Cinema
Latest Cinema
‘ஹேப்பி ராஜ்’ டைட்டில் லுக் வெளியீடு
  •  · 
  •  ·  sivam
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படத்துக்கு ‘ஹேப்பி ராஜ்’ எனப் பெயரிடப்பட்டு டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தாலும், நாயகனாகவும் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். சில மாதங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நாயகனாக நடித்து வந்தார். இப்படத்தினை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.இப்படத்துக்கு ‘ஹேப்பி ராஜ்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதன் டைட்டில் லுக்கை மட்டும் தற்போது வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தில் அப்பாஸ், ஜார்ஜ் மரியான், கெளரி ப்ரியா, ப்ரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இயக்குநர் மரியா இளஞ்செழியன் தலைப்ப
ஜப்பானில் வெளியாகிறது ‘புஷ்பா 2’
  •  · 
  •  ·  sivam
உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘புஷ்பா 2’. ரூ.2000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. தற்போது இப்படத்தினை ஜப்பானில் மொழிமாற்றம் செய்து ஜனவரி 16-ம் தேதி வெளியிடவுள்ளது படக்குழு. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கவுள்ளது.சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா 2’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.இப்படத்தின் காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகள், வசனங்கள் என அனைத்துமே கொண்டாடப்பட்டன. தற்போது ஜப்பானில் வரவேற்பு பிரம்மாண்டமாக இருப
விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட நெருக்கடி
  •  · 
  •  ·  sivam
சிவப்பு மல்லி படத்திற்கு பிறகு விஜயகாந்த்துக்கு சத்யஜோதி பிலிம்ஸ் அட்வான்ஸ் கொடுக்கிறது. பிறகு அவர் நடித்த சில படங்கள் வரிசையாக சரியாக போகவில்லை.வாய்ப்புகள் வரவில்லை. பணவரவு குறைகிறது. காருக்கு பெட்ரோல் போட பணமில்லை. அந்த நேரத்தில் சத்யஜோதி தந்த பத்தாயிரம் ரூபாயும் காலியாகிறது. திடீரென சத்யஜோதி தந்த பணமும் காலியாக, படங்களும் இல்லாமல் போக வாய்ப்புகளை தேடுகிறார் விஜயகாந்த்.சத்யஜோதி தயாரித்து விஜய்காந்த் நடிக்க இருந்த 'நெருப்புக்குள் ஈரம்', படத்தில் விஜய்காந்த்தை தூக்கிவிட்டு தியாகராஜனை நாயகனாக்கியது சத்யஜோதி. விஜய்காந்த்துக்கு இருந்த ஒரே படமும் போனது. இந்த நிலையில் தந்த பத்தாயிரம் திருப்பிக்கேட்டு ஆளனுப்பியது சத்யஜோதி பிலிம்ஸ். "இப்போது படங்கள் இல்லை. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்" என விஜய்காந்த்
ஏ.வி.எம். சரவணன் காலமானார்
  •  · 
  •  ·  sivam
ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு, அந்த நிறுவனத்தை அவரது மகன் ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். "நானும் ஒரு பெண்", "சம்சாரம் அது மின்சாரம்", "சிவாஜி", "வேட்டைக்காரன்", "மின்சார கனவு", "அயன்" உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.தமிழ்த் திரைப்பட உலகின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஏ.வி.எம். சரவணன். வயதுமூப்பு காரணமாக அவர் இன்று காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக, ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. 1958 ஆம் ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் சரவணன் ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.எப்போதும் கைகளை கட்டிக் கொண்டே நிற்கும் அவர் பணிவின் சிகரம் என்றும் அழைக்கப்படுகிறார்.
நாகூர் பாபுவை தெரியுமா?
  •  · 
  •  ·  sivam
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் பிறந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பதினாறு மொழிகளில் 22000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கர்நாடக இசை பயின்றவர்.இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய இசைக் குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 1985-ஆம் ஆண்டு கற்பூர தீபம் என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடத்
‘ஜெ​யிலர் 2’-​ ல் ஷாருக்கான் நடிக்​கிறா​ரா?
  •  · 
  •  ·  sivam
சூப்பர் ஸ்டார் ரஜினி​காந்த் நடிக்​கும் ‘ஜெ​யிலர் 2’ படத்தை நெல்​சன் திலீப்​கு​மார் இயக்கி வரு​கிறார். இதில் எஸ்​.ஜே.சூர்​யா, சுராஜ் வெஞ்​சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி​பாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்​கின்​றனர். மோகன்​லால், சிவ ராஜ்கு​மார் கவுரவ வேடத்​தில் நடிக்கின்​றனர்.அனிருத் இசை அமைக்​கும் இந்​தப் படம் அடுத்த வருடம் வெளியாக இருக்​கிறது. இந்​நிலை​யில் இதில் இந்தி நடிக​ரான ஷாருக்​கானும் நடிக்க இருப்​ப​தாகத் தகவல் வந்துள்​ளது. ‘கூலி’ படத்​தில் நடிக்க ஷாருக்​கானிடம் கேட்​ட​தாக​வும் பல்​வேறு காரணங்​களால் அவர் நடிக்​க​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது.அதனால் ஆமிர்​கான் கவுரவ வேடத்​தில் நடித்​திருந்​தார். இப்போது ஜெயிலர்-2 படத்தில், ஷாருக்​கான் நடிப்​பார் என்​றும் அவர் தொடர்பான காட்​சிகள் மார்ச்
மலேசி​யா​ முரு​கன் கோயி​லில் அஜித்​கு​மார் சுவாமி தரிசனம்
  •  · 
  •  ·  sivam
நடிகர் அஜித்​கு​மார், ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் மீண்​டும் நடிக்​கிறார். இதற்​கான அதி​காரப்​பூர்வ அறி​விப்பு இம்​மாத இறுதி அல்​லது அடுத்த மாதம் வெளி​யாக இருக்​கிறது.தீவிர கார் ​பந்தய வீர​ரான அஜித், ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணி​யை​யும் சொந்​த​மாக வைத்​திருக்​கிறார். இந்த அணி, துபாய், பெல்​ஜி​யம், இத்​தாலி போன்ற நாடு​களில் நடை​பெற்ற கார் பந்​த​யங்​களில் கலந்து கொண்டு பரிசுகளை​யும் வென்​றது.அடுத்து மலேசி​யா​வில் நடக்​கும் 24 ஹெச் கார் பந்​த​யத்​தில் பங்கேற்​கிறது. இதற்​காக அவர் மலேசியா சென்​றுள்​ளார். இந்நிலையில் அங்​குள்ள பத்து மலை முரு​கன் கோயிலில் அவர் நேற்று சுவாமி தரிசனம் செய்​தார். இந்த கோயி​லில்​தான் அவர் நடித்த ‘பில்​லா’ படத்​தில
டிசம்பர் 8ஆம் திகதி ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்
  •  · 
  •  ·  sivam
சிம்புவுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, டிசம்பர் 8-ம் திகதி ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குகிறது.நவம்பர் மாதத்தில் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவின் தேதிகள் எப்போது என்பது தெரியாமல் படம் தொடங்க முடியாத சூழல் உருவானது. இதனால் சிம்பு – வேல்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதில் வேல்ஸ் நிறுவனத்துக்கு எப்போது தேதிகள் என்பதை சிம்பு தெரிவிக்க வேண்டும் அல்லது அஸ்வத் மாரிமுத்து படத்துக்கு முன்னதாக வேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய அட்வான்ஸ் தொகையினை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று சிம்புவிடம் கூறப்பட்டுள்ளது.இதனால் வேல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்பது தெ
பகிரங்க மன்னிப்பு கோரிய ரன்வீர் சிங்
  •  · 
  •  ·  sivam
‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை நகலெடுத்த ரன்வீர் சிங்கிற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பூத கோலா வழிபாட்டு முறையை ரன்வீர் சிங் நடித்துக் காட்டினார். மேலும், அந்தத் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த செயல் துளு நாடு மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘காந்தாரா’ படத்தில் வரும் காட்சிக
காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்
  •  · 
  •  ·  sivam
சில தினங்களாகவே மிருணாள் தாகூர் குறித்த காதல் வதந்திகள் சமூக வலைதளத்தில் உலவி வருகின்றன. கடந்த வாரம் தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தகவல்கள் பரவின. அதற்கு “இலவச விளம்பரம்” என்று கிண்டலாக பதிலளித்திருந்தார் மிருணாள் தாகூர்.அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை காதலித்து வருகிறார் மிருணாள் தாகூர் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “அவர்கள் பேசுவது எனக்கு சிரிப்புதான் வருகிறது. வதந்திகள் எப்போதுமே இலவச விளம்பரம்தான். அது எனக்கு பிடித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் மிருணாள் தாகூர்.தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மிருணாள் தாகூர். முக்கியமாக, அல்லு அர்ஜுன் – அட்லி
டி.எம்.எஸ்.
  •  · 
  •  ·  sivam
மும்பையில் உள்ள தனது மகனின் வீட்டில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்துள்ளார் வாலியின் தாய். தனது சகோதரனின் வீட்டில் இருக்கும் தாய் உங்களைக் காண விருப்பப்படுகிறார் என டி.எம்.எஸ்ஸிடம் கோரிக்கை வைத்தார் வாலி. உடனே சென்று அவரைப் பார்த்து அவருக்கு விருப்பமான இரு பாடல்களைப் பாடி விட்டு வந்திருக்கிறார் டி.எம்.எஸ். அதில்தான், தான் எத்தகையை சிறந்த மனிதாபிமானம் கொண்டவர் என்பதை மிகவும் உணர்வுபூர்வமான விதத்தில் நிரூபித்துள்ளார்.டி.எம்.எஸ்ஸின் மூத்த மகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பாகப்பிரிவினை படத்தில் பாட அழைத்துள்ளார்கள். மகனின் நிலை கண்டு அழுதுகொண்டிருந்த டி.எம்.எஸ். பாடச் சென்றுள்ளார். வழக்கமாக பாடும்போது இரண்டு முறையாவது ஒத்திகை பார்ப்பார் டி.எம்.எஸ். அன்றைக்கு டியூனு
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்
  •  · 
  •  ·  sivam
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று (நவம்பர் 24, 2025) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 89.பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் காலமானார். 89 வயதான தர்மேந்திரா இந்த மாத தொடக்கத்தில் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் காலமானார். அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Latest Cinema (Gallery View)
1-12