Category:
Created:
Updated:
தமிழ் பேசும் மக்களுக்காக காவல்துறை அவசர உதவிகளைப் பெற 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் ரணிலின் அறிவுறுத்தலின் பேரில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் இந்த அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்கள் அதன் மூலம் தமிழ் மொழியில் காவல்துறையினரின் உதவிகளைப் பெற முடியும் என காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.