சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒடேலா 2 (Odela 2) திரைப்படம், ரசிகர்களை கவரும் வகையில் தயாராக உள்ளது. அசோக் தேஜா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில்
மேடையில் உண்மையை போட்டுடைத்தார் நடிகர் சிவகுமார்
சில உண்மைகளை அந்த மேடையில் படார் படார் என போட்டு உடைத்தார் நடிகர் சிவகுமார்.அது கதாசிரியர் கலைஞானம் அவர்களுக்கான பாராட்டு விழா.2019 ல் நடந்தது.சிவகுமா
நடிகர் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை
ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், வடிவேலு தனக்கு இன்னும் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தரவேண்டுமென்றும், அவரது படத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்தால் நன்றாக
கமல்ஹாசன் செய்த உதவி - இயக்குநர் மகேந்திரன்
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது."கமல் செய்த உதவி சிறியதுதான். ஆனால் இயக்குநர் மகேந்திரன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற
Good Bad Ugly - சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜ
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
Ads
 ·   ·  2832 news
  •  ·  1 friends
  • 2 followers

நான்கு அம்சக் கொள்கைகளை முன்வைத்தேன் - அதில் முதல் மூன்று விடயங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது - விசேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி பாராளுமன்றக் கூட்டத்தொடரின் ஆரம்ப உரையின்போது, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பின்பற்ற வேண்டிய நான்கு அம்சக் கொள்கைகளை நாட்டுக்கு முன்வைத்ததாகவும், தற்போது அதில் முதல் மூன்று விடயங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன்மூலம் நமது வேலைத்திட்டமும் நாம் கடந்து வந்த பாதையும் சரியானவை என்பதை இது நிரூபிக்க முடிந்துள்ளது என்றும் தெரிவித்தார்

நாட்டு மக்களுக்கு நேற்றையதினம் விசேட உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில் -

கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் வங்குரோத்து முத்திரை குத்தப்பட்ட நாடு என்ற வகையில், இரண்டே ஆண்டுகளில் இந்த மாதிரியான முன்னேற்றத்தை எட்ட முடிந்ததே பாரிய வெற்றியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அண்மைய வரலாற்றில், பொருளாதார படுகுழியில் விழுந்த உலகில் எந்தவொரு நாடும், இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு சிறப்பான வெற்றியை பெற்றதில்லை என்றும் தனது விசேட உரையில் சுட்டிக்காட்டினார்

மேலுன் பொருளாதாரப் படுகுழியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த பாதையில் தொடர்ந்து பயணித்தால் 2048 ஆம் ஆண்டாகும்போது இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாற முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது விசேட உரையில் தெரிவித்தார்

தொடர்ந்து 6 காலாண்டுகளாக சுருங்கிச் சென்ற இந்நாட்டுப் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து வளரத் தொடங்கியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் வற்றிப் போயிருந்த எமது வெளிநாட்டுக் கையிருப்பு தற்போது 5,500 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்௲

இதேநேரம் ரூபாய் வலுப்பெற்றுள்ளது. வங்கி வட்டி விகிதம் குறைந்துள்ளது. பணவீக்கம் தற்போது 9 சதவீதமாகக் குறைந்துள்ளதென தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முதன்மை கணக்கு இருப்பை உபரியாக மாற்றக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது. அதேபோல், கடந்த ஆண்டு நாட்டின் வெளிநாட்டுக் கணக்குக் கையிருப்பில் உபரியை ஏற்படுத்த முடிந்தது.

1977 இற்குப் பின்னர் உபரியை ஏற்படுத்தியது இதுவே முதல் முறையாகும் என்றும் தெரிவித்தார் . -

இதேநேரம் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் இருந்தபோது சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதைத் தவிர வேறு தீர்வு கிட்டாது என்று சொன்னவர்கள் இப்போது சர்வதேச நாணய நிதியம் தேவையில்லை என்று கூறுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மக்கள் கஷ்டப்படும்போது பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பயனில்லை என்று கூறிய தரப்பினர், அவ்வாறனவர்கள் ஆட்சிக்கு வந்தால் பால் தேநீருக்கு பதிலாக வெறும் தேநீரை மட்டும் குடிக்க வேண்டிய நிலை வரும் என்பதை தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்ப நான் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் சரியானவை என்பதை அறிந்துகொள்ளவே சிலருக்கு இரு வருடங்கள் தேவைப்பட்டன என்று தெரிவித்த ஜனாதிபதி, இப்போது முன்னெடுக்கும் நடவடிக்கைகள் சரியானவை என்பதை புரிந்து கொள்ளவும் அவர்களுக்கு இன்னும் சில வருடங்கள் தேவைப்படும் என்று தெரிவித்தார்.-

இதற்கு முன்னதாக 16 தடவை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவு பெறப்பட்டுள்ளது. அந்த ஒவ்வொரு முறையும் இலங்கை தோல்வியடைந்தது. ஐஎம்எப் (IMF) வேலைத் திட்டத்தில் நாம் வெற்றி பெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கியதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். -

 ஐஎம்எப்(IMF) செல்ல அவசியமில்லாத, வலுவான வினைத்திறனான வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்பவே நான் பாடுபடுகிறேன். அதற்காகவே நாம் உழைக்கிறோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பின் போது சுட்டிக்காட்டினார்.

சிலர் அதிகாரத்தைக் கோரி உலகெங்கும் சுற்றி வருகிறார்கள். பாடசாலைகளுக்குச் சென்றும் அதிகாரத்தை கேட்கிறார்கள். ஆனால் நாம் நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை ஆரம்பிக்கவும் அதற்காக சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்ளவும் முயன்று வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆரம்பத்திலிருந்தே பிரச்சினையைப் புரிந்துகொண்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்கிய என்னுடன் நாட்டை முன்னேற்றுவீர்களா? அல்லது இன்னும் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல், இருட்டில் தடவிக் கொண்டு, அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் குழுக்களுடன் பயணிக்க விரும்புகிறீர்களா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். -

நாட்டு மக்களின் முடிவு ரணில் விக்ரமசிங்கவின் எதிர்காலத்தை தீர்மானிக்காது. நாட்டின் எதிர்காலத்தையும் உங்கள் எதிர்காலத்தையும் மட்டுமன்றி அது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகிறது என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார் -

ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கை அன்னையை மீட்டுத் தருவதாக அன்று நான் வாக்குறுதி அளித்தேன். குழந்தையைப் பத்திரமாக மீட்டு வந்திருக்கிறேன். இப்போது, குழந்தையைக் காக்க எந்த ஆதரவும் தராத குழுக்கள் குழந்தையின் உரிமையைப் பெறப் போராடுகின்றனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 377
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads