Posts
Latest Posts
மழையை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
  •  ·  sivam
  •  · 
தாத்தா,பாட்டி காலங்களில் மழையை எவ்வாறு வகைப்படுத்தி வைத்திருந்தனர் என்பதை சற்று திரும்பி பார்ப்போமா!தமிழ்மொழி, பிறமொழி போல் அல்ல!வாழ்வியல் மிக்கது!1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது.2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்….☆ சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு.. (சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்
இன்றைய ராசி பலன்கள் - 6.12.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்விமர்சன பேச்சுக்களால் செயல்களில் சில மாற்றம் ஏற்படும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் ரிஷபம்பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் வேண்டும். புதிய அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வருமான வாய்ப்புகள் கூடும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட
இன்றைய நாள் எப்படி?  - 6.12.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் தேதி சனிக்கிழமை 6.12.2025இன்று அதிகாலை 03.19 வரை பிரதமை. பின்னர் துவிதியை .இன்று பிற்பகல் 12.03 வரை மிருகசீரிடம் . பின்னர் திருவாதிரை.இன்று காலை 06.50 வரை சாத்தியம். பின்னர் சுபம்.இன்று அதிகாலை 03.19 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.17 வரை தைத்தூலம். பிறகு கரசை.இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரைகாலை : 10.45 முதல் 11.45 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?
  •  ·  sivam
  •  · 
இளநீர் சாப்பிட்டால் சளி அகலும் என்பதே உண்மை.நம் ரத்தத்தில் இருப்பது போல, சரியான அளவில் மின்பகுனி உப்புக்கள் இளநீரில் இருப்பதால், இளநீர், இயற்கை தந்த நல்லதொரு டானிக். சரியாகச் சொல்வதானால், இளநீர் ஒரு உயிர்த்திரவம். புது இளநீர், உடலுக்கு நல்லது. எப்போதும், வெட்டிய உடனேயே, இளநீரைப் பருகி விட வேண்டும். இதை உண்டால், சளி பிடிக்காது; மாறாக, சளி அகலும். இளநீரில் அதிக அளவில் சர்க்கரைப் பொருட்களும், தாது உப்புக்களும் மற்றும் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும் உள்ளன.சர்க்கரை சத்துக்கள்: குளுக்கோஸ் மற்றும் புரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள், இளநீரில் காணப்படுகின்றன. இளநீரிலுள்ள, குளூக்கோஸ் மற்றும் புரக்டோஸ், தேங்காய் முதிர்ச்சியடையும் போது, சுக்ரோசாக மாறி விடுகிறது. முற்றின தேங்காய் நீ
அர்ச்சுனன் மகன் அபிமன்யு
  •  ·  sivam
  •  · 
தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன்.அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான்கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் ,கண்ணனை இறுக பற்றி கொண்டு கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாள முடியாமல் அழுகிறாயோ ? என்று கேட்டான் .கண்ணன் ,இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை.உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன்.அர்ஜுனன் --கண்ணா நீ கடவுள் உனக்கு உறவு பற்று .பாசம்,பந்தம் ,,எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது.கண்ணன் ---உறவு .பற்று ,பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா .அர்ஜுனன் --அப்படி சொல்லாதே கண்ணா ---மானிடர்கள் மறைந்தா
மஞ்சணத்தியின் அற்புத மருத்துவப் பயன்கள்
  •  ·  sivam
  •  · 
‘மஞ்சணத்தி’ என அழைக்கப்படும் நுணா மரத்தின் வேர் முதல் இலை வரை அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவையாக உள்ளன. தணக்கு, மஞ்சள் பாவட்டை, நுணவு போன்ற பல பெயர்களும் இம்மரத்துக்கு உண்டு.இதன் தண்டு பகுதியின் தோலை சீவினால் உட்புறத்தில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் கட்டையை வெட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரைக் கொண்டு ஆடைகளுக்கு சாயமேற்றியதாக வரலாறுகள் கூறுகின்றன.குயில்கள் இம்மரத்தின் பழங்களை விரும்பி சாப்பிடும். இதன் முதிர்ந்த மஞ்சள் நிறக் கட்டைகள் விவசாயக் கருவிகள் செய்யவும், சிறு மரச் சாமான்கள், பொம்மைகள் செய்யவும் மிகவும் உகந்தவை.மருத்துவப் பயன்கள்:* மஞ்சணத்தி தாவரத்தை மருந்தாக எடுத்துக்கொண்டால், நோயினால் தளர்ந்த உடல் ஆரோக்கியமாக்கும்.* உடல் வெப்பத்தை இது அதிகரிக்கும்.* இதன்
இன்றைய ராசி பலன்கள் - 5.12.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய ராசி பலன்கள் - 5.12.2025மேஷம்நண்பர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். வரவுகளில் ஏற்றமான சூழல் அமையும். சகோதர்கள் வழியில் அலைச்சல் மேம்படும். அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பழைய சிக்கலில் சில குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். சுபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை ரிஷபம்செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். மறைமுகமான நெருக்கடியால் மாற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.அத
இன்றைய நாள் எப்படி?  - 5.12.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5.12.2025.இன்று அதிகாலை 03.55 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.இன்று பிற்பகல் 01.32 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம். இன்று காலை 09.55 வரை சித்தம். பின்னர் சாத்தியம். இன்று அதிகாலை 03.55 வரை பவம். பின்னர் மாலை 03.37 வரை பாலவம். பிறகு கௌலவம். இன்று பிற்பகல் 01.32 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.நல்ல நேரம்: காலை : 09.15 முதல் 10.15 மணி வரை பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
அரைஞாண் கயிறு
  •  ·  sivam
  •  · 
ஒருவர் தனது வயிறு சரியில்லை என்று ஒரு மருத்துவமனைக்கு செல்கின்றார்..அங்கு ஒரு மருத்துவரை சந்திக்கின்றார்...பேஷண்ட் :- டாக்டர் எனக்கு கொஞ்ச நாளாவே வயிறு சரியில்ல'''' ஒரே காத்தா போகுது டாக்டர் """"டாக்டர் :- ""என்ன காத்தா போகுதா ?"""எந்த கலர்ல போகுது வெள்ளையாவா ?"""பேஷண்ட்::- """கலர்லம் இல்லை டாக்டர் இல்லை டாக்டர் கொஞ்சம் சத்தமா போகுது """""".டாக்டர் :-- அப்போ இது கொஞ்சம் சீரியஸான விஷயம்தான்....நீங்க அரைஞாண் கயிறு கட்டியிருக்கீங்களா?""பேஷண்ட் :- ஹ்ம்ம் ஆமாம் டாக்டர் கட்டியிருக்கேன்..டாக்டர் :- அப்போ நான் கொடுக்கிற இந்த மாத்திரையை நீங்க உங்க அரைஞாண் கயிறுல தாயத்து மாதிரி கட்டிக்கோங்க அப்புறம் மஞ்சள் அது கூட மஞ்சள் துணி குங்குமம் எல்லாம் வெச்சி சேர்த்துக் கட்டிக்கோங்க...காத்து கருப்பெல்லாம் உங்க
இன்றைய ராசி பலன்கள் - 4.12.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழலை எதிர்கொள்ள வேண்டிவரும். வீடு மாற்றம் சிந்தனை கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்குகான அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகம் பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம்வீடு மாற்ற எண்ணங்கள் அதிகரிக்கும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பயணங்கள் மூலம் புது விதமான அனுபவம் உண்டாகும். கால்நடைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களால் மாற்றமான தருணங்கள் உருவாகும். சக ஊழியர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். மகிழ்ச்சி பிறக்கும் நாள
இன்றைய நாள் எப்படி?  - 4.12.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 4.12.2025.இன்று காலை 07.54 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.இன்று மாலை 03.08 வரை கிருத்திகை . பின்னர் ரோகிணி.இன்று பிற்பகல் 01.03 வரை சிவம். பின்னர் சித்தம்.இன்று காலை 07.54 வரை வணிசை. பின்னர் மாலை 05.55 வரை பத்தரை. பிறகு பவம்.இன்று காலை 06.15 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்: காலை : 10.45 முதல் 11.45 மணி வரைபகல் : 12.15 முதல் 01.15 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
முருகன் குறித்த பழமொழிகள்
  •  ·  sivam
  •  · 
•சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்குமிஞ்சிய தெய்வமில்லை.•வயலூர் இருக்க அயலூர் தேவையா?•காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.•அப்பனைப் பாடிய வாயால் – ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?•முருகனுக்கு மிஞ்சிய தெவமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம்இல்லை.•சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால்அகப்பையில் வரும்)•கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.•கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்•பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?•சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.•செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?•திருத்தணி முருகன் வழித்துணை வருவான்•வேலனுக்கு ஆனை சாட்சி.•வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.•செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.•வேலை வணங்குவதே