சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் மனதில் எழுத்தாளர் பாலகுமாரன்
மே 15 - 2018.எழுத்தாளர் பாலகுமாரன் இறந்து போனார்.அஞ்சலி செலுத்தி விட்டு வந்த ரஜினி அன்றைய தினம் ஒரு முக்கிய முடிவையும் எடுத்தார்.- பாட்ஷா 2- இனி இல்லவ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் எஸ்தர் அனில்
கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள்
 ‘ராயன்’ திரைப்படம் குறித்த சில தகவல்
தனுஷ் நடித்து முடித்துள்ள ஐம்பதாவது திரைப்படம் ராயன் என்பதும் தனுஷ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பண
வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ்
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் திரையுலகம
குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்ப
சினிமாவில் திறமைலாம் தேவையில்ல- மனம் திறந்த பிரபல நடிகை
பெங்காலி மொழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகையாக வளர்ந்தவர் ரிமி சென். இந்தியில் பிரபலமான தூம், தூம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்
அபராதத் தொகை செலுத்தினார் எம்.ஜி.ஆர்.
1987.எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். அப்போதுதான் 'ஆனந்த விகடன்' அட்டையில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்த அந்த ஜோக் வெளிவந்தது. அதை எடுத்துச்
ஸ்டராப்லெஸ் உள்ளாடையில் ஜான்வி கபூர்
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.இவர் வ
புத்தம் புது லுக்கில் லெஜண்ட் சரவணன்
ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘தி லெஜண்ட்’. இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன், விவேக், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந
அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு படமாக்கப்பட்ட கார் காட்சி ஒன்றின் வீட
சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்
இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இ
சிவப்பு நிற உடையணிந்து  முன்னழகு தெரிய புகைப்படம் வெளியிட்டார் ரைசா வில்சன்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
Ads
 ·   ·  551 news
  •  ·  0 friends
  • 1 followers

எதிர்காலத்தில் IMF இன் ஒத்துழைப்பின்றி வலுவான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

இலங்கை கடன்வழங்குனர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

இதன்போது தனியார் கடன்வழங்குனர்களுடன் விரைவில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்படும் என நம்புவதாகவும் எதிர்வரும் காலங்களில் நாட்டில் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இன்றி வலுவான வினைத்திறனான வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

மேலும் இலங்கைக்கு இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகள் கிடைத்துள்ள போதிலும் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நிபந்தனைகளை மீறியமை வாக்குறுதிகளை நிறைவேற்றதவறியமை நிதி ஒழுக்கத்தை பின்பற்றாமை போன்ற காரணிகளினாலேயே கடந்த சந்தர்ப்பங்களில் தோல்வியை தழுவ நேரிட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடிய போது வங்குரோத்து அடைந்த நாடாக இருக்கவில்லை என்பதனையும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வங்குரோத்து நாடாக உதவி கோரி, அந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கியதையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதன் ஊடாக வெளிநாடுகளில் உள்ள அனைத்து இருதரப்பு கடன் தவணைகளையும் 2028 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்க முடியும் எனவும், அதன்பின்னர் சலுகை நிபந்தனைகள் அடிப்படையில் அனைத்து கடன்களையும் செலுத்துவதற்க 2043 வரை நீண்டகால அவகாசம் கிடைக்கப்பெறும் எனவும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடனை மறுசீரமைப்பதில் வெற்றி பெற்றுள்ளதுடன் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி முன்னெடுத்த அனைத்து திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கு சட்டபூர்வ வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்தான நாடென்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நாடு இரண்டு வருடங்களில் இந்தளவு முன்னேற்றத்தைப் பெற முடிந்திருப்பது வரலாற்று வெற்றியாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் விசேட உரையினை தொடர்ந்தும் நேற்று இரவு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி அதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

 

  • 276
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads