Goose on lakeside
சூர்யா நடிப்பில் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்ற திரைப்படம் மீண்டும் ரிலீஸாகுவதற்கு தயாராகி வருகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே நன்றாக ஓடிய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்வது நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு குஷி, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்து வரவேற்பை பெற்றன.
சூர்யா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான அஞ்சான் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்வதற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் சமந்தா, வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சூர்யா - லிங்குசாமி - யுவன் ஷங்கர் ராஜா - சந்தோஷ் சிவன் போன்றோரின் பிரம்மாண்ட கூட்டணி காரணமாக, அஞ்சான் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சூர்யாவின் "ராஜூ பாய்" கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இருப்பினும், வெளியானபோது இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன், வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. வெளியானபோது இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன், வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் அஞ்சான் படத்தை ரீ எடிட் செய்து மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஏமி ஜாக்சன் மதராசப்பட்டினம் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி, கெத்து, எந்திரன் 2.0, தேவி என தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வந்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்தவர் இப்போது ஹாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனோயிட் என்பவரை நிச்சயதார்த்தம் செய்தவர் திருமணம் செய்யாமல் ஆண் குழந்தை பெற்றார். ஆனால் அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
பின்னர் ஹாலிவுட் நடிகர் எட் கெஸ்விக் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கும் சமீபத்தில் அழகிய குழந்தை பிறந்தது.
ஏற்கெனவே உடல் எடையை முற்றிலுமாக குறைத்து ஒல்லியாக மாறிய நடிகை ஏமி ஜாக்சன் இப்போது அதைவிட மிகவும் ஒல்லியாகி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
கனடாவில், இதயத் துடிப்பு நின்ற இதயம் ஒன்றை நோயாளி ஒருவர் உடலில் பொருத்தி அவருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர் மருத்துவர்கள்.
பொதுவாக, மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை, அவரது இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே அகற்றி, இதயம் தேவைப்படும் மற்றொருவருக்கு பொருத்துவதுதான் வழக்கம். ஆனால், circulatory criteria (DCC) heart transplant என்னும் முறையில், மரணமடைந்த ஒருவருடைய உடலிலிருந்து இதயத்தை அகற்றி இதயம் தேவைப்படும் ஒருவர் உடலில் பொருத்துகிறார்கள்.
கனடாவில், இதயத் துடிப்பு நின்ற இதயம் ஒன்றை நோயாளி ஒருவர் உடலில் பொருத்தி அவருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர் மருத்துவர்கள். கனடாவின் ரொரன்றோ பொது மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் இந்த சாதனையைப் படைத்துள்ளார்கள்.
இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட, அதாவது, இதய தானம் பெற்ற அந்த நோயாளியில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக, அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவில் ஒருவரான Dr. Seyed Alireza Rabi தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மட்டுமே 103,000 பேர் இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக, இதய தானம் பெற காத்திருக்கிறார்கள். இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக ஏராளம் நோயாளிகள் காத்திருக்கும் நிலையில், இந்த அறுவை சிகிச்சை மருத்துவ உலகில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது!
அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம்.
ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும்,
அது தண்ணீர் கலந்த பாலை வைத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
நான் சில மிருகக்காட்சி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா? என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார்.
அன்னம் நீரில் உள்ள மீன்களையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார்.
எனக்கு ஒரு குழப்பம்.
நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று.
சில நாட்கள் இதைப் பற்றியே சிந்தித்தேன்.
ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது அடடா, *அன்னம் என்பதற்கு* *அரிசிசாதம்* என்றும் ஒரு பொருள் உண்டே. *இதை* நாம்
*சிந்திக்கவில்லையே* என்று யோசித்தேன்.
பிறகு கொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி,
அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன்.
அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்துப் பார்த்தபோது,
என்ன *ஆச்சரியம்..!!*
*பால்* முழுவதையும் *சாதம்* உறிஞ்சிக் கொண்டிருந்தது.
*தெளிந்த நீர்* மட்டும் *சாதத்தைச்* சுற்றியிருந்த *இடத்தில்* வடிந்திருந்தது.
உண்மையில் நான் கலந்த நீரை விட அதிகமாகவே வடிந்திருந்தது.
சரி நாம் உபயோகித்த பாலில் ஏற்கெனவே எவ்வளவு தண்ணீர் இருந்ததோ என்று நினைத்தேன்.
*இதுதான்* அன்னம் *பாலையும்* தண்ணீரையும் *பிரிக்கும்* கதை.
நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் *உங்கள்* வீட்டிலேயே *செய்து* பார்க்கலாம்.
மறுபடி சிந்தித்தபோது தான் அடடா, *அன்னம்* என்று தான் *சொன்னார்களே* தவிர, *அன்னப்பறவை* என்று ஒரு இடத்திலும் *சொல்லவில்லை.*
அது *நாமாக* செய்து *கொண்ட* *கற்பனைதான்* என்று புலனாயிற்று.
அன்னம் பாலையும் தண்ணீரையும் இப்படித்தான் பிரிக்கும் *என* தெரிந்து கொண்டேன்.
அந்த தேவதாசிக்கு பொன்னனையாள் என்று பெயர். அந்தப் பெயர் அவளுக்குப் பொருந்துவது போல் வேறு எந்தப் பெண்ணுக்கும் அந்த அளவு பொருந்தாது. காரணம் அவள் மேனிநிறம்! பளபளவென்று பொன்னைப்போல் மினுமினுத்துக் கொண்டிருந்தது அவள் உடல்!
அவளைப் பார்த்தவர்கள் யாரும் அவளது நிறத்தைப் பற்றி வியந்து பேசாமல் இருந்ததில்லை. கோவிலில் அவள் நடனமாடுவதைப் பார்த்தால் தங்கச்சிலை ஒன்று உயிர்பெற்று, கைகால் வீசி ஆடுவதுபோல்தான் தோன்றும்.
ஆனால் எல்லாராலும் வியந்து பேசப்படும் தங்க நிறத்தைக் கொண்ட பொன்னனையாளுக்குத் தன் மேனிநிறம் பற்றிப் பெரிய பெருமை எதுவுமில்லை. இன்னும் சொல்லப்போனால் தன் தங்கநிறம் குறித்து அவளுக்கு மனதில் சலிப்புதான் இருந்தது.
அந்த சலிப்புக்கு ஒரு முக்கியமான காரணமுண்டு. அவள் பெரிய சிவ பக்தை.
மதுரை அருகே திருப்புவனத்தில் வாழ்ந்துவந்தாள். அந்த ஊர்ச் சிவாலயத்தில் நாட்டியமாடி பொருளீட்டிவந்தாள். அந்த சிவாலய தெய்வமான திருப்புவனநாதர்மேல் அவள் கொண்டிருந்த பக்திக்கு அளவேயில்லை.
ஆனால், அவளுக்கு மனக்குறை ஒன்றிருந்தது. “இந்தக் கோவிலில் சிவலிங்கம் மட்டும்தானே இருக்கிறது? உற்சவ மூர்த்தியாக தங்கத்தில் ஒரு நடராஜர் சிலை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
நான் நடனமணி. சிவலிங்கத்தின்முன் நாட்டியமாடுகிறேன். ஆனால் நடனக் கோலத்தில் நடராஜரின் தங்க விக்ரகமிருந்து அதன்முன் ஆடினால்தானே அது பொருத்தம்? ஆடல்வல்லான் என் ஆடலைப் பார்க்கிறானென்று அப்போதுதானே என் மனதில் ஆனந்தம் தோன்றும்?
என்றேனும் ஒருநாள் கட்டாயம் அழியப்போகும் என் உடலின் தங்கநிறத்தால் என்ன லாபம்? என்றும் அழியாமல் நிலைத்திருப்பவனான பொன்னார் மேனியனுக்கல்லவோ பொற்சிலை அமைக்கவேண்டும்?’
அவள் மனதில் கசந்த நகைப்பு ஒன்று பிறந்தது. நடனக்கலை மூலம் பெரிய அளவில் ஒன்றும் அவளால் பொருளீட்ட முடியவில்லை. அவள் இல்லத்தில் சில பித்தளைப் பாத்திரங்களே இருந்தன. அதைத் தவிர அவளுக்குச் சொல்லிக்கொள்ளும் வகையில் சொத்தென்று பிரமாதமாக எதுவுமில்லை. இந்த லட்சணத்தில் கோவிலில் தங்க நடராஜர் சிலை வைக்கவேண்டுமென்று கனவு!
நடக்கக்கூடியதா இது?
இந்நினைவு வந்தபோதெல்லாம் அவள் பெருமூச்சு விடுவாள். யாரேனும் வள்ளல் வந்து பணம் கொடுத்தால் அவள் கனவு நிறைவேறலாம். ஆனால் தங்கச்சிலை செய்ய பொருளுதவி தரும் வகையிலான அவ்வளவு பெரிய வள்ளல் இங்கே யார்? சிறுகச்சிறுக குருவிசேர்ப்பதுபோல், தானே
தன் சம்பாத்தியத்தில் சேமித்துத் தங்கச்சிலை செய்துவைக்கலாமென்றால், என்றைக்குப் பணம்சேர்ந்து என்றைக்கு சிலைசெய்வது?
தனக்கும் நாளாக நாளாக வயதாகிக் கொண்டிருக்கிறது. பல்லெல்லாம் ஆட்டம் கண்டபிறகு நடனமாடினால், அந்த மூதாட்டியின் ஆட்டத்தைப் பார்க்க யார் வருவார்கள்? நடனக் கலைஞர்களின் சம்பாத்தியமென்பதே அவர்கள் இளமையாக இருக்கும்போது மட்டும்தானே?
பெரும் சிவபக்தையான அவள் அந்த ஆலயத்திலுள்ள சிவபெருமானை வழிபட வரும் அன்பர்களுக்கெல்லாம் உணவிட்டு விருந்தளித்து வந்தாள்.
அடியவர்களுக்கு அன்னதானம் செய்ததில் அவளது சம்பாத்தியத்தின் பெரும்பகுதி கரைந்துகொண்டிருந்தது. அன்னதானத்தை நிறுத்தவும் அவளுக்கு மனமில்லை.
நாள்தோறும் திருப்புவன சிவலிங்கத்தைப் பார்த்துக் கண்ணீர் விடுவாள் அவள்.
“நான் எனக்கென்று எதையாவது உன்னிடம் கேட்டேனா? உனக்குத்தான் ஒரு தங்க நடராஜர் சிலை கேட்கிறேன். நீ சித்தர்களுக்கெல்லாம் பெரிய சித்தனாயிற்றே?
ஏதாவது ரசவாதம் செய்து எனக்குக் கொஞ்சம் தங்கம் கொடுத்தால் என்ன? அதில் நான் உனக்கு சிலை செய்துவைத்து மகிழ்வேனே? உலகம் முழுவதையும் ரட்சிக்கும் உனக்கு என்னை மகிழ்ச்சியடையச் செய்வதில் அப்படியென்ன கஷ்டம்?’
இந்த நினைப்பில் அவள் விழிகளில் கண்ணீர் வழியும். தங்க நடராஜர் சிலை தொடர்பான தன் எண்ணம் ஈடேறவில்லையே என்ற கவலையில் அவள் முகத்தில் எப்போதும் ஓர் ஏக்கம் குடிகொண்டிருக்கும்….
அன்று திருப்புவனம் என்ற அந்த சிற்றூருக்கு, தலயாத்திரை செல்லும் ஒரு சிவனடியார் குழு வந்துசேர்ந்தது. பொன்னனையாள் அனைவரையும் அன்போடும் மட்டற்ற மகிழ்ச்சியோடும் வரவேற்றாள். எல்லாருக்கும் உணவளிக்க ஏற்பாடு செய்தாள்.
அவளது சிவ பக்தி அந்தப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தம். மக்கள் அதன்பொருட்டு அவளைப் புகழாத நாளில்லை.
எனவே அந்த சிவபக்தை தரும் உணவை ஏற்க சிவனடியார்கள் அனைவரும் அவள் இல்லத்துக்கு விஜயம் செய்தார்கள். கைகால் கழுவிக்கொண்டு பந்தியில் அமர்ந்தார்கள். தலைவாழை இலையிட்டு உணவு பரிமாறும் பணி தொடங்கியது.
வந்த சிவனடியார்களில் ஒரே ஒருவர் மட்டும் மிக வசீகரமான தோற்றத்தோடிருந்தார். இளைஞர்தான். உடலெங்கும் பூசிய திருநீறு. பளபளக்கும் கருவிழிகள். அகன்ற நெற்றி. அடர்ந்த தலைமுடி. கழுத்தில் ஏராளமான ருத்திராட்ச மாலைகள் பாம்பைப்போல் வளைந்து வளைந்து கிடந்தன. அப்போதுதான் குளித்துவிட்டு வந்தவர்போல் தலையில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது.
அவர் பொன்னனையாளை நிமிர்ந்து பார்த்தார். அவர் பார்வையின் கூர்மை அவள் முகத்தை ஆராய்ந்தது. பொன்னனையாளும் அவரைப் பார்த்தாள். சிவனடியாரின் முகத்தைச் சுற்றி ஒரு புனித ஒளி பரவியிருந்ததுபோல் தோன்றியது. பக்தியோடு அவர் இலையில் உணவு பரிமாறினாள் அவள்.
எல்லா அடியவர்களும் சாப்பிட்டு முடித்து எழுந்துசென்றுவிட்டார்கள். ஆனால் அந்த இளைஞரோ உணவிட்ட இலைமுன் அமைதியாக உட்கார்ந்திருந்தாரேயல்லாது உணவில் கைவைக்கவே இல்லை. அது ஏனென்று பொன்னனையாளுக்கு விளங்கவில்லை. அவர் என்ன எதிர்பார்க்கிறார்? நாம் ஏதும் தவறு செய்துவிட்டோமா?
அவள் அவரருகே அமர்ந்து விசிறியால் விசிறிக் கொண்டே, “”சுவாமி! நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா? ஏன் உணவுண்ணாமல் அமர்ந்திருக்கிறீர்கள்?” என்று கனிவுடன் விசாரித்தாள்.
அந்த இளைய அடியவர் மீண்டும் பொன்னனையாள் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தார். அவரின் மிகவும் தீட்சண்யமான பார்வை அவளது ஆன்மாவையே ஊடுருவுவதுபோல் இருந்தது. பின் பதில் சொன்னார் அவர்:
“”பெண்ணே! உன் முகத்தில் ஏதோ தீராத ஏக்கம் இருக்கிறது. அந்த ஏக்கத்தை உன்னால் மறைத்துக்கொள்ள முடியவில்லை. அடியவர்களுக்கு உணவிடும்போது மகிழ்ச்சியோடும் மலர்ச்சியோடும் உணவிடவேண்டும். வருத்தத்தோடு உணவிடலாகாது. அப்படி உணவிட்டால் அத்தகைய உணவை ஏற்கும் வழக்கம் எமக்கில்லை. உன் ஏக்கம் என்னவென்று சொல். அதைத் தீர்த்துவிட்டு உணவருந்துவேன்.”
பொன்னனையாள் விசிறியால் அவருக்கு விசிறியவாறே கலகலவென்று நகைத்தாள்.
“”சுவாமி! எனக்கு ஓர் ஏக்கமுண்டு என்பது உண்மைதான். ஆனால் என் ஏக்கம் உங்களால் தீர்க்கக்கூடியதல்ல. அது என் வாழ்நாளில் தீராத ஏக்கம். அது கிடக்கட்டும். நீங்கள் உணவுண்ணுங்கள்!”
இப்போது அந்த இளம் அடியவர் நகைத்தார்.
“”பெண்ணே! உன் மனதில் ஓர் ஏக்கம் குடிகொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்த எனக்கு, அந்த ஏக்கம் என்னவென்றும் கண்டுபிடிக்க முடியாதா என்ன? சிவன்கோவிலில் தங்கத்தினாலான நடராஜரின் உற்சவ விக்ரகம் இல்லையே என்பதுதானே உன் ஏக்கம்?”
சிவனடியாரின் பேச்சைக்கேட்ட பொன்னனையாள் வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்டாள். தன் ஆழ்மனதில் குடிகொண்டிருக்கும் ஏக்கத்தை எப்படி இவ்வளவு துல்லியமாகக் கண்டுபிடித்துவிட்டார் இவர்? இவர் சாதாரண ஆளல்ல. மிகப்பெரிய ஆற்றல்களுடைய சித்தராகத்தான் இருக்கவேண்டும்.
அவள் ஒரு விம்மலோடு பேசலானாள்:
“”சரியாகச் சொல்லிவிட்டீர்கள் சுவாமி!
ஆனால் அப்படி வெறுமே சொல்வதால் என்ன பயன்? என் ஏக்கம் தீரவும் தாங்கள் ஏதாவது வழி சொல்லலாகாதா?”
“”உனக்கு தங்கச்சிலை செய்ய கொஞ்சம் பொன் தேவை. அவ்வளவு தானே? நீ என் அன்புக்குப் பாத்திரமாகிவிட்டாய். உடனே உன் வீட்டிலிருக்கும் பாத்திரங்களைக் கொண்டுவா.”
பொன்னனையாள் வெட்கத்தோடு பதில் சொன்னாள்:
“”சுவாமி! நான் அதிக செல்வ வளம் உடையவளல்ல. நான்கைந்து பித்தளைப் பாத்திரங்களைத்தவிர என் வீட்டில் தங்கப் பாத்திரம் எதுவுமில்லையே? என்ன செய்வேன்?”
“”நான் தங்கப் பாத்திரங்களைக் கேட்கவில்லையே பெண்ணே? உன் உடல் நிறமும் உன் மனமும் தங்கமாக இருக்கின்றன. நீ உன் வீட்டிலுள்ள பித்தளைப் பாத்திரங்களையே என்முன் கொண்டு வை. அதுபோதும்.”
சமையலறைக்குச் சென்ற பொன்னனையாள், பித்தளையாலான சில சமையல் பாத்திரங்களை எடுத்துக் கொண்டுவந்து அவர்முன் கூச்சத்தோடு வைத்தாள்.
இளைய அடியவர் தன் கமண்டலத்திலிருந்து தண்ணீரெடுத்து மந்திரித்து அந்தப் பாத்திரங்கள்மேல் தெளித்தார். பின் தன் திருநீற்றுப் பையிலிருந்து கொஞ்சம் திருநீறை எடுத்து அவற்றின்மேல் தூவினார்.
“”பெண்ணே! இந்தப் பாத்திரங்களை உன் இல்லச் சமையலறையில் எரிகிற அடுப்பில் போட்டு அடுப்பை மூடிவிட்டு வா! மூடிய அடுப்பு எரிந்துகொண்டே இருக்கட்டும்!” என்றார்.
பொன்னனையாள் அப்படியே செய்தாள். பின் அவரருகே அமர்ந்து மறுபடியும் விசிறத் தொடங்கினாள். இளைய அடியவர் வயிறாரச் சாப்பிட்டுக் கைகழுவினார்.
பொன்னனையாள் அவர் கை துடைத்துக்கொள்ள ஒரு துண்டைக் கொணர்ந்து கொடுத்தவாறே அவரிடம் பிரியமாக விசாரிக்கலானாள்:
“”சுவாமி! தாங்கள் யார்? தாங்கள் எனக்கு மிகவும் தெரிந்தவர்போல் தோன்றுகிறீர்கள். தங்கள் முகம் மிகமிகப் பரிச்சயமான முகம் போல் தென்படுகிறது. ஆனால் தாங்கள் யாரென்று என்னால் நினைவுபடுத்திப் பார்த்து அறியக்கூடவில்லை. எங்கே உங்களைப் பார்த்தேன் என்று எனக்கு நினைவு வரவில்லை. தாங்கள் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள் சுவாமி? தங்கள் திருநாமம் என்னவோ?”
இளைய அடியவர் கடகடவென்று நகைத் தார். என்ன தெய்வீகச் சிரிப்பு இது என வியந்தாள் பொன்னனையாள். அவர் தேனைப்போன்ற இனிய குரலில் பதில் சொல்லலானார்:
“”பெண்ணே! நான் தென்மாடக்கூடல் என்றழைக்கப்படும் மதுரை நகரைச் சேர்ந்தவன். வல்லப சித்தன் என்பது என் பெயர். நீ மதுரை வந்த காலங்களில் அங்கே என்னைப் பார்த்திருக்கக்கூடும். திருப்புவனத்திலும் நான் இருக்கிறேன். நல்லது. நான் சென்றபிறகு எரியும் அடுப்பில் போட்ட பாத்திரங்களை ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக்கொள். அந்தப் பாத்திரங்கள் உன் ஏக்கத்தைத் தீர்க்கும்! மேலும் ஏதேனும் தேவையானால் தயங்காதே. மதுரைக்கு வந்து என்னை சந்தித்து வேண்டியவற்றை கேட்டுப் பெற்றுக்கொள்!”
சொன்ன இளைய அடியவர் விடைபெற்று கம்பீரமாக நடந்துசென்றார். அந்த நடை உலகையெல்லாம் கட்டியாளும் ஒரு மாபெரும் சக்கரவர்த்தியின் நடைபோல் இருந்தது. அவர் நடந்துசென்ற அழகையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பொன்னனையாள் திடீரென நினைவுவந்தவளாய்ப் பரபரப்போடு சமையலறை நோக்கி நடந்தாள். அங்கே சுடச்சுட ஓர் அற்புதம் அவளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை அப்போது அவள் அறிய வில்லை!
சித்தர் சொன்னபடி, தன் இல்லத்திலிலிருந்த சில பித்தளைப் பாத்திரங்களை அவள் எரியும் அடுப்பினுள்ளே போட்டு அடுப்பை மூடி வைத்திருந்தாள் அல்லவா? அடுப்பின் மூடியை நீக்கிவிட்டு உள்ளே உற்றுப்பார்த்தாள்.
அதுவரை கணகணவென எரிந்துகொண்டி ருந்த நெருப்பு அப்போது முழுவதுமாக எரிந்து முடிந்து அணைந்திருந்தது. அவள் நெருப்பில் போட்ட பாத்திரங்களின்மேல் வெள்ளை நிறத்தில் சாம்பல் படர்ந்திருந்தது.
சூடான பாத்திரங்களை இடுக்கியால் பிடித்தெடுத்து நீர்விட்டுக் கழுவினாள். அடுத்த கணம் ஆச்சரியத்தில் திகைத்துநின்றாள். பாத்திரம் ஒவ்வொன்றும் சொக்கத் தங்கமாக மாறி பளபளவென ஒளிவீசிக் கொண்டிருந்தது!
“ஆகா! என் இல்லத்திற்கு வந்த அடியவர் சாமான்யமானவர் அல்லர். அவர் மாபெரும் சித்தராகத்தான் இருக்கவேண்டும். மந்திரிக்கப்பட்ட நீரை இந்தப் பாத்திரங்களின்மேல் தெளித்து கொஞ்சம் திருநீறை இவற்றின் மேல் தூவினாரே? இதோ, தன் அபார ஆற்றல்மூலம் என்வீட்டுப் பித்தளைப் பாத்திரங்களையெல்லாம் தங்கமாக்கிவிட் டாரே? இனியென்ன? என் நெடுநாள் கனவு பலிலிக்கப்போகிறது. இந்தப் பாத்திரங்களை உருக்கிக் கிடைக்கும் தங்கத்தில் நான், ஆடும் நடராஜரின் பொற்சிலையை வடிக்கச் செய்வேன்.’
அவள் ஆனந்தத்தில் தங்கப் பாத்திரங்களைத் தலையில் வைத்துக் கொண்டாடினாள்.
அவற்றைத் தன் இதழ்களால் முத்தமிட்டாள். பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு யாருமில்லாத தன் இல்லத்தில் தன்னைத் தானே ஒரு சுற்றுச் சுற்றி ஆடினாள். தனக்குத்தானே கலகலவென நகைத்துக் கொண்டாள். திடீரென அந்தப் பாத்திரங்களையெல்லாம் தன் இல்லப் பூஜையறையில் கொண்டு வைத்து, அவற்றைக் கீழே விழுந்து வணங்கினாள். மகிழ்ச்சியில் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளின் இதயத்தில் குடிகொண்ட நடராஜர் அவளது செயல்களைப் பார்த்து நகைத்துக்கொண்டார்.
தங்கத்தில் சிலைசெய்யும் சிற்பியை சந்தித்த அவள் தன் பாத்திரங்களைக் கொடுத்து, அவற்றை உருக்கிக் கிடைக்கும் பொன்னால் நடராஜரின் ஆடும் திருக்கோலச் சிலையை வார்த்துத் தருமாறு வேண்டினாள்.
அந்தத் தங்கத்தைப் பரிசோதித்த சிற்பி வியப்பிலாழ்ந்தான். இத்தகைய உயர்ந்த தங்கம் எங்கே கிடைத்ததென்று வினவினான்.
பொன்னனையாள் சொன்ன செய்திகளைக் கேட்டு அவன் உள்ளம் பிரம்மித்தது. அவள் சொன்ன அனைத்தையும் அவன் நம்பினான். காரணம், அத்தகைய அபூர்வமான பத்தரை மாற்றுத் தங்கத்தை அவன் வாழ்நாளில் அது வரை பார்த்ததில்லை.
பாத்திரங்களை உருக்கிக் கிடைத்த தங்கத்தில் பக்திப் பரவசத்தோடு அவன் நடராஜர் சிலையை வடித்துத் தந்தான். சொக்கத் தங்கத்தால் செய்த அந்த சொக்கநாதர் சிலை அபூர்வமான எழிலோடு ஒளிவீசியது.
சிலையைக் கண்ணில் ஒற்றிக்கொண்ட அவன், கூலி வாங்க மறுத்துவிட்டான். சிலையைத் தான் வடிக்கவில்லையென்றும், நடராஜரே தன்மூலம் வடித்துக்கொண்டாரென்றும், எனவே தான் கூலி பெறுவது நியாயமில்லை என்றும் அவன் பக்திப் பெருக்குடன் கூறினான்.
சிலைக்காக தங்கத்தை உருக்கிய சிற்பியின் உள்ளத்தையே அந்தச் சிலை உருக்கிவிட்டது என்பதைப் பொன்னனையாள் புரிந்து கொண்டாள்.
இனி அந்தப் பொற்சிலையை கோவிலிலில் நிறுவவேண்டியது மட்டும்தான் பாக்கி. ஆனால் இந்தச் சிலை தோன்றக் காரணமாக இருந்த சித்தரிடம் சிலையைக் காண்பித்து தான் ஆசிபெறவேண்டாமா?
பொன்னனையாள் தான் பெற்ற குழந்தைபோல் சிலையை ஒரு துணியால் சுற்றி மார்போடு அணைத்துக்கொண்டு, மதுரையம்பதி நோக்கிப் புறப்பட்டாள்.
அவள் உள்ளம் சித்தரைப் பற்றிய புனித நினைவுகளில் தோய்ந்திருந்தது….
கூடல் மாநகரில் அவரைப் பற்றிய அடையாளங் களைச் சொல்லிலி எதிர்ப்பட்டவரிடமெல்லாம் விசாரித்தாள் அவள்.
எல்லாருக்கும் அவரைத் தெரிந்திருந்தது. ஆனால் அவர் இப்போது இருக்குமிடம்தான் யாருக்கும் தெரியவில்லை. “சிறிதுகாலம் முன்னால் எங்கள் தெருவில்தான் ஓர் ஆணைப் பெண்ணாக்கினார் அவர்’
என்றார்கள் சிலர். “அந்தச் சித்த புருஷர் நடுவீதி யில் ஓர் ஊசிமுனையில் நின்று நடனமாடியதை நாங்கள் பார்த்தோம்’ என்றார்கள் வேறுசிலர்.
“நான் உண்மையில் முதியவன் அம்மா! அவர்தான் என்னை இளைஞனாக்கினார்!’ என்று அவரை எண்ணிக் கைகூப்பித் தொழுதான் ஓர் இளைஞன்.
“இறந்தார் என்று மருத்துவர்கள் சொன்ன என் கணவரை உயிர்ப்பித்து எனக்கு மாங்கல்யப் பிச்சை தந்தவர் அவர்தான் அம்மா!’ என்று தன் மாங்கல்யத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு உள்ளம்நெகிழ்ந்தாள் ஒருத்தி.
அப்போது மதுரையை ஆண்டுகொண்டி ருந்த மன்னன் அபிஷேக பாண்டியன், அந்தச் சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்டானாம்.
அவரைத் தன்னை வந்து சந்திக்குமாறு சொல்லியனுப்பினானாம். “தேவையிருந்தால் மன்னன் வந்து தன்னைச் சந்திக்கட்டும், எனக்கு அவரால் ஆகவேண்டியது ஒன்றுமில்லை’ என்று பதில்சொல்லிலி அனுப்பினாராம் சித்தர்.
அவர் கோவில் பிராகாரத்தில் இருப்பதாக அறிந்து மன்னன் தானே சென்று அவரை வணங்கி “அவர் யார்’ என்று வினவினானாம்.
தான் தாய்- தந்தை இல்லாத அநாதை என்ற அவர், தன்னை ஒருவன் கல்லால் அடித்ததாகவும், இன்னொருவன் வில்லால் அடித்ததாகவும், அவர்களிடம் தப்பித்து, தான் இந்தக் கோவிலுக்கு வந்து குடியிருப்பதாகவும் சொல்லிலி மர்மமாக நகைத்தாராம். “தங்களுக்கு நான் ஏதேனும் செய்ய விரும்புகிறேன், என்ன செய்யட்டும்’ என்று மன்னன் பிரியமாகக் கேட்டானாம்.
“எனக்கு ஒன்றும் நீ செய்ய வேண்டாம். இதோ. கோவில் வாசலிலில் சிலையாக நிற்கும் இந்தக் கல் யானைக்கு பசிக்கிறது. ஒரு கரும்பு வாங்கிக் கொடு!’ என்றாராம் சித்தர்.
மன்னன் திகைத்துப் போய் ஒரு கரும்பைக் கொண்டுவரச் சொல்லிலி சித்தரிடம் கொடுக்க, சித்தர் கரும்பை யானைக்குக் கொடுத்தாராம்.
என்ன ஆச்சரியம். அந்தக் கல் யானை சித்தர் கொடுத்த கரும்பை கரகரவென்று கடித்துச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அசைவே இல்லாமல் நின்றதாம்!
மன்னன் சித்தரின் காலிலில் விழுந்து வணங்கி, கோவிலை வலம்வந்து மீண்டும் சித்தரைத் தேடியபோது அவரை எங்கும் காணவில்லை யாம். எங்கு வேண்டுமானாலும் இருப்பவரை- ஏன் எங்கும் இருப்பவரை எங்கேயென்று தேடுவது!
இப்படி அந்த விந்தையான சித்தரைப் பற்றி ஏராளமான தகவல்களை மக்கள் பலர் பொன்னனையாளிடம் சொல்லிலிச் சொல்லிலி வியந்தார்கள். ஆனால் கல் யானைக்குக் கரும்புகொடுத்தபின் மறைந்த அவர் பின்னர் எங்கும் தென்படவே இல்லை என்றார்கள்.
பொன்னனையாள் அவர் கடைசியாகத் தென்பட்டது மதுரை மீனாட்சியம்மன் கோவில் பிராகாரத்தில்தான் என்பதை அறிந்து சொக்கநாதர் கோவிலுக்குச் சென்றாள்.
ஒரு கூடை நிறைய பூக்களை வாங்கிக் கொண்டாள். எண்ணற்ற மலர்களால் சித்தரை அர்ச்சித்து வழிபட வேண்டுமென்று எண்ணமிட்டாள். தங்கச் சிலையோடும் புஷ்பக் கூடையோடும் கோவிலுக்குள் நுழைந் தாள்.
இறைவன் சுந்தரேஸ்வரரை பக்தியோடு வழிபட்டாள்.
மீனாட்சி அம்மையை இருகரம் கூப்பிக் கும்பிட்டாள். பின் எல்லா பிராகாரங்க ளிலும் ஒரு மூலை விடாமல் சித்தரைத் தேடித்தேடி அலைந்தாள். ஆனால் அவரைக் காணவில்லை.
சிலையை அவரிடம் காண்பித்து ஆசிபெற விரும்பிய தன் எண்ணம் ஈடேறாதோ என்ற சிந்தனையில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
நடந்து நடந்து களைத்த அவள் துர்க்கை சந்நிதி அருகே காலார சற்று நின்றாள். நின்றவள் திகைத்தாள்.
இதென்ன, இங்கே அமர்ந்திருப்பவர் யார்? கண்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டு பார்த்தாள். தான் காண்பது கனவா இல்லை நனவா? இத்தனை நேரம் இங்கெல்லாம்தானே தேடினோம்? அப்போது இங்கில்லாத சித்தர் இப்போது மட்டும் எப்படி திடீரென்று தோன்றினார்?
அவள் யாரைத் தேடிவந்தாளோ அந்த சித்த புருஷர் துர்க்கை சந்நிதி அருகில் சம்மணமிட்டு அமர்ந்து நிஷ்டையில் தோய்ந்திருந்தார்.
அவர் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்த அவள், நிஷ்டை கலைந்து அவர் எழும்வரை காத்திருக்கத் தீர்மானித்து அவர் எதிரே பவ்யமாக அமர்ந்தாள்.
சிறிதுநேரம் கழித்து அவர் கண்மலர்ந்தார். என்ன அழகிய கண்கள்! உலகம் முழுவதையும் தன் அருள்கடாட்சத்தால் காத்து ரட்சிக்கும் கண்களல்லவா அவை!
அந்தக் கண்பார்வையிலிருந்த குளுமையை தரிசித்து மிகுந்த பாதுகாப்புணர்வைப் பெற்றாள் பொன்னனையாள். “”சுவாமி! என்னைத் தெரிகிறதா?” என்று பணிவோடு கேட்டாள்.
அவர் கடகடவென்று சிரித்தார். அந்த தெய்வீகச் சிரிப்பு மதுரைக் கோவில் பிராகாரங்களில் எதிரொலிலித்தது. “”உன்னையும் அறிவேன். உன் கையிலுள்ள தங்கச் சிலைபற்றியும் அறிவேன்!” என்று நகைத்தார் அவர்.
சிலையை மூடியிருந்த துணியை அகற்றி சிலையை அவர்முன் வைத்து அவர் பாதங்களில் மீண்டும் பணிந்தாள் அவள். சிலையைக் கையிலெடுத்து உற்றுப்பார்த்தார் அவர். அவள் கரத்தில் சிலையைக் கொடுத்தார்.
அவர் தந்த சிலையைத் தானும் உற்றுப் பார்த்து மீண்டும் அவரைப் பார்த்தாள் பொன்னனையாள். அவள் உள்ளம் வியந்தது.
சிலையின் முகஜாடை அவர் ஜாடைபோலவே தோன்றியது. யார் இவர்? தேவலோகத்திலிலிருந்து மண்ணுலகம் வந்தவரா?
”சுவாமி! தாங்கள் நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றி மக்கள் கதைகதையாய்ச் சொல்கிறார்கள். பித்தளைப் பாத்திரங்களைத் தாங்கள் தங்கமாக்கிய அற்புதத்தை நானே கண்டிருக்கி றேன். தங்கள் வரலாறு என்ன சுவாமி?” அவர் மறுபடியும் அந்த தெய்வீகச் சிரிப்பை உதிர்த்தார்.
“”பெண்ணே! என்னைச் சுந்தரானந்தர் என்பார்கள். சிவசித்தர் என்பவர்களும் உண்டு. இந்தக் கோவிலிலில் உள்ளவர்கள் என்னை சுந்தரேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். எனக்கு ஏராளமான நாமங்கள். மதுரையில் சித்தராக மானிடப் பிறவி எடுத்த நான் என்னை வல்லப சித்தன் என அழைத்துக் கொள்கிறேன்.
இந்த தங்க நடராஜர் சிலையை உன் ஊர்க் கோவிலிலில் நிறுவி வழிபட்டு வா. ஆடல் வல்ல நீ, உன் ஆடல் மூலமே அந்த ஆடல்வல்லானின் திருவடிகளை அடைவாய். இந்தத் தங்க நடராஜர் உன் ஊரில் நிரந்தரமாய்த் தங்கி அருள்பாலிலிப்பார்!”
பொன்னனையாள் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது. பித்தளையைக்கூட பொன்னாக்க வல்லவரை, வல்லப சித்தர் என்பது பொருத்தம்தானே?
“”சுவாமி! உங்களைப் பார்த்தால் கடவுளைப் பார்த்ததுபோல் இருக்கிறது எனக்கு. இந்த ஏழைக்கு அருள்செய்த தங்களை மலர்களால் ஆராதிக்க விரும்புகிறேன்!”
அவள் இப்படிச் சொன்னதைக் கேட்டு நகைத்தவாறே அவர் மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்தார். அவள் கிடுகிடுவென்று மலர்களைத் தொடுத்தாள். அவரைச் சுற்றி ஒரு பூப்பந்தல் அமைத்தாள்.
பூப்பந்தலுக்குள் காட்சிதந்த அவரை மறுபடி வணங்கினாள். நிமிர்ந்து அவரைப் பார்த்த அவள் திடுக்கிட்டாள். கண்ணீர் விட்டுக் கதறலானாள். அவளோடு இப்போதுதான் பேசிய அவர் அப்படியே உறைந்து கற்சிலையாக மாறியிருந்தார்.
அவளது கதறலுக்கு அசரீரி பதில்தந்தது.
“”பெண்ணே! மானிடர்களுக்கு இறைசக்தியின் பெருமையை உணர்த்த நாமே வல்லப சித்தராகத் தோன்றினோம். எம்மை எத்தனையோ சித்தர்கள் வழிபட்டார்கள்.
எமக்கே சித்தராகும் ஆவல் தோன்றியதால் இப்படி நானும் சித்தர் வடிவம் பூண்டேன். உன் தூய மனமென்னும் தங்கப் பாத்திரத்தில் என்மேல் பக்தியென்னும் பாலன்னத்தை வைத்து நீ எனக்கு நிவேதனம் செய்திருக்கிறாய்.
உன் புகழ் எங்கும் பரவும். நீ விரும்பியவாறே உன் ஊர்க் கோவிலிலில் என் தங்கச் சிலைமுன் பல்லாண்டுகள் ஆடி மக்களை மகிழ்விப்பாயாக. பின் என் திருவடிகளை வந்துசேர்வாய்!
உன்னைப்போல் இந்த வல்லப சித்தர் சிலைக்கு பூப்பந்தல் அமைத்து வழிபடுவோர்க்கெல்லாம் நாம் அருள்புரிவோம்!
நடக்காது என்று அவர்கள் கவலைகொண்ட செயல்களையெல்லாம் நாம் அவர்களுக்கு நடத்திவைப்போம்!
பித்தளை தங்கமானதுபோல் அவர்களின் சராசரி வாழ்க்கை என்னருள் பெற்றபின் பொன்னொளி பெற்றுப் பிரகாசிக்கும்!”
அசரீரி வாசகத்தைக் கேட்ட பொன்னனையாள் இறைவனே தன் இல்லம் வந்த சித்தர் என்றுணர்ந்து பெருமிதம் கொண்டாள்.
சிலையோடு திருப்புவனம் சென்ற அவள் அவ்வூர்க் கோவிலிலில் தங்க நடராஜர் சிலையை நிறுவி வழிபடலானாள்.
மதுரை ஆலயம் செல்லும் பக்தர்கள் இப்போதும் துர்க்கை சந்நிதி அருகே வல்லப சித்தர் சிலையை தரிசனம் செய்யலாம்.
இப்போதும் அன்பர்கள் வல்லப சித்தருக்கு பூப்பந்தல் அமைத்து வழிபாடு நிகழ்த்துகிறார்கள்.
அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது.
இறங்கி வந்த போலிஸ் அதிகாரி , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்..'
அவர் 'குட் ஈவ்னிங்...
ஏதாவது பிச்சனையா?'.
போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்.
அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.
அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார்.
போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'
(சிரிப்பதற்கு மட்டுமே)
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தள்ளிப் போன சில ஒப்பந்தம் வியாபாரத்தில் கையெழுத்தாகும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். ஆக்கபூரவமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
குடும்பத்தின் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் அளவுடன் செயல்படுவது நல்லது. சில பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வது நன்மையை தரும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
தன வருவாய் தேவைக்கு இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். குடும்ப பெரியவர்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல்கள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவுகள் ஏற்படும். கமிஷன் பணிகளில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் உயரும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சிம்மம்
முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலை ஆட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆராய்ச்சி வழி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை ஆட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். வர்த்தக முதலீடுகளில் தவிர்ப்பது நல்லது. செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
விருச்சிகம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகரம்
எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தெய்வீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். வருவாயை மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
முயற்சிக்கு உண்டான பலன்கள் சாதகமாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். சேமிப்பு விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மீனம்
பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 10.10.2025
இன்று அதிகாலை 03.02 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று அதிகாலை 12.30 வரை பரணி. பின்னர் இரவு 10.51 வரை கிருத்திகை. பிறகு ரோகிணி.
இன்று அதிகாலை 02.30 வரை வஜ்ரம். பின்னர் இரவு 11 23 வரை சித்தி.பிறகு வியதீபாதம்.
இன்று அதிகாலை 03.02 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 01.50 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று அதிகாலை 12.30 வரை சித்தயோகம். பின்னர் காலை 6.01 வரை மரணயோகம். பின்பு இரவு 10.51 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
16ம் நூற்றாண்டு வாக்கில் - பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்திலிருந்து ஒரு பாடல் அன்றைய வணிகர்களின் தொன்மரபாய் பின்பற்றி வரும் 'வியாபார மேலாண்மை' குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
'புல்லிஓர் பண்டம் கொள்வார் வினவின் அப்பொருள் தம் பக்கல்,
இல் எனின் இனமாய் உள்ள பொருள் உரைத்து எதிர் மறுத்தும்;
அல்லது அப் பொருள் உண்டு என்னின், விலை சுட்டி அறுத்து நேர்ந்தும் சொல்லினும் இலாபம் கொள்வார் - தொன்மரபு இருக்கை சொல்வாம்'
மளிகை கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் வருகிறார், ‘பச்சரிசி இருக்கிறதா?’ என கடைக்காரரிடம் வினவுகிறார்.
வாடிக்கையாளர் கேட்ட அரிசி கடையில் இல்லாத நிலையிலும் கூட கடைக்காரர் ‘இல்லை’ என்று சொல்லமாட்டாராம்.
மாறாக, ‘புழுங்கல் தான் உள்ளது’ என்று சொல்லி விற்பனையைத் தொடர்வாராம்.
மேலும் ‘பச்சரிசி இல்லை’ என்று எதிர்மறையாகச் சொல்வதால் நேரவிரயம் தவிர இலாபம் என்று எதுவுமில்லையென்பதால் ‘புழுங்கல் உள்ளது’ என நேர்மறையாகச் சொல்லி அவரிடம் அதனை விற்க முயல்வாராம்.
அதே போல அவர் கேட்ட அரிசியே இருந்தால் கூட - ‘இருக்கிறது’ எனச் சொல்லமாட்டாராம், மாறாக ‘கிலோ இத்தனை ரூபாய்’ என்று உரைப்பாராம் .
‘பச்சரிசி இருக்கிறது’ என நேரடியாகப் பதிலுரைத்தால், வாடிக்கையாளர் அடுத்து, ‘என்ன விலை?’ என்று கேட்பார். கடைக்காரர் ‘கிலோ இத்தனை ரூபாய்’ என்று பதில் சொல்லவேண்டும். அதனால் நேரம் விரயமாகும். எனவே, கேள்விக்கு விடையாக விலையையே நேரடியாகச் சொல்லிவிட்டால் நேரம் மிச்சமாகும், அந்த நேரத்தில் இன்னொரு வியாபாரத்தைக் கவனிக்கலாமல்லவா?.
இதுதான் அப்பாடல் உள்ளடக்கிய மேலாண்மைச் சூத்திரம்!
நம் முன்னோர்கள் எத்தனை அறிவாளிகள் என விளங்குகிறதா? காலங்காலமாக சிறிய பெட்டிக் கடைகளிலும் சந்தைகளிலும் பின்பற்றிய நுணுக்கங்களை வியாபார மேலாண்மை படித்தவர்கள் கூட அறிந்திற மாட்டார்கள்.
சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லிப் பதில் பெற வேண்டுமே தவிர - வளவளவென்று தேவையற்றதைப் பேசி காலவிரயம் செய்யாமல் வியாபாரம் செய்யப்பட வேண்டும் - என்பது நம் முன்னோர்கள் பின்பற்றிய நுட்பங்களில் முதன்மையானது.
கோயிலில் உள்ள மூலவரைக்கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள். இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள்.
இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள். அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள். ஏனென்றால், நீங்கள் மூலவர் முன் செல்லும் போது சில சமயம் திடீரென அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம்.
அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்து விடலாம். எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா! உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய். நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய்.
உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே இறைவனை காண செல்லுங்கள். இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை. நம்மைப்படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும்.
எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்து பார்த்து தரிசியுங்கள். அழகில் மயங்குங்கள். அத்துடன் இறைவா! என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு எது தேவையோ அதைக்கொடு.
எது தேவையில்லையோ அதை நீக்கிவிடு என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள். மேலும் இறைவா! நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள்.
குழந்தைகளின் மூக்கில் ரத்த கசிவு ஏற்பட்டால் பெற்றோர்கள் எவ்வாறு கையாள்வது?: பொதுவாக, மூக்கில் ஏற்படும் ரத்தப்போக்கு, எபிஸ்டாக்ஸிஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது முதன்மை பராமரிப்பு மற்றும் அவசரகால அமைப்புகளில் காணப்படும் மிகவும் அடிக்கடி ஏற்படும் காது, மூக்கு மற்றும் தொண்டை அவசரநிலைகளில் ஒன்றாகும்.
இந்த நிலை பொதுவாக 2-10 வயதுடைய குழந்தைகள் மத்தியிலும், 50 - 80 வயதுக்குட்பட்ட முதியவர்களிடமும் ஏற்படுகிறது. அடிக்கடி குழந்தைகளின் மூக்கில் ரத்தம் வந்தால் அந்த குழந்தைகளின் மூக்கின் உட்புறத்தை ஈரமாக வைத்திருப்பது அவசியம் - பெட்ரோலியம் ஜெல்லி அல்லது saline ஸ்பிரே சிறப்பாக வேலை செய்யும். வறண்ட காலநிலை இருக்கும் நாட்களில் குழந்தை இருக்கும் அறையில் humidifier-ஐ இயக்குவது மூக்கில் இரத்தம் வடிவதை தடுக்கலாம். மேலும் அலர்ஜிகளுக்கு துவக்கத்திலேயே சிகிச்சை அளித்தல், மூக்கு நோண்டும் பழக்கத்தை நிறுத்துதல் போன்றவை மூக்கில் ரத்தம் வருவதைத் தடுக்க கணிசமாக உதவும் என கூறுகிறார்.
குழந்தைகளின் மூக்கில் ரத்தம் வடிவது பொதுவாக பாதிப்பில்லாதது மற்றும் பெரும்பாலும் வறட்சி, ஒவ்வாமை அல்லது மூக்கில் ரத்தம் வடிதல் போன்ற சிறிய பிரச்சினைகளுடன் தொடர்புடையது. ஆனால் அடிக்கடி மூக்கில் ரத்தம் வந்தால் அதை புறக்கணிக்கக்கூடாது. எனவே மூக்கில் ரத்த கசிவு அடிக்கடி ஏற்பட்டால், அதிகமாக அல்லது பிற அறிகுறிகளுடன் இருந்தால், எந்தவொரு தீவிரமான பாதிப்பும் இருக்கிறதா என்று பரிசோதித்து கொள்ள மருத்துவரை அணுகுவது நல்லது.
இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் தியானம் மேற்கொண்டார்.
ஒரு வார கால ஆன்மிக பயணமாக நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றிருக்கிறார். முதலாவதாக ரிஷிகேஷ் (Rishikesh) சென்ற அவர், இரண்டாவது நாளில் பத்ரிநாத் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த், தனது ஆன்மிக நண்பர்களுடன் அங்கிருந்து இமயமலையில் உள்ள பாபாஜி குகை நோக்கி புறப்பட்டார். காவலர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.
இந்நிலையில், பாபாஜி குகைக்குச் சென்ற ரஜினிகாந்த், அங்கு நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபட்டார். தற்போது அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
கடந்த முறை ‘வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாதத்தில் இமயமலைக்கு அவர் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டின் புதிய ஜோடி கவின் மற்றும் நயன்தாரா நடிக்கும் Hi படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் கவின் தற்போது சினிமாவில் நடித்து பிரபலமாகி வருகிறார். அவரது நடிப்பில் வெளிவந்த ஸ்டார், டாடா உள்ளிட்ட படங்களை ரசிகர்களை கவர்ந்தன. அடுத்ததாக அவர் மாஸ்க் மற்றும் அவரது 9-ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜின் அசிஸ்டென்ட் விஷ்ணு இயக்கும் இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு ராஜேஷ் சுக்லா. எடிட்டிங் பிலோமின் ராஜ். கலை சேகர். ஸ்டன்ட் தினேஷ் காசி மேற்கொள்கின்றனர்.
Hi என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பீச்ச்லாண்ட் (Peachland) பகுதியில் உள்ள ஒரு வங்கியில் அதிகாலையில் ஏ.டி.எம் இயந்திரம் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் க்ளிமென்ட்ஸ் கிரசன்ட் (Clements Crescent) பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெஸ்ட் கெலோனா பொலிஸார் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
வங்கி கட்டிடத்தின் பக்கவாட்டில் இருந்த ஏ.டி.எம் வைப்பு பெட்டியை கொள்ளையர்கள் ஒரு முன்மாதிரி இயந்திரம் (front-end loader) மற்றும் ஒரு பிக்கப் லாரி பயன்படுத்தி வலுக்கட்டாயமாக இழுத்து எடுத்துச் சென்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையர்கள் பயன்படுத்திய இரு வாகனங்களும் மற்றும் ஏ.டி.எம் வைப்பு பெட்டியும் அருகிலேயே கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டன. ஆனால், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது மிகவும் ஆபத்தான செயல் எனவும் வங்கிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்ற சம்பவத்தை கண்டவர்கள் அல்லது விசாரணைக்கு உதவக்கூடிய தகவல் உள்ளவர்கள் 250-768-2880 என்ற இலக்கத்தில் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபார செயல்களில் சிந்தித்து செயல்படவும். எதிலும் முன் கோபம் இன்றி செயல்படவும். சாலை பயணங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வேலை ஆட்கள் இடத்தில் ஒத்துழைப்புகள் குறையும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் சாதகமாகும். எதிலும் முன் கோபம் இன்றி செயல்படவும். இனம் புரியாத புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிதுனம்
சுப காரிய எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். ரசனைத் தன்மையில் புதுமை உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியான பொருளாதார மேம்படும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். புது விதவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
சிம்மம்
கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் அனுசரித்து செல்லவும். மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
திட்டமிட்ட பணிகள் தள்ளி போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சமூக தொடர்பான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்கள் பணிகளையும் பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
நவீன கருவிகள் மீது ஆர்வம் ஏற்படும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பலவித மக்களின் தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். கலைத்துறையில் பொறுமை வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். சமூகம் புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
தனுசு
பேச்சுக்களின் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்புங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கடியான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கால்நடை விஷயங்களில் மேன்மை ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
சவாலான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் சிலருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். அரசு விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் நிதானத்தை கையாளவும். உத்தியோகத்தில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். இன்னல்கள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மீனம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். வேலையாட்கள் இடத்தில் பொறுமை வேண்டும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் தொடர்புகள் விரிவடையும். உழைப்புக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். அன்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 23 ஆம் தேதி வியாழக்கிழமை 9.10.2025
இன்று அதிகாலை 03.48 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று அதிகாலை 02.08 வரை அஸ்வினி. பின்னர் பரணி.
இன்று அதிகாலை 05.35 வரை ஹர்ஷணம். பிறகு வஜ்ரம்.
இன்று அதிகாலை 03.48 வரை கரசை. பின்னர் மாலை 03.25 வரை வணிசை. பிறகு பத்தரை.
இன்று அதிகாலை 02.08 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.00 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை