Latest Cinema
- ·
- · sivam
மலையாள நடிகையான அன்னா ராஜன், சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது இவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பாவாடை ஜாக்கெட்டுடன் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மலையாள நடிகையான அன்னா ராஜன், நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.அப்போதும் சர்ச்சைக்குரிய நடிகையாக இருக்கும் இவர், சில தினங்களுக்கு முன்பு, தன்னுடைய புகைப்படங்களை சிலர் தவறான நோக்கத்தில் மார்ஃபிங் செய்து, நற்பெயரு
- ·
- · sivam
பாலிவுட் நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், தன்னைச் சுற்றி எழும் விமர்சனங்களுக்கு அதிரடியாக பதிலளிப்பதில் பெயர் பெற்றவர். அரசியல், சினிமா என எந்த விவகாரமாக இருந்தாலும் தனது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்து வரும் கங்கனா, இந்த முறை யோகா குரு பாபா ராம்தேவை கடுமையாக விமர்சித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப் போர் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.சமீபத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது சில மாணவர்கள் பயன்படுத்திய அவதூறான வார்த்தைகள் குறித்து கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, அந்த மாணவர்களை "சாக்கடைத் தலைமுறை" என்று அவர் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு பாபா ராம்தேவ் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கங்கனாவி
- ·
- · sivam
நடிகை ரெஜினா தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்தவர். இப்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. கடைசியாக தமிழில் அவர் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதேசமயம் ரெஜினாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் அவரது சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் ஆண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் பிறந்தவர் ரெஜினா. நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்த அவர் கண்ட நாள் முதல் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, கன்னடத்தில் வெளியான சூரியகாந்தி, தெலுங்கில் வெளியான சிவா மனசுலோ ஸ்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் சிவகார்த்திகே
- ·
- · sivam
🌹மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.🌹அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.🌹இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.🌹அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.🌹ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....🌹குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடல
- ·
- · sivam
அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘இருளன்’ படத்தை இயக்கி வருகிறார் முத்தையா. இதில் வித்தியாசமான 2 தோற்றங்களில் நடிக்கிறார் அருண் விஜய். மிர்ணா நாயகியாக நடிக்கும் இதில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கென் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் நடைபெற்று வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது ஆக் ஷன் காட்சியில் பங்கேற்றபோது நடிகர் அருண் விஜய் காயமடைந்தார். அவருடைய தொடை பகுதியில் தசை கிழிந்ததை அடுத்து அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். இதனால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- ·
- · sivam
ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம், ‘கன்னடத்து பைங்கிளி’.இதில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா, சிங்கம் புலி, புகழ், ஆதவன், ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை சிங்கம் புலி, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களை இயக்கிய சாய் ரமணி இயக்கியுள்ளார். இதில் கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். எம்.பி.எம். என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரித்துள்ளார். எஸ்.ஆர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இப்படம் பற்றி பேசிய இயக்குநர் சாய்ரமணி, ‘‘பாக்யராஜின் திடீர் மறைவு எங்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி
- ·
- · sivam
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் காஜல் அகர்வால். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்த அவர் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திவரும் காஜல் கடைசியாக; இந்தியன் 2, சிக்கந்தர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.மும்பையை சேர்ந்த காஜல் அகர்வால் தமிழில் நடித்த முதல் இரண்டு படங்களான பழனி, பொம்மலாட்டம் ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. அதுவும் பொம்மலாட்டம் படத்தின் இயக்குநர் பாரதிராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலிரண்டு படங்கள் சரியாக போகாவிட்டாலும் அவருக்கு வாய்ப்புகள் வர தொடங்கின. தொடர்ந்து, தெலுங்கில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்ததும் ராஜமௌலி இயக்கத்தி
- ·
- · sivam
இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்... கஞ்சா கருப்பு.சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு சென்னை வந்தவர்....பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கெனதனி இடத்தை பிடித்தவர் ....இன்று அவர் ''வேல்முருகன் போர்வெல்ஸ்" என்று ஒரு சொந்தப்படம் எடுத்து வெளியிட்டு விட்டார்..... சொந்தமாய் ஒரு போர்வெல் லாரியை வாங்கி படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார் ....பின் தான் வாங்கிய அந்த போர்வெல் லாரியை பயன்படுத்தி தென் மாவட்டபகுதியில் மக்களுக்காக எந்தவித பைசாவும் வாங்காமல் இதுவரை 55 போர்வெல் குழாய் அமைத்து தந்து இருக்கிறார்...இன்னமும் தந்து கொண்டு இருக்கிறார்....ஒரு போர்வெல் போட குறைந்தது 50,000 முதல் 7
- ·
- · sivam
🌹திரையில் கவர்ச்சியின் பிம்பம் என்று சொல்லப்பட்டவர் புவனேஸ்வரி🌹புவனேஸ்வரியின் மறுபக்கம்! விபச்சார கேஸை உடைத்து.. இன்று பலருக்கு வாழ்வளிக்கிறார்!🌹சிலர் இவரை பூனைக்கண் புவனேஸ்வரி என்றுகூட சொல்வார்கள்.. சினிமா, டிவியில் மிகப்பெரிய ரவுண்டு வந்தவர்.. இவர்மீது அன்று விபச்சார வழக்கு தொடுக்கப்பட்டது.. ஆனால், நான் விபச்சாரி இல்லை, விபச்சாரத்தில் ஈடுபடவில்லை என்று தைரியமாக சொல்லி, அந்த வழக்கை எதிர்கொண்டார்.🌹கடைசியில 3 வருடம் கழித்து, புவனேஸ்வரி நிரபராதி என்று தீர்ப்பு வந்தது. இதுக்கு முன்னாடி விபச்சாரி என்று அவமானப்படுத்தினாங்களே, அதையெல்லாம் எப்படி அழிப்பது? இதுதான் சட்டம். இறுதியில் தான் நிரபராதி என்று சட்டத்திலிருந்து வெளியேவந்தார்.🌹புவனேஸ்வரி விபச்சாரத்தில் கைதான செய்தியைவிட, விபச்சார வழக்கிலிருந
- ·
- · sivam
🌹ஒருநாள்... கவிஞர் வாலி ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பஞ்சு அவர்களைப்பார்த்து ‘என்னய்யா பஞ்சு... நீரே படம் தயாரிச்சு, நீரே பாட்டெல்லாம் எழுதிட்டா, எங்க பொழப்பு என்னாகறது?’ என்று கிண்டலாகக் கேட்டார் வாலி. ‘சரிண்ணே... நம்ம படத்துல தொடர்ந்து நீங்க எழுதுங்கண்ணே. 🌹இப்ப எடுக்கப் போற படத்துல ரெண்டு பாட்டு எழுதுங்க. அதுக்கு அஞ்சு பாட்டுக்கு உண்டான சம்பளம் என்னவோ தந்துடுறேன்’ என்றார் பஞ்சு அருணாசலம். ‘ஏன் முழுசா தரமாட்டியா?’ என்று கேட்க, ‘சரிங்கண்ணே... நீங்களே இந்தப் படத்துல எல்லாப் பாட்டும் எழுதுங்க’ என்றார். அப்படியே கொடுத்தார். வாலியும் எழுதினார். பாடல்கள் மொத்தமும் பட்டையைக் கிளப்பின.🌹அந்தப் படம்... பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘வைதேகி காத்திருந்தாள்’. அப்படத்தில் ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களை
- ·
- · sivam
‘டாக்ஸிக் படத்தின் நெருக்கமான காட்சிகளைப் பார்க்கும்போது என் மனைவி அதை முழுமையாக ஏற்றுக்கொள்வார் என்று நான் நினைக்கவில்லை’ என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் யஷ், நடிகையுடன் தான் நெருக்கமாக நடிக்குபோது தனது மனைவி ராதிகா பண்டிட் எப்படி எடுத்துக் கொள்வார் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.அவர் கூறுகையில், “கணவர் அப்படி நடிப்பதை எந்த மனைவியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எல்லா வாழ்க்கைத் துணைக்கும் அந்த எண்ணம் இருக்கும்.ஆனால் முடிவில், இது எல்லாம் உருவாக்கப்பட்ட காட்சிகள். இது ஒரு கலை. இதன்மூலம் நாங்கள் எதை அடைய விரும்புகிறோம் என்பதுதான் முக்கியமானது.மக்கள் சிலவற்றை தங்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், சில
- ·
- · sivam
80களின் காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து, தனது வசீகர புன்னகையாலும் அசாத்திய நடிப்பாலும் தனக்கெனத் தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்டவர் நடிகை நதியா. பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தபோதிலும், ஒரு படத்தில் கூடக் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்காமல் தனது கண்ணியமான ஆடை அலங்காரத்தால் புகழ்பெற்றார்.'பூவே பூச்சூடவா' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நதியா, அறிமுகமான முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதன் பின் பூக்களைப் பறிக்காதீர்கள், மந்திரப் புன்னகை, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா என அடுத்தடுத்து பல வெற்றி படங்களைக் கொடுத்தார். இவர் சினிமா உச்சத்தில் இருந்த காலத்தில் நதியா கம்மல், நதியா மூ
Latest Cinema (Gallery View)
- ·
- · sivam
Featured Cinema