Posts
Latest Posts
கடுக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்
  •  ·  sivam
  •  · 
கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும்.பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம்.கடுக்காய் ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமா
உண்மையான அன்பிற்கு எதுவுமே தடையில்லை
  •  ·  sivam
  •  · 
சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் ஏறி வந்தான் அவன்…ஒரே ஒரு காரணத்திற்காக — தனது “அம்மா”வை பார்க்க.பல வருடங்களுக்கு முன்பு, கேரளாவை சேர்ந்த ஒரு இந்து அக்கா சவுதி அரேபியாவில் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நாட்டில் வேலை பார்த்தாலும், அவர் இதயம் முழுவதும் தாய்மையால் நிரம்பியிருந்தது. பல குழந்தைகள் அவரது கைகளில் வளர்ந்தனர்.அவர்களில் ஒருவன் — சிறிய கண்களுடன், எப்போதும் அவளது கையை பிடித்துக் கொண்டே இருப்பான். அவனை அவர் தன் வயிற்றில் பிறந்த குழந்தையை விட கூட அதிகமாக நேசித்தார்.அவனுக்கு காய்ச்சல் வந்தால், இரவெங்கும் தூங்காமல் அவள் அவனருகே உட்கார்ந்து இருப்பாள்.அவன் அழுதால், அவள் மனசு உடைந்துவிடும்.காலம் கடந்தது…சிறுவன் வளர்ந்து இளைஞனானான்.அக்கா தன் நாட்டிற்குத் திரும்பி கேரளாவுக்கு ச
இன்றைய ராசி பலன்கள் - 16.2.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்சேவை பணிகளில் அனுகூலம் ஏற்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். தாயிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிறு தொழில் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தூரதேசப் பயணங்களில் இருந்த தாமதங்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைரிஷபம்பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். இணையம் சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும்
இன்றைய நாள் எப்படி? 16.2.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மாசி மாதம் 4 ஆம் தேதி திங்கட்கிழமை 16.2.2026இன்று மாலை 06.26 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.இன்று இரவு 09.41 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.இன்று அதிகாலை 04.24 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.இன்று காலை 06.08 வரை பத்தரை. பின்னர் மாலை 06.26 வரை சகுனி. பிறகு சதுஷ்பாதம் .இன்று இரவு 09.41அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 06.30 முதல் 06.30 மணி வரைகாலை : 09.30.30 முதல் 10.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
நல்ல பழக்கம் ஒரு வழக்கமாகட்டும்
  •  ·  sivam
  •  · 
அறிவில் சிறந்த ஒரு வயோதிகர் காட்டுவழியில் ஒரு இளைஞனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் ஒரு சிறிய செடி அப்போதுதான் விதையிலிருந்து முளைவிட்டுக் கொண்டிருந்தது. பெரியவர் அந்த இளைஞனை பார்த்து அந்தச் சிறிய செடியை பிடுங்கி விடும்படிக் கூறினார்.இளைஞன் தன்னுடைய இரு கைவிரல்களை மட்டுமே உபயோகித்து, அந்த இளம் செடியை சுலபமாக பூமியிலிருந்து பிடுங்கி எறிந்தான். அந்தப் புதிய செடிக்குப் பக்கத்தில் அடர்த்தியாக வளர்ந்த ஒரு சிறு காட்டுச்செடி ஒன்றை அந்தப் பெரியவர் இளைஞனுக்குச் சுட்டி காட்டி அதையும் பிடுங்கி எறியும்படி கூறினார்.அந்த இளைஞன் ஒருகையால் அந்தக் காட்டுச்செடியை வளைத்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அதை இழுத்துப் பிடுங்கி எறிந்தான்.இன்னொரு இடத்தில் பூமியில் அடர்த்தியாக நன்கு வேரைப்பதிய வைத்துக்
இன்றைய ராசி பலன்கள் - 15.2.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பழைய சிக்கல் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நவீன தொழில் நுட்ப கருவிகளால் விரயம் ஏற்படும். நற்செயல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு ரிஷபம்பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மன நிலை காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.அ
இன்றைய நாள் எப்படி? 15.2.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மாசி மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.2.2026இன்று மாலை 05.50 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.இன்று இரவு 08.36 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.இன்று அதிகாலை 04.08 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.இன்று அதிகாலை 05.46 வரை கரசை. பின்னர் மாலை 05.50 வரை வணிசை. பிறகு பத்தரை .இன்று காலை 06.33 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 03.30 முதல் 04.30 மணி வரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இன்றைய ராசி பலன்கள் - 14.2.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கால தாமதமாகவே கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம் ரிஷபம்பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். இழந்து போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சமூக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடை தொடர்பான பண
இன்றைய நாள் எப்படி? 14.2,2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மாசி மாதம் 2 ஆம் தேதி சனிக்கிழமை 14.2.2026இன்று மாலை 04.43 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.இன்று இரவு 07.00 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.இன்று அதிகாலை 04.12 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.இன்று அதிகாலை 03.57 வரை கௌலவம். பின்னர் மாலை 04.43 வரை தைத்தூலம். பிறகு கரசை .இன்று முழுவதும் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
கந்தல் மூட்டை
  •  ·  sivam
  •  · 
அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன். அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கொண்டான்.அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம் ராஜ உடையில் விருந்து உண்பது மாதிரி எண்ணுகிற அளவுக்கு.தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அரண்மனை வாசலை அடைந்தான்.வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான்.அந்தக் க
அஜீரண பிரச்சனையை விரட்ட புதினா
  •  ·  sivam
  •  · 
அஜீரணத்தை போக்கும் புதினா நீர் தயாரிக்கும் வழிகள்1. முதலில் நீங்கள் அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தண்ணீரைக் கொதித்த பிறகு புதினா இலைகளை அதில் போடவும். இப்போது 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, தண்ணீரை வடிகட்டி, எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.2. மற்றொரு வழி, 6 முதல் 7 இலைகளைக் கொடுத்து, அவற்றைக் கழுவி நன்கு நசுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இப்போது இலைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இப்படி செய்வதன் மூலமும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.3. மூன்றாவது வழி, புதினா இலைகளை நன்கு கழுவி உலர்த்தி, அதில் பொடி செய்து கொள்ளவும். இப்போது அந்த பொடியை தொடர்ந்து பயன்படுத்துங்கள். அதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம் இவ்வாறு செய்வ
வால்மிளகில் உள்ள மருத்துவ குணங்கள்
  •  ·  sivam
  •  · 
வால்மிளகின் மருத்துவ குணங்களை இன்னும் பலரும் அறியாமல் இருக்கிறோம். மிளகு, வால்மிளகு இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. மிளகை போன்றே இருக்கும். ஆனால் இந்த மிளகில் காம்புடன் இணைந்து இருக்கும். பார்பதற்கு வால் போன்று இருக்கும். அதனால் இதனை வால்மிளகு என்று அழைப்பார்கள்.சிறிதளவு வால்மிளகுத்தூள் இதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குறையும். இலவங்கப்பட்டை, வால்மிளகு இரண்டையும் பொடியாக்கி நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.சந்தனப்பொடி, வால்மிளகு, அதிமதுரம் ஆகிய மூன்றையும் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் கல் அடைப்பு மற்றும் சிறுநீர் பிரச்சனை குணமாகும்.பல் பிரச்சனைகள் குணமாக கறிவேப்பிலையை துளாக்கி அதில் லவங்கம், கடுக்காய், நெல்லி, சேர்த்து அனைத்தும்