நடன இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர் பிரபுதேவா. துவக்கத்தில் சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அப்படி அவர் நடனமாடிய எல்லா பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். இவருக்கென ரசிகர்களும் உருவாக்கினார்கள். குறிப்பாக இவர் நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். ஒரு கட்டத்தில் இயக்குநராக மாறி தமிழ் தெலுங்கு மொழிகளில் சில திரைப்படங்களை பிரபுதேவா இயக்கினார்..
அப்படியே பாலிவுட்டுக்கு சென்று சல்மான்கானை வைத்து சில படங்களை இயக்கினார். தற்போது நடன இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில்தான், மும்பையில் உள்ள தனது வீடுகளை சமீபத்தில் பிரபுதேவா விற்றது தெரியவந்திருக்கிறது.
அவருக்கு சொந்தமான இரண்டு அப்பார்ட்மெண்ட்டுகளை அவர் விற்பனை செய்துள்ளார். தென் மும்பை மகாலட்சுமி பகுதியில் உள்ள பிரம்மாண்ட குடியிருப்பில் 32 மற்றும் 33வது தளங்களில் இருந்த அவரின் இரண்டு வீடுகளைத்தான் அவர் விற்பனை செய்திருக்கிறார். 2012ம் வருடம் வாங்கிய இந்த இரண்டு வீடுகளும் தற்போது 14.80 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் பத்திரப்பதிவு நடந்ததாக கூறப்படுகிறது.
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இப்படம் கடந்து 9ம் தேதி ரிலீசாகவிருந்தது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால் படம் வெளியாகவில்லை. எனவே, படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முதலில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. ஆனால் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால் அந்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திலே நடக்கலாம் என உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது.
இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டதால் படத்தின் தயாரிப்பாளர் வழக்கை நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றார். மேலும் மறுதணிக்கைக்கும் விண்ணப்பித்தார். ஆனால் 45 நாட்களுக்கு பிறகுதான் படம் மறுதணிக்கை செய்யப்பட்டது. அப்போது படத்தில் வரும் சில அரசியல் வசனங்களை சென்சார் போர்ட் மியூட் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது
குறிப்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லி ஆகியோர் இந்த படத்தில் ஒரு காட்சியில் செய்தியாளர்களாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் கேள்வி கேட்டு விஜய் பதில் சொல்வது போல காட்சியை எடுத்திருக்கிறார்கள். அந்த காட்சியில் வரும் வசனங்களைத்தான் தணிக்கை வாரியம் மீட் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் சூழல், 1991-ஆம் ஆண்டு வளைகுடா போரின் போது ஏற்பட்ட மோசமான சுற்றுச்சூழல் பேரழிவை மீண்டும் நினைவூட்டுகிறது.
அன்று குவைத்திலிருந்து பின்வாங்கிய ஈராக் படைகள், சுமார் 750-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளுக்குத் தீ வைத்தன. இதனால் வெளியேறிய கரும்புகை பல மாதங்களாக வானத்தை மறைத்து, பகலையே இரவாக்கியது. இந்த நச்சுப்புகை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து, இமயமலை பகுதிகளான காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் 'கருப்பு பனிப்பொழிவு' ஏற்பட காரணமாக அமைந்தது.
தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் மீண்டும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன.
கனடாவின் கால்கரி சர்வதேச விமான நிலையத்தில் (YYC) சுமார் 7.5 லட்சம் டாலர்களுக்கும் அதிக மதிப்புள்ள 'கிரிஸ்டல் மெத்' (Crystal Meth) போதைப்பொருள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில், கனடா வான்வழி போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் (CATSA) சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டறியப்பட்டது.
சோதிக்கப்பட்ட ஒரு பயணப் பையினுள் (Checked bag) தனித்தனியாக சுற்றப்பட்ட மூன்று பொதிகள் இருந்தன. அவற்றில் மொத்தம் 15.5 கிலோகிராம் எடையுள்ள படிக வடிவிலான போதைப்பொருள் இருந்தது.
இதன் சந்தை மதிப்பு சுமார் 780,000 டொலர்கள் என காவல்துறை மதிப்பிட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, வன்கூவ நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ஒரு விமானத்திற்குள் புகுந்த காவல்துறையினர், சந்தேக நபரை அதிரடியாகக் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் வன்கூவர் வழியாக நியூசிலாந்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர் 38 வயதான லாயிட் டீ மாட்டாஃபா (Lloyd Tei Mataafa) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏற்றுமதி செய்ய முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இன்று (வெள்ளிக்கிழமை) கால்கரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் நீங்கும். பயனற்ற அலைச்சல்களை தவிர்க்கவும். கலை பணிகளில் சிந்தித்து செயல்படவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இலக்குகளை நோக்கி செயல்களில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். புதுவித பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மற்றும் பாக்கிகள் வசூலாகும். தெளிவுகள் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்டஎண் : 9
அதிர்ஷ்டநிறம் : வெண் மஞ்சள்
கடகம்
எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்டஎண் : 5
அதிர்ஷ்டநிறம் : சில்வர்
சிம்மம்
குடும்பத்தினரை விட்டுக் கொடுத்து பேசுவதை தவிர்க்கவும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். திடீர் பயணங்கள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். அலுவலக பணிகளில் ஆணவம் இன்றி செயல்படவும். செய்தொழிலில் விவேகம் வேண்டும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கன்னி
தள்ளிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் ஒற்றுமை ஏற்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் செல்ல நேரிடும். வியாபார பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். உழைப்பு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விருச்சிகம்
செயல்களில் ஆர்வமின்மை ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விவசாயத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பொன் பொருள் மீது ஆர்வம் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்டஎண் : 4
அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்சு
தனுசு
உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மகரம்
முயற்சிக்கு ஏற்ப வெற்றியும் பாராட்டும் கிடைக்கும். புது விதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதுவிதமான கனவுகளை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். முத்திரை பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். தெளிவுகள் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான நிலை ஏற்படும். வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் மறைமுகமாக இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். இணையம் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
மற்றவர்களை பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். கல்வி பணிகளில் பொறுமை வேண்டும். தூர தேச பயண சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில செய்திகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். துணைவருடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்டஎண் : 8
அதிர்ஷ்டநிறம் : வெளிர் நீலம்
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.3.2026.
இன்று அதிகாலை 04.59 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று அதிகாலை 05.11 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.
இன்று அதிகாலை 02.11 வரை சுப்பிரம். பின்னர் இரவு 11.42 வரை பிராம்மியம். பிறகு ஐந்திரம்.
இன்று காலை 04.59 வரை பவம். பின்னர் மாலை 04.43 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று காலை 06.18 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
டான்சன், எகிடோ இரு புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது.
ஒரு வளைவில் திரும்பும்போது நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒருபுறத்தில் வேலைப்பாடுடன் கூடிய அழகிய பட்டுச் சேலையைக் கட்டியிருந்த அழகான இளம்பெண் அடுத்த பக்கம் போவதற்கு முடியாமல் நின்றுகொண்டிருந்தாள்.
“இங்கே வா!” என்று கூப்பிட்ட டான்சன் அவளைத் தூக்கிக்கொண்டு சகதியான தெருவின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்குக் கொண்டு போய் சேர்த்தார்.
அன்று இரவு மடத்திற்குத் திரும்பும்வரை எகிடோ எதுவும் பேசாமல் வந்தான். அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “நம்மைப் போன்ற புத்த பிட்சுகள் பெண்கள் அருகில் செல்வதுகூடத் தவறு. முக்கியமாக இளமையும் அழகும் வாய்ந்த பெண்கள் பக்கத்தில் செல்லவே கூடாது.
நீ ஏன் அவளைத் தொட்டுத் தூக்கிகொண்டு சென்றாய்?” என்றார். “நான் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டேன். நீதான் அந்தப் பெண்ணை இன்னும் சுமந்துகொண்டிருக்கிறாய்” என்றார்.
இப்படித்தான் நம்மில் பலரும் தேவையில்லாத பல விஷயங்களை, பிரச்சினைகளை, கஷ்டங்களைத் துாக்கிச் சுமந்து கொண்டிருக்கின்றனர்.
ஒன்று, பிரச்சினைகளை மனதின் உள்ளேயே பூட்டி வைத்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்லது பிரச்சினைகளைத் துாக்கிச் சுமந்துகொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம்.
அல்லது, பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடுவிடுகிறோம். பிரச்சினைகளை மனதில் இருந்து துாக்கியெறிந்து, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களே வெற்றி எனும் இலக்கை அடைகிறார்கள்.
கொய்யா, பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கொய்யா இலைகளில் பல ஆரோக்கிய குணங்கள் உள்ளன. இந்த இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
மேலும், உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம். கொய்யா இலையை நசுக்கி, முகப்பரு புள்ளிகளில் தடவவும். வறண்ட சருமத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு கப் கொய்யா இலை தண்ணீரை பயன்படுத்தலாம்.
கொய்யா இலையின் சில அழகுக் குறிப்புகள் இங்கே..
எண்ணெய் சருமத்திற்கு :
தேவையான பொருட்கள் :
• ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்
• ஐந்து தேக்கரண்டி தண்ணீர்
• இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு
செய்முறை :
கொய்யா இலைகள், தண்ணீரைக் கலந்து பேஸ்ட் செய்யவும்.
ஒரு கிண்ணத்தில், இரண்டு டேபிள் ஸ்பூன் பேஸ்ட் எடுத்து, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலக்கவும்.
இதை உங்கள் முகம், கை, கழுத்து பகுதிகளில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
டிப்ஸ்: அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தவும், உங்கள் சருமத்தை தெளிவாக வைத்திருக்கவும் இதை தினமும் பயன்படுத்தவும்.
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு :
தேவையான பொருட்கள் :
• ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்
• ஐந்து தேக்கரண்டி தண்ணீர்
• மஞ்சள்- சிட்டிகை
• ஒரு தேக்கரண்டி- கற்றாழை ஜெல்.
எப்படி செய்வது?
கொய்யா இலைகள், தண்ணீரைக் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் பேஸ்டுடன், ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்கவும்.
இதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
டிப்ஸ்: சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு 2-3 முறை இதை பயன்படுத்தவும்.
தோல் எரிச்சலுக்கு :
தேவையான பொருட்கள் :
• ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்
• ஒரு கப் தண்ணீர்
எப்படி செய்வது?
ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை ஒரு கப் தண்ணீருடன் சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
தீயை அணைத்து, தண்ணீரை வடிகட்டி இலைகளை அகற்றவும்.
வடிகட்டிய தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும்.
ஆறியதும் ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றவும்.
உங்களுக்கு சென்சிட்டிவ் சருமம் இருந்தால், உங்கள் முகத்தை கழுவிய பின் இந்த ஸ்ப்ரேயைப் பயன்படுத்தவும்.
கொசு கடித்தால் அல்லது மற்ற தோல் எரிச்சல் இருந்தால் அதன்மீத ஸ்பிரே செய்யலாம்
டிப்ஸ்: முகப்பருக்கள் உள்ள சருமத்திற்கு மாஸ்க் பயன்படுத்த விரும்பினால், டீ ட்ரீ ஆயில் சில துளிகள் சேர்க்கவும்.
தலைமுடிக்கு :
முடி உதிர்வதை தடுக்கவும் கொய்யா இலை பயன்படுகிறது. உடலுக்கு ஆக்ஸிஜனேற்றிகள் உருவாக்கும் கொய்யா இலைகளை வேகவைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு கைப்பிடி கொய்யா இலைகள் சேர்த்து, சுமார் 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு இது மிதமான சூட்டில் இருக்கும் போது, உங்கள் முடியில் ஒவ்வொரு பகுதியாக பிரித்து அப்ளை செய்து, மெதுவாக மசாஜ் செய்யவும்.
மசாஜ் செய்வது இரத்த அழுத்தத்தை மேம்படுத்துகிறது, இது நுண்ணறைகளுக்கு அதிக ஊட்டச்சத்தை பெற உதவுகிறது. பிறகு ஒரு டவலால் தலைமுடியை போர்த்தி, 2 மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு சாதரண நீரில் கழுவவும்.
உங்கள் தலைமுடியை பளபளப்பாக வைத்திருக்க வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்துங்கள்.










