Latest Posts
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மற்றவர்களுக்கு கருத்துசொல்வதை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார நிமித்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வரவு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : நீலம்ரிஷபம்பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மையான சூல்நிலைகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான செயல்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்த மந்த தன்மை குறையும். மறைமுக திறமைகளை வெளிப்படும். ஆக்கப
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6.2.2026.இன்று அதிகாலை 01.41 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.இன்று அதிகாலை 02.44 வரை சுகர்மம். பின்னர் திருதி.இன்று அதிகாலை 03.11 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 02.54 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.இன்று அதிகாலை 04.41 வரை மரண யோகம். பின்னர் காலை 06.35 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09.00 முதல் 10.00 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
பலா விதையில் நிறைய சத்துக்கள் உள்ளன ! வயோதிகம் காரணமாக , இரும்புச்சத்து உடலை பாதிக்கும் அனீமியா உள்ளிட்ட ரத்த குறைபாடுகளை தடுக்கும் . இதில் , வைட்டமின் - ஏ சத்து அதிகம் . இது பார்வை திறனைக் கூர்மையாக்கும் . மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும் ; மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் .தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவாகி , முடி அடர்த்தியாக வளர உதவும் . இதை சமைத்து உண்பதால் சுருக்கத்தை குறைக்கும் ; சருமத்தை பொலிவாக்கும் ! பலா விதைகளை அரைத்து , தேன் மற்றும் பாலுடன் கலந்து , ' பேஸ் பேக் ' போல் பயன்படுத்தலாம் .பலா விதையை பொடி செய்து , நீருடன் கலந்து குடித்தால் , செரிமானக் கோளாறுகள் தீரும்
- · sivam
- ·
கருஞ்சீரகப் பொடியாக்கி வெந்நீர், தேன் கலந்து பருகலாம்.இதனால் சிறுநீரகக் கற்களும், பித்தப்பை கற்களும் கரையும்.பொடியை 50 மி.லி.தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் 2 சொட்டு மூக்கில் விட்டால் மூக்கடைப்பு விலகும்.ஒரு தேக்கரண்டி பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதோடு தேன் சேர்த்து சாப்பிட, நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி அகலும்.குளியல் பொடிகளில் கருஞ்சீரகப் பொடியை கலந்து பயன்படுத்தலாம்.கரப்பான், சோரியாசிஸ் போன்ற தோல் நோய்க்கு, கருஞ்சீரகப் பொடியை தேய்த்துக் குளிக்கலாம்.இதனால் நோய் தீவிரம் குறையும்.நோயால் ஏற்பட்ட புண்கள், தழும்புகள் மறையும்.வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்து பொடியாக்கி, ஒரு டீஸ்பூன் அளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவ
- · sivam
- ·
இந்திய ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் ஒரு முறை பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலை சந்தித்தார். சாப்பிடுவதற்கு முன்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் கைகளை கழுவி, உணவு பரிமாறப்பட்டவுடன், அவர் தனது கைகளை சாப்பிடுவதற்கு பயன்படுத்தினார்.சர்ச்சில் இந்திய ஜனாதிபதியிடம், “நீங்கள் ஏன் உங்கள் கைகளைப் பயன்படுத்துகிறீர்கள்? ஸ்பூன் மற்றும் முட்கரண்டிகளை பயன்படுத்துங்கள், அவை மிகவும் சுகாதாரமானவை ”.என்றார்.டாக்டர் ராதாகிருஷ்ணன் உடனே , "இதற்கு முன் யாரும் சாப்பிட என் கைகளைப் பயன்படுத்தாததால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய எந்த கரண்டியையும் விட என் கைகள் மிகவும் சுகாதாரமானவை." என்று பதிலளித்தார்.இந்தியாவில் உணவை கையால் சாப்பிடுவது தான் பாரம்பரிய வழக்கம். ஒருவர் உணவை கையால் சாப்பிடும் போது, உணவு, உடல், மனம், மற
- · sivam
- ·
2 முந்திரி பருப்பு, 1ஸ்பூன் கசகசாவை அரைத்து பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
- · sivam
- ·
