இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவுகள் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
ரிஷபம்
கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். திடீர் பணவரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் ஏற்படும். அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். நன்மை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆடை ஆபரணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
சிம்மம்
அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களில் விவேகம் வேண்டும். கொடுக்கல் வாங்கலால் வேறுபாடுகள் உண்டாகும். வியாபார ரகசியங்களை பகிராமல் இருக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பணிகளில் முன் கோபமின்றி செயல்படவும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கன்னி
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவினங்களை அறிவீர்கள். தோற்ற பொழிவில் சில மாற்றம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். சினம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் ரீதியான சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். மனத்தில் இருந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். பண வரவு மத்தியமாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மறதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
தனுசு
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவு ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அசதியும், சோர்வும் அவ்வப்போது தோன்றி மறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
நண்பர்களுக்கு இடையே விவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
தேக ஆரோக்கியம் பொலிவு கூடும். அலைபாயும் மனதினால் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
நீதியரசர் சூரியமூர்த்தி அவர்கள் கூறுகிறார்,
"எனக்கு அப்போது ஒரு பதினைந்து பதினாறு வயது இருக்கும், தீவிர கடவுள் மறுப்பாளராக இருந்தேன். அந்த சமயத்தில், எங்கள் கிராமத்தில், எங்களுக்கு சொந்தமாக ஒரு தென்னந் தோப்பு இருந்தது. அதில், ஒரு இஸ்லாமிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில், ஒரு நபரிடம், மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட விஷக்கடி கண்ட மக்கள் வருவார்கள். அப்படி வரும் அவர்களிடம், அந்த நபர் அவர்கள் தலையின் மீது ஒரு வேப்பிலை கொத்து வைத்து, ஏதோ உச்சரிப்பார் , பிறகு அந்த நோயாளி நலமுடன் வீடு திரும்புவார்.. இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. அந்த இஸ்லாமிய நபரிடம், "நீங்கள் முனுமுனுக்கும் விஷயம்தான் என்ன?" என்று நான் கேட்டபொழுது, "உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, உன்னிடம் இதை கூற முடியாது. ஒருவேளை உனக்கு நம்பிக்கை வந்தால் பிறகு வா பார்க்கலாம்" என்று கூறி அனுப்பிவிட்டார்.
காலங்கள் உருண்டோடின. நான் சட்டம் பயின்று, வேலை கிடைத்து, படிப்படியாக பாண்டிச்சேரியின் நீதிபதியாக உயர்ந்துவிடடேன். இந்த காலங்களில் நான் தீவிர சைவசமய நம்பிக்கையாளனாகவும் மாறி இருந்தேன். ஒரு நாள் எனக்கு அந்த இஸ்லாமிய நபரின் நினைவு வந்தது.. உடனடியாக நேரில் எங்கள் தென்னந்தோப்புக்கு சென்று, அவரிடம், "இப்பொழுதாவது கற்றுத் தருவீர்களா?" என்று கேட்க, ஆச்சரியத்துடன் என்னை நோக்கிய அவர், "போய் குளித்துவிட்டு வா.. உனக்கு உபதேசிக்கிறேன்" என்றார்.
நான் குளித்து முடித்து வந்ததும், என்னைக் கீழே அமரச் செய்து என் காதில் அவர் அந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியம் தாளவில்லை.. ஏனெனில் அவர் ஓதியது திருநாவுக்கரசர், விஷம் கண்டு இறந்து விட்ட அப்பூதியடிகளின் மகனை காப்பாற்ற பாடிய தேவாரப் பாடல்..
அவர் அந்த முழு பதிகத்தையும் என் காதில் ஓதி முடித்தவுடன், "இது எங்கள் தேவாரப்பாடல் ஆயிற்றே" எனக்கேட்க.. "அவர் எனக்கு இதெல்லாம் தெரியாது. என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்தார் அதைக் கொண்டு நான் வைத்தியம் செய்கிறேன்" என்று கூறி எனக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இன்னதென்று தெரியவில்லை, அதன் அர்த்தமும் தெரியவில்லை.. அதன் மூலமும் உணரவில்லை.. ஆனாலும் நம்பிக்கையுடன் ஓதுபவர்களுக்கு அதன் பலன்கள் கிடைக்கிறது.
தேவாரப் பாடல்கள் அனைத்தும் மந்திரச் சொற்களால் நிரம்பியவை. அவைகள் தமிழ் வேதத்தின் ஒரு அங்கம். நம் தமிழ் மக்கள் குறைதீர்க்க இறைவன் நமக்கு அளித்த பொக்கிஷம்.. இது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்?
திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பாக, 'விதியை வெல்வது எப்படி?' என்று ஒரு புத்தகம் சில காலங்களுக்கு முன் வெளியானது. சகாய விலையில் கிடைக்கும் அந்த புத்தகம் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும். அதில் எந்த பதிகம் எந்த பலனை அளிக்கும்? என்று விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 28.12.2025.
