Posts
Latest Posts
இன்றைய நாள் எப்படி?  - 27.12.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 27.12.2025.இன்று காலை 09.21 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று காலை 06.06 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. இன்று காலை 09.30 வரை வியதீபாதம். பிறகு வரீயான். இன்று காலை 09.21 வரை வனிசை. பின்னர் இரவு 08.34 வரை பத்தரை. பிறகு பவம். இன்று முழுவதும் சித்தயோகம். நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
பக்தன் கேட்ட கேள்வி; பகவான் செய்த உபதேசம்
  •  ·  sivam
  •  · 
ஒரு நாள் ஒரு படித்த இளைஞன் ஒருவன் பகவான் தரிசனத்திற்கு வந்தான்.வந்தவன் சோபாவின் அருகே சென்று பகவானைப் பணிந்து விட்டு எதிரே உட்கார்ந்தான். அவன் முகத்தைப் பார்த்தால் பகவானிடம் ஏதோ கேள்விகள் கேட்க வந்தவன் போல் தோன்றியது.ஹாலில் அனைவரும் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். அந்த மௌனத்தைக் கலைத்து எழுந்தது இளைஞனின் கேள்வி."சுவாமி, ராமகிருஷ்ண பரஹம்சர் விவேகானந்தரைத் தொட்ட மாத்திரத்தில் நிர்விகற்ப சமாதியில் நிலைப்பெறச் செய்தாரே! அதுபோல் பகவானும் என்னை நிர்விகற்ப சமாதியில் நிலைபெறச் செய்ய முடியுமா? என்று கேட்டான்.பகவான் பதிலேதும் கூறவில்லை.இளைஞனோ தன் கேள்விக்கு விடையை ஆவலுடன் எதிர்நோக்கினான்.சிறிது நேரத்திற்குப் பின் பகவான் அந்த இளைஞனைப் பார்த்து,கேட்பது விவேகானந்தர் தானோ!" என்றார்.அவ்வளவு தான் அவன் பதிலே
காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நல்லதா?
  •  ·  sivam
  •  · 
பொதுவாக காலை எழுந்ததும் ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலரும் கூறுவர். அதில், சிலருக்கு குழப்பம் இருக்கும். அந்தக் குழப்பம் என்னவெனில், பல் துலக்கி விட்டு தண்ணீர் குடிக்க வேண்டுமா, இல்லை பல் துலக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டுமா என்பது தான்.நீங்கள் காலை எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன்பே தண்ணீர் குடிக்கலாம். உண்மையில் இந்த நடைமுறை உங்களுக்கு நன்மையைத் தரும். நீங்கள் இரவில் உறங்கும் போது உடலில் உள்ள நீரை உங்களின் உடல் பயன்படுத்தி விடும்.மேலும், நள்ளிரவில் எழுந்து நீங்கள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அதனால் தான் நீங்கள் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவது. அது உங்களை நீரேற்றம் செய்ய உதவும். இரவில் தூங்கும் போது வாயில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் பெருகு
வேப்பம் பூ
  •  ·  sivam
  •  · 
வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம். வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும். இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்...பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்...இந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே...வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் அனைத்தும் ஓடிப்போகும் தானே...?பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என
பயன் தரும் பாசிப்பயறு
  •  ·  sivam
  •  · 
சின்னம்மை, பெரிய அம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிறு ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதே போன்று காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில்பாசிப்பயிறு சிறந்த மருத்துவப் பொருளாக பயன்படுகிறது.மனத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து சாப்பிட்டால் வெயில் கால உஷ்ணக்கோளாறுகள் குணமடையும். குறிப்பபாக ஆசனவாய் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு. இது சிறந்த பருந்தாகும்.பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் வைத்து சாப்பிட்டால் பித்தமும் மலச்சிக்கலும் குணமாகும்.பாசிபருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்துஉண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்..குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக பாசிப்பயிறு மாவு தேய்த்து குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சிகைக்காய்ப்போல தேய்த்து குளித்தால் பொடுகுத் தொல்லை
பற்களை பேணுங்கள்
  •  ·  sivam
  •  · 
உடலின் ஒவ்வொரு அங்கமும், ஒவ்வொரு உறுப்புக்களும் அவசியமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு உறுப்பை அகற்றினாலும் அதன் பின்விளைவுகள் இருந்தே தீரும். இதில் பற்களும் உள்ளடங்குகிறது.பற்கள் என்பதும் கூட உடல் சமநிலையை பேணும் ஒரு அங்கம் ஆகும். அதனால் தான் இரண்டும் பக்கமும், மேல் கீழும் சம அளவில் பற்கள் காணப்படுகின்றன. பற்களை பிடுங்கும் பொழுது அந்த சமநிலை அற்று போகும். சிலருக்கு வெர்டிகோ என்ற பிரச்சினை உள்ளது. அதாவது தலை சுற்றுவது போன்ற ஒரு உணர்வு. பற்களின் பிரச்சினையால் கூட இது ஏற்பட வாய்ப்புண்டு.ஆகவே பற்களை பேணுங்கள். அலட்சியம் வேண்டாம்.பற்பசையை பாவிக்காது விட்டாலேயே பற்கள் மிக ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை மூலிகை பொடிகளை பாவியுங்கள்.என்றும் பல் தூரிகை தெரிவு செய்யும் பொழுது மென்மையான (SOFT) தூரி
கொய்யா கனியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தீமைகள்
  •  ·  sivam
  •  · 
கொய்யா (Guava) ஒரு ஆரோக்கியமான பழமாகும், இதில் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் உள்ளன. இதனை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதே நேரத்தில், சிலருக்கு இது தகுந்த முறையில் இருக்காவிட்டால் சில தீமைகளையும் ஏற்படுத்தக்கூடும்.கொய்யா கனியின் நன்மைகள்:உடல் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு:கொய்யாவில் அதிக அளவிலான C வைட்டமின் உள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும்.கூழ்மிகுந்த ஆரோக்கியம்:கொய்யாவில் நார்ச்சத்து (fiber) அதிகம் உள்ளது, இது செரிமானத்தை சீராக்க உதவுகிறது.சர்க்கரை அளவை கட்டுப்படுத்தல்:இது தமனி நோய் (diabetes) உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பயன்படும்.இதயம் ஆரோக்கியமாக்கல்:கொய்யா பிளவுகளும், விதைகளும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.தடிப்பு மற்றும் எடை குறை
"கல்லோடு ஆயினும் சொல்லி அழு"
  •  ·  sivam
  •  · 
ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரா்,ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தபோது, அவரைக் கண்ட ஏழை விவசாயி ஒருவன். கல்லோடு ஆயினும் சொல்லி அழு..!! என்ற கேள்வியைக் கேட்டான்.ஆதிசங்கரா் அவனிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" என்றாா்.அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான். சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தாா். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தாா்.அதற்கு அவன்,"எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றான்." ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா
இது கதை அல்ல. உண்மை சம்பவம்
  •  ·  sivam
  •  · 
ஒரு அடியார் குடும்பம், காசிக்குச் சென்று ஈசன் திருவிளையாடலால் அங்கேயே தங்க நேரிடுகிறது. கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள்.மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. ”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே” என்று,ஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா.. நான் இறைவன் ஈசன் சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம்” என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட “அம்மா.. நீ பெண்.தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்” என்று எத்தனையோ அறிவுரைகள் கூற
இன்றைய நாள் எப்படி?  - 26.12.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 26.12.2025வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று காலை 06.34 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.இன்று பிற்பகல் 11.41 வரை சித்தி. பிறகு வியதீபாதம்.இன்று காலை 10.37 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.59 வரை கரசை . பிறகு வனிசை.இன்று காலை 06.25 வரை மரண யோகம். பின்னர் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 09.15 முதல் 10.15 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
அர்த்தம் தெரிந்தக் கொள்வோமா?
  •  ·  sivam
  •  · 
ஆஞ்சநேயர் கோவிலுக்கு நாம் செல்லும் போது அங்குள்ள சுவற்றில் "அஞ்சிலே ஒன்றை" என்ற பாடல் இருக்கும்...அதன் அர்த்தம் எவ்வளவு அழகாக தமிழில் கவிச் சக்கரவர்த்தி கம்பர் எழுதியிருக்கிறார் என்பதை காண்போம்!!!.ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன். அவரைப் பற்றிய தமிழ் ஜால கம்பரின் அருமையான பாடல்.அஞ்சிலே ஒன்று பெற்றான்!!! அஞ்சிலே ஒன்றைத் தாவி!!!அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி!!!அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்!!!அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்!!!அழகு தமிழின் பொருள்:-(அஞ்சி =ஐந்து)அஞ்சிலே ஒன்று பெற்றான் (ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இவற்றில் காற்றுதன்மையாகிய வாயு பகவான் பெற்றெடுத்த பிள்ளை)அஞ்சிலே ஒன்றைத் தாவி (ஐம்பூதங்களில் ஒன்றான நீர் தன்
திரிபலா என்னும் அற்புத மருந்து
  •  ·  sivam
  •  · 
திரிபலா என்றால் என்ன?திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின