சினிமா செய்திகள்
சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த படங்கள் அதிகளவில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன. அதில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி ஆக
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி காலமானார்
புற்று நோய் தாக்கியுள்ளது என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் அழுதே விடுவார்கள், அல்லது பயத்தாலேயே பாதி மரணித்து விடுவார்கள். ஆனால், மரணத்தையும் மாபெரும்
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 48.. மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத
'ரெய்டு 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜய் தேவ்கன் (: Ajay Devgn) தற்போது நடித்து முடித்துள்ள ரெய்டு 2 திரைப்படம், 2025 மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
தங்கும் விடுதியாக மாறியது மம்மூட்டியின் வீடு
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கொச்சியில் உள்ள பனம்பிள்ளி நகரின் கே.சி. ஜோசப் சாலையில் பல வருடங்களாக வசித்து வந்தார். பிரபல நடிகர்கள் வசிக்கும் இந்தப்
விஜய்யின் ‘ஜன நாயகன்’ எப்போது ரிலீஸ்?
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னைய
விஜய்யின் ‘ஜன நாயகன்’ எப்போது ரிலீஸ்?
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னைய
அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்
புஷ்பா 2 பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் தனது அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடத் தயாராகி வருகிறார். அவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஒரு
திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்
நேற்று நடந்த ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் திஷா பதானி டான்ஸ் ஆடிய காட்சி கட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல்
இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போக அஜித் காரணமா?
அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், தனுஷின் 'இட்லி கடை' அஜித்துடன் மோத வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் கூறி வந்
வருத்தம் தெரிவித்தார் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக அரசியல் பேசி ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெ
உடலை தானம் செய்வதாக அறிவித்தார் ஷிகான் ஹூசைனி
தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான் ஷிகான் ஹுசைனி. பல படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் கூட விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்
Ads
 ·   ·  2757 news
  •  ·  1 friends
  • 2 followers

இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் இன்று - ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவுக்கு இலங்கையில் துக்க தினம் அனுஷ்டிப்பு

ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவையொட்டி இலங்கையில் இன்று (21) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்றைய தினம் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பதாக ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது இரங்கலை எக்ஸ் தளத்தில் இந்த இரங்கலை வெளியிட்டுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளின் திடீர் மறைவினால் இலங்கை அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளது.

அவர்களது மறைவுக்கு இலங்கையர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவு ஈரானுக்கு மட்டுமல்லாது சர்வதேசத்துக்குமான பாரிய இழப்பாகும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டோரின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஈரானின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசியின் சடலம் அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

நேற்றுமுன்தினம் (19) இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் 63 வயதான ஈரான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 09 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஈரானில் ஐந்து நாட்கள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையிலும் இன்று (21) துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது

இதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவிலும் இன்று துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மறைந்த பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் இன்று துக்கம்தினம் அனுஷ்டிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

லெபனானிலும் 03 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதேவேளை ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோரின் மறைவிற்கு அமெரிக்கா தனது "உத்தியோகப்பூர்வ இரங்கலை" தெரிவித்துள்ளது.

"ஈரான் புதிய ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்கையில் ஈரானிய மக்களுக்கான ஆதரவையும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கான அவர்களின் போராட்டத்தையும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

ஈரானியத் தலைமை அமெரிக்காவை அதன் எதிரியாகப் பார்க்கிறது, மேலும் இரு தரப்பினரும் கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் போரின் விளிம்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது

000

  • 749
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads