சினிமா செய்திகள்
அஜித்குமாரின் விடாமுயற்சி முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது.
அஜித்குமாரின் சமீபத்திய படம் விடாமுயற்சி பைரசிக்கு இரையாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில், முழு திரைப்படமும் பல திருட்டு வலைத்தளங்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
Ads
 ·   ·  2516 news
  •  ·  1 friends
  • 1 followers

மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்

 

நீண்டகாலமாக பல்வேறு காரணங்களினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நடைபெற்ற குறித்த நிகழ்வில் தென்மராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் உட்பட்ட பாடசாலை சமூகத்தினர் பலர்கலந்து கொண்டிருந்தனர்

முன்பதாக கடந்த மாம் 12 ஆம் திகதி குறித்த பாடசாலை சமூகத்தினரின் வேண்டுதலுக்கிணங்க களவிஜயம் செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்மாதம் அதாவது இன்று 20 ஆம் திகதியிலிருந்து அதாவது பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தினத்திலிருந்து யா/மட்டுவில் ஸ்கந்தவரோதயா மகாவித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவு வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதனடிப்டையிலேயே இன்று குறித்த பாடசாலையின் ஆரம்ப பிரிவு இன்று சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முன்பதாக யாழ் மாவட்டத்தில் குறிப்பாக தென்மராட்சி வலயத்தில் மிகவும் பழைமைவாய்ந்த அதாவது 150 ஆவது வருடத்தை நெருங்கும் வரலாற்றை கொண்ட பாடசாலைகளுள் ஒன்றான யா/ மட்டுவில் மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றுமுதல் உயர்தரம் வரையிலான வகுப்புக்கள் இருந்துவந்துள்ளன.

ஆனால் சில வருடங்களாக இதரபல காரணங்களால் இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு வகுப்புகள் அதிகாரிகளால் இடைநிறுத்தப் பட்டிருந்தன.

இதையடுத்து குறித்த பகுதி கல்வி சமூகத்தினரும் நலன்விரும்பிகளும் பெற்றோரும் தமது பாடசாலையில் ஆரம்ப வகுப்புக்களை இடைநிறுத்தியமைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் அவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தனர்.

அதனடிப்படையில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக பாடசாலைக்கு அமைச்சர் நேரில் சென்று ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் மற்றும் கல்விப்புலத்தினரின் கருத்துக்களை ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக துறைசார் தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று மீளவும் குறித்த ஆரம்ப பிரிவு வகுப்புகளை முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதையடுத்து இன்றையதினம் மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்றைதினம் சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

இதேவேளை குறித்த பிரதேச கல்விச் சமூகம் மற்றும் பெற்றோர் சமூக ஆர்வலர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த சமூக அக்கறையை பாராட்டி கௌரவித்துள்ளதுடன் தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 487
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads