·   ·  24 posts
  • R

    3 members
  • 4 friends

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தொழில்களில் பிரதானமான ஒன்றாகக் காணப்படும் விவசாயச்செய்கைக்கு தேவையான யுரியா மற்றும் கிருமிநாசினிகள் களை நாசினிகள் கிடைக்காமையால் விவசாயிகள் கடந்த மூன்று போகங்களிலும் நட்டத்தை எதிர் நோக்கியுள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் மக்களில் அறுபது வீதத்திற்கு மேல் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர்.இவ்வாறு விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்கள் இன்றைய நிலையில் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர் நோக்கி வருகின்றனர்கடந்த காலங்களில் வறட்சிப்பாதிப்;பு, விளைபொருட்களை உரிய காலத்தில் உரிய விலைகளில் சந்தைப்படுத்த முடியாமல் இருந்தாலும் இவ்வாறானதொரு நெருக்கடிகளை எதிர் கொள்ளவில்லை.

ஏக்கர் ஒன்றுக்கு கடந்த போகங்களில் 35000 ரூபாமுதல் 40000 ரூபா வரை செலவிடப்பட்டது இப்போது எரிபொருள் விலையேற்றம் இரசாயன உரத்தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு கிருமி நாசினிகள் களை நாசினிகளுக்கான விலையேற்றம் என்பன காரணமாக ஒருஇலட்சத்து 55ஆயிரம் ரூபா முதல் ஒருஇலட்சத்து 62ஆயிரம் ரூபாவரை செலவிடவேண்டிய நிலைகாணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும் போகத்தின் போது நீர்ப்பாசனக்;காணிகள் மற்றும் மானாவாரி பயிர்ச்செய்கை நிலங்கள் என 59 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வருடாந்தம் நெல் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது.

கடந்த போகத்திலும் இவ்வாறாறே செய்கை மேற்கொள்ளப்பட்டது ஆனால் மேற்படி உற்பத்தியில் கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுத்தேவைக்குரிய 22 ஆயிரத்து 310 மெற்றிக்தொன் நெல்லைக் கூட உற்பத்தி செய்யமுடியவில்லையென விவசாயஅமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.பயிர்ச்செய்கையின் போது உரம் மருநதுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் பயிர்ச்செய்கைநிலப்பண்படுத்தல் விதைநெல்லை பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு கடந்த போகங்களை விட இப்போது பலமடங்கு அதிகரித் விலையேற்றம் காரணமாக பெருந்தொகை முதலீடுகளை செய்யவேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

இன்றைய நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களிலும் 27 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது அதேபோல 1600 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவுச் செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தேவையான சேதன உரத்தை முழுமையாக வழங்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு; 45 நாட்களுக்கு மேல்லாகி விட்டது ஆனாலும் சேதன உரங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை அதிகளவான விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளனர்.செய்கையை மேற்கொள்வதற்கு 10 நாட்களுக்கு முன்னரே நிலத்தைப் பண்படுத்தும் போது பயன்படுத்தும் சேதன உரமானது பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு 45 நாட்கள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு கிடைக்கவில்லை இதனால் கூடுதலான விவசாயிகள் பயிர் செய்கை மேற்கொண்டு 45 நாட்களே கடந்துள்ள நிலையில் எந்த உரத்தையும் பயன் படுத்தாத நிலை காணப்படுகின்றதுகடந்த 31ம் திகதி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தங்களுக்கு விரைவாக உரத்தை பெற்றுத் தருமாறு கோரியும் இந்தியத் துணைத் தூதரை கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க கடந்த பெரும் போகத்தில்; சேதனப் பசளை பயன்படுத்தி பயிர் செய்கை மேற்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கான இழப்பீடுகளை அரசாங்கம் வழங்கும் என்று அரசாங்கத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதில் ஒரு விவசாயிக்கு கூட அந்த இழப்பீடு இதுவரை கிடைக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது அதாவது மாவட்ட புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக விளைச்சல் கிடைக்கப் பெற்றதாக புள்ளிவிவரங்களில் காட்டப்பட்டுள்ள தாகவும் இதனால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அண்மையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (சு.பாஸ்கரன்)

  • 406
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்