சினிமா செய்திகள்
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம், கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்திப்பிரிவு, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவை இணைந்து நடாத்திய மாபெரும் தொழிற்சந்தை.

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம், கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்திப்பிரிவு, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவை இணைந்து You-lead செயற்திட்டத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகம் 2 ல் சிறப்புற முன்னெடுக்கப்பட்டது.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) திரு. ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விருந்தினராக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.நிகழ்வில் தலைமையேற்று நடாத்திய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) திரு. ந.திருலிங்கநாதன் அவர்கள் உரையாற்றுகையில்.........தொழில் வழிகாட்டல் என்பது மிகவும் முக்கியமானது அதாவது இளமைப் பருவத்தில் தமது எதிர்கால நோக்கி பயணிக்கின்ற போது சரியான வழிகாட்டலோடு செல்லுகின்ற போது தான் அவர்கள் தமது இலக்கை அடைய முடியும்.உண்மையிலேயே அவர்களிடம் இருக்கின்ற திறமைகளை அடையாளம் கண்டு அத்திறமைகளுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான துறைகளுக்கு வழிகாட்டுவதன் ஊடாக இளைஞர் யுவதிகள் எதிர்காலத்திலே சிறந்த ஒரு பிரஜைகளாக வருவதற்கு வழிவகுக்கும். அந்த அடிப்படையிலே நமது மாவட்ட செயலகத்திலேயே கடமை ஆற்றுகின்ற திறன் விருத்தி உத்தியோகத்தர்கள் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டுதல்களை அன்றாடம் செய்து வருகின்றார்கள்.இருந்த போதிலும் அவர்களுக்கு ஏற்படுகின்ற மட்டுப்பாடுகள் காரணமாகவும் ஏனைய பிரச்சினைகள் காரணமாகவும் அவற்றை முழுமையாக அடைகின்றோமா என்பது தொடர்பில் எமக்கு இருக்கின்ற ஐயப்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் முகமாக பரந்துபட்ட அடிப்படையில் எல்லா திணைக்களங்களையும் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்வது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் பெருவிருப்பாகும்.அந்த அடிப்படையில் மூண்றாம்நிலைக் கல்வி தொழிற்கல்வி தொடர்பாக மாவட்டம் மட்ட செயற்பாடுகளை ஒருங்கிணைக்கின்ற பணியானது அரசாங்க அதிபர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அந்த நோக்கத்திற்காக பல கலந்துரையாடல்களை நடாத்தி அந்தந்த நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அரசாங்க அதிபர் அவர்கள் வழங்கி வருகின்றார்.அந்த வகையில் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற You-lead என்கின்ற செயற்திட்டத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களும் மாவட்ட மட்டத்தில் இப்பணியினை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தனர். அதற்கு அமைவாகவே இன்றைய நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்கள் தனது உரையில் குறிப்பிடுகையில் .........கிளிநொச்சி மாவட்ட மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் தகவல்களின்படி 2400க்கும் மேற்பட்ட தொழில் தேடுனர்கள் இருக்கின்றார்கள்.இத்தொகையானது மாவட்ட சனத்தொகையோடு ஒப்பிடும் பொழுது குறைவான தோற்றப்பாட்டையே தருகின்றது.காரணம் மனிதவள வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவு செய்த தொழில் தேடுனர்களின் தொகையை அதுவாகும்.இந்நிலையில் உராய்வின் மூலம் வேலையின்மை,வேலையில் நாட்டமின்மை,அது தொடர்பான விழிப்புணர்வின்மை போன்றவை காரணமாக வேலையின்மை வீதமானது அதிகரித்த ஒன்றாகவே காணப்படுவது நிதர்சனமாகும்.இந்நிலைமையில் இன்றைய இந்த தொழிற்சந்தை நிகழ்வானது தொழில் தேடுனர்களுக்கு அவர்களது வாழ்வில் திருப்புமுனையாக அமையும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.மேலும் நிகழ்வின் ஏற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர்கள்,உதவிப்பிரதேச செயலாளர்கள்,கிராம அலுவலர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,நிதி அனுசரணை வழங்கிய You-lead செயற்திட்ட உத்தியோகத்தர்கள்,ஊடக அனுசரணை வழங்கிய ஊடகவியலாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார்.இந்நிகழ்வில் அரச, அரசசார்பற்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழில் வாய்ப்பினை வழங்கும் பொருட்டு தமது செயற்பாடுகள் தொடர்பான விடயங்களையும்      தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளையும் தொழில் தேடுனர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.

  • 351
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads