சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1421 news
  •  ·  0 friends
  • 1 followers

தென் சீன கடலில் மோதிக்கொண்ட சீன - பிலிப்பைன்ஸ் கப்பல்களால் பரபரப்பு

சா்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மீது, சீன கடலோரக் காவல் படைக் கப்பல் மோதியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் தோமஸ் மணல்திட்டுப் பகுதியை நோக்கி, கட்டுமானப் பொருட்களுடன் நேற்று (17) பயணித்த பிலிப்பைன்ஸ் கப்பலை, சீன கடலோரக் காவல் படைக் கப்பல் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ள நிலையில், இரு கப்பல்களும் மோதிக்கொண்டதாக சீன கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தின் பாதிப்புக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், கப்பல்கள் மோதிக் கொண்டதை உறுதிப்படுத்தியுள்ள பிலிப்பைன்ஸ், வழக்கம்போல் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டுதான் தங்களது கப்பல் சென்றதாக கூறியுள்ளது.

இதேநேரம் தென் சீன கடலின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளுக்கும் சீனா உரிமை கொண்டாடிவருகிறது. இருந்தாலும், அந்தக் கடல் பகுதியில் தங்களுக்கும் உரிமையுள்ளதாக பிலிப்பின்ஸ், மலேசியா, மற்றும் தாய்வான் ஆகிய கூறிவருகின்றன. இதன் காரணமாக அந்த நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

இதற்கு முன்னரும், குறித்த கடல் பகுதியில் சீன - பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மோதிக் கொண்ட சம்பவங்கள் பல முறை நடந்தேறியுள்ளதாகவும், இதில் கப்பல்கள் சேதமடைந்ததுடன் சிலா் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக, தென் சீன கடலில் அமைந்துள்ள இரண்டாம் தோமஸ் மணல்திட்டுப் பகுதிக்கு சீனா, பிலிப்பின்ஸ் ஆகிய இரு நாடுகளுமே உரிமை கொண்டாடி வருகின்றன.

அந்த மணல் திட்டுப் பகுதியில் பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே தனது கடற்படைக் கப்பலை கடந்த 1999 இல் மோதியதாகவும், இதில் சேதமடைந்த அந்தக் கப்பலை அங்கேயே நிரந்தரமாக வைத்து அதில் படைவீரா்களையும் பிலிப்பைன்ஸ் நிறுத்தியுள்ளதாகவும் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தச் சூழலில், தென் சீன கடல் பகுதிக்கு நுழையும் கப்பல்களை நோக்கி சுடவும் அந்தக் கப்பல்களில் இருப்பவா்களை கைது செய்து 60 நாட்கள் வரை காவலில் வைத்திருப்பதற்கும் வகை செய்யும் புதிய விதிமுறைகளை சீனா கடந்த சனிக்கிழமை (15) அறிவித்தது.

சீனாவின் இந்த விதிமுறைகளை புறக்கணிப்பதாக பிலிப்பைன்ஸும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, இரு நாட்டுக் கப்பல்களும் மோதிக்கொண்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

  • 384
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads