Category:
Created:
Updated:
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் சில இடங்களில் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களிலும் இந்த நிலைமை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.