sivam

  •  ·  Moderator
  • 1458 views
  • More
Friends
Empty
·
Added a post
·

1. தண்ணீர் குடிக்கும்போது முடிந்தால் ஸ்ட்ரா பயன்படுத்தவும், விழுங்கும்போது தலையை கீழே குனிந்து கொள்ளவும்.

2. தெளிந்த சூப்பிற்கு பதிலாக கெட்டியான சூப் குடிக்கவும். தெளிந்த சூப் வேகமாக ஓடும், மூச்சு சீராக இல்லாதபோது எளிதில் புரையேறிவிடும்.

3. வாயில் திட உணவு இருக்கும்போது அல்லது மெல்லும் போது திரவம் குடிக்க வேண்டாம். தண்ணீர் வாயில் அதிக நேரம் இருந்தால், கவனக்குறைவாக இருக்கும்போது மூச்சுக்குழாய்க்குள் சென்று புரையேறும்.

4. வாயில் உணவு அல்லது தண்ணீர் இருக்கும்போது பேசவோ அல்லது தலையைத் திருப்பவோ வேண்டாம்.

5. வயதானவர்களுக்கு இளைஞர்களைப் போல உடல் வலிமையும் சகிப்புத்தன்மையும் இருக்காது..

திரவம் அல்லது உணவு மூச்சுக்குழாய்க்குள் சென்று இருமி வெளியேற்றப்பட்டால்,

முகம் சிவந்து இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

சில நேரங்களில் புரையேறுதல் மரணத்தை விளைவிக்கும்.

வயதாகும்போது, தண்ணீரை மெதுவாகவும், கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் குடிக்க வேண்டும்!!

  • 52
·
Added article
·

🌹பல காதலுக்கு உயிர் கொடுத்த ஜானகி பாட்டு.. ஆனால் சொல்லாத அவர் காதல்.

🌹ஜானகி என்று அவரை சொல்வதை விடவும் இப்போது உள்ள ரசிகர்கள் அவரை ஜானகி அம்மா என்றுதான் அழைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பலருடைய மனதில் வாழ்ந்து வருகிறார்.

🌹பல பேர் காதலுக்கு மருந்தாக இவருடைய பாடல்கள் இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் அவர் காதலித்த நபரிடம் அவருடைய காதலை சொல்லவே இல்லையாம்.

🌹பாடகி எஸ் ஜானகிக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. 80ஸ் காலத்தில் இருந்து 2k கிட்ஸ்கள் காலம் வரைக்கும் அவர் தொடர்ச்சியாக பல பாடல்களை பாடி இருக்கிறார்.

🌹அதிலும் இளையராஜா முதல் முதலில் இசையமைத்த "அன்னக்கிளி" என்ற திரைப்படத்தில், "அன்னக்கிளியே உன்னைத் தேடுதே" என்ற பாடலை பாடி பலருடைய மனதில் கவர்ந்து, யார் இந்த குரலுக்கு சொந்தக்காரர் என்று தேட வைத்தவர் தான் இவர்.

🌹இந்தப் பாடல் தான் ஜானகியை பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆக்கியது என்று சொல்லலாம். அதைத் தொடர்ந்து இளையராஜாவின் இசையில் மனதை மயக்கும் பல பாடல்களை பாடி இருக்கிறார். அதோடு ஜானகி முதல் முதலாக 1957ஆம் ஆண்டு வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் தான் இவருடைய முதல் பாடல்.

🌹இந்த பாடல் வெளி வந்த அடுத்த நாளே இவருக்கு தெலுங்கு படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து பல பாடல்களில் பாடிக்கொண்டிருந்தாலும்

🌹பல ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் கொங்கணி, துளு, சௌராஷ்டிரா, ஹிந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

🌹அதுபோல 1992 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்த எஸ் ஜானகிக்கு ஞானகான சரஸ்வதி என்ற பட்டமும் வழங்கப்பட்டிருந்தது. அதோடு தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்தி பாடல்களை தாமே எழுதி இசை அமைத்து பாடியும் இருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையிலேயே பெண்கள் சாதிப்பதற்கு பெரும் பாடாக இருக்கிறது.

