Latest Posts
- · sivam
- ·
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
- · sivam
- ·
அந்த ரிடையரான மனிதர் அன்று மகானின் முன் நின்றபோது, அவரது முகத்தில் கவலை ரேகைகள். இதைக் கவனித்த அந்த மகான்...."ஏன் என்ன விஷயம்?" என்று அன்பொழுகக் கேட்கிறார்."ரிடையர் ஆன பிறகு நான் மிகவும் .கஷ்டப்படுகிறேன்.." என்கிறார் அவர்."ஏன்?" கேட்கிறார்."யாரும் வீட்டில் என்னை மதிப்பதே இல்லை... கவனிப்பும் சரி இல்லை. காப்பி கூட சமயத்தில் கிடைப்பதில்லை" என்று சொல்லிக் கொண்டே போனார்.அவரது மனக்குமுறல்களை புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டு இருந்தார் அந்த மகான்."உத்தியோகத்தில் இருக்கும்போதே இறந்திருக்கலாம் போல் எண்ணத் தோன்றுகிறது. பையன்கள் கூட என்னை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்" என்று முடித்தார் அம்முதியவர்.மகான் அமைதியாகச் சொன்னார்...."இது எனக்குப் பெரிய விஷயமாகவே தெரியவில்லை. நீ இப்போது ஆபீசுக்குப் போவதில்லை இல்லைய
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பங்கு வர்த்தக விஷயங்களில் பொறுமை வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் ரிஷபம்உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் கல்வியில் இருந்த இன்னல்கள் குறையும். தொழில் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல்கள் ஏற்படும். மனதில் நினைத்த கனவுகள் கைகூடிவரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அ
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை 10.1.2026.இன்று பிற்பகல் 12.33 வரை சப்தமி. பின்னர் அஷ்டமிஇன்று இரவு 07.37 வரை அஸ்தம். பின்னர் சித்திரை. இன்று இரவு 09.13 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம். இன்று அதிகாலை 12.08 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 12.33 வரை பவம். பின்பு பாலவம்.இன்று காலை 6.32 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
- · sivam
- ·
அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் புளி. சுவைக்காக பயன்படுத்தப்படும் புளியில் சத்துக்களும் மருத்துவப்பயன்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளியமரம் இந்தியா முழுவதிலும் வெட்ட வெளிப்பிரதேசங்களிலும், தென்னிந்தியாவிலும், இமயமலைப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்க்கப்படுகிறது. விதையின் பருப்பு, கனிகள், தண்டுப் பட்டை மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை.செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்விதையின் பருப்பில் பாலசாக்கரைடுகள் உள்ளன. பாலசமைன், கட்டிக்கின், நாஸ்டர்ஷியம் டமரின், ஃபாஸ்ஃபாட்டிக் அமிலம், எத்தனாலமைன், செரீன் ஐனோசிட்டால், மற்றும் ஹார்டனைன் என்னும் இரசாயனப் பொருட்கள் உள்ளன.வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின்,நியாசின், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் போன்
- · sivam
- ·
கீழாநெல்லி வேரை இடித்துப் பிழிந்து கறந்த பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.கீழாநெல்லி இலையைச் சாறு பிழிந்து கற்கண்டு சேர்த்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.கீழாநெல்லிக் கீரையைச் சமைத்து சாப்பிட்டால் கண்களில் மஞ்சள் நிறம் மாறும் .கீழாநெல்லி இலையுடன் உளுந்து மஞ்சள் ஆகியனவர்றை சேர்த்து அரைத்து நகக் கண்களில் பூசினால் நகங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.கீழாநெல்லி இலை கோவை இலை, அசோக மரப்பட்டை நாவல் மரபட்டை அனைத்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.கீழாநெல்லி, மருதாணி, மஞ்சள் ஆகியவற்ரை சேர்த்து அரைத்து கால்களில் பூசினால் பித்த வெடிப்பு சேற்று புண் போன்றவை குணமாகும்.கீழாநெல்லியை எடுத்துக்கொள்ளும் மு
- · sivam
- ·
ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன்.அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்து கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது.உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துக் கொண்டது. உடனே மனம் உடைந்துப் போனான்.அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.மன்னர் சிரித்து விட்டு "எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு
- · sivam
- ·
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வேளாங்கண்ணியை சுற்றி சுமார் 25 கிலோமீட்டர் வான் பரப்பளவில் ஹெலிகாப்டர் பறக்கும். இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 6 பயணிகள் பயணிக்கலாம்.ஒரு பயணிக்கு ரூ.6000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதற்காக பெங்களூருவில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு வர உள்ளது.வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி, சென்னை விமான நிலையத்துக்கும் ஹெலிகாப்டர் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. சுற்றுலா, பொழுதுபோக்கை தாண்டி இயற்கை பேரிடர் நிகழும் போதும், அவசர காலங்களில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கும் வசதியுடன் வேளாங்கண்ணியில் ஹெலிபேட் அமைக்கப்படுகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள், வி.ஐ.பி.க்கள், ராணுவத்தினர் பயன
- · sivam
- ·
எடிசன் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். தன்னுடைய அரிய கண்டுபிடிப்பான மின்சார பல்பு இந்த உலகத்தில் எத்தனை மாற்றங்களை உண்டாக்கப் போகிறது. இரவைப் பகலாக்கப் போகிறது'என்பதை நினைக்கும்போதே எடிசனின் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது..சரி..இதை முதலில் நண்பர்களுக்கும் அருகே இருக்கிற அறிஞர்களுக்கும் வெளிப்படுத்துவோம் என முடிவு செய்தார்.அனைவரையும் அழைத்து விளக்கம் தர ஆயத்தம் செய்தார். அந்த அறையில் உள்ளவர்கள் எடிசனின் பேச்சைக் கேட்க ஆவலோடு இருந்தனர்.எடிசன் தன் கண்டுபிடிப்பான பல்பு பற்றி சொல்லச் சொல்ல அவர்களின் ஆவல் அதிகரித்தது. எடிசன் தன் உதவியாளரை அழைத்து ,பக்கத்திலே இருக்கிற ஆய்வகத்திலிருக்கும் 'பல்பை' எடுத்துவரச் சொன்னார்..உதவியாளர் ஆய்வகத்திற்குச் சென்று மிக்க கவனத்துடன் அதனை எடுத்துவந்தார். எடிசனும் அற
- · sivam
- ·
மேஷம்விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் தீர்வுகள் கிடைக்கும். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் ரிஷபம்எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த இழுபறிகள் மறையும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். கல்வி பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வ
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 9.1.2026.இன்று காலை 11.43 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று மாலை 06.06 வரை உத்திரம். பின்னர் அஸ்தம். இன்று இரவு 09.17 வரை சோபனம். பின்னர் அதிகண்டம். இன்று காலை 11.43 வரை வணிசை. பின்னர் பத்தரைஇன்று காலை 6.32 வரை மரண யோகம். பின்னர் மாலை 06.06 வரை சித்தயோகம். பிறகு அமிர்த யோகம். நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
கணவன்- மனைவியான தம்பதிகள் ஜோடிக்கு மூன்று மகள்கள். அவர்களுக்கு திருமணமான மருமகன்கள் ஆகியோருக்கும் சேர்த்து மூன்று ஜோடிக்குமாக மூன்று வீடுகள் கட்டிக் கொடுத்து பக்கத்திலேயே வைத்திருந்தார்கள்.ஒரு நாள் மாமியாருக்கு மூன்று மகள் மற்றும் மருமகனுக்கு சொத்தில் எந்த அளவு பங்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைவில் வந்தது. எனவே அவர்கள் மூவருக்கும் சோதனை வைக்க விரும்பினார்.முதல் நாள் அன்று வீட்டின் மூத்த மருமகனை அழைத்துக் கொண்டு மருமகனே!என்னை இங்கிருக்கும் ஏரியில் நம்முடைய படகில் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.மருமகனும் மாமியாரை அழைத்துக் கொண்டு படகில் சென்றார்.ஏரியின் நடுவில் சென்று கொண்டிருக்கும் சமயம் மாமியார் சின்னதாக டான்ஸ் ஆடி ஏரியில் விழுந்து விட்டார் மருமகன் உடனே பதறிப்போய் ஏரியில் கு