்து வந்தாள்.அவள் கிருஷ்ண பரமாத்மாவிடம் மிகுந்த பக்தி கொண்டவள். அவள் பிரதி தினம் வாசனை மிகுந்த பூக்களைப் பறித்து தன் கூடையை நிரப்பிக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரின் ஆலயத்திற்கு வந்து, அங்கு நுழை வாசலில் இருக்கும் படியில் கூடையை வைத்து விட்டு பகவானை வணங்கி பிரார்த்தனை செய்து விட்டு வியாபாரம் செய்யச் செல்வாள். அந்த ஆலயத்தின் சன்னதித் தெருவில் தன் கடையில் அமர்ந்து,தான் பறித்து வந்தபூக்களை மாலையாகக் கட்டி, கடை வாசலில் தொங்க விடுவாள். அவளுடைய மாலைகள் அழகுடனும், நறுமணத்துடனும் காணப்படும். அதனால் அவை வெகுவிரைவில் விற்பனையாகி விடும்.

அந்த பூக்காரி , அனுதினமும், ஆலயம் மூடப்படுவதற்கு முன், ஒரு பூமாலையைக் கட்டி எடுத்துக் கொண்டு பகவானின் முன்னால் போய் நின்று விடுவாள். அர்ச்சகர் அந்த மாலையை வாங்கி பகவானுக்கு அணிவித்து தீபாராதனை செய்து, துளசி தீர்த்தம் கொடுப்பார். அனேகமாக பகவான் தரிசனத்திற்கு கடைசியாக வருபவள் அவளாகத்தான் இருக்கும். அவள் சென்ற பிறகு தான் ஆலயம் மூடப்படும்.

அன்று விசேஷ தினம். வழக்கத்தை விட பூ வியாபாரம் அதிகமாக இருந்தது. மும்மரமாக வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தபடியால் அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. ஆலயத்திலிருந்து திடீரென்று வந்த மணி யோசையிலிருந்து விரைவில் ஆலயம் மூடப்படப் போகிறது என்பதை உணர்ந்தாள்.

"வியாபாரத்தில் கவனமாக இருந்து பகவானின் காணிக்கையை மறந்து விட்டோமே" என்று பரபரப்புடன், ஒரு மாலை கட்டினாள். அவள் சிறிதும் எதிர்பார்க்காதவாறு அந்த மாலை மிகவும் அழகாக அமைந்து விட்டது. அதை எடுத்துக் கொண்டு ஆலயத்திற்கு ஓடினாள் பூக்காரி. அர்ச்சகர்கள் இரவு பூஜையை முடித்துக் கொண்டு பகவானின் சன்னதியை மூடிவிட்டு வாசல் பக்கம் வந்து விட்டனர்.

ஸ்வாமி, இன்று எதிர்பாராத வகையில் தாமதமாகி விட்டது. வழக்கம் போல் இந்த மாலையை பகவானுக்கு அணிவித்து தீபாராதனை செய்யுங்கள்" என்று வேண்டினாள்.

" பூஜை முடிந்து யதாஸ் தானம் செய்து விட்டோம். இனிமேல் சன்னதியைத் திறக்க முடியாது. நாளை காலையில் கொண்டு வா, உன் விருப்பப்படியே பகவானுக்கு சாத்துகிறோம்" என்றார் அர்ச்சகர் .

"ஸ்வாமி, காலைக்குள் இந்த மாலை வாடிவிடும். தயவு செய்து இதை இன்றே பகவானுக்கு அணிவியுங்கள்" என்று மன்றாடினாள்.

" இதை யாருக்காவது விற்பனை செய்துவிடு. நாளை வேறு ஒரு மாலை கட்டிகொண்டு வா" என்றார் அர்ச்சகர் .

"பகவானுக்கு என்று படைக்கப்பட்ட " காணிக்கை" இது. அவருக்கே போய்ச் சேர வேண்டும். தயவு செய்து மறுக்காதீர்கள்" என்று வேண்டினாள் பூக்காரி. அர்ச்சகர்கள் மறுத்துவிட்டு ஆலயத்தின் முன் வாசலை மூடிக் கொண்டு சென்று விட்டனர். பூக்காரி வாசல்படியில் அமர்ந்து கண்ணீர் விட்டாள். தன் மாலையை அணிவித்து தரிசனம் செய்ய முடியாமல் போய் விட்டதே என்று வருந்தினாள். மூடப்பட்ட ஆலயத்தின் கதவுகளில் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் திருவுருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. பூக்காரி , பகவானைப் பிரார்த்தனை செய்து விட்டு தான் கொண்டு வந்த மாலையை கதவில் இருக்கும் பகவானின் மீது அணிவித்து விட்டுத் தன் இருப்பிடம் சேர்ந்தாள்.

மறுநாள் விடியற்காலையில் அர்ச்சகர்கள் ஆலயத்திற்கு வந்து வழக்கம் போல் தங்கள் பணிகளை செய்ய ஆரம்பித்தனர். ஒரு அர்ச்சகர் தீர்த்தம் கொண்டு வரச் சென்றார். மற்றொருவர் முன் தினம் திருமேனிச் சிலையில் அணிவித்த மாலைகளை எடுக்க ஆரம்பித்தார். அநேகமாக எல்லா மாலைகளையும் எடுத்து விட்டார். கடைசியாக ஒரே ஒரு மாலை மட்டும் பகவானின் திருக்கழுத்தில் இருந்தது. அர்ச்சகர் அதை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.இழுத்துப் பார்த்தார். அந்த மாலை அசைந்து கொடுக்கவில்லை.

" மாலையைக் கழற்றி, வஸ்திர, ஆபரணங்களை அகற்றிவிட்டு பிறகு தானே அபிஷேகம் செய்ய முடியும். ஆனால் ஒரு மாலையை மட்டும் கழற்ற முடியவில்லையே" என்று அர்ச்சகர் தவித்தார். தீர்த்தம் கொண்டு வரச் சென்ற அர்ச்சகரும் திரும்பி வந்து விவரம் அறிந்து செய்வதொன்றும் புரியாமால் நின்றார். அதற்குள் ஸ்வாமி தரிசனத்திற்குப் பக்தர்கள் பலர் ஆலயத்திற்கு வர ஆரம்பித்தனர்.

அபிஷேகம் தடைபட்டிருப்பதற்கான காரணத்தை அறிந்து அவர்கள் அதிசயத்தார்கள்."ஏதோ அபசாரம் நடந்து இருக்கிறது. அதனால் தான் பகவான் சோதனை செய்கிறார். என்று எண்ணினார்கள். அர்ச்சகர்களுக்கு முதல் நாள் இரவு, காலதாமதம் செய்து வந்த பூக்காரியின் நினைவு வந்தது.

"அவள் நேற்று கொண்டு வந்த மாலையல்லவா இது? நாம் கதவை மூடிக் கொண்டு சென்று விட்டோமே, எப்படி இது பகவானின் திருக்கழுத்தில் வந்தது? என்று புரியாமல் தவித்தனர்.

ஆலயத்திற்கு வந்த பக்தர்கள், "அந்தப் பூக்காரியை உடனே அழைத்து வாருங்கள்" என்றனர். அர்ச்சகர் பூக்காரியை தேடிக் கொண்டு சென்றார். வழக்கம் போல் அவள் பூந்தோட்டத்தில் பூக்களைப் பறித்து கொண்டிருந்தாள். அர்ச்சகர் அவளைச் சந்தித்து, நடந்தவற்றைக் கூறி, "நீ உடனே ஆலயத்திற்கு வர வேண்டும். இல்லாவிட்டால் பகவானின் பூஜை அப்படியே நின்று விடும். என்றார்.

பூக்காரி ஆலயத்திற்கு ஓடி வந்து சன்னதியில் நின்றாள். முதல் நாள் இரவு ஆலயத்தின் வாசல் கதவில் மாட்டிவிட்டுப் போன மாலை எப்படி உள்ளே இருக்கும் பகவானின் திருக்கழுத்திற்கு வந்தது என்று புரியவில்லை.

" உண்மையான பக்தியுடன் செலுத்தப்படும் காணிக்கையை பகவானே தானே ஏற்றுக் கொண்டு விடுவார். அதை யாரலும் தடுக்க முடியாது" என்று அங்கு குழுமியிருந்த பக்தர்கள் கூறினார்கள். அர்ச்சகர் பகவானுக்கு அர்ச்சனை செய்தார். கற்பூரம் ஏற்றினார். அதன் ஒளியில் பகவானின் மார்பில் இருந்த மாலை மேலும் அழகாக ஜ்வலித்தது.தீபாராதனை செய்து பூக்காரிக்கு துளசி தீர்த்தம் கொடுத்தார்.

"பகவனே, இனிமேலாவது தடையின்றி அபிஷேகம் செய்ய அனுக்கிரகம் செய்" என்று அர்ச்சகர் பிரார்த்தித்தவாறு பகவானின் திருக்கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றினார். அது சுலபமாக அவர் கைக்கு வந்து விட்டது. பூக்காரியின் உண்மை பக்தியைக் கண்டு அனைவரும் பாராட்டினார்கள்.

உண்மை பக்தி எங்கு, எவரிடத்தில் இருந்தாலும் பகவான் அதை ஏற்றுக் கொள்வார் என்பதற்கு இந் நிகழ்வு சான்றாகும்.

  • 140
·
Added a post

தினமும் காலையில் மற்ற எந்த உணவை சாப்பிடுவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் முளைவிட்ட கொள்ளு அல்லது கொள்ளை கொண்டு செய்யப்பட்ட சூப் அருந்துவதால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

தினமும் கொள்ளினை உணவில் சேர்த்து வருபவர்களின் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.

பிரசவ அழுக்கை வெளியேற்றும்...

கொள்ளு பருப்பை வறுத்து பொடி செய்துகொண்டு, ஒரு டம்பளர் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் ஒரு டீஸ்பூன் கொள்ளு பவுடர் மற்றும் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்கவைத்து மறுநாள் காலை பருகி வர ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைவதை உணரமுடியும்.

கொள்ளு சூப் அல்லது கொள்ளு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை தினமும் ஒரு முறை அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வருவதால் அவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைக்கப் பெற்று, அவர்களின் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. எனவே கொள்ளு தானிய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.

  • 145
·
Added a post

மிக பெரிய இண்டஸ்ரியலிஸ்ட் அவர்....

வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தி அவருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அவர் அதற்கு எந்தவித வாக்குவாதமோ ஆட்சேபனையோ தெரிவிக்காமல் சத்தமில்லாமல் செலுத்திவிட்டு சென்றார்.

வருமான வரி அலுவலர்களுக்கோ ஒரே ஆச்சரியமும் அதிர்ச்சியும்.

நாம் தான் சரியாக ரெய்டு பண்ணவில்லை போலும் என நினைத்து அவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பினார்கள் கணக்கில் தவறுள்ளதால் அதற்கு அபராதமாக இரண்டு கோடி என தெரிவிக்கவும் அவரும் மௌனமாக வந்து இரண்டு கோடி அபராதத்தை செலுத்திவிட்டு நன்றி கூறி சென்றார்.

மீண்டும் வருமான வரி அலுவலர்களுக்கு ஆச்சரியம்.

சரி இப்போது ஐந்து கோடிக்கு ஏதோ ஒரு காரணம் கூறி நோட்டீஸ் அனுப்பினர்.

அடுத்த நாள் காலையில் ஒரு லாரியை அலுவலகம் முன் நிறுத்திய தொழிலதிபர்

அலுவலர்களிடம்,"அடிக்கடி என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.

இதோ லாரியில் எனது மிஷினை கொண்டு வந்துள்ளேன்.

உங்களுக்கு தேவையான அளவு அச்சடித்துக் கொண்டு மிஷினை உடனே திருப்பி தரவும் என்றார்..

  • 145
·
Added article

 உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு எம்.ஜி.ஆர். சென்றிருந்தார். அப்போது தனது நண்பர் ஒருவரை பார்க்க காரில் சென்று கொண்டிருந்த போது

 ‘நாயர் டீ ஸ்டால்’ என்கிற போர்ட்டை பார்த்ததும் ஆச்சர்யப்பட்டு காரை நிறுத்த சொல்லி, அந்த கடைக்கு சென்றார். அந்த கடையின் முதலாளியிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவருக்கு ஆச்சர்யம் கலந்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் யார் தெரியுமா?…

எம்.ஜி.ஆர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு முன் சென்னையில் அம்மாவுடன் வறுமையில் வாடிய போது சென்ட்ரல் பகுதியில் தங்கியிருந்தார். ஒருநாள் வீட்டில் சமைக்க கூட அரிசி இல்லை. அப்போது, அவரின் வீட்டுக்கு அருகே குடியியிருந்த ராமன் குட்டி என்பவர் ஐந்து ரூபாயை கொடுத்து உதவினார். அந்த பணத்தில்தான் அன்று அவர்கள் உணவு அருந்தினர். இதை எம்.ஜி.ஆர் மறக்கவே இல்லை.

எம்.ஜி.ஆர் எப்படி பலருக்கும் உதவி செய்தாரோ அதுபோல அவர் கஷ்டப்படும் காலத்தில் அவருக்கு பலரும் உதவி செய்துள்ளனர். அந்த எண்ணம்தான் அவரை பின்னாளில் வள்ளலாக மாற்றியது.

 ஏழ்மையில் அவரின் குடும்பம் வாடிய போது அவருக்கு பலரும் உதவியுள்ளனர். நாடகத்தில் நடித்து வந்த போதும் அவர் சினிமாவில் நுழையவும் அவருக்கு பலரும் உதவினர்.

நாடகத்தில் நடித்து சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அதன்பின் ஹீரோவாக நடிக்க துவங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து நாட்டின் முதலமைச்சராகாவும் மாறியவர்.

அந்த ராமன் குட்டிதான் ஜப்பானை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து டோக்கியோவில் டீ கடை வைத்திருக்கிறார் என்பது தெரிந்ததும் எம்.ஜி.ஆர் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார். வறுமையில் வாடிய போது உதவிய ராமன் குட்டியின் கையில் அவர் போதும் போதும் என சொல்கிற அளவுக்கு பொருள் உதவி செய்துள்ளார் எம்.ஜி.ஆர்.

  • 151
·
Added a post

முருகனை பாலமுருகன் என்றும், கிருஷ்ணனை பாலகிருஷ்ணன் என்றும் குழந்தையாக பாவித்து வழிபடுவதைப் போலவே, அம்பிகையையும் பாலாம்பிகையாக வழிபடுவது மிகவும் விசேஷம்.

ஒன்பது வயது சிறுமியாகக் காட்சி அருளும் பாலாம்பிகை, சித்தர்கள் வழிபாட்டில் வாலையாக வழிபடப்படுகிறாள். மேலும் சித்தர்கள் வாலையை மனோன்மணி என்றும் அழைக்கின்றனர். திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் காலசம்ஹார மூர்த்தி சந்நிதியில் காட்சி அருளும் பாலாம்பிகையை, அபிராமிபட்டர் தம்முடைய அபிராமி அந்தாதி ஐந்தாவது பாடலில், ஞான நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மனோன்மணி என்று போற்றிப் பாடியுள்ளார்.

அழகு ஆபரணத்தில் தோன்றியவள்

ஸ்ரீலலிதாம்பிகையின் ஆபரணத்திலிருந்து வித்யை மற்றும் ஞானத்தின் வடிவமாகக் குழந்தை வடிவில் அவதரித்தவள் பாலாம்பிகை. நிகரற்ற அழகுடன் குழந்தையாகக் காட்சி தந்தாலும், தைரியம் மற்றும் வீரத்தின் உருவமாகவும் போற்றப்படுகிறாள். போர் புரிவதில் அசாத்திய ஆற்றல் பெற்றவள் பாலாம்பிகை. பாலாம்பிகையின் அவதாரமே ஒரு போரின் நிமித்தமாக ஏற்பட்டதுதான்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கப்பட்ட மன்மதனின் சாம்பலிலிருந்து தோன்றியவன் பண்டாசுரன். தன் தவத்தின் பலனாக வரங்கள் பல பெற்றவன். மேலும், பெண்ணின் கருவில் இருந்து தோன்றாத ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு நேர வேண்டும் என்ற வரம் பெற்றிருந்த பண்டாசுரன், அதன் காரணமாக யாராலும் தன்னை அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் துன்புறுத்தி மகிழ்ந்தான்.

அவனுடைய கொடுமைகள் எல்லை மீறிப் போகவும், தேவர்கள் அனைவரும் ஸ்ரீலலிதாம்பிகையைச் சரணடைந்தனர்.

பண்டாசுரனின் கொடுமைகளிலிருந்து தேவர்களைக் காப்பாற்றத் திருவுள்ளம் கொண்ட அம்பிகை, தன்னுடைய ஆபரணத்திலிருந்து ஒன்பது வயதுடைய பெண்ணைத் தோற்றுவித்தாள். அவளே ஸ்ரீபாலாம்பிகை. அவள் ஸ்ரீலலிதாம்பிகையிடம் கவசமும் ஆயுதங் களும் பெற்றுக்கொண்டு, அன்னங்கள் பூட்டிய தேரில் சென்று பண்டாசுரனையும், அவனுடைய முப்பது பிள்ளைகளையும் சம்ஹாரம் செய்து, தேவர்களைக் காப்பாற்றினாள். சிறு பெண்ணான பாலாம்பிகையின் போர்த் திறன் கண்டு, தேவர்கள் பூமாரி பொழிந்து பலவாறாகப் போற்றித் துதித்தார்கள்.

அழகிய உருவினள் பாலா!

நான்கு திருக்கரங்களில் மேலிரு திருகரங்களில் சுவடியும் ஜபமாலையும் ஏந்தி, கீழிரு திருகரங்களில் வர, அபய முத்திரை காட்டி, தாமரை மலரில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் பாலாம் பிகை, பக்தர்கள் கேட்கும் வரங்கள் அனைத்தையும் உடனுக்குடன் அருள்பவள். பாலாம்பிகையின் ஒரு திருக்கரத்தில் இருக்கும் சுவடி, வித்யை மற்றும் ஞானத்தையும், மற்றொரு திருக்கரத்தில் இருக்கும் ஜபமாலை மந்திர ஜபத்தின் ஆற்றலையும் குறிப்பிடும் என்பர்.

அருள்மிகு பாலாம்பிகையின் இந்த திருவடிவை மனதில் இருத்தி தியானிப்பது மிகவும் விசேஷம் என்பார்கள் பெரியோர்கள். பாலாம்பிகையை மனதில் தியானித்து வழி பட்டால் நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் என்பது ஞானநூல்களின் வழிகாட்டல்.

ஸ்ரீ பாலாம்பிகை மந்திரம் :

ஓம் ஐம் க்லீம் செளம்:'

- இதுவே அருள்மிகு பாலாம்பிகையை தியானித்து வழிபடுவதற்கான விசேஷ மந்திரம். இதில், மூன்றாவதான செளம்' என்பதை செளஹூம்' என்று உச்சரிக்க வேண்டும்.

அதியற்புதமான இந்த மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று மந்திரம் ஜபிக்க, மன ஒருமுகப்பாட்டுடன் அன்னை பாலாம்பிகையை வழிபட்டால், தெய்வங்கள் அனைவரையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

  • 155
·
Added a post

சோழநாட்டில் அமைந்துள்ள மன்னார்குடியில்,ராஜ கோபாலசுவாமி கோயில் பல அதிசயங்களை கொண்டது.

சோழ நாடு சைவ சமயத்திற்கு பெயர் பெற்றது ஆனால் வைணவ தலமான ராஜகோபாலசுவாமி தலம் மிக பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது.

ராஜகோபாலர் மாடு மேய்க்கும்(இடையன்) சிறுவனாக ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து கட்சியளிக்கிறார்.

இந்த கோயிலில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்கள் உள்ளன.

எல்லா நிலைகளிலும் சுதை சிற்பங்கள் இருக்கும். ஆனால், இங்குள்ள 11 நிலை ராஜகோபுரத்தில், கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் சுதை, சிற்பங்கள் எதுவும் இல்லை.

வேதசத்சங்கம் ஏழாவது நிலையில் இருந்தே சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வித்தியாசமான அமைப்பில் கோபுரத்தை காண்பது அரிது.

இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள்.

தனது லீலைகளை காண விரும்பிய கோபிலர், கோபிரளயர் என்ற முனிவர்களுக்கு முதலில் வாசுதேவராக காட்சி தந்தார். 32ம் லீலையாக கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாக காட்சி தந்தார்.

பங்குனியில் 18 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

கிருஷ்ணருக்காக அமைந்த கோயில் என்பதால் 18க்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா நடத்தப்படுகிறது (குருக்ஷேத்ர யுத்தம் நடந்த நாட்கள் மற்றும் கீதையின் அத்தியாயம் 18). இவ்விழாவை, "பார் புகழும் பங்குனி பிரம்மோற்ஸவம்' என்று குறிப்பிடுகிறார்கள்.

திருவாரூர் தேரழகு என்பதுபோல, "மன்னார்குடி மதிலழகு' என்பது சொல் வழக்காக உள்ளது.

இந்த கோயில் உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால், ஊருக்கும் "மன்னார்குடி' என்ற பெயர் ஏற்பட்டது.

  • 157
·
Added a news

நிதி நெருக்கடி காரணமாக, கல்வித் துறையில் பணியாற்றும் 10,000 பேரை, பணி நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளமையே, இதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • 161

பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமலும்...

வேண்டாத விஷயங்களில் கவலை செலுத்தாமலும்..

தேவையற்ற

கேள்விகளுக்கு

பதில் சொல்லாமல் இருந்தாலே போதும்....

உடலும் மனமும் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்.

  • 447
·
Added a post

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் அன்று நான் அரவிந்தனைச் சந்தித்தேன். நாகர்கோவில் ஜெயிலின் எதிரிலுள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறான். அவனை நான் அடையாளம் கண்டு கொண்டேன். ஏனோ என் முகம் அவனுக்குப் பிடிகிட்டவில்லை. அந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் என்னுடைய நண்பர். அவனிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று அனுமதி பெற்றுக் கொண்டு ஒரு டீக்கடைக்கு அழைத்து வந்தேன். ஒரு பெரும் தயக்கத்தோடு என் கூட வந்தான். குற்ற உணர்வாய்க் கூட இருக்கலாம்.

அப்போது நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்தோம். அரவிந்தன் மிக நன்றாகப் படிப்பவன். நானொரு தான்தோன்றி. பாடத்தை வகுப்பில் படிப்பதோடு சரி. வீட்டுக்கு வந்ததும் ஊர்மாடு மேய்ப்பதுதான் வழக்கம். வீட்டிலும் புத்தகத்தைத் திறந்ததேயில்லை. பார்டர் லைனிலாவது பாசாகி விடுவேன் என்று அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியும். அவர்களும் நீ இந்த படிப்பைத்தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதெல்லாம் கிடையாது.

ஒருநாள் அப்பா என்னிடம், நீ ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்று கூறிய போது, நான் ஒரு பஸ் கண்டக்டராகவே ஆசை என்று கூறியதால் அவர் என்னை ஒரு சில்லறைப் பயல் என்று அடையாளம் கண்டு கொண்டு ஒதுங்கி விட்டார்.

அப்பாவின் ஒரே கண்டிஷன் என்னவென்றால், “நீ என்ன மார்க் எடுத்தாலும் உன்னுடைய பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்திட்டுத் தருவேன். என் கையெழுத்தை மட்டும் கேவலமாக வரைந்து அசிங்கப் படுத்தாதே!” என்பதுதான். அவரது கையெழுத்து ஒரு மிகப்பெரிய முட்டையில் துவங்கி குட்டி குட்டி முட்டைகளாக எதிர்த் திசையில் போய் சோகமாக முடிவடையும். கீழே ஒரு கோடு போட்டு அன்றைய தினத்தைக் குறித்து தனது கையெழுத்தைக் கல்வெட்டாய் உருவேற்றுவார்.

பிட் எழுதுகிற நேரத்தில் அந்தப் பாடத்தைப் படித்துவிடலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்ததால் நான் பிட் எழுதி பரீட்சை எழுதியதில்லை. தேர்வு வேளையில் நன்றாகப் படிக்கும் மாணவர்களைச் சீண்டி தங்களது விடைத்தாளை காட்டுமாறு பல்லிளிக்கும் சக மாணவர்களை நான் மதிப்பதேயில்லை. தங்களது விடைத்தாளை ஒளித்து வைத்து எழுதும் மாணவர்களை நான் கால் காசுக்கு பெறாதவர்கள் என்று முகத்தில் துப்ப எண்ணியதுண்டு.

அரவிந்தும் அப்படிப் பட்டவன்தான். யாரைப்பார்த்தும் பிட் அடிக்க மாட்டான். அவன் என்னுடைய நெருங்கிய நண்பன். எங்கு சென்றாலும் என்னோடே கூட வருவான். கிரவுண்டுக்கு விளையாடப் போனாலும் அவனோடுதான். நாகர்கோவிலில் மொத்தம் நான்கே சாலைகள்தான். அதில் எங்கள் கால்கள் படாத மூலை முடுக்கே கிடையாது. என்னிடம் அப்போது ஒரு ஹீரோ ஜெனரேஷன் எக்ஸ் சைக்கிள் இருந்தது. நாங்கள் பெரும்பாலும் டபுள்ஸ்தான் போவோம். அவன் என்னைவிடவும் கனத்த சரீரம் உடையவன். ஆனாலும் அவனை முன்பக்கம் பாரில் உட்கார வைத்து நான் மிதிப்பேன்.

அவன் வீட்டிலிருந்து இரண்டு பஸ் ஏறி பள்ளிக்கு வருவான். சாயங்காலம் நான்தான் அவனை பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் விடுவேன். அவனது வீடு பள்ளியிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. எனக்கு அவ்வளவு தூரம் வரைக்கும் பயணிக்க வீட்டில் தடை இருந்தது. ஆறு மணிக்கு முன்னால் வீட்டில் போய் உட்காரவில்லையென்றால் அடுத்த நாள் சைக்கிள் சீட்டில் உட்கார முடியாது. உட்கார்ந்தால் வலிக்கும்.

ஒரு தேர்வு நாளொன்றில் அரவிந்தன் தன்னுடைய மேதமைத் தனத்தைக் காட்ட எண்ணி சக பாவப்பட்ட மாணவன் பிட் அடிக்கவே அதை ஒரு குடிகார ஆசிரியரிடம் அரவிந்தன் காட்டிக் கொடுக்க அந்தக் குடிமகான் அவனை வெளுத்து விடைத் தாளோடு சேர்த்து வெளியில் வீசிவிட்டார். முதன் முறையாக அரவிந்தன் மீது எனக்குத் தீராத கோபம் வந்தது. எனக்குக் கோபம் வந்துவிட்டால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியாது என்பது அரவிந்தனுக்கு அன்றுதான் தெரிந்தது. அரவிந்தனின் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. மூக்கிலும் முட்டியிலும் சிராய்ப்பு. பள்ளியின் பின்பக்கம் நின்று கொண்டு அந்தக் குடிகார ஆசிரியரின் நெஞ்சில் சரளைக் கல்லை குறிபார்த்து எறிந்ததில் குறி தவறாமல் அவரது மண்டை கீறியது.

பெரும் பஞ்சாயத்து நடந்து முடிந்தபின்பு அரவிந்தனுக்கும் எனக்கும் மிகப்பெரிய இடைவெளி. ஒரே வகுப்பில் இருந்தாலும் வேறு வேறு கிரகத்தில் அமர்ந்திருந்தோம். அவனது பிரிவை என்னால் தாங்கவே முடியவில்லை. அந்த சம்பவத்துக்குப் பின்பு அந்த ஆசிரியரை எல்லாரும் “மண்டகீறி மாணிக்கம்” என்று அழைத்தது எனக்கு வேறு இன்னொரு தலைவலியை உருவாக்கியது.

அவர் தேவையில்லாமல் என்னைச் சீண்டி எப்படியாவது என்னை டீ சி கொடுத்து வெளியில் தள்ளிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார். ஒருமுறை அவர் என்னை அவதூறாகப் பேசியதால் நான் மதியம் வீட்டுக்குச் சென்று தாத்தாவின் கத்தியை எடுத்து வந்து மாணிக்கத்தின் ஸ்கூட்டர் சீட்டைக் கிழித்து விட்டு, நேராக அவரிடம் சென்று, “இன்னிக்கி உம்ம வண்டிக்க சீட்டு! இனிமேலால் வம்புக்கு வந்தீருன்னா ஒமக்க நெஞ்சி! பிண்டாளுத ஒமக்கு அவ்ளதாம் மரியாத பாத்துக்காரும்!” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதன் பின் தொல்லை இல்லை.

ஆனாலும் அரவிந்தன் என்னிடம் பேசவேயில்லை. என்றாவது ஒருநாள் பேசிவிட மாட்டானா என்று ஏங்கிப் போயிருந்தேன். அவனில்லாமல் என்னிடம் யார் யாரோ பேச முயன்று தோற்றுப் போனார்கள். நானும் யாரிடமும் நெருங்கவேயில்லை. இன்னுமொரு நட்பு எனக்குத் தேவையில்லாமல் போயிருந்தது. எப்போதும் தனிமைதான் துணைவன்.

அப்படியிருக்கும் போது ஒருநாள் அரவிந்தன் என்னை அவனது வீட்டிற்கு சனிக்கிழமை வருமாறு அழைத்ததாக தகவல் சொல்லி அனுப்பினான். அன்றுதான் எனக்கு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் எல்லாமே... அன்றிரவு முழுக்க எனக்குத் தூக்கமேயில்லை. சனிக்கிழமை வந்தது. எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதித்து அவனது வீட்டிற்குச் சென்றேன்.

மனம் முழுக்க படபடப்பு, ‘என்ன சொல்வானோ? நான் என்ன பேச?’

அவனது வீட்டுக் கதவைத் தட்டினேன். அவனது அம்மா கதவைத் திறந்தாள்.

“நீதானேடே அரவிந்தனுக்க வாய அடிச்சி ஒடச்ச? அப்பொரம் எதுக்குப்போ இங்க வந்த? அவனுக்கு ஒன்னய பாக்க இஷ்டமில்லியாம்! கிளம்பு!”

நான் கெஞ்சினேன், “அம்மா! ஒரே ஒரு தடவ அவன பாத்துட்டுப் போயிர்ரென்! அவன கூப்புடுங்கம்மா!”

அவள் செவி சாய்க்கவில்லை. என் கூக்குரலை பலர் நின்று பார்த்துவிட்டுப் போனார்கள். சத்தமாகக் கத்தினேன். “அரவிந்தா இதுக்கா என்னய இவ்ளோ தூரம் வார வச்ச?”

என்னுடைய கண்ணீர் நிற்கவில்லை.

என்னுடைய சைக்கிளுக்கு என்ன துக்கமோ? அதன் டயர் வேறு மூச்சை விட்டிருந்தது. சைக்கிளைக் கையில் பிடித்துக் கொண்டு அரை டவுசரோடு சாலையில் தனிமையாக அழுது கொண்டே நடந்து வந்த பரிதாபத்துக்குரிய அந்த நாள் இன்றைக்கு நினைத்தாலும் அழுகையைத் துவங்கும். பஞ்சர் ஒட்டக் கூட அப்போது காசு இல்லை. நான் இவ்வளவு தூரம் வரும் விஷயம் வீட்டிற்குத் தெரியாது. தெரிந்தால் அனுமதி கிடைக்காது ஆகையால் எதுவும் சொல்லவில்லை. வீடு வந்து சேர மூன்று மணிநேரங்கள் ஆகிப் போயிருந்தன.

‘அரவிந்தன் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? என்னைக் கேவலப் படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தால் என்னை அம்மணமாக ஓட விட்டிருக்கலாமே? ஏன் இப்படி காயப் படுத்தினான்? இப்படியெல்லாமா ஒருவனைப் பழி வாங்குவார்கள்? அவனது அன்பை நாடிப் போனது தவறே இல்லை! ஆனால் அதற்காக இப்படியா?’

என்னால் துக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. உடைந்து அழுதபடியே சாலையில் நடந்த அந்த மூன்று மணிநேரங்கள் என்னுடைய வாழ்வில் என்றுமே மறக்காது. அன்றைக்கு அப்பாவிடம் அழுது புலம்பி நான் இனிமேல் அந்தப் பள்ளிக்குப் போகவே மாட்டேன் என்று சொல்லி அடுத்தநாள் அப்பா போய் டீசி வாங்கி வந்து என்னை வேறொரு பள்ளியில் சேர்த்தார்.

அங்கு புது நண்பர்கள், புது தோழிகள் என்று எல்லாம் மாற ஆரம்பித்தன! அரவிந்தனின் அந்தப் பழிவாங்கல் மட்டும் மனதை விட்டு அகலவேயில்லை. அன்றைக்கு என்னை சந்திக்க விரும்பாத அரவிந்தன் இதோ பாரத் பெட்ரோலியம் சீருடையில் டீக்கடையில் என் முன்பாகத் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறான்.

நான் ஒரு பெரும்துக்கத்தில் அவனிடம் கேட்டேன், “அரவிந்தா! நீ மட்டும் அன்றைக்கு என்னை வெளியில் வந்து பார்த்திருந்தால்?”

என் வாயிலிருந்து வார்த்தைகள் துண்டு துண்டாக வந்து விழுந்தன. எனக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது. அவன் தலையைக் குனிந்து கொண்டான். நான் மீண்டும் கேட்டேன்.

“என்னை ஏன் உதாசீனப் படுத்தினாய் அரவிந்தா? என் கன்னத்தில் அறைந்திருக்கலாமே?”

இம்முறை நான் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். டீக்கடையில் எல்லாரும் எங்களைப் பார்த்தார்கள். அரவிந்தன் குனிந்து உட்கார்ந்து அழுததில் அவனது ஒருசொட்டுக் கண்ணீர்த்துளி டீ கிளாசில் விழுந்தது. கொஞ்ச நேரம் அமைதி.

எழுந்து காரை நோக்கி நடந்தோம். அந்தச் சூழல் சகஜமாக கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டது. அரவிந்தன் தன்னுடைய மவுனத்தைக் கலைத்து விட்டு அவனது அப்பாவின் மரணத்துக்குப் பிற்பாடு படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு வந்ததாகச் சொன்னான். பின்னர் என்னிடம்,

“லேய் ப்ரெவு! நீ அப்போலாம் அவ்ளோ புஸ்கு புஸ்குன்னு இருப்ப? இப்ப தாடியெல்லாம் வச்சி ஆளு சாமியார் மாறி ஆயிட்டியே மக்கா?”

“சும்மாதாம் மக்ளே... ஒரு பந்தாவுக்கு வச்சிருக்கேன்! வேற என்ன வித்தியாசம்லாம் என்கிட்ட தெரியிது அரவிந்தா?”

“அப்போ மாட்டுன டவுசர இப்பவும் கழத்தல பாத்தியா?”

அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. நான் அவனைக் கட்டியணைத்துக் கொண்டு மீண்டும் அழுதேன். நட்பு ஒன்று மட்டும்தான் எல்லார் முன்பாகவும் நம்மைக் கொண்டு போய் நிறுத்தும்! மண்டியிடச் செய்யும்! மானம் கெடுத்தும்! வாழ்வைக் காப்பாற்றும்! சாகும் வரைக்கும் வாழ்வதுதான் வாழ்வு.

  • 462
  • 466

முதல்மனிதன் உருவானபோது காடு அவனை பயமுறுத்தியது.

2ம்மனிதன் உருவானபோது காடு அவனுக்கு பழக்கமானது.

3ம்மனிதன் உருவானபோது காடு அவனுக்கு கற்றுக் கொடுத்தது.

4ம்மனிதன் உருவானபோது காடு அவனிடம் கட்டுப்பட்டது.

அடுத்தடுத்த மனிதர்கள் உருவானபோது காடு அவர்களிடம் காயப்பட்டது.

-நா.முத்துக்குமார்

  • 466
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வித்தியாசமான அணுகுமுறைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கல்வியில் மேன்மை ஏற்படும். அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

 

ரிஷபம்

சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவு கை கொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தநிலை குறையும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மிதுனம்

விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். வியாபார ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்வது நன்மையை உருவாக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கடகம்

மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருக்கவும். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். நினைத்த சில செயல்களில் தாமதம் ஏற்படும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். கல்வி தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

சிம்மம்

செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். தோற்ற பொழிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வழியில் ஆதரவுகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய நட்புகளால் உற்சாகம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

கன்னி

வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். சமூக வாழ்க்கையில் மரியாதை அதிகரிக்கும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுகள் மேம்படும். சிக்கல்கள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

துலாம்

கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உணவு சம்பந்தப்பட்ட துறைகளில் மதிப்புகள் உயரும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். ரகசிய பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

விருச்சிகம்

நீண்ட நாள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறீர்கள். மாமன் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது சிக்கல்களை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான சிந்தனைகள் பிறக்கும். பயண செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கால்நடைகளால் சில விரயங்கள் ஏற்படும். புதிய வீடு வாங்குவது சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

தனுசு

பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் சில அலைச்சல்களால் புதிய அனுபவம் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தடைப்பட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். சிக்கல்கள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு

 

கும்பம்

சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பயணங்களை தவிர்க்க முடியும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் உருவாகும். உத்தியோக பணிகளில் ஆர்வம் இன்மை உண்டாகும். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். மனதளவில் ஒரு விதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர் இடத்தில் கனிவு வேண்டும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மீனம்

விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். செயல்களில் நிதானத்தை கையாள்வது நல்லது. ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 480
·
Added a post

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 13.7.2025..

இன்று அதிகாலை 02.47 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று காலை 08.14 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.

இன்று இரவு 07.18 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.

இன்று அதிகாலை 02.47 வரை . கரசை. பின்னர் மாலை 02.19 வரை வனிசை. பிறகு பத்தரை.

இன்று அதிகாலை 05.58 வரை சித்தயோகம். பின்பு காலை 08.14 வரை அமிர்த யோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=48&dpx=1&t=1752370917

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 497

Good Morning...

  • 496
மீசாலை மக்கள் ஒன்றுகூடல்
  • 664

Meesalai Get-Together

  • 685
·
Added a news

கனடாவின் ஒண்டாரியோவிலுள்ள Quadeville என்னுமிடத்தில், கடந்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 23ஆம் திகதி எட்டு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனாள். மறுநாள், அதாவது, 24ஆம் திகதி, நள்ளிரவு அவள் கண்டுபிடிக்கப்பட்டாள். பொலிசார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இன்னமும் அவள் மருத்துவமனையில்தான் இருக்கிறாள்.

முதலில், அவளை ஏதோ காட்டு மிருகம் தாக்கியிருக்கலாம் என பொலிசார் நினைத்துள்ளார்கள். இந்நிலையில், அவளது உடலில் இருக்கும் காயங்களிலிருந்து எந்த விலங்கின் DNAவும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 

தற்போது, இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக பொலிசார் கிழக்கு ஒண்டாரியோவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனைக் கைது செய்துள்ளார்கள். அவன் மீது, அந்த சிறுமியை கொலை செய்ய முயன்றது மற்றும் சீரழித்தது தொடர்பில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை அவன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளான்..

அந்த சிறுவன் 18 வயதுக்கு குறைவான வயதுடையவன் என்பதால், அவன் யார், அவனுக்கும் அந்த சிறுமிக்கும் என்ன உறவு என்பது போன்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

  • 708
·
Added a post

திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் திருத்தலத்தில் உள்ளது, லலிதாம்பிகை உடனாய மேகநாத சுவாமி திருக்கோவில். லலிதாம்பிகை சன்னிதியில் நடைபெறும் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்திப் பெற்றது.

திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் திருத்தலத்தில் உள்ளது, லலிதாம்பிகை உடனாய மேகநாத சுவாமி திருக்கோவில். இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்கர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அருள்கிறார். கோவிலுக்குள் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் லலிதாம்பிகை சன்னிதி இருக்கிறது.

கருவறையில் வீற்றிருக்கும் லலிதாம்பிகை, வலது காலை மடக்கி, இடது காலை தொங்க விட்ட நிலையில், அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த அன்னைக்கு லலிதா சகஸ்ரநாமம், லலிதா நவரத்ன மாலை படித்து வழிபட்டால், அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்கிறார்கள். இந்த லலிதாம்பிகை சன்னிதியில் நடைபெறும் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்திப் பெற்றது.

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் சன்னிதியில் நடத்தப்படும் நெய்க்குள தரிசனம் வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்படும். அவை, வைகாசி மாத பவுர்ணமி தினம், நவராத்தி விழா கொண்டாடப்படும் இறுதி நாளான விஜயதசமி மற்றும் மாசி மாதத்தில் அஷ்டமியும், நவமியும் இணையும் தினம் ஆகியவையாகும்.

இந்த தினங்களில் லலிதாம்பிகையின் சன்னிதிக்கு முன்பாக 15 அடி நீளம், 4 அடி அகலத்திற்கு வாழை இலைகளை பரப்பி வைப்பார்கள். அதன் இரு மருங்கிலும் மட்டை மற்றும் தென்னை ஓலைகளைக் கொண்டு அணைபோடுவார்கள். 15 அடி நீளமும் மூன்று பாகமாக பிரிக்கப்படும். அம்பாளின் சன்னிதி முன்பாக அமைந்த முதல் பாகத்தில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம், அடுத்ததாக புளியோதரை, இறுதியாக தயிர் சாதம் படைக்கப்படும்.

சர்க்கரைப் பொங்கலின் நடுவே குளம் போன்று அமைத்து, அதில் அதிக அளவு நெய்யை ஊற்றுவார். இதனால் அதற்கு 'நெய்க்குளம்' என்று பெயர். லலிதாம்பிகைக்கு அபிஷேகம் முடிந்ததும் திரையிடப்பட்டு அலங்காரங்கள் செய்யப்படும். அதன்பின்னர் திரையை விலக்கும் போது, நெய்க்குளத்தில் அன்னையின் அலங்கார ரூபம் தெரியும். இதனை 'நெய்க்குள தரிசனம்' என்பார்கள். இந்த கண் கோடி தரிசனத்தைக் காணும் பக்தர்களின் வாழ்வில் துன்பங்கள் விலகும். மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்!!

  • 709
·
Added a post

நம்மில் பலருக்கு நரை முடி பிரச்சனை இருக்கும். இதற்கு நாம் ஹேர் டையை உபயோகிப்போம்.

ஆனால் அவசரமாக வெளியே கிளம்பும் போது தலைக்கு குளித்து காய வைத்து, மறுபடி ஹேர் டை உபயோகித்து, தலையை அலசிச் செல்ல நேரம் இல்லா சமயத்தில் இந்த இன்ஸ்டண்ட் ஹேர் டை பேக் உங்களுக்கு உபயோகப்படும்.

தேவையான பொருட்கள்:

கருஞ்சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலா இல்லாத பிளைன் டீத்தூள் - 2 டீ ஸ்பூன்

கடுகு எண்ணெய்

செய்முறை:

ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கருஞ்சீரகத்தை 2 டேபிள் ஸ்பூன் அளவு போட்டு வறுக்கவும் அது வறுபடும் போதே அதனுடன் டீத்தூள் 2 டீ ஸ்பூன் சேர்த்து நன்கு வறுக்கவும்.

புகை வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து விட்டு நன்கு வறுக்கவும்.

இரண்டும் நன்கு வறுபட்டு கருஞ்சீரகம் வாசனை வரும்.

நன்கு வறுபட்டவுடன் அதனை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

ஆறிய பின் அதனை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுக்கவும்.

அதன் பின் அந்தக் கலவையை கையால் அலைந்து பாருங்கள் நைசாக இல்லையென்று உங்களுக்கு தோன்றினால் சல்லடையால் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

பின் அதனை ஒரு கண்ணாடி பாட்டிலிலோ அல்லது பிளாஸ்டிக் டப்பாவிலோ சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் வெளியே அவசரமாக கிளம்பும் போது உங்களுக்கு தேவைப்படும் அளவு இந்தக் கலவையை எடுத்து ஒரு பவுலில் போட்டு அதனுடன் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து தலையில் அப்ளை செய்து விட்டு 10 நிமிடத்தில் நீங்கள் வெளியே கிளம்பி விடலாம் தலையில் தேய்த்து சீவியது போல் மட்டுமே இருக்கும்.

நீங்கள் அடுத்து தலையை அலசும் வரை இது உபயோகப்படும்.

இதை நீங்கள் ஹேர் பேக்காகவும் பயன்படுத்தலாம்.

இந்தக் கலவையை முடியின் வேர்க்கால்களில் படும் படி நன்கு தேய்த்து 1 மணி நேரம் கழித்து அலசலாம்.

இதை அடிக்கடி செய்து வர தலைமுடி இயற்கையாகவே கருமையாக வளரத் தொடங்கும்.

கடுகு எண்ணை தலை முடி வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாகும்.

  • 713
  • 712
  • 715
·
Added a post

கணவர்களுக்கு சில அறிவுரைகள்....

முதலாவதாக மனைவியையும் மனைவி வீட்டாரையும் மரியாதை கொடுத்து மதிக்க வேண்டும்;

மனைவியுடன் சண்டை வரும் போது மனைவி வீட்டாரை இழுக்கக் கூடாது;

மனைவியின் உடல் குறைகளை குத்திக் காட்டிப் பேசக்கூடாது.

தரக்குறைவான வார்த்தைகளைப் பாவிக்காதீர்கள்.

மனைவியுடன் வெளியே போகும் போது சிடு மூஞ்சியாக இல்லாமல் இயல்பாக கூட்டிப் போங்கள்.

உங்கள் பெற்றோரிடம் மனைவியைப் பற்றிப் பெருமையாகக் கூற வேண்டும்.

வெளியே இருக்கும் போது தொலைபேசியில் பேசி உனக்கு ஏதாவது வேண்டுமா... சாப்டியா... என விசாரிக்கணும்.

அவள் ஆசைப்படுவதை உணர்ந்து முடியுமான வரை வாங்கிக் கொடுக்கனும் .

அடிக்கடி வெளியே கூட்டிச் செல்ல வேண்டும்.

மனைவியின் சமையலை குறை கூறாமல் பக்குவமாக புரிய வைக்கணும்.

முடியும் பொழுது நீங்க சமையல் சமையல் செய்து மனைவியை அசத்தணும்.

அடிக்கடி அன்பாக தோளில் தடவி பேசுங்கள்.

முடியும் பொழுதெல்லாம் சிறு சிறு தொகை பணம் கொடுத்து வையுங்கள்.

அடிக்கடி அவள் பிறந்த வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள்.

மனைவி உடல்நிலை சரியில்லை என்றால் நீங்கள் விடுமுறை எடுத்து அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுங்கள்.

வீட்டில் அவள் எடுக்கும் முடிவுகளை மறுக்காதீர்கள்... தவறாயின் புரிய வையுங்கள்.

அடிக்கடி அவளின் நல்ல செயல்களைப் பாராட்டுங்கள்.

நீ எனக்கு கிடைத்தது என் அதிர்ஸ்டம் என்று கூறுங்கள்.

உங்கள் வெளி விஷயங்களை இரவில் மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவளின் நீண்ட கால விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வையுங்கள்.

மனைவியாக இருந்தாலும் ஒரு பெண்ணிற்கான மரியாதையை கொடுங்கள்.

அவளிற்கு பிடிக்காத விடயங்களை தவிருங்கள்.

முக்கியமாக திடீர் என நண்பர்களுடன் வந்து நிக்காதீர்கள்..

ஒரு கணவனானவன் மனைவியை எவ்வாறெல்லாம் நடத்த வேண்டும் ?

தனியறையில் காதலுடன்

சமுதாயத்தில் தலைவியாக

குழந்தைகள் மத்தியில் பாசத்துடன்

உறவுகள் மத்தியில் கண்ணியத்துடன் …

நண்பர்கள் முன்னிலையில் மரியாதையுடன் …

முடியாத வேளையில் தாயாக …

கொஞ்சும் வேளையில் குழந்தையாக …

30-ல் தோழியாக …

40-ல் நாயகியாக …

50-ல் அவளை அவளாக …

60-ல் அம்மாவாக …

70ல் ஏஞ்சலாக …

80-ல் எல்லாமாக, அவளையே எல்லாமாக …

இப்படி இருந்தால் கணவன் மனைவி உறவு சந்தோஷம் இருக்கும்...

  • 718