Cinema
Latest Cinema
ஆபாச நடன சர்ச்சையில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை
  •  · 
  •  ·  sivam
இலங்கையில் இருந்து மும்பைக்குச் சென்று பிரபல பாலிவுட் நடிகையாக மாறிய ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஹீரோயினாக முக்கிய காரணமே மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தான் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை அளித்தன. 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்ற சுகேஷ் ஜாக்குலின் தனது காதலி என்றும் அவருக்கு பல விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியதாக தெரிவித்த நிலையில், ஜாக்குலினும் விசாரணை வலையில் சிக்கினார்.அந்த சர்ச்சைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தப்பித்து வந்த ஜாக்குலின் தற்போது ஆபாச நடனம் ஆடிவிட்டார் என அவருக்கு எதிராக மிகப்பெரிய சர்ச்சையே வெடித்துள்ளது.எஸ்டி மியூசிக்கில் கடந்த ஜூலை 15ம் தேதி வெளியான ஜுக்னி (Jugni) ஆல்பம் பாடல் 2 நாட்களில் 14 மில்லியன் வியூஸ் கடந்து மிகப்பெரிய ஹிட் அடித்து ஏகப்
 ‘ஃபவுஜி’ டிசம்பர் 3-ம் தேதி ரிலீஸ்
  •  · 
  •  ·  sivam
ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ஃபவுஜி' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர் மற்றும் டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சியை பின்னணியாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் நடிகர் பிரபாஸ் நீண்ட முடியுடன் காயங்கள் நிறைந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இப்படம் குறித்து படக்குழுவினர் "ஃபவுஜி திரைப்படம் போர்க்களப் பின்னணியில் ஆக்‌ஷன் மற்றும் அழுத்தமான கதைக் களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத
சினிமாவில் ரீ என்ட்ரி தரும் ஷாலினி
  •  · 
  •  ·  sivam
அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் முதன்முறையாக சேர்ந்து நடித்தார்கள். அப்போதே அவர்களுக்குள் காதல் மலர்ந்துவிட்டது. இவர்களது காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். குடும்பத்துடன் இந்தத் தம்பதி நிம்மதியாகவும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்துவருகிறது.அஜித் இப்போது நடிப்பில் மட்டுமின்றி கார் ரேஸிலும் கவனத்தை செலுத்திவருகிறார். அதற்கு ஷாலினி தன்னால் முடிந்த அத்தனை சப்போர்ட்டையும் கொடுத்துவருகிறார். பெரும்பாலும் அஜித் ரேஸுக்கு செல்வதற்கு முன்பு அருகே ஷாலினியும் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். தன் மனைவிக்கு நெற்றியில் ஒரு முத்தம
  •  · 
  •  ·  sivam
மந்​திர​வா​தி​யாக ஃபஹத் ஃபாசில் நடித்​துள்ள திரைப்​படம், ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. ஃபேன்​டஸி, நகைச்​சுவை படமான இதை ஷஷாங்க் யெலெட்டி இயக்​கி​யுள்​ளார். கால பைரவா இசையமைத்​துள்​ளார்.ஷோயிங் பிசினஸ் நிறு​வனத்​தின் சார்​பில் எஸ்​.எஸ்​.​கார்த்திகேயா, ‘பாகுபலி’ படத்தை தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து இப்​படத்தை தயாரித்துள்ளார். ​இதன் டீஸர் வெளியாகி வரவேற்​பைப் பெற்றுள்​ளது.”இதில் சூரி என்ற மந்​திர​வா​தி​யாக ஃபஹத் ஃபாசில் நடித்​துள்ளார். அவர் ஒரு சிறுமிக்கு மேஜிக் செய்து காட்​டு​கிறார். பின்​னர் அந்த சிறுமியை மறையச் செய்​வதன் மூலம் மற்​றொரு பெரிய வித்​தையை காட்​டு​வ​தாக உறுதி அளிக்​கிறார். அப்​போது​தான் அவருக்கு சிக்​கல் தொடங்​கு​கிறது. அது என்ன நடை​பெறுகிறது என்​பதே படத்​தி
நடிகர் ஜனகராஜ்
  •  · 
  •  ·  sivam
🌹இன்று பல கணவன்மார்கள் தன் மனைவிகள் ஊருக்கு போய்விட்டால் அடுத்த வினாடியே தன்னுடைய வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைப்பது🌹 ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்ற நகைச்சுவையைத்தான். அப்படி பட்ட நகைச்சுவைக்கு சொந்தக்காரராக விளங்கியவர் ஜனகராஜ்.🌹80களி ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் இணைந்து தன்னுடைய தனித்துவமான நகைச்சுவை காட்சிகளாலும் தனக்கே உரிய பாணியாலும் பேசி மக்களை கவர்ந்தவர்.🌹அவருக்கு உண்டான தனிச்சிறப்பே அந்த சிரிப்புதான். அதை இன்றளவும் பல மிமிக்ரி கலைஞர்கள் பின்பற்றி வருகின்றனர். அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஜனகராஜ்.🌹ஆனால் சில ஆண்டுகளாகவே ஜனகராஜை நாம் சினிமாவில் பார்க்க முடிவதில்லை. அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம்
சினிமாவில் அவமானம் அதிகம் - நடிகை விசித்ரா
  •  · 
  •  ·  sivam
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் "மடிப்பு அம்சா"வாக வலம் வந்தவர் தான் நடிகை விசித்ரா. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கவர்ச்சிப் புயலாகப் பல படங்களில் முத்திரை பதித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு விலகி கணவர், குழந்தை என செட்டில் ஆனார். நீண்ட இடைவெளிக்குப் பின், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளும் நுழைந்து சிறப்பாக விளையாடினார். அப்போது, சினிமா படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த சில கசப்பான, வலிகள் நிறைந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அது இணையத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் மாறியது.தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்
‘டிரெ​யின்’ கதை​யில் விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் நடித்​திருக்க முடியாது: மிஷ்கின்
  •  · 
  •  ·  sivam
மிஷ்கின் இயக்கி இசை அமைத்​துள்ள படம், ‘டிரெ​யின்’. விஜய் சேதுப​தி, ஸ்ரு​திஹாசன், நாசர், கே.எஸ்​.ரவி​கு​மார், நரேன் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.கலைப்​புலி எஸ்.தாணு​வின் வி கிரியேஷன்ஸ் தயாரித்​துள்ள இந்தப் படத்​தின் டீஸர் மற்​றும் இசை வெளி​யீட்டு விழா சென்னையில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் வெற்​றி​மாறன், சசி, பாரத்​திபன், அமீர் உள்பட பலர் கலந்து கொண்​டனர்.விழா​வில் மிஷ்கின் பேசும்​போது, “என்​னுடைய ‘நந்​தலாலா’ படக் கதையைச் சொல்​வதற்​காகத் தயாரிப்​பாளர் தாணு சாரை சந்தித்தேன். அவருக்கு அந்த கதை ஒன்​றுமே புரிய​வில்​லை. பிறகு எவ்வளவு பட்​ஜெட் என்று கேட்​டார். ரூ.4 கோடி என்​றேன். அவர் ஒரு ரூ.60 கோடி​யில் படம் பண்​ணலாம் என்​றார். ‘இந்​தப் படத்​துக்கு அவ்​வளவு தேவை இருக்​காது; இது ச
சாமியார்களை தொடர்ந்து சந்திக்கும் சஞ்சிதா ஷெட்டி
  •  · 
  •  ·  sivam
ஒரு காலத்தில் "கட்டிப்புடி கட்டிப்புடிடா' என கவர்ச்சி டான்ஸ் போட்ட மும்தாஜ், "வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" என சிம்புவடன் ஆடிய சனா கான் எல்லாம் கிளாமர் ஹீரோயின்களாக இருந்து இப்போ இறை மார்க்கத்தை கடைபிடிக்கும் பெண்களாக மாறியுள்ளனர். அவர்கள் வரிசையில் சஞ்சிதா ஷெட்டியும் பக்தி மயமாக மாறியுள்ளார்.ஒரு காலத்தில் "கட்டிப்புடி கட்டிப்புடிடா' என கவர்ச்சி டான்ஸ் போட்ட மும்தாஜ், "வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" என சிம்புவடன் ஆடிய சனா கான் எல்லாம் கிளாமர் ஹீரோயின்களாக இருந்து இப்போ இறை மார்க்கத்தை கடைபிடிக்கும் பெண்களாக மாறியுள்ளனர். அவர்கள் வரிசையில் சஞ்சிதா ஷெட்டியும் பக்தி மயமாக மாறியுள்ளார்.சூது கவ்வும், பல்லு படாம பாத்துக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி ஏற்கனவே க
சாவித்திரிக்காக பாடமாட்டேன் - S. ஜானகி எடுத்த சபதம்
  •  · 
  •  ·  sivam
நடிப்பில் சாவித்திரியும், பாட்டில் ஜானகியும் தங்கள் துறைகளில் சிகரம் தொட்டவர்கள். இவர்களுக்குள் ஒரு தொழில்முறை மோதல் இருந்தது பலருக்கும் தெரியாது. ஆரம்ப காலத்தில் நடந்த அந்த சம்பவம், ஜானகியின் மனதை ஆழமாகப் பாதித்தது.அன்றைய காலகட்டத்தில் சாவித்திரி ஒரு சூப்பர்ஸ்டார். பெரும்பாலும் பி. லீலா, பி. சுசீலா ஆகியோர்தான் அவருக்குப் பாடுவார்கள். குறிப்பாக, தன் நடிப்புக்கு சுசீலாவின் குரல்தான் கச்சிதமாகப் பொருந்தும் என சாவித்திரி உறுதியாக நம்பினார். இந்த விஷயம் தெரியாமல், ஜானகி ஒரு தமிழ் படத்தில் சாவித்திரிக்காக ஒரு அருமையான பாடலைப் பாடினார்.ரெக்கார்டிங் முடிந்ததும் பாடல் சிறப்பாக வந்திருந்தது. ஆனாலும், தன் நடிப்புக்கு ஜானகியின் குரலை விட சுசீலாவின் குரலே பொருத்தமாக இருக்கும் என சாவித்திரி கருதினார். அத
 தமிழ் சினிமா ‘ஒவ்​வொரு படத்​தை​யும் பொறுப்புடன் உரு​வாக்​கும் அவசியம் இருக்கிறது’ - விஷ்ணு விஷால்
  •  · 
  •  ·  sivam
விஷ்ணு விஷால், ஐஸ்​வர்யா லட்​சுமி, கருணாஸ், முனீஸ்​காந்த், காளி வெங்​கட், கருணாகரன், மோக் ஷா உள்பட பலர் நடித்​துள்ள படம் ‘கட்டா குஸ்தி 2’.செல்லா அய்​யாவு இயக்​கிய இப்​படத்தை ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்​டர்​நேஷனல் மற்​றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்​துள்ளது. கடந்த 3ம் தேதி வெளி​யான இப்படம் வெற்​றிகர​மாக ஓடிக்​கொண்​டிருக்​கிறது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​ குழுவினர் கலந்து கொண்​டனர்.நடிகர் விஷ்ணு விஷால் பேசும்​போது, “இந்​தப் படத்​தின் வெற்றி எனக்கு மிக​வும் சிறப்​பானது. முதலில் ஐசரி கே.கணேஷுக்கு நன்றி. ஒரு தயாரிப்​பாள​ராக அவர் என்​மீது முழு நம்​பிக்கை வைத்து சுதந்​திரம் தந்​தார்.அந்த நம்​பிக்​கையே இந்த வெற்றிக்கான காரணங்​களில் ஒன்​று. சினிமா என்​பத
பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
  •  · 
  •  ·  sivam
🌹பல காதலுக்கு உயிர் கொடுத்த ஜானகி பாட்டு.. ஆனால் சொல்லாத அவர் காதல்.🌹ஜானகி என்று அவரை சொல்வதை விடவும் இப்போது உள்ள ரசிகர்கள் அவரை ஜானகி அம்மா என்றுதான் அழைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பலருடைய மனதில் வாழ்ந்து வருகிறார்.🌹பல பேர் காதலுக்கு மருந்தாக இவருடைய பாடல்கள் இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் அவர் காதலித்த நபரிடம் அவருடைய காதலை சொல்லவே இல்லையாம்.🌹பாடகி எஸ் ஜானகிக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. 80ஸ் காலத்தில் இருந்து 2k கிட்ஸ்கள் காலம் வரைக்கும் அவர் தொடர்ச்சியாக பல பாடல்களை பாடி இருக்கிறார்.🌹அதிலும் இளையராஜா முதல் முதலில் இசையமைத்த "அன்னக்கிளி" என்ற திரைப்படத்தில், "அன்னக்கிளியே உன்னைத் தேடுதே" என்ற பாடலை பாடி பலருடைய மனதில் கவர்ந்து, யார் இந்த குரலுக்கு சொந்தக்காரர் என்று
திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி
  •  · 
  •  ·  sivam
இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர்.ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர். அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா - எஸ்
Latest Cinema (Gallery View)
1-12