·   ·  1 videos
  •  ·  3 friends
  • B

    S

    3 followers
  • 597
  • More

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மானினமும் மீனினமும்

மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ

நீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

புருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

பருவமொரு களமாகப்

போர் தொடுக்கப் பிறந்தவளோ

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

தேன் சுவையைத் தான் குழைத்து

கொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்

பசுந்தளிர் போல் வளை கரமும்

தேன் கனிகள் இருபுறமும்

தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

ஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

யாழிசையின் ஒலியாக

வாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்து

சந்தனத்தின் குளிர் கொடுத்து

பொன் தகட்டில் வார்த்து வைத்த

பெண்ணுடலை என்னவென்பேன்

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

படைத்தவனின் திறமை எல்லாம்

முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ

Comments (0)
Login or Join to comment.
·
Added a news

ஒண்டாரியோ மாகாண இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 9க்கு தெற்கே உள்ள பின்னர்டி சைட் ரோட்டில் அமைந்துள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார், பொதுமக்களை தற்காலிகமாக உள்ளே தங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, துப்பாக்கிக் காயங்களுடன் மூவர் கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஒருவர் தீவிரமான ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடனும், மற்றொருவர் சிறிய காயங்களுடனும் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனால், அறியப்படாத எண்ணிக்கையிலான சந்தேக நபர்கள் இன்னும் தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் குறித்த எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. 

  • 43
·
Added article

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின்,

தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...!

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்

நான் கவலையே படமாட்டேன் சார்.

ஒரு கட்டடம் கட்டும் போது,

சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,

குறுக்குப் பலகைகள் போட்டு,

அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,

கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,

அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,

கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து,

கிரஹப் பிரவேசத்தன்று

கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,

அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால்,

எங்கயோ மறைத்து வைத்துவிட்டு,

வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு *கிரஹகப் பிரவேசம்* நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.

இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.

ஆடுமாடுகள் மேயும்.

குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.

பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.

அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்...

"நான் வாழை அல்ல சவுக்குமரம்....

  • 50
·
Added a post

"2017 ஆம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், முதல் குண்டு அவரது தலைக்கவசத்தைத் துளைத்தது, இரண்டாவது குண்டு அவரது மூக்கை உடைத்தது, மூன்றாவது குண்டு அவரது தாடைகளை முற்றிலுமாக உடைத்தது, ஆனால் அவர் சுயநினைவை இழக்காமல் எதிர்த்துப் போராடினார், மேலும் 30 கி.மீ தொலைவில் உள்ள இராணுவ மருத்துவமனையை அடையும் வரை அதே உணர்வுடன் நின்றார், அவரது கண்கள் பிரகாசித்து, அவரது சிதைந்த முகத்தைக் கண்டு பயந்த மருத்துவர்களிடம் நான் நன்றாக இருக்கிறேன் / கூலாக இரு (👍) என்ற அடையாளத்தைக் காட்டி, பயந்துபோன அவரது உறவினர்களிடம் நான் திரும்பி வருவேன் என்ற அடையாளத்தைக் காட்டி ..... இதெல்லாம் நம்பமுடியாதது!!

அவரைச் சந்திக்க வந்த இராணுவத் தளபதி பிபின் ராவத், அவரை "மிகவும் பயமற்ற மனிதர்" என்று அழைத்தார். இருபத்தெட்டு அறுவை சிகிச்சைகள் செய்த போதிலும், அந்த முகத்தை சரிசெய்ய முடியவில்லை. ஆனால் அவர் ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்த்தவர்களை அமைதிப்படுத்தி, முகத்தில் முகமூடியை அணிந்து மீண்டும் ஆயுதம் ஏந்தினார். இந்த சூழ்நிலையை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால் . . . ஆலப்புழாவின் ராஜலட்சுமியின் மகன் "ரிஷிராஜலட்சுமி"

  • 59
  • 78

image_transcoder.php?o=sys_images_editor&h=156&dpx=1&t=1756054405பலாப்பழத்தின் தோலில் விளையாடி இருக்காங்க...

  • 83

மௌனம் அமைதியின் அடையாளம் மட்டும் அல்ல.

மற்றவர்களின் உள்ளத்தில் உரசி உறவாடும் ஆயுதமும் கூட.!

  • 141

பலபேர் புடிக்காதவங்கள பழி வாங்க எடுக்குற மெனக்கெடல்கள்ல விட...

கொஞ்சூண்டு புடிச்சவங்களுக்காக எடுக்குற மெனக்கெடல்களாலதான்.... தான் ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கோம்றத பெரும்பாலும் மறந்துடறாங்க....

எப்பப் பாரு எவனாயாச்சும் காலி பண்ணவே யோசிச்சுக்கிட்டு..

அது இல்லை வாழ்க்கை...

சின்ன சின்ன விஷயங்கள் செஞ்சு கூட இருக்கவங்கள...

Surprise பண்ணுங்க...

மகிழ்ச்சியா வச்சுக்கோங்க...

வாழ்க்கை நல்லா இருக்கும்...

  • 143

image_transcoder.php?o=sys_images_editor&h=155&dpx=1&t=1756044862

  • 144
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். துரிதம் இன்றி விவேகத்துடன் செயல்படவும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

ரிஷபம்

செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். கலைப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். பணி புரியும் இடத்தில் சாதகமான சூழல் அமையும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மிதுனம்

திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சேமிப்பு குறித்த சில நுட்பங்கள் அறிவீர்கள். முயற்சிகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கடகம்

இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவு பெறும். சுபகாரிய பணிகள் சாதகமாகும். விவசாயத்தில் மகசூல் அதிகரிக்கும். தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனம் விரும்பிய செயல்களை செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்த மந்த தன்மை நீங்கும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

சிம்மம்

செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். குண நலன்களின் சில மாற்றம் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் மனதில் மேம்படும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பொருள்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பிறமொழி மக்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மனை சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

துலாம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் ஏற்படும். நண்பர்களின் எண்ணிங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் அமையும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

விருச்சிகம்

கடினமான பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். வியாபார இடமாற்றங்கள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்கள் பெறுவீர்கள். சில அனுபவங்களால் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

தனுசு

மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தான தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பணி நிமித்தமான ஒத்துழைப்புகள் மேம்படும். இழுபறியாக இருந்த காரியங்கள் முடியும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பிரயாணம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

சமூக வட்டார அமைப்புகள் மூலம் மனதில் சஞ்சலங்கள் தோன்றி மறையும். நிர்வாகத் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். மக்கள் தொடர்பு துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். வியாபாரத்தில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். விவாதங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கும்பம்

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களின் சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மீனம்

மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் பற்று வரவுகள் அதிகரிக்கும். சில புதிய வாய்ப்புகளால் மாற்றங்கள் உருவாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 149
·
Added a post

விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 24.8.2025.

இன்று பிற்பகல் 12.37 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று அதிகாலை 02.27 வரை மகம். பின்னர் பூரம்.

இன்று பிற்பகல் 01.52 வரை சிவம். பின்பு சித்தம்.

இன்று அதிகாலை 12.53 வரை கிமிஷ்துக்கினம். பின்னர் பிற்பகல் 12.37 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று அதிகாலை 02.27 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=154&dpx=1&t=1756043439

நல்ல நேரம் :

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 161
  • 158
·
Added a news

 கனடாவின் ஒண்டாரியோவின் ஃபோர்ட் எரியில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த மசாஜ் சிகிச்சையாளர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனது வாடிக்கையாளர்களில் சிலரை சிகிச்சையின் போது பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 59 வயதான இவோ இவானோவ் என்ற நபருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தற்போது அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். விசாரணையாளர்கள், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தகவல் வைத்திருப்பவர்கள் நயாகரா காவல்துறையின் பாலியல் தாக்குதல் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

  • 441
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பூர்வீக விஷயங்களில் சில தெளிவுகள் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

ரிஷபம்

வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும் பதவிகளும் சிலருக்கு ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

பயணத்தால் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப வரவுகள் அதிகரிக்கும். விளையாட்டு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்

 

கடகம்

பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். எதிலும் சிந்தித்து செயல்படவும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பரிசு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

சிம்மம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிலும் அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

 

கன்னி

வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உழைப்புக்கு உண்டான உயர்வுகள் தாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

 

துலாம்

கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். தொழில் நிமித்தமான பயணங்கள் சாதகமாகும். வீடு மாற்ற சிந்தனைகள் மனதில் தோன்றும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சில அனுபவம் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். சகோதரர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

தனுசு

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விவசாயத்தில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். பழைய சிக்கல்கள் ஓரளவு குறையும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். விரயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மகரம்

எதிர்பார்த்திருந்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். எதிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படவும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் அதிக உரிமைகளைக் கொள்ள வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். அனுபவம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை

 

கும்பம்

தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். வருமான வாய்ப்பை உயர்த்த திட்டமிடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். முயற்சிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் சாதகமாகும். திறமை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

 

மீனம்

எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை உண்டாகும். எதிர்பாராத சில திடீர் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். சாதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

  • 468
·
Added a post

விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை 23.8.2025.

இன்று பிற்பகல் 12.29 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று அதிகாலை 01.51 வரை ஆயில்யம். பின்னர் மகம்.

இன்று பிற்பகல் 02.52 வரை பரிகம். பின்பு சிவம் .

இன்று அதிகாலை 12.41 வரை சதுஸ்பாதம். பின்னர் பிற்பகல் 12.29 வரை நாகவம். பின்பு கிமிஷ்துக்கினம்.

இன்று காலை 06.04 வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=151&dpx=1&t=1755966615

நல்ல நேரம் :

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 510
  • 517
·
Added a post

ஒரு டயர் தயாரிக்கும் நிறுவனம்.

நிர்வாக இயக்குனர் சேஷாத்ரியின் நடையிலேயே தோல்வி தெரிந்தது.

தாழ்ந்த நோக்கினன், தளர்ந்த நடையினன் என்கிற மாதிரி அறைக்குள் நுழைந்தார்.

அவரது அறையை பெருக்கிக் கொண்டிருந்த மஞ்சு,

“என்ன சாமி, வருத்தமா இருக்கீங்களா?” என்று கேட்டதும் அவர் ஆச்சரியப் பட்டார்.

“எப்படிம்மா தெரியும்?”

“என்ன சாமி, இது கூட தெரியாதா…. தினமும் நீங்க வர்றப்போ நிமிந்து பாத்துகிட்டு வேகமா வருவீங்களே”

“நிஜம்தான் மஞ்சு”

“என்ன ஆச்சு சாமி?”

சேஷாத்ரி ஒரு வினாடி யோசித்தார்.

“என்ன சாமி யோசிக்கறீங்க, இவ கிட்ட சொல்லி என்ன புண்ணியம்ன்னுதானே?”

படிப்பறிவே இல்லாவிட்டாலும் பண்பாலும், தெளிவாலும் அவளுக்குக் கிடைத்திருக்கிற இந்த மைன்ட் ரீடிங் திறமையை நினைத்து அவர் வியக்காத நாளே இல்லை.

“அதான் நிஜம் மஞ்சு, இது கொஞ்சம் பெரிய விஷயம்… உனக்குப் புரியாது”

“சாமி, விஷயம் பெருசாவே இருக்கட்டும், எனக்குப் புரியாமையே போகட்டும். அதைப் போட்டு உடைச்சிட்டீங்கன்னா நிம்மதியா அடுத்த வேலையை பார்ப்பீங்களே, அதனாலதான் கேட்டேன்”

இது மஞ்சுவுக்கு அவர் சொல்லித் தந்த பாடம்.

சில நாட்களில் குடிகாரக் கணவனையும், பொறுப்பில்லாத பிள்ளைகளையும் பற்றிய கவலையில் அவள் டல்லாக இருக்கிற போது எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொள்வார்.

“இல்லம்மா, நம்ம கம்பெனி டயர் தயாரிக்கிற கம்பெனி. கடந்த ரெண்டு மாசமா வியாபாரம் குறைஞ்சு போச்சு. போட்டிக் கம்பெனி யாரும் வரல்லை. நம்ம கிட்டே வாங்கறவங்க யாரும் உற்பத்தியை குறைக்கவும் இல்லை. என்னய்யா ஆச்சுன்னு எல்லா மேனேஜரையும் கூப்பிட்டுக் கேட்டேன். யாருக்குமே பதில் தெரியலை. இப்படியே போனா எனக்கு வேலை போய்டும்.”

இதற்கு பதில் சொல்ல மஞ்சு ஒரு நிமிஷம் கூட எடுத்துக் கொள்ளவில்லை.

“சாமி, இப்படித்தான் எங்க சூபர்வைசர் அருணாவைக் கூப்பிட்டு நீ மட்டும் மாசம் ரெண்டு விளக்குமாறு கேட்கிறே, மஞ்சுவைப் பார், வருஷம் ரெண்டுதான் கேட்கிறா உனக்கு பொறுப்பே இல்லைன்னு திட்டினாரு. அவ அழுதுகிட்டே என்கிட்டே வந்து சொன்னா. நான் சொன்னேன், அடி அசடே விளக்குமாறு எவ்வளவு செலவாகும்கிறது எப்படிப்பட்ட தரையை பெருக்கறோம்கிறதை பொறுத்தது. நீ பெருக்கறது எல்லாம் கரடு முரடான தரைன்னு சொல்லுடீன்னேன்”

சேஷாத்ரிக்கு சட்டென்று உறைத்தது.

அரசின் கோல்டன் குவாட்டலேட்டறல் திட்டத்தால் சாலைகள் சீரானதுதான் காரணம்! சட்டென்று எழுந்தார்.

“எங்க சாமி போறீங்க?”

“இல்லம்மா, உன்னை அறியாமையே ஒரு நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்துட்டே. ரோடெல்லாம் நல்லா ஆயிடுச்சு. அதனாலதான் டயர் தேய்மானம் குறைஞ்சிரிக்கு. அதுக்கேத்த மாதிரி டயரோட தரத்தை குறைச்சிட்டா பழைய வியாபாரம் திரும்பிடும். அதை உற்பத்தி பண்றவங்க கிட்டே சொல்லத்தான் போறேன்”

“சாமி, ஒண்ணு சொன்னா கோபப் படக் கூடாது”

“என்னம்மா?”

“தரத்தை எப்பவுமே குறைக்கக் கூடாது. தரம் உயர்ந்தா வியாபாரம் ஜாஸ்திதான் ஆகும்”

“இல்லையேம்மா, இப்ப ரோடோட தரம் நம்ம வியாபாரத்தை குறைச்சிடுச்சே?”

“சாமி, தரை சரியில்லாததாலதான் விளக்குமாறு தேயுதுன்னு தெரிஞ்சதும் நீங்க என்ன பண்ணீங்க? தரையை சரி பண்ணீங்க. தரையை சரி பண்ணதும் என்ன ஆச்சு? அருணாவுக்கு வேலை சுளுவாச்சு. சூபர்வைசர் அவளுக்கு இன்னும் ரெண்டு ஷாப் அதிகமா குடுத்திட்டாரு”

“அதனாலே?”

“தரை நல்லா ஆனதும் அவளுக்கு நிறைய வேலை கொடுத்த மாதிரி, ரோடு நல்லா ஆனதும் வண்டிங்க வியாபாரமும் ஜாஸ்தி ஆகுமே? அப்ப நம்ம நிறைய டயர் விக்கலாமே? கொஞ்சம் பொறுமையா இருந்து பாருங்களேன்” என்றாள்.

  • 788
·
Added a post

ஒரு கல்லூரியின் வகுப்பில் ஒரு பேராசிரியர் சீரியசாக பாடம் எடுத்து கொண்டு இருந்தார்! அவர் ஒயிட் போர்டில் எழுதி கொண்டு இருக்க ஒரு துடுக்கு மாணவன் விசில் அடித்தான்.

அவர் எழுதுவதை நிறுத்தி விட்டு யார் விசில் அடித்தது என்று கேட்க ! யாரும் உண்மையை சொல்ல வில்லை.

அப்பொழுது பேராசிரியர் இத்துடன் இந்த பாடம் முடிகிறது, ஆனால் இன்னும் வகுப்பு முடிய நேரம் இருப்பதால் உங்களுக்கு என் அனுபவ கதையை சொல்கிறேன் கேளுங்கள் என்றார்.

நேற்று நான் வீட்டில் தூங்கலாம் என்று முயற்சி செய்து கொண்டு இருந்த போது தூக்கம் வர வில்லை, சரி காருக்கு பெட்ரோல் போட்டு விட்டு வரலாம், நாளை நேரம் இருக்காது என்று நினைத்து பெட்ரோல் போட சென்றேன்.

பெட்ரோல் போட்டு விட்டு மெதுவாக வரும்போது வழியில் ஒரு அழகான பெண் நின்று கொண்டு இருக்க சரி உதவி செய்யலாம் என்று நினைத்து பேச அவர் சொன்னார் சார் நான் வீட்டுக்கு போய் கொண்டு இருக்கேன் ஆட்டோ டாக்ஸி எதுவும் வர வில்லை என்று சொல்ல , நான் சரி உங்களுக்கு உதவுகிறேன் என்று அந்த பெண்ணை அவர்களின் வீட்டில் ட்ராப் செய்தேன்.

வண்டியில் இருவரும் நிறைய பேசினோம். அந்த பெண்ணிற்கு என்னை மிகவும் பிடித்து விட்டது. வீடு வந்ததும் அந்த பெண் என்னை நேசிப்பதாக சொல்ல நானும் அவளை நேசிப்பதாக சொல்லி நான் பேராசிரியராக கல்லூரியில் வேலை செய்கிறேன் என்று நம் கல்லூரியின் பெயரை சொன்னேன். இருவரும் எங்கள் ஃபோன் நம்பரை பரி மாறி கொண்டோம்.

அப்பொழுது அவர் சொன்னார் என் தம்பியும் உங்கள் கல்லூரியில் இந்த வகுப்பில் தான் படிக்கிறான் அவனை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் என்று அன்புடன் சொன்னார். அதற்கு நான் அவன் பெயரை சொல்லு என்று கேட்க! அதற்கு அவர் பெயர் எதற்கு அவன் தான் வகுப்பில் சூப்பரா விசில் அடிப்பான் என்றார்.

அப்பொழுது வகுப்பில் எல்லாருடைய பார்வையும் ஒரே மாணவன் பக்கம் திரும்ப !

அந்த மாணவன் அசடு வழிந்து கொண்டு எழுந்திருக்க!

பேராசிரியர் சொன்னார்!

நான் முனைவர் பட்டம் காசு கொடுத்து வாங்க வில்லை! படித்து வாங்கினேன் ! Human Psychology என்றார்!

  • 794
·
Added a post

இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சில உணவு வகைகளை தவிர்ப்பது குடல் ஆரோக்கியத்திற்கும், தூக்கத்திற்கும் நன்மை பயக்கும். அத்தகைய உணவுகள் குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்கான காரணங்கள் குறித்தும் பார்ப்போம்.

1. தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அதிக அமிலத்தன்மை இருப்பதால் அதனை இரவில் தவிர்க்க வேண்டும்.

2. இரவில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகரிக்கச் செய்யலாம். அதனால் ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும்.

3. கிரீன் டீயில் காபின் உள்ளடங்கி இருப்பதால் அதனை இரவு நேரத்தில் பருகுவதை தவிர்க்க வேண்டும். அதனை இரவில் உட்கொள்ளும் போது இதயத்துடிப்பு அதிகரிப்பு, பதற்றம் மற்றும் கவலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். பகல் பொழுதுதான் கிரீன் டீ பருகுவதற்கு சிறந்தது.

4. இரவு தூங்குவதற்கு முன்பு பாலாடைக்கட்டி உட்கொள்வது தூக்கத்திற்கு தடையாக அமையும். அதிக நேரம் விழிப்பு நிலையில் இருக்க வைத்துவிடும்.

5. துரித உணவுகளுடன் உட்கொள்ள வழங்கப்படும் கெட்ச்சப்பை இரவில் தவிர்க்க வேண்டும். அதில் இருக்கும் அமிலம் குடல் ஆரோக்கியத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்.

6. இரவில் மது அருந்துவது தூக்க சுழற்சிக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். நிம்மதியாக தூங்கி எழ முடியாது.

7. ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் பிரச்சினையை ஏற்படுத்தும்.

8. இரவில் வெங்காய சாலட் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அவை வயிற்றில் அழுத்தத்தையும், வாயு தொந்தரவையும் உருவாக்கலாம். தொண்டைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

9. காபியில் இருக்கும் காபினின் வீரியம் எட்டு முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம். எனவே இரவில் காபியை தவிர்ப்பதன் மூலம் காலையில் தூங்கி எழுவது வரை காபினின் ஆற்றல்மிக்க செயல்திறனை கட்டுப்படுத்திவிடலாம்.

10. இனிப்பு அதிகம் கலந்து தயாரிக்கப்படும் தானிய வகை உணவுகளை இரவில் உட்கொள்வது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யலாம். அல்லது சர்க்கரையின் அளவை வீழ்ச்சியடைய வைக்கலாம். அதன் தாக்கம் தூக்கத்திலும் எதிரொலிக்கும். தூக்கமின்மையால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

11. இரவில் பீர் அருந்துவதும் தூக்கத்தை பாதிக்கும். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேரிடும்.

12. இரவில் மிளகாய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்படும் காரமான உணவுகளை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். தூக்கத்தை குறைக்கும்.

13. இரவு உணவிற்கு பிறகு இனிப்புகளை சாப்பிட விரும்பினால் டார்க் சாக்லேட்டை அறவே தவிர்க்க வேண்டும். இதில் காபின் இருப்பது தூக்கத்தை தடுக்கும்.

14. புரதம் அதிகம் உள்ள உணவுகளில் டிரிப்டோபான் குறைவாக இருக்கும். அதன் காரணமாக செரோடோனின் அளவும் குறையும். இரவில் அத்தகைய உணவுகளை சாப்பிடுவதால் தூக்கம் தடைபடும்.

15. இரவில் உலர் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் வயிற்றுவலி மற்றும் தசைப் பிடிப்புகள் ஏற்படலாம்.

16. பீட்சாவில் சேர்க்கப்படும் பாலாடைக்கட்டியில் உள்ள கொழுப்பு மற்றும் தக்காளி சாஸில் கலந்திருக்கும் அமிலங்கள் தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இரவில் அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

17. பகலில் நிறைய தண்ணீர் பருகலாம். ஆனால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தண்ணீர் பருகும் அளவை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் இரவில் அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டியிருக்கும்.

18. புதினா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் இரவில் புதினா வகை உணவுகள், புதினா மிட்டாய் சாப்பிடுவது தூக்கத்திற்கு நல்லதல்ல.

19. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு அதிகமாக உணவு உட்கொள்வதும் தவறானது. அது ஜீரணமாவதற்கு இரவு முழுவதும் உடல் போராட வேண்டி இருக்கும். அதன் காரணமாக தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். காலையில் சோர்வாகவும், மோசமான மனநிலையிலும் எழுந்திருப்பீர்கள்.

20. வெறும் வயிற்றிலோ அல்லது தூங்குவதற்கு முன்போ தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தயிர், செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தி தூக்கத்தை சீர்குலைத்துவிடும்.

  • 821
·
Added a post

70 வயது முதியவர் அவர்..

கடந்த 2019 ஒரு நாள் அதிகாலை மதுரையில் இருந்து எக்மோர் ரயில் நிலையத்தில் இறங்கிய போது இவரைப் பார்த்தேன்.. காக்கி நிற டவுசர் தெரிய பழுப்பேறிய அழுக்கு வேட்டி.. கரும்பச்சை நிறத்தில் சட்டை தோளில் பழுப்பேறிய வெண்ணிறத் துண்டு.. மூக்குக் கண்ணாடியின் பக்கவாட்டு தண்டுகள் உடைந்ததால் அதற்கு பதில் வெள்ளை கயிறு கட்டி காதில் மாட்டியிருந்தார். முகத்தில் சோர்வும் நடையில் தளர்வும் இருந்தது... என் மனைவி தான் சொன்னார், "பாவங்க அந்த தாத்தா ஒரு காபி வாங்கித்தரலாம் இல்லாட்டி காலை உணவுக்குப் பணம் தரலாம்" என்றார். நானும் அவரை அணுகி "ஐயா உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்.?" எனக் கேட்க திடுக்கிட்டு என்னைப் பார்த்தவர், "ஏன் தம்பி நான் உங்க கிட்ட ஒண்ணும் கேக்கலியே" என்றார்.

நானும் "அதில்லிங்க உங்களைப் பார்க்க பசியா இருக்கிற மாதிரியே இருந்தது.. அதான் கேட்டேன்" என்றவுடன். அவர் சிரித்துக் கொண்டே அவர் பாக்கெட்டிலிருந்து கத்தையாக பணத்தை எடுத்துக் காட்டினார். நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் தாள்களாக எப்படியும் 3000 ரூபாயாவது இருக்கும்.. "தம்பி நான் பிச்சைக்காரன் அல்ல.. உங்க அன்புக்கு நன்றி" என்றபடியே.. அங்கு இருந்த ஒரு டெலிபோன் ஜங்ஷன் பாக்ஸின் பின்புறம் இருந்து சுருட்டி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் சாக்கினை எடுத்தார். குப்பையில் கிடைக்கும் பழைய குஜிரி பொருட்கள் அள்ளுவது அவரது தொழில் என்பது இப்போது புரிந்தது. "நான் பிச்சை எடுக்கலை தம்பி, தினமும் உழைக்கிறேன், வர்ற பணத்தை வயதான என் மனைவி மருத்துவ செலவுக்கு கொடுக்குறேன். நேத்து என் வேலை முடிய நேரமானதால்

கடைசி ரயிலை விட்டுட்டேன் அதான் ஸ்டேஷனிலேயே படுத்துட்டேன்.." என்றவர் அருகிலிருந்த ஒரு சின்ன இட்லிகடையில் 200 ரூபாயை எண்ணிக் கொடுத்து 5 இட்லி பொட்டலங்கள் வாங்கினார். இரண்டு பொட்டலங்களை அவரது சாக்கு பக்கத்தில் வைத்துவிட்டு மீதி மூன்று பொட்டலங்களோடு தம்பி "ஒரு நிமிசம் என் கூட வாங்க.." என்றவர் அருகிலிருக்கும் சிறிய சந்திற்குள் நுழைந்தார் பின் தொடர்ந்தேன். மூடப்பட்ட கடைகளின் வாசலில் சிலர் படுத்து இருந்தார்கள். அவர்கள் எல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டோர் என பார்த்ததும் தெரிந்தது. அவர்களை எழுப்பி இட்லி பொட்டலங்களை கொடுத்துவிட்டு அருகில் இருந்த பெட்டிக்கடையில் தண்ணீர் பாக்கெட்டும் வாங்கித்தந்தார். என்னிடம் திரும்பி தம்பி "தனக்கு பசிக்குதுன்னு பிச்சை கூட கேட்க தெரியாத இவங்களுக்கு என்னால எப்ப எப்ப எல்லாம் முடியுமோ அப்ப உதவி செய்யுறேன்.. முடிஞ்சா நீங்க இவங்களுக்கு வாங்கி உங்க கையால கொடுங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்டயும் சொல்லுங்க.. அதுக்கு தான் உங்களை இங்க கூட்டிகிட்டு வந்தேன். என்கிட்ட சாப்பாடு வேணுமான்னு கேட்டதுக்கு நன்றி, நான் வீட்டுக்கு போயி மனைவிகிட்ட சாப்பாடை கொடுத்துட்டு மறுபடி வேலைக்கு போகணும் வரட்டுமா தம்பி.." என்றவர் தன் தளர்நடையை தொடர்ந்தார்.. ஆனால் இப்போது எனக்கது கம்பீர நடையாக தோன்றியது..

  • 828
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். பயணம் குறித்த எண்ணங்கள் மேம்படும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். மனை சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

ரிஷபம்

சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகள் மத்தியமாக நடைபெறும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். மாமன் வழி உறவுகள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி நிமித்தமான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மிதுனம்

வெளியிடங்களில் செல்வாக்கு உயரும். கலைத்துறையில் முன்னேற்றம் ஏற்படும். அரசு துறைகளில் இருந்த மந்த நிலை மாறும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மாணவர்கள் சற்று கவனத்துடன் இருக்கவும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தடங்கல் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

கடகம்

மனதளவில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய நபர்களால் மாறுபட்ட தருணங்கள் ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சிம்மம்

கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். சகோதரர்களிடம் சிறு சிறு வேறுபாடுகள் தோன்றி மறையும். ஜாமின் விஷயங்களில் கவனம் வேண்டும். நினைத்த பணிகளில் சில தடைகள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். உயர்வு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

கன்னி

உழைப்பிற்கு உண்டான ஊதியம் கிடைக்கும். சகோதரர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த சில காரியம் தானாகவே நடக்கும். வியாபார பணிகளில் செழிப்பான சூழல் உண்டாகும். கல்வியில் இருந்த மந்த தன்மை விலகும். சாந்தம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

 

துலாம்

தடைப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அலுவலகத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகம் சார்ந்த புதிய கண்ணோட்டம் பிறக்கும். செயல்களில் அணுகுமுறைகளால் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் பொறுமை காக்கவும். தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சூழல்கள் உருவாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். காப்பகப் பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். குழந்தைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

தனுசு

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் அலைச்சல் மேம்படும். கருத்துக்கள் வெளிப்படுத்துவதில் சூழநிலை அறிந்து செயல்படவும். உத்யோக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். அக்கம் பக்கம் வீட்டாரிடம் அனுசரித்து செலவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மகரம்

துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு விஷயங்களில் காரிய அனுகூலம் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். துணைவர் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

கும்பம்

சாதுரியமான செயல்பாடுகள் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயமான சூழ்நிலை காணப்படும். அரசு விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் குறையும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மீனம்

குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சிக்கமான செயல்பட்டு சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்கள் சாதகமாக அமையும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்

  • 840
·
Added a post

விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 22.8.2025.

இன்று பிற்பகல் 12.53 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

இன்று அதிகாலை 01.45 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.

இன்று மாலை 04.14 வரை வரீயான். பின்பு பரிகம்

இன்று அதிகாலை 01.19 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 12.53 வரை சகுனி. பின்பு சதுஸ்பாதம்.

இன்று அதிகாலை 01.45 வரை அமிர்த யோகம். காலை 06.04 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=149&dpx=1&t=1755880210

நல்ல நேரம் :

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 855
  • 851
·
Added a news

கனடாவின் புகழ்பெற்ற விஸ்கி வககைளில் ஒன்றான கிரவுன் ராயல், அதன் ஒரு தயாரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ஏனெனில், பாட்டில்களில் கண்ணாடி இருக்க வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை மையமாகக் கொண்ட விஸ்கி விநியோகஸ்தரான டியாஜியோ கனடா இன்க்., "கிரவுன் ராயல் ரிசர்வ்" பிராண்டின் "12 ஆண்டுகள் முதிர்ந்த" என்று பெயரிடப்பட்ட தயாரிப்பே இவ்வாறு மீளப்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணாடித் துண்டுகள் காணப்படக்கூடிய சாத்தியங்கள் காரணமாக இந்த வகை விஸ்கி திரும்பப் பெறுகிறது.

கனேடிய உணவு ஆய்வு முகமை (CFIA) வெளியிட்ட திரும்பப் பெறுதல் அறிவிப்பின்படி, பாதிக்கப்பட்ட தயாரிப்புகள் ல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, நியூஃபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடோர், மற்றும் ஒன்டாரியோ ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

  • 1245
·
Added a news

கனடாவில் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் நோவா ஸ்கோஷியாவில் மருத்துவர் ஒருவர்பாலியல் குற்றச்ச செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கடந்த மே மாதம், நோவா ஸ்கோஷியாவின் அப்பர் நப்பன் பகுதியில் உள்ள கம்பர்லேண்ட் பிராந்தியத்தில் ஹெல்த் கேர் சென்டரில் ஒரு மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மருத்துவர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டதுடன், நோவா ஸ்கோஷியாவின் அம்ஹெர்ஸ்ட் நீதிமன்றத்தில் நவம்பர் 15 ம் திகதி மீண்டும் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மருத்துவரின் மூலம் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, இவர் முன்னதாக கியூபெக் மற்றும் நோவா ஸ்கோஷியாவில் பணிபுரிந்தவர் மற்றும் தற்போது நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 1252