சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் மனதில் எழுத்தாளர் பாலகுமாரன்
மே 15 - 2018.எழுத்தாளர் பாலகுமாரன் இறந்து போனார்.அஞ்சலி செலுத்தி விட்டு வந்த ரஜினி அன்றைய தினம் ஒரு முக்கிய முடிவையும் எடுத்தார்.- பாட்ஷா 2- இனி இல்லவ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் எஸ்தர் அனில்
கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள்
 ‘ராயன்’ திரைப்படம் குறித்த சில தகவல்
தனுஷ் நடித்து முடித்துள்ள ஐம்பதாவது திரைப்படம் ராயன் என்பதும் தனுஷ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பண
வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ்
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் திரையுலகம
குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்ப
சினிமாவில் திறமைலாம் தேவையில்ல- மனம் திறந்த பிரபல நடிகை
பெங்காலி மொழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகையாக வளர்ந்தவர் ரிமி சென். இந்தியில் பிரபலமான தூம், தூம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்
அபராதத் தொகை செலுத்தினார் எம்.ஜி.ஆர்.
1987.எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். அப்போதுதான் 'ஆனந்த விகடன்' அட்டையில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்த அந்த ஜோக் வெளிவந்தது. அதை எடுத்துச்
ஸ்டராப்லெஸ் உள்ளாடையில் ஜான்வி கபூர்
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.இவர் வ
புத்தம் புது லுக்கில் லெஜண்ட் சரவணன்
ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘தி லெஜண்ட்’. இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன், விவேக், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந
அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு படமாக்கப்பட்ட கார் காட்சி ஒன்றின் வீட
சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்
இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இ
சிவப்பு நிற உடையணிந்து  முன்னழகு தெரிய புகைப்படம் வெளியிட்டார் ரைசா வில்சன்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
Ads
 ·   ·  551 news
  •  ·  0 friends
  • 1 followers

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற விவாதம் நாட்டில் நிலவி வருகிறது. அத்துடன், பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பது குறித்தும் கலந்துரையாடப்படுகிறது.

ஆனால், அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதை முதலில் கூற வேண்டும்.

அரசியலமைப்பு ரீதியாக தேவையானது ஜனாதிபதி தேர்தல். நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் போது, அது நேரடியாக மக்களை பாதிக்கிறது. எனவே இந்த நாட்டுக்கு நிலையான அரசாங்கம் தேவை.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலை நடத்தலாம். அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்பட்டு தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டு டாநளுமன்ற தேர்தல் உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன் 2022 ஆம் ஆண்டு மே மாதம் இந்த நாட்டில் இருந்த நிலைமையை நாம் அனைவரும் புரிந்து கொண்டோம். மக்கள் வீதிகளில் எரிபொருள் வரிசை மற்றும் எரிவாயு வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

ஒரு காலத்தில் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் போனது. ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையால் எங்களுக்கு ஏற்பட்ட வெளிநாட்டு நிதி பிரச்சினைகளால் நாங்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போது ரணில் விக்கிரமசிங்க மட்டுமே சவாலை ஏற்றுக்கொண்டார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் சிறு குழுவாக நாங்கள் உதவி செய்தோம். அனுபவத்துடனும், முதிர்ச்சியுடனும், சவால்களை ஏற்கும் திறமையுடனும் அந்த வேலையைச் செய்வார் என்று நாங்கள் நம்பினோம்.

இரண்டு வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் போது, நாம் எதிர்பார்த்ததைச் செய்திருக்கிறார். இப்போது ரணில்தான் ஆள் என்ற கருத்து கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படியானால், அன்று நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று நினைக்கிறோம்.

நாட்டுக்கு நல்ல செய்தியைக் கூறும்போது, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நம்பிக்கையுள்ள மனிதனும் நல்லதைக் காண்கிறான். அதை நாங்கள் எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னொரு கூட்டத்தினர் நல்ல செய்தி சொன்னால் அதை பாசாங்குத்தனத்துடன் பார்க்கிறார்கள்.

இந்த போஸ்ட்டர் மூலம், நாட்டை நேசிக்கும் மக்களுக்கும், இந்த நாட்டை அழிக்க நினைக்கும் மக்களுக்கும் இடையிலான பிரிவினையை நாம் தெளிவாகக் காண்கிறோம்.

சில எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் விடுதலை முன்னணியைப் போல  ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் தலைவர்கள் தொழிற்சங்கங்களின் தலைவர்கள், நாடு நன்றாக இருக்கும் நேரங்களில் எப்போதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2023 மார்ச்சில் IMF ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முதல் தவணையை பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இது போன்ற வேலைநிறுத்த அலைகளை ஏற்படுத்தியது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கிய நேரத்தில், கோவிட் தொற்றுநோய் காரணமாக நாட்டை மூட வேண்டியிருந்தது. நாட்டை திறந்துவிட்டு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியதும் தொழிற்சங்கத்தினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து அவர்களை வரவிடாமல் தடுத்தனர்.

இன்று ஒரு நல்ல செய்தி வரவிருக்கும் நேரமும் இவ்வாறு செய்கின்றனர். அதை அழித்து வேறாக மாற்ற வேண்டும் என்று இன்று வேலை நிறுத்த அலை நடத்தப்படுகிறது. கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் அரச ஊழியர்கள் சில சிரமங்களுக்குள்ளாகியிருந்ததாக நான் நம்புகிறேன்.

எனவே, இதனை இந்நாட்டு மக்கள் புத்திசாலித்தனமாகப் பார்ப்பார்கள் என நான் நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

 

  • 240
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads