சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  1293 news
  •  ·  0 friends
  • 1 followers

இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் இன்று - ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவுக்கு இலங்கையில் துக்க தினம் அனுஷ்டிப்பு

ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவையொட்டி இலங்கையில் இன்று (21) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்றைய தினம் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பதாக ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது இரங்கலை எக்ஸ் தளத்தில் இந்த இரங்கலை வெளியிட்டுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளின் திடீர் மறைவினால் இலங்கை அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளது.

அவர்களது மறைவுக்கு இலங்கையர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவு ஈரானுக்கு மட்டுமல்லாது சர்வதேசத்துக்குமான பாரிய இழப்பாகும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டோரின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஈரானின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசியின் சடலம் அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

நேற்றுமுன்தினம் (19) இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் 63 வயதான ஈரான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 09 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஈரானில் ஐந்து நாட்கள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையிலும் இன்று (21) துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது

இதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவிலும் இன்று துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மறைந்த பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் இன்று துக்கம்தினம் அனுஷ்டிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

லெபனானிலும் 03 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதேவேளை ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோரின் மறைவிற்கு அமெரிக்கா தனது "உத்தியோகப்பூர்வ இரங்கலை" தெரிவித்துள்ளது.

"ஈரான் புதிய ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்கையில் ஈரானிய மக்களுக்கான ஆதரவையும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கான அவர்களின் போராட்டத்தையும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

ஈரானியத் தலைமை அமெரிக்காவை அதன் எதிரியாகப் பார்க்கிறது, மேலும் இரு தரப்பினரும் கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் போரின் விளிம்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது

000

  • 648
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads