Posts
Latest Posts
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்
  •  ·  sivam
  •  · 
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. விருத்தாசலத்தில் தான் இருக்கிறது.கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது.தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரை பல் தொ
அறிவியலுக்கும் எட்டாத ஆச்சரியம்
  •  ·  sivam
  •  · 
அணையாத தீபம் - ஜுவாலாமுகி கோயில்!இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஜுவாலாமுகி அம்மன் கோயில், மற்ற கோயில்களைப் போல சில வழிபாட்டுத் தலம் அல்ல.இங்கு சிலைகளுக்குப் பதிலாக "புனிதச் சுடர்களே" தெய்வமாக வணங்கப்படுகின்றன.பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த மர்மம் இன்றும் பக்தர்களையும் விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்துகிறது.எரிபொருள் இல்லாத சுடர்!இந்தக் கோயிலின் கருவறையில் பாறைகளின் பிளவிலிருந்து ஒன்பது தீபச் சுடர்கள் (ஜுவாலாக்கள்) நீல நிறத்தில் எரிந்து கொண்டிருக்கின்றன. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தீபங்கள் எரிவதற்கு எந்தவிதமான எண்ணெய், நெய் அல்லது திரிகளோ பயன்படுத்தப்படுவதில்லை. பூமியின் ஆழத்திலிருந்து வரும் இந்தச் சுடர்கள் பல நூற்றாண்டுகளாக அணையாமல் எரிந்து கொண்டிருக்
இன்றைய ராசி பலன்கள் - 6.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்கள் மூலம் மனதளவில் புதிய மாற்றங்கள் உருவாகும். தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்து செல்லவும். செல்லப்பிராணிகள் வழியில் விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைரிஷபம்சுபகாரிய பேச்சுக்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். அதிகாரிகள் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவ
இன்றைய நாள் எப்படி? 6.4.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை 6.4.2026.இன்று பிற்பகல் 01.48 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று முழுவதும் அனுஷம். இன்று பிற்பகல் 02.55 வரை வஜ்ரம். பின்னர் வியதீபாதம். இன்று அதிகாலை 12.50 வரை பவம். பின்னர் பிற்பகல் 01.48 வரை பாலவம். பிறகு கௌலவம். இன்று காலை 06.08 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 06.30 முதல் 07.30 மணி வரை காலை : 09.30 முதல் 10.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
கண்டிப்பு
  •  ·  sivam
  •  · 
விபத்தில் அப்பா, அம்மா இருவரையும் இழந்த எனக்கு, அக்கா தாயாகவும், மாமா நிழலாகவும் மாறினார்கள் . ஆனால் நான் வளர வளர மாமாவின் நிழல் எனக்குச் சுட்டெரிக்கத் தொடங்கியது. "சும்மா ஊர் சுத்துறதுக்கு பதிலா ஏதாவது வேலைக்கு போடா, அக்கா கஷ்டப்படுறது கண்ணுக்குத் தெரியலையா?" என்று மாமா ஊர் முன்னிலையில் என்னைக் கேலி செய்வா.ஒருநாள் சோறு தொண்டையில் இறங்காமல் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறினேன். "நிச்சயம் ஒருநாள் பெரிய ஆளாகி, இந்த மனுஷன் முன்னாடி கார்ல வந்து நிப்பேன்" என்று சபதம் எடுத்தேன். என் உழைப்பு வீண் போகவில்லை. நான்கு ஆண்டுகளில் ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்தது .புது கார் வாங்கினேன். கெத்தாக வீட்டு வாசலில் வந்து நின்றேன். மாமா அங்கே திண்ணையில் அமர்ந்திருந்தார். அ
சாரங்கப் பறவை
  •  ·  sivam
  •  · 
கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த ஆசையும் கிடையாது. ஜொலிக்கும் விழிகளும் வெண்ணிறத் தாடியும் ஜடாமுடியுமாய் நாளுக்குநாள் அவரது வசீகரம் கூடியது. மந்தபாலர் தம் தவ வாழ்வில் நிறைவுகண்டு, தாமே விரும்பி சொர்க்கம் புக முடிவு செய்தார். அக்கினியை வளர்த்த மந்தபாலர், தன் இறுதி வேண்டுகோளைச் சமர்ப்பித்தார்: ‘‘ஏ அக்கினியே! எத்தனையோ முறை வேள்வித் தீ வளர்த்து, சமித்துக்களை ஆகுதியாகப் பெய்து உன்னை ஆராதித்திருக்கிறேன். இன்று நான் உன்னை வளர்ப்பது என்னையே ஆகுதியாக நீ ஏற்பதன் பொருட்டே. மனத்தாலும் முழு பிரம்மச்சாரியாக வாழ்ந்த என்னை ஏற்று என் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!’’இவ்விதம் முழங்கிய அவர், நெருப்பில் சடாரெனக்
அஞ்சா நெஞ்சன்
  •  ·  sivam
  •  · 
