Ads
அல்வாய் மனோகரா முன்பள்ளியின் விளையாட்டு விழா
அல்வாய் மனோகரா முன்பள்ளியின் விளையாட்டு விழா பதிவுகள்
Empty
Added a news
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் நிலையில், வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்தாலும், அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.வேலூர் தொகுதி முழுவதும் பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு அளிக்க கோரி பிரச்சாரம் செய்துவந்தார். இந்நிலையில், இன்று குடியாத்தம் பகுதியில் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும்போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
- 57
Added article
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோக நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸுடன் இணைந்து, இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகரான சியான் விக்ரம் நடிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ‘தங்கலான்’ படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.‘தங்கலான்’ படத்தில் சியான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்புதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.படத்தின் வெளியீட்டிற்காக பெருகிவரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சியான் விக்ரமின் பிறந்த நாளான இன்று, அவரது ரசிகர்களுக்கு படக்குழுவினர் ஒரு சிறப்பான விருந்தை அளித்துள்ளனர். பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘தங்கலான்’ திரைப்படத்தின் சில காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இதில் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்காக அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை… பிரமிக்க வைக்கும் மாற்றத்தைக் கண்டு, ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
- 54
Added article
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில், இன்று மாலை விஜய் சேதுபதி 'மனுசி' படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரே படத்தில் இணைந்துள்ளதாலும் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.https://youtu.be/iARuxt2olZg
- 56
Added a news
கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும், துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ப்ரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.பதவி விலகல்கள் மற்றும் ஓய்வு பெறுதல்கள் போன்ற சந்தர்ப்பங்களில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யாது ஆளணி வள எண்ணிக்கையை வரையறுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் 4.2 பில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 58
Added a recipe
மதிய உணவுகள்
தஞ்சை மாவட்டத்தில் வைக்கிற வெங்காயக்குழம்புக்கு ஒரு தனி ருசியும் மணமும் உண்டு காய் போட்டும் வைக்கலாம் காயே போடாமலும் வைக்கலாம் ஏன்னா அந்த குழம்புக்கு கதாநாயகியே சின்ன வெங்காயம் தான். சின்ன வெங்காயத்தை முழுசா போடக்கூடாது வத்தக்குழம்புக்குத்தான் முழுசா போடனும். ஒவ்வொரு குழம்புக்கும் வெங்காயத்தை ஒவ்வொரு மாதிரி வெட்டனும் சமைக்கிறவங்களுக்கு அந்த ட்ரிக் நல்லாவே தெரியும். அதை கடைசியா சொல்றேன்இந்த குழம்புக்கு சின்ன வெங்காயத்தை இரண்டா வெட்டி இரண்டு தக்காளி போதும். அதன்பிறகு தேங்காயை துருவி அதுல கொஞ்சம் சோம்பு வைச்சு அரைச்சு எடுத்துக்கனும். இப்ப ஒரு பாத்திரத்தை அடுப்பில் எண்ணெய் ஊற்றி கொஞ்சம் வெந்தயம் போட்டு பொன்னிறமா வெந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு ரொம்ப வதக்கக்கூடாது லேசா வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய தக்காளியும் போட்டு அதுல கொஞ்சம் மஞ்சள் தூள், குழம்பு மசாலா, போட்டு அது மேல கொஞ்சம் புளியை கரைச்சு ஊத்தி(ரொம்ப புளி தேவையில்லை) கொஞ்சம் உப்பு போட்டு நாலஞ்சு கொதி வந்ததும் அரைச்சு வைச்ச தேங்காயை போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு இறங்கினால் தெருவே மணக்கிற வெங்காய குழம்பு ரெடி ஆகிடும். காய் இருந்தால் காய் சேர்த்துக்கலாம் காய் இல்லன்னா கவலையே இல்லை காய் இல்லாமலே அருமையா இருக்கும் சுட சுட இருக்கிற சாதத்துல அந்த குழம்பை ஊத்தி சாப்பிட்டா அந்த மாதிரி இருக்கும். இந்த மாதிரி குழம்பை அதிகமா ஊத்தி சாப்பிடக்கூடாது லைட்டா ஊத்தி சாப்பிடனும் அப்பதான் சூப்பரா இருக்கும்.
- 58
Added article
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவே தன்னுடைய மீதமுள்ள வாழ்க்கையை தியாகம் செய்தார் என்றால் யாராவது நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடித்த நடிகை சுலக்சனா, பாக்யராஜ் நடித்த ’தூறல் நின்னு போச்சு’ என்ற திரைப்படத்தில் தான் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பின் அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ’தூங்காதே தம்பி தூங்காதே’ என்ற படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தது ஒரு திருப்புமுனையை கொடுத்தது.இதனை அடுத்து அவர் ரஜினியுடன் ’தம்பிக்கு எந்த ஊரு’ திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அதன்பின் அவருக்கு குறிப்பிடத்தக்க வேடம் கிடைக்காமல் இருந்த நிலையில் தான் ’சிந்து பைரவி’ படத்தில் ஒரு அருமையான கேரக்டரை கே.பாலச்சந்தர் அவருக்கு கொடுத்தார். அந்த படத்தின் மூலமாக மிகச் சிறந்த நடிகை என்று அனைவராலும் போற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் நடிகை சுலக்சனா இயக்குனர் கோபாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில் ஐந்தே ஆண்டுகளில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.தனது மூன்று குழந்தைகளுடன் விவாகரத்து பெரும்போது மிகவும் சிக்கலான நேரத்தில் சுலக்சனா இருந்தார். ஆனால் அவர் குழந்தைகளை பெரிய ஆளாக்க வேண்டும் என்பதற்காகவே தனது வாழ்க்கையை தியாகம் செய்தார். சின்ன சின்ன வேடம் கிடைத்தால் கூட அதில் கூட நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் அவருடைய இரண்டு மகன்கள் இன்று மிகப்பெரிய வேலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது மகன் இந்திய கப்பல் படையில் அதிகாரியாக உள்ளார். இரண்டாவது மகன் லண்டனில் ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரியாக உள்ளார். மூன்றாவது மகன் தற்போது படித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.எம்எஸ் விஸ்வநாதன் தனது மருமகளை மகள் போல் மிகவும் அன்புடன் தான் நடத்தினார். ஆனால் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் அவர்களுக்குடையே பிரிவு ஏற்பட்டதாகவும் இந்த பிரிவு எம்எஸ் விஸ்வநாதனை மிகவும் மன அழுத்தத்திற்கு உண்டாக்கியதாகவும் கூறப்படுகிறது.சுலக்சனாவின் கணவர் கோபாலகிருஷ்ணன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் சுலக்சனா கடைசி வரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். தனது குழந்தைகளின் எதிர்காலம் காரணமாக அவர் திருமணம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னரும் அவர் நடிப்பு தொழிலில் வந்த பணம் முழுவதுமே தனது மகன்களின் படிப்புக்காகவே செலவழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆர்யா நடித்த கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஒரு சிறு கேரக்டர் கிடைத்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு சில கேரக்டர் கிடைத்த போதிலும் அவர் நடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.தற்போது தனது மகன்களுடன் சந்தோஷமாக இருக்கும் சுலக்சனா, தனது மகன்கள் தான் தனக்கு எல்லாம் என்றும் அவர்களுக்காகவே தான் வாழ்ந்திருப்பதாகவும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
- 59
Added a post
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா ஆற்றிய உரை!
- 139
Added a post
புதிய வீசா முறைமை இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.அதனடிப்படையில் ஒருவருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 200 அமெரிக்க டொலர்களாக அறவிடப்படவுள்ளது.அதேவேளை இரண்டு வருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 300 அமெரிக்க டொலர்களாகவும்,10 வருடங்களுக்கான நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 1000 அமெரிக்க டொலர்களாகவும் அறவிடப்படவுள்ளது.மேலும் இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 170
Added a post
கொழும்பு - புதுக்கடை பகுதியில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்து ரொட்டியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் வாழைத்தோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த உணவகத்தில், உணவைப் பெற்றுக் கொள்ளச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கொத்து ரொட்டியின் விலையைக் கேட்டபோது, அந்த உணவகத்தைச் சேர்ந்தவர் 1,900 ரூபாய் என அறிவித்துள்ளார்.விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர் வெளிப்படையாகவே தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில், உணவு விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர் சுற்றுலாப் பயணியை மிரட்டும் தொனியில் எச்சரித்துள்ளார். இவை, அனைத்தும் குறித்த சுற்றுலாப் பயணியால் காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம் உணவகத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 000
- 159
Added article
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்து வரும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், பூஜாவுக்கு மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆக்ஷன் காட்சிக்காக வெளிநாட்டு பயிற்சியாளரிடம் தீவிர ஆக்ஷன் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த பயிற்சியின் போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்து வரும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், பூஜாவுக்கு மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அக்ஷன் காட்சிக்காக வெளிநாட்டு பயிற்சியாளரிடம் தீவிர ஆக்ஷன் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த பயிற்சியின் போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.நடிகை பூஜா ஹெக்டே மும்பை பாந்த்ரா பகுதியில் கடற்கரையை பார்த்தபடி, ரூ. 45 கோடி மதிப்புள்ள ஆடம்பர் வீட்டை புதிதாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 4000 சதுர அடி என்றும் இந்த வீட்டில் நீச்சல் குளம், ஜிம், தியேட்டர் என பல விஷயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ 45 கோடி என கூறப்படுகிறது. நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டில் விரைவில் குடியே இருக்கிறார் பூஜா. தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் அட்லி ஆகியோரும் மும்பையில் புது வீடு வாங்கி குடியேறி வரும் நிலையில், தற்போது பூஜா ஹெக்டேவும் மும்பையில் புது வீட்டை வாங்கி உள்ளார். இவர் நடித்து வரும் படங்கள் அனைத்து தோல்விப்படமாக இருக்கும் நிலையில், தனது சம்பளத்தை கணிசமாக குறைத்துக்கொண்ட இவர், எப்படி 45 கோடிக்கு மும்பையில் வீடு வாங்கினார் என நெட்டிசன்கள் குதர்க்கமாக கேட்டு வருகின்றனர்.
- 167
Added a news
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர்.சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
- 173
Added a news
சூர்ய மங்கள்ய புத்தாண்டு பாடலை கேலி, கிண்டல் செய்யும் வகையில் பாடிய மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளா்.வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே இவ்வாறுகைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.ரோஹன பெத்தகே பாடிய சூர்ய மங்கள்ய புத்தாண்டு பாடலை கேலியாக கிண்டல் செய்யும் விதமாக பாடி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- 170
Added a news
இலங்கையில் நாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு, வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பது போன்றவற்றைக் குறைக்கும் விசேட செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.அதற்கமைய, மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கையை அமுல்படுத்த மூன்று மாத கால இலக்கு வழங்க பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து இதற்கான செயற்திட்டத்தை மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு நேற்று பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.இந்த விசேட நடவடிக்கைக்காக பொலிஸ் பிரிவுகளில் 60 வீதமான பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் நிலையங்களுக்கு வெளியே நெடுஞ்சாலை கடமைகளில் உடனடியாக ஈடுபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பொதுமக்கள் குற்றச் செயல்களுக்கு அச்சமின்றி வாழக்கூடிய சமூகத்தையும் சூழலையும் உருவாக்குவதே பொலிஸாரின் தொலைநோக்குப் பார்வையாகும். அவ்வாறான நோக்கமுமான போதிலும் பொலிஸாரால் அந்த தொலைநோக்குப் பார்வையை அடைய முடியவில்லை என பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொலிஸாரின் கவனம் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணம், எனவே இந்தப் புத்தாண்டு விடியலின் பின்னர் பொலிஸாரின் கவனம், குற்ற செயல்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.மே முதலாம் திகதி முதல் மூன்று மாதங்களுக்குள் விசேட செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், கடந்த வருடம் பதிவான 32 சதவீத வன்முறைக் குற்றங்களை மிகக் குறைந்த மட்டத்திற்குக் குறைக்கவும் பொலிஸ் மா அதிபர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.இனிமேல் பெண்கள் தங்க நகையை அணிந்து செல்லும் சூழலும், பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிள், வாகனங்களில் செல்லக்கூடிய சூழலும் உருவாக்கப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
- 171