Posts
Latest Posts
இன்றைய ராசி பலன்கள் - 11.2.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வாழ்க்கை துணைவருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தித்து செயல்படவும்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுரிஷபம்உத்தியோகத்தில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். சுகம
இன்றைய நாள் எப்படி? 11.2,2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் தை மாதம் 28 ஆம் தேதி புதன்கிழமை 11.2.2026. இன்று காலை 11.16 வரை நவமி. பின்னர் தசமி.இன்று பிற்பகல் 12.09 வரை அனுஷம். பின்னர் கேட்டை. இன்று அதிகாலை 03.06 வரை துருவம். பின்னர் வியாகாதம். இன்று காலை 11.16 வரை கரசை. பின்னர் வனிசைஇன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
பரு வந்த தழும்பு மறைய வேண்டுமா?
  •  ·  sivam
  •  · 
பொதுவாக முகப்பருக்கள் வந்து போவதைவிட முகப்பருவால் ஏற்பட்ட தடங்களும் தழும்புகளும் மறையாமமல் இருப்பது கொடுமையானது.இதற்கு மிக முக்கியக் காரணமே நம்முடைய சமச்சீரற்ற உணவு முறை, மாசுக்கள், சருமத்தி்ற்கு பயன்படுத்தும் பொருள்கள் வை தான். அது நம்முடைய முக அழகையே கெடுத்துவிடுகின்றது.இதனை எளிய முறையில் கூட போக்கலாம். அந்தவகையில் முகப்பருக்களால் ஏற்படும் தடங்கள் மற்றும் தழும்புகளை நீக்க என்ன செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்து பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை தவறாமல் செய்த
ஜனக மகராஜா கண்ட கனவு
  •  ·  sivam
  •  · 
ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு.கனவில் அவர் படாததுன்பப்பட்டார்.அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை.நிஜம் போலவே இருந்தது.திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார். கண் விழித்தார்.கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.பகலில் எழுந்தால் மன்னனாக சகல சம்போகங்களுடன் இருப்பார்.ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது."நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?அல்லது பிச்சை
ஆவாரம் பூ
  •  ·  sivam
  •  · 
ஆவாரைச் செடியில் எல்லாவிதப்பாகங்களுமே மருத்துவத்தில் பயன் அளிப்பதாகும். ஆவாரம் பூ ஆண்குறி எரிச்சல் ஆகிய குறைபாடுகள் இருந்தால் ஆவாரம் பூவை மணப்பாகு செய்து சாப்பிட்டால் நிவர்த்தியாகும்.உடலில் நமைச்சல் இருந்தால் ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் குணமாகும். நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அருமருந்தாக ஆவாரம் விதை விளங்குகிறது.எலும்புருக்கி நோயினால் அவதிப்படுபவர்களுக்கு ஆவாரம் இலைச் சாறு மாமருந்தாக விளங்குகிறது. ஆவாரம் இலைகளைத் தேவையான அளவுக்குக் கொண்டுவந்து குளிர்ச்சியான தண்ணீரைத் தெளித்து, இடித்து சாறாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இந்த சாறை அரைலிட்டர்அளவுக்கு எடுத்துக் கொண்டு தினசரி காலை, மாலை என இருவேளை குடித்
அகத்திக்கீரையின் மருத்துவ குணங்கள்
  •  ·  sivam
  •  · 
அகத்தி கீரை (Agathi keerai) வகைகள்அகத்தியில் வெள்ளை அகத்தி, செவ்வகத்தி, சாழை அகத்தி, பேரகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என 5 வகைகள் உள்ளன. இதில், சாழை, பேரகத்தி மற்றும் சிற்றகத்தி ஆகிய மூன்றும் உணவுக்காகப் பயன்படுத்தப் படுவதில்லை. உணவாக உட்கொள்ளும் அகத்தியில் இரண்டு மட்டுமே, ஒன்று வெள்ளை நிறப் பூக்களை கொண்டது.இது பொதுவாக அகத்தி என்ற பெயரில் குறிப்பிடுவார்கள். மற்றொன்று செந்நிறப் பூக்களை உடையது இதனைச் செவ்வகத்தியென குறிப்பிடுவர். அகத்தியும், செவ்வகத்தி இந்த இரண்டும் பொதுவாக உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.அகத்தியின் சத்துகள்அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நவீன காலத்தில், அகத்தி கீரையில், 8.4 சதவீதம் புரதமும், 1.4 சதவீ
அல்வா
  •  ·  sivam
  •  · 
நம் தெனாலி ராமன் போல, கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில், துருக்கி தேசத்தில் முல்லா நஸ்ருதீன் என்ற சுஃபி ஒருவர் இருந்தார்.நல்ல புத்திசாலி. தத்துவ ஞானி. அவரைப்பற்றிய நகைச்சுவை கதைகள் பல உண்டு.ஒருமுறை முல்லா தன் சீடர்களுக்குக் வெளியூர் சென்றார். அவ்வூர் மக்களில் சிலர் அவர்களுக்கு சில்லரையாக நன்கொடை அளித்தனர். மாலையில் ஓய்வு எடுக்க ஒரு காலி சத்திரத்தை சென்று தங்கினர். மக்கள் அளித்த நனகொடை அதிகம் இல்லாததால், அவர்களுக்குள் பிரித்து தருவது கடினம் என்பதால் முல்லா அதை பிரிக்கவில்லை. சீடர்கள் சண்டை பொறுக்காத முல்லா, அவர்களுக்கு ஒரு பாடமளிக்க ஒரு யோசனை கூறினார்.முல்லா ஒரு சீடனை அனுப்பி, அப்பணத்தில் அல்வா வாங்கி வந்து பிரித்துக் கொள்ள சொன்னார். அந்த அல்வா எல்லோருக்கும் பிரிக்கும் அளவு அதிகமாக இல்லை. எனவே
நெகிழ வைக்கும் நட்பு
  •  ·  sivam
  •  · 
இணையத்தில் பார்த்த புகைப்படம்... மனதிற்கு இதமாக இருந்தது என்பதால் பகிர்கிறேன்...இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் உடல்நலக்குறைவாக இருந்ததால் CT ஸ்கேன் அவசியமாக இருந்தது.ஆனால் அந்தப் பெரிய இயந்திரம் இருக்கும் அறைக்குள் தனியாகச் செல்ல அவன் தயங்கியிருக்கிறான்.2–3 மணி நேரமாக பெற்றோர், மருத்துவர்கள்—எல்லோரும் முயன்றும் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை.அப்போது அவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அழைக்கப்பட்டான்.நண்பன் வந்தவுடனே மாயம் செய்தது போல அவனின் பயம் பாதியாக குறைந்தது.இருவரும் சேர்ந்து CT ஸ்கேன் போக வேண்டும் என்று முடிவு செய்து இருவரும் கண்களை மூடி படுத்துக்கொண்ட புகைப்படம் தான் நாம் பார்ப்பது.இருவருமே சிறுவர்கள் தான்.. இருவருக்குமே பயம் தான் ஆனாலும் அசாத்தியம் சாத்தியமானது.
கருப்பு ஏலக்காய்_என்றால்  என்ன? அதன் பயன்கள் என்ன?
  •  ·  sivam
  •  · 
ஏலக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது அதன் நறுமணமே.கருப்பு ஏலக்காய் என்றால் என்ன? அதன் பயன்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.💢 கருப்பு ஏலக்காய் என்பது வீரியமிக்க வாசனையுடன் விளங்கும் ஒரு சிறிய செடியாகும். இதில் இரண்டு வகைகள் உள்ளது - 'கருப்பு ஏலக்காய்' மற்றும் 'பச்சை ஏலக்காய்'. இவை இரண்டில் கருப்பு அல்லது மலை ஏலக்காய் தான் புகழ் பெற்ற வாசனை பொருளாகும். அதனுடைய தனித்துவம் வாய்ந்த சுவை மற்றும் வாசனையால் இதனை சமையலுக்கு அனேக மக்கள் பயன்படுத்துகின்றனர்.இந்த செடியின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதிமுக்கிய எண்ணெய்களில் ஒன்றாகும். முக்கியமாக இதனை வாசனை தெரப்பிக்கு பயன்படுத்துகின்றனர். உடல் நலத்தை பேணுவதிலிருந்து, பளபளப்பான முடியை பெறுவது வர
இன்றைய ராசி பலன்கள் - 10.2.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வரவுக்கேற்ப செலவுகள் அமையும். தந்தை வழி சொத்துகளால் ஆதாயம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பணி நிமிர்த்தமான பயணத்தால் ஆதாயம் ஏற்படும். கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். இன்ப சுற்றுலா செல்வது தொடர்பான வாய்ப்புகள் அமையும். நிதானம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு ரிஷபம்இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சிறு தொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். விளையாட்டு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனை துறைகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில அலைச்சல்கள்
இன்றைய நாள் எப்படி? 10.2,2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் தை மாதம் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.2.2026.இன்று காலை 08.46 வரை அஷ்டமி. பின்னர் நவமி.இன்று காலை 09.35 வரை விசாகம். பின்னர் அனுஷம்.இன்று அதிகாலை 02.37 வரை விருத்தி. பின்னர் துருவம்.இன்று காலை 08.46 வரை கௌலவம். பின்னர் இரவு 10.01 வரை தைத்தூலம். பின்பு கரசை.இன்று அதிகாலை 09.35 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
அலெக்ஸாண்டரின் குதிரை
  •  ·  sivam
  •  · 
மாசிடோனியாவின் விளையாட்டு மைதானம் சுட்டெரிக்கும் வெயிலிலும் ஜனத்திரளால் வழிந்து கொண்டிருந்தது..யாருக்கும் அடங்காத , தெஸ்ஸாஸி நாட்டைச் சேர்ந்த அந்த குதிரை ,மைதானத்தில் யாரையும் நெருங்கவிடாமல் அருகில் வரும் அனைவரையும் துவம்சம் செய்து கொண்டிருந்தது.. மன்னர் பிலிப் இதை அடக்கப் போகும் வீரன் யார் ? என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.." இந்த குதிரையை அடக்கி ஆளும் வீரன் இந்த நாட்டில் இல்லையா?" .. கூவிக் கூவி மாசிடோனியாவின் மானத்தை வாங்கிக் கொண்டிருந்தான்..குதிரையின் சொந்தக்காரன். . மன்னர் அருகில் அமர்ந்திருந்த சிறுவன் அலெக்சாண்டர் தனது தந்தையிடம் திரும்பத் திரும்ப தான் அந்த குதிரையைத் தான் அடக்கப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தான். விளையாட்டாக எடுத்துக் கொண்டிருந்த மன்னர் பிலிப்.. தனது மகன் சொல்வது வ