sivam

  •  ·  Moderator
  • 784 views
  • More
Friends
Empty
·
Added article

அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவை விட பாலிவுட்டில் அதிக பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் நடிகை சாய் பல்லவி. எப்படி ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் டாப் நடிகையாக மாறினாரோ அதே போல சாய் பல்லவிக்கும் பெரிய பெரிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ரன்பீர் கபூர், யஷ் உடன் இணைந்து ராமாயணா படத்தின் மூலம் இந்த ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமாவார் சாய் பல்லவி என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்விஸ்ட்டாக அமீர்கான் தயாரிப்பில் அதற்கு முன்னதாக வரும் மே 1ம் தேதியே பாலிவுட்டில் சாய் பல்லவி அறிமுகமாகிறார் என்கிற அறிவிப்பு டீசருடன் வெளியாகி விட்டது.

அமீர்கான் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள 'ஏக் தின்' (Ek Din) எனும் காதல் படம் வரும் மே 1ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், சாய் பல்லவி ஜுனைத் கானுக்கு லிப் லாக் அடித்தது போன்ற போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன. உண்மையாகவே சாய் பல்லவி லிப் லாக் கொடுத்தாரா? இல்லையா?

அமரன் படத்தின் வெற்றி: கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த்தின் வீர மரணம் மற்றும் அவரது மனைவியின் தியாகம் திரையில் ரத்தமும் சதையுமாக காட்டப்பட்ட நிலையில், அந்த படம் 300 கோடி வசூலை ஈட்டியது. அஜித் குமாரையே பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயன் பின்னுக்குத்தள்ளினார். அந்த படத்தின் வெற்றிக்கு பெரும் பலமாக சாய் பல்லவியின் நடிப்பு இருந்தது.

2000 கோடி பட்ஜெட்டில் ராமாயணா படத்தை பிரம்மாண்டமாக 2 பாகங்களாக எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகம் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தில் சீதையாக நடிக்க சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டு நடித்து வருகிறார். பாலிவுட் நடிகைகள் பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளது. அமரன் படத்துக்குப் பிறகு இந்த ஒரு படம் மட்டும் தானா? என நினைத்த ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக அமீர்கான் மகன் ஜுனைத் கான் உடன் ஒரு படத்தில் நடித்தே முடித்து விட்டார் சாய் பல்லவி என்பது தெரிய வந்துள்ளது.

ஆனால், பாலிவுட்டில் உள்ள சில விஷமிகள் ஜுனைத் கான் உடன் அருகே அமர்ந்து இருக்கும் போட்டோவை அப்படியே ஏஐ உதவியுடன் சாய் பல்லவி அவருக்கு லிப் லாக் அடிப்பது போல எடிட் செய்து மாற்றி அதை சோஷியல் மீடியாவில் அதிகம் பரப்பி வருகின்றனர். ஏற்கனவே சாய் பல்லவி தனது தங்கையுடன் பீச்சில் இருந்த போட்டோக்களை வைத்து அவர் பிகினியுடன் சுற்றுகிறார் என்று பரப்பியது குறிப்பிடத்தக்கது. சாய் பல்லவியின் வளர்ச்சி பிடிக்காத சில நடிகைகளின் பிஆர்கள் தான் இந்த வேலையை தீயாக பார்க்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.

  • 82
  • 87
·
Added a post

"வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துதல்" (Water on Empty Stomach)

மருத்துவ உலகம் இதை "Water Therapy" என்கிறது. ஜப்பானியர்கள் இதை "Water Cure" என்கிறார்கள். ஆனால் நம் சித்தர்களும், ஆயுர்வேத ரிஷிகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை "உஷத் பானம்" (Usha Paana) என்று அழைத்து, ஒரு தவமாகவே கடைபிடித்து வந்துள்ளனர்.

"தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்?" என்ற கேள்விக்கு, வெறும் மருத்துவ பதில் மட்டும் போதாது. அதற்குள் ஒரு ஆன்மீக விஞ்ஞானம் இருக்கிறது.

தண்ணீர் - இது வெறும் H2O அல்ல! (Water is Prana)

தண்ணீர் என்பது தாகத்தை தீர்க்கும் திரவம் மட்டுமல்ல. அது "உயிர் சக்தி" (Prana).

இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது. அதில் மிகவும் முக்கியமானது "நீர்" (Jala Tattva). உங்கள் உடலும் ஏறக்குறைய 70% நீரால் ஆனது.

உங்கள் ரத்தம், உங்கள் மூளை, உங்கள் தசைகள் எல்லாமே நீரின் வடிவம்தான்.

நீங்கள் எப்போது காலையில் கண் விழிக்கிறீர்களோ, அப்போது உங்கள் உடல் ஒரு வறண்ட நிலத்தில் இருக்கிறது. இரவு முழுவதும் நடந்த பழுதுபார்க்கும் பணியில் (Repair work), உங்கள் உடல் பல கழிவுகளை தேக்கி வைத்திருக்கிறது. அந்த நேரத்தில் நீங்கள் கொடுக்கும் அந்த முதல் டம்ளர் தண்ணீர்... அது அமிர்தத்திற்கு சமம்!

"காலையில் நீங்கள் அருந்தும் நீர், உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லையும் தட்டி எழுப்பி, 'விடிந்துவிட்டது... புது வாழ்வு பிறந்துவிட்டது' என்று சொல்லும் மந்திரம்!"

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன தெரியுமா?

1. குடலை கழுவும் புனித நீராடல் (Colon Cleansing)

நீங்கள் காலையில் தண்ணீர் குடித்தவுடன், அது நேராக உங்கள் குடலுக்குச் செல்கிறது. இரவு முழுவதும் சேர்ந்த கழிவுகளை மலமாக வெளியேற்றத் தூண்டுகிறது. குடல் சுத்தமானால், மனம் சுத்தமாகும். மலச்சிக்கல் (Constipation) என்ற வார்த்தையே உங்கள் அகராதியில் இருக்காது. குடல் சுத்தமாக இருக்கும்போது, நீங்கள் உண்ணும் உணவின் சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சிக்கொள்ளும்.

2. நச்சுக்களை வெளியேற்றும் யாகம் (Detoxification)

இரவில் உங்கள் உடல் உறுப்புகள் கடினமாக உழைத்து, மெட்டபாலிக் கழிவுகளை (Metabolic Waste) உண்டாக்கியிருக்கும். காலையில் நீங்கள் குடிக்கும் நீர், இந்த நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் அடித்துக்கொண்டு வெளியேறுகிறது. இது உங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

3. பசியைத் தூண்டும் அக்னி (Igniting Digestive Fire)

பலருக்கு காலையில் பசிப்பதே இல்லை. ஆனால் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துப் பாருங்கள். அது உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து, ஜீரண மண்டலத்தை தயார் செய்கிறது. ஆரோக்கியமான பசி எடுக்கும். ஆரோக்கியமான பசி என்பது ஆரோக்கியமான உடலின் அடையாளம்.

4. தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு

நம்மில் பலருக்கு இருக்கும் தலைவலிக்கு முக்கிய காரணம் "நீர்ச்சத்து குறைபாடு" (Dehydration). காலையில் தண்ணீர் குடிப்பது, மூளைக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கி, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும், தலைவலி இல்லாமலும் வைத்திருக்கும்.

அழகு மற்றும் இளமையின் ரகசியம் (Beauty & Anti-agening

சரும பொலிவு: வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது, ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, புதிய ரத்த அணுக்கள் உற்பத்தியாகின்றன. இது உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, ஒரு இயற்கையான பொலிவை (Natural Glow) தருகிறது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மாயமாய் மறையும்.

கூந்தல் வளர்ச்சி: உங்கள் முடியின் வேர்களுக்கு உயிர் கொடுப்பது நீர்ச்சத்துதான். தினமும் காலையில் தண்ணீர் குடிப்பது, முடி உதிர்வதைத் தடுத்து, அடர்த்தியான முடி வளர உதவும்.

உடல் எடை குறைய... ஒரு எளிய வழி!

உடல் எடையைக் குறைக்க எத்தனையோ டயட் இருக்கின்றன. ஆனால், தண்ணீர் குடிப்பதுதான் உலகிலேயே எளிமையான "வெயிட் லாஸ் டயட்".

காலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் (அல்லது மிதமான வெந்நீர்) குடிக்கும்போது, உங்கள் உடலின் Metabolism (வளர்சிதை மாற்றம்) 24% முதல் 30% வரை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. பசியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, தொப்பை குறைய நினைப்பவர்கள், நாளை காலை முதலே இதைத் தொடங்குங்கள்

நவீன அறிவியல் இப்போதுதான் "Water Memory" பற்றி பேசுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் இதை அன்றே உணர்ந்திருந்தார்கள். தண்ணீருக்கு நினைவாற்றல் உண்டு. நீங்கள் எந்த உணர்வோடு தண்ணீரைப் பருகுகிறீர்களோ, அந்த உணர்வை அது உங்கள் உடலுக்குள் கடத்தும்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

காலையில் எழுந்ததும், பல் துலக்குவதற்கு முன் (அல்லது வாய் கொப்பளித்த பிறகு), ஒரு செம்பு பாத்திரத்திலோ அல்லது மண் பானையிலோ வைத்த நீரை எடுங்கள்.

அதை கையில் வைத்துக்கொண்டு, "இந்த நீர் என் உடலை குணப்படுத்தும் அமிர்தம். நன்றி இறைவா!" என்று மனதிற்குள் சொல்லுங்கள்.

பிறகு அதை மடக் மடக் என்று குடிக்காமல், ஒவ்வொரு வாய் நீராக, அதை ரசித்து, உமிழ்நீரோடு கலந்து பருகுங்கள்.

இந்த நேர்மறை எண்ணத்தோடு (Positive Affirmation) நீங்கள் குடிக்கும் நீர், உங்கள் டி.என்.ஏ (DNA) வரை சென்று மாற்றத்தை உண்டாக்கும் வல்லமை கொண்டது.

எப்படி குடிக்க வேண்டும்? (Do's and Don'ts)

எல்லாவற்றிற்கும் ஒரு முறை இருக்கிறது. தவறான முறையில் தண்ணீர் குடித்தால், அது நோயைக் கொண்டு வரும்.

நின்று கொண்டு குடிக்காதீர்கள்

நின்றுகொண்டு தண்ணீர் குடித்தால், அது நேரடியாக குடலைத் தாக்கி, சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம் மற்றும் மூட்டு வலியை (Arthritis) உண்டாக்கும். எப்போதும் அமர்ந்து, நிதானமாக குடியுங்கள்.

பல் துலக்குவதற்கு முன்? பின்?: காலையில் எழுந்ததும் வாய் கொப்பளிக்காமல் நீர் அருந்துவது ஜப்பானிய முறை. வாயில் உள்ள உமிழ்நீரில் (Saliva) நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இவை வயிற்றுக்குள் செல்வது நல்லது. ஆனால், இது பலருக்கு கூச்சத்தை தரலாம். எனவே, வாய் கொப்பளித்துவிட்டு குடிப்பதே சிறந்தது.

எவ்வளவு குடிக்க வேண்டும்?:

எடுத்த உடனே 1 லிட்டர் குடிக்காதீர்கள். முதலில் 1 அல்லது 2 டம்ளரில் (சுமார் 300-500 மி.லி) தொடங்குங்கள். படிப்படியாக அதிகரிக்கலாம்.

வெந்நீரா? குளிர்ந்த நீரா?:

ஆயுர்வேதத்தின் படி, காலையில் மிதமான சூட்டில் உள்ள வெந்நீர் (Warm Water) குடிப்பதே சிறந்தது. இது கபத்தை (Kapha) கரைக்கும், ஜீரணத்தை சீராக்கும். பிரிட்ஜ் வாட்டர் (Ice Water) காலையில் விஷத்திற்கு சமம்.

ஆரோக்கியம் என்பது மருத்துவமனையில் கிடைப்பதல்ல; அது உங்கள் தினசரி பழக்கவழக்கங்களில் இருக்கிறது. நாளை காலை சூரியன் உதிக்கும் முன் எழுங்கள். பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள். அந்த அமிர்தமான தண்ணீரை, ஒரு தவம் போல பருகுங்கள்.

இதை ஒரு 21 நாட்கள் தொடர்ந்து செய்து பாருங்கள்.

உங்கள் முகம் மாறும்.

உங்கள் ஜீரணம் மாறும்.

உங்கள் மனத் தெளிவு மாறும்.

மொத்தத்தில், உங்களுக்கே தெரியாமல் நீங்கள் ஒரு "ஆரோக்கிய மனிதராக" மாறுவீர்கள்!

நோய் இல்லாத வாழ்வே, குறைவற்ற செல்வம்.

முக்கிய குறிப்புகள்

நேரம்: காலை எழுந்தவுடன், பல் துலக்கும் முன்/பின்.

அளவு: 2 முதல் 4 டம்ளர் (படிப்படியாக).

வெப்பநிலை: மிதமான வெந்நீர் (Warm Water) சிறந்தது.

முறை: அமர்ந்து, நிதானமாக (Sip by sip) குடிக்கவும்.

பாத்திரம்: செம்பு அல்லது மண் பானை சிறந்தது.

  • 90
  • 88
·
Added a post

ஒருவர் சுமார் 6 வருடங்களாக சக்கரை நோயினாள் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்த மருந்து எடுத்தும் 250 கிழ் வந்தது இல்லை.அவர் நண்பர் ஒருவர் அறிவுறத்தளின்படி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பன்னீர் பூ .விலையும் மிகமிக குறைவு.

இரவில் பத்து பூ ஒரு கப் தண்ணிரில் ஊர வைத்து காலையில் வெரும் வயிற்றில் வடி கட்டி பருக வேன்டும்.அவர் அப்படியே 20நாட்கள் செய்ததின் விளைவாக அவருக்கு 150கீழ் குறைந்து விட்டது

  • 93
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் செல்ல நினைத்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். இணைய முதலீடுகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

ரிஷபம்

மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பணி புரியும் இடத்தில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

 

மிதுனம்

சுபகாரிய எண்ணம் கைகூடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். எதிர்பாலின மக்கள் செயல்களில் கவனம் வேண்டும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

கடகம்

பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பூமி விருத்திக்கான சூழல் அமையும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

கலை துறைகள் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் புத்திகூர்மை வெளிப்படும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேறுவீர்கள். பணி புரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கன்னி

கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

துலாம்

கடன் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

விருச்சிகம்

மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். சூழநிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

தனுசு

உத்தியோகத்தில் சூழநிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். உடல் தோற்ற பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மகரம்

நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். உடன் பிறப்புகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபார முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

மீனம்

மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். பழைய நினைவுகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகள் மூலம் தெளிவுகள் உண்டாகும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

  • 255
  • 278
  • 280
  • 280
·
Added a post
·

விசுவாவசு வருடம் தை மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை 17.1.2026

இன்று முழுவதும் சதுர்த்தசி.

இன்று காலை 09.40 வரை மூலம். பின்னர் பூராடம்.

இன்று இரவு 10.51 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.

இன்று பிற்பகல் 12.31 வரை பத்தரை. பின்னர் சகுனி.

இன்று காலை 06.33 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=391&dpx=2&t=1768621628

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 317
  • 285
  • 286