·   ·  24 posts
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் 185 மில்லியன் ரூபா செலவில் நெல் மற்றும் தாணியங்களை களஞ்சியப் படுத்தக் கூடிய வகையில் தானியக் களஞ்சியசாலை

கிளிநொச்சி  மாவட்டத்தில் விவசாயிகளின் நீண்டகால தேவையொன்று உணரப்பட்டதையடுத்து  கடந்த 2018ம் ஆண்டு நிதி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் சுமார் 185 மில்லியன் ரூபா செலவில் ஏறத்தாள நான்காயிரம் மெற்றிக் தொண் நெல் மற்றும் தாணியங்களை களஞ்சியப் படுத்தக் கூடிய வகையில்  கிளிநொச்சி மாவட்டத்திற்கான  தானியக் களஞ்சியசாலை ஒன்று கிளிநொச்சி கனகாம்பிகைக் குளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய   பிரதமருமான  ரணில் விக்கிரமசிங்கவால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையில் விவசாய மாவட்டங்களில் ஒன்றாக காணப்படுகின்ற இந்த வாழும் மக்களில் எழுபது வீதமானவர்கள் விவசாயத்தை வாழ்வாதாரத் தொழிலாக கொண்டு வாழ்பவர்கள் என்பதுடன் பெரும் போகத்தில் ஏறத்தாள எழுபதாயிரம் ஏக்கரிலும் சிறு போகத்தில் ஏறத்தாள இருபத்தையாயிரம் முதல் முப்பதாயிரம் ஏக்கரிலும் நெல் பயிரிடப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் ஒவ்வொரு அறுவடை காலத்திலும்; நெல்லுக்கான சந்தை வாய்ப்பின்மை காரணமாக விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அதே சமயம் நட்டத்தினையும் எதிர்கொள்ளும் நிலைமை காணப்படுவதுடன் அடுத்த போகத்துக்கும் தயார் படுத்த வேண்டிய நிதி தேவை இருப்பதினால் அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது.  இதனால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை குறைந்த விலைகளில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறான விவசாயிகளின் தேவையை கருதியே மேற்படி மாவட்ட உணவுக் களஞ்சியம் அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதன் சேவைகள் தொடர்பில் அல்லது இது பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடம் சென்றடையவில்லை குறிப்பிட்ட சில விவசாயிகள் தொடர்சியாக தாங்கள் அறுவடை செய்கின்ற நெல்லை களஞ்சியப்படுத்துவதன் மூலம் உரிய சந்தை வாய்ப்பை பெறுவதுடன் அதிக நன்மையடைவதாகவே குறிப்பிட்டுள்ளனர்.

விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை இயந்திரம் மூலம் உலர வைப்பதற்குரிய வசதிகளும் அதைவிட சூரிய ஒளியின் மூலம் உலர விடுவதற்கான நெற்தள வசதிகளும் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் நெல்லை உலர்த்தி பதர் நீக்கி தூய்மைப்படுத்தி பொதிகளாக்கி எடையிடப்பட்டு ஒவ்வொரு விவசாயிகளும் தனித்தனியாக களஞ்சிய படுத்தி வைக்கக்கூடிய வசதிகள் காணப்படுவதுடன் இவ்வாறு களஞ்சியப்படுத்தும் விவசாயிகள் தங்களுடைய தேவைக்குரிய நிதியை வங்கி மூலம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

மாவட்ட அரச அதிபர் குறிப்பிடுகையில் சிறுபோக அறுவடை செய்யும் விவசாயிகள் தமது நெல்லை மாவட்ட நெற்களஞ்சிய சாலையில் களஞ்சியப்படுத்தி உரிய முறையில் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கின்றன; எனவே அதனை பயன்படுத்தி விவசாயிகள் உரிய சந்தை வாய்புக்கள் கிடைக்கும் போது விற்பனை செய்ய கூடியதாக இருக்கும்.கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோகத்தில் அறுவடை செய்யும் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் நெல் சந்தைப்படுத்தும் சபையுடாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

அதற்கிடைப்பட்ட காலங்களில் நெல்லை அறுவடை செய்துள்ள விவசாயிகள் அதற்கான சந்தை வாய்ப்பு குறைவாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவற்றை எமது மாவட்டத்தில் உள்ள மேற்படி நெற்களஞ்சிய சாலையில் களஞ்சியப்படுத்தி அவற்றை உரிய முறையில் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மாவட்டத்திலேயே தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமையும் குறிபிபிடத்தக்கது.

இதே நேரம் மேற்படி உணவுக் களஞ்சிய சாலையில் அதிக விவசாயிகள் களஞ்சியப் படுத்த முன் வரும் போது பல்வேறு தேவைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. குறிப்பாக நெல்லை உலர்த்துவதற்கான மேலதிக இயந்திர மற்றும் தள வசதிகள் கூலியாட்களின் தொகை என்பன அதிகரிக்கப்படவேண்டியதும் அவசியமகும்.

(சுப்பிரமணியம் பாஸ்கரன்)

  • 385
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்