சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  7800 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு நீக்கப்பட்டால் 35 000 பேருக்கு ஆசிரியர் நியமனம் : கல்வி அமைச்சர்

பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளல் மற்றும் ஓய்வு பெற்ற, சேவையிலிருந்து விலகிய ஆசிரியர்களுக்கான இடைவெளியை நிரப்புதல் என்பவற்றுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்பான தீர்ப்பு கிடைக்கப் பெற்றால் 35 000க்கும் மேற்பட்டோருக்கு நியமனத்தை வழங்கி ஆசிரியர் சேவையிலுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

இலவச பாடநூல்கள் சகல பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 12 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அதே போன்று சீருடைகளுக்கும் 6.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் சீருடை துணிகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பாடசாலை தவணைகள் மற்றும் பரீட்சைகளுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு இரு வாரங்களுக்குள் சுற்று நிரூபம் ஊடாக சகல பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை மே - ஜூன் மாதங்களில் நடத்துவதற்கும், உயர்தர பரீட்சைகளை டிசம்பரில் நடத்தவும் எதிர்பார்த்துள்ளோம்.

எனவே சாதாரண பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபெறுகளை வெளியிட தீர்மானித்துள்ளோம். கடந்த 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாடசாலை இடை விலகல் 7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பாடசாலை இடைவிலகல்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியான செய்திகள் உண்மையானவையல்ல.

ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்காக கடந்த ஆண்டு மார்ச்சில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டிப்பரீட்சை, நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவு காரணமாக சுமார் 10 மாதங்கள் காலம் கால தாமதமாகியுள்ளது. பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயிற்சியுடன் ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கமையவே இவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 52 000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. நீதிமன்ற விசாரணைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் இது குறித்த தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றோம். நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தவுடன் இந்த நடவடிக்கைகளை எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியும். இந்த செயற்திட்டத்தின் கீழ் 22 000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இது தவிர மேலும் 13 500 பேருக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்கும் நடவடிக்கையும் கிடப்பில் உள்ளது. ஓய்வு பெற்ற, வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ஆசிரியர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காக மாகாண மட்டத்தில் ஆசிரியர்களை சேவையில் இணைப்பதற்காக சில மாகாணங்களில் போட்டி பரீட்சைகள் நடத்தப்பட்டு, நேர்முகத்தேர்வும் நிறைவடைந்துள்ளது. நியமனம் வழங்க வேண்டியது மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், இதற்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ள போதிலும், தீர்ப்பு மூன்று சந்தர்ப்பங்களில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாரத்தில் இந்த தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். நீதிமன்ற தீர்ப்புக்கள் கிடைப்பதைப் பொறுத்து 35 000க்கும் மேற்பட்டோருக்கு நியமனத்தை வழங்கி, ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வினை வழங்க முடியும்.

இவர்கள் தவிர விஞ்ஞான துறையிலும், தொழிநுட்ப துறையிலும் 5500 பட்டதாரிகளை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது. மாகாண மட்டத்தில் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இதற்கான போட்டி பரீட்சையை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.


  • 250
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads