sivam

  •  ·  Moderator
  • 867 views
  • More
Friends
Empty
·
Added a post

பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.

முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.

இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

  • 5
·
Added a post

முருங்கை கீரை கால்சியம் , இரும்பு , வைட்டமின் ஏ , சி சத்துக்கள் நிறைய உள்ளன . அரைக்கிலோ வெண்ணெய் மற்றும் 80 கோப்பை பாலில் உள்ள வைட்டமின் ஏ சத்து ஆகியவற்றை , ஒரு கோப்பை முருங்கை இலை சூப் மூலம் நாம் பெறலாம் . கொதிக்கும் நீரில் கீரையை முருங்கை போட்டு , ஐந்து நிமிடத்திற்கு பிறகு , உப்பு , மிளகு . தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து , பாத்திரத்தை மூடி வைக்க பின்னர் வேண்டும் . வடிகட்டி கிடைத்த சூப்பை , தினமும் காலையில் பருகி வந்தால் , அனீமியா , ஜலதோஷம் , ஆஸ்துமா குறைவதை காணலாம் .

சத்தில்லாத குழந்தைகள் , முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி . மேலும் , ஆண்மை விருத்திக்கு முருங்கை சூப் உதவும் .சத்தில்லாத குழந்தைகள் , முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி .

மேலும் , ஆண்மை விருத்திக்கு முருங்கை சூப் உதவும் . சுத்தமான புதிய முருங்கை இலைகளை மிக்சியில் சுற்றி சாறு எடுத்து , அதை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கும் நீரில் மிதக்க விடவும் . சிறிது நேரம் கழித்து முருங்கை சாற்றின் தெளிவை மட்டும் வடிகட்டி , பால் , சர்க்கரை சேர்த்து கலக்கவும் . குழந்தைகளுக்கு தினமும் ஒருமுறை கொடுத்து வர , எலும்பு நன்கு வளர்ச்சி பெற்று திடமாகும் .

பாலுாட்டும் பெண்கள் , தினமும் முருங்கை கீரையை சாப்பிட்டால் , அதிகமாக பால் ஊறும் . மேலும் , அலர்ஜியால் துன்பப்படுவோருக்கு , முருங்கை கீரை உன்னத மருந்து . முருங்கை சாறுடன் , எலுமிச்சம் பழ சாற்றை கலந்து , முகத்தில் பூசி உலர்ந்த பின் , நீரில் கழுவி வந்தால் , பருக்கள் மறைந்து , முகம் பொலிவு பெறும் .

மாலைக்கண் நோய்க்கு இதன் சாற்றை தேனுடன் சேர்த்து பருகி , பயன் பெறலாம் . காயங்களின் மேல் வறுத்த முருங்கை இலையின் பொடியை பூசினால் , வலி குறையும் .

  • 5
·
Added a post

கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

தோல் அரிப்பு, சொறி போன்றவற்றிற்கு கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை

பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த சாறை குடித்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இலை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.

கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.

கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல்

குணமாகும். கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது.

இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.

தினமும் கற்பூரவள்ளி இலையினை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். கற்பூரவள்ளி இலை வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

  • 5
·
Added a post

*1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.*

*2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.*

*3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.*

*4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. .*

*5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.*

*6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.*

*7. கர்ப்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.*

*8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.*

*9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.*

*10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.*

*11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது.*

*12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.*

*13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.*

*14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.*

*15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது.* *மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.*

இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள். அதனால் தான் அவர்களின் ஆயுள் 120 வயது வரை திடகாத்திரமாக இருந்தது.‌ ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது.

முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள். ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது.

இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்கியமாக அமைய வாழ்த்துகள்

  • 5
·
Added a post

*1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது*

*2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.*

*3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. என தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.*

*4. அளவிற்து அதிகமாக உண்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.*

*5. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.*

*6. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.*

*7. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.*

*8. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.*

*9. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. .*

*10. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.*

*11. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.*

*12. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.*

*13. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது*

*14. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.*

*15. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.*

*16. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.*

*17. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.*

*18. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.*

*19. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.*

*20. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.*

*21. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.*

*22. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.*

*23. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;.*

*24. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.*

*25. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.*

*26. வெள்ளித் தட்டில் இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.*

*27. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.*

*28. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ;ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.*

*29. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.*

*30. அதே போல் முதலில் கீரையோ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.*

  • 11
·
Added a post

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள்.

இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும்.

பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

அது சரி.... குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்..?

இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள்.

அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.

அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து., நன்கு அலம்பி., துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். அவள்தான்., வசதி படைத்தவள் அல்லவே..! அதனால் நடந்தே செல்லத் தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள்.

ஸ்ரமமாக இருப்பினும் "கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள்.

கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலை அடைந்த சமயம்., கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன்., அவன் பக்தியை வெளிப்படுத்த., கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள்., அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி., தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம்., கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் "என்ன ஆயிற்று..?" என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை.

கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே ப்ரஸ்னம் கேட்டனர். அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து "நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள்.

என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும்" என்று அசரீரி கேட்டது.

உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை., பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து., அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை ஸகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர்.

அவள் ஆசையுடன் குண்டுமணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும்., யானையின் மதம் அடங்கியது.

அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.

  • 12
  • 15
  • 16
  • 16
  • 17

எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையை விட ,

எதையாவது செய்யும் போது ஏற்படும் தவறுகள் மிகவும்

பயனுள்ளது…

கண்ணியமானதும் கூட…

  • 17
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

கலகலப்பான பேச்சுக்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்துவீர்கள். வரவுகள் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பழக்கவழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். எதிலும் உணர்வுபூர்வமாக செயல்படுவீர்கள். இலக்கிய பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

குடும்ப உறுப்பினரிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். மனை விற்பனையில் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் உற்சாகமாக காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பாதியில் நின்ற பணிகளை முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சிந்தனைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆக்கபூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி பணிகளில் மாணவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உருவாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான மதிப்புகள் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தினை ஏற்படுத்தும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உருவாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதலும் தெளிவும் உண்டாகும். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

சிம்மம்

தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

கன்னி

பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். விவசாய பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

துலாம்

உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். வியாபார தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். போட்டி பந்தயங்களில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். எதிர்பாராத சிலரின் நட்புகள் மாற்றத்தை உருவாக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி

விருச்சிகம்

அரசியல்வாதிகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்த குழப்பம் விலகும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கற்பித்தல் பணிகளில் சில மாற்றமான சூழல் நிலவும். சமூக பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

தனுசு

செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சுப காரியங்களில் கலந்து கொண்டு மன மகிழ்வீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாலின மக்களுடன் பொறுமையுடன் செயல்பட வேண்டும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மகரம்

உயரதிகாரிகளால் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த இந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். ஞாபக மறதி பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உருவாகும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கும்பம்

உத்தியோக பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழல் அமையும். எதிர்பாராத தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாதத் திறமைகள் மூலம் இழுபறியான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம்

எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பாக பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 94