என்ன ஒரு அழகான நடை
நேர்த்தியான நடைபயிற்சி
டொரண்டோ பெரும்பாக பகுதி மற்றும் நயாகரா பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு உறைபனிபொழிவு எச்சரிக்கையை கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை டொரண்டோ நகரம், மிசிசாகா–ப்ராம்ப்டன், நயாகரா ஃபால்ஸ்–வேலண்ட்–தெற்கு நயாகரா பிராந்தியம், மற்றும் செயின்ட் கத்தரீன்ஸ்–கிரிம்ஸ்பி–வடக்கு நயாகரா பிராந்தியம் ஆகிய பகுதிகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக சில பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. தங்கள் மரங்கள் மற்றும் செடிகளை மூடிப்பாதுகாக்குமாறும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார் மமிதா பைஜு. தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் இவர் நடித்துள்ள ‘டியூட்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்ததாக விஜய்யுடன் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளது
இதனிடையே, படங்கள் தொடர் வெற்றி பெறுவதால் மமிதா பைஜு ரூ.15 கோடி சம்பளம் கேட்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மமிதா பைஜு. இந்த விவகாரம் தொடர்பாக, “சமூக ஊடகங்களில் நான் ரூ.15 கோடி சம்பளம் பெறுவதாக செய்திகள் பரவி வருகின்றன. நான் சமூக ஊடகங்களில் இல்லை. ஆனால், அந்த செய்திகளைப் பார்த்து உண்மையில் ஆச்சரியமடைந்தேன்.
சிலர் அதன் உண்மை தன்மையை அறியாமல், நம்புகிறார்கள். ரூ.15 கோடி சம்பளம் பெருமளவுக்கு பெரியவராகிவிட்டாரா என்று சிலர் அதற்கு கருத்து தெரிவித்திருந்தார்கள். சமூக ஊடகங்களில் பார்க்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மையில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார் மமிதா பைஜு.
சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால், இருமல் தொல்லையிலிருந்து விடுபட உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் மூக்கு ஒழுகல் இருந்தால். அப்போது இஞ்சி டீ செய்து, அதில் வெல்லம் சேர்த்து குடிக்கதால் மூக்கு ஒழுகல் நின்றுவிடும்.
சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால்,வாயுத்தொல்லை நீங்கும்.
உடல் எடையைக் குறைக்க சுக்கு மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து, அதனை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள தெர்மோஜெனிக் ஏஜென்ட்,கொழுப்புக்களை கரைத்து, தொப்பையின் அளவை குறைத்து, உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
சில நேரங்களில் சிறுநீரானது முழுமையாக வெளியே வராமல் தேங்கிவிட்டால் அதில் உள்ள கிருமிகளால் சிறுநீர் தொற்று ஏற்படும். வெதுவெதுப்பான பாலில் சுக்கு பொடியை சேர்த்து, அதில் நாட்டுச் சர்க்கரைக் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக நோய் தொற்று குணமாகும்.
வயிற்றில் எரிச்சல் ஏற்படும்பொழுது, அதனை சரிசெய்ய, கரும்பு சாறுடன் சிறிதளவு சுக்கு பொடியை சேர்த்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சுக்குத் தூள் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அதை வடிகட்டி, தேன் கலந்து தினமும் பருகி வந்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி குணமாகும்.
நடிகை ஷாலினி பகிர்ந்து கொண்டது....
“இந்த படம் கே.ஆர்.விஜயாம்மாவின் தங்கை கல்யாணத்தப்ப எடுத்தது. அரசியல்வாதிகளும் சினிமா ஆட்களும் எம்.ஜி.ஆரிடம் நெருங்கவே தயங்கிய நேரம். நான் நேராகப் போய் அவர் கழுத்தில் ஒரு சந்தன மாலையைப் போட்டேன். என்னை இழுத்து அணைச்சு என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். ரொம்ப நைஸா அவர்கிட்ட ‘உங்க பேர் என்ன?’னு கேட்டேன். சிரிச்சிக்கிட்டே “எம்.ஜி.ஆர்”னு சொன்னார். “அதுதான் தெரியுமே. அப்படின்னா என்ன அர்த்தம்?”னு மறுபடி கேட்டேன். இன்னும் பலமா சிரிச்சார். பிறகு எம்.ஜி.ராமச்சந்திரன்னு அழுத்தமாச் சொன்னார்.
“அப்ப ஏன் எல்லோரும் உங்களை “எம்.ஜி.ஆர்”னு சொல்றாங்கன்னு திரும்பவும் கேட்டேன். மறுபடியும் பலமாகச் சிரிச்சார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கவே இல்லை.
அவரோட இறுதி ஊர்வலத்தின் போது திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்த போதுதான் அவரது புகழின் முழுப் பரிமாணமும் எனக்கு புரிஞ்சது. எம்.ஜி.ஆர் சார் என்னை அணைச்சுக் கொஞ்சினப்போ போட்டிருந்த பிங்க் கலர் கவுனை இன்னும் நினைவுப் பொருளா பத்திரப்படுத்தி வைச்சிருக்கேன்” என்கிறார் நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினி.
டாக்டர் சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்த சமயம்..
அரசு முறை பயணமாக 'மஸ்கட்'டுக்கு செல்கிறார்..
அந்த நாட்டின் மரபை மீறி அரசரே விமான நிலையம் வந்து அவரை வரவேற்க காத்திருகிறார்..
விமானம் நின்று படிகள் இணைக்கப் பட சர்மா அவர்கள் வெளிப்படுகிறார்..
அவரைக் கண்டதும் அரசர் படியில் ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அளவளாவிக் கொண்டு இறங்கி வருகிறார்..
இது அந்நாட்டு அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது..
எதுவும் காட்டிக் கொள்ளவில்லை, அரசர் ஆயிற்றே..
ஆயிற்று..
அரசு சார்ந்த காரியங்கள் அனைத்தும் முடிந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பு நடைபெறுகிறது...
சம்பிரதாய கேள்விகள் முடிந்து அந்த நாட்டு பத்திரிகை நிருபர்
அந்த கேள்வியை அரசரிடம் வைக்கிறார்..
"இதுநாள் வரை எத்தனையோ நாட்டின் உயர் தலைவர்கள் வந்த போதும் நேரில் வராத அரசர் ஒரு ஜனாதிபதியை வரவேற்க ஏன் மரபை மீறி வரவேண்டும், அப்படி என்ன அவர் சிறப்பு".???
அங்கே ஒரு சிறு சலசலப்பு..
அரசர் பதிலளிக்கிறார்,
" நான் இப்போது அரசனாக இருக்கலாம்,
அவர் ஜனாதிபதியாக இருக்கலாம்,
ஆனால் நான் இந்தியாவில் பூனா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எனக்கு கல்வி போதித்த ஆசான் அவர்..
வெறுமனே கல்வி போதித்தலையும் தாண்டி அந்நாட்டின் கலாச்சார பண்பாடுகளைப் பற்றிய தெளிவான பார்வையை எனக்கு கொடுத்தவர்..
இன்றளவும் நான் ஓரளவு பண்பானவனாக இருப்பதாக நினைப்பதற்கு அவரின் தோழமையான வழிகாட்டுதலும் ஒரு காரணம்"..
"இந்திய மண்ணில் கல்வி போதிக்கும் ஆசிரியரை கடவுளுக்கு நிகராக போற்றுகிற பண்பாடு கொண்டவர்கள் அவர்கள்..
கொஞ்சம் காலம் நானும் அந்த மண்ணில் இருந்தவனில்லையா..?
அந்த பண்பாடு எனக்கும் வருவதில் ஆச்சரியம் என்ன இருக்கப் போகிறது"..
என பெருமையாக குறிப்பிடுகிறார்..
சர்மா அவர்களுக்கு பூரிப்பாக இருக்கிறது, ஒரு அன்னிய தேச மாணவனுக்கு சிறப்பான பண்பை போதித்த ஆசிரியராக நெகிழ்வில் அவர் குழைந்து போகிறார்..
உள்ளுக்குள் இந்த ஸ்லோகம் ஒலிக்கிறது அவருக்கு...
"குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹா
குரு சாட்சாத் பரப்பிரம்மம்
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ"..
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். பிறரை நம்பி எந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் அமைதி காக்கவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிதுனம்
சகோதரர்களால் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஏற்படும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடலில் இருந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோக தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புகள் அமையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர்கள் வழியில் இணக்கம் ஏற்படும். வழக்கு பிரச்சனைகள் ஓரளவு குறையும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கன்னி
உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பூர்விக சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
எதிலும் தீர யோசித்து முடிவு செய்யவும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். கடன் பிரச்சனை தீர ஆலோசனை கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். உண்ணும் உணவில் கவனம் வேண்டும். பெரியோர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
விருச்சிகம்
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதகமாக முடியும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
சிறு தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். உறவுகள் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறு தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். விவசாய பணிகளில் பொறுமை வேண்டும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
கும்பம்
பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிர்வாக துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
நடிகர் சந்திர பாபு அவர்களை அனைவரும் அறிவோம்.
திரு.சந்திர பாபு அவர்கள் ஒரு தயாரிப்பாளராக, ஒரு நடன கலைஞராக, ஒரு நடிகராக வலம் வந்தவர்.
தட்டுங்கள் திறக்கபடும் என்ற திரைப்படத்தை தயாரித்து தோல்வி கண்டவர்.
தாம் தயாரித்த திரைப்படத்தினால் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக சந்திர பாபு அவர்கள் மதுவிற்கு அடிமையாகி கடைசி காலங்களில் ஒரு வேளை சோத்துக்கே அவதி பட்டார்கள்.
தனது கஷ்டங்களையும் ,துக்கங்களையும் நடிகர் திலகம் அவர்களிடம் சென்று முறை இட்டார்கள்.
அண்ணே, சாப்பாட்டிற்கே கஷ்டமா இருக்குண்ணே. ஏதாவது செய்யுங்கண்ணே என்று களைப்புடன் சந்திர பாபு கூறுகின்றார்.
சந்திர பாபு அவர்களுக்கு உணவும், செலவிற்கு பணமும் கொடுத்து உதவி செய்கின்றார்கள் நடிகர் திலகம் அவர்கள்.
நடிகர் திலகம் மேலும் 3 சினிமாவில் சந்திரபாபு நடிப்பதற்கு சிபாரிசு செய்தார்கள். நீதி, ராஜா மேலும் ஒரு படம் நினைவில் இல்லை.
வருமானம் கிடைத்ததும் மீண்டும் சந்திரபாபு அவர்கள் மதுவிற்கு அடிமையாகின்றார்கள். திரைப்படத்தில் நடிப்பதற்கே முடியாத நிலைக்கு சந்திர பாபு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.
சந்திர பாபு அவர்கள் மீண்டும் நடிகர் திலகம் அவர்களிடம் உதவி கேட்டு வருகின்றார்கள்.
நடிகர் திலகம் அவர்கள் சந்திரபாபு அவர்களிடம் நீ எங்கும் செல்ல வேண்டாம் என்னுடனே இருந்து கொள் என்று கூறி சந்திர பாபு அவர்களை தனது சகோதரனை போல் நடிகர் திலகம் அவர்கள் பார்த்து கொண்டார்கள்.
சில நாட்களில் சந்திர பாபு அவர்கள் நடிகர் சிவாஜியிடம்,அண்ணே வேலை இன்றி சாப்பிட மனம் ஏனோ ஏற்கவில்லை. ஏதாவது வேலை கொடுங்கண்ணே என்று சந்திரபாபு அவர்கள் கேட்கின்றார்கள்.
தள்ளாடும் உடல் நிலையில் நீ என்ன வேலை செய்வாய்? சரி நீதான் நமது பேரன், பேத்திகளை கார் ஓட்டுநருடன் சென்று பள்ளிக்கூடங்களுக்கு சென்று அழைத்து வா என்றார்கள்.
நாட்கள் நகர்ந்தது.வாரங்களும் கடந்தது. மாதங்களும் உருண்டது.
ஒரு நாள் படப்பிடிப்பிலிருந்த நடிகர் திலகம் அவர்களுக்கு ஒரு.செய்தி செல்கின்றது. ஆம் அது ஒரு இடி போன்ற செய்தியாகும்.
தங்களின் அரவணைப்பில் இருக்கும் தம்பி சந்திரபாபு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற இடியான செய்தி தான் அது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வீட்டிற்கு விரைகின்றார்கள்.
அனைவரையும் சிரிக்க செய்து, தள்ளாடி முடிவில் அல்லாடிய உடல் மூச்சின்று சடலமாக கிடந்தது. உடலை பார்த்த நடிகர் திலகம் அவர்கள் மிகுந்த வேதனை அடைந்தார்கள்.
நடிகர் திலகம் அவர்கள் இறுதியாக சந்திரபாபு அவர்களின் இறுதி சடங்கை கிறிஸ்தவ முறைப்படி சந்திச பாபுவின் உடலை தேவாலயத்திற்கு கொண்டு சென்று ஒரு கிறிஸ்தவராகவே நடத்தி நிறைவு பெற செய்தார்கள்.
நடிகர் சந்திர பாபு அவர்களின் தம்பி அவர்களே ஒரு நேர்காணலில் இதை பெருமையுடன் கூறி இருந்தார்கள்.
இனம் அறியா மனம் படைத்தவர் எங்கள் நடிகர் திலகம்.
உதவியே தனது பதவியாக அலங்கரித்தவர் எங்கள் நடிகர் சிவாஜி கணேசன்.
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 10 ஆம் தேதி திங்கட்கிழமை 27.10.2025.
இன்று அதிகாலை 03.22 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி
இன்று காலை 11.30 வரை மூலம் . பின்னர் பூராடம்.
இன்று அதிகாலை 05.53 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.
இன்று அதிகாலை 03.22 வரை பாலவம். பின்னர் மாலை 03.59 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று காலை 11.30 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை
- இரவில் கண் விழித்திருத்தல்
- காலை உணவை தவிர்த்தல்
- ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்
- பணத்தை நோக்கிய ஓட்டம்
- பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்
- கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்
- வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள்
- கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல
- நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.
- தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.
- போதிய அளவு நீர் அருந்துங்கள்.
- இளநீர் போன்றவை மிக நல்லது
- பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள்.
- காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.
- அளவாக உண்ணுங்கள்.
- எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
- தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.
- யோகா தியானம் உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.
- மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.
- இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.
- உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.
- அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்.
அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார்..!!
அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி.
''ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!'' என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான்.
சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.
முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்து விட்டார். இதைஅறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றாள்.
பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்து விட்டது.
அவள் பானையுடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த வயோதிகர் அந்த குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி ''கல் எங்கே?'' என மனைவியைக் கேட்டார். எதுவும் அறியாமல் அவள் விழிக்க, ஆற்றிற்கு சென்று பல மணி நேரம் தேடியும் பலனின்றி திரும்பினார்.
சில தினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் முதியவரை பார்க்கும் போது, அவர் நடந்ததை கூற அர்ஜுனன் கண்ணனிடம், ''இவர் அதிர்ஷ்டக்கட்டை,'' என்றான். அதை ஆமோதித்த கண்ணன், ''இந்த முறை நீ இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு,'' என்றார்.
அர்ஜுனனும், அதைக் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, ''இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தை கொடுத்து விடும்?'' எனக் கேட்டான். எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,'' எனக்கூறிய கண்ணன் அர்ஜுனனுடன் முதியவரை பின் தொடர்ந்தார்.
செல்லும் வழியில் மீனவர் ஒருவர் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி முதியவரிடம் கேட்டான்.
யோசித்த முதியவர், இந்தக் காசுகள் எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டு புண்ணியமாவது மிஞ்சட்டும் என தீர்மானித்தார். அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார்.
இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்த அவர், மீனின் வாயைப் பிளந்து பார்த்தார்.
அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார். அது அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல்.
சந்தோஷ மிகுதியால் 'சிக்கியாச்சு' என்று கூச்சலிட்டார். அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவரிடம் கொள்ளையடித்த திருடன் வர, அவன்
திடுக்கிட்டு, தன்னை தான் முதியவர் கூறுகிறார் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில், கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர். அவனை சிறையில் அடைத்து விட்டு, அவன் வீட்டிலிருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அனைத்தையும் முதியவருக்கு கொடுத்தனர்.
அர்ஜுனன் கண்ணனிடம், ''வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள். அதிலும் இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்?'' என்று கேட்டான்.
கண்ணன் சிரித்துக்கொண்டே… ''இவர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல், மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை. இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்றாலும், தனக்கு உதவா விட்டாலும், இன்னொரு உயிராவது வாழட்டுமே என கருதினார். இந்த புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கும் மேலாகவே அடைந்தார்.
பிறருக்கு நல்லதை நினை உனக்கான நல்லது தானாகவே நடக்கும்..!!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அமெரிக்காவுக்கு யானை குட்டி ஒன்றை அனுப்பிய நிலையில் அது குறித்து கேள்விப்பட்ட அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடி போட்ட உத்தரவு தொடர்பான செய்தி தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் திரை உலகின் பிதாமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருடைய நடிப்பின் சாயல் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும் என்பதும் தெரிந்ததே. ஒரு நடிகர் வாழும் போதே அவருக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்தது என்பதும் உலகம் முழுவதும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மட்டுமே.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது கடந்த 1962 ஆம் ஆண்டு அமெரிக்க பூங்கா ஒன்றுக்கு வரும் குழந்தைகள் விளையாடுவதற்காக யானை குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு சிவாஜி கணேசன் அனுப்பிய யானை குட்டி சென்றது.
அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் அந்த யானை குட்டியுடன் விளையாடிய செய்தி ஊடகங்களில் பரபரப்பான நிலையில் இது குறித்து கென்னடி கேள்விப்பட்டார். உடனடியாக சிவாஜி கணேசன் யார்? அவருடைய பின்னணி என்ன என்பதை அறிய முயற்சி செய்தார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்ட அமெரிக்க அரசு, சிவாஜி பற்றிய முழு விவரங்களையும் கேட்டது.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் சிவாஜி கணேசன் பற்றிய தகவல்களை அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்து பார்த்து ஆச்சரியமடைந்த கென்னடி உடனடியாக சிவாஜி கணேசன் அமெரிக்க அரசின் விருந்தினராக சுற்றுலா வருவதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.
இதன்படி சிவாஜி கணேசனுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று கொண்ட சிவாஜி கணேசன் அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்கா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு நடிகர் அமெரிக்காவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது அதுவே முதல்முறை. இந்த பயணத்தின் போது தான் உலகின் மிகச்சிறந்த நடிகர் என்று அழைக்கப்பட்ட மார்லன் பிராண்டோவை சிவாஜி கணேசன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உள்ள பல இடங்களுக்கு சிவாஜி கணேசன் சுற்றுப்பயணம் செய்த போது அங்குள்ள இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்த பயணத்தின்போது அவர் அமெரிக்க அதிபர் கென்னடியையும் சந்தித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சிவாஜி கணேசன் சென்னை திரும்பியபோது அப்போதைய நடிகர் சங்க தலைவராக இருந்த எம் ஜி ஆர் மாலை அணிவித்து சென்னை விமான நிலையத்தில் சிவாஜியை சிறப்பாக வரவேற்றார். அதுமட்டுமின்றி சிவாஜியை நடிகர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
கரூர் செல்ல ஈரோடு பஸ் ஸ்டேண்டில் நின்ற ஒரு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். (நடுவுல தான்..தாய் சொல்லை தட்டாதே)
பஸ் ஓரளவு காலியாய் இருந்தது அப்போ ஒரு பெரியவர் வந்து "தம்பி பக்கத்துல ஆள் வருதா?"
" ஆமா(பொய்) வேற எங்கயாவது உக்காருங்க"
சில நிமிடம் கழித்து டிப் டாப்பாய் ஒரு ஆசாமி "சார் பக்கத்துல ஆள் வருதா?"
" ஆமா(மறுபடியும் பொய்). ஏன் சார் பஸ்ல அவ்வளவு இடம் இருக்குல்ல அங்க போய் உக்காரலாம்ல என்று நினைத்ததை அவர் உணர்ந்து வேறு இடம் சென்று அமர்ந்து கொண்டார்.
ஓரளவு பஸ் நிரம்பி விட்டது.. இப்போ ஒரு பையன் வந்தான். அழுக்கு சட்டை அழுக்கு பேண்ட் " சார் பக்கத்துல ஆள் வருதா?"
நான் இனி பொய் சொல்ல முடியாதென்றெண்ணி "இல்ல யாரும் வரல ஏன் ?'
இல்ல நான் உக்காரணும்"
" சரி உக்காரு" ஒரு வித நெருடலுடன் சொன்னேன். அவன் உடனே தான் கொண்டு வந்திருந்த கூடையை என் அருகில் வைத்து விட்டு கீழிறங்கி எங்கேயோ சென்று விட்டான்.
கூடைக்குள் அழுக்கு துணிகள்.. அதிலிருந்து துர் நாற்றம் வேறு.
என்னடா இது பிரபுவுக்கு வந்த சோதனை ?!
முதல்ல கேட்ட அந்த பெரியவர் அல்லது டிப் டாப் ஆசாமி இருவரில் யாருக்கேனும் இடம் கொடுத்திருக்கலாம். இப்படி ஆகிருச்சேன்னு கவலை பட்டுக்கொண்டே அந்த கூடையை மெல்ல அழுத்தி பார்த்தேன். (என் பையன் அடிக்கடி என்கிட்ட வந்து " ஏம்ப்பா ! ஈரோட்டுக்கெல்லாம் தீவிரவாதிங்க வருவங்களாப்பா" னு )
அந்த கூடை முழுதும் அழுக்கு துணிகள்.
தீடிரென சத்தம் எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கி ஓட துவங்கினார்கள் எனக்கு என்னென்னே புரியலை.
பின்பு தான் புரிந்தது இந்த பஸ் கிளம்பும் முன்பாக ஒரு பிரைவேட் பஸ் கிளம்ப தயாரான பொழுது அனைவரும் இறங்கி அதை நோக்கி ஓடினர். நான் வேற நடுவுல உக்காந்துருக்கேன் . நான் போறதுக்குள்ள அந்த பஸ்ல சீட் நிரம்பிடும். இந்த பஸ் கிளம்ப இன்னும் தாமதம் ஆகும்போல தெரிந்தது. இந்த கூடைக்காரன வேற காணோம்.
திடீரென்று பஸ்சுக்கு வெளிய இருந்து என் ஜன்னலோரம் அவன் வந்து
"சார் சார் அந்த கூடையை கொடுங்க கூடையை கொடுங்க" னு கத்தினான்.
நான் எதுக்கு னு கேட்டேன்.
"சார் சார் கூடையை கொடுங்க சார் நான் அந்த பஸ்ல ஏறனும்"
சரி இந்தா னு சொல்லி என் என் இரு விரல்களால் அந்த கூடையை வேண்டா வெறுப்பாய் தூக்கி அவனிடம் நீட்டினேன்.
.அவன் கூடையை வாங்கியவுடன் சொன்னான்
" சார் நீங்க மெதுவா வாங்க நான் உங்களுக்கு அந்த பஸ்ல சீட் போட்டு வைக்கிறேன்" னு
நான் யாரை அழுக்கு பையன்னு நெனச்சேனோ, யார் கூட போனா என் பயணம் இனிக்காதுன்னு நெனச்சேனோ, அவன் சொல்றான் வாங்க சார் உங்களுக்கு சீட் போட்டு வைக்கிறேன்னு.
பள்ளியிலும் கல்லூரியிலும் தான் பாடம் நடத்திட்டு பரீட்சை வைப்பாங்க.
ஆனால் வாழ்க்கையில் பரீட்சை வெச்சுட்டுத்தான் பாடம் நடத்துவாங்கனு புரிஞ்சுகிட்ட ஒரு தருணம் அது.
நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனும் நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்க இறைவனால் அல்லது இயற்கையால் அனுப்பப்படுகிறான் என்பதை நான் நம்புகிறேன்.
அந்த பையன் அருகே அமர்ந்து நான் போன அந்த இரண்டு மணி நேர பயணத்தில் துர்நாற்றம் அடிக்கவில்லை. நல்ல மனத்தின் மணம்தான் வீசியது......
1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.
2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.
3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.
6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.
7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.
9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.
10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.
12. சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.
கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், "இந்தக்கடல் மாபெரும் திருடன்", என்று.
கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமான மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், "இக்கடல் பெரும் கொடையாளியப்பா...", என்று.
அதே கடலில் ஒருவன் நீந்தி சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், "இக்கடல் மக்களை கொன்று குவிக்கிறதே", என்று.
ஒரு வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கடற்கரையில் எழுதினார், "இந்தக்கடல் ஒன்றே போதும், நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்.!", என்று.
ஒரு மாபெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்து விட்டு சென்றது.
பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே. இவ்வுலகை ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் பார்க்கிறார்கள். நீயும் தூய மனதோடு உலகைப் பார் அழகாக இருக்கும்.
மரியாதைக்குரிய ஒரு பள்ளி ஆசிரியர் சமீபத்தில் ஓய்வு பெற்றிருந்தார்.
அவரும் அவரது மனைவியும் போபாலில் உள்ள ஒரு ஃப்ளாட்டில் வசித்து வந்தனர்.
தசரா பண்டிகைக்கு, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்தனர்.
செல்வதற்கு முன், ஆசிரியர் தனக்குள் நினைத்துக் கொண்டார்.
“நாம் இல்லாதபோது, ஒரு திருடன் உள்ளே நுழைந்தால் என்ன செய்வது? வீட்டில் பணம் இல்லாவிட்டாலும், அலமாரிகளை உடைத்து எல்லா இடங்களிலும் குழப்பம் விளைவிக்கலாம்!”
எனவே, தனது வீடு சேதமடையாமல் இருக்க, அவர் மேசையில் ₹1000-மும் மற்றும் ஒரு கடிதமும் வைத்தார்.
"அன்புள்ள தெரியாத திருடனே!
என் வீட்டிற்குள் நுழைய நீங்கள் எடுத்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நான் ஒரு நடுத்தர வர்க்க மனிதன்,
என் ஓய்வூதியத்தில் மட்டுமே வாழ்கிறேன்.
எனவே இங்கே மதிப்புமிக்க எதுவும் இல்லை.
உங்கள் கடின உழைப்பும் விலைமதிப்பற்ற நேரமும் வீணாகிவிடும் என்று நான் வருத்தப்படுகிறேன்.
எனவே, உங்கள் முயற்சிக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக,
இந்த சிறிய தொகையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
மேலும், உங்கள் தொழிலில் (திருட்டு) நீங்கள் மேலும் வெற்றிபெற உதவ,
கீழே சில குறிப்புகளை நான் உங்களுக்கு தருகிறேன்.
மாஸ்டரின் *அறிவுரை* பின்வருமாறு வாசிக்கப்படுகிறது.
8வது மாடியில் - ஒரு ஊழல் மந்திரி வசிக்கிறார்.
7வது மாடியில் - ஒரு வளைந்த சொத்து வியாபாரி.
6வது தேதி மாடி - ஒரு கூட்டுறவு வங்கித் தலைவர்.
5வது மாடியில் - ஒரு செல்வம் கொழிக்கும் தொழிலதிபர், கறார் பேர்வழி.
4வது மாடியில் - ஒரு பிரபல கைதேர்ந்த வழக்கறிஞர்.
3வது மாடியில் - ஒரு ஊழல் அரசியல்வாதி
அவர்களிடம் மலையளவு தங்கமும் பணமும் உள்ளன.
உங்கள் ‘வணிக வெற்றி’ அவர்களை சிறிதும் தொந்தரவு செய்யாது!
ஏனென்றால் அவர்கள் போலீசில் புகார் கூட செய்ய மாட்டார்கள்!”
-----------------------------------
தசராவுக்குப் பிறகு, மாஸ்டர் வீடு திரும்பியபோது,
மேசையில் ஒரு பெரிய பையைக் கண்டார்.
உள்ளே ₹10 லட்சம் ரொக்கம் இருந்தது!
மற்றும் ஒரு கடிதம் —
"மதிப்பிற்குரிய குருஜி",
உங்கள் வழிகாட்டுதலுக்கும் போதனைக்கும் மனமார்ந்த நன்றி!
நான் உங்கள் ஆலோசனையைப் பின்பற்றினேன், என் பணி வெற்றி பெற்றது!
இந்தச் சிறிய தொகையை நன்றியுணர்வின் அடையாளமாக விட்டுச் செல்கிறேன்.
எதிர்காலத்திலும் உங்கள் ஆசீர்வாதங்களையும் ஞானத்தையும் நான் தொடர்ந்து பெறட்டும்...
உங்கள் சீடர் - திருடன்
மாஸ்டர் அதைப் படித்து சிரித்தார்,
"ஐயோ! நான் ஓய்வு பெற்றேன் என்று நினைத்தேன்,
ஆனால் என் கற்பித்தல் பணி இன்னும் தொடர்கிறது போலிருக்கிறது" .
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர்.
இதில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபராக பதவியேற்றார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
கமலா ஹாரிஸ் கொடுத்த சமீபத்திய நேர்காணலில், "எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் ஜனாதிபதி நிச்சயம் இருப்பார். அது நானாக கூட இருக்கலாம், ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் டிரம்ப் அரசை வழி நடத்துவார் என்ற எனது கணிப்புகள் உண்மையாகிவிட்டன" என்று தெரிவித்தார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். மேலதிகாரியுடன் இருந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருவாயில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். வியாபார விருத்தி சார்ந்த முயற்சிகளை எடுப்பீர்கள். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
புதிய முயற்சிகள் இழுபறியாகி முடியும். சிறு வார்த்தைகள் கூட மனக்கசப்பை ஏற்படுத்தலாம். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். பலதரபட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
வியாபாரத்தில் அறிமுகம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசவும். மற்றவருக்கு உதவுவது திருப்தியை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
சகோதரர்களால் நன்மை உண்டாகும். தேவையானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்வான சூழல் நிலவும். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் விலகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சிம்மம்
எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக விஷயங்களில் பொறுமை வேண்டும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். சிந்தனை போக்கில் சில மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். ஆதரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
நட்பு வட்டம் விரியும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். நூதன பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம்
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகன மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
நினைத்த பணிகளில் தாமதம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சக ஊழியர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
தாய் வழியில் அனுசரித்து செல்லவும். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தொழில்நுட்ப கருவிகளில் விரயங்கள் உண்டாகும். அருகில் உள்ளவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பயணம் மூலம் பலன்கள் கிடைக்கும். சுயதொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் நீடிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். விமர்சன பேச்சுக்களை வெளிவட்டாரத்தில் தவிர்க்கவும். வியாபாரத்தில் உழைப்புகள் மேம்படும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
கும்பம்
சகோதரர்களால் சிறு சிறு சங்கடம் ஏற்படக்கூடும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடையும். பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மீனம்
குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சார்ந்த சிந்தனை மேம்படும். பக்தி எண்ணம் அதிகரிக்கும். அடுத்தவர்களை பற்றிய சிந்தனையை தவிர்க்கவும். எதிரிகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து செயல்படவும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் புது முதலீடுகளில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 26.10.2025.
இன்று அதிகாலை 01.43 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று காலை 09.28 வரை கேட்டை. பின்னர் மூலம்.
இன்று அதிகாலை 05.42 வரை சோபனம். பின்னர் அதிகண்டம்.
இன்று அதிகாலை 01.43 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 02.33 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று காலை 06.01 வரை சித்த யோகம். பின்னர் காலை 09.28 வரை மரணயோகம். பின்பு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இறந்த பிறகும் நீங்கள் அழியாதவராக மாற விரும்பினால், இந்த திரைப்பட நடிகரைப் பின்பற்றுங்கள். அவர் இந்தியத் திரைப்படங்களில் பிரபலமான நடிகர். அவர் பெயர் சயாஜி ஷிண்டே. அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மராத்தி நடிகர்.
ஒரு நேர்காணலில், என் அம்மா நோய்வாய்ப்பட்டு, அவர் உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கை இல்லாதபோது, "நான் எவ்வளவு பணக்காரனாக, சக்திவாய்ந்தவனாக அல்லது செல்வாக்கு மிக்கவனாக மாறினாலும், உன்னைக் காப்பாற்ற முடியாது, ஆனால் நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்..." என்று நான் அவரிடம் சொன்னேன் என்று அவர் வெளிப்படுத்தினார்.
சஞ்சய் கூறினார், "ஒரு நாள் நான் என் அம்மாவை எடை போடும் தராசின் ஒரு பக்கத்தில் வைத்து, மறுபுறம் பூர்வீக மரங்களின் விதைகளை வைத்தேன். அந்த விதைகளை மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் நட்டேன் - எங்கோ 1,000, எங்கோ 10,000, எங்கோ 5,000 மரங்கள் வளர்ந்தன. இப்போது இந்த மரங்கள் 20-20 அடி உயரமும் பழம்தரும் தன்மையும் கொண்டவை. இந்த மரங்கள் பழங்கள் மற்றும் பூக்கள், நறுமணம் மற்றும் பறவைகளுடன் இருக்கும் வரை, நான் என் அம்மாவுடன் இந்த மரங்களில் வாழ்வேன்..." என்றார் சயாஜி ஷிண்டே.













