Posts
Latest Posts
வியப்பூட்டும் செய்திகள்
  •  ·  sivam
  •  · 
கேரளாவின் புராதான சின்னம் பற்றிய கண்ணோட்டம்கேரளாவின்அதிகாரபூர்வமான புராதான சின்னம் திருவிதாங்கூர் அரச சின்னத்தின் அடிப்படையில் உள்ள இருபுறமும் யானைகள் காத்து நிற்கும் ஸ்ரீ பத்மநாபசுவாமியின் சங்கு ஆகும்இந்தச் சின்னத்தின் மேல் பகுதியில் இந்தியா தேசிய சின்னமான அசோக சக்கரத்தின் சிங்கம் இடம் பெற்றுள்ளதுஇது திருவிதாங்கூர் மற்றும் கொச்சி அரசுகளின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறதுஇந்த சின்னம் கேரளாவின் கலாச்சாரம் இயற்கை மற்றும் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்றன
இன்றைய ராசி பலன்கள் - 18.2.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவார்கள். நண்பர்களின் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பணவரவு உண்டு. பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். அலைச்சல் குறையும்.மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபார விஷயமாக இருந்த டென்ஷன் விலகு
குங்குமப்பூ
  •  ·  sivam
  •  · 
குங்குமப்பூவை சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து, அந்த கலவையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.மஞ்சள் ஒரு சிறந்த அழகுப் பொருள். இது முகத்தை அழகாக வைக்க உதவுவதோடு, சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும். எனவே அத்தகைய மஞ்சளுடன் குங்குமப்பூவை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்திற்கு தடவி 10 நிமிடம் ஊறவைத்து, வெதுவெதுப்பான கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவாகும்.குங்குமப்பூவை உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உணவு சுவையுடன், இருப்பதோடு சருமத்திற்கு நல்ல பலனும் கிடைக்கும்.குங்குமப்பூவில் உள்ள நன்மை கிடைக்க வேண்டுமெனில், அதற்கு ஈரப்பசையானது தேவை. எனவே தினமும் குளிக்கும் போது, வெதுவெதுப்பான நீரி
இன்றைய நாள் எப்படி? 18.2.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மாசி மாதம் 6 ஆம் தேதி புதன்கிழமை 18.2.2026. இன்று மாலை 06.06 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று இரவு 10.23 வரை சதயம். பின்னர் பூரட்டாதி. இன்று அதிகாலை 01.39 வரை பரிகம். பின்னர் இரவு 11.53 வரை சிவம். பிறகு சித்தம். இன்று காலை 06.18 வரை கிமிஸ்துக்கினம். பின்னர் மாலை 06.06 வரை பவம். பிறகு பாலவம் . இன்று காலை 06.32 வரை மரண யோகம். பின்னர் இரவு 11.53 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம். நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரை காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில்
  •  ·  sivam
  •  · 
தெய்வத் திருவிளையாடல்கள் எல்லா காலமும் நிகழத்தான் செய்திருக்கின்றன. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் வீற்றிருக்கும் கைக்கொண்ட ஐயனார், ஆங்கிலேய ஆட்சியின்போது, அதிகாரி ஒருவருடன் உரையாற்றியுள்ளார். அத்தகைய சிறப்புபெற்ற இந்த ஐய்யனார் சாந்த ரூபத்தில் சாஸ்தாவாகவும், ஆங்கார ரூபத்தில் ஐயனராகவும் இருந்து வேண்டியவர்க்கு வேண்டும் வரமளித்து வருகிறார். கைக்கொண்ட ஐயனார் கோயிலின் இடது பக்கம் ஒரு பெரிய குளம் உள்ளது. முற்காலத்தில் அந்தக் குளத்தில் தண்ணீர் முழுவதும் நிரம்பியிருக்கும். அந்த பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களின் ஆகாரத்திற்கான பாசனத்திற்கு இந்த குளத்து நீரே ஆதாரம்.அந்தளவுக்கு கொள்ளளவு கொண்டு, ஒரு சிறிய ஏரி போல் காட்சி தரும் அந்தக் குளத்தின் நடுவே இருந்த
பொன்மணித் தட்டார்
  •  ·  sivam
  •  · 
அரசன் ராஜராஜனால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில்,"உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்" என்ற இறைவனின் அசரீரியாக உணர்ந்திட்ட மன்னன் மந்திரியை அழைத்து அதற்கு விளக்கம் கேட்க,"உன் மறைவில் என்பது உங்களால் கட்டப்பட்ட கோயில்" என்பதாகும்.இடைச்சியின் நிழல் என்பது "இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கல்" கோபுரத்தின் மேல் இருப்பதாகும்.பொன்மணித்தட்டாரின் இதயத்தில் என்பது பொருள் விளங்கவில்லை மன்னா" என்று கூறினார்.இந்த ஊரில் பொன்மணித் தட்டார் என்பவர் இருந்தால் அழைத்து வருமாறு அரண்மனை ஆட்களை ராசராசன் அனுப்பிவைக்க, அவர்களும் கடைவீதியில் பொன் வியாபாரியிடம் விசாரித்து பொன்மணித்தட்
மன்னிக்கும் குணம்
  •  ·  sivam
  •  · 
ஆபிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன.தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார்.ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது.இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்.” என்று கட்டளையிட்டார்.வேலைக்காரன் கெஞ்சினான், நான் உங்களுக்கு பத்து வருடங்களாக சேவை செய்தேன்,நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா? தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் ஒன்று தாருங்கள்! ”ராஜா ஒப்புக்கொண்டார்.அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவத
சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் நடக்கும் மாற்றங்கள்
  •  ·  sivam
  •  · 
ஜலதோஷம், நெஞ்சு படபடப்பு ஆகியவற்றுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால், ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும் உடல் சமநிலைக்கு வந்துடும்.இதய நோயாளிகளுக்கு இப்படியான பிரச்சினைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இதை செய்யலாம். பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை
கோனேரிராஜபுரம் நடராஜப் பெருமான்
  •  ·  sivam
  •  · 
புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான்.
அந்த காலத்தில் .....
  •  ·  sivam
  •  · 
அடி மேல் அடி தான்.அந்த காலத்தில் நாங்க எதுக்கெல்லாம் அடி வாங்கி இருக்கோம்னு இப்போது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆக்கிடுச்சு என்பதுதான் இங்கே மேட்டரே...1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா மறுபடியும் அடி..2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால் மறுபடியும் அடி..3. அடி வாங்காமலேயே அழுதாலும் விழும் அடி..4. பெரியவங்க உட்கார்ந்திருக்கும் இடத்தில் நின்னுட்டு இருந்தா அடி..5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உட்கார்ந்திட்டே இருந்தா அடி.6. பெரியவங்க உட்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தால் அடி.7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டால் அடி..8. தட்டில் சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அட
தருமன் வழங்கிய நேர்மையான தீர்ப்பு
  •  ·  sivam
  •  · 
ஒரு காட்டில் ஓர் அதிசய விலங்கு வாழ்ந்து வந்தது. அதன் பாதிப்பகுதி விலங்கு வடிவம். மறுபாதி மனித வடிவம். ஆதலால், அது புருட மிருகம் என அழைக்கப்பட்டது.அளவில்லாத வலிமை படைத்த மிருகம் அது. அதனால் அக்காட்டையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.வேற்றாளோ அல்லது வேற்று மிருகமோ அக்காட்டில் புகுந்தால், உடனே அவைகளை தனக்கு இரையாக்கி விடும்.ஒரு நாள் வீமசேனன், எப்படியோ அக்காட்டின் வழியாக செல்ல நேர்ந்தது. அவனைக் கண்ட புருட மிருகம், இன்று நமக்கு நல்ல விருந்து கிடைத்தது என்று மகிழ்ந்தது. வீமனைப் பிடிக்க விரைந்தது. புருட மிருகத்தைக் கண்ட வீமன், தன் நாட்டை நோக்கி ஒடலானான்.அவனைத் துரத்திய புருடமிருகம், ஒரு கட்டத்தில் அவனைப் பிடித்து விட்டது. ஆனால், அது பிடித்த போது, அவனுடைய வலது கால் தன் நாட்டிலும் இடது கால் அக்காட
கணவன் மேல் வைத்த நம்பிக்கை
  •  ·  sivam
  •  · 
அனுபவமற்ற ஒருவர் பல வேலைகளுக்கு சென்றார் ஆனால் அந்த வேலைகளில் நீண்ட காலம் தங்கியதில்லை. ஒவ்வொரு முறையும், அவர் மனச்சோர்வடைந்த மனநிலையுடன் வீடு திரும்புவார்.அவரது மனைவி எப்போதும் அவரை ஆறுதல்படுத்துவார், ஒவ்வொறு முறையும், அவள் ஏமாற்றமடையவில்லை அல்லது கோபமடையவில்லை.அவர் தனது முப்பது வயதை எட்டியபோது அவர் மொழிகளில் ஒரு திறமை பெற்றார். அவர் காது கேளாதோர் மற்றும் ஊமையருக்கான பள்ளியில் ஆலோசகராக ஆனார். பின்னர், அவர் ஊனமுற்றோருக்கான பள்ளியைத் திறந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஊனமுற்றோருக்கான கருவிகள் மற்றும் உபகரணங்களை விற்கும் பல்வேறு நகரங்கள் மற்றும் மாகாணங்களில் அவர் செயின் ஸ்டோர்களை நிறுவினார். அவர் பல கோடீஸ்வரர் ஆனார். அவர் ஜான் டோ!ஒரு நாள் அவன் மனைவியிடம் கேட்டான். 'நான் என் எதிர்காலத்தை இருட