Cinema
Latest Cinema
காந்தா படத்தின் கண்ணழகி  பாக்யஸ்ரீ போர்ஸ்
  •  · 
  •  ·  sivam
27 வயதாகும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இந்த ஆண்டு ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய லாபத்தை சிவகார்த்திகேயனுக்குப் பெற்றுத் தந்த படம் தாய் கிழவி. அந்த படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.அமரன் படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை சந்தோஷமாக கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். காந்தா படத்தில் நடிப்பில் மிரட்டிய பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாறிய நிலையில், அவரது இன்ஸ்டா ஃபாலோயர்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டனர். யாரு
ராஷ்மிகா மந்தனாவுக்கு என்னாச்சு?
  •  · 
  •  ·  sivam
முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் 'மைசா' கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான நடனப் படப்பிடிப்பு நடைபெற்றபோது, எதிர்பாராத விதமாக ராஷ்மிகா கீழே விழுந்தார். இதில் அவரது வலது பக்க இடுப்பு பகுதியில் உள்ள முக்கிய தசைநார் கிழிந்து 'காயமடைந்தார். இதனால் அவர் 6 வாரங்களுக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.என் வலது இடுப்பில் உள்ள ஒரு தசைநார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை தூக்க முடியவில்லை. அந்த தசைநார் மீண்டும் இணையும் வரை ஓய்வு தேவை. வலி இருக்கிறது, ஆனால் தாங்க முடியாத அளவுக்கு இல்லை. நீயாக ஒருபோதும் ஓய்வு எடுக்கமாட்டாய், அதனால் நானே உனக்கு ஓய்வு தருகிறேன் என்று கடவுள் கொடுத்த ஓய்வு. இப
‘தகப்​பன்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது
  •  · 
  •  ·  sivam
ஜீவா நடிக்​கும் ‘தகப்​பன்’ படத்தை ‘கி​டா’ படத்தை இயக்​கிய ரா.வெங்​கட் இயக்​கு​கிறார். சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​கிறார். நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்​கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்​களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்​பில் குமார் தயாரிக்​கும் இப்​படத்​துக்​குச் சுயாதீன இசைக்​கலைஞர் மார்​ஷல் ராபின்​சன் இசையமைக்​கிறார்.அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்​றும் மனித உணர்​வு​களை மைய​மாகக் கொண்ட ஆழமான குடும்​பக் கதை​யாக உரு​வாகி வரும் இப்​படத்​தின் முதல் தோற்​றம் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.“மதுரை பின்​னணி​யில் உரு​வாகும் இப்​படத்​தின் 50 சதவீத படப்​பிடிப்பு நிறைவடைந்​துள்​ளது. ‘தெ​னாவட்டு ’ திரைப்​படத்​துக்​குப் பிறகு, கிராமத்​துப் பின்​னணி​யில் ஜீவா நடிக்​கும் படம் இது. அவரது திரைப்​பயணத்​தில் முக
அற்புதமான நடிகர் VK ராமசாமி
  •  · 
  •  ·  sivam
🌹விருதுநகர் கந்தன் ராமசாமி, தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியா கலைஞன். நாடகத் துறையில் 15 ஆண்டுகள், சினிமாவில் சுமார் 35 ஆண்டுகள் என 50 ஆண்டுகள் கலையுலகில் பயணித்த மகா கலைஞன்.18 வயது தொடங்கி தனது இறுதிக் காலம் வரை தமிழ் சினிமாவில் `முதியவர்’ கேரக்டராகவே வாழ்ந்த வி.கே.ராமசாமியை தமிழ் சினிமா ஏன் மிஸ் பண்ணுகிறது… 5 காரணங்களைத்தான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.🌹நாடகங்களில், தனது கணீர் குரலால் ரசிகர்களை மகிழ்வித்த வி.கே.ராமசாமி சினிமாவிலும் வசன உச்சரிப்பில் அசத்தினார். தனது 18 வயதில் இயக்குநர் ப.நீலகண்டனின் `தியாக உள்ளம்’ நாடகத்தில் 60 வயது பேங்கரானபிளாக் மார்க்கெட்’ சண்முகம் கேரக்டரில் அசத்தினார் வி.கே.ஆர். அது பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த நிலையில், படங்களிலும் முதியவர் கேரக்டர்களிலேயே அ
சிவாஜிகணேசனை பற்றி நடிகர் பாலாஜி பேட்டி ஒன்றில்.....
  •  · 
  •  ·  sivam
🌹ஒருமுறை மைசூரில் நீதி படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது . நாங்கள் மெட்ராஸிலிருந்து மைசூர் சென்றோம், விமான நிலையத்தில் எங்களுக்காக எனது கார் காத்திருந்தது. வழக்கம் போல் ஓட்டினேன். அங்கே சிவாஜியின் மனைவியும் இருந்தார்.🌹அவர் என் படங்களுக்கு ஷூட்டிங் செல்லும் போது நான் தினமும் அவரை அழைத்துச் செல்வது வழக்கம் -- நான் கார் ஓட்டுவதைஅவர் மிகவும் ரசிப்பார்.🌹அப்போது திடீரென டயர் ஒன்று பஞ்சர் ஆனது. நான் உண்மையிலேயே கவலைப்பட்டேன். அது இரவு 2மணி, எங்கும் ஒருவரும் தெரியவில்லை. எங்கும் இருட்டாக இருந்தது, ஆனால் சிவாஜி அமைதியாக இருந்தார்.🌹பிறகு காரில் இருந்து இறங்கி வெளியே வந்து ஸ்டெப்னியை எடுத்து டயரை மாற்றினார். சிவாஜி கணேசன் கார் டயரை மாற்றுவதை கற்பனை செய்து பாருங்கள். பின்ன
மணிரத்னம் ஒண்ணுமே இல்லை.. நான் தான் பெரியாளா இருந்தேன்- சுஹாசினி
  •  · 
  •  ·  sivam
திருமணமான புதிதில் தான் மணிரத்னத்தை விட செல்வாக்காக இருந்ததாக அவரது மனைவி நடிகை சுஹாசினி நகைச்சுவையாக கூறியுள்ளார்.🌹சினிமாவில் வெற்றிகரமான நட்சத்திர தம்பதியராக வலம் வரும் மணிரத்னம் - சுஹாசினி ஜோடி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் அவ்வப்போது வெளிவருவதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சுஹாசினி, தன் திருமணத்தின்போது மணிரத்னத்தை விட தான் அதிக வெற்றி பெற்ற நடிகையாக இருந்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.🌹நடிகை சுஹாசினி மற்றும் இயக்குநர் மணிரத்னம் இருவரும் 1988 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான தம்பதியராக இவர்கள் இருவரும் வலம் வருகின்றனர். இந்நிலையில் திருமணத்தின்போது மணிரத்னத்தை விட தான் அதிக வெற்ற
நடிகர் ரகுவரன்
  •  · 
  •  ·  sivam
திருமணமான புதிதில் ரோஹிணி மீது கோபத்தில் கொப்பளித்த ரகுவரன்.. அத்தனைக்கும் பின்னால் இருந்த எமோஷனல் விஷயம்..தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் சிறந்த வில்லன்கள் யார் என பட்டியல் போட்டால் நிச்சயம் அதில் நடிகர் ரகுவரனுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. 49 வயதில் உடல்நிலை சரி இல்லாமல் ரகுவரன் உயிரிழந்து 16 வருடங்களுக்கு மேல் ஆனாலும் அவரது கதாபாத்திரங்கள் உருவாக்கிய தாக்கம் கொஞ்ச நஞ்சம் கிடையாது.இன்று பல வில்லன் நடிகர்களை நம்மால் திரையில் பார்க்க முடிந்தாலும் ரகுவரன் போன்ற ஒருவரின் இடத்தை நிரப்புவதே கடினமான விஷயம் தான். பாட்ஷா, காதலன், முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தனது வில்லன் நடிப்பால் ரசிகர்களுக்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்தி இருந்தாலும், இன்னொரு பக்கம் அஞ்சலி, முத்து, அமர்க
இசைக்கருவிகளே பயன்படுத்தாமல் ஏ.ஆர்.ரகுமான் கம்போஸ் செய்த பாடல்
  •  · 
  •  ·  sivam
இந்திய சினிமா வரலாற்றிலேயே இசைக்கருவிகளே இல்லாமல் பாடல் ஒன்றை உருவாக்கியது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான், அது என்ன பாடல் என்பது பற்றி பார்க்கலாம்.மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இளையராஜா கோலோச்சி வந்த கோலிவுட்டில் இசைப்புயலாக வந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான் ரகுமான். முதல் படத்திற்கே தேசிய விருதும் வென்று அசத்தினார் ரகுமான். அதிலும் இளையராஜா உடன் அவருக்கு போட்டி இருந்தது. தேவர் மகன் படமா அல்லது ரோஜா படமா என்று இருந்த நிலையில், இறுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ராஜாவை வீழ்த்தி விருதை தட்டிச் சென்றார் ரகுமான்.ரோஜா படத்தின் தொடங்கிய இவரது வெற்றிப் பயணம் 30 ஆண்டுகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்தியாவி
பின்னணிப் பாடகி கே. ஜமுனாராணி காலமானார்
  •  · 
  •  ·  sivam
தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகியான கே. ஜமுனாராணி (K. Jamuna Rani) ஜூலை 30, 2026 அன்று பெங்களூருரில் காலமானார்.மறைந்த போது அவருக்கு 88 வயது ஆகும்.அவரது இறுதிச் சடங்குகள் இன்று ஜூலை 31, 2026 அன்று மதியம் பெங்களூருவில் உள்ள கல்லஹள்ளியில் நடைபெறுகின்றன.1940-கள் முதல் 1960-கள் வரை தென்னிந்தியத் திரையிசை உலகில் மிக முக்கியப் பாடகியாகத் திகழ்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களைப் பாடியுள்ளார்.தமிழில் பல உன்னதமான பாடல்களைப் பாடியுள்ள இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'நாயகன்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம்பெற்ற "நான் சிரித்தால் தீபாவளி" என்ற பாடலையும் பாடியுள்ளார்.ஜமுனாராணி தனது 7 வ
எம் எம் சாண்டோ சின்னப்பா தேவர்
  •  · 
  •  ·  sivam
🌹1915-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி கோவையில் பிறந்த இவர், வறுமையான சூழலில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றார்.🌹 இரும்பு பட்டறையில் சுத்தியல் அடிக்கும் பணியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, பால் வியாபாரம், சோடா விற்பனை எனப் பல்வேறு நிலைகளைக் கடந்து, விடாமுயற்சியால் திரையுலகின் சிகரத்தைத் தொட்டவர்.​🌹வீரமாருதி தேகப்பயிற்சி சாலை' மூலம் உடல் உறுதியைப் பேணிய இவர், திரைப்படத் தயாரிப்பு நுட்பங்களைக் கற்றுக்கொண்டு,🌹தனது சகோதரர் எம்.ஏ. திருமுகம் இயக்கத்தில் 'தாய்க்குப்பின் தாரம்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.🌹முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றது, இவரது வெற்றிகரமான திரைப் பயணத்திற்கு அடித்தளமிட்டது.🌹​எம்.ஜி.ஆரை வைத்து 'தாயைச் காத்த தனயன்', 'வேட்டைக்காரன்', 'விவசாயி' உள்ளிட்ட 17 வெ
எம்.ஜி.ஆர்., எழுதிய கட்டுரையிலிருந்து.....
  •  · 
  •  ·  sivam
🌹எம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்:🌹பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!🌹பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை.🌹மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன்.🌹அது கண்டு, என் மனைவியின்,முகத்தில் மலர்ச்சி
நெட்பி​ளிக்​ஸில் வெளி​யாகிறது ‘பியார் பிரேமா கல்யாணம்’
  •  · 
  •  ·  sivam
‘பி​யார் பிரேமா காதல்’, ‘ஸ்​டார்’ ஆகிய படங்​களை இயக்​கிய இளன், தற்​போது ‘பி​யார் பிரேமா கல்​யாணம்’ என்ற படத்​தின் மூலம் நாயக​னாக அறி​முக​மாகிறார். இந்​தப் படத்தை அவரே எழுதி, இயக்​கி​யுள்​ளார்.சான்வீ மேக்னா நாயகி​யாக நடித்​துள்ள இப்​படத்​தில் ராதிகா சரத்கு​மார், யோகி பாபு, எம்​.எஸ்​.​பாஸ்​கர், கீதா கைலாசம், இளங்கோ குமர​வேல், செந்​தில், மாறன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். யுவன் சங்​கர் ராஜா இசை அமைத்​துள்​ளார். ‘மேட் இன் கொரி​யா’​வைத் தயாரித்த ‘ரைஸ் ஈஸ்ட் என்​டர்​டெ​யின்​மென்ட்’ ஸ்ரீநிதி சாகர் தயாரித்​துள்​ளார். இப்படம் ஆக.21-ல் நெட்பி​ளிக்ஸ் ஓடிடி தளத்​தில் ரிலீஸ் ஆகிறது.“திரு​மணத்​துக்​குப் பிறகும் பெற்​றோர் வீட்டை விட்​டுச் செல்ல மறுக்​கிறார் நாயகி சான்​வீ. அ
Latest Cinema (Gallery View)
1-12