என்ன ஒரு அழகான நடை
நேர்த்தியான நடைபயிற்சி
இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரிய கனடாவிற்கு விஜயம் செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் பதவியையும் வகிக்கும் ஹரிணி அமரசூரிய, தெற்காசிய பிராந்திய பிரதிநிதியாக பொதுநலவாய கற்றல் அமைப்பின் Commonwealth of Learning (COL) நிர்வாக சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கனடா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த மாநாடு ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வன்கூவர் நகரில் நடைபெற உள்ளது.
இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி மற்றும் பயிற்சி, உயர் கல்வி, ஆசிரியர் பயிற்சி, முழுநாள் கல்வி, மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்பாடான கற்றலை ஊக்குவித்தல் போன்ற முக்கிய துறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கோல்ட் லேக் பகுதியில் வீட்டில் இருந்து காணாமல் போன 6 வயது சிறுவன், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்று அல்பர்ட்டா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அந்த சிறுவன் மாலை 5 மணியளவில் தனது வீட்டில் கடைசியாக காணப்பட்டதாகவும், ரொக் வேய் (Rocky Way) பகுதியில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாலை 8 மணிக்கு முன்பாக அவர் காணாமல் போனதைப்பற்றி அவசர அறிவிப்பை வெளியிட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சிறுவன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சாவுக்கு பின்னே ஏதாவது சந்தேகத்துக்கிடமான சூழ்நிலை இல்லை என்றும், மரண காரணம் குறித்து வெளிப்படையாகக் கூறாமல், குடும்பத்தின் தனியுரிமையை மதிப்பதற்காக அறிவிக்கப்பட மாட்டாது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனின் குடும்பத்தினருக்கும் நெருங்கியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கையான ஜென்சிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டையில் பிறந்த திருநங்கையான ஜென்சி, இளநிலை ஆங்கிலப் படிப்பை திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியர் அரசு கலை கல்லூரியில் படித்துள்ளார்.
அதன்பின் எம்ஏ மற்றும் எம்பில் வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் முடித்து, பிஏ மற்றும் எம்ஏ இரண்டிலும் தங்கப்பதக்கத்துடன் முதல் திருநர் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் முடித்துள்ளார். இதையடுத்து லயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவி பேராசிரியராக திருநங்கை ஜென்சி பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘வாழ்த்துகள் டாக்டர் ஜென்சி. உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக் கரை சேரட்டும். தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும் ’’என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரக்காரன்- ஒரு நகைச்சுவை கதை ..........
*ஒரு கணவன் மனைவிக்குள் வாக்குவாதம்*....சிறிய சச்சரவு...பெரிதாகி...கடந்த மூன்று நாட்களாக இருவருக்கும் பேச்சு வார்த்தையில்லை..
இது நீடிக்கவே...எ மனைவி அவள் கணவன் எதிரில் வந்து...
நான் இப்போது 10 வரை எண்ணுவேன் ! அதற்குள் நீங்கள் பேசவில்லை என்றால்....
நான் எனது அம்மா வீட்டிற்குப் போய் விடுவேன்.
அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. அவன் அதைத் தான் எதிர்பார்த்திருந்தான்.
அவள் எண்ணத் துவங்கினாள் .... ....
*மனைவி* - 1 ... 2 ... 3 ...
*கணவன்* - (அமைதி) ... !
*மனைவி* - 4 ... 5 ...
*கணவன்* - (மவுனம்)
*மனைவி* - 6 ... 7...
*கணவன்* - (அவன் மனதில் மகிழ்ச்சி... ஆனாலும் அமைதி)
உச்சகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது ...
*மனைவி* - 8 ... 9 ...
*கணவன்* - (மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி ...)
*மனைவி* ...
(அமைதி) ...
(பயங்கர மவுனம்)
...
...
பிறகு கணவனால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.
உணர்ச்சி வயப்பட்டு கத்தினான் !
எண்ணு ... எண்ணு ...
*ஏன் மேற்கொண்டு எண்ணாமல் நிறுத்திவிட்டாய்*?
*Wife*- ( மிகவும் அமைதியாக)நல்ல வேளை! நீங்க பேசிட்டீங்க... இல்லைனா நான் போயிருப்பேன் ...!!
கணவன் - 😗😗
*பின் குறிப்பு* ... எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான். சிறிது நேரம் பொறுமையை கடைபிடித்து இருக்கலாம்.
நடந்து போன செயல்களில் ஏற்பட்ட தோல்விகளை விட்டு விட்டு இனி நடக்கப் போகும் செயல்களை எப்படி வெற்றிகரமாகச் செயல்படுவது என்று முடிவு செய்ய வேண்டியது நாம் தான். அது தான் உண்மை. எத்தனைத் துன்பங்கள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு மீண்டு எழுந்து வரத்தான் வேண்டும்.
மனிதனுக்குத் துன்பம் வரும் பொழுது தான் மூளை அதிலிருந்து விடுபட சுறுசுறுப்பாக இயங்கி வழியைக் காண்கிறது.
ஆகவே துன்பம் வரும் போது துவண்டு விடாமல் சுறுசுறுப்பாய் இயங்க வேண்டும்.
மனோதிடம் இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் எளிதில் சமாளித்து விடலாம் என்பதை அவ்வப்போது நினைவூட்டுகின்றனர் நம்மைச் சுற்றியிருக்கும் சிலர்.
ஜப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ, என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி டோக்கியோ நகரத்திற்கு வந்தார். குடியிருக்க வீடு இல்லை.கையில் காசு இல்லை.
எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, தன்னை வாடகைக்கு விட முடிவு செய்தார்.
“நான் வேலையற்றவன். நகைச்சுவை உணர்வு மிக்கவன். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக
வைத்திருக்க என்னால் முடியும். நீங்கள் கொடுக்கும் வேலைகளையும் செய்வேன்.
உணவும் தங்கும் இடமும்அளித்து, மாதம் 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும்” என்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
நிறையப் பேர் கோட்டானியைத் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம், ஒரு மாதம் வரை இவரை வாடகைக்கு எடுத்தார்கள்.
500 ரூபாய் மிகவும் குறைவான ஊதியம் என்பதால் உடைகள், செருப்பு, போன் கட்டணம் என்று பலவற்றையும் தாங்களாகவே விரும்பிச் செய்கிறார்கள்.
உலகம் அன்பால் ஆன மக்களால் நிறைந்தது என்பதைக் கண்டு கொண்டேன். இதுவரை எந்த வாடிக்கையாளரும் மோசமாக நடத்தியது இல்லை என்றார்.
மனித வாழ்வில் சோதனைகளும் , துயர்களும் இயல்பானவை. அவற்றைக் கண்டு துவண்டு போகக் கூடாது. நம்பிக்கை இழந்து விரக்தி அடையக் கூடாது.
உலகில் வாய்ப்புகள் நிறைந்து உள்ளது. கொஞ்சம் மூளையை உபயோகப் படுத்தினால் நாமும் வாழ்வில் முன்னேறலாம்.....
மரணப் படுக்கையில் இருந்த மிகப்பெரிய பணக்காரர் ஒருவருக்கு தன்னுடைய சொத்துக்கள் மீது உயில் எழுத வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது.
உடனே அவருடைய வழக்கறிஞரை அழைத்தார். வழக்கறிஞரும் அவருடைய இடத்திற்கு விரைந்து வந்தார்.
வழக்கறிஞரிடம் அந்த பணக்காரர் சொன்னார்,
'சார்..! மனித காயம் அநித்யமானதுன்னு உணர்றேன். வாழ்ந்தபோது கெட்டவழிகள்ல நிறைய பணம் சம்பாதிச்சு இருக்கேன். அதுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேட விரும்புறேன். அதனால நான் சொல்றபடி உயில் எழுதுங்க சார்'
வழக்கறிஞர் எழுத தயாரானார். அந்த பணக்காரர் சொன்னார்,
'என்னுடைய சொத்தில் 25 சதவீதம் பக்கத்து ஊரில் இருக்கும் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு செல்ல வேண்டும்'
அந்த பணக்காரரின் தயாள குணத்தை பாராட்டிக் கொண்டே வழக்கறிஞர் உயில் எழுதினார்.
'அடுத்த 25 சதவீதத்தை என் மகன்கள் இருவரும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்'
வழக்கறிஞர் கவனமுடன் எழுதிக் கொண்டிருந்தார். பெரியவர் தொடர்ந்தார்,
'மீதமுள்ள 50 சதவீதம் எனது மனைவிக்கு சேரும். ஆனால் அவள் அதை அனுபவிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மறுமணம் செய்து கொள்ள வேண்டும்'
வழக்கறிஞருக்கு குழப்பம் வந்தது. இதற்கு எந்த வினோத கண்டிஷன்?
தான் இறந்த பிறகு தனிமையில் மனைவி வாடிவிடக்கூடாது என்பதற்கான அன்பினால் இவ்வாறு சொல்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?
எந்த முடிவுக்கும் வர முடியாமல் தடுமாறி தவித்து முடிவாக அந்த முடிவு ஏன் என்பதை பணக்காரரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்கிற முடிவோடு பணக்காரரிடம் கேட்டார் வழக்கறிஞர்,
'உங்கள் மனைவி மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என நீங்கள் நினைப்பதை பார்த்தால் நீங்கள் ஒரு புரட்சிவாதி போல் தெரிகிறது.
உங்கள் மனைவி மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என் நீங்கள் முடிவெடுத்திருப்பது புரட்சியின் வெளிப்பாடா? அல்லது உங்கள் மனைவி மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடா?'
நீண்ட பெருமூச்சு விட்டு அந்த பணக்காரர் பதில் சொன்னார்,
'நான் ரொம்ப கொடுமைக்காரனா வாழ்ந்ததினால் நான் இறந்த பிறகு யாரும் என்னை நினைக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.
ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு நான் கொடுத்த நன்கொடையை பாராட்டி அவர்கள் என்னை நினைப்பார்கள். ஆனாலும் என்னைவிட பெரிய பணக்காரன் இதைவிட அதிக தொகை கொடுத்தால் என்னை மறந்து விட்டு அவனை நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் என் எண்ணம் நிறைவேற வழியில்லை.
என் மகன்கள் நான் வாழும் பொழுதே என்னை நினைக்கவில்லை. இறந்த பிறகு என் நினைப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு சத்தியமாக கிடையாது.
அதனால் தான் என் மனைவி நான் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என ஒரு கண்டிஷனை உயிலில் போட்டு வைத்தேன்'
வழக்கறிஞருக்கு புரிந்து போனது. கணவன் இறந்த பிறகும் மனைவி கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் என ஒரு வாழ்க்கை துணையை தேட கணவன் அனுமதி கொடுத்திருக்கின்றான் என்றால் அந்த கணவனை அவள் அனுதினமும் நினைத்துப் பார்ப்பாள். இதுதான் அந்த பணக்காரரின் எண்ணமாக இருக்க வேண்டும்.
'ச்சே..! இந்த கலிகாலத்திலும் எப்பேர்பட்ட மனுஷன்
வியந்து போன வழக்கறிஞரின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டது போல அந்த பணக்காரர் பேசினார்,
'நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது சார். ஆனா அதுக்காக நான் அவளுக்கு கல்யாணம் பண்ணச் சொல்லி கண்டிஷன் வைக்கலை.
பிறகு ஏன் அப்படி ஒரு கண்டிஷன்னு கேட்குறீங்களா?
துட்டுக்கு ஆசைப்பட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கிறவன்,
கல்யாணம் பண்ணின பிறகு...
'செத்தவன் செவனேன்னு செத்து தொலைக்காமல் இப்படி ஒரு கிரகத்தை தலையில் கட்டி வச்சிட்டு செத்துட்டானேன்னு...
அனுதினமும் என்னை நினைத்துப் பார்க்க ஒரு ஜீவன் வேண்டும் என்பதினால் தான் அப்படி எழுதினேன்'
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குழந்தைகள் ஒத்துழைப்பாகச் செயல்படுவார்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வீர்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
ரிஷபம்
விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய விஷயங்களால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். ஜாமீன் விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் ஒருவிதமான குழப்பங்கள் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள்
மிதுனம்
வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். தடைப்பட்ட பேச்சுக்கள் கைகூடும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
மற்றவர்களின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
வியாபாரப் பணிகளில் வித்தியாசமான முயற்சிகளின் மூலம் முன்னேற்றத்தை உண்டாக்குவீர்கள். கல்வி பணிகளில் மேன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நிர்வாகத் திறமை மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் மேம்படும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
கன்னி
உறவுகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
துலாம்
மனதளவில் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் ஏற்படும். பணி நிமித்தமான விஷயங்களைப் பகிராமல் இருக்கவும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வாகன பழுதுகளைச் சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவுகளின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசு விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். உயர்வு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகரம்
தற்பெருமையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். குணநலன்களின் சில மாற்றம் ஏற்படும். வித்தியாசமான எண்ணங்களும், முயற்சிகளும் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் அமையும். வியாபார பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமை காப்பது நல்லது. பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டினை மனதிற்குப் பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பதற்கான பக்குவம் உண்டாகும். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
திட்டமிட்ட பணிகளில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் தடைகளை வெற்றிகொள்வீர்கள். சவாலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் தைரியம் கூடும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 24.6.2025.
இன்று மாலை 06.56 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
இன்று பிற்பகல் 12.52 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.
இன்று காலை 09.56 வரை சூலம். பின்னர் கண்டம்.
இன்று காலை 08.01 வரை பத்தரை . பின்னர் மாலை 06.56 வரை சகுனி. பின்பு சதுஷ் பாதம்.
இன்று பிற்பகல் 12.52 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள். நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன். சற்று நேரத்தில் முருகவேல் என்று அழைப்பு வந்தது. உள்ளே சென்றவுடன் சில கேள்விகள் கேட்டு விட்டு " உங்கள் பயோடேட்டாவில் வயது 40 என்று இருக்கே நிஜமா ?"
"ஆமாம் சார் உண்மை தான்."
"அப்படியா ..? எங்கள் நிறுவனத்தில் இளைஞர்களை தான் வேலைக்கு எடுக்கின்றோம். உங்கள் வயது 40 என்று சொல்கிறீர்கள் . கொஞ்சம் யோசனை செய்ய வேண்டி இருக்கும் முருகவேல்" என்றார்கள்.
"பரவாயில்லை சார் நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன்" என்று கூறினேன். மேலும் "இதற்கு முன் வேலை செய்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் திடீர் என்று மூடிவிட்டார்கள். அதனால் வேறு வேலை தேடும் சூழ்நிலை உருவாகிவிட்டது சார்.."
அந்த அதிகாரி சற்று யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு
"முருகவேல் உங்கள் பயோடேட்டாவை கொடுத்து விட்டு செல்லுங்கள் தேவைப்படும்போது அழைக்கின்றோம்" என்றார்.
" மிக்க நன்றி சார்" என்று கூறி விட்டு வெளியே வந்தேன்.
இங்கும் வேலை இல்லை. மனம் கனத்தது கூடவே தலையும் வலித்தது. பெரும்பாலான இடங்களில் வயதை காரணம் காட்டி தவிர்த்து விடுகிறார்கள். இறைவா என்ன சோதனை... அனைத்தும் நல்லபடியாக தான் போய்க்கொண்டு இருந்தது முன்பு வேலை செய்த நிறுவனம் மூடும் வரை.. அந்த வேலையை நம்பி வாங்கிய கடன்கள் கழுத்தை நெறிக்க தொடங்கியது..
ஒரே மகனின் படிப்பு செலவு , வீட்டுக்கு தேவையான செலவு மேலும்.. மேலும்.. ஐயனே ஈசனே எப்படி சமாளிக்க போகிறேன். தலை மேலும் வலித்தது. பேருந்துக்கு வைத்து இருக்கும் காசில் காபி சாப்பிட்டு நடந்து வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து காபி சாப்பிட்டு நடக்க துவங்கினேன். வாங்கிய வண்டியும் ஒரமாக இருக்கிறது.
ஆழ்ந்த சிந்தனையில் நடந்து செல்லும்போது ரோட்டின் ஓரத்தில் ஒரு தோல் பை அனாதையாக கிடந்தது. சின்னதாக ஒரு சபலம் எடுத்து திறந்து பார்த்தேன். குப்பென்று வியர்த்து கொட்டியது. பையில் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள்.. கை கால்கள் உதறல் எடுத்தது. இருப்பினும் எடுத்து வைத்து கொண்டேன்.
மனம் பலவிதமாக என்னுள் பேசியது. ஒரு பக்கம் எச்சரிக்கை செய்தது. அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஆனாலும் கட்ட வேண்டிய கடன்களும் , குடும்ப செலவுகளும் கண் முன்னே நின்று பயமுறுத்தியது.
வீடு வந்து சேரும் வரை மனச்சத்தங்கள் ஏராளம் , உடல் முழுவதும் வியர்வை ஊற்றியது. வீட்டில் உள்ள அலமாரியில் பணத்தை பத்திரமாக வைத்தேன். வெளியே சென்று திரும்பிய மனைவி "என்னங்க ஒரு நடுக்கமா இருக்கறீங்க" என கேட்டாள்.
"வள்ளி அந்த கதவை சாத்திட்டு உள்ளே வா" என்றேன்.
நடந்த விவரங்களை சொல்லி . யாராவது கேட்பார்கள் என்று திரும்பி, திரும்பி பார்த்தேன் யாரும் வரவில்லை , எனப் பொய் கூறினேன். பணத்தை எண்ணி பார்த்தேன் மொத்தமாக 12 லட்சம்.
"வள்ளி சில மாதங்கள் வேலை கிடைக்கும் வரை நமக்கு கவலை இல்லை. நம் செலவுக்கு இது போதும்" என்றேன்.
மனைவி அமைதியாக இருந்தாள்.
"ஏதாவது பேசு" என்றேன்.
"இந்த பணம் நமக்கு வேண்டாங்க" என்றாள் மனைவி.
"வள்ளி என்ன பேசுற நீ... இறைவனா பார்த்து தான் நமக்கு துன்பங்கள் தீர வழி காட்டி இருக்காரு.."
"உங்க அல்ப புத்திக்கு இறைவன் மேல் பழிபோடாதீங்க" என்றாள்.
"வள்ளி எனக்கு இன்னும் வேலை கிடைக்கல கட்ட வேண்டிய கடன்களும் செலவுகளும் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியாக இருக்குமே நினைத்து பார் வள்ளி."
"இன்னொருவர் பணத்தில் வாழ்வது தப்புங்க. அதுக்கு பதிலா இருவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம்" என்றாள் மனைவி.
"அப்போ வீட்டு செலவுக்கு என்னதான் நான் செய்வேன் என்று கோபமாய் குரலை உயர்த்த.."
"இறைவன் சோதிப்பாருங்க ஆன கைவிடமாட்டார்" என்று கூறி டக்கென்று கழுத்திலிருந்த தாலியை கழற்றி "இதை விற்று விடுங்கள் எனக்கு மஞ்சள் கயிறு போதும்" என்றாள்.
"வள்ளி " என அதிர்ந்து விட்டேன்.
"அடுத்தவங்க பணத்துல வயிற்றை நிரப்பிக் கொள்வதைவிட இது எவ்வளவோ மேலுங்க. இந்த பணம் யாருக்கு சொந்தமோ அவர்களிடம் கொடுத்து விட்டு தான் நீங்கள் வீட்டில் நுழைய வேண்டும்" என்று ஓடி கதவை சாத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
மனைவியின் தாலி கையில் கனத்தது. பணப்பையில் ஆராய்ந்து பார்த்தேன் முகவரி இருந்தது. அந்த பங்களாவுக்கு நான் நுழைந்த போது கோயிலில் நுழைந்த உணர்வு. மெல்லிய ஓசையில் சிவனைப் பற்றி பாடல்கள். அழைப்பு மணியை அடித்தேன். நெற்றி நிறைய விபூதியுடன் ஒரு பெரியவர் வந்து பார்த்தார். நடந்த விவரங்களை அவரிடம் கூறி பணப்பையை கொடுத்தேன். மகிழ்ந்த அவர் உள்ளே அழைத்து சென்று குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்.
"தம்பி நிறுவனத்தில் இருந்து காரில் வரும் போது பணப்பை தவறி விழுந்தது விட்டது. திரும்பி தேடி செல்லும் போது கிடைக்கவில்லை. உங்களை போல் நல்லவர்களும் இருக்கிறார்கள் . அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்து விட்டது" என்றபடி என்னை பற்றிய விவரங்களை கேட்டார். என்னுடைய சூழ்நிலை பற்றிய விவரங்களை கூறினேன்.
அப்படியே யோசித்து ........"தம்பி கொஞ்சம் இருங்கள். இதே ஒரு போன் செய்து விட்டு வருகிறேன்"
என்று உள்ளே சென்றார். திரும்பி வந்தவர் "தம்பி என்னோட நிறுவனத்தில் வேலை செய்ய உங்களுக்கு விருப்பமா? அடுத்த வாரம் எங்கள் மேலாளர் ஓய்வு பெறுகிறார். அவரோட இடத்தில் யாரை நியமிப்பது என நினைத்து கொண்டு இருந்தேன். நீங்கள் ஏன் அந்த வேலையில் சேரக்கூடாது? நீங்கள் நாளைக்கு சேர்ந்து நிறுவனத்தில் டிரைனிங் எடுங்கள். வேலைக்கான உத்தரவு கடிதம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும். வேறு யாராவது உங்களுடைய சூழ்நிலையில் இருந்து இருந்தால் இந்த 12 லட்சம் பணம் திரும்ப வந்து இருக்காது. இந்த வேலை உங்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும். நான் கொடுக்கும் பரிசு" என்றார்.
நமச்சிவாயா...
என் கண்ணில் கண்ணீர். கண்ணீரில் ஆயிரம் நன்றிகள் என் மனைவி வள்ளிக்கு...
அந்த வீட்டின் ஒலிநாடாவில் குரு உபதேசம் மெல்லியதாக கேட்டது. "மூவுலகையும் ஆளும் சிவபெருமான் சோதிப்பான் ஆனால் நம்பியோரை கைவிட மாட்டார்." என்று கேட்டது.
எடுக்காத போன்கால்கள் சில வாழ்வுகளை முடித்துவிடும்..
சொல்லாத பாராட்டுக்கள் சிலர் துயருக்குள் கொண்டு விடும்.
நடக்காத சந்திப்புகள் நட்புகளையே பிரித்துவிடும்..
நடிகர் சுஷாந்த் இறக்குமுன் ப்ரியப்பட்ட யாருக்கோ போன் செய்திருக்கிறார். நண்பனோ அல்லது காதலியோ...அந்த போனை எடுத்து பேசி இருந்தால் ஒரு வேளை சுஷாந்த் இன்று உயிருடன் இருந்திருக்கலாம்...
சில்க் ஸ்மிதா நடிகையாக வளர்ந்த காலத்தில் அவருக்கு போட்டியாக இறங்கியவர் அனுராதா. அனுராதாவுக்கும், சில்க்குக்கும் ஆகவே கூடாதென கங்கணம் கட்டி பரப்பப்பட்ட வதந்திகளால் சில்க் அனுராதாவோடு பேசுவதேயில்லை.
ஒரு காலகட்டத்தில் சில்க்கின் சொந்தப்படத்தில் அனுராதா நடிக்க சென்றபோது இருவரும் நட்பாகி தோழிகளாகினர். வாடி போடி என அழைக்கும் நட்பாகி மனம் விட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தனர்.
ஒரு நாள் இரவு சில்க் அனுராதாவை போனில் அழைத்து உடனே சந்திக்க வேண்டும் என சொல்ல அனுராதாவோ இப்போது தான் ஊரிலிருந்து வந்திருக்கிறேன். நாளை காலை சந்திப்போம் என சொல்ல..மறு நாள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பிறகு சில்க்கை சந்திக்க முடிவெடுத்து பிள்ளைகளை தயார் படுத்தும் போது டிவியில் சில்க் தற்கொலை செய்தி...
ஒரு வேளை அனுராதா பேசி இருந்தால் அது நிகழாமல் இருந்திருக்கலாமோ?
எந்த அழைப்பையும் எடுங்கள். எவரையும் புறக்கணிக்காதீர்கள்...புறக்கணிப்பு ஒரு பெரிய கொடுமை. அதை பல விதத்தில் பெற்ற அனுபவம் பலருக்கும் இருக்கும்...
நான் வெளிநாட்டிலிருந்து யாருக்கும் போன் செய்வதில்லை. பேசினால் எல்லோரும் ஏதோ அவசரவேலை இருப்பது போல்..அப்படியா..சௌக்கியமா...வச்சிடவா என உடனே வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள். அதோடு போன் அழைப்பையே விட்டு விட்டேன்....
நடைபெறாத சந்திப்புகள் துயரங்களை தந்து விடலாம்...புறக்கணிப்புகள் ஏக்கங்களை தந்துவிடலாம்.....
வியந்து பார்க்கும் மனிதர்களில் இவர் ஒருவர். பிரதாப் சி ரெட்டி. பெயர் சொன்னாலே போதும். அப்பல்லோ குழுமத்தின் சேர்மன்.
92 வயது நம்ப முடிகிறதா? இன்றும் பத்து மணிக்கு அலுவலகம் வருகிறார் 5 மணி வரை பணி செய்கிறார் வாரத்தில் ஆறு நாட்களும் இப்படி வேலை பார்க்கிறார்!
அப்பல்லோ மருத்துவமனையை துவக்கியவர் இவரே. நாடெங்கிலும் 71 மருத்துவமனைகள் இவருக்கு சொந்தம். 5000க்கும் அதிகமான ஃபார்மசிகள் இவருக்கு இருக்கின்றன. இவரது பேத்தி உபாசனா காமினேனியை தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ராம்சரண் தேஜா மணம்முடித்திருக்கிறார்.
சர்வதேச தரத்தை அகில உலக அளவில் மதிப்பிடுகையில் குறைந்த விலையில் நல்ல விதமான சேவையை அப்பல்லோ நிறுவனம் தந்திருக்கிறது. இன்றும் தந்து கொண்டிருக்கிறது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து அமெரிக்கா சென்று மேலும் படித்து ஒரு சிறந்த கார்டியாலஜிஸ்ட் ஆக தன்னை நிறுவினார். அன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் காம்ப்ளக்ஸ் ஆக இருந்த கேஸ்களை எல்லாம் அமெரிக்காவிற்கு ரெஃபர் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனென்றால் பாரதத்தில் நல்ல மருத்துவ கட்டமைப்பு அன்று இல்லை.
அப்படி ஒரு இதய நோயாளியை அவர் US போவதற்கு சொல்லும் பொழுது அந்த நோயாளியால் ஏழ்மை காரணமாக அங்கு சென்று சிகிச்சை பெற முடியாமல் போயிற்று. அந்த முடிவு இவருக்கு மனதில் கேள்விகளை எழுப்பிற்று. விளைவு அமெரிக்க தரத்தில் இங்கே மருத்துவமனை உருவாக அடிகோலியது.
நமக்கும் இப்படித்தான் சவால்கள் வருகின்றன நாம் எரிச்சல் அடையாமல், மனம் வருத்தப்படாமல், தடையாக அவைகளை நினைக்காமல், வெல்வது எப்படி என்று பிரதாப் சி ரெட்டியின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்....
இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும்.
ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட இருக்கலாம்.
அதிலும் மங்கலான பார்வை, கண்களில் இருந்து நீர் வடிதல் அல்லது நாள்பட்ட தலைவலி போன்றவை பலவீனமான கண்பார்வையின் அறிகுறிகள். இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
ஆயுர்வேதத்தின் படி, ஒருவரின் உடலில் பித்தமானது சமநிலையற்று இருந்தால், கண்பார்வை பலவீனமாகக்கூடும். எனவே இந்த பித்தத்தை சமநிலையாக்க ஒருசில ஆயுர்வேத வைத்தியங்கள் உள்ளன. அவற்றால் நிச்சயம் கண்பார்வையை மேம்படுத்த முடியும்.
திரிபலா:
1 டேபிள் ஸ்பூன் திரிபலா பொடியை நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வடிகட்டி, அந்நீரால் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் அந்த நீரால் கண்களைக் கழுவி வந்தால், கண் பார்வை மேம்படும்.
நெல்லிக்காய்:
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை நீரில் கலந்து பருகி வர, கண்பார்வை பலமாகி, கண் பிரச்சனைகள் தடுக்கப்படும்.
கேரட்:
உங்களுக்கு கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை பிரச்சனை இருப்பின், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வாருங்கள். இல்லாவிட்டால் தினமும் ஒரு கேரட்டை உட்கொண்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பாதாம்:
இரவில் படுக்கும் முன் ஒரு கையளவு பாதாமை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை தோலை நீக்கிவிட்டு, அரைத்து பேஸ்ட் செய்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து தினமும் பருக, கண் பார்வை மேம்படும்.
பிரிங்ராஜ்:
கண் பார்வை மேம்பட வேண்டுமானல், பிரிங்ராஜ் மூலிகையை அரைத்து பேஸ்ட் செய்து, கண்களின் மேல் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்களின் ஆரோக்கியம் மேம்படுவதைக் காணலாம்.
அதிமதுரம்:
ஒரு டீஸ்பூன் அதிமதுரப் பொடியை பாலில் கலந்து, தேன் சேர்த்து பருகி வர, கண்களில் இருக்கும் அழற்சி மற்றும் வலி நீங்கி, கண்பார்வை மேம்படும்.
பூண்டு:
தினம் ஒரு பூண்டு அல்லது சமைக்கும் உணவில் பூண்டை சேர்த்து வர, அதில் உள்ள உட்பொருட்கள், பலவீனமான கண் பார்வையை மேம்படுத்தி, கண் பிரச்சனைகள் அண்டாமல் தடுக்கும்.
உடல் நலம் காப்போம்..
வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்
வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.
பயன்கள்.:
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.
தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.
பழமையான கோயில்களில் கோயில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதையும், நம் கண் முன்னே பலரும் காசு போடுவதையும், நாம் கண்டிருப்போம்.
இது போன்று கோயில் கிணற்றில் காசு போடப் பட்டதின் காரணத்தைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
பழமையான காலங்களில் புழக்கத்தில் இருந்த காசுகள் பெரும்பாலும் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டது.
மண், நீர், காற்று ஆகியவற்றில் இயற்கையாகவே செம்பு உலோகம் உருவாகிறது. இவ்வளவு ஏன், நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு சில உலோகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. செம்புபாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் அந்த காலத்தில் இருந்தது. பழங்காலத்தில் குளம், குட்டைகளில் இருந்தும், கிணறுகளிலிருந்தும் தான் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர்.
அப்படி எடுத்து வரும் தண்ணீரை அருந்துவதற்கு செம்பு கலந்த பின் நீரை அருந்துவது உடலுக்கு வலிமையும், குளிர்ச்சியும் தந்துநலம் உண்டாக்கும். இதனால், செப்பு காசுகளை குளத்தில் போடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இன்றைய காலகட்ட த்தில், ஆறு, கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் பழக்கம் காணாமலேயே போய்விட்டது. அதோடு, செப்பு காசு முறை அழிந்துவிட்டது.
ஆனால், பழமையான கோயில்களில் இருக்கும் கிணற்றில் காசு போடும் பழக்கம் மட்டும் இன்னும் நம்மில் பலரிடம் இருந்து கொண்டே இருக்கிறது.
உண்மையில், செம்பு காசுகளைத் தான் கிணறு, குளத்தில் போட வேண்டும். அவைகள் தான் நமக்கு நன்மையளிக்கும். சிந்திப்போம்.... செயல்படுவோம்.
மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன.
ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும், வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல.
நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.
ஒரே நீரைத் தான் அருந்துகிறோம், ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம். ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோஅதைப் பொறுத்துத்தான் நம்முடைய தன்மை வெளிப்படும்.
நாம் எதை சேர்க்கிறோம் அற்பமானதையா? இல்லை அற்புதத்தையா ?
அற்பமானது என்னும் ஆறு குணங்கள்
1. பேராசை
2. சினம்
3. கடும்பற்று
4. முறையற்ற பால்கவர்ச்சி
5. உயர்வு தாழ்வு மனப்பான்மை
6.வஞ்சம்
அற்புதம் என்னும் ஆறு குணங்கள்
1. நிறை மனம்
2. பொறுமை
3. ஈகை
4. கற்பு நெறி
5. சம நோக்கு
6. மன்னிப்பு
இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பையும் கருணையையும், அறிவாய் விளங்கும் பேராற்றலையும்
உள்ளுணர்வாய் உணர்ந்தால்
அற்பமான தேவையற்ற குணங்கள்
நம்முள் எட்டிப் பார்காது.
அற்புதமான நற்குணங்கள்
நம்மோடு இணைந்து வழிநடத்துமே.
இறையே குருவே சரணம்.
கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவது எப்படி ?
கெட்ட நேரம் தீய எண்ணத்தால் வரும்.
நல்ல நேரமாக மாற்ற எண்ணத்தை நல்ல எண்ணமாக மாற்றுங்கள்.
கெட்ட நேரம் தானாக ஓடி விடும்.
எமகண்டம், ராகு, குளிகை என்று பயமுறுத்துகிறார்களே ?எப்படி தப்பிப்பது ?
நாலு பேருக்கு உன்னால் முடிந்த உதவியை மனப்பூர்வமாக செய்தால் போதும். அவைகள் உன்னிடமிருந்து தப்பி ஓடிவிடும்.
தீதும் நன்றும் பிறர் தர வரா.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் பிடிவாத குணம் குறையும். இழுபறியான சில வரவுகள் மீண்டும் கிடைக்கும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான சூழல் உண்டாகும். சில அனுபவங்களால் புதிய பாதைகள் மனதளவில் புலப்படும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். சில அனுபவங்கள் மூலம் மனதளவில் புதிய பக்குவம் பிறக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மிதுனம்
நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான பலன்கள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான தடைகள் விலகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கடகம்
மனதில் நினைத்த காரியம் கைகூடும். உடன்பிறந்தவர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுகமான சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கலைப்பொருட்கள் மீதான ஆர்வம் மேம்படும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த நுணுக்கமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். சில செயல்களில் அனுபவத்தை பயன்படுத்துவது நல்லது. வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
விருச்சிகம்
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தோற்றமும் வாக்குவன்மையும் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தகத்தில் ஈர்ப்பு உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். ஆபரணப் பொருட்களில் கவனம் வேண்டும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனதில் மாற்றத்தை உண்டாக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகளை மேம்படுத்துவீர்கள். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். பெருமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி
மகரம்
வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் புரிதல் உண்டாகும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கவனத்தோடு இருக்கவும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
கும்பம்
பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சந்தேக உணர்வுகளால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தடைப்பட்ட பணிகள் நிறைவு பெறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். திருப்தியற்ற மனநிலை குறையும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
மீனம்
மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வரவுகள் உருவாகும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். சக ஊழியர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 23.6.2025
கிருஷ்ண பக்ஷ திரயோதசி - Jun 23 01:22 AM – Jun 23 10:10 PM
கிருஷ்ண பக்ஷ சதுர்தசி - Jun 23 10:10 PM – Jun 24 06:59 PM
கார்த்திகை - Jun 22 05:38 PM – Jun 23 03:16 PM
ரோஹிணி - Jun 23 03:16 PM – Jun 24 12:54 PM
நல்ல நேரம்:
காலை : 06:00 - 07:00
காலை : 08:00 - 09:00
மாலை : 01:00 - 02:00
பகல் : 03:00 - 04:00