சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒடேலா 2 (Odela 2) திரைப்படம், ரசிகர்களை கவரும் வகையில் தயாராக உள்ளது. அசோக் தேஜா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில்
மேடையில் உண்மையை போட்டுடைத்தார் நடிகர் சிவகுமார்
சில உண்மைகளை அந்த மேடையில் படார் படார் என போட்டு உடைத்தார் நடிகர் சிவகுமார்.அது கதாசிரியர் கலைஞானம் அவர்களுக்கான பாராட்டு விழா.2019 ல் நடந்தது.சிவகுமா
நடிகர் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை
ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், வடிவேலு தனக்கு இன்னும் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தரவேண்டுமென்றும், அவரது படத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்தால் நன்றாக
கமல்ஹாசன் செய்த உதவி - இயக்குநர் மகேந்திரன்
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது."கமல் செய்த உதவி சிறியதுதான். ஆனால் இயக்குநர் மகேந்திரன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற
Good Bad Ugly - சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜ
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
Ads
 ·   ·  2832 news
  •  ·  1 friends
  • 2 followers

எதிர்காலத்தில் IMF இன் ஒத்துழைப்பின்றி வலுவான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

இலங்கை கடன்வழங்குனர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

இதன்போது தனியார் கடன்வழங்குனர்களுடன் விரைவில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்படும் என நம்புவதாகவும் எதிர்வரும் காலங்களில் நாட்டில் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இன்றி வலுவான வினைத்திறனான வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

மேலும் இலங்கைக்கு இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகள் கிடைத்துள்ள போதிலும் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நிபந்தனைகளை மீறியமை வாக்குறுதிகளை நிறைவேற்றதவறியமை நிதி ஒழுக்கத்தை பின்பற்றாமை போன்ற காரணிகளினாலேயே கடந்த சந்தர்ப்பங்களில் தோல்வியை தழுவ நேரிட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடிய போது வங்குரோத்து அடைந்த நாடாக இருக்கவில்லை என்பதனையும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வங்குரோத்து நாடாக உதவி கோரி, அந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கியதையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதன் ஊடாக வெளிநாடுகளில் உள்ள அனைத்து இருதரப்பு கடன் தவணைகளையும் 2028 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்க முடியும் எனவும், அதன்பின்னர் சலுகை நிபந்தனைகள் அடிப்படையில் அனைத்து கடன்களையும் செலுத்துவதற்க 2043 வரை நீண்டகால அவகாசம் கிடைக்கப்பெறும் எனவும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடனை மறுசீரமைப்பதில் வெற்றி பெற்றுள்ளதுடன் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி முன்னெடுத்த அனைத்து திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கு சட்டபூர்வ வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்தான நாடென்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நாடு இரண்டு வருடங்களில் இந்தளவு முன்னேற்றத்தைப் பெற முடிந்திருப்பது வரலாற்று வெற்றியாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் விசேட உரையினை தொடர்ந்தும் நேற்று இரவு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி அதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

 

  • 399
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads