மேடையில் உண்மையை போட்டுடைத்தார் நடிகர் சிவகுமார்

சில உண்மைகளை அந்த மேடையில் படார் படார் என போட்டு உடைத்தார் நடிகர் சிவகுமார்.

அது கதாசிரியர் கலைஞானம் அவர்களுக்கான பாராட்டு விழா.

2019 ல் நடந்தது.

சிவகுமார் சொன்ன விஷயத்தைக் கேட்டு விழாவுக்கு வந்திருந்த அமைச்சர்கள் அதிர்ந்து போனார்கள். வி.ஐ.பி.க்கள் வியந்து போனார்கள். அரங்கில் கூடி இருந்த பொதுமக்கள் அசையாதிருந்தார்கள்.

மேடையில் இருந்த ரஜினிகாந்த் கூட அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தார்.

நம்பக் கூடிய விஷயமா சிவகுமார் சொன்னது ?

ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் சம்பந்தப்பட்ட கலைஞானமும் அதே மேடையில்தான் அமர்ந்திருந்தார். சிவகுமார் சொன்னதைக் கேட்ட பின்னரும் அமைதியாகவே அவர் இருந்தார்.

சிவகுமார் சொன்ன விஷயம் இதுதான். பல ஆண்டுகளாக திரை உலகில் இருக்கும் தயாரிப்பாளர் கலைஞானம் இன்னமும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறாராம்.

ரஜினியை முதன்முதலாக கதாநாயகனாக்கி 'பைரவி' படத்தை எடுத்தவர். பல படங்களின் கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தயாரிப்பாளர். இவ்வளவு இருந்தும் சொந்த வீடு வாங்க முடியவில்லையாம். காரணம் பணத்தை விட தன்மானத்துக்கு அதிக முக்கியத்துவம் தருபவர் கலைஞானம்.

அதனால்தான் சினிமா உலகில் தனக்கு மற்றவர்கள் மூலம் வர வேண்டிய பணத்தை வற்புறுத்தி வாங்காமல் விட்டு விட்டு, இப்படி வறட்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ரஜினி அதே மேடையில் தன் அருகே அமர்ந்திருந்த கலைஞானத்தை மெல்லத் திரும்பிப் பார்த்தார்.

பல ஆண்டுகளுக்கு முன் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அவர்கள் இருவரும் சந்தித்தபோது பேசிக் கொண்டது இப்போது ரஜினியின் நினைவுக்கு வந்தது.

அதை கலைஞானமே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதோ, கலைஞானம் அவர்களின் வார்த்தைகள்:

“ரஜினி சூப்பர் ஸ்டாராக உயர்ந்த நேரத்தில் ஒருநாள். ஏவி.எம். ஸ்டூடியோவில் எதிரும் புதிருமாக சந்தித்துக் கொண்டோம்.

அன்புடன் என்னை நலம் விசாரித்தவர் அடுத்து என்னிடம் கேட்ட கேள்விதான் முக்கியமானது.

"நீங்கள் எப்போதும் சந்தோஷமாக காணப்படுகிறீர்களே, அது எப்படி?'' என்று கேட்டார்.

அவருக்கு நான் இப்படி பதில் சொன்னேன்: "ரெயில் பெட்டிகளில் ஒரு வாசகம் எழுதியிருப்பதை நீங்களும் படித்திருப்பீர்கள். `லக்கேஜை எவ்வளவு குறைத்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு சுகமாக இருக்கும் உங்கள் பயணம்'' என்ற அந்த வாசகம் என் விஷயத்திலும் பொருந்தும்.

எல்லாப் பிரச்சினைகளையும் நம் தலைமேல் தூக்கி சுமக்காமல் முடிந்த மட்டும் குறைத்துக் கொண்டால் நாம் சந்தோஷமாக வாழமுடியும்,'' என்றேன்.

இந்தப் பதிலுக்கு ரஜினி அமைதியாக இருந்தார். சிந்திக்கிறார் என்பதை உணர முடிந்தது.”

ஆம். அப்போது மட்டும் அல்ல. இப்போதும் இந்த விழா மேடையிலும் ரஜினி சிந்தித்தார்.

ஏனெனில் ஏகப்பட்ட லக்கேஜ்களை அன்று முதல் இன்று வரை சுமந்து கொண்டிருப்பவர் ரஜினி. ஊருக்குத்தான் அவர் சூப்பர் ஸ்டார். உள்ளத்துக்குள் ஆயிரம் சொல்ல முடியாத சுமைகள். அப்படி ரஜினி தலையில் இருந்த ஏதோ ஒரு சுமைதான் அவர் கண்ணை மறைத்திருக்க வேண்டும். அதனால்தான் கலைஞானத்தின் நிலையை இவ்வளவு காலம் கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டும்.

ரஜினி இப்போது நிமிர்ந்து அமர்ந்தார். தன் இருக்கையை விட்டு எழுந்தார். அந்த மேடையிலேயே அப்போதே அறிவித்தார், கலைஞானம் அவர்களுக்கு, தானே தன் பணத்திலேயே ஒரு சொந்த வீடு வாங்கி கொடுப்பதாக. சொன்ன சில நாட்களிலேயே சொன்னபடி சொந்த வீடு வாங்கி கொடுத்து விட்டார் ரஜினிகாந்த்.

சென்னை விருகம்பாக்கத்தில் 1320 சதுர அடியில் மூன்று படுக்கை அறை வசதிகள் கொண்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு அது.

இந்த நல்லதொரு விஷயத்தை செய்ததற்காக ரஜினியைப் பாராட்டும் அதே வேளையில் இன்னொருவரையும் கூட இங்கே பாராட்டியாக வேண்டும். நடிகர் சிவகுமார்.

அவர் மட்டும் அன்று அந்த விழா மேடையில் உண்மைகளைப் போட்டு உடைத்திருக்காவிட்டால் இந்த நல்ல காரியம் நிச்சயம் நடந்திருக்காது.

கலைஞானம் அவர்களின் வாழ்க்கையும், அந்த மேடையில் அன்று நடைபெற்ற இந்த சம்பவமும் ஒரு உண்மையை நமக்கு சொல்லித் தருகிறது.

சத்தியம், நேர்மை, தர்மம்.இவை அனைத்தும் என்றென்றும் இந்த பூமியில் நிலைத்திருக்கும்.

நீங்கள் நினைத்திராத நேரத்தில் நிச்சயம் கை கொடுக்கும்.

  • 461
  • More
சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒடேலா 2 (Odela 2) திரைப்படம், ரசிகர்களை கவரும் வகையில் தயாராக உள்ளது. அசோக் தேஜா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில்
மேடையில் உண்மையை போட்டுடைத்தார் நடிகர் சிவகுமார்
சில உண்மைகளை அந்த மேடையில் படார் படார் என போட்டு உடைத்தார் நடிகர் சிவகுமார்.அது கதாசிரியர் கலைஞானம் அவர்களுக்கான பாராட்டு விழா.2019 ல் நடந்தது.சிவகுமா
நடிகர் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை
ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், வடிவேலு தனக்கு இன்னும் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தரவேண்டுமென்றும், அவரது படத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்தால் நன்றாக
கமல்ஹாசன் செய்த உதவி - இயக்குநர் மகேந்திரன்
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது."கமல் செய்த உதவி சிறியதுதான். ஆனால் இயக்குநர் மகேந்திரன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற
Good Bad Ugly - சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜ
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு