Posts
Popular Hashtags
Latest Posts
கடைசி_சவாரி
  •  ·  sivam
  •  · 
என் பேரு பாண்டி. வயசு 52. மதுரை. தொழில் ஆட்டோ டிரைவர். 30 வருஷமா இதே மீனாட்சி அம்மன் கோயில் வாசல் தான் ஸ்டாண்ட்.வாழ்க்கைல ஒரே ஒரு விதி வச்சிருந்தேன். ராத்திரி 10 மணிக்கு மேல ஆட்டோ எடுக்க மாட்டேன். குடும்பம். பொண்டாட்டி காமாட்சி. ஒரே பொண்ணு தேவி. +2 படிக்கிறா. அவளுக்கு சோறு ஊட்டி, கதை சொல்லி தூங்க வைக்கணும். அதான் சத்தியம்.2024 டிசம்பர் 31. நைட் 11:45. கடைய சாத்திட்டு கிளம்புறேன். மழை."அண்ணா. ஆட்டோ."திரும்பினா ஒரு கிழவி. 80 வயசு இருக்கும். கையில ஒரு மஞ்ச பை. நடுங்கிட்டே நிக்கிறா. சேலை முழுக்க ஈரம்."இல்லமா. நேரமாச்சு. வீட்டுக்கு போறேன்."கிழவி கையெடுத்து கும்பிட்டா. "ராசா. கோரிப்பாளையம். என் மகன் வீடு. போன் பண்ணினான். 'அம்மா உடனே வா. மருமகளுக்கு பிரசவ வலி'னு. 3 மணி நேரமா ஆட்டோ கிடைக்கல. பஸ் இல்
பேனா
  •  ·  sivam
  •  · 
மதுரை. மீனாட்சி கோவில் வாசல்.பெரியசாமி. வயசு 60. காலைல 6 மணிக்கு கோவில் வாசல்ல உட்கார்ந்துடுவாரு. முன்னாடி ஒரு துணி விரிப்பு. அதுல பேனா, பென்சில், அழிப்பான், காம்பஸ். பிளாட்பாரம் கடை. ஆனா வியாபாரம் இல்ல.பெரியசாமிக்கு ஒரு விதி. யார் பேனா கேட்டாலும் முதல்ல ஒரு கேள்வி கேப்பாரு. "தம்பி. பரீட்சையா.""ஆமா தாத்தா. இன்னைக்கு கணக்கு பரீட்சை. பேனா மறந்துட்டேன்."உடனே பெரியசாமி நல்ல பேனாவா எடுத்து கொடுப்பாரு. "இந்தா. இது ராசியான பேனா. நூறு மார்க் வாங்கிட்டு வா.""காசு எவ்ளோ தாத்தா.""காசு அப்புறம். முதல்ல பரீட்சை எழுது. மார்க் வந்து சொல்லு. அப்புறம் காசு தா."பிள்ளைங்க சிரிச்சுட்டே ஓடிடும். திரும்பி வராது. பெரியசாமி கேக்கவும் மாட்டாரு.மனைவி தங்கம் திட்டுவா. "யோவ். பைத்தியமா உனக்கு. பேனா ஒன்னு பத்து ரூபா. இப
TV பார்க்கட்டுமா?
  •  ·  sivam
  •  · 
பேரன்: பாட்டி தூக்கம் வரல..TV பாக்கட்டுமா?பாட்டி: எங்கிட்ட பேசிட்டிருடா பேராண்டி..பேரன்: பாட்டி.. நம்ம வீட்ல எப்போதுமே 6 பேர் தான் இருப்போமா..?நீங்க,அம்மா,அப்பா,அக்கா,நான்என் பூனைக்குட்டிபாட்டி: அப்டி இல்லியே..உனக்காக நாளைக்கி ஒரு நாய்குட்டி வருது..அப்போ 7 ஆகிடுவோம்..பேரன்: ஆனா, நாய்குட்டி என் பூனைக்குட்டிய கடிச்சி கொன்னுடுமே...மறுபடியும்6 பேர் ஆகிடுவோம்.பாட்டி: இல்லப்பா..உனக்கு கல்யாணம் ஆகும்ல..அப்ப7 பேர் ஆகிடுவோம்.பேரன்: அப்படினா அக்காவுக்கும் கல்யாணமாகி போயிடுமே..அப்ப 6 பேர் தான இருப்போம்.பாட்டி: ஓஹ்..செல்ல ராசா...உனக்கு பிள்ளை பிறக்குமே..அப்ப 7 பேர் ஆகிடுவோம்ல.பேரன்: ஆனா, அதுக்கு முன்னாடி நீங்க செத்து போயிடுவீங்களே..மறுபடியும் 6 பேர் தான் இருப்போமா..?பாட்டி: அடி செருப்பால ..டிவி பார்க்க
இன்றைய ராசி பலன்கள் - 27.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். மனதில் புது விதமான எண்ணங்களும் ஆசைகளும் உருவாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழல்கள் ஏற்படும். பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். வாழ்க்கை துணைவர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.ரிஷபம்உயர் அதிகாரிகள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பணியாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்மிதுனம்வியாபாரத்தில் இருந்
இன்றைய நாள் எப்படி? 27.4.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.4.2026இன்று இரவு 08.53 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.இன்று இரவு 11.33 வரை பூரம். பின்னர் உத்திரம்.இன்று அதிகாலை 01.10 வரை விருத்தி . பின்னர் இரவு 11.38 வரை துருவம். பிறகு வியாகாதம்.இன்று காலை 09.13 வரை வணிசை. பின்னர் இரவு 08.53 வரை பத்திரை. பிறகு பவம் .இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 06.00 முதல் 07.00 மணி வரைகாலை : 09.30 முதல் 10.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி
  •  ·  sivam
  •  · 
இவரது பெயர் டெஸ்ஸி தாமஸ்.இவர் 1963-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆலப்புழாவில் பிறந்தார். அவரது தந்தை ஒரு சிறு தொழிலதிபர். இவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, ​​பக்கவாதத்தால் அவரது தந்தை படுக்கையில் வீழ்ந்தார். அந்தச் சூழலிலும் தனது குடும்பம் ஒற்றுமையாக இருந்ததை அவர் பார்த்தார்.தும்பா பூமத்திய ரேகை ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகில் வளர்ந்ததால், அவர் ஏவுகணைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விரும்பினார், அதற்காக யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாரானார். அவரது டி.ஆர்.டி.ஓ நேர்காணல் முதலில் வெற்றிகரமாக முடிந்தது.அவர் 1988-ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) விஞ்ஞானி 'பி' ஆக சேர்ந்தார். அக்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சியில் இருந்த மிகச் சில பெண
சுயநலத்திற்கு கிடைத்த சாட்டையடி
  •  ·  sivam
  •  · 
சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர்.சுந்தரி மாமிக்கு வயது 51.அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான்.லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான்.சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன் பரத்வாஜ். குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது தெரிந்து, தான் நன்றாக படித்தால்தான் குடும்பம் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து, எப்போதும் பாடப் புத்தகமும் கையுமாக அலைவான். வகுப்பில் எப்போதும், அவன்தான் முதல் மாணவன்.பிளஸ் 2-வில் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண்ணும், மாவட்ட அளவில் மூன்றாவது இடத்திலும் வந்தான்.இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து விட்டாலும், அந்த நான்கு ஆண்டுகள் படிப்பு முடிவதற்குள், சுந்தரம் குருக்கள் மிகவும் திண்ட
திகில் கதை....
  •  ·  sivam
  •  · 
ஒரு இளம் பெண் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு துணையாக அவளுடன் நாய் ஒன்றை வளர்த்து வந்தாள். அந்த நாய் எப்பொழுதும் அவளுடைய படுக்கைக்கு அடியிலேயே படுத்து கொள்ளும்.அந்த பெண்ணும் அங்கே நாய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய கீழே கையை நீட்டினால், அந்த நாய் அவள் கையை நக்கிவிடும். அதை வைத்து நாய் அங்கு தான் இருக்கிறது என்பதை உறுதி செய்தி கொள்வாள்.ஒரு நாள் இரவு டீ.வியில் ஒரு செய்தி வருகிறது. மிகவும் ஆபத்தான சீரியல் கில்லர் ஒருவன் தப்பித்து விட்டான். அதனால் பொது மக்கள் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என்பது தான். அதை பார்த்ததும் அந்த பெண் உடனேயே போய் கதவு, ஜன்னல் என்று எல்லாவற்றையும் நன்றாக பூட்டி விட்டு வந்து படுக்கிறாள்.இப்போது பழக்க தோஷத்தில் நாய் இருக்கிறதா இல்லையா என்று உறுத
ரூ.1400 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் ஓனர்; இவர் யார் தெரியுமா?
  •  ·  sivam
  •  · 
அப்ப வீடு வீடாக வெண்ணெய் விற்றவர்...இப்ப ரூ.1400 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் ஓனர்; இவர் யார் தெரியுமா?திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகிலுள்ள விருப்பாச்சி என்ற குக்கிராமத்தில் பிறந்த ஜி.ஆர். பாலசுப்பிரமணியம், 1984-ல் பெங்களூருவில் தொடங்கிய 'ஜி ஆர் பி' என்ற ப்ராண்டை இன்று பால் பொருட்கள், ஸ்னாக்ஸ், இனிப்புகள் என பல்வேறு துறைகளில் விரிவுபடுத்தி, உலகளாவிய அளவில் ரூ.1,400 கோடி வருவாய் கொண்ட நிறுவனமாக உயர்த்தியுள்ளார்.கல்வியை 8ஆம் வகுப்பில் நிறுத்தி, 13 வயதில் பெங்களூரு சென்ற இவர், தனது அக்கா குடும்பத்துடன் இணைந்து வெண்ணெய் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டதிலிருந்து தொழில் பயணத்தைத் தொடங்கினார்.பின்னர், 28 வயதில் வெறும் ரூ.6,000 முதலீட்டுடன் தனியாக தொழில் தொடங்கி, ஆரம்ப சவால்களை எதிர்கொண்டார். வெண்ணெய
இன்றைய ராசி பலன்கள் - 25.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பொழுது போக்கு செயல்களால் தாமதம் உண்டாகும். பணி நிமித்தமான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். இலக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்ரிஷபம்பயணங்களால் அனுபவம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்குகள் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். பராபரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் க
இன்றைய நாள் எப்படி? 26.4.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 26.4.2026இன்று இரவு 09.33 வரை தசமி. பின்னர் ஏகாதசி.இன்று இரவு 11.27 வரை மகம். பின்னர் பூரம்.இன்று அதிகாலை 03.03 வரை கண்டம் . பின்னர் விருத்தி.இன்று காலை 10.06 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.33 வரை கரசை. பிறகு வணிசை.இன்று அதிகாலை 05.58 வரை அமர்ந்த யோகம். பின்னர் இரவு 11.27 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை: 03.30 முதல் 04.30 மணிவரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
சிட்டுக் குருவிக்கும் அருள்புரிந்த கிருஷ்ணர்
  •  ·  sivam
  •  · 
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்.குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர்.ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது.தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர்.சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது.“கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது.“நீ சொல்லுவது எனக