Sign up
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
People of Canada are preparing to create a retail blackout on Feb 28 of all U.S retailers doing business here. For one day, show them we have the power when provoked. Absolutely no purchases from Walmart, Home Depot, Best Buy, Amazon, McDonald’s, Staples, Gap, Toys r Us , Costco or any other US retailers. For one day, support only small or large CANADIAN or MEXICAN producers and companies. It’s time to STAND UP for ourselves. BE STRONG AND BE PROUD. Spread the word!
  • 2787
Added a post 
நான்-இன் என்பவர் ஒரு குருவிடம் பல காலமாக சீடராக இருந்தார்.பல காலம் கழித்து குரு சொன்னார் உனக்கு எல்லாம் நிறைவேறி விட்டது ஏறக்குறைய நீ அடைந்து விட்டாய் என்றார்.குருவே ஏறக்குறைய என்றால் என்ன அர்த்தம்,அதன் பொருள் என்ன என்றார் நான் -இன்?குரு சொன்னார் நான் உன்னை இன்னொரு குருவிடம் அனுப்பி வைக்கப் போகிறேன்இறுதியான நிறைவு பணியை அது செய்து முடிக்கும் என்றார்.நான்-இன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்சரி என்னை அனுப்பி வையுங்கள் என்றார்.குரு கடிதம் ஒன்றை கொடுத்து நகரில் ஒருவரை சந்திக்கும் படி அனுப்பி வைத்தார்.குரு அனுப்பி வைத்த ஆளை வந்து சந்தித்தார் நான்-இன்.அவர் சந்தித்த நபர் ஒரு உணவு விடுதி நடத்துபவர்.கடிதத்தைப் படித்துவிட்டு விடுதிகாரர் சொன்னார் உங்கள் குரு ஏன் என்னிடம் அனுப்பி வைத்தார் என்று எனக்கு தெரியாது.நான் அந்த அளவுக்கு படித்தவன் இல்லை.உங்களுக்கு போதிக்கும் அளவிற்கு எனக்கு எதுவும் தெரியாது.இருந்தாலும் உங்களை இங்கு அனுமதிக்கிறேன் நீங்கள் தொடர்ந்து என்னை கவனியுங்கள் என்றார்.நான்-இன் தொடர்ந்து மூன்று நாட்களாக விடுதிகாரரை கவனித்து வந்தார்.அவர் காலையில் விடுதியைத் திறப்பதும் வியாபாரம் செய்வதும்பிறகு இரவு பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு விடுதியை மூடுவதும்,மீண்டும் காலையில் எழுந்து விடுதியை திறந்து பாத்திரங்களை கழுவுவதையும் அவர் தொடர்ந்து மூன்று நாட்களாக கவனித்து வந்தார்.நான்-இன் க்கு சலித்துவிட்டது.இதில் கவனிப்பதற்கு ஏதும் இல்லைநீ எப்போது பார்த்தாலும் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டு இருக்கிறாய்.சாமானியமான வேலைகளையே செய்து கொண்டிருக்கிறாய்.எனவே நான் போகிறேன் என்றார்.விடுதிகாரர் சிரித்துவிட்டு அனுப்பி வைத்தார்.நான் - இன் மீண்டும் தன் குருவிடம் வந்தார்.மிகவும் கோபமாக, என்னை ஏன் அவ்வளவு தூரம் அங்கு அனுப்பி வைத்தீர்கள்.அந்த விடுதிகாரன் ஒரு சாதாரண ஆள்.அவன் எதுவும் எனக்கு கற்பிக்கவும் இல்லைவெறுமனே கவனி என்று மட்டும் தான் சொன்னான்.கவனிப்பதற்கும் அங்கு எதுவும் இல்லை என்றார்.குரு சொன்னார் அங்கு நீ அடிக்கடி கவனித்த ஏதாவது ஒன்றை மட்டும் சொல் என்றார்.நான் -இன் சொன்னார் அவன் தினமும் மாலையில் பாத்திரங்களை கழுவி வைக்கிறான்மீண்டும் காலையில் அதே பாத்திரங்களை கழுவுகிறான் இதுதான் பார்த்தது என்றார்.குரு சொன்னார் இதுவே என் போதனையும்.உன்னை நான் அனுப்பி வைத்ததே இதைக் கவனிக்கத்தான்.பாத்திரங்களை இரவில் அவர் கழுவி வைத்தார்.இருந்தாலும் அந்த கழுவிய பாத்திரங்களையே காலையிலும் அவர் திரும்ப எடுத்து கழுவிக் கொண்டிருந்தார்.இதன் பொருள் என்ன?இரவிலும் கூட ஒன்றுமே இல்லாது இருக்கும் போது கூட அவை அழுக்காகியிருக்கின்றன.ஓரளவு தூசு மாசு அதற்குள் படிந்துவிட்டு இருக்கிறது.எனவே நீ தூயவனாக இருக்கலாம்.நீ அப்பழுக்கு இல்லாதவனாக கூட இருக்கலாம்.ஆனால் காலத்தில் ஒவ்வொரு கணமும் உன்னை தொடர்ச்சியாக தூய்மைபடுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.எதையுமே செய்யாமல் இருந்தாலும் கால ஓட்டத்தில் கலங்கம் அடைகிறாய்.நான் தூய்மையானவன் என்பது கூட ஒரு ஆணவம் ஆகிவிடுகிறது.இதுவே நான் தரும் இறுதி போதனை என்றார் குரு.எனவே ஒவ்வொரு கணமும் புதியதாய் இருங்கள்.
  • 93
Added article 
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம்.’’ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எவ்வளவோ நடிகர்களைப் பலரும் மிமிக்ரி செய்வதைப் பார்க்க முடியும். ஆனால், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர்கூட ரங்காராவை இதுவரை இமிடேட் செய்ததே கிடையாது. அவ்வளவு நுட்பமானவை அவரது நடிப்பின் பரிமாணங்கள்!அதிக படங்களில் அப்பா வேடங்களில் நடித்தார். ஆனாலும், இவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது. தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப்படங்களில் 25 ஆண்டுகள் (1950-களில்,1960-களில்,1970-களின்முன்பகுதியில் ) வயதான, முதிய கதாபாத்திரங்களை நிறைய செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி. ரங்காராவ் அறுபது வயதைத் தன் வாழ்நாளில் கண்டதில்லை.1974-ல் அவர் மறைந்தபோது அவர் வயது56தான்.தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்தவர். தெலுங்கு மக்கள் இவருக்கு ‘விசுவநாத சக்ரவர்த்தி' எனப் பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டத்தைத் தமிழ்ப் பட டைட்டில்களில் யாரும் பார்த்திருக்க முடியாது. அந்தக் காலத்திலேயே பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ், அது மட்டுமல்லாமல் நாடக மேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த ஷேக்ஸ்பீரியன் ஆக்டர்!நாடகங்களில் நடித்திருந்தாலும், திரைப்படங்களில் புராண கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தார். ஒரு தெலுங்கு நடிகர் தமிழ்ப் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் தனது அபாரமான நடிப்பால் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார். ‘தேவதாஸ்’, ‘மிஸ்ஸியம்மா’ ஆரம்பித்து.‘நானும் ஒரு பெண்’ படத்தில் மாமனார் - மருமகள் பாசத்துக்கு எடுத்துக்காட்டுபோல விஜயகுமாரியின் மாமனாராக ரங்காராவ் நடிப்பில் யதார்த்தம் வெகுவாக வெளிப்பட்டு நிற்கும். ‘கற்பகம்' படத்தில் ஜெமினி கணேஷின் மாமனாராக நடித்திருப்பார்.திரைப்படங்களில் அப்பா வேடத்துக்கே தனி கவுரவத்தை ஏற்படுத்தியவர் எஸ்.வி.ரங்காராவ். அப்பா வேடம் மட்டுமல்ல, ‘கண்கண்ட தெய்வம்' படத்தில் சுப்பையாவின் 'அண்ணன் ' வேடம்! அதிலும் புடம்போட்ட தங்கமாகப் பளிச்சிட்டிருப்பார்.‘பக்த பிரகலாதா', ‘நம் நாடு’ போன்ற படங்களில் அவர் ஏற்ற வில்லன் வேடங்கள் பார்ப்பவர்கள் வயிற்றைக் கலக்கும். ‘மாயா பஜார்’ படத்தில் கடோத்கஜனாக ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலில் ரங்காராவின் நடிப்பு தென்னிந்தியா முழுவதும் பிரபலம். ‘சபாஷ் மீனா’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘சர்வர் சுந்தரம்’ஆகிய படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை அற்புதமாகப் பிரகாசிக்கும்.தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. ஆம்! ரங்காராவ் இயக்குநரும்கூட! இந்தோனேசியாவில் ஒரு திரைப்பட விழாவில் இவர் ‘நர்த்தன சாலா' என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார். மற்றபடி இந்திய அரசின் கவுரவம் எதுவும் இவருக்குக் கிடைத்ததில்லை. உலகின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.‘நானும் ஒரு பெண்’ (1963) படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்புக்கு எம்.ஆர். ராதா சரியான நேரத்தில் வந்து காத்திருந்து, கடைசியில் பொறுமை இழக்கிற நிலைக்கு வந்துவிட்டார். ரங்காராவ் தாமதமாக செட்டின் உள்ளே நுழையும்போது ராதா அவர் பாணியிலேயே ரங்காராவ் காதில் விழும்படியே கமென்ட் அடித்திருக்கிறார்“கெட்டவனா நடிக்கிறவன் ஒழுங்கா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவன பாரு... ஒரு ஒழுங்கும் இல்ல. படாதபாடு படுத்துறான்.” ரங்காராவ் மனம் நொந்து இயக்குநரிடம் ''இன்றைக்கு விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி. ஷூட்டிங் வைத்து கிளைமாக்ஸ் காட்சியை முடித்துக்கொள்ளுங்கள். எனக்கு உடம்பு சரியில்லை. ஆனால் அதுபற்றிக் கவலையில்லை” என்று ரோஷத்தோடு சொல்லி அதன்படியே நடித்துக்கொடுத்தாராம்.‘பக்த பிரகலாதா’ (1967) படத்தில் இரண்யகசிபுவாக ரங்காராவ் நடித்தார். படப்பிடிப்புக்கு ரங்காராவ் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் மெய்யப்பச் செட்டியாரின் காதுக்குத் தகவல் போனது. செட்டியார் கோபமாகிவிட்டார். “நான் இன்று செட்டுக்கு வருகிறேன்” என்றவர் படப்பிடிப்பு ஆரம்பித்ததும் சொன்னது போல் ஆஜர் ஆனார். ரங்காராவுக்குச் சூட்சுமம் புரிந்துவிட்டது. புகார் செட்டியார்வரை சென்றுவிட்டது என்பதை உணர்ந்துகொண்டார். படப்பிடிப்பு இடைவேளையில் அவரே செட்டியாரிடம் வந்து அவர் அணிந்திருந்த கவச ஆபரணங்களையெல்லாம் கழற்றி விட்டுச் சொன்னார்,“மிஸ்டர் செட்டியார்! இந்த நகைகளைப் பிடியுங்கள்.” செட்டியார் கையில் வாங்கியிருக்கிறார். சரியான கனம்! “இவ்வளவு கனமான நகைகளைப் போட்டுக்கொண்டு புராண வசனமும் பேசி எவ்வளவு நேரம் நான் நடிக்க முடியும், சொல்லுங்கள்! நான் வீட்டுக்குப் போன பின்னும் இந்த பாரம் சுமந்த வேதனை என்னை விட்டு நீங்காது” என்று சொல்ல, செட்டியார் பரிவுடன் சொன்னாராம் “நீங்கள் செய்தது சரிதான்."உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தி நடித்தாலும் அளவை மீறாமல் நடித்த ரங்காராவுக்கு மாற்றாகக் குறிப்பிட யாருமில்லை. ...
  • 96
Added a post 
ஒரு ஊரில் இருந்த ஞானி ஒருவரை தேடி வந்தார், பெரியவர்.அந்த ஞானியிடம், 'ஐயா, ஞானத்தில் சிறந்த ஞானம் எது?' என்று கேட்டார்.'இன்பத்தால் மகிழ்ச்சி அடையாமலும், துன்பத்தால் சோர்வடையாமலும் இருப்பது தான் அது...' என்றார், ஞானி.'சரி, சுவாமி... அப்படிப்பட்ட ஞானம் உங்களுக்கு எப்படி வந்தது?' என்றார், பெரியவர்.'அதை, ஒரு கழுதையிடம் இருந்து, நான் கற்றேன்...' என்றார், ஞானி.பெரியவர் ஒன்றும் புரியாமல் விழிக்க, 'நீங்க, நாளைக்கு காலையில் ஆசிரமத்துக்கு வாங்க, புரிய வைக்கிறேன்....' என்றார், ஞானி.மறுநாள் காலை, ஆசிரமத்துக்கு வந்த பெரியவரை, 'வாங்க, வந்து இப்படி உட்காருங்க. கொஞ்ச நேரத்தில் இந்த வழியாக ஒரு கழுதை போகும். அதை கவனிங்க...' என்றார்.பெரியவருக்கு குழப்பமாக இருந்தது. இருந்தாலும், அந்த ஞானி சொன்னது போல் உட்கார்ந்திருந்தார்.சிறிது நேரத்தில் அந்த வழியாக, ஒரு கழுதை, முதுகு நிறைய அழுக்கு மூட்டைகளை சுமந்தபடி சென்றது. ஒரு சலவைத் தொழிலாளி அதை ஓட்டி கொண்டு போனார்.கொஞ்ச துாரத்தில் இருக்கும் ஆற்றில் துணியை சலவை செய்து, மாலையில் இந்த வழியாகவே திரும்புவர்.ஞானி கூறியது போல், அழுக்கு மூட்டையை சுமந்து சென்ற கழுதையை கவனித்தார், பெரியவர். கழுதை போனதும், ஞானியைத் திரும்பிப் பார்த்தார்.'சாயந்தரம் வரைக்கும் நீங்க இங்கேயே இருக்கணும்...' என, ஞானி கூற, பெரியவரும் இருந்தார்.சாயந்தரம் ஆனதும், 'ஐயா, இப்ப கொஞ்ச நேரத்தில் அந்த கழுதை இந்த வழியாக திரும்பி வரும். அதையும் கவனிங்க...' என்றார், ஞானி.பெரியவரும் கவனித்து கொண்டிருந்தார். கழுதை வந்தது. அதன் முதுகில் சலவை செய்யப்பட்ட துணி மூட்டையை சுமந்து சென்றது.பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை; பொறுமை இழந்து, 'சரி சுவாமி, இந்த கழுதைக்கும், உங்க ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்?' என்றார்.'ஐயா, இந்த கழுதை தினமும் காலையில், அழுக்கு மூட்டைகளை சுமந்து ஆற்றுக்கு போகிறது. மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து திரும்பி ஊருக்கு போகிறது.'காலையிலே இது போகும் போது, முதுகில் அழுக்கு மூட்டைகளை சுமந்து போகிறோம் என்ற வருத்தம் இல்லை. அதேபோல், சாயந்திரம் திரும்பி வரும் போது, சுத்தமான துணிகளை சுமந்து வருகிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை. இதைப் பார்த்துத் தான் நானும், அது மாதிரி, ஞானத்தை கற்றுக் கொண்டேன்...' எனக் கூறி முடித்தார், ஞானி.அதனால், யார் கற்றுக் கொடுத்தனர் என்பதை விட, எதைக் கற்றனர் என்பது தான் முக்கியம்.
  • 98
Added a post 
  • 100
Added a post 
காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள்.நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன்.சற்று நேரத்தில் "முருகவேல்" என்று அழைப்பு வந்தது.உள்ளே சென்றவுடன் சில கேள்விகள் கேட்டு விட்டு "உங்கள் பயோடேட்டாவில் வயது 40 என்று இருக்கே நிஜமா ?""ஆமாம் சார் உண்மை தான்.""அப்படியா ..? எங்கள் நிறுவனத்தில் இளைஞர்களை தான் வேலைக்கு எடுக்கின்றோம். உங்கள் வயது 40 என்று சொல்றிங்க.. கொஞ்சம் யோசனை செய்ய வேண்டி இருக்கும் முருகவேல்" என்றார்கள்."பரவாயில்லை சார் நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன்" என்று கூறினேன்.மேலும் "இதற்கு முன் வேலை செய்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் திடீர் என்று மூடிவிட்டார்கள். அதனால் வேறு வேலை தேடும் சூழ்நிலை உருவாகிவிட்டது சார்"..அந்த அதிகாரி சற்று யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு . "முருகவேல் உங்கள் பயோடேட்டாவை கொடுத்து விட்டு செல்லுங்கள் தேவைப்படும்போது அழைக்கின்றோம்" என்றார்."மிக்க நன்றி சார்" என்று கூறி விட்டு வெளியே வந்தேன். இங்கும் வேலை இல்லை.மனம் கனத்தது கூடவே தலையும் வலித்தது. பெரும்பாலான இடங்களில் வயதை காரணம் காட்டி தவிர்த்து விடுகிறார்கள்.ஆண்டவா என்ன சோதனை...அனைத்தும் நல்லபடியாக தான் போய்க்கொண்டு இருந்தது முன்பு வேலை செய்த நிறுவனம் மூடும் வரை.. அந்த வேலையை நம்பி வாங்கிய கடன்கள் கழுத்தை நெறிக்க தொடங்கியது..ஒரே மகனின் படிப்பு செலவு , வீட்டுக்கு தேவையான செலவு மேலும்.. மேலும்.. ஐயனே ஈசனே எப்படி சமாளிக்க போகிறேன்.தலை மேலும் வலித்தது. பேருந்துக்கு வைத்து இருக்கும் காசில் காபி சாப்பிட்டு நடந்து வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து காபி சாப்பிட்டு நடக்க துவங்கினேன்.ஆழ்ந்த சிந்தனையில் நடந்து செல்லும்போது ரோட்டின் ஓரத்தில் ஒரு தோல் பை அனாதையாக கிடந்தது.சின்னதாக ஒரு சபலம் எடுத்து திறந்து பார்த்தேன் . குப்பென்று வியர்த்து கொட்டியது.பையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள்.. கை கால்கள் உதறல் எடுத்தது. இருப்பினும் எடுத்து வைத்து கொண்டேன்.மனம் பலவிதமாக என்னுள் பேசியது. ஒரு பக்கம் எச்சரிக்கை செய்தது. அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.ஆனாலும் கட்ட வேண்டிய கடன்களும் , குடும்ப செலவுகளும் கண் முன்னே நின்று பயமுறுத்தியது.வீடு வந்து சேரும் வரை மனச்சத்தங்கள் ஏராளம் , உடல் முழுவதும் வியர்வை ஊற்றியது. வீட்டில் உள்ள அலமாரியில் பணத்தை பத்திரமாக வைத்தேன்.வெளியே சென்று திரும்பிய மனைவி "என்னங்க ஒரு மாதிரியா இருக்கறிங்க" என கேட்டாள்."வள்ளி அந்த கதவை சாத்திட்டு உள்ளே வா" என்றேன்.நடந்த விவரங்களை சொல்லி . "யாராவது கேட்பார்கள் என்று திரும்பி, திரும்பி பார்த்தேன் யாரும் வரவில்லை" , எனப் பொய் கூறினேன். பணத்தை எண்ணி பார்த்தேன் மொத்தமாக 12 லட்சம்."வள்ளி சில மாதங்கள் வேலை கிடைக்கும் வரை நமக்கு கவலை இல்லை. நம் செலவுக்கு இது போதும்" என்றேன்.மனைவி அமைதியாக இருந்தாள். "ஏதாவது பேசு" என்றேன்."இந்த பணம் நமக்கு வேண்டாங்க" என்றாள் மனைவி."வள்ளி என்ன பேசுற நீ ஆண்டவனா பார்த்து தான் நமக்கு துன்பங்கள் தீர வழி காட்டி இருக்காரு".."உங்க அல்ப புத்திக்கு ஆண்டவன் மேல் பழிபோடாதீங்க" என்றாள்."வள்ளி எனக்கு இன்னும் வேலை கிடைக்கல கட்ட வேண்டிய கடன்களும் செலவுகளும் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியாக இருக்குமே நினைத்து பார் வள்ளி"."இன்னொருவர் பணத்தில் வாழ்வது தப்புங்க. அதுக்கு பதிலா இருவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம்" என்றாள் மனைவி."அப்போ வீட்டு செலவுக்கு என்னதான் நான் செய்வேன்" என்று கோபமாய் குரலை உயர்த்த.."ஆண்டவன் சோதிப்பாருங்க ஆனா கைவிடமாட்டார்." என்று கூறி டக்கென்று கழுத்திலிருந்த தாலியை கழற்றி, "இதை விற்று விடுங்கள் எனக்கு மஞ்சள் கயிறு போதும்" என்றாள்."வள்ளி.!"என அதிர்ந்து விட்டேன்."அடுத்தவங்க பணத்துல வயிற்றை நிரப்பிக் கொள்வதைவிட இது எவ்வளவோ மேலுங்க. இந்த பணம் யாருக்கு சொந்தமோ அவர்களிடம் கொடுத்து விட்டு தான் நீங்கள் வீட்டில் நுழைய வேண்டும்"... என்று ஓடி கதவை சாத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.மனைவியின் தாலி கையில் கனத்தது. பணப்பையில் ஆராய்ந்து பார்த்தேன் முகவரி இருந்தது.அந்த பங்களாவுக்குள் நான் நுழைந்த போது கோயிலில் நுழைந்த உணர்வு. மெல்லிய ஓசையில் சிவனைப் பற்றி பாடல்கள்.அழைப்பு மணியை அடித்தேன். நெற்றி நிறைய விபூதியுடன் ஒரு பெரியவர் வந்து பார்த்தார்.நடந்த விவரங்களை அவரிடம் கூறி பணப்பையை கொடுத்தேன். மகிழ்ந்த அவர் உள்ளே அழைத்து சென்று குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்."தம்பி எனது நிறுவனத்தில் இருந்து காரில் வரும் போது பணப்பை தவறி விழுந்தது விட்டது. திரும்பி தேடி செல்லும் போது கிடைக்கவில்லை.உங்களை போல் நல்லவர்களும் இருக்கிறார்கள் . அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்து விட்டது" என்றபடி என்னை பற்றிய விவரங்களை கேட்டார்.என்னுடைய சூழ்நிலை பற்றிய விவரங்களை கூறினேன்.அப்படியே யோசித்து... " தம்பி கொஞ்சம் இருங்கள். இதோ ஒரு போன் செய்து விட்டு வருகிறேன்" என்று உள்ளே சென்றார்.திரும்பி வந்தவர், "தம்பி என்னோட நிறுவனத்தில் வேலை செய்ய உங்களுக்கு விருப்பமா? அடுத்த வாரம் எங்கள் மேலாளர் ஓய்வு பெறுகிறார். அவரோட இடத்தில் யாரை நியமிப்பது என நினைத்து கொண்டு இருந்தேன்.நீங்கள் ஏன் அந்த வேலையில் சேரக்கூடாது?நீங்கள் நாளைக்கு சேர்ந்து நிறுவனத்தில் டிரைனிங் எடுங்கள். வேலைக்கான உத்தரவு கடிதம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும்.வேறு யாராவது உங்களுடைய சூழ்நிலையில் இருந்து இருந்தால் இந்த 12 லட்சம் பணம் திரும்ப வந்து இருக்காது.இந்த வேலை உங்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும். நான் கொடுக்கும் பரிசு" என்றார்."நமச்சிவாயா...!" என் கண்ணில் கண்ணீர். கண்ணீரில் ஆயிரம் நன்றிகள் என் மனைவி வள்ளிக்கு...அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ எவன். (குறள்)மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?
  • 104
Added article 
நான் இயக்கிய 'வீரம் விளைஞ்ச மண்ணு' படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அவருடைய தனிப்பட்ட குணங்களை இந்தப் படத்தின் மூலம்தான் தெரிஞ்சுக்கிட்டேன். வெளியூர் படப்பிடிப்பில் அவருக்கென தங்குறதுக்கு ரூம் போட்டுக் கொடுத்திருப்போம். ஆனா, அவர் அந்த ரூமில் தங்கியிருக்க மாட்டார்." அவரோட ரூமில் லைட்மேன் படுத்திட்டிருப்பார். இவரோ அந்த லைட்மேன் ரூமில் தூங்கிட்டு இருப்பார். இன்னொரு சமயம், புரொடக்‌ஷன் பாய் அறையில் சரிசமமா உட்காந்து 'மாப்ள, மச்சான்... பங்காளி'னு சொல்லிக்கிட்டு சீட்டு விளையாடிட்டு இருப்பார். அவ்ளோ எளிமையான மனிதர்..."என் குடும்பத்தின் நலனிலும் அக்கறை கொண்டவர் அவர். என் இரண்டாவது மகள் கார்த்திகா தேவி, இன்னைக்குப் புகழ்பெற்ற கைனகாலஜிஸ்ட் மருத்துவர். அவர் இன்னைக்கு டாக்டர் ஆக இருப்பதற்கு கேப்டனும் ஒரு காரணம். நான் கிராமத்துல இருந்து சென்னை வரும் போது, என் குழந்தைகளை டாக்டருக்குப் படிக்க வைக்கணும்னு விரும்பினேன். அதைப் போல, கார்த்திகாவும் டாக்டருக்குப் படிக்க விரும்பினார்.ஆனால், அவருக்கு மெடிக்கல் சீட் கிடைக்கல. ஒரு கட்டத்துல நானே மகளிடம், 'நீ இன்ஜினியரிங் படி'னு சொல்லியிருக்கேன். அந்தச் சமயத்துல நான் 'வீரம் விளைஞ்ச மண்ணு' படத்தை இயக்கிட்டு இருந்தேன். அப்ப எங்க வீட்டு வழியா விஜயகாந்த் கார்ல போயிருக்கார். அவரோட டிரைவர், இங்கேதான் நம்ம பட டைரக்டர் கஸ்தூரி ராஜா வீடு இருக்குதுனு சொல்லியிருக்கார்.உடனே விஜயகாந்த் சார், 'காரை டைரக்டர் வீட்டுக்கு விடு'ன்னு சொன்னதோடு, விஜயகாந்த் சார், வீட்டுக்குள்ள வந்துட்டார். அப்ப என் மகள் மெடிக்கல் சீட் கிடைக்காத வருத்தத்தில் அழுதுட்டிருந்தாங்க. உடனே விஜயகாந்த் சார், 'பொண்ணு ஏன் அழுறா'னு கேட்டதோடு, 'சீட் வாங்கிடலாம்'ன்னு நம்பிக்கையும் கொடுத்தார். ராமச்சந்திர மெடிக்கல் காலேஜூக்கு எங்களை அழைச்சிட்டு போய், சீட்டுக்காக அவரும் எங்களோட சேர்ந்து அலைந்து திரிந்து வாங்கிக் கொடுத்தார். அவர் பணம், காசு எதுவும் கொடுக்கல. ஆனா அவர் பண்ணினது அதை விட பெரிய உதவி. அன்றைய காலகட்டத்தில் மெடிக்கல் சீட் என்பது பெரிய கனவு. அன்னிக்கு அவருக்கு இருந்த பிஸி காலகட்டத்திலும், அவர் ஒருநாள் முழுக்க எங்களோடு இருந்தது, எங்கள் வாழ்நாளில் மறந்திட முடியாத பெரிய உதவி. இன்னிக்கு கார்த்திகா தேவி பெரிய மருத்துவராகி, 500 ஆபரேஷன்களுக்கு மேல செய்திட்டார். மகளின் இந்த உயரத்திற்கு அவரும் காரணமாக இருந்திருக்கார்.விஜயகாந்த் சாரோட இழப்பு பேரிழப்பு. இது பேச்சுக்காக சொல்ற இழப்பு இல்ல. நிஜமாகவே இதுதான் உண்மையான இழப்புன்னு உணர வச்சிட்டார் மனிதர்" என நெகிழ்கிறார் கஸ்தூரி ராஜா.
  • 110
Added a post 
ஸ்ரீ க்ருஷ்ணர் எதை அர்ஜுனனுக்கு போதித்தாரோ அவ்வாறே அவர் வாழவும் செய்ததாலேயே வாழும் கடவுளாக அர்ஜுனன் கண்ணனைக் கைதொழுதான்.அந்நாட்களில் இரவில் போர் புரியும் வழக்கமில்லை.போர் வீரர்கள் இரவில் ஓய்வெடுப்பார்கள்.தேரோட்டிகள் குதிரைகளை கட்டி வைத்து அவைகளுக்குத் தீனியும் போட்டு மறுநாள் போருக்குத் தயார் செய்துகொண்டிருப்பார்கள்.பகல் முழுக்கப் போரிட்ட களைப்பால் அர்ஜுனன் அன்று நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்.ஆனால் பகல் முழுக்கத் தேரோட்டி களைத்திருந்தாலும் கண்ணன் மட்டும் இரவில் ஓய்வு கொள்ளாமல் குதிரைகள்மேல் கவனம் செலுத்துவான்.வெந்நீர் வைத்து குதிரைகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி விடுவான்.கட்டுக் கட்டாக பச்சை புல் வெட்டி வந்து குதிரைகளுக்கு ஊட்டிவிடுவான்.கொள்ளை வேக வைத்து, அதைத் தன் பட்டுத் துணியில் எடுத்து ஒவ்வொரு குதிரைக்கும் தருவான்.அவை உண்பதைக் கண்டு மகிழ்வான்.குதிரைகள் வயிறார உண்டு முடித்த பிறகு சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும்.அந்த நேரத்தில் கண்ணன் குதிரைக் கொட்டில் முழுவதையும் சுத்தம் செய்வான்.அதற்குள் விடியத் தொடங்கிவிடும்.உடனே குதிரைகளைப் பூட்டி போருக்குச் செல்ல தேரைத் தயாராக்கிவிடுவான்.ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.ஒரு நாள், அர்ஜுனனுக்கு நள்ளிரவில் உறக்கம் கலைந்தான்.எழுந்து கண்ணன் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்றான்.அங்கு கண்ணன் இல்லை.தூங்கி ஓய்வெடுக்காமல் கண்ணன் எங்கு சென்றிருப்பான் என்று எண்ணியவாறு தேடினான் அர்ஜுனன்.இறுதியில் கண்ணன் குதிரை லாயத்தில், குதிரைகளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.உடனே ஓடிச் சென்று கண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு, ""கண்ணா! குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமா?வேறு யாரிடமாவது கூறினால் செய்ய மாட்டார்களா?'' என்றான்."அர்ஜுனா! குதிரைகளை நன்கு பராமரிக்காவிட்டால் தேர் விரைந்து ஓடுமா?பகைவரை வெல்ல முடியுமா?வேறு யாரை யாவது பராமரிக்கச் சொன்னால் அவர்கள் அக்கறையாகக் கவனிப்பார்களா?அது மட்டு மல்ல;இப்போது நடக்கும் போர் முடியும்வரை நாம் மைத்துனன் மார் அல்ல.நீ எஜமானன்;நான் உனக்கு சாரதி.ஆதலால் உன் கடமை போர் செய்வது; என் கடமை தேர் ஓட்டுவது. குதிரைகளைப் பராமரிப்பது சாரதிக்குரிய தொழில்;மறுநாள் போருக்காக நன்கு ஓய்வு எடுத்துக் கொள்வது எஜமானன் தொழில். இருவரின் தொழில்களும் செம்மையாக நடைபெற்றால் தான் போரில் வெற்றி கிட்டும்!அதனால் நீ சென்று ஓய்வெடுத்துக் கொள்.என் கடமையைச் செய்யவிடாமல் குறுக்கிடாதே'' என்றான் கண்ணன்.கீதை உபதேசம் கேட்ட நாளைவிட அன்று கண்ணன் செயலாலும் சொல்லாலும் காட்டிய உபதேசம் அர்ஜுனன் நெஞ்சை நெகிழச் செய்தது.அந்தநாள் முதல் தன் கடமையை சோர்வின்றி மகிழ்வுடன் செய்து வெற்றியைக் குவித்தான் அர்ஜுனன்.போதனைகளை ஊருக்கெல்லாம் கூறிவிட்டு தான் மட்டும் சொகுசாக வாழும் தலைவர்களைக் கொண்ட இந்த சமூகத்திற்கு ஸ்ரீ க்ருஷ்ணர் ஒரு வாழும் பாடமே!ஆம், மகாபாரதம் வாழும் தர்மம்!
  • 110
Added a post 
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் அதனால் நடக்க முடியாது.பாம்பின் கண்கள் மூடி இருந்தாலும் அதன் இமையின் ஊடே பார்க்க முடியும்!போலார் கரடியின் மிருதுவான ரோமங்கள் உண்மையில் அதன் கருப்பு தோலாகும்.வீடுகளில் பறந்து திரியும் ஈக்கள் ஆயுட்காலம் இரண்டு முதல் மூன்று வாரம்தான்.இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மில்லியன் எறும்புகள் உள்ளன.ஒரு சிறு துளி ஆல்கஹால் தேள் மேல் வைத்தால் அது புத்தி பேதலித்து போகும் தன்னைத் தனே கொட்டிக் கொண்டு மரணம் ஏற்பட வாய்ப்புகள் உண்டுமுதலைகள் மற்றும் சுறாக்கள் சுமாராக நூறாண்டுகள் வாழும்.தேனிக்கு இரண்டு வயிறுகள் உள்ளன ஒன்று உணவுக்கு மற்றொன்று தேன் சேமிப்பிற்கு!யானைகள் கடலில் இருக்கும் நீல திமிங்கிலத்தின் நாக்கின் எடையை விட குறைவாக இருக்கும். நீல திமிங்கிலத்தின் இருதயம் ஒரு காரின் அளவு இருக்கும்.நீல திமிங்கலங்கள் உலகத்தில் பெரிய உலவும் ஜீவராசி.கரப்பான் பூச்சிகள் தலை துண்டிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு வாரம் வரை உயிரோடு இருக்கும் உணவு இல்லாமல் பசியால் மாண்டு போகும் .டால்பின் மீன்கள் உடல் சரியில்லை என்றால் அது அழுது கூக்குரல் எழுப்புமாம். அது மற்ற டால்பின் மீன்களைப் உதவிக்கு அழைக்குமாம். மற்ற மீன்கள் அந்த மீனை நீரின் மேலே வர உதவி செய்யுமாம்! மூச்சு வாங்க உதவும்.ஒரு சிறிய நத்தை தொடர்ந்து மூன்று வருடம் தூங்குமாம்.ஒற்றை வால் ஸ்விஃப்ட் எனும் பறவை தான் உலகில் வேகமாக பறக்க பறவை. 106mph. (Peregrine falcon is actually 390km/hr or 108mph)பசு தன் வாழ்நாள் சராசரியாக 2 லட்சம் கிளாஸ் பாலை கொடுக்கிறது.அட்டைகளுக்கு 32 மூளைகள் இருக்கும்தெருவில் வசிக்கும் பூனைகளின் ஆயுட்காலம் 3 வருடங்கள். ஆனால் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் சுமார் 16 ஆண்டுகள் அதற்கு மேலும் வாழும்.சுறாக்கள் எப்பொழுதும் உடல் நோய் வாய் படுவதில்லை அதன் எதிர்ப்பு சக்தி கேன்சரையும் ஜெயிக்க வல்லது.
  • 113
Added a post 
ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை."ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .இது கொத்துனா உடனே மரணந்தான்.குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
  • 116
Added a news 
இந்திய மீன்பிடியாளர்களின் சட்டவிரோத அடாவடி இழுவை படகு தொழில் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி வரும் 27 ஆம் திகதியன்று யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்றிழில் அமைப்பு தெரிவித்துள்ளது.யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவிதிருந்தகுறித்த அமைபினர் மேலும் கூறுகையில்இந்திய மீனவரின் சடவிரோத இழுவைமடி தொழில் நடவடிக்கையானது யாழ் வடக்க்கில் குறிப்பாக எமது தீவக பிரதேசத்தை கடுமையாகப் பாதித்து வருகின்றது.இதை நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.இந்நிலையில் எமது வாழ்வுரிமைக்கான பொருளாதார ஈட்டலை உறுதி செய்ய நாம் வீதிக்கிறங்கி போராட தீர்மானித்துள்ளோம்.அதனடிப்படையில் தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.அதனடிப்படையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறும் இந்த எமது இந்த போரட்டம் யாழ் பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பித்து ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக செல்லவுள்ளது.அத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் வழங்கவுள்ளோம்.எமது இந்த போராட்டத்துக்கு யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தை வலுவூட்டுமாறு அழைப்பு விடுகின்றோம் எனவும் அழைப்பு விடுத்துள்ளதுடன் குறித்த போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை வழங்க 077 199 4097 அல்லது 077 563 4883 என்றை இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.0000
  • 215
Added a news 
சாவல்கட்டு மகாத்மா சனசமூகநிலையத்தின் (07.03.2025) 75 ஆவது ஆண்டின் பவள விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை வட மாகாண ரீதியில் நடத்தவுள்ளதாக குறித்த நிகழ்வுகளின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.இது குறித்து குறித்த நிகழ்வுகளின் ஏற்பட்டுக்குழு இன்றையதினம் (21)யழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தியிருந்தது.இதன்போது ஏற்பாட்டுக்குழு மேலும் கூறுகையில் -சாவல்கட்டு மகாத்மா சனசமூகநிலையமானது கடந்த 1950 ஆம் ஆண்டு மக்களை ஒன்றிணைத்து தனது முதல் சமூக சேவையை ஆரம்பித்தது.இதன் பின்னர் படிப்படியாக தனது கட்டமைப்புக்களை வளர்த்துக்கொண்ட குறித்த சனசமூக நிலையமனது விளையட்டுக்கழகம், முன்பள்ளி மற்றும் பொது மக்களின் கட்டமைப்பு உள்ளிட்ட பல கட்டமைப்புக்களை உருவாக்கி பல நூறு மக்களின் ஒத்துழைப்புடன் பெரும் பரிணாமம் பெற்று பக்களுக்காக பெரும் பங்காற்றியுள்ளது.இவ்வாறான சமூக செயற்பாகளுடன் தற்போது 75 ஆவது ஆண்டை வரும் மாதம் 07.03.2025 அன்று எட்டவுள்ளது.இந்நிலையில் பவள விழாவை பிரமண்டமான முறையில் நடத்த ஏற்பாடு செய்யுள்ள நிலையில் தேசிய ரீதியில் பல விளையாட்டு நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதனடிப்படையில் 22.02.2025 அன்று மாலை 6.00 மணிக்கு கரப்பந்தாட்ட போடியும்28.02.2025 காலை 7 நீச்சல் போடியும் 28.02.2025 பிற்பகல் 3.00 மணிக்கு கயிறு இழுத்தல் நிகழும்,மரதன் ஓட்ட நிகழ்வு 01.03.2025 காலை 6.00 மணிக்கும், சைக்கிள் ஓட்டம் நிகழ்வுகள் 01.03.2025 காலை 7.30 மணிக்கும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதேவேளை வலிகாமம் பிரதேச ரீதியில் உதைபந்தாட்ட நிகழ்வும், சிறுவர்களுக்கான பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.இறுதி நிகழ்வுகழ் மார்ச் மாதம் 7 ஆம் திகதியன்று பல்வேறு உயரதிகாரிகள் கல்விப் புலம் சார்ந்தோர் பங்கேற்புடன் நடைபெற உள்ளதாகவும் குறுத்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.இதேவேளை நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவோர் தமது பதிவுகளை 26.02.2025 முன்னராகத.ராஜ்குமார் - 0773933179செ.டுபின்சன் - 0779509975, சி.செந்தூரன் - 0779459078 ஆகியோருடன் தொடர்புகொண்டு மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.அத்துடன் வெற்றியாளர்களுக்கு வெகுமதியான பணப்பரி சில்களும், கேடயங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் குறித்த ஏற்பாட்டுக் குழு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 247
  • 287
  • 287
  • 287
  • 289
  • 288
  • 289
Added a post 
வாழ்க்கையே மாற்றும் சிவ மந்திரங்கள் மிக மிக சக்தி வாய்ந்தவையாகும். இந்த மந்திரங்களை சொல்ல சொல்ல சிவனின் அருளையும், சிவனையும் நமக்குள் உணர முடியும். நம்முடைய தினசரி வாழ்க்கையில் சிவனின் நினைவால், அவரின் மந்திரங்களை சொல்லிக் கொண்டே ஒவ்வொரு செயலையும் செய்யும் போது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதை கண் கூடாக காண முடியும்.மந்திரங்களில் முதன்மையானதும், மிக பழமையானதுமாக சொல்லப்படுவது காயத்ரி மந்திரம். ஆனால் அதை விடமும் பழமையான மந்திரமாகவம், மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகவும் சொல்லப்படுகிறது பஞ்சாட்சர மந்திரமான, "ஓம் நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரம் தான். இதற்கு சிவனை உன்னை வணங்குகிறேன் என்பது தான் பொருள். இந்த மந்திரத்தை இன்னும் ஆழமாக சென்று பார்த்தால் பல விதமான அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, சிவன் என்ற சொல்லுக்கு ஆனந்தம் அளிப்பவன் என்று பொருள். அனைத்து விதமான ஆனந்தத்தையும் அளிப்பவனை வணங்குகிறேன் என்பது இந்த மந்திரத்திற்கு பொருளாக கொள்ளலாம்.சிவ பெருமானே அனைத்து உலங்களுக்கும் தலைவனாகவும், ஆதியும் அந்தமும் இல்லாமல் அனைத்து இடங்களிலும், அனைத்துமாகவும் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆரம்பமும் முடிவும் இல்லாதவனை வணங்குகிறேன், அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை வணங்குகிறேன் என்பது உள்ளிட்ட பல அர்த்தங்கள் இந்த மந்திரத்திற்கு சொல்லப்படுகிறது. இது தவிர இன்னும் எத்தனையோ மந்திரங்கள் சிவனின் அருளை பெறுவதற்காக உள்ளன. இவற்றின் நம்முடைய தினசரி வாழ்க்கையில் எந்த நேரத்தில், எந்த மந்திரத்தை சொன்னால் சிவனின் அருளால் நம்முடைய வாழ்க்கையே மாறும் என்பதை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.தினமும் சொல்ல வேண்டிய தமிழ் சிவ மந்திரங்கள் :காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய மந்திரம் :அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றிகுளிக்கும் போது சொல்ல வேண்டியது :சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றிகோபுர தரிசனம் காணும் போது சொல்ல வேண்டியது :தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிவீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது சொல்ல வேண்டியது :காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா எந்தனக்கு அருளாய் போற்றிநண்பரைக் காணும் போது சொல்ல வேண்டியது :தோழா போற்றி துணைவா போற்றிவீட்டின் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டியது :வாழ்வே போற்றி என் வைப்பே போற்றிநிலத்தில் அமரும் போது சொல்ல வேண்டியது :பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றிநீர் அருந்தும் போது சொல்ல வேண்டியது :நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றிஅடுப்பு பற்ற வைக்கும் போது சொல்ல வேண்டியது :தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றிஉணவு உண்ணும் போது சொல்ல வேண்டியது :தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றிஇன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றிமனதில் அச்சம் ஏற்படும் போது சொல்ல வேண்டியது :அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றிஉறங்கும் போது சொல்ல வேண்டியது :ஆடக மதுரை அரசே போற்றிகூடல் இலங்கு குருமணி போற்றி
  • 357
Added a post 
அகஸ்திய முனிவரின் சீடர்களுள் ஒருவன் இடும்பன். குருவின் கட்டளைக்கிணங்க இடும்பன் கவுதடி என்னும் தடியின் இரு புறங்களிலும் சிவகிரி மற்றும் சக்தி கிரி என்னும் இரண்டு மலைகளை கட்டி தொங்கவிட்டு பொதிகை மலையை நோக்கி சென்றான்.செல்லும் வழியில் பழனி என்ற இடம் வந்தது. தடியுடன் மலைகளை கீழே வைத்தான் களைப்பு தீர இளைப்பாறி முடிந்ததும் மலையை தூக்க முயன்றான். முருகன் இவ்விரு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைபெற செய்யவும் இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார். முருகன் சிறுவனாக வந்து இடும்பனின் தோல்வியை கேலி செய்தான். சிறுவன் முருகன்தான் என அறியாத இடும்பன், சிறுவனை பிடிக்க முயற்சித்தான். தனது முயற்சியின்போது அவன் தவறுதலாக கீழே விழுந்து விட்டான். பின்னர் முருகன் இடும்பனை காப்பாற்றி இடும்பனின் வேண்டுகோளுக்கு இணங்க பழனி முருகனின் காவல் தெய்வமாக இருக்க அருளினார். மேலும், காவடி சுமந்து வரும் பக்தர்களின் குறைகளுக்கு நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற வரத்தினையும் கேட்டு வாங்கினான் இடும்பன். அன்றிலிருந்து காவடி சுமந்து வரும் பக்தர்களுக்கு முருகப்பெருமான் பெருமாள் அருள்புரிவதாக ஐதீகம்.காவடிகளில் மொத்தம் இருபது வகைகள் இருப்பதாக ஆகம விதிகள் கூறுகின்றன. ஒவ்வொரு வகை காவடிக்கும் ஒவ்வொரு வகை பலன் என்று கூறப்படுகிறது. காவடி எடுப்பவர்கள் அலகு குத்திக் கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது.எந்த காவடி எடுத்தால் என்ன பலன் :* தங்கக் காவடி எடுப்பதனால் நீடித்த புகழ் கிடைக்கும். * வெள்ளி காவடி எடுப்பதனால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். * பால் காவடி எடுப்பதனால் செல்வச் செழிப்பு உண்டாகும்.* சந்தனக் காவடி எடுப்பதனால் வியாதிகள் நீங்கும். * பன்னீர் காவடி எடுப்பதனால் மனநல குறைபாடுகள் விலகும். * சர்க்கரை காவடி எடுப்பதனால் சந்தான பாக்கியம் உண்டாகும்.* அன்னக்காவடி எடுப்பதனால் வறுமை நீங்கும். * இளநீர் காவடி எடுப்பதனால் சரும நோய்கள் நீங்கும்.* அலங்கார காவடி எடுப்பதனால் திருமணத் தடை நீங்கும். * அக்னி காவடி எடுப்பதனால் திருஷ்டி தோஷம், பில்லி சூனியம் மற்றும் செய்வினை நீங்கும். * கற்பூர காவடி எடுப்பதனால் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும். * சர்ப்பக் காவடி எடுப்பதனால் குழந்தை வரம் கிடைக்கும். * மஞ்சள் காவடி எடுப்பதனால் வெற்றி கிடைக்கும். * சேவல் காவடி எடுப்பதனால் எதிரிகள் தொல்லை நீங்கும். * மலர் காவடி எடுப்பதனால் நினைத்தது நிகழும்.* தேர்க்காவடி எடுப்பது, நோய்வாய்ப்பட்டவர் உயிர்பிழைக்க வைத்ததற்கு முருகனுக்கு நன்றி தெரிவிக்க எடுக்கும் காவடி. * மச்சக்காவடி எடுப்பதனால் வழக்கு விஷயங்களில் இருந்து விடுபட தீர்ப்பு கிடைக்கும். * மயில் காவடி எடுப்பதனால் இல்லத்தில் இன்பம் நிறையும். குடும்பப் பிரச்னைகள் நீங்கும். * பழக்காவடி எடுப்பதனால் தொழிலில் நலம் பெருகும், லாபம் கிடைக்கும். * வேல் காவடி எடுப்பதனால் எதிரிகள் நம்மை பார்த்து அஞ்சுவர்.தைப்பூச நன்னாளில் முருகப்பெருமான் மீது முழு மன நம்பிக்கையுடனும் சரியான முறையில் விரதங்களைக் கையாண்டும் காவடி எடுத்தால் வேண்டியது வேண்டியபடி அருள்வார் வேலவன்.
  • 351
Added a photo 
  • 366
Added a photo 
  • 368
Added a post 
குதிரை முகமும், மனித உடலும் கொண்டு உருவானவர் ஹயக்ரீவர். இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவர் கல்வித் தெய்வமாகக் குறிப்பிடபடுகின்றார். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை.அவதாரக் காரணம்பிரம்மாவிடம் இருந்த வேதங்களை மது ,கைடபன் என்ற அசுரர்கள் பறித்துக் கொண்டு பாதாள லோகத்திற்கு சென்று விட்டனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர் .அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். அந்த உருவமே ஹயக்ரீவர். மது , கைடபனும் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார் ஹயக்ரீவர்.லட்சுமி ஹயக்ரீவர்மது, கைடபனுடன் போரிட்டு அவர்களை அழித்தப்பிறகும் ஹயக்கீரீவருக்கு உக்கிரம் தணியாததால், லட்சுமி தேவியை அவர் மடியில் அமரச்செய்தனர் தேவர்கள். இத்திருவுருவத்திற்கு 'லட்சுமி ஹயக்ரீவர் ' என்று பெயர். ஹயக்ரீவருக்கு கல்வி கருவாக அமைந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும், லட்சுமி உடனாருப்பதால் செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்ரீவர் வணங்கப்படுகிறார்.ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையான வரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்ரீவரை வணங்குகிறேன் என்னும் பொருளுடைய ஸ்தோத்திரம்." ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸாமஹே"மாணவ மாணவியர் ஹயக்ரீவ மந்திரங்களை ஓதி, கல்வித் தெய்வமான ஹயக்ரீவரை வணங்கி வெற்றி பெற வாழ்த்துகள்.
  • 375
Added a post 
பாம்பாட்டிச் சித்தரும் பிறக்கும் போது சித்தராகப் பிறக்கவில்லை. பிறக்கும்போது எல்லோரும் சாதாரணம்தான். வளர்ப்பும் வழிகாட்டுதலுமே ஒருவரை உயர்ந்த இடத்துக்கோ, தாழ்ந்த இடத்துக்கோ கொண்டு செல்கின்றன. இந்த பாதிப்பின் காரணமாகத்தான் சிறு வயதில் நல்ல விஷயங்கள் போதிக்கப்படுகின்றன. பாம்பாட்டியும் அப்படிதான்.திருக்கோகர்ணம் திருத்தலத்தில் ஒரு கார்த்திகை மாதம் மிருகசீரிஷ நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் மிதுன ராசியில் பிறந்தவர் பாம்பாட்டிச் சித்தர் என்று கூறப்படுகிறது. இவரின் தந்தை, பார்வை இல்லாதவர் என்கிற குறிப்பும் சொல்லப்படுகிறது. பிறக்கும்போதே கழுத்தில் மாலை சுற்றிப் பிறந்தார். ஜோகி எனப்படும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர் பிழைப்புக்காக பாம்புகளை உயிருடன் பிடித்தோ அல்லது கொன்றோ , இதை வாங்குவதற்கென்றே இருக்கும் வைத்தியர்களிடம் விற்று வந்தார். பாம்புகளின் பாஷை அறிந்தவர். இப்படிப் பாம்புகளைத் தேடி பாண்டிய நாட்டு காடுகளிலும் மருதமலைக் காடுகளிலும் (இன்றைய மருதமலை அமைந்திருக்கும் பகுதி) நேரம் காலம் பார்க்காமல் சுற்றி திரிவது இவரது வழக்கம். பாம்புகளின் விஷத்தை அசாதாரணமாக அருந்தியவர் பாம்பாட்டி என்பதை போகர் பெருமான் தனது பாடலில் சொல்லி இருக்கிறார். அதோடு, இவரது பிறப்பைப் பற்றிச் சொல்லும் போகர். தாயான பாம்பாட்டி சித்தரப்பா தரணியில் நெடுங்கால மிருந்தசித்து காயான முப்பழமும்பாலுங் கொண்ட கலியுகத்தில் நெடுநாளா யிருந்தசித்து என்கிறார். அதாவது கிடைத்தற்கரிய விசேஷமான கனிகளை உண்டும் ஞானப் பால் அருந்தியும் தன் சித்துத் திறமையால் பல காலம் தரணியில் வாழ்ந்தவர் என்று சொல்கிறார் போகர். ஆரம்பத்தில், மிகவும் மூர்க்கனாக இருந்தார் பாம்பாட்டி, கொடிய வகை பாம்புகளை-பயம் அறியாமல்-மிகுந்த லாகவமாகப் பிடித்து அவற்றைக் கொன்றார்.இவரது இயற்பெயர் தெரியவில்லை. செடிகளும் கொடிகளும் மண்டி வளர்ந்த அடர்ந்த வனத்துக்குள் அநாயாசமாக நுழைவார். பாம்புகளைத் தேடி அலைவார். இவரை நம்பியே பல வைத்தியர்கள் அப்போது இருந்தனர். இன்ன வைத்தியத்துக்காக இந்த வகை பாம்பின் விஷம் தேவைப்படுகிறது. என்கிற கோரிக்கை அவர்களிடம் இருந்து வந்ததும் அதற்கான தேடல் துவங்கிவிடும். கொடிய நச்சு கொண்ட பாம்புகளின் விஷம். எந்தெந்த வியாதியை முறியடிக்கும் தன்மை கொண்டது என்பதையும் இவர் அறிந்து வைத்திருந்தார். இதனால், சில நேரங்களில் பாம்பாட்டிச் சித்தரே ஒரு வைத்தியராகச் செயல்பட்டதும் உண்டு. இவரிடம் சிகிச்சைக்காக வந்தவர்களும் ஏராளம். ஒரு முறை சில வைத்தியர்கள் பாம்பாட்டிச் சித்தரை அவரது இருப்பிடம் தேடி வந்து சந்தித்தார்கள். சரி.... தனக்குப் புதிதாக ஒரு வேலை வரப் போகிறது... அதன் மூலம் நிறைய பணம் கிடைக்கும். என்கிற சந்தோஷத்தில், வாருங்கள் வைத்தியர்களே... உங்களுக்கு ஏதாவது பாம்பு வேண்டுமா? எந்த வகை பாம்பு வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் விருப்பத்துக்கேற்றபடி அதை உயிருடனோ, அல்லது சாகடித்தோ கொண்டு வருகிறேன். என்றார் உற்சாகமாக. ஐயா பாம்பின் பாஷை அறிந்தவரே.... நவரத்தினம் போல் ஜொலிக்கக்கூடிய பாம்பு ஒன்று இருக்கிறது. கொஞ்சம் குறைவான உயரத்தில் இருக்கும் அந்தப் பாம்பின் தலையில் ஒரு மாணிக்கக் கல் காணப்படும். அந்தப் பாம்பின் விஷம் எங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. உயிர் காக்கும் பல நோய்களைத் தீர்க்கக்கூடிய வலிமை அந்த விஷத்துக்கு உண்டு. அதனால்தான் உன்னைத் தேடி வந்தோம் என்றனர். அந்தப் பாம்பின் விஷம் மட்டும் போதுமா? ஏதோ, மாணிக்கக் கல் என்று சொன்னீர்களே.... அதையும் எடுத்து வரவேண்டுமா? என்று சவாலாகக் கேட்டார் பாம்பாட்டிச் சித்தர். விஷம்தான் எங்களுக்கு முக்கியம். முடிந்தால், அந்த மாணிக்கக் கல்லையும் கொண்டு வா. அதற்கும் ஒரு நல்ல விலை போட்டுக் கொடுத்துவிடுகிறோம் என்றனர் பேராசைக்காரர்களான அந்த வைத்தியர்கள். நீங்கள் கேட்ட அனைத்தும் நாளை காலை உங்களிடம் இருக்கும் சந்தோஷமாகப் போய் வாருங்கள் என்று அவர்களை அனுப்பி வைத்தார் சித்தர். இரவு வேளையில்தான் இத்தகைய பாம்புநடமாடும் என்பதை அறிந்த பாம்பாட்டிச் சித்தர். அன்று இரவில் வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு, நவரத்தினப் பாம்பை வேட்டை யாடுவதற்காகப் புறப்பட்டார். இறைவன், பாம்பாட்டிச் சித்தரை ஆட்கொள்ளத் தீர்மானித்தது இந்தத் தினம்தான். சோதனைகளை முதலில் தந்தான் இறைவன். எத்தனையோ பாம்புப் புற்றுகளைத் தரைமட்டம் ஆக்கியும், குறிப்பிட்ட அந்தப் பாம்பு சிக்கவே இல்லை. முதலில் சலித்துப் போன பாம்பாட்டிச் சித்தர், தன் முயற்சியில் இருந்து கொஞ்சமும் துவளாமல், அடுத்தடுத்து காட்டில் பயணிக்கலானார். அப்போது வித்தியாசமான ஒரு புற்று அவரது கண்களில் பட்டது. ஒருவேளை நவரத்தினப் பாம்பு ஓய்வெடுக்கும் புற்று இதுவாக இருக்குமோ என்ற எண்ணத்தில், தன் கையில் இருந்த ஆயுதத்தால், இடிக்க முற்பட்டபோது அந்த விநோதம் நிகழ்ந்தது. திடீரென யாரோ ஒருவர் வனமே அதிரும்படி சிரிக்கும் பேரோசை கேட்டது.பாம்புப் புற்றை இடிக்கும் தன் முயற்சியைச் சட்டென நிறுத்திவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தார் பாம்பாட்டிச் சித்தர். உருவம் எதுவும் புலப்படவில்லை. ஆனால் கண்களைக் கூச வைக்கும் பேரொளி ஒன்று அவர் முன் தோன்றியது. கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தார். பாம்பாட்டிச் சித்தரின் முன்னே-தேஜஸான உடல்வாகுடன்-பிரகாசிக்கும் கண்களுடன்-ஜடாமுடிதாரியாக சித்த புருஷர் ஒருவர் பிரசன்னமானார். பாம்பாட்டிச் சித்தர் திகைத்துப் போனார். யார் நீங்கள்? எதற்குமே பயப்படாத என்னை உங்களது சிரிப்பு நடுங்க வைக்கிறது. என் பணியின்போது ஏன் குறுக்கிடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டார்.எனக்கு நீதானப்பா வேண்டும் என்று ஆரம்பித்த அந்த சித்த புருஷர், பாம்புகளை இப்படிப் பிடித்து வதைக்கிறாயே... உனக்கு அதில் என்னப்பா சந்தோஷம்? என்று கேட்டார். என்ன அப்படி கேட்கிறீர்கள்? இந்தத் தொழில்தான் எனக்கு சோறு போடுகிறது. சந்தோஷம் தருகிறது. விதம் விதமான பாம்புகளைத் தேடித் தேடிப் பிடிக்கும்போது எனக்குள் ஒரு உற்சாகம் தோன்றுகிறது என்று எதிரில் நிற்பவர் யார் என்றே அறியாமல், அப்பாவியாகப் பேசிக் கொண்டிருந்தார் பாம்பாட்டிச் சித்தர். இருக்கப்பா..... இதை விட உயர்ந்த தொழில் இருக்கிறது. வீரம் மட்டுமே வாழ்க்கை அல்ல. விவேகமும் உன்னிடம் இருக்க வேண்டும். ஒன்றும் அறியாத இந்தப் பாம்புகளை வேட்டை ஆடுகிறாயே... உனக்குள்ளும் பாம்பு இருக்கிறது. அதை என்றாவது உணர்ந்தாயா நீ? என்று கேட்டார் சித்தர் புருஷர். என்னது.... எனக்குள்ளும் ஒரு பாம்பா? என்னய்யா தாடிக்காரரே ... கதை விடுகிறீர்? மனிதனுக்குள் எப்படிப் பாம்பு வசிக்க முடியும் ? - பாம்பாட்டிச் சித்தர். இருக்கிறது பிடாரனே... அதை நீ தேட முயற்சிக்க வேண்டும், அதற்கு தியானம் கைகூட வேண்டும். ஐயா..... உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குள் எதோ மாற்றம் தெரிவதாக உணர்கிறேன். இதுவரை நான் செய்து வந்த தொழிலே எனக்கு அருவருப்பாகத் தோன்றுவது போல் இருக்கிறது. எனக்குள் இருக்கும் பாம்பு என்ன என்பதை சற்று விளங்கச் சொன்னால் மகிழ்வேன். உனக்குள் மட்டும் இல்லையப்பா. இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் அந்தப் பாம்பு இருக்கிறது. உன்னை யார் என்று உணரும் வேளை வந்துவிட்டது. சதையும் திரவமும் நிறைந்த இந்த மனித உடம்பு, இறைவனின்அற்புதமான படைப்பு. இதற்குள் ஒரு பாம்பு தலைகீழாகத் தொங்கிக் கிடக்கிறது. அடங்கிக் கிடக்கிறது. அதன் பெயர் குண்டலினி. உடலின் சுவாசத்தைக் கட்டுப்படுத்து. இறைவனை நினைத்து தவம் செய்தால், உன் சுவாசம் உன் கட்டுக்குள் வரும். சுவாசம் ஒடுங்கும் வேளையில் குண்டலினி என்கிற அந்தப் பாம்பு புத்துயிர் பெறும். நீ நினைத்தபடி எல்லாம் அதை ஆட்டி வைக்கலாம். இதில் கிடைக்கிற பரமானந்தத்தை ஒரு முறை உணர்ந்து பாரேன். உலகம் எவ்வளவு விந்தையானது.... அதி அற்புதமானது என்பதை நீயே உணர்வாய். இதில் கிடைக்கிற ஆனந்தத்தை இது வரை நீ அனுபவத்திருக்க மாட்டாய் என்று ஒரு சீடனுக்குச் சொல்வதைப் போல் அந்த சித்த புருஷர் சொல்ல... உடல் லேசாகிப் போனார் பாம்பாட்டிச் சித்தர்.அடுத்த கணமே படாரென அவரது கால்களில் வீழ்ந்தார் பாம்பாட்டிச் சித்தர். மகா புருஷரே... எனக்குத் தெளிவை ஏற்படத்திவீட்டீர்கள். உங்கள் வார்த்தைகளின் மகத்துவம் இப்போதே என்னைப் பரவசம் கொள்ள வைக்கிறது. தாங்கள் காட்டிய வழியில் என் பயணம் தொடரும் என்று கம்பீரமாகச் சொன்ன பாம்பாட்டிச் சித்தர். பாம்புப் புற்றுகளை இடிப்பதறகாகத் தான் வைத்திருந்த ஆயுதங்களையும் பாம்புகளைச் சேகரிக்கத் தான் வைத்திருந்த கூடைகளையும் தூக்கி எறிந்தர். சபாஷ் இளைஞனே.... இனி. நீ காணப் போகும் உலகமே அலாதியானது. உன்னைத் தேடிப் பலரும் கூடுவர். நல்லவர்களுக்கு நன்மை செய். அல்லாதவர்களை உன்னிடம் அண்ட விடாதே என்று சொல்லி மறைந்தார் சித்த புருஷர். சட்டை முனி தனக்குச் சொல்லி அருளியபடி. குண்டலினியை உணரும் தவம் துவங்கினார் பாம்பாட்டிச் சித்தர். அடுத்து வந்த நாட்களில் அவரது தேகம் மெள்ள மெள்ள பொலிவு பெறத் துவங்கியது. குண்டலினியின் சக்தியை அறிந்தர். மாபெரும் சித்திகள் அவரிடம் கூடின. மண்ணை அள்ளினார்; பொன் துகள் ஆனது. கற்களை எடுத்தார்; நவரத்தினமாக ஜொலித்தது. இரும்பைத் தொட்டார்; தங்கமாக மின்னியது. ஆசை, அறவே ஒழிந்து போனது. தங்கத்தையும் நவரத்தினங்களையும் அல்லல் படும் மாந்தர்களிடம் அளந்து கொடுத்தார். சோம்பேறிகளுக்கு உபதேசம் செய்தார். பேராசையோடு தன்னிடம் வந்தவர்களை, சட்டைமுனியின் சொற்படி துரத்தி அனுப்பினர். காசுக்காக பாம்புகளைப் பிடித்து வந்த இளைஞன் சித்தராக-பாம்பாட்டிச் சித்தராக ஆன கதை இதுதான். எண்ணற்ற சித்து விளையாட்டுகள் மூலம், அகிலத்தையே தன் பக்கம் திருப்பிய பாம்பாட்டிச் சித்தர் ஒரு முறை ஆகாய மார்க்கமாகப் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஓர் அழுகுரல் அவரைத் திசை திருப்பியது. ஒரு தேசத்து மகாராணியின் ஓலம் அது.தரை இறங்கியபோது அந்த நாட்டின் மகாராஜா இறந்து விட்டதை அறிந்தார். மகாராணி உட்பட தேசத்து பிரஜைகள் அனைவரும் அங்கே கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அங்கே ஒரு சித்து விளையாடல் நிகழ்த்த விரும்பினார் பாம்பாட்டிச் சித்தர். இறந்து கிடந்த மகாராஜாவின் உடலில் தன் உயிரைச் செலுத்தினர். அதாவது கூடு விட்டுக் கூடு பாய்ந்தார். பிறகென்ன... செத்துப் போன மகாராஜா, சிரித்தபடியே எழுந்து உட்கார்ந்தார். ராணி உட்பட பிரஜைகள் அனைவரும் அதிர்ந்தனர். இந்த வேளையில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம். வாழ்வின் தத்துவத்தையும் வாழ்க்கை நெறியையும் பலருக்கும் உணர்த்தும் விதமான ஆடு பாம்பே.....ஆடு பாம்பே என்கிற முடிவு வரிகளைக் கொண்ட பாடல்கள் அப்போது பிறந்தன. சாதாரணமாக இருந்த - தன் கணவரான மகாராஜா - திடீரென எப்படிக் கவிதை மழையாகப் பொழிகிறார் என்று சந்தேகப்பட்ட மகாராணிக்கும் உண்மையை உணர்த்தி. அவர்கள் அனைவரும் தெளிவுறும்போது. நிழல் நிஜமானது அரசர் சரிந்து விழுந்தார். அரசனுக்குள் அதுவரை இருந்த பாம்பாட்டி, மகாராணிக்கு உபதேசம் செய்து வைத்து அங்கிருந்து அகன்றார். மிகவும் பிரபலமான நாதர்முடி மேலிருக்கும் நாகப்பாம்பே நச்சுப்பை வைத்திருக்கும் நல்லபாம்பே பாதாளத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே பாடிப் பாடி நின்று விளையாடு பாம்பே என்ற பாடல் பாம்பின் சிறப்பு என்ற தலைப்பில் இவர் எழுதியதுதான்.தவிர கடவுள் வணக்கம். குரு வணக்கம், சித்தர் வல்லபங் கூறல், சித்தர் சம்வாதம், பொருளாசை விலக்கல், பெண்ணாசை விலக்கல், சரீரத்தின் குணம் அகப்பற்று நீக்கல் போன்ற தலைப்புகளில் எல்லாம் பாம்பைச் சம்பந்தப்படுத்தி இவர் எழுதிய பாடல்கள் பிரபலம். சித்தர் ஆரூடம், வைத்திய சாத்திரம் உட்பட பல நூல்களையும் இவர் எழுதி உள்ளார். பல அற்புதக் கலைகளையும் சித்த ரகசியங்களையும் அறிந்து வைத்திருந்த பாம்பாட்டிச் சித்தர் தனது 163 ஆவது வயதில் சமாதி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சமாதி கொண்ட இடம் விருத்தாசலம் என்றும் துவாரகை என்றும் மருதமலை என்றும் பல தகவல்கள் இருந்தாலும் சங்கரன்கோயிலில் புளியங்குடி சாலையில் இவர் சமாதி ஆனார் என்கிற தகவலே பலராலும் ஊர்ஜிதமாகச் சொல்லப்படுகிறது, மருதமலை கோயிலில் பாம்பாட்டிச் சித்தரின் சன்னிதியிலும் இதே தகவல் காணப்படுகிறது. பாம்பாட்டிச் சித்தரோடு மருதமலை அதிக அளவில் சம்பந்தப்பட்டிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. என்னவென்றால், மருதமலையில் இவர் வாழ்ந்த காலம் அதிகம். இதை உறுதி செய்வது போல் பாம்பாட்டிச் சித்தர் மருதமலையில் தவம் செய்த குகை, குகைக்குள் இருந்து ஆதி மூலஸ்தானம் சென்று முருகப் பெருமானை வழிபடுவதற்கு இவர் ஏற்படுத்திய சுரங்கம். இவர் உருவாக்கிய சுனை போன்றவையும் இன்றளவும் இருக்கின்றன. பாம்பாட்டிச் சித்தர் இன்றும் கூட அரூபமாக (உருவமற்ற நிலையில்) இந்தச் சுரங்கம் வாயிலாக முருகப் பெருமானின் கருவறை சென்று அவரை பூஜித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. உள்ளிருக்கும் குண்டலினி என்கிற பாம்பை மேலெழுப்பு என்று இவருக்கு சட்டைமுனி அறிவுரை கூறியதை நினைவுபடுத்தும் விதமாக படமெடுத்து ஆடும் ஒரு பாம்பின் வடிவில், இயற்கையாக அமைந்த ஒரு கற்பாறையும் (சுயம்பு) இவரது சன்னதியில் இருக்கிறது. மருதமலை முருகனைத் தரிசித்து விட்டு, பிராகார வலம் வரும்போது இடப்பக்கம் செல்லும் படிகளில் கீழிறங்கிச் சென்றால், பாம்பாட்டிச் சித்தரின் சன்னதியை நாம் தரிசிக்கலாம். இந்த சன்னிதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் யோகியார் ஒருவர் வரைந்த பாம்பாட்டிச் சித்தரின் படம் இருக்கிறது. தவிர நந்திகேஸ்வரருடன் கூடிய சிவலிங்கம். பாம்பாட்டின் கல் விக்கிரகம், நாகராஜாக்கள் சூழ சன்னிதி நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வைக்கப்படும் முட்டை மற்றும் பால் போன்றவற்றை ஒரு சர்ப்பம் பலர் கண்களிலும் படாமல் வந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறதது. சில நேரங்களில் சிலரின் கண்களுக்கு இது தட்டுப்படும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்கே சிறப்பான வழிபாடுகள் நடக்கின்றன. பாம்பாட்டிச் சித்தருக்கு வழிபாடுகள் செய்ய விரும்புவோர் மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலைத் தொடர்புகொள்ளலாம். பாம்பாட்டிச் சித்தர் சன்னிதியின் முன் பலரும் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். இங்கே செய்யக்கூடிய முறையான தியானம், நம் பித்ரு தோஷத்தையும் அகற்றக்கூடியது என்கிறார் இங்கு பூஜை செய்யும் சிவாச்சார்யர். தாய் தகப்பனாரையும் நம் முன்னோர்களையும் நினைத்து இங்கே தவம் செய்வது விசேஷம். தவிர குழந்தை பேறு இல்லாமை, திருமண தோஷம், நாக தோஷம் போன்றவற்றுக்கும் இங்கே வழிபட்டால் நல்ல பலன் உண்டு. இதற்காக பல வெளியூர்களில் இருந்து பக்தர்கள் இங்கே வருகிறார்கள் என்றார். மருதமலைக்குச் செல்லுங்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் தரை மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் இருக்கிறது கோயில். மலைக்கு மேல் பயணிக்க திருக்கோயில் சார்பாகப் பேருந்து வசதி உண்டு.
  • 397
Added a post 
மேஷம் உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பச்சை ரிஷபம்குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்துவந்த சில குழப்பங்கள் மறையும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் மிதுனம்விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல சந்தர்ப்பம் கைகூடிவரும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். அனுபவம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் கடகம்கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். நாத்திகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு சிம்மம்நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை வேண்டும். சேமிப்பை மேம்படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்கன்னிசிறு தூரப் பயணங்களால் தெளிவுகள் ஏற்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு செய்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்துலாம்உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். தனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். பயம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்விருச்சிகம்குடும்ப விஷயங்களில் அலட்சியமின்றி செயல்படவும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். வாக்கு சாதுரியம் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வருவார்கள். தியானம் மூலம் மன அமைதி உண்டாகும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். நற்செயல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சில்வர் தனுசுமுன்பின் தெரியாதவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை மகரம்சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். சமூக பணிகளில் கௌரவம் மேம்படும். கடல் பிரயாண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாகும். வேளாண்மை பணிகளில் லாபம் மேம்படும். ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழல் ஏற்படும். மூத்த சகோதர வழியில் ஆதரவுகள் கிடைக்கும். கலைத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். கீர்த்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை கும்பம்குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மீனம்உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடி வரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் வந்துசேரும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • 430
Added a post 
குரோதி வருடம் மாசி மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 21.2.2025.சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 09.40 வரை அஷ்டமி. பின்னர் நவமி.இன்று பிற்பகல் 01.47 வரை அனுஷம். பின்னர் கேட்டை.அஸ்வினி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 414
Added a post 
எம்ஜிஆர் அமைதியாக தன் அலுவலக அறைக்குள் அமர்ந்திருந்தார். ஆனால் அறைக்கு வெளியே பரபரப்பு நிலவியது.எம்ஜிஆருக்கு நெருக்கமான சில அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள்.'சீக்கிரமாக சில பெயர்களைத் தயார் செய்து, அதை சி.எம். மிடம் கொடுக்க வேண்டும்.' அதுதான் அவர்களது பரபரப்புக்கான காரணம்.1984.கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.என்ன பெயர் வைப்பது அந்தப் பல்கலைக்கழகத்துக்கு ?எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர். எதுவும் அவருக்குத் திருப்தி தரவில்லை.உடனடியாக அதிகாரிகளை அழைத்தார். பல்கலைக்கழக விஷயத்தைச் சொல்லி, நல்லதொரு பெயரைத் தேர்வு செய்து சொல்லும்படி கேட்டிருந்தார்.ஒரு வழியாக அதிகாரிகளின் ஆலோசனை முடிந்தது. முதல்வரின் அறைக்குள் மெல்ல நுழைந்தார்கள். அடுக்கடுக்காக தாங்கள் எழுதி வைத்திருந்த பெயர்கள் அடங்கிய காகிதத்தை, எம்ஜிஆர் கைகளில் பணிவுடன் கொடுத்தார்கள்.ஔவையார் பெயர் வைக்கலாம் என ஒரு சிலர் சொல்லியிருந்தார்கள்.சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் பரிந்துரைக்க,இன்னும் சிலரோ எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.எல்லாவற்றையும் அமைதியாகப் படித்துப் பார்த்த எம்.ஜி.ஆர்., தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்து சொன்ன பெயர்...அன்னை தெரசா !எம்ஜிஆரைச் சுற்றியிருந்த அதிகாரிகள் அனைவரும் எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏனெனில் அதிகாரிகள் எழுதிக் கொடுத்த பட்டியலில் அந்தப் பெயர் இல்லை.ஆம். எம்ஜிஆரின் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த பெயர்தான் அன்னை தெரசா !இப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.Mother Teresa Women's University !விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள் !பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட,முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஃபரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க ...இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.இந்த வேளையில் எம்.ஜி.ஆரின் அரசியல் வழிகாட்டியான அண்ணா அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது :“நான் கைலி கட்டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ்துவன், திருநீறு அணியாத இந்து.”அண்ணா சொன்ன இந்த வார்த்தைகளை, தன் வாழ்க்கைப் பாடமாக ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.இதை அறிந்த அன்னை தெரசா, அந்த விழா மேடையிலேயே எம்ஜிஆரை மகிழ்ச்சியோடு வாழ்த்தி, மன நிறைவோடு ஆசி வழங்கினார்.மத வெறியை தவிர்ப்போம். மனித நேயம் காப்போம்.
  • 419
Added a post 
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் வசிக்கும் மக்கள்திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்தகாயம். அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்காவிட்டால் உயிரே பறி போகும் அபாயம். ‘பிறருக்கு பாரமாக இருப்பதை விட சாவதே மேல்’என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு டிரைவர் மறுத்தார். பெற்ற மனம் கேட்குமா? மகனைக்காப்பாற்றத் துடித்தார் தாய். ஆனால், அவர் என்ன சொல்லியும் மகன் கேட்கவில்லை. ‘காலை இழந்துவாழ்வதை விட சாவதே மேல்’ என்று உறுதியாகக்கூறிவிட்டார். எம்.ஜி.ஆர். ரசிகனான தன் மகன் அவர் சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கை பிறந்தது அந்தத்தாய்க்கு... எம்.ஜி.ஆரை சந்தித்து தன் மகனின் நிலையைக் கூறி அவரைக் காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டார். அந்த தாயின்வேண்டுகோளை ஏற்று மருத்துவமனைக்கே எம்.ஜி.ஆர் சென்று தனது ரசிகரை சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினார். சூரியனைக் கண்ட பனி போல டிரைவரின் கவலையும் அச்சமும் மிச்சமில்லாமல் பறந்தன. அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். பாதிக்கப்பட்ட கால் அகற்றப்பட்டு டிரைவர் உயிர் பிழைத்தார். எம்.ஜி.ஆரின் செலவிலேயே அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. பின்னர், அவர் கடை வைத்து நடத்தவும் எம்.ஜி.ஆர். உதவி செய்தார். டிரைவராக இருந்தவர் முதலாளியாகிவிட்டார். நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தாயும் மகனும் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினர். தங்கள் விருப்பத்தை எம்.ஜி.ஆருக்கு தெரியப்படுத்தி சந்திக்க அனுமதி கோரினர்... அதற்கு எம்.ஜி.ஆர். அளித்த நெகிழ வைக்கும் பதில் இது...!!! ‘‘தன் மகன்களில் ஒருவனாக கருதித்தான் என்னைத்தேடி அந்த அன்னை வந்தார். டிரைவரை நானும் என் தம்பியாக நினைத்துத்தான் உதவிசெய்தேன். தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னைப் பார்க்க வரலாம். நன்றி சொல்வதற்கு என்று வந்தால் நான் அந்நியனாகி விடுவேன். அந்த வயது முதிர்ந்த தாயை அந்த சகோதரர் நன்றாக கவனித்துக் கொண்டாலே போதும் அதுவே என்னைப் பார்ப்பதற்கு சமம்.’’ ‘ஆனந்த ஜோதி ' திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘ஒருதாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம்...’ பாடலுக்கு வெறுமனே வாயசைத்து விட்டுப் போனவரல்ல , அதன்படியே வாழ்ந்தவர்... நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மல்.
  • 420