சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒடேலா 2 (Odela 2) திரைப்படம், ரசிகர்களை கவரும் வகையில் தயாராக உள்ளது. அசோக் தேஜா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில்
மேடையில் உண்மையை போட்டுடைத்தார் நடிகர் சிவகுமார்
சில உண்மைகளை அந்த மேடையில் படார் படார் என போட்டு உடைத்தார் நடிகர் சிவகுமார்.அது கதாசிரியர் கலைஞானம் அவர்களுக்கான பாராட்டு விழா.2019 ல் நடந்தது.சிவகுமா
நடிகர் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை
ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், வடிவேலு தனக்கு இன்னும் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தரவேண்டுமென்றும், அவரது படத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்தால் நன்றாக
கமல்ஹாசன் செய்த உதவி - இயக்குநர் மகேந்திரன்
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது."கமல் செய்த உதவி சிறியதுதான். ஆனால் இயக்குநர் மகேந்திரன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற
Good Bad Ugly - சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜ
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
Ads
 ·   ·  8164 news
  •  ·  5 friends
  • I

    9 followers

திருகோணமலையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்கள், சிறுவர் வள நிலையங்கள் இணைந்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, இன்று (19) இடம்பெற்றது. நாவற்சோலை சிறுவர் வள நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பேரணியில், குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள், அரச அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் உட்பட ஜநூறிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பேரணியானது நிலாவெளி பொலிஸ் நிலையத்தினை அடைந்து, நிலாவெளி பொலிஸ் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இவ் அறிக்கையில், நாம், எமது இளைஞர்களை, எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வியலை பாதிக்கும் போதைப்பொருள்பாவனையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதற்கு உறுதி பூண்டுள்ளோம். இலங்கையில் போதைப்பொருள் பாவனை காரணமாக பல்லாயிரக்காணக்கான மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சிகிச்சைபெறுவதாக தெரியவருவதுடன், ஆண்டுதோரும் இவ்வெண்ணிக்கை அதிகரித்துவருவது கவலைக்குரிய விடயமாகும். போதைப்பொருள்பாவனை காரணமாக கல்வி, பொருளாதாரம், குடும்பம், சமூக அந்தஸ்த்து, ஆயுள் போன்றவற்றை இழப்பதுடன் ஏனைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் சுற்றத்தாக்கும் ஆபத்தான நபர்களாக மாற்றும் போதைப்பொருட்களை, எமது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிக்கவேண்டியது சமூகப்பற்றுமிக்க இளைஞர்களாகிய எமது கடமையாக உள்ளது. அந்தவகையில் • சமூகத்தின் மத்தியில் உள்ள போதைப்பொருள்பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு. • சமூகத்தின் மத்தியில் போதைப்பொருள் விற்பனைக்கு எதிரான சட்ட செயற்பாடுகள். போன்றவற்றை இளைஞர்களாகிய நாம் முன்னெடுக்கவுள்ளோம். மேலும் போதைப்பொருள் விற்பனைக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்குமாறு அரசாங்கத்தை வேண்டுவதுடன், உளப்பூர்வமாக போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், போதைப்பொருள் விற்பனையாளர்களை அடையாளம் காட்டும் நபர்களை பொறுப்புணர்வுடன் பாதுகாக்குமாறும் இலங்கை பொலிசாரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் எமது சமூகச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பையும் வழிகாட்டல்களையும் மேற்கொள்ளுமாறு வேண்டிநிற்கின்றோம். எமது பிரதேச இளைஞர்களை எமது சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் கலாச்சார எழுச்சிக்காக எம்முடன் அணிதிரளுமாறு வேண்டுகின்றோம். 'போதை நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு' 'போதைப்பொருள்பாவனையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிப்போம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்ற பேரணியானது ஜெய்க்கா சிறுவர் வள நிலையத்தை அடைந்து 'போதைப்பொம்மை' எரிப்புடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்கள் 'நாம் இனிவரம் காலங்களில் போதைப்பொருள் வியாபாரிகளை வெளிப்படுத்துவதிலும் நாம் முன்னிற்போம் ' என தெரிவித்தனர்.

  • 558
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads