Posts
Latest Posts
அடையாளம்
  •  ·  sivam
  •  · 
ஒரு முதியவர் நர்ஸிடம்,“எனக்கு கொஞ்சம் அவசரம் இருக்கிறது… தயவு செய்து என்னை சீக்கிரம் பார்த்து டாக்டரிடம் அனுப்ப முடியுமா?” என்றார்.அதை கேட்ட நர்ஸ் கொஞ்சம் கோபமாக, “அங்கே உட்காருங்கள்,” என்று சொன்னாள்.சிறிது நேரம் கழித்து டாக்டர் வந்தபோது, அந்த முதியவர் கதவின் அருகில் இருந்து வேண்டிக் கொண்டார்.நர்ஸ் எதிர்த்தாலும், டாக்டருக்கு கருணை வந்ததால் அவரை உள்ளே அழைத்தார்.அவரை பரிசோதிக்கும் போது, விழுந்ததும், காயம் ஏற்பட்டதும், ரத்தம் வந்ததும் எல்லாம் அவர் சொன்னார்.டாக்டர் காயத்தை சுத்தம் செய்து தையல் போட்டார்.போகும் நேரத்தில் டாக்டர் கேட்டார்:“ஏன் இவ்வளவு அவசரம்?”முதியவர் சொன்னார்:“என் மனைவிக்கு உடல் நலம் இல்லை… அவளுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட வருவேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறேன்.”டாக்டர் கேட்டார
யாரு?
  •  ·  sivam
  •  · 
வெளியில் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன. தூரத்தில் எங்கோ பறையொலி, கேட்டது.யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன்.பக்கத்து வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை அந்த வீட்டின் பெரியவர்..? ச்சே இருக்காது. அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே. அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...!வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன் தெருவின் எல்லா பகுதியிலுமே பூவிதழ்கள்.புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தேன். சோபாவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த மகள் , "ஹாய்..! அப்பா" என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த புத்தகத்தில் மீண்டும் கண் ச
தர்ப்பைப் புல்
  •  ·  sivam
  •  · 
தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீர் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம். இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம். தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத
ரமண மகாிஷி
  •  ·  sivam
  •  · 
1950 வருடம் ஏப்ரல் மாதத்தில் கிருஷ்ண பக்ஷ திரயோதசி திதியில் பிரதோஷ தினத்தில் ரமண மகாிஷி மகா சமாதி அடைந்த தினம். அன்று மிகவும் சிரமப்பட்டுத்தான் பாா்வையாளா்கள் அறைக்கு வந்து கொண்டிருந்தாா். அதுபோல் மகாிஷியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பாா்வையாளா் நேரமும் குறைக்கப்பட்டது. 14.04.1950 அன்று மகாிஷியின் உதவியாளா் சுவாமி சத்யானந்தா., மகாிஷியின் கால்களுக்கு மசாஜ் செய்வித்துக் கொண்டிருந்தாா். சாயங்காலம் சுமாா் 05.00 மணியளவில் தன்னை நிமிர்த்தி உட்கார வைக்குமாறு சுவாமி சத்யானந்தாவிடம் மகாிஷி கூறினார். அதே நேரத்தில் அங்கு குழுமியிருந்த பக்தா்கள் “அருணாசல சிவ., அருணாசல சிவ” என்று பக்தி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அதுவரை சோர்வாக இருந்த மகாிஷியின் முகம் தனது தந்தையின் பெயரிலான சரண கோஷங்களை கேட்டவ
துன்பம் சிதறி ஓட....
  •  ·  sivam
  •  · 
எங்கு திரும்பினாலும் தோல்வி என்ன வாழ்க்கை இது?வாழ்வோடு போராடி சலித்த ஒருவன் ஞானி ஒருவரை சந்தித்தான்."குருவே, எனக்கு ஏன் இந்த நிலைமை? வெள்ளம்போல பிரச்னைகள் என்னை மூழ்கடிக்கின்றன. இனி என்னால் ஒருபோதும் ஊருக்குத் திரும்பவே முடியாது'' என்று குரு முன் நின்று புலம்பினான் அவன்.குரு அவனைக் கனிவோடு பார்த்தார். தன் அறைக்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்தினார்.அலமாரியில் இருந்த அலங்காரமான ஒரு பெட்டியை எடுத்து வெளியே வைத்தார்."மகனே, இது சாதாரணப் பெட்டியல்ல. சகல பிரச்னைகளையும் தீர்க்கும் மந்திரப்பெட்டி. நீ உன் பிரச்னைகள் ஒவ்வொன்றாகச் சொல். அவற்றை இந்தப் பெட்டியில் போட்டுப் பூட்டிவிடுகிறேன். அதன் பின் நீ நிம்மதியாக வாழலாம்'' என்றார்.குருவின் மீது நம்பிக்கை வைத்துத் தன் பிரச்னைகளை சொல்லத் தொடங்கினான்."நான்
இன்றைய ராசி பலன்கள் - 3.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உருவாகும். பழகும் தன்மையில் மாற்றங்கள் காணப்படும். புதிய முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். செயல்பாடுகளில் இருந்த எதிர்ப்புகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைரிஷபம்பயணம் தொடர்பான செயல்களில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மனை வாங்குதல் மற்றும் விற்றல் பணிகளில் மேன்மை ஏற்படும். பணி புரியும் இடத்தில் நன்மைகள் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மதிப்புகள் மேம்படும் நா
இன்றைய நாள் எப்படி? 3.4.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3.4.2026.இன்று காலை 08.51 வரை பிரதமை. பின்னர் துவிதியை.இன்று இரவு 07.25 வரை சித்திரை. பின்னர் சுவாதி. இன்று பிற்பகல் 02.06 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம். இன்று காலை 08.51 வரை கௌலவம். பின்னர் இரவு 09.30 வரை தைத்தூலம். பிறகு கரசை.இன்று முழுவதும் சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
பாகுபாடற்ற இறைவன்
  •  ·  sivam
  •  · 
ஒரு காட்டில் சிங்கமும், காக்கையும் நண்பர்களாயிருந்தனர். ஒருநாள், அவை இரண்டிற்கும் உணவு கிடைக்காததால் மிகுந்த பசியால் வாடின. அதனால், அவை கடவுளிடம், 'தங்கள் பசியைப் போக்கியருள வேண்டும்...' என்று வேண்டிக் கொண்டன.அவைகளின் வேண்டுகோளுக்கு கடவுளும் செவி சாய்த்தார். சிறிது நேரத்திற்கு பின், சிங்கத்தின் கண்ணில் ஒரு யானை தென்பட்டது. உடனே பாய்ந்து அதைக் கொன்று தின்றது,சிங்கம்.அதேநேரம் காக்கைக்கு ஒரு எலி கிடைத்தது.பின்னர், காக்கையிடம், 'உன்னைவிட நானே அதிர்ஷ்டசாலி. எப்படியென்றால் எனக்கு மிகப்பெரிய உணவைக் கொடுத்த கடவுள், உனக்கோ அற்பமான ஒரு சிறு உணவை கொடுத்து விட்டார்...' என்று ஏளனம் செய்தது, சிங்கம்.அதற்கு, 'சிங்கமே, உண்மை புரியாமல் உளறாதே. கடவுளிடம் பாரபட்சத்தைப் பார்க்கக் கூடாது. அவர், உன் பசி தீர ஒரு ய
அச்சமின்மையே ஆரோக்கியம்
  •  ·  sivam
  •  · 
அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார்.என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள்.அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.அக்பர் யோசித்தார்.பீர்பாலை பார்த்தார்.பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன்.அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.பயம் ஒரு பெரிய நோய் என்றார்.நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.
நல்ல மனதுடன் தர்மம்
  •  ·  sivam
  •  · 
ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். தினமும் யாராவது ஒருவருக்கு ஏதாவது கொடுக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. அப்படி ஒரு பழக்கம். அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்கு தெரியாது. அவ்வளவு ரகசியமாக கொடுப்பார்.ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராக கட்டி வைத்திருந்த பண முடிப்பை கையில் எடுத்துக் கொண்டார். வீட்டை விட்டு வெளியில் வந்தார். தெருவில் இறங்கி நடந்தார். இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார் . தன்னிடமிருந்த பண முடிப்பை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்து விட்டு திரும்பி வந்துவிட்டார்.அப்பாடா ஒரு வழியாக தருமம்
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த சிற்றுண்டி
  •  ·  sivam
  •  · 
எளிமையான உணவுகளில்கூட நல்ல ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்தலாம். அப்படிப்பட்ட எளிய உணவுகளில் ஒன்றுதான் அவித்த வேர்க்கடலை.நிலக்கடலையில் உள்ள குறைந்த கிளைஸ்மிக் இன்டெக்ஸ் உடலின் இரத்த சர்க்கரை அளவை சரியாக வைக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது தவிர்க்கப்படுகிறது.வறுத்த நிலக்கடலையை விட வேகவைத்த நிலக்கடலையில் சத்துக்கள் அதிகம் என கூறப்படுகிறது.வேகவைத்த நிலக்கடலையில் புரதம், வைட்டமின்கள், மினரல்கள் அதிகம் உள்ளன. இது உண்பதற்கு மிகுந்த சுவையாக இருப்பதோடு, சத்துக்களையும் அள்ளித் தருகிறது.நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.வேகவைத்த நிலக்கடலையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. மகாத்மா காந்தி தினமும் அவித்த வேர்க்கடலை ஒரு கைப்பிடியும் ஆட்டுப்பாலும
இன்றைய ராசி பலன்கள் - 2.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.மிதுனம்: முன்கோபத்தை குறைப்பது நன்மை தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் வாடிக்கைய