Latest Cinema
- ·
- · sivam
🌹 பம்பாய்க்கு நாடகம் நடத்த ஒருமுறை நான் போயிருந்தபோது தெருவில் எங்கள் குழுவினரோடு போய்க்கொண்டிருந்தேன்.🌹அப்போது வழியில் சந்தித்த ஒரு வயதான கிழவி சொன்னார்.தம்பி.. உன்னை எம்.சி.ஆர். நடிச்ச படங்கள்லே பாத்திருக்கேன்.. நல்லா நடிக்கிறே.. எனக்கு நீ ஒரு உதவி செய்யணுமே..“என்னம்மா… சொல்லுங்க”.. - என்றேன்.“🌹எம்.சி.ஆர். கிட்டே நான் விசாரிச்சேன்னு சொல்றீயா?”அவருடைய பெயர், முகவரி எதையும் அவர் சொல்லவில்லை. அப்படியே போய்விட்டார். இந்த மாதிரியான ஈர்ப்பு சக்தி ஒரு நடிகருக்கு இருப்பதை உணர்ந்தபோது வியப்பாக இருந்தது.அவரிடம் இயல்பாக இருந்த வள்ளல்தன்மை அதற்கு ஒரு முக்கியமான காரணம்.🌹 விளம்பரத்திற்காக அவர் அப்படிப் பண்ணுகிறார் என்று அவரைச் சிலர் விமர்சிப்பதைப் பார்த்திருக்கிறேன். விளம்பரத்திற்காக அவர் சில விஷயங்களைச
- ·
- · sivam
🌹''ஜென்சின்னு ஒரு பொண்ணு இருக்காங்க. அற்புதமான குரல். நீங்க ஒரு தடவை கேளுங்க. பிடிச்சுருந்தா உங்க இசையில் பயன்படுத்திக்கங்க'''' இதுதான் இளையராஜாவிடம், பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சொன்னது.🌹திறமையற்றவர்களை யேசுதாஸ் போன்றவர்கள் பரிந்துரை செய்யமாட்டார் அப்படின்னு சொல்லுற இளையராஜா, உடனே ஜென்சியை கேரளாவில் இருந்து வரச்சொல்லி குரல் சோதனை செய்கிறார்.🌹அப்போது ஜென்சி '''அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே''' பாடல் பாடுகிறார். குரல் சோதனைக்காக வந்த ஜென்சிக்கு உடனடியா பாடும் வாய்ப்பு கிடைக்குது. திரிபுரசுந்தரி அப்படிங்கிற படத்தில் ஜானகியோட இணைந்து ஒரு பாடல் பாடுறாங்க. இரண்டாவது 'வட்டத்துக்குள் சதுரம்'' படத்தில் ஒரு பாடல் பாடுகிறார்.🌹அடுத்த பாடல்தான் ஜென்சியின் குரலைத் தமிழர்களின் வாழ்க்கையில் நிரந்தரமாக்கியது.🌹மழை
- ·
- · sivam
திருவிளையாடலில் நடந்த அனுபவம் க்ளாசிக் சினிமாவில் காமெடியில் கலக்கிய முக்கிய நடிகர்களில் ஒருவர் நாகேஷ். மனமுள்ள மறுதாரம் என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். காமெடி வசனங்கள் மட்டுமல்லாமல் தனது உடல்மொழியாலும் ரசிகர்களை சிரிக்க வைத்த நாகேஷ் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அதேபோல் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி கணேசன் தான். அவரை போல் யாரும் நடிக்க முடியாது, அவர் ஒரு நடிப்பு பல்கலைகழகம், அவரை தான் இன்றைய நடிகர்கள் பலரும் பின்பற்றி வருகிறார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். சிவாஜி நாகேஷ் கூட்டணியில் பல படங்கள் வெற்றி பெற்ற
- ·
- · sivam
🌹சாரதா ஸ்டுயோவில் திருவரூட் செல்வர் படப்பிட்டிப்பில் சிவாஜிகணேசன் திருநாவுக்கரசர் என்ற அப்பர் வேடத்தில் சிவனடியாராக நடித்துக்கொண்டருந்தார்🌹படப்பிடிப்பு முடிந்த பிறகு வேடத்தை களைக்காமல் அன்னை இல்லம் நோக்கி காரில் செல்கிறார்🌹 கார் போக்ரோட்டில் நுழைக்கிறது சிவாஜிகணேசன் டிரைவரிடம்(சிவா)வீடு வரை ஹாரன் அடிக்காமல் போய் உள்ளே செல்லாமல் வெளியே காரை நிறுத்து என்று சொல்கிறார் டிரைவர் அவ்வாறே செய்கிறார்🌹எஜமானின் கார் வருவதை கண்டு அன்னை இல்ல காவலாளி கேட்டை திறக்கிறார் காரில் இருந்து சிவாஜிகணேசன் கீழே இறங்கி வாயில் விரலை வைத்து உஷ் என்று காவலாளிக்கு சைகை செய்துவிட்டு ஒரு முதியவர் போல் உள்ளே நடந்து சென்றார் வாசலை அடைந்ததும் குரலை மாற்றி🌹அம்மா தாயே என்று குரல் கொடுக்கிறார்🌹குரலை கேட்டு வருகிறார் ராஜாமணி அம்
- ·
- · sivam
🌹ஓவர் ஆக்டிங் என கிண்டலடித்த சோ!.. ரூமுக்கு கூட்டிச்சென்று சிவாஜி என்ன செய்தார் தெரியுமா?..🌹சிவாஜி கணேசன் மிகையாக நடிக்கிறார் அதாவது ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது பலரும் வைப்பதுண்டு. அவருடன் நடித்த சில நடிகர்களும் அதை கூறியதுண்டு. ஆனால், சிவாஜி தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. ஒருமுறை நடிகர் சோ ராமசாமியுடன் ஒரு படத்தில் சிவாஜி நடித்துக்கொண்டிருந்தார். ஒரு காட்சியில் சிவாஜி நடிப்பை பார்த்து படப்பிடிப்பு தளத்தில் இருந்த பலரும் கைதட்டி பாராட்டியுள்ளனர்.,🌹ஆனால், சோ மட்டும் அமைதியாக இருந்தாராம். அதை பார்த்துவிட்ட சிவாஜி சோ-வை அங்கிருந்த ஒரு அறைக்க அழைத்து சென்று பேசினாராம்.‘🌹நான் அடித்த அந்த காட்சி உனக்கு பிடிக்க வில்லை.இல்லையா?’ என சிவாஜி கேட்க ‘ஆமாம் சார். ஓவர் ஆக்டிங் போல
- ·
- · sivam
🌹பல வருடங்கள் நாடக அனுபத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை தனது நகைச்சுவை மூலம் சொன்னவர் இவர். இவரை மக்கள் கலைவாணர் என அழைத்தனர். யார் மனதையும் நோகடிக்காமல் எல்லோரும் ரசிக்கும்படி காமெடி செய்வது இவரின் பாணி.🌹மற்றவர்களுக்கு கஷ்டம் எனில் உடனே உதவ வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் எண்ணத்திற்கு வழிகாட்டி இவர்தான். ஏனெனில், தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கு மற்றவர்களுக்கே கொடுத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தபோதே அவருக்கு எம்.ஜி.ஆரை தெரியும் என்பதால் அவர்தான் எம்.ஜி.ஆரை வழிநடத்தினார்.🌹கஷ்டம் என வருபவர்களுக்கு உதவ வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆரிடம் சொல்லி சொல்லி
- ·
- · sivam
தேவர் கோயம்புத்தூரில் இருந்த காலத்தில் கடையில் இரண்டு இட்லிகள் வாங்கினால், பத்துமுறை சாம்பார் வாங்குவார். அவரிடம் இட்லி வாங்க அதற்கு மேல் பணம் இல்லாததால், சாம்பாரைக் குடித்தே வயிற்றை நிரப்புவார். தேவரே இதுக்குமேல சாம்பார் ஊத்த முடியாது... நிறுத்திக்கோரும் என ஓட்டல்காரர்கள் சொல்லியதெல்லாம்கூட நடந்திருக்கிறது. அப்படி ஒருநாள் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த தேவர் கழுத்தில், வேட்டியைப் போட்டு ஒருவர் இழுத்துவிடுகிறார். தேவர் அவரிடம் வாங்கிய 10 ரூபாய் கடனை இன்னும் திரும்பிக்கொடுக்காததால், அவர் வேட்டியை கழுத்தில் போட்டார். கழுத்தில் வேட்டி போடுவதை அசிங்கமான செயலாக நினைப்பார்கள். அந்த இடத்தில் ஜனமெல்லாம் கூடிவிட்டது. இரண்டு நாட்களில் திருப்பிக்கொடுத்துவிடுவதாக தேவர் சொன்னதும் கழுத்தில் போட்ட வேட்டியை அ
- ·
- · sivam
பிரபு, பிரபுதேவா, ஜோதிகா மூவருக்கு போட்டியே இவர் தான்முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் வெளியான இந்த படத்தை சித்திக் லால் இயக்கியிருந்தனர். மலையாளத்தில் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.நடிகை ரேவதி 90 களில் மிகவும் பிரபலமானவர். அவரது படத்திற்கு இன்னும் ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்குத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி நடிகையாக வலம் வருவதுடன், இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களையும் இயக்கியுள்ளார்.1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய 'மண்வாசனை' திரைப்படத்தின் மூலம் ரேவதி தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பெரும் வெற்றியைக் கண்ட அவர், தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து 'மௌன ராகம்'
- ·
- · sivam
ஆடையைப் பார்க்காதே ...மனசைப் பாரு!இது ஜெயிக்கும் - - -ராஜ்கிரண்!‘’ பாரதிராஜா சார் என் மேலே அளவு கடந்த பிரியம் வைச்சிருக்கிறதுக்குக் காரணம், என்னோட இயல்பான தன்மை.16 வயதினிலே- படம் தயாரிப்பில் இருக்கும்போது கிட்டத்தட்ட முடியற சூழ்நிலை.இன்னும் உச்சக்கட்டம் மட்டும் தான் படம் பிடிக்க வேண்டியது பாக்கி.மத்ததை எல்லாம் முடிச்சாச்சி. வியாபாரம் ஆகலை.வந்து பார்த்த விநியோகஸ்தர்கள் எல்லாம் வாங்கலை.அப்ப..அந்தச் சூழலில் தான் நான் போய்க் கதை கேட்கிறேன்.எனக்குக் கதை பிடிச்சது.புடிச்ச உடனே வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு,என்.எஸ்.சி. பகுதி. அப்ப அது தான் பெரிசு.அதோட விநியோக உரிமையை வாங்கினேன்.கதை கேட்டு முடிஞ்சவுடனே பேசி முடிவு பண்ணுனதுனாலே பாரதிராஜாவாலே அதை நம்ப முடியலை.ஏன்னா.. அதுக்கு முந்திப் பலருக்கு
- ·
- · sivam
ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த சமீபத்திய புகைப்படங்களில், ரம்யா பாண்டியன் கிளாசிக் மாடர்ன் கெட்டப்பில் அட்டகாசமான போஸ்களை கொடுத்துள்ளார். ஃபேன்சி டிசைனர் பேக்ரவுண்டில், ஸ்லீவ்லெஸ் வைட் டாப்ஸ் மற்றும் கருப்பு உடையில் அவர் கொடுத்திருக்கும் கில்லர் லுக் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மொட்டை மாடி சேலை லுக்காக இருந்தாலும் சரி, இந்த மாதிரி மார்டன் லுக்காக இருந்தாலும் சரி... ரம்யா பாண்டியன் எப்போதும் கெத்துதான் என நெட்டிசன்கள் கமெண்ட் பாக்ஸில் லைக்ஸ்களையும் ஹார்ட்டின்களையும் குவித்து வருகின்றனர்.தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் சமுத்திரகனியுடன் ஆண் தேவதை போன்ற திரைப்பட
- ·
- · sivam
கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்து புகழடைந்த கனகா தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். அவரது தாய் தேவிகாவின் மரணம் அவரை நிலைகுலைய செய்ய சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கினார். பல வருடங்கள் தனிமையிலேயே இருந்துவருகிறார். இந்நிலையில் அவர் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான தேவிகாவின் மகள் கனகா. அவரை கங்கை அமரன் தனது கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்தார். ராமராஜன் ஹீரோவாக நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கனகாவின் நடிப்பு முதல் படம் போன்றே இல்லை. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதனை பயன்படுத்தி தனக்கென தனி மார்க்கெ
- ·
- · sivam
கதை சூப்பரா இருக்கு.. ஆனா பார்த்திபனே ஹீரோவா நடிக்கட்டும்!" – கேப்டன் விஜயகாந்தின் அந்தப் பெரிய மனசு!நண்பர்களே, இன்னைக்கு தமிழ் சினிமாவுல பார்த்திபன் சாரை ஒரு வித்தியாசமான இயக்குநராவும், நடிகராவும் நமக்கு நல்லா தெரியும். அவரோட லைஃபையே மாத்துன படம் 1989-ல வந்த 'புதிய பாதை'. ஆனா, அந்தப் படத்துக்குப் பின்னாடி நம்ம 'கேப்டன்' விஜயகாந்த் சாரோட ஒரு செம மாஸான, பெருந்தன்மையான கதை இருக்கு தெரியுமா? அதைப்பத்தி இயக்குநர் செந்தில்நாதன் சமீபத்துல ஒரு பேட்டியில சொல்லியிருக்காரு.பாக்யராஜ் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்துட்டு, 'தாவணிக் கனவுகள்' படத்துல நடிச்சதுக்கு அப்புறம் கிட்டத்தட்ட 5 வருஷமா பார்த்திபன் சாருக்கு பெருசா வாய்ப்பே இல்லையாம். அப்புறம்தான் செம வெறியோட 'புதிய பாதை' கதையை ரெடி பண்ணி, தயாரிப்பாளர
Latest Cinema (Gallery View)
- ·
- · sivam
Featured Cinema