Posts
Popular Hashtags
Latest Posts
முத்துக்குமார சுவாமி திருவிளையாடல்
  •  ·  sivam
  •  · 
முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப்படும் இந்த முத்து ஆபரணங்கள் எத்தனையோ படையெடுப்புக்களில் இருந்து தப்பித்து வந்துள்ளன.பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது.அது நவாப்கள் ஆட்சி செய்த காலம். நமது கோவில் சொத்துக்கள் பல கொள்ளையடிக்கப்பட்டன. பல கோவில்கள் தகர்க்கப்பட்டன.அப்போது ஒரு படை அதன் தளபதி தலைமையில் தென்தமிழ்நாட்டில் உள்ள குடந்தை, மயிலாடுதுறை உள்ளிட்ட தலங்களை குறிவைத்து புறப்பட்டது.வரும் வழியில் பல கோவிகளுக்குள் இப்படையினர் புகுந்து பல பொருட்களை கொள்ளையடித்தனர்.வைத்தீஸ்வரன் கோவிலில் சரவணப் பிள்ளை என்பவர் அப்போது பொக்கிஷ காப்பாளராக இருந்தார்.இத்தலத்தே எழுந்தருளியிருக்கும் முத்துக்குமார சுவாமி மீது பேரன்பும் பெரும் பக்தியும் கொண்ட அவர் முருகனுக்கு அடிக்கடி முத்து ஆபரணங்களை சூட்டி
பயத்தங்காய் நன்மைகள்
  •  ·  sivam
  •  · 
அவரை குடும்பத்தை சேர்ந்த ஒரு காய்கறியாகும். பயத்தங்காய் என்பது இளம் பச்சை நிறத்தில் பீன்ஸை போலவே இருக்கும். ஆனால் பீன்சை விட மெல்லியதாகவும், நீளமானதாகவும் இருக்கும். உள்ளே தட்டப்பயறை போல் இளம் பயிர்கள் இருக்கும். இதனை ‘காராமணி’ என்றும் கூறுவார்கள்.பயத்தங்காயில் உள்ள பைட்டோகெமிக்கல் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் இரண்டும் புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டவை. பயத்தங்காயில் நார்ச்சத்து, ஃபோலேட், இரும்புச்சத்து​, அத்தியாவசிய தாதுச்சத்துகள் மற்றும் வைட்டமின்களை கொண்டது. புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த காய் அவசியமான ஒன்றாகும். முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போட நினைப்பவர்களும் அடிக்கடி காராமணியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பயத்தங்காயில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்
சோம்பு
  •  ·  sivam
  •  · 
சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வருகிறது.சோம்பு தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சோம்பு தண்ணீர் குடித்தால் வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரைந்து, தொப்பை குறைந்து சரியான உடல் அமைப்பை தரும்.உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் குடித்தாலே போதும். ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டாமெலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.செரிமானமின்மையால் ஏற்படுகின்ற வயிற்றுவலிக்குச் சோம்புதண்ணீர் உடனடி தீர்வு தரும். தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் மூள
வஞ்சக உள்ளம்
  •  ·  sivam
  •  · 
ஒரு பிராமணர் நாள்தோறும் பல வீடுகளுக்குச் சென்று உபாதானம் வாங்கிவருவது வழக்கம். அப்படிப் போகும்போது ஒவ்வொரு வீட்டிலும், “கிருஷ்ணாய நமஹ” என்று சொல்லி நிற்பார். அவர் வந்திருப்பது தெரிந்து வீட்டில் உள்ளவர்கள் அரிசி போடுவார்கள்.ஒரு நாள் இந்தப் பிராமணர் ஒரு வீட்டுக்குள் சென்று, "கிருஷ்ணாய நமஹ” என்றார். வீட்டில் இருந்தவர்கள் எங்கோ பின்கட்டில் வேலையாக இருந்தார்கள். இந்தப் பிராமணர் வந்திருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டு மூன்று முறை அவர் சொல்லியும் யாரும் வரவில்லை. அங்கே ஒரு வெண்கலக் கிண்டி பளபளவென்று மின்னியது. நன்றாகத் தேய்த்திருந்தார்கள். யாராவது வருகிறார்களா என்று எதிர் நோக்கிக் காத்துநின்ற அந்த ஏழைப் பிராமணர் கண்ணிலே அந்தக் கிண்டி பட்டது; கருத்திலும் பட்டது. தாம் வந்திருப்பதை யாரும் கவனிக
இன்றைய ராசி பலன்கள் - 9.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பிறக்கும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம்ரிஷபம்எதிலும் திட்டமிட்டு செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நா
இன்றைய நாள் எப்படி? 9.4.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை 9.4.2026. இன்று இரவு 07.32 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.இன்று காலை 07.17 வரை மூலம். பின்னர் பூராடம். இன்று மாலை 04.18 வரை பரிகம். பின்னர் சிவம். இன்று காலை 06.40 வரை பத்திரை. பின்னர் இரவு 07.32 வரை பவம். பிறகு பாலவம்.இன்று காலை 06.05 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம். நல்ல நேரம்:காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்
  •  ·  sivam
  •  · 
01.வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.02.இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல்இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.03.செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள
கல்வியே அழியாத செல்வம்
  •  ·  sivam
  •  · 
எம்ஜிஆரிடம் உதவி கேட்டுச் சென்ற கலைவாணரின் மகன் நல்லதம்பி (படத்தில் இருப்பவர்)..கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன்.. ஆனா பணவசதி இல்ல.. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன்.. ‘எவ்வளவு தேவை?’ ன்னு கேட்டார்..‘3 ஆயிரம் தேவைப்படுது’ ன்னு சொன்னேன்..கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு, ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்..காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க.. சாப்பிட்டு காத்திருந்தேன்..அரசியல் காரணமா 1967 ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார்..குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார்..வந்ததும் யார் வெளிய
படிப்பு மட்டுமே ஒரு மனிதனை உயர்ந்தும்
  •  ·  sivam
  •  · 
தர்மலிங்கம் அந்த ஊரிலே பெரிய பணக்காரர் அவர்தான். அவருக்கு நான்கு பிள்ளைகள் மூன்று ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை உண்டு.விவசாயம் வட்டி கொடவாங்கல், கமிஷன் கடை, பழ மண்டி, இப்படி பல தொழில் செய்து சம்பாதித்து வந்தார். ஏறக்குறைய ஒரு #ஜமீன்தார் போல் வாழ்ந்து வந்தார். சாரட்டு குதிரை வண்டி , அந்த சாரட்டு குதிரை வண்டியில் வரும்போது எல்லோரும் வணக்கம் சொல்வார்கள் அவருக்கு. முதன் முதலில் ஜீப் வாங்கியது அவர்தான். மூத்த பையனுக்கு திருமணம் வயது வந்து விட்டது பக்கத்தூரில் அவருக்கு சமமான வசதி படைத்த ஒருவர் வீட்டில் பெண் கேட்டு சென்றார்கள் அவர்களும் இவருடைய அந்தஸ்து வசதி எல்லாம் பார்த்து பொண்ணு கொடுக்க தயாரானார்கள்.திருமணத்திற்கு இரண்டு விட்டார்களும் தயாரானார்கள் பட்டுச்ரிகையில் பளபளக்க சாரட்டு வண்டியில் வலம்
கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும்?
  •  ·  sivam
  •  · 
ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் இருவரும் சூரியனை வணங்கினார்கள். அப்பொழுது சூரிய பகவான் அசரீரியாக தோன்றி "வேத குருவே.. உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன். இன்று சூரியனான நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள் என்று கூறி மறைந்தான்.குருவும் சூரியனை வாங்கிவிட்டு சீடனை கவலையோடு பார்த்தார். இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோவி
இன்றைய ராசி பலன்கள் - 8.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்தொழில் நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதில் புதிய தேடல்கள் பிறக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வரவுகள் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்ரிஷபம்மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் புதுவிதமான அறிமுகங்களும் அனுபவங்களும் ஏற்படும். வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களை சிந்தித்து
இன்றைய நாள் எப்படி? 8.4.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 25 ஆம் தேதி புதன்கிழமை 8.4.2026இன்று மாலை 05.48 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று அதிகாலை 04.54 வரை கேட்டை. பின்னர் மூலம்.இன்று மாலை 03.56 வரை வரீயான். பின்னர் பரிகம்.இன்று அதிகாலை 04.26 வரை கரசை. பின்னர் மாலை 05.48 வரை வனிசை. பிறகு பத்திரை.இன்று அதிகாலை 04.54 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.06 வரை அமிர்த யோகம். பின்பு மரணயோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை