சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒடேலா 2 (Odela 2) திரைப்படம், ரசிகர்களை கவரும் வகையில் தயாராக உள்ளது. அசோக் தேஜா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில்
மேடையில் உண்மையை போட்டுடைத்தார் நடிகர் சிவகுமார்
சில உண்மைகளை அந்த மேடையில் படார் படார் என போட்டு உடைத்தார் நடிகர் சிவகுமார்.அது கதாசிரியர் கலைஞானம் அவர்களுக்கான பாராட்டு விழா.2019 ல் நடந்தது.சிவகுமா
நடிகர் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை
ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், வடிவேலு தனக்கு இன்னும் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தரவேண்டுமென்றும், அவரது படத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்தால் நன்றாக
கமல்ஹாசன் செய்த உதவி - இயக்குநர் மகேந்திரன்
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது."கமல் செய்த உதவி சிறியதுதான். ஆனால் இயக்குநர் மகேந்திரன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற
Good Bad Ugly - சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜ
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

குமுதினி நெடுந்தாரகை ஆகிய படகுகள் பழுதடைந்த நிலையில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்

யாழ் நெடுந்தீவுக்கான பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு மற்றும் பிரதேச சபைக்கு சொந்தமான  நெடுந்தாரகை ஆகிய படகுகள் பழுதடைந்த நிலையில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

யாழ் நெடுந்தீவுக்கான பொதுப்போக்குவரத்து படகு சேவைகளில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு மற்றும் நெடுந்தாரகை ஆகிய படகுகள் பழுதடைந்த நிலையில் நீண்ட காலமாக திருத்தியமைக்கப்படாது; நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் கடற் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலைமை காணப்படுகின்றது.

யாழ்பாணத்திலிருந்து 45கிலோ மீற்றர் தொலைவில் தரைத் தொடர்பு கொண்ட புங்குடுதீவு குறிகாட்டுவானிலிருந்து ஏறத்தாள 10கடல் மைல் தொலைவில் நெடுந்தீவு அமைந்துள்ளதுடன் தற்போது நெடுந்தீவில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4500 பேர் வரையில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் தொடர்ந்தும் போக்குவரத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் இதே வேளை ஆசிரியர்கள் பிரதேச செயலகத்தின் பணியாளர்கள் வைத்தியசாலை வைத்தியர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அனைவருமே இந்தப் படகு மூலம் பயணம் செய்து அந்த மக்களுக்கான சேவையை வழங்க வேண்டிய நிலை கானப்படுகின்றதுநெடுந்தீவுக்கான போக்குவரத்துக்களில் வீதிஅபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை படகு என்பனவும் ; பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான படகு மற்றும் தனியார் படகு பல்வேறுபட்ட படகுச் சேவைகள் இருக்கின்றன.

இதில் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்திற்கு வீதிஅபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை என்பன இலவசமாக போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில்; தற்போது குமுதினி படகு முழுமையாக பழுதடைந்த நிலையில் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் மாவிலித்துறையில் நிறுத்தி வைக்கப்ட்டுள்ளது.

தற்போது பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவையில் வடதாரகை மட்டுமே நாளாந்தம் இரண்டு சேவைகளை வழங்கி வருகின்றது அதாவது காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கும் பின்னர் காலை 8 மணிக்கு குறிகாட்டுவான் இலிருந்து நெடுந்தீவின் பிற்பகல் 03.மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் என நாளொன்றுக்கு இரண்டு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வடமாகான சபையினால் கடந்த 2017ம் ஆண்டு வழங்கப்பட்டு நெடுந்தீவு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த நெடுந்தாரகை பயணிகள் படகு ஜந்து வருடத்துக்குள் இயங்கு நிலையை இழந்து கவனிப்பாரற்று நெடுந்தீவு துறைமுகத்தின் ஒருபக்கத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது எனவே நெடுந்தீவுக்கான பொதுப் போக்குவரத்து சேவைகளை உரியவாறு ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரியுள்ளனர்.

  • 510
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads