Posts
Popular Hashtags
Latest Posts
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் நட்புகள் உண்டாகும். நிதி மேலாண்மை குறித்த தெளிவுகள் பிறக்கும். உயர்கல்வி ஆலோசனைகள் கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாக்கு சாதுரியம் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் ஆதாயகரமான சூழல்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம்சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடி
இன்றைய நாள் எப்படி? 19.4.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.4.2026இன்று பிற்பகல் 01.32 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று காலை 09.26 வரை பரணி. பின்னர் கிருத்திகை.இன்று அதிகாலை 12.27 வரை பிரீதி . பின்னர் இரவு 10.41 வரை ஆயுஷ்மான். பிறகு சௌபாக்கியம்.இன்று அதிகாலை 02.38 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 01.32 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.இன்று முழுவதும் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை: 03.30 முதல் 04.30 மணிவரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
நேர்மையான மனசு
  •  ·  sivam
  •  · 
ஒரு மனிதர் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றார். ₹1,40,000 பெற வேண்டி ஒரு படிவத்தை நிரப்பி காசாளரிடம் கொடுத்தார்.காசாளர் பணத்தை கவனமாக எண்ணி, அவரது கைகளில் வைத்தார்.அந்த மனிதர் பணத்தை எடுத்துக் கொண்டு, ஒரு முறை கூட எண்ணாமல் தனது பையில் வைத்துக் கொண்டார்.ஆனால்...அவர் உள்ளுக்குள் ஏற்கனவே ஒரு விஷயத்தை கவனித்திருந்தார்.₹1,40,000 ஆக இருக்க வேண்டிய பணம்…₹1,60,000 ஆக இருந்தது.₹20,000 கூடுதலாக கிடைத்திருந்தது.அவர் எதுவும் தெரியாதது போல அமைதியாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.ஆனால் கால்கள் முன்னே சென்றாலும்…மனசு அங்கேயே நின்றுவிட்டது.சில அடிகள் நடந்ததும்…அவரது மனசு கேள்வி கேட்டது —"இந்த ₹20,000-ஐ திருப்பிக் கொடுக்கலாமா?"அடுத்த நொடியில்…மற்றொரு சிந்தனை வந்தது —"நான் தவறாக பணம் கொடுத்தால் யாராவது திருப்பி
முத்துகள் உருவாவது எப்படி?
  •  ·  sivam
  •  · 
இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவித  திரவத்தை அதன்  மீது சுரந்து மூடிவிடும். அதைத் தெரிந்துகொண்ட சீனர்கள், சிப்பி வாய்  திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப்  புகுத்தினார்கள
இன்றைய ராசி பலன்கள் - 18.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பூர்வீக வீடு, நிலம் நல்ல விலைக்கு விற்பனையாகும். வியாபாரத்தில் சரக்குகளை போராடி விற்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.ரிஷபம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து, நெருக்கம் அதிகமாகும். பழைய ஃபேன், பிரிட்ஜை மாற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.மிதுனம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் படிப்பு, தாயாரின் மருத்துவம் என்று செலவுகளும் இருக்கும். வியாபாரத்தில் நிம்ம
இன்றைய நாள் எப்படி? 18.4.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை 18.4.2026. இன்று மாலை 03.45 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று காலை 10.52 வரை அஸ்வினி. பின்னர் பரணி. இன்று அதிகாலை 03.26 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி. இன்று அதிகாலை 04.46 வரை கிமிஸ்துக்கினம். பின்னர் மாலை 03.45 வரை பவம். பிறகு பாலவம். இன்று காலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம். நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 11.30 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
காசும் சோறும்
  •  ·  sivam
  •  · 
என்னா ஈசு, சோர்வா இருக்கே!! என்னா ஆச்சு?"என்னா ஆவும்? நேத்து தண்ணிய போட்டு ஏதோ வண்டியில கால விட்டு இப்போ போய் பெரியாஸ்பத்திரில கிடக்கு இதுங்க அப்பென். நான் ஆசுபத்திரிக்கும் வூட்டுக்கும் லோல் பட்டுனுகுறேன். என்ன பொறப்போ போ!" என்றபடி வந்த அழுகையை குழந்தைகள் முகத்தைப் பார்த்து அடக்கிக்கொண்டே சொன்னாள் ஈஸ்வரி, கற்பகத்திடம்."நான் வேணா புள்ளைங்கள பார்த்துக்கறேன். வேலைக்கு போய் வா. வேலைக்கு போனியா இல்லையா?""எங்க போனேன்? மூணு நாளா அலையுறேன். அவங்க இப்டிலாம் லீவு போட்டா நீ வர வாணாம்னுட்டாங்க. வேற இடம்தான் பார்க்கணும். அதுவரைக்கும் சோத்துக்கு இன்னா செய்யுறதுன்னுதான் ரோசனை. உக்காந்தேன். ஏதோ வாசபக்கம் வந்து ஜனங்க போக வர பார்த்தா எதுனா மனசு சுளுவா ஆவுமேன்னு." என்று பெருமூச்சு விட்டாள் ஈஸ்வரி.கற்பகம், "இதோ
“உணவுபழக்கம்" பழமொழி வடிவில்…
  •  ·  sivam
  •  · 
* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல* தன் காயம் காக்க வெங்காயம் போதும்* வாழை வாழ வைக்கும்* அவசர சோறு ஆபத்து* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*இருமலை போக்கும் வெந்தயக் கீரை* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை* சித்தம் தெளிய வில்வம்* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி* சூட்டை தணிக்க கருணை கிழங்கு* ஜீரண சக்திக்கு
இன்றைய ராசி பலன்கள் - 17.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உடன்பிறந்தவர்கள் மூலம் சில செலவுகள் வரும். வதந்திகளை நம்பி முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். வழக்கமான சில பணிகளில் திடீர் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் மாறுபட்ட வாய்ப்புகள் உருவாகும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மைரிஷபம்உடன் பிறந்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். இழுபறியாக
இன்றைய நாள் எப்படி? 17.4.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 17.4.2026இன்று மாலை 05.47 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.இன்று பிற்பகல் 12.05 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.இன்று காலை 07.08 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.இன்று காலை 06.39 வரை சதுஷ்பாதம். பின்னர் மாலை 05.47 வரை நாகவம். பிறகு கிமிஸ்துக்கினம்.இன்று காலை 06.02 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
படித்தில் பிடித்தது...
  •  ·  sivam
  •  · 
தவறாக எழுதியது ‘பேனாவாக'இருந்தாலும் எல்லோரும்காகிதத்தைக்கிழித்துப் போடுவதைப் போல.தவறு செய்தவவரை விட்டுவிட்டுஇன்னொருத்தரிடம்,குற்றம் கண்டுபிடிப்பதே இங்கு பலரின்வேலை..பெரும்பாலான மனிதர்கள்தன்னலம் மிக்கவர்களாக வலம் வருகிறார்கள்.நேசித்தால் பிழைகளைப் பார்ப்பதில்லை,வெறுத்தால்நல்லதைப் பார்ப்பதில்லை.விருப்பத்திற்கும், நேசத்திற்கும் வேறுபாடு உண்டு.பூக்களை விரும்பும் அன்பர்கள் பறித்துச்சூடுகிறார்கள்,பூக்களை நேசிப்பவர்கள்செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அவர்களுடன் மகிழ்ச்சியாகப் பழகுங்கள்.உங்களை யாருக்குப் பிடிக்கவில்லையோ,அவர்கள் மகிழ்ச்சிக்காகஅவரை விட்டு விலகுங்கள் அமைதியாக.
புரூஸ் லீ
  •  ·  sivam
  •  · 
புரூஸ் லீ வெறும் தற்காப்புக் கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த தத்துவவாதியும் கூட. அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான பாடங்கள் இதோ:"நீராக இரு" (Be Water, My Friend):தண்ணீர் ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுக்கும். அது மென்மையாகவும் இருக்கும், அதே சமயம் பாறையை உடைக்கும் வலிமையும் கொண்டது. வாழ்க்கையில் பிடிவாதமாக இருக்காமல், சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு (Adaptability) முன்னேற வேண்டும் என்பதே இதன் பொருள்.தேவையற்றதை நீக்கு (Eliminate the Unessential):"தினமும் எதையாவது சேர்ப்பது அறிவல்ல, தினமும் தேவையற்றதை குறைப்பதே அறிவு" என்பார் லீ. ஒரு கலையிலோ அல்லது வேலையிலோ சிறந்து விளங்க, மிக முக்கியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்தி, மற்ற கவனச்சிதறல்களை