வீடு சென்று வெளியே திரும்பும் போது முகத்தில் அதிகப்படியான அழுக்குகள் ஒட்டிக்கொள்வதோடு பருக்களை உண்டாக்குகிறது.எவ்வளவு தான் கடைகளில் விற்கும் விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும்போதிய அளவில் தீர்வு கிடைப்பதில்லை .அப்படியே தீர்வு கிடைத்தாலும் நமது முகத்தில் இருக்கும் தசைப்பகுதிகள் மென்மை தன்மையை இழந்துவிடுகிறது இதனால் எப்போதும் முகம் இறுக்கத்துடன் காணப்படுகிறது. அப்பழுக்கற்ற சருமத்தை பெற சில எளிய வழி முறைகள் உங்களுக்காக.....பருக்களை கண்டவுடன் நாம் அதனை கிள்ளத் தொடங்குகிறோம் நாளடைவில் அது கரும்புள்ளிகளையும், தழும்புகளையும் உண்டாக்கி விடுகிறது. இதனால் முகம் பொலிவிழந்து காணப்படுவதோடு அசிங்கமாகவும் தெரிகிறது. வெளியே செல்லும் பலரும் தங்களது தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர் எனவே தன
- · sivam
- ·
கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக இருந்து வருகிறது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைகிறது.இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கோவக்காய் நல்ல மருந்தாக இருந்து வருகிறது.கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. புற்று நோய் வராமல் இருக்க உணவில் அடிக்கடி கோவக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும்.இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு செ
- · sivam
- ·
சண்டிகேஸ்வரரை வணங்கும் முன் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஆன்மிக ரகசியங்கள்!விரிவான – திருத்தப்பட்ட ஆன்மிகக் கதை வடிவ பதிவுசிவாலய வழிபாட்டில் பலரும் அதிகம் கவனிக்காமல் செல்லும் தெய்வம் ஒருவர் உண்டு. அவர்தான் சண்டிகேஸ்வரர்!ஆனால் உண்மையில் சிவாலய வழிபாடு முழுமை பெற வேண்டுமென்றால், சண்டிகேஸ்வரர் தரிசனம் மிக அவசியம்.சிவ பக்தியின் உச்சத்தை அடைந்து தெய்வப் பதவி பெற்ற பெருமைக்குரியவர் சண்டிகேஸ்வரர்.பக்தியின் மேன்மையால் எம்பெருமானின் அருளைப் பெற்ற 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படும் இவர், அனைத்து சிவாலயங்களிலும் கோயில் சொத்துக்களின் காவலராகவும், தலத்தின் தனத்துக்கு அதிபதியாகவும் விளங்குகிறார்.சண்டிகேஸ்வரரை எப்படி வணங்க வேண்டும்?சிவாலயத்தில் சண்டிகேஸ்வரர் எப்போதும் ஆழ்ந்த தியான நிலையில் இருப்பார
- · sivam
- ·
ஒரு நாள் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள். சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்; குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார்."குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன?" எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் என்றான். குரு சீடனுக்கு பதிலை எப்படி விளக்குவது என்று சற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது.குரு, அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்ல
- · sivam
- ·
1. எந்த தலைபோகும் அவசரமாக இருந்தாலும் – ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையைச் செய்யுங்கள்.2. பிரச்னையை முழுவதும் புரிந்து கொண்ட பின் செயல்படத் துவங்கவும். பிரச்னை எதுவாக இருந்தாலும் – அதை முதலில் புரிந்துகொள்ளவும்.அடுத்தது அலசி ஆராயவும்.கடைசியில் பிரச்னை முடிச்சை அவிழ்க்கவும். (Understand the problem – Analyse the problem – Attack the problem)3. காது கொடுத்துக் கேளுங்கள். எதிராளி – (உங்கள் செல்ல பப்லுக்குட்டியோ... உங்கள் ஜெனரல் மானேஜரா) அவர் சொல்ல வந்ததை முழுவதும் சொல்லட்டும். குறுக்கே பேசாமல் உன்னிப்பாக கவனியுங்கள். கேட்பதை மனதில் வாங்கிக்கொண்டு பிறகு பதில் பேசலாம்.4. கேள்வி கேளுங்கள். மிகவும் அற்புதமாகத் தோன்றும் சந்தேகத்தைக் கூட உதாசீனப்படுத்தாமல் விடை காண முயலவும், ஒர சிறிய கேள்வி வரவழைக்கும் வ
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பங்குதாரர்களுடன் இருந்த கருத்துமோதல் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.மிதுனம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்ப உறுப்பினர்க