குருவுக்கே வசனம் சொன்ன பார்த்திபன்

4 நாட்கள் திணறிய பாக்யராஜ்: குருவுக்கே வசனம் சொன்ன பார்த்திபன்; சின்னவீடு ப்ளாஷ்பேக்

இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் பாக்யராஜ். அவரே தான் இயக்கிய ஒரு படத்தின் ஒரு காட்சிக்கு, வசனம் வராமல், 4 நாட்கள் திணறிக்கொண்டிருந்தபோது அவருக்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வசனம் சொல்லி கொடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாக்யராஜ். அந்த படத்தில் ஒரு மருத்துவர் கேரக்டரிலும் நடித்திருப்பார். அதன்பிறகு, சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட சில படங்களில் பாரதிராஜாவுடன் பணியாற்றிய பாக்யராஜ், தனது குருநாதர் இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து, கன்னிப்பருவத்திலே என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்த பாக்யராஜ், சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார். இந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூரல் நின்றுபோச்சு, பொய்சாட்சி, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய பாக்யராஜ், நாயகனாகவும் வெற்றி பெற்றார்.

அந்த வகையில், கடந்த 1985-ம் ஆண்டு சின்ன வீடு என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். பாக்யராஜூவுடன் கல்பனா இணைந்து நடித்த இந்த படத்தில், கல்பனா குண்டாக இருப்பதால், அவரை திருமணம் செய்துகொண்ட பாக்யராஜூ அவரை எப்போதும் மட்டம் தட்டியே பேசிக்கொண்டிருப்பார். ஆனால் தான் நீங்கள் நினைப்பது போல் இல்லை என்றாலும், என்னாலும் உங்களுக்கு உதவிகராகமாக இருக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் கல்பனா ஒரு வசனம் பேச வேண்டும்.

இநத காட்சிக்கு என்ன வசனம் எழுதலாம் என்று யோசித்த பாக்யராஜூவுக்கு வசனமே கிடைக்கவில்லை. இதனால் 4 நாட்களாக அந்த காட்சியை தவிர்த்து வேறு காட்சியை படமாக்கியுள்ளார். நாட்கள் கடந்தாலும், அந்த காட்சிக்கான வசனம் மட்டும் பாக்யராஜூவுக்கு கிடைக்காத நிலையில், அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பார்த்திபன், நான் உங்களுக்கு தோலில் போடும் துண்டாக இல்லாவிட்டாலும், காலில் அணியும் செருப்பாக இருப்பேன் என்று பார்த்திபன் சொல்ல, இதை கேட்ட பாக்யராஜ், இந்த மாதிரி வசனத்தை தான் தேடிக்கிட்டு இருந்தேன் என்று சொல்ல அப்போதே அந்த காட்சியை படமாக்கியுள்ளார்.

இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று பெயரேடுத்த பாக்யராஜூவுக்கு ஒரு இடத்தில் சிக்கல் வரும்போது, வித்தியாசமான செயல்களையே வித்தியாசமாக செய்யும் இயக்குனர் என்று பெயரேடுத்த பார்த்திபன் ஒரு உதவி இயக்குனராக அவருக்கு வசனம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 499
  • More
சினிமா செய்திகள்
அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்
புஷ்பா 2 பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் தனது அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடத் தயாராகி வருகிறார். அவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஒரு
திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்
நேற்று நடந்த ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் திஷா பதானி டான்ஸ் ஆடிய காட்சி கட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல்
இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போக அஜித் காரணமா?
அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், தனுஷின் 'இட்லி கடை' அஜித்துடன் மோத வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் கூறி வந்
வருத்தம் தெரிவித்தார் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக அரசியல் பேசி ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெ
உடலை தானம் செய்வதாக அறிவித்தார் ஷிகான் ஹூசைனி
தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான் ஷிகான் ஹுசைனி. பல படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் கூட விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்
இவர் யார் என்று தெரிகிறதா?
சின்னத்தம்பி படத்தில் குஷ்புவின் இரண்டாவது அண்ணனாக நடித்தவர் இந்த உதய பிரகாஷ் ...இவருடைய இயற்பெயர் மணிகண்டன். இவர் 1964 ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்தவர்.
கே.பாலாஜி
யாருக்கு என்ன சம்பளம் எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் கனக்கச்சிதமாக முடிவு செய்து, யார் மனமும் நோகாமல் உடனுக்குடன் தருபவர் என்றெல்லாம் கே.பாலாஜியை இன்ற
நடிகர் சிவகுமாரின் பியட் கார்
நடிகர் திரு சிவகுமார் அவர்களின் ஆற்காடு தெரு இல்லத்தில், அவர் சுமார் 50 ஆண்டு காலம் பயன்படுத்திய பியட் காரை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.1960 ம் ஆண்
நடிகை மதுரத்தை சமாதானம் செய்த என்.எஸ். கிருஷ்ணன்
புனே ரயில் பயணம்.ஆம் படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அவர்களின் வழிச்
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக லண்டனில் இருந்து சென்னை திரும்பியவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவி
முடி கொட்டி ஆளே மாறிப்போன டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார்.தனது தந்தையை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார் சிம்பு, சிகிச்சைக்கு
நடிகர் மோகன் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
மோகன் உணவகம் ஒன்றில் சந்தித்த பி. வி. கராந்த் என்பவரால் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவரின் முதல் நாடகத்தை தில்லியிலிருந்தும் விமர்சகர்கள் ப
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு