சினிமா செய்திகள்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
Ads
 ·   ·  7519 news
  •  ·  5 friends
  • I

    9 followers

திருகோணமலையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்கள், சிறுவர் வள நிலையங்கள் இணைந்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, இன்று (19) இடம்பெற்றது. நாவற்சோலை சிறுவர் வள நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பேரணியில், குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள், அரச அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் உட்பட ஜநூறிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பேரணியானது நிலாவெளி பொலிஸ் நிலையத்தினை அடைந்து, நிலாவெளி பொலிஸ் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இவ் அறிக்கையில், நாம், எமது இளைஞர்களை, எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வியலை பாதிக்கும் போதைப்பொருள்பாவனையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதற்கு உறுதி பூண்டுள்ளோம். இலங்கையில் போதைப்பொருள் பாவனை காரணமாக பல்லாயிரக்காணக்கான மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சிகிச்சைபெறுவதாக தெரியவருவதுடன், ஆண்டுதோரும் இவ்வெண்ணிக்கை அதிகரித்துவருவது கவலைக்குரிய விடயமாகும். போதைப்பொருள்பாவனை காரணமாக கல்வி, பொருளாதாரம், குடும்பம், சமூக அந்தஸ்த்து, ஆயுள் போன்றவற்றை இழப்பதுடன் ஏனைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் சுற்றத்தாக்கும் ஆபத்தான நபர்களாக மாற்றும் போதைப்பொருட்களை, எமது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிக்கவேண்டியது சமூகப்பற்றுமிக்க இளைஞர்களாகிய எமது கடமையாக உள்ளது. அந்தவகையில் • சமூகத்தின் மத்தியில் உள்ள போதைப்பொருள்பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு. • சமூகத்தின் மத்தியில் போதைப்பொருள் விற்பனைக்கு எதிரான சட்ட செயற்பாடுகள். போன்றவற்றை இளைஞர்களாகிய நாம் முன்னெடுக்கவுள்ளோம். மேலும் போதைப்பொருள் விற்பனைக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்குமாறு அரசாங்கத்தை வேண்டுவதுடன், உளப்பூர்வமாக போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், போதைப்பொருள் விற்பனையாளர்களை அடையாளம் காட்டும் நபர்களை பொறுப்புணர்வுடன் பாதுகாக்குமாறும் இலங்கை பொலிசாரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் எமது சமூகச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பையும் வழிகாட்டல்களையும் மேற்கொள்ளுமாறு வேண்டிநிற்கின்றோம். எமது பிரதேச இளைஞர்களை எமது சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் கலாச்சார எழுச்சிக்காக எம்முடன் அணிதிரளுமாறு வேண்டுகின்றோம். 'போதை நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு' 'போதைப்பொருள்பாவனையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிப்போம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்ற பேரணியானது ஜெய்க்கா சிறுவர் வள நிலையத்தை அடைந்து 'போதைப்பொம்மை' எரிப்புடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்கள் 'நாம் இனிவரம் காலங்களில் போதைப்பொருள் வியாபாரிகளை வெளிப்படுத்துவதிலும் நாம் முன்னிற்போம் ' என தெரிவித்தனர்.

  • 414
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads