கவிதை
Poem of the Day
Empty
Ads
Latest Poems
ஊண்டுகோல் தேவையா?
ஊண்டுகோல்
ஒதுங்கி கொண்டது
வயது போனது
சமையல்காரனின் காதல்

கண்ணே,

அன்பிற்கு நீயோர் அண்டா
பண்பிற்கு நீயோர் பாத்திரம்



பாலுடன் கலந்த சக்கரையாய்
நாம் கலந்திருக்கலாம்
நீ இல்லையென்றால் என்
வாழ்வு பாவக்காயாய் கசக்கும்



நம் காதல் கத்திரிக்காயல்ல
எளிதாய் கிடைப்பதற்கு
என்றோவது நான் நன்றாய்
சமைக்கும் நல்விருந்து
கிடைப்பதற்கு அரிது



உன்னை காணும்போது என்
நெஞ்சு சுடுபாலாய் கொப்பளiக்கிறது
வா வந்து தண்ணிர்
தெளிi 



இரவிலே என் கனவிலே
உப்புமாவை போல் என்னை
கிண்டு கிண்டுகிறாய்
பகலிலே என் நினைவினை
தேங்காயை துருவது போல்
துருவு துருவிகிறாய்



ஏலக்காய் போல் வாசம்
தூக்குகிறது நீ அருகில்
வந்தால்
பொங்கல் போல் என்மனம்
பொங்கிறது நீ என்னுடன்
பேசினால்
அரும்சுவை விருந்தாய்
அமையும் நீ தரும் சம்மதம்
"Lஎழுதியவர் யார் என்று தெரியவில்லை ஆனால்படித்துப் பாருங்கள் கரைந்து போவீா்கள்

`*"எழுதியவர் யார் என்று தெரியவில்லை ;*

*ஆனால்,*


*படித்துப் பாருங்கள் , கரைந்து போவீா்கள் ;"*


*********

தீப திருநாள் வாழ்த்துகள்

அன்பு பூத்திட

அகலினில் நெய் விட்டு...

பாசம் விரிந்திட

பஞ்சு திரி இட்டு...

விளக்கினில் படர்ந்து

வெளிச்சம் மலர்ந்து...

உள்ளத்தில் இருளாய்

உறைந்திருக்கும் இன்னல்கள்

அகன்று வெளியேறுவதாய்...

அழகான தீப ஒளிதனில்

மனம் பிரகாசமாய்

மகிழ்ச்சி பெருகட்டும்!

அழகோ... அழகு

விழா காலமிது

வரவேற்கும் குதூகலத்தில்...

வானமிறங்கி வந்து

வாழ்த்து சொல்வதில்

வண்ணக்கிளி ஒன்றிணைந்ததோ

வசீகரிக்கும் அழகினில்....!

சுலபமில்லை.!

கிடைத்தது
ஒரு நாள் தொலைந்து
போகலாம்.

பிடித்தது
ஒரு நாள் வெறுத்தும்
போகலாம்.

நிரந்தரம்
என்று ஏதுமில்லை
இவ்வுலகில்.

வெறுப்பை
விதைத்த இடத்தில் அன்பை
அறுவடை
செய்ய நினைப்பது முட்டாள் தனம்.

எந்த
உறவாயினும் சற்று கவனமாகவே
இருங்கள்.
எதிர்பார்த்த தேவைகள் கிடைக்காத
நேரத்தில்
தூக்கி எறியப்படலாம்..

உண்மையான
அன்பில் சட்டென விலகுதல்
என்பது
அத்தனை சுலபமல்ல.
நடிப்பவர்களுக்கு மட்டுமே
அது சுலபமானதாகும்.

அற்புத குழந்தை

ஆகாய கருவினிலிருந்து

அற்புதமாய் விழுந்தது

பூமழை குழந்தையது

பூமித்தாய் பொன்மடியில்...

ஓடையாய் மழலை கொஞ்சி

ஒய்யாரமாய் தவழ்ந்தோடி...

அருவியாய் இடறி விழுந்து

ஆர்ப்பரித்து எழுந்து..

அன்னநடை பயின்று

ஆறென உருமாறி...

பெருகிய வேகமதில்

பெருநதி என்றாகி...

பேருவகை கொண்டு

கடல் சேர்ந்திடும் தண்ணீரை...

கலங்காது காத்திடுவாள்

நிறைவாக தாங்கிடலாய்...

நிலமென்னும் அன்னை!

மன்னிப்பு

மன்னிப்பை அளித்துப்  பாருங்கள்.....

மனபாரம் குறையும்...


மன்னிப்பை கேட்டுப்  பாருங்கள்....

பகையெல்லாம் மறையும்...


மன்னிப்பை அளந்து பாருங்கள்...

மனசு பூவாக மாறும்...


மன்னிப்பாக வாழ்ந்து பாருங்கள்.....

வசந்தம் தாலாட்டி போகும்...


மன்னிப்பாரோடு இருந்து பாருங்கள்.....

குதூகலம் வந்து சேரும்...


மன்னிப்பை உணர்ந்து பாருங்கள்....

மனசெல்லாம் லேசா தோணும்...


மன்னிக்க முயன்று பாருங்கள்....

முயற்சியெல்லாம் வெற்றி தரும்...


மன்னிக்கவும் என சொல்லிப் பாருங்கள்....

எதிரில் புன்னகை தவழும்...


மன்னியுங்கள் என உரைத்துப் பாருங்கள்....

எதிரில் கண்ணீர் வழிந்திடும்...


மன்னிப்பின் வழியைத் தேடி பாருங்கள்....

முட்டுக்கட்டைகள் முடங்கிப் போகும்...


மன்னித்து வாழ்ந்துப் பாருங்கள்.....

வந்த நோயும் கடந்து போகும்...


மன்னிப்புடன் இணைந்துப் பாருங்கள்....

இதயங்கள் களிப்படையும்....

வெற்றி பாதை....

இனிமையான தருணம்

இந்திய விண்கலம்

விக்ரம் பதிவுதனில்

வெற்றி பாதையில்...

சந்திரயான்-3  அது

சந்திரனை தொட்டது...!

நிலவின் ஒளியில்

நிறைந்த பரவசம்...

பேருவகை எதிரொலியில்

பெருமையாய் பாரதம்!

கைமாறு

நம்பிக்கை வைத்தே 

நடந்து செல்கிறோம் 
ஆனால் பாதை 
வேறு எங்கோ 
திரும்பி விடுகிறது 



அன்பு பயணத்தில் 
அரவம் 
தீண்டி விடுகிறது 



பச்சோந்திகளுக்கு 
பழக்கப்பட்டவை அவை  
அப்பாவிகள் நாம்தான் 
அனாதையாகி விடுகிறோம் 



பொய் தோரணங்களில் 
புதைந்து போவதால் 
உண்மை முகங்களை கண்டு 
வியந்து நிக்கிறோம் 



பணங்கள் 
குணங்களை 
மாற்றி விடுகிறது 



வசதிகள் 
வாய்மையை 
ஒழித்து விடுகிறது 



பகட்டும் பெருமையும் 
பாசத்தை அழித்து 
விடுகிறது 



போலி சேவல்களின் 
கூவலில் 
பொழுதுகள் விடியவில்லை 
திரோகங்கள் மட்டுமே 
விழித்து நிற்கிறது 



வசனம் பேசியவர்கள் 
வசதி வந்ததும் 
விஷமேறி விடுகிறது 



புதிய முகவரிகள் 
காணும்போது 
பழையவை 
காணாமல் போய் விடுகிறது 



நேர்மையாய் 
நடந்து பார் 
ஏமாளி என்பார்கள் 



உண்மையாய் 
இருந்து பார் 
உதவாக்கரை என்பார்கள் 



மனம் வைத்து 
பழகினாலும் 
குணம் காட்டி விடுவார்கள்



உயிராய் நேசித்தாலும்
கொடிய 
கைமாறு செய்வார்கள் 
துரோகம் செய்பவரை மட்டும் 
தூக்கி தோளில் சுமப்பார்கள் 


சிந்திப்போம்....

குறுகிய ஆயுளில்

குவியும் ஏமாற்றங்கள்

கண்டு கலங்காதே

கவலை கொள்ளாதே

விடிந்தால் பயணி

முடிந்தால் மெளனி

போட்டி

நீயா... நானா...

நிலையாய்  போட்டியில்

வெங்காயம் தக்காளி

விலைதனின் உச்சத்தில்...

என்று இதன் முற்றுப்புள்ளி

எதிர்பார்ப்பில் மக்கள்...!

Ads