·   ·  24 posts
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி மற்றும் கரைச்சி ஆகிய பிரதேசங்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பெருமளவான குடும்பங்கள் குடிநீர் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள் குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்ளுகின்ற பிரதேசங்களாக காணப்படுகின்றன.  இதனால் தற்போதைய வரட்சி நிலைமை மற்றும் குடிநீர் விநியோகத்துக்கான எரிபொருள் இன்மை காரணமாக குடிநீர் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதுடன் கால்நடைகள் குடிநீர் தேடி அலைகின்ற நிலைமையும் காணப்படுகிறது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஞானிமடம் சித்தங் குறிச்சி செம்மண் குளம் போன்ற பிரதேசங்களில் சுமார் 136க்கும் மேற்பட்ட குடும்பங்களும் செட்டிகுறிச்சி கறுக்காய் தீவு போன்ற கிராமங்களில் 245 க்கும் மேற்பட்ட குடும்பங்களும் குடிநீரை பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடி நிலைகளை எதிர் கொண்டு வருகின்றனர்.

இந்தப்பிரதேசங்களை ஊடறுத்து தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்புச் சபையினுடைய குடிநீர் விநியோக இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும்குறித்த இடங்களுக்கு இதுவரை குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை இதனால் குறித்த பிரதேசத்தில் வாழும் மேற்படி குடும்பங்கள் தமக்கான குடிநீர் பெற்றுக் கொள்வதில தொடர்ந்தும் நெருக்கடி நிலைகளை எதிர்கொண்டு வருகின்றன.

இதே போன்று பூநகரி பிரதேசத்தில் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலையில் கால்நடைகளும் நீர் தேடி அலையும் ஒரு அவல நிலையை அவதானிக்க கூடியதாக உள்ளது .தமது பிரதேசங்களுக்கு குடிநீர் விநியோகத்திற்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றனவே தவிர கடந்த 10 ஆண்டுகளுக்குள் இதுவரை எதனையும் நடைமுறைப்படுத்தாது தாங்கள் தண்ணீருக்கு அலையும் அவலத்தை தொடர்ந்து வேடிக்கையாக பார்க்கின்றார்களா ?என்ற கேள்வியை பிரதேச மக்கள் எழுப்பி உள்ளனர்.

  • 510
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்