·   ·  24 posts
  • R

    3 members
  • 4 friends

அமரர். சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை ஐயா அவர்களின் திடீர் இழப்பு

வன்னியில் இருந்து.....

ஓய்வுநிலை கிராம அலுவலரும், வடக்கு மாகாணசபையின் மேனாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஆணிவேரும், என் அன்பிற்குரிய ஆஸ்தான வழிகாட்டியுமாகிய அமரர். சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை ஐயா அவர்களின் திடீர் இழப்பு

கிளிநொச்சி மண்ணின் பேராளுமையாக இருந்து பல்துறைசார் பணிகளை முன்னெடுத்ததனூடு, எமது மாவட்ட மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்த, ஓய்வுநிலை கிராம அலுவலரும், வடக்கு மாகாணசபையின் மேனாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஆணிவேரும், என் அன்பிற்குரிய ஆஸ்தான வழிகாட்டியுமாகிய அமரர். சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை ஐயா அவர்களின் திடீர் இழப்பு எம்மை நிலைகுலையச் செய்திருக்கிறது.தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசித்ததன் வெளிப்பாடாகவே ஐயாவின் பணிகள் அன்றும், இன்றும் ஒருசீராய் அமைந்திருந்தன. தமிழின விடுதலை என்ற கொள்கையை ஏற்று தன் அரசியற் பணிகளை ஆரம்பித்திருந்த இவர், தமிழின விடுதலைப் போர் மெளனிக்கப்பட்ட பின்னரும், போர் தின்ற நிலமொன்றில் கையறுநிலையில் நின்ற மக்களின் குரலாகவே ஓங்கி ஒலிக்கத் தொடங்கினார்.போரும், இடப்பெயர்வுகளும் தந்த இழப்புக்களின் வலிசுமந்திருந்த எமது மக்களின் மனமறிந்த கிராம அலுவலராக அவர் ஓய்வு, ஒழிச்சலற்று ஆற்றியிருந்த மகத்தான மக்கள் பணியும், மாவட்ட எல்லைகளைக் கடந்தும் கரம்விரித்த அவரது மனிதாபிமானச் செயற்பாடுகளுமே, 2013களில் அவரை ஓர் மக்கள் ஆணை பெற்ற வடக்கு மாகாண சபை உறுப்பினராக மாற்றியிருந்தது. எந்தக் கொள்கைவழி நின்று தன் மக்கள் பணிகளை ஆற்ற ஆரம்பித்திருந்தாரோ, அதே கொள்கைகளின் வழி தன்னைக் கட்டமைத்துக்கொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தூணாகவே இறுதிக் கணம் வரை அவர் இருந்திருக்கிறார்.தன் அரசியல் இலக்கினின்று கிஞ்சித்தும் பிறழாத பெருமனிதனான இவரும், இவர் வாழ்ந்த விதமும் என்றென்றைக்கும் எம்போன்ற பலருக்கும் வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை. கட்சி நிலைப்பாடுகளைக் கடந்து, என்மீது கொண்டிருந்த தனிப்பட்ட அன்பினாலும், அக்கறையாலும், போலித்தனங்களற்று எனது அரசியல் பயணத்தை நேசித்த ஓர் ஆத்மார்த்த வழிகாட்டியை இத்தனை அகாலத்தில் இழந்திருப்பது எனக்கு ஆழ்ந்த துக்கிப்பையும், அவரது இறுதிக் கணங்களில் உடனிருக்க முடியாத பெருவலியையும் தந்துள்ளது.இழந்து இழந்து களைத்தே ஏதிலிகளான எமது மக்களின் மனக்காயங்களுக்கு மருந்தாய் அமைந்த நினைவேந்தல்களை அனுஸ்டிக்கும் உரிமையை நிலைநிறுத்துவதற்காய் இவர் ஆற்றியிருக்கும் பணிகள் அளப்பரியவை. அதிலும் குறிப்பாக மீள்குடியேற்றத்தின் பிற்பாடு, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேறியதும், ஆயுத முனையிலான உயிர் அச்சுறுத்தல்களையும், இராணுவ விசாரணைகளையும் புறந்தள்ளி 2016 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி தமிழ்த்தேசிய மாவீரர் தினத்தை உணர்வெழுச்சியோடு நினைவேந்துவதற்குரிய ஒழுங்குகளை துணிந்து பொறுப்பேற்று நடாத்திமுடித்த ஐயாவின் தற்துணிவே, தமிழர்களின் உணர்வெழுச்சியை மீளவும் சர்வதேசம் வரை கொண்டுசேர்த்திருந்தது.நெருக்கடிகள் நிறைந்த அக்காலத்தில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட அவர் தான், இன்றளவும் அப்பணிக்குழுவின் தலைவர். இவ்வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தலை நடாத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை அவரின் தலைமையிலேயே ஆரம்பித்துள்ள எம்மை, எதிர்பாராது நிகழ்ந்த அவரது இழப்பு பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.சமூக, அரசியல் பணிகளுக்கு அப்பால், இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் மிக்க அவர், தன் அந்திம காலத்திலும் எல்லாம் வல்ல ஈசனின் தொண்டனாகவே இருந்து இறையடி சேர்ந்திருக்கிறார். பொருளாதார நெருக்கடி, கொரோனாப் பெருந்தொற்று என முழுநாடுமே ஸ்தம்பித்திருந்த அந்த இடர்காலத்திலும் உருத்திரபுரீஸ்வரப் பெருமானின் அறங்காவலர் சபைத் தலைவராக இருந்து, எம்பெருமானின் ஆலயம் புத்தெழில் பெற்று மிளிரவும், இவ்வருட முற்பகுதியில் குடமுழுக்குப் பெருவிழா காணவும் தன்னை முழுதாக அர்ப்பணித்ததோடு, அவ் ஆலயத்தின் மீது தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளையும் அந்த ஊரின் மக்களோடு ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தி, இந்த மாவட்டத்தின் மரபுரிமைச் சொத்தான உருத்திரபுரம் சிவன் கோயிலின் சுயாதீன இயங்குநிலையை மீள நிலைநாட்டியமை அவரது காலப்பெரும் பணி.இவை எல்லாவற்றுக்கும் அப்பால் நீதி, நேர்மை, அநீதிக்கெதிராய் ஆக்ரோசிக்கும் நெஞ்சுரம், அன்பின்பால் எல்லோரையும் அரவணைக்கும் வசீகரம், தோற்றத்திலும், வாழ்விலும் பேணிவந்த வெண்மையும், எளிமையும், தனிமனித ஒழுக்கம், பிறர்க்குதவும் பெருங்கொடை உளம் என்பன மற்றவர்களுக்கு முன்னுதாரணமான மனிதனாக அவரை அடையாளப்படுத்தியிருந்தன.மிகச் சிறந்த நிர்வாகியாக, மக்கள் பிரதிநிதியாக, மக்கள் சேவகனாக, சமூக சீர்திருத்தவாதியாக, ஆன்மீகப் பணியாளனாக, தன் பிள்ளைகளையும் தன்வழியே உருவாக்கிய நற்தந்தையாக, வாழும் காலம் முழுமைக்கும் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பசுபதி ஐயாவின் இழப்பு சாதாரண இழப்பல்ல. அது எம் எல்லோரதும் உணர்வுகளோடு ஒன்றிக்கலந்த ஒரு பெருமனிதனின் இழப்பு.இருந்தபோதும் காலத்தின் சமரசங்களுக்கு கட்டுப்பட்டேயாக வேண்டிய கட்டாயத்தை ஏற்று, ஐயாவின் ஆத்மா உருத்திரபுரீஸ்வரப் பெருமானின் திருக்கழல்களில் இணைந்திருக்கப் பிரார்த்திக்கும் அதேவேளை, அவரது இழப்பின் வலி சுமந்து நிற்கும் மனைவி, மகள்மார் மற்றும் உறவுகளுக்கு என் ஆழ்மன அனுதாபங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

  • 285
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்