Posts
Latest Posts
அலெக்ஸாண்டரின் குதிரை
  •  ·  sivam
  •  · 
மாசிடோனியாவின் விளையாட்டு மைதானம் சுட்டெரிக்கும் வெயிலிலும் ஜனத்திரளால் வழிந்து கொண்டிருந்தது..யாருக்கும் அடங்காத , தெஸ்ஸாஸி நாட்டைச் சேர்ந்த அந்த குதிரை ,மைதானத்தில் யாரையும் நெருங்கவிடாமல் அருகில் வரும் அனைவரையும் துவம்சம் செய்து கொண்டிருந்தது.. மன்னர் பிலிப் இதை அடக்கப் போகும் வீரன் யார் ? என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.." இந்த குதிரையை அடக்கி ஆளும் வீரன் இந்த நாட்டில் இல்லையா?" .. கூவிக் கூவி மாசிடோனியாவின் மானத்தை வாங்கிக் கொண்டிருந்தான்..குதிரையின் சொந்தக்காரன். . மன்னர் அருகில் அமர்ந்திருந்த சிறுவன் அலெக்சாண்டர் தனது தந்தையிடம் திரும்பத் திரும்ப தான் அந்த குதிரையைத் தான் அடக்கப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தான். விளையாட்டாக எடுத்துக் கொண்டிருந்த மன்னர் பிலிப்.. தனது மகன் சொல்வது வ
பல அர்த்தங்களைக் கொண்ட ஐந்து சிறிய கதைகள்
  •  ·  sivam
  •  · 
1. ஒருமுறை அனைத்து கிராம மக்களும் மழை வேண்டி பிரார்த்தனை செய்ய முடிவு செய்தனர். பிரார்த்தனை நாளில், மக்கள் அனைவரும் கூடினர்; ஆனால் ஒரு சிறுவன் மட்டும் குடையுடன் வந்தான். அதுதான் நம்பிக்கை. (FAITH)2. நீங்கள் குழந்தைகளை காற்றில் வீசும்போது, ​​அவர்கள் சிரிக்கிறார்கள், ஏனென்றால் நீங்கள் அவர்களைப் பிடிப்பீர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அதுதான் நம்பிக்கை.(TRUST)3. ஒவ்வொரு இரவும் மறுநாள் காலையில் உயிருடன் இருப்பதற்கான எந்த உறுதியும் இல்லாமல் தூங்கச் செல்கிறோம், ஆனால் இன்னும் விழிப்பதற்காக அலாரங்களை அமைக்கிறோம். அதுதான் நம்பிக்கை. (HOPE)4. எதிர்காலத்தைப் பற்றிய பூஜ்ஜிய அறிவு இருந்தபோதிலும் நாளை பெரிய விஷயங்களைத் திட்டமிடுகிறோம். அதுதான் நம்பிக்கை. (CONFIDENCE)5.ஒரு முதியவரின் சட்டையில் “எனக்கு
வாழ்வில் ஏற்றத்தையே தரும் பாதாள செம்பு முருகன் கோவில்
  •  ·  sivam
  •  · 
தமிழ்நாட்டில் - திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவில், பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் செம்பு உலோகத்திலான முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஒரு தனித்துவமான திருத்தலமாகும்.சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இக்கோவில், 18 புனிதப் படிகள் கொண்ட நிலத்தடி குகை அமைப்பில் உள்ளது,இது இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது.இந்தக் கோயிலின் முன்புறத்தில் 15 அடியில் பெரிய சங்கிலி கருப்பன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் கோயிலில் சங்கிலி கருப்பன் சிலை அமைந்திருப்பது உலகத்திலேயே இங்கு மட்டுமாகத்தான் இருக்கும்.மூலவர்: செம்பு உலோகத்தினால் ஆன முருகன், பாதாளத்தில் வீற்றிருப்பதால் "பாதாள செம்பு முருகன்" என்று அழைக்கப்படுகிறார்.அமை
நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்
  •  ·  sivam
  •  · 
1 இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்சினைகள் உட்பட.2 சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.3 சிரிப்புதான் வலிக்கு மருந்து! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம், சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும்.4 கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு.5 உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…!6 இதயம் வலித்தாலும் சிரி. அது உடைந்தாலும் சிரி.7 என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால், நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது.8 எனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு, ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக்கொண்டுதான் இருக்கும்.9 பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாத
இராமாயணப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த ஒரு இரகசியம்
  •  ·  sivam
  •  · 
இராவணனை வீழ்த்துவது என்பது சாதாரண காரியமல்ல. அவரது பத்து தலைகளையும் ராமர் அறுக்க அறுக்க, அவை மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே இருந்தன. இதற்குப் பின்னால் ஒரு விசித்திரமான ரகசியம் இருந்தது.ராவணனின் உடலில், அவரது நாபி (தொப்புள்) பகுதியில் ஒரு 'அமிர்த கலசம்' இருந்தது. பிரம்மன் கொடுத்த வரத்தினால் இது அவருக்குக் கிடைத்தது.அந்த அமிர்தம் இருக்கும் வரை அவரது தலைகளை வெட்டினாலும் அவர் சாகமாட்டார். இந்த இரகசியம் இராமருக்கு முதலில் தெரியாது.இராவணனின் தம்பி விபீஷணன் தான், "ராமனே! அவரது தலைகளைப் பாராதே, அவரது நாபியில் அம்பு எய்" என்று இந்த இரகசியத்தைச் சொன்னார்.அதன் பின்னரே ராமர் தனது அம்பால் ராவணனின் நாபியில் இருந்த அமிர்தத்தை உலரச் செய்து, அவரை வீழ்த்தினார்.வெற்றிக்காக எவ்வளவு போராடினாலும், சில நேரங்க
வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
  •  ·  sivam
  •  · 
விஷக்கடிக்கு அடர்நிற வெற்றிலையை மென்று விழுங்கலாம் .வெற்றிலையை நீரில் ஊற வைத்து , அந்த நீரைக் குடிப்பது , மலச்சிக்கலை குறைக்கும் . இனிப்போடு சேர்த்து பீடாவாக போடும்போது , மன அமைதி கிட்டும் .ஒரு வெற்றிலை , ஒரு கல் உப்பு சேர்த்து மென்று முழுங்கினால் , வயிற்று உப்புசம் உடனடியாய் தீரும் .காரம் - வெற்றிலை , - துவர்ப்பு - பாக்கு , கால்சியம் - சுண்ணாம்பு . இந்த மூன்று சுவைகளும் சேரும் போது , பல் உறுதியிலிருந்து , மூக்கு ,வயிறு , தலை என .முழு உடல் சம்பந்தப்பட்ட பல சங்கடங்களுக்கு தீர்வாய் அமைகிறது . ஒரு சின்ன வெற்றிலையில் நீர்சத்து , புரோட்டீன் , கொழுப்பு , மினரல் , நார்சத்து , கால்சியம் , கார்போஹைட்ரேட் , வைட்டமின்கள் , பொட்டாசியம் என , இன்னும் நிறைய இருக்கிறது .வெற்றிலை கஷாயம் : வெற்றிலையை நன்றாக க
 சியா விதைகள் தரும் 10 நன்மைகள்
  •  ·  sivam
  •  · 
சியா விதைகள் சுவைக்காக இல்லாமல் ஆரோக்கியம் கருதியே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சியா விதை உடல் குளுர்ச்சிக்கு மட்டுமன்றி பல நன்மைகளை தருகிறது.உடல் குளுமைக்கு சியா விதைகள் உதவுவதால் குடிக்கும் நீரில் கூட ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கின்றனர். அதேபோல் பழச்சாறு மற்றும் ஃபலூடா போன்ற ஜூஸ் வகைகளிலும் சியா விதை சேர்க்கப்படுகிறது. இது சுவைக்காக இல்லாமல் ஆரோக்கியம் கருதியே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சியா விதை உடல் குளுர்ச்சிக்கு மட்டுமன்றி பல நன்மைகளை தருகிறது. அவை என்னென்ன பார்க்கலாம்.நார்ச்சத்து நிரம்பியது :சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. ந
நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்தது.....
  •  ·  sivam
  •  · 
“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .அப்படி பரிமாறிய அந்த பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .வாழை இலையில் சாப்பிடும்
இன்றைய ராசி பலன்கள் - 9.2.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும் ஆதரவுகளும் மேம்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலை காணப்படும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு ரிஷபம்கல்வி பணிகளில் ஆலோசனைகள் மூலம் தெளிவுகள் பிறக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வேலையாட்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணை வழியில் ம
இன்றைய நாள் எப்படி? 9.2.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் தை மாதம் 26 ஆம் தேதி திங்கட்கிழமை 9.2.2026.இன்று காலை 07.05 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.இன்று காலை 07.07 வரை சுவாதி. பின்னர் விசாகம்.இன்று அதிகாலை 02.14 வரை கண்டம். பின்னர் விருத்தி.இன்று காலை 07.05 வரை பவம். பின்னர் இரவு 07.55 வரை பாலவம். பின்பு கௌலவம்.இன்று அதிகாலை 04.53 வரை சித்த யோகம். பின்னர் காலை 07.07 வரை அமிர்த யோகம். பிறகு மரண யோகம். நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
பனங்கற்கண்டில் உள்ள மருத்துவ குணங்கள்
  •  ·  sivam
  •  · 
பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும
முருங்கை கீரை பயன்கள்
  •  ·  sivam
  •  · 
முருங்கை கீரை கால்சியம் , இரும்பு , வைட்டமின் ஏ , சி சத்துக்கள் நிறைய உள்ளன . அரைக்கிலோ வெண்ணெய் மற்றும் 80 கோப்பை பாலில் உள்ள வைட்டமின் ஏ சத்து ஆகியவற்றை , ஒரு கோப்பை முருங்கை இலை சூப் மூலம் நாம் பெறலாம் . கொதிக்கும் நீரில் கீரையை முருங்கை போட்டு , ஐந்து நிமிடத்திற்கு பிறகு , உப்பு , மிளகு . தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து , பாத்திரத்தை மூடி வைக்க பின்னர் வேண்டும் . வடிகட்டி கிடைத்த சூப்பை , தினமும் காலையில் பருகி வந்தால் , அனீமியா , ஜலதோஷம் , ஆஸ்துமா குறைவதை காணலாம் .சத்தில்லாத குழந்தைகள் , முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி . மேலும் , ஆண்மை விருத்திக்கு முருங்கை சூப் உதவும் .சத்தில்லாத குழந்தைகள் , முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆர