Latest Cinema
- ·
- · sivam
திருமணமான புதிதில் ரோஹிணி மீது கோபத்தில் கொப்பளித்த ரகுவரன்.. அத்தனைக்கும் பின்னால் இருந்த எமோஷனல் விஷயம்..தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் சிறந்த வில்லன்கள் யார் என பட்டியல் போட்டால் நிச்சயம் அதில் நடிகர் ரகுவரனுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. 49 வயதில் உடல்நிலை சரி இல்லாமல் ரகுவரன் உயிரிழந்து 16 வருடங்களுக்கு மேல் ஆனாலும் அவரது கதாபாத்திரங்கள் உருவாக்கிய தாக்கம் கொஞ்ச நஞ்சம் கிடையாது.இன்று பல வில்லன் நடிகர்களை நம்மால் திரையில் பார்க்க முடிந்தாலும் ரகுவரன் போன்ற ஒருவரின் இடத்தை நிரப்புவதே கடினமான விஷயம் தான். பாட்ஷா, காதலன், முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தனது வில்லன் நடிப்பால் ரசிகர்களுக்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்தி இருந்தாலும், இன்னொரு பக்கம் அஞ்சலி, முத்து, அமர்க
- ·
- · sivam
இந்திய சினிமா வரலாற்றிலேயே இசைக்கருவிகளே இல்லாமல் பாடல் ஒன்றை உருவாக்கியது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான், அது என்ன பாடல் என்பது பற்றி பார்க்கலாம்.மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இளையராஜா கோலோச்சி வந்த கோலிவுட்டில் இசைப்புயலாக வந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான் ரகுமான். முதல் படத்திற்கே தேசிய விருதும் வென்று அசத்தினார் ரகுமான். அதிலும் இளையராஜா உடன் அவருக்கு போட்டி இருந்தது. தேவர் மகன் படமா அல்லது ரோஜா படமா என்று இருந்த நிலையில், இறுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ராஜாவை வீழ்த்தி விருதை தட்டிச் சென்றார் ரகுமான்.ரோஜா படத்தின் தொடங்கிய இவரது வெற்றிப் பயணம் 30 ஆண்டுகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்தியாவி
- ·
- · sivam
தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகியான கே. ஜமுனாராணி (K. Jamuna Rani) ஜூலை 30, 2026 அன்று பெங்களூருரில் காலமானார்.மறைந்த போது அவருக்கு 88 வயது ஆகும்.அவரது இறுதிச் சடங்குகள் இன்று ஜூலை 31, 2026 அன்று மதியம் பெங்களூருவில் உள்ள கல்லஹள்ளியில் நடைபெறுகின்றன.1940-கள் முதல் 1960-கள் வரை தென்னிந்தியத் திரையிசை உலகில் மிக முக்கியப் பாடகியாகத் திகழ்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களைப் பாடியுள்ளார்.தமிழில் பல உன்னதமான பாடல்களைப் பாடியுள்ள இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'நாயகன்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம்பெற்ற "நான் சிரித்தால் தீபாவளி" என்ற பாடலையும் பாடியுள்ளார்.ஜமுனாராணி தனது 7 வ
- ·
- · sivam
🌹1915-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி கோவையில் பிறந்த இவர், வறுமையான சூழலில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றார்.🌹 இரும்பு பட்டறையில் சுத்தியல் அடிக்கும் பணியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, பால் வியாபாரம், சோடா விற்பனை எனப் பல்வேறு நிலைகளைக் கடந்து, விடாமுயற்சியால் திரையுலகின் சிகரத்தைத் தொட்டவர்.🌹வீரமாருதி தேகப்பயிற்சி சாலை' மூலம் உடல் உறுதியைப் பேணிய இவர், திரைப்படத் தயாரிப்பு நுட்பங்களைக் கற்றுக்கொண்டு,🌹தனது சகோதரர் எம்.ஏ. திருமுகம் இயக்கத்தில் 'தாய்க்குப்பின் தாரம்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.🌹முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றது, இவரது வெற்றிகரமான திரைப் பயணத்திற்கு அடித்தளமிட்டது.🌹எம்.ஜி.ஆரை வைத்து 'தாயைச் காத்த தனயன்', 'வேட்டைக்காரன்', 'விவசாயி' உள்ளிட்ட 17 வெ
- ·
- · sivam
🌹எம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்:🌹பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!🌹பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை.🌹மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன்.🌹அது கண்டு, என் மனைவியின்,முகத்தில் மலர்ச்சி
- ·
- · sivam
‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கிய இளன், தற்போது ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கியுள்ளார்.சான்வீ மேக்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘மேட் இன் கொரியா’வைத் தயாரித்த ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்’ ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். இப்படம் ஆக.21-ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.“திருமணத்துக்குப் பிறகும் பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார் நாயகி சான்வீ. அ
- ·
- · sivam
🌹இசை மேதை வயலின் ஜாம்பவான் குன்னக்குடி வைத்தியநாதன் ஒரு நாள் சேலம் மாநகரில் தன் இசைக்குழுவினர் உடன் சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்தார்....🌹முதல்வர் எம்ஜிஆர் இரு புறமும் கும்பிட்டு கொண்டே வர சாலை ஓரம் நின்ற அந்த பிரபலமும் கும்பிட காரை நிறுத்த சொல்லி கீழே இறங்கி...🌹என்ன நீங்க இங்கே என்று கேட்க நாளை சேலத்தில் எங்க குழுவினர் கச்சேரி.நல்லது அதுக்கு ஏன் இங்கே என்று கேட்க...🌹முதல்வர் கார் வரும் நேரம் என்று எங்கள் வாகனம் வேன் அதை ஓரமாய்நிறுத்தி கொள்ள சொல்ல...🌹சற்றே முகம் மாறிய முதல்வர் அருகில் பின்னால் நின்ற ஆட்சியர் அழைத்து இனி நான் எங்கு போனாலும் மற்றவர்களை நிறுத்த வேண்டாம்...🌹இங்கே மட்டும் இல்லைஇனி எங்கேயும் தமிழ்நாட்டில் இனி இது போல கூடாது என்று அங்கேயேதமிழக உயர் காவல் அதிகாரிக்கும் சொல்ல சொ
- ·
- · sivam
🌹நான் எம்.ஜி.ஆருடன் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும் ஒரு நடிகன் என்ற முறையில் 80-களில் அவருடன் பழகி இருக்கிறேன். புரட்சித் தலைவரின் மிகப்பெரிய ரசிகன் என்ற முறையில் எம்.ஜி.ஆர் குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் ராஜேஷ்.“🌹நான் சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தபோது அந்த வீட்டுக்கு புரட்சித் தலைவர் வந்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் தருவதற்காக ராமவரம் தோட்டத்துக்கு என் மனைவியுடன் சென்றிருந்தேன்.🌹அது ஒரு சனிக்கிழமை காலை. வரவேற்பறையில் காத்திருந்தோம். யார் யாரோ வருகிறார்கள், அவர்களெல்லாம் உள்ளே அழைக்கப்படுகிறார்கள். எனக்கு மட்டும் அழைப்பு வரவே இல்லை. கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஓடிவிட்டது.“🌹என்னங்க… இவ்வளவு நேரம் காக்க வைக்கிறாரு” என்ற
- ·
- · sivam
🌹என் குடும்பம் நல்ல வாழ்ந்த குடும்பம்தான். ஆனால், அப்பாவின் தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட அதிகமான கடன் சுமைகளும் பாரங்களும் என்மேல் விழுந்தன. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே, இண்டியன் ஏர்லைன்ஸில் ஏர்ஹோஸ்டஸ் பணியில் இருந்தேன். அப்போதுதான் சினிமா வாய்ப்புகளும் தேடிவர, புகழுடன் நிறைவான பணமும் சம்பாதித்தேன். எல்லாக் கடன்களையும் அடைத்தேன்.🌹பெரிய இடங்கள் பலவற்றிலிருந்தும் என்னைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்தார்கள். ஆனால், சொந்த உறவுகளுக்குள் இருந்த சிலரே அதையெல்லாம் தடுத்தார்கள். என் சினிமா வருமானம் மட்டுமே அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. என் பணத்தை எனக்கே தராமல், மீண்டும் கடன் சுமைகளைத்தான் கொடுத்தார்கள். என் பெற்றோர்கூட அந்தச் சூழ்ச்சிகளை உணரவில்லை. நிம்மதியில்லாமல் இருந்தேன்.'🌹மனசுக்குள்ள
- ·
- · sivam
மங்காத்தா, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகை ராய் லட்சுமி, தற்போது தொழிலதிபராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், 'La Ra' என்ற புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.மங்காத்தா, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகை ராய் லட்சுமி, தற்போது தொழிலதிபராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், 'La Ra' என்ற புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.தற்போது சோஷியல் மீடியா மற்றும் டேட்டிங் ஆப்-களில் போலி கணக்குகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த 'La Ra'
- ·
- · sivam
சீதாராமம் படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் மிருணாள் தாகூர். அவரது அழகும், திறமையும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதனையடுத்து பாலிவுட்டில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு பலனாக வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க அவரும், நடிகர் தனுஷும் காதலிப்பதாக ஒரு தகவல் தொடர்ந்து ஓடியது. அது வதந்தி என்று பின்னர் உறுதியானது. இந்நிலையில் அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.மராத்தி மற்றும் ஹிந்தி மொழிகளில் நடிகையாக பயணத்தை ஆரம்பித்த மிருணாள் தாகூருக்கு தெலுங்கில் சீதாராமம் படம் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தெலுங்கிலிருந்து மற்ற தென்னிந்திய மொழிகளு
- ·
- · sivam
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்: சாப்டர் 1’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.தனுஷின் 55-வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். ‘ஓம்: சாப்டர் 1’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.இந்நிலையில், இந்தப் படத்தின் ‘அலாக்கா லோவா பாடல்’ சிங்கிள் வீடியோ தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது. மின்விளக்காக சுடலைமாடன் ஜொலிக்க திருவிழா கொண்டாட்டத்துடன், துள்ளல் இசையுடன் தொடங்குகிறது.இசையின் வேகத்துக்கு ஓடும் வார்த்தைகளை புரிந்துகொள்ள சிரமம் இருந்தாலும், உற்சாகம் உடலோடு ஒட்டிக்கொள்கிறது. அரசல் புரசலாக அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருக்கும் தனுஷ், இ
Featured Cinema