sivam

  •  ·  Moderator
  • 479 views
  • More
Friends
Empty
·
Added a post
·

அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார்..!!

அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி.

''ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!'' என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான்.

சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.

முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்து விட்டார். இதைஅறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றாள்.

பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்து விட்டது.

அவள் பானையுடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த வயோதிகர் அந்த குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி ''கல் எங்கே?'' என மனைவியைக் கேட்டார். எதுவும் அறியாமல் அவள் விழிக்க, ஆற்றிற்கு சென்று பல மணி நேரம் தேடியும் பலனின்றி திரும்பினார்.

சில தினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் முதியவரை பார்க்கும் போது, அவர் நடந்ததை கூற அர்ஜுனன் கண்ணனிடம், ''இவர் அதிர்ஷ்டக்கட்டை,'' என்றான். அதை ஆமோதித்த கண்ணன், ''இந்த முறை நீ இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு,'' என்றார்.

அர்ஜுனனும், அதைக் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, ''இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தை கொடுத்து விடும்?'' எனக் கேட்டான். எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,'' எனக்கூறிய கண்ணன் அர்ஜுனனுடன் முதியவரை பின் தொடர்ந்தார்.

செல்லும் வழியில் மீனவர் ஒருவர் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி முதியவரிடம் கேட்டான்.

யோசித்த முதியவர், இந்தக் காசுகள் எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டு புண்ணியமாவது மிஞ்சட்டும் என தீர்மானித்தார். அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார்.

இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்த அவர், மீனின் வாயைப் பிளந்து பார்த்தார்.

அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார். அது அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல்.

சந்தோஷ மிகுதியால் 'சிக்கியாச்சு' என்று கூச்சலிட்டார். அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவரிடம் கொள்ளையடித்த திருடன் வர, அவன்

திடுக்கிட்டு, தன்னை தான் முதியவர் கூறுகிறார் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில், கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர். அவனை சிறையில் அடைத்து விட்டு, அவன் வீட்டிலிருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அனைத்தையும் முதியவருக்கு கொடுத்தனர்.

அர்ஜுனன் கண்ணனிடம், ''வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள். அதிலும் இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்?'' என்று கேட்டான்.

கண்ணன் சிரித்துக்கொண்டே… ''இவர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல், மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை. இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்றாலும், தனக்கு உதவா விட்டாலும், இன்னொரு உயிராவது வாழட்டுமே என கருதினார். இந்த புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கும் மேலாகவே அடைந்தார்.

பிறருக்கு நல்லதை நினை உனக்கான நல்லது தானாகவே நடக்கும்..!!

  • 74
·
Added article
·

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அமெரிக்காவுக்கு யானை குட்டி ஒன்றை அனுப்பிய நிலையில் அது குறித்து கேள்விப்பட்ட அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடி போட்ட உத்தரவு தொடர்பான செய்தி தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் பிதாமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருடைய நடிப்பின் சாயல் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும் என்பதும் தெரிந்ததே. ஒரு நடிகர் வாழும் போதே அவருக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்தது என்பதும் உலகம் முழுவதும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மட்டுமே.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது கடந்த 1962 ஆம் ஆண்டு அமெரிக்க பூங்கா ஒன்றுக்கு வரும் குழந்தைகள் விளையாடுவதற்காக யானை குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு சிவாஜி கணேசன் அனுப்பிய யானை குட்டி சென்றது.

அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் அந்த யானை குட்டியுடன் விளையாடிய செய்தி ஊடகங்களில் பரபரப்பான நிலையில் இது குறித்து கென்னடி கேள்விப்பட்டார். உடனடியாக சிவாஜி கணேசன் யார்? அவருடைய பின்னணி என்ன என்பதை அறிய முயற்சி செய்தார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்ட அமெரிக்க அரசு, சிவாஜி பற்றிய முழு விவரங்களையும் கேட்டது.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் சிவாஜி கணேசன் பற்றிய தகவல்களை அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்து பார்த்து ஆச்சரியமடைந்த கென்னடி உடனடியாக சிவாஜி கணேசன் அமெரிக்க அரசின் விருந்தினராக சுற்றுலா வருவதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.

இதன்படி சிவாஜி கணேசனுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று கொண்ட சிவாஜி கணேசன் அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்கா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு நடிகர் அமெரிக்காவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது அதுவே முதல்முறை. இந்த பயணத்தின் போது தான் உலகின் மிகச்சிறந்த நடிகர் என்று அழைக்கப்பட்ட மார்லன் பிராண்டோவை சிவாஜி கணேசன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள பல இடங்களுக்கு சிவாஜி கணேசன் சுற்றுப்பயணம் செய்த போது அங்குள்ள இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்த பயணத்தின்போது அவர் அமெரிக்க அதிபர் கென்னடியையும் சந்தித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சிவாஜி கணேசன் சென்னை திரும்பியபோது அப்போதைய நடிகர் சங்க தலைவராக இருந்த எம் ஜி ஆர் மாலை அணிவித்து சென்னை விமான நிலையத்தில் சிவாஜியை சிறப்பாக வரவேற்றார். அதுமட்டுமின்றி சிவாஜியை நடிகர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

  • 84
·
Added a post
·

கரூர் செல்ல ஈரோடு பஸ் ஸ்டேண்டில் நின்ற ஒரு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். (நடுவுல தான்..தாய் சொல்லை தட்டாதே)

பஸ் ஓரளவு காலியாய் இருந்தது அப்போ ஒரு பெரியவர் வந்து "தம்பி பக்கத்துல ஆள் வருதா?"

" ஆமா(பொய்) வேற எங்கயாவது உக்காருங்க"

சில நிமிடம் கழித்து டிப் டாப்பாய் ஒரு ஆசாமி "சார் பக்கத்துல ஆள் வருதா?"

" ஆமா(மறுபடியும் பொய்). ஏன் சார் பஸ்ல அவ்வளவு இடம் இருக்குல்ல அங்க போய் உக்காரலாம்ல என்று நினைத்ததை அவர் உணர்ந்து வேறு இடம் சென்று அமர்ந்து கொண்டார்.

ஓரளவு பஸ் நிரம்பி விட்டது.. இப்போ ஒரு பையன் வந்தான். அழுக்கு சட்டை அழுக்கு பேண்ட் " சார் பக்கத்துல ஆள் வருதா?"

நான் இனி பொய் சொல்ல முடியாதென்றெண்ணி "இல்ல யாரும் வரல ஏன் ?'

இல்ல நான் உக்காரணும்"

" சரி உக்காரு" ஒரு வித நெருடலுடன் சொன்னேன். அவன் உடனே தான் கொண்டு வந்திருந்த கூடையை என் அருகில் வைத்து விட்டு கீழிறங்கி எங்கேயோ சென்று விட்டான்.

கூடைக்குள் அழுக்கு துணிகள்.. அதிலிருந்து துர் நாற்றம் வேறு.

என்னடா இது பிரபுவுக்கு வந்த சோதனை ?!

முதல்ல கேட்ட அந்த பெரியவர் அல்லது டிப் டாப் ஆசாமி இருவரில் யாருக்கேனும் இடம் கொடுத்திருக்கலாம். இப்படி ஆகிருச்சேன்னு கவலை பட்டுக்கொண்டே அந்த கூடையை மெல்ல அழுத்தி பார்த்தேன். (என் பையன் அடிக்கடி என்கிட்ட வந்து " ஏம்ப்பா ! ஈரோட்டுக்கெல்லாம் தீவிரவாதிங்க வருவங்களாப்பா" னு )

அந்த கூடை முழுதும் அழுக்கு துணிகள்.

தீடிரென சத்தம் எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கி ஓட துவங்கினார்கள் எனக்கு என்னென்னே புரியலை.

பின்பு தான் புரிந்தது இந்த பஸ் கிளம்பும் முன்பாக ஒரு பிரைவேட் பஸ் கிளம்ப தயாரான பொழுது அனைவரும் இறங்கி அதை நோக்கி ஓடினர். நான் வேற நடுவுல உக்காந்துருக்கேன் . நான் போறதுக்குள்ள அந்த பஸ்ல சீட் நிரம்பிடும். இந்த பஸ் கிளம்ப இன்னும் தாமதம் ஆகும்போல தெரிந்தது. இந்த கூடைக்காரன வேற காணோம்.

திடீரென்று பஸ்சுக்கு வெளிய இருந்து என் ஜன்னலோரம் அவன் வந்து

"சார் சார் அந்த கூடையை கொடுங்க கூடையை கொடுங்க" னு கத்தினான்.

நான் எதுக்கு னு கேட்டேன்.

"சார் சார் கூடையை கொடுங்க சார் நான் அந்த பஸ்ல ஏறனும்"

சரி இந்தா னு சொல்லி என் என் இரு விரல்களால் அந்த கூடையை வேண்டா வெறுப்பாய் தூக்கி அவனிடம் நீட்டினேன்.

.அவன் கூடையை வாங்கியவுடன் சொன்னான்

" சார் நீங்க மெதுவா வாங்க நான் உங்களுக்கு அந்த பஸ்ல சீட் போட்டு வைக்கிறேன்" னு

நான் யாரை அழுக்கு பையன்னு நெனச்சேனோ, யார் கூட போனா என் பயணம் இனிக்காதுன்னு நெனச்சேனோ, அவன் சொல்றான் வாங்க சார் உங்களுக்கு சீட் போட்டு வைக்கிறேன்னு.

பள்ளியிலும் கல்லூரியிலும் தான் பாடம் நடத்திட்டு பரீட்சை வைப்பாங்க.

ஆனால் வாழ்க்கையில் பரீட்சை வெச்சுட்டுத்தான் பாடம் நடத்துவாங்கனு புரிஞ்சுகிட்ட ஒரு தருணம் அது.

நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனும் நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்க இறைவனால் அல்லது இயற்கையால் அனுப்பப்படுகிறான் என்பதை நான் நம்புகிறேன்.

அந்த பையன் அருகே அமர்ந்து நான் போன அந்த இரண்டு மணி நேர பயணத்தில் துர்நாற்றம் அடிக்கவில்லை. நல்ல மனத்தின் மணம்தான் வீசியது......

  • 89
·
Added a post
·

1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.

3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.

6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.

8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.

9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.

10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

12. சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.

  • 91
·
Added a post
·

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், "இந்தக்கடல் மாபெரும் திருடன்", என்று.

கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமான மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், "இக்கடல் பெரும் கொடையாளியப்பா...", என்று.

அதே கடலில் ஒருவன் நீந்தி சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், "இக்கடல் மக்களை கொன்று குவிக்கிறதே", என்று.

ஒரு வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கடற்கரையில் எழுதினார், "இந்தக்கடல் ஒன்றே போதும், நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்.!", என்று.

ஒரு மாபெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்து விட்டு சென்றது.

பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே. இவ்வுலகை ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் பார்க்கிறார்கள். நீயும் தூய மனதோடு உலகைப் பார் அழகாக இருக்கும்.
  • 104
·
Added a post
·

மரியாதைக்குரிய ஒரு பள்ளி ஆசிரியர் சமீபத்தில் ஓய்வு பெற்றிருந்தார்.

அவரும் அவரது மனைவியும் போபாலில் உள்ள ஒரு ஃப்ளாட்டில் வசித்து வந்தனர்.

தசரா பண்டிகைக்கு, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்தனர்.

செல்வதற்கு முன், ஆசிரியர் தனக்குள் நினைத்துக் கொண்டார்.

“நாம் இல்லாதபோது, ​​ஒரு திருடன் உள்ளே நுழைந்தால் என்ன செய்வது? வீட்டில் பணம் இல்லாவிட்டாலும், அலமாரிகளை உடைத்து எல்லா இடங்களிலும் குழப்பம் விளைவிக்கலாம்!”

எனவே, தனது வீடு சேதமடையாமல் இருக்க, அவர் மேசையில் ₹1000-மும் மற்றும் ஒரு கடிதமும் வைத்தார்.

"அன்புள்ள தெரியாத திருடனே!

என் வீட்டிற்குள் நுழைய நீங்கள் எடுத்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நான் ஒரு நடுத்தர வர்க்க மனிதன்,

என் ஓய்வூதியத்தில் மட்டுமே வாழ்கிறேன்.

எனவே இங்கே மதிப்புமிக்க எதுவும் இல்லை.

உங்கள் கடின உழைப்பும் விலைமதிப்பற்ற நேரமும் வீணாகிவிடும் என்று நான் வருத்தப்படுகிறேன்.

எனவே, உங்கள் முயற்சிக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக,

இந்த சிறிய தொகையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

மேலும், உங்கள் தொழிலில் (திருட்டு) நீங்கள் மேலும் வெற்றிபெற உதவ,

கீழே சில குறிப்புகளை நான் உங்களுக்கு தருகிறேன்.

மாஸ்டரின் *அறிவுரை* பின்வருமாறு வாசிக்கப்படுகிறது.

8வது மாடியில் - ஒரு ஊழல் மந்திரி வசிக்கிறார்.

7வது மாடியில் - ஒரு வளைந்த சொத்து வியாபாரி.

6வது தேதி மாடி - ஒரு கூட்டுறவு வங்கித் தலைவர்.

5வது மாடியில் - ஒரு செல்வம் கொழிக்கும் தொழிலதிபர், கறார் பேர்வழி.

4வது மாடியில் - ஒரு பிரபல கைதேர்ந்த வழக்கறிஞர்.

3வது மாடியில் - ஒரு ஊழல் அரசியல்வாதி

அவர்களிடம் மலையளவு தங்கமும் பணமும் உள்ளன.

உங்கள் ‘வணிக வெற்றி’ அவர்களை சிறிதும் தொந்தரவு செய்யாது!

ஏனென்றால் அவர்கள் போலீசில் புகார் கூட செய்ய மாட்டார்கள்!”

-----------------------------------

தசராவுக்குப் பிறகு, மாஸ்டர் வீடு திரும்பியபோது,

மேசையில் ஒரு பெரிய பையைக் கண்டார்.

உள்ளே ₹10 லட்சம் ரொக்கம் இருந்தது!

மற்றும் ஒரு கடிதம் —

"மதிப்பிற்குரிய குருஜி",

உங்கள் வழிகாட்டுதலுக்கும் போதனைக்கும் மனமார்ந்த நன்றி!

நான் உங்கள் ஆலோசனையைப் பின்பற்றினேன், என் பணி வெற்றி பெற்றது!

இந்தச் சிறிய தொகையை நன்றியுணர்வின் அடையாளமாக விட்டுச் செல்கிறேன்.

எதிர்காலத்திலும் உங்கள் ஆசீர்வாதங்களையும் ஞானத்தையும் நான் தொடர்ந்து பெறட்டும்...

உங்கள் சீடர் - திருடன்

மாஸ்டர் அதைப் படித்து சிரித்தார்,

"ஐயோ! நான் ஓய்வு பெற்றேன் என்று நினைத்தேன்,

ஆனால் என் கற்பித்தல் பணி இன்னும் தொடர்கிறது போலிருக்கிறது" .

  • 105
  • 107
·
Added a news
·

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர்.

இதில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபராக பதவியேற்றார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

கமலா ஹாரிஸ் கொடுத்த சமீபத்திய நேர்காணலில், "எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் ஜனாதிபதி நிச்சயம் இருப்பார். அது நானாக கூட இருக்கலாம், ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் டிரம்ப் அரசை வழி நடத்துவார் என்ற எனது கணிப்புகள் உண்மையாகிவிட்டன" என்று தெரிவித்தார்.

  • 207
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். மேலதிகாரியுடன் இருந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருவாயில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். வியாபார விருத்தி சார்ந்த முயற்சிகளை எடுப்பீர்கள். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

ரிஷபம்

புதிய முயற்சிகள் இழுபறியாகி முடியும். சிறு வார்த்தைகள் கூட மனக்கசப்பை ஏற்படுத்தலாம். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். பலதரபட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மிதுனம்

வியாபாரத்தில் அறிமுகம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசவும். மற்றவருக்கு உதவுவது திருப்தியை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கடகம்

சகோதரர்களால் நன்மை உண்டாகும். தேவையானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்வான சூழல் நிலவும். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் விலகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

சிம்மம்

எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக விஷயங்களில் பொறுமை வேண்டும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். சிந்தனை போக்கில் சில மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். ஆதரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

நட்பு வட்டம் விரியும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். நூதன பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். சலனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

துலாம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகன மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

நினைத்த பணிகளில் தாமதம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சக ஊழியர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

தனுசு

தாய் வழியில் அனுசரித்து செல்லவும். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தொழில்நுட்ப கருவிகளில் விரயங்கள் உண்டாகும். அருகில் உள்ளவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பயணம் மூலம் பலன்கள் கிடைக்கும். சுயதொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மகரம்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் நீடிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். விமர்சன பேச்சுக்களை வெளிவட்டாரத்தில் தவிர்க்கவும். வியாபாரத்தில் உழைப்புகள் மேம்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

 

கும்பம்

சகோதரர்களால் சிறு சிறு சங்கடம் ஏற்படக்கூடும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடையும். பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

மீனம்

குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சார்ந்த சிந்தனை மேம்படும். பக்தி எண்ணம் அதிகரிக்கும். அடுத்தவர்களை பற்றிய சிந்தனையை தவிர்க்கவும். எதிரிகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து செயல்படவும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் புது முதலீடுகளில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 213
·
Added a post
·

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 26.10.2025.

இன்று அதிகாலை 01.43 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று காலை 09.28 வரை கேட்டை. பின்னர் மூலம்.

இன்று அதிகாலை 05.42 வரை சோபனம். பின்னர் அதிகண்டம்.

இன்று அதிகாலை 01.43 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 02.33 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று காலை 06.01 வரை சித்த யோகம். பின்னர் காலை 09.28 வரை மரணயோகம். பின்பு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=307&dpx=2&t=1761462477

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 216

good morning...

  • 214
·
Added article
·

இறந்த பிறகும் நீங்கள் அழியாதவராக மாற விரும்பினால், இந்த திரைப்பட நடிகரைப் பின்பற்றுங்கள். அவர் இந்தியத் திரைப்படங்களில் பிரபலமான நடிகர். அவர் பெயர் சயாஜி ஷிண்டே. அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மராத்தி நடிகர்.

ஒரு நேர்காணலில், என் அம்மா நோய்வாய்ப்பட்டு, அவர் உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கை இல்லாதபோது, ​​"நான் எவ்வளவு பணக்காரனாக, சக்திவாய்ந்தவனாக அல்லது செல்வாக்கு மிக்கவனாக மாறினாலும், உன்னைக் காப்பாற்ற முடியாது, ஆனால் நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்..." என்று நான் அவரிடம் சொன்னேன் என்று அவர் வெளிப்படுத்தினார்.

சஞ்சய் கூறினார், "ஒரு நாள் நான் என் அம்மாவை எடை போடும் தராசின் ஒரு பக்கத்தில் வைத்து, மறுபுறம் பூர்வீக மரங்களின் விதைகளை வைத்தேன். அந்த விதைகளை மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் நட்டேன் - எங்கோ 1,000, எங்கோ 10,000, எங்கோ 5,000 மரங்கள் வளர்ந்தன. இப்போது இந்த மரங்கள் 20-20 அடி உயரமும் பழம்தரும் தன்மையும் கொண்டவை. இந்த மரங்கள் பழங்கள் மற்றும் பூக்கள், நறுமணம் மற்றும் பறவைகளுடன் இருக்கும் வரை, நான் என் அம்மாவுடன் இந்த மரங்களில் வாழ்வேன்..." என்றார் சயாஜி ஷிண்டே.

  • 429