Feed Item
Added a news 

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தெடர்பிலான  மாவட்ட மேலதிக அரச அதிபர் தலைமையில்  (24-03-2023) நடைபெற்றுள்ளது.

வருடாந்த பொங்கல் உற்சவ ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை பகல் 10.மணிக்கு நாகதம்பிரான் ஆலய பூசை வழிபாடுகளை தொடர்ந்து மாவட்ட மேலதிக அரச அதிபர் ; திரு.க.சிறிPமோகனன் தலைமையில் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் பொங்கல் உற்சவத்துக்கு வழமை போன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதரவுள்ளதால் அவர்களுக்கான பாதுகாப்பு ஆலயத்தின் பொங்கல் ஏற்பாடுகளை முன்னெடுத்தல் பாரம்பரிய முறைப்படி பண்டமெடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் வீதிப் புனரமைப்பு பணிகள் சுகாதார வசதி மருத்துவ வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரNதுச செயலாளர் த. பிருந்தாகரன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பொலிசார் துறைசார்ந்த திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உறசவ கால தொண்டர்கள், உபயகாரர்கள் மற்றும் பரிபாலன சபையினர், தர்மகர்த்தாக்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 716