Latest Posts
- · sivam
- ·
"அப்பா... என் போன்ல ஏதோ மெசேஜ் வந்திருக்கு, 'உங்க மின்சார கட்டணம் கட்டல, இன்னைக்கு நைட்டு கரண்ட் கட் ஆகிடும்-னு' போட்டிருக்கு" என்று பதற்றத்துடன் ஓடி வந்தான் ரகு.அவன் அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "நேத்துதானே கரண்ட் பில் கட்டினோம்?" என்றார்.அடுத்த 5 நிமிடத்தில் ஒரு போன் கால் வந்தது. "சார், நாங்க மின்சார வாரியத்துல இருந்து பேசுறோம். நீங்க கட்டின பணம் அப்டேட் ஆகல.இப்போ நான் சொல்ற ஒரு App-ஐ டவுன்லோட் பண்ணி 10 ரூபாய் மட்டும் கட்டுங்க, எல்லாம் சரியாயிடும். இல்லைன்னா 7 மணிக்கு கரண்ட் கட் ஆகிடும்" என்றார் அந்த நபர்.அப்பாவும் ரகுவும் பயந்துபோய், அவர் சொன்ன அந்த 'Screen Sharing' செயலியை (App) டவுன்லோட் செய்தார்கள். ரகு தன் போனில் 10 ரூபாயை கட்டினான்.அடுத்த 10-வது நிமிடம்...ரகுவின் அப்பாவின் போனுக்
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். தவறிய முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். செலவுகளில் தன்மைகளை அறிந்து செய்லபடவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு ரிஷபம்குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும்.
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 20.1.2026.இன்று அதிகாலை 03.11 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று பிற்பகல் 02.03 வரை திருவோணம். பின்னர் அவிட்டம். இன்று இரவு 09.02 வரை சித்தி. பின்னர் வியதீபாதம். இன்று அதிகாலை 03.11 வரை பவம். பின்னர் மாலை 03.15 வரை பாலவம். பிறகு கௌலவம். இன்று காலை 06.34 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
திரு.சுகி சிவம் ஐயா சொன்ன, மேடை பேச்சு செய்தி. ஒருவர் ஒரு ஊருக்கு சில வேலையா போனார். அங்கு அவருடைய நண்பர் இருப்பது நினைவுக்கு வந்தது. அவரை பார்த்து விட்டு போகலாம்னு தோணித்து. உடனே ஏதாவது பழம் வாங்கிகிட்டு போகலாம்னு கைவண்டில பழம் விக்கிறவர் கிட்ட போனாரு.ஆப்பிள் பழம் நல்லா இருந்தது. என்ன விலைன்னு கேட்டாரு. கடைக்காரர் ₹200.00 ஒரு கிலோன்னு சொன்னாரு. கொஞ்சம் விலை குறைச்சு கொடுப்பீர்களா? ₹180.00 க்கு தரேன். வாங்கிகிட்டு ₹200.00 தாளை கொடுத்தார். கடைக்காரர் சரியாய் மீதி ₹20.00 கொடுக்கும் போது ஒருவர் பிச்சை போடுங்கன்னு கையை நீட்டினார்.கையில் ₹20.00 நோட்டு என்ன செய்ய. வேற வழி இல்லை அப்படியே அந்த மீதி காசை பிச்சை காரருக்கு கொடுத்துவிட்டார்.அப்பறம் நடந்தது தான் சுவாரசியம். அப்பபார்த்து அந்த கடைக்காரர் ஒ
- · sivam
- ·
ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு…!அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது..!!? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! 'ஒருவேளை மாயாஜாலக் கண்ணாடியோ..!!?’அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை...பெரியவரை நெருங்கினான்.ஐயா…!என்ன தம்பி?உங்கள் கையில் இருப்பது கண்ணாடி தானே..?ஆமாம்..!அதில் என்ன தெரிகிறது..?நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்..!அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது..?ஆமாம்..!பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்..?பெரியவர் புன்னகைத்தார்.சாதாரணக் கண்ணாடி தான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய..!பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாட
- · sivam
- ·
காபி, தேநீர் போன்ற பானங்கள் வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல் மனித உணர்வுகளோடு நெருங்கி நிற்கும் துணையாக வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது அதன் மீது மக்கள் கொண்டுள்ள தீராத காதலும் அதனை அருந்துவோரின் எண்ணிக்கையும் எத்தனைக் காலங்கள் கடந்தாலும் குறையாது என்பதை கடைகளில் அலைமோதும் கூட்டமே சாட்சியாக அமைந்து விடுகிறது.மகிழ்ச்சியைச் சேர்த்து சோகத்தைக் தொலைக்கும் தருணங்களில் மனிதன் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள காபி தேநீரைத் தேடுவது வழக்கம் என்பதை மறுக்க முடியாது. எதுவும் அளவோடு இருப்பதே உடல் நலத்திற்கு நல்லது என்று சொல்லலாம்.காபி காபி கொட்டைகளின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது (கொட்டை), தேநீர் தேயிலை இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இரண்டும் காஃபின் கொண்டவை, ஆனால் வேறுபட்ட சுவை மற்றும் நன்மைகளைக் கொண
