Latest Posts
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.மிதுனம்: இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அக்கம்பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவ
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மாசி மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 27.2.2026இன்று அதிகாலை 12.54 வரை தசமி. பின்னர் இரவு 10.50 வரை ஏகாதசி. பின்பு துவாதசி.இன்று காலை 11.05 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.இன்று இரவு 07.59 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.இன்று அதிகாலை 12.54 வரை கரசை. பின்னர் காலை 11.22 வரை வணிசை. பின்பு இரவு 10.50 வரை பத்தரை. பிறகு பவம்.இன்று காலை 06.28 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரைபகல் : 12.30.30 முதல் 01.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிம்மதி கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். போட்டிகளை தகர்த்தெறிந்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.மிதுனம்: குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் விவாதங்கள் வேண்டாம். வீடு, வாகனத்தை மாற்றும் முயற்சியில் இறங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபார போட்டிகளை சமாளித்த
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மாசி மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை 26.2.2026இன்று அதிகாலை 03.06 வரை நவமி. பின்னர் தசமி.இன்று பிற்பகல் 12.34 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.இன்று அதிகாலை 01.53 வரை விஸ்கம்பம். பின்னர் இரவு 10.52 வரை ப்ரீதி. பிறகு ஆயுஷ்மான்.இன்று அதிகாலை 03.06 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.00 வரை தைத்தூலம். பிறகு கரசை.இன்று காலை 06.28 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 11.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. என தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்க
- · sivam
- ·
சோமு' என்பவர் ஒரு மாட்டு வண்டி ஓட்டுபவர். அவர் மிகவும் நேர்மையானவர். ஒரு நாள் இரவு, பக்கத்து ஊர் சந்தைக்குப் பொருட்களை ஏற்றிக்கொண்டு தன் வண்டியில் சென்று கொண்டிருந்தார். அன்று மழை பெய்து ஓய்ந்திருந்ததால் சாலை மிகவும் வழுக்கலாக இருந்தது.திடீரென்று, ஒரு வளைவில் செல்லும்போது வண்டியின் அச்சு முறிந்துவிட்டது. வண்டி அங்கேயே நின்றது. சோமுவிற்கு மிகவும் கோபம் வந்தது. "ஈசா! உனக்குக் கண்ணே இல்லையா? இந்த நேரத்தில் பார்த்து இப்படி வண்டி உடைய வேண்டுமா? இப்போது நான் எப்படி சந்தைக்குப் போவேன்? என் பிழைப்பு என்னாகும்?" என்று புலம்பினார்.வண்டியைச் சரி செய்ய வழியில்லாததால், வேறு வழியின்றி சாலையோரம் அமர்ந்துவிட்டார். தான் செய்த ஏதோ ஒரு பிழைதான் வண்டி உடையக் காரணம் என்று அவர் வருந்தினார்.அறியாமல் செய்த செயலின்
- · sivam
- ·
நான் Uber ஓட்டுகிறேன். பெரும்பாலும் இரவு டியூட்டி. கடந்த வாரம் இரவு 11 மணிக்கு ஒரு முதியவர் அழைப்பை ஏற்றேன். அவர் காரில் ஏறி,“இன்றிரவு என்னை ஐந்து இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நான் உங்களுக்கு $500 தருகிறேன். காசாக. ஆனால் முடியும் வரை ஏன் என்று கேட்கக்கூடாது,” என்றார்.ஐந்து முகவரிகள் கொடுத்தார்.முதல் இடம்: புறநகர் பகுதியில் ஒரு வீடு.அவர் காரிலேயே இருந்தார். அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டே பத்து நிமிடம். அமைதியாக அழுதார்.“சரி. அடுத்தது.” நான் ஓட்டினேன்.இரண்டாம் இடம்: ஒரு ஆரம்பப் பள்ளி.வெறிச்சோடியது. இருள். அவர் இறங்கி விளையாட்டு மைதானத்துக்கு சென்றார். ஒரு ஊஞ்சலில் அமர்ந்தார். இருபது நிமிடம் இருந்தார். திரும்பி வந்தார்.“நான் இங்கே 43 ஆண்டுகள் கற்பித்தேன். என் வாழ்க்கையின் சிறந்த வேலை.”
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டுநட்பை புதுப்பிப்பீர். பூர்வீக சொத்து வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டைபெறுவீர். பொறுப்பு கூடும்.ரிஷபம்: திட்டமிட்ட பணியை போராடி முடிப்பீர்கள். மனைவிவழியில் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் மனக்கசப்பு ஏற்படும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.மிதுனம்: நீண்டநாளாக அடைக்கமுடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் பணிச் சு
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மாசி மாதம் 13 ஆம் தேதி புதன்கிழமை 25.2.2026இன்று அதிகாலை 04.10 வரை அஷ்டமி. பின்னர் நவமி.இன்று பிற்பகல் 02.08 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.இன்று அதிகாலை 03.23 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.இன்று அதிகாலை 04.10 வரை பவம். பின்னர் மாலை 03.38 வரை பாலவம். பிறகு கௌலவம்.இன்று காலை 06.39 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரைகாலை : 10.30.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.உதாரணம் 1: மனநிலை சரியில்லாதவர்களுக்கு வயதாவதில்லை. அவர்கள் தோற்றத்தில் பெரிதாக எந்த மாறுபாடும் இருக்காது என்ற உண்மை தெரியுமா? (இப்ப சொல்லுங்க, யார் மன நோயாளி என்று?)2. சீனாவில் பெரும்பாலோனார் 100 வயத
- · sivam
- ·
ஒரு வெற்றிகரமான மளிகை கடைக்காரர் இருந்தார் அவர் கடையில் எப்போதும் அமோக விற்பனை தான்.சுமுகமாக வாழ்க்கை போய்கொண்டு இருந்தது .திடீரென அவர் கடைக்கு முன்னால் ஒரு பெரிய கட்டிடம் உருவாகத் தொடங்கியது .அங்கே ஒரு சூப்பர் மார்க்கெட் வரப்போவதாக தெரிவித்தார்கள். அது வந்தால் அவருடைய வியாபாரம் முற்றிலும் தடுத்துவிடும் .அவர் மிகவும் விரக்தி அடைந்தார் .தன்னுடைய குருவிடம் சென்று மளிகை வியாபாரத்தைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது நான் இனி என்ன செய்வது என்றார்.குரு அவரிடம் அந்த பல்பொருள் அங்காடியை நீ வெறுத்தால் அது உன் துன்பத்தில் முடியும் என்று குறிப்பிட்டார்.அப்போது நான் என்ன செய்ய வேண்டும் .தினமும் காலையில் கடைக்குள் நுழையும்போது உன் கடை வியாபாரம் செம்மையாக நடக்க வேண்டும் என்று வேண்டிகொள் எதிரே இருக்கும
- · sivam
- ·
ஒரு ஊரில் ஒரு குடியானவன். அவனுக்கு இரண்டு புதல்விகள்; ஒருவருக்கு உள்ளூரிலேயே திருமணம் முடிந்தது. மற்றொரு மகள், அயலூரிலுள்ள ஒரு சோழியனுக்கு வாக்குப்பாட்டாள். காலம் உருண்டோடியது. கிழக் குடியானவன் இறந்தான்; மூத்த மகளின் கணவனும் இறந்தான். அவளது தங்கையோ அடுத்த ஊரில் கணவனுடன் சுகமாக வாழ்ந்து வந்தாள் மூத்த மகளுக்கு சந்ததியும் இல்லை. ஆகையால் வயிற்றுப் பிழைப்புக்காக நிலத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தாள்.தினமும் இரண்டு படி அரிசி சமைத்து உண்பாள்; அப்படியும் பசி தீராது. யாரிடமும் சொல்லவும் வெட்கம் ஆகையால் காரணத்தை அறியவில்லை. ஒரு நாள் அயலூரிலுள்ள அவளுடைய தங்கை, தன்னுடைய அக்காளைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்தாள். அக்காளும் வயல் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு மாலையில் பொழுது சாயும் முன் வீட்டிற்கு வந்தா