ஒரு காட்டில் காலபைரவி என்ற மந்திரக்கிழவி இருந்தாள். அவள் மிகவும் கொடூரமானவள். அக்காட்டு வழியே வரும் மனிதர்களைப் பிடித்து அவர்களைக் கொன்று களிப்பவள். அவளது இருப்பிடம் ஒரு குகை. அதற்குள்தான் கொன்ற மனிதர்களின் எலும்புக் கூடுகளை நிறுத்தி வைத்து, அவற்றின் மத்தியில் தான் படுத்துத் தூங்குவாள்.ஓராண்டிற்கு முன் அந்தக் காட்டிலிருந்து கொஞ்ச தூரத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பாலய்யன் என்ற இளைஞன் அந்தக் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான். காலபைரவி அவனைப் பிடித்துக் கொன்று, அவனது எலும்புக் கூட்டைத் தன் குகைக்குள் வைத்து விட்டாள். இதை அறிந்தபின் அக்கிராமத்தவர்கள் யாருமே அக்காட்டு வழியே செல்லவில்லை.பாலய்யனுக்கு வீரையன் என்ற அண்ணன் இருந்தான். அவனை 'அஞ்சா நெஞ்சன்' என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். அவன் காட்டி
தனது பக்தியால் உள்ளத்திலே கோவில் கட்டிய மகா யோகி பூசலார் நாயனார்
  •  ·  sivam
  •  · 
இவரது வரலாறு பக்தியின் உச்சத்தை விவரிப்பதாகும்.​1. பிறப்பு மற்றும் இளமை:சென்னைக்கு அருகில் இருக்கும் அழகிய திருநின்றவூர் என்னும் ஊரில் ஒரு அந்தணர் குலத்தில் பிறந்தார் பூசலார். இவர் சிறு வயது முதலே சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டவர்.​2. கோயில் கட்டும் ஆசை:சிவபெருமானுக்கு ஒரு அழகான கற்கோயில் கட்ட வேண்டும் என்பது பூசலாரின் நீண்ட கால ஆசையாக இருந்தது. ஆனால், அவரிடம் அதற்கான வசதியோ அல்லது பணமோ இல்லை. செல்வந்தர்களிடம் உதவி கேட்டும் அவருக்குப் பலன் கிடைக்கவில்லை.​3. மனக்கோயில் (மனதிற்குள் கோயில்):பணம் இல்லையென்றால் என்ன? என் பக்தியால் சிவனுக்கு கோயில் கட்டுவேன் என்று முடிவு செய்தார். தன் மனதையே கருவறையாக்கி, மனதிற்குள்ளேயே கோயில் கட்டும் பணியைத் தொடங்கினார்.​ஆகம விதிகளின்படி ஒவ்வொரு கல்லாக மனக்க
சுயநலம்
  •  ·  sivam
  •  · 
ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள். ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள்.அந்த தீவில் வெறும் புற்களும், புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்கவோ நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது.. அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரிய வில்லை. முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர்.அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது பார்ப்போம் என்றும் முடிவு செய்தனர். அதன்படி அந்த தீவின் இருகரைகளிலும் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர். முதலில் இருவரும் உணவுக்காக பிரார
இட்லி
  •  ·  sivam
  •  · 
இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism...இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism...இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism...இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism...இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism...இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism...இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா Nationalism...இட்லி உனக்கு கிடையாதுன்னா Facism... இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism.இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism...இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.இட்லி மெஷீன்லே பண்ணினா Modernismஇட்லி Fork and Spo
இன்றைய ராசி பலன்கள் - 5.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். வெளியூர் வர்த்தக செயல்களில் ஆர்வம் ஏற்படும். புதுமையான செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். கற்பனை துறைகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். மாற்றம் பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்ரிஷபம்உயர் பொறுப்பில் இருப்பவர்களால் புதிய அனுபவம் ஏற்படும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறப்புகளை பற்றி புரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாமதம் நிறை
இன்றைய நாள் எப்படி? 5.4.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.4.2026.இன்று காலை 11.51 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று இரவு 11.49 வரை விசாகம். பின்னர் அனுஷம்.இன்று பிற்பகல் 02.25 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.இன்று காலை 11.51 வரை பத்திரை. பின்னர் பவம்இன்று காலை 06.08 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம். நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை