சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1421 news
  •  ·  0 friends
  • 1 followers

சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் முதலாவது மாநாடு இலங்கையில்

சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசிய நாடுகளின் முதலாவது மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மாநாடு பத்தரமுல்ல தியசரு பூங்காவில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (17) ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆரம்ப விழாவினை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளில் உள்ள 70 க்கும் மேற்பட்ட ஈரநிலப் பூங்காக்களில் இருந்து கிட்டத்தட்ட 100 பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.

அந்தவகையில், இந்தியா, கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், மியன்மார், மொங்கோலியா, ஜேர்மனி, நேபாளம் மற்றும் நியூஸிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தற்போது நாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், மலேசியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பானை பிரதிநிதித்துவப்படுத்தும் தலா ஒரு பிரதிநிதிகள் என மூன்று பேரும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 05 ஈரநில பூங்கா பிரதிநிதிகள் பங்குபற்றவுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாட்டின் போது இந்த பிரதிநிதிகள் ஜூன் 20 ஆம் திகதி அதிபர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்க உள்ளதாகவும் மேலும் ரம்சா வலய நிலையத்திற்கும் தியசரு ஈரநில பூங்காவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதுடன் இலங்கையின் ஈரநில மையங்களின் மத்திய ஈரநில மையமாக தியசரு ஈரநில பூங்கா அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மாநாட்டில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, நாடாளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது சம்பந்தமான நிகழ்வில் கருத்துத் தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாட்டில் முதலாவது ஈரநில மாநாட்டை நடாத்த முடிந்தமை தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

மேலும், நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட இந்த மாநாட்டை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 525
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads