·   ·  3 videos
  •  ·  0 friends
  • 670
  • More

Beautiful birds

Comments (0)
Login or Join to comment.
  • 3
  • 3
·
Added article

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து வரும் படத்தின் நாயகியாக வாமிகா நடித்து வருகிறார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் உடன் யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது இப்படத்தின் நாயகியாக வாமிகா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறது படக்குழு. இவர் தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும், ‘இறவாக்காலம்’ மற்றும் ‘ஜீனி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

அருண் மாதேஸ்வரன் படத்தினை முடித்துவிட்டு, மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்தவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ரஜினி – கமல் இணையும் படத்தினை இயக்கவில்லை என்பதால், லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் நாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

  • 224
·
Added a post

ஒரு கிராமத்தில் கணக்கு வாத்தியார் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு பழக்கம் – எப்போது பார்த்தாலும் எதையாவது பெருக்கிக்கொண்டே இருப்பார். அவருடைய மாணவன் ஒருவன் மிகவும் பொறுமையில்லாதவன். எல்லாவற்றுக்கும் அவசரப்படுவான்.

ஒருநாள் வாத்தியார் மாணவனை அழைத்தார். "தம்பி, நீ நாளைக்கு அதிகாலையில ஒரு இடத்துக்குப் போகணும். அங்க ஒரு சின்ன பண மூட்டை இருக்கு, அதைக் கொண்டு வரணும்," என்றார்.

"சரிங்க வாத்தியாரே! எங்க போகணும்? எவ்வளவு தூரம்?" என்று மாணவன் அவசரமாகக் கேட்டான்.

வாத்தியார் சிரித்துக்கொண்டே, "பொறுமையா கேளு. நீ புறப்படு. ஒரு மணி நேரம் நடந்த பிறகு, ஒரு பெரிய மரம் இருக்கும். அந்த மரத்துல ஒரு போர்டு தொங்கும். அதுல ஒரு பெருக்கல் கணக்கு எழுதியிருக்கும். அந்தக் கணக்கைப் போட்டு வர்ற பதில்தான், நீ போக வேண்டிய தூரம்!" என்று முடித்தார்.

மாணவனுக்கு ஒரே எரிச்சல். "பண மூட்டையைக் கொண்டு வரச் சொல்றதுக்குப் பதிலா, கணக்கு போடச் சொல்றாரே!" என்று முணுமுணுத்துக்கொண்டே மறுநாள் அதிகாலை கிளம்பினான்.

ஒரு மணி நேரம் நடந்த பிறகு மரத்தைப் பார்த்தான். அங்கே போர்டில் இப்படி எழுதியிருந்தது:

மாணவன் உடனே கோபப்பட்டான். "சீ! இதுக்குப் போய் என்னை வரச் சொன்னாரா? 2 ஐ பூஜ்ஜியத்தால பெருக்குனா பூஜ்ஜியம் தான் வரும். அப்படின்னா நான் இங்கேயேதான் இருக்கணும்னு அர்த்தமா?" என்று புலம்பினான்.

கோபத்தில் அவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான். அரை மணி நேரம் நடந்ததும், வாத்தியார் எதிரே வந்தார்.

"என்னப்பா, பண மூட்டையைக் கொண்டு வரலியா?" என்று கேட்டார்.

மாணவன் கோபத்துடன், "வாத்தியாரே! என்ன விளையாட்டு இது? நான் போர்டுல பார்த்தேன்...

. பூஜ்ஜியம்தான் விடை. நான் அங்கேயேதான் நிக்கணுமா?" என்றான்.

வாத்தியார் சிரித்துக்கொண்டே, "நீ அங்கேயே நிக்க வேண்டியதில்லை தம்பி. நீ முதல்ல போட்ட கணக்கு, 'ரெண்டுப் பேர் சும்மா நின்னா' என்ன ஆகும்? ஒன்றுமில்லை! அதுதான் விடை. நீ அந்தப் பதிலைப் பார்த்து கோபப்படாம, அந்தப் போர்டுக்குப் பின்னாலயும் ஒரு கணக்கு எழுதியிருக்கேனே, அதைப் பார்க்கலையா?" என்று கேட்டார்.

மாணவன் அதிர்ச்சியுடன் ஓடிப் போய்ப் பார்த்தால், போர்டின் பின்புறத்தில் இப்படி எழுதியிருந்தது:

கதை கூறும் நீதி (கருத்து): எந்த ஒரு வேலையிலும், ஒரு முடிவை எடுப்பதற்கு முன், எப்போதும் பொறுமையுடன் முழு உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவசரம் அழிவுக்கே வழிவகுக்கும்.

  • 232
·
Added a news

கனடாவில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிலதிபரும், Canam இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

திங்கட்கிழமை காலை, வீட்டின் வெளியே அவர் தனது காரில் அமர்ந்திருந்தபோது மர்ம நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, காரில் இருந்த சாஹ்சி காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.

தர்ஷன் சிங் சாஹ்சி பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1991 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்து தொழிலதிபராக உயர்ந்தார்.

  • 253
·
Added a news

கனடாவில் போதைப்பொருள் குற்றச்செயல்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 12 ஆண்டுகளில் முதன்முறையாக இவ்வாறு போதைப் பொருள் குற்றச் செயல்கள் உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த அளவு 2011 ஆம் ஆண்டில் பதிவான போதைப் பொருள் குற்றச் செயல்களை விடவும் 61 சதவீதம் குறைவாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2023 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் போதைப்பொருள் குற்றச்செயல் விகிதம் 13 சதவீதம் உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

  • 285
·
Added a post

முனிவர்கள் நடக்கும் அமைதியான தோப்பில், இளம் ஆருணி இதயத்துடனும் தலையுடனும் சேவை செய்தார்.

துமிய முனிவரின் ஆசிரமத்தில்,பணிவான பணிகளிலும் கற்றல் வழிகளிலும் தனது நாட்களைப் பணியாற்றினார்.

விறகுகளை முதுகில் அடுக்கி வைத்துக்கொண்டு, குருவின் காட்டுப் பாதையில் அவர் நடந்து சென்றார். தண்ணீர் கொட்டிய இடத்தில், அருகிலேயே பயிர்கள் நிறைந்திருந்த ஒரு பரந்த வயலில் ஒரு விரிசலைக் கண்டார் .

அவன் இடைநிறுத்தப்பட்டான், அவன் இதயம் இப்போது கிழிந்துவிட்டது, கடமைகள் முறுக்கேறிக் கொண்டே,"ஆனால் நான் தாமதித்தால், அறுவடை குறைந்துவிடும்.

நான் என் குருவிடம், விரைவாகவும் விரைவாகவும் சொல்வேன், பின்னர் வேலைகள் முடிந்ததும் உடைப்பைச் சரிசெய்யவும்."

வேகமாக வீசிய காற்றுடன் ஆசிரமத்திற்கு விரைந்தார், விறகுகளை கீழே இறக்கி, தீவிர நம்பிக்கையுடன். அவர் முனிவரிடம் கூறினார், பின்னர் வேகமாக ஓடினார், "தங்க முடியாத வெள்ளத்தை எதிர்த்துப் போராடுங்கள்".

அலையைத் தடுக்க மரக்கட்டைகளுடன், வலிமையுடன் அவர் போராடினார், ஆனாலும் இடைவிடாமல் தண்ணீர் கசிந்தது, பிடிபடவில்லை.

அவர் தனியாக நின்றார், அவரது ஆவி தளரவில்லை, ஆனாலும் அந்தி சாயும் காலம் நெருங்கிவிட்டது, அவர் எந்த உதவியையும் நாடவில்லை.

பின்னர் ஒரு எண்ணம் வந்தது, அவன் முகம் பிரகாசித்தது, அவனுடைய சொந்த வடிவம் தண்ணீரின் இடத்தைப் பிடித்தது. சதை மற்றும் பெருமையுடன் வெள்ளத்தைத் தாங்க , அவர் மிகவும் பரந்த இடைவெளியில் படுத்துக் கொண்டார் .

அந்தி பொழுது சூழ்ந்தது, இரவு குளிர்ந்தது, ஆனாலும் ஆருணியின் மன உறுதி குறைய மறுத்தது.

ஆசிரமம் பயத்தாலும் பயத்தாலும் கலங்கியது, இரவு நெருங்க நெருங்க குரு அழைத்தார்.

அப்போது ஒரு அடக்கமான குரல் காதில் கேட்டது, "நான் இங்கே இருக்கிறேன், ஐயா, அருகில் படுத்திருக்கிறேன்."

அவர்கள் அவரை ஈரமாகக் கண்டார்கள், தோல் நீல நிறமாக மாறியது,

ஆனால் அவரது கண்களில், உண்மையான பக்தி. அவர்கள் அவனைக் குளிர்ச்சியான அலையிலிருந்து விடுவித்தனர்,

நிலத்தைச் சரிசெய்வதாக சபதம் செய்தனர், அவர்களின் இதயங்கள் பெருமை கொண்டன.

"என் மகனே," முனிவர் கருணையுடன் ஆழமாக, "பயிர்களை விட, உன் உன்னத முகம்" என்றார்.

அவர்கள் அவரை கவனமாகப் போர்த்தி, சுமந்து சென்று, அரவணைப்பு, அன்பு மற்றும் குணப்படுத்தும் சருமத்திற்காக அழைத்துச் சென்றனர்.

பின்னர் குரு அவரை மிகவும் தூய்மையான குரலில், "காலப்போக்கில் உங்கள் பெயர் நீண்ட காலம் நிலைத்திருக்கும்" என்று ஆசீர்வதித்தார்.

எனவே புராணக்கதை மிகவும் உண்மையான நம்பிக்கை, தூய்மையான கடமை, வளர்ந்த அன்பு பற்றி கூறுகிறது.

ஆருணியின் துணிச்சலான மற்றும் கனிவான செயலுக்கு, ஒவ்வொரு உண்மையுள்ள மனதிலும் வாழ வேண்டும்.

  • 300
·
Added a post

ஒருமுறை மகாவிஷ்ணுவிற்கு சிவனின் லிங்க வடிவம் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எனவே சிவசொரூபம் கிடைக்க அருளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனோ, இது சாத்தியப்படாது என சொல்லி ஒதுங்கிக் கொண்டார். விஷ்ணுவும் விடுவதாக இல்லை. சிவனை வேண்டி தவம் செய்ய தொடங்கினார். விஷ்ணுவின் மன திடத்தை கண்டு வியந்த சிவன் அவருக்கு அருள்புரிய எண்ணம் கொண்டார். அவரிடம் இத்தலத்தில் மேற்கு நோக்கி சுயம்புவாக வீற்றிருக்கும் தன்னை வேண்டி தவம் செய்து வழிபட்டு வர லிங்க வடிவம் கிடைக்கப் பெறும் என்றார்.

அதன்படி இத்தலம் வந்த மகாவிஷ்ணு தீர்த்தத்தில் நீராடி வேகவதி நதிக்கரையில் சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்திலேயே தவம் செய்தார். சிவத்தல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர் இத்தலம் வந்த போது தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன் தான் என்று எண்ணி, சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு லிங்க வடிவம் பெற்றபோது சம்பந்தர் தனது பதிகத்தைப் பாடி முடித்தார்.

எனவே, இறுதியில் அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும், அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம். சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர் ஓதஉருகீஸ்வரர் என்ற பெயருடன் இவ்வாலயத்தில் கிழக்கு நோக்கி சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.

எப்படிப் போவது :

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் பிள்ளையார் பாளையம் என்னும் இடத்தில் திருமேற்றளித் தெருவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகர பேருந்து வசதிகள் இருக்கின்றன.

  • 309
·
Added a post

டாக்சி டிரைவர் ஓர் விபத்தை ஏற்படுத்தி 30 பேர் இறந்து விட போலீஸ் விசாரனை செய்தது!!

போலீஸ். - யோவ் !! எப்படியா !! விபத்து நடந்தது !!

டிரைவர் - காத்தால வண்டியை ஓட்டி வந்து கொண்டு இருந்தேன் சார் !!

சாலையின் ஒரு பக்கம் திருமண கூட்டம்!! மறு பக்கம் இரண்டு நபர் நடந்து வந்து கொண்டு இருந்தனர்!! திடீர் என்று வண்டி ப்ரேக் !! பிடிக்கவில்லை அதான் !!

போலீஸ் - சரி!! வண்டியை அந்த 2 நபார் மேல் மோத வேண்டியது தானே!!

டிரைவர் - சார் !! நீங்களும் என்னை மாதிரியே யோசிக்கிறீங்க சார்!!

போலீஸ் - அப்புறம் எதுக்குயா!! திருமண கூட்டத்தில் வண்டியை விட்ட!!

டிரைவர். -- சார் !! அந்த இரண்டு பேர் பக்கம் தான் வண்டியை மோதினேன்!!

பய புள்ள !! அதில் ஒருத்தன் திடீர் என்று கூட்டத்து பக்கம் தாவி விட்டான்!!

போலீஸ் -- அப்புறம் !! என்ன செய்த!!

டிரைவர் - ஒருத்தனை இடித்து விட்டு கூட்டத்தில் பாய்ந்தவனை விடாமல் நானும் மோதினேன் சார் அதான் அவனுடன் சேர்ந்து 30 உசுரு போயிருச்சு!!

  • 313
·
Added a post

நாடெங்கும் ஒளவையின் புகழ் கூடியது!

ஔவையை கம்பர் ஒரு முறை சீண்டிப் பார்த்தார்!

அரண்மனையில் வீற்றிருந்தபோது வெளியே கீரைக்காரியின்

சப்தம்!

புலவர்கள் ஒருவரையொருவர் வணிகர்கள் தங்கத்தை உரசிப்

பார்த்து தரம் (மாற்று) கண்டுபிடிப்பது போல் உரசுவது வழக்கம்.

வாயைக் கொடுத்து விட்டு வாங்கிக் கட்டுவதும் உண்டு.

புதிர் போடுவது போல் ஒளவையாரிடம் விடுகதையாகக்

கம்பர் கூறியது:

ஒரு காலடி! நான்கிலைப் பந்தலடி!

என்பதுதான்.

ஒளவையாரை உலகமே போற்றுகிறது! ஆனால் அடி! அடி! என

அடியே! என்பது போலக் கேட்டுவிட்ட மகிழ்ச்சி அது.

“விட்டேனா பார்’ என ஒளவை பாடிய பதில் வெண்பா!

ஓட ஓட விரட்டியது போன்ற பாடல். துண்டைக்காணோம்

துணியைக் காணோம் என்று புதிர் போட்டதும் போதும்

வாயைக் கொடுத்ததும் வாங்கிக் கட்டியதும் போதும் என

உணர வைத்த பாடல் இதுதான்

எட்டேகால் லட்சணமே! எமனேறும் பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே! முட்டமேற்

கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே!

ஆரையடா சொன்னாய் அடா!

தமிழில் “அ’ என்றால் எட்டு! கால் என்பது “வ’ எட்டேகால் என்பது

“அவ’ + லட்சணமே – அவலட்சணமே! என்பது முதல் சடார் அடி.

எமன் ஏறிச் செல்லும் (பரி = குதிரை) எருமைமாடே!

அடுத்தது பளார் அடி! மட்டில் பெரியம்மை

வாகனமே = எல்லோரையும் மட்டமாக்கும் மூதேவி! வாகனம்

கழுதையே.

முட்ட மேற்கூரையில்லா வீடே! மேற்கூரை இல்லாத வீடே! அடேய்

குட்டிச் சுவரே! மேலும் ஒரு செம அடி. குலராமன் தூதுவனே!

அனுமான் குலக் குரங்கே! ஓட ஓட விரட்டிய பலத்த அடி. ஆரைக்

கீரை ஒற்றைத் தண்டில் நிற்கும்!

மேலே பந்தல் போட்டது போல், நான்கு இலைகள்

கொண்டிருக்குமல்லவா? ஒளவையார்க்கு அது தெரியாதா?

தெரியும்!

திட்டினாலும் தித்திக்கும் பாடல் பிறந்தது இன்பம்

அல்லவா?

  • 319
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

ரிஷபம்

கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். தன வரவுகள் திருப்தியை தரும். புதியவர்களின் நட்புகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உழைப்புக்கான அங்கீகாரங்கள் கிடைக்கும். மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மிதுனம்

பொதுவாழ்வில் புதிய அனுபவம் ஏற்படும். இடமாற்ற செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். வியாபார வரவுகளில் தாமதம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கடகம்

சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்புகள் உயரும். துணைவர் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். வேலையாட்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். தடங்கள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

சிம்மம்

வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். உடன் இருப்பவர்கள் ஆதரவால் சில காரியங்கள் நடைபெறும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். இடம் பூமியால் நினைத்த லாபங்கள் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கன்னி

வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் பெருகும். நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார தொடர்புகளில் கவனம் வேண்டும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

துலாம்

முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பழைய சிந்தனைகளால் மனதில் மகிழ்ச்சியற்ற சூழல் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். அரசு காரியங்களில் இருந்த இழுபறிகள் மறையும். உடனிருப்பவரை அனுசரித்து செல்லவும். உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

விருச்சிகம்

பேச்சு வன்மையால் சில காரியங்களை முடிப்பீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபகாரிய பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வாகன வசதி மேம்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் மதிப்புகள் மேம்படும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

தனுசு

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வேலையாட்களிடம் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மகரம்

இனம் புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். பார்வை தொடர்பான சிக்கல்கள் குறையும். வீண் விவாதங்களில் தலையிட வேண்டாம். சக ஊழியர்கள் இடத்தில் வளைந்து செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். துன்பம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். சிலரின் சந்திப்புக்களால் மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு. விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

மீனம்

ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளால் மனம் மகிழ்ச்சியடையும். செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்குவது சார்ந்து எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியம் கைக்கூடி வரும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 455
·
Added a post

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 13 ஆம் தேதி வியாழக்கிழமை 30.10.2025.

இன்று அதிகாலை 05.32 வரை அஷ்டமி. பின்னர் நவமி

இன்று பிற்பகல் 02.56 வரை திருவோணம் . பின்னர் அவிட்டம்.

இன்று அதிகாலை 04.27 வரை சூலம். பின்னர் கண்டம்.

இன்று அதிகாலை 05.32 வரை பவம். பின்னர் மாலை 05.25 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=311&dpx=2&t=1761799691

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 497

Good Morning....

  • 492
·
Added a post

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் "என்ன ஒரு துரதிர்ஷட நிலை?" என்று பரிதாபமாக விசாரித்தனர். "இருக்கலாம்" என்று ஒரே வார்த்தையில் அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி பதிலளித்தார். அடுத்த நாள் தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை உடன் அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம்பக்கத்தினர், "நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்போ நாலு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு" என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் "இருக்கலாம்" என்று கூறி முடித்தார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். "என்னப்பா, உனக்கு ஒரு நல்லது நடந்தா அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க ஆறு மாசத்துக்கும் மேல் ஆகும் போல, ரொம்ப கஷ்டமான நிலைமை" என்று கூறி ஆதங்கப்பட்டனர். விவசாயி பெரிதாக வருந்தாமல் "இருக்கலாம்" என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி " இருக்கலாம்" என்று கூறினார்.

அவர் ஏன் எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரியான சமமான மனநிலையில் இருந்தார் ? காரணம் உண்டு. அந்த விவசாயி வாழ்வின் இயல்புகளைப் புரிந்துகொண்டவர். நாள்களில் நல்ல நாள், கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு மறைமுகமாகப் பல பாடங்களை உணர்த்திக் கொண்டிருக்கின்றது.

நல்லது கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். கஷ்டமான சூழ்நிலைகளில், இது நிரந்தரம் அல்ல நாளை என்று ஒன்று இருப்பதை மறக்கவேண்டாம். சந்தோஷமான சூழ்நிலையில் தலை கால் புரியாமல் ஆடக்கூடாது. யாருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதையும் தலைக்கு எடுத்துச் செல்லாமல், எதைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நலம். சுகம் துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது.

  • 667
·
Added a post

பழனி முருகன் கையிலுள்ள தண்டத்தில் ஒரு கிளி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதன் ரகசியம் என்ன தெரியுமா?

முருக பக்தரான அருணகிரி நாதர் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். அதற்காக சூழ்ச்சி செய்து பிரபு தேவராயன் என்னும் மன்னன் மூலமாக அருணகிரி நாதரை தேவலோகம் அனுப்பி பாரிஜாத மலர் பறித்து வருமாறு கட்டளையிடச் செய்தான்.

அருணகிரி நாதர் தன்னுயிரை ஒரு கிளியில் உடலில் செலுத்தி தன் உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்தி விட்டு தேவலோகம் புறப்பட்டார்.

இதற்கிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்து விட்டான். கிளி வடிவில் பூலோகம் வந்த அருணகிரி நாதர் தன் உடல் காணாமல் போனதைக் கண்டு திகைத்தார்.

அவருக்கு அருள் செய்த முருகன் தண்டத்தில் கிளியை அமர்த்திக்கொண்டார். இதன் பின்னரே பழனி முருகனின் தண்டத்தில் அருணகிரியார் கிளி வடிவில் காட்சி தருகிறார்.

  • 668
·
Added a news

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் ஆசிரியர்கள் உடன் பணிக்கு திரும்ப வேண்டுமென மாகாண அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

16 நாட்களாக நீடித்த மாகாணத்தின் வரலாற்றிலேயே நீண்ட கல்வி வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, அல்பர்டா அரசு திங்கள்கிழமை பேக் டு ஸ்கூல் எக்ட் “Back to School Act (Bill 2)” எனும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில், 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சட்ட ரீதியாக மீண்டும் பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சட்டம், ஆசிரியர் சங்கமான அல்பர்ட்டா ஆசிரியர் ஒன்றியம் கடந்த செப்டம்பரில் பெரும்பான்மையாக நிராகரித்த ஒப்பந்த நிபந்தனைகளையே சட்டமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தில், பணியை மறுப்பவர்களுக்கு கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்களுக்கு ஒரு நாளுக்கு 500,000 டொலர்களும், தனிநபர்களுக்கு ஒரு நாளுக்கு 500 டொலர்களும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாகாணம் முழுவதும் 61 பள்ளிக்கூட சபைகளில் வேலைநிறுத்தத்தை தடுக்கும் வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 669
·
Added a news

கனடாவில், இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவரை சக இந்தியர் ஒருவர் கொலை செய்த வழக்கில் அந்த இளம்பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (21.10.2025) காலை 11.00 மணியளவில், கனடாவின் ரொரன்றோவிலுள்ள நார்த் யார்க்கில் வசித்துவந்த அமன்பிரீத் சைனி (27) என்னும் இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் உயிரற்ற உடல், Charles Daley Park என்னும் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டது.

உடல் முழுவதும் பயங்கர காயங்களுடன் சைனியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிராம்டனைச் சேர்ந்த இந்திய இளைஞரான மன்பிரீத் சிங் (27) என்பவர் சைனியை கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

மன்பிரீத் சிங் மீது கனடா முழுமைக்குமான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன்பிரீத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், அவரை கண்டால், அவரது அருகில் நெருங்கவேண்டாம் என்றும் உடனடியாக அவசர உதவியை அழைக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், மன்பிரீத் சிங் கனடாவிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தற்போது பொலிசார் தெரிவித்துள்ளார்கள். ஆகவே, மன்பிரீத்தைப் பிடிக்க உதவுமாறு இந்திய பொலிசாரை கனேடிய பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

  • 673
·
Added a post

படித்தேன்...பகிர்கிறேன்...

விஞ்ஞானத்துடன் மெய்ஞானம் இணைந்த ஒரு நீண்ட நெடிய பதிவு இது

இதை காணும் நீங்கள் இதை முழுவதும் படியுங்கள்...... அப்போது தான் நமது தலைமுறைகள் எப்படி வாழையடி வாழையாக தொடர்ந்து வருகிறது என்ற பரம்பரை தொடர்பு சங்கிலி தொடரை பற்றி தெரிந்து கொள்ள முடியும்

படித்து தெரிந்து கொண்டு பின்வரும் உங்கள் இளைய தலைமுறை வாரிசுகளுக்கு இதனை தெரிவியுங்கள்.

அப்போது தான் அவர்களுக்கு ம் தெரியும் அவர்களின் தலைமுறை வரலாறு....

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால் ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்... போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல் அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு,வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”

குலதெய்வம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.

குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.

யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.

பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள்.

பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை…

அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது

எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு.

ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும்.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.....?

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே இன்றளவும் கருதப்படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும்.

ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது.

பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக. வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே. ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை.

ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம் . 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்.

அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது

இப்போது புரிகிறதா? ஏன் நம் முன்னோர்கள் குல தெய்வம் மற்றும் அது சார்ந்த வழிபாட்டு முறையை வைத்தார்கள் என்று?

அது வெறும் வழிபாடு மட்டும் அல்ல...... அது நம் பரம்பரை சார்ந்த விஷயம்.

  • 682

உண்மைதானே-?

  • 706
  • 711
·
Added a post

சீனா வில் ஒரு புகழ் பெற்ற வங்கி. அது அந்நாட்டுக் கோடீஸ்வரர்களின் களஞ்சியமாகத் திகழ்ந்தது.

ஒருநாள் திடீர் என்று சில கொள்ளையர்கள் எதிர்பாராத விதமாக அந்த வங்கிக்குள் நுழைந்து விட்டனர். அத்துடன் அவரவர் கையில் இருந்த துப்பாக்கிகளைக் காட்டி...

''இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது, ஆனால் உங்கள் உயிர் சொந்தமானது! உயிரை உங்களுக்கு காக்க விரும்புபவர்கள் மட்டும் கீழே குப்புற படுத்துக் கொள்ளலாம்!" என்றனர்.

கொள்ளையர்கள் அவ்வாறு மிரட்டிய மாத்திரத்தில் அங்கு இருந்த அனைவரும் அசையாமல் கீழே படுத்து விட்டார்கள் ....

மனதை மாற்றும் முறை என்பது இதுதான். "This is called ""Mind Changing Concept" Changing the conventional way of thinking.""

அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திசை திருப்ப அநாகரிகமாக நடந்தாள், அப்பொழுது ஒருவன், இங்கு கொள்ளையர்களில் நடக்கப் போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்....

இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் ""Being Professional & Focus only on what you are trained

கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையர்களுள் ஒருவன் கேட்டான், "வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்'' என்று . மற்றாருெவன் சொன்னான், பொறு, அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும் என்று. இதைத் தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம். This is called """Experience." Nowadays, experience is more important than paper qualifications!""

வங்கியின் மேலாளர் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவருடைய மேல் அதிகாரி அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் கூறினார்,"" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய் விட்டது என்று சொல்லி விடுவோம்' என்றார்.

"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்! . This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.

இதை கேட்ட மற்றொரு அதிகாரி, "வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும்' என்றார். 'கலியுகம்' என்பது இது தான் This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.

மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது.

கொள்ளையர்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர் எவ்வளவு எண்ணியும் அவர்களால் இருபதுகோடிகளுக்கு மேல் போக முடியவில்லை . கொள்ளையர்களில் ஒருவன் மிகவும் எரிச்சல் அடைந்து, 'நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்த வங்கி அதிகாரிகள் சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது. இதற்குத் தான் படித்திருக்க வேண்டும்" . True. Knowledge is nowadays very important than money in this world.

வங்கியின் முதலாளிக்கும் இப்பொழுது மிகுந்த மகிழ்ச்சி. ஷேர் மார்க்கட்டில் வங்கி அடைந்த நஷ்டத்திற்கு அதை ஈடு கட்டி விட்டது. இக்கொள்ளை

இப்போது இங்கு கேள்வி இது தான் யார் திருடர்கள் ? ????

இங்கே உண்மையான திருடன் யார்? ?????

  • 716
·
Added article

தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. 

அவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

நான் தெற்கில் நடிக்க தொடங்கியபோது, மிகவும் இளமையாக இருந்தேன். 

நான் நிறைய தென்னிந்திய படங்களில் நடிக்க வேண்டும் என்றால், அந்த மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். 

அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் பேசி நான் கற்றுக்கொண்டேன். 

20 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடிக்க தொடங்கியதில் இருந்து சினிமா மாறி உள்ளது. அது இன்னும் வளர்ச்சியடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  ஏனென்றால் என் வாழ்நாள் முழுவதும் ஒரு நடிகையாக இருக்க விரும்புகிறேன். 

நான் நானாகவே என் நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன். நான் ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்தாலோ அல்லது ஒரு திரையரங்குக்குள் நுழைந்தாலோ, மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் இன்னும் அந்த இடங்களுக்குள் நுழைவேன், 

ஏனென்றால் நான் இன்னும் என் வாழ்க்கையை நான் விரும்பும் வழியில் வாழ்வேன். எனக்கு மக்களைப் பிடிக்கும். எனக்கு மக்களுடன் சுற்றித் திரிவது பிடிக்கும். நான் சிறு வயதிலிருந்தே அப்படித்தான். 

30 வயது வரை நடிப்பேன். அதன் பிறகு, நான் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெறுவேன் என்று நினைத்தேன்.  ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், நான் வேலை செய்து கொண்டிருந்தபோதும், இருபதுகளின் பிற்பகுதியில் இருந்தபோதும், நான் உண்மையில் என் சொந்த நிலைக்கு வந்தேன். 

அப்போது அதிர்ஷ்டவசமாக இந்தத் துறை உண்மையில் சுவையான பகுதிகளை எழுதத் தொடங்கியது. இது உலகம் முழுவதும் நடந்த ஒரு பொதுவான மாற்றம் என்று நான் நினைக்கிறேன். 

இந்த வயது பயம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. பலர் வயதானதைப் பற்றி ஏதோ ஒரு நோய் போலப் பேசுகிறார்கள். 

வயதானது மிகவும் அற்புதமானது. ஆனால் மக்கள் வயதானதைப் பற்றி ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை என அவர் கூறினார்.

  • 725
·
Added article

பிரபல நடிகை தேவதர்ஷினி ஆடிசன் என்ற பெயரில் என்ன நடக்கிறது? என்ற கேள்விக்கு பதில் கொடுத்து இருக்கிறார். 

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தேவதர்ஷினியிடம் சமீப காலமாக இளம் நடிகைகளின் அந்தரங்க காட்சிகள் இணையத்தில் வெளியாகிறது.

ஆடிஷன் என்ற பெயரில் நடிகைகளிடம் அத்து மீறல்கள் நடப்பதாக தெரிகிறது. இது பற்றி உங்களுடைய பார்வை என்ன? நிஜமாகவே திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை தேவதர்ஷினி நிச்சயமாக திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. திரைத்துறை மட்டுமல்ல, எல்லா துறையிலுமே பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

திரைத்துறை சார்பில் அதற்கான கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என நடிகைகளுக்கு ஆதரவாக அவர்களுக்கு பாதுகாப்பாக பல்வேறு விதிமுறைகளை கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றன.

திரைத்துறையில் மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என பதிவு செய்திருந்தார். தொடர்ந்து பேசிய அவரிடம் சீரியல் நடிகை ஒருவரின் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இது பற்றி உங்களுடைய பார்வை என்ன? என்ற கேள்வி எழுப்பிய போது,

 மன்னித்து விடுங்கள், அதைப்பற்றி எந்த விவரமும் எனக்கு தெரியவில்லை. அது என்ன விஷயம் என்று நான் பார்க்கவில்லை, அது என்ன என்று தெரிந்து கொண்டு அதன் பிறகு அது குறித்து இந்த பதில் கொடுக்கிறேன் என கூறியிருக்கிறார்.

சீரியல் மற்றும் சினிமா உலகை அதிர வைத்துக் கொண்டிருக்கும் இந்த வீடியோ காட்சிகள் குறித்து எதுவுமே எனக்கு தெரியாது என்று தேவதர்ஷினி கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

  • 742
·
Added a news

வாகனங்களுக்காக ஸ்தலத்திலேயே அபராதம் செலுத்தும் முறைமையை (Govpay) எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

  • 747