இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தோற்றப்பொழுவில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆன்மீக பணிகளில் தெளிவுகள் பிறக்கும். சாதனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
ரிஷபம்
குழந்தைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வருங்காலம் குறித்த சேமிப்பு சிந்தனைகள் மேம்படும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும். சுற்றி இருப்பவர்கள் பற்றிய உண்மைகளை புரிந்து கொள்வீர்கள். நட்பு வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சோர்வு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
மிதுனம்
மூலிகை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். இறைப்பணிகள் மூலம் அலைச்சல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செய்லபடவார்கள். பொழுதுபோக்கு விஷயங்களால் விரயங்கள் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம்
உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சிறுதூர பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கனிவான பேச்சுகள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். சகோதர வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சமூக பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வாழ்வு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது உயர்வை தரும். பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். அலுவலக பணிகளில் மற்றவரை எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. வியாபார இடமாற்றம் குறித்த எண்ணம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். குழப்பம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
துலாம்
குடும்பம் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். விமர்சனப் பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழைய சிக்கல்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். எதிலும் விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். களிப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தெளிவும் நம்பிக்கையும் பிறக்கும். நம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
தனுசு
முயற்சிக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புகள் அமையும் . குடும்பத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். விவசாய பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம்
எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் கடன்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்கள் இடத்தில் பயனற்ற பேச்சுகளை தவிர்க்கவும். அலுவலகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் வழியில் சில விரயங்கள் உண்டாகும். லாபம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி
கும்பம்
மறைமுகமான சில தடைகளால் தாமதம் உண்டாகும். பொழுதுபோக்கு செயல்களால் விரயம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்பும் அலைச்சலும் ஏற்படும். உயர்கல்வி குறித்த செயல்களில் பொறுமை காக்கவும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். பூர்விக சொத்து செயல்களில் சிந்தித்து செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மீனம்
போட்டி சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருந்தால் ஆதாயம் ஏற்படும். கௌரவ பதவிகள் மூலம் மதிப்புகள் உயரும். மூத்த சகோதரர்களுடன் இருந்த வேறுபாடுகள் நீங்கும். கமிஷன் வகைகளால் வரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வாகனத்தில் சிறு சிறு செலவுகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விசுவாவசு வருடம் ஆடி மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை 31.7.2025.
இன்று அதிகாலை 03.59 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று முழுவதும் சித்திரை.
இன்று அதிகாலை 04.55 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.
இன்று அதிகாலை 03.59 வரை தைத்தூலம். பின்னர் மாலை 04.54 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
அலெக்சாண்டர் இந்தியாவுக்கு செல்லுமுன் இந்திய ஞானத்தைப் பற்றியும், ஞானிகளைப் பற்றியும் அதிசயங்களைப் பற்றியும் கேள்விப் பட்டிருந்தார்.
அதில் ஒன்று, வட இந்தியாவில் ஏதோ ஒரு குகையில் ஒரு சுனை இருப்பதாகவும், அந்த சுனை நீரை குடிப்பவர்கள் சாகாவரம் பெறுவர் என்பதுமாம்.
அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து திரும்புவதற்கு முன் மிகுந்த பிரயத்தனத்திற்கு பின் அந்த குகையைக் கண்டுபிடித்தும் விட்டார்.
படைகளை பின்னே நிறுத்தி விட்டு அலெக்சாண்டர் மட்டும் முன்னேறி குகைக்குள் சென்றார். அது நீண்ட ஒரு குகை. குகையின் இறுதியில் சிறியதாக ஒரு சுனை இருப்பதைக் கண்டார். தண்ணீர் தெளிவாக சலனமற்று இருந்தது. அருகில் சென்றார். குனிந்தார். கவனமாக இரு கைகளையும் குவித்து தண்ணீரை அள்ளினார்.
என்ன ஒரு அற்புதம்.
இனிமேல் சாவில்லை. உலகம் முழுதும் செல்லலாம், உலகத்தை வெல்லலாம். மரணத்தை வென்றுவிட்டேன்.
அப்பொழுது ஒரு குரல் கேட்டது. தலையை நிமிர்த்திப் பார்த்தார். எதிர்க்கரையில் மிகவும் சோகமான தோற்றத்துடன் ஒரு காகம் அமர்ந்திருந்தது. அது பேசியது.
"ஒரு நிமிடம்…"
அலெக்சாண்டருக்கு ஆச்சரியம்.
காகம் தொடர்ந்தது.
"ஒரு நிமிடம்…அந்த நீரைப் பருகுவதற்கு முன் என் கதையைக் கேளுங்கள். நானும் உங்களைப் போல்தான்…சில நூறு வருடங்களுக்கு முன் ஒரு நாள் மிகுந்த ஆசையுடன் இந்த நீரைப் பருகினேன். இந்த உலக சுகங்களை ஆசை தீர அனுபவித்தேன். இனி பார்க்க வேண்டியது எதுவும் இல்லை. அனுபவிக்க வேண்டியது எதுவுமில்லை. எல்லாம் அலுத்து விட்டது. என்னுடன் இருந்த உறவினர்களும் நண்பர்களும் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. எனக்கு என்று எவரும் இல்லை. எனக்கு வாழவும் பிடிக்கவில்லை. இந்த நீரைப்பருகி சாகா வரம் பெற்று விட்டதால் இறக்கவும் முடியவில்லை. வாழ்க்கை மிகவும் நரகமாகி விட்டது. இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்றுதான் நான் இங்கேயே அமர்ந்திருக்கிறேன். உன்னைப் போன்று யாராவது எப்பொழுதாவது வருவாராயின் அவர்களை எச்சரிக்கிறேன். இனி உன் விருப்பம்" என்று முடித்தது.
அலெக்சாண்டருக்கு ஒரே குழப்பம். கண்களை மூடி சில நிமிடங்கள் யோசித்தான். இறுதியில் அந்தக் காகம் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தது. மரணத்தின் தெளிவு பிறந்தது. உண்மையில் மரணம் என்பது கொண்டாடப்படவேண்டிய ஒன்று. மானுடப் பிறவியின் துன்பங்களில் இருந்து விடுதலை இறைவனின் திருவடியில் பேரானந்தம்......
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்கு சுனாமி தொடர்பில் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் Petropavlovsk நகரை ரிக்டர் அளவுகோலில் 8.8ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜப்பான், அமெரிக்கா முதலான பல நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வடக்கு மற்றும் மத்திய கரைப்பகுதிகள், வான்கூவர் தீவின் மேற்கு மற்றும் வடகிழக்கு கரைப்பகுதிகளுக்கும் சுனாமி தொடர்பில் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.
ஜோர்டன் நதி முதல் கிரேட்டர் விக்டோரியா வரையிலான ஜுவான் டி ஃபூகா ஜலசந்தி, Saanich தீபகற்பம் உட்பட பல இடங்களுக்கும் சுனாமி ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவைப் பொருத்தவரை, மக்கள் கடலுக்குள் இறங்கவேண்டாம் என்றும், அலைகளை வேடிக்கை பார்க்க கடற்கரைக்குச் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அலைகளும் நீரோட்டமும் தண்ணீரில் இறங்கும் மக்களை மூழ்கடிக்கவும், காயப்படுத்தவும் கூடும் என்பதால் அதிகாரிகள் அனுமதிக்கும் வரை, தாழ்வான கடற்கரை பகுதிகள், துறைமுகங்கள் முதலான இடங்களைத் தவிர்க்குமாறும் சுனாமி ஆலோசனையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுநீரக கற்கள் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்கள் கற்கள் எந்த வகையானவை என்பதை தீர்மானிப்பதற்கும், அவற்றை கரைக்க அல்லது வெளியேற்ற சிறந்த உணவுகளை பரிந்துரைப்பதற்கும் உங்கள் மருத்துவரை அணுகுவது முக்கியம்.
பொதுவாக, சிறுநீரக கற்களை கரைக்க உதவும் சில உணவுகள் பின்வருமாறு:
1. தண்ணீர்:
- தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது சிறுநீரை நீர்த்துப்போகச் செய்து, கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும்.
2. சிட்ரஸ் பழங்கள்:
- எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சிட்ரிக் அமிலம் நிறைந்தவை. சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்களின் முக்கிய பகுதியான கால்சியம் சிட்ரேட்டை உடைக்க உதவும்.
3. பச்சை காய்கறிகள்:
- கீரை, பசலைக் கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்தவை. இந்த தாதுக்கள் சிறுநீரக கற்களை உருவாக்குவதைத் தடுக்க உதவும்.
4. ஆப்பிள் சீடர் வினிகர்:
- ஆப்பிள் சீடர் வினிகர் சிறுநீரின் pH ஐ சமநிலைப்படுத்த உதவும், இது சிறுநீரக கற்களை உருவாக்குவதைத் தடுக்க உதவும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து தினமும் இரண்டு முறை குடிக்கவும்.
5. தர்பூசணி:
- தர்பூசணி 92% தண்ணீர் ஆகும், இது சிறுநீரை அதிகரிக்கவும், சிறுநீரக கற்களை வெளியேற்றவும் உதவும்.
6. நறுமணப் பொருட்கள்:
- புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்ற நறுமணப் பொருட்கள் சிறுநீரக கற்களை கரைக்க உதவும். இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தேநீராக குடிக்கலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
- சில உணவுகள் சிறுநீரக கற்களை மோசமாக்கும். சிவப்பு இறைச்சி, உப்பு, சர்க்கரை மற்றும் ஆக்ஸலேட் அதிகம் உள்ள உணவுகள் (பீட்ரூட், சாக்லேட், கொட்டைகள்) போன்றவற்றை குறைவாக உட்கொள்ளவும்.
- உங்கள் சிறுநீரக கற்கள் எந்த வகையானவை என்பதை தீர்மானிக்கவும், அவற்றை கரைக்க அல்லது வெளியேற்ற சிறந்த உணவுகளை பரிந்துரைக்கவும் உங்கள் மருத்துவரை அணுகுவது முக்கியம்.
- சிறுநீரக கற்கள் கடுமையான வலியை ஏற்படுத்தும். உங்களுக்கு கடுமையான வலி, இரத்தம் கலந்த சிறுநீர், குமட்டல் அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
சிறு பீளைச்செடி........
இதன் தாவரப் பெயர் : Aervalanata.
தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae.
இதன்வேறுப் பெயர்கள்: சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள்.
இதை பொங்கலன்று பெரும்பாலான வீடுகளில் வாசலில் கட்டி வைப்பார்கள்.
இது சிறு செடிவகையை செர்ந்தது. ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக சிறிது நீண்ட வட்டவடிவில் இருக்கும்.ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் தண்டுடன் ஒட்டியவாறு அவல் போன்ற வடிவத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும்.இதன் தண்டு, பூ, இலை, வேர் அனைத்தும் மருந்தே!
இதன் பலன் சிறு நீரைப் பெருக்கி கற்களை கரைக்கும்.!
ஈரப்பாங்கான இடங்களில் இது நன்றாக வளர்ந்து இதன் இலைகள் பசுமையாக இருக்கும்.
மற்ற இடங்களில் இலைகள் சிறுத்து பூக்கள் மட்டும் அதிகமாக இருக்கும்.
சாப்பிடும் முறை: இதன் பூ,இலை,தண்டு,வேர் எதுவாகினும் எடுத்து சுமார் 10 கிராம் அல்லது இவைகளை அரைத்தால் நெல்லிக்காய் அளவு . இதனுடன் கரு மிளகு 7 அரைத்தால் கிடைக்கக் கூடிய தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும். சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு உணவு சாப்பிடலாம்! பத்தியம் கிடையாது!
இது போன்று இரவும் சாப்பிடனும்.இது நோய்க்கு தக்கவாறு ஏழு நாட்களிருந்து பத்து நாட்கள் வரை சாப்பிடலாம்.
மற்றொரு சாப்பிடும் முறை: இதை வேறுடன் எடுத்து பனை வெள்ளம் சம அளவில் சேர்த்து அரைத்து 200 ml
பாலுடன் கலந்து இருவேளை சாப்பிடலாம்.
இதை உட்கொள்ளும் போது மருந்து வேளை செய்தால் சிலருக்கு வலி வரலாம் பயப்பட வேண்டாம். டாக்டர் வலிக்காக பரிந்துரைத்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.இதை ஆடு, மாடுகள் உண்பதில்லை.
இச்செடி உங்கள் ஊரில் இல்லை என்றால் கவலை வேண்டாம் நாட்டு மருந்து கடைகளில் பவுடராகவும் கிடைக்கிறது.அதை வாங்கி உபயோகப்படுத்தலாம்.
சிறு நீரகக்கல் வந்தவர்கள் ஆபரேஷன் செய்திருப்பினும் மருந்து உட்கொண்டு சரியாகி இருப்பினும் மீண்டும் மீண்டும் தொல்லை தரும்! அப்பொழுதெல்லாம் இதனை உட்கொண்டு உங்கள் உடலையும், பணத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..
அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்….
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,
உடனே ஒரு ஆப்பிளைக் கடித்து விட்டாள்…பின் இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்... தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்…
உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்.. அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ இதை எடுத்துக்க என்றாள்…
நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் உங்களுக்கு இருக்கலாம். அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம்.
ஆனால், ஒருவரை பற்றிக் கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும். அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரைபற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம். எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.
பவளமல்லிமரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவளமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து.
கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. பவளமல்லி மரத்தின் வேரை மென்றுதின்றால் பல் ஈறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும்.
விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது. பவளமல்லி விதையை பொடி செய்து அதை எண்ணெய்யில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்.
பவளமல்லியை பெண்கள் தலையில் வைப்பதால் பொடுகு பிரச்சனை தீரும். இத்தகைய மூலிகை குணமுடைய பவளமல்லி பல்வேறு வீடுகளில் அழகுப் பொருளாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்த வட்ட அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும். பவளமல்லி இலைகள் நோய் நீக்கியாக விளங்குகிறது.
பவளமல்லியின் இலைகளில் செய்யப்படும் கசாயம், பருவ காலத்தில் ஏற்படும் படர்தாமரை நோயையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது. வியர்வையை தூண்டக்கூடியது. காய்ச்சலை தணிக்க கூடியது. வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
பவளமல்லி தேநீர் தயாரிக்க: பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல்கள் அனைத்தும் விலகிப்போகும். இடுப்பு வலி, கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்க கூடியதாக பயன்படுகிறது. பூஞ்சை காளான்களை போக்குகிறது.