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.ரிஷபம்நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனை விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் வேண்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேம்படும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். தந்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் மிதுனம்புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணம் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். கால்நடை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். அமை
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 5 ஆம் தேதி திங்கட்கிழமை 19.1.2026இன்று அதிகாலை 02.31 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.இன்று பிற்பகல் 01.04 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.இன்று இரவு 10.02 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.இன்று அதிகாலை 02.31 வரை நாகவம். பின்னர் பிற்பகல் 02.51 வரை கிமிஸ்துக்கினம். பிறகு பவம்.இன்று காலை 06.34 வரை அமிர்த யோகம். பிறகு பிற்பகல் 01.04 வரை மரண யோகம். பிறகு அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரைகாலை : 09.30 முதல் 10.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
பொதுவாக நாம் தரிசிக்கும் முருகப்பெருமான் திருவுருவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் ஒரு அபூர்வமான காட்சியைக் காணலாம்.✨ பாதரட்சை அணிந்த பரமன்!இந்தத் தலத்தின் ஆகச்சிறந்த விசேஷமே, முருகப்பெருமான் தனது திருவடிகளில் பாதரட்சை (காலணி) அணிந்த நிலையில் அருள்பாலிப்பதுதான்.🦶 வலது பாதம் முன்னே வைத்த கோலம்:சுவாமி தாமரைப் பீடத்தின் மீது நின்றிருந்தாலும், அவர் சும்மா நிற்கவில்லை! தனது வலது பாதத்தை ஒரு அடி முன்னெடுத்து வைத்து, "உனக்காக நான் வருகிறேன்" என்று அபயம் அளிப்பது போலவும், பக்தர்களுக்கு அருளை வாரி வழங்க விரைந்து வருவது போலவும் இந்தக் கோலம் அமைந்துள்ளது.🌟 ஏன் வடபழநிக்குச் செல்ல வேண்டும்?பழநிக்கு நிகரான தலம்: பழநி வரை செல்ல முடியாதவர்கள், சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவ
- · sivam
- ·
இருபடங்கள்ஒன்று வெனிசுலா அதிபராக உணவுமேசை முன்மற்றொன்று கைதியாக உணவுமேசை முன்காலம் நம்கையில் இல்லைகாலம் யாரை வேண்டுமானாலும்எப்போது வேண்டுமானாலும்சுழற்றி அடிக்கலாம்அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஆட்டம் போடுவோருக்கு காலம் கற்பிக்கும் பாடம்நடப்பது தர்மமா? அதர்மமா? என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும்கால சுழற்சி யாரையும் விடுவதில்லை என்பதுதான் உண்மை.
- · sivam
- ·
மார்ஷ்மெல்லோ தியரிஒரு ஆசிரியர் வகுப்பின் அனைத்து குழந்தைகளுக்கும் அழகான டோஃபி கொடுத்து பின்னர் ஒரு விசித்திரமான விஷயத்தைச் சொன்னார்கேள், குழந்தைகளே! நீங்கள் அனைவரும் உங்கள் டாஃபியை பத்து நிமிடங்கள் சாப்பிட வேண்டாம் என்று கூறிவிட்டு அவர் வகுப்பறைக்கு வெளியே சென்றார்.வகுப்பறையில் சில நிமிடங்கள் அமைதி நிலவியது, ஒவ்வொரு குழந்தையும் தங்களுக்கு முன்னால் இருந்த டோஃபியைப் பார்த்துக் கொண்டிருந்தது, ஒவ்வொரு கணமும் தங்களைத் தடுத்து நிறுத்துவது கடினம். பத்து நிமிடங்கள் முடிந்து ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மதிப்பாய்வு செய்யப்பட்டது. முழு வகுப்பிலும் ஏழு குழந்தைகள் இருந்தனர், அவர்களுடைய டோஃபிகள் அப்படியே இருந்தன, மற்ற எல்லா குழந்தைகளும் டோஃபி சாப்பிட்டு அதன் நிறம் மற்றும் சுவை பற்றி கருத்து தெரிவி
- · sivam
- ·
மூளையின் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு இது மூளைக்கான சிறப்பு உணவாகும். ஒமேகா-3 குறைபாடு அதிக மன அழுத்தத்தையும், அறிவாற்றல் இழப்பினையும் ஏற்படுத்துகிறது.இக்கொட்டையில் உள்ள ஒமேகா-3 அமிலமானது மன அழுத்தத்தைக் குறைத்து மூளையின் நினைவாற்றலை கூட்டுவதோடு சிந்தனை செயலாக்கத்தையும் அதிகரிக்கிறது.இதனால் இதனை சீராக உணவில் சேர்த்துக் கொண்டு மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.ஆரோக்கியமான இதயத்திற்கு :இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், லினோலிக் அமிலம், ஆல்பா லினோலெனிக் அமிலம், அராச்சிடோனிக் அமிலம் ஆகியவை இதயநோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.இதனை சீராக உணவில் உட்கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நரம்புகளில் கொழுப்பு படிவது தட