Latest Posts
- · sivam
- ·
28இல் நுழைந்தாய்..68இல் பிரிந்தாய்.40வருட தாம்பத்யம்..அதிக கொஞ்சல்கள்,கம்மி சண்டைகள்..அணுசரித்துப் போவதில் மன்னி நீ..என்னையும் தான் இருக்கச் சொன்னாய்..நீ இருந்தவரையில் அப்படி நான் இல்லை..பஞ்சாயத்து பண்ண நீ இருந்தாய்.நீ இல்லாத இப்போதுஅனுசரித்து மட்டும் தான்போக வேண்டி இருக்கிறது.Kitchenஇல் நடக்கும் யுத்தம்..பாத்திரம் தேய்க்க big boss போல shift..காபி சூடாக இல்லை என்று எத்தனை தடவை கோபப்பட்டு இருப்பேன்இப்போது பிரச்சினைகள் எப்போதும் சூடாக இருப்பதால் காணாமல் போய் விட்டது காஃபிநம் ரூமில் நடுஇரவில் A/c ஆஃப் ஆகிவிடுகிறது.Hallஇல் தூங்கினால் என்ன என்று ஜாடை மாடையாக உபதேசம்.அனாயாசமாக 25 பேருக்கு சமைப்பாயே..அதில் சுவையாய்மணமும் இருக்கும்உன் மனமும் இருக்கும்இன்று எனக்கு google சமையல் பிடிக்கவே இல்லை.ஒரே ஒர
- · sivam
- ·
ஒருமுறை ஆசிரமத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு செய்வதறியாது, தங்கியிருந்த பக்தர்களிடம்,'இன்று இரவு உணவோடு உக்கிராணம் காலி.நாளை காலை உணவு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்' என்று நிர்வாகத்தால் பணிவோடு வேண்டுகோள் விடப்பட்டது.சிலர் ஊருக்கு கிளம்ப விழைந்து பகவானிடம் உத்தரவுக்கு வந்த போது பகவான் காதுக்கு விஷயம் சென்றது.பகவான் நிமிர்ந்து உட்கார்ந்தார்."காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?இந்த மலை இருக்கு.பேசாம எல்லாம் போய்த் தூங்குங்கோ" என்று கூறி மௌனமானார்.வழக்கம் போல அதிகாலை பகவான் கிச்சனுக்குள் நுழைந்தார்."என்ன இருக்கு?"என்று கேட்டார்.'கொஞ்சம் நொய் குருணை தான் இருக்கு'என்றனர்."சரி எடுத்துக்கொண்டு வா!"என்று கூறிவிட்டு அடுப்பைப் பற்ற வைத்தார்.காலை 5:30 மணி,கைப்பிடி குருணையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்த
- · sivam
- ·
அமாவாசை நாளில் கடைகளில் (கடைகள், வீடுகள், தொழிற்சாலைகள், புதிய வாகனங்கள் போன்ற இடங்களில்) பூசணிக்காய் உடைக்கும் பழக்கம் மிகவும் பழமையானதும், ஆழமான ஆன்மீகப் பொருளுடையதுமாகும். இது வெறும் சடங்காக அல்லாமல், நம் இடத்தையும், நம் செயல்பாடுகளையும் எதிர்மறை சக்திகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு சக்திவாய்ந்த தெய்வீக வழிபாடாக கருதப்படுகிறது. அமாவாசை என்பது சந்திரன் முழுமையாக காணாத நாள். இந்த நாள் ஆற்றல்கள் மிகவும் நுண்மையானதாகவும், ஆன்மீகத்தை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டதாகவும் கருதப்படுகிறது. அதே சமயம், எதிர்மறை அலைகள் அதிகமாக செயல்படுவதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால், கடை அல்லது தொழில் நடைபெறும் இடத்தை நல்ல சக்திகள் நிரம்பச் செய்வதற்கும்,கெட்ட சக்திகளை அகற்றுவதற்கும், வியாபாரம் சிறக்க பூசணிக்காய
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் ஆதரவுகள் மேம்படும். எதிர்பாராத சிலரின் அறிமுகங்கள் உண்டாகும். புதிய தொழில் நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். நட்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் ரிஷபம்உத்தியோகத்தில் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். வியாபாரத்தில் இருந்த மந்த தன்மை விலகும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிற
- · sivam
- ·
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 3 ஆம் தேதி புதன்கிழமை 19.11.2025.இன்று காலை 10.27 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.இன்று காலை 09.21 வரை சுவாதி . பின்னர் விசாகம்.இன்று காலை 10.00 வரை சௌபாக்கியம். பின்னர் ஷோபனம்.இன்று காலை 10.27 வரை சகுனி. பின்னர் இரவு 11.29 வரை சதுஷ் பாதம். பின்பு நாகவம்.இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09.15 முதல் 10.15 மணி வரைகாலை : 10.45 முதல் 11.45 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
ஜோ ஒரு தச்சர். அவர் மலைப்பகுதிகளில் வீடுகளைக் கட்டினார். ஜோவின் மனைவி ஸ்டெல்லா நேர்த்தியான ஆடைகளைத் தைக்க ஊசி மற்றும் நூலைப் பயன்படுத்தினார். துணிகளைத் தைக்க அழகான துணியை மட்டுமே பயன்படுத்தினார்.அவர்களிடம் அதிக பணம் இல்லாததால், அவர்கள் ஒரு பழைய கொட்டகையில் வசித்து வந்தனர். மழை பெய்யும்போது தண்ணீர் சொட்டசில நேரங்களில் மாலையில், அவர்கள் நகர மையத்தில் நடந்து செல்வார்கள். கடை ஜன்னல்களைப் பார்த்து கனவு காண்பார்கள். ஸ்டெல்லாவுக்கு தந்த கைப்பிடி கொண்ட ஒரு ஹேர் பிரஷ் வேண்டும் என்று ஆசை. அழகாக மாற்றுவதற்கு பிரஷ் இல்லாததால், அவள் தினமும் தன் தலைமுடியை மேலே இழுத்தாள். ஜோ தனது தாத்தாவின் கடிகாரத்தை சரிசெய்ய விரும்பினான்.அவர்களின் திருமண ஆண்டு விழாவிற்கு, ஸ்டெல்லா ஜோவுக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கித் தர வ
- · sivam
- ·
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது.ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.தற்செ
- · sivam
- ·
அமெரிக்கச் சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணக்கஷ்டம். அவனுக்கு 50 டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகுநாட்களாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் 'கடவுள், அமெரிக்கா' என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான்.பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அந்த கடிதத்தை, ஒரு விளையாட்டாக வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். அதிபருக்கு ஒரே ஆச்சர்யம். சரி... இந்த பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறுபையனுக்கு ஐம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம் என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு மீண்டும் ஒரு கடிதம் எ
- · sivam
- ·
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!என வேண்டவே.... நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். திட்டமிட்ட காரியம் கைக்கூடி வரும். ஆன்மீகப் பணிகளில் தெளிவு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஊதா ரிஷபம்முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். அதிகார பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வியூகங்களை கையாளுவீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் மிதுனம்பழைய நண்பர்களின் சந்திப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் தி
- · sivam
- ·
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 18.11.2025.இன்று காலை 08.31 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.இன்று காலை 06.59 வரை சித்திரை . பின்னர் சுவாதி.இன்று காலை 09.38 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.இன்று காலை 08.31 வரை வனிசை. பின்னர் இரவு 09.29 வரை பத்தரை. பின்பு சகுனி.இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரைகாலை : 10.45 முதல் 11.45 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
வெகு பிஸியான பூந்தமல்லி ஆவடி சாலையில், கண்ணாடி கிளாஸில் இருந்த சர்க்கரை இல்லாத கசப்பு காஃபியை உறிஞ்சியபடி ஓடும் வாகனங்களை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்த அவனிடம், ஒரு கிழவி "கண்ணு.. இன்னிக்கு பத்து பாக்கெட்டு தான் வாங்கியாந்தேன். ஒன்னே, ஒன்னு தான் மீந்து இருக்கு. நீ வாங்கிக்க ராஜா."வயசு எழுபதுக்கு குறையாது. வெள்ளெருக்குத் தலை. வெளுத்துப் போன வெள்ளைப் புடவை. இன்ன நிறமென இனம் காணமுடியாத வண்ணத்தில் தோளில் தையல் விட்டுப் போன ரவிக்கை. கருத்தக் காய்ப்புக் காய்த்த கையில் சாயம் போன சரவணா ஸ்டோர்ஸ் பிளாஸ்டிக் பை. ஆழ்ந்த கவனம் கலைக்கப்பட்டாதால் உண்டான மெலிதான எரிச்சலில், 'ப்ச்ச்'சென முனகிக் கொண்டே குரல் வந்த திசையில் திரும்பினான் அவன்."என்னாது ஆயா?""இட்லி மாவு கண்ணு..""இட்லி மாவு..?""பொசு பொசுன்னு