Category:
Created:
Updated:
இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் இரண்டாவது பெண் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
இதனிடையே எந்த நேரத்திலும் பொதுத் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஒரு பொதுத் தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 11 பில்லியன் ரூபாவாக இருக்கும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.