என்ன ஒரு அழகான நடை
நேர்த்தியான நடைபயிற்சி
அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...!
வக்கீல் :
"பாட்டி உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..."
பாட்டி :
"என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு?“
“உன்னைப்பத்தி சொல்லவா ?“
“நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய. சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே...“,
“அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே.“.
“ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..."
அதிர்ந்து போனார் வக்கீல். மெல்ல சமாளிச்சிகிட்டு,
"சரி பாட்டி.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.
பாட்டி : "தெரியுமாவா; இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான்.“
“சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு...“
“இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் !"
ஜட்ஜ் : (மேஜையை தட்டி)
"அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார்.
அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் பின் வருமாறு கூறினார் :
"கோர்ட் மறுபடியும் தொடங்கிய தும் நீங்க ரெண்டு பேரும் 'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்தக் கிழவிகிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!"
- இந்தியா . தமிழ்நாட்டில் - திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ளது கதவு மலைநாதன் சிவன் கோவில்.
- மலைப்பகுதிகளில் வெளி உலகிற்கு தெரியாமல் மறைந்திருக்கும் அழகிய இடங்கள் ஏராளம். அவற்றில் தாண்டிக்குடி அருகே உள்ள கதவு மலை சிவன் கோவில் காண்போரை கவர்ந்திழுக்கிறது.
- மலைக்கு நடுவே இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் ஒரு பழமையான சிவன் கோவில்.
- பிரம்மாண்டமான பாறையில் குகை வடிவில் காணப்படும் இந்த கோவிலில் உள்ள குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.
- மலைச்சரிவில் ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் வண்ணம் அமைந்துள்ள இக்கோவிலுக்கு குறிப்பிட்ட இடத்திற்கு இடத்திற்கு மேல் வாகனங்களில் செல்ல இயலாது.
- பாறையை தகர்த்து அமைத்த ஒத்தையடிப் பாதையில் நடந்து தான் இக்கோவிலை அடைய முடியும்.
- பாதையின் இரு புறமும் கதவு போல பாறைகள் அமைந்துள்ளன.
- 1300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் இது.
- மலைமுகடுகளுக்குள் சரிவான அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.
- சித்திரை தமிழ் புத்தாண்டு பிறப்பன்று நிறைய மக்கள் தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்தும் நடைப்பயணமாக இங்கு வந்து ஈசனை தரிசிப்பார்கள்.
- இங்கு அமாவாசை, பௌர்ணமி தினங்களும் விசேஷமானவை.
- தாண்டிக்குடி, பாச்சலூர், வடகவுஞ்சி பகுதியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- சரியான சாலை வசதி இல்லாததால் நடைபயணமாக இக்கோவிலை அடைய வேண்டியுள்ளது.
- இங்கு ஏராளமான குகைகளும், பாறை ஓவியங்களும் உள்ளன.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். இணையம் தொடர்பான துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் திருப்தியின்மையான சூழல்கள் உருவாகும். தந்தை வழி நட்புகளால் ஆதாயம் ஏற்படும். புதிய முடிவுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். ஆடம்பரமான பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
ரிஷபம்
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
மிதுனம்
தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
கடகம்
கல்விப் பணிகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
சிம்மம்
ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். விவசாய பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். பக்தி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்த மந்த தன்மை குறையும். சிந்தனை போக்கில் இருந்த குழப்பங்கள் விலகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சி வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
கல்வியில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் மேம்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விருச்சிகம்
கொடுக்கல் வாங்கலில் பொறுமை காக்கவும். கமிஷன் விஷயங்களில் சூழ்நிலை அறிந்து முடிவெடுக்கவும். பங்கு சந்தைகளில் திட்டமிட்டு செயல்படவும். மேடைப்பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பரிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
தனுசு
குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல்கள் ஏற்படும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மகரம்
பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். எதிர்பாராத திடீர் திருப்பம் மூலம் புதுமை பிறக்கும். கால்நடை வளர்ப்பு துறைகளில் லாபம் கிடைக்கும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆக்கபூரவமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். தெய்வீக பணிகளில் நாட்டம் ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில அதிஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தான தர்ம செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். இழுபறியான வேலைகள் நிறைவு பெறும். தாயார் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
விசுவாவசு வருடம் ஆடி மாதம் 19 ஆம் தேதி திங்கட்கிழமை 4.8.2025.
நாள் - சம நோக்கு நாள்
பிறை - வளர்பிறை
நட்சத்திரம்
அனுஷம் - Aug 03 06:35 AM – Aug 04 09:12 AM
கேட்டை - Aug 04 09:12 AM – Aug 05 11:22 AM
நல்ல நேரம் :
அபிஜித் காலம் - 12:01 PM – 12:50 PM
அமிர்த காலம் - 01:46 AM – 03:31 AM
பிரம்மா முகூர்த்தம் - 04:40 AM – 05:28 AM
கனடியர்கள் கரீபியன் தீவுகளில் குடியுரிமை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடியர்கள் பயண விசா வசதிக்காக அல்ல, மாறாக வாழ்க்கை முறை, நெகிழ்வுத்தன்மை மற்றும் எதிர்கால பாதுகாப்புக்காக ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் குடியுரிமை பெறுவதை அதிகளவில் ஆராய்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு கரீபியனில் உள்ள ஐந்து நாடுகள் தங்கள் அழகிய கடற்கரைகளை மட்டுமே விற்பனை புள்ளியாக முன்னிறுத்துவதை நிறுத்திவிட்டு, வெளிநாட்டினரை வீடு வாங்க அல்லது நன்கொடை வழங்குவதற்கு ஈடாக குடியுரிமை வழங்கும் முறையை பிரபலமாக்கியுள்ளன.
குடியுரிமை மூலம் முதலீடு (CBI) திட்டங்களை வழங்கும் தீவு நாடுகள் அன்டிகுவா மற்றும் பார்புடா, டொமினிகா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா மற்றும் கிரெனடா ஆகியன என்பது குறிப்பிடத்தக்கது. கனேடியர்களும் அமெரிக்கர்களும் ரியல் எஸ்டேட் மூலம் முதலீடு செய்து குடியுரிமை பெற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கரீபியன் கடவுச்சீட்டுக்கள் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகின்றன, இதில் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை உள்ளடங்குகின்றன. நைஜீரியா, பாகிஸ்தான் அல்லது வியட்நாம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இது கவர்ச்சிகரமான ஒர் வாய்ப்பாக அமைகின்றது.
எனினும், கனேடியர்கள் வித்தியாசமானவர்கள். “கனேடியர்களுக்கு ஏற்கனவே வலுவான கடவுச்சீட்டுகள் உள்ளன, வாழ்க்கை முறை, வரி திட்டமிடல் அல்லது உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு ஒரு மாற்று பாதுகாப்பு திட்டமாக கனடியர்கள் இவ்வாறு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்ச ஊழல் வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி இவாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சாட்சியங்களைக் கலைக்க முயன்றது உள்ளிட்ட அவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய நீதிமன்றம், இந்தத் தீா்ப்பை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் நோக்கங்களுக்காக தனக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய உரிபே, தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
002 முதல் 2010-ஆம் ஆண்டுவரை அமெரிக்க ஆதரவுடன் கொலம்பியாவை ஆண்டு வந்த இவாரோ உரிபே, மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதாகவும், 1990-களில் ஆயுதக் குழுக்கள் வளா்வதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடா்பான வழக்கில் தனக்கு எதிரான சாட்சியங்களைக் கவர அவா் இலஞ்சம் கொடுக்க முயன்றதாக தற்போது அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒட்டப்பட்ட சிறப்புப் பலகை இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், ஹோட்டல் அறையில் துரியன் பழம் சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், 5,000 தாய் பாட் (தோராயமாக ரூ.11,800) அபராதம் விதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
துரியன் என்றால் என்ன?: துரியன் பழம் சாப்பிடுவது ஏன் தடை செய்யப்பட்டுள்ளது? துரியன் ஆசிய நாடுகளில் பிரபலமான ஒரு தனித்துவமான பழமாகும். இது நீளமான வடிவம், கடினமான, நீண்ட சுருக்கம் கொண்ட தோல் மற்றும் உள்ளே கிரீமி மஞ்சள் கூழ் போன்று இருக்கும். இது பலாப்பழம் போல் தோற்றமளிக்கும்.
இந்த பழத்தின் வாசனை அதை சாப்பிட்ட பிறகும் மணிக்கணக்கில் அறையில் இருக்குமாம். உண்மையில், பலர் அதன் வாசனையை அருவருப்பாக உணர்கிறார்கள் என்று கூறப்படுகிறது. உணவு எழுத்தாளர் ரிச்சர்ட் ஸ்டிர்லிங் தனது அனுபவத்தில், இந்த பழத்தின் வாசனை கடுமையான அழுக்கு சாக்ஸ், டர்பெண்டைன் மற்றும் அழுகிய வெங்காயத்தின் கலவையைப் போன்றது என்று கூறுகிறார். சிலர் இதை அழுகிப்போன இறைச்சி வாசனை உடன் ஒப்பிடுகின்றனர்.
இந்த பழத்தை ஒரு ஹோட்டல் அறையில் சாப்பிட்டால், அதன் வாசனை அறைக்கு மட்டுமல்ல, அருகிலுள்ள அறைகளுக்கும் பரவும். இந்த வாசனை மற்ற விருந்தினர்களை அசௌகரியப்படுத்தக்கூடும். அறைகளை சுத்தம் செய்ய வேண்டிய ஊழியர்களுக்கும் இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறும். அதனால் தான், பாங்காக்கில் மட்டுமல்ல, ஆசியாவில் உள்ள பல ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் பொது இடங்களில் துரியன் பழத்தை தடை செய்துள்ளன.
ஹோட்டல்களைத் தவிர, சில நாடுகளில் உள்ள விமான நிலையங்களும் துரியன் பழத்தின் கடுமையான வாசனை காரணமாக தடை விதித்துள்ளன. சிங்கப்பூர் மெட்ரோ அமைப்பு, ஜப்பான், ஹாங்காங் விமான நிலையங்கள் மற்றும் ஆசியாவின் பல சர்வதேச விமான நிலையங்கள், விமானங்களில் பழத்தை எடுத்துச் செல்வதை முற்றிலுமாகத் தடை செய்துள்ளன. பல நாடுகள் விமானங்களில் பழத்தை எடுத்துச் செல்வதை அனுமதிப்பதில்லை. இந்த வாசனை பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கலாம் என்பதால், இந்த விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சில இடங்களில், இந்த விதிகளை மீறினால் சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம்.
இந்தப் பழம் ஏதோ தீங்கு விளைவிப்பதாகத் தோன்றலாம். ஆனால், இதில் ஒரு பொதுவான அம்சம் உள்ளது. இதன் சுவை பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆசிய நாடுகளில் ஏராளமான மக்களுக்கு துரியன் மிகவும் பிடித்த பழமாகும். இதன் கூழ் இனிப்பு மற்றும் கிரீமி நிறத்தில் இருக்கும். மேலும் இது சில உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஐஸ்கிரீம், கேக்குகள் மற்றும் ஷேக்குகள் போன்ற உணவுகளில் துரியன் பழம் பயன்படுத்தப்படுகிறது.
"மெடிசின் நெட்" அறிக்கையின்படி, துரியன் பழம் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் இதய ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுகிறது. இது வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த ஒரு பழமாகும். அளவோடு சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது. சிலருக்கு இதன் வாசனை பிடிக்கவில்லை என்றாலும், மற்றவர்களுக்கு இது பிடித்த பழமாக உள்ளது.
காசா பகுதி முழுவதும் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. விமானம் மூலம் வீசப்படும் உணவுப்பொருட்களை சேகரிக்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஓடும் காட்சி காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எதிரொலியால் காசா எல்லை பகுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மேலும் உணவுப்பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை உணர்ந்த சில நாடுகள் விமானம் மூலம் உணவுப்பொருள் அடங்கிய மூட்டைகளை பாராசூட் உதவியுடன் மேலிருந்து வீசிகின்றன. இதற்காகவே நீண்ட நாட்கள் காத்திருக்கும் மக்கள் உணவை சேகரிக்க உயிர் போராட்டமே நடத்துகின்றனர்.
நடிகர் மதன் பாப் புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு காலமானார். அவரது உடல் குடும்பத்தினர் அஞ்சலிக்காக அடையாரில் வைக்கப்பட்டுள்ளது.
புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்திருக்கின்றார்.
அது ஒரு மலைப் பிரதேசம். நல்ல இருட்டு நேரம். கடுமையான மழை. சூசை பஸ் ஸ்டாப்பில் சிக்கிக்கொண்டிருந்தார். யாருமே சாலையில் நடமாடவில்லை. பஸ் ஒன்றும் வருவதாகத் தெரியவில்லை.
ஏதாவது கார் வந்தால் லிஃப்ட் கேட்டு போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஒரு கார் மெதுவாக ஊர்ந்து வந்தது பஸ் ஸ்டாப் அருகில் நின்றது.
சூசைக்கு யோசிக்க நேரம் இல்லை. கார் கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்து உட்கார்ந்தார். கார் மீண்டும் மெதுவாக நகர ஆரம்பித்தது.
அப்பொழுதுதான் சூசை கவனித்தார், டிரைவர் சீட்டில் யாருமே இல்லை. ஆனால் கார் நகர்ந்துகொண்டே இருக்கிறது. சசூசைக்கு பயம் தலையிலிருந்து கால்வரை ஊசி போட்டது.
சாலையில் 90 டிகிரி திருப்பம். எதிரே கிடுகிடு பள்ளம். நாம் நிச்சயம் காரோடு சமாதி. செத்தோம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் காரின் ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஒரு கை உள்ளே நீண்டு ஸ்டீரிங்க் வீலை திருப்பியது.
பயத்தின் உச்சத்துக்கு சென்ற சூசைக்கு, கார் கதவைத் திறந்து வெளியே குதித்தார். கொஞ்ச தூரத்தில் இரு ஹோட்டல் தெரிந்தது. ஒரே ஓட்டமாக அங்கே சென்றார்.
“ஒரு கார் டிரைவர் இல்லாமல் வந்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு பிசாசு வேலைதான். ரொம்ப பயமா இருக்கு” என்று ஹிஸ்டீரியா வந்தது போல கத்தினார்.
ஹோட்டலில் இருந்தவர்கள் எல்லாம் எழுந்து போய் வெளியே எட்டிப்பார்த்தனர். அந்த கார் மெதுவாக வந்து ஹோட்டலுக்கு முன்னால் நின்றது.
அதன் பின் பக்கத்திலிருந்து வெளிப்பட்ட இரண்டு மனிதர்கள் கருப்பு ரெயின் கோட்டொடு உள்ளே நுழைந்தனர்.
அவர்களில் ஒருவன் சூசையை சுட்டிக்காட்டி, “இந்த ஆளுதான். ரிப்பேரான காரை நாம மழையில தள்ளிகிட்டு வரும்போது உள்ளே ஏறி உக்காந்தவன்” என்றான்.
அப்புறம் என்ன சூசைக்கு பூசை தான்......
தேவையான பொருட்கள் :
மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு - இவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளவும். அதாவது 10கிராம் என்றால் எல்லாப் பொருட்களும் 10 கிராம்.
அடுப்பைப் பற்ற வைத்து அடிகனமான ஒரு வாணலியை ஏற்றி அதை நன்கு சூடேற்றவும். அடுப்பைத் தணித்துக் கொள்ளவும்.(I.e. reduce the flame to the sim position).
மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒவ்வொன்றாகத் தனித்தனியாக 5 நிமிடங்கள் கைவிடாது வறுக்கவும்.
நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கண்ணாடி பாட்டிலில் அல்லது எவர்சில்வர் டப்பாவில் வைத்துக் கொள்ளவும். தயவுசெய்து எந்த மருந்தையும் பிளாஸ்டிக் டப்பாவில் வைக்க வேண்டாம்.
சாப்பிடும் முறை :
ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அரைத்து வைத்துள்ள பொடியைப் போட்டு 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
ஆறியதும் காலை மாலை வெறும் வயிற்றில் வடிகட்டாமல் அப்படியே அடியில் தங்கி இருக்கும் பொடியையும் சேர்த்துக் குடிக்கவும்.
குடித்து அரைமணி நேரம் கழித்துத் தான் வேறு எதையும் சாப்பிட அல்லது குடிக்க வேண்டும். இதை நினைவில் கொள்ளுங்கள்.
இதை அவர் சொல்லித் தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட்டு நிறையப் பேருக்கு (எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட) நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
எப்போதும் ஒன்றைத் தயவுசெய்து எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம் :
எல்லோருக்கும் எல்லாமும் ஒத்துக் கொள்ளாது. அதனால் சிறிதளவு முதலில் செய்து சாப்பிட்டுப் பார்த்து ஒத்துக் கொண்டால் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.. அல்லது நிறுத்தி விடுங்கள் . சிறிது காலம் கழித்து மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். இந்த விதி நீங்கள் எடுக்க நினைக்கும் எந்த கைப் பக்குவ.. சித்த.. ஆயுர்வேத மருந்துக்கும் பொருந்தும்.
கொத்தமல்லி விதைகளை நீரில் ஊறவைத்து குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். முதல் இரவே 4 டீஸ்பூன் அளவு கொத்தமல்லி விதைகளை நீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கவேண்டும்.
கொத்தமல்லி விதைகளை தொடர்ந்து அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு ஒவ்வாமை பாதிப்புகள் வெகுவாக குறைந்திருப்பதை பல மருத்துவ ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். தனியாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ரைபோபிளேவின், நியாஸின், கால்சியம், போலிக் அமிலம், கரோட்டின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன.
கொத்தமல்லி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண் அரிப்பு, கண் அழற்சி மற்றும் கண் சிவத்தல் ஆகியவற்றை சரி செய்கிறது. கொத்தமல்லி விதை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் கட்டுக்குள் இருக்கும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம்.
கொத்தமல்லி இதய நோய்க்கு காரணமான உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்றவற்றை குறைக்கிறது. கொத்தமல்லி டையூரிடிக் என்பதால், உடலில் இருந்து அதிகப்படியான சோடியம் மற்றும் தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
தனியாவில் அத்தியாவசிய எண்ணெய்கள், பாக்டீரியா வைரஸ் எதிர்ப்பு வேதிப்பொருட்கள், ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள், நச்சுத்தன்மையை நீக்குகின்ற அமிலங்கள், மற்றும் ரசாயனப் பொருட்கள் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். உயர் அதிகாரிகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். நீண்ட நாள் முதலீடு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். மறைமுக வருமானங்களில் கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் குழப்பங்கள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். ஆரோக்கிய பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சாந்தம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
வருவாயிலிருந்து நெருக்கடிகள் மறையும். உறவுகளிடம் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியான சில சரக்குகளால் ஆதாயம் அடைவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பிற மொழி மக்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வேலையாட்களிடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். பணி நிமித்தமான புதிய பொறுப்புகள் கிடைக்கும். புது விதமான கனவுகள் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சிம்மம்
உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் பிறக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில உதவிகளால் ஆதரவுகள் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா
கன்னி
திட்டமிட்ட பணிகளில் உள்ள தடைகளை வெற்றி கொள்வீர்கள். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த தன்மை குறையும். உணவு விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். உறவுகள் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
தன நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். தாயாருடன் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வி குறித்த குழப்பம் விலகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சாதனை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத் தன்மை வெளிப்படும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபார விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வரவுகளில் சிறுசிறு போராட்டங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கருத்துக்களை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மகரம்
விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்து பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பம் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களால் சில தெளிவுகள் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
கலை சார்ந்த பணிகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உங்கள் கருத்துக்களுக்குண்டான மதிப்புகள் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்த தடைகள் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். சமூக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். புதிய மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3.8.2025.
இன்று ஆடி 18ஆம் பெருக்கு.
நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை.
நட்சத்திரம்
விசாகம் - Aug 02 03:40 AM – Aug 03 06:35 AM
அனுஷம் - Aug 03 06:35 AM – Aug 04 09:12 AM
நல்ல நேரம்:
அபிஜித் காலம் - 12:01 PM – 12:50 PM
அமிர்த காலம் - 09:39 PM – 11:25 PM
பிரம்மா முகூர்த்தம் - 04:40 AM – 05:28 AM
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியினர் ஐந்து பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Abbotsfordஇல் ஜனவரி மாதம் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். அவரைக் கடத்திச் சென்ற சிலர் படுகாயமடைந்த நிலையில் அவரை சர்ரேயிலுள்ள கிரெசண்ட் கடற்கரையில் வீசிச் சென்றுள்ளனர். தகவலறிந்த பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்று அவர் உயிரிழந்துவிட்டார்.
தற்போது, அந்த சம்பவம் தொடர்பில் ரவ்தீப் சிங் (21), ஹர்மன்தீப் கில் (26), ஜஸ்கரன் சிங் (20) மற்றும் பிபன்பிரீத் சிங் (22) ஆகியோர் மீது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி அடைத்துவைத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தர்பிரீத் கோசா (19) என்னும் இளைஞர் மீது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி அடைத்துவைத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பார்கள். அந்தளவுக்கு போற்றப்பட்ட சுக்கின் மருத்துவ பலன்கள் பற்றி சில துளிகள் அறிவோம்..!
* இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
* தலைவலிக்கு சுக்கை நீர் விட்டு அரைத்தோ, உரசியோ (இழைத்து) நெற்றியில் பூசினால், அடுத்த சில நிமிடங்களில் கைமேல் பலன் கிடைக்கும். தண்ணீருக்குப் பதிலாக பால் விட்டு அரைத்தும் பயன்படுத்தலாம். எந்த விதமான தலைவலி வந்தாலும் இந்த சுக்கை நெற்றியில் பற்று (பத்து) போட்டால் அடுத்த சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும். வலி இருக்கும் இடங்களில் சுக்கை தேய்த்தால் இதமாக இருக்கும். வலி விலகியதும் எரிச்சலை ஏற்படுத்தும். அப்படியானால் தலைவலி சரியாயிற்று என்று அர்த்தம். உடனே ஒரு துணியால் நெற்றிப் பற்றை துடைத்தோ, கழுவியோ விடலாம்.
* வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல், குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, மார்பில் எரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் குத்தல் வலி, நாக்கு சுவையின்மை மற்றும் மூட்டுக்களில் வலி ஏற்படும் நேரங்களிலும் இந்த சுக்கு கைகொடுக்கும். 100 மில்லி கொதிக்கும் நீரில் 5 கிராம் சுக்குப்பொடியை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி கால் மணி நேரம் மூடி வைத்து எடுத்து தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். இந்த சுக்கு கஷாயத்தை காலையில் குடித்தது போலவே மாலையிலும் குடிக்க வேண்டும். இப்படி 20 முதல் 40 நாட்கள் வரை செய்து வந்தால் மேலே சொன்ன பிரச்னைகள் எல்லாம் விலகும். சுக்குக் கஷாயத்துடன் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம். பனிக்காலங்களில் கிராம்பு, மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
* சாப்பாடு, தூக்கமின்மை, அதிக உடல் உழைப்பு போன்ற காரணங்களால் சிலருக்கு திடீரென வாய்வுப்பிடிப்பு ஏற்படும். இன்னும் சிலருக்கு நெஞ்சுப்பகுதியை உள்ளுக்குள் அழுத்துவது போன்ற உணர்வு, புளியேப்பம் ஏற்படும். அந்தச் சமயங்களில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
* வாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்த வத்தக்குழம்பு சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம். முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் கீல் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.
* கிராமப்புறங்களில் சுக்கு காபி குடிப்பது வழக்கம். சுக்கு காபி என்றதும் பலர் சுக்குப் பொடியை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பார்கள். இன்னும் சிலர் தேயிலை, பாலுடன் சேர்த்து அருந்துவார்கள். இது சரியான முறையல்ல. சுக்கு காபி என்றால் அதனுடன் மிளகு, கொத்தமல்லி, ஏலக்காய் சேர்க்க வேண்டும். ஒரு மடங்கு மிளகு என்றால் அதைவிட 2 மடங்கு சுக்கு, 4 மடங்கு கொத்தமல்லி (தனியா), 10, 12 ஏலக்காய் சேர்த்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் நம் தேவைக்கேற்றார்போல ஒன்றிரண்டு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, பனைவெல்லம் சேர்த்து வடிகட்டி அருந்தலாம். இதில் பால் சேர்க்கக்கூடாது. இதுதான் சுக்கு காபி.
* தினமும் பகல் வேளை உணவின்போது ஒரு ஸ்பூன் சுக்குப் பொடியுடன் கால் ஸ்பூன் நெய் விட்டு பிசைந்து சிறுவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கோளாறுகள் வராமல் இருக்கும் என்பதோடு முதுமையை தள்ளிப்போடலாம்.
தேரையர் என்ற சித்தர், தன் பாடலில் சொல்லியிருக்கிறார்... ‘சுக்கு வீட்டில் இருந்தால், சுகம் உடம்பில் இருக்கும்!’
ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதத்தின் 18வது நாளையே ஆடிப் பெருக்கு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். ஆடிப் பெருக்கு அன்று அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று, ஆற்று மணலில் பிள்ளையார் பிடித்து வைத்து, காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தி, வழிபடுவார்கள். ஆடிப் பெருக்கு அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
ஆடிப்பெருக்கு அன்று செய்யப்படும் வழிபாடு, தான தர்மங்கள், துவங்கும் செயல்கள் ஆகியவற்றின் பலன்கள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப் பெருக்கு மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த புனிதமான நாளில் என்னென்ன பொருட்கள் வாங்கலாம்? என்னென்ன காரியங்கள் செய்தால் செல்வம் பெருகும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆடிப்பெருக்கு சிறப்புகள்
இந்த உலகமே பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டு தான் இயங்கி வருகிறது. அதில் நீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகமும், உயிர்களும் இயங்குவதற்கு மிக முக்கியமானது நீர். அந்த நீரை தெய்வமாக பாவித்து, அதற்கு நன்றி செலுத்தும் திருநாள் தான் ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் மழை காலத்தின் துவக்கமான மாதமாகும். ஆடி மாதம் வேப்பிலை தோரணம் கட்டி, அம்மன் கோவில்களில் திருவிழா துவங்கப்படும். அந்த திருவிழா நிறைவடைவதற்குள் கண்டிப்பாக அந்த ஊரில் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இப்படி பெய்யும் மழையால் ஏரி, குளம், ஆறு ஆகிய நீர்நிலைகள் நிரம்பி, விவசாயம் செழிக்க உதவுவதால் நீரை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
ஆடி 18ல் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட காரணம்
காவிரி அன்னையை தெய்வத்திற்கு இணையாக ஒப்பிட்டு மதித்து இந்த நாளில் வழிபடுகிறோம். ஆடி மாதத்தில் பெய்யும் மழையால் பொங்கி வரும் காவிரி ஆற்றின் நீர் கடைமடை வரை பாய்ந்து ஓடுவதற்கு15 நாட்களாவது தேவைப்படும் என்பதாலேயே ஆடி மாதத்தின் 18வது நாளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. ஆடிப் பெருக்கு அன்று அனைத்து தெய்வங்களின் சக்தியையும் காவிரி தாய், தான் வாங்கிக் கொண்டு, அதை மக்களுக்கு வழங்கும் திருநாளாகவும் ஆடிப்பெருக்கு நாள் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆடிப் பெருக்கு அன்று காவிரியில் புனித நீராடி, பூஜை செய்து வழிபடும் வழக்கம் உள்ளது.
ஆடிப்பெருக்கில் என்ன வாங்கலாம்?
ஆடிப் பெருக்கு அன்று என்ன செய்தாலும் அது பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் இந்த நாளில் சுப காரிய வேலைகளை துவங்குவது, புதிய பொருட்கள் வாங்குவது, புதிய முயற்சிகளில் ஈடுபடுவது ஆகியவற்றை செய்வதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனாலும் ஆடி மாதத்தில் சுப காரியங்கள் ஏதும் செய்யக் கூடாது என சொல்லப்படுவதால், ஆடிப் பெருக்கு நாளில் என்னென்ன பொருட்கள் வாங்கலாம், எந்தெந்த காரியங்களை எல்லாம் செய்யலாம் என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்டவர்களின் சந்தேகம் தீர ஆடிப்பெருக்கன்று என்னென்ன பொருட்கள் வாங்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆடிப்பெருக்கில் துவங்குவதற்கு ஏற்றவை
ஆடிப் பெருக்கு என்பது பெருக்கத்திற்குரிய நாள் என்பதால் அனைத்து சுப காரியங்களையும் இந்த நாளில் துவங்கலாம். புதிய தொழில் துவங்குவது, புதிய கடை திறப்பது, புதிய வேலைக்கு முயற்சி செய்வது, சுய தொழில் துவங்குவது, கலைகளை கற்க துவங்குவது போன்றவற்றை செய்யலாம். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 03ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்று அனுஷம் நட்சத்திரம் வருகிறது. அதனால் இந்த நாளில் வளைகாப்பு போன்ற சுபகாரியங்களை நடத்தலாம்.
என்னென்ன பொருட்கள் வாங்கலாம்?
ஆடிப்பெருக்கன்று கண்டிப்பாக நகை, புடவை போன்ற ஏதாவது ஒரு வாங்கியே தீர வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஏதாவது மங்கல பொருட்கள் வாங்க வேண்டும் என ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்தவர்கள் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆடிப்பெருக்கன்று திருமாங்கல்ய கயிறு மாற்றிக் கொள்ளும் போது அவற்றில் ஏதாவது பழுதடைந்திருந்தால், தேய்ந்து போய் இருந்தால் ஆடிப் பெருக்கு நாளில் மாற்றிக் கொள்ளலாம். குடும்பத்தில் திருமணத்திற்காக பொருட்கள் வாங்க போகிறோம் என்றால் ஆடிப் பெருக்கு அன்று வாங்கலாம். இது எதுவும் கிடையாது, ஆனால் ஆடிப் பெருக்கன்று செல்வம் பெருக ஏதாவது மங்கல பொருட்கள் வாங்க வேண்டும் என நினைபவர்கள் கல் உப்பு, மஞ்சள் அல்லது மஞ்சள் கிழங்கு வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து விட்டு, பிறகு அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு ஊரில் ஒருவன் மிருக காட்சி சாலை ஒன்றை அமைத்தான்!
அதற்கு நுழைவு கட்டணமாக 200₹ வைத்தான்!
ஒருவரும் வரவில்லை!
கொஞ்ச காலம் பார்த்தான் !
சரி நுழைவு கட்டணமாக 100₹ குறைத்து வைத்தான்!
அப்பொழுதும் யாரும் பார்வையிட வர வில்லை!
கடைசியில் பார்வை இலவசம் என்று அறிவித்தான்!
இப்பொழுது கூட்டம் அலை மோதியது!
அன்று நிறைய கூட்டம் இருந்தது!
மிருக காட்சி சாலையின் வாயில் கதவை பூட்டி விட்டு சிங்கத்தின் கூண்டின் கதவை திறந்து விட்டான்.
இப்பொழுது உள்ளே இருந்த மக்கள் பயத்தில் கேட்டை நோக்கி ஓடி வர!
அங்கே வெளியே செல்ல 300₹ கட்டணம் என்று ஃபோர்டு வைக்க பட்டு இருந்தது.
உயிர் பயத்தில் எல்லா மக்களும் 300₹ பணம் கட்டி வெளியே ஓடினர்!
ஒரு நாள் ஒரு லண்டன் பீச்சில் நம்ம பல்பீந்தர் படுத்துக்கொண்டு சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தார். பல்பீந்தர் கடந்து போன ஒருவர் நம்மாளை பார்த்து கேட்டார்.
"ஆர் யூ ரிலாக்ஸிங்?"
"ஐ ம் பல்பீந்தர் சிங்" அமைதியாக பதில் வந்தது.
கேட்டவர் ஒன்றும் புரியாமல் நடையை கட்டினார். இன்னும் கொஞ்ச நேரத்தில் மற்றொருவர் அதே கேள்வி கேட்டார்.
"ஆர் யூ ரிலாக்ஸிங்?"
இந்த முறை லேசாக கடுப்பான பல்பீர், குரலை உயர்த்தி பதில் சொன்னார்,
"நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்"
கேட்டவர் தலையில் அடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய, சில நிமிடங்களில் மற்றொருவர்,
"ஆர் யூ ரிலாக்ஸிங்?"
இந்த முறை உண்மையாகவே கடுப்பானவர் "நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்".
சே, இந்த இடமே சரியில்லை, 'ஒரே தொல்லையாக இருக்கு'ன்னு தனக்குள்ளே நினைச்சுக்கிட்டு, வேற இடத்துல போய் படுக்கலாம்ன்னு கிளம்பினார். போகும் வழியில் இன்னோரு சிங் படுத்துக் கொண்டிருப்பதை பார்த்தார்.
"ஆர் யூ ரிலாக்ஸிங்?" இந்த முறை கேள்வி கேட்டது, நம்ம ஆளு.
"யா..." படுத்துக் கொண்டிருந்தவர்.
உடனே, நம்ம பல்பீர் மூளையில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது. படுத்துக் கொண்டிருந்தவரை பார்த்து சொன்னார்,
"தேர், லாட் ஆப் பிப்பிள் ஆர் லுக்கிங் ஃபார் யூ மேன்"...
இரண்டு மாணவர்கள் viva voce test க்காக காத்திருக்கிறார்கள். முதல் மாணவரின் முறை வருகிறது, அவர் உள்ளே செல்கிறார்...
External : நீங்கள் ஒரு ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்... திடீரென்று ரொம்ப சூடாக உள்ளது, நீங்கள் என்ன செய்வீர்கள்?
மாணவர் 1 : நான் ஜன்னலைத் திறப்பேன்.
External : அருமை... இப்போது ஜன்னலின் பரப்பளவு 1.5 சதுர மீட்டர் என்றும், பெட்டியின் அளவு 12 மீ3 என்றும் வைத்துக் கொள்வோம். ரயில் மேற்கு திசையில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. காற்றின் வேகம் தெற்கிலிருந்து 5 m/s ஆகும். அப்படியானால் பெட்டி குளிர்ச்சி அடைய எவ்வளவு நேரம் ஆகும்? மாணவனால் பதிலளிக்க முடியவில்லை. அதனால் அவர் தோல்வியடைந்த தாக குறிக்கப் பட்டு வெளியே வருகிறார்.
வெளியே வந்த பிறகு 2வது மாணவர் viva எப்படி இருந்தது?? என கேட்க... முதலில் சென்ற மாணவரும் விஷயத்தை சொல்கிறார்.
2வது மாணவன் உள்ளே செல்ல அவனது viva தொடங்குகிறது.
External : நீங்கள் ஒரு ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்... திடீரென்று அது சூடாகிறது, நீங்கள் என்ன செய்வீர்கள்?
2வது மாணவன் : நான் என் கோட்டைக் கழற்றுவேன்.
External : இன்னும் சூடாகவே இருக்கு, அப்ப என்ன செய்வீங்க?
2வது மாணவன் : நான் என் சட்டையை கழற்றுவேன்.
External (கோபமாக) : இன்னும் சூடாக இருந்தால், நீ என்ன செய்வாய்?
2வது மாணவன் : நான் என் பேண்டை கழற்றுவேன்...
External (ஆத்திரத்தில்) : நீ வெப்பத்தால் இறந்தால் என்ன செய்வது?
2வது மாணவன் : வெப்பத்தால் என் உயிரே போனாலும், நான் ஜன்னலை மட்டும் திறக்க மாட்டேன்.
தென்னிந்தியாவின் முதல் கவர்ச்சி கன்னி, முதல் கவர்ச்சி வில்லி.
ஒரு நடிகைக்கு தேவையான எல்லாமே அவரிடம் இருந்தது. மயக்கும் விழிகள், அபார உடலமைப்பு, வசீகரமான குரல், நடனத் திறமை என்று பல்வேறு திறமைகளை ஒருங்கே பெற்றவர்.
முதல் படம் சுமாராக போனாலும், அடுத்த படமான 'கச்ச தேவயானி' ஹிட் ஆகி, அவரது வெற்றிப்பயணம் தொடங்கியது. 1944-ல் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஹரிதாஸ்' வெளியாகி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. 1944-ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான இந்தப்படம், 1946 தீபாவளி வரை ஓடி மாபெரும் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதருடன் நடித்த ராஜகுமாரி, கவர்ச்சியில் தாராளமாகவே நடித்திருந்தார். ஒரு மசாலா படத்துக்கு கவர்ச்சி மிக முக்கியம் என்ற இலக்கணத்தை முதலில் தொடங்கி வைத்தது அநேகமாக இந்தப் படமாகத்தான் இருக்கும். படத்தின் முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகள்தான்.
மிகவும் நெருக்கமான காட்சிகள் அதிகம். உடை விஷயத்திலும் சரி, நடிப்பு விஷயத்திலும் சரி டி.ஆர். ராஜகுமாரி மிகவும் தாராளமாக நடித்திருப்பார். அந்த காலகட்டத்தில் யாருமே நினைத்து பார்க்க முடியாத செயல் இது.
ஐநது சூப்பர் ஸ்டார்கள் பாகவதர், பி யு சின்னப்பா,. டி ஆர் மகாலிங்கம் , எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் இணைந்து நடித்த முதல் நடிகைநடிகை இவர் தான்.
ஹரிதாஸ், நந்தனார், சந்திரலேகா போன்ற படங்களில் நடித்து இந்தியா அளவில் புகழ் பெற்றவர்.
எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த கூண்டுகிளி படத்தை தயாரித்தவர்.
பாண்டி பஜாரில் இருந்த ராஜகுமாரி திரையரங்கத்துக்கு சொந்தமானவர்.
கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்த அவர், 1999-ம் ஆண்டு மறைந்தார். இன்று ஒரு பிடி மண் வாங்குவதற்கும் கோடி ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும் சென்னையின், அதிக விலை மதிப்பு மிகுந்த தி.நகரில், முதல் பங்களா கட்டி 'கன்யாகுமரி பவனம்' என பெயரிட்டார்.
தி. நகரிலேயே முதன் முதலாக பங்களா கட்டியவர் இவர் தான்.
இவர் கடைசியாக நடித்த படம் வானம்பாடி.ஆகும்.
எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது
இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.
எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள் உருண்டையை தொடர்ந்து மூலம் போக்க முடியும்.
தலைமுடி மனிதர்களின் தலையில் இருக்கும் தலைமுடி அவர்களுக்கு நல்ல தோற்றத்தை தருவதோடு இல்லாமல்,
உச்சந்தலையை வெப்பம் மற்றும் காயங்கள் ஏற்படுவதிலிருந்தும் காக்கின்றது.
ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.
உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் எள்ளு உருண்டையை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும்.
உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.
எள் மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்களை அதிகம் கொண்டது.
இப்படி படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால்
அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும்.