Latest Posts
- · sivam
- ·
ஆன்மிகத்துறையில் ஈடுபடுபவர்கள் கூட சில சக்திகளும் சித்திகளும் வந்தவுடன் புகழையும் பணத்தையும் சம்பாதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்கு மேல் அவர்கள் வளர்வதில்லை. இதே கருத்தை ராமகிருஷ்ண பரமஹம்சர் மிக அழகாக விளக்கினார். அவர் ஊரில் உள்ள கோயிலில் இறைவனுக்கு இனிப்பான பிரசாதங்களை படைப்பார்கள். அதைச் சுவைக்க எறும்புக் கூட்டம் வந்துவிடும். அவற்றை விரட்ட இப்போது இருப்பது போல் ரசாயனப் பொடிகள் எல்லாம் இல்லை.""எறும்புகளை எப்படி வரவிடாமல் தடுப்பது?'' என்று ராமகிருஷ்ணரிடம் கோயில் நிர்வாகத்தினர் கேட்டார்கள்.""கோவில் வாசலில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவி விடுங்கள். அதைத் தாண்டி அவைகள் வராது.''கொஞ்சமும் வன்முறையில்லாத அற்புதமான வழி. எறும்பிற்கு வேண்டியது ஒரு இனிப்புப் பொருள். அது கோவில் வாசலிலேயே சாதாரணச் சர்க்
- · sivam
- ·
மஹாபாரதப்போர். 18 நாள் யுத்தம். வெற்றி பாண்டவர்களுக்கு.ஆனால், ஒரு விஷயம். கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள், துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்...இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்?ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.1) ஜயத்ரதன் 2) பீஷ்மர் 3) துரோணர் 4) கர்ணன் 5) துரியோதனன் 6) விதுரர்இவர்களின் வீழ்ச்சிக்காகக் ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் வெற்றியை தந்தது.இதில் யாரை வீழ்த்த தீட்டிய திட்டம் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?அநேகம் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய யுக்தி தான் சிறப்பு வாய்ந்தது என்று நினைப்பார்கள்.இன்னும் சிலபேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்றும் ந
- · sivam
- ·
இந்த மனிதருக்கு நானும் நீங்களும் உட்பட முழு உலகமும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்....நீங்கள் எந்த ஒன்றையும் தேடிப்படிக்க ஆர்வம் கொள்ளும் போதெல்லாம் கூகிளில் நுழைந்து ஒரு பட்டனைத் தட்டினால் புத்தக அலமாரி அப்படியே உங்கள் தலையில் வந்து விழுவது போல மொத்த அறிவுக் களஞ்சியமும் வந்து உங்கள் கண் முன் அடுக்கடுக்காக நிற்குமோ, அந்த இலவச கலைக்களஞ்சியமான Wikipediaவை வடிவமைத்தவர் இவர்தான்.Wikipediaவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் நினைத்திருந்தால் இந்த களஞ்சிய தளத்தை வைத்து பில்லியன் கணக்கான பணத்தை சம்பாதித்திருக்க முடியும், அவருக்கு வந்த விளம்பர ஆஃபர்களை பயன்படுத்தி பேஸ்புக் நிறுவனர் மார்க் போன்றவர்கள் போல இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய பணக்காரர்களின் வரிசையில் நின்றிருக்கலாம். ஆனால் தனக்கு வந்த அனைத்த
- · sivam
- ·
ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல.கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற்சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது.அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்." சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது"அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையு
- · sivam
- ·
இதற்கு பெயர் தான் குருட்டு அதிர்ஷ்டம் என்பது....ஒரு ஊருல பொழப்பத்த ஒருத்தன் இருந்தான். அவனுக்கு 30 வயசு இருக்கும். ஏதாவது சொல்லிண்டிருப்பான். ஊர்ல அவனை திருவாழத்தான்னு கூப்பிடுவாங்க (அந்தப் பெயரில் ஒரு எழுத்தாளர் உண்டு.)இந்தத் திருவாழத்தான் ஒரு நாள் அலைஞ்சு திரிச்சுட்டு ஊருக்கு வரும் போது இராத்திரி இருட்டி விட்டது. ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தான். அந்த வீட்டு அம்மாள் அதிரசம் பண்ணிக் கொண்டிருந்தாள். அதிரசத்தை எண்ணெயில் போடும் போது சொய்ய் ன்னு சத்தம் வரும். திருவாழத்தான் சொய்ய் சப்தங்களை எண்ணிக்கொண்டே வந்தான். மொத்தம் 64 சப்தம் வந்தது. வீட்டுக்கார அம்மா எல்லாம் முடிச்சுட்டு தூக்கில் எண்ணி அதிரசங்களைப் போட்டு மூடி மேலே மாட்டினாள். காத்து வாங்கறதுக்காக வாசல் திண்ணைக்கு வந்தாள். திருவாழத்தா
- · sivam
- ·
துளசி இலைச் சாறு சாப்பிட்டால், ரத்தத்தில் விஷத் தன்மை வெளியேறும்.அருகம்புல் சாப்பிட்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்; தோல் வியாதிகளுக்கும் இது அருமருந்தாகும்.வாழைத்தண்டு சாறை மருத்துவர் ஆலோசனைப்படி, உரிய இடைவெளியில் சாப்பிட்டால், சிறுநீரகத்தை சுத்தம் செய்யும்.கொத்துமல்லிச் சாறு பசியைத் தூண்டும்; வாதம், நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும்.புதினாச் சாறு சிறந்த மலமிளக்கி; ஜீரணக் கோளாறை சரிசெய்யும்.வல்லாரைச் சாறு, மஞ்சள் காமாலை, நரம்புத்தளர்ச்சி, ஞாபகத்திற்கு அருமருந்தாகும்.தூதுவளைச் சாறு நரம்புத்தளர்ச்சியைப் போக்கும்; சளியை விரட்டும்.மணத்தக்காளிச் சாறு வாயுத்தொல்லையை தீர்க்கும்.தும்பைச் சாறு, இருமல், மார்புச்சளிக்கு அருமருந்தாகும்.வெங்காயம், பூண்டு கலந்த சாறு கெட்டக் கொழுப்பைக் குறைக்கும்.
- · sivam
- ·
உலகின் மிகவும் பேசப்படும் நிறுவனங்களில் ஒன்றிற்கு தலைமை தாங்கிய இந்தியர்... திடீரென்று ஒரு நாள் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் போது நடந்த இந்த சம்பவம், பராக் அகர்வாலின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக கருதப்பட்டது. ஆனால் தோல்வி சிலரைத் தோல்வியடையச் செய்வதில்லை - அது திசையை மாற்றுகிறது. பராக் அந்த வகையில் இருக்கிறார்.ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆன சில மாதங்களுக்குப் பிறகு, எலோன் மஸ்க் அந்த நிறுவனத்தை வாங்கினார், முதல் நாளிலேயே பராக் வெளியேறினார். விமர்சனங்கள், மீம்ஸ்கள், ஊடகங்கள் - அனைத்தும் அவரைப் பின்தொடர்ந்தன. ஆனால் இந்தக் குழப்பத்திலும் கூட, பராக் அமைதியாக இருந்தார். ஏனென்றால், தனது உண்மையான சக்தி இன்னும் பயன்படுத்தப்படவில்லை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனை உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் ஆதரவுகள் மேம்படும். நற்செய்தி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை ரிஷபம்உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் உண்டாகும். ப
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 9 ஆம் தேதி புதன்கிழமை 24.12.2025.இன்று காலை 11.41 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.இன்று காலை 06.25 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.இன்று மாலை 02.56 வரை ஹர்ஷணம். பிறகு வஜ்ரம்.இன்று காலை 11.41 வரை பத்தரை. பின்னர் இரவு 11.33 வரை பவம் . பிறகு பாலவம்.இன்று காலை 06.24 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.நல்ல நேரம்:காலை : 09.00 முதல் 10.00 மணி வரைபகல் : 01.45 முதல் 02.45 மணி வரைமாலை : 04.45 முதல் 05.46 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான்.அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது ”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள்.. சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான்.இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான்.ஒருநாள் திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது." சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யச் சாம்பல் இல்லையே " என வருந்திய அவனும் வறட்டிகளை அடுக்கித் தீயை மூட்டி விட்டுத் தனது மனைவியிடம் ” நான் இந்தத் தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொ
- · sivam
- ·
சளி வந்தால், அவ்வப்போது மூக்கை சிந்தி வெளியேற்ற வேண்டும். வேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். தினமும் வெந்நீர் மட்டுமே பருகி வர வேண்டும்.மிளகு ரசம், சுக்கு, மல்லி காப்பி இவற்றை தொண்டைக்கு இதமாக பருக வேண்டும்.அதிக காரம் இல்லாத, எண்ணெய், நெய் அதிகம் சேர்க்காத உணவுகள், ஆவியில் வெந்த இட்லி, இடியாப்பம் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொண்டு வர, சளி குறைய தொடங்கும்.தகுந்த முறையில் பயிற்சி பெற்று, சுவாசப் பயிற்சிகளை செய்து வரும் போது, நாளடைவில் சளி தொந்தரவு, சைனஸ் போன்றவைகளை கட்டு படுத்தலாம்.
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடி வரும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு ரிஷபம்கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். தன வரவுகள் திருப்தியை தரும். புதியவர்களின் நட்புகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உழைப்புக்கான அங்கீகாரங்கள் கிடைக்கும். மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் :