Posts
Popular Hashtags
Latest Posts
வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்
  •  ·  sivam
  •  · 
01.வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.02.இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல்இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.03.செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள
கல்வியே அழியாத செல்வம்
  •  ·  sivam
  •  · 
எம்ஜிஆரிடம் உதவி கேட்டுச் சென்ற கலைவாணரின் மகன் நல்லதம்பி (படத்தில் இருப்பவர்)..கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன்.. ஆனா பணவசதி இல்ல.. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன்.. ‘எவ்வளவு தேவை?’ ன்னு கேட்டார்..‘3 ஆயிரம் தேவைப்படுது’ ன்னு சொன்னேன்..கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு, ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்..காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க.. சாப்பிட்டு காத்திருந்தேன்..அரசியல் காரணமா 1967 ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார்..குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார்..வந்ததும் யார் வெளிய
படிப்பு மட்டுமே ஒரு மனிதனை உயர்ந்தும்
  •  ·  sivam
  •  · 
தர்மலிங்கம் அந்த ஊரிலே பெரிய பணக்காரர் அவர்தான். அவருக்கு நான்கு பிள்ளைகள் மூன்று ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை உண்டு.விவசாயம் வட்டி கொடவாங்கல், கமிஷன் கடை, பழ மண்டி, இப்படி பல தொழில் செய்து சம்பாதித்து வந்தார். ஏறக்குறைய ஒரு #ஜமீன்தார் போல் வாழ்ந்து வந்தார். சாரட்டு குதிரை வண்டி , அந்த சாரட்டு குதிரை வண்டியில் வரும்போது எல்லோரும் வணக்கம் சொல்வார்கள் அவருக்கு. முதன் முதலில் ஜீப் வாங்கியது அவர்தான். மூத்த பையனுக்கு திருமணம் வயது வந்து விட்டது பக்கத்தூரில் அவருக்கு சமமான வசதி படைத்த ஒருவர் வீட்டில் பெண் கேட்டு சென்றார்கள் அவர்களும் இவருடைய அந்தஸ்து வசதி எல்லாம் பார்த்து பொண்ணு கொடுக்க தயாரானார்கள்.திருமணத்திற்கு இரண்டு விட்டார்களும் தயாரானார்கள் பட்டுச்ரிகையில் பளபளக்க சாரட்டு வண்டியில் வலம்
கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும்?
  •  ·  sivam
  •  · 
ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் இருவரும் சூரியனை வணங்கினார்கள். அப்பொழுது சூரிய பகவான் அசரீரியாக தோன்றி "வேத குருவே.. உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன். இன்று சூரியனான நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள் என்று கூறி மறைந்தான்.குருவும் சூரியனை வாங்கிவிட்டு சீடனை கவலையோடு பார்த்தார். இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோவி
இன்றைய ராசி பலன்கள் - 8.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்தொழில் நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதில் புதிய தேடல்கள் பிறக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வரவுகள் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்ரிஷபம்மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் புதுவிதமான அறிமுகங்களும் அனுபவங்களும் ஏற்படும். வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களை சிந்தித்து
இன்றைய நாள் எப்படி? 8.4.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 25 ஆம் தேதி புதன்கிழமை 8.4.2026இன்று மாலை 05.48 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று அதிகாலை 04.54 வரை கேட்டை. பின்னர் மூலம்.இன்று மாலை 03.56 வரை வரீயான். பின்னர் பரிகம்.இன்று அதிகாலை 04.26 வரை கரசை. பின்னர் மாலை 05.48 வரை வனிசை. பிறகு பத்திரை.இன்று அதிகாலை 04.54 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.06 வரை அமிர்த யோகம். பின்பு மரணயோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
தர்ப்பூசணி பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
  •  ·  sivam
  •  · 
1. சீராக வளர்ந்துள்ள தர்ப்பூசணியை தேர்ந்தெடுங்கள். ஏனெனில், அந்த பழம் முழுவதும் கதிரவனின் ஒளி மற்றும் ஊட்டச்சத்து சீராக இருக்கும்.2. கிட்டத்தட்ட ஒரே அளவுள்ள இரு பழங்களை கையில் தூக்கிப்பாருங்கள். எடை அதிகமுள்ள பழம் நீர்ச்சத்து மற்றும் சுவை மிகுந்தது (பழங்கள் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருக்க வேண்டும்).3. பழத்தின் ஒரு பகுதியில் மஞ்சள் நிற திட்டு இருக்கிறதா என்று பாருங்கள். இந்த இடம் அந்த பழம் மண்ணில் நீண்ட நேரம் இருந்ததற்கான அடையாளம். நல்ல மஞ்சள் நிறத்தில் திட்டு இருந்தால் அது சரியான காலம் வரை செடியில் இருந்துள்ளது. கதிரவனின் ஒளியும் ஊட்டச்சத்தும் அதற்கு சுவையை அளித்திருக்கும். மாறாக, வெள்ளை நிற திட்டு இருந்தாலோ, அல்லது திட்டுகளே இல்லையென்றாலோ, அந்த பழம் தகுந்த காலத்திற்கு முன்னமேயே பறிக்க
அசாத்தியமான அதிர்ஷ்டங்கள்
  •  ·  sivam
  •  · 
பில் மோர்கன் (Bill Morgan) என்பவரின் கதை உலகின் மிகவும் பிரபலமான மற்றும் வியக்கத்தக்க தற்செயல் நிகழ்வுகளில் ஒன்றாகும்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்து, குறுகிய காலத்தில் இரண்டு முறை லாட்டரி வென்றவர்.அவருக்குக் கிடைத்த அசாத்தியமான அதிர்ஷ்டங்கள் இதோ:1. மரணத்திலிருந்து மீண்டது (1998)ஒரு லாரி ஓட்டுநராக இருந்த பில் மோர்கன், ஒரு விபத்தில் சிக்கினார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது ஏற்பட்ட மருந்து ஒவ்வாமையால் (Allergic reaction) இதயத் துடிப்பு நின்றுவிட்டது. மருத்துவ ரீதியாக 14 நிமிடங்கள் அவர் இறந்ததாகக் கருதப்பட்டார். அதன் பிறகு கோமா நிலைக்குச் சென்ற அவரை, மருத்துவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறினர். ஆனால், 12 நாட்களுக்குப் பிறகு அவர் அதிசயத்தக்க
இன்றைய ராசி பலன்கள் - 7.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். நண்பர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நிதானம் வேண்டும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையறிந்து செயல்படவும். எதிர்பாராத சில செய்திகள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்ரிஷபம்புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமும் மகிழ்ச்சியான தருணங்களும் உருவாகும். வரவுகளில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். திறமையான பேச்சுக்கள் மூலம் காரிய சித்திகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக
இன்றைய நாள் எப்படி? 7.4.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.4.2026இன்று மாலை 03.05 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.இன்று அதிகாலை 02.21 வரை அனுஷம். பின்னர் கேட்டை.இன்று மாலை 03.27 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.இன்று அதிகாலை 02.26 வரை கௌலவம். பின்னர் மாலை 03.05 வரை தைத்தூலம். பிறகு கரசை.இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்
  •  ·  sivam
  •  · 
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. விருத்தாசலத்தில் தான் இருக்கிறது.கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது.தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரை பல் தொ
அறிவியலுக்கும் எட்டாத ஆச்சரியம்
  •  ·  sivam
  •  · 
அணையாத தீபம் - ஜுவாலாமுகி கோயில்!இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஜுவாலாமுகி அம்மன் கோயில், மற்ற கோயில்களைப் போல சில வழிபாட்டுத் தலம் அல்ல.இங்கு சிலைகளுக்குப் பதிலாக "புனிதச் சுடர்களே" தெய்வமாக வணங்கப்படுகின்றன.பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த மர்மம் இன்றும் பக்தர்களையும் விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்துகிறது.எரிபொருள் இல்லாத சுடர்!இந்தக் கோயிலின் கருவறையில் பாறைகளின் பிளவிலிருந்து ஒன்பது தீபச் சுடர்கள் (ஜுவாலாக்கள்) நீல நிறத்தில் எரிந்து கொண்டிருக்கின்றன. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தீபங்கள் எரிவதற்கு எந்தவிதமான எண்ணெய், நெய் அல்லது திரிகளோ பயன்படுத்தப்படுவதில்லை. பூமியின் ஆழத்திலிருந்து வரும் இந்தச் சுடர்கள் பல நூற்றாண்டுகளாக அணையாமல் எரிந்து கொண்டிருக்