Latest Posts
- · sivam
- ·
கல்லூரி விடுமுறை விட்டதோ, இல்லையோ உடனே காஞ்சிபுரத்திற்குப் பஸ் ஏறி விடுவார் அண்ணா. ஒவ்வொரு கல்லூரி விடுமுறைக்கும் அவர் வீடு சென்றபோது ஒரு மாற்றத்தைக் கூர்ந்து கவனித்து வந்தார். ஏழை, எளிய குடும்பம் ஆனதால் அண்ணாவின் கல்லூரிச் செலவை அந்தக் குடும்பம் தாங்க முடியவில்லை. ஆகவே, தொத்தா தான் அணிந்திருந்த நகைகளில் ஒவ்வொரு நகையாக அடமானம் வைத்து, அந்தப் பணத்தை அண்ணாவின் கல்லூரிச் செலவுக்குப் பயன்படுத்தி வந்தார்.தொத்தா.. நான் கல்லூரிக்கு இனி போகப் போவதில்லை.பதறிப் போய், ஏன்... ஏன்... துரை! இப்படிச் சொல்றே என்று தொத்தா கேட்டார்.பின்னே என்ன?... நானும்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். உங்க நகைகளை வித்து என்னைப் படிக்க வைக்கிறீங்க. வீட்டையெல்லாம் வறுமையாக்கிவிட்டு நான் படிக்க வேண்டாம்.அப்படிச் சொல்லாதேப்பா, ந
- · sivam
- ·
அருள்மிகு அமிர்தநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோயில், பாமணி 614014,மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம்*இது பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற சிறப்பினை உடையது.*ஒரு காலத்தில் சுகல முனிவர் தன் தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக காசியை நோக்கி தன் சீடனுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது மாலை நேரத்தில் முனிவர் இளைப்பாறும் பொருட்டு சீடனிடம் அஸ்தி கலசத்தை கொடுத்து விட்டு சென்றார். சீடன் அதை திறந்து பார்த்தபோது அஸ்தி கலசத்தில் தங்க பூக்களாக இருந்தது. இதை அறிந்தமுனிவர் சுகலர் காசியை விட புனிதமான இடம் இந்த "பாம்பணி" என்று உணர்ந்தார். (பாம்பணி என்பதே மருவி பாமணி ஆயிற்று.)ருத்ர தீர்த்தம் என்று அழைக்கப்பட்ட தற்போது வெட்டு குளம் என்று அழைக்கப்படுகிற
- · sivam
- ·
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான பகை அவர்கள் சிறுவயதாக இருந்தபோதே தொடங்கிவிட்டது. குறிப்பாக, பீமனின் அபாரமான பலத்தைக் கண்டு அஞ்சிய துரியோதனன், அவனை தீர்த்துக்கட்ட ஒரு வஞ்சகத் திட்டத்தைத் தீட்டினான்.பாண்டவர்கள் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களை ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றான் துரியோதனன். கங்கை நதிக்கரையில் 'பிரமாணகோடி' எனும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த விருந்தில், பீமனுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் கொடிய விஷத்தைக் கலந்து கொடுத்தான்.உணவு உண்ட பீமன், விஷத்தின் தாக்கத்தால் மயங்கி ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றான். உடனே, துரியோதனன் பீமனை கயிற்றால் கட்டி, ஓடிக்கொண்டிருந்த கங்கை நதியில் தள்ளிவிட்டான்.ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பீமன், நதியின் ஆழத்திலிருந்த நாகலோ
- · sivam
- ·
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டது...கோடிக்கணக்கில் விலை... அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. அதில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒருவன். துறு துறுவென்று எல்லாரிடமும், பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டு இருக்கிறான்.இங்கிலாந்து கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்கவில்லை. இரண்டொரு நாளில் இன்ஸ்டலேஷன் பணிகள் துவங்க இருக்க, ஜப்பான் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.“ஏப்பா.. அவ்ளோ துட்டுப் போட்டு வாங்கிருக்கோம். சர்வீஸ் டீம்ல சின்னப் பையனைலாம் சேர்த்தி அனுப்பிருக்கீங்க? என்ன டூர் வந்திருக்காங்களா? ஏர்போர்ட்ல இருந்து ரூமுக்கு அனுப்ச்சாச்சு. நாளைன்னைக்கு இன்ஸ்டால் பண்றப்ப அந்த
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்சிறு தொழில் புரிபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். பத்திரம் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் மீது இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பாராத சில கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிகப்புரிஷபம்ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். நண்பர்களின் கருத்துக்களை புரிந்து முடிவு எடுக்கவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வங்கி செயல்களில் பொறுமை வேண்டும். கவலை விலக
- · sivam
- ·
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை 21.3.2026இன்று அதிகாலை 04.28 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று அதிகாலை 04.12 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.இன்று இரவு 08.58 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.இன்று காலை 04.28 வரை கௌலவம். பின்னர் மாலை 03.27 வரை தைத்தூலம். பின்பு கரசை.இன்று காலை 06.17 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் நீங்கும். பயனற்ற அலைச்சல்களை தவிர்க்கவும். கலை பணிகளில் சிந்தித்து செயல்படவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இலக்குகளை நோக்கி செயல்களில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : சிகப்புரிஷபம்குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரிய மனித
- · sivam
- ·
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.3.2026.இன்று அதிகாலை 04.59 வரை பிரதமை. பின்னர் துவிதியை.இன்று அதிகாலை 05.11 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.இன்று அதிகாலை 02.11 வரை சுப்பிரம். பின்னர் இரவு 11.42 வரை பிராம்மியம். பிறகு ஐந்திரம்.இன்று காலை 04.59 வரை பவம். பின்னர் மாலை 04.43 வரை பாலவம். பின்பு கௌலவம்.இன்று காலை 06.18 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
டான்சன், எகிடோ இரு புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது.ஒரு வளைவில் திரும்பும்போது நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒருபுறத்தில் வேலைப்பாடுடன் கூடிய அழகிய பட்டுச் சேலையைக் கட்டியிருந்த அழகான இளம்பெண் அடுத்த பக்கம் போவதற்கு முடியாமல் நின்றுகொண்டிருந்தாள்.“இங்கே வா!” என்று கூப்பிட்ட டான்சன் அவளைத் தூக்கிக்கொண்டு சகதியான தெருவின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்குக் கொண்டு போய் சேர்த்தார்.அன்று இரவு மடத்திற்குத் திரும்பும்வரை எகிடோ எதுவும் பேசாமல் வந்தான். அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “நம்மைப் போன்ற புத்த பிட்சுகள் பெண்கள் அருகில் செல்வதுகூடத் தவறு. முக்கியமாக இளமையும் அழகும் வாய்ந்த பெண்கள் பக்கத்தில் செல்லவே கூடாது.நீ ஏன் அவளை
- · sivam
- ·
கொய்யா, பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கொய்யா இலைகளில் பல ஆரோக்கிய குணங்கள் உள்ளன. இந்த இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது.மேலும், உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம். கொய்யா இலையை நசுக்கி, முகப்பரு புள்ளிகளில் தடவவும். வறண்ட சருமத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு கப் கொய்யா இலை தண்ணீரை பயன்படுத்தலாம்.கொய்யா இலையின் சில அழகுக் குறிப்புகள் இங்கே..எண்ணெய் சருமத்திற்கு :தேவையான பொருட்கள் :• ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்• ஐந்து தேக்கரண்டி தண்ணீர்• இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறுசெய்முறை :கொய்யா இலைகள், தண்ணீரைக் கலந்து பேஸ்ட் செய்யவும்.ஒரு கிண்ணத்தில், இரண்டு டேபிள் ஸ்பூன் பேஸ்ட் எடுத்
- · sivam
- ·
செத்துப்போன ஒருவன் நரகத்துக்கு அனுப்பப்பட்டான். நரகத்தில் மூன்றுவிதமான தண்டனை முறைகள் இருந்தன.மூன்றையும் பார்த்துவிட்டு எந்த தண்டனையை ஏற்றுக்கொள்வதென்று அவனே முடிவு செய்துகொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.முதலாவது அறைக்குப் போனவன், அங்கே எல்லோரும் தலைகீழாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். ஒவ்வொருவர் முகத்திலும் வலியின் அவஸ்தை பிரதிபலித்தது.இது வேண்டாம் என்று அடுத்த அறைக்குப் போனான். அங்கே... எல்லோரும் தலையில் பனிக்கட்டிகளைச் சுமந்தபடி இருந்தார்கள். பனிக்கட்டிகள் உருகி வழிந்துகொண்டிருக்க, அந்தக் குளிர்ச்சியில் ஜில்லிட்டு நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.ஒரு நிமிடம் அந்த வேதனையை எண்ணிப் பார்த்தவன்,'ஐயோ... இது வேண்டாம்' என்று அடுத்த அறைக்குத் தாவினான். மூன்றாவது அறையில் ஆச்சரியம்! அங்கிருந்தவர்கள் படு
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்திடீர் திருப்பங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். குடும்பத்தில் சில மன வருத்தம் நேரிடலாம். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். விலகி இருந்தவர் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பூர்வீக வீட்டை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம்ரிஷபம்தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் மேம்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட ந