Latest Posts
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்தாயார் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில பணிகள் நிறைவு பெறும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். வீடு மாற்ற தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை ரிஷபம்செய்கின்ற முயற்சியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். இழுபறியான சில செயல்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கவலை
உலகில் அதிகமாக வீணாக்கப்படுவது யாராலும் புரிந்துக் கொள்ளப்படாத அன்பு.நீங்கள் பணத்தை கையாளவில்லை என்றால், அது உங்களை கையாளும்.'எனக்குத் தெரியாது’ என்பது உலகின் மிகச்சிறந்த தற்காப்பு கலை.இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத பொய்க்கு உண்மை என்று பெயர்.கவலையை விட, மிகவும் கொடியது ஒருவரிடம் உள்ள சந்தேகமே.
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 24.4.2026இன்று அதிகாலை 02.01 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.இன்று அதிகாலை 01.42 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.இன்று காலை 07.52 வரை திருதி . பின்னர் சூலம்.இன்று அதிகாலை 02.01 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 01.06 வரை பத்திரை. பிறகு பவம் .இன்று அதிகாலை 05.59 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்:பகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காட்டின் வழியே வேதாளத்தை விக்ரமாதித்தியன் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வேதாளம் அவனிடம் இந்த கதையை கூறியது. சொர்ணபுரி என்ற நாட்டை மன்னன் வீரபாகு சீறும் சிறப்புமாக ஆண்டுவந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு பிறகு தன் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்று கவலை கொண்ட மன்னன், வீரமிக்க ஒருவன் தன் காலத்திற்கு பிறகு இந்த நாட்டை ஆளவேண்டும் என எண்ணினான். இதை பற்றி தனது மந்திரியிடம் ஆலோசித்தான். அப்போது இந்நாட்டின் எல்லையிலிருக்கும் ஆசிரமத்தில் ஒரு துறவி, இளைஞர்களுக்கு வீரக்கலைகளை கற்றுத்தந்து, அவர்களை மிகச்சிறந்த வீரர்களாக்குவதாகவும், அங்கு சென்று பார்த்தால் இந்நாட்டை ஆளும் தகுதியுடைய நபர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார். அதன் படி மன்னன் வீரபாகுவும், அவன் மந்திரியும் அந்த ஆசிரமம் சென்று த
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் ஈடேறும். மனை சார்ந்த செயல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த செயல்களில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெண்மைரிஷபம்குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும் லாபமும் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வ
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 23.4.2026இன்று அதிகாலை 03.38 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று அதிகாலை 03.02 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.இன்று காலை 10.36 வரை சுகர்மம் . பின்னர் திருதி.இன்று அதிகாலை 03.38 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 02.49 வரை கரசை. பிறகு வனிசை .இன்று அதிகாலை 05.59 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
அநேகருக்கு பித்தம் தலைக்கேறி, உடல் சூட்டினால் ஏற்படும் உபாதைகள் சர்வ சாதாரணம். இவற்றுக்கான சில அற்புதமான, எளிமையான தீர்வுகள் நமது சமையலறையிலேயே இருக்கின்றன. அவை இதோ:அகத்திக்கீரையின் ஆற்றல்:அரிசி கழுவிய நீரில் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டால், உடல் சூடு தணிந்து, பித்தம் இருந்த இடம் தெரியாமல் மறையும். இதை நீங்களும் வாரம் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்! இயற்கையான முறையில் ஆரோக்கியம் பெறுவோம்.
1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது. ஆனால், தலைவர் இரண்டு இடங்களில் போட்டியிடலாம்.2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது.ஆனால் ஒரு அரசியல்வாதி சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம். 3. ஒரு குடிமகன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ, ஒரு வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும்.ஆனால், ஒரு அரசியல்வாதி பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம்.4. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.ஆனால் ஒரு அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு கட்டளையிடலாம்.5.ஒரு அரசு ஊழியர் 30 மு
குடல்_வற்றல்...ஆட்டுக்குடல்..என்றும் இன்னும் பலபெயர்களில் அழைக்கப்படும் இத்திண்பண்டம் 1980களில் தமிழகம் முழுதும் பரவியது.இன்றுவரை இதன் சுவை யாவர்க்கும் இனியதே.இதனை உண்பதால் உடல்கேடோ..நோயோ வந்ததாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.ஆனால் இது ஏனோ தமிழ்நாடு கேரளா ஆந்திரா வைத் தாண்டவே இல்லை..பாழ்படுத்தும் பானிபூரி பலநூறு மைல்கள் கடந்து இங்கு காலூன்றி உள்ளது. பெரும்தொழில்வாய்ப்பை உண்டாக்கித் தந்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள தொழில்முனைவர்களில் யாரோ ஒருவர் இத்திண்பண்டத்தின்மீது சற்றே_கவனம் செலுத்தினால் தரமேம்பாடும்,வணிகநோக்கிலான வடிவ மேம்பாடும், உற்பத்தியில் தொழில்நுட்ப மேம்பாடும், ஏற்றுமதி தரத்திலான குழந்தைகளைக்கவரும் வண்ண வடிவமைப்போடு கூடிய பொட்டல மேம்பாடும் பெற்று உலகளாவிய கவனம் பெறும்.மற்றப்பொருட்களைவ
இரவு தூங்கும் முன்பு இத ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்க....ஆப்பிள் சீடர் வினிகரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கத்தை நம்மில் பலர் இன்று பின் பற்றி வருகின்றார்கள்.ஆனால் இது அமிலத்தன்மை வாய்ந்தது என்பதால் வெறும் வயிற்றில் குடிப்பது அவ்வளவு நல்லதல்ல.ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடித்தால் அது பல நன்மைகளை வழங்கும்.குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடிப்பதால் எடை குறையும் அதிசயம் மிக வேகமாக நடக்கும்.எடையைக் குறைக்க எப்படி உதவும்?நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால் ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவி புரியும்.உடல் கொழுப்பைக் குறைக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வினிகரில் உள்ள அசிடிக் அமிலம் உடலில் கொழுப்பு தேங்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குழந்தைகள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். கடுமையான முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பத்திரிகை துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அண்டை அயலார் ஆதரவுடன் செயல்படுவார்கள். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சிந்தனை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சைரிஷபம்அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பண விஷயத்தில் சிக்கனம் வேண்டும். பொன் பொருள் சேர்க்கை சார்ந்த எண்ணம் மேம்படும். வாக்கு சாமர்த்தியங்களால் நினைத்ததை முடிப்பீர்கள
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 9 ஆம் தேதி புதன்கிழமை 22.4.2026இன்று காலை 06.24 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.இன்று அதிகாலை 04.22 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.இன்று பிற்பகல் 01.32 வரை அதிகண்டம் . பின்னர் சுகர்மம்.இன்று காலை 06.24 வரை பாலவம். பின்னர் மாலை 04.01 வரை கௌலவம். பிறகு தைத்தூலம் .இன்று அதிகாலை 04.22 வரை சித்தயோகம். பின்னர் அதிகாலை 05.59 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை