தாத்தா,பாட்டி காலங்களில் மழையை எவ்வாறு வகைப்படுத்தி வைத்திருந்தனர் என்பதை சற்று திரும்பி பார்ப்போமா!
தமிழ்மொழி, பிறமொழி போல் அல்ல!
வாழ்வியல் மிக்கது!
1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது.
2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..
3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்….
☆ சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு.. (சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)
சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்….
அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.
சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்
சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்... மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்
4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை..
அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..
5. கனமழை - துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்
6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை (இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்…. புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்).
7. பனிமழை - பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..
8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..
மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது.
(அதனால்தான் இலக்கியங்களில் ‘மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.)
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படத்துக்கு ‘ஹேப்பி ராஜ்’ எனப் பெயரிடப்பட்டு டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தாலும், நாயகனாகவும் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். சில மாதங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நாயகனாக நடித்து வந்தார். இப்படத்தினை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.
இப்படத்துக்கு ‘ஹேப்பி ராஜ்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதன் டைட்டில் லுக்கை மட்டும் தற்போது வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தில் அப்பாஸ், ஜார்ஜ் மரியான், கெளரி ப்ரியா, ப்ரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் மரியா இளஞ்செழியன் தலைப்பின் பின்னணி குறித்து கூறும்போது, “’ஹேப்பி ராஜ்’” என்ற தலைப்பு ஒரு எளிய ஆனால் ஆழமான சிந்தனையில் இருந்து உருவானது. சினிமாவை மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம். என் நாயகனுக்கு ‘ஹேப்பி’ என்று பெயர் வைக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. அந்த பெயர் கதையின் மைய உணர்வை எப்போதும் நினைவூட்டும் ஒரு குறியீடு ஆகும்.
முழுக் கதையிலும் ‘ஹேப்பி’என்ற வார்த்தை நூற்றுக்கும் மேற்பட்ட முறை ஒலிக்கும்; அது வெறும் சொல் அல்ல, நம்பிக்கையூட்டும் ஒரு தாள லயம் சேர்ந்த மந்திரம் போன்றது. இந்தக் கதை அடிப்படையில் தூய மற்றும் உண்மையான மகிழ்ச்சியை மையக் கருவாகக் கொண்டது; அதே சமயம் வாழ்க்கையின் பல்வேறு உணர்வுகளையும் தொடுகிறது. "ஹேப்பி ராஜ்" படம் மகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் ஒரு அனுபவமாக அமையும்; மனதை நிம்மதியாக்கும். கோபம், புன்னகை, மகிழ்ச்சி அனைத்தும் நம் கையில் தான் உள்ளது என்பதை உணர்த்தும். வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடுபவர்களுக்கான ஒரு படைப்பு” என தெரிவித்தார்.
’ஹேப்பி ராஜ்’ படத்தின் இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணிபுரிந்து வருகிறார். இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘ஹேப்பி ராஜ்’ படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி இடையேயான காதல் வதந்தி மாதக்கணக்கில் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக இருந்து வருகிறது.
அண்மையில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிதா தன் மனைவியுடன் சேர்ந்து ட்ரூடோ மற்றும் பெர்ரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, இந்த வதந்தி மேலும் தீவிரமடைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் மரம் முன் நின்று பெர்ரியின் தோளில் கை வைத்தபடி ட்ரூடோ இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில் கிஷிதா, கேட்டி பெர்ரியை ட்ரூடோவின் “பங்காளர்” என குறிப்பிட்டது கனடியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரூடோவும் அந்தப் பதிவை மீண்டும் பகிர்ந்து, “கேட்டி மற்றும் நான் உங்களுடனும் யுகோவுடனும் அமர்ந்து பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் இதுவரை தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மறுபக்கம், கேட்டி பெர்ரியும் கடந்த ஜூனில் நடிகர் ஓர்லாண்டோ ப்ளூமுடன் தனது 10 வருட உறவை முடித்ததாக அறிவித்திருந்தார்.
ட்ரூடோ, சுமார் 12 ஆண்டுகள் லிபரல் கட்சிக்கு தலைமை தாங்கிய பின்னர், 2025 ஜனவரியில் அடுத்த தேர்தலுக்கான வேட்பாளராக தன்னைப் பார்க்க முடியாது என தெரிவித்து கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து விலக்கிக் கொண்டார்.
கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விடயத்தை கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், கனடாவில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னதாக சிறு அளவிலான வேலை இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை இல்லா விகிதமும் ஒக்டோபரில் இருந்த 6.9 வீதத்தில் இலிருந்து நவம்பரில் 6.5 வீதமாக குறைந்துள்ளது. இந்தநிலையில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை மொத்தம் 181,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
விமர்சன பேச்சுக்களால் செயல்களில் சில மாற்றம் ஏற்படும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
ரிஷபம்
பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் வேண்டும். புதிய அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வருமான வாய்ப்புகள் கூடும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மிதுனம்
அரசு காரியத்தில் சிந்தித்து செயல்படவும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். பெரியவர்களிடம் நன்மதிப்புகள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு வந்து செல்லும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
கடகம்
நண்பர்கள் இடத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜாமீன் செயல்களை தவிர்க்கவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். சக ஊழியர்களால் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். ரகசியமான சில முதலீடுகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். சுகம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
மனதில் இருந்த கவலைகள் குறையும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெள்ளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் தடைப்பட்ட பணிகள் முடியும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புண்ணிய ஸ்தல பயணங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தி ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விருச்சிகம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். அரசு பணிகளில் பொறுமை வேண்டும். விதண்டாவாத பேச்சுகளை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் கால விரயம் உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறு தூர பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வருத்தம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகரம்
உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் வந்து போகும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். முயற்சி ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். விவசாய பணிகளில் பொறுமை வேண்டும். பங்குதாரர்களிடம் அனுசரித்து செல்லவும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
நண்பர்கள் மூலம் ஆதரவான காரியங்கள் நடைபெறும். இடம் மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வாக்குவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வித்தியாசமான கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். உயர் அதிகாரிகள் குறித்த சில புரிதல்கள் உண்டாகும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும். சுப காரியம் முயற்சிகள் கைகூடும். தாய் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் தேதி சனிக்கிழமை 6.12.2025
இன்று அதிகாலை 03.19 வரை பிரதமை. பின்னர் துவிதியை .
இன்று பிற்பகல் 12.03 வரை மிருகசீரிடம் . பின்னர் திருவாதிரை.
இன்று காலை 06.50 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று அதிகாலை 03.19 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.17 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘புஷ்பா 2’. ரூ.2000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. தற்போது இப்படத்தினை ஜப்பானில் மொழிமாற்றம் செய்து ஜனவரி 16-ம் தேதி வெளியிடவுள்ளது படக்குழு. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கவுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா 2’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகள், வசனங்கள் என அனைத்துமே கொண்டாடப்பட்டன. தற்போது ஜப்பானில் வரவேற்பு பிரம்மாண்டமாக இருப்பதால், அங்கும் மாபெரும் வசூல் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு தற்போது அட்லி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அல்லு அர்ஜுன்.
கனடா முழுவதும் மருத்துவமனைகள் குழந்தைகளில் காய்ச்சல் தொற்றுகளின் அதிகரிப்பை சந்தித்து வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 17 குழந்தைகள் மட்டுமே காய்ச்சல் வைரஸிற்கு உள்ளாகியிருந்த இருந்த நிலையில், இந்த ஆண்டு அதே மாதத்தில் 145 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது எட்டு மடங்கு அதிகரிப்பு என கிழக்கு ஒண்டாரியோ குழந்தைகள் மருத்துவமனை (CHEO) வெளியிட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 12 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவர்கள் பாதுகாப்பு உருவாக இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் உடனடியாக காய்ச்சல் தடுப்பூசி எடுக்குமாறு மக்களிடம் வலியுறுத்துகின்றனர்.
பிற குழந்தைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால் பள்ளி வயதுடைய குழந்தைகளே முதலில் பாதிக்கப்படுவார்கள் என்றாலும், இரண்டாண்டுகளுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் முன் நோய்கள் கொண்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூத்த வயதினர், குறிப்பாக 75 வயதுக்கு மேற்பட்டவர்களும் தீவிர நோய்க்கு உள்ளாகும் அபாயம் காரணமாக கூடுதல் கவனம் தேவைப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இளநீர் சாப்பிட்டால் சளி அகலும் என்பதே உண்மை.
நம் ரத்தத்தில் இருப்பது போல, சரியான அளவில் மின்பகுனி உப்புக்கள் இளநீரில் இருப்பதால், இளநீர், இயற்கை தந்த நல்லதொரு டானிக். சரியாகச் சொல்வதானால், இளநீர் ஒரு உயிர்த்திரவம். புது இளநீர், உடலுக்கு நல்லது. எப்போதும், வெட்டிய உடனேயே, இளநீரைப் பருகி விட வேண்டும். இதை உண்டால், சளி பிடிக்காது; மாறாக, சளி அகலும். இளநீரில் அதிக அளவில் சர்க்கரைப் பொருட்களும், தாது உப்புக்களும் மற்றும் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும் உள்ளன.
சர்க்கரை சத்துக்கள்: குளுக்கோஸ் மற்றும் புரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள், இளநீரில் காணப்படுகின்றன. இளநீரிலுள்ள, குளூக்கோஸ் மற்றும் புரக்டோஸ், தேங்காய் முதிர்ச்சியடையும் போது, சுக்ரோசாக மாறி விடுகிறது. முற்றின தேங்காய் நீரில் காணப்படும் மொத்த சர்க்கரைச் சத்தில், 90 சதவீதம், சுக்ரோஸ் ஆகும்.
தாது உப்புகள்: இளநீரில், பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புகள், அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது, பொட்டாசியம். இளநீரில் காணப்படும் பொட்டாசியத்தின் அளவு, தென்னைக்கு இடப்படும் பொட்டாஷ் (சாம்பல் சத்து) உரங்களின் அளவைப் பொறுத்து, மாறுபடுகிறது. பொட்டாசியமும் மற்ற தாது உப்புகளும் நிறைந்த இளநீர் தான், நம் உடலிலிருந்து, சிறுநீரை அதிக அளவில் வெளியேற்ற உதவுகிறது.
புரதச் சத்துக்கள்: இளநீரில், புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச்சத்தின் தரம், பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது. இளநீரில், கூட்டுப் புரதங்கள் அதிக அளவில் இல்லாததால், நோயாளிகளுக்கும், அதிர்ச்சியினால் ஏற்படும் அபாயம் மிகக் குறைவு.
வைட்டமின்கள்:
இளநீரில், அஸ்கார்பிக் அமிலமும், வைட்டமின் பி பிரிவு அமிலங்களும் உள்ளன. அஸ்கார்பிக் அமிலத்தின் அளவு, 22 - 37 மி.கி./100 மி.லி., ஆகும். இளநீரைச் சுற்றியிருக்கும் பருப்பின் வளர்ச்சிக்கேற்ப, இதன் அளவு குறைந்து வரும். காபி, டீயை கைவிட்டு, எல்லாரும் இளநீர் பருகிட, எங்கும் அமைப்போம் இளநீர் பந்தல்!
மனித குலத்திற்கு, இயற்கை அளித்த மாபெரும் பரிசு, இளநீர். சுத்தமான, சுவையான சத்தான பானம். கோடையின் வெப்பத்தை தணிக்கும், குளிர்பானம். ஒரு லிட்டர் இளநீரின் கலோரி அளவு, 17.4/100 கிராம்.
'இளநீர் வழுவழுப்பானது, இனிப்பானது, விந்துவை அதிகரிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், சிறு நீரகத்தைச் சுத்திகரிக்கும்' என்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன.
இளநீரின் மருத்துவக் குணங்கள்:
* ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு, இளநீர் ஒரு நல்ல மருந்து.
* வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள், இளநீரில் உள்ளன.
* இளநீர் உடல் சூட்டைத் தணிக்கிறது.
* வேர்க்குரு, வேனற்கட்டி, பெரியம்மை, சின்னம்மை மற்றும் தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த, இளநீரை உடம்பின் மீது பூசிக் கொள்ளலாம்.
* இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.
* இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக, காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானம்.
* ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்கிறது.
* முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும், இளநீர் சிறந்த டானிக் ஆகும்.
* சிறுநீர் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது.
* சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகிறது.
* சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது.
* நெருக்கடி காலக்கட்டங்களில், நோயாளிகளுக்கு இளநீரை நரம்பு ஊசி மூலம் செலுத்தலாம்.
* இளநீர் மிகமிகச் சுத்தமானது. உடலில் சூட்டை உண்டாக்காது. சிவப்பு ரத்த அணுக்களை அழிக்காது. இதனால் தான், ரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக, இளநீர் பயன்படுத்தப்படுகிறது.
* இளநீரின், சிறந்த மின் பகுனித்தன்மை, மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது.
* ரத்தத்தில் கலந்துள்ள, நச்சுப்பொருளை அகற்ற இளநீர் உதவுகிறது.
தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன்.
அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான்
கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் ,கண்ணனை இறுக பற்றி கொண்டு கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாள முடியாமல் அழுகிறாயோ ? என்று கேட்டான் .
கண்ணன் ,இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை.உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன்.
அர்ஜுனன் --கண்ணா நீ கடவுள் உனக்கு உறவு பற்று .பாசம்,பந்தம் ,,எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது.
கண்ணன் ---உறவு .பற்று ,பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா .
அர்ஜுனன் --அப்படி சொல்லாதே கண்ணா ---மானிடர்கள் மறைந்தாலும் பாச --பந்தம் அவர்களை விட்டு போகாது.
கண்ணன் --அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம் அங்கேதான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன்.
சொர்க்கலோகம் ---ஒளிப்பிழம்பு வடிவுடன் சொர்கலோகத்தில் இருந்தான் அபிமன்யு --அவனை அடையாளம் கண்டுகொண்ட அர்ஜுனன் ---என் மகனே அபிமன்யு என்று பாசத்தோடு கட்டி அணைக்க போனான் .
அணைக்க போன அர்ஜுனனை தடுத்த அபிமன்யுவின் ஆன்மா --அய்யா யார் நீங்கள் --என் போன்ற ஆன்மாவுக்கு உறவு ஏதும் கிடையாது.
தயவு கூர்ந்து என்னை விட்டு விலகி செல்லுங்கள் என்றது அபிமன்யுவின் ஆன்மா.
அதை கேட்டு அதிர்ச்சியாக நின்ற அர்ஜுனனிடம் ---பார்த்திபா பார்த்தாயா---உறவு பாசம் --பந்தம் --உணர்வு ---கோபம்---அன்பு---காமம் --யாவும் உடலில் உயிர் இருக்கும் வரைதான் ---உடலை விட்டு உயிர் போய் விட்டால்--ஏதும் அற்ற உடலுக்கும் --உணர்வு இல்லை ---அதை விட்டு போன ஆன்மாவுக்கும் உணர்வில்லை ---
நீ அழ வேண்டும் என்றால் அதோ பூவுலகில் போர்க்களத்தில் உன் மகன் அபிமன்யுவின் உடல் கட்டை இருக்கிறதே அதை கட்டி பிடித்து அழு---உன் உணர்ச்சியெல்லாம் அதில் கொட்டி அழு ----ஒரு உயிர் பிறப்பிற்கும் நீ காரணம் அல்ல பிறந்த உயிர் இறப்பிற்கும் நீ காரணம் அல்ல என்பதை நன்கு உணர்ந்து கொள் .
படைத்தவன் எவனோ அவனே தான் படைத்ததை ஒரு நாள் அழிக்கிறான்-நடக்கும் யாவிற்கும் நீ ஒரு கருவியே-செயல் யாவும் படைத்தவன் செயலே என்பதை உணர்ந்து செயல்படு---அதுவே வாழ்வின் அர்த்தமாகும் ----என்று கூறி கண்ணன் புன்னகைத்தான் .
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலம் கூட சொந்தம் இல்லையடா
இதை புரிந்து கொண்டு வாழப் பழகடா.
பிறந்த பிறப்பில் நீ செய்ய வேண்டிய நியாயமான குடும்ப கடமையை உறுதியாக நின்று செய்.
ஆனால் தன் நலம் கருதாத உன் அர்ப்பணிப்பு மட்டுமே உன் பெயர் சொல்லி நிலையாக உலகில் வாழும் என்பதை உணர்பவனே மனிதன்.
‘மஞ்சணத்தி’ என அழைக்கப்படும் நுணா மரத்தின் வேர் முதல் இலை வரை அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவையாக உள்ளன. தணக்கு, மஞ்சள் பாவட்டை, நுணவு போன்ற பல பெயர்களும் இம்மரத்துக்கு உண்டு.
இதன் தண்டு பகுதியின் தோலை சீவினால் உட்புறத்தில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் கட்டையை வெட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரைக் கொண்டு ஆடைகளுக்கு சாயமேற்றியதாக வரலாறுகள் கூறுகின்றன.
குயில்கள் இம்மரத்தின் பழங்களை விரும்பி சாப்பிடும். இதன் முதிர்ந்த மஞ்சள் நிறக் கட்டைகள் விவசாயக் கருவிகள் செய்யவும், சிறு மரச் சாமான்கள், பொம்மைகள் செய்யவும் மிகவும் உகந்தவை.
மருத்துவப் பயன்கள்:
* மஞ்சணத்தி தாவரத்தை மருந்தாக எடுத்துக்கொண்டால், நோயினால் தளர்ந்த உடல் ஆரோக்கியமாக்கும்.
* உடல் வெப்பத்தை இது அதிகரிக்கும்.
* இதன் இலை, காய், பழங்கள் அனைத்துமே வீக்கம் மற்றும் கட்டிகளைக் கரைக்கும்.
* பெண்களுக்கு மாதவிலக்கைத் தூண்டும்.
* குழந்தைகளுக்கு வரும் கரப்பான், புண்கள், கழலை போன்றவற்றை குணமாக்கும்.
* ஐந்து மஞ்சணத்தி இலைகளை நீரில் கழுவி சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக நசுக்கி அரை லிட்டர் தண்ணிரீல் இட்டுக் காய்ச்சி குடிநீர் செய்து தினமும் காலை, மாலை வேளைகளில் 20 மி.லி. வீதம் குழந்தைகளுக்கு கொடுத்தால் மாந்தம், கழிச்சல் ஆகியன குணமாகும்.
* புண்கள், சிரங்குகள் உள்ள இடத்தில் மஞ்சணத்தி இலையை அரைத்துப் பூசினால் எளிதில் குணமாகும்.
* மஞ்சணத்தி காய்களை சேகரித்து உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் பல் துலக்கினால் சொத்தை பல் வராது.
* 10 கிராம் மஞ்சணத்தி வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடித்தால் பேதி நின்றுவிடும்.
* ஐந்து மஞ்சணத்தி இலையோடு ஒரு கொத்து வேப்பங்கொழுந்தை சேர்த்து வதக்கி, இதனுடன் 2 கிராம் சுக்கு, மிளகு, ஒரு தேக்கரண்டி ஓமத்தை நசுக்கி அரை லிட்டர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி மூன்று தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க அஜீரணத்தால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.
* ஐந்து மஞ்சணத்தி இலையை, ஒரு கொத்து வேப்பங்கொழுந்தோடு வதக்கி இதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி ஓமம், ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம் சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் இட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை, மாலை இரு வேளையும், வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம் குணமாகும்.
* நொச்சி, உத்தாமணி, பொடுதலை இலை சாற்றுடன் ஒரு அளவு மஞ்சணத்தி இலை சாறு கலந்து தினமும் மூன்று அல்லது நான்கு முறை சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான இரைப்பை பிரச்னைகளும் முற்றிலும் தீரும்.
* சிறிது மிளகுத் தூள், கால் ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து, மஞ்சணத்தி இலை மற்றும் பழத்தின் விழுதுடன் சேர்த்து கொதிக்க வைத்து, 50மி.லி. மற்றும் 100 மி.லி. வீதம் 48 நாட்களுக்கு குடித்து வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதிக இரத்தப்போக்கு போன்ற பிரச்னைகள் தீரும்.