🌹ஆனால் பல வருடங்களுக்கு முன்பு எஸ் ஜானகி பலரும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு இசை துறையில் பல வெற்றிகளை வாங்கி குவித்து இருக்கிறார். அதோடு ஜானகி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர், டீனேஜ் முதலே இசை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல வருடங்களாக இசைக்கச்சேரிகளில் தான் பாடிக் கொண்டிருந்தார்.

🌹ஜானகி ஆரம்ப காலகட்டத்தில் மேடை பாடகியாக இருந்தபோது ராம் பிரசாத் என்பவர் அவருக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார்.

🌹அவர் யார் என்றால் ஜானகி கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவரின் மகன். ஆனால் அவர் தன்னுடைய தந்தையிடம் ஜானகியின் திறமை வெறும் இசை கச்சேரியோடு முடிந்து விடக்கூடாது. சினிமா பாடல்களில் பாட வைக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.

🌹 அவரோட அட்வைஸ்சால் தான் சென்னைக்கு வந்து ஜானகி ஏவிஎம் நிறுவனத்தில் பாடகியாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்

🌹இப்படி தன்னுடைய இசைப்பயணம் துவங்க காரணமாக இருந்த ராம் பிரசாத் மீது ஜானகிக்கு ஆரம்பத்தில் நட்பு இருந்த நிலையில் பிறகு காதலாக மாறி இருக்கிறது. எத்தனையோ கதாநாயகிகளின் காதலை அழகாக வெளிப்படுத்திய ஜானகி தன்னுடைய காதலை ராம்பிரசாத்திடம் சொல்லவே இல்லை.

🌹ஆனால் இவர்களுடைய வீட்டில் இவர்களுக்கு 1959 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

🌹அதற்குப் பிறகும் ஜானகிக்காக ரெக்கார்டிங் போது கூடவே இருப்பாராம். அந்த அளவிற்கு மனைவியின் வெற்றியை பார்த்து ரசித்த வந்த ராம் பிரசாத் 1997 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டார்.

  • 74
·
Added article
·

இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.

‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.

17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர். அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது.

பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’, ‘அம்மா.. அம்மா..’ போன்றவை காலத்தால் அழியாதவை.

திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார்.

‘காற்றில் ஜானகியின் கீதம்...’ எப்போதும் உலகோடு இரண்டறக் கலந்திருக்கும். தனது மெல்லிய அற்புதமான வசீகர குரலால் பல ரசிகர்களை தன்வசம் வைத்துக் கொண்டவர். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எங்கோ, எவர் செவியிலோ கேட்டுக்கொண்டே இருக்கும்.

  • 81
·
Added a post
·

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12.7.2026.

இன்று இரவு 09.18 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று காலை 07.01 வரை கிருத்திகை. பின்னர் மிருகசீரிடம்.

இன்று இரவு 07.44 வரை விருத்தி. பின்னர் துருவம்.

இன்று காலை 10.31வரை கரசை. பின்னர் இரவு 09.18 வரை வணிசை. பின்பு பத்திரை.

இன்று முழுவதும் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=581&dpx=2&t=1783825956

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை: 03.15 முதல் 04.15 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 79

Good Morning....

  • 78
·
Added article
·

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு, தனது எதார்த்தமான பேச்சாலும் குணத்தாலும் பலருடைய மனங்களை வென்றவர் நடிகை திவ்யா கணேஷ். எப்போதும் குடும்பப் பாங்கான வேடங்களில் வலம் வந்த இவர், தற்போது முன்னணி ஓடிடி தளமான 'ஆஹா' டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ள 'Sshhh 3' என்ற அடல்ட் த்ரில்லர் வெப் தொடரில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு, தனது எதார்த்தமான பேச்சாலும் குணத்தாலும் பலருடைய மனங்களை வென்றவர் நடிகை திவ்யா கணேஷ். எப்போதும் குடும்பப் பாங்கான வேடங்களில் வலம் வந்த இவர், தற்போது முன்னணி ஓடிடி தளமான 'ஆஹா' டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ள 'Sshhh 3' என்ற அடல்ட் த்ரில்லர் வெப் தொடரில் நடித்துள்ளார்.

நெட்டிசன்கள் ஒருபக்கம் ட்ரோல் செய்தாலும், இந்தத் தொடரின் ப்ரோமோஷனுக்காக திவ்யா கணேஷ் பங்கேற்ற ''Wrong Answer Only'' என்ற விநோதமான நேர்காணல் வீடியோ தற்பொழுது பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அதில் கேட்கப்பட்ட சில விவகாரமான கேள்விகளுக்கு அவர் திவ்யா அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

கேள்வி: நீங்க சிங்கிளா?

திவ்யா பதில்: யார் சொன்னா நான் சிங்கிள்னு? எனக்குன்னு ஆள் இருக்காரு!

கேள்வி: படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

திவ்யா பதில்: அந்த மாதிரி சீன் எடுக்கும் போதே எனக்கு செம ஜாலியா இருக்கும்.. அப்படியே வைப் ஆகிடுவேன் என நச்சுனு பதில் அளித்தார். அதோடு மட்டுமில்லாமல் யாராவது உங்களிடம் கடலை போட்டால் என்ன செய்வீர்கள் என்பது போன்ற இன்னும் சில கிளுகிளுப்பான கேள்விகளுக்கும் அவர் நேர்காணலில் கலகலப்பாகப் பதிலளித்துள்ளார். பிக் பாஸ் இமேஜை உடைத்து, முற்றிலும் புதிய அவதாரத்தில் படு கவர்ச்சியாக களம் இறங்கியுள்ள திவ்யா கணேஷின் இந்த புதிய ட்ரான்ஸ்ஃபார்மேஷன் தான் இப்போது சோசியல் மீடியாவின் பேசு பொருளாகி உள்ளது.

  • 163
·
Added article
·

திரைபடக் கலை, ஒளிப்​படக் கலை, இசை, எழுத்து எனப் பன்​முகத் திறமை வாய்ந்​தவர் இயக்குநர் செழியன். தனது ‘த பிலிம் ஸ்கூல்’ மூலம் சுயாதீனத் திரைப்​படங்​களை எடுப்பது தொடர்​பாக, திட்​ட​வட்​ட​மான பயிற்​சியை உரு​வாக்​கி, அதற்​கான மாணவர்​களைத் திரட்டி தீவிர​மாக உழைத்​துக் கொண்டிருந்​தார். நிறு​வனங்​கள் செய்​ய​வேண்​டிய பணியை தனிநபராகச் செய்​தார்.

புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​டிருந்த செழியன் சிகிச்சை பலனின்றி நேற்​று​ காலை கால​மா​னார்.

நாம் தமிழர் கட்​சி​யின் கலை இலக்​கிய பண்​பாட்​டுப் பாசறை​யின் மாநில ஒருங்​கிணைப்​பாள​ரான, ஒளிப்பதிவாளர் செழியனின் உடல் நாம் தமிழர் கட்​சித் தலைமை அலு​வல​கத்​தில், அஞ்சலிக்காக வைக்​கப்​பட்​டது. அங்கு திரைத்​துறை​யினர், பொது​மக்​கள் அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர் போரூர் மின் மயானத்​தில் நேற்று மாலை அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்​யப்​பட்​டது. மறைந்​த செழியனுக்​கு பிரே​மா என்​ற மனை​வி, அஜி​தா என்​ற மகள்​ உள்​ளனர்​.

  • 163
·
Added a news
·

கனடாவின் சாஸ்காச்சுவான் மாகாணச் சிறைச்சாலைகளில் இருந்து, நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக 5 கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்துப் பிழைகள், தகவல் தொடர்பு குறைபாடுகள், ஆவணக் கோளாறுகள் அல்லது தரவுச் செயலாக்கத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாகவே இந்தக் கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சாஸ்காச்சுவான் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

இப்படியாக தவறுதலாக விடுவிக்கப்பட்டவர்களில் 26 வயதான கெலீஷா ஜாக்சன் என்ற பெண்ணும் ஒருவர். தாக்குதல் மற்றும் ஒருவரை வலுக்கட்டாயமாகச் சிறைபிடித்த குற்றத்திற்காக நார்த் பேட்டில்ஃபோர்ட் சிறையில் இவர் தண்டனை அனுபவித்து வந்தார்.

கடந்த மார்ச் 19 அன்று இவர் தவறுதலாக விடுவிக்கப்பட்டார். ஆனால், இதுகுறித்த தகவல் ஜூன் 19 வரை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

இறுதியாக, தவறுதலாக விடுவிக்கப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த ஜாக்சன், இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இத்தகைய தவறுகள் மிகவும் அரிதானவை என்றும், ஒட்டுமொத்த கைதிகள் விடுதலையில் இது 0.1 சதவீதத்திற்கும் குறைவானதே என்றும் அரசுத் தரப்பு வாதிட்டுள்ளது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் சாஸ்காச்சுவான் அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என எதிர்க்கட்சியான என்.டி.பி (NDP) குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று என்.டி.பி சட்டமன்ற உறுப்பினர் நிக்கோல் சராவர் வலியுறுத்தியுள்ளார்.

மறுபுறம், கைதிகள் தங்களின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கப்படுவதால், சிறைச்சாலையில் அவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வுப் பயிற்சிகள் முழுமையடையாமல் போகும் என்றும், இது அவர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைவதைப் பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தவறுதலாக நடக்கும் ஒவ்வொரு விடுதலை குறித்தும் சிறப்புக் குழு ஆய்வு செய்து வருவதாகவும், வருங்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்க உரியப் பரிந்துரைகள் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

  • 174
·
Added a news
·

பிரேசில் நாட்டில் மருத்துவ தம்பதியினர் ஒருவருக்கொருவர் 30 வினாடிகளில் 195 முத்தங்கள் கொடுத்து கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

பிரேசிலின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த தம்பதியினர் ரெனாடோ மற்றும் நையாரா ஆகிய இருவரும் மருத்துவத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் வெறும் 30 வினாடிகளில் 195 முறை ஒருவருக்கொருவர் முத்தமிட்டு உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இவர்களில் ரெனாடோவுக்கு 'ஏடிஎச்டி' எனப்படும் கவனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டுக் குறைபாடு பாதிப்பு உள்ளது.

இருப்பினும், முறையான பயிற்சியும் தீவிர மன உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் இருவரும் உலகின் மிகச்சிறந்த தம்பதி என்பதை உலகிற்கு காட்ட நினைத்த இவர்களின் இந்த முயற்சி, தற்போது அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளனர். இணையத்தில் இவர்களின் சாதனை வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

  • 174
  • 179
·
Added a post
·

அன்று மருத்துவமனையில் இருந்து அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தேன்.

மருத்துவர் என்னை தனியாக அழைத்து,

"சிகிச்சை தொடரும்... ஆனால் இனி இவருக்கு மருந்தை விட மனநிம்மதிதான் முக்கியம்," என்றார்.

அந்த ஒரு வாக்கியம் என்னை பயமுறுத்தவில்லை.

மாறாக, ஒரு கணக்கு போட ஆரம்பித்தேன்.

வேலை...

வீட்டுக் கடன்...

குழந்தைகளின் படிப்பு...

இதில் அம்மாவின் மருத்துவச் செலவு வேறு பயமுறுத்தியது....

எல்லாமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

வீட்டுக்கு வந்ததும் அம்மா மெதுவாகக் கேட்டார்.

"டேய்... மாலையில் ஒரு டம்ளர் தேநீர் போட்டுத் தருவியா?"

எனக்கு எரிச்சல் வந்தது.

"அம்மா... இப்போதான் வீட்டுக்கு வந்திருக்கோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க."

அவர் எதுவும் பேசவில்லை.

சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார்.

அடுத்த சில நாட்களும் அதே கேள்வி.

"டேய்... ஒரு டம்ளர் தேநீர்..."

ஒவ்வொரு முறையும் நான்,

"இப்போ மீட்டிங்..."

"கொஞ்சம் வேலை..."

"பிறகு பார்க்கலாம்..."

என்று தள்ளிக்கொண்டே இருந்தேன்.

ஒரு நாள் என் மகள் என்னிடம் கேட்டாள்.

"அப்பா... பாட்டி தினமும் ஏன் உன்னிடமே தேநீர் கேட்கிறாங்க? நான் போட்டுத் தரட்டுமா?"

நான் சிரித்தேன்.

"அதெல்லாம் வேண்டாம்மா."

அவள் அமைதியாகச் சொன்னாள்.

"பாட்டிக்கு தேநீர் வேணும்னு தோணலை. உன்னோட ஐந்து நிமிஷம் வேணும்னுதான் தோணுது."

அந்தச் சிறிய வார்த்தை என்னை ஏதோ செய்தது.

அன்றைய மாலை, நானே சமையலறைக்குப் போய் இரண்டு டம்ளர் தேநீர் போட்டேன்.

ஒன்றை அம்மாவிடம் கொடுத்தேன்.

அவர் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார்.

"உனக்கு வேலை இல்லையா?"

"இருக்கு... ஆனா இது அதைவிட முக்கியம்."

வாசலில் இருவரும் அமைதியாக அமர்ந்தோம்.

அவர் தேநீரை மெதுவாகக் குடித்துக்கொண்டே,

"உனக்கு ஞாபகம் இருக்கா?"

என்று கேட்டார்.

"என்னம்மா?"

"நீ பள்ளிக்குப் போகும்போது தினமும் நான் உனக்கு பால் கொடுப்பேன். நீ குடிக்க மாட்டேன்னு அடம் பிடிப்ப."

நான் சிரித்தேன்.

அவர் தொடர்ந்தார்.

"அப்போது நான் உன்னைப் பார்த்து குடித்தேன்.

இப்போ நீ என்னைப் பார்த்து தேநீர் குடிக்கிறே.

வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் திரும்பி வரும் என்று நினைக்கல."

அன்று நாங்கள் அரை மணி நேரம் பேசினோம்.

எந்தப் பெரிய விஷயமும் இல்லை.

பக்கத்து வீட்டைப் பற்றி...

பழைய நாட்களைப் பற்றி...

என் அப்பாவைப் பற்றி...

என் சிறுவயதைப் பற்றி...

அதுதான்...

மறுநாள் காலை...

அன்று இரவு அம்மா தூக்கத்திலேயே அமைதியாக இறந்துவிட்டார்.

அவரது அறையை சுத்தம் செய்தபோது, மேசையின் மேல் ஒரு சிறிய காகிதம் இருந்தது.

அதில் அவர் எழுதியிருந்தது.

"என் மகனுக்கு...

எனக்கு தேநீர் மீது ஆசை இல்லை.

என்னோட மகன் என்னுடன் உட்கார்ந்து ஐந்து நிமிஷம் பேசணும்னுதான் காத்திருந்தேன்.

அந்த ஆசை நிறைவேறிச்சு.

இப்போ எனக்கு எந்தக் குறையும் இல்லை."

அந்தக் காகிதத்தைப் படித்தபோது நான் அழவில்லை.

ஏனென்றால்...

அழுகையைவிட பெரிய ஒரு வலி என் உள்ளே இருந்தது.

நாம் பெற்றோருக்கு பணம் கொடுக்கிறோம்.

மருந்து வாங்கிக் கொடுக்கிறோம்.

நல்ல மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறோம்.

ஆனால்...

அவர்களுக்கு மிகவும் தேவைப்படுவது,

நம் நேரம்.

நம் அருகாமை.

"சாப்பிட்டீங்களாம்மா?"

என்று கேட்கும் ஒரு குரல்.

ஒரு கப் தேநீர்.

ஐந்து நிமிட உரையாடல்.

வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில்,

பெற்றோர் கேட்பது பெரிய தியாகங்களை அல்ல.

"நீ இன்னும் என் பக்கத்தில்தான் இருக்கிறாய்" என்ற ஒரு சிறிய உணர்வை மட்டும்தான்.

அந்த ஐந்து நிமிடங்களை நாம் தராமல் விட்டால்...

ஒருநாள் ஆயிரம் கண்ணீராலும் அந்த ஐந்து நிமிடங்களை வாங்க முடியாது.

  • 181
  • 191