Latest Posts
- · sivam
- ·
அரசன் ராஜராஜனால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில்,"உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்" என்ற இறைவனின் அசரீரியாக உணர்ந்திட்ட மன்னன் மந்திரியை அழைத்து அதற்கு விளக்கம் கேட்க,"உன் மறைவில் என்பது உங்களால் கட்டப்பட்ட கோயில்" என்பதாகும்.இடைச்சியின் நிழல் என்பது "இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கல்" கோபுரத்தின் மேல் இருப்பதாகும்.பொன்மணித்தட்டாரின் இதயத்தில் என்பது பொருள் விளங்கவில்லை மன்னா" என்று கூறினார்.இந்த ஊரில் பொன்மணித் தட்டார் என்பவர் இருந்தால் அழைத்து வருமாறு அரண்மனை ஆட்களை ராசராசன் அனுப்பிவைக்க, அவர்களும் கடைவீதியில் பொன் வியாபாரியிடம் விசாரித்து பொன்மணித்தட்
- · sivam
- ·
ஆபிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன.தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார்.ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது.இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்.” என்று கட்டளையிட்டார்.வேலைக்காரன் கெஞ்சினான், நான் உங்களுக்கு பத்து வருடங்களாக சேவை செய்தேன்,நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா? தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் ஒன்று தாருங்கள்! ”ராஜா ஒப்புக்கொண்டார்.அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவத
- · sivam
- ·
ஜலதோஷம், நெஞ்சு படபடப்பு ஆகியவற்றுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால், ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும் உடல் சமநிலைக்கு வந்துடும்.இதய நோயாளிகளுக்கு இப்படியான பிரச்சினைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இதை செய்யலாம். பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை
- · sivam
- ·
புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான்.
- · sivam
- ·
அடி மேல் அடி தான்.அந்த காலத்தில் நாங்க எதுக்கெல்லாம் அடி வாங்கி இருக்கோம்னு இப்போது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆக்கிடுச்சு என்பதுதான் இங்கே மேட்டரே...1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா மறுபடியும் அடி..2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால் மறுபடியும் அடி..3. அடி வாங்காமலேயே அழுதாலும் விழும் அடி..4. பெரியவங்க உட்கார்ந்திருக்கும் இடத்தில் நின்னுட்டு இருந்தா அடி..5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உட்கார்ந்திட்டே இருந்தா அடி.6. பெரியவங்க உட்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தால் அடி.7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டால் அடி..8. தட்டில் சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அட
- · sivam
- ·
ஒரு காட்டில் ஓர் அதிசய விலங்கு வாழ்ந்து வந்தது. அதன் பாதிப்பகுதி விலங்கு வடிவம். மறுபாதி மனித வடிவம். ஆதலால், அது புருட மிருகம் என அழைக்கப்பட்டது.அளவில்லாத வலிமை படைத்த மிருகம் அது. அதனால் அக்காட்டையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.வேற்றாளோ அல்லது வேற்று மிருகமோ அக்காட்டில் புகுந்தால், உடனே அவைகளை தனக்கு இரையாக்கி விடும்.ஒரு நாள் வீமசேனன், எப்படியோ அக்காட்டின் வழியாக செல்ல நேர்ந்தது. அவனைக் கண்ட புருட மிருகம், இன்று நமக்கு நல்ல விருந்து கிடைத்தது என்று மகிழ்ந்தது. வீமனைப் பிடிக்க விரைந்தது. புருட மிருகத்தைக் கண்ட வீமன், தன் நாட்டை நோக்கி ஒடலானான்.அவனைத் துரத்திய புருடமிருகம், ஒரு கட்டத்தில் அவனைப் பிடித்து விட்டது. ஆனால், அது பிடித்த போது, அவனுடைய வலது கால் தன் நாட்டிலும் இடது கால் அக்காட
- · sivam
- ·
அனுபவமற்ற ஒருவர் பல வேலைகளுக்கு சென்றார் ஆனால் அந்த வேலைகளில் நீண்ட காலம் தங்கியதில்லை. ஒவ்வொரு முறையும், அவர் மனச்சோர்வடைந்த மனநிலையுடன் வீடு திரும்புவார்.அவரது மனைவி எப்போதும் அவரை ஆறுதல்படுத்துவார், ஒவ்வொறு முறையும், அவள் ஏமாற்றமடையவில்லை அல்லது கோபமடையவில்லை.அவர் தனது முப்பது வயதை எட்டியபோது அவர் மொழிகளில் ஒரு திறமை பெற்றார். அவர் காது கேளாதோர் மற்றும் ஊமையருக்கான பள்ளியில் ஆலோசகராக ஆனார். பின்னர், அவர் ஊனமுற்றோருக்கான பள்ளியைத் திறந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஊனமுற்றோருக்கான கருவிகள் மற்றும் உபகரணங்களை விற்கும் பல்வேறு நகரங்கள் மற்றும் மாகாணங்களில் அவர் செயின் ஸ்டோர்களை நிறுவினார். அவர் பல கோடீஸ்வரர் ஆனார். அவர் ஜான் டோ!ஒரு நாள் அவன் மனைவியிடம் கேட்டான். 'நான் என் எதிர்காலத்தை இருட
- · sivam
- ·
நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சை பட்டாணி. பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் நிறைந்து காணப்படுகிறது.பச்சை பட்டாணியில் ஆண்டிஅக்சிடண்டுகள் நிரம்பியுள்ளது. இது இதயத்திற்கு தேவையான ரத்தத்தை தடையின்றி சீராக செல்ல உதவும்.பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து மிகுதியாக உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபகத் திறன் அதிகரிக்கும், இது அல்சைமர் நோயை தடுக்கும்.பச்சை பட்டாணியில் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ளது. பட்டாணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.பச்சை பட்டாணி அதிக அளவு ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது.ஃபோலேட்டுகள் பிறந்த குழந்தைகளில் நரம்புக் குழாய் சம்பந்
- · sivam
- ·
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே சொகுசு வாழ்க்கையை வாழவே விரும்புகிறோம். இதனால் நம்மிடமிருந்த அந்த கால பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது.என்னதான் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்தாலும், மறுபுறம் நோய்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் நமது முன்னோர்கள் கண்டறிந்த பல அற்புதமான விஷயங்களை நாம் மறந்து விடுகிறோம். அதில் ஒன்றுதான் கோரைப் பாயில் படுத்து உறங்குவது.கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறதாம். இதனாலேயே நம் முன்னோர்கள் 'பாயில் படு, நோயை விடு' என்ற பழமொழியைக் கூறியுள்ளனர்.பொதுவாகவே, பாய் வகைகளில் ஈச்சம் பாய், கோரைப் பாய், மூங்கில் பாய் என பலவகை உண்டு. இவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உடையதாகும். குறிப்பாக, ப
- · sivam
- ·
பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டை சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.இதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களையும் சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு.பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவ
- · sivam
- ·
நம் அறிவுக்கு அப்பால்பட்ட சக்திகள் பல இந்த பூமியில் இயங்குகிறது....பெங்களுர் அருகே 'ஹாசன்' என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரே ஒரு நாள் முழுவதும் கோவில் திறக்கப்படும்.அங்கே மூன்று சின்ன சின்னதாக கற்கள் இருக்கும். இந்த ஸ்வாமியின் பெயர் ஹாசன அம்மாள் என்று அழைக்கப்படுகிறது. மூன்று சிறு சிறு கற்கள் தான் அந்த ஹாசன அம்மாள். மூன்று கற்கள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும். அந்த சந்தனத்தை முழுவதும் சுரண்டி விட்டு அந்த ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். ஸ்வாமிக்கு அருகே இரண்டு பெரிய நெய் தீபங்கள் இருக்கும். கோவில் திறந்தவுடன் அந்த இரண்டு நெய் தீபத்திலும் இருக்கும் நெய்யை எடுத்து விட்டு புதிதாக நெய் ஊற்றப்படும்.இதில் என்ன அதிசயம் என்றால் ஊற்றிய நெய் தீபம் அடுத்த ஆண்டு வரை அனையாம
- · sivam
- ·
நரைமுடி என்பது பலருக்கும் தவிர்க்க முடியாத பிரச்னை.இதற்கு தீர்வாக இயற்கை முறையில் இந்த எண்ணெய்யை முயற்சித்து பார்க்கலாம்.இந்த இயற்கை வழிமுறைகள் உச்சந்தலையை ஊட்டப்படுத்தி, வேர்க்கால்களை வலுவாக்கி முடியின் நிறத்தை இயற்கையாகவே மீட்டெடுக்க உதவுகின்றன.தேவையானவை:தேங்காய் எண்ணெய் - 500 மில்லி (செக்கு எண்ணெய்)அவுரிப் பொடி - ஒன்றரை டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)நொச்சி இலை -ஒரு கைப்பிடி அளவுஎலுமிச்சை - 1 (நான்காக நறுக்கிக் கொள்ளவும்)மஞ்சள் கரிசலாங்கண்ணி - 3, மருதாணி இலை - 3 கைப்பிடி அளவுகற்றாழை - ஒரு துண்டுசின்ன வெங்காயம் - 5ஆமணக்கு இலை - 2 கைப்பிடி அளவுகருவேலம் பட்டை - ஒரு துண்டுநெல்லிக்காய் - 5கசகசா - ஒன்றரை டீஸ்பூன்பாதாம் - 5சுரைக்காய் - 100 கிராம்வேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு,செம்ப