Posts
Latest Posts
  •  ·  sivam
  •  · 
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்க
இன்றைய ராசி பலன்கள் - 15.3.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மறைமுக திறமைகள் வெளிப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். பயணங்களில் புதிய அறிமுகங்கள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். தடைகள் மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்ரிஷபம்கல்வி சம்பந்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூல பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் மாற்றமும் புத்துணர்ச்சியும் உருவாகும். நீண்ட கால கட
இன்றைய நாள் எப்படி? 15.3.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.3.2026இன்று காலை 08.23 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.இன்று அதிகாலை 03.59 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்இன்று காலை 09.36 வரை பரிகம். பின்னர் சிவம்.இன்று காலை 08.23 வரை பாலவம். பின்னர் இரவு 08.39 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.இன்று காலை 6.21 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 06.00 முதல் 07.00 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை: 03.30 முதல் 04.30 மணிவரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
பச்சை  கற்பூரத்தின் மருத்துவ குணங்கள்
  •  ·  sivam
  •  · 
பச்சை கற்பூரம் மற்றும் லவங்க பட்டை ஒரே அறிவியல் குடும்பத்தை சார்ந்தது. இதனை ஆங்கிலத்தில் Cinnamon Camphor என்று கூறுவார்கள். நம் முன்னோர்கள் இந்த கற்பூரத்தை உணவில், ஆன்மிகத்தில், அழகு குறிப்புகளில் மற்றும் மருத்துவத்திலும் பயன்படுத்தி உள்ளனர். சரி வாங்க இந்த பச்சை கற்பூரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்….பச்சை கற்பூரத்தை உணவில் பயன்படுத்துவதால் சாப்பாடு சீக்கிரம் கெடுவதற்கு காரணமான Fungus ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. இப்பொழுது நாம் உணவு கெடாமல் இருப்பதற்காக Refrigerator பயன்படுத்துகிறோம். ஆனால் முன்பு இந்த கற்பூரத்தை பயன்படுத்தி உள்ளனர்.உணவில் இருக்கும் நோய் தொற்று ஏற்படாமலும் மற்றும் சாப்பாட்டில் சுவையை அதிகரிக்கவும், கிருமிகள் எதுவும் அண்டாமல் இருப்பதற்கும் இந்த பச்சை கற்பூரம் பயன்பட்டு வரு
பீமனுக்கு பாடம் சொல்லிய குபேரன்
  •  ·  sivam
  •  · 
மகா பாரத போர் நடந்து கொண்டிருந்தநேரமது….பாண்டவர்களிடம்செல்வங்கள் குறைந்து கொண்டே வந்தன.. ஒருபோர் என்றாலே பொருட் செலவுகள் அதிகம் ஆகுமே…. என்ன செய்வது என்று தர்மன்கையைபிசைந்துகொண்டிருந்த நேரம்பார்த்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அங்கு வந்தார்…என்ன தர்மரே….என்ன ஆலோசனை…என்று சிரித்து கொண்டே கூறவே, அதற்கு தர்மரோ,…..செல்வங்கள் குறைந்து விட்டது கிருஷ்ணா…..…. இன்னும் போர் எத்தனை நாள் நீடிக்குமோ தெரியவில்லை நீதான்ஏதாவது யோசனை கூற வேண்டும்…. என்றார்…தர்மரே….!…கவலை பட வேண்டாம்…. குபேரனிடம்….கடன் கேட்டு இருக்கிறேன்…. பீமசேனனைஅனுப்பி வாங்கி வர சொல் என்றார்…தருமனும் பீமனை அனுப்பி வாங்கி வர சொன்னார்…பீமனும்குபேரன் மாளிகையை தேடி புறப்பட்டான்…வாயில் காப்போனிடம் குபேரனை காண வேண்டும் என கூற…அவனும் வழிவிட, வீர நடை போ
இன்றைய ராசி பலன்கள் - 14.3.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் பிறக்கும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் வேண்டும். அரசு பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்விப் பணிகளில் ஆர்வம் இன்மை குறையும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்ரிஷபம்கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கும். சுப காரியம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும்.
இன்றைய நாள் எப்படி? 14.3.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மாசி மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை 14.3.2026.இன்று காலை 07.22 வரை தசமி. பின்னர் ஏகாதசி.இன்று அதிகாலை 02.17 வரை பூராடம். பின்னர் உத்திராடம் இன்று காலை 09.55 வரை வரீயான். பின்னர் பரிகம். இன்று காலை 07.22 வரை பத்திரை. பின்னர் இரவு 07.52 வரை பவம். பின்பு பாலவம்.இன்று முழுவதும் சித்தயோகம். நல்ல நேரம்:காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை பகல் : 12.45 முதல் 01.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
பயனுள்ள அழகு குறிப்புகள் உங்களுக்காக
  •  ·  sivam
  •  · 
1. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.2. முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.3. தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.4. பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.5. துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.6. வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.7. உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.8. நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெயை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்9. பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.10. முட்டையின் வெள்ள
மஞ்சள் டீ
  •  ·  sivam
  •  · 
காலையில் எழுந்ததும் முதல் முதலில் நம் வயிற்றுக்கு செல்லும் இந்த டீ ஆனது நல்ல ஆரோக்கியமான ஒன்றாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்குத்தான் இந்த மஞ்சள் டீ. இதை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலுக்கு அத்தனை நன்மைகளும் ஆரோக்கியமும் கிடைக்கும். பொதுவாகவே மஞ்சள் ஒரு கிருமி நாசினி. உடலுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். அது மட்டும் இல்லாமல் இதில் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் ஈ, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, சிங்க் போன்று அத்தனை சத்துக்கள் அடங்கியுள்ளது.இது மட்டுமில்லாமல் கேன்சரை உருவாக்கும் செல்களின் அளவை கூட இந்த மஞ்சள் குறைத்து விடும். இன்று வரைக்கும் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண
தேவையில்லாமல் பிறர் வீட்டில் சாப்பிட்டால் சல்லியன் கதிதான் நமக்கும்
  •  ·  sivam
  •  · 
பழமையான இந்திய இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். இந்த மகாகாவியம் மனித வாழ்க்கையின் பல நுணுக்கமான உண்மைகளை கதைகளின் மூலம் எடுத்துரைக்கிறது. அத்தகைய ஒரு ஆழமான வாழ்க்கைப் பாடத்தை உணர்த்தும் சம்பவம் சல்லியன் சம்பந்தப்பட்டதாகும்.“அவசியமில்லாமல் பிறர் வீட்டில் சாப்பிடக்கூடாது” என்ற பழமொழி போன்ற வாழ்க்கை நெறி எவ்வாறு உருவானது என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.சல்லியன் யார்?மகாபாரதத்தில் வரும் வீரர்களில் ஒருவர் சல்லியன். இவர் மாத்ரா நாட்டின் மன்னன்.அவருக்கு நகுலன் மற்றும் சகாதேவன் இருவரும் மருமகன்கள். ஏனெனில் பாண்டவர்களின் தந்தையான பாண்டு மன்னனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்:குந்திமாத்ரிகுந்திக்கு பிறந்தவர்கள்:தர்மர்பீமன்அர்ஜுனன்மாத்ரிக்கு பிறந்தவர்கள்:நகுலன்சகாதேவன்மாத்ரியின் சகோதரனாக இருந்ததால் சல்லியன
இன்றைய ராசி பலன்கள் - 13.3.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். உங்கள் மீதானே நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். இறை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். திடம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு ரிஷபம்உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையை கடைபிடிக்கவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் அத
இன்றைய நாள் எப்படி? 13.3.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மாசி மாதம் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 13.3.2026.இன்று அதிகாலை 05.56 வரை நவமி. பின்னர் தசமி.இன்று அதிகாலை 12.12 வரை மூலம். பின்னர் பூராடம்.இன்று காலை 09.54 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.இன்று அதிகாலை 05.56 வரை கரசை. பின்னர் மாலை 06.39 வரை வணிசை. பின்பு பத்திரை.இன்று முழுவதும் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 09.00 முதல் 10.00 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை