Posts
Popular Hashtags
Latest Posts
உண்மையான வலி
  •  ·  sivam
  •  · 
தந்தையின் இறுதிச் சடங்கிற்கு நான் வந்தேன்.வந்த விதமே வேறுபட்டது—சொகுசான எஸ்யூவி கார், கருப்பு சூட், விலையுயர்ந்த கண்ணாடி…நான் வெற்றி பெற்ற மகன்.இந்தக் குடும்பத்தின் தூண் நான் தான் என்று நம்பியவனாக வந்தேன்.15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தேன்.பணம் குறையவில்லை.மாதம் தவறாமல் 400 டாலர்கள் அனுப்பினேன்.“தந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று நிம்மதியாக இருந்தேன்.நான் என் கடமையைச் செய்தேன் என்று நம்பினேன்.அடக்கம் முடிந்தது.வீட்டுக்குள் நுழைந்தேன்.அங்கு இருந்த அமைதி—அது வெறும் அமைதி இல்லை…தந்தை இல்லாத வெற்றிடம்.ஆனால் நான் அதை உணராமல்,என் பழக்கப்படி குறைகளைத் தேட ஆரம்பித்தேன்.“வீடு ஏன் இப்படி சீரழிந்திருக்கிறது?”“சுவர் ஏன் பூசவில்லை?”“தந்தை ஏன் இவ்வளவு ஒல்லியாகிவிட்டார்?”“நல்லா கவனிக்கலையா?”என் தம்
பானகம்
  •  ·  sivam
  •  · 
முன்னோர்கள் சொன்ன உணவே மருந்து :வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்.பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம்.இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது. (Raw and Uncooked). தேர்த்திருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்துவருவார்கள். வேர்க்க, விறுவிறுக்க தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காக பானாகம் வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறு நிறைய வாங
மனதில் உள்ள மதிப்பு
  •  ·  sivam
  •  · 
உங்கள் வாழ்க்கைத் துணையின் மதிப்பை உணர்வதில் ஒளிந்திருக்கும் உளவியல் உண்மை.வாழ்க்கையில் நாம் எதையெல்லாம் இழக்கிறோம், எதையெல்லாம் தக்கவைத்துக் கொள்கிறோம் என்பதைத் தீர்மானிப்பது நமது ஞாபகசக்தி அல்ல.அந்தப் பொருளின் மீது நாம் வைத்திருக்கும் 'மதிப்பு' தான். ஒரு சிறு பொருளாக இருந்தாலும் சரி, உணர்வுப்பூர்வமான உறவாக இருந்தாலும் சரி, நாம் எதை உயர்வாகக் கருதுகிறோமோ (Importance in life) அதை ஒருபோதும் கவனக்குறைவாகக் கையாளுவதில்லை.இதை ஒரு தொழிலதிபரின் வாழ்வியலோடு விளக்குகிறது இந்தக் கதை.ஒரு ஊரில் மிகப் பெரிய தொழிலதிபர் இருந்தார். அவருக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது; அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்துவிடுவார். பேனா தேவைப்படும் போதெல்லாம் புது பேனா வாங்குவார்.இந்த பழக்கத்தால், விலை மலிவான பேன
பலி
  •  ·  sivam
  •  · 
“பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு குயவன் ஜென் குருவிடம் சொன்னான்.“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்”இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு
 இன்றைய ராசி பலன்கள் - 21.4.2026
  •  ·  sivam
  •  · 
மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். வியாபார சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர். அலுவலகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.மிதுனம்: இங்கிதமாகப் பேசுவது நல்லது. தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக் கூடும். அலுவலகத்தில் தே
இன்றைய நாள் எப்படி? 21.4.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 21.4.2026இன்று காலை 08.47 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.இன்று காலை 06.15 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.இன்று மாலை 04.43 வரை சோபனம் . பின்னர் அதிகண்டம்.இன்று காலை 08.47 வரை பத்திரை. பின்னர் இரவு 07.35 வரை பவம். பிறகு பாலவம் .இன்று காலை 06.15 வரை அமிர்த யோ. பின்னர் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
அதிரடி நடவடிக்கை எடுத்த தலைமை (நல்) ஆசிரியர்
  •  ·  sivam
  •  · 
புதுச்சேரியில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல் நிலை பள்ளி வாசலில் பெரிய கத்தரிக்கோல், தேங்காய் எண்ணெயுடன் தலைமை ஆசிரியர் நின்று கொண்டிருக்கின்றார்.பள்ளி மாணவ-மாணவியர் மிகுந்த உற்சாகத்தோடு பள்ளிக்குள் செல்கையில், தலை கலைந்து இருக்கும் மாணவ மாணவியரை மட்டும் தனியே அழைத்து… தன்னுடைய கையில் இருக்கும் கத்திரிக்கோலால் முன்பகுதியில் வளர்ந்திருக்கும் முடிகளை கட் செய்து, தன் கையில் வைத்திருந்த தேங்காயெண்ணை பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணெய் மாணவரின் கையில் ஊற்றி தலையில் தேய்க்கச்சொல்லி தன் கையாலேயே சீப்பால் தலையை வாரி விட்டு அனுப்புகின்ற இந்த நற்செயல் நமக்கும் நிச்சயம் பிரம்மிப்பூட்டும் விதத்தில் அமைகின்றது.பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் அறிவுரை சொல்லியும்,
தூக்கம் வர....
  •  ·  sivam
  •  · 
8 மணி நேரம் தூங்க வேண்டும் 10 மணி நேரம் தூங்க வேண்டும் என்று 8 மணிக்கே படுக்கைக்கு போய் விடாதீர்கள். தூக்கம் வரும் வரை ஏதேனும் வேலை செய்துகொண்டோ குறைந்த பட்சம் படித்துக்கொண்டோ இருங்கள். நோ டி.வி. நோ மொபைல்.கண்கள் கெஞ்சும் வரை காத்திருங்கள்.படுக்கைக்குப் போகும் முன் வெது வெதுப்பான நீரில் குளிக்கலாம்.அல்லது கால்களையாவது ஒரு 10 நிமிடம் வெது வெதுப்பான நீரில் வைத்திருங்கள்.அரை டம்ளர் சூடான பால் குடிக்கலாம். முடிந்தால் அதில் கொஞ்சம் தேன் சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தால் கொஞ்சம் மஞ்சள் தூளும் மிளகுத் தூளும் சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தால் கொஞ்சம் பூண்டு, பேரீச்சம் பழம் சேர்த்துக் கொள்ளலாம். சத்துக்கு சத்தும் ஆச்சு கபத்துக்கு மருந்தும் ஆச்சு.தலையணைக்கடியில் கொஞ்சம் மல்லிகைப் பூக்களை வைத்துக் கொள்ளல
கடவுளுக்கு நிகரானவர்கள்
  •  ·  sivam
  •  · 
உலகத்திலே மிகவும் கொடுமையானது எது என்றால்..மனவளர்ச்சி குன்றிய குழந்தையை கவனித்து கொள்ளுவது தான்..மனவளர்ச்சி குன்றி நடக்க முடியாமல் பேச முடியாமல் குழந்தையை கவனித்து கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் கடவுளுக்கு சமம்..ஆணாக இருந்தால் இயற்கை உபாதை கழிக்கும் போது பக்கத்தில் நின்று கழுவி விட்டு மகனை குளிப்பாட்டி துணி மாத்தி விடுவது எவ்வளவு கஷ்டம்.அதே பெண் குழந்தையாக இருந்தால் அந்த பெண் குழந்தை வயதுக்கு வந்த பிறகு எவ்வளவு கஷ்டம் இருக்கும்.ஒரு தாயின் அல்லது ஒரு பெண்ணின் அர்ப்பணிப்பு எந்த அளவிற்கு ஆழமானதுநிச்சயமாக, இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு சாதாரண மனிதராகத் தெரிவதில்லைஅவர்கள் பொறுமையின் சிகரமாகவும், அன்பின் ஊற்றாகவும் விளங்குகின்றனர்.உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒரு குழந்தையை வாழ்
நிஜக் கதாநாயகன்
  •  ·  sivam
  •  · 
மதுரை தத்தனேரியைச் சேர்ந்த 86 வயது முதியவர் திரு. ராஜேந்திரன் ஐயா.இவர் ஒரு சாதாரண அப்பள வியாபாரி.ஆனால், இவர் செய்துள்ள உதவிகள் பல கோடீஸ்வரர்களை வியக்க வைக்கும்...!இவர் செய்த சேவைகளின் பட்டியல்:மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டும் இதுவரை ரூ.1.81 கோடி செலவில் வகுப்பறைகள், உணவுக்கூடம் மற்றும் கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்துள்ளார்.கஜா புயல் பாதிப்பின் போது நேரில் சென்று லட்சக்கணக்கில் உதவி செய்துள்ளார்.அடுத்து மீனாட்சியம்மன் கோயில் அருங்காட்சியகத்திற்கு ரூ.2.5 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார்.மனம் நெகிழ வைக்கும் மனிதநேயம்:தான் சம்பாதிப்பது தனக்கு மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தான் என்பதைச் செயலில் காட்டியுள்ளார்.தன்னிடம் பணிபுரியும் 40 தொழிலாளர்களை விமானத்தில் ஹைதராபாத்திற்குச் சுற
இன்றைய ராசி பலன்கள் - 20.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் உருவாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இணைய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம்எதிலும் வேக இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். உத்தியோக முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும். பிற்கால வாழ்க்கை பற்றிய எண்ணம் ம
இன்றைய நாள் எப்படி? 20.4.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 20.4.2026.இன்று காலை 11.12 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. இன்று காலை 07.52 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி. இன்று இரவு 07.38 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம். இன்று அதிகாலை 12.22 வரை தைத்தூலம். பின்னர் காலை 11.12 வரை கரசை. பிறகு இரவு 10.59 வரை வனிசை. பின்பு பத்திரை. இன்று காலை 06.01 வரை சித்தயோகம். பின்னர் காலை 07.52 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம். நல்ல நேரம்:காலை : 06.30 முதல் 07.30 மணி வரை காலை : 09.30 முதல் 10.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை