அவர்கள் வகுப்பிற்கு புதிதாக வந்திருந்தாள் மலர்விழி. அழகு என்றால் அப்படியொரு அழகு. அதனால் அவளுடன் நட்பு கொள்ள வகுப்பு மாணவிகள் அனைவரும் போட்டா போட்டி போட்டனர்.
மலர்விழி அழகிதானே தவிர மற்றபடி அவள் முகத்தில் சிறு புன்னகையும் இருக்காது. யாருடனும் பேச மாட்டாள். யாராவது நட்பு கொள்ள அவள் அருகில் வந்தால் வறட்டுப் புன்னகையுடன் பார்ப்பாள். அவ்வளவுதான். ஒரு சிறு பேச்சும் பேசமாட்டாள்.
படிப்பில் ஓரளவுக்கு சிறந்த மாணவியாகவே இருந்தாள்.
அவள் நிலையை ஆசிரியையும் அறிந்தார்.
"மலர்விழி, நீ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா? நல்லாப் படிக்கவும் செய்யறே, ஆனா உன் முகத்தில் ஒரு சிறு புன்னகை இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா? அழகுக்கு அழகு சேர்த்தது போல் இருக்கும்" என்றார்.
அவருக்கும் ஒரு சிறு வறட்டுப் புன்னகையையே பதிலாக தந்தாள் மலர்விழி.
அதோடு விட்டுவிட்டார் ஆசிரியை.
“அவள் இயல்பே அப்படித்தான் போலும். நம்மால் என்ன செய்ய முடியும்?” என்று நினைத்துக் கொண்டார் ஆசிரியை.
மாணவிகளும் அவளிடம் நெருக்கம் காட்ட முயலவில்லை.
இந்த நிலையில்தான் பள்ளியின் சார்பில் ஒரு செய்முறை கண்காட்சிக்கு மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இருபுறமும் மாணவிகள் இரண்டு இரண்டு பேராக பிரிந்து ஜோடி போட்டு வரிசையாக சென்றனர். மலர்விழி ஜோடியாக கோமதி கிடைத்திருந்தாள்.
வழியில் கோமதியும் மலர்விழியுடன் பேச பல வழிகளிலும் முயற்சித்தாள். ஆனால் முடியவில்லை.
அவர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த ராமலிங்கா மில் பஞ்சாலைக்குச் சென்றனர். அந்த ஆலை முழுவதும் சுற்றி வந்தனர்.
பஞ்சு எப்படி நூலாகிறது? பின்னர் எப்படி ஆடையாகிறது? என்பதை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்தனர்.
இடையில் சாப்பிடச் சென்றனர். அந்த ஆலையின் சார்பில் மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
மாணவிகள் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டனர். கோமதி முதல் ஆளாக சாப்பிட்டு எழுந்தாள். இலையைக் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டாள்.
மலர்விழி மெதுவாகச் சாப்பிட்டாள். எல்லா மாணவிகளும் எழுந்து விட்டனர். மலர்விழி மட்டும் உட்கார்ந்திருந்தாள்.
எழுந்த மாணவிகள் மீண்டும் ஆலையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினர்.
கோமதி மட்டும் மலர்விழி அருகிலேயே நின்றாள். அவளும் சாப்பிட்டு முடித்தாள்.
'இலையை எங்கே எடுத்துச் செல்வது?' என்று தெரியாமல் கையில் பிடித்தபடி விழித்தாள்.
கோமதி அவள் கையிலிருந்த இலையை வாங்கினாள்.
"கொண்டா நான் போய் போட்டுட்டு வர்றேன்" என்றவள் விறுவிறுவென்று குப்பைத் தொட்டியை அடைந்து அதில் போட்டு விட்டு வந்தாள்.
"வா போகலாம்" என்றாள்.
இருவரும் ஆலைக்குள் சென்றனர். அந்த நாளை ஆலையிலேயே கழித்தனர். மாணவிகள் அங்கிருந்தே வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்
ஆசிரியையிடம் விடை பெற்று அவர்களும் கிளம்பிச் சென்றனர்.
மறுநாள்.
பள்ளிக்கு வந்த மலர்விழி கோமதியைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தாள்.
அதைப் பார்த்த வகுப்பு மாணவிகள் அனைவரும் அதிசயப் பட்டனர்.
கோமதி அதைப் பயன்படுத்திக் கொண்டாள். மலர்விழியிடம் பேசத் தொடங்கினாள். அவளிடமிருந்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பதிலாக கிடைத்தன.
இன்னும் சில மாணவிகளும் மலர்விழியிடம் நெருங்கினர். ஆனால் எல்லாரையும் விட கோமதியிடம்தான் சற்றே அதிகமாக ஒட்டிக் கொண்டாள் மலர்விழி.
சில நாட்களிலேயே மலர்விழியின் நிலையை புரிந்து கொண்டாள் கோமதி.
ஒருநாள் தன் வீட்டிற்கு மலர்விழியை அழைத்துச் சென்றாள் கோமதி.
கோமதி வீட்டில் எல்லாருமே இயல்பிலேயே கலகலப்பாக இருந்தனர். சிரிக்கச் சிரிக்கப் பேசினர். அப்பாவும், அம்மாவும் தங்கள் பிள்ளைகள் மேல் பாசத்தை வாரிவாரி வழங்கினர். மலர்விழியிடமும் அதே பாசத்தைப் பொழிந்தனர்.
அவர்கள் பாசத்தில் நெக்குருகிப் போனாள் மலர்விழி.
அன்றுதான் தன் கஷ்டத்தை முதல் முறையாக உடைத்தாள் மலர்விழி.
"நானும் உங்க வீட்டில் பிறந்திருக்கலாம்” என்றாள்.
அதன் பின்னர் தங்கள் வீட்டு நிலையையும் கூறினாள்.
மலர்விழி அவர்கள் வீட்டில் ஒரே பிள்ளை. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தினமும் சண்டைதான், அடிதடிதான். அவர்கள் சண்டையில் மலர்விழி பற்றியே மறந்து போனார்கள்.
அன்பு, பாசம், அரவணைப்பு என்று ஒரு சிறிதும் மலர்விழிக்கு கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே சோகச் சித்திரமாக அவள் வலம் வந்தாள்.
மலர்விழியின் வீட்டிற்கு ஒருநாள் சென்றாள் கோமதி. அவள் அப்பா, அம்மா இருவரும் இரு துருவங்களாக இருந்தனர்.
அவர்கள் இருவரிடமும் தனித்தனியாகப் பேசினாள் கோமதி.
"உங்கள் சண்டையால் மலர்விழி மேல நீங்க அக்கறை காட்டறது இல்லை. அது அவளோட மன நிலையை மிகவும் பாதிச்சிருக்கு. அதனால அவளோட எதிர்காலம் பாழாயிடும். நீங்க சண்டைக்காரர்களாகவே இருங்கள். ஆனால் மலர்விழி கிட்ட மட்டும் அன்பா இருங்க" என்றாள் கோமதி.
அதன் பின்னர் மலர்விழி மேல் பெற்றோர் அக்கறை காட்டினர். அவளுக்காக ஒன்று சேர்ந்தது போல் நடித்தவர்கள் நிஜமாகவே ராசியாகி விட்டனர்.
வருகிறாள். மற்ற மலர்விழி இப்போதெல்லாம் புன்னகை நிறைந்த முகத்துடன் பள்ளிக்கு மாணவிகளிடமும் நன்றாக கலகலவென்று பழகுகிறாள்.
அவள் புன்னகை முகத்தைப் பார்த்த ஆசிரியை மலர் விழியிடம்,
"ஆஹா இந்தப் புன்னகை அப்படியே உன்னை தேவதை போல காட்டுது” என்றார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் கைகூடும். கடன் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பயணங்கள் கைக்கூடி வரும். எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். கல்வியில் புரிதல்கள் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
ரிஷபம்
பொது வாழ்வில் செல்வாக்கு கூடும். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். நினைத்த சில காரியத்தை முடிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் லாபம் மேம்படும். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். பணி நிமித்தமான முயற்சிகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். பல நாட்கள் தடைப்பட்ட வருமானம் கிடைக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கடகம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பகள் கிடைக்கும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் சிறுசிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு காரியங்களில் விழிப்புணர்வு வேண்டும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
சிம்மம்
நினைத்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வாகனத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது குறைத்துக் கொள்ளவும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கன்னி
திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உருவாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாடுகள் வரும். பிற இன மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மகிழ்ச்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கல்வியில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரம் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் சில மாற்றம் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளால் மதிப்புகள் உயரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
மனதளவில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வம் இன்மை உண்டாகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். வரவேண்டிய சில வரவுகள் தாமதமாகும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
மகரம்
பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களின் வருகை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் மேன்மையை ஏற்படும். உத்தியோகத்தில் சில வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நன்மை கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அரசால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாகும். நினைத்ததை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்கல்வியில் தெளிவுகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும் எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள் வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும் உத்தியோகத்தில் பொறுமை வேண்டும் புதுவிதமான கனவுகள் பிறக்கும் கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி திங்கட்கிழமை 8.12.2025
இன்று இரவு 9.51 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று காலை 09.39 வரை புனர்பூசம் . பின்னர் பூசம்.
இன்று அதிகாலை 01.08 வரை சுப்பிரம். பின்னர் இரவு 10.37 வரை பிராமியம். பிறகு ஐந்திரம்.
இன்று காலை 10.37 வரை பவம். பின்னர் இரவு 09.51 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று காலை 6.17 வரை சித்தயோகம். பின்னர் காலை 9.39 வரை அமிர்தயோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
பிரபல ஹாலிவுட் நடிகர் கேரி ஹிரோயுகி தகவா (75) காலமானார். ஜப்பானில் பிறந்த கேரி ஹிரோயுகி தகவா, பல ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். தான் நடித்த ஹாலிவுட் படங்களில் பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். ‘த லாஸ்ட் எம்பரர்’, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘லைசன்ஸ் டு கில்’, ‘அமெரிக்கன் மி’, ‘ரைசிங் சன்’, ‘மார்டல் கொம்பட்’, ‘பேர்ல் ஹார்பர்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வசித்து வந்த அவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 4-ஆம் தேதி காலமானார். இதை அவருடைய மானேஜர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பேரரசு காட்டமாக தெரிவித்தார்.
கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. இதன் கதையினை பொன்.பார்த்திபன் எழுதியிருக்கிறார். லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், தருண், கெவின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் மற்றும் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, “கதாநாயகன் லெனினைப் பார்த்தால் புதியவர் போலத் தெரியவில்லை. அனுபவசாலி போலத் தெரிகிறார். கதாநாயகி அஸ்மினுக்கும் அவருக்கும் உள்ள ஜோடிப் பொருத்தம் நன்றாக உள்ளது. கமல் -ஸ்ரீதேவி , ரஜினி - ஸ்ரீபிரியா போல இந்த லெனின் - அஸ்மின் ஜோடியும் நன்றாக இருக்கிறது. இந்த ஜோடி தொடர்ந்து நடிக்க வேண்டும்.
ஒரு காலத்தில் கதை , கதாசிரியருக்கு முக்கியத்துவம் இருந்தது. கதையை வைத்துக்கொண்டு பிறகுதான் கதாநாயகர்களைத் தேடுவார்கள். ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், டி.ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற இயக்குநர்களுக்குப் பிறகு கதை திரைக்கதை வசனம் என்று முழுமையாக அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
பிறகு கதை என்ன என்பதை விட, யார் கதாநாயகன் என்ற காலம் வந்தது. கதாநாயகர்கள் கதையை முடிவு செய்யும்படி ஆனது. இப்போது கதையை தயாரிப்பாளர் முடிவு செய்வதில்லை. கதாநாயகன் தான் முடிவு செய்வார். ஆனால் இந்தத் தயாரிப்பாளர் கதையைத் தேர்ந்தெடுத்ததற்குப் பாராட்டுகிறேன். அது படத்தின் மீது நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இது முறையாக எடுக்கப்பட்ட படமாகத் தோன்றுகிறது.
தயாரிப்பாளருக்குக் கதை பிடித்துவிட்டால் நம்பி ஒப்புக்கொண்ட பிறகு, இயக்குநரைத் தொந்தரவு செய்யக்கூடாது. அது சித்திரவதையாக மாறிவிடும். இயக்குநர் சுதந்திரமாக இருந்தால் தான் அந்தப் படைப்பு சரியாக வரும்.
இந்த படத்தில் பாடியுள்ள சின்மயி ஏன் இங்கே வரவில்லை? இயக்குநர் யார் என்று தெரிந்துதான் பாட்டு பாடினாரா? இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சின்மயி ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் அவர் நடந்து கொண்டிருக்கிறார். தெரியாமல் பாடிவிட்டேன் என்கிறார், வருத்தம் தெரிவிக்கிறார். ஒரு படத்தில் பாடல் பாடும் போது என்ன சூழல்? என்ன வரிகள் என்பதைத் தெரிந்து கொண்டு தான் பாட வேண்டும். எல்லாமும் பாடி முடித்த பிறகு வியாபாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது.
ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இயக்குநர் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் தவறானதாகும். சின்மயி இப்படிச் சொல்வது அந்த இயக்குநருக்கு மட்டும் அவமானம் அல்ல. ஒவ்வொரு இயக்குநருக்கும் அவமானம். அதற்காக சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்.
இன்று ஒரு படம் எடுப்பது என்றால் உயிர் போகிற விஷயமாக இருக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு படம் எடுக்கிறார்கள். ஆனால் சுலபமாக இப்படி இடையூறு செய்கிறார்கள். எஸ் . ஜானகி, பி. சுசீலா போன்ற பாடகிகள் எவ்வளவு பெரிய பாடகிகள். இந்தத் திரையுலகில் அவர்கள் எல்லாவிதமான பாடல்களையும் பாடினார்கள். அப்போதெல்லாம் இப்படியா நடந்தது?
குறிப்பாக இயக்குநரை, தயாரிப்பாளரை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. பாடி முடித்து விமர்சனம் செய்வது, தொந்தரவு தருவது தவறானதாகும்” என தெரிவித்தார்.








