sivam

  •  ·  Moderator
  • 398 views
  • More
Friends
Empty
·
Added article
·

கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் (Anirudh). தற்போது விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. அந்த வகையில் லேட்டஸ்டாக அவரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. காவ்யா மாறன் (Kavya Maran) தற்போது ஐபிஎல்-லில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்.

இருவரும் ஜோடியாக டின்னர் சாப்பிட சென்றதாகவும், ஒன்றாக வெளிநாடுகளில் உலா வருவதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இருவருமே இதுகுறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் அனிருத்; கீர்த்தி சுரேஷ், ஜோனிடா காந்தி, ஆண்ட்ரியா ஆகியோரை காதலித்து வந்ததாக செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • 10
·
Added article
·

வெள்ளாவி வெச்சு வெளுத்தது போல, பல பலனு இருக்கும் ராய் லட்சுமிக்கு சொந்த ஊர் பெங்களூர். இவருக்கு சிறுவயதில் இருந்தே, சினிமா மீது ஆர்வம் இருந்ததால், பள்ளியில் படிக்கும் போதே பல படங்களை விரும்பி பார்த்துள்ளார். கல்லூரிக்கு சென்ற பின் அந்த ஆசை அதிகமாக, தனது ஆசையை பூர்த்திக் செய்து கொள்ள படித்துக்கொண்டு இருந்த போதே, மாடலிங்கில் நுழைந்தார். ஆரம்பத்தில் சிறிய சிறிய கம்பேனிகளின் விளம்பரத்தில் நடித்து வந்த ராய் லட்சுமிக்கு புரூ காஃபி விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த விளம்பரத்தின் மூலம் பிரபலமான இவர், சரவணா ஸ்டோர்ஸ், ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரம் என அடுத்தடுத்த விளம்பரத்தில் நடித்தார்.

விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பால், கற்க கசடற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் விக்ராந்த்துடன் ஜோடியாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்விப்படமானது. இதனால், அடுத்த படத்திற்காக காத்திருந்த ராய் லட்சுமிக்கு, தமிழில் படவாய்ப்பு இல்லாததால் தெலுங்கில் வாய்ப்பு தேடினார். அங்கு, காஞ்சனா கேபிள் டிவி என்ற படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் இடம் பெற்ற யாரோ மனதிலே பாடல் இவருக்கு தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடத்தை பிடிக்கவைத்தது. அதைத்தொடர்ந்து முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி என தமிழில் அடுத்தடுத்து படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், இவர் நடித்த எந்த படமும், இவருக்கு ஒரு அடையாளத்தை தரவில்லை. திறமையும் அழகும் இருந்தும், வலுவான கதை அமையாததால் சினிமாவில் உச்சத்தை இவரால் முடியவில்லை.

தமிழ், தெலுங்கு என எதுவும் வேலைக்கு ஆகாததால், பாலிவுட் சென்ற லட்சுமி ராய், அங்கு ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டார். அங்கு பெயரை சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் பணத்தை சம்பாதித்தார். பின் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். கடந்த ஆண்டு ராய் லட்சுமி மலையாளத்தில் டிஎன்ஏ என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் பாய்சன் 2 என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். எந்த பக்கம் போனாலும், பட வாய்ப்பு வராததால், எப்போதுமே ஜாலியாக டூர் சென்று பொழுதை கழித்து வருகிறார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, தற்போது தாய்லாந்துக்கு சென்றுள்ளார். அங்கு, கடற்கரையில் கவர்ச்சி உடைஅணிந்து கொண்டு இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள ராய் லட்சுமி, அந்த பதிவில் காலம் மெதுவாகும், காற்றில் உப்பு மற்றும் அமைதியின் வாசனை வீசுகிறது. அழகு சத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அதை உணர வேண்டும் என்பதை அமைதியான நினைவூட்டுகிறது என பதிவிட்டுள்ளார். அந்த பதிவினைப்பார்த்த பலர், அடடா கவிதை கவிதை என பதிவுகளை போட்டு வருகின்றனர்.

  • 17
·
Added a news
·

பெங்களூருவைச் சேர்ந்த சந்தன் (25) என்பவர், Owlspriority India Pvt Ltd என்னும் நிறுவனத்தில் கனடாவில் வேலை தொடர்பில் விண்ணப்பித்துள்ளார்.

தங்களுக்கு பெங்களூருவிலும் கனடாவின் வன்கூவரிலும் அலுவலகங்கள் உள்ளதாக இணையத்தில் அந்நிறுவனம் விளம்பரம் செய்திருந்ததைத் தொடர்ந்து, அதை நம்பி கனடாவில் வேலைக்காக அங்கு விண்ணப்பித்துள்ளார் சந்தன்.

கனடா விசா மற்றும் கனடாவில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு லட்ச ரூபாய் கேட்டுள்ளனர் அந்நிறுவனத்தினர். உடனடியாக 50,000 ரூபாய் செலுத்தியுள்ளார் சந்தன். ஆனால், பல மாதங்களாகியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார் சந்தன்.

அந்த நிறுவனத்தார் பணத்தையும் திருப்பிக் கொடுக்காததால் பொலிஸில் புகார் செய்துள்ளார் சந்தன். விசாரணையில், சந்தனுடைய நண்பர்கள் உட்பட பலர் அந்த நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது.

பொலிசார் Owlspriority India Pvt Ltd நிறுவனத்தின் இயக்குநரான Ninan Lawrence, மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் Vijaya Durga, Thota Akhil, Tabassum Naz, மற்றும் Vinay Kotari ஆகியோர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

  • 18
·
Added a news
·

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகுர்னு (Sebastien Lecornu) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு, செபஸ்டியன் லெகுர்னு (Sebastien Lecornu) பிரதமரான 26 நாட்களுக்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று (6/10/2025) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுடன் செபஸ்டியன் லெகுர்னு ( Sebastien Lecornu ) ஒரு மணி நேரம் சந்தித்த பின்னர் எலிசி அரண்மனையில் வைத்து இதனை அறிவித்துள்ளார்.

  • 19
·
Added a post
·

உலகில் தற்போது வரை ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 கண்டங்கள் உள்ளன. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கண்டங்கள் எப்படி இருந்தன என்பது புரியாத புதிரான நிலையில் தற்போது உலகின் 8-வது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த கண்டத்திற்கு விஞ்ஞானிகள் ஜீலந்தியா என்று பெயரிட்டுள்ளனர். கடல் தளத்தில் இருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டு பிடித்துள்ளனர்.

இந்த கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இது நியூசிலாந்துக்கு அருகே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளது. இதில் நியூசிலாந்தை போல சில தீவுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது என தெரிவித்துள்ளனர்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கண்டமானது விரைவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு உலகின் 8-வது கண்டமாக அறிவிக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் தமிழகத்தில் இந்திய பெருங்கடலில் லெமூரியா கண்டம் கடலுக்குள் மூழ்கி இருப்பதாகவும், தமிழர்கள் இங்குதான் தோன்றினர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். அதன் அடிப்படையில் பார்த்தால் இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஜீலந்தியா 9-வது கண்டமா? என்ற கேள்வியையும் அறிவியலாளர்கள் எழுப்பி உள்ளனர்.

  • 31
·
Added a post
·

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ‘ரயித்தா’ சாப்பிடுகிறோம்.

12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது

16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

  • 34
  • 33
  • 34
  • 34
·
Added a post
·

தீபாவளி பண்டிகை வருகிறது என்றாலே மக்களிடையே, குறிப்பாக நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடையே குதூகலம் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிடும். போனஸ் பணம் கைக்கு வருவதற்கு முன்னரே, அதை வைத்துக்கொண்டு ‘வீட்டில் யார் யாருக்கு என்னென்ன தேவை, அது பட்ஜெட்டுக்குள் அடங்குமா?’ என்பது குறித்த ஆலோசனைகளும் திட்டமிடல்களும் தொடங்கிவிடும்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் இந்த மாதம் வழங்கும் ஊதியத்துடன் தங்களது ஊழியர்களுக்கான போனஸை வழங்கும். இப்படி தொழிலாளர்களிடையே குதூகலத்தைக் கொண்டு வரும் ‘போனஸ்’ வழங்கும் இந்த வழக்கம் எப்படி அறிமுகமானது, இதன் சரித்திர பின்னணி என்ன என்பது உள்ளிட்ட தெரிந்து கொள்வோம்.

ஆரம்ப காலத்தில் முதலாளிகள் தங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் பணியாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிலேயே ஊதியம் வழங்கி வந்த நிலையில், பண்டிகை நேரத்தில் அதனை கொண்டாடுவதற்காக கொஞ்சம் கூடுதல் பணத்தைக் கொடுத்தனர். அப்படி கொடுக்கப்படும் தொகை எஜமானரின் விருப்பத்துக்கு ஏற்ப இருந்தது. ஆனாலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு அது போதுமானதாக இல்லாததால், படிப்படியாக இது தங்களுக்கு முக்கியம் என்று உணரத் தொடங்கினர்.

இத்தகைய பின்னணியில்தான், இந்தியாவில் போனஸ் முதன்முறையாக, மில் ஊழியர்களுக்கு 1917 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர்களின் ஊதியத்தில் 10% வழங்கப்பட்டது. அப்போது போர் நடைபெற்றதால், இது “போர் போனஸ்” ( war bonus)என்றும் அழைக்கப்பட்டது. ஏனெனில் அப்போதைய போர் நிலைமைகள் காரணமாக ஊதிய உயர்வுக்கு அனுமதிக்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்களில் தொழில்துறை சார்ந்த பிரச்னைகளுக்கு போனஸ் குறித்த கேள்விதான் முக்கிய காரணமாக இருந்தது. கேரளா மாநிலத்தில் நடந்த கே.எஸ். பாலன் வழக்கு, உரிமையாளர்கள் சங்கத்துக்கு எதிரான ராஷ்ட்ரிய மில் மஸ்தூர் சங்கம் இடையேயான வழக்குகள் போன்ற பிரபலமான வழக்குகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

நாம் மேலே குறிப்பிட்டபடி இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு, தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வாரச் சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்தான் மாத சம்பள முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது 4 வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது.

“அப்படி மாத அடிப்படையில் கணக்கிட்டால், 12 சம்பளம் வரும். ஆனால் ஓர் ஆண்டுக்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியெனில் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமே… 12 தானே கொடுக்கிறார்கள்…” எனக் கருதிய மகாராஷ்ட்ராவில் உள்ள சில மில் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக போராட்டத்தை தொடங்கின. தங்களுக்கு ஒரு மாத சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடின.

 அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியென்றால் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமல்லாவா? இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக 1930 ஆம் ஆண்டு வாக்கில் மகாராஷ்ட்ராவில் உள்ள சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடங்கின. 10 ஆண்டு காலம் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பிரிட்டிஷ் அரசு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு அதிக பணத் தேவை இருக்கும் என்றும், அந்த சமயத்தில் போனஸ் வழங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து அக்கோரிக்கை ஏற்கப்பட்டு 1940 ஆம் ஆண்டு முதல் போனஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில்தான், சுதந்திரத்துக்கு பின்னர் கொண்டுவரப்பட்ட 1950 ஆம் ஆண்டு தொடங்கி 1965 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற வழக்குகள், போனஸ் பரிந்துரைக்கான ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட முத்தரப்பு ஆணையம் மற்றும் போனஸ் கொடுப்பனவுச் சட்டம் போன்றவற்றினால், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 8.33% போனஸ் வழங்க வேண்டும் என்ற தற்போதைய சட்டம் 1965 ஆம் ஆண்டு மே 29 அன்று நடைமுறைக்கு வந்து, போனஸ் வழங்குவதில் ஒரு ஒழுங்குமுறை உருவானது.

  • 36
·
Added a post
·

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் தீர ஆலோசனை கிடைக்கும். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

ரிஷபம்

பொன் பொருள்கள் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தாமதங்கள் விலகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலை துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கைத்தொழிலில் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிதுனம்

புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். அறப்பணி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான செயல்களின் பொறுமை வேண்டும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் அமையும். சக ஊழியர்களிடத்தில் மதிப்புகள் உயரும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

சிம்மம்

வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கணவன், மனைவிக்கிடைய விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். அலுவலகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கன்னி

எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். மேல் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அரசியல் விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

விருச்சிகம்

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பிரபலமானவர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு

உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபார இடமாற்ற எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் ஆதரவால் திட்டமிட்ட காரியம் நிறைவேறும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மகரம்

செயல்களில் இருந்த தாமதங்கள் விலகும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய வாகனம் முயற்சிகள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கும்பம்

குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் உதவிகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பது தவிர்க்கவும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். அலுவல் பணிகளில் விவேகம் வேண்டும். இறை வழிபாடு புரிதலை உருவாக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மீனம்

உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். பணி நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். எதிலும் நேர்மறையுடன் செயல்படவும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உருவாகும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

  • 48
·
Added a post
·

விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 20 ஆம் தேதி திங்கட்கிழமை 6.10.2025

இன்று காலை 11.42 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று காலை 06.06 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

இன்று பிற்பகல் 02.06 வரை விருத்தி. பிறகு துருவம்.

இன்று அதிகாலை 12.33 வரை கரசை. பின்னர் காலை 11.42 வரை வணிசை. பின்பு இரவு 10.46 வரை பத்தரை. பிறகு பவம்.

இன்று காலை 06.01 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=284&dpx=2&t=1759759157

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 05.00 முதல் 06.00 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 54