சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒடேலா 2 (Odela 2) திரைப்படம், ரசிகர்களை கவரும் வகையில் தயாராக உள்ளது. அசோக் தேஜா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில்
மேடையில் உண்மையை போட்டுடைத்தார் நடிகர் சிவகுமார்
சில உண்மைகளை அந்த மேடையில் படார் படார் என போட்டு உடைத்தார் நடிகர் சிவகுமார்.அது கதாசிரியர் கலைஞானம் அவர்களுக்கான பாராட்டு விழா.2019 ல் நடந்தது.சிவகுமா
நடிகர் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை
ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், வடிவேலு தனக்கு இன்னும் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தரவேண்டுமென்றும், அவரது படத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்தால் நன்றாக
கமல்ஹாசன் செய்த உதவி - இயக்குநர் மகேந்திரன்
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது."கமல் செய்த உதவி சிறியதுதான். ஆனால் இயக்குநர் மகேந்திரன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற
Good Bad Ugly - சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜ
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
Ads
 ·   ·  2832 news
  •  ·  1 friends
  • 2 followers

இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் இன்று - ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவுக்கு இலங்கையில் துக்க தினம் அனுஷ்டிப்பு

ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவையொட்டி இலங்கையில் இன்று (21) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்றைய தினம் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பதாக ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது இரங்கலை எக்ஸ் தளத்தில் இந்த இரங்கலை வெளியிட்டுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளின் திடீர் மறைவினால் இலங்கை அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளது.

அவர்களது மறைவுக்கு இலங்கையர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவு ஈரானுக்கு மட்டுமல்லாது சர்வதேசத்துக்குமான பாரிய இழப்பாகும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டோரின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஈரானின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசியின் சடலம் அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

நேற்றுமுன்தினம் (19) இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் 63 வயதான ஈரான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 09 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஈரானில் ஐந்து நாட்கள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையிலும் இன்று (21) துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது

இதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவிலும் இன்று துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மறைந்த பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் இன்று துக்கம்தினம் அனுஷ்டிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

லெபனானிலும் 03 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதேவேளை ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோரின் மறைவிற்கு அமெரிக்கா தனது "உத்தியோகப்பூர்வ இரங்கலை" தெரிவித்துள்ளது.

"ஈரான் புதிய ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்கையில் ஈரானிய மக்களுக்கான ஆதரவையும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கான அவர்களின் போராட்டத்தையும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

ஈரானியத் தலைமை அமெரிக்காவை அதன் எதிரியாகப் பார்க்கிறது, மேலும் இரு தரப்பினரும் கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் போரின் விளிம்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது

000

  • 759
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads