Latest Cinema
- ·
- · sivam
நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது படத்தை அவரது அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தை, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கிய ரா.கார்த்திக் இயக்குகிறார். இந்தப் படத்தில் தபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இருவரும் 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். 1996ம் ஆண்டு இருவரும் நடித்து வெளியான ‘நின்னே பெல்லாடடா’ என்ற தெலுங்கு திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. கடைசியாக 1998-ல் வெளியான ‘ஆவிடா மா ஆவிடே’என்ற படத்தில் நடித்திருந்தனர்.இப்போது மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. அதில் இணைந்துள்ளதை சமூக வலைதளப் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார் தபு.
- ·
- · sivam
திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடிய நடிகர்!நடிகர் நெல்லை சிவா கோலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்தவர். நடிகர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமானார். நகைச்சுவை நடிகர் மற்றும் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்சின்ன வேடத்தில், சில நிமிடங்கள் வந்து சென்றாலும், தன்னுடைய நெல்லை ஸ்லாங்கில் அழகாக பேசி, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சிவா. ஆண்பாவம் படத்தில் இவர் அறிமுகம் ஆனார்.வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் நெல்லை தமிழில் பேசியது
- ·
- · sivam
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டியும் கீர்த்தி சுரேஷும் தெலுங்கில் இணைந்து நடிக்கின்றனர்.தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி, வெங்கடேஷ் நடித்த சங்கராந்திக்கு வஸ்துனம், சிரஞ்சீவி நடித்த மன சங்கரவர பிரசாத் காரு உள்பட சில படங்களை இயக்கியவர் அனில் ரவிபுடி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் வெங்கடேஷ், கல்யாண் ராம் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி நாயகிகளாக நடிக்கின்றனர். சீனியர் நடிகரான வெங்கடேஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். கமர்ஷியல் மசாலா படமான இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது.
- ·
- · sivam
இது 1987 ல் நடந்த சம்பவம்.அதிகாலை 6 மணி.நடிகர் இயக்குனர் பாண்டியராஜன் வீட்டு டெலிபோன் ஒலித்தது. பக்கத்திலேயே அமர்ந்திருந்த பாண்டியராஜன் ரிசீவரை கையில் எடுத்தார்.(அது லேண்ட்லைன் ஃபோன் காலம்)மறுமுனையில், "நான் எம் ஜி ராமச்சந்திரன் பேசுகிறேன்."உட்கார்ந்திருந்த பாண்டியராஜன் தன்னை அறியாமல் எழுந்து நின்று விட்டார். பதட்டத்தில் வார்த்தைகள் வரவில்லை பாண்டியராஜனுக்கு."தலைவரே... வணக்கம்...சொல்லுங்க தலைவரே..."இதை நடிகர் பாண்டியராஜன் அவர்கள் சொல்ல, நான் அவருக்கு அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். "எதற்காக சார் எம்ஜிஆர் அந்த நேரத்தில் கூப்பிட்டார் ?""அது வந்து ஜான் சார், அப்போதான் எனக்கு முதல் பையன் பிறந்திருந்தான்.""சரி.""முந்தின நாள் இரவு பிரசவம்.நான் அதிகாலையில்தான் வீட்டுக்கு வந்து, லேண்ட் லைன
- ·
- · sivam
சமீபத்தில் நடிகை ராதிகா, 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவைச் சந்தித்து நலம் விசாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் "தாய்க்கிழவி படம் பார்த்தீர்களா?" என்று சிரித்துக்கொண்டே கேட்கிறார். ஆனால், அந்த வீடியோவில் பாரதிராஜாவை அந்த நிலையில் பார்ப்பதற்கே மிகவும் மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது.வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை உடையில் மிகவும் தளர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரை, அவர் தனிப்பட்ட முறையில் ஓய்வெடுக்கும் போது இப்படி வீடியோ எடுத்து வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தன் கட்டளைக்குக் கீழ் வைத்திருந்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவரது முதிர்ச்சியான காலத்தில் நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா?நலம் விசாரிக்கச் செல்வது நல்
- ·
- · sivam
யார் இந்த சரளாம்மா?எந்த வி.ஐ.பி-யின் பிறந்தநாள் வந்தாலும், தொலைக்காட்சியில், ‘நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வளர்க... ஊராண்ட மன்னர் புகழ்போலே... உலகாண்ட புலவர் தமிழ்போலே...’ என்று பின்னணியில் ஒலிக்கிற மூவர் குரல்களில் ஒரு குரல் இவருடையது. ‘பேசும் தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பாடிய சரளா இப்போது எப்படியிருக்கிறார்?‘`பக்கவாதம் வந்து ஒரு வரி பாடறதுக்கே இன்னிக்குப் படாதபாடு பட்டுக்கிட்டிருக்குற நான், 50 வருஷத்துக்கு முன்னாடி வாழ்வாங்கு வாழ்ந்தவம்மா. பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர், கண்ணதாசன், வாலின்னு என் குரலைப் பாராட்டாத வி.ஐ.பி-க்களே இல்லை. அந்த அளவுக்குக் குரலால் கொடிகட்டிப் பறந்தவ நான்’’ என்கிற சரளாம்மாவின் குரலில் இப்போதும் இருக்கிறது கம்பீரம்.‘`மயிலாப்பூரில் பிறந்தேன
- ·
- · sivam
ரஜினிக்கு மனைவியாகவும் மன்னன் படத்தில் நடித்திருந்தார். இவர் அறிமுகம் ஆனது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் தான்.விதி சில நேரங்களில் எவ்வளவு அழகாகத் தன் விளையாட்டைத் தொடங்குகிறது என்பதற்கு உதாரணமாக தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். எதிர்பாராமல் நடக்கும் ஒரு சிறு தற்செயல் நிகழ்வு, ஒருவரின் வாழ்க்கைப் பாதையையே எப்படி மாற்றியமைக்கிறது என்று கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா, கார்த்திக், ராதா, ராதிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் அவர் அறிமுகம் செய்த முன்னணி நடிகை ஒருவர் தான் விஜயசாந்தி. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப
- ·
- · sivam
இந்திய திரையுலகின் ஈடு இணையற்ற இசை மேதைகளில் ஒருவரான ஆஷா போஸ்லே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நம்மை விட்டு மறைந்துள்ளார்.. 92 வயதாகும் இந்தப் புகழ்பெற்ற பாடகிக்கு ஏற்பட்ட திடீர் பாதிப்பு, இந்திய இசை ரசிகர்களைப் பெரும் கவலையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.கடந்த சில நாட்களாகவே அவருக்கு லேசான உடல்நல பாதிப்புகள் இருந்த நிலையில், நேற்று அவரது நிலைமை சற்று மோசமடைந்துள்ளது.. உடனடியாக மும்பையில் உள்ள ஒரு உயர்தர தனியார் மருத்துவமனையில் ஆஷா போஸ்லே அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இது குறித்து ஆஷா போஸ்லேவின் பேத்தி விளக்கம் தந்திருந்தார்.. அதில், ஆஷாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று (Ch
- ·
- · sivam
நடிகை ஸ்ரீலீலா மாதவிடாய் குறித்து தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பவன் கல்யாணுடன் ஸ்ரீலீலா நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது.அதில் கலந்துகொண்ட ஸ்ரீலீலாவிடம், ஒரு பெண்ணாக அவர் எதிர்கொண்ட பெரிய சவால் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸ்ரீலீலா, “பெண்களுக்கு மாதவிடாய் என்பது சாக்குப்போக்கு கிடையாது. நான் பெரும்பாலான பாடல்களில் நடனமாடும்போது மாதவிடாய் காலத்தில்தான் இருந்தேன்.உடல்ரீதியான தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும். உளவியல் ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ மாதவிடாயைக் காரணமாகச் சொல்லக்கூடாது” என்று கூறியிருந்தார். மருத்துவப் படிப்பை முடித்துள்ள ஸ்ரீலீலாவின் இந்
- ·
- · sivam
பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ‘துரந்தர் 2’. இத்திரைப்படம் கடந்த மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் நிறுத்தி வைக்க வேண்டும் எனமதுரையைச் சேர்ந்த டி. ராகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில், இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.தேர்தலுக்கு பின் துரந்தர் 2 திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த வ
- ·
- · sivam
முடியவே முடியாது. இவனெல்லாம் நிச்சயமாக சினிமாவுக்கு வர வாய்ப்பே இல்லை."ஒரு சிறுவனின் ஜாதகத்தை பார்த்து விட்டு, ஒரு ஜோதிடர் கணித்த கணிப்பு இது. "நான் சொல்வதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவன் ஜாதகப்படி, திரை உலகத்துக்கும் இவனுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது."இப்படி அந்த ஜோதிடர் சொன்னதைக் கேட்டு, அந்த சிறுவனின் தாய் கவலை அடைந்தார். ஏனென்றால் சினிமாவுக்கு போய் ஜெயித்துக் காட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்று அடம் பிடித்தான் அவருடைய மகன்.ஜோதிடர் சொன்ன எதிர்மறையான கருத்தைக் கேட்டு அந்தப் பையன் வருத்தம் கொள்ளவில்லை; வைராக்கியம் கொண்டான்.அந்த ஜோதிடரின் இடத்தில் வைத்தே அவரிடம் சவால் விட்டான்."ஜோதிடர் அய்யா, நல்லா கேட்டுக்கோங்க. உங்கள் ஜோதிடத்தை நான் பொய்யாக்கிக் காட்டுகிறேன். சினிமாவில
- ·
- · sivam
விஜய் நடித்த ‘சிவகாசி’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது.2005-ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சிவகாசி’. தற்போது இப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் புதிய ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் அசின், பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. விஜய்யின் ‘கில்லி’ படம் மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை புரிந்தது. இதனை கணக்கில் கொண்டு ஏ.எம்.ரத்னம் ‘சிவகாசி’ படத்தினையும் ம
Latest Cinema (Gallery View)
- ·
- · sivam
Featured Cinema