இன்று காலை 07.46 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று அதிகாலை 05.18 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.
இன்று காலை 07.20 வரை வரீயான். பிறகு பரிகம்.
இன்று காலை 07.46 வரை பவம். பின்னர் மாலை 06.14 வரை பாலவம் . பிறகு கௌலவம்.
இன்று அதிகாலை 05.18 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.25 வரை மரண யோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 03.00 முதல் 04.00 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மேஷம்
குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் அமைதி இன்மை ஏற்படும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
மனதில் நினைத்த காரியம் கைகூடும். பெற்றோர் இடத்தில் ஆதரவுகள் மேம்படும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும். வீடு விற்பனையில் கவனம் வேண்டும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் உருவாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். ஆக்கபூரவமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
மிதுனம்
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான சிந்தனைகள் ஏற்படும். பொருளாதார ரீதியில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கடகம்
உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு வகைளில் ஆதாயம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயணம் மூலம் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிலும் பொறுமை வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கன்னி
சவாலான செயல்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஒற்றுமை ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
துலாம்
குடும்பத்தில் மதிப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். மனதளவில் இருந்த சஞ்சலங்கள் விலகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து சேமிப்பை பயன்படுத்துவீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். சினம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
தனுசு
நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். சில விஷயங்களை போராடி மேற்கொள்வீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். எதிலும் உழைப்புகள் அதிகரிக்கும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு
மகரம்
மனதளவில் புதிய தைரியம் உருவாகும். சுபகாரியங்களுக்கான எண்ணங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் மேம்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியங்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். தள்ளிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். தனம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
எந்த செயலிலும் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பழைய நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலக ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 27.12.2025.
இன்று காலை 09.21 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று காலை 06.06 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.
இன்று காலை 09.30 வரை வியதீபாதம். பிறகு வரீயான்.
இன்று காலை 09.21 வரை வனிசை. பின்னர் இரவு 08.34 வரை பத்தரை. பிறகு பவம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
ஒரு நாள் ஒரு படித்த இளைஞன் ஒருவன் பகவான் தரிசனத்திற்கு வந்தான்.
வந்தவன் சோபாவின் அருகே சென்று பகவானைப் பணிந்து விட்டு எதிரே உட்கார்ந்தான். அவன் முகத்தைப் பார்த்தால் பகவானிடம் ஏதோ கேள்விகள் கேட்க வந்தவன் போல் தோன்றியது.
ஹாலில் அனைவரும் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். அந்த மௌனத்தைக் கலைத்து எழுந்தது இளைஞனின் கேள்வி.
"சுவாமி, ராமகிருஷ்ண பரஹம்சர் விவேகானந்தரைத் தொட்ட மாத்திரத்தில் நிர்விகற்ப சமாதியில் நிலைப்பெறச் செய்தாரே! அதுபோல் பகவானும் என்னை நிர்விகற்ப சமாதியில் நிலைபெறச் செய்ய முடியுமா? என்று கேட்டான்.
பகவான் பதிலேதும் கூறவில்லை.
இளைஞனோ தன் கேள்விக்கு விடையை ஆவலுடன் எதிர்நோக்கினான்.
சிறிது நேரத்திற்குப் பின் பகவான் அந்த இளைஞனைப் பார்த்து,
கேட்பது விவேகானந்தர் தானோ!" என்றார்.
அவ்வளவு தான் அவன் பதிலேதும் கூற முடியாமல் மௌனியானான்.
தன் கேள்வியே தனக்குத் தோல்வியாக முடிந்ததை உணர்ந்து சிறிது நேரத்தில் எழுந்து போய்விட்டான்.
அந்த இளைஞன் எழுந்து வெளியே சென்ற பிறகு பகவான் அதைப்பற்றித் தொடர்ந்தார்.
"யாருக்கும் தன் நிலையைப் பற்றிக் கவலையேயில்லை.
தான் எல்லம் உணர்ந்த பூரணன் என்பதுதான் அவர்களின் முடிவு.
காரணம், தன்னைப்பற்றிய விசாரத்தில் மனம் சொல்லாததேயாகும்.
மேலும், தன்னைப்பற்றி விசாரிப்பதற்குப் பதிலாக மனம் பிறரை ஆராயத் தொடங்குகிறது.
இந்த ஆராய்ச்சி தான் சகல அனர்த்தங்களுக்கும் விபரீதங்களுக்கும் இடம் அளிக்கிறது.
இந்தச் சாமியார் சோபாவில் உட்கார்ந்திருக்கிறாரே!
இவரைச் சுற்றியும் நிறைய பேர் உட்கார்ந்து இருக்கிறார்களே!
இவர் பெருமை தான் என்ன?
நான் கேட்பதைச் செய்து காட்டுவாரா பார்க்கலாம்!" என்பதே அந்த இளைஞனின் நோக்கம்.
ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் போன்ற சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறதா என்பதை அறிய முற்பட்டானேயன்றி,
கேட்கும் தான் விவேகானந்தரைப் போன்றவன்தானா என்பதைப் பற்றி சிந்திக்கவில்லை. ஏனென்றால், தன்னிடம் எல்லாத் தகுதியும் இருப்பதாக நினைப்பு.
அதில் சந்தேகமிருந்தால் தானே அதைப்பற்றி விசாரணை எழும். தான் விவேகானந்தரைப் போன்றவன்தானா என்னும் விசாரமிருந்தால் இந்தக் கேள்விக்கே இடமில்லை.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தர் ஒருவருக்குத்தான் அப்படிச் செய்தாரென்பதும் அவனுக்குத் தோன்றவில்லை.
மனம் பிறரை ஆராய்வதை விட்டுத் தன்னை ஆராய முற்பட்டால் எந்தக் கேள்வியும் எழாது.
எல்லாக் கேள்விகளுக்கும் சமாதானம் தனக்குள்ளேயே இருப்பதை அப்போது உணர்வான்" என்று கூறி முடித்தார்.
பகவான் அருளிய இந்த உபதேசம் அந்த இளைஞனுக்கு மட்டுமே அல்ல.
அவன்தான் எழுந்து போய் விட்டானே!
நம் ஒவ்வொருவருக்கும் தான். இந்த அரிய உபதேசம் அருளப்பட்டது.
மனம் பிறரை ஆராயத் தலைப்படுவதைத் தடுக்க வேண்டுமானால்,தன்னை ஆராய்ந்து அடங்க வேண்டும்.
இதுதான் நமது ஸ்ரீ ரமண பகவானது தலையாய உபதேசமாகும்.
பொதுவாக காலை எழுந்ததும் ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலரும் கூறுவர். அதில், சிலருக்கு குழப்பம் இருக்கும். அந்தக் குழப்பம் என்னவெனில், பல் துலக்கி விட்டு தண்ணீர் குடிக்க வேண்டுமா, இல்லை பல் துலக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டுமா என்பது தான்.
நீங்கள் காலை எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன்பே தண்ணீர் குடிக்கலாம். உண்மையில் இந்த நடைமுறை உங்களுக்கு நன்மையைத் தரும். நீங்கள் இரவில் உறங்கும் போது உடலில் உள்ள நீரை உங்களின் உடல் பயன்படுத்தி விடும்.
மேலும், நள்ளிரவில் எழுந்து நீங்கள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அதனால் தான் நீங்கள் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவது. அது உங்களை நீரேற்றம் செய்ய உதவும். இரவில் தூங்கும் போது வாயில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் பெருகும்.
பல் துலக்குவதற்கு முன் காலையில் தண்ணீர் குடிப்பதன் மூலம் அது உங்கள் வாயை சுத்தம் செய்ய பல் துலக்குதலை எளிதாக்கும். அதுமட்டுமின்றி, பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்வது, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடைய செய்யும்.
இதனால், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது குறையும். மேலும், பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடித்தால், உயர் இரத்த அழுத்தம் குறையும்.
மேலும், இதனால் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படும். இரைப்பை அழற்சி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம்.
அதுமட்டுமின்றி, இந்தப் பழக்கத்தால் சருமம் மற்றும் தலைமுடி இரண்டும் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும். பல் துலக்கிய உடன் ஏதேனும் சாப்பிட வேண்டும் எனில், அதற்கு நீங்கள் 15-லிருந்து 20 நிமிடங்கள் காத்திருந்து பின்னர் சாப்பிடவும்.
காலையில் தண்ணீர் குடிப்பதால் நமக்கு பல நன்மைகள் உள்ளன. இந்தப் பழக்கத்தின் மூலம் நீங்கள் உங்களை நாள் முழுவதும் வலுவாக வைத்திருக்க முடியும். முடிந்தவரை பல் துலக்கிய உடன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம். வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும். இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்...
பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்...
இந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே...
வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் அனைத்தும் ஓடிப்போகும் தானே...?
பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..?
வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளவாக பார்வையை கவர்வதில்லை... ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்... மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்...
கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி... என்பதெல்லாம் தாண்டி "சுகரு" க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி... நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..
இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்... பங்குனியில் ரொம்ப அதிகம்..
எப்படி சாப்பிட..? சுலபம்..... அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி ... வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவைன்னா ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு... தட்ஸ் ஆல்..
இல்லைன்னா பச்சடி, ரசம், துவையல், அவியல்னு ஆயிரம் மெனு செய்யலாம்... செய்து சாப்பிடுங்க...
நம்ம பெரியவங்க , இதை நாம சாப்பிட வேண்டும்.. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..
இந்த ஆண்டிலிருந்து அதிகளவில் மருத்துவமனை செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம் பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்கள்....










