Latest Posts
1300 ஆண்டுகள் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை அறிவியலை அதிரவைத்துள்ளது.பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் மனிதர்களை போல் படுத்த நிலையில் 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை காணப்பட்டு வருகின்றது.நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை, எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிரா
விமானத்தினுள், விமானியின் அறையை சுத்தம் செய்யும் ஒரு பணியாள், விமானியின் காபினெட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது,"விமானத்தை பறக்க வைப்பது எப்படி?(தொகுதி 1)" என்று தலைப்பிட்ட ஒரு புத்தகத்தை பார்த்தார்.அவர் முதல் பக்கத்தைத் திறந்தார்: "என்ஜினை ஆன் செய்ய, சிவப்பு பொத்தானை அழுத்தவும்" என்று இருந்தது. அவர் அவ்வாறே செய்தார், விமான இயந்திரம் இயங்க தொடங்கியது.அவர் மகிழ்ச்சியுடன் அடுத்த பக்கத்தைத் திறந்தார்.."விமானத்தை நகர்த்த, நீல பொத்தானை அழுத்தவும்... "அவர் அவ்வாறே செய்தார், விமானம் அற்புதமான வேகத்தில் நகரத் தொடங்கியது.அவர் பறக்க விரும்பினார், எனவே அவர் மூன்றாவது பக்கத்தைத் திறந்தார்: விமானத்தை பறக்க வைக்க, பச்சை பொத்தானை அழுத்தவும்.."அவர் அவ்வாறே செய்தார், விமானம் பறக்கத் தொடங்கியது.உற்சாகமாக
மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையும் உடையது. அதுமட்டுமில்லாமல் உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.உணவைச் இலகுவாக செரிக்க வைக்கின்றது.உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.மிளகு, சுக்கு, சிற்றரத்தை, அதி மதுரம் ஆகிய இவற்றை சமமாக எடுத்துக் கஷாயம் செய்து மூன்று வேளை குடித்து வர ஜலதோஷத்தோடு உள்ள ஜூரமும் இருமலும் குணமாகும்.சின்ன வெங்காயம், மிளகு, கிராம்பு இவைகளை மையாக அர
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வியாபார பணிகளில் முதலீடுகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சிற்ப பணிகளில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம்பொது பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை சீரமைப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12.4.2026இன்று இரவு 10.28 வரை தசமி. பின்னர் ஏகாதசி.இன்று பிற்பகல் 12.33 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.இன்று மாலை 03.41 வரை சாத்தியம். பின்னர் சுபம்.இன்று காலை 10.13 வரை பத்திரை. பின்னர் இரவு 10.28 வரை கரசை. பிறகு பவம்.இன்று காலை 06.04 வரை சித்தயோகம். பின்னர் பிற்பகல் 12.33 வரை அமிர்த யோகம். பிறகு மரணயோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை: 03.30 முதல் 04.30 மணிவரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த படம், சுமார் 730 நாட்கள் (இரண்டு ஆண்டுகள்) நீண்ட போருக்குப் பிறகு ஒரு உக்ரைன் வீரர் வீட்டிற்கு திரும்பும் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை பதிவு செய்கிறது.நீண்டகால மோதலின் மனிதச் செலவை இது வலுவாக காட்டுகிறது ௮ இழந்த நேரம், அனுபவித்த மன உளைச்சல், சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பும் ஆழமான ஆசை., இரண்டு ஆண்டுகளாக நீடித்த அபாயங்கள், குடும்பத்திலிருந்து விலகி இருந்த வேதனை, முன்ணணிப் பகுதிகளில் சந்தித்த கடினமான வாழ்க்கை ஆகியவை மறைந்துள்ளன.எந்த நாடாக இருந்தாலும், ஒவ்வொரு சீருடைக்கும் பின்னால் சொல்லப்படாத ஒரு தனிப்பட்ட கதை இருக்கிறது என்பதை இந்த படம் நமக்கு நினைவூட்டுகிறது. இந்தப் படத்தை பார்க்கும் போது கல்மனசும் கரைந்துப் போகும். இனியுள்ள நாட்கள் சந்தோஷமாக இருக்க வாழ
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயம் பணிகளில் மேன்மை உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் சாதகமான சூழல் அமையும். எதிர்ப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம்உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகளும் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை 11.4.2026திதிகிருஷ்ண பக்ஷ நவமி - Apr 10 11:15 PM – Apr 12 12:37 AMகிருஷ்ண பக்ஷ தசமி - Apr 12 12:37 AM – Apr 13 01:17 AMநட்சத்திரம்உத்திராடம் - Apr 10 11:27 AM – Apr 11 01:39 PMதிருவோணம் - Apr 11 01:39 PM – Apr 12 03:14 PMகரணம்சைதுளை - Apr 10 11:16 PM – Apr 11 12:01 PMகரசை - Apr 11 12:01 PM – Apr 12 12:38 AMவனசை - Apr 12 12:38 AM – Apr 12 01:03 PMயோகம்ஸித்தம் - Apr 10 06:30 PM – Apr 11 06:38 PMஸாத்தியம் - Apr 11 06:38 PM – Apr 12 06:15 PMநல்ல நேரம்:அபிஜித் காலம் - 11:56 AM – 12:45 PMஅமிர்த காலம் - 06:38 AM – 08:23 AM, 04:08 AM – 05:51 AMபிரம்மா முகூர்த்தம் - 04:39 AM – 05:27 AM
நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்கு் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான்.எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும் பழிக்குப் பழி வாங்க நினைக்காமலும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.அசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள்.தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனும
நாம் சிலரைச் சந்தித்த சில நிமிடங்களிலேயே அவர்களைப் பிடித்துவிடும். ஆனால், சிலரிடம் எவ்வளவு நேரம் பேசினாலும் ஒரு ஒட்டுதல் இருக்காது. ஏன் இப்படி நடக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா?உளவியலின்படி, மக்கள் தங்களைப் போலவே இருக்கும் நபர்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இந்த உளவியல் உண்மையை அடிப்படையாகக் வைத்து, எதிரில் இருப்பவரை நமக்குத் தெரியாமலேயே ஈர்க்கும் ஒரு அற்புதமான கலையைத்தான் 'மிரரிங்' (Mirroring) என்று உளவியலாளர்கள் சொல்கின்றனர்.அது என்னது 'மிரரிங்'?பெயரிலேயே இதற்கான அர்த்தம் இருக்கிறது. 'கண்ணாடி' (Mirror) எப்படி நம் பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்கிறதோ, அதேபோல் நாமும் எதிரில் இருப்பவரின் செய்கைகளை, பேச்சுவழக்கை, உடல்மொழியைப் பிரதிபலிப்பதுதான் மிரரிங். இரண்டு நெருங்கிய நண்பர்கள் அல்லது
வெயில் காலத்தில் வரும் தோல் அரிப்பு, படர்தாமரை, தோல் நோய்களுக்கு இயற்கை வைத்தியம்.மிளகை நெய்யுடன் சேர்த்து நன்கு அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பாக படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வைத்திருந்து காலையில் சீயக்காய் பொடியை தேய்த்து கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் ஏற்படும் படர்தாமரை குறையும்.🟠 பூவரசங் காய்பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குறையும்.🟠 சந்தனம்சந்தனக்கட்டையை எலும்மிச்சம் பழ சாற்றில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.🟠 குப்பை மேனிஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் விடவும். ஒரு பங்கு குப்பை மேனி மற்றும் கீழா நெல்லி சேர்ந்த இலை பசை
பூனை குறுக்கே போனால் அந்த வழியாக ஏன் போகக் கூடாது என்று தெரியுமா?பூனைகள் குடியிருப்பு பகுதிகளில் வாழும்.மன்னர் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால் இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்குச் சென்றிருப்பார்கள் சிறுவர்கள்,வயதானவர்கள், பெண்கள் மட்டுமே வீட்டில் இருப்பார்கள் ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, வந்த திசையை மாற்றி வேறு திசையில் குதிரைகளில் செல்வார்களாம்.அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள். இது போன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..???பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!