- · 1 friends
-
கனடா நாளில் நயாகரா நீர்வீழ்ச்சி
கனடா நாளில் நயாகரா நீர்வீழ்ச்சி
கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் (Anirudh). தற்போது விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. அந்த வகையில் லேட்டஸ்டாக அவரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. காவ்யா மாறன் (Kavya Maran) தற்போது ஐபிஎல்-லில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்.
இருவரும் ஜோடியாக டின்னர் சாப்பிட சென்றதாகவும், ஒன்றாக வெளிநாடுகளில் உலா வருவதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இருவருமே இதுகுறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் அனிருத்; கீர்த்தி சுரேஷ், ஜோனிடா காந்தி, ஆண்ட்ரியா ஆகியோரை காதலித்து வந்ததாக செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளாவி வெச்சு வெளுத்தது போல, பல பலனு இருக்கும் ராய் லட்சுமிக்கு சொந்த ஊர் பெங்களூர். இவருக்கு சிறுவயதில் இருந்தே, சினிமா மீது ஆர்வம் இருந்ததால், பள்ளியில் படிக்கும் போதே பல படங்களை விரும்பி பார்த்துள்ளார். கல்லூரிக்கு சென்ற பின் அந்த ஆசை அதிகமாக, தனது ஆசையை பூர்த்திக் செய்து கொள்ள படித்துக்கொண்டு இருந்த போதே, மாடலிங்கில் நுழைந்தார். ஆரம்பத்தில் சிறிய சிறிய கம்பேனிகளின் விளம்பரத்தில் நடித்து வந்த ராய் லட்சுமிக்கு புரூ காஃபி விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த விளம்பரத்தின் மூலம் பிரபலமான இவர், சரவணா ஸ்டோர்ஸ், ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரம் என அடுத்தடுத்த விளம்பரத்தில் நடித்தார்.
விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பால், கற்க கசடற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் விக்ராந்த்துடன் ஜோடியாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்விப்படமானது. இதனால், அடுத்த படத்திற்காக காத்திருந்த ராய் லட்சுமிக்கு, தமிழில் படவாய்ப்பு இல்லாததால் தெலுங்கில் வாய்ப்பு தேடினார். அங்கு, காஞ்சனா கேபிள் டிவி என்ற படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் இடம் பெற்ற யாரோ மனதிலே பாடல் இவருக்கு தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடத்தை பிடிக்கவைத்தது. அதைத்தொடர்ந்து முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி என தமிழில் அடுத்தடுத்து படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், இவர் நடித்த எந்த படமும், இவருக்கு ஒரு அடையாளத்தை தரவில்லை. திறமையும் அழகும் இருந்தும், வலுவான கதை அமையாததால் சினிமாவில் உச்சத்தை இவரால் முடியவில்லை.
தமிழ், தெலுங்கு என எதுவும் வேலைக்கு ஆகாததால், பாலிவுட் சென்ற லட்சுமி ராய், அங்கு ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டார். அங்கு பெயரை சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் பணத்தை சம்பாதித்தார். பின் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். கடந்த ஆண்டு ராய் லட்சுமி மலையாளத்தில் டிஎன்ஏ என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் பாய்சன் 2 என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். எந்த பக்கம் போனாலும், பட வாய்ப்பு வராததால், எப்போதுமே ஜாலியாக டூர் சென்று பொழுதை கழித்து வருகிறார்.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, தற்போது தாய்லாந்துக்கு சென்றுள்ளார். அங்கு, கடற்கரையில் கவர்ச்சி உடைஅணிந்து கொண்டு இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள ராய் லட்சுமி, அந்த பதிவில் காலம் மெதுவாகும், காற்றில் உப்பு மற்றும் அமைதியின் வாசனை வீசுகிறது. அழகு சத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அதை உணர வேண்டும் என்பதை அமைதியான நினைவூட்டுகிறது என பதிவிட்டுள்ளார். அந்த பதிவினைப்பார்த்த பலர், அடடா கவிதை கவிதை என பதிவுகளை போட்டு வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்த சந்தன் (25) என்பவர், Owlspriority India Pvt Ltd என்னும் நிறுவனத்தில் கனடாவில் வேலை தொடர்பில் விண்ணப்பித்துள்ளார்.
தங்களுக்கு பெங்களூருவிலும் கனடாவின் வன்கூவரிலும் அலுவலகங்கள் உள்ளதாக இணையத்தில் அந்நிறுவனம் விளம்பரம் செய்திருந்ததைத் தொடர்ந்து, அதை நம்பி கனடாவில் வேலைக்காக அங்கு விண்ணப்பித்துள்ளார் சந்தன்.
கனடா விசா மற்றும் கனடாவில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு லட்ச ரூபாய் கேட்டுள்ளனர் அந்நிறுவனத்தினர். உடனடியாக 50,000 ரூபாய் செலுத்தியுள்ளார் சந்தன். ஆனால், பல மாதங்களாகியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார் சந்தன்.
அந்த நிறுவனத்தார் பணத்தையும் திருப்பிக் கொடுக்காததால் பொலிஸில் புகார் செய்துள்ளார் சந்தன். விசாரணையில், சந்தனுடைய நண்பர்கள் உட்பட பலர் அந்த நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது.
பொலிசார் Owlspriority India Pvt Ltd நிறுவனத்தின் இயக்குநரான Ninan Lawrence, மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் Vijaya Durga, Thota Akhil, Tabassum Naz, மற்றும் Vinay Kotari ஆகியோர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகுர்னு (Sebastien Lecornu) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு, செபஸ்டியன் லெகுர்னு (Sebastien Lecornu) பிரதமரான 26 நாட்களுக்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (6/10/2025) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுடன் செபஸ்டியன் லெகுர்னு ( Sebastien Lecornu ) ஒரு மணி நேரம் சந்தித்த பின்னர் எலிசி அரண்மனையில் வைத்து இதனை அறிவித்துள்ளார்.
உலகில் தற்போது வரை ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 கண்டங்கள் உள்ளன. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கண்டங்கள் எப்படி இருந்தன என்பது புரியாத புதிரான நிலையில் தற்போது உலகின் 8-வது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த கண்டத்திற்கு விஞ்ஞானிகள் ஜீலந்தியா என்று பெயரிட்டுள்ளனர். கடல் தளத்தில் இருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இது நியூசிலாந்துக்கு அருகே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளது. இதில் நியூசிலாந்தை போல சில தீவுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது என தெரிவித்துள்ளனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கண்டமானது விரைவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு உலகின் 8-வது கண்டமாக அறிவிக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் தமிழகத்தில் இந்திய பெருங்கடலில் லெமூரியா கண்டம் கடலுக்குள் மூழ்கி இருப்பதாகவும், தமிழர்கள் இங்குதான் தோன்றினர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். அதன் அடிப்படையில் பார்த்தால் இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஜீலந்தியா 9-வது கண்டமா? என்ற கேள்வியையும் அறிவியலாளர்கள் எழுப்பி உள்ளனர்.
1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
7. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ‘ரயித்தா’ சாப்பிடுகிறோம்.
12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது
16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.
தீபாவளி பண்டிகை வருகிறது என்றாலே மக்களிடையே, குறிப்பாக நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடையே குதூகலம் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிடும். போனஸ் பணம் கைக்கு வருவதற்கு முன்னரே, அதை வைத்துக்கொண்டு ‘வீட்டில் யார் யாருக்கு என்னென்ன தேவை, அது பட்ஜெட்டுக்குள் அடங்குமா?’ என்பது குறித்த ஆலோசனைகளும் திட்டமிடல்களும் தொடங்கிவிடும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் இந்த மாதம் வழங்கும் ஊதியத்துடன் தங்களது ஊழியர்களுக்கான போனஸை வழங்கும். இப்படி தொழிலாளர்களிடையே குதூகலத்தைக் கொண்டு வரும் ‘போனஸ்’ வழங்கும் இந்த வழக்கம் எப்படி அறிமுகமானது, இதன் சரித்திர பின்னணி என்ன என்பது உள்ளிட்ட தெரிந்து கொள்வோம்.
ஆரம்ப காலத்தில் முதலாளிகள் தங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் பணியாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிலேயே ஊதியம் வழங்கி வந்த நிலையில், பண்டிகை நேரத்தில் அதனை கொண்டாடுவதற்காக கொஞ்சம் கூடுதல் பணத்தைக் கொடுத்தனர். அப்படி கொடுக்கப்படும் தொகை எஜமானரின் விருப்பத்துக்கு ஏற்ப இருந்தது. ஆனாலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு அது போதுமானதாக இல்லாததால், படிப்படியாக இது தங்களுக்கு முக்கியம் என்று உணரத் தொடங்கினர்.
இத்தகைய பின்னணியில்தான், இந்தியாவில் போனஸ் முதன்முறையாக, மில் ஊழியர்களுக்கு 1917 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர்களின் ஊதியத்தில் 10% வழங்கப்பட்டது. அப்போது போர் நடைபெற்றதால், இது “போர் போனஸ்” ( war bonus)என்றும் அழைக்கப்பட்டது. ஏனெனில் அப்போதைய போர் நிலைமைகள் காரணமாக ஊதிய உயர்வுக்கு அனுமதிக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்களில் தொழில்துறை சார்ந்த பிரச்னைகளுக்கு போனஸ் குறித்த கேள்விதான் முக்கிய காரணமாக இருந்தது. கேரளா மாநிலத்தில் நடந்த கே.எஸ். பாலன் வழக்கு, உரிமையாளர்கள் சங்கத்துக்கு எதிரான ராஷ்ட்ரிய மில் மஸ்தூர் சங்கம் இடையேயான வழக்குகள் போன்ற பிரபலமான வழக்குகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
நாம் மேலே குறிப்பிட்டபடி இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு, தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வாரச் சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்தான் மாத சம்பள முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது 4 வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது.
“அப்படி மாத அடிப்படையில் கணக்கிட்டால், 12 சம்பளம் வரும். ஆனால் ஓர் ஆண்டுக்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியெனில் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமே… 12 தானே கொடுக்கிறார்கள்…” எனக் கருதிய மகாராஷ்ட்ராவில் உள்ள சில மில் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக போராட்டத்தை தொடங்கின. தங்களுக்கு ஒரு மாத சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடின.
அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியென்றால் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமல்லாவா? இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக 1930 ஆம் ஆண்டு வாக்கில் மகாராஷ்ட்ராவில் உள்ள சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடங்கின. 10 ஆண்டு காலம் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பிரிட்டிஷ் அரசு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு அதிக பணத் தேவை இருக்கும் என்றும், அந்த சமயத்தில் போனஸ் வழங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து அக்கோரிக்கை ஏற்கப்பட்டு 1940 ஆம் ஆண்டு முதல் போனஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில்தான், சுதந்திரத்துக்கு பின்னர் கொண்டுவரப்பட்ட 1950 ஆம் ஆண்டு தொடங்கி 1965 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற வழக்குகள், போனஸ் பரிந்துரைக்கான ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட முத்தரப்பு ஆணையம் மற்றும் போனஸ் கொடுப்பனவுச் சட்டம் போன்றவற்றினால், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 8.33% போனஸ் வழங்க வேண்டும் என்ற தற்போதைய சட்டம் 1965 ஆம் ஆண்டு மே 29 அன்று நடைமுறைக்கு வந்து, போனஸ் வழங்குவதில் ஒரு ஒழுங்குமுறை உருவானது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் தீர ஆலோசனை கிடைக்கும். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
ரிஷபம்
பொன் பொருள்கள் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தாமதங்கள் விலகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலை துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கைத்தொழிலில் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிதுனம்
புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். அறப்பணி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான செயல்களின் பொறுமை வேண்டும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் அமையும். சக ஊழியர்களிடத்தில் மதிப்புகள் உயரும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சிம்மம்
வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கணவன், மனைவிக்கிடைய விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். அலுவலகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். மேல் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அரசியல் விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பிரபலமானவர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபார இடமாற்ற எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் ஆதரவால் திட்டமிட்ட காரியம் நிறைவேறும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மகரம்
செயல்களில் இருந்த தாமதங்கள் விலகும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய வாகனம் முயற்சிகள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் உதவிகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பது தவிர்க்கவும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். அலுவல் பணிகளில் விவேகம் வேண்டும். இறை வழிபாடு புரிதலை உருவாக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மீனம்
உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். பணி நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். எதிலும் நேர்மறையுடன் செயல்படவும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உருவாகும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 20 ஆம் தேதி திங்கட்கிழமை 6.10.2025
இன்று காலை 11.42 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.
இன்று காலை 06.06 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.
இன்று பிற்பகல் 02.06 வரை விருத்தி. பிறகு துருவம்.
இன்று அதிகாலை 12.33 வரை கரசை. பின்னர் காலை 11.42 வரை வணிசை. பின்பு இரவு 10.46 வரை பத்தரை. பிறகு பவம்.
இன்று காலை 06.01 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 05.00 முதல் 06.00 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
எந்த ஊரிலும் இல்லாத அதிசயமாக, குஜராத்தில் உள்ள 'சந்தன்கி' பேரூரில் எந்த வீட்டிலும் பல ஆண்டுகளாக சமைப்பதே இல்லை.அதனால், 'தினமும் காய்கறிகளை வெட்டி, சப்பாத்தி சுட வேண்டியிருக்கிறதே!' என்று எந்தப் பெண்மணியும் அங்கலாய்ப்பதில்லை.
கூட்டாஞ்சோறு' உண்பது போல, ஊரில் உள்ளவர்கள் இணைந்து சமூகக் கூடத்தில் தினமும் இரண்டுவேளை ஒன்றாக உண்கிறார்கள். இது ஒரு நாள், இரண்டு நாள் நடக்கும் நிகழ்வல்ல; 365 நாள்களிலும் அந்த ஊர் மக்களுக்கு உணவு சமூகக் கூடத்தில்தான்!இந்த வழக்கம், சமூகப் பிணைப்பை, பரஸ்பர நட்பை வளர்க்கிறது
. உணவுச் செலவு ஒருவருக்கு மாதம் இரண்டாகிறதாம்.ஊரில் உள்ள குடும்பத்தாருக்காக சமூகக் கூடத்தில் ஊர்க்கார்கள் குழுக்களாகப் பிரிந்து, ஒவ்வொரு நாள் ஒரு குழு சமைப்பார்கள்' என்றுதானே நினைக்கத் தோன்றும். அதுதான் இல்லை! தொழில்முறை சமையல்காரர்களால்தான் தினசரி உணவு தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.
தனிக் குடும்பங்களும், திருமணமாகாத வாழ்க்கை முறையும் ஆதிக்கம் செலுத்தும் யந்திரமயமான வாழ்க்கை முறைக்கு மாறாக, 'சந்தன்கி' பேரூர் 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற சமூக உணர்வை நிலைநாட்டுகிறது.
சந்தன்கி'யில், வசித்து வந்த இளைய தலைமுறையினர் வேலை, வணிகம் காரணமாக நகரங்களுக்குச் சென்றுவிட்டாலும், அவர்களது வயதான பெற்றோர் 'சந்தன்கி'யை விட்டுச் செல்ல விரும்பவில்லை. அதனால் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்க, வீட்டில் சமையல் என்பது பெரிய சுமையானது.
எனவே முதியவர்களும், அவர்களது வாரிசுகளும் இணைந்து எடுத்த முடிவுதான் 'சமூக சமையல் கூடம்,இந்தக் கூட்டு முயற்சியின் முன்னோடியும், 'சந்தன்கி' ஊராட்சித் தலைவருமான பூனம்பாய் படேல் சொல்கிறார்:
நியூயார்க்கில் 20 ஆண்டுகள் வசித்த நான், 'சந்தன்கி' திரும்பிய பிறகு, இளைய தலைமுறையினர் வீட்டில் இல்லாதச் சூழ்நிலையில், அங்குள்ள முதியவர்களுக்கு அன்றாடப் பணிகள், குறிப்பாக சமையல் வேலை சவாலாக மாறி, அவர்கள் சிரமப்படுவதைக் கண்டேன்.
முதியவர்களுடன் இளைய தலைமுறையினர் சேர்ந்து வசிக்காத சூழ்நிலையில், ஊர் மக்கள் தொகை 1,100 இலிருந்து 500 ஆகக் குறைந்துவிட்டது.
சமையல் வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் விரும்பினர்.சமையல் கூடம் முதலில் கொட்டகை போன்ற இடத்தில் தொடங்கப்பட்டாலும், ஆண்டுகள் செல்ல செல்ல அதன் தரமும் உயர்த்தப்பட்டது.
சூரிய சக்தியில் இயங்கும் குளிரூட்டப்பட்ட மண்டபத்தில் உணவு பரிமாறப்படுகிறது. சமூக சமையல் கூடம் என்பதையும் தாண்டி மக்கள் கூடும் சமூக மனமகிழ் மன்றமாக மாறியுள்ளது
. இப்போது 'சந்தன்கி' ஒருவருக்காக ஒருவர் வாழும் கிராமமாக மாறிவிட்டது. வீட்டில் முதியோர் தனிமையில் இருப்பதைக் குறைத்துள்ளது.
சமூக சமையல் கூடத்தின் நன்மைகள் தெளிவாகத் தெரிந்தவுடன், 'சந்தன்கி' ஊர் மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர். 'நாளை என்ன சமைக்கலாம்?' என்று முதியவர்கள் உணவு சமைப்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்பதையும் உறுதி செய்துள்ளது.
சமூக சமையல் கூடம் ஊருக்கு வெளியில் இருப்பதனால், வீட்டிலிருந்து நடந்து செல்ல வேண்டும். அது முதியோருக்கு நடைப்பயிற்சியாகவும் அமைந்து விடுகிறது. ஆக, 'சந்தன்கி'யின் சமூக சமையல் கூடத்தின் வெற்றி, இதர ஊர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது'' என்கிறார் பூனம்பாய் படேல். இதனைக் கேட்ட வலைத்தளவாசிகள் அருமையான யோசனையாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.
உண்மையில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய திட்டம். நீங்கள் இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
மரணித்து போன ஒருவன் தன் சவப்பெட்டியினுள் எழுந்து உட்கார்ந்து பார்க்க ஆசைப்பட்டான்.
கடவுள் அவன் காதினுள் சொன்னார் 'அப்படியே ஆகட்டும்'.. அவன் மெல்ல எழுந்து உட்கார்ந்தான் ஆனால் யாரும் அவனை அறியவில்லை.
அவனது தாயை நெருங்கி அமர்ந்தான். அவள் அழுது ஓய்ந்திருந்தாள்.. அருகில் இருந்த சின்ன மகளிடம் அடுத்த ஏற்பாடுகள் பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள். அவளைக் கடந்து தன் தந்தையின் முன் போய்நின்றான்.. அவர் கண்களில் கண்ணீரோடு சாய்ந்திருந்தார். அவர் அழுது பார்த்திராத அவனும் சேர்ந்தே அழுதான். ஆனால் யாருக்கும் கேட்கவில்லை.
ஜன்னலருகே அவன் மூத்த தமயன் எதையோ வெறித்தபடி நின்றிருக்க, அவன் பக்கம் போய் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.. அண்ணன் கண்ணிலும் கண்ணீர்த் துளிகள் காணச் சகியாமல் கலைந்து போனான்.
அடுத்த அறை வாசலில் தான் அவள் சரிந்து கிடந்தாள். அவள் தான் அவனது இல்லாள். இதயமே இழந்து விட்ட வலி அவள் கண்களில் ஒளியற்ற விழியில் வெறித்த பார்வையொன்றே மிஞ்சியிருந்தது.
அடுத்த படியாக அவனை பார்க்கிறான் 'ஓ.. அவன் அவனே தான் ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவனை விட்டு பிரிந்து போன அவனது நண்பன்' அவன் விழிகளில் விரக்தி அழுதழுதே அரண்டு போயிருந்தான்.
சுற்றம் சொந்தம் என எல்லோரும் திரண்டிருக்க இவனுக்கு ஏதோ உறைத்தது. இரண்டு வாரங்களுக்கு முன் அப்பாவிற்கு கண்ணாடி வாங்கவும், அம்மாவிற்கு அல்சர் மருந்து வாங்கவும் காசில்லை எனக் கடிந்து கொண்டது.
அண்ணியின் பிரசவத்திற்கு அண்ணன் கேட்ட பத்தாயிரம் ரூபாய்க்கு இவன் படுத்தி விட்ட பாடு படம் போல ஓடியது. மனைவிக்கு மல்லிகையும் அல்வாவும் வாங்கி கொடுத்தே வருடங்கள் ஆகிவிட்டது என்று நினைவிற்கு வந்தது. பள்ளிபருவத்திலே இருந்து ஒன்றாய் படித்தவனின் ஒற்றை வார்த்தையை நம்பாமல் போனதன் தார்பரியமும் நம்பியிருக்கலாம் என்ற தற்பரிதாபமும் வாட்டி வதைத்தது.
இருந்தும் என்ன பயன் எல்லாம் தான் முடிந்தாகிவிட்டதே. கடவுளின் குரல் மீண்டும் ஒலித்தது. 'இனி கிடைக்காதென்று நினைத்து வாழ வேண்டிய வாழ்க்கையை இது கிடைக்காதா என்று வாழ்ந்து வீணடித்து விட்டு வருந்தி என்ன பயன்... வந்து படு பெட்டியில்' என. இதோ நான் மீண்டும் படுத்திருக்கிறேன் என் சவப்பெட்டியில்
எல்லோரும் கூக்குரல் இட்டு அழுவது எனக்கு மட்டும் என் இரங்கலாக கேட்கவில்லை பெரும் இரைச்சலாக கேட்கிறது. நான் சேமித்த அந்த பணம் எனக்காக வருந்தவேயில்லை அது அடுத்த எசமானைத் தேடிக்கொண்டிருக்கிறது.
வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழாமல் இருக்கும் அனைவருக்கும் இக்கதை ஒரு பெரிய பாடமாகும். மாறுங்கள்... நிச்சயம் மாறிவிடுங்கள். பணம் அவசியம் தேவைதான். ஆனால், பணம், பணம் என வாழும் (வாழ வேண்டிய) வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே.
காலை உணவு நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் நாம் என்ன, எப்படி சாப்பிடுகிறோம் என்பது நாள் முழுவதும் நமது உடல்நலம், ஆற்றல் மற்றும் செரிமானத்தை பாதிக்கிறது. குறிப்பாக, காலை உணவு ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நாள் முழுவதும் ஆற்றல் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது.
பலர் அதிகாலையில் தவறான உணவுகளை சாப்பிடுவதால் வாயு, அஜீரணம் அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எனவே, வாயு உருவாவதைத் தடுக்க வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
வெதுவெதுப்பான நீர் அல்லது எலுமிச்சை நீர்: காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனுடன் சிறிது எலுமிச்சையைச் சேர்ப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இது செரிமான அமைப்பை இலகுவாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது, இது நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது.
ஓட்ஸ் அல்லது கஞ்சி: வெறும் வயிற்றில் எண்ணெய் அல்லது கனமான உணவுகளை சாப்பிடுவது வாயுவை ஏற்படுத்தும். ஓட்ஸ் அல்லது கஞ்சி ஒரு நல்ல வழி. அவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் மெதுவாக ஜீரணமாகும், இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் அமிலத்தன்மை அல்லது வீக்கத்தைத் தடுக்கிறது.
ஓட்ஸ் அல்லது கஞ்சி: வெறும் வயிற்றில் எண்ணெய் அல்லது கனமான உணவுகளை சாப்பிடுவது வாயுவை ஏற்படுத்தும். ஓட்ஸ் அல்லது கஞ்சி ஒரு நல்ல வழி. அவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் மெதுவாக ஜீரணமாகும், இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் அமிலத்தன்மை அல்லது வீக்கத்தைத் தடுக்கிறது.
இளநீர்: காலையில் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இளநீர் சிறந்த வழி. இது உடனடியாக உடலை நீரேற்றம் செய்கிறது, எலக்ட்ரோலைட்டுகளை நிரப்புகிறது மற்றும் வாயு அல்லது அமில தன்மையைக் குறைக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் தனது 1 வார கால ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். மிகவும் எளிய தோற்றத்துடன் தேக்குமர இலை தட்டில் அவர் சிற்றுண்டி அருந்தும் ஃபோட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
கூலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் ஒரு வார காலத்திற்கு ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
தற்போது ரஜினிகாந்த் சம்பந்தப்படாத காட்சிகளை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் படமாக்கி வருகிறார். இந்நிலையில் ஆன்மிக சுற்று பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷிற்கு சென்றடைந்தார்.
கனடாவின் மொன்றியல் நகரில் உள்ள பிளாட்டோ பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு மதுபானசாலை வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் இரு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள மொன்ட்–ரொயல் அவென்யூ மற்றும் லவல் அவென்யூ சந்திப்பில் உள்ள எம்.ஆர். 250 பார் லொங் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது இரண்டு ஆண்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளனர். இது ஒரு கொலைக்குப் பிறகு நடந்த தற்கொலை சம்பவம் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது,” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் 40 வயதுடையவர் எனவும் தற்கொலை செய்து கொண்டவர் 30 வயதுடையவர் என கூறப்பட்டுள்ளது. இந்த துயரமான சம்பவத்தின் பின்னணிக் காரணம் இதுவரை வெளிவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் நடந்த அதிசயம்!
ஒரு ஜப்பானிய கணவன், சிறிய சண்டைக்குப் பிறகு மனைவியிடம் பேசாமல் 20 ஆண்டுகள் கழித்தார
அந்த காலத்தில் கூட, இருவரும் சேர்ந்து 3 குழந்தைகளை வளர்த்தார்கள், ஆனால் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
20 ஆண்டுகள் கழித்து, மனைவி மன்னிப்பு கேட்டபோது தான் கணவன் மீண்டும் பேச தொடங்கினார்.
சண்டைகள் எவ்வளவு இருந்தாலும், 20 வருட மௌனம் சாதாரண விஷயம் அல்ல!
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் – இது பாசமா அல்லது பிடிவாதமா?