Ads
அல்வாய் மனோகரா முன்பள்ளியின் விளையாட்டு விழா
அல்வாய் மனோகரா முன்பள்ளியின் விளையாட்டு விழா பதிவுகள்
Empty
பிருந்தாவனத்தில் வளர்ந்து வந்த கிருஷ்ணரை அனைவருக்கும் பிடித்திருந்தது. அவருடைய குறும்புகள் அனைத்தும் மனம் கவர்ந்தவையாகவே இருந்தன. பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஏராளம். இவரைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் வருகை புரிந்தார்கள் என்பதில் சற்றும் ஆச்சரியம் இல்லை.அதேபோல் தான் பிருந்தாவனத்தில் வளர்ந்து வந்த கிருஷ்ணரை காணும் ஆசை சிவபெருமானுக்கும் ஏற்பட்டது. தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஈசன் ஒரு சிறுவன் உருவம் எடுத்து பிருந்தாவனம் சென்றார்.சிறுவனாக இருந்த ஈசன் கண்ணனுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தார். விளையாடி முடித்த சிவபெருமான் மிகவும் மனம் மகிழ்ந்து பால கிருஷ்ணருக்கு ஒரு பரிசு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.அந்த ஒரு பரிசு தான் பன்சூரி என்று அழைக்கப்படும் கிருஷ்ணரின் புல்லாங்குழல்.கண்ணன் புல்லாங்குழலை தனது சிறு வயதில் இருந்தே வாசிக்கத் தொடங்கினார். இவருடைய வாசிப்பைக் கேட்டு ஒட்டுமொத்த பிருந்தாவனமும் அந்த இசையில் மயங்கிப் போனது.கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையை கேட்டதும் எப்பொழுதும் ஆக்ரோஷமாக பாய்ந்து வரும் யமுனை நதி கூட தனது நீரோட்டப்பாதையை மாற்றி கண்ணன் இருக்கும் திசை நோக்கி பாயுமாம்.அனைவருக்கும் புல்லாங்குழல் இசை பிடித்திருந்தாலும், கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்ததற்கான காரணம் தன்னை விட 5 வயது பெரியவளான ராதைக்காகத்தான்.கிருஷ்ணன் ராதையையும், புல்லாங்குழலையும் மட்டுமே மிகவும் நேசித்தார். ஆனால், ராதைக்கு ஒரு முனிவரின் மூலம் ஒரு சாபம் கிடைத்தது. "கிருஷ்ணரை நீ இன்னொரு முறை சந்தித்தால், அடுத்த 100 ஆண்டுகளுக்கு கிருஷ்ணரை பிரிந்து தான் இருக்க வேண்டும்," என்ற சாபத்தை வழங்கினார்.இதனால் மிகவும் மனமுடைந்த ராதை, 'என்ன தான் முயற்சி செய்தாலும் கிருஷ்ணரை பார்க்காமல் இருக்க முடியவில்லை' என்று அவரைப் பார்க்கச் சென்று விடுகிறாள்.ராதை கிருஷ்ணரை பார்த்த அடுத்த கணமே முனிவரின் சாபம் பலிக்க தொடங்கிவிட்டது. அதாவது அப்பொழுது தான் கிருஷ்ணர் ராதையை முதல் முறையாக பிரிந்து மதுராவிற்கு செல்கிறார்.விதியின் சூழ்ச்சியால் கிருஷ்ணர் மீண்டும் பிருந்தாவனத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். இவ்வாறே நூறு வருடங்களும் கடந்து விடுகின்றன.அதன் பிறகு வயதான நிலையில் ராதை கிருஷ்ணரை காண செல்கின்றாள். அப்பொழுது ராதையை பார்த்த கிருஷ்ணர் "நீ என்னை ஒரு முறை பிரிந்ததே போதும்" என்று கூற, ராதை உடனே அழத் தொடங்கி விடுகிறாள்.அதன் பிறகு ராதை கிருஷ்ணரிடம் எனக்காக ஒருமுறை உங்களது புல்லாங்குழலை வாசியுங்கள் என்று கேட்கிறாள்.கிருஷ்ணரும் ராதையை நினைத்து புல்லாங்குழலை வாசித்தார். புல்லாங்குழல் வாசிப்பதை முடித்துவிட்டு கண்ணன் அவரது கண்களை திறந்து பார்க்கும் பொழுது, ராதை இறந்து கிடப்பதை பார்த்து தானும் ஒரு கடவுள் என்பதை மறந்து கதறி அழத் தொடங்குகிறார்.இறுதியாக ராதையே என்னை விட்டு சென்று விட்டாள், ராதைக்காக நான் வாசிக்க தொடங்கிய இந்த புல்லாங்குழல் எதற்கு என்று உடைத்து தூக்கி எறிந்து விடுகிறார்.மிகவும் பிடித்த விஷயங்கள் எல்லாம் கைவிட்டுப் போகும் என்பது மனிதருக்கு மட்டுமல்ல, அந்த கிருஷ்ணனுக்கே நிகழ்ந்திருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
- 166
நேத்து நைட்டு வீட்டுல திடீர்ன்னு கரண்ட் ஆஃப் ஆகிடுச்சு...நான் மெழுகுவர்த்தி பொருத்தி எரிய வச்சேன். ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு கரண்ட் வந்துருச்சு.சரின்னு மெழுகுவர்த்திய வாயால் ஊதி அணைக்க try பண்ணேன். மெழுகுவர்த்தி அணைக்க முடியல... ரொம்ப வேகமா ஊதி try பண்ணேன். அப்படியிருந்தும் மெழுகுவர்த்தி அணையல.. எனக்கு மூச்சு முட்ட தொடங்கிடுச்சு.எனக்கு இப்போது லேசாக பயம் வர தொடங்கிருச்சு. ஒரு வேளை ஆக்ஸிஜன் அளவு குறைஞ்சு போயிருக்குமோ... நினைக்க நினைக்க தலை சுத்தியது... பதட்டம் கூடிருச்சு..உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பிச்சது.. அய்யோ கடவுளே காப்பாத்துன்னு எல்லா கடவுளையும் கும்பிட தொடங்கினேன்..இதெல்லாம் அமைதியாக சோபால உட்கார்ந்து கவனிச்சுகிட்டு இருந்த என் பொண்டாட்டி சிரிச்சுகிட்டே சத்தமா சொன்னா...யோவ்.. லூசு... முதல்ல வாய்ல இருந்து mask கழட்டிட்டு ஊதித்தொல...
- 174
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். டாப்ஸியின் இந்தச் சொத்து, 'ரெடி டு மூவ் இன்' குடியிருப்புத் திட்டமான இம்பீரியல் ஹைட்ஸில் உள்ளது. சொத்து ஆவணங்களின்படி, டாப்ஸி வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் கார்பெட் பரப்பளவு 1390 சதுர அடியாகும், அதே நேரத்தில் பில்ட்-அப் பரப்பளவு 1669 சதுர அடியாகக் கூறப்படுகிறது. மேலும் இரண்டு கார்களுக்கான பார்க்கிங் இடமும் கிடைத்துள்ளது.அறிக்கைகளின்படி, டாப்ஸி பன்னு மற்றும் அவரது சகோதரி சகுன் பன்னு ரூ.4.33 கோடி செலுத்தி புதிய அடுக்குமாடி குடியிருப்பபை வாங்கி உள்ளனர். இந்தச் சொத்தின் பதிவு மே 15ந் தேதி நடைபெற்றது. நடிகையும் அவரது சகோதரியும் இந்த சொத்து பதிவுக்காக ரூ.21.65 லட்சம் பத்திர செலவு மட்டும் செய்துள்ளனர். மேலும், ரூ.30,000 பதிவுக் கட்டணமாகவும் அவர்கள் செலுத்தியுள்ளனர்.
- 181
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ் குழுவின் சார்பில் பங்கேற்ற அஜித், தனது பந்தயக் காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக அவரது காரின் டயர் வெடித்தது.இந்த சம்பவம் நிகழ்ந்ததும் கார் சிலநேரம் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அஜித் உடனடியாக வாகனத்தை ஓட்டுபாதையில் நிறுத்தியதால் பெரிய சேதமோ, உயிர் அபாயமோ ஏற்படவில்லை. இதில் அஜித்துக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்பது நல்ல செய்தியாகும்.விபத்துக்குப் பிறகு, கார் டிராக் பகுதியில் டயர் மாற்றப்பட்டு, அஜித் மீண்டும் பந்தயத்தில் பங்கேற்றார். அவரது தைரியம் மற்றும் கார் ஓட்டத்தில் உள்ள நம்பிக்கை, ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.பந்தயத்திற்கான அவரது ஆர்வமும், அதற்காக அவர் எடுத்திருக்கும் பயிற்சியும் இதை நிரூபிக்கின்றன. நடிகராக மட்டுமல்லாமல், வித்தியாசமான துறைகளிலும் அஜித் தனது தடம் பதிக்கிறார்.
- 185
2023 அக்டோபர் மாதம், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதன் பின்னணியில், இஸ்ரேல் காசா மீது பெரும் போரை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், காசா போர் நடைபெறும் காலத்தில், இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் தொழில்நுட்ப சேவைகளை வழங்கியதை மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பணயக்கைதிகளை கண்டறிந்து மீட்பதற்கான நடவடிக்கைகளில் இந்த தொழில்நுட்பம் பயன்பட்டதாகவும் கூறியுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு AI பயன்படுத்தப்படவில்லை என மைக்ரோசாப்ட் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல ஊழியர்கள், இஸ்ரேலுக்கு சிலவகை தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது போல தொழில்நுட்ப நிறுவனங்கள் போர் தொடர்பான நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவது பற்றி மக்களும், மனித உரிமை அமைப்புகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- 199
ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார்.கொடுத்தவர்கள் அவர் வாழ்க்கையை(ரகுராம்கேட்) நடத்தத் தேவையான பொருளைக் கொடுத்திருப்பார்கள் போலும்.ஏனெனில் அவர் ஏழையாகவே இருந்தார்.அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார். என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை.அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான். சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான். அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர். என்றாலும் அதில் பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா? ஆம்; பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்துவிட்டது.அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும். ஒரு மாப்பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த பக்ஷமான செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே. என்ன செய்யலாம்?காயத்ரியை ஒருமனதாக வாய் ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அப்படியே மனையாளும் இருப்பாளா?அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி பிராமணரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது மன்னனிடம் சென்றார்.மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான். அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது. இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான். பிராமணரும் தன் மகளுக்கு் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.அவ்வளவு தானே!நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க, கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,” இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்; ஒருமாதிரி சமாளித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.மன்னன் நகைத்தான். ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான். பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது. மேலும் பொற்காசுகளை வைக்க….ம்ஹும்..அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது. தராசும் பத்தவில்லை. பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன்.மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டு தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான்.சமயோசிதமான மந்திரியோ, “பிராமணரே, இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும்.நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்துவரவும்.” எனக் கூறினார். கலக்கத்துடன் சென்றார் பிராமணர். இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது. மன்னன் பொருள் தருவானா மாட்டானா? ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்? அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே? நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ? அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா? குறைத்துவிடுவானோ? பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா? அதை வைத்து என்ன என்ன செய்யலாம்? பிராமணரின் மனம் அலை பாய்ந்தது. அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை.காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார். பூணூலைச் செய்ய ஆரம்பித்தார். வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை. தடுமாறினார். ஒருமாதிரியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார்.அரசவையில் மன்னன், மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது.அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன்.என்ன ஆச்சரியம்? பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே?சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு, மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து போயிற்று. பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று. அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.பிராமணர் அங்கிருந்து சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் அதிகமாக மந்திரியிடம், “முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?” என்று கேட்க, மந்திரியோ, “மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவரே. சாதுவும் கூட. இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார். தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார். வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது.அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூடக் கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம்;அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம். ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா,பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை. ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை. அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது.” என்றான் மந்திரி.பூணூல் என்பது, யஜ்ஞோபவீதம் என்றும் அழைக்கப்படும்.
- 217
யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்யும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரால் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்து கொடுத்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மாணவர்களுக்கான கருத்தரங்கு என கூறி நேற்றுமுன்தினம் மருதனார்மடத்தில் உள்ள பிரபல பாடசாலையில் பெண் மாணவர்களை ஒழுங்குபடுத்துமாறு கூறியிருந்தார். இந்நிலையில் அந்த நிகழ்வுக்கு செல்லுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் அறிவித்திருந்தார்.அந்தவகையில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் அந்த நிகழ்வுக்கு சென்றிருந்தனர். அங்கே கிறிஸ்தவ மதகுரு என்றொருவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு ஆண் ஒருவர் வந்து நிகழ்வை ஆரம்பித்தார்.இதன்போது தனியார் நிறுவனம் ஒன்றின் தயாரிப்பிலான சுகாதார துவாயை காண்பித்து அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தை அந்த மதகுரு வழங்கினார். ஆணொருவர் இவ்வாறு விளக்கம் கூறுவதால் அங்கிருந்த பெண் பிள்ளைகள் சங்கடத்துக்குள்ளாகினர். இதனை பார்த்து சங்கடத்துக்குள்ளான சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், பொலிஸ் உத்தியோகத்தரும் அங்கிருந்து வெளியேறினர்.பின்னர் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பெண் பிள்ளைகள் அனைவருக்கும் ஒவ்வொரு பொதி வழங்கப்பட்டது. அதில் சுகாதார துவாயும், பெண் பிள்ளைகளின் உள்ளாடையும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.மாணவர்களுக்கான கருத்தரங்கு என பொய் கூறி யாழ்ப்பாணம் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு தனியார் உற்பத்திகளுக்கு பாடசாலையில் விளம்பரத்துக்கான களம் அமைத்துக் கொடுத்தமையும், ஆணொருவர் பெண் பிள்ளைகளின் அந்தரங்க விடயம் தொடர்பாக விளக்கமளித்தமையும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.000
- 396
யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த இளைஞன் போதைப் பொருளை ஊசி மூலம் தொடர்ச்சியாக பாவிப்பவர் என தெரியவருகின்றது.இந்நிலையில் இளைஞன் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார். பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.000
- 398
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய அழிஜவு யுத்தம் நிறைவுக்கு வந்து, இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்தது.2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக, வருடாந்தம் வருடாந்தம் மே 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டதுமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றையதினமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு முற்பகல் 10.15 க்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு, 10.29 அளவில் மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து பொதுச்சுடர் ஏற்றப்படவுள்ளதுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டதன் பின்னர் நினைவேந்தலில் பங்கேற்பவர்களால் தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.முன்னதாக, காலை 6.30 முதல் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில், இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்திக்காகப் பிதிர்க்கடன் கிரியைகள் நடைபெற்றனஇதேவேளை, மட்டக்களப்பு - கல்லடி பாலத்துக்கு அருகில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு முள்ளிவாய்கால் தூபியினைக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் கொடிகள் ஏற்றப்பட்ட 2 மிதக்கும் தூபிகள் நேற்று இரவு 9 மணியளவில் மிதந்து வந்ததையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த புலனாய்வு பிரிவினரும், காவல்துறையினரும் அதனை மீட்டிருந்ததுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.000
- 397
காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 இலட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக லிபியாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், பாலஸ்தீனியர்களை லிபியா ஏற்றுக்கொண்டால் அந்நாட்டின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.000
- 398
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தற்போதைய அரசாங்கத்தின் வாக்காளர் தளமான தேசிய மக்கள் சக்தி இயக்கம் எட்டு மாதங்கள் கடப்பதற்கு முன்பே முற்றிலுமாக சரிந்துவிட்டதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கோட்டையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,அரசாங்கம் தனது முதல் நியமனமான ஜனாதிபதியின் செயலாளரை நியமித்த தருணத்திலிருந்தே தவறான பாதையில் செல்லத் தொடங்கியது.அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு வாரம் முடிவதற்கு முன்பே, அரசாங்கத்தின் மூன்றாவது நியமனமான பொதுப் பாதுகாப்புச் செயலாளரின் நியமனம் குறித்து நாங்கள் விமர்சனங்களை எழுப்பினோம்.தவறான நடவடிக்கை எடுக்கும் ஒவ்வொரு முறையும் அதைச் சுட்டிக்காட்ட தாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். நாட்டையும் அரசாங்கத்தையும் ஒரே நேரத்தில் ஊழல் செய்ய அனுமதிக்க முடியாது.அரசாங்கம் பணிவாக இருந்தால், அவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசாங்கம் ஆணவமாக இருந்தால், தவறுகளைப் பாதுகாப்பதன் மூலம் அரசாங்கத்தை அழிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.00
- 404
யாழ்.தென்மராட்சி வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ்வரன் லஜி வயது 19 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.000
- 402
ஒருமுறை ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைகள் வேடிக்கை பார்க்க ஒரு காட்டிற்குச் சென்றனர். அவர்களுக்கு மிகவும் தாகம் ஏற்பட்டு ஒரு ஆழமான கிணற்றைக் கண்டனர். அவர்கள் வறண்ட கிணற்றின் உள்ளே பார்த்தபோது, அடியில் சிக்கிய ஒரு விசித்திரமான பல்லி போன்ற உயிரினம், மலையைப் போல பெரியதாகத் தோன்றியது. சிறுவர்கள் அந்த உயிரினத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். தோல் பட்டைகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி அந்த உயிரினத்தை வெளியே இழுக்க முயன்றனர், ஆனால் அவர்கள் எவ்வளவோ முயற்சித்த போதிலும், அவர்களால் அதைத் தூக்க முடியவில்லை. பலமுறை தோல்வியடைந்த முயற்சிகளுக்குப் பிறகு, அவர்கள் அரண்மனைக்குத் திரும்பி, நடந்த சம்பவத்தை ஸ்ரீ கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.அசாதாரணமான ராட்சத பல்லியை பற்றி கேள்விப்பட்டதும், ஸ்ரீ கிருஷ்ணர் கிணற்றுக்கு வந்து தனது இடது கையால் பல்லியை சிரமமின்றி வெளியே எடுத்தார். அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, ஸ்ரீ கிருஷ்ணர் அதைத் தொட்டவுடன், பல்லி ஒரு தெய்வீக மனிதனாக மாறுகிறது. திடீர் மாற்றத்தால் கவரப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர், அந்த மனிதரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார். கடந்த காலத்தின் எந்தத் தவறுகள் உங்களை இவ்வளவு பெரிய வடிவத்திற்குக் கொண்டு வந்தன? நீங்கள் அத்தகைய விதியைச் சந்திக்க நேர்ந்தது துரதிர்ஷ்டவசமாகத் தெரிகிறது.அந்த தெய்வீக மனிதன் தனது கதையை பணிவுடன் விவரிக்கிறான், "நான் இக்ஷ்வாகு மன்னனின் மகனான நிருகன் என்ற மன்னனாக இருந்தேன். நீங்கள் என்னைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் என்னிடம் கேட்டது போல், நான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற பிராமணர்களையும் புனிதர்களையும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல உயிர் காக்கும் தொண்டு நிறுவனங்களால் கௌரவித்துள்ளேன்"."ஒரு சமயம், ஒரு குறிப்பிட்ட பசுவை ஒரு பிராமணருக்குத் தேவைப்படும்போது, கொடுப்பதற்கு எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அலட்சியத்தால், அதே பசுவை இன்னொரு பிராமணருக்குக் கொடுப்பதாக உறுதியளித்தேன். இரண்டு பிராமணர்களும் என் வீட்டு வாசலுக்கு வந்தபோது, என்னால் ஒரு நியாயமான முடிவை எடுக்க முடியவில்லை. எனவே, பசுவை சர்ச்சையில் விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக, தலா நூறு பசுக்களை ஏற்றுக்கொள்ளும்படி நான் அவர்களிடம் கேட்டேன். பசுவின் அசல் உரிமையாளர் மறுத்து பசுவுடன் நடந்து சென்றார். மற்றொரு பிராமணர் என்னைத் திட்டிவிட்டுச் சென்றார்.""மரணத்திற்குப் பிறகு, நர்காவின் (நரகத்தின்) கடவுளான யமன், நான் எதை முதலில் பெற விரும்புகிறேன் என்பதைத் தேர்ந்தெடுக்கச் சொன்னான் - என் நல்ல செயலின் பலனா அல்லது என் தெரிந்த-தெரியாத கெட்ட செயல்களின் விளைவுகளா? என் கெட்ட செயல்களின் விளைவுகளை முதலில் தாங்கிக் கொள்ளத் தேர்ந்தெடுத்தேன். இதன் விளைவாக, யமன் என்னைக் கீழே போகச் சொன்னான், அதனால் நான் இந்தக் கிணற்றில் விழுந்தேன். விழும்போது, நான் ஒரு பல்லியாக மாறுவதைக் கண்டேன். இதுவரை, என் கடந்த கால வாழ்க்கையை நான் மறக்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் வருகையால் மட்டுமே, நான் என் பரலோக மகிமைக்குத் திரும்பினேன்."மன்னர் நிருகனின் விருப்பத்தை ஸ்ரீ கிருஷ்ணர் நிறைவேற்றினார். பின்னர் மன்னர் ரிகா ஒரு அற்புதமான வான விமானத்தில் ஏறி தெய்வீக வசிப்பிடத்திற்குப் புறப்பட்டார்.மன்னர் நிரிகாவின் கதையிலிருந்து 3 முக்கிய பாடங்கள்நமது வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் மற்றும் நமது செயல்களில் நீதியாக இருத்தல்நல்ல செயல்கள் வெகுமதியுடன் வருகின்றன, கெட்ட செயல்கள் விளைவுகளுடன் வருகின்றன.உச்ச இறைவனின் ஆசீர்வாதங்களைத் தேடி, அவருக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை நடத்துதல்.
- 465
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளின் வழியில் ஆதாயம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல் உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகள் பலிதமாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெண்மை ரிஷபம்தெய்வ சிந்தனை மனதளவில் மேம்படும். தன வருவாயில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிர்பாராத ஆரோக்கியம் சார்ந்த செலவுகள் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு உண்டாகும். மனதில் எதிர்கால சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மிதுனம்விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் இருப்பது நல்லது. எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். முதலீடு சார்ந்த செயல்பாடுகளை தவிர்க்கவும். கல்வி பணிகளில் சிறு சிறு குழப்பம் தோன்றி மறையும். பொறுப்புகள் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு கடகம்குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். துணைவரின் வழியில் மதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். சுபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை சிம்மம்பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தடைப்பட்ட சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் இருப்பவர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தடைகள் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதா கன்னிநினைத்த பணிகளை முடிப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். நவீன யுக்திகளின் மூலம் வியாபாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். சிரமம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு துலாம்நினைத்த சில பணிகள் தாமதமாக முடியும். தாயுடன் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சலுகைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சமூகப் பணிகளில் உயர்வு உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உழைப்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு விருச்சிகம்விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரம் தொடர்பான இடமாற்றம் குறித்த முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும். புதுவிதமான அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும். பிரீதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு தனுசுகுடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும். இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மகரம்அலுவலகத்தில் எதிர்பாராத சில மாற்றம் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். மற்றவர்களின் பொருட்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். ஆசைகள் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை கும்பம்நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகனம் சார்ந்த பயணங்களில் கவனம் வேண்டும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும். பாராட்டு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மீனம்குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பொன், பொருட்களின் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலைத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கைத்தொழிலில் மேன்மை உண்டாகும். தாமதம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
- 501
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18.5.2025.திதி : கிருஷ்ண பக்ஷ சஷ்டி - May 18 05:58 AM – May 19 06:11 AMநட்சத்திரம் : உத்திராடம் - May 17 05:44 PM – May 18 06:52 PM, திருவோணம் - May 18 06:52 PM – May 19 07:29 PMகரணம் : கரசை - May 18 05:58 AM – May 18 06:09 PMவனசை - May 18 06:09 PM – May 19 06:12 AMயோகம் : சுபம் - May 17 07:08 AM – May 18 06:42 AM, சுப்ரம் - May 18 06:42 AM – May 19 05:52 AM,பராம்யம் - May 19 05:52 AM – May 20 04:35 AM
- 518
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.https://www.youtube.com/watch?v=n_Pl9wOrx6c
- 524
ஓஷோ சொன்ன கதை...ஒரு ஏழை மரவெட்டி காட்டில் உள்ள சின்னஞ்சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். அந்தக் குடிசை மிகமிகச் சிறியது. அவனும் அவன் மனைவியும் மட்டுமே அதில் தூங்க முடியும் அளவே வசதி கொண்டது. ஒரு மழை நாள் நள்ளிரவில் விறகு வெட்டியின் குடிசைக் கதவு ‘தடதட’வென்று தட்டப்பட்டது.விறகு வெட்டி தன் மனைவியிடம், “யாரோ ஒருவன் வழிதவறி காட்டில் மாட்டிக்கொண்டு விட்டான். மழையில் எங்கும் போகவும் முடியாது. விலங்குகள் ஆபத்து வேறு இருக்கிறது. அதனால் கதவைத் திற” என்றான். அவன் மனைவியோ இந்தக் குடிசையில் இன்னொரு மனிதனுக்கு எப்படி இடம் கொடுக்கமுடியும் என்று கேட்டாள்.விறகு வெட்டி சிரித்தான். “இது ராஜ அரண்மனை அல்ல. அங்கேதான் இடப் பற்றாக்குறை இருக்கும். இது ஒரு ஏழையின் குடிசை. இங்கே இரண்டு பேர் வசதியாகத் தூங்க முடியும். மூன்று பேர் வசதியாக அமர்ந்து இருக்க முடியும். கதவைத் திற” என்றான்.கதவு திறக்கப்பட்டது. வந்த மனிதன் விறகு வெட்டிக்கும் அவன் மனைவிக்கும் நன்றி சொல்லி அமர்ந்தான். அவர்கள் சேர்ந்து அமர்ந்து கதைகளைச் சொல்லிப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தபோது கதவைத் தட்டும் சத்தம் மீண்டும் கேட்டது. கதவடியில் உட்கார்ந்திருந்த விருந்தினன், இன்னொருவருக்கு இடமில்லையே என்றான்.விறகு வெட்டியோ, “இதைத்தான் நீங்கள் முன்பு வரும்போதும் என் மனைவி கூறினாள். அவளது சொல்லைக் கேட்டிருந்தால் நீங்கள் குடிசைக்குள் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது. மூன்று பேர் சௌகரியமாக அமர்வதற்கு இடம் இருந்தால் நான்காம் நபருக்கும் கொஞ்சம் இடம் இருக்கத்தான் செய்யும்” என்று சொல்லி கதவைத் திறக்கச் சொன்னான்.தற்போது அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்திருந்தனர். ஒரு அங்குலம் அளவு கூட இடமில்லை. மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஆனால் அது ஒரு மனிதனுடையதைப் போல இல்லை. இப்போதும் விறகுவெட்டி கதவைத் திறப்பானோ என்று இரண்டு விருந்தினர்களுக்கும் அச்சம்.விறகுவெட்டியோ, “கதவைத் திறங்கள். அது என்னுடைய கழுதைதான். இவ்வளவு பெரிய உலகில் அது ஒன்றுதான் எனது நண்பன். நான் தினசரி வெட்டிக்கொண்டு வரும் விறகுகளைச் சுமக்கும் உயிர் அது. வெளியே கடும் மழை பெய்கிறது. என் நண்பனை வரவேற்போம்” என்றான்.விறகு வெட்டியின் மனைவி உட்பட எல்லாரும் கதவைத் திறப்பதை எதிர்த்தனர். “கழுதை உள்ளே வந்தால் அது எங்கே நிற்கும். உனது குடிசையில் இப்படி மாட்டிக்கொண்டிருப்பதை விட மழையிலேயே நின்றுகொண்டிருந்திருக்கலாம்” என்றனர்.“இது ஒரு ஏழையின் குடிசை. அது எப்போதும் வசதியானதே. தற்போது நாம் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம். கழுதை வந்தால் நாம் எல்லாரும் நிற்போம். அவ்வளவுதான்” என்றான்.கழுதையும் குடிசைக்குள் வந்தது. மழை நீர் அதன் ரோமம் முழுவதும் வடிந்துகொண்டிருக்க, விறகு வெட்டி அதைக் குடிசை நடுவில் கொண்டுவந்து நிறுத்தினான். எல்லாரும் அதைச் சுற்றி நின்றார்கள்.“எனது கழுதை ஆத்மஞானியைப் போன்றது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். அது ஒருபோதும் தொந்தரவுக்குள்ளாகாது. அது நீங்கள் அமைதியாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும்.” என்றான் விறகு வெட்டி.
- 693
இனப்படுகொலை செய்யபட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் வடகிழக்கு வாழ் தமிழர்கள் தேசமாக திரள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தயாபரன் லகிர்தர் தெரிவித்தார்முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் ஏற்பாடுகளில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 2009 ஆம் ஆண்டுஇறுதி யுத்தத்தில் இனப்படுகொலை செய்யபட்ட இந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் நாளைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்வதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக வருகை தந்துள்ளோம்.நாளையுடன் எமது இனம் இனப்படுகொலை செய்யபட்டு 16 ஆண்டுகள் நிறைவடைகின்றது .தமிழ் மக்களாக அனைத்து ஈழத் தமிழர்களுக்கும் வரலாற்று கடமை உள்ளது .எமது இந்த வரலாறு அடுத்த கட்ட சந்ததிக்கு கடத்த படவேண்டும் .சர்வதேச சமூகத்திற்கு தொடர்ச்சியாக எமது வலிகளையும் வடுக்களையும் தொடர்ந்து நாம் கூறவேண்டும் அதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ள உயிர்நீத்த எம் உறவுகளை நினைவு கூறும் நினைவேந்தலில் இளைஞர்களாக, யுவதிகளாக,தந்தையர்களாக ,தாய்மார்களாக,உறவுகளாக ,சமூக அமைப்புக்களாக, மாணவர்களாக தேசமாக முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு வடகிழக்கு தமிழர்கள் திரள வேண்டும்.என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக கேட்டுக்கொள்கிறோம்.இந்த நாளில் களியாட்டஙகளில் கலந்து கொள்வதை தவிர்த்து எமது மண்ணில் எமது தாய் மொழியான தமிழ் மொழியை பேசினார்கள் என்பதற்காக ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.உணர்வுசார்ந்த நிலைபாட்டில் அனைவரும் திரள வேண்டும் ஆகவே முள்ளிவாய்க்கால் மண்ணில் அனைவருடைய வருகையும் அவசியமானது .அது மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அடுத்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பில் ஓர் அங்கமாக இணைந்து செயற்படும் . தொடர்ந்து மாணவர்களாக எமது நினைவேந்தல் சார் பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்
- 720
ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பிராமணர் வசித்து வந்தார். ஒரு சடங்கு சடங்கு செய்த பிறகு அவருக்கு ஒரு ஆட்டு பரிசாக வழங்கப்பட்டது. அதன் பிறகு அந்த பிராமணர் தனது வீட்டிற்கு பயணத்தைத் தொடங்கினார். வழியில் ஆட்டை கட்டுப்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க, பிராமணர் ஆட்டைத் தனது தோள்களில் சுமந்து சென்றார். அவர் ஒரு சில தூரம் மட்டுமே சென்றபோது, மூன்று முரடர்கள் பிராமணர் ஆட்டை சுமந்து செல்வதைக் கண்டனர். பிராமணர் அவர்களைக் கவனிக்காதபடி ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் மிகவும் பசியுடன் இருந்தனர், பிராமணர் தனது ஆட்டுடன் தனியாக இருப்பதை அவர்கள் அறிந்தார்கள்.அவர்கள் விவாதிக்கத் தொடங்கினர். முதல் முரடன், "இந்தப் பசியிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம். பிராமணரை ஏமாற்றி ஆட்டைத் திருடிவிட்டால், ஆடு நம் மூவருக்கும் மிகவும் அருமையான உணவைத் தரும். எனக்கு ஒரு திட்டம் இருக்கிறது. நான் சொல்வதைக் கேளுங்கள்" என்று கூறி, மற்ற இருவரின் காதுகளிலும் திட்டத்தைக் கிசுகிசுத்தான்.திட்டத்தின் படி, அவர்கள் பிராமணரின் பின்னால் குனிந்தனர். முதல் முரடன் பிராமணரின் பாதையில் நின்றான். பிராமணர் தனது தோளில் ஆட்டுடன் அவரை அணுகியபோது, அவர் அவரிடம், "ஓ புனித பிராமணரே, நீங்கள் உங்கள் தோளில் ஒரு நாயை சுமந்து செல்வதை நான் காண்கிறேன். உங்களைப் போன்ற ஒரு பக்தியுள்ள நபர் ஏன் தனது தோளில் ஒரு நாயை சுமந்து செல்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் பிராமணர் மிகவும் கோபமடைந்து, "உனக்கு கண்கள் இல்லையா? நாய்க்கும் ஆட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உன்னால் பார்க்க முடியவில்லையா?" என்று பதிலளித்தார்.பின்னர் திருடன் தான் தனது பங்கை ஆற்றியதாக நினைத்து அவனிடம், "மன்னிக்கவும், ஐயா, ஆனால் நான் என் கண்களால் பார்ப்பதை மட்டுமே சொல்கிறேன். தெளிவாக, உயர் கல்வி கற்றவராக இருப்பது எல்லாம் இல்லை" என்று கூறினான். பிராமணர் தனது பேச்சைக் கேட்பதை உறுதிசெய்து கொண்டு, முரடன் முணுமுணுத்தான்.அந்த பிராமணர் தனது பயணத்தைத் தொடர்ந்தார், அந்த மனிதனின் முட்டாள்தனத்திற்காக அவரை சபித்தார். ஆனால் அவர் சிறிது தூரம் சென்றதும், இரண்டாவது முரடன் அவரை அணுகினார். பின்னர் அவர் பிராமணரிடம், "மதிப்பிற்குரிய ஐயா, நீங்கள் எவ்வளவு முட்டாள்! இந்த இறந்த கன்றை உங்கள் தோளில் எப்படி சுமக்க முடியும்? ஒரு பிராமணர் இறந்த விலங்கை சுமப்பது அவமானகரமானதல்லவா?" என்று கூறினார். பிராமணர் கோபமடைந்து அவரை நோக்கி, "சற்று முன்பு நான் சந்தித்த மற்றொரு முட்டாள் மனிதனைப் போலவே நீங்களும் குருட்டு மனமுள்ளவரா? அது ஒரு ஆடு, இறந்த கன்று அல்ல என்று உங்களுக்குத் தெரியவில்லையா?" முரடன் அப்பாவியாக நடித்தார். அவர் பிராமணரிடம், "என்னை மன்னியுங்கள் ஐயா. நான் பார்ப்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று கத்தினார்.பிராமணர் இப்போது கொஞ்சம் குழப்பமடைந்தார். அது உண்மையில் ஒரு ஆடுதானா என்பதை உறுதிப்படுத்த அவர் விலங்கைப் பார்த்தார். பிராமணர் இன்னும் சிறிது தூரம் சென்றிருந்தார். சிறிது நேரத்தில், திட்டமிட்டபடி, மூன்றாவது முரடன் தோன்றி, "நீ ஒரு உண்மையான பிராமணனா?" என்று கேட்டான். பிராமணர், "ஆம், நான் தான். அது என்ன கேள்வி?" முரடன், "ஒரு புனிதமான மனிதன் எப்படி இவ்வளவு வெட்கக்கேடான செயலைச் செய்ய முடியும்? பன்றியை உன் தோள்களில் சுமக்க உனக்கு எவ்வளவு தைரியம்? உன்னைப் போன்ற புனிதமான ஒருவர் இந்த விலங்கைத் தொடக்கூடக் கூடாது, அதை உன் தோள்களில் சுமப்பது ஒருபுறம் இருக்கட்டும். யாராவது இதைச் செய்வதைப் பார்ப்பதற்கு முன்பு அதை கீழே போடு!" என்று கத்தினார்.இந்த முறை, பிராமணர் பதட்டமடைந்தார். வழியில் சந்தித்த ஒவ்வொருவரும் தனது தோள்களில் வெவ்வேறு விலங்கைக் கண்டனர். முதல் நபர் ஒரு நாயையும், இரண்டாவது நபர் இறந்த கன்றையும், இப்போது ஒரு பன்றியையும் பார்த்தார். அவர் ஒரு ஆட்டைச் சுமந்து செல்வதை மூன்று நபர்களும் எப்படிப் பார்க்க முடியாது? அவர் ஒரு உருவத்தை மாற்றும் பூதத்தை சுமந்து கொண்டிருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார், அது எப்போதும் வடிவம் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு அரக்கனைத் தோள்களில் சுமந்து செல்வதை நினைத்த மாத்திரத்தில் பிராமணரின் முகம் வெளிறியது. உயிருக்கு பயந்து, அவர் ஆட்டை கீழே போட்டுவிட்டு, முடிந்தவரை வேகமாக வீட்டிற்கு ஓடினார்.அந்த முரடர்கள் ஆட்டைத் தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ஆட்டைக் கொன்று அதன் இறைச்சியை விருந்து வைத்தனர்.கதையின் நீதி என்னவென்றால்:திரும்பத் திரும்பப் பேசப்படும் பொய் உண்மையாகத் தோன்றும்.
- 717