Beautiful birds
1645 கோடி வரையிலான அதிக செலவில் உலக கோடீஸ்வரரான அமேசன் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) 2வது திருமணம்!
தனது காதலியான தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் லோரன் சான்செஸ்ஸை (Lauren Sánchez) ஜெஃப் பெசோஸ் நேற்று வெள்ளிக்கிழமை இத்தாலியின் வெனிஸில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த விழாவில் உலக பிரபல நட்சத்திரங்கள் நிறைந்த விருந்தினர் கலந்துக்கொண்டனர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் சில மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நெருக்கடியான சூழல்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் பிறக்கும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் நிலவும். மனை மற்றும் வாகன விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
எதையும் சமாளிக்கும் திறமை பிறக்கும். சக ஊழியர்கள் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
ஆபரண விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் மறையும். முகத்தில் பொலிவுகள் மேம்படும். புதியவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தில் தவறிய சில வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
கடகம்
வரவு செலவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உடன் இருப்பவர்களிடம் அதிக உரிமை கொள்வதை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சந்தை நிலவரங்களை அறிந்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவீர்கள். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கோப்புகளை கையாள்வதில் கவனம் வேண்டும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் அமையும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி
நினைத்த பணிகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நவீன அணுகுமுறையால் வியாபாரத்தில் முன்னேற்றத்தினை காண்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அனுபவ அறிவால் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
துலாம்
உறவுகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
அலுவலக பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். மனதளவில் புதுவிதமான தேடல்கள் கிடக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சேமிப்புகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
எதிர்பாராத சில பயணம் மூலம் உடலில் சோர்வுகள் உண்டாகும். தவறிய சில பணிகள் மீண்டும் செய்வதற்கான சூழல்கள் அமையும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பணிகளில் திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகரம்
கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் அறிமுகங்கள் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும். கால்நடைகள் மீதான ஈர்ப்புகள் மேம்படும். பொது வாழ்வில் சில மாற்றமான தருணங்கள் அமையும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
நண்பர்களின் வட்டம் விரிவடையும். குடும்பத்தில் ஒத்துழைப்புகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வேலையாட்கள் இடத்தில் சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோக பணிகளில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை 28.6.2025.
இன்று பிற்பகல் 01.18 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று காலை 10.03 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.
இன்று அதிகாலை 12.07 வரை வியாகாதம். பின்னர் இரவு 10.32 வரை ஹர்ஷனம். பின்பு வஜ்ரம்.
இன்று அதிகாலை 01.42 வரை தைத்தூலம். . பின்னர் பிற்பகல் 01.18 வரை கரசை. பின்பு வணிசை.
இன்று அதிகாலை 05.55 வரை மரண யோகம். பின்பு காலை 10.03 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
ஒரு வீடுகூட இல்லாத மனிதர் கோடீஸ்வரனான உண்மைச்சம்பவம்... அதுவும் தன் திறமையின் மீதான நம்பிக்கையில்!
கிறிஸ் கார்ட்னர் ஒரு விற்பனையாளர். அவர் விற்பது "போர்ட்டபிள் போன் டென்சிட்டி ஸ்கேனர்" என்ற ஒரு சாதனம். அதை விற்க முடிந்தாலும், அது நிலையான வருவாய் தரக்கூடியதல்ல.
எனவே, பொருளாதார பிரச்சினைகள் உண்டு. அவரது மனைவி ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறாள். அவருக்கு ஐந்து வயது மகன் ஒருவனும் உண்டு.
கிறிஸ் கடுமையாக உழைக்கிறார், தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயற்சிக்கிறார். ஆனால் அவரது மனைவிக்கு இதில் ஆர்வமில்லை—அவரை குறை சொல்லிக் கொண்டே இருப்பதுதான் அவளுக்கு வழக்கம்.
அப்படியிருக்கையில், கிறிஸ் ஒரு பங்குச் சந்தை தரகராக (ஸ்டாக் ப்ரோக்கர்) வேலை செய்யும் வாய்ப்பைப் பற்றிக் கேள்விப்படுகிறார். அதைப் பற்றி ஆராய்ந்தபோது, அவரது நகரத்தின் மிகப்பெரிய ப்ரோக்கரேஜ் நிறுவனத்தின் மூத்த மேலாளரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது.
அந்த மேலாளருடன் டாக்ஸியில் பயணிக்கும்போது, அவர் ஒரு ரூபிக்ஸ் கியூப் (Rubik's Cube) தீர்க்க முயல்வதை கிறிஸ் பார்க்கிறார். கிறிஸ் எப்போதும் தன் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளும் மனப்பாங்குடையவர். டிவியில் பார்த்து அவர் கற்றுக்கொண்ட ஒரு திறமைதான் ரூபிக்ஸ் கியூப் தீர்ப்பது!
புன்னகையுடன், கிறிஸ் அந்த கியூபை அவரிடமிருந்து எடுத்து, அவர் முன்னாலேயே அதைத் தீர்த்துக் காட்டுகிறார்! அதைப் பார்த்த மேலாளருக்கு கிறிஸ் ஒரு சாதாரண மனிதர் அல்ல என்பது புரிகிறது. உடனே, அவரை தனது நிறுவனத்தில் இன்டர்வியூவுக்கு வருமாறு அழைக்கிறார்.
இதையெல்லாம் கிறிஸ் தன் மனைவியிடம் பகிர்ந்துகொள்கிறார்—புதிய தொழில்முறைக்கு மாறப் போவதாக. ஆனால் அவளுக்கு அது பிடிக்கவில்லை; மாறாக, அவரைப் பரிகாசம் செய்கிறாள்.
ஆனாலும், கிறிஸ் தன் திறமையிலும், தான் நம்பும் கடவுளிலும் உள்ள நம்பிக்கையை விடாமல், அந்த நிறுவனத்திற்கு இன்டர்வியூவுக்குச் செல்கிறார்.
ஆனால், அங்கே நிலைமை மேலும் சிக்கலாகிறது—ஒரே ஒரு காலியிடத்திற்கு இருபது பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், அதுவும் **சம்பளம் இல்லாத** இன்டர்ன்ஷிப்!
இதை அறிந்ததும், அவரது மனைவியின் பொறுமை முறிந்துவிடுகிறாள். "சம்பளமில்லாத வேலைக்கு ஏன் போகிறாய்?" என்று புரியாமல், அவரையும் மகனையும் விட்டுவிட்டு வேறொரு இடத்திற்குச் செல்கிறாள்.
இப்போது, அவருக்கு ஆதரவு என்பது ஐந்து வயது மகன் மட்டுமே. அவன் முன்னால் தன் சிறிய சிறிய வெற்றிகளை விளக்கிச் சொல்வதை நாம் பார்க்கிறோம். இது சிறு வயதிலேயே அந்த பையனின் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
கிறிஸ் புதிய வேலையில் ஈடுபட்டாலும், பழைய விற்பனை வேலையையும் விடவில்லை. மற்ற ஊழியர்கள் தண்ணீர் குடிக்கவோ, சிகரெட் பிடிக்கவோ போகும் நேரத்தில், கிறிஸ் அந்த நேரத்தைப் பயன்படுத்தி கூடுதல் கிளையண்ட்களை அணுகுவார்.
உணவு உண்பதைக் கூட தவிர்த்து, அந்த நேரத்தில் இரண்டு கூடுதல் வாடிக்கையாளர்களைப் பிடிக்க முயற்சிப்பார்!
அதோடு நிறுத்தாமல், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியும் வேலை செய்கிறார்—உயர்தர வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று நேரில் பேசி, நட்பை வளர்க்கிறார்.
அப்படியிருக்கையில், ஒரு வாடிக்கையாளர் இரக்கப்பட்டு, கிறிஸையும் மகனையும் ஒரு கால்பந்து போட்டி பார்க்க அழைக்கிறார். கிறிஸ் மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பை ஏற்கிறார்.
போட்டியைப் பார்க்கச் சென்ற கிறிஸ், அங்கு வந்திருந்த மற்றவர்களுடன் பேசி, அவர்களையும் தன் வாடிக்கையாளர்களாக மாற்றிக் கொள்கிறார்!
இதற்கிடையில், கிறிஸுக்கு பல கசப்பான அனுபவங்கள் ஏற்படுகின்றன. மிகவும் வேதனை தருவது—அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து அவரும் மகனும் வெளியேற்றப்படுகிறார்கள். இரவில் தங்க இடமில்லாததால், ஒரு ரயில் நிலையத்தின் கழிப்பறையில் தங்குகிறார்கள்.
தரையில் டயலட் பேப்பர் விரித்து, அதில் குழந்தையுடன் உறங்கிய அவர்கள், பின்னர் வீடற்றோருக்கான தங்குமிடங்களில் தங்குகிறார்கள்.
இந்த நிலையிலும், கிறிஸ் தன் வேலையை தவறாமல் செய்கிறார். இதைப் பார்க்கும்போது, ஒரு மனிதனின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் நமக்குத் தெரிகிறது.
இறுதியாக, கிறிஸ் தன் இன்டர்ன்ஷிப் முடித்து, தேர்வில் தேர்ச்சி பெறுகிறார். இனி ஒரு இன்டர்வியூ மட்டுமே உள்ளது.
அதற்காக புதிய சட்டை போட்டு, போர்டு முன் அமர்கிறார்—தன் கடின உழைப்பின் பலன் என்னவாகும் என்று காண!
அப்போது போர்டில் இருப்பவர்கள் கேட்கிறார்கள்:
*"என்ன இது? புதுசா சட்டையா?"*
கிறிஸ் சிரித்துக்கொண்டே பதிலளிக்கிறார்:
*"ஆமாம்! இன்று என் கடைசி நாள்—சம்பளமில்லாத இன்டர்னாக. அதனால், ஒரு நல்ல சட்டை போட்டு வந்தேன்!"*
இதைக் கேட்டு, போர்டு உறுப்பினர்கள் சிரிக்கிறார்கள். பிறகு சொல்கிறார்கள்:
*"உன் இன்டர்ன்ஷிப் முடிந்துவிட்டது..."*
கிறிஸின் சிரிப்பு மறைகிறது. கண்களில் விழிகள் துளிர்க்கின்றன. *"கடவுளே, என் உழைப்பு வீணாகிவிட்டதா?"*
அடுத்த வினாடி, அவர்கள் சொல்கிறார்கள்:
*"இந்த புதிய சட்டையை நாளைக்கும் போட்டுக்கொண்டு வா...*
*காரணம், நாளை முதல் நாள்—உனக்கு புதிய வேலை!
அதாவது, கிறிஸுக்கு அந்த வேலை கிடைத்துவிட்டது! ஒரே இரவில், அவரது வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடுகின்றன.
கிறிஸ் அங்குள்ள அனைவருக்கும் கைக்குலுக்கி, வெளியே வருகிறார். கூட்டத்தின் நடுவே நடந்துகொண்டே, மகிழ்ச்சியால் கண்ணீர் வடிக்கிறார்—ஆனால் அழாமல், வெற்றியின் ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறார்!
இந்தக் காட்சியைப் பார்க்கும் நம் கண்களும் நீரைச் சிந்தும்... அது எவ்வளவு **உணர்ச்சிகரமான** காட்சி!
இதைப் பார்த்த பிறகு, நாமும் நினைக்கத் தொடங்குவோம்—**வாழ்க்கையில் வெற்றி பெற, கடினமாக உழைக்க வேண்டும்** என்று.
**"The Pursuit of Happyness"**—இது ஒரு தந்தை மற்றும் மகனின் **ஆத்ம பந்தத்தின்** கதை.
இது வெறும் சினிமா கதை அல்ல... **கிறிஸ் கார்ட்னர்** என்ற ஒரு மனிதனின் வாழ்வில் நடந்த உண்மை கதை.... இல்லை.... வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவம். !**
வன்கூவரில் நடைபெறும் காமன்வெல்த் கற்றல் (COL) ஆளுநர்கள் வாரியக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை பிரதமர் அமரசூரிய செவ்வாய்க்கிழமை கனடா வந்தடைந்தார்.
கனடாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் “டாக்டர் ஹரிணி அமரசூரியவுடன் ஒரு மாலை” என்ற சிறப்பு சமூக நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
இலங்கை பிரதமர் அலுவலகத்தின்படி, இந்த நிகழ்வு மதத் தலைவர்களுக்கும் இலங்கை வம்சாவளி சமூக உறுப்பினர்களுக்கும் பிரதமருடன் தொடர்பு கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு, காமன்வெல்த் கற்றல் அமைப்பு மற்றும் ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், குளோபல் அஃபேர்ஸ் கனடாவின் ஒருங்கிணைப்பு குழுவினரும் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை அன்புடன் வரவேற்றனர்.
பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.
மருத்துவக் குணங்கள்:
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும். பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.
பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
அந்த நடிகருக்கு அப்படி ஒரு ரோல் யாரும் தந்ததில்லை. எத்தனை பெரிய மனது அந்த தயாரிப்பாளருக்கு.
அதுவும் ஒரு நீதிபதியின்வேடத்துக்கு.
தன் மெலிந்த உடலை வைத்து காமெடி காட்சிகள் தான் எடுப்பார்கள் என அவருக்குத் தெரியும். அவரை நிற்க வைத்து டேபிள் ஃபேனை திருப்பி விட்டு காற்றில் பறந்து விடுவது போலக்கூட காட்சி வைத்திருக்கிறார்கள். எத்தனை பெரிய மனது அந்த தயாரிப்பாளருக்கு நீதிபதி வேடத்தை தர...
ஓமக்குச்சி நரசிம்மன் சினிமாவுக்கு வரும் முன் நாடகத்தில் நடித்தார். 'நாரதரும் நான்கு திருடர்களும்' என்கிற நாடகத்தில் ஒரு கராத்தே மாஸ்டர் வேடம் அவருக்கு. ஜப்பானிய கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை வைத்து எழுத நரசிம்மனோ அதை 'ஓமக்குச்சி' ஆக்கி விட்டார்.
குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் ஓமக்குச்சி விசுவை பார்த்து சாப்பிட்டாச்சான்னு கேட்பார். சாப்பிட்டுட்டு சாப்பிடலைன்னு சொன்னா சாப்பாடு வாங்கித்தரப்போறியா..இல்லை...ன்னு விசு ஒரு குழப்பல் போடுவார். ஓமக்குச்சி தலைசுற்றி ஓடிவிடுவார். அடுத்த காட்சியில் விசு 'சாப்பிட்டியா'ன்னு கேட்டதும் "பதிலுக்கு சாப்ட்டியான்னு கேட்கமாட்டேனே"ன்னு சொல்லிட்டு "பைத்தியக்கார ஆஸ்பத்திரில வேலை செய்யற டாக்டருக்கு உடம்பு சரியில்லை"ன்னு சொல்லி மாட்டிக்குவார். உடனே விசு 'பைத்தியக்கார ஆஸ்பத்திரில வேலை பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார..." ஆரம்பிச்சு தொணதொணப்பார். ஓமக்குச்சி தலையை பிய்த்துக்கொண்டு ஓடி விடுவார்.
சூரியன் படத்தில் கவுண்டமணி புதைசேற்றில் மாட்டிக்கொள்வார். கவுண்டமணி விழுந்ததும் ஜாங்குசக்கு ஜஜக்குஜக்குன்னு ஓமக்குச்சி பாடிட்டு போவார்...செம...
பல படங்களில் ஓமக்குச்சியின் காமெடி வயிறு வலிக்க செய்யும். கவுண்டமணி ஒரு ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்திருப்பார். ஓமக்குச்சி அங்கே வந்து "எச்சூஸ்மி...ஸ்கோர் என்ன?...ரேடியா இல்லைல்லா....கன்ட்ரி வில்லேஜ்..."ன்னு அவர் பேசுவதும் கவுண்டமணி தலைமுடியை பிடித்து அடிப்பதும்....
இப்படி காமெடியாகவே நடித்த ஓமக்குச்சி கடைசியாக நடித்த படம் தலைநகரம். அதில் வடிவேலுவை ஹீரோ மாதிரி போஸ் கொடுக்கச் சொல்வார் மயில்சாமி. அப்போது வடிவேலு எல்லாவற்றையும் உடைப்பார். அருகே நிற்கும் ஓமக்குச்சியை தலைக்கு மேலே சுற்றிகீழே போடுவார். அதில் ஓமக்குச்சி தலை சாய்ந்தது விடும்...நன்றாக ரசிக்கப்பட்ட அந்தக்காமெடி தான் கடைசி...அதோடு உடல்நலமில்லாமல் இரண்டு வருடத்தில் இறந்து போனார் நரசிம்மன். நரசிம்மன்0-கவுண்டமணி அட்டகாசமான காம்பினேஷன்.
என்றாலும் அவருக்கு அழகான அறிவுப்பூர்வமான பாத்திரமாக நீதிபதி பாத்திரம் தெலுங்கில் கிடைத்தது. சில காட்சிகள் தான். ஆனால் ஓமக்குச்சிக்கு அது பெரிய பாத்திரம் தானே.
பிரேமின்ச்சி சூடு என்கிற அந்தத்தெலுங்குப்படத்தின் தயாரிப்பாளரும் இதேப்போல நல்ல பாத்திரங்களுக்கு ஏங்கியவர் தான். தனக்கு கிடைக்காததை தானே உருவாக்கலாம் என இந்தப்படத்தை தயாரித்து நடித்தார். ராஜேந்திரபிரசாத், சந்திரமோகன், கோட்டா சீனிவாசராவ், போன்றோருடன் நாயகியாக நடித்த அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு நடிகை.
ஆம்....சில்க் ஸ்மிதா தான் அவர்.....
மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.
இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.
காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிர்ந்த நீரில் குளிக்கிறோம்.
வெந்நீரில் குளிக்க கூடாது.
எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.
எதற்கு இப்படி?
காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.
குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்..
வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??
உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
இது எதற்கு…? உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.
எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது. வியக்கவைக்கிறதா… ?
நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது. பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.
புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.
குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும்போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் , இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.
குளிக்க மிக நல்ல நேரம் – சூரிய உதயத்திற்கு முன்
குளிக்க மிகச் சிறந்த நீர் – பச்சை தண்ணீர்.
குளித்தல் = குளிர்வித்தல்
குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.
இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்
ஒரு கழுதை மரத்தில் கட்டப்பட்டிருந்தது.
ஒரு இரவு ஒரு பேய் கழுதையை கயிற்றை அறுத்து விடுவித்தது.
கழுதை சென்று ஒரு விவசாயியின் நிலத்தில் பயிர்களை நாசம் செய்தது.
இதனால் கோபமடைந்த விவசாயியின் மனைவி,
கழுதையைச் சுட்டு கொன்றாள்.
*கழுதையின் உரிமையாளர் இழப்பால் மிகவும் துயரமடைந்தார்.
பதிலுக்கு, விவசாயியின் மனைவியைச் சுட்டுக் கொன்றார்.
தன் மனைவியின் மரணத்தால் கோபமடைந்த விவசாயி, அரிவாளை எடுத்து கழுதையின் உரிமையாளரைக் கொன்றார்.
கழுதையின் உரிமையாளரின் மனைவி மிகவும் கோபமடைந்து, அவளும் அவளுடைய மகன்களும் விவசாயியின் வீட்டைத் தீக்கிரையாக்கினர்.
விவசாயி, தனது வீடு சாம்பலாக மாறியதைப் பார்த்து, மேலே சென்று அந்தக் கழுதையின் உரிமையாளரின் மனைவி மற்றும் குழந்தைகள் இருவரையும் கொன்றார்.
கடைசியாக, விவசாயி வருத்தத்தில் மூழ்கியபோது,
பேயிடம் அது ஏன் அனைவரையும் கொன்றது என்று கேட்டான்.
பேய் பதிலளித்தது,
"நான் யாரையும் கொல்லவில்லை.
கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஒரு கழுதையை நான் விடுவித்தேன்.
உங்களுக்குள் இருந்த பிசாசை விடுவித்தவர்கள் நீங்கள் அனைவரும் தான்,
இதன் விளைவாக நடந்த அனைத்தும் மோசமானவை." என்றது பேய்....
விஜய்காந்திடம் சேர்ந்து நடித்த ஒரு சமயத்தில் அருண்பாண்டியன் தனக்கு சினிமா இயக்கும் ஆசை இருப்பதை சொல்லி இருக்கிறார்.
"நிச்சயம் செய் அருண். நான் நடித்துக்கொடுக்கிறேன்" என அப்போது சொல்லி இருக்கிறார். சில வருடங்கள் கழித்து அருண்பாண்டியன் தனது நூறாவது படத்தை தானே தயாரித்து, நடித்து, இயக்கப்போவதாக சொல்ல தான் கொடுத்த வாக்குப்படி போலீஸ் ஆபிசராக கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்கிறார் விஜயகாந்த். அந்தப்படம் தான் 'தேவன்.
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த வடிவுக்கரசி தான் சொந்தப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் விஜய்காந்த் நடிக்க வேண்டும் எனவும் கேட்கிறார். அது 'நூறாவது நாள்' படப்பிடிப்பு தளம். அங்கு மோகனும் இருந்திருக்கிறார். விஜய்காந்தோ வடிவுக்கரசியிடம் "மோகன் தான் இப்போ பீக்ல இருக்கார். அவர்க்கிட்ட கால்ஷீட் கேளுங்க" என ஐடியா சொல்ல மோகனோ படுபிஸி. கால்ஷீட் இல்லாமல் திரும்பவும் விஜய்காந்திடம் வர அவர்ரவடிவுக்கரசிக்கு நடித்துக்கொடுத்தப்படம் தான் 'அன்னை என் தெய்வம்'.
கலைஞரின் மருமகன் அமிர்தம். எம்.ஜி.ஆர் காலங்களில் படங்களை இயக்கியவர். ஜெய்சங்கர், மு.க.முத்து படங்களை இயக்கிய அவர் கடைசியாக இயக்கிய படம் 'தூக்குமேடை'. அவர் எண்பது கால இளைஞர்களோடு பணி புரிய ஆசைப்பட்டு விஜய்காந்திடம் ஒரு கதை சொல்கிறார். அந்தக்கதை அவருக்கு பிடித்து விடுகிறது. அப்போது பானுப்ரியா படம் தயாரிக்கக்கேட்க இருவரின் ஆசையையும் நிறைவேற்ற நடித்தது தான் 'சிறையில் பூத்த சின்ன மலர்.'
ஏவிஎம் சகோதரர்களில் எம்.குமரன் மட்டும் தனித்து வந்து படமெடுக்க ஆசைப்பட்டு விஜய்காந்திடம் கால்ஷீட் கேட்கிறார். குமரனுக்காக நடித்துக்கொடுத்த படம் 'வெள்ளைப்புறா ஒன்று'.
எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் மறைமுகமாக திரைப்படங்களில் பிரச்சார பீரங்கிகளாய் சில நடிகர்கள் இருந்தனர். ராதாரவி, தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், டி.ராஜேந்தர், சந்திரசேகர், ராமநாராயணன் இப்படி. இதில் நகைச்சுவை நடிகரான எஸ்.எஸ்.சந்திரன் படம் தயாரிக்க ஆசைப்பட்டு கேட்க ராம.நாராயணன் இயக்கினார். அதில் விஜய்காந்த் தானும் பங்கேற்பதாக ஒரு கௌரவ வேடத்தில் நடித்துக்கொடுத்தார். அதற்கு எஸ்.எஸ்.சந்திரனிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கிக்கொள்ள வில்லை. டி.ஆர் இசையமைத்த அந்தப்படம் 'எங்கள் குரல்'.
தாணு இயக்குனராக ஆசைப்பட 'தெருப்பாடகன்', மணிவண்ணன் தயாரிக்க ஆசைப்பட 'சந்தனக்காற்று', ஜெயப்ரதாவுக்கு கர்நாடக எம்.எல்.ஏ ரமேஷ் மூலம் 'ஏழைஜாதி', இயக்குனர் ரங்கராஜ் தயாரிக்க 'தர்மம் வெல்லும்', மணிரத்னத்துக்கு 'சத்ரியன், இளையராஜா-கங்கை அமரனுக்கு 'கோவில் காளை', பழ.கருப்பையாவுக்கு 'பொறுத்தது போதும்', சங்கிலி முருகனுக்கு 'கரிமேடு கருவாயன்', பெரியமருது, பாரதிராஜாவுக்கு 'தமிழ்செல்வன்', அவரது மைத்துனர் இயக்குனர் மனோஜ்குமார் தயாரிக்க 'ராஜ்ஜியம்',.......
தனது கூடவே இருந்த ரசிகர் மன்ற நிர்வாகியான ராமு.வசந்தனை 'தாயகம்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக்கியதும் விஜய்காந்த் தான்.பல வருடங்களாக தனது உதவியாளராக இருந்த எஸ்.கே.சுப்பையாவை தயாரிப்பாளராக்கி அவர் நடித்தப்படம் தான் 'பெரியண்ணா'. அதில் கிடைத்த பணத்தை பணமாக கொடுத்தால் செலவாக்கி விடுவார் என வீடாக வாங்கிக்கொடுத்தவரும் விஜய்காந்த் தான்.
தனது சொக்கத்தங்கம் படத்தை இயக்க சேரன் சம்பளப்பிரச்சினையில் ஒதுங்கிக்கொள்ள வாய்ப்பின்றி இருந்த பாக்யராஜை அழைத்து மறுப்பின்றி இயக்க வைத்தார்.
இவ்வளவு ஏன்?....விஜய்காந்த் நடிக்க வந்த புதிதில் சண்டைக்காட்சிகளுக்காக ஆரம்பக்காலத்தில் மாடக்குளம் தர்மலிங்கத்திடம் சிலம்பம் கற்றுக்கொண்டிருந்தார். தன் சிலம்ப ஆசானையும் விடவில்லை விஜயகாந்த். அவரையும் தயாரிப்பாளராக்கி அவர் நடித்துக்கொடுத்தப்படம் தான்
'ஏமாறாதே...ஏமாற்றாதே.....'
150 படங்களில் நடித்தாலும் பல சிறிய ஆட்களை தயாரிப்பாளராக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் விஜய்காந்துக்கு இருந்தது.
ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான்.
அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.
அவனிடம் சங்கு ஒன்று இருந்தது.
ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.
அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான்.
நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
“இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள்.
பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன்.
மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது.
உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன்.
தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான்.
அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல.
அதற்குத் திறமை வேண்டும்.
நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான்.
“எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.
நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன்.
நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன்.
“இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம்.
நீயும் வா,” என்றான் திருடர் தலைவன்.
இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர்.
இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
எங்கும் இருட்டாக இருந்தது.
அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர்.
திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர்.
அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது.
திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது.
ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு.
அது கத்தாது என்று சொல்ல நினைத்தான்.
கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம்.
“சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான்.
இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன்.
சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான்.
ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான்.
வலிமையாக ஊதினான்.
சங்கோசை எங்கும் கேட்டது.
அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர்.
பிறகு என்ன?
பிச்சைக்காரனை கூட்டுச் சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர்.
இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி.