·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1725
  • More

Beautiful birds

Comments (0)
Login or Join to comment.
  • 9
  • 37
·
Added joke

அவரு ஒரு தடவை என்னை பெண் பார்க்க வந்திருந்தார்!!

நான்தான் பிடிக்கலை என்று சொல்லி நிராகரித்து விட்டேன்!

இப்ப பாருங்க!!

கணவன் மைண்ட் வாய்ஸ் - அட சண்டாளன்!! !! அந்த சந்தோசத்தை இன்று வரை கொண்டாடி கொண்டு இருக்கான்!

கொடுத்து வைத்தவன்!

நான் வசம்மா மாட்டிகிட்டேன்!!

  • 38
·
Added a post

மூலவர் : மகாகாளநாதர், காளகண்டேஸ்வரர்

அம்மன் : பயக்ஷர்ம்பிகை, அச்சம் தவிர்த்த நாயகி

தல விருட்சம் : மருதமரம், கருங்காலி

தீர்த்தம் : மாகாள தீர்த்தம்

புராண பெயர் : திருவம்பர் மாகாளம், கோயில் திருமாகாளம்

ஊர் : திருமாகாளம்

மாவட்டம் : திருவாரூர்

ஸ்தல வரலாறு:

63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் நடத்திய யாகத்துக்கு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும். சோமாசியார் தான் நடத்தும் யாகத்துக்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்துக்கு வருவதாக வாக்களித்தார். இறைவனே நேரடியாக வருவதால், நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது. சோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்திய சோமயாகத்துக்கு இறைவன் புலையர் உருவில் நேரில் எழுந்தருளினார்.

நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாகப் பிடித்துக்கொண்டு தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி ஆகியவற்றை சுமந்துகொண்டு அவர் வருவதைப் பார்த்த அந்தணர்கள், புலையர் வந்ததால் யாகம் கெட்டுவிட்டது என்று கூறி ஓடிவிடுகின்றனர். தந்தைதான் இவ்வாறு வருகிறார் என்பதை சோமாசிமாற நாயனாருக்கு விநாயகர் குறிப்பாக உணர்த்தி அச்சத்தைப் போக்கினார். ஆகையால், வந்திருப்பது இறைவன் என்று தெரிந்துகொண்ட சோமாசிமாற நாயனார், தனது மனைவியுடன் பறையர் தம்பதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுக்கிறார்.

இறைவனும் தனது புலையர் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமாற நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார். மறுநாள் மக நாளில் அவரைக் கண்டு பயந்து யாகத்திலிருந்து ஓடியவர்களுக்கெல்லாம் காட்சி கொடுத்து அருளினார். சோமாசிமாற நாயனாருக்கு இறைவன் வந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்திய அவ்விநாயகரை அச்சந்தீர்த்த விநாயகர் என்று அழைக்கின்றனர்.

சோமாசிமாறருக்குக் காட்சிக் கொடுத்து அருள்புரிந்த மூர்த்தமே “காட்சி கொடுத்த நாயகர்” எனப் போற்றப்படுகின்றது. இறைவன் யாகத்திற்கு நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள்குடம் பொங்கிய இடம் “பொங்கு சாராயநல்லூர்” (இன்று வழக்கில் “கொங்கராய ‘ நல்லூர்”) என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் “அடியுக்க மங்கலம்” (இன்று வழக்கில் “அடியக்கமங்கலம்”) என்றும், இறந்தக் கன்றை ஏந்திய இடம் “கடா மங்கலம்” என்றும் இன்றும் வழங்கப்படுகின்றது.சோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கு அம்பர் பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது. இன்று அந்த இடம் “பண்டாரவாடை திருமாளம்” என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தான் நடைபெறுகிறது.

அம்பர், அம்பாசுரன் ஆகிய அரக்கர்களை காளி கொன்ற பிறகு இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்த தலம். அம்பராசுரர்களை அழித்து காளி வந்து வழிபட்டதால் இத்தலம் ‘அம்பர் மாகாளம்’ என்று அழைக்கப்படுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கு

முகவரி:

அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில்,

திருமாகாளம் – 609 503,

திருவாரூர் மாவட்டம்

:

+

அமைவிடம்:

மயிலாடுதுறை – திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே அரிசிலாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. அம்பர் பெருந்திருக்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம், மாகாளநாதர் கோவிலுக்கு கிழக்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

  • 46
·
Added a post

உண்மையைக் கடைப்பிடிக்கிறவர்கள், சொன்னபடி செய்வதில் மிகுந்த சிரத்தை காட்டுவார்கள்; பிறரிடமிருந்தும் இந்தச் சிரத்தையை எதிர்பார்ப்பார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணர், சிறிய விஷயங்களில் கூட இந்தச் சிரத்தையைக் காட்டினார். ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வதாகச் சொல்லிவிட்டால் அதைச் செய்தே முடிப்பார். சொல்வதும் செய்வதும் ஒன்றாயிருக்கவேண்டு மென்பது இவர் கருத்து. உண்மை யென்பதும் இதுதானே? கூறுகிறார்:- ஒருவன் உண்மையைக் கடைப் பிடிக்காவிட்டால் அவன் எல்லாவற்றையும் இழந்து விடுகிறான். தோட்டத்திற்குப் போகிறேன் என்று அகமாத்தாக நான் சொல்லி விட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப் போவதற்கு அவசியமில்லா விட்டால்கூட நான் போயே ஆகவேண்டும். அப்படிப் போகா விட்டால் நான் உண்மையினின்று பிறழ்ந்தவனாவேன். ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய உண்மை நெறி எவ்வளவு கடினமானது!

தன்னம்பிக்கை யுடையவர்கள், கடவுள் நம்பிக்கை யுடையவரா யிருப்பார்கள். இங்ஙனமே தன்னம்பிக்கையானது, கடவுளின் உண்மையிலே நம்பிக்கை கொள்ளும்படி செய்கிறது. கடவுளைக் காட்டுவீர்களா? என்று விவேகானந்தர் கேட்டபோது காட்டுவேன் என்றும், கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்றபோது ஆம்; பார்த்திருக்கிறேன்; இப்பொழுதும் பார்க்கிறேன்; உன்னை இங்கே எப்படிப் பார்க்கிறேனோ அதைவிட அதிகமாகப் பார்க்கிறேன் என்றும் கூறினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இந்த உறுதியான வாசகந்தான், கடவுளின் உண்மையிலே கொண்டிருந்த இந்தத் திட நம்பிக்கைதான், விவேகானந்தரை இவரிடத்தில் ஈடுபடுத்தியது.

ஸ்ரீராமகிருஷ்ணர், தாய்மொழிப் பற்று நிரம்ப உடையவர். தம் எதிரில் தமக்குத் தெரியாத ஆங்கிலத்தில் யாராவது பேசுவார்க ளானால் அதை நாசூக்காகக் கண்டித்து விடுவார். ஒரு சமயம், வங்க இலக்கியத்திற்குப் புதியதொரு ஜீவகளையை ஏற்படுத்திக் கொடுத்த வரும், அரசாங்க உத்தியோகத்திலிருந்தவருமான பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஸ்ரீ ராமகிருஷ்ணரைத் தரிசிக்க முதன் முதலாக வந்தார். அவருடன் கூட வந்திருந்த நண்பர், இவர்தான் பங்கிம் என்று பங்கிம் சந்திரரை அறிமுகப் படுத்தி வைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர், பங்கிம்! உங்களைக் கூனலாக்கி விட்டது, வளையச் செய்துவிட்டது எது? என்று சிரித்துக் கொண்டே கேட்டார். பங்கிம் என்றால் வங்க பாஷையில் கோணல் அல்லது வளைவு என்று அர்த்தம். பூட் தான் இந்தக் கோணலுக்குக் காரணம். நமது வெள்ளை எஜமானர் களுடைய பூட் உதைகள் என் உடம்பைக் கூனலாக்கி விட்டன என்றார் பங்கிம்சந்திரர். பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணர், கிருஷ்ணபகவான் ஏன் சியாமள வர்ணமாயிருக்கிறார் என்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். சொல்லி முடித்ததும், இவர் சொன்னதைப் பற்றி பங்கிம் சந்திரரும் அவருடைய நண்பரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன, ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறீர்களா? என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். நீங்கள் இதுகாறும் சொன்னதைப் பற்றி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார்கள் அவர்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே பின்வரும் கதையைக் கூறினார்:-

ஒரு சமயம் ஓர் அம்பட்டன் ஒரு பெரிய மனிதருக்கு க்ஷவரம் செய்து கொண்டிருந்தான். அப்படிச் செய்து கொண்டிருக்கிற போது, ஏதோ தவறுதலாக, அந்தப் பெரிய மனிதருடைய முகத்திலே காயம் பட்டுவிட்டது. பெரிய மனிதர், கோபமேலிட்டவராய் டாம் என்றார். அந்த அம்பட்டனுக்கோ இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை. தன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டான். மேற்கொண்டு க்ஷவரம் செய்யவில்லை. இப்பொழுது டாம் என்று சொன்னீர்களே, அதனுடைய அர்த்தம் என்ன? என்று கேட்டான். அந்தப் பெரிய மனிதர் வீணாகப் பேசாதே. அதற்கு அர்த்தமொன்றுமில்லை. கொஞ்சம் ஜாக்கிரதையாக க்ஷவரம் செய், அவ்வளவுதான் என்றார். அம்பட்டன் விடுகிற பெயர் வழியாயில்லை. டாம் என்ற வார்த்தைக்கு நல்ல அர்த்த மாயிருந்தால், நான் டாம், எங்கப்பா டாம், எங்கள் முன்னோர்களெல்லோரும் டாம்கள். ஆனால் அந்த வார்த்தைக்குக் கெட்ட அர்த்தமாயிருந்தால் நீங்கள் டாம், உங்களப்பா டாம், உங்கள் முன்னோர்களெல்லோரும் டாம், டாம், டாம் என்றான் அவன்,

ஒரு பாஷையைத் தெரியாதவர் முன்னிலையில் அந்தப் பாஷையில் பேசக் கூடா தென்றும், அப்படிப் பேசுவது மரியாதைக் குறைவு என்றும், நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக இந்த கதையைச் சொல்லிக் காட்டினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

  • 44
·
Added a post

எழுத்தாளர் அகஸ்தியன் என்கிற கடுகு அவர்களின் நகைச்சுவைக் கட்டுரை.

- கடுகு -

என் அருமை மனைவி கமலாவுக்கு உள்ள எத்தனையோ நல்ல வழக்கங்களில் ஒன்று,தினமும் என்னைக் கேட்டு, எனக்கு இஷ்டமான சமையலைச் செய்வது. அதே சமயம்

அவளுக்கு இஷ்டமான சமையலாகவும் அது அமைந்து விடும். எப்படி?

நேற்றுக் காலை நடந்த சம்பாஷணையை அப்படியே தருகிறேன். கமலாவின் ‘நோஹௌ’வை யாவரும் தெரிந்து கொள்ளட்டும்!

‘‘ஏன்னா, உங்களைத்தானே, இன்னிக்கு என்ன சமையல் செய்யட்டும்? வீட்டில் கத்தரிக்காய்தான் இருக்குது. கூட்டு செய்யட்டுமா?’’ என்று கேட்டாள்.

‘‘கூட்டா கமலா... வேண்டாம். எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு செய்யேன்’’ என்றேன்.

‘‘எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்புதானே, செய்துடறேன். ஆனால் ஓண்ணு, அப்புறம் ‘எங்கம்மா செய்யறமாதிரி இல்லை’ அப்படி இப்படின்னு ஆடக் கூடாது’’

‘‘வாயைத் திறக்காமல் சாப்பிடறேன்!’’

‘‘இல்லே, இப்படித்தான் சொல்வீங்க, அப்புறம் ஆயிரம் நங்கு நடிப்பீங்க... எண்ணெய்க் குழம்பு சமாசாரமே வேண்டாம்.’’

‘‘அப்படியானால் கத்திரிக்காயைச் சுட்டுப் புளி மசியல் செய்யேன்.’’

‘‘ஐயோ மசக்கையே! கேஸ் அடுப்புலே கத்தரிக்காயைச் சுட முடியுமா? அதற்குக் கரி அடுப்பு வேணும். வருஷத்திலே ஒரு நாள் கத்தரிக்காயைச் சுடுவதற்கு நான் கரி அடுப்பையும் ஒரு மூட்டைக் கரியையும் கட்டிக் காப்பாத்த வேண்டுமா?... உங்க அக்கா சரோஜாதான் இன்னும் கரி அடுப்பை வெச்சுண்டு இருக்கா... ஆயிரம் சம்பாதிச்சாலும் கேஸ் அடுப்பு வாங்க அவளுக்கு மனசு வராது... அக்காகிட்டே சீராடப் போகும் போது தினமும் சுட்டு மசியல் பண்ணிச் சாப்பிட்டு விட்டு வாங்க...’’

‘‘போகட்டும் கமலா, பொடி போட்டுக் கறி பண்ணிடு. அட்டகாசமாய் இருக்கும்.’’

‘‘வீட்டைத் தலைகீழாத் திருப்பினால் கூட ஒரு பிடி தனியா கிடையாது. நானும் நாலு நாளாகத் தனியா வாங்கிண்டு வாங்கோன்னு கத்திண்டு இருக்கேன். தனியா, சேர்ந்தான்னு பேத்தல் சிலேடை ஜோக் அடிச்சுண்டு மசமசன்னு உட்கார்ந்துண்டு இருந்தால் எப்படி பொடி போட்டுக் கறி பண்றது?’’

‘‘இப்போ என்னைக் கடைக்குத் தொரத்தாதே, கமலா... அப்போ, கத்தரிக்காயை வெறுமனே வதக்கி வச்சுடு.’’

‘‘வெறும் வதக்கல்தானே, ஆகா, பண்ணிடறேன். ஆனால் உங்கள் பொண்ணு இருக்காளே, ராங்கிக்காரி! வாயிலே வெக்க மாட்டாள். நறுக்கா இலையிலேருந்து ஒதுக்கிடுவா... இந்தப் பிடிவாதமெல்லாம் அப்படியே உங்கம்மா தான். கல்யாணம் ஆன புதுசுலே இப்படித்-தான் வதக்கலை உங்க அம்மா இலையிலே போட்டுட்-டேன். அப்படியே விஷம் மாதிரி அதை ஒதுக்கி வெச்-சுட்டதும் இல்லாம ஒரு ‘பாட்டு’ வேற பாடினாளே... எத்தனை வருஷமானாலும் மறக்குமா? அப்போ உங்கம்மா பாடினாள்... இப்போ உங்க பொண்ணு பாடுவா... தாராளமா வதக்கல் பண்றேன். பாட்டைக் கேட்கணும்னு என் தலையிலே எழுதியிருந்தால் அதை எந்த ரப்பராலும் அழிக்க முடியாது.’’

‘‘இதுக்காக ஏன் கண்ணைக் கசக்கறே, கமலா... கத்தரிக்காய் போட்டு மோர்க் குழம்பு பண்ணிவிடு.’’

‘‘ஐயோ... இந்த மனுஷருக்கு வர்ற யோசனையைப் போய் யாரிடம் சொல்வேன்! நேத்துச் சாயங்காலம் உங்க ஆபீஸ் பிரண்ட்ஸை இழுத்துண்டு வந்து காப்பி போடச் சொன் னீங்க... அதனால் நேத்து பால் ஷார்ட்... தயிர் தோய்க்கவே இல்லை. சாப்பிடறதுக்கே மோர், ஒன்ஸ்மோர் தான்! இந்த அழகில் மோர்க் குழம்பு, தயிர்ப் பச்சடி என்று சொல்றீங்க...!’’

‘‘விடு கமலா ரஸவாங்கி பண்ணிடேன்.’’

‘‘கோலி குண்டு சைஸ்லே கத்தரிக்காய் வாங்கிண்டு வந்திருக்கீங்க. நீள கத்தரிக்காயில்தான் பண்ண முடியும். குண்டு கத்தரிக்காயில் பண்ணால் வாயில் வைக்க வழங்-காது. எனக்கென்ன பண்ணிடறேன்...’’

‘‘ரஸவாங்கி வேண்டாம் கமலா. கத்தரிக்காய்க் கூட்டு பண்ணிடு’’

‘‘கத்தரிக்காய் கூட்டா... ஊம், உங்க இஷ்டப்படியே கத்தரிக்காய் கூட்டு பண்றேன். உங்களுக்குப் பிடிச்சதைப் பண்றதை விட எனக்கு வேறு என்ன வேலை?’’

இப்படியாக நேற்று காலை ‘என்’ (அதாவது கமலாவின்) இஷ்டப்படியே கத்தரிக்காய் கூட்டு செய்தாள் கமலா!

  • 44
·
Added a post

ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பிராமணர் வசித்து வந்தார். ஒரு சடங்கு சடங்கு செய்த பிறகு அவருக்கு ஒரு ஆடு பரிசாக வழங்கப்பட்டது. அதன் பிறகு அந்த பிராமணர் தனது வீட்டிற்கு பயணத்தைத் தொடங்கினார். வழியில் ஆட்டை கட்டுப்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க, பிராமணர் ஆட்டைத் தனது தோள்களில் சுமந்து சென்றார். அவர் ஒரு சில தூரம் மட்டுமே சென்றபோது, ​​மூன்று முரடர்கள் பிராமணர் ஆட்டை சுமந்து செல்வதைக் கண்டனர். பிராமணர் அவர்களைக் கவனிக்காதபடி ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் மிகவும் பசியுடன் இருந்தனர், பிராமணர் தனது ஆட்டுடன் தனியாக இருப்பதை அவர்கள் அறிந்தார்கள்.

அவர்கள் விவாதிக்கத் தொடங்கினர். முதல் முரடன், "இந்தப் பசியிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம். பிராமணரை ஏமாற்றி ஆட்டைத் திருடிவிட்டால், ஆடு நம் மூவருக்கும் மிகவும் அருமையான உணவைத் தரும். எனக்கு ஒரு திட்டம் இருக்கிறது. நான் சொல்வதைக் கேளுங்கள்" என்று கூறி, மற்ற இருவரின் காதுகளிலும் திட்டத்தைக் கிசுகிசுத்தான்.

திட்டத்தின் படி, அவர்கள் பிராமணரின் பின்னால் குனிந்தனர். முதல் முரடன் பிராமணரின் பாதையில் நின்றான். பிராமணர் தனது தோளில் ஆட்டுடன் அவரை அணுகியபோது, ​​அவர் அவரிடம், "ஓ புனித பிராமணரே, நீங்கள் உங்கள் தோளில் ஒரு நாயை சுமந்து செல்வதை நான் காண்கிறேன். உங்களைப் போன்ற ஒரு பக்தியுள்ள நபர் ஏன் தனது தோளில் ஒரு நாயை சுமந்து செல்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் பிராமணர் மிகவும் கோபமடைந்து, "உனக்கு கண்கள் இல்லையா? நாய்க்கும் ஆட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உன்னால் பார்க்க முடியவில்லையா?" என்று பதிலளித்தார்.

பின்னர் திருடன் தான் தனது பங்கை ஆற்றியதாக நினைத்து அவனிடம், "மன்னிக்கவும், ஐயா, ஆனால் நான் என் கண்களால் பார்ப்பதை மட்டுமே சொல்கிறேன். தெளிவாக, உயர் கல்வி கற்றவராக இருப்பது எல்லாம் இல்லை" என்று கூறினான். பிராமணர் தனது பேச்சைக் கேட்பதை உறுதிசெய்து கொண்டு, முரடன் முணுமுணுத்தான்.

அந்த பிராமணர் தனது பயணத்தைத் தொடர்ந்தார், அந்த மனிதனின் முட்டாள்தனத்திற்காக அவரை சபித்தார். ஆனால் அவர் சிறிது தூரம் சென்றதும், இரண்டாவது முரடன் அவரை அணுகினார். பின்னர் அவர் பிராமணரிடம், "மதிப்பிற்குரிய ஐயா, நீங்கள் எவ்வளவு முட்டாள்! இந்த இறந்த கன்றை உங்கள் தோளில் எப்படி சுமக்க முடியும்? ஒரு பிராமணர் இறந்த விலங்கை சுமப்பது அவமானகரமானதல்லவா?" என்று கூறினார். பிராமணர் கோபமடைந்து அவரை நோக்கி, "சற்று முன்பு நான் சந்தித்த மற்றொரு முட்டாள் மனிதனைப் போலவே நீங்களும் குருட்டு மனமுள்ளவரா? அது ஒரு ஆடு, இறந்த கன்று அல்ல என்று உங்களுக்குத் தெரியவில்லையா?" முரடன் அப்பாவியாக நடித்தார். அவர் பிராமணரிடம், "என்னை மன்னியுங்கள் ஐயா. நான் பார்ப்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று கத்தினார்.

பிராமணர் இப்போது கொஞ்சம் குழப்பமடைந்தார். அது உண்மையில் ஒரு ஆடுதானா என்பதை உறுதிப்படுத்த அவர் விலங்கைப் பார்த்தார். பிராமணர் இன்னும் சிறிது தூரம் சென்றிருந்தார். சிறிது நேரத்தில், திட்டமிட்டபடி, மூன்றாவது முரடன் தோன்றி, "நீ ஒரு உண்மையான பிராமணனா?" என்று கேட்டான். பிராமணர், "ஆம், நான் தான். அது என்ன கேள்வி?" முரடன், "ஒரு புனிதமான மனிதன் எப்படி இவ்வளவு வெட்கக்கேடான செயலைச் செய்ய முடியும்? பன்றியை உன் தோள்களில் சுமக்க உனக்கு எவ்வளவு தைரியம்? உன்னைப் போன்ற புனிதமான ஒருவர் இந்த விலங்கைத் தொடக்கூடக் கூடாது, அதை உன் தோள்களில் சுமப்பது ஒருபுறம் இருக்கட்டும். யாராவது இதைச் செய்வதைப் பார்ப்பதற்கு முன்பு அதை கீழே போடு!" என்று கத்தினார்.

இந்த முறை, பிராமணர் பதட்டமடைந்தார். வழியில் சந்தித்த ஒவ்வொருவரும் தனது தோள்களில் வெவ்வேறு விலங்கைக் கண்டனர். முதல் நபர் ஒரு நாயையும், இரண்டாவது நபர் இறந்த கன்றையும், இப்போது ஒரு பன்றியையும் பார்த்தார். அவர் ஒரு ஆட்டைச் சுமந்து செல்வதை மூன்று நபர்களும் எப்படிப் பார்க்க முடியாது? அவர் ஒரு உருவத்தை மாற்றும் பூதத்தை சுமந்து கொண்டிருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார், அது எப்போதும் வடிவம் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு அரக்கனைத் தோள்களில் சுமந்து செல்வதை நினைத்த மாத்திரத்தில் பிராமணரின் முகம் வெளிறியது. உயிருக்கு பயந்து, அவர் ஆட்டை கீழே போட்டுவிட்டு, முடிந்தவரை வேகமாக வீட்டிற்கு ஓடினார்.

அந்த முரடர்கள் ஆட்டைத் தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ஆட்டைக் கொன்று அதன் இறைச்சியை விருந்து வைத்தனர்.

கதையின் நீதி என்னவென்றால்: திரும்பத் திரும்பப் பேசப்படும் பொய் உண்மையாகத் தோன்றும்.
  • 43
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: முன்கோபத்தை குறைப்பது நல்லது. மகனின் வேலை, மகளின் திருமணம் தொடர்பாக டென்ஷன் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பீர்.

மிதுனம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்.

கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு.

கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிம்மதி தரும். வியாபாரத்தில் போட்டியை எளிதாக சமாளிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி, சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. கோப்புகளை கவனமாக கையாளவும்.

விருச்சிகம்: மனக்குழப்பம் நீங்கி பேச்சில் தெளிவு பிறக்கும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. அம்மாவின் உடல்நலம் நிம்மதி தரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு. யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர்.

தனுசு: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவார்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர். பங்குதாரரை அனுசரித்து செல்லவும்.

கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். சொந்தங்கள் உங்களை பெருமையாக பார்ப்பர். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உங்கள் உழைப்கேற்ற அங்கீகாரம் கிட்டும். புதிய பதவி கிட்டும்.

மீனம்: தலைவலி, சோர்வு வரும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். வியாபாரம் சிறக்கும்.

  • 104
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை 11.6.2026.

இன்று மாலை 06.29 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று அதிகாலை 04.14 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று அதிகாலை 12.22 வரை சௌபாக்கியம். பின்னர் இரவு 09.51 வரை ஷோபனம். பிறகு அதிகண்டம்.

இன்று காலை 07.22 வரை பவம். பின்னர் மாலை 06.29 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று அதிகாலை 05.51 வரை மரணயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=540&dpx=2&t=1781145728

நல்ல நேரம்:

காலை : 10.30முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 107

இயக்குநர் பாரதிராஜா காலமானார்.

  • 103
·
Added a post

சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 சிறப்பு - 1நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13. சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.

14. சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.

15. சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் போற்றி என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார்.

இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி , திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.

அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

  • 108
  • 105

Good Morning...

  • 105
  • 185
·
Added a post

ராமாயணத்தில் அனுமன் தன் பலத்தையே மறந்து நின்றபோது, ஜாம்பவான் அவனுக்கு அவனது ஆற்றலை நினைவுபடுத்துகிறார். அதன் பிறகு அனுமன் எப்போதுமே "ராம நாமம்" என்ற ஒலியை உச்சரித்துக் கொண்டேதான் கடலைத் தாண்டுவது முதல் போர்க்களம் வரை அசாத்தியமான சாதனைகளைச் செய்தார்.

இதை வெறும் பக்தி என்று மட்டும் பார்க்காமல், நவீன ஒலியியல் மற்றும் நரம்பியல் கோணத்தில் பார்த்தால் வியக்கத்தக்க உண்மைகள் விளங்கும்!

ஒலியின் அதிர்வுகள்:

நாம் ஒரு குறிப்பிட்ட வார்த்தையைத் திரும்பத் திரும்ப உச்சரிக்கும்போது, அது நம் உடலுக்குள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையை உருவாக்குகிறது. 'ரா' மற்றும் 'ம' என்ற ஒலிகள் இணையும்போது, அவை மனித உடலின் மிக முக்கிய ஆற்றல் மையங்களான மணிபூரக மற்றும் அனாகத சக்கரங்களைத் தூண்டுகின்றன. இதை நவீன அறிவியல் 'Vibrational Medicine' அல்லது ஒலி சிகிச்சை என்கிறது.

எண்டோர்பின் மற்றும் மன அமைதி:

"ராம" என்ற மந்திர ஒலியைத் தொடர்ந்து உச்சரிக்கும்போது, நம் மூளையில் ஆல்ஃபா அலைகள் உருவாகின்றன. இது உடலுக்குள் இருக்கும் அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோனான 'கார்டிசோல்' அளவைக் குறைத்து, மகிழ்ச்சியையும் மனவலிமையையும் தரும் 'எண்டோர்பின்' சுரப்பைத் தூண்டுகிறது. அனுமனுக்குள் இருந்த எல்லையற்ற ஆற்றலும், பயமின்மையும் இந்த அசாத்தியமான மன ஒருமுகப்படுத்தலால் உருவானதுதான்.

"நாதத்தின் உள்ளே நலிந்தெழுஞ் சோதியை" என்று சித்தர்கள் ஒலியின் ஆற்றலைப் பற்றிப் பாடியுள்ளனர். ஓங்காரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த ஒலிகளை முறைப்படி உச்சரிக்கும்போது, அது உடலின் ஒவ்வொரு செல்லையும் புத்துயிர் பெறச் செய்கிறது. சுயமரியாதையும், தெளிந்த புத்தியும் கொண்ட ஒரு மனிதனுக்கு அவனது சொந்த மனதின் ஒலியே மிகப்பெரிய ஆயுதமாக மாறும்.

புராணங்கள் காட்டும் மந்திரங்கள் என்பவை வெறும் வார்த்தைகள் அல்ல; அவை மனித உடலையும் மனதையும் உச்சக்கட்ட ஆற்றலுக்குக் கொண்டு செல்லும் மிகத் துல்லியமான ஒலியியல் சூத்திரங்கள்.

  • 192
·
Added a post

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் மருந்து நிறுவன அதிபர் வீரேன் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் கடந்த 12 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

அந்த வகையில் நீடா அம்பானி திருமணத்தின் முந்தைய கொண்டாட்டத்தின் போது அவர் அணிந்திருந்த ஆரம் பெரிய மரகத பச்சை கல் பதிக்கப்பட்ட நெக்லஸ் விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த ஆரத்தின் விலை சுமார் ரூ 600 கோடி என்கிறார்கள். அது போல் நீடா அம்பானி ஒரு வைர மோதிரத்தையும் அணிந்திருந்தார்.

இந்த மோதிரம் முகலாயர் காலத்தைச் சேர்ந்தது. இதன் விலையும் ரூ 55 கோடி இருக்கும். நீடா அம்பானி அணிந்திருந்த ஆரம் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களை மட்டும் கவராமல் அதை பார்த்தவர்களையும் கவர்ந்துள்ளது. இதனால் இந்த நகையின் கவரிங்கை ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கல்யாணி கவரிங் நகை கடை தயாரித்துள்ள நகை விற்பனைக்கு வந்துள்ளது.

அந்த நகையின் விலை ரூ 178 மட்டுமே. நீடா அணிந்திருந்ததை போல் இருந்தது. என்ன வித்தியாசம் என்றால் அவர் அணிந்திருந்தது வைரம், இவர்கள் தயாரித்திருப்பது சாதாரண கல். அதிலும் கலர் கலராக நிறைய உள்ளன. 1980களில் நதியா கம்மல், நதியா வளையல், நதியா கொண்டை என பேமஸ் ஆனதை போல் நீடாவின் ஆரமும் தற்போது பிரபலமடைந்துள்ளது.

அது சரி 600 கோடியில் நெக்லஸ் அணிய நாம் எல்லாம் அம்பானி குடும்பமா? என்ன? ஆமா 600 கோடிக்கு எத்தனை பூஜ்யம்?

  • 192
·
Added a post

ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியில், தொலைதூர இடத்திற்கு வியாபாரம் செய்வதற்காக ஒரு வணிகர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் நம்பிக்கைக்குரிய ஆண்கள் குழுவும் பயணம் செய்து கொண்டிருந்தது. ஒருமுறை, அந்த நம்பிக்கைக்குரியவர்களில் சிலர், வணிகர் சாலையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ​​அவரிடமிருந்து எல்லாப் பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிடுவோம் என்று முடிவு செய்தனர். அவர்கள் வாய்ப்புக்காகக் காத்திருந்தனர். வாய்ப்பு வந்தது.

வணிகர் வியாபார விஷயமாக வெளியே சென்றார். அந்த வேலைக்காரர்கள் குழுவும் அவருடன் சென்றனர். அந்த நேரத்தில், விஷயம் ஒரு பயணமாகிவிட்டது. மதியம் மிகவும் சூடாக இருந்தது, அவர்கள் ஒரு இடத்தில் தஞ்சம் புகுந்தனர். வணிகர் ஒரு மரத்தின் நிழலில் தூங்கிவிட்டார். இந்த நேரத்தில், யாரோ "பாம்பு பாம்பு!" என்று கத்தினார். வணிகரின் தூக்கம் கலைந்தது. தூரத்தில் அது ஒரு நாகப்பாம்பு என்பதைக் கண்டார். பாம்பை காயப்படுத்த வேண்டாம் என்று மக்களிடம் கூறினார், சிறிது நேரம் கழித்து பாம்பு ஏற்கனவே அதன் வழியில் எழுந்திருப்பது தெரிந்தது. அவரது ஊழியர்கள் வணிகரிடம் - நீங்கள் பாம்புகளுக்கு எப்படி பயப்படவில்லை? வணிகர் எதுவும் சொல்லவில்லை.

வணிகரின் பயணம் மீண்டும் தொடங்கியது. இரவில், அவர் ஒரு தர்மசாலையில் (சத்திரத்தில்) தூங்கினார். கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்த ஊழியர்கள், வணிகரின் அலறல் சத்தத்தால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அந்த நேரத்தில், வணிகரின் ஆட்கள் சிலர் அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர்.

வியாபாரி அவர்களிடம், - நான் ஏன் பாம்புகளுக்கு பயப்படவில்லை என்று கேட்டீர்கள்! இப்போது கேளுங்கள். பாம்புகள் விஷம் கொண்டவை என்பது அனைவருக்கும் தெரியும். எனவே அவற்றிலிருந்து தப்பிப்பது எளிது. எனவே அவற்றுக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் மனிதர்கள் தங்களுக்குள் விஷத்தை வைத்துக்கொண்டு அதை இனிமையாக வைத்திருப்பதால், அவர்கள் பயப்பட வேண்டும். இப்போது அதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

  • 189
·
Added a post

தர்மர் ராஜசூய யாகம் செய்யத் திட்டமிட்டபோது, யாகத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வரவும், மற்ற நாட்டு மன்னர்களுக்கு அழைப்பு விடுக்கவும் தனது தம்பிகளை அனுப்பினார். அப்போது அங்கிருந்த ரிஷிகள், "புருஷாமிருகம்" என்று அழைக்கப்படும் அபூர்வ விலங்கு ராஜசூய யாகத்திற்கு வர வேண்டியது அவசியம் என்றும், அது அவ்விடம் உலவினால் மட்டுமே யாகம் முழுமையடையும் என்றும் அறிவுரை கூறினார்கள். தர்மர் இதற்கு முன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.

கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே எழுந்து புருஷாமிருகம் பற்றி விவரித்தார். புருஷாமிருகம் என்பது புலியின் உடலும் மனித தலையும் கொண்ட ஒரு விசித்திரமான மிருகம். அது மிக வேகமாக ஓடக்கூடியது, (சில கதைகளில் சிங்க உடலும் மனித முகமும் என்று உள்ளது) அதே சமயத்தில் சிவபக்தியில் சிறந்தது. குபேர வனத்தைப் பாதுகாத்து வரும் அந்த மிருகத்தைப் பிடித்து வருவது மிகவும் கடினமான காரியம் என்று எச்சரித்த கிருஷ்ணர், "பீமா! நீதான் இந்தப் பணிக்குச் சரியான ஆள்" என்று கூறி சில கற்களை பீமனிடம் கொடுத்தார். நேரம் வரும்போது அவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற ரகசிய அறிவுரையையும் அவனிடம் கூறினார். ரிஷிகளும் கிருஷ்ணரும் பீமனுக்கு ஆசி வழங்கி அவனை வனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பீமன் காட்டிற்குச் சென்று புருஷாமிருகத்தைத் தேடி பல இடங்களில் அலைந்து, கடைசியாக அதைக் கண்டுகொண்டான். அந்த மிருகத்தை யாகத்திற்கு வருமாறு அவன் அழைத்தான். ஆனால் அந்த மிருகமோ, இந்த காடு தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இங்கு உள்ள அனைத்தும் தனக்கே சொந்தம் என்றும் கர்ஜித்தது. "இப்போது நீ இங்கே நுழைந்துவிட்டபடியால் நீயும் எனக்குச் சொந்தம், உன்னை நான் சாப்பிடப்போகிறேன்" என்று பீமனை மிரட்டியது. பீமன் தான் வந்த நோக்கத்தைக் கூறி, அதனை மீண்டும் பணிவுடன் அழைத்தான்.

புருஷாமிருகம் பீமனுடன் ஒரு ஒப்பந்தம் செய்தது. இருவரும் ஓட்டப்பந்தயம் செய்திடத் தீர்மானித்தனர். "பீமா! நம் இருவரில் யார் காட்டின் எல்லையை அடைந்து நாட்டிற்குள் முதலில் பிரவேசிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர் ஆவார். நீ முதலில் சென்றால் நீ அழைத்தபடி நான் யாகத்திற்கு வருவேன். ஒருவேளை நான் வெற்றி பெற்றால் உன்னை உயிரோடு விழுங்கிவிடுவேன்" என்றது. பீமனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.

பீமன் ஓடத்தொடங்கிச் சில நாழிகைகள் கழித்தே புருஷாமிருகம் ஓடத் தொடங்கியது. பீமன் நான்கு காத தூரம் கடந்த நிலையில் தான் புருஷாமிருகம் தன்னுடைய முதல் அடியையே எடுத்து வைத்தது. தன் வேகத்தில் அபார நம்பிக்கை கொண்டிருந்த அந்த மிருகம், மிக எளிதாக அசுர வேகத்தில் ஓடி பீமனை நெருங்கியது.

அந்தச் சமயத்தில் கண்ணனின் அறிவுரைப்படி தான் வைத்திருந்த கற்களில் ஒன்றை பீமன் தரையில் போட்டான். அங்கே ஒரு சிவலிங்கம் தோன்றியது. சிவபக்தியில் சிறந்த புருஷாமிருகம் அங்கேயே நின்று அந்த லிங்கத்தை வணங்கியது. (அனுமன் காட்டில் தோன்றி தனது வாலில் இருந்து முடிகளை பீமனிடம் அளித்ததாகவும், ஒவ்வொருமுறை மிருகம் தன்னை நெருங்கும் போதும் அந்த முடிகளை பீமன் தறியில் போட்டதும் அங்கே சிவலிங்கம் தோன்றியதாகவும் சில பதிப்புகளில் உள்ளது)

பிறகு மீண்டும் அது ஓடத் தொடங்கியது. பீமனைப் பிடிக்கும் நேரத்தில் மீண்டும் அவன் ஒரு கல்லைப் போட்டான். இவ்வாறாக அந்த மிருகம் தன்னை நெருங்கும் போதெல்லாம் ஒவ்வொரு கல்லாகப் போட்டு, இறுதியாகக் காட்டின் எல்லையை அடையப் போகும் நேரத்தில் மிருகம் அவனின் காலைப் பிடித்துக்கொண்டது. அப்போது பீமனின் ஒரு கால் காட்டின் எல்லையிலும், மறு கால் நகரத்தின் எல்லையிலும் இருந்தது.

"நீ காட்டைப் கடப்பதற்குள்ளாகவே நான் உன்னைப் பிடித்துவிட்டேன், அதனால் நீ எனக்குத்தான் சொந்தம்" என்று மிருகம் சொல்ல, "இல்லை, என்னுடைய ஒரு கால் நகர எல்லையில் உள்ளது, நான் வெற்றி பெற்றேன்" என்று பீமன் சொல்ல, இருவரும் நீதி வேண்டி தர்மரிடம் சென்றனர்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட தர்மர் சற்று யோசித்தார். பீமன் தன் தம்பியாக இருந்தாலும் அவர் நீதிநெறிப்படி தீர்ப்பு வழங்கினார். "புருஷாமிருகமே! பீமனின் ஒரு கால் எல்லைக்கு வெளியில்தான் பிடிபட்டது. உடல் ரீதியாகப் பார்த்தால் அவனது உடலின் சரிபாதி பாகம் உனக்கே சொந்தம். எனவே நீ காட்டின் எல்லையில் பீமனின் கால் இருந்த அந்தப் பாதியை மட்டும் உண்ணலாம், மற்றப் பாதியை நீ தொடக்கூடாது" என்றார்.

புருஷாமிருகம் சிரித்துக்கொண்டே பீமனை உண்ண நெருங்கிய போது சகாதேவன் குறுக்கிட்டான். "அண்ணா! நீதிப்படி ஒரு பாதி மட்டுமே மிருகத்திற்குச் சொந்தமானது. அதன்படி பார்த்தால், பீமன் அண்ணாவை மிருகம் உண்ணும்போது அவரின் ஒரு பாகத்தில் மட்டுமே வலி இருக்கும் வகையில் மிருகம் அவரை உண்ண வேண்டும். மற்றொரு பகுதியில் வலி ஏற்படக்கூடாது" என்றான். ஆனால் அப்படி ஒரு பாதியில் மட்டும் வலி ஏற்படாமல் உண்ண முடியாது என்பதால், அந்த மிருகம் பீமனை விடுவித்து உரக்கச் சிரித்தது.

"அற்புதம்! தம்பியாக இருந்தாலும் நீதிநெறி தவறாமல் தீர்ப்பு வழங்கி உன் தகுதியை நிரூபித்தாய் யுதிஷ்டிரா! அதே சமயத்தில் சமயோசிதமாக யோசித்து உன் சகோதரனின் உயிரைக் காப்பாற்றிவிட்டாய் சகாதேவா! உங்களது தர்ம குணத்தைக் கண்டு மகிழ்ந்தேன்" என்று கூறி புருஷாமிருகம் யாகத்திற்கு வர சம்மதித்தது. தர்மரும் பல்வேறு தடைகளைத் தாண்டி ராஜசூய யாகத்தை வெற்றிகரமாக நடத்திப் பேரரசராக முடிசூடிக்கொண்டார்.

  • 195
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

இனம் புரியாத சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத் தன்மை உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் கைக்கூடும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதமாகி நிறைவுபெறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

ரிஷபம்

பெற்றோர்களின் அரவணைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளின் மேன்மை ஏற்படும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். நெருக்கமானவர்கள் வழியில் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

 

மிதுனம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். உறவினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி சார்ந்த செயல்களில் ஆதாயம் ஏற்படும். மனை தொடர்பான செயல்பாடுகளில் லாபம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கடகம்

நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உயர்கல்வி சார்ந்த குழப்பங்கள் குறையும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். இறைச் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

சிம்மம்

எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். தேவையில்லாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய விஷயங்களில் கவனத்துடன் இருக்கவேண்டும். எண்ணங்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கன்னி

சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இருந்து வந்து வேறுபாடுகள் குறையும். ஜவுளி வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

துலாம்

பணி நிமித்தமான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுப காரியங்களில் இருந்த இழுபறிகள் விலகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

நுணுக்கமான சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

தனுசு

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் அமைதியின்மை உண்டாகும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மகரம்

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்தை வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிக தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபார பணிகள் மத்தியமாக நடைபெறும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். மனத்தளவில் புதிய தேடல் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

 

கும்பம்

வியாபார பணிகளில் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மூலமாக மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். இனம் புரியாத சில கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறு விமர்சனங்கள் அவ்வபோது தோன்றி மறையும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

  • 330
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 27 ஆம் தேதி புதன்கிழமை 10.6.2026.

இன்று இரவு 08.15 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று அதிகாலை 05.02 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று அதிகாலை 02.37 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.

இன்று காலை 09.57 வரை வனிசை. பின்னர் இரவு 08.15 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று அதிகாலை 05.02 வரை அமிர்த யோகம். பின்னர் அதிகாலை 05.51 வரை சித்தயோகம். பிறகு மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=539&dpx=2&t=1781060511

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 338

Good Morning...

  • 329
  • 411
  • 413
  • 412