Cinema
Latest Cinema
நடிகை நதியா பற்றிய சில தகவல்கள்
  •  · 
  •  ·  sivam
நடிகை நதியா அக்டோபர் 24, 1966-இல் பிறந்தார்.நடிகை நதியாவின் இயற்பெயர் ஜெரினா மொய்டு.இவர் முதல் முதலாக 1984 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான நோக்கேத தூரத்து கண்ணும் நாடு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதையும் வென்றிருக்கிறார்.1985-ல் தமிழில் பூவே பூச்சூடவா திரைப்படம் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானார்.80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.பிரபு, சத்யராஜ், ரஜினி, விஜயகாந்த், சுரேஷ், மோகன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.இவரது ஸ்டைலான தோற்றமும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களும் இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.திரையுலகில் நல்ல மா
 உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்
  •  · 
  •  ·  sivam
முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தின் வியாபாரம் என்பது குறுகிய வட்டத்தில்தான் இருந்தது. அதாவது தமிழ் படங்கள் தமிழ்நாட்டிலும், தெலுங்கு படங்கள் ஆந்திராவிலும், கன்னட திரைப்படங்கள் கர்நாடகாவிலும், ஹிந்தி படங்கள் வட இந்தியாவில் மட்டுமே வசூலை பெற்றுவந்தது. ஒரு கட்டத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட படங்கள் மற்றும் அளவில் டப் செய்யப்பட்டு வெளியாவது அதிகரித்துக் கொண்டே வந்தது.தற்போது ஒரு மொழியில் உருவாகி மற்ற மொழிகளிலும் வெளியாகும் படங்களை ஏர் இந்தியா படங்கள் என்ன சொல்கிறார்கள் ஒவ்வொரு மொழியிலும் உள்ள அதிக சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் அதில் ஹீரோவாக நடிக்கிறார்கள் அதிகபட்சத்தில் உருவாக்கும் அந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகி வருகிறது
லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்
  •  · 
  •  ·  sivam
லெஜென்ட் சரவணா நிறுவனர் சரவணன் நடித்துள்ள திரைப்படம் லீடர். இந்த திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.அந்த நிகழ்ச்சியில் பேசிய அறந்தாங்கி நிஷா ‘நான் படத்தில் லெஜென்ட் சரவணாவை திட்டியிருக்கிறேன். எனவே நான் சில நாட்களுக்கு சரவணா துணிக்கடை பக்கம் போக முடியாது. இந்த படத்தில் என் கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அப்படியே படத்திலும் இருந்தார். நான் வாயை திறந்து விடுவாரா என்னை எட்டிப் பார்த்தேன். உங்கள் கணவரிடம் ரியாக்சன் குறைவாக இருக்கிறது என இயக்குனர் சொன்னர். 10 வருடங்களாக அவரிடம் எந்த ரிய
ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’
  •  · 
  •  ·  sivam
கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்திருக்கிறது. நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து, இந்த வசூல் நிலையை அடைந்திருக்கிறது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.‘யூத்’ படத்தின் முதல் நாள் வசூலைவிட, 11-வது நாள் வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சுராஜ் வெஞ்சுரமுடு, தேவதர்ஷினி, அனிஷ்மா உள்ளிட்ட பலர் கென் கருணாஸுடன் நடித்திருந்தனர். முழுக்க புதுமுகங்கள் நடித்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.‘யூத்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்கள் கென் கருணாஸை நாயகனாக நடிக்கவைக்க தொடர்பு கொண்ட
'எல்.ஐ.கே’ வெளியீட்டு தேதியில் மாற்றம்
  •  · 
  •  ·  sivam
ஏப்ரல் 10-ம் தேதி ’எல்.ஐ.கே’ திரைப்படம் வெளியாகும் என்று ப்ரோமோ வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் திட்டமிட்டப்படி முடிவடையவில்லை. இதனால் பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இறுதியாக ஏப்ரல் 3-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.ஆனால், அந்த தேதியிலும் வெளியாகாது என தகவல்கள் பரவின. இறுதியாக விக்னேஷ் சிவன், அனிருத் மற்றும் பிரதீப் ரங்கநாதன் மூவரும் இணைந்து ப்ரோமோ வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அதில் ஏப்ரல் 10-ம் தேதி கண்டிப்பாக வெளியீடு என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் இந்த தேதியில் இப்படம் வெளியாகும் என்று விநியோகஸ்தர்களும் நம்பிக்
பிரகாஷ் ராஜ் தாய் காலமானார்
  •  · 
  •  ·  sivam
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் வீட்டில் சோகம் நிகழ்ந்துள்ளது. அவரது தாயார் சுவர்ணலதா (86) காலமானார். வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திங்கள்கிழமை காலை பிரகாஷ் ராஜின் இல்லத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் தாயாரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விசுவின் ராஜதந்திரம்
  •  · 
  •  ·  sivam
மிழ் சினிமா வரலாற்றில் குடும்ப உணர்வை மையமாக வைத்து உருவான படங்களில் முக்கியமான இடம் பெறுவது இயக்குனர் விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம்'. 1986-ல் வெளியான இந்தப் படம், ஆரம்பத்தில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், பின்னர் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டுக்குடும்ப வாழ்வின் இனிமையையும், இன்னல்களையும் நகைச்சுவை கலந்து படம் பிடித்த விசு, தாமே நடித்தும் உயிர் கொடுத்தார். மனோரமா ஓர் வீட்டு பணியாளராக நடித்த காட்சிகள் இன்றும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கின்றன.குறிப்பாக, குழந்தையை விசுவின் காலடியில் வைக்கும் உணர்ச்சிமிகு காட்சி, சொற்களுக்கு அப்பாற்பட்ட நடிப்பின் உச்சமாக திகழ்கிறது. இசையமைப்பாளர்கள் சங்கர்–கணேஷ் இணையரும், பாடலாசிரியர் வைரமுத்துவும் இண
மீண்​டும் தள்​ளிப் போகிறது ‘எல்ஐகே’
  •  · 
  •  ·  sivam
பிரதீப் ரங்​க​நாதன் நடித்​துள்ள ‘லவ் இன்​சூரன்ஸ் கம்​பெனி’ (எல்​ஐகே) படத்தை விக்​னேஷ் சிவன் இயக்​கி​யுள்​ளார்.இதில் கிருத்தி ஷெட்​டி, எஸ்​.ஜே.சூர்​யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷண் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்​படத்தை ரவுடி பிக்​சர்ஸ் சார்​பில் நயன்​தா​ரா, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்​பில் எஸ்​.எஸ்​.லலித்​ கு​மார் தயாரித்​துள்​ளனர்.இப்​படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்​தது. பின்​னர் டிசம்​பர் மாதத்​துக்கு தள்ளி வைக்​கப்​பட்​டது. அடுத்து காதலர் தினத்தை முன்​னிட்டு பிப்ரவரியில் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்​பட்​டது. பின் ஏப்​.3ம் தேதி வெளி​யாக இருப்பதாக அறிவித்​தனர். ஆனால், இதுவரை படத்​துக்​கான புரமோஷன் பணிகள் எது​வும் தொடங்​கப் ​பட​வில்​லை. இதனால் இப்
  •  · 
  •  ·  sivam
ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருந்தது. இது தகவலாக இருந்தாலும், யார் தயாரிப்பாளர், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட எதுவுமே முடிவாகாமல் இருந்தது. தற்போது சூரி – ரவிக்குமார் இணையும் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.‘டியூட்’ படத்துக்குப் பின், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் இதுவாகும். இதனை பெரும் பொருட்செலவில் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக அறிவிக்கப்பட்ட போஸ்டரின் மூலம், 2015-ம் ஆண்டு வெள்ளம் வந்த சமயத்தில் நடைபெறும் கதையாக இதனை ரவிக்குமார் வடிவமைத்திருப்ப
வைரலான வீடியோ பதிவு - சமுத்திரக்கனி கொடுத்த விளக்கம்
  •  · 
  •  ·  sivam
சமீபத்தில் இயக்குநர் பாலா, சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும் வீடியோ பதிவொன்று இணையத்தில் வைரலானது. அதில் விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருந்தார் சமுத்திரக்கனி. அவரும் பேசியது விஜய்யை தான் என்று இணையத்தில் ரசிகர்கள் பலரும் அவரை வசைபாட தொடங்கினார்கள்.அந்த வைரலான வீடியோ பதிவு குறித்து சமுத்திரக்கனியிடம் பேட்டியொன்றில் கேட்கப்பட்டது. அதற்கு, “நான் பேசும் போது வீடியோ எடுக்கிறார்கள் என தெரியும். ஆனால் ஆரம்பத்தில் இருந்து என்ன பேசினேன் என்பதை எடுக்கவில்லை. இறுதியாக பேசியதை மட்டுமே எடுத்தார்கள். நானும் எடுக்கட்டும் என விட்டுவிட்டேன். எனக்கு மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது. சந்தோஷமோ, வேதனையோ அதை அப்படியே பேசிவிட்டு, அடுத்த தளத்துக்க
கருப்பு படத்தின் அடுத்த சிங்கிள் பாடலை வெளியிட்டது படக்குழு
  •  · 
  •  ·  sivam
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. வரும் மே மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க நாலு பேரு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளது.இந்நிலையில், பாடகர் அசல் கோலார் எழுதியுள்ள ‘நாங்க நாலு பேரு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் நடிகர் சிலம்பரசன், சாய் அப்யங்கர் மற்றும் அசல் கோலார் இணைந்து பாடி உள்ளனர்.சுமார் 3.28 நிமிடம் ரன் டைம் கொண்ட பாடலின் பெரும்பாலான புரோமோ காட்சியில் ஆர
  •  · 
  •  ·  sivam
மும்பையின் மோசமான சாலைகளால் தனது தொழில் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக நடிகையும் நடனக் கலைஞருமான சுதா சந்திரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "படப் பிடிப்புத் தளத்துக்கு நான் ஒருபோதும் தாமதமாகச் செல்வதில்லை. ஆனால் இப்போதெல்லாம், சாலைகளின் மோசமான நிலை காரணமாக, அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்கள் தாமதமாகச் சென்று சேர்கிறேன்; இது எனது தயாரிப்பாளருக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. வேலைகளும் தாமதமாகின்றன.கூடவே, மன அழுத்தமும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருப்பதால், ஒரே இடத்தில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை நகர முடியாமல் சிக்கிக் கொள்ளும் நிலை இருக்கிறது; அந்தச் சூழலில் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க வழி இருப்பதில்லை. ஓராண்டுக்குப் பிறகு நான
Latest Cinema (Gallery View)
1-12