Latest Posts
- · sivam
- ·
பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும
- · sivam
- ·
முருங்கை கீரை கால்சியம் , இரும்பு , வைட்டமின் ஏ , சி சத்துக்கள் நிறைய உள்ளன . அரைக்கிலோ வெண்ணெய் மற்றும் 80 கோப்பை பாலில் உள்ள வைட்டமின் ஏ சத்து ஆகியவற்றை , ஒரு கோப்பை முருங்கை இலை சூப் மூலம் நாம் பெறலாம் . கொதிக்கும் நீரில் கீரையை முருங்கை போட்டு , ஐந்து நிமிடத்திற்கு பிறகு , உப்பு , மிளகு . தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து , பாத்திரத்தை மூடி வைக்க பின்னர் வேண்டும் . வடிகட்டி கிடைத்த சூப்பை , தினமும் காலையில் பருகி வந்தால் , அனீமியா , ஜலதோஷம் , ஆஸ்துமா குறைவதை காணலாம் .சத்தில்லாத குழந்தைகள் , முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி . மேலும் , ஆண்மை விருத்திக்கு முருங்கை சூப் உதவும் .சத்தில்லாத குழந்தைகள் , முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆர
- · sivam
- ·
கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.தோல் அரிப்பு, சொறி போன்றவற்றிற்கு கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த சாறை குடித்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இலை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து தினமு
- · sivam
- ·
*1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.**2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.**3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.**4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. .**5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.**6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடா
- · sivam
- ·
*1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது**2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.**3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. என தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அள
- · sivam
- ·
குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள்.இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும்.பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.அது சரி.... குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்..?இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள்.அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இர
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்கலகலப்பான பேச்சுக்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்துவீர்கள். வரவுகள் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பழக்கவழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். எதிலும் உணர்வுபூர்வமாக செயல்படுவீர்கள். இலக்கிய பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்ரிஷபம்குடும்ப உறுப்பினரிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். மனை விற்பனையில் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் உற்சாகமாக காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பாதியில் நின்ற பணிகளை முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சிந்தனைகளில் புதிய அனுபவம் கிட
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 8.2.2026.இன்று அதிகாலை 05.13 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று அதிகாலை 04.53 வரை சித்திரை. பின்னர் சுவாதி. இன்று அதிகாலை 02.04 வரை சூலம். பின்னர் கண்டம். இன்று அதிகாலை 05.13 வரை வனிசை. பின்னர் மாலை 06.09 வரை பத்தரை. பின்பு பவம்.இன்று அதிகாலை 04.53 வரை மரண யோகம். பின்னர் காலை 06.34 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
- · sivam
- ·
ஆவாரம் பூக்களையும், இலையையும் காய வைத்து பொடி செய்து, காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தம் அடையும். ஈரல் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.ஆவாரம் பூக்களை காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம். இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதனுடன் நாகப்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன்படுத்தலாம் .அதிக பயன் தரும்.ஆவாரம் மூலிகையின் அனைத்து பாகங்களும் நீரிழிவு, எலும்புருக்கி, கண், மூலம், நாள்பட்ட புண்கள், சிறுநீரகக் கோளாறுகள், வெள்ளை வேட்டை நோய்களையும் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணெய் போன்றவைகளை சேர்த்து ஆவாரைத் தைலம் காய்ச்சி, அதை தோலில் தடவி வந்தால் தோல் வெடிப்பு, வறட்சி, எரிச்சல் போ
- · sivam
- ·
கனகதாசர் என்ற பெரியவர் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் இளமையில் ஒரு குருநாதரை அணுகித் தமக்கு உபதேசம் பண்ண வேண்டுமென்று கேட்டார். அந்தக் குருநாதர் கனக தாசரின் தகுதியை உணர்வதற்காக அவருடைய கையில் ஒரு கனியைக் கொடுத்து, "இதை யாரும் இல்லாத இடத்தில் நீ போய்ச் சாப்பிடு" என்று சொன்னார்.அதை வாங்கிக் கொண்ட கனகதாசர் இரண்டு நாள் வரையில் அதைத் தம் கையிலே வைத்திருந்தார். பிறகு அதைக் கொண்டு வந்து குருநாதரின் திருவடியிலே வைத்து, "இதை என்னால் சாப்பிட முடியவில்லையே! தேவரீர் நான் இதை யாரும் இல்லாத இடத் தில் உண்ண வேண்டுமென்று கட்டளையிட்டீர்கள். அப்படி ஓர் இடம் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லையே!" என்றார்.""யாரும் இல்லாத இடமே உனக்குக் கிடைக்கவில்லையா? ஏதேனும் ஓர் அறைக்குள் தனியாகச் சென்று உண்ணக் கூடாதா?
- · sivam
- ·
1.பாசிட்டிவாக (நேர்மறை எண்ணங்களோடு) இருப்பவர்களோடு பழகுங்கள்...நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் (நேர்மறை எண்ணங்கள்) இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.தெரியாது "நடக்காது" முடியாது "கிடைக்காது "என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்2) உற்சாகமாக இருங்கள் :சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.3. பவர்ஃபுல்லாக உணருங்கள்:உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்ற
- · sivam
- ·
நீங்கள் ஜிகர்தண்டா குடித்திருக்கிறீர்களா…? ஆம் எனில், அதில் உடல் குளிர்ச்சிக்காகப் போடப்படும் சப்ஜா விதைகளை பார்த்திருப்பீர்கள்.அந்த சப்ஜா விதைகள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையவை.சப்ஜா விதைகளை உற்பத்தி செய்யக்கூடிய திருநீற்றுப்பச்சிலை, மிகவும் வாசனை மிகுந்தது.துளசி இனத்தைச் சேர்ந்த இது, தெய்வீக மூலிகையாக விளங்குகிறது.வெண்மை நிறத்தில் அதிகளவு பூக்களை உற்பத்தி செய்யும் இந்தச் செடி இருக்கும் இடங்களை நாடி தேனீக்கள் பறந்து வரும்.பயன்கள்:இந்த இலையை கசக்கி முகர்ந்தால் தலைவலி, நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும்.வாந்தியை நிறுத்துவதில் மிகச் சிறந்த மருந்து.ரத்த வாந்தியைக் கூட கட்டுப்படுத்தக் கூடியது.சத்துக்கள்:திருநீற்றுப்பச்சிலையில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடென்ட், பீட்டா கரோட்டின் ம