சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1410 news
  •  ·  0 friends
  • 1 followers

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று பதவியேற்பு

2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி கலேவல தேவஹுவ பிரதேசத்தில் பிறந்தார்.

சோஷலிச மாணவர் சங்கத்தின் செயற்பாடுகளில் தனது பாடசாலை காலத்திலிருந்தே இணைந்து கொண்ட அவர் 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தார்.

1992 ஆம் ஆண்டில் அவர் கணிதப் பிரிவில் உயர்தரம் கற்று, பௌதீக பிரிவில் களனிப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார்.

களனிப் பல்கலைக்கழகத்தை தமது தேசிய அரசியலின் தாயகமாக மாற்றிய அவர் 1995ஆம் ஆண்டு பௌதீகவியலில் பட்டம் பெற்றார்.

1997ஆம் ஆண்டு, ஜே.வி.பி.யுடன் அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்த அனுரகுமார திஸாநாயக்க, சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளராகவும், ஜே.வி.பி.யின் மத்தியக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனுரகுமார திஸாநாயக்க 1998 ஆம் ஆண்டில் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

2000ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க ஆரம்பம் முதலே முக்கிய அரசியல் பிரமுகராகத் திகழ்ந்துவந்தார்.

2004 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, குருணாகல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

அந்த அரசாங்கத்தில் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

ஜே.வி.பியின் முன்னேற்றத்திற்காக பாரிய பணியை ஆற்றிய அனுரகுமார திஸாநாயக்க 2014ஆம் ஆண்டு அதன் தலைவராகவும் பதவியேற்றார்.

24 வருடங்களாக நாடாளுமன்றத்தில் செயற்பட்ட அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்த அனுரகுமார திஸாநாயக்க 2018ஆம் ஆண்டு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

ஜே.வி.பியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியை உருவாக்கி 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முதல் தடவையாகப் போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்கவால் குறித்த தேர்தலில் 3 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது.

எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து தேசிய மக்கள் சக்தியின் கருத்தை ஸ்திரப்படுத்த அயராது உழைத்த அநுரகுமார திஸாநாயக்க மாற்று அரசியல் சித்தாந்தத்தைப் பிரபலப்படுத்தி இந்த ஆண்டு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.  அதற்காக மக்கள் வழங்கிய வாக்கின் படி அவர் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

  • 229
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads