Posts
Popular Hashtags
Latest Posts
படித்தில் பிடித்தது...
  •  ·  sivam
  •  · 
தவறாக எழுதியது ‘பேனாவாக'இருந்தாலும் எல்லோரும்காகிதத்தைக்கிழித்துப் போடுவதைப் போல.தவறு செய்தவவரை விட்டுவிட்டுஇன்னொருத்தரிடம்,குற்றம் கண்டுபிடிப்பதே இங்கு பலரின்வேலை..பெரும்பாலான மனிதர்கள்தன்னலம் மிக்கவர்களாக வலம் வருகிறார்கள்.நேசித்தால் பிழைகளைப் பார்ப்பதில்லை,வெறுத்தால்நல்லதைப் பார்ப்பதில்லை.விருப்பத்திற்கும், நேசத்திற்கும் வேறுபாடு உண்டு.பூக்களை விரும்பும் அன்பர்கள் பறித்துச்சூடுகிறார்கள்,பூக்களை நேசிப்பவர்கள்செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அவர்களுடன் மகிழ்ச்சியாகப் பழகுங்கள்.உங்களை யாருக்குப் பிடிக்கவில்லையோ,அவர்கள் மகிழ்ச்சிக்காகஅவரை விட்டு விலகுங்கள் அமைதியாக.
புரூஸ் லீ
  •  ·  sivam
  •  · 
புரூஸ் லீ வெறும் தற்காப்புக் கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த தத்துவவாதியும் கூட. அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான பாடங்கள் இதோ:"நீராக இரு" (Be Water, My Friend):தண்ணீர் ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுக்கும். அது மென்மையாகவும் இருக்கும், அதே சமயம் பாறையை உடைக்கும் வலிமையும் கொண்டது. வாழ்க்கையில் பிடிவாதமாக இருக்காமல், சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு (Adaptability) முன்னேற வேண்டும் என்பதே இதன் பொருள்.தேவையற்றதை நீக்கு (Eliminate the Unessential):"தினமும் எதையாவது சேர்ப்பது அறிவல்ல, தினமும் தேவையற்றதை குறைப்பதே அறிவு" என்பார் லீ. ஒரு கலையிலோ அல்லது வேலையிலோ சிறந்து விளங்க, மிக முக்கியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்தி, மற்ற கவனச்சிதறல்களை
எது வேண்டும்?
  •  ·  sivam
  •  · 
தந்தையும் ஆறுவயது மகனும் மலைச்சாரலில் நடந்து கொண்டு இருந்தனர்..மகனை ஒரு கல் தடக்கியது. "ஒழிந்து போ..!" என்று கோபத்தில் எட்டி உதைத்தான்.."ஒழிந்து போ..!" என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது.அப்பா இருக்கும் தைரியத்தில்.."எதிரில் வந்தால் உன் முகத்தை பெயர்த்துடுவேன்..!"என்று கத்தினான்..அதே மிரட்டலாக பதில் வந்தது.பையன் இந்த முறை மிரண்டான்..அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டான்."என்னைக் கவனி..!"என்றார் அப்பா."உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்றுகத்தினார்.."உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்று அதே வார்த்தைகள் திரும்பி வந்தன.அவர் அடுத்தடுத்து அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்பி வந்தன.மகனிடம் சொன்னார்."இதை எதிரொலி என்பார்கள்..! ஆனால் உண்மையில் இதுதான் வாழ்க்கை..!அன்போ..,கோபமோ..,துரோகமோ..,நீ ம
விதை
  •  ·  sivam
  •  · 
என் பேரு தமிழரசன். ஊருக்கே நான் ‘அரசு வாத்தியார்’. அரசு பள்ளிக்கூடத்துல தமிழ் வாத்தியார். 35 வருஷ சர்வீஸ். கல்யாணம் ஆகல. ஏன் தெரியுமா? என் பசங்க தான் என் குடும்பம் 1989-ல வேலைக்கு சேர்ந்தேன். கிராமத்து பள்ளிக்கூடம். ஓலை கூரை. 40 பசங்க. செருப்பு இல்ல. சீருடை கிழிசல். சோத்துக்கு வழி இல்ல. ஆனா கண்ணுல கனவு இருந்துச்சு. "சார், நான் போலீஸ் ஆவேன்", "நான் டாக்டர்", "நான் கலெக்டர்". கேட்கும் போதே நெஞ்சு நிறையும்.சம்பளம் 1200 ரூபாய். அதுல 800 ரூபாய்க்கு பசங்களுக்கு நோட்டு, பேனா, சாக்ஸ் வாங்குவேன். மதியம் சத்துணவு பத்தலன்னா என் வீட்டுல இருந்து தயிர் சாதம் கொண்டு வந்து கொடுப்பேன். "சார் நீங்க சாப்பிடலையா?"னு கேப்பாங்க. "நீங்க சாப்பிடுறத பார்த்தாலே எனக்கு வயிறு நிறையும்"னு சொல்வேன்.என் கிட்ட படிச்ச பையன்
இன்றைய ராசி பலன்கள் - 16.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வங்கி தொடர்பான உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் நல்ல மாற்றம் உண்டாகும். உபரி வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். சாந்தம் நிலவும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ரிஷபம்வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய தொடர்பான இன்னல்கள் குறையும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்த போட்டி குறையும். மனை சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுகளில் அனுபவம் வெ
இன்றைய நாள் எப்படி? 16.4.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை 16.4.2026இன்று இரவு 07.31 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.இன்று பிற்பகல் 01.00 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.இன்று காலை 09.31 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.இன்று காலை 08.13 வரை பத்திரை. பின்னர் இரவு 07.31 வரை சகுனி. பிறகு சதுஷ்பாதம்.இன்று முழுவதும் சித்தயோகம்.நல்ல நேரம்..காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
மூச்சுத் திணறலை கட்டுபடுத்தும் இயற்கை வைத்தியம்
  •  ·  sivam
  •  · 
தூதுவளை இலைகளைப் பொடி செய்து அல்லது கஷாயமாகக் குடிப்பது ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறலைக் குணப்படுத்த உதவும்இஞ்சி மற்றும் தேன்:இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடிப்பது நுரையீரலில் உள்ள அடைப்புகளை நீக்கி சுவாசம் சீராக உதவுகிறது.ஆவி பிடித்தல்:சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து ஆவி பிடிப்பது மூச்சுப்பாதையில் உள்ள சளியை நீக்கி சுவாசம் இலகுவாக வழிவகுக்கும்யோகா மற்றும் தியானம்:பிராணாயாமம் போன்ற சுவாசப் பயிற்சிகள் நுரையீரலை வலுப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கின்றனஉடல் பருமன் கட்டுப்பாடு:உடல் எடையைக் குறைப்பது இதயத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்து மூச்சு வாங்குவதைக் கட்டுப்படுத்தும்.தூங்கும் நிலை: தலைக்கு உயரமாக தலையணை வைத்துப் படுப்பது மூச்சு விடுவதை எளிதாக்கும்.
இன்றைய ராசி பலன்கள் - 15.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுமக்கள் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுகொடுத்து செல்லவும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம்எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.
இன்றைய நாள் எப்படி? 15.4.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை 15.4.2026இன்று இரவு 08.55 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.இன்று பிற்பகல் 01.03 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.இன்று காலை 11.35 வரை பிராம்யம். பின்னர் ஐந்திரம்.இன்று காலை 09.25 வரை கரசை. பின்னர் இரவு 08.55 வரை வணிசை. பிறகு பத்திரை.இன்று காலை 06.02 வரை மரணயோகம். பின்னர் பிற்பகல் 01.33 வரை அமிர்த யோகம். பிறகு சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
14 மருத்துவ குறிப்புகள்
  •  ·  sivam
  •  · 
1. ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.2. வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.3. செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.4. கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.5. கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.6. வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரை
வாய்ப்பு
  •  ·  sivam
  •  · 
ஐந்து வருடங்களுக்கு முன்னால், மெரினா கடற்கரை.​"விவேக், ஒரு நிமிஷம் நில்லு. நான் சொல்றதை கேளு," என்றாள் ரம்யா.​விவேக் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். "என்ன கேட்கணும்? உன் ஐடி கம்பெனி ஆன்சைட் போறதுக்காக என் மூணு வருஷ காதலை தியாகம் பண்ண சொல்றியா? நீ போயிட்டா நம்ம உறவு என்ன ஆகும்?"​"டிஸ்டன்ஸ் ஒரு மேட்டர் இல்லை விவேக். நான் என் கரியருக்காகப் போறேன்."​"கரியரா? அப்போ நான் உனக்கு ரெண்டாவது பட்சம்தான். ஒண்ணு உன் வேலை, இல்ல நான். இப்போவே முடிவு பண்ணு."​ரம்யா அமைதியாக அவனைப் பார்த்தாள். "முடிவு பண்ணிட்டேன் விவேக். எனக்கு என் சுயமரியாதையும் உழைப்பும் முக்கியம். 'வேலையா, காதலா'ன்னு நீ கேட்ட அந்த நிமிஷமே நம் காதல் செத்துடுச்சு. பை."​அவள் அன்று அந்த இடத்தை விட்டு வெளியேறியபோது, விவேக் பின்னால் இருந்து
இரு அமெரிக்க ஜனதிபதிகளின் ஒற்றுமை
  •  ·  sivam
  •  · 
1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள். உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தத