·   ·  7 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 38
  • More

யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்

Comments (0)
Login or Join to comment.
·
Added article

விஜய்காந்திடம் சேர்ந்து நடித்த ஒரு சமயத்தில் அருண்பாண்டியன் தனக்கு சினிமா இயக்கும் ஆசை இருப்பதை சொல்லி இருக்கிறார்.

"நிச்சயம் செய் அருண். நான் நடித்துக்கொடுக்கிறேன்" என அப்போது சொல்லி இருக்கிறார். சில வருடங்கள் கழித்து அருண்பாண்டியன் தனது நூறாவது படத்தை தானே தயாரித்து, நடித்து, இயக்கப்போவதாக சொல்ல தான் கொடுத்த வாக்குப்படி போலீஸ் ஆபிசராக கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்கிறார் விஜயகாந்த். அந்தப்படம் தான் 'தேவன்.

சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த வடிவுக்கரசி தான் சொந்தப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் விஜய்காந்த் நடிக்க வேண்டும் எனவும் கேட்கிறார். அது 'நூறாவது நாள்' படப்பிடிப்பு தளம். அங்கு மோகனும் இருந்திருக்கிறார். விஜய்காந்தோ வடிவுக்கரசியிடம் "மோகன் தான் இப்போ பீக்ல இருக்கார். அவர்க்கிட்ட கால்ஷீட் கேளுங்க" என ஐடியா சொல்ல மோகனோ படுபிஸி. கால்ஷீட் இல்லாமல் திரும்பவும் விஜய்காந்திடம் வர அவர்ரவடிவுக்கரசிக்கு நடித்துக்கொடுத்தப்படம் தான் 'அன்னை என் தெய்வம்'.

கலைஞரின் மருமகன் அமிர்தம். எம்.ஜி.ஆர் காலங்களில் படங்களை இயக்கியவர். ஜெய்சங்கர், மு.க.முத்து படங்களை இயக்கிய அவர் கடைசியாக இயக்கிய படம் 'தூக்குமேடை'. அவர் எண்பது கால இளைஞர்களோடு பணி புரிய ஆசைப்பட்டு விஜய்காந்திடம் ஒரு கதை சொல்கிறார். அந்தக்கதை அவருக்கு பிடித்து விடுகிறது. அப்போது பானுப்ரியா படம் தயாரிக்கக்கேட்க இருவரின் ஆசையையும் நிறைவேற்ற நடித்தது தான் 'சிறையில் பூத்த சின்ன மலர்.'

ஏவிஎம் சகோதரர்களில் எம்.குமரன் மட்டும் தனித்து வந்து படமெடுக்க ஆசைப்பட்டு விஜய்காந்திடம் கால்ஷீட் கேட்கிறார். குமரனுக்காக நடித்துக்கொடுத்த படம் 'வெள்ளைப்புறா ஒன்று'.

எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் மறைமுகமாக திரைப்படங்களில் பிரச்சார பீரங்கிகளாய் சில நடிகர்கள் இருந்தனர். ராதாரவி, தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், டி.ராஜேந்தர், சந்திரசேகர், ராமநாராயணன் இப்படி. இதில் நகைச்சுவை நடிகரான எஸ்.எஸ்.சந்திரன் படம் தயாரிக்க ஆசைப்பட்டு கேட்க ராம.நாராயணன் இயக்கினார். அதில் விஜய்காந்த் தானும் பங்கேற்பதாக ஒரு கௌரவ வேடத்தில் நடித்துக்கொடுத்தார். அதற்கு எஸ்.எஸ்.சந்திரனிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கிக்கொள்ள வில்லை. டி.ஆர் இசையமைத்த அந்தப்படம் 'எங்கள் குரல்'.

தாணு இயக்குனராக ஆசைப்பட 'தெருப்பாடகன்', மணிவண்ணன் தயாரிக்க ஆசைப்பட 'சந்தனக்காற்று', ஜெயப்ரதாவுக்கு கர்நாடக எம்.எல்.ஏ ரமேஷ் மூலம் 'ஏழைஜாதி', இயக்குனர் ரங்கராஜ் தயாரிக்க 'தர்மம் வெல்லும்', மணிரத்னத்துக்கு 'சத்ரியன், இளையராஜா-கங்கை அமரனுக்கு 'கோவில் காளை', பழ.கருப்பையாவுக்கு 'பொறுத்தது போதும்', சங்கிலி முருகனுக்கு 'கரிமேடு கருவாயன்', பெரியமருது, பாரதிராஜாவுக்கு 'தமிழ்செல்வன்', அவரது மைத்துனர் இயக்குனர் மனோஜ்குமார் தயாரிக்க 'ராஜ்ஜியம்',.......

தனது கூடவே இருந்த ரசிகர் மன்ற நிர்வாகியான ராமு.வசந்தனை 'தாயகம்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக்கியதும் விஜய்காந்த் தான்.பல வருடங்களாக தனது உதவியாளராக இருந்த எஸ்.கே.சுப்பையாவை தயாரிப்பாளராக்கி அவர் நடித்தப்படம் தான் 'பெரியண்ணா'. அதில் கிடைத்த பணத்தை பணமாக கொடுத்தால் செலவாக்கி விடுவார் என வீடாக வாங்கிக்கொடுத்தவரும் விஜய்காந்த் தான்.

தனது சொக்கத்தங்கம் படத்தை இயக்க சேரன் சம்பளப்பிரச்சினையில் ஒதுங்கிக்கொள்ள வாய்ப்பின்றி இருந்த பாக்யராஜை அழைத்து மறுப்பின்றி இயக்க வைத்தார்.

இவ்வளவு ஏன்?....விஜய்காந்த் நடிக்க வந்த புதிதில் சண்டைக்காட்சிகளுக்காக ஆரம்பக்காலத்தில் மாடக்குளம் தர்மலிங்கத்திடம் சிலம்பம் கற்றுக்கொண்டிருந்தார். தன் சிலம்ப ஆசானையும் விடவில்லை விஜயகாந்த். அவரையும் தயாரிப்பாளராக்கி அவர் நடித்துக்கொடுத்தப்படம் தான்

'ஏமாறாதே...ஏமாற்றாதே.....'

150 படங்களில் நடித்தாலும் பல சிறிய ஆட்களை தயாரிப்பாளராக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் விஜய்காந்துக்கு இருந்தது.

  • 89
·
Added a post

ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான்.

அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

அவனிடம் சங்கு ஒன்று இருந்தது.

ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.

அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான்.

நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

“இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள்.

பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன்.

மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது.

உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன்.

தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான்.

அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல.

அதற்குத் திறமை வேண்டும்.

நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான்.

“எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன்.

நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன்.

“இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம்.

நீயும் வா,” என்றான் திருடர் தலைவன்.

இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர்.

இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

எங்கும் இருட்டாக இருந்தது.

அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர்.

திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர்.

அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது.

திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது.

ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு.

அது கத்தாது என்று சொல்ல நினைத்தான்.

கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம்.

“சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான்.

இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன்.

சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான்.

ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான்.

வலிமையாக ஊதினான்.

சங்கோசை எங்கும் கேட்டது.

அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர்.

பிறகு என்ன?

பிச்சைக்காரனை கூட்டுச் சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர்.

இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி.

  • 90
  • 92
  • 93
  • 93
  • 93
  • 93
·
Added a post

Tanga / Tonga என இந்தியில் அழைக்கப்படும் குதிரை வண்டியில் குதிரையை வண்டியுடன் பிணைக்க பயன் பட்ட தோல் வார் தான் (மாட்டுத் தோலால் ஆன பட்டையான கனமான பெல்ட் போன்ற ஒன்று) அழகு சென்னைத் தமிழில் டங்குவார் என்றாகியது…

குதிரையின் முழு பலமும் இந்த டங்குவாரின் மூலமே வண்டிக்கு கிடைக்கும்..

வண்டியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வளையங்களின் ஊடே இந்த டங்குவார் நுழைக்கப் பட்டு குதிரையின் உடலோடு சேர்த்து கட்டப்பட்டிருக்கும்.

இதல்லாமல் தோல் காலணிகளில், காலணியின் மோதிரம் எனப்படும் கட்டைவிரல் வளையத்தையும் காலின் நடுப்பகுதியையும் இணைக்கும் தோல் பட்டையையும் இதே பெயரால் அழைப்பர்.

காலின் இயக்கத்துக்கு ஏற்றார் போல் காலணியின் நெகிழ்வை கட்டுப்படுத்தும் முக்கிய இணைப்பு இது…

வண்டியோட்டி முன் புறம் பார்த்தபடி வண்டியோட்ட பயணிப்பவர்கள் பின்னோக்கி பார்த்தபடி அமர்ந்திருப்பர்..

பின்னர் ஆள வந்த ஆங்கில உயர் அலுவலர்களாலும் ஆங்கில மேட்டுக்குடி மக்களாலும் மிகுதியாக டோங்கா வண்டிகள் பயன்படுத்தப்பட்டன..

முறையான சாலைகளே இல்லாத வழிகளில் இந்த டோங்காக்கள் பயணிக்கும்..

தொடர்ச்சியாக ஓரே நாளில் பல மணி நேரங்களுக்கும் தொடர்ந்து பல நாட்களுக்கும் குதிரை ஓடும் போது இரும்பு வளையங்களின் இடையே உராய்ந்து உராய்ந்து இந்த டங்கு வார் தேய்ந்து வலிமை இழந்து விடும்.‌.

சில சமயங்களில் ஒரே பயணத்திலேயே இந்த டங்கு வார்கள் அறுந்து போகும்..

அப்புறம் குதிரை வண்டிக் காரர்கள் கன்ட்ரோலில் இருக்காது. அப்புறம் பயணம்???

ஒரு கேள்விக் குறியாக மாறிவிடும்.

சில கடும் பயண வழித்தடங்களை குறிப்பிட..

"ஐயோ அந்த ஊருக்கு போகனுமா? டங்குவார் அறுந்துடுமே"

என குறிப்பால் பயண கடுமையை குறித்துப் பேச அதுவே…

ஓர் செயலை செய்ய பெரும் துன்பப்படும் நிலைகள் ஏற்படுகையில் அக்கால கட்டத்தில் வண்டியோட்டிகள் பயன் படுத்திய இச்சொலவடை வழக்கு எல்லாவற்றுக்கும் பயன்படுத்தப்படலானது..

காலணியின் டங்குவார் அறுந்து போவதும் பெரும் அலைச்சலையும் சரியாக நடக்க இயலாது சிரமமான நிலையையும் குறிக்கும்..

அதாவது ஒருவர், அவரது இயல்பு வாழ்க்கையில்...... பெரும் துயரங்களை பட்டால்தான் ஒரு சாதாரண வேலையையே முடிக்க முடியும் என்பதே..

டங்குவார் அறுந்துடும் என்பதன் பொருள்.

  • 129

காலை வணக்கம்

  • 129
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வீடு பராமரிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல் அமையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

ரிஷபம்

பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சவாலான பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபார மாற்றங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

மிதுனம்

பணிவான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். கணித துறைகளில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்கள் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கடகம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதர வழியில் அனுகூலங்கள் பிறக்கும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். இணையம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழல்கள் அமையும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

சிம்மம்

நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபார முதலீடு குறித்த முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளால் சோர்வுகள் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்

 

கன்னி

பூர்விக சொத்துக்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். அரசு காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செயல்களில் உள்ள தடைகளை அறிவீர்கள். பயணம் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான செயல்களில் இருந்த சோர்வுகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

துலாம்

வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும்.இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும். உறவுகளுடன் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் ஒரு விதமான திருப்தி ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

விருச்சிகம்

தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல்கள் அமையும். வழக்கு விஷயங்களில் பொறுமை வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் வந்து சேரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

 

தனுசு

உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தொழில்நுட்ப கருவியால் விரயங்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். அரசு செயல்களில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். சொந்த ஊர் சிந்தனைகளால் மனக்குழப்பங்கள் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மகரம்

மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். துணைவர் வழி உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்த தாழ்வு மனப்பான்மை குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

கும்பம்

பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

 

மீனம்

குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களால் கையிருப்புகள் குறையும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். கற்பனை துறைகளில் மேன்மை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

  • 132
·
Added a post

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 27.6.2025.

இன்று பிற்பகல் 02.26 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று காலை 10.09 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

இன்று அதிகாலை 02.03 வரை துருவம். பின்னர் வியாகாதம்.

இன்று அதிகாலை 02.44 வரை பாலவம். . பின்னர் பிற்பகல் 02.06 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று அதிகாலை 05.54 வரை அமிர்த யோகம். பின்பு காலை 10.09 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=29&dpx=1&t=1750999296

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 142

Good Morning...

  • 119
·
Added a news

கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது. குறித்த நபர் ஐந்து பெண்களுக்கு எதிராக 6 பாலியல் வன்முறைகள் செய்ததாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டதுடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஜோயல் எரிக் கார்ல்சன் என்பவர், 10 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய உயர்நீதிமன்றத்தில் கேம்லூப்ஸ் நகரில் வழங்கப்பட்டது.

இது மிகவும் கொடூரமான பாலியல் குற்றமாகும் என நீதியரசர் டபிள்யூ. பால் ரிலி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த நபரின் செயல், ஒவ்வொரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

  • 281
  • 347
·
Added a post

குபேர பகவானுக்குரிய கிழமையாக திகழ்வது வியாழக்கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை ஐந்து முப்பது மணிக்கு மேல் குபேர பூஜை செய்யும் வழக்கத்தை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் செய்யக்கூடிய வியாபாரமும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த குபேர பகவானுக்குரிய பூஜையை செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் மிகவும் எளிதில் குபேர தீபத்தை ஏற்றும் முறையும் இருக்கிறது.

அமாவாசை முடிந்து வரக்கூடிய மூன்றாவது நாளை தான் மூன்றாம் பிறை தரிசனம் செய்வதற்குரிய நாள் என்று கூறுகிறோம். அந்த நாளில் நாம் என்ன செய்தாலும் அது பல மடங்கு வளரும் பெருகும் என்று பொருள்படும். அப்படிப்பட்ட ஆனி மாதத்தின் மூன்றாம் பிறை வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்குரிய கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும்.

அப்படிப்பட்ட மூன்றாம் பிறையோடு சேர்ந்து வரக்கூடிய வியாழக்கிழமை அன்று நாம் மாலை 6:14 மணியிலிருந்து 7:30 மணி வரை ஒரு தீபத்தை ஏற்றி குபேர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் குபேர பகவானின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றலாம். குபேர பகவானின் படம் இல்லை என்பவர்கள் மகாலட்சுமிக்கு முன்பாகவும் இந்த தீபத்தை ஏற்றலாம். எந்த விளக்கை பயன்படுத்தி வேண்டுமானாலும் இந்த தீபத்தை நாம் ஏற்றலாம்.

ஆனால் அந்த விளக்கிற்கு 5 எண்ணிக்கையில் மஞ்சள் குங்குமம் வைத்திருக்க வேண்டும். ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்து அதற்கு மேல் வாசனை மிகுந்த மலர்களை பரப்பி அந்த மலர்களுக்கு நடுவே ஒரு விளக்கை வைத்து அந்த விளக்கில் சுத்தமான நெய்யை ஊற்றி மஞ்சள் நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். ஏதாவது ஒரு இனிப்பு பொருளை இந்த தீபத்திற்கு முன்பாக நெய்வேத்தியமாக வைத்துவிட்டு “ஓம் குபேர பகவானே சரணம் சரணம்” என்னும் மந்திரத்தை 54 முறை கூற வேண்டும். இப்படி ஏழு முப்பது மணி வரை இந்த தீபத்தை எரிய விட்டு இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது குபேர பகவானின் அருளால் நமக்கு தேவையான பண வரவு ஏற்படும். மேலும் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய பணமும் வந்து சேரும்.

முழு நம்பிக்கையோடு குபேர பகவானை நினைத்து இந்த நேரத்தில் ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து குபேர பகவானை வழிபாடு செய்ய அவரின் அருளால் நம்முடைய பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியடையும்.

  • 362
  • 367
·
Added a post

பொதுவாக பெரியவர்கள் சொல்கின்ற ஒரு விஷயம் என்னவென்றால் யாரையும் அவ்வளவு எளிதாக நினைத்துவிடக் கூடாது. நம்மைவிட சிறியவர்களோ பெரியவர்களோ அவர்களிடம் இருந்து என்ன நல்ல விஷயங்கள் இருக்கிறதோ அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அப்படிப் பார்க்கும் பொழுது, ஜப்பானியர்களிடம் இருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது பற்றிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

நேர்மை:

மற்றவர்களைப் போல அல்லாமல் ஜப்பானியர்கள் தான் உலகில் அதிக அளவில் நேர்மையாளர்களாக இருப்பார்களாம். அதேபோல அதேஅளவு நேர்மையை மற்றவர்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பார்களாம். பர்சனலாகவே பொய் சொல்வதைத் தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள்.

வேலை:

அடுத்தவர்களுடைய வேலையில் தலையிடாமல் தன்னுடைய வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

பொது_இடங்கள்:

பொது இடங்களில் செல்லுகின்ற பொழுது அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்கள். அதனால் பொது இடங்களில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

செல்போன்:

ரயில், பஸ் பயணங்களில் செல்போன் பேசுவது அவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. சத்தமாகப் பேசினாலும் பிடிக்காது. முடிந்தவரையில் பேசுவதைத் தவிர்த்து அமைதியாகவே பயணங்கள் மேற்கொள்கிறார்கள்.

தாய்மொழி:

தங்களுடைய தாய்மொழியை அவர்களைவிடவும் அதிகமாக நேசிப்பவர்களாக இருக்கிறார்கள்.

பயணங்களின் போது:

ரயில் பயணங்களில் அல்லது பஸ்ஸில் போகின்ற பொழுது, கூட்டமாக இருந்தாலும் கூட்டமே இல்லாவிட்டாலும் சரி, இறங்குகின்ற பொழுது வரிசையாக நின்று யாரையும் இடித்துக் கொள்ளாமல் ஒருவர் பின் ஒருவராக வரிசையாகத் தான் இறங்குவார்கள்.

சரியான நேரம்:

நமக்குச் சுட்டுப் போட்டாலும் வராத ஒரு விஷயம் இதுதான். அலுவலகத்துக்கு மிகச் சரியான நேரத்துக்குச் சென்று விடுவது ஜப்பானியர்களின் பழக்கமாக இருக்கிறது.

வேலை நேரம்:

வேலை நேரத்தில் செல்போனைப் பயன்படுத்தவே மாட்டார்கள். எதை கத்துக்கிறோமோ இல்லையோ இத கட்டாயம் கத்துக்கணும்ப்பா. வேலை நேரத்தில் ஓபி அடிக்கும் பழக்கமே ஜப்பானியர்களுக்குக் கிடையாதாம். 12 மணி நேரம் வேலை இருந்தாலும் முறையாகவும் சரியாகவும் வேலை செய்து முடிப்பார்களாம். ரொம்ப சிஸ்டமேட்டிக்காக இருப்பார்கள்.

விடுமுறை நாட்கள்:

விடுமுறை நாட்களை பொழுது போக்கிற்காகவே பெரிதும் பயன்படுத்துவார்கள்.

மற்றவர்களுடைய பொருள்:

நம்மகிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒன்னு அவங்ககிட்ட இருக்கு. அடுத்தவர்களுடைய பொருளுக்கு எப்போதும் ஆசைப்பட மாட்டார்கள்.

சுற்றுப்புற சுத்தம்:

சுற்றுப்புறச்சூழல் மீது அக்கறையும் கவனமும் கொண்டிருப்பதில் உலக அளவில் ஜப்பானியர்களுக்கு நிகர் ஜப்பானியர்கள் தான். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது, உதாராணமாக குப்பைகளையெல்லாம் மட்கும் மட்காத குப்பைகளாகப் பிரித்து தனித்தனி கவரில் போட்டு அப்புறப்படுத்துவது, சாலைகளில் எச்சில் துப்புவதைத் தவிர்ப்பது, பொது இடங்களில் அசுத்தங்களைச் செய்யாமல் இருப்பது, குறிப்பாக, சாலைகளில் பொது இடங்களில் புகைப் பிடித்தலைத் தவிர்ப்பது ஆகியவற்றைக் கடைபிடிக்கிறார்கள்.

உதவி செய்தல்:

அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் படிக்கட்டுகள் மற்றும் எக்ஸ்லேட்டர்களில் போகின்ற பொழுது, ஓரமாக நிற்பது, அவசரமாகச் செல்கின்றவர்களுக்கு வழிவிடுவது போன்ற நாகரீகங்களைப் பின்பற்றுகிறார்கள். மொழி தெரியாத வெளிநாட்டினர் யாராவது உதவி கேட்டால் சிறிதும் சளைக்காமல் அவர்களுக்கு உதவி செய்வார்கள். வழி தெரியவில்லை என்றால் அந்த இடத்துக்கு வழிகாட்டி அழைத்துக் கொண்டே செல்வார்கள்.

  • 385
  • 388
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். அரசு வழியில் உதவிகள் சாதகமாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் திருப்தியை தரும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தகவல் தொடர்பு துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

ரிஷபம்

குழந்தைகளின் புதிய முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். கடன் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மிதுனம்

மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணங்களின் போது கவனம் வேண்டும். வியாபார விஷயங்களில் கவனம் வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்பும், உழைப்பும் அதிகரிக்கும். பரிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய நபர்களிடம் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். கால் வலி ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

சிம்மம்

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

கன்னி

தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

துலாம்

எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் உருவாகும். தாயிடத்தில் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பங்குதாரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

விருச்சிகம்

எதிலும் அவசரம் இன்றி செயல்படவும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். பயனற்ற அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். வாக்குறுதிகள் அளிக்கும் பொது சிந்தித்து செய்லபடவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

தனுசு

துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்களால் ஆதரவு உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

எதிலும் ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். சுப காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடி வரும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். சலனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கும்பம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மனதில் புதிய இலக்குகள் உருவாகும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தவறிய சில பொருட்களை பற்றிய விபரங்களை அறிவீர்கள். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். தாயுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். அனுபவம் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

  • 392
·
Added a post

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை 26.6.2025.

இன்று மாலை 03.22 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று காலை 10.44 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று அதிகாலை 04.19 வரை விருத்தி. பின்னர் துருவம்.

இன்று அதிகாலை 04.11 வரை கிமிஷ்துக்கினம். . பின்னர் மாலை 03.22 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று அதிகாலை 05.54 வரை சித்த யோகம். பின்பு காலை 10.44 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=28&dpx=1&t=1750912176

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 412

இதுதாங்க வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கான அடையாளம்....

உன்கிட்ட பேசுனா நல்லாருக்கும்ன்னு தோணுச்சு அதான் வந்தேன்"

என்று நம்மிடம் சொல்வதற்கும்,

நாம் சென்று சொல்வதற்கும்

யாரேனும் இருந்துவிட்டால் போதும் இந்த வாழ்வுக்கு...

  • 412

எளிதானதை

முதலிலும்..

கடினமானதை

பின்பும் ...

எதிர்கொள்ள..

நம்மை இந்த

சமூகம்..

வழக்கப்படுத்தி

வருகிறது...

அனுபவம் அதை

மறுக்கிறது.

  • 414

“அவமானங்கள்

இன்றி

வெகுமானங்கள்

இல்லை”

  • 416
  • 416