Posts
Latest Posts
இன்றைய நாள் எப்படி? 20.2.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மாசி மாதம் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.2.2026.இன்று மாலை 03.53 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று இரவு 09.19 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. இன்று இரவு 07.33 வரை சாத்தியம். பின்னர் சுபம். இன்று அதிகாலை 04.32 வரை தைத்தூலம். பின்னர் மாலை 03.53 வரை கரசை. பிறகு வனிசை .இன்று இரவு 09.19 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை பகல் : 12.30.30 முதல் 01.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஏழையின் பக்தி
  •  ·  sivam
  •  · 
தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோஷத்தில் ராஜா, ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவில் இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.'ராஜா ராஜா!' என்றழைக்க...ராஜா ராஜா சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்...தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக.இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்த
விடா முயற்சி
  •  ·  sivam
  •  · 
எட்டு வயது சிறுவன் ,கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி, உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா ?என்று கேட்டான் .சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர், சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார். சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான்.பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன், அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று ,கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான்.அதற்கு அந்த கடைக்காரர் மிகுந்த கோபமுற்று இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி விட்டார். அவன் வந்து கொண்டிருந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு காரின் முன்னே சென்று
சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?
  •  ·  sivam
  •  · 
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது.....இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்குவாய்ப்பு உள்ளது. நம
கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை
  •  ·  sivam
  •  · 
பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!!குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும்,விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்...நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சமைப்பது,அவரை ரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.அரசருக்கு வித்த
இன்றைய ராசி பலன்கள் - 19.2.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் மத்தியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்களும் அறிமுகங்களும் உருவாகும். புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் மாற்றமான சூழல் அமையும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்புரிஷபம்தந்தை வழி தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். கூட்டாளிகள் சேர்ப்பது தொடர்பான எண்ணம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். துணிவு வெளிப்படும்
இன்றைய நாள் எப்படி? 19.2.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மாசி மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 19.2.2026இன்று மாலை 05.12 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று இரவு 10.03 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.இன்று இரவு 09.53 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.இன்று அதிகாலை 05.39 வரை பாலவம். பின்னர் மாலை 05.12 வரை கௌலவம். பிறகு தைத்தூலம் .இன்று காலை 06.32 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
வியப்பூட்டும் செய்திகள்
  •  ·  sivam
  •  · 
கேரளாவின் புராதான சின்னம் பற்றிய கண்ணோட்டம்கேரளாவின்அதிகாரபூர்வமான புராதான சின்னம் திருவிதாங்கூர் அரச சின்னத்தின் அடிப்படையில் உள்ள இருபுறமும் யானைகள் காத்து நிற்கும் ஸ்ரீ பத்மநாபசுவாமியின் சங்கு ஆகும்இந்தச் சின்னத்தின் மேல் பகுதியில் இந்தியா தேசிய சின்னமான அசோக சக்கரத்தின் சிங்கம் இடம் பெற்றுள்ளதுஇது திருவிதாங்கூர் மற்றும் கொச்சி அரசுகளின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறதுஇந்த சின்னம் கேரளாவின் கலாச்சாரம் இயற்கை மற்றும் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்றன
இன்றைய ராசி பலன்கள் - 18.2.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவார்கள். நண்பர்களின் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பணவரவு உண்டு. பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். அலைச்சல் குறையும்.மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபார விஷயமாக இருந்த டென்ஷன் விலகு
குங்குமப்பூ
  •  ·  sivam
  •  · 
குங்குமப்பூவை சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து, அந்த கலவையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.மஞ்சள் ஒரு சிறந்த அழகுப் பொருள். இது முகத்தை அழகாக வைக்க உதவுவதோடு, சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும். எனவே அத்தகைய மஞ்சளுடன் குங்குமப்பூவை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்திற்கு தடவி 10 நிமிடம் ஊறவைத்து, வெதுவெதுப்பான கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவாகும்.குங்குமப்பூவை உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உணவு சுவையுடன், இருப்பதோடு சருமத்திற்கு நல்ல பலனும் கிடைக்கும்.குங்குமப்பூவில் உள்ள நன்மை கிடைக்க வேண்டுமெனில், அதற்கு ஈரப்பசையானது தேவை. எனவே தினமும் குளிக்கும் போது, வெதுவெதுப்பான நீரி
இன்றைய நாள் எப்படி? 18.2.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மாசி மாதம் 6 ஆம் தேதி புதன்கிழமை 18.2.2026. இன்று மாலை 06.06 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று இரவு 10.23 வரை சதயம். பின்னர் பூரட்டாதி. இன்று அதிகாலை 01.39 வரை பரிகம். பின்னர் இரவு 11.53 வரை சிவம். பிறகு சித்தம். இன்று காலை 06.18 வரை கிமிஸ்துக்கினம். பின்னர் மாலை 06.06 வரை பவம். பிறகு பாலவம் . இன்று காலை 06.32 வரை மரண யோகம். பின்னர் இரவு 11.53 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம். நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரை காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில்
  •  ·  sivam
  •  · 
தெய்வத் திருவிளையாடல்கள் எல்லா காலமும் நிகழத்தான் செய்திருக்கின்றன. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் வீற்றிருக்கும் கைக்கொண்ட ஐயனார், ஆங்கிலேய ஆட்சியின்போது, அதிகாரி ஒருவருடன் உரையாற்றியுள்ளார். அத்தகைய சிறப்புபெற்ற இந்த ஐய்யனார் சாந்த ரூபத்தில் சாஸ்தாவாகவும், ஆங்கார ரூபத்தில் ஐயனராகவும் இருந்து வேண்டியவர்க்கு வேண்டும் வரமளித்து வருகிறார். கைக்கொண்ட ஐயனார் கோயிலின் இடது பக்கம் ஒரு பெரிய குளம் உள்ளது. முற்காலத்தில் அந்தக் குளத்தில் தண்ணீர் முழுவதும் நிரம்பியிருக்கும். அந்த பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களின் ஆகாரத்திற்கான பாசனத்திற்கு இந்த குளத்து நீரே ஆதாரம்.அந்தளவுக்கு கொள்ளளவு கொண்டு, ஒரு சிறிய ஏரி போல் காட்சி தரும் அந்தக் குளத்தின் நடுவே இருந்த