Latest Posts
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 16.1.2026, இன்று இரவு 11.43 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசிஇன்று காலை 07.21 வரை கேட்டை. பின்னர் மூலம். இன்று இரவு 10.46 வரை துருவம். பின்னர் வியாகாதம். இன்று காலை 10.44 வரை கரசை. பின்னர் இரவு 11.43 வரை வனிசை. பின்பு பத்தரை.இன்று காலை 06.33 வரை சித்தயோகம். பின்னர் காலை 7.21 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம். நல்ல நேரம்:காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
ஒரு பெரிய அரங்கம் - 25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள்.அதில் ஒரு மனைவி'அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்!கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது, கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும்
- · sivam
- ·
மருதாணி உடலுக்கு குளிர்ச்சி தரும், பெண்கள் கைகளில் அழகுக்காக வைத்துக் கொள்ளும் மருதாணியில் , மருத்துவ பல குணங்கள் நிறைந்துள்ளன .* மருதாணி இலையுடன் சிறிது வசம்பு , மஞ்சள் , கற்பூரம் சேர்த்து அரைத்து , உள்ளங்காலில் ஆணி உள்ள இடத்தில் இடத்தில் பூசினால் , ஒரு வாரத்தில் கட்டி குணமாகும்* மருதாணி இலையை அரைத்து , கைகளுக்கு வைத்தால் , உடல் வெப்பம் தணியும் * மருதாணி இலை மிகச்சிறந்த கிருமி நாசினி . இது , நம்மிடயே கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது .நகசுத்தி வராமல் தடுக்கும் இருக்குமருதாணி இலை , பித்தத்தை அதிகமாக்கும் .கை , கால்களில் தோன்றும் சேற்றுப் புண்கள் , அழுக்குப்படை , கட்டி . பித்தவெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும் மருந்து !* மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் , தலைவலி குணமாகும் .
- · sivam
- ·
கங்கைக்கரையோரம் ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டு இருந்தார்.அவரது சீடர் விவேகானந்தர், குருநாதரின் வாய் அசைவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தார்.திடீரென அவர்களின் கவனம் திருப்பும் விதத்தில், நாய்கள் வேகமாகக் குரைத்தன.குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக்கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்து ஓடியது.அந்த நாயைச் சுற்றிக்கொண்ட மற்ற நாய்கள் வேகமாகக் குரைத்தன.முன்பற்கள் தெரிய ஆக்ரோஷமாக நாய்கள் குரைப்பதை முரட்டு நாய் சட்டை செய்யவே இல்லை.வாயிலிருக்கும் எலும்பைச் சுவைக்க வேண்டும் என்பதிலேயே அதன் கவனம் இருந்தது.இதைக்கண்ட ராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம், இந்த நாயிடமிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள்?, என்றார்.ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள்.ஒரு சீடர், நாய்களின் இயல்பு இது
- · sivam
- ·
பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம் .1.பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.2.தரைப்பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ்சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.3.இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.4.ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.5.அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாத
- · sivam
- ·
2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமூக வலைதளங்களில் தற்போது 'பெர்பெக்ட் பிப்ரவரி' என்ற பெயரில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.இதற்கு காரணம், காலண்டரில் அமைந்துள்ள ஒரு அபூர்வமான மற்றும் கச்சிதமான ஒழுங்குமுறையாகும். 2026 ஒரு லீப் ஆண்டு அல்ல. அதனால், அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வழக்கம்போல 28 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த 28 என்ற எண் 7-ஆல் சரியாக வகுபடக்கூடியது என்பதால், பிப்ரவரி மாதம் முழுமையாக நான்கு வாரங்களாக பிரிந்து அமைகிறது.முக்கியமாக, 2026 பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதனால் மாதத்தின் கடைசி நாள் பிப்ரவரி 28-ம் தேதி சனிக்கிழமை முடிகிறது. காலண்டரை நேரில் பார்த்தால், இந்த பிப்ரவரி மாதம் எந்த இடையூறும் இல்லாமல் செவ்வக வடிவில் மிக அழகாக அமையும். எந்த ஒரு நாளும் அடுத்த வாரத்திற்கு
- · sivam
- ·
கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்களாகும்.இந்த ஐந்து மரங்களும் பாற்கடலைக் கடையும் பொழுது வந்ததை இந்திரன் தன் தேவலோகத்திற்காக எடுத்துக் கொண்டார்.நிலத்தில் விழுந்த பின்னும் கடவுளுக்குச் சூட்டப்படும் ஒரே ஒரு மலர் பாரிஜாதமே.இப் பூக்களை மரத்திலிருந்து கொய்து இறைவனுக்குச் சூட்டக் கூடாது என்றும் சொல்கிறார்கள்.இந்த மரத்தில் இருந்து பூக்கும் மலர்கள் இனிய மணம் வீசும் தன்மை கொண்டவை.பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம். இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது.புட்ப விதி என்னும் நூலில் பவள மல்லிகை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது.அதாவது, நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவளமல்லியும் ஒன்று.இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்நெருங்கியவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும். சமுக பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் உருவாகும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். செலவுகள் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் ரிஷபம்கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். பூர்விக சொத்துக்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உதவிகள் கிடைக்க
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை 15.1.2026இன்று இரவு 09.45 வரை துவாதசி. பின்னர் திரியோதசிஇன்று அதிகாலை 04.55 வரை அனுஷம். பின்னர் கேட்டை.இன்று இரவு 10.26 வரை விருத்தி. பின்னர் துருவம்.இன்று காலை 08.44 வரை கௌலவம். பின்னர் இரவு 09.45 வரை தைத்தூலம். பின்பு கரசை.இன்று முழுவதும் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 11.30 மணி வரைபகல் : 01.00 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
1) அமைதியாக இருங்கள் - உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றால்.2) அமைதியாக இருங்கள் - நீங்கள் ஒரு அப்பட்டமான பொய் சொல்ல ஆசைப்படும் போது.3) அமைதியாக இருங்கள் - உங்கள் வார்த்தைகள் வேறு ஒருவரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் என்றால்.4) அமைதியாக இருங்கள் - உங்கள் வார்த்தைகள் நட்பை சேதப்படுத்தினால்.5) அமைதியாக இருங்கள் - நீங்கள் மோசமாக உணரும்போது.6) அமைதியாக இருங்கள் - கத்தாமல் சொல்ல முடியாவிட்டால்.7) அமைதியாக இருங்கள் - உங்கள் வார்த்தைகள் இறைவன் அல்லது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் மோசமான பிரதிபலிப்பாக இருந்தால்.8) அமைதியாக இருங்கள் - உங்கள் வார்த்தைகளை நீங்கள் திரும்பி பெற வேண்டியிருந்தால்.9) அமைதியாக இருங்கள் - நீங்கள் ஏற்கனவே ஒரு முறைக்கு மேல் கூறியிருந்தால்.10) அமைதியாக இருங்கள் -
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உதவி செய்யும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்கவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் ரிஷபம்தந்திரமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் மதிப்புகள் உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் சிக்கல்கள் குறையும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட