Ads
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் புயலும் இல்லத்தில் முன்னாள் போராளியும் மாவீரர்களின் பெற்றோருமான பஷீர் காக்கா ஏற்றி வைத்தார்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் புயலும் இல்லத்தில் முன்னாள் போராளியும் மாவீரர்களின் பெற்றோருமான பஷீர் காக்கா ஏற்றி வைத்தார்.
Empty
Added a news
சந்திரசேகரன் குழுவின் யாழ்ப்பாண சித்து விளையாட்டுக்கள் விரைவில் வெளியாகும் - முன்னாள் தவிசாளர் நிரோஸ
தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம், ஊழல் மோடிகளை இல்லாதொழிப்போம், சமூக சீர்திருத்தங்களை செய்வோம் என்று கூறிவரும் சந்திரசேகரன் குழுவினர் யாழ்பாணத்தில் பல கிராமங்களிலும் சமூக சீர்கேடாக பல விளையாட்டுக்களை செய்கின்றார்கள். அவர்களது இந்த சித்து விளையாட்டுக்கள் விரைவில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகும் என வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் சவால் விடுத்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று (17) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில் - உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானதாகவும் மக்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றன.குறிப்பாக தன்னுடைய அரசின் கீழ் உள்ளூராட்சி மன்றங்கள் வந்தால் தான் அவிருத்திக்கானான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மிரட்டலாக கூறுகின்றார். இது அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் கலாசாரத்தை காட்டுகின்றது.அதுமட்டுமல்லாது மக்களையும் தனித்துவமான சபைகளினதும் அதிகாரங்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றது.இவ்வாறு சிறுமைத்தனமாக ஜனாதிபதி செயற்படுவது வெட்கக் கேடானது.உள்ளூராட்சி மன்றங்கள் அரசின் எடுபிடிகள் அல்ல.அவை உள்ளூர் வழங்களை கொண்டு மக்கள் தமது பிரதேசத்தின் ஆளுகையை முன்னெடுக்கும் ஒரு அபிவிருத்திக்கான அரசியல் கட்டமைப்பு.மக்களிடம் பெறும் சோலை வரியாலும், முத்திரை தீர்வை வரியாலும், நீதிமன்ற குற்ற தண்டப் பணங்கள், சந்தை குத்தகைகளூடாக கிடைக்கும் வருமானங்கள் கடைத் தொகுதிகளின் வரிகளூடாக கிடைக்கும் பெரு நிதிகளே சபைகளின் நிதி பெறும் வழிகளாக இருக்கின்றன.அந்த வகையில் உளூராட்சி மன்றங்கள் தத்தமது வழங்களை கொண்டுதான் நிதியை ஈட்டி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனவே தவிர மத்திய அரசின் தயவில் உள்ளூராட்சி மன்றங்களும் செயற்படவில்லை என்பதை அனுரவும், அவருடைய நாடளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.ஒரு உள்ளூர் அதிகார சபையின் ஆளுகைக்குள்ளேயே அப்பிரதேசத்தின் அனைத்து செயற்றிட்டங்களும் அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் கொண்டது.உள்ளூராட்சி மன்றங்கள் தனித்துவம் கொண்டவை. சபைகள் ஒவ்வொன்றும் ஒரு குட்டி அரசாங்கம். அதன் தவிசாளருக்கு அப்பிரதேச சபையின் உச்ச அதிகாரம் இருக்கின்றது.இதில் மக்கள் தெளிவுற வேண்டும்.மேலும் சமூக நலன்புரி திட்டங்களை வழங்குவதாக கூறி சர்வதேச நடுகளிடம் இருந்து வரும் பல நூறு மில்லியன்களை பெற்று வெளிவிவகார அமைச்சு என்ற போர்வையில் அதன்னூடாக கையாண்டு சபைகளுக்கு நிதிகளை விடுவிக்கும் முறையை கையாண்டு வருகின்றன.அதன்படி தற்போது கிடைக்கும் நிதியை மத்திக்கு கையகப்படுத்தவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இதேவேளை பல பொய்களை கூறி மக்களை ஏமாற்றிய அனுர அரசு, அதில் தோல்விகண்டு இயலாமல் போனதால் இப்போது அச்சுறுத்தும் செயற்பாடாக தன்னை முன்னெடுக்க முயல்கின்றது.அதிமட்டுமல்லாது சந்திரசேகரன் குழுவினர் பலூன் ஊதிக்கொண்டிருக்கும் ஒரு சிறு பிள்ளைகள்.இந்த பால்குடிகள் ராஜபக்சர்கள் கூட செய்யாத அடக்கு முறைகளையும், அனியாயங்களையும் அட்டூழியங்களையும் செய்கின்றனர்.எனவே மக்கள் இதில் தெளிவாக இருப்பது அவசியம். அதுமட்டுமல்லது தமிழ் மக்களின் பிரதேசங்களில் காலூன்றினால் அது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இருப்பையும் இல்லாது செய்துவிடும் என்றும் தெரிவித்திருந்தார் 000
- 57
Added a post
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வாழ்க்கைத்துணை வழியில் அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும். மாமன்வழி உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தந்தையிடம் எதிர்பார்த்த சில காரியம் சாதகமாக முடியும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். தாமதம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ரிஷபம்பேச்சுக்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். உயர்கல்வியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். சமூகம் சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மிதுனம்ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் ரீதியான சில அறிமுகத்தால் லாபம் மேம்படும். மனை வியாபாரத்தில் புதுமையான சூழல் உண்டாகும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். நவீன கருவிகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம்குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கலைப் பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு சிம்மம்எதிர்பாராத பொருட்சேர்க்கைக்கு வாய்ப்புகள் அமையும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும். வழக்கு செயல்களில் சிந்தித்து செயல்படவும். பொன், பொருட்கள் மீதான ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செயல்படவும். பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபாடு உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதா கன்னிசிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கல்வியில் சாதகமான சூழல் அமையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். விதண்டாவாத பேச்சுகளை குறைப்பது மன அமைதியை தரும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : நீலம் துலாம்குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். ஓய்வு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் விருச்சிகம்நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. துணைவர் வழியில் அனுசரித்து செல்லவும். தேவை அறிந்து வாக்குறுதிகளை அளிப்பது நல்லது. பயணத்தால் பலன் கிடைக்கும். வருமானம் திருப்தியை தரும். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். உத்தியோகத்தில் உயர்வு பற்றிய செய்திகள் கிடைக்கும். தனம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு தனுசுமற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்கள் நன்மையை தரும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்படவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் ஏற்படும். அலுவல் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு மகரம்சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவுபெறும். ஆன்மிக செயல்களில் புரிதல்கள் மேம்படும். எதிர்பாராத பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அலைபேசி வழியாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். பிறமொழி மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பாசம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை கும்பம்ரசனை தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளால் மனம் மகிழ்ச்சியடையும். புதிய தொழில் தொடங்குவது சார்ந்து எண்ணங்கள் மேம்படும். செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியம் கைகூடும். சிரமம் அகலும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் மீனம்உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். சுகம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
- 257
Added a post
குரோதி வருடம் சித்திரை மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 18.4.2025. திதி பஞ்ஜமி, பகல் 2:22PMநட்சத்திரம் மூலம், இரவு 11:59PMசந்திராஷ்டமம் ரோகிணிபரிகாரம் வெல்லம்சூலம் மேற்கு
- 233
Added a post
அது ஒரு சைக்காலஜி வகுப்பு :......ஆசிரியர் வந்து.., இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு,ஒரு பெண்ணை அழைத்து,இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார்.அந்த பெண்ணும் எழுதினார்:-பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்...அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.....அடுத்து மீண்டும், ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார்.......அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்...இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்...அது அவரின் பெற்றோர், கணவர், மற்றும் ஒரே மகன்........இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்.....இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்.....வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்.....மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்.....அந்த பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்.....ஆசிரியர்,,அவரை அவரது இருக்கைக்கு, போகச்சொல்லிவிட்டு...."ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்... ?????உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர்....?உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான்...?பின் ஏன் ..?" என்று கேட்டார்.. ???முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது......அதற்கு அந்த பெண்....இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது.....!!!!என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்......!!!ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக, அர்ப்பணிப்பவர், என் கணவர் மட்டுமே............ அதனால் தான்...." என்றார்.....!!!!!அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்......இது தானே உண்மை .... உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்...... !!!அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்...!!!!இது மனைவிகளுக்கு மட்டும் இல்லை... கணவர்களுக்கும் தான்.
- 412
Added a post
என்ன சார்.?. பத்து நாள் லீவ் போல.. ஏதாவது சம்மர் டூரா.?. கேட்டபடியே வந்தார் அவர்.இல்லைங்க. பசங்களுக்கு லீவு விட்டாச்சு. கொண்டுபோய் ஒரு மாசம் எங்க அப்பா, அம்மாகிட்டே விட்டுட்டு வரலாம்னு இருக்கேன். அப்படியே நானும் பத்துநாள் தங்கிட்டு வரலாம்னு. ஊருக்குப் போய் நாளாச்சே.?.. பதிலளித்தார் இவர்.அட என்ன சார் நீங்க.? உங்க ஊரே ஒரு கிராமம். வசதிகள் குறைவு. சிட்டி லைப்லேயே வாழ்ந்த பசங்க உங்களுக்கு. அவங்களுக்கு அங்க செட்டாகுமா.? போரடிக்காதா.? அப்பா, அம்மாவை இங்க வரவச்சிட்டு, ஜாலியா இருக்கறதை விட்டுட்டு.. என்றார் அவர்.வசதியெல்லாம் மனசைப் பொறுத்ததுதாங்க. மனசு சந்தோஸமா இருந்தா போதுங்க. அதுவுமில்லாம, ஊர்ல சொந்தக்காரங்க எல்லோருக்கும் நம்ம பசங்களையும், நம்ம பசங்களுக்கு அவங்களையும் முழுசா தெரிய வேணாமா.? எல்லாரையுமா இங்க வரவழைக்க முடியும்.?.. கேட்டார் இவர்.சார்.. பையன் பத்தாவது எழுதியிருக்கான். அடுத்து கோச்சிங் கிளாஸ், கான்ஸன்ட்ரேஷன் கிளாஸ், யோகா கிளாஸ்னு ஏகப்பட்ட விஷயமிருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, ஊருக்குப் போய் பசங்களோட எதிர்காலத்தை வீணாக்குறீங்க சார்.. என்றார் அவர்.நீங்க சொன்ன அத்தனை கிளாசும் கூட்டுக் குடும்பத்துலேயே இருந்ததுங்க. அதை விட்டுட்டு பொழைக்க தனியா வந்ததிலதான், இப்போ எல்லாத்துக்கும் கோச்சிங் கிளாஸ் தேட வேண்டியிருக்கு.. என்றார் இவர்.காம்பெடிஷன் அதிகம் சார். இப்போலேர்ந்தே எல்லாத்துக்கும் பசங்களை தயார் பண்ணணும். அதுக்குத்தான் சொல்றேன்.. என்றார் அவர்.தன்னம்பிக்கையும், தைரியமும் தரதே நம்ம உறவுகள்தான் சார். அதை இழந்துட்டு, எதைக் கத்துக்கிட்டும் பிரயோஜனமே இல்லை சார்.. என்றார் இவர்.புரியலை சார்.. என்றார் அவர்.பிரச்சனையே அதான். இங்கே நிறைய பேர் தன் பசங்க எல்லாத்தையும் கத்துக்கணும்னு நெனக்கறாங்களே தவிர, வாழக் கத்துக் குடுக்கறதே இல்லை.சொந்தக்காரங்க ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி சார். அத்தனை பேரையும் பசங்களுக்கு எப்படி சமாளிக்கறது, எப்படி பழகறதுன்னு தெரிஞ்சாதான், நாளைக்கு வெளி உலகத்துல எப்படி எல்லோர்கிட்டேயும் பழகறதுன்னு தெரியும். அதுவுமில்லாம, நமக்காக இத்தனை பேர் இருக்காங்க அப்படின்ற தைரியமும் வரும். நாம தப்பு செஞ்சா இத்தனை பேர் கேட்பாங்கன்ற பயமும் இருக்கும்.இதையெல்லாம் தாண்டி, வருஷத்துல இந்த ஒரு மாசத்தை எதிர்பார்த்து வருஷம் பூரா காத்திட்டிருக்கற வயசானவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. பணம் சம்பாரிக்க, படிக்க, பிழைக்கன்னு ஏதாவது ஒரு காரணத்தால பிரிஞ்சு கிடக்கிற குடும்பம், இந்த ஒரு மாசம் இணைஞ்சிருக்கறதால அவங்க அடையற சந்தோஷத்தை, நீ என்ன விலை கொடுத்து, எதை வாங்கித் தந்தாலும் கிடைக்காது.இந்த வயசுல எங்க அப்பாவுக்கு நான் அடங்கி நடக்கறதையும், எங்க அம்மா மடில நான் படுத்து தூங்கறதையும் எம் பிள்ளை பார்த்தாலே போதும். பாசம்னா என்னன்னு புரிஞ்சுப்பான். என்னை கொண்டாட ஆரம்பிச்சுடுவான். இதையெல்லாம் கோச்சிங் கிளாஸ் சொல்லிக் குடுக்காது.பசங்களுக்கு எல்லாம் தெரியணும்கறதைவிட, நல்லது தெரியணும்கறதுதான் முக்கியம்.எம் பசங்க நிறைய சம்பாரிக்கறான்.. பெரிய அதிகாரி.. அப்படின்றது எனக்குப் பெருமையில்லை. எம் பையன் என்னை நல்லாப் பார்த்துக்கறான்னு முழுமனசோட நான் கடைசி காலத்துல சொல்லணும். எங்கப்பா என்னை நல்லா வளர்த்தார்னு அவன் சொல்லணும். அதுதான் முக்கியம். அதுக்கு நான் அதுமாதிரி நடந்து காட்டணும். ஏன்னா, எம் பசங்களுக்கு நான்தான் ஹீரோ. நான் செய்யறதுதான் சரின்ற நம்பிக்கை வரணும். அதை எங்க அப்பாகிட்டே நான் நடந்துக்கற முறை கத்துக் குடுக்கும்.நமக்கும் வயசாவும். நாளைக்கு எம் பையனும் அப்பா ஆவான். அவன் வாழ்க்கைலையும் இதேபோல சம்மர் லீவுன்னு ஒண்ணு வரும். அப்போ அவன் என்னைத் தேடணும். அவனுக்காக மட்டுமில்லை.. அவனோட பசங்களுக்காகவும். அதுக்குத்தான் இவ்வளவும்... என்றார் இவர்.அது வந்து.. என இழுத்தார் அவர்........ இதோ பாருங்க நண்பரே.. எம்மேல பாசமா இருப்பான்னு எம் பையன் என்னைக் கேட்கலை. ஆனா, நான் இருக்கேன். அதேமாதிரி, எம்மேல பாசமா இருப்பான்னு நான் அவனை கேட்க மாட்டேன். ஆனா, அவன் இருப்பான். அதுக்கு, பாசம், குடும்பம், உறவுன்னா அவனுக்குத் தெரியணும். ஒரு அப்பாவா நான் தெரிய வைக்கிறேன். எனக்கு எங்கப்பா கத்துக் குடுத்ததை நான் கத்துக்குடுக்றேன். இதுதான் இப்போதைக்கு தேவையான கோச்சிங் கிளாஸ்.நாம விதைச்சது பெரிய மரமாகறது முக்கியம்னு சில பேர் எண்ணம்.அது விஷமரமா யாருக்குமே பயனில்லாம போயிடக் கூடாதுங்கறது என் எண்ணம்.தலைமுறைங்கறது நாம மட்டுமே இல்லை. நமக்கு முன்னாடி இருந்ததுங்கறதை நாம நிரூபிக்கறோம். நமக்குப் பின்னாடியும் இருக்கணும். அதையும் நிரூபிக்க வைக்கணும். அதுக்கு குடும்பம், உறவுகளை விட சிறந்த பல்கலைக்கழகம் எதுவுமே இல்லை.சரி விடுங்க. நீங்க சம்மர் டூர் எங்க போறீங்க. ? கேட்டார் இவர்.சிறிது நேர மௌனத்திற்குப் பின் சொன்னார் அவர்..என் தலைமுறையை எம் பசங்களும் புரிஞ்சுக்கற இடத்துக்கு.நானும் புரிஞ்சுக்கணுமே...வெளியேறும்போது அவர் மனதில் நிறைவு நடையிலேயே தெரிந்தது.உறவுகளோடு வாழ்வதைவிட, வேறெதையுமே வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்க்கப் போவதில்லை.ஏனெனில்,உறவுகள்தான் வாழ்வின் படிப்பினை..அனுபவம் கற்றுத்தரும் ஆசான்.இன்றைய நன்னாளுக்கான வாழ்த்துகளும், வேண்டுதல்களும்..
- 413
Added article
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, நாசர், சேத்தன், வடிவுக்கரசி என்று பலர் நடித்துள்ளனர்.கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் கமல் ஹாசனின் 234 ஆவது படமாகும்.வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது.இந்த படத்தில் இடம் பெற்றுள்ள முதல் சிங்கிள் ஜிங்குச்சா என்ற பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாக இருக்கிறது. இந்த பாடல் கல்யாண நிகழ்ச்சியின் போது கேங்ஸ்டர்களுடன் இணைந்து பாடப்படும் பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.இந்த பாடலுக்கு சிம்பு மற்றும் கமல் ஹாசன் உடன் இணைந்து குண்டர்கள் டான்ஸ் ஆடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப் பாடலுக்கு கமல் ஹாசன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். இப்பாடல் எத்தனை மணிக்கு வெளியாகும் என்கிற தகவல் இன்று மாலையோ அல்லது நாளை காலை அறிவிக்கப்படும் என தெரிகிறது.
- 433
Added article
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்த கார்த்திக் சுப்புராஜுக்கு முதன்முதலில் கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம். கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் ரஜினிக்கு ஃபேன் பாய் சம்பவமாக அமைந்தது.பேட்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக சூர்யா உடன் கூட்டணி அமைத்தார். கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தை தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 1ந் தேதி திரைக்கு வர உள்ளது.சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் உடன் தான் அவர் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான் பேட்ட படம் மாஸ் ஹிட் அடித்த நிலையில், தற்போது 6 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினிகாந்தும், கார்த்திக் சுப்புராஜும் இணைய உள்ள தகவல் கோலிவுட்டில் செம வைரலாக பரவி வருகிறது.நடிகர் ரஜினிகாந்த் கைவசம், தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் உள்ளன. இதில் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இப்படங்களை முடித்த பின்னர் கார்த்திக் சுப்புராஜ் உடன் ரஜினி கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 441
Added a post
விதியை தர்மபத்தினியாலும் வெல்ல முடியாது!மகரிஷி தன்ரீகரின் மனைவி பூந்ததி, கணவர் மீது பக்தி கொண்டவள். அதிகாலை எழுந்ததும் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவாள். ஒரு நாள் கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கியவள், தற்செயலாக திரும்பினாள்.முனிவர் தன்ரீகர் நிம்மதியாகப் படுத்துக் கிடக்க… அவரது நிழல் மட்டும் அரையடி தள்ளி இருப்பதைப் பார்த்தாள். தன் கணவருக்கு ஏதோ விபரீதம் நிகழப் போகிறது என்பது புரிந்து கலவரப்பட்டாள்.இதை தடுக்க வேண்டும் என்ற ஆவேசத்துடன் எழுந்து அகல் விளக்கை நன்கு தூண்டி எரிய விட்டாள்.குளித்து விட்டு சாணத்தைக் கரைத்துத் தெளித்தாள். கோலம் போட்டாள்.கண் விழித்ததும் மகரிஷி தன்ரீகர் ஆற்றங்கரைக்கு நீராடக் கிளம்பினார். வாசலைத் தாண்ட முற்பட்ட போது, அவர் முன் வந்து நின்ற பூந்ததி, ‘‘ஸ்வாமி! இன்று நான் விரதம் அனுஷ்டிக்கிறேன்.சூரியன் மறையும் வரை தாங்கள் வெளியில் வராமல் இருக்க வேண்டும்!’’என்றாள் கண்ணீருடன்.‘‘நீ விரதம் இருப்பதற்கும் நான் வெளியே செல்லாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?’’ என்று கேட்டார் தன்ரீகர்.‘‘ஸ்வாமி… விளக்கம் கேட்காதீர்கள்! இன்று மாலை வரை குடிலை விட்டு வெளியே வராதீர்கள்.’’கண்ணீரும் கம்பலையுமாக அவள் பேசிய விதம் மகரிஷி யின் மனதை இளக வைத்தது. உள்ளே சென்று, யோசனையுடன் அமர்ந்தவர், விலகியிருக்கும் தனது நிழலைக் கண்டார். உடனே, ‘பூந்ததி விதியுடன் போராடத் துணிந்து விட்டாள்’ என்பது புரிந்தது.புன் முறுவலுடன் வேடிக்கை பார்க்கத் தீர்மானித்தார். ஆற்றங்கரையில் காத்துக் கொண்டிருந்த எமதூதர்கள் தன்ரீகர் வராததால் ஏமாற்றமடைந்து குடிலை நோக்கி வந்தனர்.குடிலை நெருங்கப் போனவர்களை அக்னிப்பிழம்பு எரித்தது. ‘‘மகா பத்தினி பூந்ததி தன் கற்பின் மீது சத்தியம் செய்து என்னைக் காவலாக நிறுத்தியிருக்கிறாள்.எமதர்மனே வந்தாலும் உள்ளே போக முடியாது!’’ என்று அக்னி பகவான் எச்சரித்தார்.மிரண்டு போன எமதூதர்கள் எமனிடம் விஷயத்தைத் தெரிவிக்க விரைந்தனர். குடிலின் வாசலுக்கு எதிரே தீவிரமாக பூஜை செய்து கொண்டிருந்தாள் பூந்ததி.பக்கத்து மரக்கிளையில் வெகு நேரமாக ஒற்றைக் காகம் கரைந்து கொண்டே இருந்தது.நேரம் செல்லச் செல்ல அந்தக்காகம் பூந்ததிக்கு அருகில் வந்து கரைந்தது.பூஜை தடைபடக் கூடாது என்று கருதி, பூந்ததி கண்களை மூடிய வண்ணம் மந்திரங்களை ஓதினாள். திடீரென காகம் கரைவதை நிறுத்தியது. நிசப்தம் நிலவியதும் கண்களை திறந்தாள் பூந்ததி. இறைவனுக்குப் படைக்க இருந்த பிரசாதத்தை காகம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைக் கண்டு கோபமான பூந்ததி, அங்கிருந்த மரக் கிளையை ஒடித்து காகத்தை விரட்டினாள்.காகம் தள்ளிப் போனது. பூந்ததி சற்று நகர்ந்து விரட்டினாள். மீண்டும் தள்ளிப் போனது. இப்படியாக காகத்தை விரட்டிக்கொண்டே குடில் அமைந்த நந்தவனத்தை விட்டே வெளியே வந்தாள்.இதுவரை விலகிப் போன காகம், அவளது காலடியில் அமர்ந்து எமதர்மராஜனாக உருமாறியது. ‘‘தாயே… மன்னியுங்கள்! குடில் அருகே நீங்கள் இருந்தால், என் கடமையை செய்ய முடியாது. விதிப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்பதை அறிய மாட்டீர்களா?’’ என்றான் எமதர்மராஜன்.‘கணவரின் உயிரைக் காக்க இயலாத ஒரு பெண் உயிரோடு இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது’ என்று, கிணற்றில் குதித்தாள் பூந்ததி. எமதர்மன் பின் தொடர்ந்து வந்து கிணற்றில் எட்டிப் பார்த்தான்.‘பூந்ததியின் ஆயுள் இன்னமும் முடியவில்லையே?’ என்று அவன் யோசித்தபோது… கிணற்றிலிருந்து காகமாக மாறி மேலே பறந்து வந்தாள் பூந்ததி.‘‘தாயே! எங்கெங்கு நான் உயிர் எடுக்கப் போகிறேனோ… அங்கெல்லாம் காகம் உருவில் சென்று எச்சரியுங்கள்! இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய உணவு உண்டு அவரவர்க்கு சமர்ப்பணம் செய்யுங்கள்!’’ என்று பூந்ததியிடம் கேட்டுக் கொண்டான் எமதர்மராஜன்.அதன்படி காகத்தின் வடிவில் இன்றும் மரணத்தை எச்சரித்துக் கொண்டும், இறந்தவரின் ஆன்மா சாந்திக்காக உணவு உண்டும் இருந்து வருகிறாள் பூந்ததி.
- 444
Added a post
காஃபி குடித்த டம்ளரை என்னிடமிருந்து வாங்கிக்கொண்ட என் மனைவி, நகராமல் அப்படியே நின்றாள்.'என்ன' என்பதுபோல் வைதேகியை ஏறெடுத்துப் பார்த்தேன்.உங்கப் பையனும் மருமகளும் நாளை காலையில ஹனிமூன் முடிஞ்சூ சிம்லாவிலேர்ந்து திரும்பி வராங்க.சரி. அதுக்கென்ன இப்போ?அவங்க தங்க ரூம் வேண்டாமா. அந்த ரூம்லதான உங்க அம்மா தங்கியிருக்காங்க. இவ்வளவு நாள் இருந்தது போதும். அவங்கள ஹாலுக்கு ஷிப்ட் பண்ணச் சொல்லுங்க.வாஸ்தவம்தான, முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தந்தை கட்டிய வீடு.பாத் ரூம் அட்டாச்சுடன் இரண்டு படுக்கையறைகள், ஹால், அதிலும் அட்டாச்டு பாத்வசதி உண்டு.சமையலறை; டைனிங் ரூம் ; பூஜையறை என்று விஸ்தாரமாய் கட்டப்பட்ட வீடு. இப்போது என் அம்மா தங்கிக் கொண்டிருக்கும் அறைதான் என் தந்தை உபயோகித்தது.நான் இருக்கும் படுக்கையறையை ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தி வருகிறேன்.எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள்வரை என் தந்தை உயிருடன் இருந்தார்.இன்றுவரை தன் ரூம் என்ற உரிமையுடன்இருந்து வருகிறாள் அம்மா. இப்போது தடாலென்று ஹாலுக்கு வரச் சொன்னால்.அதுவும் உறவினர், நண்பர்கள் அடிக்கடி வருவர். ஹாலில் உட்கார்ந்தபடி தான் பேசுவர். அது அம்மாவுக்கு இடைஞ்சலா இருக்காதா? தனக்கென்று இருக்கும் பிரைவேஸி இல்லாமல் எப்படி மீதியிருக்கும் காலத்தை தள்ளுவாள்? நினைக்கும்போது தொண்டையை அடைத்தது எனக்கு.என்ன பதில் இல்ல. உங்களுக்கு சொல்ல கஷ்டமாயிருந்தால் நான் உங்கம்மாக்கிட்டப் பேசறேன்.ஹாலுக்கு ஷிப்ட்டாகி வாம்மா என்று நான் கேட்பதைவிட என் மனைவியே கேட்பதுதான் சரி என மனதில் பட்டது.சரி வைதேகி! நீயே கேட்டுடு என்றேன்.அடுத்த ஐந்து நிமிடங்களில் வைதேகி என் அம்மா படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.அத்தை! குரல் கேட்டதும் அம்மா விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்.நாளைக் காலை உங்க பேரனும் அவன் பெண்டாட்டியும் டூர் முடிஞ்சு திரும்பி வராங்க. அவங்க தங்க ரூம் வேண்டாமா. நீங்க காலிபண்ணிக் கொடுத்தால் தானே அவங்க இங்க தங்க முடியும். தயவு செஞ்சு நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு ஹாலுக்கு வரப் பாருங்க என்று கூறி விட்டுத் திரும்பினாள்.அவள் அடுக்களைக்குள் நுழைந்ததும் நான் அம்மா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தேன் .அம்மாவைப் பார்க்க பாவமாயிருந்தது.பிரம்மை பிடித்தால் போல் அமர்ந்திருந்தாள். இதுவரை ஸ்வாதீனத்தோடு உரிமை கொண்டாடிய பிரைவேட் ரூம் தனக்கு கிடையாது இனி கிடையாது என்பதை அவளால் தாள முடியவில்லை.அம்மா அருகில் கட்டில் மீது உட்கார்ந்தேன்.என் கைகளை ஆதூரத்துடன் பற்றிக் கொண்டாள்.அவள் கைகள் நடுங்கின.உனக்கு இஷ்டமில்லேன்னா நீ ஹாலுக்கு வரவேணாம்மா. இங்கேயே இருந்துக்கோ. மேலுக்குச் சொல்லி பெருமூச்சொன்றை விட்டேன்.அது கூடாதுடா ராகவா. சின்னஞ் சிறுசுகள். அதுங்க ஹால்ல தங்க முடியாது.எனக்கென்ன, நான் ஒண்டிக்கட்டை. ஹாலுக்குத்தானே போகப் போறேன். வீட்டைவிட்டு இல்லையே.அம்மா இப்படிச் சொன்னதும் எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.சிறிதுநேரம் மெளனமாயிருந்த அம்மா தொடர்ந்தாள்.ராகவா! நீ குழந்தையா இருந்தபோது, இதே கட்டில்லதான் என்னோட படுத்திருந்தே. உடம்புக்கு முடியாம நான் இருக்கறபோது உங்கப்பா சாதம் பிசைந்து கொண்டு வந்து இந்தக் கட்டில்ல உட்கார்ந்துதான் உனக்கு சாதம் ஊட்டுவார். எத்தனை தடவைகள், அதெல்லாம் மறக்க முடியுமா? கைகளை என்னிடமிருந்து விடுவித்து கட்டிலை ஆதங்கத்துடன் தடவிப் பார்த்துக் கொண்டாள்.சட்டென என்னை நோக்கித் திரும்பிய அம்மா, டேய் ராகவா! இன்னிக்கு ராத்திரி மட்டும் என்னை இங்க தங்கவிடுடா.நாளை உதயத்தில் நான் ஹாலுக்கு வந்துடறேன் என் கையைப் பிடித்து கெஞ்ச, துக்கம் பீறிட்டது எனக்கு.சரிம்மா! நீ படுத்துத் தூங்கு ! இன்னும் கொஞ்ச நேரம் அங்கு தங்கினால் நான் ஓ வென்று அழுதுவிடுவேன், என எண்ணி அம்மாவைப் படுக்கவைத்து, என் அறைக்குத் திரும்பினேன்.என் சிந்தனை பூராகவும் அம்மாவைப் பற்றியே இருந்தது. அம்மா கூச்ச சுபாவம் உடையவள். யாராவது அறைக்குள் இருந்தாலே உடனே எழுந்து உட்கார்ந்து விடுவாள். உடம்பு முடியாமல் போனாலும் உட்கார்ந்தபடிதான் இருப்பாள். அதற்காகவே நாங்கள் யாராயிருந்தாலும் ஐந்து நிமிடமோ அல்லது பத்துநிமிடமோ இருந்துவிட்டு வெளியேறிவிடுவோம்.அடிக்கடி பாத்ரூம் போக எழுந்து கொள்வாள். ஹாலில் அடிக்கடி யாராவது நடமாடிக் கொண்டே இருப்பர். அதோடு ஹாலில்தான் டிவி இருக்கு. டிவி புரோக்ராம்களை என் மனைவியும், மகனும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பர்.இது அம்மாவுக்குப் பெரிய தலைவலியாக இருக்குமே.நினைக்க நினைக்க நெஞ்சில் வேதனை பிடுங்கித் தின்றது.'இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்க வேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்பது தவறு இல்லையா?'' என்று வைதேகியிடம் சொல்லிட வேண்டியது தான் என நினைத்துக் கொண்டே தூங்கி விட்டேன்.ஆனால் மறுநாள் காலை அம்மா இதற்கொரு விடை கொடுத்தாள்; ஆம். அம்மா நள்ளிரவே காலமாகி விட்டாள்.ஹாலில் இருந்துகொண்டு தான் அவஸ்தைப்பட்டு அதனால் பிறத்தியாருக்கும் கஷ்டம் கொடுப்பதை விரும்பாமல் போய்ச்சேர்ந்துவிட்டாள்.அம்மாவின் காரியங்கள் நடந்து முடிந்தன.அன்று இரவு அம்மாவைப்பற்றி சிந்தனையோடு கட்டிலில் அமர்ந்திருந்தேன்.வைதேகி என்னருகில் வந்து நின்றாள்.என்ன அம்மாவைப்பத்தி சிந்தனையா?நான் பதிலேதும் சொல்லவில்லை. அவளே தொடர்ந்தாள்.பாவம் உங்கம்மா ! இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம். ம்... என்ன செய்றது? என்றவள். ஆனால் ஒரு விஷயத்த கவனிச்சீங்களா?'என்ன' என்பதுபோல் அவளைப் பார்த்தேன்.கடைசிவரை ஹாலுக்கு வரல்ல. தன் ரூமுன்னு உரிமை கொண்டாடி, அங்கேயே உசிர விட்டாங்க. அவங்க சாமர்த்தியம் யாருக்கும் வராது.சுருக்கென்று சொல்லிவிட்டு அகன்றாள் வைதேகிஅம்மாவை வெளியேத்தணும்னு ரூமைக் கேட்டாளா? இல்ல, பையனை வைக்கணும்னு ரூமைக் கேட்டாளா?அப்பா உயிருடன் இருந்திருந்தா அந்த ரூமை கேட்டிருப்பாளா? அம்மா தனியா இருந்தது அவங்களுக்கு பலவீனமோ? அம்மா ''நான் தனியா இல்ல, பையனோடு தான் இருக்கேன்னு' சொன்ன நம்பிக்கையைக் கூட காப்பாத்த முடியலையோ?அவளை அழைத்து ''இந்த வீடு அப்பாவும், அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்டது தவறு இல்லையா?''என்று சொல்ல நினைக்கிறேன்; முடியவில்லை;இது என்னுடைய கையாலாகதத் தனமோ? நான் மட்டும் தான் இப்படியா? இல்லை, எல்லா ஆண்களும் இப்படித் தானா?பெண்' இருந்தும் 'சன்' இருந்தும் பல அப்பாக்களை இன்று 'பென்சன்' தான் காப்பாற்றுகிறது. பணத்தால் மட்டும் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்து விடுமா.ஒவ்வொரு ஆண் மகனின் வாழ்க்கையிலும் என்னை ஏன்னு கேட்க ஆளேயில்லை என்ற வாக்கியம் வயதுக்கேற்ப மாறும். இளமையில் கர்வமாக முதுமையில் பரிதாபமாக!வாழ்க்கையிலும் சரி, பணியிலும் சரி நமக்கு எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் பெற்றவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அன்னையின் மடியில் தலை வைத்து அயருங்கள். தந்தையின் கரங்களை பிடித்து கொண்டு கடைவீதிக்கு செல்லுங்கள்.வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணருங்கள். இன்று நீங்கள் பெற்றோரை ஆதரித்து அரவணைத்தால், நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களை ஆதரிப்பர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமா இதைவிட வேறு புண்ணியமும் வேண்டுமா ?
- 454
Added a news
கனடாவின் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி என்றாலும், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. அவர் சார்ந்த லிபரல் கட்சியின் முந்தைய தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதால் கார்னி பிரதமர் ஆனார்.முறைப்படி தேர்தலில் வெற்றி பெறுபவர்தான் அடுத்து கனடாவில் பிரதமர் ஆக முடியும். இந்நிலையில், மார்க் கார்னி கனடாவின் அடுத்த பிரதமராவாரா என்னும் கேள்வி எழுந்துள்ளது.அதற்கு காரணம், பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் ஆளும் லிபரல் கட்சிக்கும் இடையே மக்கள் ஆதரவில் வெறும் இரண்டு புள்ளிகள்தான் வித்தியாசம் நிலவுகிறது.DailyMail ஊடகம் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில், மார்க் கார்னிக்கு மக்களிடையே 39 சதவிகித ஆதரவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் Pierre Poilievreக்கு 37 சதவிகித ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது. கனடாவில் இம்மாதம், (ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி) தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடப்பதற்கு இன்னும் இரண்டு வாரங்கள்தான் உள்ளன.அந்த காலகட்டத்தில் மக்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆக, தேர்தலில் வெற்றி பெற்று கனடாவின் அடுத்த பிரதமராக ஆக இருப்பது மார்க் கார்னியா அல்லது Pierre Poilievreஆ என்பதை மக்கள்தான் முடிவு செய்ய இருக்கிறார்கள்.
- 462
Added a post
ஏப்ரல் 11, 1976ஆப்பிள் 1 -க்கு ஹாப்பி பர்த் டேஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்நியாக்கினால் 1976-ம் ஆண்டு இதே நாளில்தான் ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் தயாரிக்கப்பட் இந்தக் கம்ப்யூட்டரின் மதர்போர்டு மரத்தில் பொருத்தப்பட்டிருந்தது. இதில் வோஸ்னியாக், தனது கையெழுத்திட்டிருந்தார்.இக்கம்யூட்டர் குரித்த எக்ஸ்ட்ரா இன்ஃபர்மேசன்:அரிய கம்ப்யூட்டரான அதன் இப்போதைய மதிப்பு தெரியாமல் அமெரிக்காவிலுள்ள ஒரு லேடி பழைய மின்னணு பொருட்களை எடைபோட்டு வாங்கும் கடையில் போட்டு விட்டுச் சென்றுள்ளார். முன்னரே சொன்னது மாதிரி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் முதல்முறையாக உருவாக்கப்பட்டபோது, அவற்றை கைகளால் வடிவமைப்பதுதான் வழக்கம். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய. இந்த வகை கம்ப்யூட்டர்கள் மொத்தம் 200 மட்டுமே உருவாக்கப்பட்டன. எனவே அவை இப்போது அரிய வகை பொருட் களில் ஒன்றாக கருதப்படுகின்றன.அதுக்கிடையிலேதான் கலிபோர்னியாவில் லேடி ஒருவர் இறந்துபோன தன்னோட ஹஸ்பண்ட் அறையை தூய்மை செய்தார். அப்போ அங்கு உபயோகம் இல்லாத பல மின்னணு பொருட்கள் இருப்பதை கண்டார். அவை அனைத்தையும் ஓர் அட்டை பெட்டியில் போட்டு, பழைய மின்னணு பொருட்களை வாங்கும் கடையில் கொடுத்துச் சென்றார். ஆனா.. அவர், தனது முகவரி உள்ளிட்ட விவரங்களை அளிக்கவில்லை.சில நாட்களுக்குப் பிறகு அப்பெண் கொடுத்த பொருட்களில் உபயோகமாக ஏதேனும் இருக்குமா என்று அந்த கடைக்காரர்கள் சோதித்தனர். அப்போது அதில் ஆப்பிள் ஒன் கம்ப்யூட்டர் ஒன்று இருந்தது. மிகவும் அரிய பொருளான அதன் விலை இப்போது ரூ.1 கோடியே 26 லட்சமாகும்.அமெரிக்க சட்டப்படி இதுபோன்ற பழைய பொருட்கள் கடையில் தொன்மை வாய்ந்த பொருட்கள் தவறுதலாக கிடைத்தால், அதன் உரிமையாளருக்கு பாதி தொகையை வழங்க வேண்டும். எனவே இப்போது அந்த பழைய மின்னணு பொருள் கடையின் உரிமையாளர், ஆப்பிள் ஒன் கம்ப்யூட்டரை அளித்த பெண்ணை தேடிப் பிடிச்சி 75 லட்சத்தைக் குடுத்தாராம்
- 484
Added a post
எண்பது வயதைக் கடந்த முதியவர் ஒருவர் தம் மனைவியைத் தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கையைப்பிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். ஆனால், அவரோடு சென்ற அவரின் மனைவியோ அடிக்கடி அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நடக்காமல் நின்றுவிடுவதையும், அந்த முதியவர் அப்பெண்மணியின் கவனத்தைத் திருப்பித் தம்மோடு விடாமல் அழைத்துச் செல்வதையும் தொடர்ந்து கவனித்துவந்தார் அப்பகுதியைச் சேர்ந்த மனிதர் ஒருவர்.அவர் ஒருநாள் அந்த முதியவரைப் பார்த்து, “பெரியவரே! உங்கள் மனைவி ஏன் உங்களோடு நடக்காமல் இடையிடையே நின்றுவிடுகிறார்? ஏன் அங்குமிங்கும் மிரண்டு பார்க்கிறார்?” என்று வினா எழுப்பினார். அதற்கு அந்த முதியவர், “தம்பி! என் மனைவி மறதிநோயால் (Alzheimer's disease) பாதிக்கப்பட்டிருக்கிறாள்; அதனால்தான் அவள் இப்படி நடந்துகொள்கிறாள்” என்று பதில் சொன்னார்.அதைக்கேட்ட அந்த மனிதர், ”மறதிநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் மனைவிக்கு உங்களையும் அடையாளம் தெரியாதுதானே?” என்று கிண்டலாகக் கேட்கவே, அதனை ஆமோதித்த அந்த முதியவர், ”உண்மைதான்! என் மனைவி நான் அவள் கணவன் என்பதை மறந்து(ம்) பல ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று சொன்னார் சற்று வருத்தத்தோடு.வினாத் தொடுத்தவர் அத்தோடு நிறுத்தவில்லை. ”அப்படியானால் நீங்கள் உங்கள் மனைவியை நடுவழியில் விட்டுச்சென்றாலும் அவர் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை; பின்பு ஏன் நீங்கள் செல்லுமிடமெல்லாம் அவரை விடாது அழைத்துச் செல்கின்றீர்கள்?” என்று நக்கலாகக் கேட்க, எரிச்சலூட்டும் அவ்வினாவைக்கூடச் சிறுபுன்னகையோடு எதிர்கொண்ட அந்த முதியவர், ”தம்பி! என் மனைவிக்கு வேண்டுமானால் என்னை அடையாளம் தெரியாமல் போயிருக்கலாம்; ஆனால், அவள்தான் என் மனைவி என்பதும், என் வாழ்க்கைக்கு இனிமை சேர்த்தவள் அவளே என்பதும் எனக்குத் தெரியுமே” என்று பதிலளித்தார். அதைக்கேட்டதும் வினாத்தொடுத்தவரின் முகம் தொங்கிப்போனது; தம்முடைய பண்பாடற்ற வினாவுக்காக முதியவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினார் அந்த மனிதர்.
- 541
Added a news
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழில் இன்று இடம்பெற்றது.யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது . ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.இது உயர் பாதுகாப்பு வலயம் எனவும் இங்கு கூட்டம் கூட முடியாது எனவும் ஊடக சந்திப்பு ஏற்பாட்டாளர்களுடன் பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முரண்பாட்டில் ஈடுபட்டார்.தாம் எமது காணிகள் விடுவிப்பை வலியுறுத்தி ஊடக சந்திப்பை நடாத்தவே தாம் வந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இதனையடுத்து அங்கு ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களின் தேசிய அடையாள அட்டையை வாங்கி பெயர்களை பதிவு செய்த பொலிஸார் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களை காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர்.இவற்றை காணொளியை எடுத்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் காணொளி எடுத்தனர்.ஊடகவியலாளர் சந்திப்பை முடித்து விரைவாக செல்லுமாறு அங்கு வந்திருந்தவர்களுடன் பொலிஸார் தொடர்ச்சியாக தர்க்கத்தில் ஈடுபட்டனர்
- 669
Added a post
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்அத்தியாவசியமான செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு விமர்சன பேச்சுக்கள் வரக்கூடும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கான வாய்ப்பு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் ரிஷபம்சகோதரரின் வகையில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். பணிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மிதுனம்நெருக்கமானவர்களை சந்திக்க நேரிடும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிறமொழி மக்களின் அறிமுகம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். இரக்கம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம்பூர்வீக சொத்துகளின் மூலம் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பயணம் மூலம் வரவுகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் சிம்மம்உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பாசம் வெளிப்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : காவி கன்னிஎதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். மேலதிகாரிகள் உங்களின் கருத்துகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். கடினமான பணிகளையும் எளிமையாக முடிப்பீர்கள். ஆவணம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை துலாம்பேச்சு வன்மையால் காரியம் அனுகூலம் ஏற்படும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தடைப்பட்ட சில வரவுகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் பற்றிய ஆலோசனை கிடைக்கும். திடீர் பயணங்களால் மாற்றம் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு விருச்சிகம்தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பகை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் தனுசுஎதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடி வரும். தந்தை வழியில் புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சிகள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சினம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மகரம்உடல் ஆரோக்கியம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் மறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். சபை சார்ந்த பணிகளில் ஆதாயம் கிடைக்கும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் கும்பம்நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். வியாபாரம் இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். ஆக்கபூர்வமான நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் மீனம்உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத அதிர்ஷ்டகாரமான வாய்ப்புகள் உண்டாகும். தடங்கல் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- 844
Added a post
குரோதி வருடம் சித்திரை மாதம் 4 ஆம் தேதி வியாழக்கிழமை 17.4.2025. திதி சதுர்த்தி, பகல் 1:19PMநட்சத்திரம் கேட்டை, காலை 5:59AMசந்திராஷ்டமம் கார்த்திகைபரிகாரம் தைலம்சூலம் தெற்கு
- 821
Added a post
ஓர் அரசியல் பிரமுகரை புதுப் பள்ளி ஒன்றின் திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தார்கள்.நான் அவசரமாகப் போக வேண்டும் விழாவை சீக்கிரம் தொடங்குங்கள் என்றார். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பரிசு கொடுக்க இருக்கிறோம். அவைகளை வழங்கி விட்டு நீங்கள் பேசலாம் என்றார் பள்ளி நிர்வாகி. முடியாது. நான் உடனே போக வேண்டும் என்று அடம்பிடித்தார் பிரமுகர்.நிர்வாகி ஏதோ சொல்ல முயன்றும் பிடிவாதமாக மறுத்து விட்டு மைக்கை பிடித்து பேசத் தொடங்கினார் பிரமுகர். மாணவர்கள் மத்தியில் ஒரு சலனமும் இல்லை, கம்மென்று உட்கார்ந்திருந்தனர்.பேசி முடித்து புறப்பட்ட பிரமுகர், இதுதான் நீங்கள் மாணவர்களை உருவாக்குகிற லட்சணமா? ஒரு ஆர்வம் இல்லை, ஒரு கைதட்டல் இல்லை, ஏதோ கேட்கணுமே என்று கேட்பதைப் போல கம்முன்னு உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று எரிச்சலுடன் கேட்டார்.ஐயா, இது காது கேளாதோருக்கான பள்ளி திறப்பு விழா. அதைத்தான் நான் உங்களிடம் சொல்ல வந்தேன். அனைவருக்கும் காது கேட்கும் கருவிகளை வழங்க இருந்தோம். முதலில் நீங்கள் கருவியை வழங்கியிருந்தால் உங்கள் பேச்சை ரசித்து கேட்டிருப்பார்கள் என்று நிர்வாகி சொன்னார்.
- 851
Added a post
ஒரு பெரிய தொழிற்சாலை, கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் வேலை பார்க்கும் தொழிற்சாலை, எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது....ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைக்குள் வலம் வந்தாராம், அப்போது ஒருத்தன் ' மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்' அப்படின்னு படுத்து கிடந்தான்.அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார், “தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ரூபாய் சார் “ அப்படின்னான். உடனே அவர் பாக்கெட்டில் இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ரூபாயை எடுத்து தூக்கி எரிஞ்சாரு... “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு, நான் இங்க சும்மா படுத்துகிட்டு இருக்கிறவனுக்கு சம்பளம் கொடுக்கறதுக்கு இந்த தொழிற்சாலையை நடத்தல..” அப்படின்னு சொன்னாரு.அவன் ஒரு நிமிஷம் அவரை குறுகுறுன்னு பார்த்தான். அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான். எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க.அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து… “இனிமே எல்லாம் அப்படி தான் ” (தமிழ் பட டயலாக்) அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளயை கூப்பிட்டு “யார்யா அவன் ?” அப்படின்னு கேட்டாரு…அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான் ” டீ கொண்டு வந்த பையன் மொதலாளி .. “இது எப்படி இருக்கு…டீ கொடுக்க வந்தவனுக்கு பத்தாயிரம் குடுத்த முதலாளிய நெனைச்சா எப்படி இருக்கும் தெரியுமா ?
- 842