Sign up
Already a member? Log in.
Added news
பின்லாந்து நாட்டில் மீண்டும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசும் சுகாதாரத் துறையும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.பின்லாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக அதிகரித்து வருகிறது இதனால் நாட்டில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.மார்ச் 8ஆம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை நாடாளுமன்றம் உள்பட அனைத்து இடங்களும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய தேவை இன்றி யாரும் வெளியே வரக்கூடாது என்றும் பின்லாந்து அரசு பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
Added a post
நம்மில் அனைவருக்கும் அடிக்கடி ஒரு எண்ணம் தோன்றும். நம் விஷயத்தில் கடவுள் கொஞ்சம் பாரபட்சமாய் விதித்து விட்டாரோ என்ற வருத்தம் ஏற்படும். நாம் எத்தனையோ பேருக்கு எத்தனை நன்மைகள் செய்திருக்கிறோம். பின் நமக்கு ஏன் இப்படி என்று வருத்தப்படுவோம். அப்போது பெரியவர்கள் நமக்கு ஆறுதலாய் அவன்(கடவுள்) கணக்கு யாருக்குத் தெரியும். நமக்கு புரியவில்லை என்பதால் அது தவறு என்று நினைப்பது சரியல்ல என்பார்கள். நேற்று வரை! இந்த வாதம் எனக்கு புரியாமல் இருந்த்து.ஆனால் சிறு கதை ஒன்று எனக்கு நல்ல தெளிவினைக் கொடுத்தது.ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர்.இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் மூன்றாவதாக வந்தவர்.முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்ப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.பொழுது விடிந்தது.மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணயங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.மூன்று ரொட்டிகளை கொடுதவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(5:3)மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன்.நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார்.சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான்.இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. அவனது கனவில் கடவுள் காட்சி அளித்து இந்த பிரச்சினைக்கு சரியான தீர்ப்பை சொல்லி அந்த தீர்ப்புக்கு சரியான விளக்கமும் அளித்தார்.அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான்.மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.ஒரு காசு வழங்கப்பட்டவர்மன்னா ... இது அநியாயம். அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுத்தார்.நீங்களோ அதைவிட குறைவாக கொடுப்பது எவ்விதத்தில் நியாயம் என்று கேட்டார்.அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி.அதற்கு ஒரு தங்க நாணயம் வழங்கினேன்.மற்றொருவர் தந்தது பதினைந்து துண்டுகள்,அவருக்கு கிடைத்த எட்டு துண்டுகள் போக மீதம் தருமமாக வழங்கிய ஏழு துண்டுகளுக்கு ஏழு தங்க காசுகள் வழங்கினேன் என்றார்.ஆம் ,கடவுளின் கணக்கு எப்போதுமே துல்லியமாக இருக்கும்.இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு. எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு சேரவேண்டும் என்பது கடவுளின் கணக்குஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தரும கணக்கு......!.எனவே தருமம் செய்வீர்! புண்ணியம் சேர்ப்பீர்!!
Added news
தாயொருவரால் பச்சிளங் குழந்தை துன்புறுத்தப்பட்ட நிலையில் அக் குழந்தை பாதுகாப்பாக பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
Added a post
தமிழ் முறைப்படி திருமணம் நடத்த தடை விதித்த கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை அதிகாரிகள் எனப் பலதரப்பு தடைகளை உடைத்து, க.பரமத்தி சாலையில் உள்ள பவித்ரம் பாலமலை பாலமுருகன் திருக்கோயிலில் வெற்றிகரமாக ஒரு திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள். பாலமலையில் உள்ள பாலமுருகன் திருக்கோயில், தமிழக அளவில் பிரசித்திபெற்ற முருகன் கோயில். இங்கு நடத்தப்படும் திருமணங்கள் அனைத்தையும், சம்ஸ்கிருத முறைப்படிதான் நடத்தி வருகிறார்கள்.தமிழ் முறையில் திருமணம் நடத்தியே தீருவது என்று உறுதியுடன் போராடியதால், முதலில் 'கோயில் அடிவாரத்தில் நடத்திக்கொள்ளுங்கள்' எனக் கோயில் நிர்வாகம் கூறியது. 'இது எங்களின் உரிமை' எனக் கூறி உறுதியுடன் போராடினோம். அதனால், வேறுவழியின்றி, 'அதிகாலையில் முதல் திருமணமாக 10 நிமிடத்தில் மலைக்கோயிலில் கண்ணன், பவானி திருமணத்தை நடத்தி முடித்துக்கொள்ள வேண்டும்' என்று வாய் வழியாகக் கூறி, வேண்டா வெறுப்பாக அனுமதி அளித்தனர். நாங்கள் இதுபோன்ற தமிழ்முறை திருமணத்தை நடத்துவதைப் பார்த்து, வேறு யாரும் அப்படி நடத்த வேண்டும் எனக் கூறி விடக்கூடாது என்பதற்காகவே, கோயில் நிர்வாகம் இவ்வாறு கூறி அனுமதி கொடுத்தது என்று காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.ராஜேஷ் கண்ணன் கூறினார். 'பாலமலை முருகன் கோயிலில் தமிழ் முறையில் திருமணம் நடத்தியே தீருவது' என உறுதியுடன் மணமக்கள், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் இருந்ததால், அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பாலமலை பாலமுருகன் மலைக்கோயிலில், உப்பிடமங்கலம் சிவனடியார்கள் தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தனர்.
Added a post
கிரேன் கருவி இந்தியாவுக்குள் வராத காலம். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பல நூறு டன் எடை உள்ள ஒரு சிறிய மலையை போன்ற ராக்ஷத பாறை இருந்தது. அந்த பாறை மக்கள் கிரிவலம் செய்வதற்கு மிக இடையூறாக இருந்தது. 10,15 காட்டு யானைகளை வைத்து அந்த பாறையை அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால் பலன் இல்லை. அப்பொழுது அங்கு ஒருவர் வந்தார். 27 அடி நீளமுடைய தலைமுடியை கொண்டவர் அவர். அந்த பாறையை தனது ஜடாமுடியில் கட்டி தனி ஒருவராக இழுத்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தூக்கி வீசி எரிந்தார். அவர்தான் அடிமுடி சித்தர். ஸ்ரீ சக்கர அம்மாவின் குரு தான் அடிமுடி சித்தர். மறக்காதிரு, பிறக்காதிரு, இறக்காதிரு என்னும் உபதேசத்தை ஸ்ரீ சக்கர அம்மாவிற்கு உபதேசம் செய்தவர் அடிமுடி சித்தர். இறைவனை மறக்காத்திருந்தால் நீ இன்னொரு பிறவி பிறக்காது இருப்பாய். இன்னொரு பிறவி நீ பிறக்காது இருந்தால் இறக்காது இருப்பாய் என்பதே இதன் அர்த்தம். அடிமுடி சித்தர் பல அற்புத சித்துக்களை சர்வ சாதாரணமாக செய்தவர்.ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள்ஆகியோருக்கெல்லாம் மூத்தவர். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகிராம் சுரத் குமார் முதலான மகான்களால் வழிபடப்பட்டவர். மிக குறிப்பாக அடிமுடி சித்தர் ஜீவசமாதி அடைந்தவர். அடிமுடி சித்தருக்கு மிகவும் பிடித்த உணவு கேழ்வரகு.கேழ்வரகு கஞ்சி, கேப்பங்கூழை மட்டுமே இவர் உணவாக உட்கொண்டு வாழ்ந்தார். ஸ்ரீ சக்கர அம்மா அடிமுடி சித்தரை தரிசித்து உபதேசம் பெரும் பொழுது. கேப்பங்கூழை தான் அவருக்கு குரு தக்ஷணையாக தந்தார். அடுத்த முறை நீங்கள் அடிமுடி சித்தரை தரிசிக்க செல்லும் பொழுது கேழ்வரகு மாவை, முடிந்தால் கஞ்சி, கூழை இவருக்காக கொண்டு செல்லுங்கள். அடிமுடி சித்தருக்கு கேழ்வரகு, பூ, நல்லெண்ணெய் ஆகிய மூன்றை காணிக்கையாக கொடுத்து. முடிந்தால் ஒரு வேட்டி. கொடுத்து நாம் வேண்டி கொண்டால். நமது அனைத்து துன்பங்களும், துயரங்களும் தூள், தூளாகும் என்பது நிதர்சனம். இவரின் ஜீவசமாதி கிரிவலப்பாதையில் உள்ள சூரிய லிங்கத்திற்கு மிக அருகே இருக்கிறது.
Added a post
காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் என்கிறார் நாலடியார். ஆச்சரியம் உங்களுக்கு.காக்கா கறி சமைச்சி....கருவாடு ......உண்பவர்களா..... சைவர்கள்.?இங்குதான்தமிழ் விளையாடுகிறது!!!இதன் அர்த்தத்தை கேளுங்கள் அசந்து போவீர்கள்.காக்கை = கால் கை அளவுகறி சமைத்து = காய்கறி சமைத்துகரு வாடுமென்று= கரு என்பதான உயிர் வாடும் என்றுஉண்பர் சைவர் = உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்!இன்னும் விளக்கி கூறவேண்டுமானால்.."சிவனை மட்டும் வழிபாடு செய்யும் சைவ சமயத்தைச் சேர்ந்த பக்தர்கள், ஒரு கை அளவிலான காய் கறிகளை எடுத்து அதில் நான்கில் ஒரு பாகத்தை மட்டுமே சமைத்து,இந்த உடலில்உயிர் தங்கவேண்டும் என்பதற்காக வெறும்கால் வயிறு மட்டுமே உண்டு காலத்தை ஓட்டுவார்கள்"என்றுதெளிவு படுத்தலாம்.இத்தகைய விரத வாழ்வினால், சிவனடியார்கள்.......எப்போதும் ஒல்லியான தேகத்துடன் இருப்பார்கள்.இந்த நிலைதான் முக்திக்கு வழிகாட்டியான.......தவம், யோகம் போன்றவைகளை சிறப்பாக பயில முடியும் என்பது அவர்கள் பயின்றது!இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் தமிழ் விளையாட்டும் அதன் அர்த்தமும் எப்பேற்பட்டதென்று.
Added news
மார்ச், 8ஆம் தேதியிலிருந்து மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்க உள்ளது. தி.மு.க. வைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்க தயங்குகின்றனர்.'தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டில்லியில் உட்கார்ந்து பயனில்லை' என்கின்றனர். இதற்கிடையே 'நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்' என, லோக்சபா சபாநாயகரும், ராஜ்யசபா தலைவரும் தெரிவித்துள்ளனர். 'தேர்தல் சமயத்தில் தடுப்பூசியா' என பயத்தில அலறுகின்றனராம் தமிழக, எம்.பி.,க்கள்.'தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி சீட் பிரச்னை இருக்கும் சமயத்தில், டில்லியில் இருப்பது நல்லதல்ல. காங்கிரஸ் தலைவர்களை, நாடாளுமன்றத்தில பார்க்க நேர்ந்தால், இது குறித்து கேட்பர். எனவே, தலைவர் ஸ்டாலின் பக்கத்திலேயே இருப்பது தான் நல்லது என்கின்றனர், தி.மு.க., - எம்.பி.,க்கள்.
Added a post
ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது. குனிந்து அதை எடுத்தார்.அது ஒரு பழைய மணி பர்ஸ். ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி, மெருகு குலைந்திருந்தது. பர்ஸைத் திறந்தார். சில கசங்கிய நோட்டுகளும்,சில்லறைகளும் இருந்தன. அத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரின் படம் ஒன்றும் இருந்தது. பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டியபடி பரிசோதகர், "இது யாருடையது?" என்று குரலை உயர்த்திக் கேட்டார்.ஒரு முதியவர், அது என்னுடையது என்றார். பர்ஸின் நிலையையும், முதியவரின் வயதையும் கண்டு, ஜோடிப் பொருத்தம் பார்த்தே பர்ஸை தந்திருக்கலாம்....ஆனாலும் பரிசோதகர், "உம்முடையதுதான் என்பதற்கு என்ன ஆதாரம்?" எனக் கேட்டார்."அதில் கிருஷ்ணர் படம் இருக்கும்" என்றார் பெரியவர்."இதெல்லாம் ஒரு ஆதாரமா?யார் வேண்டுமானாலும் கிருஷ்ணர் படம் வைத்திருக்கலாமே"."ஐயா" என்று செருமியவாறு முதியவர் ஏதோ கதை சொல்வது போல் சொல்ல ஆரம்பித்தார் !வண்டி வேகமெடுத்ததால் காற்று பெட்டியினுள் பரவ, இறுக்கம் விலகியது !அனைவரும் அவரது கதையைக் கேட்க ஆர்வமாகினர். முதியவர் தொடந்து, "நான் படித்துக் கொண்டிருந்தபோது, என் அப்பா எனக்கு இந்தப் பர்ஸைக் கொடுத்தார். ..!அப்பா அவ்வப்போது தரும் சில்லறைகளை இதில் சேர்க்க ஆரம்பித்தேன். வீட்டில் தேடிப் பிடித்து, என் அப்பாவும், அம்மாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைக் கண்டுபிடித்து அதில் வைத்தேன். நான் வாலிபனானேன். பள்ளித் தகவல்களுக்காக என்னைப் புகைப்படம் எடுத்தனர். ஆஹா! அரும்பு மீசையும், குறும்புச் சிரிப்புமாக இருந்த என்னை எனக்கே மிகவும் பிடித்தது...!அம்மா அப்பா படத்தை எடுத்துவிட்டு என் படத்தை பர்ஸில் வைத்து, அடிக்கடி பார்த்துக் கொள்வேன்...!சில வருடங்களில் திருமணமாயிற்று. இப்போது மனைவியின் முகத்தை அடிக்கடி பார்க்க விரும்பினேன். பர்ஸில் மாற்றம். என் படம் இருந்த இடத்தில்,என் அன்பு மனைவி. அலுவலக வேலையின் இடையில் பர்ஸைத் திறந்து புகைப்படத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. இதெல்லாம் சில காலம் தான்.எங்கள் அன்பு மயமான வாழ்க்கையின் சாட்சியாக மகன் பிறந்தான். பர்ஸில் மறுபடியும் மாற்றம். மனைவியின் இடத்தை மகன் ஆக்கிரமித்துக் கொண்டான். பலமுறை படத்தைப் பார்ப்பதும்..என் மகன் என்று மற்றவர்களுக்குக் காட்டுவதும்,எனக்கு ஒரே பெருமை தான். ..!வருடங்கள் ஓடின, மனைவி காலமானாள்...!என் மகனுக்குத் தன் குடும்பத்தை கவனிக்கவே நேரம் போதவில்லை...!என்னை எப்படி கவனிப்பது? என்னைத் தனிமை வாட்டியது...!கூட்டத்தில் தொலைந்து விட்ட குழந்தையாய் தவித்தேன்...!அப்போது தான் இந்தப் படத்தை, ஒரு கடையில் பார்த்தேன். அன்பே உருவான கிருஷ்ணரின் கண்கள் என் நெஞ்சை வருடின...!அவனது உதட்டின் முறுவல், என் உள்ளத்தில் நேசத்தையும்,பாசத்தையும் நிறைத்தது. புல்லாங்குழலிருந்து தன் கையை எடுத்து, என் கரம் பற்ற நீட்டினான் கிருஷ்ணன். என் கண்கள் அருவியாய் நீரைச் சொரிந்தன. உடனே கிருஷ்ணனின் படத்தை வாங்கி பர்ஸில் வைத்து,நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்...!என் கவலையும் பறந்தது.. தனிமையும் மறைந்தது...என்றென்றும் எவருக்கும் நிரந்தரமான துணையாக இருப்பவர் இறைவன் மட்டுமே.. முதியவர் நிறுத்தினார்...!ஆனால், வண்டியில் இருந்த ஒவ்வொருவர் நெஞ்சிலும், கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்கத் தொடங்கினார்.பரிசோதகர் நெகிழ்ச்சியுடன் பர்ஸை முதியவரிடம் கொடுத்தார். ..! இவ்வளவு தான் மனித வாழ்க்கை. இதற்குள் இத்தனை போட்டியும், பொறாமையும்,மானஅவமானங்களும்,ஏமாற்றமும்,தோல்வியும், ஏழ்மையும், வாட்டும் தனிமையும்..ஆனால் இறைவனை உள்ளத்தில் வைத்து பூஜித்தால், என்றும் எப்போதும் எந்த நிலையிலும் நம்முடனேயே இருப்பான். அனைத்தும் அவன் செயல், அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம் என்றிருந்தால்..நமக்கு எது நன்மையோ அதையே இறைவன் கொடுப்பான். நடப்பது நன்மையாகவே இருக்கும்
Added news
உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.அதிக மக்கள் நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில், சில இடங்களில் 50 முதல் 60 சதவீதம்பேருக்கு கொரோனா வந்துள்ளது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகி உள்ளது.ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு தடுப்பூசி போடுவதுதான் ஒரே வழி. தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள், கொரோனாவால் ஏற்படும் மரணம், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நிலை ஆகியவற்றில் இருந்து நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன.அதே சமயத்தில், அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பு, லேசான பாதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பூசி உறுதியுடன் செயல்படுவது பற்றி ஆய்வு நடந்து வருகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் பேட்டியில் கூறியுள்ளார்.
Added news
’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடிப்பில் வெளியான ’பியார் பிரேமா காதல்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ரைசா கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருவார். தற்போது நீச்சல்குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. https://www.instagram.com/reel/CL3tDyFj37N/?utm_source=ig_embed
Added news
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த அமிதாப்பச்சன் தற்போது கல்லீரல் 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாகவும் அமிதாப்பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.மீண்டும் உடல் நலம் நன்றாக தேறி படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Added news
இலங்கையில், நிறுவன உரிமையாளரினால் உரிய காலத்திற்கு முன்னர் ஊழியரை பணியில் இருந்து நீக்கினால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தியால் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.தனியார் பிரிவில், அரசாங்க நிறுவனங்களுக்கான கூட்டுத்தாபனங்களில், சபைகள் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த இழப்பீட்டு வழங்கப்படும். வர்த்தமானி வெளியிட்ட நாள் முதல் இந்த நடைமுறை செல்லுப்படியாகும். கோவிட் தொற்று காரணமாக கடந்த காலங்களில் உரிமையாளர்களினால் பலர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளபட்ட விசாரணைக்கமைய குறித்த ஊழியர்கள் இந்த வர்த்தமானிக்கமைய இழப்பீட்டினை பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.
Added news
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், நீதிமன்றத் தடை உத்தரவை மீறி கலந்துகொண்டது தொடர்பாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிசார் நேற்றைய தினம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.வல்வெட்டித்துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திற்குச் சென்ற பொலிஸார், அவரிடம் சுமார் ஒரு மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
Added news
லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தாய்நாட்டிற்கு அனுப்புவதற்காக சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் கிடைத்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தாய் நாட்டிற்கு அனுப்புவதற்கான நிதி திரட்ட எந்தவொரு தனிநபருக்கும் அல்லது அமைப்பிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதனால் இதுபோன்ற மோசடிகாரர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
Added news
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதைத்தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும், தொடர்ந்து போலீசாருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.நேற்று இந்தியா முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்று துவங்குகின்றன. இதற்கான தடுப்பூசி மையம், உச்ச நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படுகிறது. 'உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினரில் தகுதி உள்ளோர், தங்கள் விருப்பத்தின் அடிப்படையில், தடுப்பூசிகளை இன்று முதல் போட்டுக் கொள்ளலாம்' என, பதிவாளர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Added news
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், 79 ஆயிரத்து 422 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 3 ஆயிரத்து 654 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Added a poem
வைரஸ்வருகைஎத்தனை மிகை..அரசியல்சதுரங்கத்தில்பகடைக் காய்களாய்.வருடம்ஒன்று கடந்துகண்டேன்..மீண்டும்ஆயுள் புதுப்பிக்கஉணர்ந்தேன்அந்தநான்கு மணி நேரவாய்ப்பே..உயிர்ப்பேஉண்மைக்குஇலக்கணமே.சுமைமறந்தேன்எனையும்மறந்தேன்..எடேய்மாறாமலேநாம் நாமாக,,,அறுபதைதாண்டியும்....நீளுதடா நீளுமடாஅறிந்தவர்போற்றுவர்.நன்றி நண்பா..
Added radio station
Chellam FM Radio Live Streaming Online . It broadcasts Non Stop Tamil Hits 24/7 .
Added a post
நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம்.அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ்வை முடித்து கயிலாயம் சென்றான். அப்போது அந்தப்புரத்தில் பார்வதிதேவி சிவனை தியானித்துக் கொண்டிருந்தாள். வெளியே நந்திதேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார்.சிவபார்வதியை தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான். அவளை கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கினான்.பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியானம் கலைந்து எழுந்தாள். நந்தியின் காவலையும் மீறி, தன் இருப்பிடத்திற்கு பக்தன் வந்ததைக் கண்டவள், "ஏ நந்தீசா! யாரை கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?'' என்று சத்தமிட்டாள்.அவளிடம் வந்த நந்தி,"தாயே! தங்கள் பக்தன் என்பதால்தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பியி ருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன், மன்னியுங்கள்,'' என்றார்.அங்கு வந்த சிவன், பணியில் தவறிய நந்தியை பூலோகத்தில் மானிடராகப் பிறக்கும்படி செய்து விட்டார்.இவ்வேளையில் சிலாதர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்தனர்.அவர்களுக்கு சிலாதரின் மனைவி அன்னம் பரிமாறச் சென்ற போது "குழந்தையில்லாத வீட்டில் துறவிகள் உண்ணக்கூடாது' என்ற விதிப்படி, தங்களால் உண்ண இயலாது எனச் சொல்லி சென்று விட்டனர்.இதனால் வருந்திய முனிவரும், அவரது மனைவியும் சிவனை உருக்கமாக வேண்டினர். இந்த வேளையில்தான் சிவன், நந்திக்கு சாபம் கொடுத்திருந்தார். நந்தீசரை ஒரு பெட்டியில் வைத்து பூலோகத்தில், சிலாதர் தங்கியிருந்த ஆஸ்ரமத்தின் அருகே வைத்தார்.சிலாதர் கண்களில் அந்த பெட்டி பட்டது. அதற்குள் காளையின் முகம், மனித உடலுடன் ஒரு குழந்தை இருந்ததைக் கண்டார்.தனக்கு குழந்தை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவர், ""இறைவா! பிள்ளையில்லாத எனக்கு ஒரு நற்குழந்தையை தந்திருக்கக் கூடாதா? காளை முகம் கொண்ட குழந்தையை ஊரார் எப்படி ஏற்பார்கள்?'' என மன்றாடினார்.அந்த நேரத்தில்,"சிலாதா! வந்திருப்பவன் யாரோ அல்ல. என் காவலன் நந்தீசன். அவனுக்கு அழகான முகம் தருகிறேன். ஆனால், அவனது ஆயுள் பூலோகத்தில் 12 ஆண்டுகள் மட்டுமே. அவன் ஒரு சாபத்தால் உன்னிடம் வந்துள்ளான். அவனை வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு,'' என அசரீரி ஒலித்தது.12 ஆண்டு தன்னோடு வாழ வந்தவன் என்றாலும், தங்களை கயிலாயம் அழைத்துப் போகிற பிள்ளை என்பதால், சிலாதர் மகிழ்ந்தார். தன் மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்தார். அந்த குழந்தை சிவலோகப் பிள்ளை என்பதால், அவனைப் பார்த்தவுடனே பலருக்கு நோய் நீங்கியது.சிலர் அவனைக் கடவுளாகவே பாவித்து வணங்கி, தங்களுக்கு முக்திநிலை வேண்டும் என்றனர். பிரதோஷ வேளையில் (மாலை 4.30 - 6.00) சிவதியானத்தில் ஈடுபடுவான். அப்போது பக்தர்கள் பலரும் அவனுடன் இணைந்து சிவ தியானம் செய்வர். அவன் கண்மூடி தியானிக்கும் போது, நெற்றியின் நடுவில் சிவதரிசனம் காட்டினான்.இதனால், தங்களுக்கு பிறப்பற்ற நிலை கிடை த்ததாக மக்கள் எண்ணினர். பல அற்புதங்கள் நிகழ்த்திய நந்தீசர், 12 வயதில் தன் பெற்றோருடன் கயிலாயம் சேர்ந்து, இழந்த பதவியை மீண்டும் பெற்றார்.தன் தவறுக்கு வருந்தி முழங்காலிட்டு இன்றும் சிவபார்வதி முன்னால் பணிவுடன் அமர்ந்துள்ளார்.பிரதோஷ நாளன்று, நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம்.