Latest Cinema
- ·
- · sivam
நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பூ மற்றும் முன்னணி இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் - ஸ்ரவண் ஸ்ரீனிவாசன் திருமணம், கோவாவில் மிக நெருக்கமான உறவினர்கள் மத்தியில் பிரம்மாண்டமாகவும் அதேசமயம் எளிமையாகவும் நடந்து முடிந்தது. மணமக்களின் விருப்பப்படி மிகவும் எளிமையாக, நெருங்கிய சொந்தங்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் நெகிழ்ச்சியான, எமோஷனலான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.திருமண சடங்குகள் தொடங்குவதற்கு முன்பு குஷ்பூ குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, மணமகன் ஸ்ரவண், அவந்திகாவின் கழுத்தில் தாலி கட்டும் அந்த நொடியில், குஷ்பூ உணர்ச்சிப் பெருக்கால் கைகளைக் கூப்பி கும்பிட்டபடியே ஆனந்தக் கண்ணீர்
- ·
- · sivam
தமிழில், வினய் நடித்த ‘மிரட்டல்’ படத்தில் நாயகியாக நடித்தவர் ஷர்மிளா மந்த்ரே. கன்னடத்தில் சில படங்களில் நடித்துள்ள இவர், விமல் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’, ‘சண்டக்காரி’, தினேஷின் ‘நானும் சிங்கிள்தான்’ ஆகிய தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளார்.இவருக்கும் பிரபல தமிழ்ப் பட தயாரிப்பாளர் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.திருமணத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ஷர்மிளா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குக் கன்னட, தமிழ்த் திரைப்படத் துறையினர் வாழ்த்துகளைத் தெரிவித்த
- ·
- · sivam
(30.06.2026)கேரளாவில் 1973ஆம் ஆண்டு பிறந்தவர் சித்தாரா (இயற்பெயர் சித்தாரா நயர்). மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழித் திரையுலகங்களிலும் தடம் பதித்த இவர், சிறு வயதிலேய நடனத்தில் ஈடுபாடு கொண்டு தனது பதின்மூன்றாம் வயதில் அரங்கேற்றம் செய்தார்.
- ·
- · sivam
பாலிவுட் நடிகையும் மாடலுமான நேகா மாலிக், சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களால் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தனது ஃபேஷன் சென்ஸ் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்திற்காக அறியப்படும் அவர், தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களில் நேகா மாலிக் வெள்ளை நிற சட்டை மற்றும் அரை டவுசர் அணிந்து, படு போல்டான தோற்றத்தில் பல்வேறு போஸ்களை வழங்கியுள்ளார். இயற்கையான மேக்கப், திறந்த தலைமுடி மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் புன்னகை ஆகியவை அவரது தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளன.புகைப்படங்கள் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும், ஏராளமான கருத்துகளையும் பெற்றுள்ளன. "ஸ்டன்னிங்", "கார்ஜியஸ்", "சூப்பர் லுக்" போ
- ·
- · sivam
திரைக்கதை மன்னன் என்று கொண்டாடப்பட்ட பாக்யராஜ் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்துவிட்டார். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்தபோது பல யூடியூப் சேனல்கள் எல்லாம் அங்கே மொய்த்துவிட்டன. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. ராதிகாதான் அங்கே அநாகரீகமாக கூடியிருந்தவர்களை நோக்கி, இப்படி செய்யாதீர்கள் என கோரிக்கை வைத்தார்.இதற்கிடையே பிரபலங்கள் மறைந்த வீட்டில் கேமராக்களை தூக்கிக்கொண்டு படையெடுப்பவர்களின் எண்ணிக்கை வர வர அதிகரித்திருக்கிறது. சோகத்துடன் வருபவர்களிடம் சென்று மைக்கை நீட்டுவது, யாரையும் உள்ளே செல்ல விடாமல் வழியை மறித்துக்கொண்டு நிற்பது என இஷ்டத்துக்கு செய்தார்கள்.நடிகை ராதிகா இதையெல்லாம் பார்த்து டென்ஷன் ஆகி, 'உங்களுக்கு டிஆர்பி வேண்டுமென்றால் தனியாக நடித்து தருகிறோம். இந்த இடத்த
- ·
- · sivam
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவராலேயே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குநரானவர் கே.பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிறவர். இதற்கு காரணம், அவரது தனித்துவமான கதை சொல்லும் முறையும், சாதாரண விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமையும்தான். அவரது கதைகள் பெரும்பாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே இருக்கும்.மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளோ, பிரம்மாண்டமோ இல்லாமல், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு நடக்கும் கதையைப் பார்ப்பது போன்ற உணர்வை அவர் தருவார். ஒரு கதையை எப்படி ஆரம்பித்து, எங்கே ட்விஸ்ட் வைக்க வேண்டும் அதை எப்படிச் சாமர்த்தியமாக அவிழ்க்க வேண்டும் என்பதில் அவர் கில்லாடி. இன்றுவரை பல இளம் இயக்குநர்களுக்கு திரைக்கதை எழுதுவது எப்படி என
- ·
- · sivam
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் பிரகாசித்த ஒரு திறமையான நடிகை. 1990களில் தென்னந்தியத் திரையுலகில் தனது நடிப்புத் திறமையாலும், நடனத திறமையாலும் பெரும் வரவேற்பைப் பெற்றார்.சிறு வயதலேயே நடனக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த நடிகை பரத நாட்டியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர். இதன் தாக்கம் அவரது திரைப்பட நடிப்பிலும் நடனக் காட்சிகளிலும் தெளிவாகத் தெரிந்தது. “ஆபத்து”, “லைலா”, போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனிததுவமான இடத்தைப் பெற்றர்.பொன்னுமணி, அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் போன்ற பல திரைப்படங்கள் மூலம் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார். காதல், சண்டை, குடும்பக் கதைகள் என பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் தன்னை வளர்த்துக் கொண்டாவர்நடிப்பு மட்டுமல்லாமல
- ·
- · sivam
மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்...
- ·
- · sivam
குரல் அழகின் சுரப்பொருள் தமிழ் சினிமா இசை வரலாற்றில் தனிச்சிறப்புடன் ஒலிக்கும் குரல்களில் குரலும் ஒன்று. கம்பீரமும் இனிமையும் ஒருங்கே கலந்த அவரது பாடல் நடை, அவரை மற்ற பின்னணிப் பாடகிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.குரலில் ஒரு தனித்த கூர்மையும் வீரியமும் இருந்தது. சோகப் பாடல்களில் கண்ணீர் சொட்டும் உணர்வை வெளிப்படுத்தும் அதே குரல், அதிரடியான “கபாரே” பாடல்களிலும், நாட்டுப்புற பாடல்களிலும் வேறு பரிமாணம் கொண்டு ஒலித்தது. இந்த பல்துறை வல்லமையே அவரை இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடகியாக ஆக்கியது.வெறும் ஒரு பாடகி அல்ல தமிழ் சினிமா இசையின் ஒரு கால கட்டத்தின் குரலாக அவர் வடிவம் பெற்றார். பாடல்கள் இன்றும் “பழைய தமிழ் திரை இசை” ரசிகர்களின் இதயங்களில் வாழும் அழியாத சொத்தாக நிலைத்திரு
- ·
- · sivam
"மக்களால் எப்படி நினைவு கூறப்படுகிறோம் என்பதே முக்கியம்!" தனது 35,000 கோடி சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்க அதிரடி முடிவு!திரைப்படங்களில் ஸ்டண்டுகளால் நம்மை வியக்க வைத்த உலகப் புகழ்பெற்ற அதிரடி நாயகன் ஜாக்கி சான், நிஜ வாழ்க்கையிலும் ஒரு மாபெரும் ரியல் ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் ஏழைகளின் நலனுக்காகத் தானம் செய்யப்போவதாக அவர் எடுத்துள்ள முடிவு ஒட்டுமொத்த உலகையும் நெகிழ வைத்துள்ளது!தந்தையின் போதனையும்.. மகனின் அர்ப்பணிப்பும்:நல்ல மனம் படைத்த தந்தை: "என் தந்தை ஒரு அழகான மனிதர் மட்டுமல்ல, மிக நல்ல மனம் படைத்தவர். நாம் எப்படி வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல; இறுதியில் இந்த உலக மக்கள் நம்மைக் குறித்து எப்படி நினைவு கூர்கிறார்கள் என்பதை எனக்குச் சொல்லிக்கொடுத்ததே
- ·
- · sivam
இந்தி நடிகை மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். அவரும் நடிகர் தனுஷும் காதலித்து வருவதாகக் கடந்த சில மாதங்களாகச் செய்திகள் வெளியாகி வந்தன.சில விழாக்களில் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டதை அடுத்து இச்செய்தி வேகமாகப் பரவியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. அதை மிருணாள் தாக்குர் மறுத்திருந்தார். ‘எனக்கே தெரியாமல் என் திருமணம் பற்றிய செய்திகள் வருகின்றன’ என்று கூறியிருந்தார்.இந்நிலையில் தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக புதிய தகவல் பாலிவுட்டில் வெளியாகி இருக்கிறது. எனினும், இதை யாரும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
- ·
- · sivam
ஆர்யா, இந்திரன்ஸ், சுனில், நிகிலா விமல், ரெஜினா, போஸ் வெங்கட், அஞ்சலி நாயர் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘அனந்தன் காடு’.ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இப்படத்துக்கு அஜனீஸ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். மினி ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் தயாரித்துள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் தமிழ், மலையாள மொழிகளில் உருவாகியுள்ளது. இதன் டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜூன் 25-ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.நடிகர் ஆர்யா போது, “இது 2 வருடமாக நடைபெற்ற திரைப்படம். ‘எனிமி’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, முரளி கோபி ஒரு ஒன்லைன் சொன்னதாக தயாரிப்பாளர் வினோத் என்னிடம் சொன்னார். அந்த கதையில் பல அடு
Latest Cinema (Gallery View)
Featured Cinema